Saturday, January 3, 2026
மாட்டுக்கொட்டகை முழுவதையும் மணக்க செய்து விடுவாள். சாம்பிராணி புகையுடன் வலம் வரும் அம்மா. அப்படி இருந்தும் மாட்டுக் கொட்டகை குறித்துபால் எடுக்க வரும் பாண்டித்துரை உதிர்க்கும் வார்த்தைகள் அவ்வளவு பண்பானதாய் இருப்பதில்லை.
ஐ - போன் போன்ற ஆப்பிள் சாதன பயனர்கள் பெருமையை சிலகாலம் பீற்றிக் கொள்ளலாம். பின்னர் அந்நிறுவனம் புதுவடிவமைப்பில் புதுமாடல்களை சந்தையில் இறக்கும் போது தங்கள் பழைய சாதனத்தை தூக்கிக் கடாசிவிட்டு அவற்றை வாங்குவதற்கு வந்தாக வேண்டும்.
பிக் பஜார சுத்திபாக்க போனோம் ஆன்டி. எதாவது ஒன்னு வாங்காம வர கூச்சமாருந்துச்சு. அதான் யூசாருக்குமேன்னு கொசு வத்தி வாங்கினு வந்தோம்.
நீ ஏன் உன்னை டீவிற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய்? ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் நாடகமாடுகிறாய்? டீவிற்பவர்களின் பெயரை ஏன் கெடுக்கிறாய் நீ? தெளிவாகச் சொல்லிவிடு, யாருடைய டீயை நீ விற்கிறாய்
வந்துட்டேன்னு சொல்லு... ஆன்மிக அரசியலுக்கு வந்துட்டேன்னு சொல்லு! - கருத்துப் படங்கள்
கதிராமங்கலத்தில் எந்த ஒரு சிறு அல்லது பெரு தொழிற்சாலைகளோ அல்லது சாயப்பட்டறைகளோ இல்லை. ஆதலால் இங்கு நிலத்தடிநீர் திடீரென குறைவதற்கும், மாசுபடுவதற்கும், பெட்ரோலிய/ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.
எங்கள் கரும்பு காயும்போதும், நாங்கள் கஷ்டப்படும்போதும், பாரி நிறுவனம் எங்களை துன்புறுத்தியபோதும் இந்த அரசாங்கம் தலையிடவில்லை. அதனால்தான் நான் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தலில் யாருக்கும் ஒட்டுப்போடுவதில்லை.
பார்ப்பனியத்தையும் - தனியார்மயத்தையும் ஏன் தகர்க்க வேண்டும் என்பதற்கு ஒரு வலிமையான சமிக்ஞை தான் ஸ்க்ரோல் இணையத்தளத்தில் வெளியான இப்பதிவு.
சங்கரின் மீதான காதல் சமூகத்தின் மீதான காதலாக விரிவதைப் பார்த்து ஆணாதிக்கத்தின் வக்கிரங்கள் வசவுகளில் வாழ்கிறது. உண்மையில் வாழா வெட்டியானது கவுசல்யா அல்ல, வக்கிரம் பிடித்த சாதிவெறி. கெட்ட வார்த்தை சாதிக்காரர்களே தாங்கள் கெட்டழிவது திண்னம்!
ஒகி புயலில் உயிர் இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதே போல பல்வேறு சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அவை எதையும் அரசு முறையாக வழங்கியதில்லை என்பதை, தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தே விளக்குகின்றனர் இளைஞர்கள்.
30 -ம் தேதி சமயத்திலாவது அரசு மீட்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தால் தத்தளித்துக் கொண்டிருந்த பல மீனவர்களை மீட்டிருக்கலாம். ஆனால் அரசு அதற்கு மறுநாள் தான் தேடுதல் பணியை ஆரம்பித்தது. கேடுகெட்ட மத்திய மாநில அரசுகள்.
அன்று துரதிஷ்ட்ட வசமாக தோழர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாமல் போய் விட்டது. இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் மக்களிடம் வாங்கிய திட்டுக்களை படமெடுத்திருக்கலாம்.
கூடியிருந்த செவிலியருங்க ஒரு பன்னை மூணு துண்டாக்கி மூணு பேரா மதிய சாப்பாடா சாப்பிட்டவங்க, எனக்கும் ஒரு துண்ட கொடுத்தாங்க. அப்பதான் வெறுங்கைய வீசிகிட்டு இந்த பிள்ளைங்கள பாக்க வந்தோமேன்னு எனக்கு உறச்சது.
மெரினா போராட்டம் போல முடிவு தெரியும் வரை இங்கிருந்து கலைய மாட்டோம் என்று போராடும் அந்த செவிலியர்களுக்கு உணவு கொடுக்கவோ, கழிப்பறை ஏற்பாடுகளை செய்து தரவோ, போராட்டத்திற்கு ஆதரவு தரவோ அங்கு யாருமில்லை.
நோயாளிகளுக்கு முறையான மருத்துவம் செய்ய முடியவில்லை என்பதே எங்களுக்கு மன வேதனையளிக்கிறது. 16 மணி நேரம் சில சமயங்களில் 24 மணி நேரம் கூட உழைக்கின்றோம். “மக்களுக்காக உழைப்பதில் எங்களுக்கு பெருமை தான். ஆனால் எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த அரசாங்கம் உணரவில்லை”

அண்மை பதிவுகள்