இராமர் கோயில் திறப்பை பாசிஸ்டுகள் எந்தளவிற்கு கொண்டுப்போவார்கள்?
எப்படி மோடி பெயரில் மைதானத்தை குஜராத்தில் உருவாக்கி அங்கு உலக கோப்பை இறுதி போட்டியை நடத்தி, மோடி பிம்பத்தை தூக்கி நிறுத்தலாம் என கனவு கண்டு அதற்கான நடவடிக்கைகளில் காவிக்கும்பல் ஈடுபட்டதோ, அதுபோன்ற நடவடிக்கைகளை கூடுதலாகவோ குறைவாகவோ இராமர் கோயில் திறப்பிலும் மேற்கொள்ளும்.
தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!
இந்தியாவை சட்டப்பூர்வமாகவே கொள்ளையடிக்கலாம்; அப்படிக் கொள்ளையடித்த பணத்தை கார்ப்பரேட் கட்சிகளுடன் சட்டப்பூர்வமாகவே பங்கிட்டுக் கொள்ளலாம் என்பதுதான் மோடி அரசின் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்.
கிரிக்கெட் உலக கோப்பை போட்டியை நாம் எப்படி பார்ப்பது?
உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் வெற்றியை மோடியின் வெற்றியாக காட்டி, உலக கோப்பையை இந்தியா முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்று, சரிந்துப் போன தனது பிம்பத்தை தூக்கி நிறுத்தலாம் எனக் கனவு கண்ட மோடிக் கும்பலின் வாயில் மண்ணை வாரிக் கொட்டியதாக அமைந்தது இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்வி.
விவசாயிகள் மீது குண்டாஸ்: தி.மு.க. அரசின் துரோக நடவடிக்கை!
மக்கள் விரோத கார்ப்பரேட் நலத் திட்டங்களை நேரடியாகவும் நயவஞ்சகமாகவும் அமல்படுத்தும் தி.மு.க அரசு, போராடும் விவசாயிகளையும் மக்களையும் வன்முறையாளர்களாக சித்தரித்து மூர்க்கதனமாக ஒடுக்கிவருகிறது. இது விவசாய மக்களுக்கு தி.மு.க இழைத்துள்ள பச்சை துரோகம்.
இந்துத்துவ பாசிசத்தின் இருமுனைக் கத்தி: பலிகடாவாக்கப்படும் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’!
"பள்ளர்", "ஒடுக்கப்பட்ட மக்கள்", "தலித்" என்று சொல்லக்கூடாது என்பது; சாதிப் பெருமிதம் ஊட்டுவது; "இந்துக்களாக இணைய வேண்டும்" என தேவேந்திர குல வேளாளர் மக்களை இந்துத்துவ பாசிசத்தின் காலாட்படைகளாக மாற்றுவதற்கான சதிச்செயலைத்தான் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மேற்கொண்டு வருகின்றனர்.
கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே – மாவோ! | மீள்பதிவு | மாவோ 130
மக்களிடம் ரசனை ஊட்டுவதில் வளர்ப்பதில், கற்றுக் கொடுப்பதில் கலை – இலக்கியத்துக்குப் பங்குண்டு. இந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தந்தக் கோபுரக் கலைஞர்களே "மக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை; மக்களுக்கு ஒரு முகமே கிடையாது; நான் எழுதுவதை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒற்றை ஆள் என்றோ ஒருநாள் புரிந்து கொண்டால் போதும்" என்று பிதற்றுகிறார்கள்.
பெரியார் 50-வது நினைவு நாள்: தமிழ்நாடே, உன் போர்வாளை கூர் தீட்டு!
பெரியார் 50-வது நினைவு நாள்
பார்ப்பனியம் இன்று காவி-கார்ப்பரேட் பாசிசமாக, இந்துத்துவமாக அவதாரம் எடுத்துள்ளது. தன் வரலாறு நெடுகிலும் பார்ப்பனியத்தோடு போர் புரிந்த தமிழ்நாட்டிற்கு, அதன் பாசிச அவதாரத்தை வீழ்த்துவதில் முன்னணி கடமை உள்ளது. இது ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்.
தமிழ்நாடே, உன் போர்வாளை கூர் தீட்டு!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பெரியார் 50-வது நினைவு தினம் | சனாதனம் ஒழிப்போம் என முழங்குவோம்!
சனாதனம் ஒழிப்போம்!
அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா: தொடர்ந்து வேட்டையாடப்படும் பத்திரிகை சுதந்திரம்
உலங்கெங்கும் மக்கள் விரோத சர்வாதிகார, பாசிச ஆட்சியாளர்கள் இந்த கருத்துரிமை சாதனங்களைக் கண்காணிக்கவும் ஒடுக்கவுமான சட்டங்களை இயற்றி வருகிறார்கள். அந்த வகையிலேயே மோடி அரசு இச்சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது.
களத்தில் தோழர்கள் – தூத்துக்குடி | உதவ அழைக்கிறோம்!
தொடர்புகொள்ள: செல்வம் 9597494038, மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்
தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு! | மீள்பதிவு | ஸ்டாலின் 145
மக்கள் அடித்தளம் கொண்ட போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்பதன் மூலம் திரிபுவாதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பாதையில் உறுதியோடு பயணிக்க தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில் உறுதியேற்போம்!
வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!
நாம் தரம் உயர்ந்தவை என்று வாங்கி அணியும் இந்த நிறுவன ஆடைகளின் மினுமினுப்பில் ஒளிந்திருக்கிறது வங்கதேச தொழிலாளர்களின் இரத்தம் தோய்ந்த உழைப்பு.
எதிர்க்கட்சிகளே, “பாசிச சர்வாதிகாரம் ஒழிக!” என மக்களோடு சேர்ந்து முழங்க வேண்டிய தருணம் இது!
எதிர்க்கட்சிகளே, "பாசிச சர்வாதிகாரம் ஒழிக!” என மக்களோடு சேர்ந்து
முழங்க வேண்டிய தருணம் இது!
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு
141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம்.
எதிர்கட்சிகளே, இனியும் நாடாளுமன்றத்தில் பாசிஸ்ட்டுகளிடம் விளக்கம்
கேட்டுக்கொண்டு இருக்கப்போகிறீர்களா? அல்லது
மக்கள் மன்றத்திற்கு வந்து இந்த பாசிச அரசை அம்பலப்படுத்தப் போகிறீர்களா?
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
அர்ஜெண்டினா – நெதர்லாந்து: பாசிஸ்ட்டுகள் வெற்றி! இந்திய ஜனநாயக சக்திகள் கற்க வேண்டிய பாடம்!
தென் அமெரிக்காவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அர்ஜெண்டினாவில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம் நிலவுவதற்கு மையவாத இடதுசாரிகளின் அர்ஜெண்டினாவை அமெரிக்காவிற்கு அடகு வைக்கின்ற பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம்.
ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள்: தமிழ்நாட்டைச் சுற்றிவளைக்கும் ஆர்.எஸ்.எஸ்!
தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல்கள் மூலம் தென் தமிழ்நாட்டு மக்களிடையே சாதிமுனைவாக்கத்தை தீவிரப்படுத்தி தனக்கான அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள விழையும் பா.ஜ.க. கும்பல், தற்போது இந்த உத்தியைத் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.





















