இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்பு பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை.
மோடியின் இந்த நடவடிக்கை, உள்நாட்டிலும் பதுக்கப்பட்ட பணத்தை வெளிக் கொண்டு வராது. நகைகளாகவும் சொத்துக்களாகவும் நிலங்களாகவும், பதுக்கப்பட்ட கருப்புப்பண முதலீடுகளை ஒன்றும் செய்யாது.
மோடி அரசின் அனைத்தும் தழுவிய தோல்வியை மூடி மறைக்கவே இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – அறுவை சிகிச்சை !
மோடியின் கருப்புப் பண மீட்பு மோசடி, சாதாரண மக்களை நள்ளிரவில் நடுத்தெருவில் தள்ளியுள்ளது.
ரூ.500, 1000 செல்லாது ! மோடியின் கருப்புப் பணமோசடி !
ரொக்கப்பணம் மட்டுமா கருப்புப் பணம் ?
கருப்புப் பண முதலைகளின் எந்தவகை முதலீடுகளையும் முடக்காது.
சாமானிய மக்களின் சேமிப்பையும் சம்பளத்தையும் வழிப்பறி செய்வதே மோடியின் திடீர்த் தாக்குதல் !
கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் வாராக் கடன் ஏழரை லட்சம் கோடி ரூபாய் !
இந்த மோசடிப் பேர்வழிகளின் பெயரைக் கூட வெளியிடாமல் பாதுகாக்கும் மோடியா, கருப்புப் பணத்தை மீட்கப் போகிறார் ?
இவண்
மக்கள் அதிகாரம்
சென்னை – 91768 01656