ஆட்சி மாற்றம் செய்யும் அளவிற்கு சக்தி மிக்கது மாணவர் போராட்டம்!
| தோழர் அ.மாயவன்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ஆட்சி மாற்றம் செய்யும் அளவிற்கு சக்தி மிக்கது மாணவர் போராட்டம்!
| தோழர் அ.மாயவன்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

சென்னையில் தாம்பரம் பகுதியில் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பாக தாம்பரம் ராஜாஜி சாலையில் நேஷனல் தியேட்டர் எதிரில் உள்ள டிஜிபி மண்டபத்தில் அரங்கக் கூட்டம் ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் சில காரணங்களால் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு அரங்கக் கூட்டம் மாற்றப்படுகிறது.
ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் என அனைவரும் ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
***
பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
அரங்கக் கூட்டம்
தேதி : 25.08.2024 நேரம் : மாலை 5.00 மணி
இடம் : TGP கல்யாண மண்டபம், ராஜாஜி சாலை, தாம்பரம்.

தலைமை உரை :
தோழர் அமிர்தா,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.
சிறப்புரை :
தோழர் ம.சரவணன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்)
தோழர் பவானி.பா.மோகன்,
வழக்கறிஞர்
சென்னை உயர்நீதிமன்றம்.
திரு. M.முஜிபுர் ரஹ்மான,
வழக்கறிஞர்,
மாநில வழக்கறிஞர் அணி செயளாலர்,
மனிதநேய மக்கள் கட்சி.
தோழர் மருது,
மாநில செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்.
நன்றியுரை :
தோழர் சங்கர்,
பு.ஜ.தொ.மு, காஞ்சிபுரம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு :- 7397404242, 9176801656
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


18.08.2024
தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதியை குறைத்த பாசிச மோடி அரசு!
கண்டன அறிக்கை
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்காக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிதியை காட்டிலும் மிகவும் பல மடங்கு குறைவாக தற்பொழுது நிதி அறிவிக்கப்பட்டுள்ளதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
இடைக்கால மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒரு தொகையை அறிவிப்பது, அதற்குப் பிறகு அதைக் காட்டிலும் மிகவும் குறைவான தொகையை பெயருக்கு அறிவிப்பது என்று செயல்பட்டதன் மூலம் மாபெரும் பிராடு அரசாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.
ஸ்ரீபெரும்புதூர் – இருங்காட்டுக்கோட்டை – கூடுவாஞ்சேரி; திண்டிவனம் – திருவண்ணாமலை; அத்திப்பட்டு – புத்தூர்; ஈரோடு – பழனி; சென்னை – கடலுார் – புதுச்சேரி போன்ற புதிய ரயில்பாதை திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட புதிய ரயில் பாதை திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்திப்பட்டு – புத்தூருக்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
படிக்க: 2024 பட்ஜெட்: ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு!
திண்டிவனம் – நகரிக்கு ரூ. 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 153 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு பழனிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை- அருப்புக்கோட்டை – தூத்துக்குடிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது வெறும் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி – இருங்காட்டுக்கோட்டை – ஆவடி வழித்தடத்துக்காக ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி – இருங்காட்டுக்கோட்டை – ஆவடி லைனுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு எவ்வித நிதியும் அளிக்காமல் முடக்க வேண்டும் என்பதில் பாசிச மோடி அரசு தெளிவாக இருக்கிறது.
வெறும் ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு எப்படி இருப்புப் பாதை திட்டத்தை மேற்கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு வரிகளைப் பெற்று கொழுத்து திரியும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு பிச்சைகாசாக ஆயிரம் ரூபாயை வீசி இருப்பது கேவலமானதாகும்.
இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியையும், மத்திய பட்ஜெட்டில் குறைத்து ஒதுக்கி இருப்பது வரலாற்றில் முதல் முறையாகும்.
தங்களுக்கு ஒரு தொகுதியை கூட கொடுக்காத தமிழ்நாட்டை பழி வாங்குகின்ற ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் அணி திரள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

கல்வி சிக்கல்களை எதிர்த்து போராடுபவர்கள் மாணவர்கள் | பேரா.வீ.அரசு
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறும் தி.மு.க., சி.பி.எம். கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் பாசிச சர்வாதிகாரத்திற்கு காரணமாக இருக்கும் அதானியுடன் ‘பொருளாதார வளர்ச்சி’ என்ற பெயரில் கூடிக் குலாவுகின்றன. கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்திற்காக போராடிய மக்களை ஒடுக்கியதிலேயே சி.பி.எம். கட்சியின் பாசிச எதிர்ப்பு சாயம் வெளுத்துப் போனது. தி.மு.க-வின் சாயமும் வெளுக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
கடந்த ஜூலை மாதம் 9-ஆம் தேதி, அதானி குழுமத்தின் தலைவரும் ஒன்றியப் பிரதமர் மோடியின் நாயகனான அதானி தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். சென்னையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை அதானி சந்தித்து சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகின. தி.மு.க-வானது மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து வருவதாக தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துவரும் சூழலில், அதானியே நேரடியாக வந்து சபரீசனை சந்தித்து சென்றது ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விவாதப் பொருளானது.
சபரீசனுக்கும், அதானிக்கும் இடையே, தமிழ்நாடு அரசு அதானி நிறுவனத்தின் மீதான நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி வழங்கியிருப்பது; தமிழ்நாட்டின் பல துறைகளில் சுமார் நாற்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய அதானி நிறுவனம் அரசுடன் ஒப்பந்தமிட்டிருப்பது; இந்தியா-ரஷ்யா இடையேயான கிழக்கு கடல்வழிப்பாதைத் திட்டத்திற்காக (Eastern Maritime Corridor) காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்குவது ஆகியவை குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகு, 2021-ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் மதிப்பு 8.7 பில்லியன் டாலரிலிருந்து 2023-ஆம் ஆண்டில் 67.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ள நிலையில், பயணத் தூரத்தை 10,458 கி.மீ. ஆகக் குறைத்து இறக்குமதியை மேலும் அதிகரிக்கவே கிழக்கு கடல்வழிப்பாதைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், அதானி தி.மு.க-வைச் சேர்ந்த தலைவர்களையே சந்தித்து பேச முயன்றார்; ஆனால், அத்தகைய சந்திப்புகள் தி.மு.க. கட்சியின் மீதும் ஆட்சியின் மீதும் மக்களுக்கு அதிருப்தியை உருவாக்கும் என்பதால் தி.மு.க. தலைமை அதை மறுத்துவிட்டதாகவும், அதன் பிறகே அதானி சபரீசனை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க. அரசின் செயல்பாடுகளும் இதற்கேற்பவே இருக்கின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டின் பல துறைகளில் அதானி குழுமம் ஆதிக்கம் செலுத்துவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டிற்குள் மெல்லப் படரும் அதானியின் ஆக்டோபஸ் கரங்கள்
கடந்த 2012-16 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அதானி நிறுவனத்திடமிருந்து 1.19 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது. அதானி நிறுவனம் 2,332 ரூபாய் மதிப்பிலான ஒரு மெட்ரிக் டன் நிலக்கரியை மூன்று மடங்கு விலை உயர்த்தி 7,650 ரூபாய்க்கு விற்றது. மேலும் 3,500 கிலோ கலோரியான நிலக்கரியின் தரத்தை 6,000 கிலோ கலோரி என உயர்த்தி விற்பனை செய்தது. இதன் மூலம் அதானி நிறுவனம் ரூ.6,000 கோடி முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகியது. இந்த முறைகேட்டில் அதானி நிறுவனத்தின் பங்கு மட்டும் ரூ.3000 கோடி என அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டுகிறது.
எதிர்க்கட்சியாக இருந்த போது அதானி நிறுவனத்தின் நிலக்கரி முறைகேடுகள் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “குஜராத்தைச் சார்ந்த அதானி நிறுவனத்தின் பின்னணிக் கதையையும் அதற்கும் பா.ஜ.க-வுக்கும் உள்ள நெருக்கமானத் தொடர்பையும் நாடே அறியும்” என்றெல்லாம் கூறி “சிபிஐ விசாரணையும்” கோரியிருந்தார். 2018-இல் அறப்போர் இயக்கமும் நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தது. ஆனால், 2021-இல் ஆட்சிக்குவந்த தி.மு.க. அந்தப் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அப்படியே கிடப்பில் போட்டது.
“2018-இல் அளித்த இந்தப் புகாரை விசாரிக்கலாமா? என அனுமதி கேட்டு பிப்ரவரி 2023-இல் தான் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது லஞ்ச ஒழிப்புத்துறை. அவர்களின் கடிதத்தை ஒன்றரை ஆண்டு கிடப்பில் போட்ட தி.மு.க. அரசு, அண்மையில்தான் விசாரிக்க ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அதுவும் அறப்போர் இயக்கமும், சமூக ஆர்வலர்களின் தொடர் வலியுறுத்தல்களாலே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்த முறைகேடு புகாரில் இன்னும் முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யப்படவில்லை” என்று கூறுகிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்.
இந்த நிலையில் அதானி-சபரீசன் சந்திப்பு நிகழ்ந்துள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறையால் அதானி நிறுவனத்தின் மீதான நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் புகார் முறையாக விசாரிக்கப்படுமா? என்று ஜனநாயக சக்திகள் பலர் கேள்வியெழுப்புகின்றனர்.
மேலும், ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமத்துடன் பல ஒப்பந்தங்களை செய்திருக்கிறது தி.மு.க. அரசு. இம்மாநாட்டில், பசுமை எரிசக்தி துறையில் ரூ.25,000 கோடி, தரவு மையங்களில் ரூ.13,200 கோடி, சிமெண்ட் உற்பத்தியில் ரூ.3,500 கோடி, குழாய் எரிவாயு விநியோகத்தில் ரூ.1,568 கோடி என முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தமிட்டுள்ளது, அதானி குழுமம். இந்த ஒப்பந்தங்கள் மூலம் மேற்கண்ட துறைகளில் தன்னுடய ஏகபோக ஆதிக்கத்தை நிறுவுவதற்கே அதானி நிறுவனம் முயல்கிறது என்பதை தி.மு.க. அரசு அறிந்திருந்த போதிலும், அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.
மேலும், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் அழியும்; சென்னை பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிந்துதான், அதானி நலனுக்காகவே காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவும் முயல்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்கள் விரோதத் திட்டங்களை அமல்படுத்தமாட்டோம் என்று வாக்குறுதியளித்த தி.மு.க., பரந்தூர் விமான நிலையம் போன்ற கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளாகப் போராடி வரும் விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் ஆந்திராவிற்கு அகதிகளாகப் குடிபெயர்வோம் என்று அறிவித்த பிறகும் இத்திட்டத்தை தி.மு.க. அரசு கைவிடவில்லை.
ரஷ்யாவிலும், இலங்கையிலும் தனது எஜமானர் அதானிக்காக மோடி ஒப்பந்தங்களைப் பெற்றுத் தருகிறார்; ஸ்டாலினோ, தமிழ்நாட்டில் அதானிக் குழுமத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்துவது போன்ற கட்டுமானங்களை மேற்கொள்கிறார்.
அதானி – கேரளாவின் ‘வளர்ச்சி’ நாயகன்
அதானி சேவையில் தி.மு.க. அரசையே விஞ்சிவிட்டது நவகேரள மாடலின் சி.பி.எம்-இன் விஜயன் அரசு. அதானியின் நலனுக்காகத் தி.மு.க. அரசு செயல்படுகிறது என்றபோதிலும், தமிழ்நாட்டு மக்களுக்கு மோடி- அதானி கும்பலின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக தி.மு.க. அமைச்சர்கள் அதானியை ஆதரித்து வெளிப்படையாக பேசுவதில்லை. ஆனால், கேரள அரசின் முதல்வர் பினராயி விஜயனும், அமைச்சர்களும் அதானியை ‘வளர்ச்சி’யின் நாயகனாகப் புகழ்கின்றனர்.
கடந்த ஜூலை 11 அன்று, 1950 கண்டெய்னர்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட சார் பெர்னாண்டோ என்ற கப்பல், முதல் சரக்கு கப்பலாக விழிஞ்சம் துறைமுகத்துக்கு வந்தது. இந்த சரக்குக் கப்பலுக்கான வரவேற்பு விழா மற்றும் துறைமுகத்துக்கான அதிகாரப்பூர்வமான செயல்பாடுகளுக்கான திறப்பு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பினராயி விஜயன், “நமது நீண்ட கால கனவு நனவாகி இருக்கிறது. துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாகும். விழிஞ்சம் துறைமுகத்தின் மூலம் இந்தியா உலக வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த அதானிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதானியை வாழ்த்திப் பேசினார்.
பா.ஜ.க- தி.மு.க-சி.பி.எம் கட்சிகளுக்கு சித்தாந்தம், கொள்கை ஆகியவற்றில் வேறுபாடு இருப்பதாக கூறினாலும், வர்க்கப்பாசத்திலும், சேவையிலும் வேறுபாடில்லை என்பதையே இவர்களின் செயல்பாடுகள் அறிவிக்கின்றன.
இதற்கு முன்பு, “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட போராட்டம் இது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீனவர்கள் மட்டுமல்ல” என்று பாஜகவினரைப் போல இந்த விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராகப் போராடிய மக்களை இழிவுப்படுத்தி, அதானிக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். இதைவிட இழிவாக, கேரள சி.பி.எம் கட்சியோ விழிஞ்சம் துறைமுகக் கட்டுமானப் பணிகளை ஆதரித்து பா.ஜ.க-வுடன் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்ட செய்திகள் கூட ஊடகங்களில் வெளியாகி நாறியது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதானி குழுமம் விழிஞ்சம் துறைமுகத்தில் கப்பல் முனையங்கள், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் பதுங்கு குழி, மீன்பிடி துறைமுகம், சிமெண்ட் அரைக்கும் ஆலை மற்றும் கடல் உணவு பூங்கா உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் ரூ.20,000 கோடியை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கும் பினரயி விஜயன் ஒப்புதல் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் விழிஞ்சம் கடற்கரையை சார்ந்து வாழும் மீனவர்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டே ஒட்டுமொத்தமாக விரட்டப்படுவர்.
இவ்வாறு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அம்மக்களை அகதிகளாக்கி சுற்றுச்சூழலையும் கடல் வளத்தையும் நாசம் செய்து மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தை ‘வளர்ச்சி’ திட்டமாக சித்தரிப்பது கேரள அரசின் அப்பட்டமான மக்கள் விரோத கார்ப்பரேட் சேவையாகும்.
000
அதானிக்கும் மோடி-அமித்ஷா கும்பலுக்கும் உள்ள உறவோ, மோடி பிரதமரான பிறகு அதானி உலகப் பணக்காரராக வளர்ந்து வந்ததோ தமிழ்நாட்டின் தி.மு.க.விற்கும் கேரள சி.பி.எம்-க்கும் தெரியாமல் இல்லை. தாங்கள் ஆளும் மாநிலங்களுக்குள் அதானியை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதன் மூலம் இக்கட்சிகளுக்கு வர்க்கப்பாசமே முதன்மையானது என்பது அம்பலமாகிறது. பா.ஜ.க- தி.மு.க-சி.பி.எம் கட்சிகளுக்கு சித்தாந்தம், கொள்கை ஆகியவற்றில் வேறுபாடு இருப்பதாக கூறினாலும், வர்க்கப்பாசத்திலும், சேவையிலும் வேறுபாடில்லை என்பதையே இவர்களின் செயல்பாடுகள் அறிவிக்கின்றன.
நம் நாட்டைப் பாசிச அபாயம் சூழ்ந்திருக்கிறது. அம்பானி, அதானி, அகர்வால் வகையறா கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் தலைமையிலான காவி கும்பலின் பாசிசம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இப்பாசிஸ்டுகளின் ஆட்சியில் தொலைதொடர்பு, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், துறைமுகங்கள், இரயில்வே, வங்கிகள் உள்ளிட்ட உற்பத்தி, கட்டுமானம், சேவை என அனைத்துத் துறைகளிலும் இக்கும்பலின் ஏகபோக ஆதிக்கம் நிறுவப்பட்டு கொண்டிருக்கிறது. மக்கள் நலன் என்பதைப் படிப்படியாகக் கைக்கழுவி, அரசு என்பது கார்ப்பரேட் கும்பலுக்காக உழைக்கும் மக்களை ஒடுக்குகிற நிறுவனமாக பட்டவர்த்தனமாக மாறி வருகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகளும், மாநில உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.
இச்சூழலில், மோடி-ஷாவின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் இக்கட்சிகளே அதானிக்கு சேவையாற்றுவதன் மூலம், தங்கள் மாநிலங்களில் பாசிசக் கும்பலின் வளர்ச்சிக்கும், ஆட்சிக்கும் அடித்தளமிடுகிறார்கள். பாசிச பா.ஜ.க. எதிர்ப்புணர்வில் இருந்து தங்களுக்கு வாக்களித்த மக்களின் முதுகிலும் குத்துகிறார்கள். இது கோடானுகோடி உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமல்லவா?
தி.மு.க., சி.பி.எம். கட்சிகளின் இத்தகைய நடவடிக்கைகள் பற்றி தங்களின் பிழைப்புவாதத்திற்காக அக்கட்சிகளில் ஒட்டிக்கொண்டு இருப்பவர்கள் வேண்டுமானால் கவலைப்படாமல் இருக்கலாம். இக்கட்சிகளில், கொள்கைக்காகவும், சித்தாந்தத்திற்காகவும் இருப்பவர்கள், பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று உணர்வுப்பூர்வமாக செயல்படக்கூடிய சக்திகள் இக்கட்சிகளின் அதானி சேவைக் குறித்து மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
![]()
அமீர்
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

கொல்கத்தாவில் இயங்கி வரும் ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த பெண் மருத்துவர் ஆகஸ்ட் 9 அன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க “மத்திய சுகாதாரத்துறை பாதுகாப்பு சட்டத்தில்” விதிமுறைகள் வகுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய உறைவிட மருத்துவர்கள் சங்க சம்மேளனம் (எஃப்.ஓ.ஆா்.டி.ஏ) கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென மத்திய அரசு தெரிவித்ததன் காரணமாக பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
மேலும், மத்திய அரசு வெறும் வாக்குறுதிகளை அளித்தால் மட்டும் போதாது என்று கூறிய மருத்துவர்கள், வேலை நிறுத்தப் போராட்டம் செய்யவிருப்பதாக, ஆகஸ்ட் 12 அன்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 17) காலை முதல் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் தொடங்கியது. புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவும், அத்தியாவசியப் பிரிவு மட்டும் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் மருத்துவர்களை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரிக்க வேண்டும். மருத்துவர்கள் போராட்டம் குறித்த புகைப்படங்களை வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.










சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் காலக்கட்டத்தில், அவற்றை கண்டித்து குற்றவாளிகளுக்கு எதிராக குரலெழுப்புவதை விடுத்து பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிறது இந்த சமூகம். அப்பெண்ணின் நடவடிக்கைகளைக் கேள்வியெழுப்புவதன் மூலம் இதுபோன்ற குற்றங்களை நியாயப்படுத்துகிறது.
2017: ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த 43 வயதான பெண்ணை குடிபோதையில் இருந்த 21 வயதான இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் இணையதளத்தில் பரவலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் நடைபெற்ற நேரம் பகல் 2.30 மணி! இதனை பொதுமக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டும் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தனரே தவிர ஒருவர்கூட தடுக்க முன்வரவில்லை.
2018: கேரளாவில் கன்னிமாடத்தில் வைத்து அருட்சகோதரி ஒருவரை 2014 முதல் 2016 வரை சுமார் இரண்டு வருடங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் கிறித்தவ பாதிரியார் ஒருவன்.
அதே ஆண்டு ஜம்மு – காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயதேயான ஆசிபா பானோ என்ற சிறுமி 7 கொடூரர்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
2024 மார்ச் 9: தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்மீக பயணம் சென்ற 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாள்.
2024 ஆகஸ்ட் 11: ஜார்கண்டில் பள்ளி வாகனத்தில் வைத்து 3.5 வயதேயான குழந்தையை வாகன ஓட்டுநர் பலாத்காரம் செய்துள்ளான்.
2024 ஜூலை 30: 85 வயதான மூதாட்டி தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்
2024 ஆகஸ்ட் 9 மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி கர் என்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பணிநேரத்தில் (NIGHT SHIFT) ஓய்வெடுக்க சென்ற முதுகலை மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் 11 வயதேயான தனது சொந்த மகளை 5 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளான் ஒருவன்.
படிக்க: தொடக்கக் கல்வி ஆசிரியர்களை போராடவிடாமல் கைது செய்யும் திமுக அரசு
பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கான காரணங்களாக மேலே குறிப்பிட்ட கருத்துகளையே இந்த சமூகம் முன்வைக்கிறது. எனினும் அதன்பின் கொடுக்கப்பட்ட செய்திகள் என்பது அக்கருத்துக்களை எல்லாம் தகர்த்தெறிவதாகவே உள்ளன.
8 வயது சிறுமியின் உடையில் என்ன ஆபாசத்தை கண்டுவிட்டனர் அந்த காமவெறியர்கள். மூன்றரை வயதான சிறுமிதான் உடலுறவு வைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டாரா? இல்லை தன் தந்தையிடம் அன்பாக பழகியதுதான் 11 வயது சிறுமியின் குற்றமா?
இவற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்றுதான். அவள் அணிந்திருக்கும் உடை, அவளது தொழில், அவள் செல்லும் இடம் எதுவாக இருப்பினும் நேரபேதமின்றி “அவள்” பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்பதைத் தான்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மதத்தின் பேரால் கலவரங்களில்
மரித்து போனவர்களின்
சாம்பல்கள் சொல்லும்.,
காற்றில் கரைந்த
இந்திய சுதந்திரத்தை…!
பாலியல் சீண்டல்களால்
பாதிப்புக்கு உள்ளான
மல்யுத்த வீரர்களின்
கனவுகள் சொல்லும்.,
ஒலிம்பிக்கில் பறிபோன
இந்திய சுதந்திரத்தை…!
தகுதித் தேர்வுகளால்
கனவுகள் பறிபோன
மாணவர்களின் கடைசி மூச்சு
சொல்லும்.,
கல்வி கார்ப்பரேட்மயமான
இந்திய சுதந்திரத்தை…!
420 எல்லாம் இணைந்து
370-யை நீக்கிய போது
காஷ்மீரிகளின் உரிமைகள்
சொல்லும்.,
அம்பானிகளிடம் தாரைவார்க்கப்பட்ட
இந்திய சுதந்திரத்தை…!
பட்ஜெட்டில் அதிக நிதி
ஒதுக்கப்பெற்ற இராணுவத்தின்
துப்பாக்கி முனை சொல்லும்.,
காடுகளிலிருந்து விரட்டப்படும்
பழங்குடிகளின்
இந்திய சுதந்திரத்தை…!
மருத்துவமனையில் உறங்கும் வேளையில்
பலாத்காரம் செய்து
சிதைக்கப்பட்ட
மருத்துவரின் உடல் சொல்லும்.,
ஆணாதிக்க வெறியின்
இந்திய சுதந்திரத்தை…!
இத்தனை சுதந்திரத்தை
உலகுக்குச் சொல்லாமல்
எப்படி கடப்பது இந்த தினத்தை…
நினைவில் கொள்ளுங்கள்,
பாசிச சக்திகளே…
நீங்கள் கொடிமரத்தில் ஏற்றுவது என்னவோ
தேசியக் கொடியைத்தான்…
ஆனால் அதன் சுருக்கில் தொங்குவது
எங்களின் இன்னல்பட்ட
உரிமைகள்…
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

🔴LIVE:கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள் | கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு
இன்று(17.08.2024) காலை 9.30 மணியளவில் நேரலை துவங்கும். நேரலையை காண கீழே உள்ள யூடியூப் லிங்கை அழுத்தவும். நன்றி!
நேரலையை பாருங்கள்!! பகிருங்கள்!!
பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
அரங்கக் கூட்டம்
தேதி : 20.08.2024 நேரம் : மாலை 5.00 மணி
இடம் : TGP கல்யாண மண்டபம், ராஜாஜி சாலை, தாம்பரம்.

தலைமை உரை :
தோழர் அமிர்தா,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.
சிறப்புரை :
தோழர் ம.சரவணன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்)
தோழர் பவானி.பா.மோகன்,
வழக்கறிஞர்
சென்னை உயர்நீதிமன்றம்.
திரு. M.முஜிபுர் ரஹ்மான,
வழக்கறிஞர்,
மாநில வழக்கறிஞர் அணி செயளாலர்,
மனிதநேய மக்கள் கட்சி.
தோழர் மருது,
மாநில செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்.
நன்றியுரை :
தோழர் சங்கர்,
பு.ஜ.தொ.மு, காஞ்சிபுரம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு :- 7397404242, 9176801656
“பாசிச மோடி அரசு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெறு”
– சென்னை அரங்கக்கூட்டத்திற்கான பிரச்சாரம்
11.08.2024 அன்று சென்னை புரசைவாக்கத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாரம் நடைப்பெற்றது. அப்போது மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டுமென்பதை வலியுறுத்தியும் அதுதொடர்பாக 20-ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் நடைபெறவுள்ள அரங்கக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது, வியாபாரிகள் மிகுந்த ஆதரவு கொடுத்தனர்.

11.08.2024 அன்று காஞ்சிபுரம் பணப்பாக்கம்
கடை வீதியில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்தும் வழக்குரைஞர்கள் போராட்டத்தை ஆதரித்தும் உரிமைக்காக போராடக்கூடிய மக்களை ஒடுக்கும் இச்சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராடக்கூடிய மக்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் பிரச்சாரம் செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

நமது நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அனைவரும் கொண்டாடுகிறார்கள். விடுதலை போராட்டத்தில் துளியும் பங்கு கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலோ “ஹர்கர் திரங்கா” என்று நமக்கு தேசப்பற்று குறித்து வகுப்பெடுக்கிறது. ஆனால், விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் தங்களது ஓய்வூதியத்தை இன்றும் போராடிப்பெறும் நிலையில்தான் நமது ‘சுதந்திர இந்தியா’ உள்ளது என்பதே கசப்பான உண்மை.
சான்றாக, தமிழ்நாட்டைச் சார்ந்த வேலு என்பவருக்கு 97 வயதாகிறது. இவர் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகையைச் சமீபத்தில்தான் பெற்றார். ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 2021-லிருந்துதான் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தைப் பெற்று வருகிறார். இருந்தாலும் அவருக்கு கிடைத்த ஓய்வூதியம் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இந்த சொற்பமான தொகையைப் பெறுவதற்கே அவர் அரசு நிறுவனங்களில் குறுக்கும் நெடுக்குமாக அலைய வேண்டியதாகிவிட்டது.
வேலு 1924-ஆம் ஆண்டு பர்மாவில் (தற்போதைய மியான்மர்) பிறந்தவர். இளம் வயதிலேயே விடுதலை போராட்டத்தில் ஈடுபாடுகொண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனால் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 1945-46 ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு 1970-ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பி தமிழ்நாட்டில் தங்கிவிட்டார்.
படிக்க : 78வது சுதந்திர தினம் | வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்கிறார்கள்! எதற்காக?
ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக அறிவிக்கப்பட்ட பிறகும் அவரது போராட்டம் தொடர்ந்தது. 1987-ஆம் ஆண்டு அரசு அறிவித்த ஓய்வூதியத்திற்குப் பதிவு செய்தார். ஆனால் அவரது படிவம் கண்டுகொள்ளப்படவில்லை. 2012-ஆம் ஆண்டு மீண்டும் அவர் பதிவு செய்த விண்ணப்பம் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டது. இருப்பினும், அவரது விண்ணப்பத்தைச் சந்தேகப்பட்டு அரசு நிராகரித்தது. 2021-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகுதான் அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டது.
அதன் பிறகும் 2021, 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் அவரது ஓய்வூதிய நிலுவைத் தொகை தொடர்பாக மேலும் மூன்று வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. 1987-ஆம் ஆண்டிலிருந்து அவருக்கு வழங்கவேண்டிய ஓய்வூதியம் சம்பந்தமாக 2008-ஆம் ஆண்டு அவர் தாக்கல் செய்த விண்ணப்பம் கண்டுப்பிடிக்கப்பட்டு, அதனடிப்படையில் 2022-ஆம் ஆண்டு அவரது நிலுவைத் தொகையைக் கணக்கிடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதன்பிறகும் எந்தவித உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மீண்டும் அரசுக்கெதிராக அவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்தாண்டு ஜூலை 8-ஆம் தேதி அவரது நிலுவைத் தொகையை உறுதிசெய்து உத்தரவிட்டது. 77 ஆண்டுகளுக்குப் பிறகு பல கட்ட போராட்டத்தின் பலனாக தற்போதுதான் அவருக்கு ஓய்வூதியம் கிடைத்துள்ளது.
இதுபோன்று நாட்டு விடுதலைக்காக போராடிய பல வீரர்கள் தங்களுடைய ஓய்வூதியத்திற்காகப் போராடி வருகின்றனர். “வேலு” இதற்கான ஒரு சான்று மட்டுமே. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் காலை நக்கிப்பிழைத்த ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் அதிகாரத்திலிருப்பதும் நமது நாட்டு விடுதலைக்காக ரத்தம் சிந்திப் போராடிய வீரர்கள் ஓய்வூதியத்திற்காக அரசு அலுவலகங்களிலும் நீதிமன்றங்களிலும் அலைந்துக் கொண்டிருப்பதும்தான் ‘சுதந்திர’ இந்தியாவின் அவலநிலை.
![]()
ஹைதர்
செய்தி ஆதாரம்: பார் அண்ட் பென்ச்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

78வது சுதந்திரத்தை கொண்டாடுங்கள் !
வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்கிறார்கள்!
எதற்காக?
ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிறது என்பதற்காகவா?
யாருக்கு சுதந்திரம்?
நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என போராடிய தூத்துக்குடி மக்களை சுட்டுக் கொன்ற போலிஸ் மற்றும் அதிகாரிகள் மீது ஒரு குற்றவழக்கு கூட பதிவு செய்யப்படாமல் சுதந்திரமாக இருக்கிறார்கள் ?
மீன் கழிவு ஆலையால் பாதித்த பொட்டலூரணி கிராம மக்கள் நல்ல சுவாசத்திற்காக 3 வருடமாக போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் ?
பரந்தூர் மக்களின் கழுத்துக்கு மேலே கத்தியை தொங்கவிட்டிருக்கிறாரக்ள் கார்ப்பரேட்டுகள்!
படிக்க : ஆகஸ்ட் 17 | கலந்தாய்வரங்கம் – நூல் வெளியீடு | மாணவர்களிடையே பிரச்சாரம் | புமாஇமு
மனதில் மட்டுமல்ல, இதோ 21ஆம் நூற்றாண்டிலும் தீண்டாமைச் சுவர் இம்மண்ணில் நீடிக்கத்தான் செய்கிறது. இதற்கு எதிராகவும், சாதியின் பெயராலும் அரசு நிலத்தை ஆக்கரமித்த ஆதிக்க சாதியினரினடமிருந்து நிலத்தை மீட்கவும் போராடி கொண்டு இருக்கும் சங்கரலிங்கம்புரம் விளாத்திகுளம் மக்கள்!
கண் தெரியாவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு அரசு கொடுத்த நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து அவர்களின் எதிர்காலத்தை இருட்டில் தள்ளுகிறார்கள்!
தலைநகர் டெல்லியில் ஷோ காட்டும்
போர்க்கப்பலும், ராணுவப் படைகளும், ராக்கெட்டுகளும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது இங்கே திரும்ப மறுப்பது ஏன் ?
தன் மருத்துவ அறிவினால் மக்கள் பணி செய்ய வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். மருத்துவ சமுதாயம் வீதியில் இறங்குகிறது.
படிக்க : 78 வது ‘சுதந்திர’ தினம்: இந்தியா சுதந்திரத்திற்காக அழுகிறது!
பதக்கம் வாங்கித் தந்து பெருமை சேர்த்த வீரமங்கைகள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகிறார்கள். களத்தில் மட்டுமல்ல, போராட்டக் களத்திலும் உறுதியாய் நின்றார்கள். எதிர்த்து நிற்கும் துணிவின்றி முதுகில் குத்தி வெளியே ஊள்ளுகிறது பாசிசத்தின் அதிகாரம்!
குடிக்கும் தணணீரில் மலத்தை கலக்கிறது சாதியம்! ஈராயிரம் ஆண்டுகாலமாக கொக்கரிக்கிறது பார்ப்பனியம்!
இதில் எங்கே வருகிறது சுதந்திரம்.. கொடி ஏற்றிக் கொண்டாட..
உண்மையான சுதந்திரத்திற்காக
மக்களுக்கு அதிகாரம் வழங்க கூடிய
பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு நோக்கி பயணிப்போம் !
பதிவு
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605
கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள்
மாநில அளவிலான மாணவர்கள் கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு
வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பாக மாணவர் அமைப்புகளை இணைத்து “கல்வி தளங்களில் மாணவர்களின் பிரச்சனைகள்-தீர்வுகள்”என்ற தலைப்பில் கலந்தாய்வரங்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்விற்கு மக்கள் கல்விக் கூட்ட இயக்கத்தின் சார்பாக போடப்பட்ட துண்டறிக்கையை ஆயிரக்கணக்கில் கல்லூரி மாணவர்களிடத்தில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 94448 36642
78 வது ‘சுதந்திர’ தினம்: இந்தியா சுதந்திரத்திற்காக அழுகிறது!
இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் கட்டமைப்பு தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருகிறது. சுவிடன் நாட்டின் கோதன்பர்க் பல்கலைக்கழகத்தின் “ஜனநாயக அறிக்கை – 2024”, கடந்த சில ஆண்டுகளில் படுமோசமான எதேச்சதிகார நாடாக இந்தியா மாறிவருகிறது என்று தெரிவிக்கிறது. எதேச்சதிகாரப் போக்கு என்பது திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளது.
கருத்து சுதந்திரம் படிப்படியாக சரிந்து வருகிறது. ஊடக சுதந்திரத்தில் சமரசம் செய்து கொள்வதும் சமூக ஊடகங்களை ஒடுக்குவதும் அதிகரித்து வருகிறது. அரசை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை துன்புறுத்துவது, அதேபோல் சமூக செயற்பாட்டாளர்களை தாக்குவதும் நடைபெறுகிறது. ஊடக சுதந்திரமற்ற இந்தியாவிற்காக, இந்தியா அழுகிறது!
பன்மைத்துவத்திற்கு எதிரான பா.ஜ.க. அரசு, தேசத்துரோக, அவதூறு, பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை கொண்டு தங்கள் மீதான விமர்சனங்களை ஒடுக்குகிறது. அதனுடனே மத சுதந்திரத்துக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துகிறது. எதிர்க்கட்சிகள் மற்றும் அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை நசுக்குவதும் பரவலாக உள்ளது. எதேச்சதிகார நாடுகளில் முதல் பத்து இடங்களில் இந்தியா உள்ளது. தாராளவாத ஜனநாயக குறியீட்டில் 104-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் உள்ள பல லட்ச மக்கள் பட்டினியில் உழல்கின்றனர். வறுமை சார்ந்த புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் அரசிடம் இல்லை. 2014-லிருந்து 2022 வரை வெவ்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்திய மக்கள்தொகையில் 2.5 முதல் 29.5 சதவிகிதம் வரையிலான மக்கள் வறுமையில் உள்ளனர். 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகப் பட்டினி குறியீட்டில் 125 நாடுகளில் இந்தியா 111-வது இடத்தில் இருப்பது கவலைக்குறியது. வறுமையற்ற இந்தியாவிற்காக, இந்தியா ஏங்குகிறது!
படிக்க : சிதைவுறும் சொர்க்கம் | பிஜின் ஜோஸ்
பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் ஆட்சியாளர்களின் மடியில் கிடக்கிறது. 2024-ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான குறியீட்டில் 180 இடங்களில் 159-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கு உள்ள சுதந்திரத்தின் அடிப்படையில், எல்லையற்ற நிரூபர்கள் அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி ஊடகத்திற்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா உள்ளது. உண்மையின் பக்கம் நிற்கும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள், கொல்லவும் படுகிறார்கள். நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் அனைவரும் பார்க்கிறோம். மக்களின் உரிமைக்காக பேசும்போது அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு எதிர்க்கட்சியினர் தடுக்கப் பார்க்கிறார்கள், அவர்களது மைக் அனைக்கப்படுகிறது. இந்தியாவில் காலாவதியாகிப் போன கருத்துரிமை, பேச்சுரிமைக்காக இந்தியா அழுகிறது!
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நீதிக்காக போராடியவர்களை ஒடுக்குவதற்காக இந்தியா அழுகிறது! சமூக செயல்பாட்டாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர், சிறையில் அடைக்கப்படுகின்றனர், ஏன் கொல்லவும் படுகின்றனர். பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஸ்டான் சாமி பீமா கோரேகான் சதி வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் அக்டோபர் 08, 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நடுக்குவாத நோயினால் பாதிக்கப்பட்ட அவருக்கு உறிஞ்சு குழாய் தராமல் கொன்றனர். அவரது மரணம் என்பது ஒரு நிறுவனக் கொலை. சமூக செயற்பாட்டாளர்களான தீஸ்தா சேதல்வாட், அருந்ததி ராய், போரா. சாய் பாபா, உமர் காலித், மேதா பட்கர் போன்றோர்கள் பா.ஜ.க-வால் பழிவாங்கப்படுகின்றனர்.
இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் இழிவுப்படுத்தப்படுவது, பாகுபாடு காட்டப்படுவது, தாக்கப்படுவதற்காக இந்தியா அழுகிறது! இஸ்லாமியர்கள், கிறுத்துவர்கள், சீக்கியர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் பா.ஜ.க-வின் வகுப்புவாத அரசியலால் பிரிக்கப்பட்ட சமூகத்தில் உள்ளனர். ஜூன் 26-ஆம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் வெளியிட்ட சர்வதேச மத சுதந்திர ஆண்டறிக்கையில், இந்தியாவில் மத சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், அவர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டம், அவர்களது வழிபாட்டு தளங்கள் மற்றும் வீடுகள் இடிக்கப்படுவது என்பது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.
சுற்றுச்சூழல் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக, சுற்றுச்சூழல் சுதந்திரத்திற்காக இந்தியா அழுகிறது! வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, டெல்லியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நாடு முழுக்க ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் எல்லாம் நமக்கு உணர்த்துவது சுற்றுச்சுழல் பாதுகாப்பில் நாம் அதீத அக்கறை எடுத்துகொள்ள வேண்டும் என்பதைத்தான். ஆனால், அரசு திட்டங்கள் அனைத்தும் அவர்களின் முதலாளித்துவ நண்பர்களுக்கு சாதகமாக உள்ளது. இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கும் சுரண்டுவதற்கும் உரிமம் வழங்குகிறது. சுற்றுச்சூழல் சிதைந்து வருகிறது! 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் 180 நாடுகளில் 176-வது இடத்தில் இந்தியா உள்ளது. வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் பல்லுயிர் காடுகள் அழிக்கப்படுகிறது. இதனை 2023-ஆம் கொண்டுவந்த வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா உறுதி செய்கிறது. நம் நாட்டில் உள்ள பல ஆறுகள் மாசடைந்துள்ளது. மேலும், நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலங்கள் அரசின் முதலாளித்துவ நண்பர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தங்களது லாப நோக்கத்தை தவிர இயற்கையின் மீது அக்கறை கிடையாது.
படிக்க : உத்தரப்பிரதேசம்: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக கூறி முஸ்லீம்களைத் தாக்கும் காவிக் கும்பல்
நாடாளுமன்றங்களில் விவாதங்களின்றி கொண்டுவரப்பட்ட மக்களுக்கெதிரான கருப்பு சட்டங்களுக்காக இந்தியா அழுகிறது! குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370 மற்றும் 37A-ஐ நீக்கியது, விவசாயிகளுக்கெதிரான மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவர முயற்சித்தது, தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத்தொகுப்புகளை கொண்டு வந்தது, மதமாற்ற தடைச்சட்டம், உத்தராகண்ட்டில் நடைமுறையிலுள்ள பொதுசிவில் சட்டம், “ஒரே நாடு; ஒரே தேர்தல்” அறிக்கை, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் என்று சொல்லிக்கொண்டு போகலாம்.
ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கான தரமான கல்விக்காக இந்தியா அழுகிறது! இப்பிரிவில் இருந்து வருபவர்களுக்கு கல்வி பயில்வதற்கான, உத்திரவாதமான வேலைக்கான வாய்ப்புகள் இல்லை. புதிய கல்விக்கொள்கையின் மூலம் இவர்கள் தடுமாறுகின்றனர். மாணவர்களும் இளைஞர்களும் அவர்களுக்கு இக்கட்டமைப்பால் ஏற்பட்ட ஏமாற்றங்களால் தற்கொலை செய்துகொள்கின்றனர். மேலும், இந்தியாவில் கல்வி என்பது சமூகத்திற்கானதாக அல்லாமல் உள்ளது.
வேலைவாய்ப்பற்ற இந்தியாவிலிருந்து விடுபட இந்தியா அழுகிறது. நாட்டின் இளைஞர்கள் வேலையின்மைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித வளர்ச்சி நிறுவனம் இணைந்து வெளியிட்ட இந்திய வேலைவாப்பு அறிக்கை 2024-இல், மக்கள்தொகையில் ஏறக்குறைய 83 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறது. 2000-ஆம் ஆண்டில் 35.2 சதவிகிதமிருந்த இடைநிலை படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 2022-ஆம் ஆண்டு 65.7 சதவிகிதமாக இருமடங்காக உயர்ந்துள்ளது.
ஊழலற்ற இந்தியாவிற்காக இந்தியா அழுகிறது. நம் நாட்டில் ஊழல் என்பது இயல்புநிலையாக உள்ளது. அரசு நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்காமல் எதுவும் செய்ய முடியாத நிலைமைதான் இருக்கிறது. ஆட்சியில் உள்ள பா.ஜ.க. பணமதிப்பிழிப்பு நடவடிக்கைகளிலும் தேர்தல் நிதிப்பத்திரத்தின் மூலமும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பணம் பெற்றுள்ளது. நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் 70 தொகுதிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. செபியின் தலைவர் மாதவி பூரி புஞ் ஒழுங்குமுறையை மீறி அதானி குழுமத்தில் பங்குகள் வைத்துள்ளார் என்று அண்மையில் வெளிவந்த ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தியது. ஊழல் புலனாய்வு குறியீட்டில் சர்வதேசிய அளவில் 180 நாடுகளில் 93-வது இடத்தில் இந்தியா உள்ளது. தற்போதுள்ள உலக நாடுகளில் மோடி ஆட்சிதான் மிகவும் ஊழல் உள்ள ஆட்சி.
அரசமைப்பு நிறுவனங்களின் சுதந்திரத்திற்காக இந்தியா அழுகிறது. இந்திய தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., தேசிய புலனாய்வு முகமை, வருமான வரித்துறை, தேசிய மனித உரிமை ஆணையம், போலீசு மற்றும் நீதித்துறை என இன்றைய நிலையில் இந்நிறுவனங்கள் அனைத்தும் தங்களது மதிப்பை இழந்து, ஒருபக்க சார்பாகவும் ஊழல் மலிந்தும் சமரசமாகவும் ஆட்சியாளர்கள் ஆட்டிவைக்கும் பொம்மையாகவும் செயல்படுகின்றன.
இந்தியா வினேஷ் போகத்திற்காக அழுகிறது. வினேஷ் போகத், இந்தியாவின் அனைத்து பெண்களின் துணிச்சலையும் தைரியத்தையும் வலிமையையும் வெளிப்படுத்தினார். இந்தியாவின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாலியல் பொறுக்கி பிரஜ் பூசன் சரன் சிங்கை தனது சக மல்யுத்த வீரர்களுடன் இணைந்து எதிர்கொண்டார். அனைத்து சக்திவாய்ந்த டான் அவரது தவறான செயல்களுக்காக அவர் எடுத்துக் கொண்டார். வினேஷ் தனித்து விடப்பட்டார்; அவருக்கு திறமை இருந்தபோதிலும், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட மறுக்கப்பட்டது. பல தடைகளை மீறி ஒலிம்பிக்கில் தனது திறமையைக் காட்டினார். உலகின் சிறந்த தோல்வியை கண்டிராத வீரர்களை தனது மனவுறுதியால் வென்றார். ஆனால், இறுதிச்சுற்றுக்கு முன் அவர் ‘தகுதி நீக்கம்’ செய்யப்பட்டார். இந்த தகுதி நீக்கத்திற்கு பின் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளது.
படிக்க : கல்லூரி பாடத்தில் ஆர்.எஸ்.எஸ். புத்தகங்களைக் கட்டாயமாக்கிய ம.பி. அரசு!
மணிப்பூர் குக்கி பழங்குடியின மக்களின் விடுதலைக்காக இந்தியா அழுகிறது! 2023 மே முதல், மணிப்பூரில் உள்ள குக்கி-சோ பழங்குடியின மக்கள், உணர்ச்சியற்ற, பிளவுப்படுத்தும் மற்றும் இரக்கமற்ற ஆட்சிக்கு பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மணிப்பூரை விட்டு வெளியேறியுள்ளனர் அல்லது அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வீடுகளும் உடைமைகளும் அழிக்கப்பட்டன; அவர்களுடைய நிலங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன; அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் கூட தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. வன்முறையின் குற்றவாளிகளுக்கு வெளிப்படையாக பக்கபலமாக உள்ளது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அரசியல் விருப்பம் இல்லை என்பதுதான் வெளிப்படையாக தெரிகிறது.
அனைவரும் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் அமைதியுடனும் உண்மையுடனும் நீதியுடனும் பன்மைத்துவத்தைக் கொண்டாடும் வகையில் சுதந்திரம் வேண்டி இந்தியா அழுகிறது; தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகள், அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற கட்டமைப்பை மேம்படுத்தும் உண்மையான சுதந்திரத்திற்காக மக்கள் ஏங்குகிறார்கள். வெறுப்பு மற்றும் வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, திருட்டு மற்றும் ஊழலில் இருந்து உண்மையான சுதந்திரத்திற்காக மக்கள் ஏங்குகிறார்கள்.
சர்வாதிகாரம் அடிபணிவிலிருந்து அனைவருக்கும் சுதந்திரம் கிடைப்பதற்கு இந்தியா அழுகிறது; ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கட்டப்பட்டவர்கள், பெண்கள், சிறு விவசாயிகள், சாதாரண தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஒதுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்டவர்கள் அனைவரும் அச்சமற்ற மற்றும் வெளிப்படையான குடிமக்களாக இருக்க சுதந்திரம் கோருகின்றனர்!
நன்றி : countercurrents.org
மொழிபெயர்ப்பு : ஹைதர்