Wednesday, July 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 60

🔴LIVE: விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நெல்லை

🔴LIVE: விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நெல்லை

இணைப்பு 1

இணைப்பு 2

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



போராடும் விவசாயிகளைக் கண்டு அஞ்சி நடுங்கும் பாசிச மோடி அரசு!

ன்னதான் “மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப்போவதாக” சங்கப் பரிவாரங்களும், ஊடகங்களும் பரப்பினாலும், தேர்தல் தேதி நெருங்க நெருங்க பாஜக கும்பல் செய்யும் தகிடுதித்தங்கள் அவர்களின் பயத்தை அப்பட்டமாக காட்டுகிறது. கருத்துக் கணிப்பில் தனது வெற்றி உறுதியானதாக சொல்லிக்கொண்டாலும், எதிர் கட்சிகளை உடைப்பதில் பாஜக தனது அனைத்து பலத்தையும் பயன்படுத்துவது ஏன்?

“பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்” என்று உறுதியாக பிரச்சாரம் செய்வது ஒருவகையான எதிர்மறை தேர்தல் உத்தி தான். தேர்தலில் “மக்கள் தங்களது வாக்குகள் வீணாவதை விருப்ப மாட்டார்கள்” என்று ஒரு மனநிலை உண்டு. அதனால் வெற்றி பெற அதிகமாக வாய்ப்பிருக்கும் கட்சிக்கே நடுநிலை வாக்காளர்கள் பெரும்பாலாக வாக்களிப்பார்கள் என்பதற்காக கூட பாஜக தனது ஊடக பிரிவினர் மூலமாக இந்த செய்தியை பரப்பி இருக்கலாம்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கமல் நாத், விஜயதரணி போன்றோரை பாஜக தனது கட்சிக்கு இழுக்கப் பார்க்கிறது என்ற தகவல் ஊடகங்களில் வெளியானது. இவர்கள் இருவரும், இந்த கட்சி தாவுதல் பற்றிய தகவல் “பொய்” என்று திட்டவட்டமாக சொல்லாமல், மழுப்பலாக பேசி வருகின்றனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது.

ஆனால், இவையெல்லாம் ஒன்றை தெளிவாக காட்டுகிறது. எதிர் கட்சிகள் தங்களுக்கென பாசிச எதிர்ப்பு திட்டம் ஏதும் இல்லாமல், அவ்வப்போது பாஜக தொடுக்கும் தாக்குதலை சமாளிப்பதையே முழுநேர வேலையாக செய்து வருகிறார்கள். கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்குவது, கட்சி பிரமுகர்களை பாஜக கவர்ந்திழுக்க முயற்சிப்பது ஆகியவற்றால் காங்கிரஸ் தற்போது பாஜகவின் தோல்விகளை, அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவதை விட்டுவிட்டு, தன்னுடைய கட்சியையும் பிரமுகர்களையும் காப்பாற்றுவதில் தனது நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறது. இந்தவகையில் தான் எதிர் கட்சிகள் பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் காலத்தில் கூட மக்களின் உண்மையான கோரிக்கைகளை முன்வைத்து பாசிஸ்டுகளை பணிய வைக்கும் எந்தவொரு இயக்கத்தையும் நடத்த எதிர்கட்சிகள் அனைத்தும் வக்கற்றதாக இருக்கின்றன. இது நவ-தாராளவாத பொருளாதார சட்டகத்தில் அனைத்து தேர்தல் கட்சிகளும் பிழைப்புவாதமாக மாறிப்போனதால் ஏற்பட்ட உள்ளார்ந்த பிரச்சினையாகும். அதை பாஜக தன்னுடைய நலனுக்காக நன்கு பயன்படுத்திக் கொள்கிறது.


படிக்க: மோடி அரசை எதிர்த்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகள் போராட்டம் | புகைப்பட கட்டுரை


ஆனால் விவசாயிகளின் டெல்லிச் சாலோ 2.0 போராட்டம், இதிலிருந்து மாறுபட்டு மக்களின் உண்மையான கோரிக்கைகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

பொதுத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியானது மத்திய அரசின் நிறுவனத்தால் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதை பாஜக முதல்முறையாக செய்யவில்லை. மத்திய அரசு முகமைகளை பாஜக கடந்த 10 ஆண்டுகளாக எதிர் கட்சிகளை முடக்கவும் , மோடி அரசை எதிர்த்துப் போராடும் சமூக செயல்பாட்டாளர்களை வேட்டையாடவும் பயன்படுத்தி வருகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்திலும் மத்திய அரசு முகமைகளை இவ்வாறு பயன்படுத்துவதால் தனது ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும், வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்ற எந்த அச்சமும் இல்லாமல் பாஜக இதை செய்வது, பாஜகவின் பாசிசத்தன்மையை காட்டுவதாக உள்ளது. மேலும், தேர்தல் வெற்றிக்காக கூட ஜனநாயக முகமூடியை அணிந்துகொள்ள வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. மதவாதமும், பாசிச அதிகாரங்களும், இந்துத்துவ சங்க பரிவார படைகளும் தேர்தலில் வெற்றியை சாதிக்கப் போதுமானது என்ற நிலையில் தான் பாசிஸ்டுகள் இந்த தேர்தலை சந்திக்கிறார்கள்.

அதனால்தான் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகள் மீது ட்ரோன் மூலமாக வான்வெளியில் இருந்து கண்ணீர் புகை குண்டு வீசுவது, பெல்லட் குண்டுகளால் சுடுவது, முள்வேலிகளை அமைப்பது, சாலைகளில் ஆணிகளை பதிப்பது என மனிதத்தன்மையற்ற முறையில் தாக்குதல் தொடுக்கிறது பாசிச மோடி கும்பல். இந்த மனிதத்தன்மையற்ற தாக்குதல் தேர்தலில் பாஜகவிற்கு எதிரான வாக்குகளாக திரும்பும் என்ற கவலை மோடி கும்பலிடம் சிறிதும் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.


படிக்க: விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்


ஒன்று, போராடும் விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகள், பாஜக கும்பல் எந்த கார்ப்பரேட்களின் புரவலராக செயல்படுகிறதோ அந்த கார்ப்பரேட் வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானது. மேலும் இந்த போராட்டத்தின் உள்ளடக்கமும், வடிவமும், போராடும் செய்முறையும் வர்க்க அரசியலை வலியுறுத்துவதாக, வர்க்க அணி திரட்டலை முன்வைப்பதாக இருக்கிறது. மற்றொன்று, “வெல்லப்பட முடியாத வலிமையான தலைவர்” என்ற மோடியின் பிம்பத்தை இந்த போராட்டத்தின் வெற்றி சுக்குநூறாக உடைந்துவிடும். ஏற்கெனவே, 2021 ஆம் ஆண்டு இதைப்போன்ற போராட்டத்தால் விவசாயிகள் மோடி அரசை பணிய வைத்தது குறிப்படத்தக்கது.

இந்த போராட்டத்தை ஒடுக்க மோடி அரசாங்கம் மேற்கொண்ட சாதி மத பிளவுவாதத்தை விதைப்பது, அரசு ஒடுக்குமுறை, போராடும் விவசாயிகளை தீவிரவாதிகளாக சித்தரிப்பது, போராட்டத்தையும் போராடும் விவசாயிகளையும் கொச்சைப்படுத்துவது என அனைத்து உத்திகளையும் மீறி விவசாயிகள் 700-க்கும் மேற்பட்டோரின் இன்னுயிரை தியாகம் செய்து 2021 ஆம் ஆண்டு வெற்றி பெற்றனர்.

இவையெல்லாம் “வெல்லப்பட முடியாத தலைவர்” என்ற மோடியின் பிம்பத்தை உடைத்தது மட்டுமல்லாது, பாசிஸ்டுகளால் ஊழல்படுத்த முடியாத, அடக்குமுறைகளால் உடைக்க முடியாத போராட்ட அனுபவத்தை இந்த சமூகத்திற்கு கொடுத்தது. இந்த போர்க்குணத்தை கண்டுதான் மோடி கும்பல் அஞ்சுகிறது.

தேர்தல் வெற்றிக்காக கூட, மக்களுடைய அவசியமான பிரச்சினைகளான வேலை வாய்ப்பின்மை, வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, அரசு அடக்குமுறைகள், உரிமைகள் பறிக்கப்படுதல், கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் என எதையும் பேசு பொருளாக்காமல், தங்களது கட்சி பிரமுகர்களையும் கூட்டணி கட்சிகளையும் எதிரணிக்கு சென்று விடாமல் தடுக்கும் பணியை செய்துகொண்டிருப்பது தான் “பாஜகவிற்கு மாற்று” என்று சொல்லிக்கொள்ளப்படும் காங்கிரஸ் கட்சியின் நிலை.

இந்த நிலையில் தான் தங்களது அடிப்படை வர்க்க நலன்களை வலியுறுத்தி நடத்தப்படும் விவசாயிகளின் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக மாற்றுவது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது, உலக வர்த்தக கழகத்தில் இருந்து இந்தியா விலக வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தருவது போன்ற தங்களது வர்க்க நலன்களை விவசாயிகள் முன்வைத்து போராடுகிறார்கள். இதற்கு நேர் எதிரான நலன்களை உடைய கார்ப்பரேட்டுகளின் சேவகனாக செயல்படும் மோடி அரசு மறுமுனையில் நிற்கிறது. விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்டத்தையும் மோடி அரசின் மனிதத்தன்மையற்ற ஒடுக்குமுறைகளையும் இந்த சமரசப்படுத்த முடியாத வர்க்க நலன்களின் பின்புலத்தில் இருந்துதான் பார்க்கவேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் போராட்டம் இந்த காலத்தின் முன்மாதிரியான போராட்டம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



🔴LIVE: விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | சென்னை

🔴LIVE: விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | சென்னை

இணைப்பு 1

இணைப்பு 2

இணைப்பு 3

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அநீதிக்கு எதிராகப் போராடவேண்டும் என்ற உணர்வை கொடுக்கும் கல்வி! | பேராசிரியர் ப.சிவக்குமார்

அநீதிக்கு எதிராகப் போராடவேண்டும் என்ற உணர்வை கொடுக்கும் கல்வி!
| பேராசிரியர் ப.சிவக்குமார்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



போராடும் விவசாயிகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தும் மோடி அரசு! | தோழர் வெற்றிவேல்செழியன்

போராடும் விவசாயிகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தும் மோடி அரசு!
| தோழர் வெற்றிவேல்செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடி அரசை எதிர்த்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகள் போராட்டம் | புகைப்பட கட்டுரை

0
இன்று(21.02.2024) சுமார் இலட்சக்கணக்கான விவசாயிகள் ஷாம்பு எல்லையில் இருந்து புறப்பட்டனர்.

குறைந்த பட்ச ஆதார விலை கோரிக்கை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மோடி அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து தலைநகர் புது டெல்லியை நோக்கி மீண்டும் பேரணியை துவங்கியுள்ளனர் விவசாயிகள். அவர்கள் மீது போலீசு ட்ரோன் மூலம் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை இலட்சக்கணக்கான விவாயிகள் தொடங்கினர். ஆனால், தலைநகரில் இருந்து 200 கி.மீ தொலைவில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 2020-21 ஆம் ஆண்டுகளில் விடாப்பிடியான போராட்டத்தை நடத்தி மோடி அரசை பணியவைத்தனர். எனவே தற்போதையப் போராட்டத்தில், போராடும் விவசாயிகளை தலை நகருக்குள் நுழைய விடக்கூடாது என்பதற்காக மிகவும் கடுமையாக அடக்குமுறையை ஏவி வருகிறது பாசிச மோடி அரசு. அவர்களை தலை நகருக்குள் நுழைய விடாமல் தடுக்க காண்கிரீட் தடுப்புக்கள், இரும்பு தடுப்புக்கள், இரும்பு முட்கம்பிகள், இரும்பு கூர்முனைகள் ஆகியவை மூலம் நெடுஞ்சாலைகளை அடைத்தனர். எனினும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தடுப்பரண்களை உடைத்து முன்னேறினர்.

பஞ்சாப், ஹரியானா இடையேயான எல்லைக்கு அருகில் உள்ள ஷம்பு நகரில் இருந்த விவாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது அரசு. அதில் மக்காச்சோளம், தானியம், பருப்பு வகைகள் மற்றும் பருத்தி உள்ளிட்ட சில குறிப்பிட்ட பயிர்களுக்கு உத்தரவாத விலையில் ஐந்தாண்டு ஒப்பந்தங்களை வழங்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை அவர்கள் நிராகரித்தனர். அவர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கிய பேரணியை துவங்கியுள்ளனர். அவர்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது பாசிச மோடி அரசு.

பஞ்சாப் – ஹரியானா மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் விவசாயிகள் புது தில்லியை நோக்கி செல்லும் போது போலீசு அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
போலீசு கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதால் விவசாயிகள் பதற்றத்துடன் செல்கின்றனர்.
ஒருவர் கண்ணீர் புகைக் குண்டு வழியாக நடந்து செல்கிறார்.
அரசாங்கம் விவசாயிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தமையால், விவசாயிகள் ஷம்பு பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
விவசாயிகள் மற்றும் நிஹாங்குகள் ஷம்பு பகுதியில் இரும்புக் கவசங்களைப் பிடித்துள்ளனர்.
ஒரு நிஹாங் ஷம்பு பகுதியில் சாலையில் இருக்கும் கான்கிரீட் தடுப்பின் மீது அமர்ந்திருக்கிறார்.

இன்று(21.02.2024) சுமார் இலட்சக்கணக்கான விவசாயிகள் ஷாம்பு எல்லையில் இருந்து புறப்பட்டனர்.

புகழ்
நன்றி: அல்ஜசீரா

🔴LIVE: வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக் கூட்டம் | வேலூர் – காஞ்சிபுரம், இராணிப்பேட்டை

🔴LIVE: வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக் கூட்டம்
| வேலூர் – காஞ்சிபுரம், இராணிப்பேட்டை

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வேளாண் பாடத்திட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும்! | அக்ரி மு.மாதவன்

வேளாண் பாடத்திட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும்! | அக்ரி மு.மாதவன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வலிகளும் வேதனைகளும்! | கவிதை

பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வலிகளும் வேதனைகளும்!

காலையில போனவள
மாலையில காணலையே!
கரிக்கட்டைய பார்த்து கலங்கி நானும் போனேனே!

காலையில போய் வாரேன்னு சொல்லிவிட்டு போனா….
போனவ வரலையே
பொழுதும் கூட போகலையே…

ஒரு நாள் லீவு போட்டிருந்தா
ஒரு மாதம் வாழ்ந்திருப்பா…
ஓடாய் தேஞ்சு உழைச்சவ
இன்னைக்கு ஓலையில கெடக்குறா….

இறந்தவன் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுக்கிறான்…
இறக்கிற தேதிய எங்களுக்கும் குறிக்கிறான்….

முதலாளிகளின் அடியாளாய் அரசுதான் இருக்குது…
எங்களோட வேர்வையில்தான்
உங்க பொழப்பே நடக்குது…

உங்களிடம் எங்களுக்கு பாதுகாப்பு இல்ல…
உலகத்துக்கே தெரியும் இது கார்ப்பரேட் கொள்ள…

உங்களிடம் உரிமைகளை கேட்பதில் நியாயம் இல்ல…
போராட்டம் இல்லாமல் எதற்கும் தீர்வு இல்ல…

தொழிலாளர் வர்க்கமாய் அணி திரள்வோம்…
தோல் சேர்ந்து தோட்டாக்களையும் எதிர்த்து நிற்போம்…

புதிய உலகம் படைத்திட புறப்படுவோம்…
பூமி நமக்கே சொந்தம் என முழங்கிடுவோம்…

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கல்வித்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம்! | பேராசிரியர் வீ.அரசு

கல்வித்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம்! | பேராசிரியர் வீ.அரசு

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கணிணி அறிவியல் பாட புத்தகங்களை குப்பையில் வீசிட்டாங்க! | குமுறும் கணிணி அறிவியல் ஆசிரியர்கள்

கணிணி அறிவியல் பாட புத்தகங்களை குப்பையில் வீசிட்டாங்க!
| குமுறும் கணிணி அறிவியல் ஆசிரியர்கள்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த நிர்மலா சீதாராமனின் கருத்துகளை எப்படி பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (ஏ.ஐ.) தொடர்ந்து வேலையிழப்புகள் நடந்து வருகிறது. சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பேசியுள்ளார். அவரின் கருத்துகளை எப்படி பார்க்க வேண்டியுள்ளது?

டந்த டிசம்பர் மாத இறுதியில் சென்னைக்கு வந்தபோது ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘1980-களில் வங்கிகளில் கணினி அறிமுகமானபோது ஊழியர்களுக்கான மாற்றாக கணினி இருக்குமோ என்ற சந்தேகம் தொழிற்சங்கங்களுக்கு எழுந்தது. இப்போது நாடு எப்படி வளர்ச்சி கண்டுள்ளது என பாருங்கள். இன்று நமது இல்லங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் கணினி உள்ளது. அது வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதா அல்லது பறித்துக்கொண்டதா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை யார் இயக்க உள்ளோம் என்பதை பாருங்கள். அதன் திறனை பயன்படுத்துவதற்கான கருவியை உருவாக்கப்போவதும் நீங்கள்தான். டிஜிட்டல் வளர்ச்சி பணிகளை யாரும் வழிமறிக்க முடியாது. அது பொருளாதாரத்திற்கு கேடு. வளர்ச்சி எனும் நீரோடையுடன் சென்றால் நமக்கும், நாட்டுக்கும் நல்லது’‘ என்று கூறினார். இவை அனைத்தும் அப்பட்டமான பொய்யாகும்.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தினால் வேலையிழப்பு ஏற்படுவது குறித்தான செய்திகள் அன்றாடம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கமான ஜனவரி மூன்றாவது வாரத்தில் மட்டும் ஐ.டி. நிறுவனங்களில் இருந்து 5,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ‘‘லேஆஃப்ஸ்’‘ என்ற இணையதளம் கூறுகிறது. கூகுள் நிறுவனம் 1,000 பேரையும், அமேசான் 500 பேரையும், யுடியூப் 100 பேரையும், டிக்டாக் 60 பேரையும், இன்ஸ்டாகிராம் 60 பேரையும் நீக்கியுள்ளன. மொத்தமாக, இந்நிறுவனங்கள் 1,720 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன. மேலும், மென்பொருள் நிறுவனங்களான யூனிட்டி சாஃப்ட்வேர் நிறுவனத்தில் 1,800 (மொத்த ஊழியர்களில் 25 சதவிகிதம்), வேஃபேர் நிறுவனத்தில் 1,650, ரியாட் கேம்ஸ் நிறுவனத்தில் 530, ட்விட்ச் நிறுவனத்தில் 500 (35 சதவிகிதம்), ஃப்ரண்ட்டெஸ்க் நிறுவனத்தில் 200, டிஸ்கார்ட் நிறுவனத்தில் 170 (17 சதவிகிதம்) என 4,850 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 1,190 தொழில்நுட்ப நிறுவனங்களால் 2,62,595 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தொடங்கி ஒரு மாதமே முடிவடைந்துள்ள நிலையில் 31,751 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், நிர்மலா சீதாராமன் போன்ற பார்ப்பன கார்ப்பரேட் தரகர்கள், கணினியும் செயற்கை தொழில்நுட்பமும் ஒரே மாதிரியானவை என்பதாக சித்தரிக்கின்றனர். கணிப்பொறி வந்த பின்னர், பல துறைகள் அழிந்துவிட்டன. அந்தத் துறைகளில் பணிபுரிந்த கோடிக்கணக்கான கலைஞர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் வேலையிழந்து கூலிகளாக்கப்பட்டுள்ளனர். ஆனால், செயற்கை தொழில்நுட்பத்தின் தாக்கம் இதனைக்காட்டிலும் பலமடங்கு அதிகமானதாக இருக்கும்.

அண்மை காலங்களில், பத்திரப்பதிவுத்துறை, நீதித்துறை, கல்வித்துறை, போலீசுதுறை போன்ற பல அரசு அலுவலகங்களில் டிஜிட்டல்மயமாக்கம் நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், எல்.ஐ.சி. போன்றவையும் டிஜிட்டல்மயமாக்கப்படுகின்றன. இத்துறைகளில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்படும் அபாயத்தை எதிர்த்து ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இன்னும், ஐந்து முதல் பத்தாண்டுகளில் கோடிக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் உள்ளது.

ஜூலை 2023 கணக்கின்படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.95 சதவிகிதமாகும். இது, அக்டோபர் மாதத்தில் மட்டும் 10.05 சதவிகிதமாக இருந்தது. நான்கு வாரங்கள் தொடர்ந்து வேலையில்லாமல் இருக்கும் 16-வயதுக்கு அதிகமானவர்களை மட்டுமே கொண்டு இந்த புள்ளிவிரவம் அளவிடப்படுகிறது. உண்மையில், நிரந்த வேலை, உத்தரவாதமான வேலை ஆகியவற்றின் வேலையின்மை விகிதம் இதனைவிட பல மடங்கு அதிகமாகும். பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பின்னர் வேலையின்மை மிக தீவிரமாக அதிகரித்துள்ளது.

இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துதான் நிர்மலா சீதாராமன் போன்ற கார்ப்பரேட் தாசர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்றனர்.

மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்துதான் டிஜிட்டல்மயமாக்கமும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் புகுத்தப்படுகின்றன. இந்த மக்கள் விரோதத் தன்மையை எதிர்த்தாலே, செயற்கை நுண்ணறிவையே எதிர்ப்பதாகவும் இந்தியா வல்லரஸ் ஆவதை எதிர்ப்பதாகவும் இந்த கார்ப்பரேட் தாசர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பொய்களை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்; உழைக்கும் மக்களின் வாழ்வாதாரமான நிரந்தர வேலை உரிமையை மீண்டும் நிலைநாட்ட போராட வேண்டும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



RIP ராமா !!! | கவிதை

RIP ராமா !!!

சீதைக்கு, காலை சமையலுக்கு
காய்கறி வாங்க காசு இல்லை.
1200 கொடுத்து வாங்கின சிலிண்டரும்
நேற்று இரவே தீர்ந்து போக..

நீர் தண்ணி வடிச்சு லவனுக்கும் குசனுக்கும்
ஆளுக்கு ஒரு டம்ளர் கொடுத்தா, சீதா.

எப்போதுமே குடிச்சிட்டு தெருவுல விழுந்து கிடக்கும் ராமனுக்கு,
இன்றைக்கு குடிக்க காசு இல்லை.
வாங்கி கொடுக்க ஆளும் இல்ல.

வீட்டு குண்டாவை திருடி
விற்று குடித்துவிட்டு வந்து
சீதையை தரந்தாழ்ந்து பேசினான் ராமன்.

இருந்த கோவத்துல, ராமன்
நெஞ்சில் எட்டி உதைத்தாள் சீதா.

லவனும் குசனும் ராமனை போட்டு புரட்டி எடுக்க,
அனுமனும் அவன் பங்கிற்கு இராமன் வாயிலேயே எட்டி மிதிச்சான்.

புல்லட்டில் வந்த இராவணன்,
சண்டையை தடுத்து
மண்டை உடைந்த ராமனை
ரத்தம் சொட்ட சொட்ட
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்.

மருத்துவமனைக்கு பூட்டு போட்டு இருந்தது.
ஏன்? என்று அக்கம் பக்கம் கேட்டான் இராவணன்.

ஏதோ, ராமர் கோயில் திறப்பாம்..
அதான் எல்லோருக்கும் விடுமுறையாம்..

இரத்தம் சொட்ட சொட்ட
ராமன் உயிர் பிரிந்தது !!!

RIP ராமா!!!


கவின்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நிதிஷ்குமார் விலகல் “இந்தியா கூட்டணி”க்குப் பின்னடைவை ஏற்படுத்துமா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: ஒருபுறம் நிதிஷ்குமார் “இந்தியா” கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார். மற்றொருபுறம் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடப்போவதாக கூறியுள்ளனர். இது “இந்தியா கூட்டணி”க்குப் பின்னடைவை ஏற்படுத்துமா?

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கேடுகெட்ட பிழைப்புவாதக் கட்சி என்று பீகார் மக்கள் நன்குணர்ந்துள்ளனர். “நிதிஷ்குமாரின் விலகல், இந்தியா கூட்டணிக்கு பெரிய பாதிப்புகளை உருவாக்காது. மாறாக, இந்த எட்டப்பன் வெளியேறியதால், பீகாரில் இந்தியா கூட்டணிக்கு கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்” என்று இந்தியா கூட்டணியினர் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட பிழைப்புவாதியின் தலைமையில், இந்தியா கூட்டணி அமைந்தது சந்தர்ப்பவாதத்தின் கடைகோடித்தனம்! என்பதைதான் நாம் முக்கியமாக எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது.

மேலும், பா.ஜ.க.வுடன் உறவு-முறிவு-உறவு என்று அந்தர்பல்டி அடிப்பது நிதிஷ்குமார் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் அ.தி.மு.க., நா.த.க., பா.ம.க., தே.மு.தி.க., டி.டி.வி. தினகரன், கர்நாடகத்தில் குமாரசாமி, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி போன்றவர்களும் பா.ஜ.க.வின் கடைந்தெடுத்த அடிமைகளாகவே உள்ளனர்.

அதேபோல், இந்தியா கூட்டணி என்பது பாசிச எதிர்ப்பு கூட்டணி அல்ல, பா.ஜ.க. எதிர்ப்பு கூட்டணிதான். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட்டுகளை ஒதுக்குவதிலேயே இக்கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து உருவாகாத போது, இக்கூட்டணியினர் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இடத்தைப் பெற்றுவிட்டால், ஆட்சி அமைப்பதில் எவ்வளவு இழுபறி ஏற்படும் என்பதை இப்போதே அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜியின் அறிவிப்புகள் நமக்கு காட்டுகின்றன. இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை அது ஒரு பொதுத்திட்டத்திற்கு கூட வரவில்லை. பா.ஜ.க. எதிர்ப்பை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் இந்தக் கூட்டணியினரால், பாசிச பா.ஜ.க.வை தேர்தல் அரங்கில் வீழ்த்துவதும் கடினமே.

மேலும், நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளது குறித்தும் புழுத்து நாறும் இந்திய ஜனநாயகத்தின் அவலநிலை குறித்தும் தலையங்கத்தில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கல்விச் சிக்கல்களும் தீர்வுகளும் | ஊடகச் சந்திப்பு

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் கல்விச் சிக்கல்களும் தீர்வுகளும் | ஊடகச் சந்திப்பு

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube