Saturday, November 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 62

நாங்கள் ராமனின் அணில்கள் அல்ல! | கவிதை

முன்குறிப்பு: ஏப்ரல் மாதத்தில் மட்டும் வரி என்னும் பெயரில் உழைக்கும் மக்களிடம் மோடி அரசு உறிஞ்சி கொழுத்தது, 2 லட்சம் கோடியை தாண்டுமாம்! மக்கள் மீது வரி விதிப்பதில் அமெரிக்காவையும், சிங்கப்பூரையும் முந்திச் செல்கிறது, பாசிச மோடியின் அம்பானி-அதானி சேவை இந்தியா!

பச்சிளம் பிஞ்சுகள் குடிக்கும் பாலுக்கும் வரி!
பசிக்கு உண்ணும் பிஸ்கட்டுக்கும் வரி!
தயிருக்கு வரி!
மோருக்கு வரி!
பருத்திக்கு வரி!
நூலுக்கு வரி!
ஜவுளிக்கு வரி!
விற்பனைக்கு வரி!
பணக்காரர்களுக்கு ஒரு வரி!
ஏழைகளுக்கு ஒரு வரி!
இங்கு இதுவே நியதி!

பெண்கள் பயன்படுத்தும்
நாப்க்கினுக்கு வரி!
முதியவர்கள் பயன்படுத்தும்
மாத்திரைகளுக்கு வரி!
அதானியின் கஞ்சாவுக்கு மட்டும்
துறைமுகத்தில் என்ட்ரி  ஃப்ரீ!

ஜி.எஸ்.டி-க்கு பின்
சிறுகுறு முதலாளிகளின்
முகவரி கேட்டால்,
பெரும்பாலும் கல்லறைக்கு
வழி சொல்கிறார்கள்.
மிச்சசொச்சம் இருந்த அண்ணாச்சிகளோ,
தொழில் என்னாச்சி எனக் கேட்டால்,
“எல்லாம் நாசமாப் போச்சு” என்கிறார்கள்.
மானம் மறைக்க கோவணம் கட்டியவனின்
கோவணத்தையும் பறித்துக் கொண்டது ஜி.எஸ்.டி!

அவசரத்திற்கு மூத்திரம் வந்தாலும்,
இனி அதற்கும் வரி!
பிணங்களை எரிக்கும்
சுடுகாடுகளை விட்டு வைத்திருக்கிறார்கள்.

அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால்,
அதற்கொரு வரிப்போட்டு
செத்தவன் நெற்றிக் காசையும்
களவாண்டு விடுவார்கள்.

இன்னும் எத்தனை வரிகளைதான்
தாங்கும் எங்கள் முதுகுகள்.
பாசிசக் கூட்டமே,
நாங்கள் ஒன்றும் அணில்கள் அல்ல,
உங்கள் ராமனின் வரிகளை
முதுகிலே சுமந்துத் திரிய!

செந்தாழன்

பாசிஸ்டுகளின் “சூரத் ஃபார்முலா”

காவிகளின் “சூரத் ஃபார்முலா”:
தேர்தல் ‘ஜனநாயகத்துக்கு’ வெட்டப்படும் சவக்குழி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக மோடி – அமித்ஷா கும்பல், தன்னுடைய அதிகார பலம், பண பலம், ஊடக பலம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்பு மூலம் பல்வேறு சதி நடவடிக்கைகள், மோசடி, முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக, தன் கட்சியினரை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் சுயேட்சை வேட்பாளர்களையும் மிரட்டி, வேட்பு மனுக்களை திரும்பபெற வைத்துக் கொண்டு இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் சூரத் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சூரத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலேஷ் கும்பானி மற்றும் மாற்று வேட்பாளரான சுரேஷ் பத்சலாவின் வேட்பு மனுக்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி சௌரப் பார்தியால் நிராகரிக்கப்பட்டது. இவர்களின் மனுக்களை முன்மொழிந்திருந்த நால்வரும், மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று தன்னிடம் புகாரளித்ததை அடுத்து வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க : ஃபெலிக்ஸ் சவுக்கோட முடியாது! | தோழர் மருது நேர்காணல்

மேலும், சூரத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 7 சுயேட்சை வேட்பாளர்களும் ஒரு பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரும் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். எனவே, முகேஷ் தலாலை எதிர்த்து போட்டியிட யாரும் இல்லாத காரணத்தால்தான் அவர் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களை முன்மொழிந்தவர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், பகுஜன் கட்சியின் வேட்பாளர் ஆகியோர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த குண்டர்களாலும், குஜராத் போலீசாலும் மிரட்டப்பட்டுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சியே வேட்பாளர்கள் தங்களுடைய மனுக்களை திரும்பப்பெற்று கொண்டுள்ளனர்.

ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க-வின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே, சுயேட்சை வேட்பாளர்களிடம் வேட்பு மனுக்களை திரும்பப்பெறுமாறு தனது கட்சி கோரிக்கை விடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளதே அதற்கு சான்றாகும். அதாவது வேட்பு மனுக்களை திரும்பப்பெறுமாறு மிரட்டியதைதான் கோரிக்கை விடுத்ததாக கூறுகிறார்.

அதேபோல, ஏப்ரல் 29-ஆம் தேதி மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்திபாம், தனது வேட்புமனுவை திரும்பப்பெற்று பா.ஜ.க-வில் இணைந்தார். காந்திபாமின் இந்நடவடிக்கையானது, 2007-ஆம் ஆண்டு அவர் மற்றும் அவருடைய தந்தைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிலத் தகராறு வழக்கில் சட்டப்பிரிவு 307 (கொலை முயற்சி) சேர்க்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில நாட்களுக்கு பிறகே நடந்துள்ளது. எனவே இதன்மூலம் காந்திபாமும் பா.ஜ.க குண்டர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்தே தன்னுடைய வேட்புமனுவை திரும்பப்பெற்றுக்கொண்டு காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்துள்ளார் என்பதும் உறுதியாகிறது.

அதேபோல, மே மாதத் தொடக்கத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடும் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களில் 12 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். 4 பேர் சிறிய கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களும் பா.ஜ.க குண்டர்களாலும் போலீசாலும் மிரட்டப்பட்டுள்ளனர்.

16 பேரில் மூவர், தங்களுடைய வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்காக உள்ளூர் பா.ஜ.க அரசியல்வாதிகள் மற்றும் பா.ஜ.க கட்சியுடன் தொடர்புடையவர்களால் மிரட்டப்பட்டதாக ஆங்கில ஊடகமான “ஸ்க்ரோல்”-யிடம் கூறியுள்ளனர். மேலும் அவர்களில் இருவர், தங்களை குஜராத் போலீசும் மிரட்டியது என்றும் கூறியுள்ளனர். வேட்பு மனுவை திரும்பப்பெற்ற சுயேட்சை வேட்பாளரான ஜிதேந்திர சவுகான், “என் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்; இந்த தேசத்தைக் காப்பாற்றுங்கள்; அது ஆபத்தில் உள்ளது” என்று தான் வெளியிட்ட காணொளியில் கூறுகிறார்.

காந்திநகரில் பிரஜாதந்திர ஆதார் கட்சி சார்பில் போட்டியிடும் 43 வயதான சுமித்ரா மவுரியா காவிக்குண்டர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் செயல்பட்டு வருகிறார். காவிக் குண்டர்களின் மிரட்டலில் இருந்து தன்னை தற்காலிகமாக தற்காத்துக் கொள்ள 400 கிலோமீட்டருக்கு அப்பால் சென்ற சுமித்ரா மௌரியாவையும் குஜராத் போலீசு அவர் இருக்கும் இடத்திற்கே சென்று மிரட்டியுள்ளது. ஆனால், அவர் இன்றுவரை தன்னுடைய வேட்பு மனுவை திரும்பப்பெறவில்லை.

இவ்வாறு, மோடி – அமித்ஷா கும்பல் தற்போது வரை மூன்று மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களை மிரட்டி வேட்பு மனுக்களை திரும்பப்பெற வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவுதான் முடிவுற்றுள்ள நிலையில், மேலும் பல எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப்பெற காவிக் குண்டர்களாலும் போலீசாலும் மிரட்டப்படுவர் என்றே கருதத்தோன்றுகிறது. பா.ஜ.க. கும்பலின் இந்நடவடிக்கையானது முதலாளித்துவ ஊடகங்களிலாலேயே “சூரத் ஃபார்முலா” என்று விமர்சிக்கப்படுகிறது.

இந்த மூன்று தொகுதிகளும் இதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. கும்பல் வெற்றி பெற்ற தொகுதிகளாகும். தற்போதைய தேர்தலிலும் பா.ஜ.க-வினரே நிச்சயம் வெற்றி பெறுவர் என்று நம்பப்படுகிறது. தாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க-வினர் கருதுகின்ற தொகுதிகளிலும் ஏன் எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களை மிரட்ட வேண்டும் என்ற கேள்வியை முதலாளித்துவ ஊடகங்களும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் எழுப்புகின்றனர்.

“1984 முதல் சூரத் மற்றும் இந்தூர் மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. ஆனால், 2024-இல் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு, வேட்புமனுவை வாபஸ் பெறச் செய்யப்பட்டுள்ளனர். ஏன்?” என்று தன்னுடைய “எக்ஸ்” பதிவில் கேள்வியெழுப்புகிறார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

படிக்க : மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடும் சத்தீஸ்கர் அரசு! | தோழர் ரவி

பா.ஜ.க கும்பல் தன்னுடைய தோல்வி பயத்தால் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், பா.ஜ.க-வின் இந்நடவடிக்கைகளை அந்த அடிப்படையில் பார்க்க முடியாது. மாறாக, பா.ஜ.க கும்பலின் நீண்டகால கனவான ஒரே நாடு, ஒரே மொழி வரிசையில் ஒரே கட்சி என்ற நோக்கத்தின் அடிப்படையிலான “எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா” என்பதன் ஓர் அங்கமாகும்.

அந்த நோக்கத்திலிருந்துதான், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட தன்னுடைய அடியாட்படைகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டுவது, அடிபணிய வைப்பது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுவரும் பா.ஜ.க. கும்பல், தற்போது சுயேட்சை வேட்பாளர்களையும் காவிக் குண்டர்கள் மூலமும் போலீசின் மூலமும் மிரட்டத் தொடங்கியுள்ளது.

இனி வருங்காலங்களில் சூரத் ஃபார்முலா அடிப்படையிலான நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையில் நிகழும். அதன்மூலம், சூரத்தை போன்று தேர்தலில் தங்களை எதிர்த்து போட்டியிட ஆட்களே இல்லாத நிலையை உருவாக்க காவிக்கும்பல் விழையும்.

இவ்வாறு இந்த பெயரளவிலான ஜனநாயக அரசுக் கட்டமைப்பை தங்களுடைய இந்துராஷ்டிர அரசுக் கட்டமைப்பாக படிப்படியாக மாற்றி வருகின்றனர் பாசிஸ்டுகள்.

கதிர்

மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடும் சத்தீஸ்கர் அரசு! | தோழர் ரவி

மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடும் சத்தீஸ்கர் அரசு! | தோழர் ரவி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கல்வி: காவிமயம் – கார்ப்பரேட் மயம்! | சிறுநூல்

0

வெளியீடு: கல்வி: காவிமயம் – கார்ப்பரேட் மயம்!

முதற்பதிப்பு: மே 2024

வெளியிடுவோர்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு

முன்னுரை:

மோடி ஆட்சிக்கு வந்த பின், பாடத்திட்டங்களில் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை குறித்தான விஷயங்களை நீக்கியது, திப்பு சுல்தானின் வரலாற்றை நீக்கியது என்று கல்வியையே பிற்போக்குக் கருத்துகள் நிறைந்ததாக, பாசிசமயமாக மாற்றி,  மாணவர்களை சாதி -மத வெறியர்களாகவும், மூடநம்பிக்கைகள் உடையவர்களாகவும் உருவாக்க முயற்சி செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்.

இன்னொரு பக்கத்தில், கார்ப்பரேட் நிறுவனங்கள், கோச்சிங் நிறுவனங்கள், இணையவழிக் கற்பித்தல் நிறுவனங்கள் கொள்ளையைத் தீவிரப்படுத்துகிறது. இதற்கேற்ப புதிய புதிய நுழைவுத் தேர்வுகள், கொள்கைகளை அறிமுகம் செய்கிறது.

ஒன்றிய அரசு திணித்து வரும் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள்; ஐஐடி  முதல் ஜே.என்.யூ வரை பல பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் நடக்கும் சாதி – மதவெறியர்களின் ஆதிக்கத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் என ஒன்றிய அரசின் கல்வித்துறை மீதான காவி – கார்ப்பரேட்மய நடவடிக்கைகள் தொடர்ந்து மாணவர்களைக் காவு வாங்கி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 19ஆம் தேதி ஹைதராபாத் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் “ தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டாத மாநிலங்கள் கூட வெவ்வேறு சொற்றொடர்களைப் பயன்படுத்தி, தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.


படிக்க: “ஒரே நாடு ஒரே ஜெர்சி!” – காவிகளின் பிடியில் இந்திய கிரிக்கெட் அணி!


ஆம், உண்மைதான். ஆரம்பத்தில் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என கூறிக்கொண்ட திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக  மாநில கல்விக் கொள்கை வகுக்கும் குழுவை அமைத்தது. அதன் பிறகு, தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்வோம் என பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர்கள்  பேச ஆரம்பித்தார்கள். இச்சூழலில் தான், புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை மாநில கல்விக் கொள்கையில் சேர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் நெருக்கடியை அம்பலப்படுத்தி, இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் ஜவகர் நேசன்  அதிலிருந்து வெளியேறினார்.

மாநில கல்விக் கொள்கையை இறுதி செய்வதற்கு முன்பே, ‘இல்லம் தேடிக் கல்வி’ ‘வானவில் மன்றம்’ ‘எண்ணும் எழுத்தும்’ ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ ‘நான் முதல்வன்’ ‘உயர் கல்வியில் பொதுப் பாடத்திட்டம்’, எமிஸ் தகவல் சேகரிப்பு, போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களின் மூலம்  பள்ளிக் கல்வியில் நேரடியாகத் தொண்டு நிறுவனங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் கொண்டு வந்து புகுத்தும் வேலையை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதன் விளைவாக, பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை அரசின் அடிப்படைக் கட்டமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகள் ஓங்கும் நிலை உருவாகி வருகிறது.

புதிய கல்விக் கொள்கையானது, கல்வியில் காவி – கார்ப்பரேட்மயத்தைப் புகுத்தக்கூடிய  பேராபத்து மிக்கது; ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே பண்பாடு என்ற ஒற்றைத்துவ பாசிச நடவடிக்கைகள் அனைத்தையும் கல்வியிலும் புகுத்தக்கூடியது; இதன் மூலம் இந்தி சமஸ்கிருத திணிப்பு கட்டாயமாக்கப்படும்; மாநில அளவிலான பாடத்திட்டங்கள் வரலாறுகள், புறக்கணிக்கப்பட்டு பொய்யான வரலாறுகளும் அறிவியலுக்கு புறம்பான குப்பைகளும் திணிக்கப்படும் என்பதே மாநில அரசின் கருத்து. ஆனால், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ‘கலா உத்சவ்’ எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட கலை திருவிழாக்கள் இந்தி – சமஸ்கிருதப் பண்பாட்டை முன்னிறுத்துபவையே.

மாநில அரசின் இந்தப் போக்குகளைக் கண்டுதான் மத்திய அமைச்சர் மகிழ்கிறார்.

ஒன்றிய  அரசு கல்வித்துறை மீது தொடுத்து வரும்  காவி-கார்ப்பரேட்மய  நடவடிக்கைகளும், அவை ஏற்படுத்தும் விளைவுகளும் சமூகத்தில் சீற்றத்தை ஏற்படுத்துகின்றன.


படிக்க: பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்


இதிலிருந்து உருவாகும் எதிர்க்கருத்துக்களுடன் இணைந்தும், அவற்றின் பலனை அறுவடை செய்து கொள்ளவும், நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு பேசியது திமுக. ஆட்சிக்கு வந்த பின், நீட் தேர்வை ரத்து செய்ய நடத்தி வரும் பலகட்ட சட்டப் போராட்டங்கள் அனைத்தும் முட்டு சந்தில் நிற்பதை உணர்ந்தாலும், களப்போராட்டங்கள் உருவாகாமல் தார்மீகரீதியாக தடுத்து வருகிறது. இன்னொரு பக்கத்தில், புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

சட்டப் போராட்டங்கள் என்ற பெயரில் திமுகவுக்கு வால் பிடித்துச் செல்வதாலும், பிஜேபி எதிர்ப்பு என்பதற்காக திமுக அரசு கொண்டுவரும் கார்ப்பரேட்மயத் திட்டங்களை ஆதரிப்பதாலும் இழப்பு மக்களுக்கே என்பதை திமுகவை ஆதரிக்கும் ஜனநாயக சக்திகள் உணர வேண்டிய நேரமிது.

கல்வித்துறை எதிர்கொள்ளும் இந்த அபாயத்தை, புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியும், புதிய ஜனநாயகம் இதழும், மக்கள் கல்விக் கூட்டியக்கம் போன்ற அமைப்புகளும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் புதிய ஜனநாயகம் இதழில் கடந்த ஈராண்டுகளாக வெளியிடப்பட்ட, கல்வித்துறை மீதான தாக்குதல்கள் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து இந்த வெளியீட்டைக் கொண்டு வருகிறோம்.

இதுபோல் கல்வி உரிமைக்காகப் போராடக்கூடிய பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும் இணைந்து மக்களிடம் சென்று, களப்போராட்டங்களைக் கட்டியமைக்க உதவும் இலக்கில்  இந்த வெளியீட்டைப் பயன்படுத்திக் கொள்ள, எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.

  • பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவோம்!
  • களப்போராட்டங்களுக்குத் தயாராவோம்!
  • கல்வித்துறை மீதான காவி – கார்ப்பரேட்மயத் தாக்குதல்களை முறியடிப்போம்!

நன்கொடை : ரூ.50.00
புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9444836642

 

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலஸ்தீன மக்களை தேடித்தேடி இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்!

மீபத்தில் பாலஸ்தீன மக்களை, ரஃபாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது இஸ்ரேல் இராணுவம்.

இஸ்ரேலின் இன வெறிப்போரால் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், திட்டமிட்ட குண்டு வீச்சாலும், தேவையான மருத்துவ வசதி கிடைக்காததாலும், சர்வதேச மனிதாபிமான உதவிகள் கிடைக்காததாலும், பசியாலும், பட்டினியாலூம் இதுவரை 35,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்துள்ளனர்.

இஸ்ரேலின் இந்த இனப்படுகொலையில் இருந்து தப்பித்து, தங்கள் உடலில் மீதமிருக்கும் உயிரை வைத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயருகின்றனர் பாலஸ்தீன மக்கள். அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களை தேடித்தேடி படுகொலை செய்துவருகிறது இஸ்ரேல்.

14 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் ரஃபாவில் தான் தற்போது தஞ்சமடைந்துள்ளனர். அந்த கடைசி பாதுகாப்பிடத்தையும் திட்டமிட்டு நிர்மூலம் செய்யத்துடிக்கிறது இனவெறிப்பிடித்த இஸ்ரேல்.

இந்த இனப்படுகொலையை நடத்திவரும் அமெரிக்காவின் முகத்திரை ஏற்கனவே கிழிந்துவிட்டது. சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் “காஸாவிற்கு கிழக்கே அமைந்துள்ள ரஃபா மீது இஸ்ரேல் ஒரு திட்டமிட்ட படையெடுப்பை மேற்கொண்டால் என்ன நடக்கும் ? என்று பைடனிடம் கேட்டபோது, அப்படியென்றால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப்போவதில்லை என்றார்.” பாலஸ்தீன மக்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான ஆயுதங்களை வழங்கிவிட்டு, அதனை மறைக்க தற்போது பல நாடகங்களை நடத்தி வரும் பைடனின் முகத்தில் மனித மலத்தை தான் எறிய வேண்டும்.

பாலஸ்தீன மக்களின் கடைசி பாதுகாப்பு இடமான ரஃபாவை அழித்துக்கொண்டிருக்கும் இனவெறி பிடித்த இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச அளவிலான மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்.

பாலஸ்தீன மக்கள் தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபாவில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச் செல்வதற்காக, வேனின் பின்புறத்தில் தங்கள் உடமைகளை ஏற்றிச் செல்லும் காட்சி. [AFP]
பாலஸ்தீன மக்கள் ஒரு டிரக்கின் பின்புறத்தில் தண்ணீர் தேவைக்காக கொள்கலன்களை ஏற்றும் காட்சி. [AFP]
ஒரு பாலஸ்தீனிய சிறுவன், ஷாப்பிங் டிராலியில் தனக்கான பொருட்களை எடுத்துக்கொண்டு ரஃபாவை விட்டு வெளியேறும் காட்சி [ஹடேம் கலீத்/ராய்ட்டர்ஸ்]
ரஃபாவை விட்டு வெளியேறும் பாலஸ்தீன மக்கள். [ஹடேம் கலீத்/ராய்ட்டர்ஸ்]
இஸ்ரேலின் இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து பாலஸ்தீன மக்கள் ஏற்கனவே பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர். [ஹடேம் கலீத்/ராய்ட்டர்ஸ்]
 

ஆதன்
நன்றி – அல் ஜசீரா

 

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கெஜ்ரிவால் மீது NIA விசாரணை? | தொடங்கியது மோடியின் அடுத்த கட்ட சதி! | தோழர் மருது

கெஜ்ரிவால் மீது NIA விசாரணை?
தொடங்கியது மோடியின் அடுத்த கட்ட சதி!
தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இறைச்சி கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் | மக்கள் ஆவேசம்

இறைச்சி கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும்
தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் | மக்கள் ஆவேசம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடி வெறுப்புப் பேச்சு – நடவடிக்கை எடுக்காதது ஏன்? | தோழர் மருது

 மோடி வெறுப்புப் பேச்சு
நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



யார் இந்த சவுக்கு? கை உடைக்கப்பட்டது சரிதானா? | தோழர் மருது

யார் இந்த சவுக்கு?
கை உடைக்கப்பட்டது சரிதானா?
தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அதீத வெப்பம் | ரேப்டோமயோலைசிஸ் எனும் தசைச் சிதைவு

நேற்றைய தினம் சென்னையில் திரு. சச்சின் எனும் 25 வயது சகோதரர் வெப்ப வாதம் ஏற்பட்டு அதன் விளைவாக ரேப்டோமயோலைசிஸ் எனும் தசைச் சிதைவு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தவனாய் இந்த விழிப்புணர்வு கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

அதீத வெப்பமான சூழ்நிலையில் தொடர்ந்து நீண்ட நேரம் கடினமான பணியைச் செய்யும் போது தசைகள்  ஓய்வு இல்லாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதால் ஓரளவுக்கு மேல் தாங்கும் சக்தியை இழந்து சிதைவுக்கு உள்ளதாகத் தொடங்கி விடுகின்றன. அப்போது தன்னகத்தே கொண்ட பொட்டாசியம் பாஸ்பேட்க்ரியாடினின் கைனேஸ் மயோகுளோபின் யூரிக் ஆசிட் ஆகிய பொருட்கள் மிக அதிக அளவில்  ரத்தத்தில் கலந்து விடும்.

இத்தகைய நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பணியை நமது சிறுநீரகங்கள் செய்ய வேண்டும். ஆனால் தொடர்ந்து நீண்ட நேரம் வெப்பமான சூழ்நிலையில் இருந்தமையால் அதீத நீர்ச்சத்து இழப்பு நிலையின் விளைவாக சிறுநீரகங்கள் தொய்வாகவே அதன் பணியைச் செய்யும்.

கூடவே ஒரே நேரத்தில் மிக அதிகமான அளவில் நச்சுப் பொருட்களை சுத்தீகரிக்க வேண்டிய பணியை சிறுநீரகங்கள் செய்ய உந்தப்படும் போது அவையும் அயர்ச்சிக்கு உள்ளாகி தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்யத் துவங்கி விடும். இதன் பொருட்டு ரேப்டோமயோலைசிஸ் – மருத்துவ அவசர நிலையாக உருமாறும்.

– அதீத தசை வலி
– தசைகளில் வீக்கம்
– தசைத் தளர்ச்சி
– சிறுநீர் நிறம் அடர்த்தியாக செல்வது (தேநீரின் நிறம் முதல் ரத்த நிறத்தில் செல்வது) ஆகியவை அறிகுறிகள்.


படிக்க: ஊழிக்காலம் (காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்) | நூல் மதிப்புரை


உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்து க்ரியாடினின் கைனேஸ் அளவுகளைச் சோதித்து ரேப்டோமயோலைசிஸ் உறுதி செய்யப்பட்டு அவசர சிகிச்சை ஆரம்பமாகும். ரத்த நாளம் வழி திரவங்களும், தாதுஉப்புகளையும் ஏற்ற வேண்டும்.

சிறுநீரகம் செயல்பட மறுத்தால் டயாலசிஸ் எனும் ரத்த சுத்தீகரிப்பு சிகிச்சை செய்து நச்சுப் பொருட்களை வெளியேற்றி சிறுநீரகங்களுக்கு சற்று ஓய்வு அளிக்க வேண்டும். ரேப்டோமயோலைசிஸ்-  விபத்துகளால் ஏற்படும் காயங்கள் / தீக்காயங்கள் ஆகியவற்றால் ஏற்படலாம். சிறுகச் சிறுக உடல் தசைகளுக்கான ஒர்க் அவுட்களைக் கூட்டிக் கொண்டே செல்லாமல் திடீரென அதிரடியாக அதீத பளுவை தசைகளுக்கு ஒர்க் அவுட் மூலம் கொடுத்தாலும் ரேப்டோமயோலைசிஸ் ஏற்படலாம்.

நீண்ட தூரம் ஓடுபவர்களும் தங்களது நீர்ச்சத்து மற்றும் தாது உப்பு அளவுகளை பராமரிக்காமல் தசைகளுக்குத் தேவையான மீளும் காலத்தை வழங்காமல் தொடர் சிரத்தைக்கு உள்ளாக்கினால் ரேப்டோமயோலைசிஸ் ஏற்படலாம். சில விஷப்பாம்புக் கடிகளில் தசைச் சிதைவு ஏற்படுவதைக் காண்கிறோம்.

மனநோய் சிகிச்சை மருந்துகள், ஸ்டாட்டின் எனும் கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரை உட்கொள்ளும் நீரிழிவு நோயர்கள் மற்றும் கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு அரிதிலும் அரிதாக ரேப்டோமயோலைசிஸ் ஏற்படலாம். கவனம் தேவை.

மது அருந்துபவர்கள், ஹெராயின், கொக்கைன் உள்ளிட்ட போதை வஸ்துக்களை உபயோகப்படுத்துபவர்களுக்கு அதீத வெப்பத்தால் நீர்ச்சத்து குறைவு ஏற்படும் போது ரேப்டோமயோலைசிஸ் ஏற்படலாம். முதியோரும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

எப்படி தற்காத்துக் கொள்வது? காயங்கள் குறிப்பாக பெரிய அளவில் தீக்காயம் அடைந்தவர்கள் – அதற்குப் பிறகு சில நாட்கள் இந்த ரேப்டோமயோலைசிஸ் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.


படிக்க: மழைவெள்ளத்திற்குக் காரணம் காலநிலை மாற்றமா? தொழில்நுட்ப பிரச்சினையா?


வெப்பம் அதிகமாக நிலவும் சூழ்நிலையில் தசைகளுக்கு தொடர்ந்து அதிக நேரம் ரெக்கவரி நேரம் இல்லாமல் வொர்க் அவுட் / நீண்ட நேரம் ஓடுவது / சைக்ளிங்  செய்வதை தவிர்க்கலாம். முறையாக நீர்ச்சத்து மற்றும் தாது உப்புகளை பராமரித்து வருவது நல்லது.

வெயிலில் கடினமான வேலைகள் செய்பவர்கள் கட்டாயம் அவ்வப்போது நிழலில் ஓய்வு எடுப்பதையும் நீர் அருந்துவதையும் உறுதி செய்ய வேண்டும். ரேப்டோமயோலைசிஸ் அரிதானது எனினும் ஏற்படும் போது உயிருக்கு ஆபத்தான அவசர நிலையாகும்.

– அதீத தசை வலி
– தசை வீக்கம்
– சிறுநீர் ரத்தம் போல சிவப்பாகச் செல்லுதல் ஆகிய அறிகுறிகளை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.

நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – மே 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் மே 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – மே 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

குறையும் வாக்குப்பதிவு:
பா.ஜ.க-விற்கு மட்டும்தான் நெருக்கடியா?

தோல்வி முகத்தில் மோடி-அமித்ஷா கும்பல்: மக்கள் போராட்டமே ஆயுதம்!

பாசிஸ்டுகளின் தேர்தல் ‘ஜனநாயகம்’!

நாடாளுமன்றத் தேர்தல்: மாற்று அரசு கட்டமைப்பைக் கோரும் மக்கள் கோரிக்கைகளும் அரசியல் கட்சிகளின் கவர்ச்சி வாக்குறுதிகளும்!

பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? வழிகாட்டும் வெளியீடு!

பாசிசக் கும்பலின் பிடியில் திரைத்துறை: மோடி கும்பலின் அறிவிக்கப்படாத தேர்தல் பிரச்சாரம்!

சத்தீஸ்கர் படுகொலை: பாசிசக் கும்பலால் நடத்தப்படும் நரவேட்டை

ஈரான் தூதரகம் மீதான தாக்குதல்: அமெரிக்கா-இசுரேலின் அடுத்த போருக்கான தயாரிப்பு

மணிப்பூரில் தேர்தலை புறக்கணிக்கும் குக்கி அமைப்புகள்: பா.ஜ.க-வின் சதித்திட்டத்திற்கு விழுந்த அடி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கெஜ்ரிவாலை விசாரிக்க என்.ஐ.ஏ – மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்

கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ விசாரணை நடத்த
டெல்லி துணைநிலை ஆளுநர் பரிந்துரை!

மோடி – அமித் ஷா கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட
மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்!

06.05.2024

கண்டன அறிக்கை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனா பரிந்துரை செய்த பாசிச நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தேவேந்திர பால் புல்லரை விடுதலை செய்வதற்காக காலிஸ்தான் ஆதரவு குழுவான ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பிடம் இருந்து 2014 – 2022 வரை ரூபாய் 134 கோடி பணம் பெற்றதாகவும், காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவான உணர்வுகளை தூண்டுவதாகவும் அகில இந்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அஷூ மோங்கியா அளித்த புகாரின் அடிப்படையில் சக்சேனா இந்த பரிந்துரையைச் செய்துள்ளார்.

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அறிவு ஜீவிகள் அனைவரையும் பொய்யாக கைது செய்து சிறையில் அடைக்கவே பாசிச மோடி அரசால் திட்டமிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது பல வகைகளில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.


படிக்க: தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுக்கும் பாசிச மோடி அரசு!


எனினும் கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டை பேரழிவுக்கு உள்ளாக்கிய மோடி அமித்ஷா பாசிச கும்பல், மக்கள் போராட்டங்களின் முன் தோற்று, கோழையைப் போல் அஞ்சி நடுங்கி கொண்டிருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அவரையும் அக்கட்சியையும் மொத்தமாக அழிக்கும் நோக்கத்துடன் தற்பொழுது தடைசெய்யப்பட்ட அமைப்பிடமிருந்து நிதி வாங்கினார் என்ற ஒரு சதி வழக்கை திட்டமிட்டு அவர் மீது போட்டுள்ளது.

தனக்கு ஒத்து வராத, கீழ்படியாத அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் பொய் வழக்குகளையும் பல்வேறு சதி வழக்குகளையும் போட்டு அவர்களை சிறையில் அடைக்கும் சதியே இது.


படிக்க: சேலம்: ஓமலூர் தீவட்டிப்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையத் தடை! | மக்கள் அதிகாரம்


யார் மீது வேண்டுமானாலும் எவ்விதமான வழக்குகளையும் பதிவு செய்யலாம். அதற்கு எவ்விதமான ஆதாரங்களும் தேவையில்லை. கைது செய்துவிட்டு அதற்குப் பிறகு எல்லா விதமான பொய்யான சான்றுகளையும் பாசிச பிஜேபி ஆட்சியாளர்கள் உருவாக்கி விடுவார்கள் என்பது உலகறிந்த உண்மை.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை தடுக்கும் நோக்கமே இந்த சதி வழக்காகும். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பல், அமைதியான முறையில் ஒரு போதும் செயல்படாது என்பதையே கெஜ்ரிவால் மீதான நடவடிக்கை உள்ளிட்டு அனைத்து பாசிச நடவடிக்கைகளும் எடுத்துக்காட்டுகின்றன.

இதற்கு எதிரான செயல்பாட்டை எதிர்க்கட்சிகள் தேர்தல் மேடைகளில் மட்டும் மேற்கொள்ளாமல் வீதிகளில் மக்களை திரட்டி மக்கள் எழுச்சிகளை உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணா | 300 பெண்கள் பாலியல் வன்கொடுமை | தோழர் ரவி

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணா | 300 பெண்கள் பாலியல் வன்கொடுமை | தோழர் ரவி

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அமித்ஷாவிற்கு எதிராக நிற்கும் வேட்பாளர்களுக்கு மிரட்டல்! | தோழர் ரவி | வீடியோ

அமித்ஷாவிற்கு எதிராக நிற்கும் வேட்பாளர்களுக்கு மிரட்டல்!
| தோழர் ரவி | வீடியோ

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மார்க்சியம் என்று முழங்கு – நின்று! | கவிதை

மார்க்சியம்..!

சுரண்டல்கள்
சூரையாடிய போது
சுகமில்லாமல்
தொழிலாளி ஏங்கித் தவிக்கும் போது!

வர்க்க பிரச்சினை
வாழ்க்கை முழுவதும்
நிரம்பிய போது!

முதலாளித்துவத்தின் கோரப்பிடிகள்
மூச்சு விடாமல்
தொழிலாளி வர்க்கத்தை
இறுக்கியபோது!

மொழி, இனம், சாதி, மதம்
சூழ்ந்து நின்று
அடித்தபோது!

மக்களின் வலிசொல்ல
வழியில்லாமல்
நிர்க்கதையாய்
நின்றபோது!

ஒடுக்கப்பட்டு
ஓரங்கட்டி
கேவலமாய் திட்டி
ஒதுக்கி வைக்கும்
சாதிய படிநிலை போது!

இருப்பவன்
இல்லாதவன் என்ற
பிரிவினை தோன்றும் போது!

கூலிக்கு மாரடிக்கும்
கும்பல்கள் ஏன்
இன்னும் குனிந்தே கிடக்கிறது
என்று நினைக்கும் போது!

வானம், காற்று, நிலம், நீர்
பொதுவாக இருந்தும்
தனியுடைமை ஆனது எப்படி
என்று கேள்வி எழும்போது!

எல்லோரையும்
பாதாள குழியில் தள்ளிப்
புதைக்கும் இந்த அரசை
ஏன் ஆதரிக்க வேண்டும்
என்ற எண்ணம் எழும் போது!

காதல் மறுப்பு திருமணங்கள்
காலமெல்லாம் மறுப்பது ஏன்
என வினவும்போது!

ஊர் ஊராய் ஏன் இன்னும்
சாதி கலவரங்கள்
தீயிட்டு எரித்துக் கொள்கின்றன
என்று தோளை நிமிர்த்தி
கேள்வி கேட்கும் போது!

பாலியல் தொல்லையால்
பலியாகிப் போன
பச்சிளம் பெண்களுக்கு
ஏன் இந்த நிலைமை என்று
கோபப்படும் போது!

உழைத்த செல்வங்கள்
வேறொரு பக்கம்
சேர்ந்த போது!

அரசியல்வாதியின் ஊழல்களும்
கார்ப்பரேட்டின் திருட்டுத்தனமும்
காலூன்றி, கால் வயிற்றுக்
கஞ்சி குடிக்கும் தொழிலாளியின்
உரிமையை ஏன் தட்டிப் பறக்கிறது
என்ற சிந்தனை நிலவும் போது!

போதும், போதும், போதும்,
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை
வாழ்வதற்கு இடமும்மில்லை
வாருங்கள் தோழரே

நம்மின் இத்தனை பிரச்சினைக்கு
மாற்றம் மார்க்சியம் என்று
முழங்கு – நின்று!

மணிவண்ணன்