சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் அருகில், டாஸ்மார்க் ஊழியர்கள் தாங்கள் வேலை பார்க்கும் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்து கடந்த வியாழன்று (02/10/2014) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.
பத்திரிக்கையின் மூலம் இப்போராட்டத் தகவல் அறிந்த பெண்கள் விடுதலை முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சுவரொட்டிகளும், பிரசுரங்களும் அச்சிட்டு மக்களிடம் விநியோகித்தோம். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தோம்.
எமது தோழர்கள் பந்தலை அடையும் பொழுது, உண்ணாவிரத பந்தல் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களால் நிறைந்திருந்தது. பிஇ, எம்பிஏ படித்த பட்டதாரி இளைஞர்கள், அரசு நடத்தும் மதுபானக் கடைகளில், கொத்தடிமைகளைப் போல நடத்தப்படும் அவலத்தை அவர்களின் உரை மூலம் நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது.
தங்களது 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலரும் பேசினார்கள்.
மது விலக்கை படிப்படியாக அமுல் படுத்து!
மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைத்து அறிவித்திடு!
மதுக் கடை பார்களுக்கான உரிமங்களை உடனடியாக ரத்து செய்!
வாரம் தோறும் ஞாயிற்றுகிழமை, மாதம் முதல் தேதி விடுமுறை தினமாக அறிவித்திடு!
அரசு வேலைக்கான காலி பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நியமனம் செய்! என்பதே அவர்களின் கோரிக்கை.
போராட்டத்தில் மதுபானக் கடை ஊழியர்கள், தங்கள் அனுபவங்களையும், அல்லல்களையும் கொட்டித் தீர்த்தனர்.
திருவள்ளூரைச் சேர்ந்த ஊழியர், திரு. மாரி பேசுகையில் அன்றாட வேலையின் சிரமங்களையும், இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட வழியில்லாத அவல நிலையையும் எடுத்துரைத்தார். இந்த குடியினால் பல குடும்பங்கள் சீரழிவதை கண்கூடாக கண்டதையும் கூறினார்.
தன் பணிச்சுமை அரசால் அங்கீகரிக்கப்படாத போதும் குடிக்கு அடிமையான ஒருவரை மீட்ட கதையை கூட்டத்தினரிடம் பகிர்ந்தார். குடியிலிருந்து மீண்டவர், தன் துணைவியாருடன் வந்து, மகளின் திருமண பத்திரிக்கையுடன், ரூ. 10,000 கொடுத்து அழைத்ததையும், அவரது துணைவியார் தன் கணவரை குடியிலிருந்து மீட்டதினால் தன் குடும்பம் சரியான நிலைக்கு வந்துள்ளதையும், தான் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றிய நிலைமை மாறியதையும் நெஞ்சுருகிப் பேசியதை கூட்டத்தினரிடம் பகிர்ந்துக் கொண்டார்.
பட்டதாரி இளைஞர்கள் மதுபானக் கடைகளில் வேலை பார்த்து பலத் தரப்பட்ட மக்களுடன் பழகிப் பக்குவப்பட்டுள்ளதையும், படிப்படியாக மதுக்கடைகளை மூடிவிட்டு, அரசின் மற்ற துறைகளில் எங்களுக்கு வேலைக் கொடுத்துப் பாருங்கள் , நிலுவையில் இருக்கும் அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடித்துக் காட்டுவோம் என்று அரசுக்கு சவால் விட்டனர்.
அவரைத் தொடர்ந்து பேசிய பெண்கள் விடுதலை முன்னணி தோழர் அமிர்தா, அரசு நடத்தும் மதுபானக் கடையை படிப்படியாக மூடக் கோரி அதில் பணிபுரியும் ஊழியர்களே நடத்தும் இந்த போராட்டம் ஒரு நல்ல துவக்கம் என்றும், குடிப்பவர்கள் ஆண்கள், விற்பது அரசு, ஆனால் இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள், குழந்தைகள் தான்! இலவச, விஞ்ஞானப்பூர்வமான கல்வியைக் கொடுக்க முடியாத அரசு மதுபானக் கடைகளுக்கு அதிக இலக்கு வைத்து குடிமக்களிடம் பணம் பறிக்கிறது. மேலும், நீதிமன்ற தீர்ப்பால், குரோம்பேட்டை அருகே நெடுஞ்சாலையிலிருந்து அகற்றிய மது கடைகளை மக்கள் நெருக்கமாக வாழும் குடியிருப்புப்பகுதி என்றும் பாராமல் கடையை திறக்கமுற்பட்டபோது, அதற்கு எதிராக பெண்கள் விடுதலை முன்னணி பகுதிப் பெண்களுடன் 10 நாட்கள் போராடி கடையை திறக்க விடாமல் செய்தோம். மேலும், இதற்காக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் என ஒரு இயக்கமாக முன்னெடுத்து அரசு நடத்தும் மதுபானக் கடை ஒழிப்புக்கு முன் நின்று போராடுகிறோம்.
அரசானது பண்டைய சாண்டில்யன் காலந்தொட்டே மக்களை மது போதைக்கு திட்டமிட்டே உட்படுத்தி, மக்கள் அரசை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருக்க மயக்கத்திலேயே வைத்திருப்பது இன்றும் தொடர்கிறது.
தொடர்ந்து குடிப்பதினால் குடும்பங்கள் சீரழிவதோடு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் படிப்படியாக மதுக்கடை ஒழிப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் தமிழகமோ குடிமக்களின் நலனை பாரமால், கல்லா கட்டும் நோக்கதோடு அதன் விற்பனை இலக்கை அதிகமாக உயர்த்துகிறது. மேலும், அரசு மதுபானக்கடைகளை முற்றிலும் ஒழிக்கும் வரை நமது போராட்டங்கள் தொடரவேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.
பிறகு பேசிய டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு. மோகன், தனக்கு முன் பேசிய பெவிமு தோழர் அமிர்தாவின் உரையில் மக்களின் குடிகெடுக்கும் பின்னணியில் ஆணிவேராக செயல்படும் அரசின் பங்கைப் புரிந்து விளக்கியதை சுட்டிக் காட்டினார். மேலும், கடைகளில் பணிபுரியும் 60% இளைஞர்களே குடிக்கு அடிமையாகி நோய்களுக்கு ஆட்படுவதை வேதனையுடன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்கள் அலை அலையாய் எழுந்து டாஸ்மார்க் கடைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடும் பொழுது தான் அரசை பணிய வைக்க முடியும். மது விலக்கை அமுல்படுத்துமாறு அரசை பணிய வைக்க முடியும், என்றார்.
தமிழக மக்களை ஒட்டு மொத்தமாக சீரழித்து வரும் டாஸ்மாக் எனும் குடி போதையை ஒழிக்க அதை விற்பனை செய்யும் ஊழியர்களே முன் வந்து போராடுவது அரிதினும் அரிதான விசயம். இதனால் அவர்கள் வேலை வாய்ப்பு பறிபோனாலும், மாற்று ஏற்பாடுகளுக்கு உத்திரவாதம் இல்லையென்றாலும் அவர்கள் இப்படி ஒரு கோரிக்கை வைத்து போராடுவது மிக முன்னுதாரணமான விசயம். இந்த போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
’இந்துக்களின் ஜகத்குரு’ என்று பீற்றப்படும் சங்கர்சாரிகளின் காஞ்சி சங்கர மட யோக்கியதைகள் ஊருக்கே தெரியும். கொலையிலும் கூத்தடிப்பதிலும் கொடிகட்டி பறக்கும் மடம் அது. இப்பேற்ப்பட மடம் நடத்தும் கல்லூரிகள் மட்டும் எப்படி இருக்கும்?
ஆம். காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் உள்ளது காஞ்சி சங்கரமடத்துக்கு சொந்தமான சங்கரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஒவ்வொரு மாணவனிடமும் லட்சக்கணக்கில் பணத்தைக் கறக்கும் கல்விக் கொள்ளையில் தவறாமல் ஈடுபடும் நிகர்நிலைப் பல்கலைகழகங்களில் இதுவும் ஒன்று. மாணவர்கள் மாணவிகளுடன் பேசிக்கொள்ளக்கூடாது, இப்படித்தான் உடை அணிய வேண்டும், மாணவர்களை அடிப்பது, பேராசிரியர்கள் { கடந்தாண்டு படிப்பை முடித்த மாணவர்கள்தான் இந்தாண்டு பேராசிரியர்கள்} குச்சியை வைத்துக்கொண்டு பாடம் நடத்துவது என பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு அதன் பெயரில் மாணவர்களை ஒடுக்கி வருகிறார்கள். ஷூவில் லேஸ் கட்டவில்லை, தினம்தோறும் ஷேவ் செய்யவில்லை என்றாலும் கல்லூரியில் அலுவலக உதவியாளர்கள்தான் மாணவர்களை தண்டிப்பார்கள். அங்கு அலுவலக உதவியாளர் வேலை செய்பவர்கள் எல்லாம் கல்லூரி நிர்வாகத்திற்கு அடியாள் வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும்.
மேலோட்டமாக பார்த்தால் இப்படி கட்டுப்பாடுகள் இருந்தால்தான் மாணவர்கள் ஒழுங்காக வளருவார்கள் என்று சிலருக்கு கருதத் தோன்றும். மாணவர்களைக் கேட்டால் இது கல்லூரி இல்லை, சிறைச் சாலையைவிட கொடுமையானது என்று கதறுகிறார்கள். இந்த பல்கலைக்கு அரசு கொடுத்துள்ள சர்டிபிகேட் யூ . ஆனால் உள்ளே நடப்பதெல்லாம் ஏ பட ரேஞ்சுக்கான வேலைகள்.
இப்பல்கலைகழக விடுதியில் சுமார் 1500 மாணவ மாணவிகள் தங்கிப் படிக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக மாணவிகளின் பாத்ரூமில் கேமரா பொருத்தப்பட்டு வருவதும், அது பற்றி புகார் கொடுத்தால் நிர்வாகம் அமைதியாக இருப்பதுமே இருந்திருக்கிறது. மாணவிகளும் வெளியே சொன்னால் அவமானம் என்று வாய்மூடி அமைதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் கடந்த 10 நாட்களாக பாத்ரூமில் கேமரா வைக்கப்பட்டிருப்பது குறித்து மாணவிகள் விடுதி வார்டனிடம் புகார் அளித்துள்ளனர். அந்த வார்டனோ இதைக் கேட்டு பதறாமல் நிதானமாகபார்க்கலாம், பார்க்கலாம் என இழுத்தடித்துக் கொண்டு வந்துள்ளார்.
இந்த அநியாயத்தை கண்டு பொறுக்க முடியாத மாணவிகள் தங்களுடன் படிக்கும் சக மாணவர்களிடம் கூறியுள்ளனர். மாணவர்கள் இதை விசாரித்து அப்படி படம் எடுத்த எலக்ட்ரீசியன் ராஜாவை கையும் களவுமாகப் பிடித்து விசாரித்துள்ளனர். தலைமை வார்டனான வாசுதேவன் என்பவர் சொல்லி பெண்கள் பாத்ரூமில் கேமரா வைத்ததாகவும் அந்த மெமரி கார்டை பெண்கள் விடுதி வார்டனிடம் கொடுப்பதாகவும் ராஜா மாணவர்களிடம் கூறியுள்ளான். அவனை பிடித்து நிர்வாகத்திடம் ஒப்படைத்து வாசுதேவனை கைது செய்ய வேண்டும் என மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
சங்கர ராமன் கொலை வழக்கையே ஊற்றி மூடிய போலீசு இதில் மட்டும் நடவடிக்கை எடுக்குமா என்ன? ராஜாவையும் வாசுதேவனையும் அரைமணி நேரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு பத்திரமாக விடுவித்து விட்டது. சரி லோக்கல் போலீசுதான் இப்படி, மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்தால் அவர் நீதியைத் தருவார் என்றெண்ணி மாவட்ட ஆட்சியரகத்துக்கு சுமார் 400 மாணவர்கள் ஊர்வலமாக வந்து மனு அளிக்க வந்தார்கள். 23ம் தேதி பதவியேற்ற புது கலக்டரோ அவரது நிர்வாகமோ சங்கர ராஜ்ஜியத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகளை கண்டு கொள்ளவே இல்லை. கலெக்டர் மீட்டிங்கில் இருக்ககிறார் என்ற பதிலே 2 மணி நேரமாக வந்தது.
அந்தக் காத்திருப்பில்தான் மொத்த அரசுமே இந்த கல்விக்கொள்ளையர்களுக்கும், சங்கர மட மைனர்களுக்கும் சேவை செய்கிறது என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டனர். இதற்கிடையில் காவல் நிலையத்தில் வார்டன் வாசுதேவன் “பல இடத்தில் நடக்குறதுதானே, ரொம்பப் பிரச்சினை செய்தா மெமரி கார்டில் இருப்பதை எல்லாம் இண்டர் நெட்டில் அப்லோடு செஞ்சுடுவேன்” என்று மிரட்டிய விசயம் மாணவர்களிடம் பரவ ஆரம்பித்தது. இதன் பிறகே ஆத்திரமடைந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்தார்கள்.
கல்லூரி டீனிடம் முறையிட்டார்கள்.அவரோ நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள் என்றார். அதாவது மாணவிகளை மறைவாக படம் பிடித்த அயோக்கியர்களை கைது செய், நடவடிக்கை எடு என்று சொன்னால் அது அநாகரிகமாம். துணை டீன் ரமணனோ தவறுதான் மன்னித்துவிடுங்கள் என்று கூறிவிட்டு பிரச்சினைகளை பெரிதாக்க வேண்டாம் என்று சொன்னார். ” மன்னிப்பு எங்களுக்குத்தேவை இல்லை, வாசுதேவன் இங்கே வந்து எங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும், அந்த மெமரி கார்டை ஒப்படைக்க வேண்டும்” என்றார்கள் மாணவிகள். வாசுதேவனை இங்கே கொண்டு வந்தால் அடித்தே கொன்று விடுவீர்கள் என்றது போலீசு.
இதற்கிடையில் கல்லூரி நிர்வாகத்தினை சேர்ந்த ஒரு பொறுக்கி “வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க” என்று கேட்டவுடன் இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று 3 மணி நேரமாக காத்திருந்த மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள்.
இத்தனை ஆண்டுகளாக காமவெறிப்பிடித்த இந்த பார்ப்பன அக்ரஹார கோட்டையை யாரும் கேள்வி கேட்காமல் பேசாமல் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டது போதும், இனி தன்மானத்தை இழப்பதற்கு உயிரை இழப்பதே மேல் என்று துணிந்தார்கள். அவர்கள் கண் முன்னே பிராக்டிக்கல் மார்க் வரவில்லை, எந்த HODயும் வரவில்லை. பேருந்துகள் வேன்கள், ஆய்வகம் என கண்ணில் பட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கினார்கள். இது அநாகரீகம் என்றால் இருக்கலாம் , சூடு சொரணை உள்ளவர்களுக்கு தெரிந்த மொழி இதுதானே!
மீண்டும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் பேசித்தீர்க்கலாம் என்று அமைதிப்படுத்தியது. காலை முதலே தண்ணீர்கூட குடிக்காமல் இருந்த மாணவர்கள் சோர்வடைந்தார்கள். இதற்கிடையில் விடுதிகளில் படிப்படியாக தண்ணீர், மின்வசதிகள் துண்டிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புப் போரில் தாக்குதலை தொடங்குவதற்கு முன்னர் ஏகாதிபத்திய படைகள் என்ன செய்யுமோ அதை பார்ப்பன பயங்கரவாதகம்பெனிகள் செய்தன. சரியாக இரவு 7.30 மணி. கல்லூரியின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன.
இப்பிரச்சினையை எவ்வளவோ மூடி மறைக்க முயன்ற போதும் மாணவர்களின் போராட்டத்தால் காஞ்சிப் பல்கலை கழகத்தின் பெயர் வராமல் ஊடகங்களில் செய்தி வெளியானது. ஒவ்வொரு முறையும் மாணவிகள் இப்படி பாத்ரூமில் கேமரா உள்ளதென்று புகார் கொடுத்தால் ஒரு நாள் விடுமுறை விட்டுவிடுமாம் கல்லூரி நிர்வார்கம்.
இம்முறை 10 நாட்கள் விடுமுறை விட்டுள்ளது நிர்வாகம். போலீசு அடித்ததால் ஏற்பட்ட காயங்கள் காய்ந்து போகலாம், தழும்புகள் மறையுமா என்ன? இந்த நிர்வாகத்தின் அயோக்கியத்தனத்துக்கு முடிவே இல்லையா என்று கதறுகிறார்கள் மாணவர்கள். கல்லூரி நிர்வாகமும் அரசும் கூட்டணிக்கொண்டு செயல்படும் போது மாணவர்கள் ஒரு அமைப்பாக ஒன்றுபடாமல் வெற்றிபெறமுடியாது.
சங்கரமடம் என்பது கொலைக்கூடாரம். பல்லாண்டுகளாக உழைக்கும் மக்களை கொன்றொழித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டை. அதன் ஒவ்வொரு செங்கல்லும் கொலைகளின் கதைகளையும் பாலியல் வன்புணர்ச்சியின் கதறல்களையும் சொல்லும். இந்தச் சத்தங்களை மறைக்க வேதங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
இந்தப் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டையில் தன்மான உணர்வுடன் சுயமரியாதை உணர்வுடன் முதல் கீறலைப் போட்டிருக்கிறார்கள் மாணவர்கள். சாதி வித்தியாசங்களைக் கடந்து இந்த போராட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டிருக்கிறது.
சங்கரராமன் கொலை வழக்கை ஊற்றி மூடப்பட்டது போல இந்த விவகாரத்தை மாணவர்கள் விடக்கூடாது. போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம். சங்கர மட பயங்கரவாதிகளை முறியடிப்போம்.
1995-ம் ஆண்டு ஜெயா-சசி கும்பல் நடத்திய வளர்ப்பு மகன் திருமணம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தத் திருமணத்தின் ஆடம்பர வக்கிரம், அதிகார துஷ்பிரயோகம், எடுபிடி வேலை பார்த்த, மற்றும் இதர சங்கதிகளை உள்ளடக்கி மக்கள் கலை இலக்கியக் கழகம் 1996-ம் ஆண்டு வெளியிட்ட “கல்யாண கத கேளு” என்ற பாடல். இந்தப் பாடல் “அண்ணே வர்றாரு” என்ற பாடல் குறுந்தகடில் இடம் பெற்றுள்ளது.
தீர்ப்பு இவ்வளவு கடுமையாக இருக்குமென்று சோ எதிர்பார்க்கவில்லையாம். ஆனால் இந்த எதிர்பார்ப்பு திமுகவிடம் ஏன் இருந்தது? சந்தேகப்படும் அவர், எல் டிபிள் யூ முறையீட்டில் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு கொடுக்கும் போது, அரசியலில் போயஸ் தோட்டத்து ராணிக்கு கொடுக்கப்படவில்லை என்றால் அதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமென்கிறார். முக்கியமாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் ஜெயா என்பது அவரது நம்பிக்கை மட்டுமல்ல, மற்றவர் நம்பியாக வேண்டிய ஆணை!
கோடிகளை சம்பளமாக வாங்கிய சட்டம் படித்த மேதைகள் உதவியால் வாய்தா மேல் வாய்தாவாக 18 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கை ஏதோ ஜெயா தரப்பு உண்மைக்கும், திமுக தரப்பு பொய்மைக்குமான நீதிப் போராட்டம் என்று சித்தரிக்கிறார் சோ. வெண்மணி படுகொலை வழக்கில் “கோபால கிருஷ்ண நாயடு போன்ற மேன்மக்கள் குற்றம் இழைத்திருக்மாட்டார்கள்” என்று சாட்சியை பார்க்காமல், ஆதிக்க சாதி ‘கௌரவ’மாக பார்த்த நீதிபதிகளின் நாட்டில் குன்ஹா எனும் நீதிபதி இப்படி தீர்ப்பளித்திருப்பது சோவாலேயே நம்ப முடியவில்லை.
ஆனால் திமுக மட்டும் இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று உறுதியாக எதிர்பார்த்திருந்தது எப்படி என ஒரு ஆழ்ந்த சந்தேகம் சோவிடம் இருந்தாலும் எச்சரிக்கையாக பேசுகிறார்.
“தங்கள் முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருந்தாலும், அந்த ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு இப்படி மட்டும்தான் அமையும் என்று சொல்லிவிட முடியாது. அதே ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வந்திருக்க முடியும். அப்படி ஒரு தீர்ப்பு வருவதற்குப் போதுமான ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக வழக்கின் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.”
தினமணி வைத்தியின் “கடவுளுக்கே சோதனையா” வாதங்களை விட சோவின் சாதுர்யமான சட்ட நுணுக்க பேச்சைக் கவனிக்க வேண்டும். அதாவது சாட்சிகள் வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு அளிப்பதாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூற முடியும் என்று அடித்துச் சொல்கிறார் சோ. இது சரியா, தவறா என்ற விவரங்களுக்குள் அவர் போகவில்லை.
ஒரு வேளை கணக்கு காண்பிக்கப்படாத சொத்து, அதுவும் வருமான வரித்துறையிடம் அளிக்கப்பட்டது, அல்லது மன்னார் குடி கும்பலால் நடந்த தவறு, அதற்கும் ஜெயாவிற்கும் தொடர்பில்லை என்றெல்லாம் இந்த சட்ட நுணுக்கத்தின் பின்னே இருந்தாலும், தீர்ப்பு அவர் நினைத்த மாதிரி ஏன் அமையவில்லை?
தீர்ப்பு இப்படித்தான் வருமென்று திமுக நினைப்பதிலேயே ஏதோ பெரும் சதி நடந்திருப்பதாக சோ சொல்கிறார். ஆனால் அதற்கு மேல் விவரித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்று நிறுத்திக் கொள்கிறார். ஏன், திரைமறைவு ஒப்பந்தங்கள் மூலம் நீதிபதி விலை போய்விட்டார், அதை நிறைவேற்றும் அளவு திமுகவிடம் பெரும் பணம் இருக்கிறது என்று சொல்ல வேண்டியதுதானே?
சட்டப்படியும் தவறு, சதிப்படியும் தவறு என்று கூறிவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு என்று நல்லபிள்ளை போல நடிப்பது ஏன்? அங்கேதான் கவனிக்க வேண்டும், மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் லேடி ஆட்சி, கர்நாடகத்தில் கூட ஜெயாவின் மல்லையா உள்ளிட்டோரின் ஆசி பெற்ற காங்கிரசு ஆட்சிதான் நடக்கிறது. திமுகவோ அரசியல் செல்வாக்கிழந்து பலவீனமாக துவண்டு போயிருக்கிறது.
இந்நிலையில் கருணாநிதி நீதித்துறையை வளைத்து விட்டார் என்று சொல்வதோ, இல்லை மோடி, காங்கிரசு ஆட்சிகள் பணிந்து விட்டதாக அளப்பதோ அதிமுகவின் அடிமட்ட தொண்டர் வேண்டுமானால் பேசலாம். சோ பேசினால் சிக்கிக் கொள்வார். அதாவது சொந்த செலவில் அவர் ஆராதிக்கும் மோடி ஆட்சியை அவரே விமரிசிக்க வேண்டியதாகிவிடும்.
ஆகவேதான் (மோடி ஆசியுடன்) மேல் முறையீட்டில் தீர்ப்பே ரத்தாகிவிடும் என்று வாதிடும் சோ, அதற்கு ஆதாரமாக ஜெயா தொடர்பான ஏனைய வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பு ரத்தாகியிருப்பதை எடுத்துக் கூறுகிறார். அவாளுக்கான நலனென்று வரும் போது தர்க்கம் பயங்கரமாக உருவெடுக்கிறது.
சட்டத்தின் முடிவு இதுவென்றால் அரசியலில் ஜெயாவுக்கு எந்த குறையும் வராது என்று சத்தியமடிக்கிறார். திமுகவின் 2ஜி விவகாரத்தை பார்த்து மக்கள் ஜெயா மீது மிகுந்த அனுதாபம் கொண்டிருக்கின்றனர் என்றும் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்.
இருப்பினும் ஓ. பன்னீர் செல்வத்தின் அரசு அவர் ஆசீர்வதிக்கும் அம்முவின் அரசு போல இருக்காது என்று சிறு சந்தேகம் மனதில் தொக்கி நிற்கிறது. அதனால், திமுகவின் மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பினை கணக்கில் கொண்டு புதிய அரசு ஜெயா வழிகாட்டுதலில் ஒழுங்காக நடந்தால் கருணாநிதி, ஸ்டாலினுக்கு செல்வாக்கு வரவே வராது என்று உபதேசிக்கிறார்.
இல்லையென்றால் என்ன நடக்கும்? அப்போதும் கூட ஜெயலலிதாவின் பின்னடைவை விட தமிழக அரசியல் எதிர்காலம் சோதனைக்குள்ளாகிவிடும் என்று கவலைப்படுகிறார். அதாவது ஜெயா குற்றவாளி என்று தண்டனை பெற்று வரும் அரசியல் சூழலால் திமுக வளர்ந்து விட்டால் அதுதான் சோதனையாம்.
மருமகள் உடைத்தால் மண்குடம் பொன்குடமாகும் சங்கதியேல்லாம் அழுகை டிவி சீரியல்களில்தான் வரவேண்டுமென்பதில்லை. அறிஞர் சோவின் அட்வைசில் கூட வரலாம்.
ஜெயாவுக்காக இடுப்பை ஒடித்து வணங்கும் அடிமை அமைச்சர் கூட்டம் போலல்லாமல் சோ போன்ற சாணக்கியர்கள் மண்டையை உடைக்காமலேயே சட்ட நுணுக்கங்களை நேர்மறை ஒழுக்கங்களாக மாற்றுவதற்கு சளைக்காமல் முயல்கிறார்கள்.
“தண்டனை பெற்றால் உடனடி பதவி இழப்பு என்ற விதிமுறை சட்டத்தில் இல்லை; சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் இந்த நிலையைத் தோற்றுவித்திருக்கிறது;….” என்று ஜெயாவின் பதவி இழப்புக்கு ஒரு லா பாயிண்டை கீழே எடுத்து வைக்கிறார் சோ.
“…இந்த மாதிரி குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகத்தான், எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்களுக்கு, அப்பீல் செய்வதற்காக மூன்று மாத அவகாசத்தை மக்கள் பிரிதிநிதித்துவச் சட்டத்தின் 8-ஆவது பிரிவின், ஒரு உட்பிரிவு அளிக்கிறது. அது செல்லுபடியாகாது என்ற சப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, குழப்பத்திற்கும், சிக்கல்களுக்கும் வழி வகுக்கக் கூடியது” என்று 14 மாதங்களுக்கு முன்னர், 24.07.2014 தேதியிட்ட துக்ளக் தலையங்கத்தில் எழுதியதை இப்போது நினைவு கூர்கிறார் சோ.
வழக்கமாக “அன்றே சொன்னேன் இன்று பலித்தது” என்று பெருமை பேசும் பாணியில் கூறப்பட்டிருந்தாலும் இதை கொஞ்சம் சீர்தூக்கி பார்த்தால் சோ நமக்கு மொட்டை அடிக்க முயல்வது நன்கு புரியும்.
96-ம் ஆண்டில் போடப்பட்ட வழக்கு 2013 வாக்கில் முடிவை நோக்கி நெருங்குகிறது. ஒருக்கால் அம்முவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் என்ன செய்வது என்று அய்யர் பரிதவிக்கிறார். அப்போது பார்த்து உச்சநீதிமன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8-வது பிரிவின் ஒரு உட்பிரிவு செல்லுபடியாகாது என்ற தீர்ப்பு வருகிறது.
உடனே பரப்பன அக்ரஹாரத்தின் தீர்ப்பு தரும் விளைவுகள் சோவின் மண்டையினுள் இறங்கி எச்சரிக்கையாக லா பாயிண்டை எடுத்து முன்வைக்கிறது. ஆக உச்சநீதிமன்றத்தில் அந்த குழப்பம்தான் இன்று ஜெயாவின் பதவியை பறித்திருக்கிறது என்று மதியூக்த்துடன் அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
ஆனாலும் மானங்கெட்டு பேசுவதெல்லாம் மதியூகம் என்று நம்பும் கூட்டம் இருக்கும் போது மொட்டை சோவிடம் இல்லை, அவரை நம்புவர்களிடம் இருக்கிறது என்றே நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்!
‘அம்மா’வின் அடிமைகள் அமைச்சர்கள் என்ற பெயரில் இடுப்பு வளைந்து, தலை தாழ்ந்து, கண்கள் பனிக்க, இதயம் துடிக்க ஜெயலலிதாவின் வீட்டு வாயிலில், கோட்டையின் முகப்பில், விமான நிலைய ஓடுகளத்தில் தவித்திருப்பது உலகப் பிரசித்தம். அப்பேற்பட்ட அடிமைகளில் ஏக், தோ, தீன் என்ற எண் படி பேதம் இல்லை.
அடிமைத்தனம் ஒன்றென்றாலும் அமைச்சர்கள் என்று வரும் போது தர வரிசை இருந்தாக வேண்டும். இந்த மரபு இல்லையென்றால் ஓபியோ இல்லை, சொர்ணாக்கா வளர்மதியோ அனைவரும் முடுக்காமலே படியும் விளையாட்டு பொம்மைகள்தான். அதிலும் அடிமைத்தனம் எனும் பாட்டரி சார்ஜர் காலியாகாமல் நீண்டகாலம் ஓடுபவர் ஓ. பன்னீர் செல்வம்.
சொத்துக் குவிப்பு வழக்கின் நெடிய பயணத்தில் சசிகலா நடராஜன் ஏதும் சதி செய்து கட்சியை உடைத்து ஆட்சியை கைப்பற்றி விடுவாரா எனும் பயம் ஜெவுக்கு எப்போதும் உண்டு. மன்னார்குடி கும்பலின் மீது வழக்கு போட்டு அடக்கி வைத்த போது வேறு வழியின்றி ஓ. பன்னீர் செல்வம் நம்பிக்கை வாலாட்டுவதில் நம்பகமானவராக ஏற்கப்பட்டார்.
2001 டான்சி வழக்கு தீர்ப்பை ஒட்டி ஜெ பதவி விலகியுதும், அடுத்த ஆறு மாதங்களுக்கு ஓ.பி முதலமைச்சராக பதவியேற்று முடித்தார். அடிமைகள் ஆள்பவர்களாக நியமிக்கப்பட்டால் அதுவும் ஆண்டானின் காலத்திலேயே அரியணையில் அமர்ந்தால் அது அவர்களுக்கு தண்டனைக்காலமே ஒழிய பெருமைக்குரியது அல்ல.
தற்போதும் அந்த தண்டனைக் காலம் சீசன் 2 வாக வந்திருக்கிறது. அம்மா பரப்பன அக்ரகாரா சிறையில் சிக்கியிருக்கும் போது, அடிமை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.
நல்லது, இப்பேர்பட்ட ஓ.பிக்கு யாராவது வாழ்த்து சொன்னால் அதை என்ன சொல்வது?
ஆம், தினமணி ஆசிரியர் வைத்தி 29.09.2014 தேதியிட்ட தலையங்கத்தில் “விசுவாசமும் நம்பிக்கையும்” என்ற தலைப்பில் நாளிதழ் சார்பாக ஓபிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
ஓட்டப் பந்தயத்தில் ஒருவன் ஓடி வந்து வெற்றி பெற்றால் அதை வாழ்த்தலாம். மாறாக ஓட்டப் பந்தயத்திற்கு புரவலராக இருப்பவன் முடிவு செய்து ஓடாத ஒருவனை வெற்றி பெற்றவன் என்று நியமித்து அதையும் சிலர் பதக்கம் கொடுத்து பாராட்டினால் ஓட்டங்களை தாங்கும் பூமித்தாய் எரிமலையாக வெடிக்க மாட்டாளா?
ஓபி, மக்கள் செல்வாக்கிலோ இல்லை ஜனநாயக முறையிலோ முதலமைச்சராக பதவியேற்கவில்லை. இது வைத்திக்கும் தெரியும். அதனால்தான் ஜெயா வழிகாட்டுதல் படி ஆகியிருக்கிறார் என்று சொல்லி விட்டு, அத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கையை அம்மாவிடம் ஏற்படுத்தியிருக்கிறார் என்று வியக்கிறார். பாம்பின் கால் பாம்பறியும். என்ன முன்னது சாதா பாம்பு, பின்னது ஸ்பெசலான நல்ல பாம்பு!
ஆக, தினமணியின் தொலை நோக்கு நெறி முறைப்படி அம்மாவிடம் விசுவாசமாக இருப்பதே பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் போதுமானது. ஆனாலும் ஓபி போன்ற கட்சி அடிமைகளை விட வைத்தி போன்ற ஊடக அடிமைகளுக்குத்தான் ‘அம்மாவிடம்’ விசுவாசம் ஜாஸ்தி!
அந்த விசுவாசத்தை அடுத்து விளக்குகிறார் வைத்தி. சொத்துக் குவிப்பு வழக்கை 2 கோணங்களில் அணுக வேண்டுமாம். கோணம் ஒன்றின் படி, பொது வாழ்க்கையில் இருப்போர் நேர்மை, தூய்மை கடைபிடித்து சட்டத்தின் முன் சமமாக பார்க்கப்பட்டு, தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டுமாம். இதை தார்மீக கோணம் என்று யாருக்கும் நோகாமல் வகுப்பெடுக்கிறார் வைத்தி.
ஒருக்கால் இதன் உள்ளர்த்தம் பிடிபடாமல், அம்மாவை ‘கண்டிக்கிறாரோ’ என்று சந்தேகம் வந்தால் அடுத்து தெளிவாக்குகிறார். அதாவது இந்த வழக்கின் இறுதி முடிவு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தோடு முடியாதாம். உயர்-உச்சம் என்று டெல்லி வரை தீர்ப்பு வந்தால்தான் ஐயா கருத்து சொல்வாராம். ஒரு சாதாரண கீழ் கோர்ட்டு சொல்வதையெல்லாம் உயர்தரமான அறிஞர்கள் ஏற்பது அபச்சாரமில்லையா?
கீழ் கோர்ட்டை விடுங்கள், போலிசு ஒரு அப்பாவி முசுலீமை கைது செய்து பாக் சதி, ஐ.எஸ்.ஐ பீதி என்று சரடு விடும் போது இதே உச்சநீதிமன்ற அணுகுமுறையை கடைபிடிக்காமல் ஏட்டையாவின் எஃப்.ஐ.ஆர் கதையை ஏற்பது ஏன்? அல்லது ராஜபக்சேதான் சட்டப்படி குற்றவாளி என்று எங்காவது நிரூபிக்கப்பட்டிருக்கிறாரா? ஒரே குற்றத்திற்கு அவாளுக்கு பரிகாரம், மற்றவாளுக்கு தண்டனையென்ற நீதி மனுவின் காலத்தில் மட்டுமல்ல தினமணியின் தலையங்க ‘காலத்திலும்’ நீடிக்கிறது.
ஒருக்கால் உச்சநீதிமன்றமும் அப்படி முடிவெடுத்து விட்டால் என்ன செய்வது? அதையும் முன்யூகித்து இப்போதே தீர்ப்பை எழுதிவிட்டார் ஆசிரியர் வைத்தி. அதாவது குற்றங்கள் மிகைப்படுத்தப்பட்டு, சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டு, ஜெயாவின் அரசியல் வாழ்க்கையை முடிக்கும் முனைப்புடன் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாக ஜெயா தரப்பு வழக்கறிஞர்கள் கூறுவதை தள்ளிவிட முடியாதாம். இதயத்தில் உணர்ச்சியாகவும், சட்டைப் பையில் கருத்தாகவும் வைத்திருக்கும் இந்த நீதியை இவர் தள்ளுவார் என்று டாஸ்மாக்கில் தள்ளாடும் குடிமகன் கூட நம்பமாட்டானே?
அதாவது இந்த பொய்வழக்கின் செட்டப்புகளை நம்புமாறு நீதிபதி குன்ஹா நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். இல்லையென்றால் இப்படியொரு தீர்ப்பை எழுதும் நிலைக்கு அவர் வந்திருக்கமாட்டார். எந்த நீதிபதியாவது, “இந்த வழக்கில் குற்றவாளி குற்றம் செய்யவில்லை. ஆனால் சாட்சியங்கள், சூழல் காரணமாக அவர் குற்றம் செய்திருப்பார் என்று சொல்லியாக வேண்டியிருக்கிறது. அந்த சாட்சியங்களை பொய் சாட்சியங்கள் என்று விசாரித்து நிரூபிப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை. ஆகவே தண்டனை அளிக்கிறேன்” என்று சொல்லுவாரா?
இப்படி பினாத்துவதற்கு பதில் “எந்த விசாரணைக்கும் அப்பாற்ட்டவர் ஜெயா” என்று நேரடியாக சொல்லலாமே? இன்னும் சில நாட்களில் தீர்ப்பு மற்றும் தண்டனை மீது தடையுத்தரவு பெற்று பிணையில் ஜெயா வந்து விடுவார் என்று வைத்தி எதிர்பார்க்கிறாராம். ‘அம்மாவிற்கு’ வந்த சோதனைக்காலம் சடுதியில் போய்விடும் என்று இடுப்பொடிய வணங்கும் அதிமுக அடிமைகளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறாராம்.
ஒரு சிலநாட்களில் ஜெயா வந்துவிடுவார் என்று பெரிய அப்பாடக்கர் போல லா பாயிண்டு எடுத்து விடும் வைத்தி, இந்த வழக்கை 18 ஆண்டுகளாக வாய்தா ராணி பட்டமே வாங்கி இழுத்து இழுத்து நீதித்துறையை சித்ரவதை செய்ததை என்ன சொல்வார்? ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒரு அப்பாவிப் பெண்ணின் உரிமைப் போராட்டம் என்று கவி பாடுவாரா?
ஒருக்கால் ஜெயா பிணையில் வந்தாலும், ஓபியின் தண்டனைக்கு பிணை இல்லை. அதனால் முதலமைச்சர் பதவியில் அம்மா அமர முடியாது. கட்சித் தலைவராக இருந்து கொண்டு அவரது வழிகாட்டுதலின் படி ஓ. பன்னீர் செல்வத்தின் மூலம் ஆட்சி நடத்தியாக வேண்டும் என்று புலம்புகிறார். நன்றாக கவனியுங்கள், ஓபி மூலம் ஆட்சி நடத்த வேண்டும் என்று இதே வைத்தி தனது கைப்பட எழுதியிருக்கிறார் என்றால் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி என்று இவர்கள் சோனியாவை கேள்வி கேட்டதும், மன்மோகனை கேலி செய்ததும் என்னய்யா நியாயம்?
ஆக, ஒரு குற்றவாளி குற்றம் செய்து பதவி இழந்து ஒரு அடிமை மூலம் ஆட்சி நடத்தலாம் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் எழுதுகிறார் என்றால் அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்குமா, பாசிசம் பூக்குமா?
அடுத்து, ஜெயாவின் இந்த விதிவசத்தால் மற்ற எதிர்க்கட்சிகளுக்கு பயனேதும் இல்லை, அதிமுகவிற்கு இது எந்த பின்னடைவையும் ஏற்படுத்தி விடாது என்று ஜால்ராவையே மாபெரும் அரசியல் ஆய்வாக முன்வைக்கிறார் வைத்தி.
சோற்றில் உப்பு போட்டு தின்பவராக இருந்தால், ஒரு ஊழல் குற்றவாளி தண்டிக்கப்பட்டிருந்தாலும் அந்த கட்சி, ஆட்சியை எதிர்த்து மக்களிடம் அரசியல் இயக்கம் நடத்த ஒரு எதிர்க்கட்சிக்கும் துப்பில்லை என்றாவது எழுதியிருக்க வேண்டும். போயஸ் தோட்டத்தின் வாயிற் கதவு அம்மாவுக்கு எதிரானவர்களை உள்ளே விடாதது போல வைத்தியின் மூளையிலும் அம்மாவுக்கு எதிரான எதுவும் இல்லை.
போபர்ஸ், 2ஜி, நிலக்கரி போன்ற பல லட்சம் கோடி ஊழல் வழக்குகளோடு ஒப்பிட்டால் இந்த 66 கோடி ஒரு பொருட்டே இல்லை என்று பொதுமக்கள் நினைப்பதால் ஜெயாவுக்கு அனுதாப அலை பொங்கி வழிகிறதாம். அதனால் மேல் முறையீட்டில் விடுவிக்கப்பட்டு அடுத்த முதல்வராகி, கருணாநிதி போல 5 முறை முதல்வராக இருக்கும் சாதனையை சமன் செய்வார் ஜெயா என்று ஆசீர்வாதமும் செய்கிறார் வைத்தி. ஜெயா சசி கும்பலின் இன்றைய சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடியில்லையா? தேர்தல் செலவுகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அதிமுக பெற்றது ஏழை தொண்டனிடம் பெற்ற நன்கொடையிலா?
பரப்பன அக்ரஹாரத்தில் அமர்ந்து கொண்டு கட்சிக்காரர்களையும், ஓபி போன்ற ஸ்பெசல் அடிமைகளையும் தவிர்த்துவிட்டு அவருக்கு வழங்கப்படும் நாளிதழ்களை ஜெயா படிக்கிறாராம்.
அந்த நாளிதழ்களில் தினமணி கண்டிப்பாக இருக்கும். அம்மாவுக்கு எது நல்லதோ அதுவே உண்மையின் உரைகல் என்று வைத்தி விதி வைத்திருக்கும் போது, விதி வசத்தால் ஓபிக்கு போட்டியாக இவரே உருவெடுக்கலாம்.
______________________________________
ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிமுக கும்பலின் வெறியாட்டம் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
காந்தியை பற்றி பாடப்புத்தகங்களிலும் பொதுவிலும் ஆளும்வர்க்க அடிபொடிகளால் சொல்லப்படும் கருத்துக்கள் தான் பொதுவெளியிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. காந்தி உண்ணாவிரதமிருந்தார், ராட்டை சுற்றினார் என்று மாணவர்களுக்கு, அஹிம்சை போதித்தார், சத்யாகிரகம் செய்தார், உண்ணாவிரதம் இருந்தார் என்றெல்லாம் வகுப்பெடுக்கப்படுகின்றது.
உண்ணாவிரதமிருந்தார் தான் ஆனால் யாருடைய நலனுக்காக? காந்தி போராடினாரா? போராட்டத்தை காட்டிக்கொடுத்தாரா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை பறிப்பதற்காக அம்பேத்கரை எதிர்த்து ஏன் உண்ணாவிரதமிருந்தார்? சாதி பற்றிய காந்தியின் கருத்து என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியது அவசியம்.
காந்தி பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் உண்மையானதா? என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தலைவர்களின் எழுத்திலும் பேச்சிலும் பார்க்கலாம். குறிப்பாக பார்பன இந்துமதத்தின் சாதிமுறைக்கு எதிராக இறுதிவரை போராடிய பெரியார், அம்பேத்கரின் எழுத்துக்களில் இருந்து தெரிந்து கொள்வதற்கு ஏராளமிருக்கின்றன.
காந்தி யாருக்கான தலைவர்?
பிரிட்டிஷாரை எதிர்த்த காந்தியின் போராட்ட நோக்கத்தை அம்பலப்படுத்துகிறார் பெரியார். ராஜாக்கள், ஜமீன்தார்கள், முதலாளிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் போராட்டத்தை கட்டியமைத்தவர் தான் காந்தி. பொதுவுடைமை கொள்கை செல்வாக்கு பெறாமல் இருப்பதற்காக காந்தியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய தேவை ஆங்கில அரசுக்கும், இந்திய முதலாளிகளுக்கும், ஜமீன்தார்களுக்கும், பார்ப்பன ஆதிக்க சாதிகளுக்கும் இருந்தது. அந்த புரவலர்களின் உதவியால் காந்தி மக்களை கட்டி போட்டதையும் முக்கியமாக அவரே இதை ஒப்புக்கொண்டதையும் அம்பலப்படுத்துகிறார் பெரியார்.
இதோ காந்தி பற்றி பெரியாரின் சில கருத்துக்கள்:
“கடைசியாக என்ன நடந்தது? என்பதை சற்று சிந்திப்போம். முதல் மூச்சு (உப்பு) சத்தியாக்கிரகமானது பம்பாய் மில் முதலாளிகளினுடைய பண உதவியாலும், பார்ப்பனர்களுடைய பத்திரிகையின் உதவியாலும், பிரசார உதவியாலும் பதினாயிரக்கணக்கான மக்களை ஜெயிலுக்கு அனுப்ப முடிந்தும், கடைசியாக எதை எதிர்த்து சத்தியாக்கிரகம் துடங்கப்பட்டதோ அதிலேயே (சைமன் கமிஷனின் வட்டமேஜை மகாநாட்டிலேயே) தானாகவே போய் கலந்து கொள்ளுகிறது என்கின்ற நிபந்தனையின் மீது ராஜியாகியே எல்லோரும் ஜெயிலில் இருந்து வெளிவரவேண்டியதாயிற்று.
அதாவது “சட்ட மறுப்பை நிறுத்திக் கொள்ளுகிறேன், ராஜாக்களும் மகாராஜாக்களும் ஜமீன்தாரர்களும், முதலாளிமார்களுமாய் 100க்கு 90 பேர் கூடிப்பேசி இந்தியாவின் அரசியல் சுதந்திரங்களைத் தீர்மானிக்கப்போகும் வட்ட மேஜை மகாநாட்டில் நானும் கலந்து கொள்ளுகிறேன், அதுவும் அவர்களுடைய நிலைமைக்கு அதாவது அந்த ராஜாக்கள், மகாராஜாக்கள், ஜமீன்தாரர்கள் முதலாளிமார்களுடைய இன்றைய நிலைமைக்கு எவ்வித குறைவும் ஏற்படாதபடி தீர்மானிக்கப்போகும் கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறேன்” என்பதாக ஒப்புக்கொண்டு “ராஜாஜி” பேசித்தான் ஜெயிலில் இருந்து விடுதலை யாக வேண்டியிருந்தது.
……புதிய சீர்திருத்தம் என்பது அதன்பாட்டுக்கு தானாகவே சைமன் கமிஷன் தீர்மானித்தபடி அல்லது ஒரு வழியில் சற்று அதிகமானால் மற்றொரு வழியில் சற்று குறைந்து ஏதோ ஒரு வழியில் அரசாங்கத்தாருக்கும் முதலாளிமார்களுக்கும் சுதேச ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், பெரிய உத்தியோ கஸ்தர்கள், பார்ப்பனர்கள் ஆகியவர்களுக்கும் எவ்வித மாறுதலும் குறைவும் இல்லாமலும் அவர்களுக்கு என்றென்றைக்கும் எவ்வித குறையும் மாறுதலும் ஏற்பட முடியா மலும் ஒரு சீர்திருத்தம் வரப்போகின்றது – வந்தாய் விட்டது என்பது உறுதி.
இந்த சீர்திருத்தமானது பெரிதும் பணக்காரக் கூட்டமும், சோம்பேறிக் கூட்டமுமே நடத்திவைக்கத் தகுந்த மாதிரிக்கு இப்பொழுதிருந்தே பிரசாரங்கள் நடந்தும் வருகின்றன. ஆகவே ஏதோ ஒரு வழியில் அந்த வேலை முடிந்து விட்டது. இனி இந்த நிலையில் அரசியல் மூலம் ஏழைகளுக்கு ஏதாவது ஒரு சிறு பலனாவது உண்டாகும் என்று சொல்வதற்கில்லை.
இப்படி யெல்லாம் முடிந்ததற்கு ஏதாவது ஒரு இரகசியம் இருந்துதான் ஆகவேண்டும்.அந்த ரகசியம் என்ன?என்பதுதான் இந்த தலையங்கத்தின் கருத்து.
இவ்விதக் கிளர்ச்சிகளையெல்லாம் காங்கிரசின் பேரால் காந்தியவர்கள் சென்ற இரண்டு வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த காலத்திலேயே இதை (இந்த சட்ட மறுப்பு உப்பு சத்தியாக்கிரகம்) எதற்காக ஆரம்பிக்கின்றேன் தெரியுமா? என்று சர்க்காருக்கும் மற்றும் முதலாளிமாருக்கும், உயர்ந்த ஜாதியாராகிய சோம்பேறிக் கூட்டங்களுக்கும் தெரியும்படியாக, ஒரு விளம்பரம் வெளிப்படுத்தி இருக்கிறார். அவ்விளம்பரம் என்ன என்று ஞாபகப் படுத்திப் பார்த்தால் இதன் இரகசியம் இன்னதென்று விளங்கிவிடும்.அதென்னவென்றால்,
“நான் இன்று இந்தக்கிளர்ச்சி (உப்பு சத்தியாக்கிரகம்) ஆரம்பிக்கா விட்டால் இந்தியாவில் பொது உடமைக்கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். ஆகையால் (அதை அடக்கவும் மக்கள் கவனத்தை அதில் செல்லவிடாதபடி வேறு பக்கத்தில் திருப்பவும்) இதை (உப்பு சத்தியாக்கிரகத்தை) ஆரம்பிக்கின்றேன்” என்று சொல்லியிருக்கிறார்.
அன்றியும் இவ்வித கிளர்ச்சிகளால் சர்க்காருக்கு ஏதாவது கெடுதி ஏற்பட்டதா அல்லது அவர்களின் நிலைமைக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா என்று பார்த்தால் யாதொரு குறைவும் ஏற்பட்டுவிடவில்லை. அதுபோலவே தோழர் காந்திக்கும் ஏதாவது கெடுதியோ குறைவோ ஏற்பட்டதா என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறிதுமில்லை. அதற்கு பதிலாக காந்திக்கு உலகப் பிரசித்தமான பெரிய பேர் ஏற்பட்டு விட்டது. உலகத்திலுள்ள பாதிரிகளும் செல்வவான்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் புகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறார்கள். காந்தியவர்கள் சிறைப்பட்டதிலாவது அவருக்கு ஏதேனும் கெடுதி ஏற்பட்டதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. சிறையில் அவருக்கு ராஜபோகத்தில் குறைவில்லை.
அவருடைய உபதேசத்தைக் கேட்க ஜெயில் வாசற்படியில் எப்போதும் ஆயிரக்கணக்கான பேரும் அவருடைய தரிசனையைப் பார்க்க எப்போதும் பதினாயிரக்கணக்கான பேரும் நின்ற வண்ணமாய் இருந்ததோடு இருக்கிறதோடு இந்தியாவிலுள்ள முதலாளித்தன்மை கொண்ட பத்திரிகைகள் எல்லாம் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் அரைவாசிப் பாகத்துக்கு மேலாகவே காந்தியின் புகழும், அவரது திருவிளையாடல்களும், அவரது உபதேசங்களுமாகவே நிரப்பப்படுகின்றன. அவரது அத்தியந்த சிஷ்யர் களுக்கும் யாதொரு குறைவுமில்லை. சென்ற விடமெல்லாம் சிறப்புடனே பதினாயிரக் கணக்கான கூட்ட மத்தியில் வரவேற்று உபதேசம் கேட்கப் படுவதாகவேயிருக்கின்றன. காந்தி அவர்களது குடும்பத்துக்கும் யாதொரு குறைவும் இல்லை. அவர்களுக்கும் அது போலவே நடைபெறுகின்றன.
ஆனால் போலீசார் கைத்தடியால் அடிபட்டு உதைபட்டு அறைபட்டு மயங்கிக் கிடந்தவர்களுக்கும், காயப்பட்டவர்களுக்கும், சிறையில் சென்று கஷ்டப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது? என்று பாருங்கள். ஜெயிலிலும் பணக்காரனுக்கும் சோம்பேறிகளுக்கும் ஏ.பி. வகுப்புகளும் பாடுபடுகின்ற கூட்டத்திற்கு சி. வகுப்புமாய்த்தான் இருந்தது. (இதற்காக தோழர் காந்தி ஒரு நேரம் பட்டினி இருந்திருப்பாரானால் ஜெயிலிலும் இந்தக்கொடுமை இருந்திருக்க முடியுமா? அதுவேறு சங்கதி) ஆகவே ஒரு அறிவாளி நடுநிலைமையாளி இந்த சுமார் 2வருஷ காலமாக இந்தியாவில் நடைபெற்ற காந்தி திருவிளையாடல்களை நன்றாய் கூர்ந்து கவனித்து இருப்பானே யானால் தோழர் காந்தி பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு என்று சொல்லப்படும் முதலாளி ஆதிக்கத்திற்கு ஒரு ஒற்றராக கவர்ன்மெண்டாருடைய ஒரு இரகசிய அனுகூலியாக இருந்து வந்தவர் என்றும் ஏழை மக்கள் சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு துரோகியாய் இருந்து வந்திருக்கிறார் என்றும் சொல்ல வேண்டுமே ஒழிய வேறு ஏதாவது சொல்லமுடியுமா? என்று கேட்கின்றோம்.
பணக்காரனும் சோம்பேறியும் காந்தியை புகழ்கின்றான். வெளிநாட்டுப் பாதிரியும் பணக்காரனும் ஆதிக்கத்தில் இருப்பவனும் காந்தியைப் புகழ்கின்றான். சர்க்காரும் அவருக்கு மரியாதை காட்டுவதுடன் அவருக்கு இன்னமும் அதிக செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட வேண்டிய தந்திரங்களை யெல்லாம் பாமர ஜனங்களுக்கு தெரியாமல் படிக்கு செய்து கொண்டும் வருகின்றன.
இவைகளைப் பார்த்தால் எந்த மூடனுக்கும் இதில் ஏதோ இரகசியமிருக்க வேண்டும் என்று புலப்பட்டு விடும்.
ஏனெனில், நாளைய தினம் தோழர் காந்தியவர்கள் “இந்த சர்க்காரோடு நான் ஒத்துழைக்க வேண்டியவனாகி விட்டேன். ஏனெனில் சட்டசபைகள் மூலம் அனேக காரியங்கள் ஆக வேண்டியிருக்கின்றது. ஆதலால் ஒத்துழையுங்கள் இல்லா விட்டால் பொது உடமைக்காரரும் சமதர்மக்காரரும் சட்ட சபையைக் கைப்பற்றி தேசத்தை – மனித சமூகத்தை பாழாக்கி விடுவார்கள்.” என்று (மதராஸ் காங்கிரசுக்காரர் “ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க சட்ட சபைக்கு போய் மந்திரிகளை ஆதரிக்க வேண்டியிருந்தது” என்று சொன்னது போல்) சொல்லுவாரேயானால் (சொல்லப் போகிறார்) அப்போது ஜனங்கள்– பாமர ஜனங்கள் யாதொரு முணு முணுப்பும் இல்லாமல் உடனே கீழ்படிவ தற்குத் தகுந்த அளவு காந்திக்கு எவ்வளவு செல்வாக்கும் பெருமையும் வேண்டுமோ அவ்வளவும் ஏற்படுத்த வேண்டியது இன்று சர்க்கார் கடமையாய் இருந்து வருகின்றது.
இவ்வளவோடு நிற்கவில்லை காந்தியின் புண்ணிய கைங்கரியம். மற்றும் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாகிய உழைப்பாளிகளான தீண்டாத வகுப்பார் என்பவர்கள் எப்படியோ முன்னுக்கு வருவதான ஒரு வழியை அடைந்தவுடன் அவர்களையும் என்றென்றும் உழைப்பாளிகளாகவே ஊராருக்காக கஷ்டப்படும் மக்களாகவே இருக்கும்படியான மாதிரிக்கு அவர்களை ஹரிஜனங்கள் என்னும் பேரால் ஒரு நிரந்தர ஜாதியாராக்கி வைக்கவேண்டிய ஏற்பாடுகளும் நடக்கின்றன. அதைப்பற்றி தோழர் அம்பெத்காரின் அறிக்கையும்-காந்தியாரின் மறுமொழியும் தமிழ்நாடு பத்திரிகையின் தலையங்கமும் ஆகிய சுருக்கங்களை மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அதைப்பார்த்தால் ஒரு அளவுக்கு விளங்கும்.
காந்தியாரின் சுயராஜ்ஜியக் கொள்கைகளில் முக்கியமானது வருணாச் சிரமதர்மமும், ஜாதிமுறையும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதாகும். ‘காந்தியின் வருணாச்சிரம கொள்கைக்கு வேறு அருத்தம்’ என்று சிலர் சொல்லுவதானாலும் அந்த வேறு அர்த்தம் இன்னது என்பதை காந்தியாரே பல தடவை சொல்லியிருக்கிறார் அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு வருணம் பிறவியில் உண்டு என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் முறையே அறிவு பலம் வியாபாரம் சரரத்தினால் உழைப்பு ஆகியவைகளிலேயே ஈடுபடவேண்டியவர்கள் என்றும் சொல்லுகிறார். ஜாதி முறைக்கும் காந்தியார் கூறும் தத்துவார்த்தமானது தொழில்களுக்காக ஜாதிமுறை ஏற்பட்டதென்றும் அந்த ஜாதி முறையும் பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அந்தந்த ஜாதியானுக்கு ஒரு பிறவித் தொழில் உண்டென்றும் அந்தந்தத் தொழிலையே-அவனவன் ஜாதிக்கு ஏற்ற தொழிலையே அவனவன் செய்து தீர வேண்டும் என்றும் சொல்லுகின்றார்.
இவ்வளவோடு மாத்திரமல்லாமல் “இந்தமாதிரியான வருணாச்சிரம மர்ம முறையையும், ஜாதி முறையையும் நிலைநிறுத்தவே சுயராஜ்ஜியத்திற்கு பாடுபடுகிறேன்” என்றும் கூறுகிறார். இந்த முறையில் காந்தியாரால் யாருக்கு லாபம் யாருக்கு சுகம் என்பதையும் யாருக்கு நஷ்டம், யாருக்கு கஷ்டம் என்பதையும் வாசகர்களையே சிந்தித்துப் பார்த்து முடிவு செய்துகொள்ளும்படி விட்டுவிடுகின்றோம். ஆகையால் காந்தியாரின் அரசியல் கிளர்ச்சியின் ரகசியமும் தீண்டாமை விலக்கு கிளர்ச்சியின் ரகிசியமும் இப்போதாவது மக்களுக்கு வெளியிட்டதா இல்லையா என்று கேட்கிறோம். தலையங்கம் நீண்டுவிட்டதால் வருணாச் சிரமத்தைப்பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.
குடி அரசு – தலையங்கம் ரகசியம் வெளிப்பட்டதா- 19.02.1933
காந்தியின் இரட்டை நாக்கு பற்றி
ஆளும வர்க்க நலனை காப்பாற்றி வந்த காந்தி ஆளும் வர்க்க நலனில் எந்த துரும்பு விழுவதையும் அனுமதிக்கவில்லை.இதற்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசுவது போல பேசி அதை ஆளும் வர்க்க நலனுக்கு திருப்பிவிட்டார். இதை பெரியார் அவருக்கே உரிய பாணியில் நேரு பற்றிய ஒரு சம்பவம் மூலம் அம்பலபடுத்துகிறார்.
நேரு ஒரு லண்டன் நிருபருக்கு அளித்த பேட்டியில் பொதுவுடைமை கொள்கையை தான் ஆதரிப்பதாகவும் ஆனால் இப்போது ஜனங்கள் எல்லோரும் பொதுவுடைமை எனக் கருதும் கொள்கையை தான் ஆதரிக்கவில்லை என்றும் அத்தகைய பொதுவுடைமை கட்சியை தான் சேர்ந்தவன் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்ததை சுட்டி காட்டி பின்வருமாறு எழுதுகிறார் தந்தை பெரியார்.
நேரு, காந்தி, பட்டேல்
“இது உண்மையானால் தோழர் ஜவஹர்லாலுக்கு இந்த குணம் காந்தியாரின் சகவாசத்தால் ஏற்பட்ட குணம் என்று தான் சொல்ல வேண்டும். தோழர் காந்தியார் தான் இரு கூட்டத்தாடையும் நல்ல பிள்ளையாவதற்கு இவ்வித தந்திர மொழிகள் கூறி இரு கட்சியாரையும் ஏமாற்றி பெருமை அடைவதை அனுசரித்து வருகிறார். உதாரணமாக
“வர்ணாசிரம தர்மம் வேண்டும் அனால் எனது வர்ணாசிரமம் வேறு” என்பார்,
“ராம ராஜ்யத்க்காக நான் பாடுபடுகிறேன் ஆனால் எனது ராமன் வேறு” என்பார்
“ஜாதி பாகுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் ஜாதி என்பதற்கு எனது கருத்து வேறு” என்பார்,
“ராஜாக்கள்,ஜமீன்தார்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஏழைகளுக்காக இருக்கவேண்டும்” என்பார்,
“பிரிட்டிஷாருக்கு இந்திய அரசியலில் சில பாதுகாப்புகள் இருக்க வேண்டு. ஆனால் அது இந்தியாவின் நன்மைக்காக இருக்க வேண்டும்” என்பார்,
“ஏழைகள், தொழிலாளர்கள் ஷேமமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பெட்டியில் பணம் இருக்க கூடாது” என்பார்,
“தீண்டாமை ஒழிய வேண்டும் .ஆனால் தீண்டப்படாதவரகள் சூத்திரர்களுக்கு சமானமாய் கருதப்படவேண்டு” என்பார்,
தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலுக்குள் சமஉரிமை இருக்க வேண்டும். ஆனால் கோவிலுக்குள் சூத்திரர்கள் இருக்கும் இடத்தில் தான் அவர்கள் இருக்க வேண்டு” என்பார்
இந்தப்படி எந்த விசயமானாலும் “ஆனால்” போட்டு திருப்பிவிடுவது அவரது சாமர்த்தியம் என்பதை தோழர் காந்தியாரை ஒரு மனிதர் என்று கருதியிருக்கும் யாவரும் அறிவார்கள்.
– ஜவர்லாலும் பொதுஉடைமையும், புரட்சி – தலையங்கம் – 17.12.1933
நாங்கள் தேசபக்தர்கள் ஆனால் பன்னாட்டு முதலாளிகளுக்கு நாட்டை விற்பது தான் ஒரே வழி, வேலைவாய்ப்பை பெருக்குவோம் ஆனால் அடிமையாக வேலை செய்யவேண்டும் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவோம் என்றூ இன்று பல வகைகளில் காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகள் காந்தியின் வாரிசுகளாக மக்களை தாக்கி கொண்டிருக்கிறார்கள்.
காந்தியின் சமகாலத்திலேயே கூட காந்தி ஜெயந்தியை கொண்டாடியிருக்கிறார்கள். அதை குறித்தும் பெரியர் எழுதியிருக்கிறார். காந்தியின் பார்ப்பனிய வர்ணாசிரம் ஆதரவு கருத்துகளை தொகுத்து கூறிவிட்டு, சுயமரியாதை உள்ள எவனும் காந்தி ஜெயந்தி கொண்டாட மாட்டான் என்கிறார் பெரியார்.
காந்தி ஜெயந்தி பற்றி பெரியார்
“கிருஷ்ண ஜெயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜெயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு அநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன.
……அன்றியும் மனித சமூகத்திய இயற்கை சக்திகளையெல்லாம் பாழாக்கி இயற்கையான வழிகளையெல்லாம் அடைத்துச் செல்வவான்களையும், சூட்சிக்காரர்களையும் (பார்ப்பனர்களையும்) சுவாதீனப்படுத்திக் கொண்டு காரியத்துக்கு உதவாத வழிகளில் மக்களைத் திருப்பி மனித சமூகத்தைப் பாழாக்கி வைத்த பெருமையை என்றென்றும் கொண்டாடுவதற்கு அறிகுறியாய் காந்தி ஜெயந்தி வருஷா வருஷம் கொண்டாடுவதென்றால் இதன் அக்கிரமத்திற்கு எப்படித்தான் பரிகாரம் செய்வது என்பது நமக்கு விளங்க வில்லை.
தோழர் காந்தியாருக்கு இன்று ஜெயந்தி கொண்டாடுவதற்கு வேண்டிய யோக்கியதை வந்ததற்குக் காரணம் (இவரால் இதுவரை மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படவில்லை என்றாலும்) பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் இருந்து வந்த காரணமே ஜெயந்தி கொண்டாடும் யோக்கியதையை சம்பாதித்து கொடுத்து விட்டது. நமது நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கும் அபார சூழ்ச்சித் தன்மைக்கும் அற்புத புரட்டுத் தன்மைக்கும் இந்த காந்தி ஜெயந்தி ஒரு பெரும் உதாரணமாகும். இன்று ஜெயந்தி கொண்டாடத்தக்க “பெரியோர்கள்” எல்லாம் இந்த யோக்கியதை அடைந்தவர்கள் தான் என்பதும் விளக்க இது ஒரு உதாரணமாகும்.
கம்ப ராமாயணத்தில் ஆரம்பத்தில் கம்பன் பார்ப்பனர்களுக்குச் சொன்ன காப்பு விருத்தத்தின்படியே தோழர் காந்தியாரும் பார்ப்பனர்களை உயர்த்தி அவர்களுக்கு அடி பணிந்து வந்ததாலேயே இன்று காந்தி ஜெயந்தி நடந்து வருகிறது. அதாவது,
“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும் நீங்கலு நீங்கிலா,
அலகிலா விளையாட்டுடையா ரவர்,
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”
என்ற பாட்டுப்பாடியே தூணைத் துரும்பாக்கவும், துரும்பைத் தூணாக்கவும் உள்ள பார்ப்பன சக்தியில் இன்று எவ்வளவோ காரியங்கள் அஸ்திவாரம் சிறிதுகூட இல்லாமல் நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த காந்தி ஜெயந்தி.
…….தவிர, தோழர் காந்தியாருக்கு ஜெயந்தி கொண்டாடும் விஷயத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கடுகளவு புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ இருந்திருக்குமானால் பார்ப்பனரல்லாதார் இதில் கலந்து கொள்ளமுடியுமா? என்பதை வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்க வேண்டும். ஜாதி பாகுபாடு (வருணாச்சிரமம்) விஷயத்தில் தோழர் காந்தியவர்கள் பார்ப்பனரல்லா தாருக்கு நிரந்தர இழிவை உண்டாக்கி இருக்கும் விஷயமும், ஹரிஜன இயக்கம் என்னும் பேரால் செய்துவரும் சூட்சியும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது. வருணாச்சிரம தர்மத்தை ஆதரிப்பதினாலும் உறுதிப்படுத்துவதினாலும் பார்ப்பனரல்லாதார் நிலை என்னவா கின்றது?
அன்றியும் “ஹரிஜன முன்னேற்ற” விஷயத்தில் காந்தியார் தனது வாக்கு மூலத்தில் குறித்தது என்னவென்றால்,
இது “ஜெயபாரதி” என்னும் பத்திரிகையின் காந்தி ஜெயந்தி மலர் 9-ம் பக்கத்தில் காந்தியாரின் வாழ்க்கைச் சம்பவ நிகழ்ச்சி என்ற தலைப்பின் கீழ் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.
இதைப்பற்றி முன்பு ஒருதடவை எழுதியும் இருக்கிறோம். பார்ப்பனரல்லாத தேசீயவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இரண்டொருவர்கள் இடமும் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் இருக்கிறோம். ஆனால் அவர்கள் தேசம் பெரியதேயொழிய தேசத்தில் தன்னுடைய நிலைமை எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் போலவே காட்டிக் கொண்டார்கள்.
மானத்தை விற்று மனிதத் தன்மையை இழந்து வாழ்ந்து தீரவேண்டிய அளவு சோம்பேறிகளும், கோழைகளுமானவர்களுக்குத் “தேசம் பெரிது” என்கின்ற சாக்கு ஒரு உற்ற தோழனாய் இருந்து வருகின்றது, வந்தும் இருக்கிறது என்று கருதிக்கொண்டு அந்த சம்பாஷணையை நிறுத்திக் கொண்டோம்.
ஆகவே இப்படிப்பட்ட நிலையில் பார்ப்பனரல்லாதவர்களை நிரந்தரமாய் வைக்கப்பாடுபட்ட ஒரு “மகானின்” ஜெயந்திக்குப் பார்ப்பனரல்லாதார் கூடியிருந்து கொண்டாடுவதென்றால் இதற்கு என்னபேர் வைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. விஷயம் இவ்வளவோடு முடியவில்லை. ஏனென்றால் காந்தி ஜெயந்தியை விட மானமற்றதும், இழிவானதும் மடமை யானதுமான ஒரு காரியமாகிய தீபாவளி என்னும் ஒரு பண்டிகையையும் நாளை கொண்டாடப்போகும் சுயமரியாதை அற்ற தன்மை, காந்தி ஜெயந்திக்கு ஒரு உதாரணமாகும்.”
குடியரசு – தலையங்கம் – 15.10.1933
திரு.காந்தியின் உண்மை தோற்றம் – தொழிலாளிகளை எச்சரிக்க்கும் பெரியார்
கிராமவாசிகள் செருப்புத் தைக்க வேண்டுமாம்! ஆடு, மாடுகள் மேய்க்க வேண்டுமாம்! இராட்டினத்தில் நூல் நூற்க வேண்டுமாம்! கைத்தறியில் நெசவு நெய்ய வேண்டுமாம்! ஆனால் பம்பாய்வாசிகள் கோடீஸ்வரர்களாகி, அதற்கு தகுந்த போகபோக்கியங்களை அனுபவிக்க வேண்டுமாம்! இதுதான் சுயராஜ்ஜியத்திட்டமாம்! ஆகவே இந்தப்படியான மனோபாவங் கொண்ட திரு. காந்தியைப் “பாரத நவஜவான்” உண்மை வீரர்கள் “காந்தி ஒழிக!” “காந்தீயம் ஒழிக!!” “காங்கிரஸ் ஒழிக!!!” என்று சொன்னதிலென்ன தப்பிதமிருக்கின்றது?
காந்திக்கு வேண்டுமானால், காந்தீயமென்பதில் நம்பிக்கையிருக்கலாம். ஆனால், நமக்கு இப்படிப் பட்ட காந்தீயம், ஒழிய வேண்டுமா? வேண்டாமா? ஒழியாமல் சமதர்மம் ஏற்படுமா? என்று கேட்கின்றோம். “திரு. காந்தி, இந்தியாவை வெள்ளைக்கார ஆட்சிக்கு முன்னிருந்த பழைய அதாவது ஆதிகாலத்து இந்தியாவுக்குக் கொண்டு போகப்பார்க்கின்றார்”என்று திருவாளர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள் சொன்னதிலென்ன தப்பிதமிருக்கின்றது? என்று கேட்கின்றோம்.
“ருசியப் பொதுவுடைமைக்காரர்கள்” “இந்திய கிராம வாசிகளுக்கும், தொழிலாளிகளுக்கும், திரு. காந்தி அவர்கள் ஒரு பெரிய துரோகி” என்றும், “காங்கிரஸ், தொழிலாளிகளுக்கும், பாமர மக்களுக்கு மேற்பட வேண்டிய முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டை” என்றும் சொன்னதிலென்ன தப்பிதமிருக்கின்றதென்று கேட்பதுடன் நாமிதுவரை சொல்லி வந்த விஷயங்களிலெந்த வெழுத்துக் குற்றமானதென்றும் கேட்கின்றோம்.
…………மதத்தில் பார்ப்பனன் – பறையனென்கின்ற இருபாகுபாடுகளும் ஒழிவதற்கு இருவருடைய கூட்டமுமொழிந்தாக வேண்டுமென்று எப்படி விரும்புகின்றோமோ, அப்படியேதான் சமூக வாழ்வு என்பதிலும், முதலாளி – தொழிலாளியென்பதாகிய பாகுபாடுமடியோடொழிவதற்கு இரு பெயரையுடைய இரு கூட்டமுமொழிந்தாக வேண்டு மென்கிறோம். ஏனென்றால் முதலாளி – தொழிலாளி என்கின்ற பதமே, வைசிய – சூத்திர என்று சொல்லப்படும் வருணாச்சிரம தர்மக் கொள்கைக்கு ஏற்படுத்தப் பட்டதேயாகும்.
வைசியன்- சூத்திரனென்பது வடமொழிப் பதங்கள். அதாவது சமஸ்கிருத வார்த்தைகள். முதலாளி – தொழிலாளியென்பது தென் மொழி பதங்கள். அதாவது தமிழ் வார்த்தைகள். ஆகவே இவ்விரண்டிலும், பாஷை வித்தியாச மென்பது மாத்திரம் தவிர கருத்து வித்தியாசமென்பது சிறிது மில்லையென்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
சூத்திரனென்றால், சரீரத்தில் வேலை செய்பவன் – முதல் மூன்று பேருக்கும் தொண்டு செய்பவன் – அடிமை யென்பவைகளே, அதையுண்டாக்கியவர்களின் வியாக்கியானமாகும். அதுபோலவே தொழிலாளியென்றாலும். சரீரத்தில் வேலை செய்பவன் – மற்றவர்கள் அவசியத்திற்கும், வாழ்க்கையின் தேவைக்குமே வேலை செய்யும் வேலையாள் – தொண்டன் யென்பவைகளேயாகும்.
அவனுக்கும் உணவுமட்டுந்தானளிக்க வேண்டும். இவனுக்கும், ஜீவனத்திற்குப் போதுமான அளவுதான் ஏதாவது கொடுக்க வேண்டும். ஆகவே, இந்தப் பாகுபாடுகளை சனாதன மகாநாட்டிலும், ஆரியதரும பரிபாலன மகாநாட்டிலும், பிராமண மகாநாட்டிலும், பேசும்போது “மனு தர்மம்” “வருணாச்சிரமபாதுகாப்பு” ஆகிவிடுகின்றது. இவைகளை விட்டு காங்கிரஸ் மகாநாட்டிலும், அரசியல் மகாநாட்டிலும் பேசும்போது “சுயராஜியம்”, “முதலாளி – தொழிலாளித்தன்மை பாதுகாப்பு” ஆகிவிடுகின்றது. ஆகவே இரண்டு மகாநாடுகளிலும், ஒரே கருத்தின் மீதுதான், ஒரே மனப்பான்மை யுள்ள மக்களால் தான் பேசப்பட்டும், தீர்மானிக்கப்பட்டும் வருணாச் சிரமதர்மம் வெற்றி பெற்று வருகின்றது.
இந்தத் தருமம் வியாபார முறையில் மாத்திரமல்லாமல், விவசாய முறையிலுமிந்தக் கருத்துடனேயே தானிருந்து வருகின்றது. அதாவது,ஜமீன்தாரன் மிராசுதாரன் யென்பவர்களாகின்ற பூமிக்குச் சொந்தக் காரர்களும், விவசாயத்தொழில் செய்யும் கூலியும், அதாவது பண்ணையும்- பண்ணையாளுமாகிய இரண்டு பிரிவுகளும் கூட வைசியன்- சூத்திரனென் கின்றப் பதங்களின் – தத்துவத்தின் கருத்தேயாகும். அதனால்தான், வருணாச் சிரம தரும முறையில் பூமியுடையவர்களையும், வைசிய வருணத்திலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதனாலேயேதான். திரு. காந்தியும், பூமியுடைவர் களையும் அதாவது ஜமீன்தாரர்கள் முறைமையையும் காப்பாற்றப்பாடுபடுகின்றேனென்று அடிக்கடி சொல்லிவருகிறார்.
உதாரணமாக, அதே 12ந் தேதி “சுதேசமித்திரன்” பத்திரிக்கையின் 5-வது பக்கம் 6-வது கலத்தில் “மகாத்மாவும் இனாம்தாரர்களும்” என்கின்ற தலைப்பின் கீழ் தனது கருத்தை விளக்கமாய் தெரிவித்திருக்கின்றார்.
அதாவது, ஜமீன்தாரர்களின் கோஷ்டியொன்று, தங்களுடைய நன்மைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காக திரு. காந்தி அவர்களை, இம்மாதம் 10-ந் தேதி பம்பாயில் கண்டு கேட்ட பொழுது, “ஜமீன்தாரர்க ளுடைய சொத்துரிமைகளுக்குத் தீங்கிழைக்க நான் கனவிலும் கருத வில்லை”யென்று சொல்லி யிருக்கிறார்.
இதனாலேயேதான் வருணாச்சிரமதருமம், பிறவியிலானாலும் சரி தொழில் முறைமையிலானாலும் சரி, அடியோடு ஒழிக்கப் பட்டாலொழிய சமதர்மமேற்பட முடியாதென உரைக்கின்றோம். ஆனால் திரு. காந்தியவர் களோ இந்த “வருணாச்சிரமமென்பதைத் தொழில் முறையில்தான் நான் சொல்லுகிறேன்” என்பதாகச் சொல்லிவிட்டு, உடனேயே அதற்கடுத்த வாக்கியத்தில் ஆனால் “தொழில் முறையென்பது பரம்பரைக்கிரமமாக இருக்க வேண்டு”மென்று சொல்லி வருகின்றார். இதற்கும் காரணம் சொல்லும் பொழுது இந்தப்படி அதாவது “தொழிலானது, பரம்பரைத்தொழில் முறையைக் கொண்டதாயிருந்தால்தான் உலகம் கிரமமாய் நடைபெற முடியும், தொழிலுமொழுங்காய் நடைபெறு”மென்று சொல்லி வருகிறார்.
ஆகவே, எந்தக் காரணத்தைக் கொண்டானாலும் சரி, எந்த முறை மையிலிருப்பதானாலும் சரி, வருணாச்சிரம தருமமென்பதை அடியோடு ஒழித்தாக வேண்டியதுதான் மக்களின் முக்கியக் கடமையாகும். வருணாச் சிரமமொழிந்த இடந்தான் விடுதலை – சமதர்ம நிலையமாகும்.
ஆதலால், முதலாளி – தொழிலாளி யென்கின்றத் தன்மை எக்காரணத்தைக் கொண்டும், எம்மாதிரியிலுமிருக்க விடக்கூடா தென்றேதான். பொது மக்களுக்கு நாம் யெடுத்துக் சொல்லுகிறோம்.
“ஆட்டோ ஓட்டுனர்களை கிள்ளுக்கீரைகளாக கருதும் அதிகார வர்க்கத்தினரை எதிர்கொள்வது எப்படி” என்ற தலைப்பில் 28.09.2014 அன்று மாலை திருச்சி உறையூரில் கைத்தறி நெசவாளர் மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டத்தினை ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் கோபி தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய திருச்சி மாவட்ட தலைவர் தோழர் காவேரிநாடான், தஞ்சை வழக்குரைஞர் சதீஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாவட்ட பொருளாளர் தோழர் செல்வராஜ் நன்றியுரை கூறினார்.
இக்கூட்டத்தில், “மக்களை போதையில் மூழ்கடிக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடு” என்ற தலைப்பில் பெண்கள் விடுதலை முன்னணி நாடகமும், மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர பாடல்களும் இடம்பெற்றன. இக்கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், தோழமை அரங்கினர், பெண்கள் உட்பட 150-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தலைமையுரையில் தோழர் கோபி பேசியது:
“ஆட்டோ டிரைவர் என்றால் அதிகார வர்க்கம், கேவலமாக பார்ப்பதும், இழிவுபடுத்துவதும் தொடர்ச்சியாக உள்ளது. முன்னாள் காவல்துறை ஆணையர் கருணாசாகர், இந்நாள் மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, ஆர்.டி.ஓ, டி.டி.சி போன்றோர் அனைவருமே தொழிலாளர்களுக்கான மரியாதையோ, அவர்களுக்கான உரிமையையோ கொடுப்பதில்லை. தமது எடுபிடிகள் போல நடத்துகின்றனர்.
மாநகராட்சி ஆணையர் ஆட்டோவை ஒழுங்குபடுத்தப் போவதாக தடாலடி அறிவிப்புகள் செய்து ஸ்டாண்டுகளை கலைப்பது, சங்கங்களை கலைப்பது, குழுவாக பிரிப்பது, சுய உதவிக்குழு மேற்பார்வையில் செயல்பட வைப்பது என தன்னிச்சையாகவும் சர்வாதிகாரியை போலவும் நடந்து கொள்கிறார். இது சங்கங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமையையும் பறிக்கும் செயலாகும்.
இதனை எதிர்கொள்வதும் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக போராடுவதும், நமது ஜனநாயக உரிமையாகும். இதுபோன்ற எண்ணற்ற வகையில் டிரைவர்கள் அன்றாடப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வைக்க உறுதியாக போராடுவதின் மூலமே இத்தகைய மக்கள் விரோத செயலை தடுக்க முடியும்”
வழக்கறிஞர் சதீஷ், தஞ்சை பேசியதாவது:
“ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் சமத்துவ உரிமை, சம உரிமை, சுதந்திர உரிமை, பண்பாட்டு உரிமை, பேச்சுரிமை, நடமாடும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, சமயம் சார்ந்த உரிமை, சங்கம் வைக்கும் உரிமை, தொழில் செய்யும் உரிமை உட்பட ஏராளமான உரிமைகள் சட்டப்புத்தகத்தில் உள்ளது. ஆனால் இவை நடைமுறையில் இல்லை. உதாரணமாக பால்தாக்கரே இறப்பினை ஒட்டி நடந்த கலவரம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த மாணவி, அதை லைக் செய்த மாணவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது, பேச்சு உரிமை லட்சணத்தை அன்று நாடே பார்த்தது.
நடமாடும் உரிமை: 144 தடை உத்திரவு இல்லாத காலங்களிலும் இரவு 11 மணிக்குமேல் மனிதர்கள் தனியாக நடமாட முடியாது. சந்தேகம் என்னும் பெயரில் காவல்துறையினர் கொடுக்கும் தொல்லைகள் ஏராளம். சமீபத்தில் தஞ்சையில் ஆட்டோ டிரைவர் தமது வண்டி பஞ்சர் ஆனதால், இரவில் நடந்து சென்று ஸ்பேனர் வாங்கி வரும் வழியில் அவரை விசாரணை என்ற பெயரில் இரவு முழுவதும் அடைத்து வைத்து மறுநாள் காலை விடுவித்தனர். இது நடமாடும் உரிமையும் பறிபோகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
சுதந்திர உரிமை, தொழில் செய்யும் உரிமை என எதுவும் இல்லை. கோடீஸ்வரர்கள் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தாலும் அவர்களை பாதுகாக்கும் அரசு மேற்கண்ட மோசடி பேர்வழிகளின் பெயரைக் கூட அரசோ, வங்கிகளோ அறிவிப்பதில்லை. ஆனால், அமைப்பு சாரா தொழிலாளர்களான ஆட்டோ, தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்டோரை தொழில் செய்வதற்கு எந்தவித அடிப்படை உரிமையும் தராமல் விரட்டியடிக்கின்றனர்.
கல்வி கற்கும் உரிமை இன்று முழுவதும் பறிக்கப்பட்டு கல்வி கடைச் சரக்காக மாற்றப்பட்டுள்ளது. சங்கம் வைக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தினரையும், நிர்வாகிகளையும், சமூக விரோதிகள் போல பார்க்கும் நிலைமை அதிகரித்து வருகின்றது. நாட்டில் முதலமைச்சர், பிரதமராவதற்கு இந்நாட்டில் கல்வித் தகுதி இல்லை. ஆனால், 30 ஆண்டுகள் ஆட்டோ ஓட்டிய ஆட்டோ டிரைவர்கள் இனிமேலும் தமது பணியை தொடர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசு நிர்ப்பந்திக்கிறது.
சமயம் சார்ந்த உரிமை இன்று இல்லை. தில்லை நடராஜர் கோவில் வழக்கு முதல் அனைத்து சாதி அர்ச்சகர் ஆகலாம் என்ற உரிமை வரை இன்று பறிக்கப்பட்டு சாதிக்கொரு நீதி, சமயத்திற்கு ஒரு நீதி நீடித்து வருகிறது.
மக்களுக்கான இத்தகைய உரிமைகள் எல்லாம் ஏட்டளவு மட்டுமே இருந்து வருகிறது, தமிழகத்தில் 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் எந்தவிதமான உரிமையும் இல்லாமல் இந்த அரசினால் சமூக விரோதிகளை போல வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் இவர்கள் மீதான தவறான கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கெதிராக தொடர்ச்சியாக கேள்வி எழுப்புவதும், எதிர்த்து போராட முன்வருவதும், புரட்சிகர சங்கமாக அணிதிரள்வதன் மூலமாகவே இந்த அநீதிகளை எதிர் கொள்ள முடியும் என சூளுரைத்தார்.
மனித உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் காவேரி நாடான் பேசியதின் சுருக்கம்;
“ஆட்டோ ஓட்டுநர்களை கிள்ளுக்கீரையாக கருதும் அதிகார வர்க்கத்தினரை எதிர்கொள்வது எப்படி?” புரட்சிகர உணர்வு கொண்ட சங்கத்தால் மட்டுமே இத்தகைய தலைப்பில் கூட்டம் நடத்த முடியும். காவல்துறை ஆணையர் கருணாசாகரின் அடாவடித்தனத்தை அடக்கிய சங்கம் இது. நிச்சயம் மாநகராட்சி ஆணையர் தண்டபாணியின் அடாவடி செயலையும் எதிர்கொண்டு முறியடிப்போம். சங்கம் வைக்கும் உரிமை தொழில் செய்யும் உரிமை என அனைத்தையும் பறிப்பது, சுய உதவிக் குழு போன்ற தொண்டு நிறுவனத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர்களை இணைக்க முயற்சிப்பது, எந்தவித ஒழுங்குமுறைக்கும் ஆணையர் கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்படுவது கண்டிக்கதக்கது.
சுய உதவிக்குழுவினால் பாதிக்கப்படும் பெண்கள் இன்று ஏராளம். இவர்களின் அராஜகத்தால் தற்கொலை செய்வது முதல் மன உளைச்சலுக்கு உள்ளாகுபவர்கள் வரை பெருகி வருகின்றனர். இப்படிப்பட்ட நவீன கந்து வட்டி கும்பலான சுய உதவி குழுவினரின் பொறுப்பில் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்களை இணைப்பது என்பது அயோக்கியத்தனமானது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கிளம்பியுள்ள இந்த ஒழுக்க சீலர் ஆணையர், சாரதாஸ், சென்னை சில்க், மங்கள் & மங்கள் உள்ளிட்ட பெரும் வணிக நிறுவனங்கள் பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டி ரோட்டையே ஆக்கிரமித்து இருப்பதின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சென்னை சில்க் பார்க்கிங்கிற்காக ரோட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி தரப்பட்டுள்ளது. என்.எஸ்.பி ரோடு முழுவதும் சாரதாஸ் வளைத்து போட்டு வானுயர்ந்த கட்டிடம் கட்டியுள்ளது. இதனை ஏன் ஆணையர் தடுத்து நிறுத்தவில்லை.
மத்தியப் பேருந்து நிலையம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் ஆக்கிரமித்துள்ளன. அரசு நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். அரசு பேருந்திற்கு போகும் பயணிகளை கட்டாயப்படுத்தி தனியார் பேருந்திற்கு அழைத்து செல்கின்றனர். ஏன் ஆணையர் இதனை கண்டு கொள்ளவில்லை.
என்.டி.எல் உள்ளிட்ட கால்டாக்சிகள் திருச்சியில் ஓட அனுமதி இல்லை. ஆனால், தமிழகம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளனர். பகிரங்கமாக விளம்பரம் செய்து சட்டவிரோதமாக தொழில் செய்து வருகின்றனர். அரசும், ஆணையரும் இதை வேடிக்கை பார்ப்பது ஏன்?
திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு, காட்டுத்தீயை போல அவ்வப்போது எரிந்து கொண்டிருக்கிறது. இதனை ஒழுங்குபடுத்த துப்பில்லாத ஆணையர் ஆட்டோ டிரைவர்களை முறைப்படுத்த கிளம்பியுள்ளது கேலிக்கூத்தானது. ஆட்டோ டிரைவர் என்றால், இவர்களுக்கு கிள்ளுக்கீரையாகவே உள்ளது. ஆர்.டி.ஓ, போலீஸ், மாநகராட்சியினர் ஓட ஓட விரட்டுகின்றனர். இவர்களை எதிர்த்து குரல் கொடுப்பது, தமது உரிமைக்காக போராடுவது நமது சங்கம் மட்டுமே, பெட்ரோல் டீசல் விலையை அவ்வப்போது ஏற்றி வரும் தனியார் முதலாளிகளை தடுக்காத இவர்கள் ஆட்டோ டிரைவர்கள் அதிகப்படியாக கட்டணம் வசூலிக்கின்றனர் என பேசுவது பித்தலாட்டமானது.
இத்தகைய அதிகார வர்க்கத்தினருடன் இணைந்து நுகர்வோர் அமைப்பினரும் ஆட்டோ டிரைவருக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இத்தகைய நுகர்வோர் அமைப்பினர் பணக்காரர்கள் நடுத்தர வர்க்கத்தினரின் 10 பைசா பிரச்சனைக்காக நீதிமன்றம் வரை சென்று வாதிடும் சூரப்புலிகள், கோடிக்கணக்கான மக்கள் வாங்கும் ரேசன் அரிசி, சுகாதாரமற்ற தண்ணீர், பொதுக்கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், உணவுப் பொருட்களும் அரசினாலும் மாநகராட்சியினாலும், அசுத்தமானவைகளாகவும் பயன்படுத்த முடியாதவைகளாகவும் உள்ளதை எதிர்த்து இந்த சட்ட வாத குழுக்கள் தமது சுண்டு விரலைக்கூட அசைத்ததில்லை. ஏன் என்றால், இவர்கள் அதிகார வர்க்கத்தின் எடுபிடிகள் என்பதே உண்மையாகும். சமீபத்தில் திருச்சியில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் பங்கேற்ற நுகர்வோர் அமைப்பினர் விவசாயிகள் மின்சாரத்தை திருடுகின்றனர் என இழிவுபடுத்தினர். இதனை விவசாயிகளும், புரட்சிகர அமைப்பினரும், தகுந்த பதிலடி கொடுத்து காரி உமிழ்ந்தது ஊரறிந்த செய்தி.
ஆகவே, உழைக்கும் மக்களின் துயர் துடைக்க சட்டமோ அதிகார வர்க்கமோ, நுகர்வோர் அமைப்பினரோ, வரப்போவதில்லை. நமக்கான உரிமைகளில் நாம்தான் போராடி பெற வேண்டும். அநீதிகளை எதிர்த்து குரல் கொடுப்பதும், அதிகாரிகளின் அடாவடித்தனத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடுவது இவற்றின் மூலமே நமது உரிமைகளை பெற முடியும். இன்றைய உலக மயமாக்கலின் சூழலில் உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்களை நகரத்தை விட்டு விரட்டி அடிப்பதும், அவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதும் இன்றைய கார்ப்பரேட் கொள்ளையர்களின் கொள்கைக்கு அடியாட்களாக வேலை செய்யும் இந்த அதிகார வர்க்கத்தினரிடம் கெஞ்சுவதினால் எந்தவித பயனும் இல்லை. இவர்களை எதிர்த்து உறுதியுடன் போராடுவதின் மூலமே நமது வாழ்க்கையை வாழ்வாதாரங்களை பாதுகாக்க முடியும் என பேசினார்.
ஆணையர் மேற்கண்ட அறிவிப்பை செய்து பல நாட்கள் ஆகியும், அமைதி காத்த சி.ஐ.டி.யு போன்ற அமைப்பினரும் இந்த கருத்தரங்கம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக போராட முன் வந்துள்ளனர். நமது உறுப்பினர்களின் உரிமைக்காக மட்டுமல்லாமல் பிற சங்கத்தினரையும் தட்டி எழுப்பும் வகையில் இந்த கருத்தரங்கம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
செய்தி: ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம்,
திருச்சி.
இணைப்பு: புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி-தமிழ்நாடு. அழைக்க:9791692512.
வாய்தா ராணி என்பது 18 வருசம் அம்மா கஷ்டப்பட்டு உழச்சி வாங்கின பட்டம். எப்பிடியெல்லாம் ரூம் போட்டு யோசிச்சி கலர் கலரா காரணம் சொல்லி வாய்தா வாங்கினாங்க!
தமிழ் மொழிபெயர்ப்பு வேணும், செராக்ஸ் காப்பி சரியில்லை, பில்டர் காப்பி சரியில்லை, வயிறு சரியில்லை..! இவுங்க அடிச்ச அடியில நீதிபதியெல்லாம் தெனாய்ஞ்சில்ல போனாய்ங்க. வாய்தா சப்ஜெக்டை வச்சி மட்டுமே நூறு பேர் பி.எச்டி பண்ணலாமே.
ஜெத்மலானி முந்தாநாள் லண்டன்லேர்ந்து ஒரு லா பாயின்டை எடுத்து விட்டாரு. தண்டனை பத்து வருசத்துக்கு உள்ளே இருந்தால், அரசு தரப்பு கருத்தை கேட்காமலேயே பெயில் கொடுக்கலாம்னு சி ஆர்பிசி யில இருக்குதாம். அரசு தரப்பை விசாரிக்காமலேயே குற்றவாளியை விடுதலை செய்யலாம்னு கூட சிஆர்பிசி யில எங்கனா இருக்கும். பார்ப்பானுக்கும் பணக்காரனுக்கும் மனுநீதியில இல்லாத பரிகாரமெல்லாம் சிஆர்பிசி யில இருந்தாகணுமே!
ஜெத்மலானிதான் பெரிய அப்பாடக்கராச்சே. முந்தாநாள் நீதிபதி குன்ஹாவை தாக்குன மாதிரி, நேத்து லைட்டா நீதிபதியை மிரட்டிருக்காரு. “நீதிமன்றத்தை மிரட்டுற மாதிரி பேசற வேலையெல்லாம் வச்சுக்காதீங்கன்னு” திருப்பி கொடுத்திருக்காங்க ரத்னகலா.
இன்னைக்கு காலையில் வழக்கு வந்திருக்கு. “வழக்கின் முக்கியத்துவம் கருதி 7-ம் தேதி ரெகுலர் கோர்ட்டுல விசாரிக்கட்டும்”-னு வாய்தா போட்டு விட்டுட்டாங்க. உடனே, “இன்னிக்கி சாயங்காலமே வேற நீதிபதி விசாரிக்கணும்”னு தலைமை நீதிபதிக்கு ர.ர க்கள் பெட்டிசன் கொடுத்தாங்களாம். “வேண்டாப்பா. தலைமை நீதிபதியையும் டென்சன் பண்ணி காரியத்தை கெடுத்துராதீங்கப்பா. பெட்டிசன வாபஸ் வாங்குங்க” என்றாராம் ஜெத்மலானி.
ஏற்கெனவே புதுக்கோட்டை செசன்ஸ் நீதிமன்றத்தில் பிரேமானந்தா வழக்கை நடத்தும்போது நீதிபதி பானுமதியை இதே மாதிரி மிரட்டி, பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை வாங்கிக் கொடுத்தவர் ஜெத்மலானி. பெரிய்ய வக்கீல்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம். அரசு வெளியிட்ட சொத்து பட்டியலே இவ்வளவு என்றால் ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.
சொத்துக் குவிப்பு – ஊழல் குற்றவாளிகள் சசிகலா, ஜெயலலிதா
போயஸ் தோட்டம், சென்னை
கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்
காதர் நவாஸ்கான் சாலை
அண்ணா சாலை, சென்னை
602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14
எண் 602 இல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 இல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.
காதர் நவாஸ்கான் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை
ஆர். எஸ். எண். 58/5, கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.
கதவிலக்கம் 14இல் பிரிவினை செய்யப்படாத 11 கிரவுண்ட், 1736 சதுர அடி நிலமும், கட்டடமும் மற்றும் நுங்கம்பாக்கம் கிராமம் ஆர்.எஸ். எண். 58 மற்றும் புதிய ஆர்.எஸ். எண். 55/5இல் 523 சதுர அடி கட்டடம்.
ஜெம்ஸ் கோர்ட் ஆர்.எஸ். எண். 58/5 இல் மொத்தம் 11 கிரவுண்ட், 1,736 சதுர அடி மனையில் 72/12000 பங்கு.
வாலஸ் தோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
வாலஸ் தோட்டம்
சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.
சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.
சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.
சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை. (75 முதல் 78 வரை தனித்தனி யாகப் பத்திரப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன)
சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை
சர்வே எண். 55, 56 இல் 5,658 சதுர அடி நிலமும், கட்டடமும்.
சர்வே எண். 86, 87, 88, 89, 91, 92 மற்றும் 93 ஆகியவற்றில் 12,462.172 சதுர அடி நிலமும், கட்டடமும்.
0.63 ஏக்கர் நிலமும், 495 சதுர அடி ஆர்.சி.சி. மேற்கூரை கட்டடமும்; ஆலந்தூர் கிராமம் சர்வே எண். 89இல் 1,155 சதுர அடி ஏ.சி.சி. மேற்கூரை கட்டிடம்.
மயிலாப்பூர்
கிண்டி தொழிற்பேட்டை
ஆர்.எஸ். எண். 1567/1இல் ஒரு கிரவுண்ட், 1407 சதுர அடி நிலமும், கட்டடமும்.
கிழக்கு அபிராமபுரம், மூன்றாவது தெரு கதவிலக்கம் 18இல் 1 கிரவுண்ட் 1475 சதுர அடி நிலமும் கட்டடமும்.
லஸ் சர்ச் சாலையில் கதவிலக்கம் 98/99இல் மொத்தம் உள்ள 10 கிரவுண்ட் 640 சதுர அடியில் பிரிக்கப்படாத பங்காக 880/72000
லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சுதாகரன் பெயரில்)
லஸ் அவென்யூ சர்வே எண். 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (இளவரசி பெயரில்)
லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சசிகலா பெயரில்)
லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெ.எஸ்., வீட்டு வசதி வளர்ச்சி நிறுவனத்தின் பெயரில்)
லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில்)
லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெயா காண்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் பெயரில்)
லஸ் அவென்யூ, சொத்து வாங்குவதற்காக செலவிடப்பட்டது 76 லட்சம் ரூபாய்.
சென்னை, தியாகராயா நகர், பத்மநாபா தெரு – அபிபுல்லா சாலை
சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு. (51 முதல் 56 வரையிலான சொத்துக்கள் வெவ்வேறு உரிமையாளர்களிடமிருந்து தனித்தனியாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.)
தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6794இல் 4,293 சதுர அடி மனையும், கட்டடமும்.
தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6794இல் 3,472 சதுர அடி மனையும், கட்டடமும்.
சோளிங்கநல்லூர் ஆர்.எஸ்.ஓ. எண். 1/1 எப் மற்றும் 1/104 ஆகியவற்றில் 16.75 சென்ட் மனை.
சோளிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 1/105இல் 5 கிரவுண்ட் மனை மற்றும் மனை எண்கள் 40,41 ஆகியவற்றில் 900 சதுர அடி மனையும், கட்டடமும்.
சோளிங்கநல்லூர் கிராமம் சர்வே எண். 2/1பி, 3 ஏ ஆகியவற்றில் 50 சென்ட் நிலம்.
அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/ பகுதி மற்றும் இரண்டு சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.
தியாகராய நகர் கிராமம், சர்வே எண். 5202இல் 4,800 சதுர அடி மனையும் கட்டிடமும்.
வேலகாபுரம் (ஊத்துக்கோட்டை அருகில் – மொத்தம் சுமார் 273 ஏக்கர்)
சர்வே எண். 198/180இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
நீதிபதி மைக்கேல் டி குன்ஹா
சர்வே எண். 198/180 எப். 3இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198/180 எப். 12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198/180 எப். 11 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198இல் 41 சென்ட் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 364இல் 63 சென்ட்புஞ்செய் நிலம்.
சர்வே எண். 198/180 எப். இல் 210.33 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 198/180 எப். டி. மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 20.89 ஏக்கர் நிலம்.
பையனூர் கிராமம் (கிழக்கு கடற்கரை சாலை – மொத்தம் சுமார் 28 ஏக்கர்)
சர்வே எண். 392/6 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.80 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 391/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3.52 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 384/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.28 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 383இல் 40 சென்ட் நிலம்.
சர்வே எண். 383இல் 40 சென்ட் நிலம்.
சர்வே எண். 403/1இல் 2.76 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 379/2இல் மற்றும் 379/3 ஆகியவற்றில் 4.23 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 381/9 மற்றும் 392/2 ஆகியவற்றில் 51 சென்ட் நிலம்.
சர்வே எண். 385/12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.03 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 385/7 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.34 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 386/15 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 90 சென்ட் நிலம்.
சேரகுளம் (தூத்துக்குடி மாவட்டம் – மொத்தம் சுமார் 475 ஏக்கர்)
சர்வே எண். 471 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 73 ஏக்கர் 90 சென்ட் நிலம்.
406/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 69.78 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 486 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 60 ஏக்கர், 65.5 சென்ட் நிலம்.
சர்வே எண். 470/3 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 80.95 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 262/10 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 71.57 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 252 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 48.95 ஏக்கர் நிலம்.
சர்வே எண் 260/5 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 16.51 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 436/6 மற்றும் பல சர்வே எண்களிலும் வல்லகுளம் கிராமம், சர்வே எண். 188/3 மற்றும் 221/1 ஆகியவற்றிலும் மொத்தம் 53 ஏக்கர் 66 சென்ட் நிலம்.
மீர்க்குளம் (திருநெல்வேலி மாவட்டம் – சுமார் 362.36 ஏக்கர்)
சர்வே எண். 823/9 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 42.31 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 374/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 68.09 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 832/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 78.09 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 830/5 மற்றும் பல சர்வே எண்களில்; சேரக் குளம் கிராமம், சர்வே எண். 130,823/9 ஆகியவற்றில் மொத்தம் 62.65 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 385/3 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 51.40 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 535/20 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 59.82 ஏக்கர் நிலம்.
வல்லகுளம் (மயிலாடுதுறை பக்கம் – சுமார் 290 ஏக்கர்)
சர்வே எண். 221/4 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 34 ஏக்கர் 81.5 சென்ட் நிலம்.
சர்வே எண். 682/6 மற்றும் 203/6 ஆகியவற்றில் 55 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 224/4பி, மற்றும் 204/2 ஆகியவற்றில் 57.01 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 221/3 மற்றும் 217/8 ஆகியவற்றில் மொத்தம் 89.62 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 62 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 54.98 ஏக்கர் நிலம்.
ஊத்துக்காடு (வாலாஜாபாத் அருகில் – மொத்தம் சுமார் 136 ஏக்கர்)
சர்வே எண். 701/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 12.70 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 685 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 14.42 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 136/1 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 8.6 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 597/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 596/6 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 9.65 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 336/12 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 10.29 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 351/7 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.32 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 334/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.65 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 612/2 ஏ 2இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 612/2 ஏ 1இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 612/1 இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 239/9 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 11.5 சென்ட் நிலம்.
சர்வே எண். 591/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 15.71 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 611/2இல் மொத்தம் 11.25 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 577/ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.40 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 324 மற்றும் சில சர்வே எண்களில் 9.50 ஏக்கர் நிலம்.
பிற கிராமங்கள்
ராமராஜ் ஆக்ரோ மில்லுக்கு சொந்தமான 6 லட்சத்து 14 ஆயிரம் பங்குகளை காந்தி மற்றும் பலரிடம் இருந்து வாங்கியது.
வண்டாம்பாளை, சர்வே எண். 79இல் 3.11 ஏக்கர் நிலம்.
வண்டாம்பாளை, சர்வே எண். 80, 88/1 ஆகியவற்றில் 4.44 ஏக்கர் நிலம்.
கீழக்கவத்துக்குடி கிராமம் சர்வே எண். 81/1, 2 ஆகியவற்றில் 1.31 ஏக்கர் நிலம்; வண்டாம்பாளையம் கிராமம் சர்வே எண். 84/1இல் 5.19 ஏக்கர் நிலம்.
மற்றும் கீழக்கவத்துக்குடி கிராமம் ஆகியவற்றில் சர்வே எண். 77/1 பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.91 ஏக்கர் நிலம்.
வண்டாம்பாளை,சர்வே எண். 81/4இல் 3.84 ஏக்கர் நிலம்.
வண்டாம்பாளை, சர்வே எண். 78/1 மற்றும் சில சர்வே எண்களில் 8.10 ஏக்கர் நிலம்.
மெடோ ஆக்டோ பார்ம்ஸ் பெயரில் சர்வே எண் 650/1 மற்றும் சில சர்வே எண்களில் 11.66 ஏக்கர் நிலம்.
கலவை கிராமம், சர்வே எண். 386/2 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.98 ஏக்கர் நிலம்.
வெள்ளகுளம் கிராமம், சர்வே எண். 199/4 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 30.75 ஏக்கர் நிலம்.
ஊரூர் கிராமம், பரமேஸ்வரி நகர், டவுன் சர்வே எண். 2 மற்றும் 18இல் 4,565 சதுர அடி மனையும் கட்டடமும்.
செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6 ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.
ஐதராபாத்
ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம்.
ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்)
செகந்தராபாத் கண்டோன்மென்ட் அஞ்சையா தோட்டம், கதவிலக்கம் எண். 16இல் 222.92 சதுர மீட்டர் நிலமும், கட்டடமும்.
ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம்.
ஆந்திரப் பிரதேசம், ஜிடிமெட்லா எல்லைக் குட்பட்ட பண்ணை வீட்டில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 6 கோடியே 40 லட்சத்து 33 ஆயிரத்து 901 ரூபாய்.
செய்யூர் (கிழக்கு கடற்கரை சாலை – மொத்தம் சுமார் 15 ஏக்கர்)
சர்வே எண். 366/4 மற்றும் 366/1 ஆகியவற்றில் 4.90 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 365/3இல் 3.30 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 365/1இல் 1.65 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 362/2இல் 2.25 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 364/8, 364/3, 364/9 ஆகியவற்றில் 2.02 ஏக்கர் புஞ்செய் நிலம்.
சர்வே எண். 364இல் 54 சென்ட் புஞ்செய் நிலம்.
தஞ்சாவூர், திருச்சி
தஞ்சாவூர் மானம்பூ சாவடி சர்வே எண். 1091 இல் 2,400 சதுர அடி நிலமும், கட்டடமும்.
தஞ்சாவூர் நகரம், 6வது வார்டு, டவுன் சர்வே எண். 1091 இல் 51 ஆயிரம் சதுர அடி காலிமனை.
தஞ்சாவூர் நகரம், மானம்பூ சாவடி, பிளேக் சாலையில் டவுன் சர்வே 1019 இல் 8,970 சதுர அடி காலி மனை.
திருச்சி, பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமம் டவுன் சர்வே எண். 107இல் 3,525 சதுர அடி நிலமும், கட்டடமும்.
தஞ்சை மாவட்டம், சுந்தரகோட்ட கிராமம், சர்வே எண். 402/2இல் 3.23 ஏக்கர் புஞ்செய் நிலம்.
மன்னார்குடி, சர்வே எண். 93, 94 மற்றும் 95 ஆகியவற்றில் மொத்தம் 25,035 சதுர அடி நிலமும், கட்டடமும்.
தஞ்சாவூர் வ.உ.சி. நகர், டவுன் சர்வே எண். 3077 மற்றும் 3079 இல் 26,540 சதுர அடி மனை மற்றும் கட்டடம்.
சிறுதாவூர் (கிழக்கு கடற்கரை சாலை)
சர்வே எண். 392/1, 2இல் 1.50 ஏக்கர் நிலம்.
சர்வே எண். 346/1 பி மற்றும் சில சர்வே எண்களில் 10 ஏக்கர், 41 சென்ட் நிலம்.
சர்வே எண். 345/3பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 11 ஏக்கர் 83 சென்ட் நிலம்.
சர்வே எண். 392/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10 ஏக்கர் 86 சென்ட் நிலம்.
சர்வே எண். 379 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10.7 ஏக்கர் நிலம்.
10.7 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு பத்திரப் பதிவில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேலும் அதிகத் தொகை செலுத்தப்பட்டது.
சர்வே எண். 339/1 ஏ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 44 சென்ட் நிலம்.
சர்வே எண். 403/3 மற்றும் 401/2 ஆகியவற்றில் 3.30 ஏக்கர் நிலம்.
சர்வே எண், 48/2 மற்றும் சிறுதாவூர் கிராமம் சர்வே எண். 383 முதல் 386 வரை மற்றும் 393 ஆகியவற்றில் மொத்தம் 11 ஏக்கர் 28 சென்ட் நிலம்.
சர்வே எண். 43/2இல் 3 ஏக்கர் 51 சென்ட் நிலம்.
சர்வே எண். 46இல் 4 ஏக்கர் 52 சென்ட் நிலம்.
சர்வே எண். 45இல் 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.
4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.
திருவேங்கடநகர் காலனி
சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து.
சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து. (பத்திரத்தில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிகமாக பணம் செலுத்தப்பட்டது).
கொடநாடு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 900 ஏக்கர் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி.
பிற ரொக்க பரிமாற்றங்கள்
நிலம் வாங்கியதற்காக சிப்காட் நிறுவனத்திற்கு 23.11.1995 அன்று 7 லட்சத்து 23 ஆயிரத்து 806 ரூபாய்; 20-1-1996 அன்று 3 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய்; 6-4-1996 அன்று 4 லட்சம் ரூபாய், ராமராஜ் ஆக்ரோ மில் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது.
ராமராஜ் ஆக்ரோ மில்ஸ் வளாகத்தில் வேலை செய்பவர்களுக்காக வீடுகள் கட்டிய வகையில் செலவு செய்யப்பட்ட தொகை 57 இலட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய்.
ராமராஜ் ஆக்ரோ மில்ஸ் வளாகத்தில் நிர்வாக இயக்குனருக்காக மாளிகை மற்றும் அலுவலகத்தில் பணியாற்றியவர்களுக்காக வீடுகள் கட்டியதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 83 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்.
லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனத்திற்காக பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேல் செலுத்தப்பட்ட தொகை பத்து லட்சம் ரூபாய்.
5,30,400 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் திருமதி காயத்ரி சந்திரன் என்பவருக்குச் செலுத்தப்பட்டது.
2,35,200 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் கே.டி. சந்திரவதனன் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது.
கடலூரில் இண்டி-டோஹா கெமிகல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தை வாங்கிய வகையில் செலவு செய்த தொகை 86 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்.
சென்னை, நீலாங்கரை, ராஜா நகரில் கதவிலக்கம் 4/130 இல் கூடுதல் கட்டடம் கட்டிய வகையில் செலவு செய்த தொகை 80 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்.
பையனூர் பங்களாவில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 1 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 ரூபாய்.
சென்னை, கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்காக புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 2 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரத்து 457 ரூபாய்.
சென்னை வெட்டுவாங்கேணி கதவிலக்கம் 3/178 சி இல் உள்ள குடியிருப்புக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 1 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 76 ரூபாய்.
சிறுதாவூர் கிராமத்தில் உள்ள ஆடம்பர பங்களாவில் புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 5 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரத்து 298 ரூபாய்.
சென்னை போயஸ் கார்டன் கதவிலக்கம் 36இல் உள்ள வீட்டுக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டிடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்.
சென்னை, டி.டி.கே. சாலை எண். 149 மற்றும் எண். 150இல் உள்ள கட்டடத்திற்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 29 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்.
சென்னை, சோளிங்கநல்லூர், எண். 2/1இல் உள்ள பி.3 அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 80 லட்சத்து 36 ஆயிரத்து 868 ரூபாய்.
சென்னை மைலாப்பூர், பட்டம்மாள் தெரு கதவிலக்கம் எண். 19இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 8 லட்சம் ரூபாய்.
சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில் கதவிலக்கம் 21இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்.
சென்னை அண்ணாநகர் எண் எல்./66இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 24 லட்சத்து 83 ஆயிரத்து 759 ரூபாய்.
சென்னை தியாகராயநகர், முருகேசன் தெரு, கதவிலக்கம் 5இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 828 ரூபாய்.
புதிய மாமல்லபுரம் சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் எண். 1/240இல் உள்ள வளாகத்திற்கு கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 53 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்.
சென்னை, அக்கறை, மர்பி தெரு எண் 1இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 959 ரூபாய்.
சென்னை கிண்டி, திரு.வி.க. தொழில் பேட்டை, கணபதி காலனி, சர்வே எண். 32.2.4இல் மனை எண். எஸ்7இல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 39 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.
சென்னை, கிண்டி, பணிமனை எம்.எப்.-9இல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 14 லட்சத்து 17 ஆயிரம் 538 ரூபாய்.
வ.உ.சி. மாவட்டம், சேரன்குளம் கிராமம், சர்வே எண். 466, 461/1 மற்றும் 467/2 ஆகியவற்றில் கட்டிடம், கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுக்காக செலவு செய்த தொகை 7 லட்சத்து 58 ஆயிரத்து 160 ரூபாய்.
சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளை
செல்வி ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 12.10.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 19 லட்சத்து 29 ஆயிரத்து 561 ரூபாய் 58 பைசா.
செல்வி. ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 16.4.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 70 ஆயிரத்து 570 ரூபாய் 13 பைசா.
என்.சசிகலா பெயரில் அபிராமபுரம், இந்தியன் வங்கிக் கிளையில், 11.3.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 771 ரூபாய் 26 பைசா.
சுதாகரன் பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 30.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 32 ஆயிரத்து 221 ரூபாய்.
இளவரசியின் மகன் மாஸ்டர் விவேக் பெயரில் 12.9.1994 அன்று அபிராமபுரம் இந்திய வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கு எண். 4110இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 42 ஆயிரத்து 211 ரூபாய் 50 பைசா.
ஜெ.இளவரசி பெயரில் அபிராமபுரம், இந்திய வங்கி கிளையில், 23.11.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 20 பைசா.
ஜெ.இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 31.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 85 ஆயிரத்து 342 ரூபாய் 25 பைசா.
ஜெ. இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 28.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்து 527 ரூபாய் 95 பைசா.
தமது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்து ஆகஸ்ட் 15-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்திய GSH நிறுவன மற்றும் அவர்களுக்கு ஆதரவான பிற தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு 167 பேர் கைது செய்யப்பட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி பிணையில் வெளிவந்த தொழிலாளர்கள் 23-ம் தேதி காலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தமது சிறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இக்கட்டுரை அந்த அனுபவப் பகிர்வின் இரண்டாம் பாகம்.
அனுபவப் பகிர்வு கூட்டம்
பு.ஜ.தொ.மு திருவள்ளூர் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் முகிலன் :
மாலை 6 மணிக்கு சிறையில் அடைக்கப்பட்டோம். சிறைக்குச் சென்றதும் தொழிலாளர்கள் அனைவரையும் அமரவைத்து, “நாம் ஏன் கைது செய்யப்பட்டோம், கம்பெனி நிர்வாகமும், மாவட்ட ஆட்சியர், போலீசு, நீதிமன்றமும் எப்படி தொழிலாளர்களுக்கு எதிராக கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டன” என்பதை விளக்கி காஞ்சி மாவட்ட செயலாளர் தோழர் சிவா பேசினார். பிறகு புரட்சிகர கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மறுநாள் காலை அனைத்து தொழிலாளர்களையும் அழைத்து வைத்து நாம் சிறைக்குள்ளும் அமைப்பாக செயல்பட வேண்டும் என்பதை விளக்கி அனைத்து வேலைகளுக்கும் குழுக்கள் அமைத்தோம். மொத்தம் ஆறு குழுக்கள், ஒவ்வொரு குழுவிற்கும் பத்து உறுப்பினர்கள். இந்த குழுக்கள் சுழற்சி முறையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டன.
உணவுக்குழு மூன்று வேளையும் 167 தொழிலாளர்களுக்கும் தேவையான உணவுகளை வாங்கி வந்து விடும். மருத்துவக்குழு உடல்நிலை சரியில்லாத தொழிலாளர்களை சிறை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும், அருகிலேயே இருந்து உணவு உள்ளிட்ட தேவைகளை கவனித்துக் கொள்ளும். சுகாதாரக்குழு தங்கியிருந்த இடத்தையும் சுற்றுப்புறத்தையும் காலை மாலை இருவேளையும் கூட்டிப்பெருக்கி சுத்தமாக வைத்திருக்கும். தண்ணீர்க்குழு குடிப்பதற்கும், குளிப்பதற்குமான தண்ணீரை ஏற்பாடு செய்துவிடும், விசாரணைக் கைதிகளை சந்திப்பதற்கான குழு வெவ்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளை சந்தித்து அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து ஒவ்வொரு நாள் இரவும் தொழிலாளர்களிடம் விளக்கும். தொண்டர் குழு அனைத்து வேலைகளையும் ஒழுங்குபடுத்துவதுடன் தொழிலாளர்களுக்கு என்ன என்ன தேவை என்பதை அறிந்து அதை சம்பந்தப்பட்ட குழுவிடம் தெரிவித்து பெற்றுத்தரும்.
ஒவ்வொரு நாளும் ஒரு அரசியல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். பட்ஜெட் பற்றி ஒரு அறைக்கூட்டம் நடத்தினோம், இந்துமதவெறி பாசிசத்தை அம்பலப்படுத்தி ஒரு அறைக்கூட்டம் நடத்தினோம். மறுகாலனியாதிக்கம் பற்றி அறைக்கூட்டம் என்றால் அன்று முழுக்க அது தொடர்பான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கலைநிகழ்ச்சிகள் நடக்கும் போது சிறையில் உள்ள மற்ற கைதிகளும் ஆர்வத்தோடு உட்கார்ந்து கேட்பார்கள். “திருந்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம்”, “வைகோ, நெடுமா, சீமான்” போன்ற பாடல்கள் நேயர் விருப்ப பாடல்களைப் போல ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர் என்று கேட்கும் பிரபல பாடல்களாகிவிட்டன.
கொரிய முதலாளிகளோடு சேர்ந்துகொண்டு GSH தொழிலாளர்களை ஒடுக்கும் அரசின் அடக்குமுறைகளைப் பற்றியும், பிற பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலையை பற்றியும் நாடகங்கள் போட்டோம். தொழிலாளர்கள் கவிதைகள் வாசித்தனர்.
சங்கம் கட்டுவதில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் இறுதியில் வெற்றிகரமாக சங்கம் கட்டப்பட்டதை பற்றியும் TI மெட்டல் மற்றும் கெமின் ஆலையில் பணிபுரியும் இரு தொழிலாளர்கள் தமது அனுபவங்களை விளக்கிப் பேசினர்.
மேலும் இரு தொழிலாளர்கள் சங்கத்திற்கு வருவதற்கு முன்பு எப்படி வாழ்ந்தோம் என்பதைப் பற்றி பேசினர்.
ஒரு தொழிலாளி, தான் பா.ம.க. இளைஞரணி ஒன்றியச் செயலாளராக இருந்த போது வன்னிய சாதிவெறியனாகவும், குடிகாரனாகவும், பிற்போக்கான நபராக இருந்ததையும், பா.ம.கவில் இருந்த போது தேர்தல் பிரச்சாரத்திற்காக பத்து பதினைந்து நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றதையும் பா.ம.க உண்மையில் பாட்டாளி மக்களுக்கு எதிரான கட்சி என்பதை பு.ஜ.தொ.மு விற்கு வந்தபிறகு தான் உணர்ந்த்தாகவும் சாதிவெறியனாக இருந்து தோழராக மாறி வந்த பாதையை பற்றி கூறினார்.
மற்றொரு இளம் தொழிலாளி, “சங்கத்தில் இணைந்தால் ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்கிற பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் தான் பு.ஜ.தொ.முவில் இணைந்தேன் தோழர்கள் எப்போது பிரச்சாரத்திற்கு அழைத்தாலும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக்கழித்து வந்தேன். அந்த நேரங்களில் ஒன்னு பசங்களோட தண்ணியடிச்சிட்டு சுத்திட்ருப்பேன் அல்லது பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கொண்டிருப்பேனே தவிர வேறு எந்த வேலையும் இருக்காது. ஆனா தோழர்கள் அழைத்தால் போக மாட்டேன். ஒரு நாள் மின்சார ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த போது நான் அமர்ந்திருந்த பெட்டிக்கு தோழர்கள் நிதிவசூல் பிரச்சாரத்திற்காக வந்து மக்களிடையே பேசிய போது தான் தோழர்கள் செய்த பிரச்சாரத்தையும் அதற்கு மக்கள் அளித்த ஆதரவையும் நேரடியாக பார்த்தேன். இவ்வளவு நாட்கள் தோழர்கள் நம்மை இதற்காக தான் அழைத்திருக்கிறார்கள், நாம் தான் புரியாமல் நடந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து உடனடியாக அடுத்த ஸ்டேசனில் இறங்கி தோழர்களோடு இணைந்து கொண்டேன். அதன் பிறகு ஒரு தோழராக மாறி இப்போது மூன்றாவது முறை கைதாகி சிறைக்கு வந்திக்கிறேன்” என்று விளக்கிப் பேசினார்.
சிறையிலிருந்து வெளியே வருவதற்கு முதல் நாள் இரவு ஜெயிலர் எங்கள் பிளாக்கிற்கு வந்து பார்த்து விட்டு போராட்டத்தை பாராட்டி பேசினார். “இதுக்கு முன்னாடி பா.ம.க காரங்க ஒரு முன்னூறு பேரு வந்தாங்க, வீட்ல அரை குடம் தண்ணில குளிக்கிறவன் எல்லாம் இங்கே வந்து நாலு குடம் தண்ணிய காலி பண்ணானுங்க, அதோட மத்தவங்க குளிக்க முடியாதபடி தண்ணியையும் அழுக்காக்கிருவானுங்க. எந்த கட்சிக்காரன் வந்தாலும் இந்த இடத்தையே அசிங்கமாக்கி நாசம் பண்ணிருவானுங்க. ஆனா நீங்க ரொம்ப நீட்டா வச்சிருக்கீங்க உங்ககிட்ட இருந்து நாங்களே நிறைய கத்துக்கிட்டோம். இன்னும் கொஞ்ச நாள் இருந்தா சிறையையே வேற மாதிரி மாத்திப்பீங்க” என்றார்.
அதோட, “இதுக்கு முன்னாடி வந்த எல்லோருமே யாராவது ஒரு பிரபல தலைவரோடு தான் வந்திருக்காங்க. நாம் தமிழர் கட்சிக்காரங்க சீமானோட வந்தாங்க, பா.ம.க.காரங்க அன்புமணி ராமதாசோட வந்தாங்க, ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் சவுந்திரராஜனோட வந்தாங்க, ஆனா உங்கள்ள யாரும் பிரபலமான தலைவர்களா தெரியல, ஆனா உங்களோடு இவ்வளவு இளைஞர்கள் கட்டுப்பாடாகவும், ஒழுக்கமாகவும் இருப்பதை பார்க்கும் போது வியப்பா இருக்கு. இவ்வளவு சரியாக இருக்கும் நீங்கள் நடத்தும் போராட்டமும் சரியாகத்தான் இருக்கும் ஆகவே உங்களுடைய போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று கூறியதுடன், என்னுடைய நண்பன் கல்லூரி காலத்தில் ம.க.இ.க வில் இருந்தான். நான் திருச்சியில் படித்துக்கொண்டிருந்த போது அவனோடு சேர்ந்து சுவரெழுத்துக்கள் எழுத போயிருக்கேன். அதனால உங்களைப் பத்தி ஓரளவுக்குத் தெரியும். புதிய ஜனநாயகம் பத்திரிகை படிச்சிருக்கேன். என்னுடைய அம்மா அப்பா ரெண்டு பேரும் திராவிட குடும்பத்தை சேர்ந்தவங்க” என்றார்.
கடைசி நாள் சூப்பிரண்டெண்ட், “இந்த ஏழு நாட்களில் நிறைய படிச்சிருக்கீங்கன்னு தெரியுது, இத்தனை ஆண்டுகளில் லைப்ரரியில் இவ்வளவு நூல்களை புரட்டிப் பார்த்ததும் ஏழு நாட்களில் நிறைய படித்ததும் நீங்களாகத் தான் இருக்கும். உங்களோட போராட்டம் நியாயமானது சட்டப்பூர்வமான வழியில் போராடி வெற்றி பெறுங்கள்” என்றார்.
வந்த ஓரிரு நாட்களிலேயே அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை சந்தித்தோம், வழக்கு பற்றியும் சிறைக்கொடுமைகள் பற்றியும் விரிவாக கூறினார். நாங்கள் கிளம்புவதற்கு முதல் நாள் “உங்களுடைய சிறை அனுபவங்களையும், தொழிலாளர்களுக்கு ஏதேனும் கூற விரும்பினால் அதையும் தொழிலாளர்கள் மத்தியில் வந்து பேச வேண்டும்” என்கிற கோரிக்கையை வைத்தோம். அதை ஏற்று எங்களிடையே பேச வந்தார்.
“என்னை கைது செய்து விசாரணை செய்து கொண்டிருந்த போது சி.பி.ஐ தலைமை அதிகாரி ராகோத்தமன் ‘என்னடா சாதி ஒழிப்புன்னெல்லாம் பேசுற, சாதியெல்லாம் இப்ப எங்கடா இருக்குன்னு’ கேட்ட போது அந்த இளமைப் பருவத்திற்கே உரிய துடிப்புடன், ‘சாதி இல்லன்னா ஏன் சார் பூணூல் போட்ருக்கீங்கன்னு’ அந்த 18 வயதிலேயே கேட்டேன், அதுக்கு காரணம் எங்க குடும்பம்தான், எங்க குடும்பமே ஒரு அரசியல் குடும்பமாக, திராவிடர் கழக பாரம்பரியத்தில் வந்ததனால் தான் நான் அப்படி பேசினேன். அப்போது நான் எப்படித் துடிப்பான இளைஞனாக இருந்தேனோ அப்படித்தான் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள்.
இன்னைக்கு உலகமயமாக்கல் கொள்கையால் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களை சுரண்டி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சுரண்டலை எதிர்த்து போராடி நீங்க சிறைக்கு வந்திருக்கீங்க, இந்தப் போராட்டத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ளக்கூடாது. அடுத்தக்கட்டமா நீங்க சிறையில் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் அதனால் மனரீதியாக பாதிக்கக்கூடாது. அப்படி பாதிக்காம இருக்கணும்னா குடும்பத்தை அரசியல்படுத்த வேண்டும், குடும்பத்தோடு போராட வேண்டும். நீங்க மட்டும் சிறைக்கு வந்திருக்கீங்க ஆனால் குடும்பத்தோடு வந்திருந்தால் அது எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்திருக்கும். நான் 23 வருசமா சிறையில் இருந்தாலும் இன்னும் உறுதியோடு இருக்கக் காரணம் 23 வருசமும் எங்க அம்மா வாரம் வாரம் வந்து பார்த்துட்டு போறதுதான்.
என்னை பார்க்க வர்ற பலரும் உங்க அம்மா இல்லைன்னா நீ இல்லன்னு சொல்லுவாங்க, எங்க அம்மா இல்லைன்னா நான் இல்லைன்னு சொல்லாதீங்க எங்க அம்மா ஒரு பகுத்தறிவாளரா இல்லைன்னா நான் இல்லைன்னு சொல்லுங்கன்னு சொல்வேன். எங்க அம்மா ஒரு சாதாரண அம்மாவா இருந்திருந்தாலும் வாரம் வாரம் வந்துட்டு போயிருப்பாங்க. ஆனா திருப்பதிக்கோ, பழனிக்கோ போய்ட்டு கையில விபூதியோடு வந்து கடவுளை வேண்டிக்கப்பான்னு சொல்லிட்டு போயிருப்பாங்க. ஆனா அற்புதம் அம்மா பகுத்தறிவுவாதியாக இருக்கிறதனால என்னை வாரம் வாரம் வந்து பார்க்கிறதோட, ஆறுதல் சொல்லி வெளியில இப்படி இப்படி எல்லாம் போராட்டம் நடக்குது அடுத்து என்ன பண்ணலாம்னு கலந்தாலோசிச்சிட்டு போவாங்க.
2010 வரை தமிழகத்தில் இருந்த தலைவர்கள் தான் என்னை இயக்கிக்கிட்ருந்தாங்க, நானும் அவங்களை நம்பி பின்னாடி போனேன். 2010 க்கு பிறகு தலைவர்கள் பின்னாடி போகக்கூடாதுன்னு முடிவு பன்னி நானே தனியாக பயணிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்ப நானே டிரைவ் பன்றேன் விபத்து நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பாக இருந்துட்டு போறேன்.
நான் கைதான உடனே “பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 26 தமிழர்களை உடனே விடுதலை செய்” என்று குறிப்பாக பெயர் குறிப்பிட்டு சுவரொட்டி போட்டது தமிழ்நாட்டிலேயே மக்கள் கலை இலக்கியக் கழகம் மட்டும் தான். புதிய ஜனநாயகம் பத்திரிகையை எங்க அம்மா கொண்டு வந்து கொடுப்பாங்க. ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் நடத்தி வரும் எல்லா போராட்டங்களும் எனக்குத் தெரியும். உங்கள் போராட்டம் வெற்றி பெற உங்கள் குடும்பத்தை அரசியல்படுத்துங்கள், உங்கள் போராட்டம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
எப்படி அழுவது
என்று தெரியாமல்
தடுமாறும் வர்க்கமே,
‘அம்மாவை நினை’
உடனே அழுகை வரும்!
பதினெட்டு ஆண்டுகள்
வனவாசம் போன நீதிக்கு
அப்படியென்ன அவசரம்?
ஓ.பி.எஸ்-சும், இ.பி.கோ.-வும்
வேறு, வேறு என்று யார் சொன்னது?
அம்மா சொன்ன நீதிபதி…
அம்மா சொன்ன நீதிமன்றம் … …
அம்மா சொன்ன நீதி மட்டும் தராமல்… … …
அம்மாவுக்கு வரும்
கோபத்தை நினைத்தால்
அழுகை வந்தே தீரும்!
விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து
எனத் தாயுள்ளத்தோடு தவிக்கும் அம்மாவை
விடுதலை செய்தால்தான்
நீதியான அரசு நிலைக்குமென
அற்புதத்தம்மாளே
தளுதளுக்கும்போது
நீ அழுது தொலைத்தால்தான் என்ன?
தனது வாழ்வுரிமையையே
பணயம் வைத்து
தமிழக வாழ்வுரிமைக்காக
அம்மாவை சிறை மீட்க
கண்ணீரைக் கனலாக்கும்
வேல்முருகனைப் பார்த்தாவது
அழுகை வராதா?
பேருந்துப் படிக்கட்டில்
பாட்டுப்பாடி, தொங்கிவரும்
மாணவர்களை
காலிகள் எனக் கருவலாம்,
கார்ப்பரேட் முதலாளிகளின்
கொள்ளைக்கு எதிராக
போராடும் மக்களை
“வேறு வேலையில்லை” என்று
முகம் சுளித்து ஒதுங்கிப்போகலாம்,,
ஆனால்,
சட்டப்படி கைதான அம்மாவுக்காக
சட்டத்தைக் கையில் எடுத்து
வெறியாடும் ரத்தத்தின் ரத்தங்களிடம்
அழுது காட்டுவதுதான்
நீ பிழைக்கும் வழி!
ஆகையால்
உன் நிலைமையை நினைத்து அழுதுவிடு!
லூயி போனபார்ட்டின்
டிசம்பர்-10 கும்பல்
கோழிக்கறி வாழ்க! கோமான் வாழ்க!
எனக் கூவியதைப்போல
அம்மாவின் தினசரிக் கும்பல்
அம்மா உணவகம், அம்மா குடிநீர்,
அம்மா லேப்டாப்.. என்று கத்துவது
உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா?
அதை நினைத்தாவது
அழுதுவிடு!
சட்டத்தின் ஆட்சியைக்
கரைத்துக் கொள்ள
அடிமைகளின்
விழிகளைப் பிதுக்கி
விழிநீர் எடுப்பதற்கு
அம்மா யாரைக் கேட்கவேண்டும்?
தமிழகமே அம்மாவினுடையது
என்று ஆனபிறகு
உன் கண்ணீர் மட்டும் உனக்கா சொந்தம்?
சட்டத்தை யாரும்
கையில் எடுக்கக் கூடாது!
அம்மாவே
நம் கண்ணில் எடுக்கிறார்…
அழுதுவிடு!
‘வெங்கடாஜலபதி என்றாலே பேமஸ் உண்டியல்தான்! அதையும் கண்டவனும் குலுக்கி காலி செய்துவிட்டால், பின் வெங்கடாசலபதி வெறும் வாயையா மெல்ல முடியும்?’ (படம் : நன்றி நக்கீரன்)
சீசனுக்கு ஏற்ற மாதிரி பாய்சன் தருவதில் இந்துமத வெறியர்கள் கைதேர்ந்தவர்கள். ஆடி மாதம் மக்களை கூழாய் கரைத்தாயிற்று, ஆவணி மாசம் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டையில் பிடித்தாயிற்று, இப்போது புரட்டாசி மாதம் வெங்கடாசலபதி ‘நாமத்தில்’ இழுக்கும் வேலையில் காவிப்படை கிளம்பிவிட்டது. குறிப்பாக சென்னையில் “திருப்பதி குடை கவுனி தாண்டுகிறது” (அதாவது யானைக்கவுனி என்ற ஏரியாவைத் தாண்டுவது) என்ற பெயரில் காவிப்பரிவாரங்கள் தலைமை தாங்கி இதையும் தனது குடையின் கீழ் பக்தர்களைத் திரட்டிக் கொள்ளும் நோக்கத்தோடு தெருவுக்கு தெரு கிளம்பி வருகிறது.
‘வெங்கடாஜலபதி என்றாலே பேமஸ் உண்டியல்தான்! அதையும் கண்டவனும் குலுக்கி காலி செய்துவிட்டால், பின் வெங்கடாசலபதி வெறும் வாயையா மெல்ல முடியும்?’ என்ற எச்சரிக்கையோடு இந்து மதத்தின் ஹோல்சேல் வியாபாரிகள் ‘உண்டியல் வசூல் கிடையாது!’ என விளம்பரப்படுத்தியிருக்க, சீசன் பிச்சைக்காரர்களுக்கும், ஏரியா வசூல் மன்னர்களுக்கும் ஏகக் கடுப்பு!
திருப்பதி குடை வரும் வீதியில், சாலை ஓரங்களில் தங்க நிறத்தில், தகதகக்கும் செட்டிங்கில் பாலாஜி பள பளக்கிறார். இப்படி ரெடிமேட் கோயில் வைத்து, ஏழுமலையானை தெருவோரம் எழுந்தருள வைப்பது வைகாஷ்சம விதிப்படி ‘உசிதமா’ என்பதை வைணவர்களின் பார்வைக்கே விட்டுவிடுவோம்!
எப்படியோ, பக்தியை மூலதனமாக்கி பெருமாளின் குடை கவுனியைத் தாண்டுகிறதோ இல்லையோ, பெருமாள் கையைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ‘மூலதனத்தின் பக்தி’ மோடி தலைமையில் இந்தியா தாண்டுகிறது! அமெரிக்க ஏழு மலையானைத் தரிசிக்க அம்பானி சகிதமாய் மோடி பக்த ஜனசபை வாசிங்டன் குடையோடு உற்சவ மூர்த்தி திசைநோக்கி புறப்பட்டு விட்டது!
மோடி வந்தால் இந்தியா தலைநிமிரும் என்றார்கள், அது மொட்டையடிப்பதற்காக என்பது இப்போதுதான் புரிகிறது!
பக்தியின் பெயரால் அடிக்கப்பட்ட மொட்டையால் (முடியால்) ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வருமானமாம் பாலாஜிக்கு! பன்னாட்டுக் கம்பெனிகளின் பாலாஜிகளுக்கு இந்தியாவின் மொத்த தலையையும் அமுக்கிப் பிடிக்கும் வேகத்தில் மோடியின் வாய் ஒலிக்கிறது. “மேக் இன் இந்தியா!” அப்படியாயின் ஏழுமலையானுக்கு நாம் அடித்த மொட்டை? அது “மேட் இன் இண்டியா!” சுதேசி, இந்தியனாய் இரு! இந்தியப் பொருளையே வாங்கு என்றதெல்லாம் பழைய மொட்டை! நீ எவனாய் வேண்டுமானாலும் இரு இந்தியாவில் வந்து மொட்டை அடி, என்பதுதான் புதிய மொட்டை “மேக் இன் இண்டியா!”
பக்தியின் வாடிக்கையாளர்களை வேண்டுமானால், லட்டு டோக்கன், க்யூ, கவுன்ட்டர், பல மணிநேரம் காத்திருப்பு என கட்டுப்படுத்தலாம், ஏழு மலையான் ஒன்றும் எழுந்து போகப் போவதில்லை. மூலதனத்தின் மூர்த்திகளை காக்க வைப்பதும், கட்டுப்படுத்துவதும் தெய்வகுத்தம். ஆதலால், தேசத்தையே சிறப்பு கவுன்டர் மூலம் அவர்களுக்கு திறந்துவிட்டு, அவர்கள் இஷ்ட்டப்படி எழுந்தருள, தொழிலாளர்களை பக்தர்களாக்கி மொட்டையடிக்க தொழிலாளர் நலச் சட்டங்கள் வரை திருத்தப்படும் என வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சுப்ரபாதத்தை தொடங்கிவிட்டார்! மோடி வந்தால் இந்தியா தலைநிமிரும் என்றார்கள், அது மொட்டையடிப்பதற்காக என்பது இப்போதுதான் புரிகிறது! இந்தியாவை ‘பாரத மாதாவாக’ப் பார்க்க வேண்டும் என்று கும்பிடச்சொன்ன ‘பாரத புத்திரர்கள்’ இன்று, “இந்தியாவை சந்தையாக மட்டும் பார்க்காதீர்கள்! தொழில் வாய்ப்பாக பாருங்கள்!” என்று கூப்பிடச் சொல்கிறார்கள்.
மூலதனத்தின் மூர்த்திகளை காக்க வைப்பதும், கட்டுப்படுத்துவதும் தெய்வகுத்தம். (படம் : நன்றி நக்கீரன்)
இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. பா.ஜ.க. வின் முன்னோடி ஜனசங்கம் என்பதே முதலாளிகளுக்கான சங்கம்தான். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிறவிப் பெருங்கடலில் நீந்தி உண்டகட்டி வாங்கிய உத்தமர்கள்தான்! “இந்தியா முன்னேற அந்நிய நேரடி மூலதனம்தான் ஒரே வழி” என்று பேசும் மோடியின் உறுதி, ஜனசங்கத்தின் வரலாற்று வழி சுருதிதான்!
எல்.ஐ.சி, பெல் (BHEL), இந்தியன் ரயில்வே போன்ற அரசு, பொதுத்துறை நிறுவனங்களை அன்னிய முதலாளிகளின் லாபத்திற்காக அழித்துவிட்டு, குறிப்பாக இந்திய உற்பத்திகளையும், அதற்கான வாய்ப்புகளையும் அழித்துவிட்டு, ‘இந்தியாவில் உற்பத்தி’ என்பது ஏதோ முற்போக்கு ஆரவார கூச்சலாக கருத்தை மறைக்கும் அளவுக்கு கத்தி தீர்க்கும் மோடி அரசின் தேசத்துரோக வளர்ச்சியின் முழக்கம்தான் இந்த ‘மேக் இன் இந்தியா!’
“நாடு முழுக்க மதிப்புக் கூட்டு வரியை அமல்படுத்துங்கள்” என்று “லிவ் இன் இண்டியாவை” காலி செய்துவிட்டு, அதாவது உள்ளூர்த் தொழிலை காலிசெய்து விட்டால், ‘மேக் இன் இண்டியாவை’ நான் மேய்ந்து கொள்கிறேன் என்று அம்பானி உடனே துள்ளி எழுகிறார்! அம்பானி, டாடா, அசீம் பிரேம்ஜி இப்படி முதலாளிகளின் வளர்ச்சிதான் தேசத்தின் வளர்ச்சி என்று காட்டியும், இன்னும் இந்தியா முன்னேற வேண்டுமானாலும் பன்னாட்டு முதலாளிகள் கட்டுப்பாடின்றி வந்து தொழில் தொடங்க வேண்டும் என்பதும், மோடியின் மூளையில் உதித்த ஞானம் அல்ல! உலக வர்த்தகக்கழக பெருமானின் வாமன அவதாரத்தின் கட்டளைக்கு கீழ்பணிந்து, சிரம் தாழ்த்தி குடைபிடிக்கும் மோடி அரசின் தரகுப் பிரமோற்சவம் இது!
இந்தியா முன்னேற வேண்டுமானாலும் பன்னாட்டு முதலாளிகள் கட்டுப்பாடின்றி வந்து தொழில் தொடங்க வேண்டும்.
பாருங்கள், ஆதிசங்கரனால் கூட இப்படி ஒரு அத்வைத விளக்கம் தர முடியுமா என்று தெரியவில்லை? மூலதனத்தின் அகண்ட பாரத நாயகன் மோடி சொல்கிறார். “எப்.டி.ஐ என்பது ஃபாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட்” என்பது மட்டுமல்ல “பர்ஸ்ட் டெவலப் இண்டியா”! ஆகா! என்ன ஒரு பாஷ்யம்! அகம் பிரம்மாஸ்மி… அன்னிய மூலதனம்… அதுவே இந்தியா! இந்தியாவே மூலதனம்! நானே சத்யம்… நானே சந்தை!
அடடா! மோடியின் தர்மசாஸ்திரத்தின் அர்த்தம் விளங்க நடுங்குகிறாள் பாரதமாதா! முழுவதும் முதலாளிகளுக்கும், மூலதனத்திற்கும் என்று ஆனபின்பு என் முகத்தின் மேக்கப்பையாவது கொஞ்சம் மாற்றக்கூடாதா! என கதறுகிறாள் பாரதமாதா!
ஒபாமாவே எம் உற்சவம்! பாரத்மாதா எங்கள் தத்துவம்! என ஆதிசங்கரனின் நமட்டுச் சிரிப்போடு அமெரிக்க பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதும் மூடில் மோடி தேசத்தையே மெய் மறக்கிறார்! இனி என்ன? இந்தியாவின் மானம் காக்க வந்த பா.ஜ.க – வின் தாரக மந்திரம் “சர்வம் சமர்ப்பயாமி!”
கோவை ரயில் நிலைய சாலை அன்று சற்று அதிக பரபரப்புடன் ஆனால் சற்றே இருளடைந்தது போல காணப்பட்டது. அனைத்து சூரியக்கதிர்களும் அண்ணாமலை அரங்கினுள் குவிந்ததனாலோ என்னவோ…!
ஆசியுடன் என பிளக்ஸ் வைக்க சட்ட மன்ற உறுப்பினர்கள் இல்லை. அண்ணன் முன்னிலையில் என போர்டு வைக்க மாநகராட்சி உறுப்பினர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ இல்லை.
வழிகாட்டிகளாய் அனுபவசாலிகள் சிலரும், இழப்புகளுடன் சரிவிகிதத்தில் பெருமித உணர்வும் கொண்ட பாட்டாளி வர்க்க இளைஞர்களும், கனவு மின்னும் கண்களுடன் மாணவர்களும் மட்டுமே இந்த மொத்த நிகழ்வின் காரணகர்த்தாக்கள்.
அதோ அங்கே சிலர் வரும் பார்வையாளர்களுக்கு குடிநீர் வேண்டுமே என அதற்காக பாத்திரங்களை கொண்டு வர செல்கின்றனர். இதோ இங்கே சிலர் வரும் மாணவர்களுக்கு இடத்தை அடையாளம் காட்டியவாறு வெளியே நின்று வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர்.
ஒழுங்கான முறையில் கலைத்து விடப்பட்டதொரு தேனீக் கூட்டத்தைப் போல சிவப்பு ஆடைகள் ஆங்காங்கே ஆளுக்கொரு பணியில். உயிர் பிரிந்து இரண்டு தலைமுறைகளை கடந்தும் இன்னும் புரட்சியை நேசிக்கும் இளைஞர்களுக்கு உற்சாகமும் உணர்வும் ஊட்டிக் கொண்டிருக்கும் தோழன் பகத்சிங்கின் பிறந்த நாள் நினைவு கூரலே அந்த நிகழ்வு.
ஆம், கோவை ரயில் நிலையம் அருகே உள்ள அண்ணாமலை அரங்கில் 26-09-2014 அன்று பகத்சிங் பிறந்த நாள் அரங்குக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தோழர் உமா தலைமை வகித்தார்.
பறையாட்டத்துடன் துவங்கிய கூட்டத்தில், முதலாவதாக தோழர் திலீபன் தனது வரவேற்புரையில், சிறப்புரையாற்ற வந்திருக்கும் தோழர் காளியப்பன் அவர்களையும், அதிகாலை சூரியனின் பிரகாசமும் ஆற்றலும் நிறைந்த மாணவ வர்க்கத்தையும் வரவேற்று, மோடியின் கேடித்தனமான “மேக் இன் இண்டியா” எனும் பிரச்சார முழக்கத்தையும் அது இந்தியாவை, அவர்கள் கூற்றுப்படி பாரத மாதாவை எப்படி 22 கூறாக போட்டு அதில் அந்நிய முதலீடு வந்து நோக்கியாவை போல கொள்ளையடிக்க போகிறார்கள் என்று விளக்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அடுத்து, தோழர் உமா தனது தலைமையுரையில் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் பகத்சிங் எப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறார் என்பதனையும் தேசத் துரோகி காந்தி எப்படி பிரபலமாக உள்ளார் என்பதையும் இது எப்படி திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது என்பதனையும் கூறினார். இன்றைய இந்து மத வெறி கட்சிகள் பகத்சிங்கை ஒரு காளி பக்தனாக சித்தரிப்பதையும், உண்மையான பகத் சிங்கின் நாத்திக கருத்துக்களையும் அவரின் ஆளுமையையும் எடுத்துக் கூறினார்.
தோழர் காளியப்பன் தனது சிறப்புரையில், இந்தியாவை ஆண்ட சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியமான பிரிட்டிஷ் அரசுக்கு ஒரே ஒரு பெயர்ச்சொல் சிம்ம சொப்பனமாக விளங்கியதையும் அது எப்படி என்றும் கூறினார். உலகத்துக்கே ஜனநாயகத்தை வழங்கியதாக சொல்லும் வெள்ளைக்காரர்கள் பகத் சிங் என்ற ஒருவனுக்காக, தாம் கூறும் அத்தனை ஜனநாயக நெறிமுறைகளையும் தூக்கி எறிந்து, தமது உண்மை நோக்கங்களை வெளிப்படுத்தும் வண்ணம் செயல்பட வைத்த தீரம் பகத் சிங்கினுடையது.
பகத் சிங்கை பற்றி நம் இளைஞர்கள் தெரிந்து கொள்ளாதது பெரிய துயரம். பகத் சிங்கை பற்றி தெரிந்து கொள்ளாமல் இந்திய சுதந்திரத்தை நாம் படித்தால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக அர்த்தம். பகத்சிங் ஒரு சமத்துவ சமுதாயத்தை படைக்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் இருந்தான். ஆனால் பகத்சிங்கின் அத்துணை லட்சியங்களையும் இந்த காங்கிரசு, பாஜக அரசுகள் குழி தோண்டி புதைத்து சீரழித்து வருகின்றன. இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பிச்சைக்காரர்கள் போல தினசரி பிழைப்புக்கு அலைந்து கொண்டிருக்கையில் மங்கள்யானை கொண்டாடுவது எந்த விதத்தில் சரியாகும். மோடி மேக் இன் இண்டியா திட்டத்தின் மூலம் இந்தியாவை படிப்படியாக விற்கிறார். இந்த தனியார்மயம் எப்படி சமூக சீர்குலைவை ஏற்படுத்துகிறது என்பதனை தெளிவுற எடுத்தியம்பினார்.
அடுத்து, பகுதி தோழர்களின் கலை நிகழ்ச்சியாக இந்து மத வெறி பாசிசத்தையும் மறுகாலனியாக்கத்தையும் அம்பலப்படுத்தும் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன.
இறுதியாக, தோழர் கிரீஷ் மாணவர்களின் இன்றைய நிலையையும் போராட்டமே நமக்கான விடிவுப்பாதை என்பதையும் கூறி நன்றியுரை நல்கினார்.
தகவல் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை
2. தருமபுரி
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் பிறந்தநாள் – செப்டம்பர் 28
இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை! எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதும் இல்லை!
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள அரசு பேருந்து நிலையத்தில் தோழர்கள் பகத்சிங் பிறந்தநாளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளுக்கும் செவ்வணக்கம் செலுத்தினர். படத்தை பார்த்தும், முழக்கங்களை கேட்டும், யாருடைய பிறந்தநாள் என்று விசாரித்து மக்கள் ஆர்வம் காட்டினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தருமபுரி மாவட்டம்
8148055539
3. திருச்சி
ஏகாதிபத்திய எதிர்ப்புப்போராளி மாவீரன் பகத்சிங் பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம்
“புரட்சி ஓங்குக” ! என்ற பகத்சிங்கின் முழக்கம் நாடு முழுக்க வியாபித்தது. தனது 23 – வது வயதிலேயே தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடி இன்னுயிர் ஈந்த பகத்சிங்கின் மரணம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கிளர்ச்சியை இந்நாட்டு இளைஞர்களுக்கு தோற்றுவித்தது. தனது மரணத்தையே தாய் நாட்டின் விடுதலைக்கான வேலைத்திட்டமாக எடுத்துச்சென்ற மாவீரன் பகத்சிங்கின் 107 – வது பிறந்த நாள் விழா செப் 28 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் சார்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கிளை சார்பாக பகத்சிங் பிறந்த நாள் விழா தெருமுனைக்கூட்டம் செப் 28 மாலை 7 மணி அளவில் நடத்தப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக கல்லாங்காடு பகுதியில் தோழர்கள் வீடு வீடாகச்சென்று பகத்சிங் பிறந்த நாள் விழா பிரசுரம் கொடுத்து கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
பறை முழக்கத்துடன் தொடங்கிய தெருமுனைக் கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கல்லாங்காடு பகுதி கிளையைச் சேர்ந்த தோழர் செழியன் தலைமை தாங்கினார்.
தோழர் செழியன் பேசும்போது ‘’ தாய் நாட்டின் விடுதலைக்காக தன் உயிரை தியாகம் செய்து கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் விடுதலைத் தீயை ஏற்படுத்திய தோழர். பகத்சிங் வழியை ஒவ்வொரு இளைஞரும் தேர்ந்தெடுக்க வேண்டும் ‘’ என்று பேசினார்.
அடுத்ததாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்டப் பொருளாளர் தோழர் ஓவியா பகத்சிங் வாழ்வை பார்த்து , அதிலிருந்து இன்றைய இளைஞர்கள் தனது “ரோல்மாடலாக” அஜித், விஜய் போன்ற சினிமா கழிசடைகளை கொண்டிருப்பதைத்தூக்கியெறிந்து பகத்சிங் – ஐ இலட்சிய நாயகனாக் கொண்டு இன்றைய மறுகாலனியாக்க அபாயத்திலிருந்து நாட்டை காக்க முன்வர வேண்டும் என்று பேசினார்.
அதற்கு அடுத்தபடியாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கல்லாங்காடு கிளை தோழர் தமிழ்செல்வன் “கல்லாங்காடு பகுதிக்கு அமைப்பு வருவதற்கு முன்பு காவல்துறையின் கரும்புள்ளியாக இருந்தது, காவல்துறைக்கு வழக்கிற்கு ஆள் கிடைக்கவில்லை என்றால் பொய் வழக்குப்போடுவது என்ற நிலை இருந்தது. அமைப்பு வந்த பிறகு அந்த நிலை முற்றிலும் மாறி இன்று காவல்துறை மட்டும் அல்லாமல் அனைவரும் கல்லாங்காடு பகுதியை மதிக்கும் நிலைக்கு மாறயுள்ளது. நமது பகுதி பின் தங்கிய நிலையில் உள்ளது அதனை மாற்ற இங்குள்ள இளைஞர்கள் பகத்சிங் பாதையில் அணிதிரண்டு நமது உரிமைக்காக போராட வேண்டும். அதற்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி- யின் பின்னால் அணிதிரள வேண்டும்” என்றார்.
மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் மைய கலைக்குழு தோழர்களின் கலை நிகழ்ச்சியும் பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பகத்சிங்கின் தியாத்தையும் இன்றைய இளைஞர்கள் அவரின் பாதையை பின்பற்றி வாழ வேண்டும் என்றும் உணர்வூட்டும் வகையில் நிகழ்ச்சியை நடத்தினர்.
இறுதியாக கல்லாங்காடு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பகுதி கிளை செயலர் தோழர் மணி நன்றியுரையாற்றினார். திரளாக நின்றுகொண்டிருந்த மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சி நிறைவுற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கல்லாங்காடு பகுதி கிளை திருச்சி மாவட்டம்.
அலைபேசி _ 99431 76246.
தொழிலாளி வர்க்கமே எழுச்சி கொள்!
புதுச்சேரி புஜதொமு – வின் பொதுக்கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி!
கடந்த 05.08.2014 அன்று தொழிற்பேட்டைகளில் ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் முதலாளிகளின் ஏவல்படையாக செயல்படும் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளைக் கண்டித்து பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேரணி தொடங்கிய சில நிமிடத்திலேயே, ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் செயல்படும் ரவுடிகள் தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். தொழிலாளர்கள் தங்களைக் தற்காத்துக் கொள்ள திருப்பித் தாக்கினர். இதைப் பயன்படுத்தி போலீசு, தொழிலாளர்களில் 20 பேரை கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொய்வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தது.
கைதான தோழர்களுக்கு பிணை வழங்காமல் தடுத்து அவர்களைச் சிறையில் வைப்பதன் மூலம் அவர்களை அச்சமூட்டி, அதன் மூலம் தங்களை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்களுக்கும், சங்கம் துவங்க நினைக்கும் தொழிலாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் முதலாளிகள் – ஒப்பந்த ரவுடிகள் – போலீசு – நீதிமன்றம் ஆகியோர் கூட்டுக் களவாணிகளாக இருந்து செயல்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் பிணை கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கைதான 23 நாட்களுக்குப் பிறகு 23.09.2014 அன்று தோழர்கள் பிணையில் வெளியே வந்தனர்.
கைது, சிறை போன்றவை எங்களது போராட்ட குணத்தை முடக்கிவிடாது, அது எங்களது போராட்ட உணர்வை மேலும் விசிறியெழச் செய்யும் என்பதை முதலாளிகள் – ஒப்பந்த ரவுடிகள் – போலீசு கூட்டுக் களவாணிகளுக்கு உணர்த்தும் வகையில் இப்போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்லும் வகையில் 09.09.2014 அன்று திருபுவனை பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டு அதற்காக, சம்மந்தப்பட்ட போலிசு நிலையத்தில் அனுமதி கோரி கடிதம் தரப்பட்டது. எதிர்பார்த்தது போலவே போலீசு அனுமதி மறுத்தது.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம், “நீங்கள் கூட்டம் நடத்தினால், ஒப்பந்ததாரர்களால் பிரச்சினை வரும் அதனால் உங்களுக்கு அனுமதி தரமுடியாது” என்பது தான். ஒப்பந்ததாரர்களால் பிரச்சினை வராமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உங்களிடம் உள்ளது என விளக்கிப் பேசப்பட்டது.
“அதைப் பற்றியெல்லாம் பேசமுடியாது. அனுமதி கிடையாது என்றால் கிடையாது தான்” என்று ஒப்பந்ததாரர்களுக்கு பங்காளி போல் பேசி காலம் கடத்துவதிலும், அனுமதி மறுப்பதிலுமிலேயே குறியாக இருந்தது போலீசு. இதற்கு மேல் இவர்களிடம் பேசுவதில் பலன் இல்லை என்பது உணர்ந்து அனுமதி மறுப்பை எழுதிக் கேட்டபோது அதையும் தர மறுத்தது போலீசு.
“நாங்கள் அனுமதி கேட்டு கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் அனுமதி கொடுங்கள்; இல்லையேல் அனுமதி மறுத்து எழுதிக் கொடுங்கள்” என்று விடாப்பிடியாகப் போராடி கேட்ட பிறகு தான் அனுமதி மறுப்பதாக எழுதி கொடுத்தது போலீசு. அதனையும் எப்போதும் போல் கடைசி நேரத்தில் கொடுத்து தாங்கள் முதலாளிகளின் எடுபிடிகள் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.
அதன்பின் 19.09.2014 அன்று பொதுக்கூட்டம் நடத்தும் வகையில் திட்டமிட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அங்கும், காலம் கடத்துவதில் தான் குறியாய் இருந்தது போலிசு. எமது தோழமை அமைப்பான மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு இறுதியாக 23.09.2014 அன்று திருபுவனைக்குப் பதிலாக அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள பகுதியான மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஆணை பெறப்பட்டது.
அந்த ஆணையின் அடிப்படையில் ஆணை பெறப்பட்ட 20.09.2014 அன்றே அனுமதி கோரி போலிசிடம் கடிதம் தரப்பட்டது. அதற்கு பதில் கேட்டபோது இரண்டு நாட்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தது. 22.09.2014 அன்று அழுத்தம் கொடுத்து கறாராக பேசி அனுமதி பற்றிக் கேட்ட போது, “உங்களது அனுமதி கடிதத்தில் ரிட் மனு எண் குறிப்பிடப்படவில்லை” எனக் கூறி, வேறு கடிதம் கேட்டனர். “கடிதத்தில் எண் குறிக்கப்பட்டுள்ளது” என்பதை சுட்டிக் காட்டிய பிறகும், வேறு கடிதத்தில் ரிட் மனு எண் குறிப்பிட்டுத் தருமாறு கேட்டது.
“ஏற்கனவே கொடுத்த கடிதத்தின் மீதான பதில் தெரியாமல் புதிய கடிதம் தரமுடியாது” என கறாராக மறுத்த பிறகு, நீதிமன்ற ஆணை நகலைக் கேட்டது போலிசு. ஆணை கொடுத்தபின் அதைப் பார்த்து, “ஆணையில் தேதியும், இடமும் குறிப்பிடப்படவில்லை” எனக் கூறி மீண்டும் இழுத்தடித்தது போலிசு. அதுவும் குறிக்கப்பட்டுள்ளது என சுட்டிக் காட்டி விளக்கப்பட்டது.
அதன்பின், “அந்த ஆணையில் அனுமதி தருவதாக குறிக்கப்படவில்லை, அனுமதியை பரிசீலிக்க மட்டுமே கூறியுள்ளது. அதனால், பரிசீலித்து முடிவு சொல்வ”தாக கூறியது.
“ஆணையில் அனுமதி தரச் சொல்லித் தான் உத்தரவு உள்ளது. மாற்று இடமான மதகடிப்பட்டில் நடத்த தேவையான விதிமுறைகளைப் பற்றிப் பரிசீலிக்குமாறு தான் குறிப்பிடப்பட்டுள்ளது” என போலிசு அதிகாரியிடம் விளக்கியதும் உடனே, “அதைப் பற்றி தனக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை” என்று தனது எரிச்சலைப் பொரிந்து தள்ளினார்.
மேலும், எஸ்பி தெய்வசிகாமணியோ, “வாங்கிய காசிற்கு மேலாக தனிநபர்களைப் பற்றிப் பேசக்கூடாது, யார் மனதும் புண்படும்படி பேசக் கூடாது, தவறான வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது என நீங்கள் எழுதிக் கொடுத்தால் தான் அனுமதி பற்றிப் பேசமுடியும்” என்று கூவினார்.
“ஏற்கனவே, இவையெல்லாம் அனுமதி கடிதத்தில் விதிமுறைகளாக நீங்கள் கொடுப்பீர்கள். பின் ஏன் தனியாக எழுதித் தரவேண்டும்” எனக் கேட்ட போதும், “எழுதிக் கொடுத்தால் தான் அனுமதி” என்று எஸ்பி கூறிவிட்டார்.
ஆகவே, மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி பகுதியின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் தோழர் ராஜூ அவர்களிடம் தெரிவித்து, அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எஸ்பியிடம், “தனிநபரைப் பற்றிப் பேசினால், சம்மந்தப்பட்ட அந்தத் தனிநபர் புகார் கொடுக்கும் பட்சத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்கத்தான் போகிறீர்கள். மேலும், என்ன பேசப் போகிறோம் என முன்கூட்டியே கடிதம் தர சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. எனவே, தனியாக எழுதித் தரமுடியாது” என கறாராக கூறியவுடன், அவரிடம் அனுமதி அளித்து விடுவதாக கூறிய எஸ்பி, தோழர்களிடமோ, பொதுக்கூட்டம் நடத்தும் பகுதியில் உள்ள கோவில் தீமிதி பிரச்சினை காரணமாக, சிபிஎம் அலுவலகம் எரிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி, உங்கள் அமைப்பினரைத் தவிர யாரையும் பேச அழைக்கமாட்டீர்கள் என எழுதிக் கேட்டார்.
வாங்கின காசுக்காக ஏதாவது எழுதிவாங்கி அதையே காரணம் காட்டி பொதுக்கூட்டத்தைத் தடுத்து விட வேண்டும் என்பதில் அனைத்து அதிகாரிகளும் குறியாய் இருந்தனர். நமக்கோ போலீசுக்கு சட்டநடைமுறைகளைப் பின்பற்றுமாறு சட்டத்தைப் பற்றிக் ’கற்றுக்’ கொடுக்க வேண்டிய சூழல் தான் இருந்தது. அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் வகையில் நாமும் பதில் சொல்ல வேண்டியதாய் இருந்தது.
அதனால், நிகழ்ச்சி நிரலின் படி தான் பொதுக்கூட்டம் நடக்கும். அதனால் தனியாக எழுதித் தரமுடியாது என மறுத்த பின், மீண்டும் அனுமதி தரவேண்டுமென்றால், தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் திருபுவனை பகுதி போலீசு நிலையத்தில் சென்று எஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு வந்தால் தான் தரமுடியும் என்று கூறினார்.
“பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை எழுத்துபூர்வமாக அளித்தால் தான் நாங்கள் வருவோம்” என்றும், “இதற்கு மேல் உங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது. அதனால், அனுமதி தரமுடியாது எனில் அனுமதி மறுத்து கடிதம் கொடுங்கள். நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுக் கொள்கிறோம். மற்றதை நீதிபதி உங்களுக்கு சொல்லுவார்” என்று கூறிய பிறகு, வேறு வழியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தும் அன்று காலை 10.30 மணிக்குத் தான் அனுமதி கொடுத்தனர். அதுவும் மூன்று மணிநேரம் மட்டுமே அனுமதி கொடுத்தது போலீசு. முதலாளிகளும், ஒப்பந்ததாரர்களும் வீசிய எலும்புத் துண்டைக் கவ்விக் கொண்டு, அந்த விசுவாசத்தைக் காட்டுவதற்காகவே இத்தனை கடிதங்கள், இழுத்தடிப்புகள் செய்து புதுச்சேரி முதலாளிகளின் சட்டபூர்வ அடியாள்படையாக பகிரங்கமாக செயல்பட்டது போலீசு.
உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்றும் 22.09.2014 அன்று முழுவதும் இந்த அனுமதிக்காக போலீசு அலுவலகத்தில் காத்துக் கிடந்து தான் வாங்க முடிந்தது. இந்த அரசு, நமது நாட்டை ஜனநாயக நாடு என்றும், மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்து ஜனநாயக உரிமைகளும் உள்ளது என மூலைக்கு மூலை பிரச்சாரம் செய்தாலும், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னையில் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களை வெளிநாட்டு நிறுவனத்தின் லாப வெறிக்காக, காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் இந்த நாடு சுதந்திர நாடு இல்லை என நிரூபித்தது போலீசு. இப்போது இன்னொரு முறை புதுச்சேரியில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
“மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்களே” என்ற வடிவேலுவின் காமெடி போல் ஜனநாயகம் பல்லிளிக்கிறது. ஆனால், மக்கள் வெள்ளந்தியாக இந்த அரசை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு அடித்தாலும் வாங்குவதால் மக்களை ரொம்ப நல்லவர்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறது அரசு. நாம் தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டிருக்கப் போகிறோமா என்பது தான் நம்முன் உள்ள கேள்வி.
இந்தக் கேள்விக்கான பதிலாகத் தான் இந்தப் பொதுக்கூட்டம் இவ்வளவு இடர்ப்பாடுகளுக்குமிடையிலும் அனுமதி வாங்கி நடத்தப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டம் அனுமதியின் படி மிகச் சரியாக 06.00 மணிக்கு தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கியது. பொதுக்கூட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருபுவனை கிளைத் தலைவர் தோழர்.சுதாகர் தலைமை தாங்கினார்.
தோழர்.சுதாகர்
அவர் தனது தலைமையுரையில், அவர் பணிபுரியும் ஸ்ரீ மதர் பிளாஸ்ட் நிறுவனத்தில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி தனது சொந்த அனுபவத்திலிருந்து விளக்கினார். “50 இயந்திரங்களுடன், மூன்று பணிமுறைகளில் இயங்கும் நிறுவனத்தில் வெறும் 30 பேர் மட்டும் தான் நிரந்தரத் தொழிலாளர்கள். மீதமுள்ள 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டவிரோதமான முறையில் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து அந்தத் தொழிலாளர்களை சட்டப்படி பணிநிரந்தரமாக்கக் கோரி சம்மந்தப்பட்ட தொழிலாளர் துறையிடம் மனு கொடுத்தால், ஆய்வு செய்ய வந்த தொழிற்சாலை ஆய்வாளர், நிறுவன அலுவலகத்தில் உட்கார்ந்து சமோசா, டீ சாப்பிட்டுவிட்டு, அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் மறைத்து வைத்த பின்னர் சாவகாசமாக வந்து சுற்றிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டார். தொழிலாளர்களிடம் எந்த விசாரணையும் செய்யவில்லை. இதனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆய்வறிக்கை கேட்டு வாங்கிப் பார்த்தால், நிறுவனத்தில் அனைத்தும் சட்டபூர்வமாக நடக்கிறது என்று அறிக்கை கொடுத்துள்ளது தெரிந்தது. 50 இயந்திரங்கள், மூன்று பணிமுறைகளில் இயங்கினால் 30 தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வாறு நிறுவனத்தை இயக்க முடியும் என்ற அடிப்படையான கேள்வி கேட்கக் கூட தெரியாத முட்டாளா அந்த ஆய்வாளர் என்று நாம் நினைக்கலாம். தொழிலாளர்கள் அமைதியாக இருப்பதால், நம்மை முட்டாளாக நினைக்கிறார்கள். நமது அமைதியைக் கலைத்து ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.
அடுத்து கண்டனவுரை நிகழ்த்திய புஜதொமு மங்கலம் கிளைப் பொருளாளர் தோழர் வீரலட்சுமி, தான் பணிபுரிந்த பவர் சோப் நிறுவனத்தில் தொழிலாளர் படும் துயரங்களை தனது சொந்த அனுபவத்திலிருந்து விளக்கிப் பேசினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
படிக்காத முட்டாளான பவர்சோப் முதலாளி தனபால் என்ற ஒருநபரின் குடும்பம் சொகுசாக இருக்க நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை சூறையாடப்படுகிறது என்பதையும், தொழிலாளர்களின் துயரங்களைப் பற்றி யோசிக்காமல், நிர்வாக அதிகாரியின் கால் புண்படும் என்று கவலைப்படும் போலீசு அதிகாரிகளின் திமிர்த்தனத்தை, அடிமைப் புத்தியை தனது பாணியில் உணர்ச்சிகரமான முறையில் விளக்கிப் பேசினார். சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் பெண்கள் படும் துயரங்களை விளக்கி இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட புதிய ஜனநாயக அரசு ஒன்று தான் தீர்வு என பேசினார்.
கண்டனவுரை நிகழ்த்திய புஜதொமு வின் புதுச்சேரி மாநில அலுவலக செயலாளர் தோழர். லோகநாதன் தனது உரையில், “05.08.2014 அன்று நடந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் போலீசு தான். ஒருபக்கம் அனுமதி கொடுத்து விட்டு மறுபுறம் பிரச்சினை வரும் என்று சொல்லி, அவ்வாறு வந்தால் வழக்குப் போடுவேன் என்றும் சொல்லி, திட்டமிட்ட முறையில் போலீசின் பின்புலத்தில் தான் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாகத் தான் தோழர்கள் மீது பொய்வழக்கு, கைது, சிறை. எனவே, இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம், போலீசு தான் என்பதையும், முதலாளிகள், ஒப்பந்த ரவுடிகளுக்கு அடியாளாக செயல்பட்டு தொழிலாளர்களை ஒடுக்கி தான் மக்களின் விரோதி என்பதை நிரூபித்துள்ளது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
சிறை என்றால் பயப்பட நாங்கள் சமூகக் குற்றம் செய்து சிறை செல்லவில்லை. போராடித் தான் சிறை சென்றுள்ளோம். சிறையிலுள்ள தொழில்முறைக் குற்றவாளிகள் கூட தங்கள் சூழ்நிலைகளைச் சொல்லி குற்றங்களை ஒப்புக் கொள்கிறார்கள். அவர்களுக்குள்ள இந்த நேர்மை கூட காக்கிச்சட்டை போட்ட இந்த குற்றவாளிகளுக்குக் கிடையாது” என போலீசு அதிகாரிகளின் கையாலாகாத்தனத்தை கேலிசெய்தார்.
“சிறையில் எங்களது போராட்டம் தொடர்ந்தது. சிறை அதிகாரிக்கும் நாங்கள் ஒரு போராளியாகத் தான் தெரிந்தோம். சிறை எங்களைத் தான் பூட்டி வைக்க முடிந்தது.. எங்கள் அரசியல் உணர்வுகளைப் பூட்டிவைக்க முடியவில்லை. எனவே, எங்களை சிறையில் தள்ளியதன் மூலம் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது” என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் வகையில் பதிவு செய்தார். தொடர்ந்து போராடுவதன் மூலம் மட்டுமே நமது உரிமைகளை வெல்லமுடியும் என்பதையும் அதற்கு தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே சாத்தியம் என்பதையும், வர்க்கமாய் அணிதிரள வேண்டும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்து சிறப்புரையாற்றிய தமிழ்நாடு மாநில மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜூ தனது உரையில், “இந்தப் பிரச்சினையில் ஆரம்பம் முதலே போலீசு எப்படியெல்லாம் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டது” என்பதை விளக்கிப் பேசினார். “திருபுவனை போலீசின் கட்டுப்பாட்டில் ரவுடிகள் இல்லை; ரவுடிகளின் கட்டுபாட்டில் தான் திருபுவனை போலீசே இருந்தது. அதனால் தான், ரவுடிகளைக் கட்டுப்படுத்தி, தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசு, தொழிலாளர்களை ஒடுக்கி, மக்களை பயமுறுத்தி வருகிறது. மாவட்ட ஆட்சியரோ போராடி கைதான தொழிலாளர்களை தண்டிக்கும் அதிகாரம் இல்லாத போதும், சட்டத்திற்கு அப்பாற்பட்டு நேரடியாக தண்டனை வழங்கி உத்தரவிடுகிறார். இதைப் பற்றி கேட்டால் இங்கு இப்படித்தான் என்று அதிகாரத் திமிரில் பேசுகிறார். சட்டத்தை நிலைநாட்டி மக்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டியவரே சட்டத்தை மீறி தண்டனை வழங்கிய கொடுமை இந்த புதுச்சேரியில் மட்டும் தான் உள்ளது” என்று இந்தப் பிரச்சினையில் போலீசு, அரசின் கூட்டுக் களவாணித் தனத்தை அம்பலப்படுத்தியதுடன், மாவட்ட ஆட்சியரின் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கியதையும் விளக்கினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
“தொழிலாளர்கள் அமைதியாக போராடாமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர் என்று சொல்கிறது போலீசு. இனிமேல், தொழிலாளர்களுக்கான சட்டபூர்வ உரிமைகளைக் கோரி போலீசிடம் முறையிடுங்கள். அவர்கள் அதை பெற்றுத் தரட்டும் அல்லது எவ்வாறு போராடுவது என்று அவர்கள் சொல்லட்டும். தொழிலாளர்கள் போராடினால் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தி போராட்டத்தை ஒடுக்கும் போலீசு, தொழிலாளர்களின் சட்டபூர்வ கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கும் முதலாளிகளையோ அல்லது அதன் மீது நடவடிக்கைகளை எடுக்காத தொழிலாளர்துறை அதிகாரிகளையோ தூக்கிக் கொண்டு போய் வெளுக்க முடியுமா?” என்று கேட்டபோது மக்கள் தங்களது கரவொலி மூலம் போலீசின் கையாலாகத்தனத்தை கேலிசெய்தனர்.
“இந்த அரசின் சட்ட மீறல்கள், அனைத்து மக்கள் போராட்டங்களிலும் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இன்று, விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களும், மாணவர்களிடமிருந்து கல்வியும், மீனவர்களிடமிருந்து கடலும், பழங்குடி மக்களிடமிருந்து காடுகள், மலைகளும் பறிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. போராடும் மக்கள் மீது அரசு வன்முறையால் ஒடுக்குகிறது. இதை மக்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்து, சிறப்புரையாற்றிய புஜதொமுவின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப. தங்கராசு, தனது உரையில், “தொழிலாளர் சட்டதிருத்தங்கள் என்ற பெயரில் தற்போது இருக்கும் அரைகுறை உரிமைகளும் பறிக்கப்படவிருக்கின்றன. தொழிலாளர்கள் சட்டங்கள் திருத்தப்பட்டால், ஒப்பந்ததாரர்கள் என்ற தரகர்கள் முதலாளிகளுக்குத் தேவையில்லை. முதலாளிகளே நேரடியாக அப்பரண்டீஸ் என்ற தொழிற்பழகுநர்களையே தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம். இன்று ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் ஆட்டம் போடும் இவர்களும் நாளைக்கு வீதிக்குத் தான் வந்து ஆகவேண்டும்” என்று நடைமுறையை உணர்த்தும் வகையில் சொன்னார்.
தோழர் சுப. தங்கராசு
மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி, தொழிலாளர் சட்டங்களைத் திருத்தப்போவதாக எந்த வாக்குறுதியும் சொல்லவில்லை. வாக்குறுதியாக கொடுத்ததைச் செய்ய தாமதிக்கும் மோடி, முதலாளிகளுக்கு தாமதமின்றி சேவை செய்வதை விளக்கி மோடியைத் தேர்ந்தெடுத்தது மக்கள் அல்ல. காங்கிரசு மேல் மக்களுக்கிருந்த வெறுப்பை, மோடிக்கு செல்வாக்காக திருப்பும் வகையில் செயல்பட்ட முதலாளிகளே என்பதை விளக்கினார்.
மேலும், இந்த சட்டதிருத்தங்களால் ஏற்படப்போகும் அபாயங்களை உணத்திப் போராட வேண்டிய அவசியத்தை விளக்கினார். 650 கோடி ரூபாய் முதலீட்டிலும், பல்வேறு அரசின் சலுகைகள் மூலமும் தொழிலைத் தொடங்கிய நோக்கியா நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பள வித்தியாசத்தைச் சொல்லி நமது நாட்டுத் தொழிலாளியின் மோசமான நிலையை விளக்கினார். இந்த நிறுவனம் ரூ 89,000 கோடி இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி தொகையை செலுத்தாததால் அந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்க மறுத்தது. ஒரே ஒரு நிறுவனம் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி தொகை மட்டுமே இவ்வளவு என்றால் ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் அடையும் இலாபத்தைக் கணக்கிட்டால் நமது நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குக் கடத்திச் செல்லப்படும் மக்கள் உழைப்பைப் பற்றி நாம் புரிந்து கொள்ளலாம். இந்த விசயத்தில் திமுக, அதிமுக, காங்கிரசு, பாஜக, இடது-வலது போலிகள் என்று எல்லா ஓட்டுக் கட்சிகளும் வித்தியாசம் இன்றி செயல்படுகிறது என்பதை விளக்கிப் பேசினார். இது போன்ற சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால், ஓட்டுக் கட்சிகளை நம்பாமல் மாற்று அரசை நிறுவுவது தான் வழி என்று விளக்கி தனது உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக மக்கள் கலை இலக்கிய கழகம் மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி அங்கு திரண்டிருந்த தொழிலாளர்களின் போராட்ட உணர்வை தட்டி எழுப்புவதாக இருந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
புஜதொமு திருபுவனை கிளைச் செயலாளர் தோழர் சக்திவேல் நன்றியுரைக்குப் பின் பாட்டாளிவர்க்க சர்வதேசியகீதத்துடன் நிறைவு பெற்றது.
இப்பொதுக்கூட்டம் இப்பகுதி மக்களிடமும், தொழிலாளர்களிடமும் போராடும் எண்ணத்தைத் தூண்டியுள்ளதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது ஆதரவைப் பதிவு செய்து வருகின்றனர்.
தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி. தொடர்புக்கு : 9597789801