privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டும் மக்களுக்கான ஜனநாயகம்!

மோடி எதிர்ப்பலை என்பது மோடி என்ற தனிமனிதருக்கு எதிரான எதிர்ப்பலை அல்ல. ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலின் இந்துராஷ்டிர வெறி அரசியலுக்கும் பா.ஜ.க. அரசின் கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோதத் திட்டங்களுக்கும் எதிரான அலையாகும்.

தேர்தல் நிதிப்பத்திரங்கள்: பாசிசக் கும்பலின் கைக்கருவி

தேர்தல் நிதிப்பத்திரத்தை வெறும் ஊழல் என்று மட்டும் சொல்லமுடியாது. தனது அதிகாரத்தைக் கொண்டு. இந்திய நாட்டின் இயற்கை-மனித வளங்களைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கேற்ப அரசு இயந்திரத்தை மறுகட்டமைப்பு செய்திருக்கிறது பாசிச மோடி அரசு.

ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023: கருத்து சுதந்திரத்திற்கு கட்டப்படும் கல்லறை!

இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் அரசை விமர்சிக்கும் கருத்துகளும், தளங்களும் மொத்தமாக துடைத்தெறியப்படும் அபாயம் உள்ளது. பொதுவெளியில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிரான கருத்துகள் வடிக்கட்டப்பட்டு, இந்துத்துவ பாசிச கருத்துக்கள் மட்டுமே பேசுபொருளாக்கப்படும்.

உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!

பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக, சோதனை முயற்சியாகவே பாசிசக் கும்பல் தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!

விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கான கோரிக்கை என்பது தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை உரிமைக்கு ஒப்பான உயிராதாரமான கோரிக்கையாகும். விவசாயத்துறையில், உழைப்பவருக்கே அதிகாரம் என்பதை நிலைநாட்டும் வகையிலான கோரிக்கையாகும்.

அம்பலமாகும் மோடியின் திரைமறைவு வேலைகள்!

பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டுவது, செஸ் மற்றும் கூடுதல் வரிகள் விதிப்பது ஆகியவற்றின் மூலம் தனது கஜானாவை நிரப்பிக் கொள்ளும் ஒன்றிய அரசு, கூடுதல் நிதியாதாரங்கள் என்ற பெயரில் பல அரசுத்துறை நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டுக் கடன்களை வாங்கிக் குவித்திருப்பது சுப்ரமணியம் பேசிய காணொளி மூலம் அம்பலமாகியிருக்கிறது.

நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை!

நிதி ஆயோக்கின் அறிக்கையை காரணம்காட்டி அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பல நலத்திட்ட உதவிகளை வெட்டி அவர்களை பேரழிவுக்குள் தள்ளுவதற்கான பேரபாயம் உள்ளது.

ராமர் கோவில் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகம்

நிலவுகின்ற போலி ஜனநாயகம், போலி மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கெல்லாம் சமாதி கட்டிவிட்டு, தாங்கள் நிறுவத்துடிக்கும் இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகத்தை ஆரவாரமாக நடத்திமுடித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல். இந்த பட்டாபிஷேகத்தில், அதானி - அம்பானியின் சேவகரான மோடி இந்துராஷ்டிரத்திற்கான ‘மன்னனாக’ முடிசூட்டிக் கொண்டுள்ளார்.

பாசிச மோடி அரசை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இசுலாமிய மக்களின் போராட்டத்தை தொடர்ந்து பாசிசச் சட்டத்திட்டங்களுக்கு எதிரான மக்களின் களப்போராட்டங்கள் காவி பாசிஸ்டுகளை அச்சங்கொள்ள செய்யும் என்பதற்கு லாரி ஓட்டுநர்களின் போராட்டம் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீச்சு: இந்துத்துவப் பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை!

இளைஞர்கள் நாடாளுமன்றத்தில் பாசிஸ்டுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பியது ஏதோ தனித்த நிகழ்வு அல்ல. போராட்டத்தின் வடிவம் வேறுபட்டிருந்தாலும் ஒன்பதரை ஆண்டுக்கால மோடி ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாசிசக் கும்பலுக்கு எதிரான போராட்டங்களின் தொடர்ச்சியே இச்சம்பவம்.

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!

பிரதமர் மோடியின் மனம்கவர்ந்த அடியாட்களையும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளையும் இனி சட்டப்பூர்வமாகவே தலைமை தேர்தல் ஆணையராகவோ பிற தேர்தல் ஆணையர்களாகவோ நியமிக்க முடியும்.

பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா! | மீள்பதிவு

பாபர் மசூதி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் அளிக்கப்பட்டிருப்பதைப் போல ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது.

காவிகளின் கூடாரங்களாகும் பல்கலைக்கழகங்கள்

புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (ஜே.என்.யு), தமிழ்நாட்டில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திலும் நடந்துவரும் நிகழ்வுகள் பல்கலைக்கழகங்கள் எப்படி காவிகளின் கூடாரங்களாகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

காஷ்மீர் தீர்ப்பு: பாசிஸ்டுகளுக்கு சட்ட அங்கீகாரம்

காஷ்மீர் மக்களின் முதுகில் குத்தும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது, இனி காவி கார்ப்பரேட் பாசிசத்தின் கரத்தை காஷ்மீரில் வலுப்படுத்துவதாகவே அமையும்.

தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!

இந்தியாவை சட்டப்பூர்வமாகவே கொள்ளையடிக்கலாம்; அப்படிக் கொள்ளையடித்த பணத்தை கார்ப்பரேட் கட்சிகளுடன் சட்டப்பூர்வமாகவே பங்கிட்டுக் கொள்ளலாம் என்பதுதான் மோடி அரசின் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்.

அண்மை பதிவுகள்