செய்தி -102
10.9.2012 காலை 1015
கடற்கரையில் காலையிலிருந்தே போலீசு குவிக்கப்பட்டு விட்டது.
“நீங்கள் சட்டவிரோதமாக கூடியிருக்கிறீர்கள். இது தடை செய்யப்பட்ட பகுதி. கலைந்து செல்லுங்கள். இல்லையேல் கண்ணீர் புகை குண்டு வீசுவோம்” என்று எழுதிய சிவப்பு பானர் ஒன்றை மக்களுக்கு முன்னால் காட்டியது போலீசு.
ஏற்கெனவே கூட்டதுத்துக்கு உள்ளே ஊடுறுவியிருந்த அதிரடிப்டையினர் மக்களை தாக்கத் தொடங்கினர். மக்கள் பின்னோக்கிப் போக மறுத்ததால் போலீசு மேலும் தீவிரமாக பிடித்து தள்ளத்தொடங்கியது. இந்த தாக்குதலில் பலரது சட்டைகள் கிழிந்து, மார்பில் தாக்கப்பட்டு விழுந்தனர். தாக்கப்பட்ட பெண்கள் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
யாரும் பின்வாங்கவில்லை.
போலீசு பின்னோக்கி தள்ளப்பட்டு விட்டது.
“நீங்களும் மனிதர்கள் என்பதனால்தான் பார்க்கிறோம். தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதால் எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இனி எங்கள் மேல் கைவைத்தால் நடப்பது வேறு” என்று எச்சரிக்கிறார்கள் மக்கள்.
படகில் வந்து இறங்கும் மக்கள் போராட்டத்தின் தலைப்பகுதிக்கு, போலீசு நிற்கும் இடத்துக்கு வந்து இறங்குகிறார்கள்.
இங்கே அஞ்சுவதற்கோ ஓடுவதற்கோ யாரும் இல்லை.
ஒரு பெரும் ரத்தக் களரியை நடத்துவதற்குத் தயாராக போலீசு வந்திருப்பதாகவே தெரிகிறது.
கூடங்குளம் மக்கள் மீது அரசு நடத்தும் இந்த ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக குரல் எழுப்புங்கள்.
போலீசு உடனே வெளியேறவேண்டும் என்று போராடுங்கள்
அணு உலையை மூடு என்று முழங்குங்கள்!
________________________________________________________________
– வினவு செய்தியாளர்கள், கூடங்குளம் கடற்கரையிலிருந்து
________________________________________________________________
தொடர்புடைய பதிவுகள்:
- கூடங்குளம்: தடையை மீறி இடிந்தகரை நோக்கி HRPC வழக்கறிஞர்கள்!
- கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் – நள்ளிரவுக் கூட்டம்!
- இது இடியாத கரை – இடிந்தகரையின் போராட்டக் காட்சிகள் !
- கூடங்குளம்: நாகர்கோவிலில் உதயகுமாரின் பள்ளிக்கூடம் இடிப்பு! படங்கள்!!
- கூடங்குளம்: கைதான மக்களுக்கு திருச்சி, கடலூர் சிறைகளில் நள்ளிரவு வரவேற்பு!
- கொலைக்களமாகுமா கூடங்குளம்? நேரடி ரிப்போர்ட்!
- கூடங்குளம்: அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த தீவிரவாதிகளில் 30 சிறுவர்கள், 42 பெண்கள்!
- கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!
- கூடங்குளம்: அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்! அனைவரும் வருக!
- கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய-மாநில அரசுகளின் சதி!
- மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
- கூடங்குளம்: இலண்டன் ஜி.டி.வியில் மருதையன், சபா.நாவலன் நேர்காணல்!
- அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
- கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !
- அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
- ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- அடிமை ! அடியாள் !! அணுசக்தி !!!
- கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
- கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
- நெல்லை – கூடங்குளம்…பேரணி, ஆர்ப்பாட்டம் – படங்கள்!
உலக வடைபடத்தில் இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை
தெட்க்கசிய மக்களுக்கு விடுதலை இல்லை……. தமிழன்
வாழ்க மக்கட் பொராட்டம்