Monday, June 29, 2026

மேற்குவங்கம்: பாசிச கும்பலின் புதிய சோதனைச்சாலை!

குஜராத்தின் கலவர-கார்ப்பரேட் பிணைப்பு, உத்தரப்பிரதேசத்தின் புல்டோசர் பயங்கரவாதம், அசாமில் இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல், மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சி ஒழிப்பு ஆகிய முந்தைய பாசிச பரிசோதனைகளின் தொகுப்பாக “மேற்குவங்க மாடலை” உருவாக்கியும் செயல்படுத்தியும் வருகிறது.

மோடியின் ‘சிக்கனத்திற்கான’ அறைகூவல்: உழைக்கும் மக்கள் மீதான பாசிச தாக்குதல்

கடந்த கால கொரோனா ஊரடங்குப் பேரிடரைப் போலவே, தற்போதைய உலகளாவிய நெருக்கடிச் சூழலையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் கும்பல்கள் தங்களின் கொள்ள லாபத்தை ஈட்டப் போகின்றன என்பதும், அதற்கு பாசிச மோடி அரசு வழிவகை செய்கிறது என்பதும் வெட்டவெளிச்சமாகிறது.

பற்றி பரவும் போராட்டத் தீ பாசிஸ்டுகளின் கோட்டையை சுட்டெரிக்கட்டும்!

எந்தவித சமரசமுமின்றி பாசிச கும்பலை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் இத்தகைய மக்கள் போராட்டங்களே பாசிச எதிப்பில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கின்றன.

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? நெருக்கடியான சூழலில் ஒரு வழிகாட்டி!

பாசிச எதிர்ப்பில் தேவை நேர்மையான பரிசீலனை! தி.மு.க. தோல்வி - த.வெ.க. வெற்றிக்கான காரணங்கள், பாசிச பா.ஜ.க-வின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து எதார்த்தமாக பரிசீலிப்பதன் மூலமே இந்துராஷ்டிரக் கனவுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் பாசிச பா.ஜ.க-வை தடுத்து நிறுத்த முடியும்.

வசந்தத்தின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியின் 60-ஆம் ஆண்டு!

பாசிச சட்டதிட்டங்களுக்கு எதிராக மக்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். தங்களின் உறுதிமிக்க போராட்டங்கள் மூலம் பாசிச கும்பலைப் பணிய வைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போராட்டங்களும், நாடாளுமன்றப் பாதையின் மூலம் அல்ல, மக்கள் எழுச்சிகள் மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

உலகளாவிய நீர் திவால்நிலையும் இந்தியாவை சூழ்ந்திருக்கும் அபாயமும்

நீர் நெருக்கடி என்பது எதிர்காலத்தில் சரிசெய்ய வேண்டிய நிர்வாகப் பிரச்சினையல்ல; இன்றே தீர்க்கப்பட வேண்டிய வர்க்கப் போராட்டமாகும். நீர் என்பது கார்ப்பரேட்டுகளின் இலாபப் பொருளல்ல; அது உழைக்கும் மக்களின் வாழ்வாதார உரிமை என்பது நிலைநாட்டப்பட வேண்டும்.

தொகுதி மறுவரையறையும் மகளிர் இட ஒதுக்கீடும்: பாசிஸ்டுகளின் நயவஞ்சக நாடகம்

தற்போதைய தொகுதி மறுவரையறை என்பது, ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் தனது அதிகாரத்தை நிரந்தரமாக நிலைநாட்டிக்கொள்ள மேற்கொள்ளும் ஒரு பாசிச முயற்சியாகும். இதை முறியடிக்க, வெறும் எண்ணிக்கையை வைத்து நடக்கும் பேரங்களுக்குள் நாம் சுருங்கிவிடக் கூடாது. “இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு” என்ற வரலாற்று உண்மையைச் சமரசமின்றி நிலைநாட்ட வேண்டும்.

அசாம்: இனப்படுகொலை அபாயமும் மாற்று அரசியலுக்கான தேவையும்

பாசிசமயமாகிவரும் அரசுக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, தொகுதி மறுவரையறை, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் போன்ற நிறுவனமயப்பட்ட சதிச் செயல்கள் மூலம் இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறித்தும், மத வெறுப்புப் பிரச்சாரங்கள், இந்து முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தியும் அசாமில் பா.ஜ.க. மூன்றாவது முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான வழி இனவாதமா? வர்க்கப் போராட்டமா? | மீள்பதிவு

ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்துபட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான் அந்நாட்டை ஆளும் பாசிச அரசு.

மேற்குவங்கம்: திருடப்பட்ட தேர்தல் வெற்றி

மேற்குவங்கத்தில் பாசிச பா.ஜ.க. கும்பல் பெற்ற இவ்வெற்றியானது அப்பட்டமான பார்ப்பனிய சூழ்ச்சிகள் மூலமும் தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டும் அதிகார வர்க்கத்தின் துணையுடன் கைப்பற்றப்பட்டதாகும்.

புதுச்சேரி தேர்தல் முடிவு: புறக்கணிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைகள்!

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதையும், ரங்கசாமியின் அடிமை ஆட்சியைப் பயன்படுத்திக்கொண்டும், பாசிச பா.ஜ.க கும்பல் தனது பாசிச திட்டங்களைத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.

படுபாதாளத்தில் வீழ்ந்த “நவகேரள” ஆட்சி

சி.பி.எம்-இன் “நவகேரளம்” என்பதே, கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கான, இந்துத்துவத்துடன் சமரசம் செய்துகொண்ட, பிழைப்புவாதக் கட்சிகளை ஒத்தக் கவர்ச்சிவாத ஆட்சிதான். அதனால்தான், சி.பி.எம்-இன் 10 ஆண்டுகால, நவகேரள ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் – 2026: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?

மக்களின் அடித்தளத்தை இழந்துவரும் பாசிச கும்பல் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் துணையுடனும், சங்கப் பரிவாரக் கும்பலுடன் இணைந்து  மோசடிகள், பொய் பிரச்சாரங்கள் மூலம் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறது. தொகுதி மறுவரையறை போன்ற இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களை நிறுவுவதற்கு துடிக்கிறது.

உலகை உலுக்கும் எரிசக்தி நெருக்கடி: ஏகாதிபத்தியப் போரும் மோடி அரசின் அடிமைத்தனமும்!

ஏகாதிபத்தியமும் அதன் உலகமயக் கொள்கையும் உலக நாடுகளை ஒற்றைச் சங்கிலியில் இணைத்துள்ளன; இதில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என்பதைத்தான் இந்த மத்திய கிழக்குப் போர் எடுத்துக்காட்டுகிறது.

வாக்குரிமைப் பறிப்பு முதல் இந்துமுனைவாக்கம் வரை: மேற்குவங்கத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பாசிச பா.ஜ.க.

மேற்குவங்க மாநில மம்தா பேனர்ஜி அரசின் இந்த மக்கள் விரோதத் தன்மையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அம்மாநிலத்தில் வேரூன்றுவதற்கும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் பாசிச பா.ஜ.க. கும்பல் மூர்க்கமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

அண்மை பதிவுகள்