2024 தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு மாற்றுத் திட்டமும் மக்கள் போராட்டமும் முன்நிபந்தனை!
இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் “பா.ஜ.க. வேண்டாம்” என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதை இந்த தேர்தல்களம் துலக்கமாக காட்டுகிறது.
2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!
மக்களின் கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு, கடந்த காலங்களைப்போல் மக்கள் போராட்டங்களையும் ஒடுக்குவார்களானால் அது எதிர்க்கட்சிகளுக்கும் ஆபத்தாகத்தான் சென்றடையும்.
சத்தீஸ்கர் படுகொலை: பாசிசக் கும்பலால் நடத்தப்படும் நரவேட்டை
கனிமவள கொள்ளைக்காக நடத்தப்படும் இந்த நரவேட்டையை மோடி-அமித்ஷா கும்பல் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்தி வருகிறது.
பாசிசக் கும்பலின் பிடியில் திரைத்துறை, மோடிக்கும்பலின் அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரம்!
மூன்றாவது முறை ஆட்சியை பிடிப்பதற்காக பாசிச மோடி கும்பல் கலவரத்தை தூண்டும் வகையில் அப்பட்டமான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை போல, வெறுப்பு படங்களும் பாசிச பா.ஜ.க-விற்கும் மோடிக்கும் அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரமாக செயல்படுகின்றன.
மாற்றுக்கான மக்கள் கோரிக்கைகளும் அரசியல் கட்சிகளின் கவர்ச்சி வாக்குறுதிகளும்!
பாசிசத்திற்கு எதிரான மாற்று அரசியல்-பொருளாதார கொள்கைகளை உள்ளடக்கிய ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லாததே தேர்தல் அறிக்கைகள் பல வண்ணங்களில் காட்சியளிப்பதற்கான காரணம்.
பாசிஸ்டுகளின் தேர்தல் ‘ஜனநாயகம்’!
சூரத், இந்தூர் போன்று தனக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் அதிகார பலத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளே இல்லாமல் வெற்றிப்பெறுவோம் என அறிவிக்கிறது பாசிசக் கும்பல்.
தோல்வி முகத்தில் மோடி-அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்!
சாதிவெறி, மதவெறியைத் தூண்டி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி தன்னுடைய அடித்தளமாக மாற்றிக்கொள்ளும் பா.ஜ.க-வின் உத்தி தற்போது பா.ஜ.க-விற்கே எதிராகத் திரும்பியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் பாசிசக் கோழைகளின் பயங்கரவாதம்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் வளர்ச்சி நாயகன் என்ற பிம்பம் வடக்கே எடுபடாது என்பதையறிந்த மோடி - அமித் ஷா கும்பல், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலம், மக்களைத் திசைதிருப்பவும், இந்து முனைவாக்கம் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.
விவசாயத்துறையில் “ட்ரோன்”: தீவிரமாகும் கார்ப்பரேட்மயமாக்கம்!
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதால் காற்று வீசும் திசையில் ரசாயன மருந்து பல பகுதிகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டும் மக்களுக்கான ஜனநாயகம்!
மோடி எதிர்ப்பலை என்பது மோடி என்ற தனிமனிதருக்கு எதிரான எதிர்ப்பலை அல்ல. ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலின் இந்துராஷ்டிர வெறி அரசியலுக்கும் பா.ஜ.க. அரசின் கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோதத் திட்டங்களுக்கும் எதிரான அலையாகும்.
தேர்தல் நிதிப்பத்திரங்கள்: பாசிசக் கும்பலின் கைக்கருவி
தேர்தல் நிதிப்பத்திரத்தை வெறும் ஊழல் என்று மட்டும் சொல்லமுடியாது. தனது அதிகாரத்தைக் கொண்டு. இந்திய நாட்டின் இயற்கை-மனித வளங்களைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கேற்ப அரசு இயந்திரத்தை மறுகட்டமைப்பு செய்திருக்கிறது பாசிச மோடி அரசு.
ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023: கருத்து சுதந்திரத்திற்கு கட்டப்படும் கல்லறை!
இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் அரசை விமர்சிக்கும் கருத்துகளும், தளங்களும் மொத்தமாக துடைத்தெறியப்படும் அபாயம் உள்ளது. பொதுவெளியில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிரான கருத்துகள் வடிக்கட்டப்பட்டு, இந்துத்துவ பாசிச கருத்துக்கள் மட்டுமே பேசுபொருளாக்கப்படும்.
உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!
பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக, சோதனை முயற்சியாகவே பாசிசக் கும்பல் தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!
விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கான கோரிக்கை என்பது தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை உரிமைக்கு ஒப்பான உயிராதாரமான கோரிக்கையாகும். விவசாயத்துறையில், உழைப்பவருக்கே அதிகாரம் என்பதை நிலைநாட்டும் வகையிலான கோரிக்கையாகும்.
அம்பலமாகும் மோடியின் திரைமறைவு வேலைகள்!
பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டுவது, செஸ் மற்றும் கூடுதல் வரிகள் விதிப்பது ஆகியவற்றின் மூலம் தனது கஜானாவை நிரப்பிக் கொள்ளும் ஒன்றிய அரசு, கூடுதல் நிதியாதாரங்கள் என்ற பெயரில் பல அரசுத்துறை நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டுக் கடன்களை வாங்கிக் குவித்திருப்பது சுப்ரமணியம் பேசிய காணொளி மூலம் அம்பலமாகியிருக்கிறது.