(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)
நீதிபதிகளை இவ்வாறு சித்தரிப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகிவிடுமோ? ஆகலாம். “நீதிபதியை அடிப்பது அவமதிப்பில்லை. அடித்ததை சொன்னால் அவமதிப்பா?” என்று கேட்கிறீர்களா – அது அப்படித்தான். சாக்கடைப் பிரச்சினை, குப்பைத் தொட்டிப் பிரச்சினைகளை suo moto வாக (யாரும் மனுச்செய்யாதபோதிலும தானே முன்வந்து) எடுத்துக் கொண்டு நீதி வழங்குபவர்கள் நீதியரசர்கள்.
பிப் 19 அன்று தானே அடிபட்ட பிரச்சினையில் “தானே முன்வந்து’ போலீசாரைக் கைது செய்யும்படி அவர்கள் ஆணை பிறப்பிக்கவில்லை. அப்படிப் பிறப்பித்திருந்தால் வழக்குரைஞர் போராட்டம் தேவையில்லை. இரகசியமாக அடி வாங்கியிருந்தால் கூட பரவாயில்லை. டி.வி காமெரா முன் உலகறிய அடிவாங்கியும் நீதித்துறை தன் ஆதிகாரத்தை செலுத்த மறுக்கிறது. சு.சாமியை முட்டையால் அடித்த பிரச்சினையில் வழக்குரைஞர்கள் மீது “கொலை முயற்சி” வழக்கு போட்டிருக்கிறது போலீசு. ஆனால் நீதிபதிகளைக் கட்டையால் அடித்த பிரச்சினையில் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இதெல்லாம் கற்றுணர்ந்த நீதிபதிகளுக்குத் தெரியாதா? உச்ச நீதிமன்றத்துக்குப் புரியாதா? இந்த மவுனத்தை என்னவென்று புரிந்து கொள்வது? போலீசுக்கு நீதித்துறை பயந்துவிட்டது என்று சொல்லலாம். அது ஓரளவு உண்மை. ஆனால் முழு உண்மை அல்ல. சட்டமன்றம், நிர்வாகம், போலீசு, நீதித்துறை, சுதந்திர ஊடகங்கள் என்ற “ஜனநாயகத்தின் தூண்கள்” தனித்தனி நிறுவனங்கள் போலவும், ஒன்றை ஒன்று கட்டுப்படுத்துவதன் மூலம், இந்தத் தூண்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகவும் கூறிவருகிறது ஆளும் வர்க்கம்.
உண்மை அதுவல்ல, அவை அனைத்தும் ஒரே அரசு எந்திரத்தின் பல கரங்கள்தான் என்பது இப்போது விளக்கமாகியிருக்கிறது. ஈழப்பிரச்சினைக்காகத் தொடங்கிய வழக்குரைஞர் போராட்டம் ‘வரம்பு மீறுவதை’ அரசின் எந்தக் கரமும் விரும்பவில்லை. அதன் விளைவுதான் தாக்குதல். தாக்குதலில் தாங்களே அடிபட்ட போதும் கூட நீதிபதிகள் சாதிக்கும் பெருந்தன்மையான மவுனத்திற்குக் காரணம், நாளை அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய பதவிகளோ, பதவி உயர்வுகளோ மட்டும் அல்ல. அவர்களுடைய மவுனத்திற்குக் காரணம் பொதுநலன். இந்த மோதல் ஒரு அரசமைப்பு நெருக்கடியாக மாறிவிடாமல் தடுப்பதன் மூலம் இந்த ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவர்களுடைய ‘பொதுநலனக் கண்ணோட்டம்’.
இந்தப் பொதுநலக் கண்ணோட்டத்தின் உண்மையான பெயர் போலீசு இராச்சியம். சீமான் என்.எஸ்.ஏவில் கைது, கொளத்தூர் மணி கைது, சோனியாவை சேலை கட்டிய முசோலினி என்று பேசியதற்காக நாஞ்சில் சம்பத் கைது, வினவு கருத்துப் படத்திற்காக கைது செய்யப்பட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்களுக்கு பிணையில்லை, கல்லூரி மாணவரிடம் பிரச்சாரம் செய்ததற்காக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் கைது… இவையெல்லாம் ஈழ ஆதரவுப் போராட்டங்களின் மீதான ஒடுக்குமுறைகள் மட்டுமல்ல. போலீசு இராச்சியம் தொடங்குவதன் அறிவிப்புகள்.
உயர்நீதி மன்றப் பிரச்சினையில் போலீசைத் தண்டிக்கவேண்டும் என்ற வழக்குரைஞர்களின் கோரிக்கையை எந்த ஓட்டுக் கட்சியும் ஆதரிக்கவில்லை. கருணாநிதியைத் திட்டுவது என்பதற்கு மேல் ஒரு படி கூட யாரும் தாண்டிக் கால் வைப்பதில்லை. அரசின் மற்றெல்லா உறுப்புகளுடைய செயல்பாடுகளையும் மெல்லமெல்ல போலீசு கைப்பற்றிக் கொண்டு வருகிறது. கடைசியாக நீதித்துறையை மேலாதிக்கம் செய்யும் நடவடிக்கையும் இனிதே நிறைவேறியிருக்கிறது.
சிங்கள இராணுவக் கொடுங்கோன்மைக்கு எதிராக தமிழகம் நடத்திய போராட்டத்தின் முடிவில், போலீசு கொடுங்கோன்மை நிலைநாட்டப் பட்டிருக்கிறது. அங்கே தன்னுரிமைக்காகப் போராடும் குற்றத்துக்காக மீது குண்டுவீச்சு. இங்கே தன்னுரிமையை ஆதரித்துக் குரல் கொடுக்கும் குற்றத்துக்கே தடியடி. அதற்குப் பெயர் இராணுவ ஆட்சியாம்! இதற்குப் பெயர் ஜனநாயகமாம்!
இன்று உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையை எதிர்த்து வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டத்தில் இடம் பெறும் முழக்கங்களையும், கேலிச்சித்திரத்தையும் இங்கே உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். இந்தப் போராட்டத்தை ஆதரிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
1 – Sometimes context is everything….”
THE HINDU editorial dtd 7th March 8, 2009 hailing Srikrishna report.
விசாரணைக்கு வந்த ஸ்ரீகிருஷ்ணா, தி.மு.க சார்பு முன்னாள் நீதிபதி மோகன் வீட்டில் விருந்துண்டது ஏன்?
அறிக்கை வெளிவருவதற்கு முன்பே, “ஸ்ரீகிருஷ்ணா எனது நண்பர்” என்றும்”ஐகோர்ட் சம்பவத்தில் வக்கீல் – போலீஸ் இரண்டு பேர் மீதும்தான் தவறு” என்றும் முன்னாள் நீதிபதி மோகன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது எப்படி?
தாமிரவருணிப் படுகொலையை “ஆற்றில் விழுந்து செத்தார்கள்”என்று கூறி நீதிபதி மோகன் அன்று கொடுத்த அறிக்கையும்,இன்று ஸ்ரீகிருஷ்ணா கொடுத்திருக்கும் அறிக்கையும் ‘அசப்பில்’ ஒரே மாதிரி இருப்பது ஏன்?
Yes, SOMETIMES CONTEXT IS EVERYTHING !
2 – “Sometimes context is everything….”
THE HINDU editorial dtd 7th March 8, 2009 hailing Srikrishna report.
2006 முதல் 2008 வரை இலங்கையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் 20 பேர். அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு ஓடியவர்கள் அதைவிட அதிகம்.
உலகிலேயே பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் முதலிடம் இராக். இரண்டாவது இடம் இலங்கை.
ஸ்ரீலங்கா மாஸ் மீடியா சொசைட்டி என்ற அரசின் அடிவருடி அமைப்பு 2008 இல் வழங்கிய விருதை இலங்கைப் பத்திரிகையான சண்டே டைம்ஸ் புறக்கணித்தது. அதே அமைப்பு வழங்கிய ‘ஆசியாவின் சிறந்த பத்திரிகையாளர்’ என்ற விருதை
‘இந்து’ ராம் வாங்கிக்கொண்டார்.
சமீபத்தில் இந்து ராமின் பாட்டி இறந்ததற்கு ராஜபக்சே இரங்கல் செய்தி அனுப்பினார்.
Yes, SOMETIMES CONTEXT IS EVERYTHING !
3-“Sometimes context is everything….”
THE HINDU editorial dtd 7th March 8, 2009 hailing Srikrishna report.
சுப்பிரமணிய சாமி முட்டையடி பட்டால் ….. சோ தலையங்கம்
சோ வை மொழிபெயர்த்தால் ……. இந்து வின் ஆவேசக் கட்டுரைகள்
இந்து செய்திகளைத் தொகுத்தால் ……. ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை
” I feel personally vindicated by the factual narration in the Srikrishna report” -Subramanian Swamy, Indian Exp, March, 7
Yes, SOMETIMES CONTEXT IS EVERYTHING !
4
உயர்நீதிமன்ற காவல் நிலையத்தை எரித்தது யார்?
அங்கிருந்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள்
வெடிக்காத மர்மம் என்ன?
எரித்தவர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தி விட்டார்களா?
5
முட்டை அடித்ததற்கு 5 நீதிபதி விசாரணை!
நீதிபதியையே அடித்தால்
எத்தனை நீதிபதிகள் விசாரணை?
6
சு.சாமியின் முகத்தில் முட்டை வழிந்தால் … 356 !!!
வக்கீல்களின் முகத்தில் இரத்தம் வழிந்தால்….
விசாரணைக் கமிஷனா???
தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
தொடர்புடைய பதிவுகள்:
தமிழக போலீசை காக்க ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் !
நீதிமன்றத்தால் தேடப்படும் போலீசு குற்றவாளிகள் ! படங்கள் !!
போலீசு வக்கீல் மோதலல்ல ! ஈழத்துக்கு எதிரான பார்ப்பன பாசிச பேயாட்டம் !!
வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி !
மறுமொழி எழுத இங்கே அழுத்தவும்
மறுமொழிகள் குறித்து வினவின் கொள்கை:
- கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்
- வினவு பெயரில் வரும் பின்னூட்டங்களைத் தவிர மற்றவர்களின் கருத்துக்கு அவரவரே பொறுப்பு. அது வினவு கருத்தாக புரிந்து கொள்ள வேண்டாம்
- ஆரோக்கியமான விவாதங்களை வளர்க்கும் பொருட்டே இந்த கொள்கை முடிவுகள். அனைவரும் புரிந்துணர்வுடன் ஆதரிக்குமாறு கோருகிறோம்.







85 Responses to “ஈழம்: போலீசு இராச்சியமாகிறது தமிழகம்! கருத்துப்படம், முழக்கங்கள்!”
//உயர்நீதிமன்ற காவல் நிலையத்தை எரித்தது யார்?
அங்கிருந்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள்
வெடிக்காத மர்மம் என்ன?
எரித்தவர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தி விட்டார்களா?//
அதையெல்லாம் இலங்கைக்கு அனுப்பிட்டாய்ங்களாம்…
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் – மறுமொழியில் ரஹமத் அலி கூறியவையின் ஒரு பகுதியை நீதிபதிகளின் யோக்கியதைக்கு சான்றாக தருகிறேன். “the magistrates were told by the higher judiciary not to bother about miscarriage of justice by disposing cases wihtin a timeframe. the lower judiciary was also told not to bother too much about the innocence of the accused and the higher judiciary will correct any mistake. they were mere words, higher judicary increasingly became overloaded and eventually the higher judicary also failed in its duty to render justice. i have seen innocents getting convicted by the trial court and the conviction getting confirmed by even by the supreme court. to add to all this some pliable magistrates, who depended solely on the police, did whatever the police asked.”
முக்கி முக்கி தமிழ் பேசும் எவனுமே, பக்கத்து இலையைதான் நக்குறான். அட நம்ம இந்து ராமையும், சு சாமியையும் தான் சொல்கிறேன்.
சாமிங்களா, தொடங்கியதை(ஈழ மக்களுக்கானது) விட்டுட்டீங்களே?
யாருக்கு வெற்றி? சொதப்பீட்டீங்களே?
போலீஸ் அராஜகம், ஒரு தலைப் பட்ச interim report, ஈழப் பிரச்சினையில் வக்கீல்கள் தலையிட வேண்டுமா என்பதைப் பற்றிய என் கருத்துக்களைத் தவிர்த்து வக்கீல்களின் approach பற்றி மட்டுமே இங்கு எழுதுகிறேன்.
ஈழ ஆதரவுக் கொள்கையை ஒழுங்காக எடுத்து சொல்ல ஒரு statesman கூட வக்கீல்கள் பக்கம் இல்லாமல் போனது வெட்கக்கேடு. அரை வேக்காடுகள் அழுகிய முட்டையை சு. சாமி மீது வீசி தாங்களே தங்களைப் பாராட்டிக் கொண்டுவிட்டு அடுத்த நாள் கைதாவதைத் தவிர்க்க முயற்சித்ததால்தான் போலீஸ் காரர்களால் அத்து மீற முடிந்தது. உண்மையாகவே ஈழத்தமிழர்கள் நலனைப் பற்றிப் பேசுவதற்கு யாரும் இல்லாமல் இப்போது வக்கீல்கள் எல்லோரும் தன் பிரச்சினையப் பார்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. ஒரு சில முட்டாள்கள் உணர்ச்சிவசப் பட்டு எல்லை மீறியதால் மொத்தப் போராட்டமும் திசை மாறி விட்டது. மொத்தத்தில் இது வக்கீல்களுக்குத் தோல்விதான்.
வினவு கூட இந்த நடத்தையால் இவர்களது அடிப்படையான வாதம் அடிபட்டுப் போகும் என்று உணறாமல் முட்டை அடியை பெருமைப் படுத்திக் கொண்டாடியது வருந்தத் தக்கது.
வக்கீல்கள் தற்காலிக சந்தோஷத்தை ஒதுக்கி, எடுத்துக் கொண்ட கொள்கைக்குத் தேவையான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடு பட்டிருக்க வேண்டும்
The government has suppressed the students’ struggle by closing the colleges indefinitely. The lawyers’ struggle has been put to an end by unleashing violence of police on them. All these measures recall the previous Jaya government where the DMK bore t he brunt of damage. Karunanithi during the ADMK regime said Jaya had turned Tamil Nadu into dark by giving power to police.The irony here is the same person five years after in his granddaughter’s wedding described police as one of his eyes–which are considered to be the light of our body.
வித்தகனின் கருத்து பொருத்தமானது.
தமிழின உணர்வு முதன்மை பெறவேண்டும், உணர்ச்சியல்ல.
உணர்வுதான் மெல்லென ஒடும் தண்ணீர். அது கல்லையும் ஊடறத்துப் பாயும்.
Thamilnaddila inraikka police ravudisiyam
Anraikke karthikeyan kalaththila irunthu
police raudisamthane. aanal manavarklil
kaivaikkathenko – - -
கடந்த காலங்களில், நீதியையும், நீதிபதிகளின் மரியாதையயும் காப்பதற்கு என்னென்ன “மைலார்டுகள்” செய்தார்கள் என்பதை மலரும் நினைவுகளாக ஒட்டிப்பார்க்கும் பொழுது, உங்கள் கார்ட்டூன் சிரிப்பை வரவழைத்தாலும் ஆழமானதாக படுகிறது.
//அனைத்தும் ஒரே அரசு எந்திரத்தின் பல கரங்கள் தான்//
ஒரு நிகழ்வு பல புரியாத விசயங்களை புரியவைத்துவிடுகிறது
// ஆனால் நீதிபதிகளைக் கட்டையால் அடித்த பிரச்சினையில் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. //
இது ரொம்பவே ஓவர். போலீஸ் தடியடிக்காக எந்த வழக்கும் எப்போதும் எந்த ஆட்சியிலும் எந்த நாட்டிலும் எந்த இசத்திலும் பதிவு செய்யப்படுவதில்லை.
// இவையெல்லாம் ஈழ ஆதரவுப் போராட்டங்களின் மீதான ஒடுக்குமுறைகள் மட்டுமல்ல. போலீசு இராச்சியம் தொடங்குவதன் அறிவிப்புகள். //
மீண்டும் மீண்டும் மிகைபடுத்துகிறீர்கள். போலீஸ் அத்து மீறி இருக்கிறது. இதை ஸ்ரீகிருஷ்ணா உட்பட யாரும் மறுத்து நான் இது வரை பார்க்கவில்லை. போலீசை ஆதரித்து பேசுபவர்களும் போலீஸ் செய்தது சரி என்று போலீஸ் துறையைத் தவிர ஒருவரும் சொல்லி நான் பார்க்கவில்லை. அவர்கள் தவறுக்கு காரணங்கள் இருக்கின்றன, அவர்கள் அத்து மீறி விட்டார்கள், வக்கீல்கள் மீது அதிக தவறு இருக்கிறது, வக்கீல்கள்தான் முதல் தவறு செய்தவர்கள் என்றுதான் வாதிடுகிறார்கள். ஆனால் இங்கே பலரும், சீமானின் கருத்துரிமைக்காக போராடும் ம.க.இ.க. மருதியன் உட்பட பலரும், இங்கே வக்கீல்கள் ஒரு பிழையும் இல்லாதவர்கள் போல பேசுகின்றனர். வினவு, நீங்களும் வெளிப்படையாக சொல்லுங்கள் – நானும் மீண்டும் ஒரு முறை என்னடைய பதில் கிடைக்காத கேள்விய நினைவூட்டுகிறேன் – இந்த நீதமன்ற சம்பவங்களில் வக்கீல்கள் குற்றமற்றவர்களா?
வக்கீல்கள் குற்றமற்றவர்களே
அதற்கு ஆதாரம் police உள்ளே போனதுதான்.
குறிப்பிட்ட இந்த பிரச்சனையில் வக்கீல்கள் குற்றமற்றவர்கள் என்பது இன்னும் உங்களுக்கு புரியவில்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை.
வக்கீல்கள் குற்றமற்றவர்கள் என்ற வாதம் சரியல்ல. நீதி மன்றத்தில் வைத்து சு. சாமியின் மீது முட்டை வீசியது தவறு. அவரை சாதிப் பேர் சொல்லித்திட்டியது தவறு. அவனைக் கைது செய் அதன் பின் தான் நாங்கள் வருவோம் என்று போலீசிடம் சொன்னதும் தவறு. இது வக்கீல்கள் செய்த தவறுகள். போலீஸ் செய்த குற்றப் பட்டியல் தனி.
வேடிக்கை என்னவென்றால் எனக்கு் எள்ளளவும் மரியாதை இல்லாத என்றுமே நான் விரும்பாத சு.சாமி நாம் கை நீட்டிக் குறை சொல்லும் படி எந்தக் குற்றமும் செய்யாததே. மற்ற வக்கீல்கள் வேலை நிறுத்தத்தில் இருக்கும் போது சிதம்பரம் கோவில் வழக்குக்கு ஆஜராக வந்தது தர்க்க ரீதியாக தவறுதானே தவிற அதற்கு முட்டை எறி தண்டனை தானாகவே ஒரு சில வக்கீல்கள் வழங்கியது அடி முட்டாள்தனம். சிந்திக்காமல் எடுத்த இந்த முடிவால் இன்று கவனம் திசை மாறி போராட்டம் பிசுபிசுத்துக் கொண்டிருக்கிறது.
அதெல்லாம் இருக்கட்டும் ஆர்.வி
சுசாமி எதுக்கு அங்கே வந்தார். ஏதாவது கருத்து உரிமையைப் பாதுகாப்பதற்காகவா வந்தார். இல்லையே… ஏற்கனவே அரசு போலீசு சட்டம் இதெல்லாம் வசதி உள்ளவனுக்குதான் என்று தெரிந்து கொண்ட மக்களுக்கு இருக்குற ஒரே புகலிடம் கடவுள் நம்பிக்கை. அதக் கூட காசு இருந்தாதான் பார்க்க விடுவேன் என்று சொல்லியும் அவங்க நம்பிக்கைய நோகடிக்கும் விதமாக அங்கே கோவிலில் மது மாது என் இருந்து கொண்டு நகை பணம என ஊழல் பேர்வழிகளாக இருந்த ஜெயா நிகர் தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஒரே சாதி என்பதற்காகத்தானே அந்த மாமா வந்தார். ஆகவே அவரது மனதில் இயல்பாக பிராமணரல்லாதோர் மீதான வன்மம் ஏகலைவன் மீது துரோணனுக்கு இருந்தது போல இருந்து தானே இருக்கும் அந்த சூழலில் ஏற்கனவே நடைபெறும் ஈழ ஆதரவு போராட்டத்தில் ஈடுபடுபவர்க்ள பற்றிய கோட்டா என்ற இழிவுபடுத்தும் கண்ணோட்டம் இருக்கும் ஒரு நபர், பொதுவாக அதிக அலம்பலுடன் வடிவேலு டைப்பில் பேசும் ஒரு நபர் வழக்கறிஞர்கள் பற்றி கமாண்ட் எதுவும் அடிக்காமல் போயிருப்பார் என்பதை உங்களாலாவது நம்ப முடிகின்றதா? எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ததுடன் கைது செய்யாமல் விட்டது தவறுதான்… இன்று வரை அதனை நடைமுறைப் படுத்த முடியவில்லையே ஏன்… தன்னை சிபிஎம் உறுப்பினராக அடையாளப்படுத்தும் இந்து பத்திரிக்கை இவனுக்காக தலையங்கம் எழுதிய காரணம் கருத்து சுதந்திரமா.. அது என்ன கருத்து … பார்ப்பன் அடிமைத்தனத்தை மறறவர்கள் ஏற்க வேண்டும் என்ற மரபு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதுதானே… இது கருத்து சுதந்திரம் என்றால் பார்ப்பனரல்லாதோரின் தாயின் பாலியல் ஒழுக்கத்தை பற்றிய பழைய சுசாமி மனுவை ஏற்றுக் கொண்டது போல தான் இப்போது ம் ஏற்க வேண்டும் என சொல்ல வருகின்றீர்கள்… கருத்து சுதந்திரம் மற்றவர்களின் மனித உரிமையை மீறியுள்ளதே அதற்கு என்ன பரிகாரம் செய்யப் போகின்றீர்கள்… .இங்கு…
ஒரு வக்கீலை விட சுசாமி எப்படி முக்கியமானவர் அல்லது கைது செய்யப்படுவதை விட உயர்ந்த அல்லது சட்டத்திற்கும் மேலே நிற்பவர்…. ஒரு பார்ப்பன விழுமியத்திலிருந்தே கேட்கிறேன் ஓரு சங்கராச்சாரியை விட உயர்ந்தவரா… அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் என்ற பயமா… அப்படி என்றால் கூட யாரிடம் அனுமதி பெற்று அவரைக் கைது செய்ய வேண்டும்… சிபு சோரனை கைது செய்ய முடியுமென்றால் ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத காபந்து அமைச்சரவையில் சிஐஏ வின் கண்ணசைவிற்கு ஏற்ப பல கோமாளிகள் ஆண்ட உலகமயமாக்கலுக்கு வித்திடுவதற்காக மாமா வேலை பார்த்த இந்த மாமா விற்கு ஒரு டிராபிக் ராமாசாமி அளவிற்கு கூட பாதுகாப்பு தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கேவலம் ஒரு கூமுட்டை அடித்ததற்காக 356 எனப் பேசுபவனை ஒரு கிராமத்து பிரசிடெண்டாக வைத்தால் கூட அறிவுளள் தமிழகத்து மக்கள் கொதித்து போவார்கள். எனவே இவன் போன்ற நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு சிறப்பாக செய்வது என்ற பெயரில் மக்களது வரிப்பணம் வீணடிக்கப் படுகின்றது. இதுபோல மைனாரிட்டியாக தேர்வான முன்னாள் அமைச்சரவையினர் அனைவருகக்கும் இதனை ரத்து செய்ய ஒரு தனிச்சட்டம் தேவை.
சாதியை பற்றி திட்டியதாக சொன்னீர்கள் என்ன சொன்னார்கள் என்று தெளிவாக சொல்லுங்கள்… கொழுப்பெடுத்த பார்ப்பன கூட்டம் இதுதானே… என்ன தவறு உள்ளது … கட்சி அதன் கொள்கை என்ற வேறுபாடு எல்லாம் மீறி அந்த சாதிதான் ஒன்று திரண்டது திரண்டும் வருகிறது அப்புறம் எப்படி சொல்ல வேண்டும்… புரியவில்லை… சுசாமி சொன்ன கோட்டா விற்கு என்ன அர்த்தம் அதத்தானே திருப்பி சொன்னார்கள்… எல்லாவற்றுக்கும் மேல் ஒரு ஜனநாயக மறுப்புக்காக மட்டும்தானே சாதி என்பதற்காக கூட்டணி அமைத்தார்கள்… அதனை கருத்து சுதந்திரத்தை மதிகக்கும் தாங்கள் ஆதரிப்பது முரண் இல்லையா..
உலகறிந்த அந்த மாமா அன்று சிஎன்என் டிவிக்கு பேட்டி தர்றான். இவங்க எல்லாம் மாமா பசங்க என்று வக்கீல்களை… விடுதலைப் புலிகளிடம் காசு வாங்கி என்னை அடித்தார்கள் என்று … கனிமொழியோட சுவிஸ் கணக்கு தொடங்க பட்டத ஸமெல் பண்ணத் தெரிந்த, பூங்கோதைக்கு ஆப்பு வைக்க கேஸட் போட ஆள்களை போலீசில் வைத்திருக்கும், பின்னாடியே சிஎன்என் ஐ வரவைத்து முன்னாடி போய் கோட்டா பசங்க என்று உளறி இஷ்யூ ஆக்க தெரிந்த, சம்பந்தமே இல்லது சந்திரசேகர் மாமாட்ட போய் காபினட் ஆகத் தெரிந்த, …. இப்பிடி எல்லாத்துக்குமே பாப்பு வேல பாக்காமலா அவரு போக முடியும்.. அதுக்காகவே அவருக்கு பாப்பான் என்று பேர் வைக்கலாமே…. இதெல்லாம் இருக்கட்டும்… வாதி ஒரு புகார் தருகிறான் பிரதிவாதி ஒரு புகார் தர்றான். இருவரையும் கைது செய்துதானே போலீஸ் விசாரிக்கும் அதுதானே நாட்டில் நடப்பில் உள்ளது.. 20 பேருமே முட்டை அடித்தார்கள் என்றால் கூட பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேஸ்வரன் மீது விழந்த பிரம்படி மக்கள் மீது மட்டுமல்ல அடித்த பாண்டிய மன்னன் மீதும்தானே விழுந்தது. அனைத்து வக்கீல்களுக்கும் விழுந்த அடி அடிக்க காரணமான சுசாமி மீது விழாத மர்மம் என்ன… கொலையே செய்தாலும் பார்ப்பானுக்கு தண்டணை கிடையாது என்ற மனுநீதியா… அல்லது லத்தியின் விளையாட்டு சுதந்திரமா…
என்னை கேட்டால் இதெல்லாம் உண்மை இல்லை என நீங்கள் வாதிட்டாலும் சாதி அபிமானத்திற்காக ஒருவன் ஒரு அநீதியான காரியத்திற்கு ஆதரவாக வாதிட வந்தால் அதுவும் படித்தவனாக இருந்தால் கழுதையில ஏற்றி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி சாணியக் கரைச்சு ஊற்றி விளக்குமாற்றால் வெஞ்சாமரப் பார்வை பார்த்திருக்க வேண்டும். இதெல்லாம் கோட்டு சூட்டு போட்டு படிக்க வந்ததால மத்தவங்களுக்கு மறந்து போச்சுன்னு நினைக்கின்றேன். தே… பையா என்று என்னை அழைப்பதற்கு உங்களுக்கு கருத்து இருப்பதாகவும் அக்கருத்துக்கு நான் மதிப்பளித்து உங்களைப் பேச வைக்க அனுமதிக்க வேண்டுமென்றால் அதை அப்படியே vice versa ஆக நீங்கள் ஒத்துக கொள்வீர்களா… வக்கீல்கள் போலீஸ ஸ்டேஷனக் கொளுத்துனத்துக்கு என்ன ஆதாரம் இருக்கு…
சட்டத்தின் கண்ணோட்டத்தில் தவறுகள் இருபக்கமும், அதாவது, ஒரு வக்கீல், அல்லது பல வக்கீல்கள். ஒரு போலீஸ், அல்லது பல போலீஸ்காரர்கள் என இருக்கிறது. இதை யாரும் மறுக்கமுடியாது. எத்தனை வக்கீல்கள் முட்டை எறிந்தார்கள்? நீங்கள் எதற்காக அங்கு கூடியிருந்த அத்தனை வக்கீல்களும் குற்றமற்றவர்களா? எனக் கேட்டு அத்தனைத்து வக்கீல்களும் குற்றவாளிகள் போன்ற கேள்விகளை தொடுக்கிறீர்கள்? ஒரு குற்றவாளியை தனித்து இனம்காண முடியாத போலீஸா தமிழ்நாட்டில் உள்ளது. இது போலீஸ் இலாகாவுக்கே வெட்கக்கேடானது இல்லையா? சுவாமிகள் தன்மீது முட்டை எறியும்படி ஒரு சில வக்கீல்களையும், பின்பு போலீஸ் தடியடிக்காக, ஒரு சில போலீஸ்காரர்களை அங்கு கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும்படி ஏற்பாடுகள் செய்திருக்கவும் வழிகள் உண்டா இல்லையா?.
சென்னை: தங்களை குறை சொன்ன நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை வழக்கறிஞர்கள் எரித்து போராட்டம் நடத்தினர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்றும் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தங்களையும் குறை சொன்ன நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் நகலை எரித்தும் வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர்.
அதே போல தமிழகத்தின் வேறு சில இடங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோரின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டுள்ளன.
வீரமணி கண்டனம்:
இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இப்போது நடைபெறும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் அரசியல் நுழைந்து விட்டது என்று அச்சம் பொதுவானவர்களுக்கு இருக்கிறது. அதைப் போக்க வேண்டிய கடமை வழக்கறிஞர் சகோதரர்களுக்கு உண்டு என்று நேற்றும் நாம் விடுத்த அறிக்கை நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை இப்போது நடந்துள்ள சம்பவங்கள் நிரூபித்துள்ளன.
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை எரிப்பதைக் கூட, அவர்கள் அதிருப்தியைக் காட்ட செய்தனர் என்று ஒரு சமாதானம் சிலர் கூறலாம்.
ஆனால், முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் உருவப்படங்களை அங்கே எரிக்க வேண்டிய அவசியம் என்ன? எந்தவிதத்தில் அவ்விரு தலைவர்கள் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைக்குப் பொறுப்பாவார்கள்?
தங்கள் போராட்டத்துக்கு காவல்துறை வரக்கூடாது என்று கூறிவிட்டு இப்படி நடந்துள்ளது. இது அப்பட்டமான அரசியல். திமுக-காங்கிரஸ் வழக்குரைஞர்களே, இதற்குப் பிறகும் உங்கள் கடமை என்ன? இது கண்டு ஆத்திரம் வர வேண்டாமா? வழக்கம்போல் கோஷ்டி கானம் பாடுவதுதானா?.
நீங்கள் இந்த ‘அரசியல் நடத்துவோருடன்’ இல்லை என்று காட்டிட நீதிமன்றப் புறக்கணிப்பை கைவிட்டு விட்டு வழக்குரைஞர்களுக்குரிய கடமைகளை பணிகளைச் செய்வதோடு, இதற்கு அறவழியில் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டாமா?.
இது பற்றி திராவிடர் கழக வழக்குரைஞர்களின் அவசரக் கூட்டம் நாளை எனது தலைமையில் பெரியார் திடலில் நடைபெறும்போது இதற்கென சில முடிவுகளை மேற்கொள்வோம். திமுக, காங்கிரஸ் வழக்குரைஞர்களே, உங்கள் கட்சித் தலைவர்கள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இழிவுபடுத்தப்படுவதை எப்படி பொறுத்துக் கொண்டிருக்கலாம்?.
முதல்வர் கருணாநிதி நீதிமன்றங்களுக்கு இதுவரை இல்லா அளவுக்கு ரூ.200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி, பற்பல ஊர்களில் புதிய புதிய கட்டங்களைக் கட்டித் திறந்து, பல வழக்குரைஞர்களுக்கு தொழிலகம் பெருக வசதி செய்து கொடுத்தவர். அதற்கு வழக்குரைஞர்கள் காட்டும் நன்றியா இது, வேதனை, வேதனை.
வழக்குரைஞர்களே, பொதுமக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். பொது ஒழுக்கச் சிதைவு எவ்வளவு காலம் நீடிப்பது? என்று கூறியுள்ளார் வீரமணி.
நீதிமன்ற புறக்கணிப்பைக் கைவிட்டு
சட்ட ரீதியான வழியில் பரிகாரம் தேடிடவேண்டும்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
சென்னை உயர்நீதிமன் றத்தில் கடந்த சில வாரங்களில் பல்வேறு விரும் பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டதன் விளை வாக, வழக்கறிஞர்களின் நீதி மன்றப் புறக்கணிப்பு தொடர் கிறது.
உச்சநீதிமன்றத்தால் நிய மிக்கப்பட்ட (வெளி மாநில) ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலை மையில் விசாரணை நடை பெற்று – புயல் வேகத்தில் அவர் சென்னை வந்து 2 நாள்கள் விசாரித்து, உச்சநீதிமன்றத் தில் 5 ஆம் தேதி அறிக்கை யைத் தாக்கல் செய்து அது 6.3.2009 அன்று உச்சநீதிமன் றத்திற்குத் தரப்பட்டுள்ளது. அவ் வறிக்கை இணைய தளத்திலும், செய்தி ஏடுகளிலும் வெளி வந்துள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. சென்னை உயர்நீதிமன் றத்தில் சுப்பிரமணியசாமி வந்து, சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் தன்னை ஒரு கட்சி ஆடுபவராக இணைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக வந்த போதிலிருந்து தொடங்கி யுள்ளது என்பது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
மூல காரணங்கள்
2. சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி பொறுப்பு வகித்தவர் மற்றும் சில நீதிபதிகளின் மெத்தனம் அல்லது மென்மையான போக்கே இதற்கு மூல காரண மாகவே – அந்நிலை தொடர்வ தற்குக் காரணமாகவே அமைந் துள்ளது.
3. வழக்குரைஞர்களில் பலர் – சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டவர்கள்போல் நடந்துள் ளனர் என்பது வேதனைக் குரியது. தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற நினைப்புடன் சிலர் செயல்பட் டுள்ள விரும்பத்தகாத நிலை இச்சிக்கல் உருவாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது!
வரம்பை மீறலாமா?
4. காவல்துறையினர் தங் கள் கடமையை ஆற்றுவதற்குச் சென்றிருந்தாலும் அவர்கள் தங்கள் வரம்பை மீறி அதீதமாக ஏதோ வெறிபிடித்தவர்களைப் போல, அப்பாவிப் பொதுமக் களை, நீதிமன்ற அறைகளில் இருந்த வழக்குரைஞர்களை – பெண் வழக்குரைஞர்கள் வரை எவரையும் விட்டு வைக்காமல் வெறித்தனமான, கண்மூடித்தன மான தாக்குதலில் ஈடுபட்டு, மிகப்பெரிய சேதத்தினை உரு வாக்கியுள்ளனர். தனியார் சொத்துக்கள் (கார்கள்) நீதிமன்ற உடைமைகள் இவைகளுக்கும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
5. சென்னை – காவல்துறை ஆணையர், டி.ஜி.பி. போன்ற தலைமை அதிகாரிகள்பற்றி குற்றம் சுமத்தி, அவர்கள்தான் இத்தகைய நிலைக்குக் காரணம் என்று சொல்லத்தக்க வகையில் ஏதும் சரியான காரணம் இல்லை!
சாட்சியங்கள்
நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா அவர்களிடம் தரப்பட்ட வாக்கு மூலங்கள், வீடியோ காட்சிகள், போலீஸ் வீடியோ காட்சிகள், அவர் நேரில் பாதிப்பு அடைந்த பகுதிகளைப் பார்த்தது – சேதா ரங்கள்பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்ட நிகழ்வுக் கார ணங்களும், சூழ்நிலைகளும், தீயணைப்பு வண்டியும், அதி காரிகளும் வந்த பிறகும் அவர் களைத் தடுத்து செயல்படாமல் செய்வித்து, எரிந்து சாம்பலாகும் வரை அருகிலேயே நின்று தீயணைப்புத் துறையினர் வேடிக்கை பார்க்கவேண்டிய நிர்ப்பந்தச் சூழ்நிலை உருவாக் கப்பட்டது.
இவைபற்றி நீதிபதி அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வறிக்கையை – பரிந் துரையை நாங்கள் ஏற்கமாட் டோம்; நிராகரிக்கிறோம் என்று அறிவித்து நீதிமன்றப் புறக் கணிப்பைத் தொடருவோம் என்று பேட்டிகளில் கூறுகின் றனர் வழக்கறிஞர்கள்.
இதில் பொதுமக்கள், வழக் காடிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, வேதனைக்கு உள்ளாகும் நிலை யில் உள்ளனர்!
இடர்ப்பாடுகள்
நீதிமன்றங்களுக்குக் காவல் துறையினர், கடும் குற்றவாளி களை ஜாமீனுக்கு அழைத்து வந்து, விசாரணையை நீதி மன்றம் நடத்த இயலாத நிலை இருப்பதால், காவல்துறையி னரே – நீதிமன்றத்திற்குக் கொண்டு வராமலேயே – சொந்தப் பொறுப்பில் வெளியே விடும் நிலை ஏற்பட்டுள்ளது!
திணறுகிறது சிறைச்சாலை!
சிறைச்சாலையோ அதன் கொள்ளளவுக்குமேல், குற்ற வாளிகளின் எண்ணிக்கையால் திணறிக் கொண்டுள்ள நிலை வேறு!
சில கோர்ட்டுகளில் நீதிபதி கள் அமர்ந்து அவர்களே ஜாமீ னில் விடும் நிலையும் உள்ளது!
தாக்கப்பட்டவர்களில் அடி பட்ட அப்பாவி வழக்குரைஞர் களுக்கு ஏற்பட்ட கொடுமையை நினைத்தால் வேதனை பல மடங்கு பெருகியுள்ளது!
என்றாலும், வழக்குரைஞர் கள், நீதிமன்றங்களுக்கு உதவிட வேண்டிய கடமையாளர்கள் – சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதை நன்கு உணர்ந் தவர்கள்.
இருதரப்பிலும் தவறுகள்
அதுபோலவே, காவல்துறை என்பது நம் அனைவருக்கும் பாதுகாப்புத் தரும் துறை; அவர் கள் நமக்கென்ன? என்ற அலட்சிய மனப்பான்மையைப் பெற்றால் அது பொது அமைதிக் கும், பொதுமக்களுக்கும், பொது நலத்திற்கும் மிகவும் கேடாய் முடியும்!
தவறு செய்பவர்கள் சிலர் இரு தரப்பிலும் உண்டு.
சில நேரங்களில் தங்களது எல்லை மீறிய நிகழ்வுகள் காவல்துறையில் உண்டு.
முதலமைச்சர் கருத்து
நேற்று தமது இல்லத் திரு மணத்தின்போது, நமது முதல மைச்சர் அவர்கள் மிகுந்த கவ லையோடு ஒன்றை வேண்டு கோளாக விடுத்தார்கள்.
தம்மைப் பொறுத்தவரை வழக்குரைஞர்களும், காவல் துறையினரும் இரண்டு கண் களைப் போன்றவர்கள், தான் யார் பக்கத்தில் என்றால், நீதி யின் பக்கம்தான் நிற்பேன் என்று உருக்கமாகத் தெரிவித் தார்கள்.
இந்த நல்லெண்ண வேண்டு கோளினை இருசாராரும் புரிந்துகொண்டு தத்தம் நிலைப் பாட்டில் தகுந்த மாற்றம் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கவேண் டும் என்பதே நம்மைப் போன்ற பொதுவானவர்களின் விழைவு ஆகும்!
வேண்டாம் மனக்கசப்பு!
தற்போதுள்ள கசப்பு இரு சாராரிடமும் ஏராளம் உள்ளது.
இருசாராரும் ஒருவரை மற்றவர் எப்போதும் நிரந்தரமாக வெறுப்புடன், மனக்கசப்புடன் பார்க்கவே முடியாது; கூடாது!
ஒரு நல்லெண்ணச் சூழல் உருவாக்கப்படல் வேண்டும். பொதுமக்களுக்கு ஒரு இடர்ப் பாடு இல்லாத நிலையை உருவாக்க முன்வரவேண்டும்; நடந்தவைகளை இனி நடக்கக் கூடாதவைகளாக ஆக்கிட வேண்டும்.
பொதுமக்களின் மரியா தையை – நம்பிக்கையை இரு தரப்பும் பெறும் நிலை நாளும் வளர்ந்து, ஒருவருக்கொருவர் பகைவர்கள் அல்லர்; சமுதாய நலன் காக்கும் இரண்டு பிரிவு கள் என்று தங்களைக் காட்டிக் கொள்ளும் உணர்வுக்கு விரைந்து வரவேண்டும் என்பதை எண்ணித் துணியவேண்டும்.
அரசியல் நுழைவா?
இதில் அரசியல் நுழைந் துள்ளது என்ற அச்சத்தைப் போக்கவேண்டிய பொறுப்பு வழக்கறிஞர் சகோதரர்களுக்கு உண்டு.
நீதிமன்றப் புறக்கணிப்பை உடனடியாகக் கைவிட்டு வேறு சட்ட ரீதியான வழியில் பரிகாரம் தேடிட புதிய தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் கோகலே அவர்களின் அறிவுரைக்கேற்ப நடப்பதும் அவசர அவசியமாகும்!
சமூக நீதியால் விளைந்த பயிர்கள் இரு சாராரிலும் உண்டு; அவை பாழ்பட்டுவிடக் கூடாதே என்ற பொதுக் கவலையால் தான் நாம் இதனை எழுதுகி றோம் – அனைவரும் சிந்திப் பார்களாக!
Sunasami தன்மீது முட்டை எறியும்படி ஒரு சில வக்கீல்களையும், பின்பு போலீஸ் தடியடிக்காக, ஒரு சில போலீஸ்காரர்களை அங்கு கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும்படி ஏற்பாடுகள் செய்திருக்கவும் வழிகள் உண்டா இல்லையா?.Makendra kuriyathu sariyanathuthan.
Eela Atharavai Kulabpuvathuthan SUNASAMIYIN
Nokkamethavira Veronrumillai.
ITHUTHAN UNMAI.
தண்டிக்கவேண்டும் என்ற வழக்குரைஞர்களின் கோரிக்கையை எந்த ஓட்டுக் கட்சியும் ஆதரிக்கவில்லை. கருணாநிதியைத் திட்டுவது என்பதற்கு மேல் ஒரு படி கூட யாரும் தாண்டிக் கால் வைப்பதில்லை. அரசின் மற்றெல்லா உறுப்புகளுடைய செயல்பாடுகளையும் மெல்லமெல்ல போலீசு
சு.சாமி மீது அழுகிய முட்டைகள் வீசப்பட்டன.நான்தான் தி.மு.க. ஆட்சியை கலைத்தேன் என்று தமிழ்நாட்டிற்குள் பேசி திரிந்த அந்த சு.சாமி மீதுதான் அழுகிய முட்டைகள் வீசப்பட்டன.கருணாநிதிக்கு ஏன் பதற்றம் வரவேண்டும்.போலீசு அதிகாரிகளை அனுப்பி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.அவ்வளவு பெரிய ஜனநாகவாதியா? கருணாநிதி.அப்படியென்றால் பேச்சுக்கு பேச்சு நீதித்துறையை மதிக்கிறேன் என்று பீற்றிக் கொள்ளும் கருணாநிதிக்கு அந்த நீதிபதிகள் போலீசின் குண்டாநதடியால மண்டையுடைபட்டது தெரியாதா?ஜெ..ஆட்சியில் நீதித்துறை மிரட்டப்பட்டதாக நீலிக்கண்ணீர வடித்த கரு…..இப்போது வாயை இறுக முடிக்கொண்டதேன்.அப்போது வக்கீலகளும் நீதிபதிகளும் தனிதனியாக தாக்கப்பட்டாரகள்.இபபோது நடந்தது என்ன?உயர;நீதிமன்ற வளாகத்தில 1000கணக்கான வக்கீலகளும் நீதிபதிகளும் அப்பாவி பொது மக்களும் மிருகத்தனமாக 3 மணி நேரத்திற்கும் மேலாக ஓடஒட விரட்டி குண்டாந்தடியால் அடித்து நொறுக்கப் பட்டனர;. குண்டாந்தடிகளுக்கு போலீசு எஙகேயும் போகத்தேவையில்லை.குண்டாந்தடிகளுடனெ பிறந்தவரகள் போலீசு.அதாவது எபபோதும் ஆயுதபாணியாக இருப்பவரகள்.
கருணாநிதிக்கு ஆட்சி பிழைக்க காங்கிரசின் கருணை தேவை.ரூடவ்ழப் பிரசனையில தனிமைபட்டு கிடந்தார; கரு… காங்கிரசுக்கு ரூடவ்ழப் பிரச்னை எதிர;ப்பூ குடாது. ரூடவ்ழப் பிரச்னையில் வக்கீலகளின் போராட்டம்.ரூடவ்ழப் பிரச்னையில் தமிழர;களுக்கு ஆதரவாக வாயை திறந்தாலே சிறை.வக்கீலகள் செய்த தவறு ரூடவ்ழத்தமிழர;களுக்கு ஆதரவாக போராடியதுதான்.அதன் ஒரு பகுதிதான் சு.சாமி மீது முட்டை வீச்சு.அதை பெரியதாக்கி உடனே மு.த.அ…தேடுதல் வேட்டை…வக்கீல்கள் கைது…..ஒரு கொள்கை பிரச்னையை வேண்டுமென்றே கோணலாககி தங்களுக்கு சாதகமாக்கி கொண்டது கரு…காங்…போலீசு அதுவும் தங்களுக்கேற்றபடி.போலீசின் அடியை பற்றி வக்கீலகளுககு வைத்தியம் பார;த்தவ டாகடர; சொன்னாராம்”வெளிக்காயம் ஆறிடும்.உள்காயம் கொஞ்ச நாளில தன் புத்தியை காட்டும்”எனறாராம்.
உயர்நீதி மன்றப் பிரச்சினையில் போலீசைத் கைப்பற்றிக் கொண்டு வருகிறது. கடைசியாக நீதித்துறையை மேலாதிக்கம் செய்யும் நடவடிக்கையும் இனிதே நிறைவேறியிருக்கிறது.
சிங்கள இராணுவக் கொடுங்கோன்மைக்கு எதிராக தமிழகம் நடத்திய போராட்டத்தின் முடிவில், போலீசு கொடுங்கோன்மை நிலைநாட்டப் பட்டிருக்கிறது.
//Sunasami தன்மீது முட்டை எறியும்படி ஒரு சில வக்கீல்களையும், பின்பு போலீஸ் தடியடிக்காக, ஒரு சில போலீஸ்காரர்களை அங்கு கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும்படி ஏற்பாடுகள் செய்திருக்கவும் வழிகள் உண்டா இல்லையா?//
SJR! இந்த conspiracy theory ரொம்பவும் நகைப்புகிடமாக உள்ளது. ஒரு வேளை அத்தைக்கு மீசை முளைத்தால், இந்தக் கற்பனை நிஜமாகவே இருந்து விட்டால் கூட, எந்த வகையில் பார்த்தாலும் போலீஸ் அராஜகமும் தவறுதான், வக்கீல்கள் முட்டை எறிந்ததும் தவறுதான்.
சு.சாமி சொல்லி நடந்திருந்தால் மட்டும் முட்டை எறி சரியாகி விடுமா? அது நீதி மன்ற அவமதிப்புதான். அந்தக் காரியத்தை செய்த முட்டாள் வழக்கறிஞர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்தான். சாமி சொன்னால் இவர்களுக்கு அறிவு எங்கே போச்சு?
தயவு செய்து இதைப் போயி புத்திசாலித்தனமான வாதம் என்று நினைத்துக் கொண்டு திரும்பச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அப்படி சு.சாமியின் கைங்கரியம்தான் இந்த சம்பவம் என்றால் அடுத்த நாள் வினவு உட்பட அதை கொண்டாடியவர்களைப் பற்றி ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். சு.சாமி அவர்களை எல்லாம் அடி முட்டாளாக்கிவிடவில்லையா? அவரை போயி அத்தனை பெரிய ராஜ தந்திரியாகக் காட்ட விரும்புகிறீர்களா?
வழக்குரைஞர்கள் செய்தது சட்டத்தின்படி தவறு, நியாயத்தின்படி சரி. காவல்துறை நியாத்தின்படியும் தவறு, சட்டத்தின்படியும் தவறு. நியாயமாக போலீஸ் காவல் நிலையத்தைவிட்டு வெளியேறியது தவறு. காவல் நிலையத்தை வழக்குரைஞர்கள் எரிக்கும்போது ஏன் அங்கு ஒரு காவலர்கூட இல்லை? காவல் நிலையத்தை ஏன் அனாதையாக விட்டு சென்றனர்? இருந்திருந்தால் எரித்த வழக்குரைஞர்களை அடையாளம் காட்டி இருக்கலாம். போலீஸ் எப்பொழுதும் சட்டத்தைபற்றி கவலைப்படுவது கிடையாது. காலில் சுடனும் என்று சட்டம் சொன்னால் காவல்துறை கழுத்தில்தான் சுடும், பொதுமக்களுக்கு மருந்திற்கு கூட மரியாதை கொடுக்காது. காலில் அடிக்கவேண்டும் என்றால் தலையை உடைக்கும், தலையில் அடித்தால் கொலை முயற்சி… இங்கு எத்தனை கொலை முயற்சி, நீதிபதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. நீதியை கொல்ல முயற்சித்துவிட்டது காவல்துறை, இவர்களுக்கு மட்டும் சட்டம் கிடையாதா? சட்டம் எல்லோருக்கும் பொது என்பதில் கேள்விக்குறிதான்?..
தி.மு.க வின் அடிமட்ட மட்டமான முட்டாள் தொண்டனாகவே மாறி நாறிப் போன திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது. இவர் பொதுவானவராம், அதனால் இவர் சொல்வதை நாம் கேட்டுக்கொள்ள வேண்டுமாம்! தமது இல்லத் திரு மணத்தின்போது, நமது முதலமைச்சர் அவர்கள் மிகுந்த கவலையோடு ஒன்றை வேண்டுகோளாக விடுத்தார்களாம்,
தம்மைப் பொறுத்தவரை வழக்குரைஞர்களும், காவல் துறையினரும் இரண்டு கண்களைப் போன்றவர்களாம், தான் யார் பக்கத்தில் என்றால், நீதியின் பக்கம்தான் நிற்பேன் என்று உருக்கமாகத் தெரிவித்தார்களாம்.
இந்த நல்லெண்ண வேண்டுகோளினை இருசாராரும் புரிந்துகொண்டு தத்தம் நிலைப் பாட்டில் தகுந்த மாற்றம் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்பதே நம்மைப் போன்ற “பொதுவானவர்களின்” விழைவாகுமாம். “என்னே இவர்களின் அறிவு! என்னே இவர்களின் பொது நலன்!” நான் திரு கி(கிறுக்கு). வீரமணி அவர்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன், “ஐயா, தாங்கள் தயவு செய்து தி.க காரன் என்று இனியும் சொல்லிக் கொண்டு திரிய வேண்டாம். போய் தி(திருட்டுப்பய).மு.க வுல ஐக்கியமாகிடுங்க! தி.க வை நடத்துவதற்கும் பெரியாரது கொள்கைகளை பரப்புவதற்கும் பகுத்தறிவாளர்கள் நிறைய பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்! -வெறுப்புடன் ஒரு தமிழன்.
http://abidheva.blogspot.com/2009/03/blog-post_10.html
வக்கீல்கள் போராட்டம் -சரியா? தவறா?
சமீபத்தில் நடந்த உயர்நீதிமன்ற நிகழ்வுகள் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இதில் நாம் சிந்திக்கவேண்டிய விசயங்கள் சில உள்ளன. அவற்றில் என் கருத்துக்கள் சிலவற்றை கீழே அலசுகிறேன்!!சரியா தவறா என்று தவறாமல் சொல்லவும்!
1.போலீஸ் துறை செய்தது சரிதானா?
போலீஸ் துறை செய்தது சரிதான் என்றால் போலீஸார் அமைதியான முறையில் கைது செய்து இருக்கலாம்.
இதே போலீஸ் சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதலில் அமைதியாக வேடிக்கை பார்த்ததே! எல்லா நேரமும் ஒரே போல் நடவடிக்கைகளை எடுத்தால் அவர்களை நாம் பாராட்டலாம். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் முன்னரே திட்டமிட்டார்போல் அல்லவா தெரிகிறது!!
2. போலீஸ் ஒரு வளாகத்தில் நுழையும் போது அத்துறையின் தலைவருடன் பேசிவிட்டே நுழைவர். இது ஒரு பொதுவான கருத்து!
கல்லூரி வளாகங்களில் கூட முதல்வரிடம் போலீஸ் உயர் அதிகாரி கலந்து ஆலோசித்த பிறகே உள்ளே வருவர்.அதிலும் அடிதடி இருக்காது!!
3.தற்போது சில வருடங்களாக போலீஸ் துறை தட்டிக்கேட்க ஆளில்லாத துறையாக மாறிவருகிறது!!
அவர்கள் வன்முறையை ஏவி விடுவதும் அதிகமாகவே உள்ளது! எந்த துறையையும் விட அதிக ஊழல் இதில்தான்.ஏனெனில் கேட்க ஆளில்லை!!அவர்களைக் கேட்கும் உரிமை நீதிதுறைக்கு மட்டுமே இருக்கிறது!
நான் மருத்துவக்கல்லூரியில் படிக்கும்போது வளாகத்தில் நுழைந்து பைக்கில் சென்ற மருத்துவரை சோதனை செய்தார் காவலர் ஒருவர். வாக்குவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டு காவலரை கல்லூரி தூணில் கட்டிவைத்து விட்டார் மருத்துவர். பின் டி.எஸ்.பி. எஸ்.பி. வந்து விசாரித்ததில் போலீஸ் மது அருந்தி வசூலில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக மாற்றப்பட்டார்..
இதுபோல் இப்போது நடக்குமா என்று தெரியவில்லை!
பாகிஸ்தானில் முஷ்ரஃப் அரசு நீதிபதிகளைக் கைது செய்தது. அப்போது வக்கீல்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர்! ஆயிரக்கணக்கான வக்கீல்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.20000 வக்கீல்களை சிறையில் அடைத்தது அரசு. நடந்த்து என்ன? அவசர நிலை பிரகடனம் செய்தார் முஷ்ராப்!
கடைசியில் சர்வதேச அமைப்புகள்,நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளானார். அமெரிக்காவின் தலையீட்டில் பதவி இறங்கினார்..
ஒரு நாட்டின் சரித்திரத்தியே நீதித்துறை மாற்றி எழுதியது!!
4.போலீஸை எதிர்க்க தற்போது யார் இருக்கிறார்கள்?
பொதுமக்கள்-முடியாது
பொறியாளர்கள்-முடியாது
மருத்துவர்கள்-முடியாது
தனிதொழில்துறையினர்-முடியாது
அரசு அதிகாரிகள்-முடியாது
கட்சிகள்–முடியும்
வக்கீல்கள்-முடியும்!!!
வக்கீல்கள் போல தொடர்ந்த போராட்டத்தில் யார் ஈடுபடுகிறார்கள்?
இரண்டு மாதகாலம் தங்கள் வருமானத்தை விட்டு யாராவது போராடுவார்களா?
மேலும் வழக்கறிஞர்கள் தங்கள் சொந்தப்பிரச்சினைக்காகவா போராடினார்கள்?
இல்லையே!! இவற்றையெல்லாம் பார்க்கும்போது வழக்கறிஞர்கள் செய்வது சரி என்றுதான் தோன்றுகிறது!!
சட்டத்தையும் நீதி ஒழுங்கையும் ஒரு துறை கையில் எடுக்கும்போது அதனைத்தட்டிக்கேட்பது மிக அவசியம்! நமக்காக அந்த வேலையைச் செய்யும் வழக்கறிஞர்கள் செய்வது சரிதான்!
இது என் கருத்து!!
உங்கள் கருத்துக்களை தாராளமாகச்சொல்லலாம்!!!
ஆர்.வி உணர்ச்சிவசப்படுகின்றீர்கள்
சுப்பிரமணியசாமி கோர்ட்டுக்கு வந்தது நீங்கள் போற்றித் தொழும் ஜனநாயக உரிமையை காப்பாற்ற வரவில்லை மறாக அதனுடைய கடைசி நூலை அறுப்பதற்குத்தான் வந்தார் எனப் புரிய வைக்க முயன்றேன்.
பார்வர்ட் பிளாக் னு ஒரு கட்சி வந்த பிறகு இங்கு சாதி உணர்வோ அல்லது சாதி ஆதிக்கமோ தோன்றவில்லை. அதனை தோற்றுவித்து அதற்கு ஒரு தத்துவ அடிப்படையை உருவாக்கி இன்றளவும் அதாவது நாகரீகம் வளர்ந்த காலத்திலும் மற்றவர்களை அடிமைத்தனத்தில் திளைக்க வைத்த ஒரு சாதி என்ற முறையில் அந்த தத்துவத்திற்கு சாதிய பெயர் தரப்பட்டுள்ளது. மேலும் பெரும்பான்மை பார்ப்பன சாதியினர் ஜனநாய நடைமுறைக்கு வரமுடியாத சாதிய சூழலை அவர்களே வைத்திருப்பதால் 95 சதவீதம் கன்சர்வேடிவ் களாகவே உள்ளதால் அவர்கள் இயல்பாகவே சாதிய அபிமானிகளிடம் அறிவுஜீவி அந்தஸ்தையும் அவர்கள் பிறசாதி பார்வையாளர்களாக இருந்தாலும் பெற்று விடுகின்றனர். அடிபட்டவுடன் போலீசை பார்க்கும் முன்னர் சோ வைப் பார்க்க அவர் முனைந்ததற்கு காரணம் அதுதான். தனீப்பட்ட முறையில் அவர் செய்த மாமா வேலைகளை என்னால் பட்டியல் இட முடியும்.
பொதுவான தேவர் சாதி வெறி, வன்னியர் சாதிவெறி, கவுண்டர சாதி வெறி இருந்தாலும் அவற்றை தோற்றுவித்த பிரம்மனின் மூத்த மகன்கள் தண்டனை அனுபவிக்க மாட்டேன் என்பது மனித உரிமை மீறல் என உங்களுக்கு படவில்லையா..
நண்பரே … போலீஸ் கைது எல்லாம் விசாரித்து நடைபெறும் என்ற உங்களது நம்பிக்கையை யாராவது போலீஸ் ஸடேஷன் போய் வந்தவர்களிடம் விசாரித்துப் பாருங்களேன். புகார் இருதரப்பிலும் வந்தால் இருவரையும் கைது செய்யும். பெரும்பாலும் செல்வாக்குள்ள உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்களைக் கண்டால் நாய் போல குலையவும் செய்து நடவடிக்கைகளை மாற்றி செயய்யும் போலீஸ். சுசாமிக்கு நீதிபதியே புகார் தந்தார் ஆதரவாக என்பதுதான் மீதமுள்ளது. ஆதித்தனை அடித்த லத்தி நீதிபதி ஐ மாத்திரம் எப்படி தனிவகையாக மதிக்கும் என கேட்கின்றீர்கள்.
அதெல்லாம் இருக்கட்டும்… அது என்ன நீதிபதி புகார் தந்தா மட்டும் 100 காரட் உண்மை. அவிங்க பண்ணின ஊழல எடுத்துப் போட்டா இந்த நாடே தாங்காது. அது தனிக்கதை… அந்தப் புனிதம் காக்கப்படாததுதான் உங்களது அவஸதையா..
தே…பையா என்ற சொல்லை வேண்டுமென்றேதான் பயன்படுத்தினேன். மனு ஸ்மிருதியைப் படித்த போது ஒவ்வோரு பார்ப்பனரல்லாத சாதியும் எப்படி கூடா ஒழுக்கத்தால் பிறந்தது என விவரிப்பார் மனு. அதைப் படித்த போது என்னுடைய சாதியாக இல்லாத போதும் பலருடைய சாதியின் தோற்றம் என அந்த தா…ளி எழுதி வைத்ததைப் படித்த போது என்னுடைய உடம்பிலேயே கம்பளிப் பூச்சி ஊர்ந்தது போல உணர்ந்தேன். 2000 வருடமாக அதனைக் காதால் கேட்டும் அடிமைப்படுத்தப்பட்டும் இருந்த சாதிகள் பதிலுக்கு அப்படி பார்ப்பன சாதியின் பிறப்பை இழிவுபடுத்தும் வகையில் நடந்தால் ஒத்துக் கொள்வீர்களா… அந்த தரகன் எனப்படும் மாமா அங்கு வந்தது 2000 இன்னும் தொடரும் என்பதை நிரூபிப்பதற்காக… எனவே கருத்து சுதந்திரம் மனித உரிமைகள் பாதுகாப்பு ஜனநாயகம் இவற்றின் மீது நம்பிக்கை உடைய தாங்கள் எங்கள் பக்கமல்லவா நின்றிருக்க வேண்டும். மாறாக அவனை அடித்தது தவறு என்றால் அது மனித உரிமை மீறல் இல்லை ஏழை கூலி விவசாயிக்கு… அவன் வந்தது தீட்சிதர் கொள்ளையடிப்பதற்கான சுதந்திரத்திற்கு… முட்டை ஏன் விழுந்தது எனத் தெரியும் முன்னே புலிகளையும் வக்கீல்களையும் திட்டியதற்கு காரணம் ஒரு காலத்தில் தேசியப் போராட்டத்தில் வந்த காங்கிரசு பஞ்சகச்சங்களும், வக்கீல் பஞ்சகச்சங்களும் இன்று மாறி விட்ட ஆதங்கம் இல்லையா…. எனவே நீங்கள் பிறப்பால் பார்ப்பனர் என்பதால் விமர்சிக்கவில்லை.. மூளையாலும் பார்ப்பனராக இருக்கின்றீர்கள்…
ஆனால் ஆர்வி ஐ இயக்கும் மனநிலை என்ன எனப் புரிந்து கொள்ள முடிகின்றது. தங்களது அடிமைத்தனத்தை விடுவிக்க மக்களுக்கு கம்யூனிஸ்டுகள் பல்வேறு தளங்களில் போராட கற்றுத்தந்தும் போராட்டங்களில் பங்கெடுப்பதன் மூலம் கற்றுக் கொண்டும் வருகின்றனர். ஆகவேதான் சாதி ஒழிப்பு போன்றவற்றில் தமது சொந்த ஆதிக்க சாதியாக இருந்தால் அதனை விமர்சித்து அதற்கு எதிராக போராடி தங்களை கூர்தீட்டுகின்றனர். மெக்காலே இன் புதல்வர்களுக்கோ ஒரு தேதி குறித்து கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இன்றிலிருந்து ஜனநாயக்ம் என அனைவருக்கும அமுல்படுத்துகின்றனர். 2000 வருடத்தில் ஒடுக்கப்பட்டதற்கான compensation ஐ எல்லா தளங்களிலும் கேட்பதற்கு கூட எதிரி ஒருவேளை ஆயுதமேந்தியிருந்தால் கூட கோரிக்கைதான் வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தங்களது இத்தனை ஆண்டுகளும் மற்றவர்களுக்கு மறுத்த கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம்…..என அனைத்தையும் அந்தஸ்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் இந்த ஜனநாயகத்தின் யோக்கியதை….. என் அப்பன் சொத்து வேணும் ஆனால் அவன் பட்ட கடனை தீர்க்க மாட்டேன் எனச் சொல்லும் பிள்ளையை ஊரில் விட்டா வைக்க முடியும். அது தான் உங்கள் போன்ற கருத்து சுதந்திர கர்த்தாக்களின் நிலைமை.
நீங்கள் இப்படி சிந்திக்க மற்றொரு காரணம் சமூக வேலைகளில் ஈடுபடாதது என நினைக்கின்றேன். உடனே நீங்கள் எப்போது எங்கே என்ன செய்தீர்கள் என்ன பயின் விளைந்தது சமமூகம் அதனால் மாறி விட்டதா என வினவுவீர்கள். இதுவும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்என நினைத்துக் கொள்ளும் மூளையால் பார்ப்பனராக சிந்திப்பவர்கள் செய்யும் விதண்டாவாதம்.
மற்றொரு காரணம் இப்படி பேசுவது மட்டுமே கொண்ட வாழ்வு மக்களின் வாழ்வா சாவா பிரச்சினையை கூட extra curricula activities ஆகத்தான் உங்களைப் பார்க்க வைக்கும். ஏனெனில் நிங்கள் பார்வையாளர்… பங்கேற்பாளர் இல்லையே
ஓடுமீன்ஓடி உறுமீன் வரும்வரையில் வாடியிக்குமாம் கொக்கு,
உலகப்பந்தில் தமிழர்களுக்கான ஓர் அரசு உருவாகும் சாத்தியம் இலங்கை என்னும் நாட்டிலேதான் இன்று உருவாகியுள்ளது. அதற்கு ஆதரவு தரக்கூடிய மிகப்பெரும் சக்தியான இந்தியாவில், வஞ்சனை நிறைந்த அரசியல்வாதிகள் வளர்ந்திருப்பதுதான் தமிழர்களின் தூரதிஸ்ட்டம்.
தமிழீழம் என்னும் ஓர் அரசு உருவாகும் சாத்தியங்கள் சிறிது சிறிதாக ஓடிக்கொண்டிருக்கும் வேளைகளில் இந்தியா வாடியிக்கும். எப்போது அது கூர்மையடைந்து, உரம்பெற்று பெரிதாகி வருகிறதோ அந்த வேளைகளில் பிடித்து குதறித் தின்றுவிடும். ஈழத்தமிழர் சிறீலங்கா இராணுவத்தை அடித்து துரத்தி வெற்றியின் விளிம்பிற்கு வந்தபோதெல்லாம் இது நடந்துள்ளது,
தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்த, அவரது இரு கண்களான போலீசையும், வக்கீல்களையும் இன்று தமிழ்நாட்டு மக்களைக்கொண்டே குற்றவாளிகளாக்கி குதறப்படுவது கனவல்ல, கற்பனையல்ல, நிஜம். தமிழீழம் என்னும் ஓர் அரசு உருவாக போராட்டம் தமிழ்நாட்டில் கூர்மையடைந்த போதில்தான் இந்த திருப்புமுனை இடம்பெற்றுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
அத்தனை வக்கீல்களும் அத்தனை போலீசும் குற்றவாளிகள் என்ற தொனியில் கேள்விகள் அமைவதாக நான் முன்பு குறிப்பிட்டது திரு. ஆர்வி அவர்களிடம் குற்றம் காணவோ, அவரைக் குறைகூறவோ அல்ல. இந்திய அரசியல் என்னும் மாபெரும் சக்தியை தங்களுக்குள் அடக்கி வைத்து மக்களை மிரட்டிவரும் கேடுகெட்ட அரசியல் காட்டுமிராண்டிகளின் கை அங்கே உள்ளது என்பதை காட்டுவதற்கே. இதனால் அவர் மனம் புண்பட்டிருந்தால் நான் வருந்துகின்றேன்.
இந்த நேரத்தில் திரு. தராக்கிராம் அவர்கள் எழுதிய சமகால அரசியலை படிப்பதற்கான நுளைவு கீழே உள்ளது. படிக்காதவர்கள் ஒருமுறை படிப்பதனால் பல உண்மைகளை விளங்கிக்கொள்ளலாம்.
http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2653:2009-03-10-17-03-44&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54
ஆர் வி
எல்லா மேல்சாதிகளையும் மூளையில் இயக்குவது பார்ப்பன மூதாதையர்கள் கண்டுபிடித்த பார்ப்பனீயம். அதனால் இன்றும் அம்மூளைகளை இயக்க முனையும் பார்ப்பன அல்லது பார்ப்பன சார்புள்ள மேல்சாதிகளை முட்டை அல்ல மலத்தால் அடித்தால்தான் சமூகம் முன்னோக்கி செல்ல முடியும். பாப்பாபட்டியை மேலவளவை திண்ணியத்தை எந்த சித்தாந்த அடிப்படையில் மேல்சாதிகள் செய்தார்கள் என்றால் அது பார்ப்பனிய இந்து மதம் என்ற மனு வகுத்த நீதியின் அடிப்படையில்தான். எனவே மேல்சாதியை கண்டிப்பதற்கு முன் அனைத்து மேல்சாதிகளையும் இயக்குகின்ற பார்ப்பனியத்தின் மீது ஒரு தாக்குதல் தொடுப்பதன் மூலம் அனைவரை முன்னோக்கி யோசிப்பதற்கு உதவ முடியும். அந்த பார்ப்பனிய விழுமியங்களை மீட்டுக் கொண்டுவர வந்த சுசாமி அல்லது ஜெயா மாமி அல்லது சோ ராமசாமி அல்லது போலி கம்யூனிஸ்டு ராம் என பலர் பல இடங்களில் இருந்து கொண்டு வேலை செய்கின்றனர். அன்றைக்கு சுசாமி கிடைத்ததால் அடித்துள்ளனர். அது ஒரு அடையாள தாக்குதல்தான். அதாவது இத்தனை காலம் தன்னை கடவுளின் பெயரால் அடிமைப்படுத்திய பார்ப்பனியத்தை எதிர்த்து பார்ப்பனரல்லோதோர் நடத்திய எழுச்சிமிகு நடவடிக்கை. மேலே சொன்ன ஊர்களில் நடந்த பார்பபன அல்லாத மேல்சாதி வன்முறைக்கு கூட அதனை அவர்களது மூளையில் ஏற்றிய 2000 ஆண்டுகளாக மற்றவர்களுக்கு கல்வியை மறுத்ததன் மூலம் தன்னை அறிவாளிகளாக்கி கொண்ட ஒருவன்தான் முதலில் தண்டிக்கப்பட வேண்டும். அதாவது குற்றம் செய்தவனை விட அதைத் தூண்டியவன்தான் முதல் குற்றவாளி என்ற நீதியின்படி…
அப்படி கற்றவர்கள் மூடநம்பிக்கையை மற்றவர்கள் மத்தியில் தங்களது கையில் இருந்த மத நிறுவனங்கள் மூலம் பரவிய போது தடுக்காத பொறுப்பின்மையால்தான் பிரேமானந்தா போன்ற மற்ற சாதியைச் சேர்ந்த … உழைக்காமல் பிழைக்க முடியும் என்று பார்ப்பனர்களைப் பார்த்து தெரிந்து கொண்ட ஊதாரி சோக்கு பேர்வழிகள் இப்படி தறிகெட்டு வந்தனர். இதிலும் ஏ1 பார்ப்பனர்கள்தானே.. சமூக பொறுப்பை தட்டிக்கழித்ததுதான் குற்றம்…
இந்த ரிவர்ஸ் காஸ்டிஸம் பற்றி சொன்னீர்கள். அதை நான் தீர்வாக முன்வைக்கவில்லை. சலுகைகள் உங்களுக்கு தராமல் மற்றவர்களுக்கு தருவதை கூட உங்களால் சகிக்க முடியவில்லையே.. பழிவாங்கும் உணர்ச்சி இருக்க கூடாதா.. அதனை யார் முடிவு செய்ய வேண்டும் பாதித்தவனா அல்லது பாதிக்கப்பட்டவனா… இது இல்லாத சாதி எதிர்ப்பு என்பது நான் இப்போ சாதி பாக்கல் எங்க அப்பா பாத்ததுகக்கு நான் பொறுப்பு கிடையாது என்பதுதானே..
நான் இப்படி நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட அதாவது கல்வி பெறும் உரிமை, ஊதியம் என்று ஏதாவது சொந்தமாக பெறும் உரிமை, சொந்த நிலம் வைத்துக் கொள்ளும் உரிமை, பெண்களுக்கு மாராப்பு அணியும் உரிமை, செருப்பு, துண்டு அணியும் உரிமை, மேல்சாதி ஆண்களுக்கு அல்லாமல் தனக்கு மட்டுமே உரித்தான வாழ்க்கைத் துணையைப் பெறுவதற்கான உரிமை, மேலத்தெருக்களில் நடந்து செல்ல உரிமை … என நாகரீக சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்வர்கள் மீண்டு வருவதற்கு ஒடுக்கியவர்கள் உதவினால்தானே மனித சமூகம் தன்னை முன்னோக்கி சென்றிட முயன்றிட இயலும். அப்படி ஒரு ஊனப்படுத்தப்பட்ட குழந்தையை நடக்க பயிற்றுவிக்கும்பொது பயிற்றுவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஊனப்படுத்தியவன் தன்னுடைய மனம் கோணாதவாறு அக்குழந்தை நடக்க பயில வேண்டும் என எதிர்பார்ப்பது சுத்த அயோக்கியத்தனம் இல்லையா…
for your kind information எவண்மணி சாதி ஒழிப்பு போராட்டம் அல்ல.. நீஙக் சாதி எதிர்ப்பை ஆதரிக்கின்றீர்கள் ஆனால் சாதி ஒழிப்பை பேச மறந்து போகின்றீர்கள். ஏன் என எப்போதாவது யோசித்து பாருங்கள்… சொல்லி சொல்லி கை வலிக்கின்றது…
பார்ப்ன சாதி வெறிதான் மற்ற சாதிவெறிகளை தோற்றுவித்த தாய். தாயை அடித்தால் புள்ளைங்க தானா சப்போர்ட்டுக்கு வரும். திரும்ப அவங்களுக்கும் ஒன்னு புரியவைக்கலாம் இல்லன்னா அடிச்சுதான் புரிய வைக்கணும்.
நான் இன்ன சாதியில் பிறந்தேன் என சொல்ல விரும்பவில்லை என்றாலும் பார்ப்ன விழுமியங்களோடு வளர்ந்தவன் என்பதால் சொல்கின்றேன். 15 20 சதவீதம் என்று சொல்வதன் மூலம் நீங்கள் கண்ணைக் கட்டிக் கொள்கின்றீர்கள். உண்மையில் நான் அறிந்த சில ஆயிரம் பார்ப்பன குடும்பங்களின் சில பத்தாயிரம் மெம்பர்களில் இவ்விழுமியங்களில் இருந்து விடுபட்ட அமெரிக்கா கூட சென்ற எவரும் எனது கண்ணில் படவே இல்லை.
ஹிட்லரால் ஒரு பத்தாண்டுக்ள்தான் மக்கள் சிரமப் பட்டனர் அதற்காக அவனை நான் ஆதரிப்பதாக நினைக்காதீர்கள். மனுவால் பாதிக்கப்பட்டது 2000 ஆண்டு மற்ற சாதிகள் மட்டுமல்ல.. மொத்த இந்திய நாகரீக வளர்ச்சியையும் பின்னுக்கு இழுத்தான் பார்ப்ன நலனுக்காக.. இதற்கு யாருக்கு எப்படி நட்ட ஈடு தருவது அல்லது அப்படி கேட்பதே அபத்தமா…
பெரியார் சொன்னதால் யாரும் பார்ப்பனர்களை அடித்து விடவில்லையே… முட்டை அடிச்சதுக்கே அணுகுண்டு போட்ட மாதிர் பார்ப்பனர்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வரும் இந்தக் காலத்தில் பெரியார் பேச்சை திக காரர்கள் கூட பின்பற்றாத போது உங்களுக்கு ஏன் உங்களது மகளை அல்லது மகனைப் பார்த்தால் கோபம் வருகினறது. மனு சொன்னதை நீங்கள் மட்டுமா கடை பிடித்தீர்கள். மற்ற மேல் சாதிகளையும் அல்லவா பின்பற்ற வைத்திருக்கின்றீர்கள் கடவுளின் ஏஜெண்ட் என்ற பதவியைப் பயன்படுத்தி…
மற்ற மக்களை பார்ப்பன இந்துமதம் அடிமைப் படுத்தி தினம் தினம் 2000 ஆண்டுகளாக சக மனிதர்களாக கருத மறுத்த கொடுமைக்கு காம்பன்சேஷன் என பிச்சைபாத்திரம் ஏந்தினால் அதற்கு காரணமான பார்ப்பனர்கள் திமிராக நாதிர்ஷா வுக்கு என்ன தண்டனை தந்தீர்கள் …. தைமூருக்கு என்ன தண்டனை… மாலிக் காபூருக்கு என்ன தண்டனை என் பகடியம் பேசுகின்றார்கள். இவர்கள் எல்லாம் முசுலீம் மன்னர்களாகவே இருப்பது தற்செயலாக நிகழ்ந்து விட்டது என்றே நினைத்துக் கொள்ள சொல்கின்றீர்களா… ராஜராஜனும், நந்த வம்சமும், குப்தர் காலமும், பல்லவ காலமும் மக்கள் அரசாட்சியின் சிற்ப்பால் மகிழ்ந்தா இருந்தார்கள். அந்த மகிழ்ச்சியின் விளைவாக பெரிய பெரிய கோயில்கள் கட்டப்பட்டதா அல்லது அந்த ஊதாரி ராசாக்களின் தத்பரியத்தால் ஏற்பட்ட போலிப் பஞ்சங்களின் விளைவாக எழுந்தனாவா அந்த கோபுரங்கள்…..அதற்காக் நீங்கள் ஒரு ஆர் எஸ் எஸ் சார்பாளர் என்றெல்லாம் முடிவு செய்ய மாட்டேன். நீங்கள் நடுநிலை தவறாத நன்னெறியாளர்தான்… நம்புகிறோம்….
எல்லாரும்தான் ஒடுக்குகின்றான். எல்லோரும்தான் கடன் அடைக்க வேண்டும். அது எப்படி கடன் பட்டு செழிப்பாக வாழ்ந்தவனுக்கும் அப்படி வாங்காமல் சிரமப்படு வாழ்ந்தவனும் இன்னையில இருந்து ஒன்னு தான் என்றால் ஒன்னு கேக்குறவன் கேணயனா இருக்கணும் இல்லன்னா சொல்லுறவனா இருக்கணும்…..
காம்பன்சேஷனை பணத்தால் அளவிடுகின்றீர்கள்…. நீங்கள் சாதி ஒழிப்பை விட சாதி பார்க்காதவர் என்பதை நம்புகின்றேன்… உங்களது திருமணத்தை உங்கள் சாதியில் செய்தீர்களா அல்லது வேறு சாதியில் செய்தீர்களா… உங்களது மகன் அல்லது மகளது திருமணத்தை உங்களது சாதியில் செய்ய மாட்டேன் என முடிவு எடுத்து அமுல்படுத்துவீர்களா… உங்களது சகோதரிஅல்லது சகொதரனை காதல் போனறன இல்லாத போதும் பிறசாதியில் திருமணம் செய்ய வலியுறுத்தினீர்களை… இது உங்களது பெர்சனல் மேட்டர் என்பதால் பதில் நேரடியாக வேண்டும் என நான் வலியுறுத்த மாட்டேன். இவற்றில் எத்தனை சதவீதம் நீங்கள் சாதி பார்க்கவில்லை என்பதை சொல்லுங்கள்…. அதற்கு பின் பேசலாம்
padiththathum siriththathum…
(ithuvum contempt of court agalam)
—————————————————–
A new teacher was getting to know the kids by asking them their name
what their father did for a living.
The first little girl said: “My name is Mary and my Daddy is a postman.”
The next child, a little boy said: “I’m Andy and my Dad is a mechanic.”
And so it went until one little boy said: “My name is Johnny and my father is a striptease artist in a gay club.”
The teacher gasped and quickly changed the subject. Later, in the school yard, the teacher approached Little Johnny privately and asked if it was really true that his dad danced nude in a gay bar.
Little Johnny blushed and said, “No, he’s really a judge at Madras HC, but I’m just too embarrassed to tell anyone..”
பழிவாங்கும் உணர்ச்சி இருப்பவர்களை ஆதரித்ததற்காக பல நேர்மையான கேள்விகளுக்கு நேர்மறையில் பதில் சொல்லி விவாதிக்க மறுக்கும் ஆர்.வி அவர்களே… இப்படி நழுவுவது அறிவின் நேர்மையான செயல் என நினைக்கின்றீர்களா … ஆனால் வரலாற்றில் கேள்வி கேட்பவர்களை இல்லாமல் செய்த ஒரு காலத்திய ஜனநாயகவாதிகளிடமிருந்து நீங்கள் வளர்ந்து சிறிது நழுவுவது என்ற நடைமுறையை கடைபிடிப்பதால் பாராட்டுகின்றேன். என்னை இயக்கியது எது என நான் உங்களை இயக்கியது எது என குறிப்பிட்டது போல குறிப்பிடாத உங்களது நேர்மை புல்லரிக்க வைக்கின்றது. பழிவாங்குவது ஹமுராபி காலத்துக்கு இட்டு செல்லும் தான் என நீங்கள் நம்புகின்றீர்கள்.. ஆனால் அமைதியாக இருந்து கொண்டு கூட பழிவாங்க முடியும் அதைனை பலர் பல தளங்களில் செய்து கொண்டுதான் உள்ளனர். அவர்களெல்லாம் யோக்கிய சிகாமணிகளாகவும் பெயர் பெற்று விடுகின்றனர்.
பழிவாங்கும் நடவடிக்கை ஒரு இயற்கை நிகழ்வு. அதனை மீறி வருவதற்கு மனம் பண்பட வேண்டும் என நீங்கள் நினைக்கலாம் அதற்கு உகந்த நோகாத சமூக பொருளாதார அடிப்படை உங்களுக்கு அமைவதால் மாத்திரமே சமூகம் மொத்தமும் அப்படித்தான் சிந்திக்க வேண்டும் என நினைப்பது யோக்கியமானதாக கூட நீங்கள் கருதக் கூடும்…
பேசுவதற்கு எனக்கு கூடத்தான் விருப்பமில்லை…. ஆனால் இந்த சமூகம் மாறும் சூழலில் விழும் நச்சுக்களை அவர்கள் அறிவாளிகளாக இருந்தும் புரிந்து கொள்ள இயலாத அல்லது புரியாதது போல நடிக்கின்ற தன்மையில் கொஞ்சம் மாற்றத்தை கொணர முடியும் என்ற நம்பிக்கையில் இவற்றை எழுதினாலும் பல நேர்மையாளர்களுக்கு திரைவில்ககி உண்மையை உணர்த்த முடியுமா என்ற பயிற்சயிம் என்க்கு இதில் கிடைப்பதால் நான் இன்னும் பல் ஆர்.வி க்களை விவாதிக்க அழைக்கிறேன்.
திரு. வித்தகன் அவர்களுக்கு!
திரு. ஆர்வி அவர்கள் கூறியதுபோல் உங்களுக்கு பதிலளிப்பது வீண் என்றாலும், ஏனையவர்கள் எங்கள் கருத்துக்களின் தன்மையை அறிவதற்கு, எனது பதில் தேவைப்படுகிறது.
தமிழீழ அரசு என்பதை அதன் ஓர் அங்கமான மொழிக்குள் மட்டும் இழுத்துக் குழப்பும் முயற்சிதான் உங்களில் தெரிகிறது.
தமிழ் ஈழம் என்பது, பெரும் ஜனநாயகவாதியும், ஈழத்தின் தந்தை என அழைக்கப்பட்டவரும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, திரு. செல்வநாயகம் அவர்களால் பிரகடணப்படுத்தப்பட்டது. சிங்களத்திடம் மனிதம் இல்லையென அவர் கண்டுகொண்டபின் செய்யப்பட்டது.
அந்தவேளையில் அங்கு புலியுமில்லை, பூனையுமில்லை. உலகத்திடமே மனிதம் இல்லையென அவர் கண்டுகொள்ள முன்பே அமரராகிவிட்டார்.
அமிர்தலிங்கமோ, அவருக்கு இணையான தலைமையோ ஐ.நா. வரை இந்தப் பிரச்சினையை ஜனநாயக முறையில் கொண்டு சென்றிருந்தால் பல நாடுகளில் இருந்து வரும் பண உதவியை இவ்வளவு சுலபமாக இலங்கை அரசால் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. இது பாலசிங்கமோ தமிழ்செல்வனோ சாதிக்க முடியாத காரியம். இந்தியாவிலும் இலங்கைத தமிழர் ஆதரவு புலி ஆதரவாக மட்டுமே அறியப் படாமல் இன்று வரை வெளிப் படையாகத் தொடர்ந்திருக்கும் என்ற உங்கள் வாதமானது, நித்திரை கொள்வதுபோல் நடிப்பவனை எழுப்பமுடியாது என்பதற்கு ஒப்பாகும்.
இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து 1983 புலிகளின் போராட்டம் தோன்றும்வரை தங்கள் உரிமைக்காக போராடிய நூறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களில் அநேகர் எப்படிக் கொல்லப்பட்டார்கள் தெரியுமா? உயிரோடு உறுப்புகளை வெட்டி எடுத்து, கண்களை தோண்டியெடுத்து, சிறுகச்சிறுக சித்திரவதைசெய்து கொல்லப்பட்டார்கள். அந்த சம்பவங்கள் வசதியாக மறக்கப்பட்டுவிட்டன. தற்போது கொல்லப்படும் தமிழர்களில் பெரும்பாலானோர் புண்ணியம் செய்தவர்கள், கண்ணால் பார்ப்பதற்கு முடியாத கொடூரமாக இருந்தாலும், கொல்லப்படுபவர்கள் வேதனை தெரியாது நொடியில் கொல்லப்படுகிறார்கள். இதுதான் உங்களைப் போன்றோரின் விவாதத்தின் ஆசீர்வாதங்களுடன் சிங்களத்திடம் வளர்ந்துள்ள மனிதாபிமானம் என்றுகூடக் கொள்ளலாம்.
தலைவர் பிரபாகரன், தேசத்தின்குரல் பாலசிங்கம், பிரிகேடியர் தமிழ்செல்வன் என இவர்களை அழைப்பதிலே நான் பெருமைகொள்கிறேன். ஏனென்றால் இவர்களின் ஆயுதப்போராட்டம் தொடங்கிய பின்புதான் தமிழர் என்றால் யார்? அவர்கள் பாரம்பரியம் என்ன? எங்கே வசிக்கிறார்கள்? என்பதெல்லாம் உலகநாடுகளுக்கு தெரியவந்தது. இங்கு ஐரோப்பாவில், சிறீலங்கா என இன்று அழைக்கப்படும் சிலோன் எங்கே இருக்கிறது? தமிழர் இந்தியாவில் எந்தப்பகுதியில் வசிக்கிறார்கள்? என்பதை என்னுடன் பழகிய சில ஐரோப்பியர்களுக்கு, பூகோளப்படத்தில் அன்று காட்டிய அனுபவம் எனக்கிருக்கிறது. சிலோன் என்றால் சிலோன்தேயிலை என்பதுதான் அவர்களுக்கு அன்று தெரிந்தது. இன்று தலைவர் பிரபாகரன் என்று சொன்னால், தமிழர் பூர்வீகத்தையே அவர்கள் எங்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். இதில் அமிர்தலிங்கமும் அவருக்கு இணையான தலைமையும்!!!. அந்த அரசியல்வாதியைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? தெரியாவிட்டால்! அவருடைய பூர்வீகத்தை வெகு நுட்பமாக அறிந்த கவிஞர் காசிஆனந்தன் உங்கள் அருகிலே இருக்கிறார். கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
என் கைவிரலைக்கொண்டே என்கண்ணையே குத்தவைக்கும் சாதுரியம் நிறைந்ததுதான் ஆரியம். ஆரியம்தான் இந்தியா. இதற்கு சான்று இன்றைய பல தமிழ் அதிகாரிகளும் தமிழ் அரசியல்வாதிகளும்.
திரு.மணீ அவர்களூக்கு,
உங்கள் விவாதங்களீ கூர்ந்து கவனித்து வருகிறேன். என்னுடய கருத்து இந்த சம்பவத்தில், அனாவசியமாக, ஒரு joker ய் (சு.சாமி ஊர் அறீந்த PIMP)பெரிய ஆளாக்கிவிட்டீர்கள். அடையாள எதிர்ப்பை பல விதங்களீல் நாகரிகமான வழிகளீல் நடத்தியிருக்கலாம். சமீபத்தில் நடந்த சட்டக்கல்லூரி தகராறூ, இந்த சம்பவம் எல்லாம் சேர்ந்து பொதுமக்கள் மத்தியில் வழக்கறிஞர்கள் பற்றீ ஒரு மோசமான பிம்பத்தை ஏற்படுத்திவிட்டது. IT SHOULD HAVE BEEN HANDLED MORE DIPLOMATICALY. போலிஸ் அராஜகம் ஊர் அறீந்த விஷயம். இந்த சம்பவத்தில் போலிஸ் மோசமான கீழ்த்தரமான THUG ஆக நடந்து கொண்டார்கள். ஆக இந்த சம்பவத்தால், ஈழம் பிரச்சினை பின் தள்ளப்பட்டு, இப்போது வழக்கறிஞர்கள் vs போலிஸ் என்பதாகிவிட்டது. இன்னொரு முக்கியமான விஷயம், ஈழம் பிரச்சினை பற்றீ சலுப்பூட்டும் வகையில் உணர்ச்சி கோஷங்கள், வறட்டூ கத்தலாக (CLICHE) ஆகிவிட்டன.
இந்த பிரச்சினை தேசிய அளவிலும், மற்ற பிராந்திய கட்சிகளூக்கும் புரிய வைக்க தவறீவிட்டோம்.அதனால்தான் மற்ற தேசிய பத்திரிக்கைக்களூக்கும், ARUNDHATHI ROY போன்றவர்களூக்கும் ஆழமான புரிதல் இல்லை. ஆச்சிரியமான் விஷயம், chomsky க்கே ஈழம் பிரச்சினை பற்றீ ஆழமாக தெரியவில்லை.
எனக்கு 2 சந்தேகங்கள்.
(1) உங்கள் வலி புரிகிறது. வரலாற்றீல் நடந்த தவறூகளூக்கு பதிலடி கொடுக்கலாம் என்கிறீர்கள். இதே கருத்தின் அடிப்படையில்தான், சங்பரிவார்களூம்,வலது சாரிகளூம் வரலாற்றாஈ மீட்டெடுக்க முயலுகிறார்கள்.( உதாரணமாக, பாபர் மசூதி இடிப்பு, இராம ராஜ்யம்)ETC.
எங்கணம் உங்க கருத்து, சங்பரிவார்களோடு வேறூபடுகிறது? என்னை பொறூத்தவரையில், உங்கள் STAND POINT, VIOLENT ஆக இருக்கிறது.
(2)எந்த விஷயத்திலும் பங்கேற்பாளர் மட்டும் கருத்து கூறவேண்டும் என்றூ சொல்கிறீர்களா? அப்படியானால், நாம் எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாதே?
நண்பர் வாஸ்
பங்கேற்பாளர்கள்தான் பேச வேண்டும் என்பது பங்கேற்பின் வலி மற்றும் இயக்கப்போக்கில் அதுபற்றிய செயல்முறைப் பயிற்சி கிடைப்பதால அனுபவ அறிவு அது எந்த துறையாக இருந்தாலும் அவசியமாகின்றது. அதனை பிரயோகிப்பதற்கான அறிவு கிடைக்காமல் அதனை மனனம் செய்த அனுபவம் மாத்திரம் எஞ்சியிருந்தால் பங்கேற்றுதான் சமூக அறிவைப் பெற முடியுமே தவிர இல்லாவிடில் அன்றாட சாதி ஒடுக்குமுறை பற்றி பேசினால் ஏதோ கணக்கு பாடம் போல மாலிக்காபூருக்க எப்போ கணக்கு தீர்ப்பது அல்லது நஸ்ருதீன் ஷாக்கு எப்போ கணக்கு தீர்ப்பது என்று பேசத்தான் இயலும். அந்த வலியை இன்றும் அனுபவிகக்கும் மக்களைப் பார்த்து பேசியாவது புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
சாதி ஒடுக்குமுறை ஒரு வரலாற்று தவறு என்று பொறுப்பற்ற முறையில் சொல்ல முடியாது ஒருவேளை பாபர் ராமர் கொயிலை இடித்திருந்தால் கூட சாதியை அதற்கு பதிலாக ஒப்பிடுவது எப்படி சரி எனக் கூறமுடியுமா.
சங்க பரிவாரத்துக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் பழிவாங்குவதா இல்லையா என்ற புள்ளியில் வேறுபாடு இல்லை. இன்னும் சரியாக சொன்னால் இந்த வேறுபாடு ஒரு அரசியலற்ற வாதம்தான். பழிவாங்குதலில் வரலாற்றில் ஒரு இடம் உண்டு. பழிவாங்குவது எனபது இதுவரை ஒடுக்கப்பட மட்டுமே செய்த அனைத்துப் பிரிவினரின் மேலாதிக்கம் குறித்தது. இது இதுவரை உலகம் கேட்டு கூட அறியாதது. ராமருக்கு முன்னர் அங்கு கண அரசு இருந்து அதனை அழித்துதான் உற்பத்தி முன்னோக்கி வந்தது. இன்றைக்கு ஜமீனதார்களுக்கு பிறகு பண்ணைகள் வந்தார்கள் இப்போது உலக முதலாளிகளுக்கு பழத்தோட்டமும் மலர்தோட்டமும் வைத்து பரிமாறுகிறோம். இதனை பின்னுக்கு இழுத்து ராமன் ஆட்சியை கொண்டு வர நினைப்பது வளர்ச்சியை நோக்கிய செயலோ அல்லது முயற்சியோ அல்ல. அப்படி அன்றைய கணங்களின் பிரதிநிதிகள் இன்று தங்களை யார் மரபு எனத் தெரிந்து கொள்ள முடியாததால் ராமன் முன்னிறுத்தப் படுகின்றான். இல்லாவிடில் ஏதாவது விலங்குகளாக மாறுவது என்று கூட பரிவாரம் முடிவு எடுக்கும். எல்லாவற்றுக்கும் மேல் பழிவாங்குதல் என்பது மேடுபள்ளத்தை சமப்படுத்தி சமூக ஒழுங்குமைவுக்காகத்தான். இருக்கும் மேடு பள்ளங்களை அப்படியே வைத்துக கொண்டு அதன் மீது எல்லா இடத்திலும் சமமாக மண்ணை ஒரே அளவு மாத்திரமே அனைத்து நிலப்புள்ளிகளிலும் நிரப்ப சொல்லுகிறீர்கள் … புதிய மண் தேவையில்லை பழைய கடினப்பட்ட மேடுகளை வெட்டி எடுத்துதான் பள்ளத்தை நிரப்ப வேண்டும். அப்போதுதான் உயர்த்தப்பட்ட குழியும் தன்மை ரீதியாக சமமாக இருக்கும்.
ஒரு மாமா அல்லது ஜோக்கரை அடித்த அடையாளப் போராட்டத்தை எப்படி நாகரீகமாக நடத்துவது அல்லது போராட்டம் நாகரீகமில்லாதது என நீங்கள் கருதினால் ஒவ்வோரு பிரச்சினையிலும் நாகரீகமாக போராடுவது என்பது என்ன என்று உதாரணத்துடன் எழுதுங்கள். அது உங்களது கள அனுபவமில்லாததால் ஏற்படும் பொறுப்பின்மையை நீங்களே அறிந்து கொள்ள உதவும்.
ஈழத்தை நீங்கள் மற்ற மாநிலத்துக் காரர்களிடம் எடுத்து செல்லாமல் போலீஸ்-வக்கீல் என மாற விட்டு விட்டோம் என சொல்ல வருகிறீர்கள். இரண்டிலுமே ஜனநாயகத்திற்கான போராட்டம்தான் நடக்கின்றது. இதனைப் புரிந்து கொண்டால் ஈழத்தை நாம் மற்ற மாநிலத்தின் மக்களிடம் எடுத்து சென்றுதான் புரியவைக்க் வேண்டியதில்லை என்பதையும் ஜனநாயத்திற்கான போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று அவர்களை விமர்சனம் செய்வது அவசியம். தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் தங்களது கட்சிக்குள் முதலில் இதனை துவக்க வைக்க விமர்சிக்க வேண்டும்.
ஆனால் ஜனநாயகத்தை ஒரு ஓட்டு சீட்டுக்கு மேல் புரிந்து கொள்ள அல்லது அனுபவிக்க முடியாத ஒரு போலி ஜனநாயக அமைப்பில் இதனை சாத்தியமாக்க இயலாது.. அதற்கு இந்த சந்தர்ப்பம் கம்யூனிசம் அளவிற்கு வேண்டாம் ஒரு ஜனநாயக அளவிற்கு உண்மையை புரிந்து கொள்ளவும் அதன் தொடர்ச்சியாக நக்சல்பாரி அமைப்புகளில் இணைந்து ஒரு புதிய அரசியல் மேலாண்மையை சமூக அரசியல் தளங்களில் நிறுவுவதும் உங்களுக்கு சாத்தியமாக்கும்.
அறிவுஜீவிகளுக்கு புரியாத இந்த ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ரெக்கமண்டேஷன் பண்ணி புரிய வைக்க முடியாது. க்ரிடிசைஸ் பண்ணிதான புரிய வைக்க முடியும்.
நண்பர் மணீ,
களப்பணீயாற்றூம் உங்கள் போன்றவர்கள் மேல் எனக்கு மதிப்பு உண்டு. களப்பணீயாற்றூகிறீர்கள் என்பதால் உங்கள் வழி எனக்கு இப்போதுதான் புரிகிறது. ஒரு joker அடித்ததால் உங்கள் முக்கிய பிரச்சினை (ஈழம்) இப்போது பின் தள்ளப்பட்டு விட்டது. அப்படியே ஒரு வாதத்திற்காக, முட்டை அடிக்கவேண்டும் என்றால், சு.சாமிக்கு மேல், நச்சுக்கருத்துக்களீ உமிழும் ஜெ,சோ,ராம் போன்றவர்கள் உங்கள் இலக்காக இருக்க வேண்டும். களப்பணீயாற்றூம் உங்களூக்குத்தானே மிகுந்த பொறூப்புணர்வு தேவை. எது நாகிறீகம்/அநாகரிகம் என்பது ஒவ்வொருவறூக்கும் அவர்கள் பார்வையை பொறூத்து மாறூம். இந்த முட்டையடி உங்களூக்கு நாகரீகமாக செயலாக இருந்தால், நான் மீண்டும் சொல்ல விரும்புவது, இதனால் நடந்தது என்னவென்றால்,ஈழப்பிரச்சினை முக்கியமிழந்து விட்டது. மற்ற தேசியக்கட்சிகள்/பிராந்திய கட்சிகளூக்கு இந்தப்பிரச்சினை பற்றீ போதிய புரிதல் இல்லாதபோது, களப்பணீயாற்றூம் உங்கள் போன்றவர்கள், அந்த கட்சிகளூக்கு புரியவைக்ககும் கடமை இருக்கிறது அல்லவா? அந்த மாதிரி செய்து இருந்தால், இந்திய அரசின் மேல் ஒரு நெருக்கடியை உருவாக்கி இந்த போரை நிறூத்தியிருக்கலாம். இந்த கட்சிகள் எந்த பிரச்சினைக்கு தாமாகவே முன் வந்திருக்கிறார்கள்? எனக்கும்தான் இந்த ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இல்லை. இந்த கட்சிகள் வரும் வரைக்கும் பார்த்துகொண்டு சும்மா இருக்க முடியாதே? இதை நான் அறீவு ஜீவித்தனமாக எழுதவில்லை,ஆதங்கத்தில் எழுதுகிறேன்.
ஈழப்பிரச்சினையை நீங்கள் இன உணர்வு என்ற சிறிய வட்டத்திற்குள் நின்று பார்ப்பதால் சுசாமி தாக்கப்பட்டது பிரச்சினையை திசை திருப்பி விட்டது போல மட்டுமே தோன்றுகிறது பலருகக்கு. ஆனால் சுசாமி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அதன் நேர் நல்விளைவாக ஜனநாயக மறுப்பு நம்முடைய நாட்டில் எப்படி இருக்கிறது என்பதை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி என எடுத்துக் காட்டி விட்டது. நமது நாட்டில் நாம் போலீசுக்கு எதிராக வக்கீல்களுடன் இணைந்து போராடி மக்களையும் திரட்ட கிடைக்கும் மையப்புள்ளி ஈழத்தை விட ஜனநாயகம்தான் சரியானது. இன்னும் சொல்லப் போனால் அங்கும் ஜனநாயகத்திற்கான போராட்டம்தான் நடக்கின்றது. இந்த அடிப்படையில் மக்களைத் திரட்டினால் அனைத்து மாநில மக்களையும் திரட்டுவதும் உண்மையான் ஜனநாயகத்தை போராடித்தான் பெற முடியும் எனபதை மக்களுக்கும் நமக்கும் அனுபவ ரீதியாகவே புரிந்து கொள்ள உதவும்.
களப்பணி ஆற்றுவது கற்றறிந்த அனைவரின் கடமை. இந்த தேசத்தின் கோடிக்கணக்கான சாதாரண வாழ வழி மறுக்கப்பட்ட மக்களின் கண்ணீரை நிரந்தரமாக துடைப்பதற்கு அவர்களது வரிப்பணத்தில் படித்த வாழ்ந்த அவர்களது உழைப்பில் சுரண்டப்பட்ட சொத்துக்களை அநுபவிகக்க தெரிந்த நாம் வழிகண்டு பிடித்து அதற்காக களப்பணியாற்றுவது நமது கடமை. ஏழைக் கூலி விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய உலகமயமாக்க்கலை எதிர்த்து போராட ஏன் செத்தோம் என்று கூட தெரிந்து கொள்ள முடியாதபடி அவனை கற்க மறுத்த பார்ப்பனியத்தை எதிர்த்து போராட வேண்டும்.
இந்த கடமையில் தவறிவிட்டு தனது அப்பா, அம்மா, மாமா, மாமி, அண்ணன், அத்திம்பேர், ஆத்துக்காரி என வாழுபவர்களை நாகரீகமடைந்த civilized society என்று எப்படி ஏற்க முடியும்
என்ன Mr. மணி, உங்கள் வாதங்களில் தெளிவே இல்லையே! ரொம்பவே குழப்பிவிடுகிறீர்கள். மீண்டும் மீண்டும் படித்தாலும் ஒரே இழுபறியாகவே இருக்கிறது.
//சுசாமி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அதன் நேர் நல்விளைவாக ஜனநாயக மறுப்பு நம்முடைய நாட்டில் எப்படி இருக்கிறது என்பதை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி என எடுத்துக் காட்டி விட்டது//
இதன் அர்த்தம் என்ன? முட்டை எறிந்தவர்களைக் கைது செய்ய வந்தபோது நிகழ்ந்த வன்முறையை ஜனநாயகப் படுகொலை என்கிறீர்களா?
நீங்கள் சு.சாமியை மாமா என்றோ கோமாளி என்றோ நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர் மேலோ, அல்லது வேறு யார் மேலோ முட்டை எறிந்தால் வழக்கு தொடரப் படும். அப்போது கைதாக மறுத்தால் போலீஸ் கை ஓங்கும். போலீஸ் மேல் கல்லெறிந்தால் மண்டை உடையும். இதில் யார் எந்த சாதிக்காரனாக இருந்தாலும் ஒரே நிலைதான். இதிலே நீங்கள் என்ன புதிதாகக் கண்டு விட்டீர்கள். எது உள்ளங்கை? எது நெல்லிக்கனி? டிக்கெட் வாங்காமல் ரயிலில் போயி அபராதம் கட்ட மறுத்தால் போலீஸ் அறைவதற்கும், இதற்கும் என்ன வித்தியாசம் கண்டு பிடித்தீர்கள்? உங்களுக்குப் பிடிக்காத ஒரே காரணத்தால் சாமி மீது முட்டை எறிந்தவர்களை எல்லோரும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பார்கள் என்று நினைத்தீர்களா?
சாதி வெறி தலித்துக்கு வந்தாலும் தவறுதான். அந்த வெறி முற்றியதால்தான்,
நிராகரிக்கப் படவேண்டிய ஒருவர் மேல் குருட்டுத்தனமான கோபத்தைக் காட்டி இலங்கைத் தமிழர் பிரச்சினையை இப்போது கோட்டை விட்டு விட்டார்கள். போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி போராடும் ஒவ்வொரு நாளும் இலங்கையை பற்றிப் பேசும் குரல்கள் இன்னும் மெலிதாகிக் கொண்டே வருகின்றன. இந்த வக்கீல்களைப் போன்ற கோமாளிகள் உல்கத்திலேயே கிடையாது. இதுதான் குரங்கு கைப் பூமாலைக்குச் சரியான உதாரணம் (குரங்கு = வக்கீல்கள்; பூமாலை = இலங்கைப் பிரச்சினை; தலித் வக்கீல்கள் என்ற அர்த்ததில் நான் பேசியதாக நீங்கள் வாக்குவாதத்தைத் திசை மாற்றிவிடாமல் இருக்கவே இந்த தேவையற்ற விளக்கம்).
நீங்கள் செய்த களப் பணிகள் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? நான் இந்தத் தளத்திற்குப் புதியவன். உங்களுக்கு எழுத நேரமில்லாவிட்டால் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் பதிவுகளுக்கு சுட்டிகள் தர இயலுமா? ஒரு வேளை உங்கள் செயல்பாடுகள் தெரிந்தால் அவை உங்களது கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். உங்கள் வார்த்தைகளிலிருந்து உங்களுக்கு பிராமணர்களையும், இலங்கைப் பிரச்சினையில் புலிகளைத் திட்டுபவர்களயும் பிடிக்காது என்று மட்டும் புரிகிறது. என் புரிதல் சரியா?
அய்யா வித்தகன், மணியின் விளக்கம் தெளிவாகத்தான் இருக்கிறது. அது அவர் வாசு கேட்ட கேள்விக்கு பதிலாக அமைந்திருக்கிறது. இடையில் நீர்தான் குழப்பமாக பேசுகிறீர்கள். உங்கள் எழுத்திலிருந்து புரிவது என்னவென்றால் வக்கீல்களால்தான் ஈழப்பிரச்சனை இழிநிலைக்கு போனது போலவும். மற்ற தமிழின அரசியல் கும்பலெல்லாம் அதை தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடுவது போலவும் உள்ளது. மணி யார் என்பது இருக்கட்டும், தொடர்ந்து கேள்வி மட்டும் கேட்டு வரும் நீங்கள் யார்? எந்த அமைப்பு? ஈழத்துக்கான உங்கள் பங்களிப்பு என்ன என்பதை விளக்குவீர்களா… உங்கள் விவாத முறை வெளிப்படையாக இல்லை, ஏதோ உள்நோக்கம் உள்ளது போல இருக்கிறது.
இல்லை Mr. முருகன். எனக்கும் எந்த அரசியல் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் தனி மனிதன் தான். ஈழத்திற்கு என் நேரடி பங்களிப்பு எதுவும் இல்லை.
எனக்கு சாதி மத கடவுள் நம்பிக்கை சுத்தமாகக் கிடையாது. வன்முறை பிடிக்காது. இலங்கைப் பிரச்சினை பற்றியும், சு.சாமி பற்றியும், வக்கீல்கள் பற்றியும் நான் இந்தப் பக்கத்திலேயே எழுதியிருக்கிறேன் (இலங்கயில் தமிழர்களுக்கு தனி நாடு தரப் பட வேண்டும். சு.சாமியை நம்பக் கூடாது. மதிக்கக் கூடாது. வக்கீல்கள் உணர்ச்சி வசப் பட்டு சொதப்பி விட்டார்கள்).
களப் பணி என்பது வெறும் பேச்சா அல்லது நடைமுறையில் ஏதேனும் நடக்கிறதா என்று எனக்குத் தெரியாமல்தான் நான் கேட்கிறேன். இப்போது சொல்ல முடியுமா?
//உங்கள் எழுத்திலிருந்து புரிவது என்னவென்றால் வக்கீல்களால்தான் ஈழப்பிரச்சனை இழிநிலைக்கு போனது போலவும். மற்ற தமிழின அரசியல் கும்பலெல்லாம் அதை தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடுவது போலவும் உள்ளது.//
ஒரு தமிழ்த் தலைவர் கூட சரியில்லை. அவசரத் தேவை ஒரு நாணயமான statesman என்றுதான் நான் எழுதியிருக்கிறேன். பிரச்சினை திசை திரும்பக் காரணமானதால் வக்கீல்கள் எல்லோரையும் விட வேஸ்ட் என்பதும் என் கருத்து.
வக்கீல்கள் பற்றி நம் கருத்து ஒத்துப் போவதற்கு வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது. Let us agree to disagree and leave it as it is.
வினவு தளத்தில் ஒரு கவலை தரும் மனப்பான்மை வளர்ந்து வருகிறது.
வாதங்களுக்கு பதில் தரலாம். இல்லை நம் வேறுபாடுகள் பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியவை அல்ல என்று விலகி போகலாம். இல்லை வேறுபாடுகள் பேசி தீர்க்கக் கூடியவை அல்ல என்றாலும் தம் தரப்பு கருத்துக்களை பதிவு செய்யலாம். ஆனால் இப்போது இந்த வாதத்தை அதிகம் பார்க்கிறேன்:
நான் சொல்லும் கருத்துக்கள் களப் பணி செய்பவர்கள்/கட்சிக்காரர்கள்/பங்கேற்பவர்கள்/நாங்கள் கை காட்டுபவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியவை. மற்ற யாருக்கும் இதைப் பற்றி பேச தகுதி இல்லை. முதலில் உங்கள் பங்களிப்பு என்ன என்று விளக்குங்கள்.
இந்த ட்ரெண்டை ஆரம்பித்ததே வினவுதான். அதற்கு பிறகு மணி இப்படி பேசுகிறார். இப்போது யாரோ முருகன்.
இது சரி இல்லை. ஏனென்றால்:
1. வினவு கம்யூனிசம் பற்றி எழுந்த விவாதத்தின்போது இப்படி சொன்னார். – உலகில் எல்லா விஷயங்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது. கம்யூனிசம் பற்றி குறை சொல்ல ஒரு பயிற்சியும் இல்லாதவர்கள் வந்து விடுகிறீர்கள். இரண்டு வருஷம் கட்சியில் சேர்ந்து உழைத்துவிட்டு பிறகு குறை சொல்லுங்கள். உங்களுக்கு கம்யூனிசம் பற்றி டெஸ்ட் வைக்கிறோம், அதில் பாஸ் செய்தால்தான் இனி கேள்வி கேட்கலாம். அதை படித்து சிரித்து விட்டு நான் சொன்னது மீண்டும் ஒரு முறை.
a. காபிடலிசம் பற்றி உங்களுக்கு என்ன பயிற்சி இருக்கிறது? ஏதாவது இருபது கோடி முதல் போட்டு பிசினெஸ் நடத்தி இருக்கிறீர்களா?
b. கம்யூனிசத்தை கரைத்து குடித்தவர்கள் மட்டும்தான் பேசலாம் என்றால் உங்கள் வீட்டு திண்ணையில் உங்கள் சக நிபுணர்களோடு அல்லவா பேச வேண்டும்? எதற்கு இந்த தளம்? வேண்டுமானால் பாஸ்வோர்ட் வைத்து ஒவ்வொரு முறையும் டெஸ்ட் பாஸ் செய்தவர்கள்தான் உள்ளே வர வேண்டும் என்று வைக்கலாமே?
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் நினைக்கும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே உங்களோடு வாதிட வேண்டுமென்றால் நீங்கள் அப்படிப்பட்ட தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களோடு மட்டுமே பேச வேண்டும். அந்த தகுதி களப் பணியோ, கட்சியில் உழைப்போ, நக்சல்பாரி இயக்கத்தில் பங்கோ, இல்லை புண்ணாக்கு வியாபாரமோ எதுவாக இருந்தாலும் சரி. இங்கே வித்தகனும், ஆர்வியும், ராமுவும், சோமுவும், மீனாவும், லீனாவும் கேட்க வேண்டும் என்று ஆரம்பித்து – பல சமயம் அவர்களோடு விவாதம் நடத்தி விட்டு – பிறகு இந்த மாதிரி பேசுவது எனக்கு யாக்னவல்கியர் பற்றிய ஒரு புராணக் கதையை நினைவு படுத்துகிறது. ஜனக சபையில் கார்க்கி பிரம்மம் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் இதெல்லாம் உனக்கு புரியாது, இதை பற்றி பேச ஒரு தகுதி வேண்டும் என்றும் முடித்து விட்டாராம். அதனால் அவர் வெற்றி அடைந்துவிட்டாராம். கார்க்கி இனி இந்த மனிதரிடம் பேசுவது வீண் என்று ஓடி விட்டிருப்பாள் என்று நினைக்கிறேன்.
2. மணி கேட்டார், இப்போது முருகன் கேட்கிறார். உங்கள் பங்களிப்பு என்ன என்று. நல்ல கேள்விதான். ஆனால் தங்கள் தங்கள் பங்களிப்பையும் விளக்கிவிட்டு பிறகு கேள்வி கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதைப் பற்றி மணியும் இது வரை பேசவில்லை, கேள்வி கேட்கும் முருகனும் தம்மையே கேள்வி கேட்டுக் கொள்ளவில்லை.
RV! என்னிடம் இதுவரை யாரும் சாதிப் பெயர் கேட்டு அவமானப் படுத்தவில்லை, மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஆனால் களப்பணி என்ற சொற்பிரயோகம் எனக்கு விளங்காத காரணத்தால் அதைச் சொல்பவர்கள் மேல் லேசான எரிச்சல் வர வழைப்பது உண்மைதான். ஒரு சுமோவில் கட்சிக் கொடி கட்டிக் கொண்டு போக்குவரத்தை கன்னாபின்னாவென்று திசை திருப்பியபடி போகும் கூட்டம்தான் “களப் பணியாளர்”களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு!
நண்பர்களே
நான் எழுதியவற்றில் களப்பணி ஆற்றுபவர்கள் மட்டுமே பேசுவதற்கு தகுதியானவர்கள் என்றோ, நீங்கள் என்ன சாதி, வர்க்கம் என்பதைத் தெரிந்து கொண்டுதான் விவாதிப்பேன் என்றோ எங்கேயும் எப்போதும் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருப்பதாக புரியும்படி எழுதப்பட்டவைகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்ளவும் கடமைப் பட்டவன் நான்.
மற்றபடி அனுபவமின்மையாலும், வெறும் படிப்பை மாத்திரம் நம்பி விவாதிக்க வருபவர்களுக்கு சில விசயங்களை கிரகிப்பது சாத்தியமில்லாமல் இருப்பதை அனைத்து துறைகளிலும் நீங்கள் காண முடியும் எனக் கருதுகிறேன். களப்பணியின் அவசியம் பற்றியும் அதில் படித்த நாம் பங்கேற்பது அவசியம் என்ற எனது கருத்திலும் இருந்து நான் விலகி விட்டதாக எவரும் நினைக்க கூடாது.
ஒஏனெனில் தலித் மட்டுமதான் தலித் பிரச்சினையை பேச முடியும், பெண்கள் மட்டும்தான் பெண்களது பிரச்சினையைப் பேச முடியும் என்ற வறட்டுவாதத்தை நிராகரித்துதான் மக்களை அணிதிரட்ட முடியும். அதுபோல களப்பணி ஆற்றுபவன்தான் பேச முடியும் என்றால் பெரியாரை விடவும் நமது களப்பணி விஞ்ச முடியும் எனத் தோன்றவில்லை. அதற்காக அவரது கருத்துக்களில் உள்ள தவறை சுட்டிக் காட்ட கூடாதா என்ன…
மணி,
வீண் வேலை செய்கிறாய் என்று என் மனது சொன்னாலும் ஒரு முயற்சி செய்து பார்க்கிறேன்.
// நண்பர் வாஸ்
பங்கேற்பாளர்கள்தான் பேச வேண்டும் என்பது பங்கேற்பின் வலி மற்றும் இயக்கப்போக்கில் அதுபற்றிய செயல்முறைப் பயிற்சி கிடைப்பதால அனுபவ அறிவு அது எந்த துறையாக இருந்தாலும் அவசியமாகின்றது. //
இங்கே பங்கேற்பாளர்கள்தான் பேச வேண்டும் என்பது அவசியமாகிறது என்கிறீர்கள்.
இப்போது
// நான் எழுதியவற்றில் களப்பணி ஆற்றுபவர்கள் மட்டுமே பேசுவதற்கு தகுதியானவர்கள் என்றோ, நீங்கள் என்ன சாதி, வர்க்கம் என்பதைத் தெரிந்து கொண்டுதான் விவாதிப்பேன் என்றோ எங்கேயும் எப்போதும் சொல்லவில்லை. //
களப்பணி ஆற்றுபவர்கள் மட்டுமே பேச தகுதியானவர்கள் என்று எங்கேயும் எப்போதும் சொல்லவில்லை என்கிறீர்கள்.
நீங்கள் சாதி, வர்க்கம் ஆகியவற்றை தெரிந்து கொண்டுதான் விவாதிப்பேன் என்று சொல்லவில்லைதான். அப்படி பொருள் வரும்படி நான் எழுதவில்லை என்றுதான் நினைக்கிறேன், ஆனால் உங்களுக்கு அப்படி பட்டிருந்தால் மன்னிக்கவும். ஜாதி பற்றி சொன்னவர்கள் பலர். சமீபத்தில் பார்த்த ஒன்று – சாமியை எதிர்க்க காரணங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டிருந்தார். முதல் காரணம் சாமி ஒரு பார்ப்பனர். அவருக்கு மிச்ச எல்லாம் இரண்டாம் பட்சம்தான். யார் சொன்னது என்று நினைவுக்கு வரவில்லை.
//நண்பர் வாஸ்
பங்கேற்பாளர்கள்தான் பேச வேண்டும் என்பது பங்கேற்பின் வலி மற்றும் இயக்கப்போக்கில் அதுபற்றிய செயல்முறைப் பயிற்சி கிடைப்பதால அனுபவ அறிவு அது எந்த துறையாக இருந்தாலும் அவசியமாகின்றது. அதனை பிரயோகிப்பதற்கான அறிவு கிடைக்காமல் அதனை மனனம் செய்த அனுபவம் மாத்திரம் எஞ்சியிருந்தால் பங்கேற்றுதான் சமூக அறிவைப் பெற முடியுமே தவிர இல்லாவிடில் அன்றாட சாதி ஒடுக்குமுறை பற்றி பேசினால் ஏதோ கணக்கு பாடம் போல மாலிக்காபூருக்க எப்போ கணக்கு தீர்ப்பது அல்லது நஸ்ருதீன் ஷாக்கு எப்போ கணக்கு தீர்ப்பது என்று பேசத்தான் இயலும். அந்த வலியை இன்றும் அனுபவிகக்கும் மக்களைப் பார்த்து பேசியாவது புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
//
இந்த பத்தி முழுமையாக புரிய வைக்கும் என நம்புகிறேன்
நண்பர் மணி,
உங்கள் மறூ மொழியையும் மற்றூம் பல நண்பர்களீன் மறூமொழிகளூம் படித்தேன். உங்கள் பதிலில்,நான் அறீவு ஜீவித்தனமாக பேசுவதாக தொனி தெரிகிறது. இதற்கு நான் என்ன சொல்வது என்றூ தெரியவில்லை. நான் ஏற்கனவே கூறீயதுபோல், உங்கள் மேலும்,நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் மேலும் எனக்கு மதிப்பு உண்டு. இது நான் தனிப்பட்ட மனிதனாக பல இயக்க தோழர்களோடு பேசி/விவாதித்து வந்ததால். சு.சாமி தாக்குதலில்,”ஜனநாயக மறுப்பு நம்முடைய நாட்டில் எப்படி இருக்கிறது’ என்றூ தெளீவாக புரிந்தது என்றூ சொல்கீறீர்கள். எனக்கு இது நகைச்சுவையாக இருக்கிறது. இந்த நாட்டில் ஜனநாயக மறுப்பும்,போலீஸ் அராஜகமும் இந்த நிகழ்ச்சியால்தான் உங்களூக்கு ” உள்ளங்கை நெல்லிக்கனி” போல் தெரிவது ஆச்சிரியமாக இருக்கிறது. மற்றபடி, நீங்கள் சார்ந்திருக்கும் கோட்பாடுகளீனால்,இந்த நிகழ்ச்சியை நியாயப்படுத்த உங்களூக்கு நிர்பந்தங்கள் இருக்கலாம். ஏனெனில், உங்கள் பாதை வேறூ. உங்கள் மாற்றூ கருத்தையும் உள்வாங்கி கொண்டுதான் இதை எழுதுகிறேன். மற்றபடி, ஒரு நண்பர், சொன்னது போல்,Let us agree to disagree and leave it as it is.
கருத்தெழுதி முடிவதற்குள் ஈழத்தில் தமிழனுக்கு கருமாதி முடிந்துவிடும். முடித்துவிட்டு தலைவாழை இலைபோட்டு வடை பாயாசத்துடன் சாப்பிடுவோம். தண்ணீர் தெளித்து சீமான் போன்ற வீரத் தமிழர்களுக்கும் அஞ்சலி செலுத்த மறந்துவிடாதீர்கள்.
நன்றி.
//கருத்தெழுதி முடிவதற்குள் ஈழத்தில் தமிழனுக்கு கருமாதி முடிந்துவிடும். முடித்துவிட்டு தலைவாழை இலைபோட்டு வடை பாயாசத்துடன் சாப்பிடுவோம். தண்ணீர் தெளித்து சீமான் போன்ற வீரத் தமிழர்களுக்கும் அஞ்சலி செலுத்த மறந்துவிடாதீர்கள்.
நன்றி.//
சீரியசாக ஏதோ சொல்கிறீர்களே என்று பார்த்தால் சீமானை வீரத் தமிழன் என்று சொல்லி குபீர் சிரிப்பு வர வழைத்து விட்டீர்களே! அது சரி, இந்தப் பிரச்சினையால் ஒரு சுமாரான சினிமா இயக்குனருக்கு அரசியல் வாழ்க்கை அமைக்க முயற்சி நடக்கிறது என்று தெரிகிறது. மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னுமொரு திருமா அல்லது ராமாதாஸாக வருவாராக இருக்கும். சினிமா பிழைத்தது என்று நினைத்து தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
ஒரு தமிழனுடைய துணிவில் வீரத்தைக்கண்டு இன்னொரு தமிழன் பாரட்டக்கூடாது. அதற்கு ஓர் உதாரணம்:
தமிழனை பார்த்து நீ ஒரு நாயைப்போன்றவன் என்று ஒருவர் கூறினார். நாய் நன்றியுள்ளது, நான் பெருமைப்படுகிறேன் என்று தமிழன் பதில் கூறினான். அந்த ஒருவர் சொன்னார், அப்படியல்ல, தனது எஜமான் எத்தனை கேடுகெட்டவனாக இருந்தாலும் நாய் அவனைக்கண்டதும் வாலை ஆட்டி காலை நக்கும். ஆனால் தன் இனத்தைக் கண்டால் உறுமி கடிக்கப் பாயும்.
நாங்கள் கருத்துகள் எழுதி சிரிப்பு வர சிரிக்கிறோம். கருத்துகளை துணிவுடன் செயல்படுத்த முனைந்தவர்கள் சிறையிலிருந்து மரிக்கிறார்கள்.
இங்கு யாராவது தற்போதுள்ள வீரத் தமிழர்களை பட்டியலிட்டு தரமுடியுமா? அவர்களை அரசியல் தலைவர்களாக்கி அவர்கள்மூலம் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதை பார்க்கமுடியுமா என்றொரு நப்பாசை.
வீரர்கள் அரசியல் தலைவர்களாகி ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் என்ன? இன்னும் காட்டு மிராண்டிகளாக வாழ்கிற கூட்டமா இந்திய சமுதாயம்? யார் அதிக பட்ச வீரனோ அவன் தான் பெரியவன் என்று சொல்லும் காலம் அழிந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன.
சீமான் போன்ற மூன்றாம்தர மேடைப் பேச்சாளரையெல்லாம் அவர் அடி முட்டாள் என்பதை மறைத்து வீரன் போராளி என்று கொம்பு சீவிவிட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
வீரம் வெங்காயம் என்று வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு திரியாமல் நேர்மை, நாணயம், மனித நேயம், உலக அறிவு உள்ள யாராவது கண்ணில் பட்டால் அவரைத் தலைவராக்குங்கள்.
வீரர்கள் அரசியல் தலைவர்களாகி ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் என்ன? இன்னும் காட்டு மிராண்டிகளாக வாழ்கிற கூட்டமா இந்திய சமுதாயம்? என்ற கருத்து வாழ்க்கையை புரிந்துகொண்டுதான் எழுதப்பட்டதா! எனக்கு தெரியவில்லை.
ஆனாலும், நான் இதனை மறுக்கவில்லை. இன்றைய தலைமுறையிலும் காட்டு மிராண்டிகள் இந்திய சமுதாயத்தில் வாழ்கிறார்கள். இதை நான் கருத்துக்காகவோ, கற்பனையிலோ எழுதவில்லை. இந்திய அமைதிப்படைமூலம் ஈழத்தமிழர்கள் நிறையவே அனுபவித்துள்ளார்கள். மதறாஸ் ரெஜிமென்டில் உள்ள தமிழர்களுடன் இணைந்திருந்த வேறு ரெஜிமென்டை சேர்ந்த சிலர் மட்டுமே, சுத்த இராணுவ வீரர்களாக செயல்பட்டார்கள். ஏனையோர் காட்டு மிராண்டிகளைவிடவும் மோசமானவர்களாக நாங்கள் இந்திய சமுதாயத்தில் இருக்கின்றோம் என்பதை எந்தவித மனக்கூச்சமும் இன்றி வெளிப்படுத்தினார்கள். இன்றும் நாங்கள் இந்திய சமுதாயம் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழ்நாட்டில் காட்டு மிராண்டிகள் வாழந்துகொண்டிருப்பதை போலீஸ் அராஜகம் மிகவும் துல்லிமாக காட்டுகிறதே!!. ஒருவரை காவல்துறைக்கு தேர்ந்தெடுப்பதற்கு அவரை எப்படியெல்லாம் புரட்டி, உரசி, சோதனைசெய்து நியமனம் அளிக்கப்படுகிறது! இதெல்லாம் போலியா?
வினவுப் பதிவில் வந்த குறிப்பொன்றை உங்கள் கவனத்திற்கு தருகிறேன்:
நீதிமன்றத்தை நம்பிப் பயனில்லை என்பதை தம் சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்ட வழக்குரைஞர்கள், வீதியில் இறங்கி மக்கள் மன்றத்துக்கு வந்திருக்கிறார்கள். போலீசு இராச்சியம் என்பது அவர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை. வழக்குரைஞர்கள் இதில் தோற்றுவிட்டால் போலீசு இரத்தம் சுவைத்த மிருகமாகிவிடும்.வக்கீலையும் நீதிபதியையுமே அடித்தவனுக்கு ஆட்டோ ஓட்டுனரும், தள்ளு வண்டி வியாபாரியும், மாணவனும், தொழிலாளியும், விவசாயியும் எம்மாத்திரம்?
நான் திரும்பவும் எழுதுகிறேன். நாங்கள் கருத்தெழுதி முடிவதற்குள் ஈழத்தில் தமிழனுக்கு கருமாதி முடிந்துவிடும். அடுத்த கருமாதி தமிழ்நாட்டு தமிழனுக்கு ஆரம்பமாகும். ஆரம்பமாகிவிட்டதென்றே கொள்ளலாம். இதனை தடுக்கவேண்டும். செயலில் இறங்கி செயல்படுபவர்களை தரம்பாராது, பல்லைப் பிடித்துப்பாராது உடனே கைகொடுங்கள். அல்லது அதற்குரிய தரம், தகுதி இருப்பதான துணிவு உங்களுக்கு ஏற்படுமானால், நீங்களாகவே இறங்கி செயல்படுங்கள்.
//நான் திரும்பவும் எழுதுகிறேன். நாங்கள் கருத்தெழுதி முடிவதற்குள் ஈழத்தில் தமிழனுக்கு கருமாதி முடிந்துவிடும். //
மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன்.
//செயலில் இறங்கி செயல்படுபவர்களை தரம்பாராது, பல்லைப் பிடித்துப்பாராது உடனே கைகொடுங்கள். //
இல்லை. தவறான தலைமையிடம் இத்தகைய பொறுப்பை ஒப்படைப்பது எதிகாலத்திலும் இதே பிரச்சினை தொடரக் காரணமாக இருக்கும்.
//வக்கீலையும் நீதிபதியையுமே அடித்தவனுக்கு ஆட்டோ ஓட்டுனரும், தள்ளு வண்டி வியாபாரியும், மாணவனும், தொழிலாளியும், விவசாயியும் எம்மாத்திரம்?//
போலீஸ் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஆனால் நான் மீண்டும் மீண்டும் சொல்வது வக்கீல்கள் முட்டை எறிந்ததும் மகா முட்டாள்தனம். அதை புகழ்வது இந்தப் பிரச்சினையில் உங்கள் நிலைப்பாடை பலகீனமடையவே செய்யும்.
//சாமிங்களா, தொடங்கியதை(ஈழ மக்களுக்கானது) விட்டுட்டீங்களே?//
புகழினி, ஈழப்போராட்டத்துக்காக தமிழக்த்தில் அமைப்பாக திரண்டவர்கள் வக்கீல்கள்தாம். இதில் உணர்வுபூர்வமாக இருப்பவர்களும் அவர்கள்தாம், அந்த ஒரே காரணத்துக்காக மண்டை உடைப்ட்டு இன்று பிழைப்பையும் இழந்து வீதியில் நிற்பவரும் அவர்கள்தான். ஈழ்ப்போராட்டமும் அவர்கள் உரிமைக்கான போராட்டமும் வேறு வேறல்ல இரண்டும் ஒன்றே!. உண்மையில் துவக்கத்தில் ஈழத்துக்கான வேலை நிறுத்த்தஃதில் பங்கு பெறாதவர்கள் கூட இப்பொழுது ஆதரவாக மாரியுள்ளனர்.
கேக்கவே பாவமா கீதே எத்தினி முற நம்ம ஆர்வீ கேக்குறாரு.
யாராவது பதில் சொல்லுங்க.
“வழக்கறிஞர்கள் மீது குற்றம் இல்லையா ? அருமையான கேள்வி மை லார்டு,
ஏற்கனவே சொன்னீங்க கனம் நீதிபதிஅவர்களே!
ஒருவன் என் வாயில் மலத்தை திணித்தால் அவன் கையை உடைப்பேன் என்று அப்படி சொல்வது அவன் கருத்துரிமை என்றீர்கள் கனம் நீதிபதிஅவர்களே!
அதே போல் தான் கனம் நீதிபதிஅவர்களே! போலீசார் மணி 3.00 முதல் 5.30 வரை உள்ல பூந்து எல்லார் மண்டையும் உடச்சாங்க,ஆனா கமிஷ்னர் 6.30 க்கு சொல்கிறார் ” காவல் நிலையம் எரிக்கப்பட்ட பின் தான் தடியடி நடத்தப்பட்டது,ஆனால் 6.00 மணிக்கு காவல் நிலையம் எரிக்கபட்டது.
இப்போ சொல்லுங்கள் கனம் நீதிபதிஅவர்களே!
உங்கள் மண்டயை பிளந்த போலீசை பார்த்து கையில் கல்லெடுத்து நீங்கள் அடித்தால் கனம் நீதிபதிஅவர்களே! நீங்கள் குற்றவாளியா.கேஸ் கட்டு தூக்கவே முடியாத போது எப்படி மூட்டை மூட்டையாய் வழக்கறிஞர்களால் கூர் முனை கற்களை கொண்டு வரமுடியும்.அம்மாதிரி கற்கள் எந்த வளாகத்திலும் இருக்காது.
நீங்கள் பார்த்தீகளா கனம் நீதிபதிஅவர்களே!
வழக்கறிஞர்கள் தான் குற்றவாளிகள் என்று ஆனால் நாங்கள் பார்த்தோம் போலீசுக்காரர்கள் பாக்கெட்டிலிருந்து கல்லை வீசியதை கனம் நீதிபதிஅவர்களே!
என்ன ஆர்வீ உண்மையாலுமே நீங்க நீதிபதியா இருந்தா உங்க மண்டயும் பணால் ஆயிருக்கும் அப்பவும் நீங்க கருத்துரிம பேசுவீங்க ஏன்னா நீங்க…………ரொம்ப……….. நல்லவரு….
கலகம்,
கேட்ட கேள்வி ரொம்ப சிம்பிள் – வக்கீல்கள் மீது தவறு உண்டா இல்லையா என்று. அதற்கு மீண்டும் போலீஸ் தவறு செய்தார்கள் என்று ஆரம்பிக்கிறீர்கள். யாராவது போலீஸ் மீது தவறு இல்லை என்று சொன்னார்களா? அது சரி நீங்கள் எந்த காலத்தில் கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறீர்கள்?
மீண்டும் அனைவரையும் கேட்கிறேன், வக்கீல்கள் குற்றமற்றவர்களா?
சிதம்பரம் கோவில் விவகாரம் காரணமாக முட்டை வீசப்படவில்லை. பொதுவாகவே சுசாமியின் ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டின் மீதான விமர்சனம்தான் அது. அதை சுசாமி கூட உறுதிப்படுத்தியிருக்கிறார்
நண்பர் ஆர்.வி,
மீண்டும் மீண்டும் உங்களை அறியாமலே (?), இந்து ராமின் கொள்கைக்கு உடன் படுகுரீர்…
//இது ரொம்பவே ஓவர். போலீஸ் தடியடிக்காக எந்த வழக்கும் எப்போதும் எந்த ஆட்சியிலும் எந்த நாட்டிலும் எந்த இசத்திலும் பதிவு செய்யப்படுவதில்லை.
//
இது ஏன் நடப்பதில்லை..? போலிசு என்பது சட்டத்திற்கு அப்பாற்ப்பட்டது என்பதாலா..? அல்லது போலிசு தவறே செய்யாத வள்ளுவரின் பிள்ளைகளா..?
இங்கு யாரும் வக்கீல்கள் குற்றம் அற்றவர்கள் என வாதாட வரவில்லை… இங்கு வக்கீல்கள் தான் கலவரத்தை தூண்டினர் என்பதற்கு முதலில் இந்த விசாரணை அறிக்கை என்ன விளக்கங்களை / ஆதாரங்களை அளித்து உள்ளது…? வக்கீல்களின் நடத்தைக்கு கண்டனம் தெரிவிக்கும் இந்த விசாரணை அறிக்கை.. ஏன் பல கேள்விகளுக்கு விடை கொடுக்கவில்லை.. ? தோழர் கழகம் கேட்டது போல் ஏன் பல செய்திகள் முன்னுக்கு பின்னாக போலிசால் சொல்லப் படுகிறது..
வக்கீல்கள் குற்றம் அற்றவர்களா என ஆர்வமாக கேட்கும் நீங்கள் ஏன் விசாரணை அறிக்கை நடுநிலமையிலுனடன் தயாரிக்கப் பட்டது என கேட்பது இல்லை..? அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என ஆராயவில்லை..?
உங்கள் கருதும், விசாரணை அறிக்கை கருதும் ஒன்றே… எள்ளளவும் வேறுபாடு இல்லை.. இவனும் தவறு செய்தான், அவனும் தவறு செய்தான்.. எல்லாம் சரிக்கு சரியாய் விட்டது என சொல்லும் சிறு குழந்தை விளையாட்டை போல் உள்ளது..
இந்து நாளிதழ் ஈழ மக்களுக்கு எதிராக எழுதிய கட்டுரையை கண்டித்து , அதன் நாளிதழ் முன்பு ஆர்பாட்டம் நடந்தியபோது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு ஆபத்து என அலறியது… ஆனால் வருடந்தோறும் பல பத்திரிக்கையாளர்கள் நேரடியாகவே இலங்கை அரசாங்கத்தால் கொல்லப்படும் போது.. கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?
சரி உங்கள் வாதத்திற்கு வக்கீல்கள் கல்லெறிந்தார்கள் என வைத்துக்கொள்வோம்..வினவு வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் ஒரு பொலிசுக்காரர்.. கொலைவெறியுடன் ஒரு காரை அடித்து நொறுக்குவார்… அந்த கார் எத்தனை கற்களை எரிந்தது..?
புகைப்படம் எடுக்காவிட்டால் தனது போலிசு வாகனத்தை தானே சேதப்படுத்திவிட்டு வக்கீல்கள் சேதப் படுத்தினர் என சொல்ல மாட்டார்கள் என நம்புகிறீர்களா?
சரி மா.சே. அப்படியே இருக்கட்டும். எதற்காக செய்தாலும் முட்டை வீசியது தவறுதான். அப்படி அவருக்கு கண்டனம் தெரிவித்துதான் ஆகவேண்டுமென்றால் நீதி மன்றத்துக்கு வெளியே அவருக்குக் கருப்புக் கொடி காட்டி, சாதிப் பெயர் சொல்லாமல் நாகரீகமான – ஆனால் கடுமையான – கோஷங்களை எழுப்பி, தேவையென்றால் அடையாளமாக தானாகவே கைதாகி சு.சாமியின் பேச்சு ஈழ ஆதரவாளர்களுக்கு ஒவ்வாது என்பதைக் காட்டியிருக்கலாம். கண்டிப்பாக யாராலும் அத்தகைய நடவடிக்கையை அசிங்கப் படுத்தியிருக்க முடியாது. அது மட்டுமல்ல சு.சாமியை எதிர்த்து கோஷம் எழுப்பியதால் சிறைக்குப் போயிருக்கும் வக்கீல்களுக்கு ஒட்டு மொத்த மாநிலமே துணை நின்றிருக்கும். சு.சாமி எங்கு சென்றாலும் பேச முடியாத படி அனைத்து தரப்பினரும் எதிர்த்திருப்பார்கள்.
நண்பரே! சாதி, மத, கட்சி வேறுபாடுகள் தாண்டி சாதாரணக் குடிமகனுக்கு வக்கீல்கள் மீது இப்போது எந்தக் கரிசனமும் இல்லை. காரணம் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தன்னிச்சையாக செயல் பட்டதுதான். அதோடு தனி மனிதன் சாதிப் பெயர் சொல்லித் திட்டுவதை யாரும், எந்த சாதியாக இருந்தாலும் வீரமாகக் கருத இயலாது. 20 பேர் சேர்ந்து ஒரு பொய்யரை, கோழையை கன்னத்தில் அறைந்து, முட்டை எறிந்து, சாதிப் பெயரால் திட்டி தேவையில்லாமல் அவர் மேல் பரிதாபம் வரும்படி நடந்து கொண்டு விட்டார்கள். இதில் தடுமாறுவது அவர்கள் சொல்ல வந்த கருத்துதான்.
அதனால்தான் சொல்கிறேன். உணச்சி வசப் படாமல், கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்துறைக்க வக்கீல்கள் மத்தியில் ஒரு statesman கூட இல்லை.
// மீண்டும் மீண்டும் உங்களை அறியாமலே (?), இந்து ராமின் கொள்கைக்கு உடன் படுகுரீர்…//
ஹிந்து ராம் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது. ஆனால் ஹிந்து ராம் கிழக்கில் சூரியன் உதிக்கிறது என்று சொன்னால் அதையும் எதிர்க்கும் மனோபாவம் தவறு. அவர் சொல்வது சரியாக இருந்தால் சரி என்று சொல்லுங்கள். தவறாக இருந்தால் நிராகரியுங்கள். ஹிந்து ராமுக்கும் எனக்கும் ஒரு கருத்தில் இசைவு இருப்பது தவறான விஷயமா? பொதுவாக கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வினவு சொல்லும் சில கருத்துகளை நான் சரி என்று நினைப்பது இல்லையா என்ன? என் கருத்துகளை ஹிந்து ராமும் அப்படி சொல்லிவிட்டாரே, வினவும் அப்படி சொல்லிவிட்டாரே என்றெல்லாம் யோசித்து மாற்றிக்கொள்ள சொல்கிறீர்களா? என் கருத்துகள் என்னுடையவை; அவை மாற்று கருத்துகளால் மாறலாம்; இசைவு கருத்துகளால் மேலும் வலிமை அடையலாம்; இசைவு, மாற்று கருத்துகளை சொன்னவர் யார் என்பது எனக்கு அனாவசியம்.
நான் பல வருஷங்களுக்கு முன் ஹிந்து, ஃப்ரண்ட்லைன் எல்லாம் படித்த போது ஹிந்து ராம் கம்யூனிச சார்புள்ளவர் மாதிரிதான் தெரிந்தார். இப்போது என்ன காபிடளிசத்துக்கு கட்சி மாறிவிட்டாரா? இல்லை இங்கே அடிக்கடி திட்டப்படும் சிபிஎம் கட்சியை ஆதரிக்கிறாரா?
// போலீஸ் தடியடிக்காக எந்த வழக்கும் எப்போதும் எந்த ஆட்சியிலும் எந்த நாட்டிலும் எந்த இசத்திலும் பதிவு செய்யப்படுவதில்லை.
//
இது ஏன் நடப்பதில்லை..? //
ஏன் நடப்பதில்லை என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் நான் அவ்வளவு தூரம் இங்கே போகவில்லை. வினவு போலீஸ் தடியடிக்காக வழக்கு பதிவு செய்யப்படாதது போலீஸ் ராஜ்யத்தின் ஆரம்பம் ஆகிவிட்டதற்கு ஒரு அறிகுறி என்று எழுதுகிறார். அப்படி என்றால் உலகில் இது வரை இருந்த அத்தனை ஆட்சிகளும் – வினவின் ஆதர்ச தலைவர்களான ஸ்டாலின், மாவோ ஆட்சிகள் உட்பட – குறைந்த பட்சம் போலீஸ் ராஜ்யத்தின் ஆரம்பம் என்றே கருதப்பட வேண்டும். அப்படி வினவு ஒரு நாளும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அதனால் இது ரொம்பவே ஓவர் என்று குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த ஆட்சியில் மட்டும்தான் போலீஸ் ராஜ்யம் ஆரம்பம் ஆகிறதா இல்லை எல்லாமே அப்படித்தானா?
// இங்கு யாரும் வக்கீல்கள் குற்றம் அற்றவர்கள் என வாதாட வரவில்லை… //
அப்பாடா! வக்கீல்கள் மீதும் குற்றம் இருக்கிறது என்று மறைமுகமாகவாவது ஒத்துக் கொள்கிறீர்களே!
போலீஸ் அத்து மீறியது என்பதைத்தான் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையே ஒத்துக் கொள்கிறதே? யார் இங்கே போலீஸ் குற்றமற்றவர்கள் என்று சொல்கிறார்கள்?
// உங்கள் கருதும், விசாரணை அறிக்கை கருதும் ஒன்றே… எள்ளளவும் வேறுபாடு இல்லை.. இவனும் தவறு செய்தான், அவனும் தவறு செய்தான்.. எல்லாம் சரிக்கு சரியாய் விட்டது என சொல்லும் சிறு குழந்தை விளையாட்டை போல் உள்ளது.. //
விசாரணை அறிக்கையை நான் இன்னும் முழுதாக படிக்கவில்லை. சரிக்கு சரியாய் விட்டது என்று நீங்கள் சொல்வது தவறான புரிதல். இந்த தளத்தில் பலரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வக்கீல்கள் மேல் ஒரு தவறும் இல்லை என்று சொல்கிறார்கள். சந்தேகம் இருந்தால் மா.சே. இங்கே எழுதிய மறுமொழியை படித்துப் பாருங்கள். ஏன், வினவே இதுவரை வக்கீல்கள் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லும் தொனியில்தான் எழுதுகிறார். (உதாரணம் – போலீஸ் ஸ்டேஷன் எரிப்பு ஒரு நுண்ணிய விவரம் என்றுதான் சொன்னார் – அதுவும் நான் நீங்கள் ஏன் போலீஸ் ஸ்டேஷன் எரிந்தது என்று ஒரு வார்த்தை கூட எழுதவில்லையே என்று கேட்ட பிறகுதான்)
வக்கீல்கள் மேல் ஒரு தவறும் இல்லை என்று சொல்வது வினவு தளத்தின் நம்பகத் தன்மையையே குறைக்கிறது. முட்டை வீச்சு சிறு தவறு, புரிந்து கொள்ளக்கூடிய தவறு என்று எழுதவில்லை. போலீஸ் ஸ்டேஷன் எரிப்பு வருந்தத் தக்க, ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய எதிர் விளைவு என்று வினவோ, அவரது usual ஆதரவாளர்களோ ஒத்துக் கொள்வதில்லை. கைது செய்ய வந்த போலீசிடம் நிபந்தனைகள் விதித்துக் கொண்டே போனது அவர்களை கடுமையாக நடந்து கொள்ளத் தூண்டும் ஒரு செயல் என்று யாரும் சொல்லவில்லை. வக்கீல்களின் முட்டாள்தனத்தால் இப்போது ஈழப் பிரச்சினையை விட இந்த பிரச்சினைதான் பெரிதாகிவிட்டது என்று கூட தோன்றவில்லை. எல்லா தவறும் போலீசுடையதே என்றுதான் எழுதுகிறார்கள். இது சரியான அணுகுமுறைதானா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
// இந்து நாளிதழ் … பல பத்திரிக்கையாளர்கள் நேரடியாகவே இலங்கை அரசாங்கத்தால் கொல்லப்படும் போது.. கள்ள மவுனம் சாதிப்பது ஏன்? //
சந்தேகம் வரத்தான் செய்கிறது. ஆனால் நானும் நீங்களும் டாரஃபர், ரவாண்டா, தியானன்மென் சதுக்கம் பற்றி என்ன எழுதிவிட்டோம்? அதனால் நானும் நீங்களும் இங்கே நடந்த படுகொலைகளை ஆதரிக்கிறோம் என்றோ, நமது மவுனம் கள்ளத்தனமானது என்றோ அர்த்தம் இல்லையே? நம்முடைய வேர்கள் இருக்கும் இந்தியாவை, தமிழ் நாட்டை பற்றித்தானே பேசுகிறோம்? அவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டதை பற்றி அவர்கள் கத்துவதில் என்ன ஆச்சரியம்? ஆனால் சந்தேகம் வரத்தான் செய்கிறது.
// சரி உங்கள் வாதத்திற்கு வக்கீல்கள் கல்லெறிந்தார்கள் என வைத்துக்கொள்வோம்..வினவு வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் ஒரு பொலிசுக்காரர்.. கொலைவெறியுடன் ஒரு காரை அடித்து நொறுக்குவார்… அந்த கார் எத்தனை கற்களை எரிந்தது..? புகைப்படம் எடுக்காவிட்டால் தனது போலிசு வாகனத்தை தானே சேதப்படுத்திவிட்டு வக்கீல்கள் சேதப் படுத்தினர் என சொல்ல மாட்டார்கள் என நம்புகிறீர்களா? //
ஆனால் வினவும், நானும், நீங்களும், உண்மையை பேசுவதில் என்ன தயக்கம்? ஒரு தவறும் இல்லை என்று வாதிடும்போதுதான் மிச்ச விஷயங்களில் எவ்வளவு தூரம் நம்பலாம் என்ற கேள்வி எழுகிறது. நீங்கள் (நானும்) போலீஸ் தரப்பை முழுதாக நம்பாத மாதிரி. என்ன நான் வக்கீல்கள் தரப்பையும் முழுதாக நம்பவில்லை. நீங்கள் நம்புகிறீர்கள் போல தெரிகிறது.
போலீஸ் தன் மீது தவறு இருக்கும் என்றா சொல்லப் போகிறது? வக்கீல்கள் மாதிரிதான்.
போலீஸ் உள்ளே போனால் வக்கீல்கள் குற்றமற்றவர்கள் ஆவது எப்படி? உங்கள் லாஜிக் புரியவில்லை.
மா.சே.
1. சாமி மீது முட்டை வீச்சு சட்டப்படியும் தவறு, கருத்துரிமை சுதந்திரத்தை ஆள் பலம் வைத்து அடக்க நினைக்கும் முயற்சி என்ற விதத்திலும் தவறு.
2. சாமி மீது சாதியை வைத்து திட்டினார் என்று பொய்க்கேஸ் போட முயற்சி செய்தது தவறு.
3. கைது செய்ய வந்த போலீசாரிடம் சாமி மேல் கேஸ் பதிவு செய்தால்தான் கைதாவோம் என்று நிபந்தனை; கேஸ் பதிவு செய்த பிறகு சாமியை கைது செய்த பிறகுதான் எங்களை கைது செய்ய வேண்டும் என்று அடுத்த நிபந்தனை; இதெல்லாம் தவறுதான்.
4. போலீஸ் ஸ்டேஷன் எரிப்பு தவறு.
நீங்கள் இவை எதுவும் தவறு இல்லை என்று நினைக்கிறீர்கள் என்று தெரிகிறது. முடிந்தால் இவற்றை பற்றி யோசியுங்கள்.
1. உங்கள் கருத்துகளில் உடன்பாடு இல்லாத நான் நாளை உங்கள் மீது முட்டை வீசினால் அது என் ஜனநாயக உரிமை என்று சும்மா இருப்பீர்களா?
2. உங்களுக்கு எனக்கும் தகராறு. நான் உங்கள் மீது முட்டை அடித்து கோஷம் போடுகிறேன். எனக்கு பாதிப்பு வராமல் இருக்க அப்புறம் நீங்கள் என்னை ஜாதி பேர் வைத்து திட்டினீர்கள் என்று கேஸ் போட முயற்சி செய்கிறேன். சரிதானா?
3. போலீஸ் என்னை கைது செய்ய வருகிறது. நான் ஏதாவது நிபந்தனை போட முடியுமா? உங்களை கைது செய்த பிறகுதான் என்னை கைது செய்ய வேண்டும் என்று சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
4. போலீஸ் என்னை அடி வைத்து சாத்தி விடுகிறது. நான் போலீஸ் ஸ்டேஷனை கொளுத்தி விடுகிறேன். எனக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று வாதிடுவீர்களா மாட்டீர்களா?
// சுசாமி எதுக்கு அங்கே வந்தார். //
அவர் நீதிமன்றத்துக்கு வரவே கூடாதா? நீதிமன்றம் என்ன புது சிதம்பரமா? சரி தீட்சிதர்களுக்காக வாதாட வந்த ஒருவர் மீது முட்டை வீச்சு. தீட்சிதர்கள் கேஸ் முத்துசாமி ஐயர் காலத்திலிருந்தே நடக்கிறது போலிருக்கிறது. இத்தனை காலம் வாதாடிய வக்கீல்கள் மீது முட்டை வீசப்பட்டத்தா? அட தீட்சிதர்கள் மேல் வீசப் பட்டதா? அட என்னங்க இத்தனை சப்பைக்கட்டுக் கட்டுகிறீர்கள்?
ஜாதி வெறியினால்தான் அவர் வந்தார் என்று எழுதுகிறீர்கள். அவருக்கு ஜாதி வெறியை விட பதவி வெறி செல்வாக்கு வெறி அதிகம் என்பது என் எண்ணம். சரி அவர் ஜாதி வெறியராகவே இருந்துவிட்டு போகட்டும். தமிழ் நாட்டில் ஜாதி வெறி உள்ளவர் அவர் ஒருவர்தானா? தேர்தலுக்கு தேர்தல் ஜாதி கணக்கு போடப்படுகிறது. ஜாதி கட்சிகள் ஃபார்வர்ட் ப்ளாக் காலத்திலி இருந்தே நடக்கின்றன. எத்தனை பேர் மேல் முட்டை வீசப்படுகிறது?
இவர் கமென்ட் அடிக்காமல் இருந்திருப்பாரா என்று கேட்டீர்கள். அடித்திருக்க மாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன். அவர் நல்லவர், அப்படி எல்லாம் நினைக்க மாட்டார் என்றெல்லாம் இல்லை, பொது இடத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற அளவுக்கு அவருக்கு அறிவு உண்டு. சரி // வக்கீல்கள் போலீஸ ஸ்டேஷனக் கொளுத்துனத்துக்கு என்ன ஆதாரம் இருக்கு…// என்று கேட்டீர்களே, இதற்கு என்ன ஆதாரம் என்று யோசித்தீர்களா?
சாமிக்கு // பாதுகாப்பு தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கேவலம் ஒரு கூமுட்டை அடித்ததற்காக 356 எனப் பேசுபவனை ஒரு கிராமத்து பிரசிடெண்டாக வைத்தால் கூட அறிவுளள் தமிழகத்து மக்கள் கொதித்து போவார்கள். எனவே இவன் போன்ற நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு சிறப்பாக செய்வது என்ற பெயரில் மக்களது வரிப்பணம் வீணடிக்கப் படுகின்றது. இதுபோல மைனாரிட்டியாக தேர்வான முன்னாள் அமைச்சரவையினர் அனைவருகக்கும் இதனை ரத்து செய்ய ஒரு தனிச்சட்டம் தேவை. //
சரியான பேச்சு. மைனாரிட்டி அரசு என்று பிரிக்க வேண்டாம், முன்னாள் அமைச்ச்சரவையினர் யாருக்கும் – அவர்களுக்கு அபாயம் இருப்பதாக போலீஸ், உளவுத் துறை யாராவது சொன்னாலொழிய – பாதுகாப்பு கொடுப்பது வீண் என்று நினைக்கிறேன்.
// சாதியை பற்றி திட்டியதாக சொன்னீர்கள் என்ன சொன்னார்கள் என்று தெளிவாக சொல்லுங்கள்… கொழுப்பெடுத்த பார்ப்பன கூட்டம் இதுதானே… //
எங்கேயோ படித்தீன், மறந்துவிட்டது. தினமும் பத்து பேர் கொழுப்பெடுத்த பார்ப்பன கூட்டம் என்று பேசுவதை கேட்டு கேட்டு இப்போது பார்ப்பனர்களை பற்றி திட்டெல்லாம் நினைவில் நிற்பதில்லை.
// இவங்க எல்லாம் மாமா பசங்க என்று வக்கீல்களை //
tout என்று சொன்னாராம். tout என்ற வார்த்தையை மாமா பசங்க என்று மொழிபெயர்ப்பது தவறு. தரகன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
// வாதி ஒரு புகார் தருகிறான் பிரதிவாதி ஒரு புகார் தர்றான். இருவரையும் கைது செய்துதானே போலீஸ் விசாரிக்கும்
//
இல்லை விசாரித்துதான் யாரையாவது கைது செய்யும் என்று நினைக்கிறேன். இங்கே அப்படியும் நடந்ததாக தெரியவில்லை. சாமி புகார் தந்தாரா? பார்த்த நீதிபதிகளே புகார் தந்தது போல இருக்கிறது. கைது செய்ய வந்த பிறகு பிரதிவாதி ஒரு புகார் தருகிறான் – நிபந்தனை என்ன என்றால் புகாரை பதிவு செய்த பிறகுதான் என்னை கைது செய்ய வேண்டும். கட்டாயப்படுத்தி புகாரை பதிவு செய்த பிறகு அடுத்த நிபந்தனை – அவனை கைது செய்த பிறகுதான் என்னை கைது செய்ய வேண்டும். இப்படி நானோ நீங்களோ நிபந்தனை விதிக்க முடியுமா?
// தே… பையா என்று என்னை அழைப்பதற்கு உங்களுக்கு கருத்து இருப்பதாகவும் அக்கருத்துக்கு நான் மதிப்பளித்து உங்களைப் பேச வைக்க அனுமதிக்க வேண்டுமென்றால் அதை அப்படியே vice versa ஆக நீங்கள் ஒத்துக கொள்வீர்களா…//
இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன், சொல்லுங்கள். நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன் என்று தெரியும். பொழுது விடிந்து பொழுது போனால் இந்த தளத்தில் ஒரு பத்து பேர் பார்ப்பனர்கள் என்று இந்த சமூகம் அடையாளம் காணும் எல்லாரையும் கன்னா பின்னா என்று திட்டத்தான் செய்கிறார்கள். நீங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதற்கு பிறகும் இப்படி கேட்பதற்கு என்ன அர்த்தம்? நீங்கள் என்ன ஜாதி என்றோ, ஜாதி பெயரை சொல்லியோ நான் இங்கே யாரையும் திட்டி நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
// நீங்கள் எதற்காக அங்கு கூடியிருந்த அத்தனை வக்கீல்களும் குற்றமற்றவர்களா? எனக் கேட்டு அத்தனைத்து வக்கீல்களும் குற்றவாளிகள் போன்ற கேள்விகளை தொடுக்கிறீர்கள்? //
வக்கீல்கள் மேல் ஏதாவது பிழை இருக்கிறதா என்று கேட்டாலே அத்தனை வக்கீல்களும் குற்றவாளிகள் என்று சொல்கிறேன் என்று நினைக்கிறீர்கள். என்ன அடித்த போலீஸ்காரர்கள் மீது மட்டுமா இங்கு குற்றம் சாட்டப்படுகிறது? போலீஸ் என்று பொதுவாகத்தானே எல்லாரும் – நீங்களும் நானும் உட்பட – எழுதுகிறோம்? அது ஏன் உங்களுக்கு தவறாக தோன்றவில்லை?
நான் எதற்கு வக்கீல்கள் பற்றி கேட்கிறேன் என்று கேட்டீர்கள். வினவு எதற்காக போலீஸ் பற்றி கேட்கிறார்? எல்லாருக்கும் உண்மையை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பதால்தான். உங்களுக்கு பாதி உண்மை போதும் போலிருக்கிறது.
// தன்மீது முட்டை எறியும்படி ஒரு சில வக்கீல்களையும், பின்பு போலீஸ் தடியடிக்காக, ஒரு சில போலீஸ்காரர்களை அங்கு கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும்படி ஏற்பாடுகள் செய்திருக்கவும் வழிகள் உண்டா இல்லையா?.//
Conspiracy theory! இவற்றை பற்றி பேசுவது ரொம்ப கஷ்டம். அதனால் நானும் ஒரு Conspiracy theory-ஐ எடுத்து விடுகிறேன். வக்கீல்கள் இலங்கை தமிழர்களுக்கு கொடுக்கும் ஆதரவு போலியானது. சும்மா லுலுலாயி. அவர்கள் முத்துக்குமார் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் பொங்கி எழுந்த இலங்கை ஆதரவை திசை திருப்பவே சாமி மீது முட்டை வீசி இப்போது இலங்கை ஆதரவை அமுக்கி விட்டார்கள். என்ன சொல்கிறீர்கள்?
Conspiracy theory கண்டுபிடிப்பது ரொம்ப சுலபம்.
வீரமணி ஏன் இப்படி குழப்புகிறார்?
// இப்போது நடைபெறும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் அரசியல் நுழைந்து விட்டது என்று அச்சம் பொதுவானவர்களுக்கு இருக்கிறது. //
// திமுக-காங்கிரஸ் வழக்குரைஞர்களே, இதற்குப் பிறகும் உங்கள் கடமை என்ன? இது கண்டு ஆத்திரம் வர வேண்டாமா? வழக்கம்போல் கோஷ்டி கானம் பாடுவதுதானா?//
தி.மு.க. வழக்குரைஞர்கள் குழுவாக செயபட்டால் அரசியல் நுழையாதாமா?
சொலமுழுங்கி , திருட்டு பையன், வீரமணியோட அறிக்கையயெல்லாம் ஏப்பா போடுறீங்க?
இவன் தமிழர்???? தலைவரா, கள்ளன்கள் தலைவருன்னு வேணும்னா சொல்லலாம்?
இவனெல்லாம் ஒரு ஆளுன்னுட்டு……!
மறப்போம் மன்னிப்போன்ம் என்கிறாரா?
அது சரியான அணுகுமுறை இல்லை. அத்து மீறிய காவலர்கள் மேல் டிபார்ட்மென்ட் அளவிலாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்றைய நிலையில் முட்டை வீசியவர்களை கண்டும் காணாமல் விட்டுவிடுவதுதான் ப்ராக்டிகல். ஆனால் போலீஸ் ஸ்டேஷனை எரித்தவர்களை கண்டுபிடிக்க ஒரு கண்துடைப்பு முயற்சியாவது எடுக்க வேண்டும். இது போன்ற தவறுகள் இனி மேல் சட்ட ரீதியாகவே தண்டிக்கப்படும் என்று வக்கீல்களிடம் தெளிவாக சொல்லிவிட வேண்டும். உச்ச நீதி மன்றம் வழக்கறிஞர்களுக்கு code of conduct நிறுவ வேண்டும்.
visit my site endentrum andudan
மணி,
உணர்ச்சிவசப்பட்டால் இங்கெல்லாம் நான் பதில் எழுதிகொண்டிருக்க முடியாது. பொழுது விடிந்து பொழுது போனால் என்ன மாதிரி கமென்ட் வருகிறது என்று உங்களுக்கு தெரியாதா?
// பார்வர்ட் பிளாக் னு ஒரு கட்சி வந்த பிறகு இங்கு சாதி உணர்வோ அல்லது சாதி ஆதிக்கமோ தோன்றவில்லை…//
அப்புறம் ஏன் சாமி மீது மட்டும் முட்டை வீச்சு? சாமி ஜாதி வெறி பிடித்தவர், அதனால் அவர் மேல் முட்டை வீச்சு என்று நீங்கள்தான் எழுதினீர்கள். நாட்டில் இந்த தருணத்தில் ஜாதி வெறி பிடித்து லட்சம் பேர் அலைகிறார்கள். அதில் யார் பார்ப்பனரோ அவர் மேல் மட்டும்தான் முட்டை வீச்சு என்பது reverse casteism. சிதம்பரம் கோவிலை விட பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, ஊட்தாபுரம், திண்ணியம் போன்றவை மோசமான விஷயங்கள். அங்கே எல்லாம் ஜாதி பேரை சொல்லி திட்டுவது மிக அபூர்வம். ஏன், கீழ் வெண்மணியில் கூட எரித்தவர்கள் என்ன ஜாதியினர் என்று கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. “ஓர் இனத்தை சேர்ந்தவர்கள்” என்ற euphemism அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சங்கராச்சாரி பற்றி பேசாத “ஜாதி எதிர்ப்பாளர்” கிடையாது. பிரேமானந்தா என்ன ஜாதி என்று யாருக்காவது தெரியுமா? போலி சாமியார்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் ஜாதி எங்கேயாவது பேசப்படுகிறதா? இந்த முரண்பாடு, reverse casteism புரியாதது பெரிய ஆச்சரியம்!
நீங்கள் பல் நூறு ஆண்டுகளாக நடந்த அநியாங்களுக்கு பழி வாங்குவதற்காக reverse casteism அமல்படுத்த விரும்புகிறீர்களா? சரி, அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பாட்டன் முப்பாட்டன் ஜாதி பார்த்ததற்காக பேரன் திட்டு வாங்க வேண்டும் என்பது தவறுதான், ஆனால் அந்த கோபத்தின் அடிப்படையில் ஓரளவு நியாயம் இருக்கிறது. அநியாயங்கள் மிக கொடுரமாக வெளிப்பட்டிருக்கின்றன என்பதி இரண்டு கருத்து இல்லை. ஆனால் ஜாதி எதிர்ப்பு வேறு, பழி வாங்கும் உணர்ச்சி வேறு. உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
// பொதுவான தேவர் சாதி வெறி, வன்னியர் சாதிவெறி, கவுண்டர சாதி வெறி இருந்தாலும் அவற்றை தோற்றுவித்த பிரம்மனின் மூத்த மகன்கள் தண்டனை அனுபவிக்க மாட்டேன் என்பது மனித உரிமை மீறல் என உங்களுக்கு படவில்லையா..//
என்னங்க சொல்றீங்க? பிராமணர்கள் இந்த நாட்டில் தண்டிக்க படுவதில்லையா? சட்டம் அவர்களுக்கு ஏதாவது ஸ்பெஷல் சலுகைகள் கொடுத்திருக்கிறதா? பார்ப்பனர்கள் உத்தமர்கள் இல்லை, பலரும் அவரவர் ஜாதியினருக்கு உதவி செய்வது போல இங்கேயும் நடக்கிறது என்று வேண்டுமானால் சொல்லுங்கள். தேவர் சாதி வெறி, வன்னியர் சாதி வெறி etc. பார்ப்பனர் ஜாதி வெறி கண்டிக்கபடுவதைப் போன்று தீவிரமாக கண்டிக்கப்படுகிறதா? நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்.
// மேலும் பெரும்பான்மை பார்ப்பன சாதியினர் ஜனநாய நடைமுறைக்கு வரமுடியாத சாதிய சூழலை அவர்களே வைத்திருப்பதால் 95 சதவீதம் கன்சர்வேடிவ் களாகவே உள்ளதால் அவர்கள் இயல்பாகவே சாதிய அபிமானிகளிடம் அறிவுஜீவி அந்தஸ்தையும் அவர்கள் பிறசாதி பார்வையாளர்களாக இருந்தாலும் பெற்று விடுகின்றனர். //
கன்சர்வடிவ் என்பதை என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்பது தெளிவாக இல்லை. ஜாதி அபிமானிகள் என்ற அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எங்கிருந்து அந்த 95% வந்தது என்று தெரியவில்லை. என்ன சர்வே எடுத்தீர்களா? எத்தனை பேரை பார்த்திருப்பீர்கள்? நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். உங்களை விட எனக்கு அதிக பார்ப்பனர்களை தெரிய வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு 15, 20% இருந்தால் அதிகம். உண்மையில் ஜாதி அபிமானம் பார்ப்பனர்கள் மத்திதியில் தான் குறைவு என்று நினைக்கிறேன். இது அவர்கள் உத்தமர்கள் என்பதால் அல்ல, அவர்கள் பொதுவாக நகரங்களில் வசிப்பதால். பொதுவாக நகரங்களில் ஜாதி வெளிப்பாடு குறைவு, கிராமங்களில் அதிகம். கிராமங்கள், சிறு நகரங்கள், பெரு நகரங்கள் ஆகியவற்றில் வாழ்ந்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன்.
// என்ன நீதிபதி புகார் தந்தா மட்டும் 100 காரட் உண்மை.//
நீங்க வக்கீல்கள் முட்டை வீசவே இல்லையே என்று அடுத்தபடி சொல்வீர்கள் போலிருக்கிறது. அதுதான் வக்கீல்களே ஒத்துகக்கொண்டுவிட்டார்களே, அப்புறம் எதற்கு நீதிபதி எத்தனை காரட் உண்மை பேசினார் என்ற ஆராய்ச்சி?
// மனு ஸ்மிருதியைப் படித்த போது ஒவ்வோரு பார்ப்பனரல்லாத சாதியும் எப்படி கூடா ஒழுக்கத்தால் பிறந்தது என விவரிப்பார் மனு. //
அதுக்கு நான் என்ன செய்யட்டும்? ஹிட்லர் யூதர்களை அழிக்க வேண்டும் என்று எழுதியதால் இன்றைய ஜெர்மானியர்களை இஸ்ரேல் அழித்துவிட வேண்டுமா? பாம்பையும் பார்ப்பானையும் ஒன்றாக பார்த்தல் முதலில் பார்ப்பனை அடி என்று பெரியார் சொல்லி இருப்பதை எங்காவது பார்த்துவிட்டு என் குழந்தைகளை பார்த்தால் எனக்கும் மோசமான கோபம் வருகிறது. அதற்காக நான் இ.வி.கே.எஸ். இளங்கோவனை திட்டி எழுத வேண்டுமா?
முட்டாள்தனமான கருத்துகளை – அது பெரியார் சொன்னதாக இருந்தாலும் சரி, மனு சொன்னதாக இருந்தாலும் சரி – நிராகரித்துவிட்டு அடுத்த படி எடுங்கள். இல்லை பழி வாங்கும் உணர்ச்சியில் மூழ்க ஆசைப்பட்டால் புரிந்து கொள்கிறேன், ஆனால் நான் அடுத்த படிக்கு போகத்தான் விரும்புகிறேன்.
// 2000 வருடமாக அதனைக் காதால் கேட்டும் அடிமைப்படுத்தப்பட்டும் இருந்த சாதிகள் பதிலுக்கு அப்படி பார்ப்பன சாதியின் பிறப்பை இழிவுபடுத்தும் வகையில் நடந்தால் ஒத்துக் கொள்வீர்களா //
பிறப்பு மட்டும்தான் இழிவு படுத்தக்கூடியதா? “கொழுப்பெடுத்த பார்ப்பனக் கூட்டம்” என்ற வரி எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது.
எதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும்? எனக்கு ஜாதி பார்ப்பதில் நம்பிக்கை இல்லையே!
மனு தாயோளி என்று நீங்கள்தானே எழுதுகிறீர்கள்?
// அவன் வந்தது தீட்சிதர் கொள்ளையடிப்பதற்கான சுதந்திரத்திற்கு //
மீண்டு ஒரு முறை நினைவுபடுத்துகிறேன். சாமி நானும் வாதிடுகிறேன் என்று வந்தால் அவர் மீது வீசப்பட்ட முட்டை தீட்சிதர் மேலோ, தீட்சிதருக்காக வாதாடிய/வாதாடுகிற மற்ற வக்கீல்கள் மீதோ முட்டை வீசப்படவில்லை. அதனால் தீட்சிதர்களை எதிர்த்தும், நம் உரிமைக்காகவும் இந்த முட்டை வீசப்படவில்லை. சாமி மீது உள்ள தனிப்பட்ட வெறுப்பினால்தான் வீசப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக நடக்கும் கேஸ், ஆனால் ஒருவர் நானும் சேர்ந்து கொள்கிறேன் என்று நுழைந்த உடன் அவர் மீது முட்டை வீச்சு நடத்திவிட்டு, அது தீட்சிதர்களை எதிர்த்து என்று திருப்பி திருப்பி சொல்கிறீர்கள். என்ன சொல்லட்டும்? நானும் உங்கள் மூளையை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதுதானா?
// ஆனால் ஆர்வி ஐ இயக்கும் மனநிலை என்ன எனப் புரிந்து கொள்ள முடிகின்றது. //
இந்த தளத்தில் நிறைய free psychatric அனலிசிஸ் கிடைக்கிறது. யாரோ முன்னால் கூட என் மன நிலையை பற்றி ஆராய்ச்சி செய்தார். அட ஏன் சார்?
// 2000 வருடத்தில் ஒடுக்கப்பட்டதற்கான compensation ஐ //
என்ன காம்பென்சேஷன்? யார் யாரிடம் கேட்பது? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மாலிக் கஃபோர் மதுரை கோவிலை கொள்ளை அடித்தான். கஜினியும், தைமூரும், நாதிர் ஷாவும், ஆங்கிலேயர்களும் இந்தியாவை கொள்ளை அடித்தார்கள். நரசிம்ம வர்மன் வாதாபியை கொளுத்தினான். பாண்டியர்களும் சோழர்களும் இலங்கையை படை எடுத்து வென்றார்கள். ஜிசியா என்ற வரி ஹிந்துக்கள் மீது மட்டும் விதிக்கப்பட்டது. இதற்கெல்லாம் ஏதாவது காம்பென்சேஷன் உண்டா? சரித்திரம் அநியாயங்கள் நிறைந்தது. பணமும் பதவியும் அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்கள் இல்லாதவர்களை ஒடுக்கி இருப்பார்கள்தான். உங்கள் முப்பாட்டன் ஜாதி பார்த்திருக்கலாம். வீட்டு பெண்களை அடக்கி ஆண்டிருக்கலாம். அதற்காக உங்களை தண்டிக்க முடியுமா? வன்னியர்களும், கவுண்டர்களும் தேவர்களும் பிள்ளைமார்களும் நாயக்கர்களும் முதலியார்களும் ஒரு காலத்தில் தலித்களை ஒதுக்கத்தான் செய்திருப்பார்கள். அவர்களுக்கு ஏதாவது “கடன்” உண்டா? அந்த கடன் எப்படி அடைக்கப்பட வேண்டும்? என் பாட்டியும் தாத்தாவும் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமல்தான் இறந்தார்கள். எனக்கு ஏதாவது கடனில் டிஸ்கவுண்ட் உண்டா?
அட போங்க சார்! ப்ராக்டிகலாக பேசுங்க. இன்றைக்கு எல்லாரும் சட்டப்படி சமம். அதை உண்மையிலேயே நடைமுறைப்படுத்த ஏதாவது கான்க்ரீட்டா செய்வோம். முட்டை வீச்சு தவறு மட்டுமல்ல, முட்டை வீசி ஒன்றும் கிழிக்க முடியாது. இட ஒதுக்கீடு பல குறைகள் உள்ள ஸ்கீம் ஆக இருந்தாலும் அதில் ஓரளவு பயன் இருக்கிறது.
// நீங்கள் இப்படி சிந்திக்க மற்றொரு காரணம் சமூக வேலைகளில் ஈடுபடாதது என நினைக்கின்றேன். உடனே நீங்கள் எப்போது எங்கே என்ன செய்தீர்கள் //
பல முறை சொன்ன மாதிரி நீங்கள் செய்தால்தான் என்னை கேட்க வேண்டும் என்பது இல்லை. ஆனால் ஒரு curiosity. ஏதாவது செய்தீர்கள் என்றால் அதை வெளியே சொல்ல என்ன தயக்கம்? செய்ய முடியவில்லை என்றால் அதை பகிர்ந்து கொள்வதிலும் தவறில்லியே? உங்களுக்கு யாராவது வழி காட்டலாம், அப்படியே எனக்கும்…
//உலகப்பந்தில் தமிழர்களுக்கான ஓர் அரசு உருவாகும் சாத்தியம் இலங்கை என்னும் நாட்டிலேதான் இன்று உருவாகியுள்ளது. அதற்கு ஆதரவு தரக்கூடிய மிகப்பெரும் சக்தியான இந்தியாவில், வஞ்சனை நிறைந்த அரசியல்வாதிகள் வளர்ந்திருப்பதுதான் தமிழர்களின் தூரதிஸ்ட்டம்.//
தமிழர்கள் தனி நாடு கேட்டு இலங்கையில் போராடுவதற்கு, மொழியை மட்டுமே காரணம் காட்டி இந்தியத் தமிழர்கள் ஆதரவு தந்துதான் ஆக வேண்டுமென்பது போதாது. அவர்களும் என்னைப் போலத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்கள் தனி நாடு கேட்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அப்படி உணர்ச்சி வசப் பட்டால் இது மதத்தின் பேரால், தோலின் நிறத்தின் பேரால் நடக்கும் போராட்ட அளவிலேயே மதிக்கப் படும்.
முஸ்லீம்கள் எங்கிருந்தாலும், அவர்கள் போராட்டம் எந்த நாட்டில் நடந்தாலும், எந்தக் காரணத்திற்காக நடந்தாலும் முஸ்லீமாகிய நான் உதவுவேன் என்று சொல்விக்கொள்வது போலவும், என் தோல் வெள்ளை நிறம், என் கண்கள் நீலக் கண்கள் இதே தோற்றம் உள்ளவர்கள் எங்கு தனிநாடு கேட்டாலும் நான் ஆதரிப்பேன் என்று சொல்வது போலவும் குறுகி வரையறைக்குள் விழுந்து விடும்.
உண்மையிலேயே தமிழர்களுக்கு இலங்கை அரசால் உரிமைகள் மறுக்கப்பட்டதையும், அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை அவர்களே ஆள வேண்டும் என்பதையும் தமிழர்கள் சார்பாக ஒரு அறிவார்ந்த தலைவர் அறிவு பூர்வமாக சர்வதேச அரங்கில் எடுத்து வைத்தாலொழிய இந்த உணர்ச்சி பூர்வமான போராட்டம் ஒரு இனத்தில் குரலாக மட்டுமே ஒலிக்குமே தவிர உலக மக்கள் அனைவரும் மதிக்க வேண்டிய மனிதர்களின் சுயமரியாதை குறித்த போராட்டமாக வெளிப்படாது. அப்படி வெளிப்பட்டால்தான் இதற்கு தமிழ்நாடு தாண்டியும், இந்தியா தாண்டியும் ஆதரவு கிடைக்கும்.
இதில் மற்றவர்களை அழித்ததால் மட்டுமே தாங்கள் தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக அறியப்படவேண்டும் என்று விடுதலைப் புலிகள் கேட்பதுதான் இப்போதைய நிலையில் இருக்கும் பெரும் குறைபாடு. புலிகள் ஆயுதம் தாங்கிப் போராடும் போது அமிர்தலிங்கமோ அவருக்கு இணையான தலைமையோ ஐ.நா. வரை இந்தப் பிரச்சினையை ஜனநாயக முறையில் கொண்டு சென்றிருந்தால் பல நாடுகளில் இருந்து வரும் பண உதவியை இவ்வளவு சுலபமாக இலங்கை அரசால் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. இது பாலசிங்கமோ தமிழ்செல்வனோ சாதிக்க முடியாத காரியம். இந்தியாவிலும் இலங்கைத தமிழர் ஆதரவு புலி ஆதரவாக மட்டுமே அறியப் படாமல் இன்று வரை வெளிப் படையாகத் தொடர்ந்திருக்கும்.
இப்போது கூட இலங்கைத் தமிழர்கள் பற்றி இந்தியத் தமிழர்கள் வேதனைப் படும் பொழுது அவர்கள் உள்ளோடு ஓடும் நெருடல் இந்த மண்ணில் அவர்கள் நடத்திய வன்முறைதான். தமிழகத்திற்கு வன்முறையைக் கொணர்ந்தது அவர்கள் தான் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நாம் ஏகோபித்த ஆதரவு கொடுத்து அவர்களை விருந்தினர்களாய் நடத்திய போதும் சென்னையில் துப்பாக்கி கலாச்சாரமும், மொத்த மாநிலத்தில் வெடிகுண்டு கலாசாரமும் புலிகளால்தான் பிரபலப் படுத்தப்பட்டது. பலதரப் பட்ட விவாதங்களைக் கேட்டுப் பழகிய நமக்கு எதிர்க் குரல்களை முடக்கும் புலிகளின் வழக்கம் ஒத்து வரவில்லை.
தமிழர்களுக்கு இலைங்கையில் தனி நாடு அமைய வேண்டும். ஆனால் அதற்கான காரணத்தை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்டவும் அதை நடைமுறைப்படுத்தவும் ஒரு தலைவர் கூட இல்லை. இப்போது உணர்ச்சிப் பிழம்பாக நாம் கொதிப்பதால் மட்டும் எதுவும் சாதித்துவிட முடியாது என்று தோன்றுகிறது.
// பழிவாங்கும் உணர்ச்சி இருக்க கூடாதா..//
உங்களை எது இயக்குகிறது என்று புரிகிறது. இனி பேசுவது வீண்.
மணி,
உங்களுடன் வாதாடுவத் என் வீண் என்று நினைக்கிறேன் என்பதற்கு ஒரு உதாரணம்:
// என்னை இயக்கியது எது என நான் உங்களை இயக்கியது எது என குறிப்பிட்டது போல குறிப்பிடாத உங்களது நேர்மை புல்லரிக்க வைக்கின்றது. //
இதற்கு முந்தைய பதிலில் இரண்டே வரிகள்தான் எழுதி இருக்கிறேன்.
// // பழிவாங்கும் உணர்ச்சி இருக்க கூடாதா..//
உங்களை எது இயக்குகிறது என்று புரிகிறது. இனி பேசுவது வீண். //
இந்த இரண்டு வரிகளை படித்தும் உங்களை எது இயக்குகிறது என்று நான் சொல்லவில்லை என்கிறீர்கள். என்ன எழுட்கிறோம் என்பது உங்களுக்காவது புரிந்தால் சரி. கோபம், உணர்ச்சிகள் கண்களை மறைக்கிறது. உங்களுக்கு வேண்டியது பேச்சு அல்ல, அடிக்க ஒரு ஆள். என்றாவது கருத்துகளை பரிமாறிக்கொள்ள விரும்பினால் சொல்லுங்கள், பேசுவோம்.
// ிரு. ஆர்வி அவர்கள் கூறியதுபோல் உங்களுக்கு பதிலளிப்பது வீண் என்றாலும், ஏனையவர்கள் எங்கள் கருத்துக்களின் தன்மையை அறிவதற்கு, எனது பதில் தேவைப்படுகிறது.//
சிறு விளக்கம். நான் மணி அவர்கள் இன்று இருக்கும் நிலையில் அவரோடு பேசுவது வீண் என்று நினைக்கிறேன். மகேந்திரா எழுதியதை படிப்பவர்கள் நான் வித்தகன் பற்றி அப்படி சொன்னேன் என்று தவறாக எண்ண வேண்டாம்.
திரு. மகேந்திரன்! நான் தனி ஈழத்திற்கு எதிரி இல்லை. மொழி உணர்வால் வெளி வரும் அதீத உணர்ச்சி ததும்பும் கோஷங்கள் தமிழரல்லாதோர் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியாமல் செய்து விடுகிறது என்றுதான் சொல்கிறேன்.
இது மனித உரிமைப் போராட்டம் என்பதை முன்னிறுத்தி, என் ரத்தம் என் தொப்புள்கொடி போன்ற emotional rhetoric ஐ குறைத்துக் கொண்டால்தான் தமிழரல்லாதோரின் ஆதரவு பெருகும். இன்று பல உயிர்கள் பிழைப்பதற்கு அது மிக அவசியத் தேவை. உதாரணத்திற்கு தென்னகம் முழுவதும் தார்மீக ஆதரவு வழங்கினால் மாணவர்கள் அல்லது வக்கீல்களின் போராட்டம் எவ்வளவு தூரம் சென்றடையும் என்று எண்ணிப் பாருங்கள். சரியான வகையில் எடுத்துரைக்க ஆளிருந்தால் அத்வானி (அவரை நமக்குப் பிடிக்குமா என்பது தனி விஷயம்) ஆதரவாவது அரசியல் ரீதியாகக் கிடைத்திருக்கும். இப்போது வெறும் வாய் வார்த்தையாக வெளி ஆட்கள் வருத்தம் தெரிவித்தாலும் “இது எங்கள் பிரச்சினை” என்ற பிம்பத்தை தமிழர்கள் உருவாக்கி விட்டதால் கொஞ்சம் விலகியே இருக்கிறார்கள். இப்போது உள்ள நிலையில் அதீத உணர்ச்சிப் பெருக்கால் நாம் நம்மையே தனிமைப் படுத்திக் கொண்டு விட்டோம்.
புலிகள் தனக்கு மாற்றுக் கருத்து உடையவர்களைத் தீர்த்துக் கட்டுவதால் அவர்களுக்கு தமிழகத்திற்குள், இந்தியாவிற்குள் முழுமையான ஆதரவு கிட்டாது என்பது என் இன்னோரு கருத்து. புலிகள் செய்வது எல்லாம் சரி என்று வெளிப்படையாக தமிழர்களைப் பேச விடாமல் அவர்களே தனது சர்வாதிகார நடவடிக்கைகளால் கெடுத்து விட்டர்கள் என்று நான் அழுத்தமாக நம்புகிறேன். என் இடுகையை இன்னும் ஒரு முறை படித்தால் நான் புலிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் தேவையில்லை என்று ஒரு முறை கூட சொல்லவில்லை. அதனோடு சேர்ந்து ஜனநாயக ரீதியான முயற்சிகளும் தொடர்ந்திருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன். ஈழத்தை அடைய இருந்த பிற வழிகளை புலிகளே அடைத்து விட்டதால் இப்போது ஒரு வேளை புலிகள் ஒடுக்கப் பட்டு விட்டால் போராட்டமும் கிட்டத்தட்ட முடிந்து விடும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
உங்களுடன் பேசுவது வீண்தான் – என்றாலும் ஒரு curiosity.
// …பங்கேற்றுதான் சமூக அறிவைப் பெற முடியுமே… //
உங்கள் பங்கேற்பு என்ன? நீங்கள் யார்? இதை உறுதியாக நம்பும் நீங்கள் இதை விளக்க வேண்டியது அவசியம் இல்லையா?
// மாலிக்காபூருக்க எப்போ கணக்கு தீர்ப்பது அல்லது நஸ்ருதீன் ஷாக்கு எப்போ கணக்கு தீர்ப்பது //
யார் இந்த நஸ்ருதீன் ஷா?
நடைமுறை சார்ந்த உங்கள் கேள்விக்கு மணி பதிலளிப்பார் என நம்புகிறேன், உங்கள் கருத்தில் எனக்கு முரன்பாடான விடய்ம்
//பிரச்சினை திசை திரும்பக் காரணமானதால் வக்கீல்கள் எல்லோரையும் விட வேஸ்ட் என்பதும் என் கருத்து.//
இது தான். துவக்கத்திலிருந்தே இதை நீங்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றீர்கள். ஈழப்பிரச்சனைக்காக் போராடிய ஒரே ஆளும் வர்க்க அமைப்பு வக்கீல்கள் தான். சு.சாமி மேல் முட்டையடித்த்தும் கூட அவர் போராடிய வக்கீல்களை பற்றி தரக்குறைவாக பேசியதன் காரணமாகத்தான். நீங்கள் மறந்து விட்ட இன்னொன்றை நினைவு படுத்துகிறேன். ஈழத்துக்கான 15 நாட்கள் ஸ்டைரக்க முடிந்து வக்கீல்கள் பணிக்கு திரும்பிய அன்று தான் இந்த முட்டை எறியும் சம்பவம் நடந்த்து. அதுவரை இந்திய ஊடகங்களினால் இருட்ட்டிப்பு செய்யப்பட்ட ஈழப்பிரச்சனை அந்த முட்டையடி சம்பவத்துக்கு பிறகுதான் தேசிய ஊடகங்கள் பல வக்கீல்கள் போராட்டத்தையும் அதன் பின்னர நடந்த சம்பவத்தையும் கவரேஜ் செய்தனர். அந்த வகையில் பார்த்தால் வக்கீல்களின் முட்டையடிப்பு ஈழ பிரச்சனைக்கு நல்ல மீடீயா ஸ்பேஸை பெற்று தந்த்து.
அரசு இயந்திரம் இரும்பு கரம் கொண்டு வக்கீல்களை ஒடுக்கியதன் காரணம் கூட இந்த ப்பளிசிடிதான்.
இப்படி எந்த வகையில் பார்த்தாலும் ஈழப் பிரச்சனைக்கு வக்கீல்களின் பங்களிப்பு மகத்தானது. நீங்கள் கருதுவதை போல இழிவானது அல்ல.
தயவு செய்து துக்ளக்கை படித்து விட்டு கோர்ட் சம்பவங்களை யூகிக்காதீர்கள்
டிஸ்கி: நான் வக்கீல் அல்ல
RV, முருகன் கேட்டார் என்பதற்கு முன்னால்
//உங்கள் பங்கேற்பு என்ன? நீங்கள் யார்? இதை உறுதியாக நம்பும் நீங்கள் இதை விளக்க வேண்டியது அவசியம் இல்லையா?//
இது நீங்கள் மணியை கேட்டது!
//நீங்கள் செய்த களப் பணிகள் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?//
இது வித்தகன் மணியை கேட்டது!
வித்தகனிடம் நான் எதிர் கேள்விதான் கேட்டேன்.
அதே போல வாஸ் சந்தேகமாக மணியை இப்படி கேட்டார்
//எந்த விஷயத்திலும் பங்கேற்பாளர் மட்டும் கருத்து கூறவேண்டும் என்றூ சொல்கிறீர்களா? //
அதற்கு மணி அப்படியில்லை என்பதையும் விளக்கிவிட்டார்.
இதேயெல்லாவற்றையும் படித்துவிட்டு நீங்களெல்லாம் கேட்டதை மறந்துவிட்டு மணி கேட்கிறார், முருகன் கேட்கிறார் என்றால் எப்படி
மேலும் வினவு கூறியதை நீங்கள் out of context ஆக இங்கே புகுத்துகிறீர்கள். அது ரஷ்ய சீனா கம்யூனிசஅனுபவத்தை ஒரு நடைமுறையிலிருக்கும ஒருவரே புரிந்து கொள்வது கடினம்… நாம் அதை எளிதாக புரிந்து கொள்ள முடியாது என அதன் பரிமானத்தை விளக்குவதர்காக கையாளப்பட்டது. கம்யூனிசத்தை கட்சிகாரர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்ற நிலை வந்தால் கம்யூனிசமே செத்துவிடும்.
நீங்கள் அதை அப்போதே புரிந்து கொள்ளவில்லை. இப்போதாவது புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்
நல்லது. உண்மையை பற்றிய நமது புரிதலில் குறைபாடிருக்கலாமே தவிர, உண்மையில் குறைபாடில்லை.
மணி பங்களிப்பாளர்கள்தான் பேச வேண்டும் என்று ஒரு வாதத்தை முன் வைக்கிறார். வித்தகன் அவரது பங்களிப்பு பற்றி கேட்கிறார். நீங்கள் அதற்கு எதிர் கேள்வி கேட்கிறீர்கள். எதிர் கேள்விக்கு நான் எதிர் கேள்வி கேட்பது தவறு என்று நினைக்கிறீர்கள். வித்தகன் கேட்டது எதிர் கேள்வி இல்லையா? அதற்கு நீங்கள் எப்படி எதிர் கேள்வி கேட்டீர்கள்?
// //எந்த விஷயத்திலும் பங்கேற்பாளர் மட்டும் கருத்து கூறவேண்டும் என்றூ சொல்கிறீர்களா? //
அதற்கு மணி அப்படியில்லை என்பதையும் விளக்கிவிட்டார். //
மணி அப்படியில்லை என்பதை விளக்கிவிட்டார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மணியின் வார்த்தைகளில்
// நண்பர் வாஸ்
பங்கேற்பாளர்கள்தான் பேச வேண்டும் என்பது பங்கேற்பின் வலி மற்றும் இயக்கப்போக்கில் அதுபற்றிய செயல்முறைப் பயிற்சி கிடைப்பதால அனுபவ அறிவு அது எந்த துறையாக இருந்தாலும் அவசியமாகின்றது. அதனை பிரயோகிப்பதற்கான அறிவு கிடைக்காமல் அதனை மனனம் செய்த அனுபவம் மாத்திரம் எஞ்சியிருந்தால் பங்கேற்றுதான் சமூக அறிவைப் பெற முடியுமே தவிர..//
மணி வாசுக்கு அளித்த மறுமொழி இப்படித்தான் தொடங்குகிறது. “அது அப்படியில்லை” என்று நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள்?
// அது ரஷ்ய சீனா கம்யூனிசஅனுபவத்தை ஒரு நடைமுறையிலிருக்கும ஒருவரே புரிந்து கொள்வது கடினம்… நாம் அதை எளிதாக புரிந்து கொள்ள முடியாது என அதன் பரிமானத்தை விளக்குவதர்காக கையாளப்பட்டது. கம்யூனிசத்தை கட்சிகாரர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்ற நிலை வந்தால் கம்யூனிசமே செத்துவிடும்.
நீங்கள் அதை அப்போதே புரிந்து கொள்ளவில்லை. இப்போதாவது புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் //
உங்கள் ஞாபகத்தில் பிழை. வினவு கம்யூனிசத்தை பற்றி புரியாதவர்கள் கம்யூனிசம் பற்றி பேசக்கூடாது என்று ஒரு நீண்ட மறுமொழி எழுதி இருக்கிறார். எனக்கு அட்சர சுத்தமாக நினைவு இல்லை. ஆனால் அது சங்கர மடத்திற்கு அடுத்த ஆள் வருவதற்கும், அமேரிக்கா போவதற்கும் கூட பல தகுதிகள், முயற்சிகள் தேவைப்படுகிறது, ஆனால் கம்யூனிசம் பற்றி பேச ஜெயமோகன், சுந்தர ராமசாமி, ஆர்வி போன்றவர்கள் ஒரு தகுதியும் இல்லாமல் கிளம்பி வந்துவிடுகிறார்கள் என்று ஆரம்பிக்கும் மறுமொழி. வேண்டுமானால் தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
முருகன், சுருக்கமாக சொன்னால் ஒரு பொது தளத்தில் சில வாதங்களை வைப்பவர்கள் எதிர் வாதங்களை வைப்பவர்களின் தகுதி, ஜாதி,மதம், எந்த கட்சி என்றெல்லாம் யோசிக்காமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம். “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்” என்பது முக்கியம். நீங்கள் இந்த கருத்தை ஆமோதிக்கிறீர்களா இல்லை எதிர்க்கிறீர்களா? இல்லை இதை பற்றி வாதிக்க விரும்புகிறீர்களா?
RV
ராமஜெயம் ஸ்ரீராம’ஜெயம் என்று பல்லாயிரம் முறை திரும்பத் திரும்ப கம்யூனிச பூச்சாண்டியை உச்சாடனம் செய்வதில் என்ன பலன்? முதலில் ஸ்டாலின் கால கொடுங்கோன்மை என உங்கள் மூளையில் உங்களுக்கே அறியாமல் தைக்கப்பட்டிருக்கும் கருத்தை அவ்வளவு சுலபமாக மாற்ற முடியாது என்றாலும் அது குறித்து உண்மை நிலையை விளங்க வைக்கும் கட்டுரைகளை படிக்குமாறு லிங்க் கொடுத்தும் இன்னமும் அதை தீண்டத்தகாதது போல ஏறெடுத்த்தும் பார்க்காமல் ராம்பஜனையை விடமால் மூச்சு விடாமல் கீறல் விழுந்த ரிக்கார்டு போல பேசுவதை நிறுத்திக் கொண்டு அந்தக் கட்டுரைகளை தயவு பண்ணி சற்று பெரிய மனதுடன் படித்து தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கலாமே? இதை எதற்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றால் எதையும் ஆராயாமல் மேம்போக்காக விமரிசனம் செய்வதை விடுத்து குறிப்பாக விவாதிக்கலாம் என்ற நப்பாசைக்குத்தான். மற்றபடி நீங்கள் கம்யூனிசம் குறித்து படிக்காமல் கூட கேள்வி கேளுங்கள், அப்படி கேட்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் குறிப்பான விசயத்திற்கு ஒரு தகவலை படிக்கச் சொன்னால் அதை படிக்கமாட்டேன் என்று நீங்கள் உடும்புப் பிடி பிடிப்பதிலிருந்து உங்களிடம் விவாதிப்பதற்கான ஜனநாயகத் தன்மை இல்லையோ என்ற ஐயம் எழுகிறது. நான் ஒருமுறை சொன்னால் நூறு முறை சொன்ன மாதிரி என சூப்பர் ஸ்டார் கூட பஞ்ச டயலாக் பேசுகிறார். நீங்களுமா?
எந்த விசயத்தையும் விவாதிப்பதற்கு ஒருவர் களப்பணியாற்றியிருக்கவேண்டுமென்ற அத்தியாவசியம் தேவையில்லைதான். ஆனால் களப்பணியில் இருப்பவர்கள் அப்படி இல்லதவர்களை களப்பணியில் இறக்குவதற்கு முயற்சி செய்வதும் யாதார்த்தமான விசயம்தான். அதனால்தான் வினவின் வாசகர்கள் வினை செய்யவேண்டும் அதாவது நடைமுறையில் ஈடுபடுவதற்கான படிக்கட்டுகளில் மெல்ல ஏறவேண்டும் என விரும்புகிறோம். ஆனால் இதை சரவாதிகார அணுகுமுறையில் செய்ய முடியாது அப்படி விரும்பவும் இல்லை, அது சாத்தியமும் இல்லை. குறிப்பிட்ட அரசியல், பண்பாட்டு பிரச்சினைகளில் எமது கண்ணோட்டத்தை வாசகருடன் பகிர்ந்து கொண்டு அவரை மெல்ல மெல்ல நடைமுறையுடன் இணைப்பதில் நாங்கள் விடாமல்முயல்வோம். இதை மூளைச் சலவை என சிலர் வாதடலாம். இதனால் ஒருவரின் மூளை ஏற்கனவே ஃபிரஷ்ஷாக இருப்பதாக பொருளில்லை. அது வேறு ஒரு சித்தாந்தத்தால் ஏற்கனவே மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பதும் உண்மைதான். ஆனால் நாங்கள் ஒருவர் அவரது சொந்த அறிதலின் ஊடாக எங்கள் கருத்துக்களை ஏற்கச் செய்வேண்டுமென்றே போராடுகிறோம்.
மற்றபடி நண்பர் ஆர்.வி தனது ராமஜெய பஜனையை நிச்சயாமாக உடனே நிறுத்தமாட்டார் என்பதையும் ஏற்கிறோம். ஆனால் என்றாவது ஓரு நாள் அவரது வாயில் ராம்பஜனை கரைந்து துர்நாற்றம் அகன்று மனங்கவரும் வாசனை வீசலாம் என்ற நம்பிக்கையுடன் போராடுகிறோம்.
நம்பிக்கையுடன்
வினவு
உங்கள் ஜாதி என்ன என்று கேட்காதது சந்தோஷம் தரும் விஷயம். நான் பதிவு/மறுமொழிகள் எழுத ஆரம்பித்த போது குடுமி, அம்பி, genotype என்று பல அர்ச்சனைகளை கேட்டேன். இவர்கள் ஏற்படுத்தும் கடுப்பில்தான் இவர்கள் ஆரம்பிப்பதற்கு முன் நானே அவ்வப்போது நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன் என்று சொல்லி கொள்கிறேன். அப்படி நான் பேசியதன் பலன்தானோ என்னவோ உங்கள் ஜாதியை பற்றி யாரும் ஆரம்பிக்காதது என்று நினைத்து ஒரு அல்ப சந்தோஷம்!
எனக்கு நீ களப்பணி ஆற்றினால்தான் என்னுடன் பேசவே தகுதி உண்டு என்பதில் இசைவு இல்லை. ஆனால் அப்படி நினைப்பவர்களுக்கு தங்கள் களப் பணியை பற்றி பேச வேண்டும் என்று தோன்றாதது ஆச்சரியம்தான். இங்கே பல பேர் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் – தாங்கள் சொல்வதை தங்களுக்கே பொருத்தி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இவர்களுக்கு தோன்றுவதே இல்லை.
// ஸ்டாலின் கால கொடுங்கோன்மை… குறிப்பான விசயத்திற்கு ஒரு தகவலை படிக்கச் சொன்னால் அதை படிக்கமாட்டேன் என்று நீங்கள் உடும்புப் பிடி பிடிப்பதிலிருந்து //
இது எங்கேந்து வருது? நான் படிக்கலைன்னு சொன்னேனா இல்லை படிக்க மாட்டேன்னு சொன்னேனா?
Digression-களை தவிர்க்க கூடுமான வரையில் முயற்சி செய்கிறேன் – எப்போதும் வெற்றி அடைவதில்லை என்பது அடுத்த விஷயம். நீங்கள் சொன்ன கட்டுரைகளை படித்துவிட்டேன், என் எண்ணங்கள் மாறவில்லை, நீங்கள் ஸ்டாலின் பற்றி எப்போதாவது எழுதினால் நானும் பதில் எழுதுகிறேன்.
Digressions-களை தவிர்க்கவே அதற்கு பிறகு நான் ஸ்டாலினின் “கொடுங்கோன்மையை” பற்றி எழுதவில்லை. அதற்கு பிறகு ஸ்டாலினை நான் ஒரே ஒரு முறைதான் குறிப்பிட்டிருக்கிறேன் என்று ஞாபகம் – ஸ்டாலின் ஆட்சியிலும் “தள்ளுமுள்ளு” நடந்தால், என்கேவிடி பெரியாவுக்கு நிபந்தனை விதித்தால், விளைவுகள் மோசமாகத்தான் இருக்கும் என்று சொல்லி இருக்கிறேன் என்று நினைவு. இதையும் ஸ்டாலின் கொடுங்கோன்மை செய்தான் என்று சொல்வதாக எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அங்கேயும் ஸ்டாலின் பேரை பார்த்ததும் அவர் கொடுங்கோலர் இல்லை என்று எழுதி இருந்தீர்கள். ஸ்டாலின் பேரை கேட்டாலே ஒரு defensive mode-க்கு போய் விடுகிறீர்களே என்று கூட கேட்டிருந்தேன். ஸ்டாலின் பேரைக் கேட்டதும் நீங்கள் எங்கோ திசை மாறி விடுவீர்களோ என்ற பயத்தால்தான் சர்வ ஜாக்கிரதையாக “ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சியை” பற்றி எழுதாமல் இருக்கிறேன்.
Jumping to unwarranted conclusions என்பது உங்களிடமும் இருக்கும் என்பது எதிர்பாராத விஷயம்.
// எந்த விசயத்தையும் விவாதிப்பதற்கு ஒருவர் களப்பணியாற்றியிருக்கவேண்டுமென்ற அத்தியாவசியம் தேவையில்லைதான். //
நன்றி! விவாதிப்பதற்கு முன் டெஸ்ட் வைக்கிறேன், கட்சியில் சேர்ந்து இரண்டு வருஷம் பணியாற்ற வேண்டும் என்ற மன நிலையிலிருந்து மாறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
// ஆனால் களப்பணியில் இருப்பவர்கள் அப்படி இல்லதவர்களை களப்பணியில் இறக்குவதற்கு முயற்சி செய்வதும் யாதார்த்தமான விசயம்தான். அதனால்தான் வினவின் வாசகர்கள் வினை செய்யவேண்டும் அதாவது நடைமுறையில் ஈடுபடுவதற்கான படிக்கட்டுகளில் மெல்ல ஏறவேண்டும் என விரும்புகிறோம். //
ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம்தான். இது மூளை சலவை என்பதெல்லாம் முட்டாள்தனமான வாதம்.
மற்றபடி நண்பர் ஆர்.வி தனது ராமஜெய பஜனையை நிச்சயாமாக உடனே நிறுத்தமாட்டார் என்பதையும் ஏற்கிறோம். ஆனால் என்றாவது ஓரு நாள் அவரது வாயில் ராம்பஜனை கரைந்து துர்நாற்றம் அகன்று… //
இங்கே ராமஜெயம் என்பது கம்யூனிச எதிர்ப்பா இல்லை ராமஜெயமேவா என்பது தெளிவாக புரியவில்லை. இரண்டில் எதுவாக இருந்தாலும் அது துர்நாற்றம் என்பது ஏற்றுக் கொள்வதற்கில்லை. உங்கள் கருத்து உங்களுக்கு என்பதோடு விட்டுவிடுகிறேன்.
//எனக்கு நீ களப்பணி ஆற்றினால்தான் என்னுடன் பேசவே தகுதி உண்டு என்பதில் இசைவு இல்லை. ஆனால் அப்படி நினைப்பவர்களுக்கு தங்கள் களப் பணியை பற்றி பேச வேண்டும் என்று தோன்றாதது ஆச்சரியம்தான். இங்கே பல பேர் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் – தாங்கள் சொல்வதை தங்களுக்கே பொருத்தி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இவர்களுக்கு தோன்றுவதே இல்லை.//
களப்பணி – நம் அறிவை நாம் உரசிப் பார்ப்பதற்கான நடைமுறை கருவி. அதனால் தான் உங்களுடன் விவாதிப்பவர்கள் அதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.
நடைமுறையில் இல்லாதவர்கள், தங்கள் கருத்தில் பெரிய பாரிய வேறுபாடு வருவதில்லை.
நொந்த குமார்,
// ளப்பணி – நம் அறிவை நாம் உரசிப் பார்ப்பதற்கான நடைமுறை கருவி. அதனால் தான் உங்களுடன் விவாதிப்பவர்கள் அதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.//
முன்னால் எழுதியதையே மீண்டும் சொல்ல வேண்டி இருக்கிறது. புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. அது கீழே.
1. // நீங்கள் நினைக்கும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே உங்களோடு வாதிட வேண்டுமென்றால் நீங்கள் அப்படிப்பட்ட தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களோடு மட்டுமே பேச வேண்டும். அந்த தகுதி களப் பணியோ, கட்சியில் உழைப்போ, நக்சல்பாரி இயக்கத்தில் பங்கோ, இல்லை புண்ணாக்கு வியாபாரமோ எதுவாக இருந்தாலும் சரி. இங்கே வித்தகனும், ஆர்வியும், ராமுவும், சோமுவும், மீனாவும், லீனாவும் கேட்க வேண்டும் என்று ஆரம்பித்து – பல சமயம் அவர்களோடு விவாதம் நடத்தி விட்டு – பிறகு இந்த மாதிரி பேசுவது எனக்கு யாக்னவல்கியர் பற்றிய ஒரு புராணக் கதையை நினைவு படுத்துகிறது. //
2. // ஆனால் தங்கள் தங்கள் பங்களிப்பையும் விளக்கிவிட்டு பிறகு கேள்வி கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். //
// நடைமுறையில் இல்லாதவர்கள், தங்கள் கருத்தில் பெரிய பாரிய வேறுபாடு வருவதில்லை. //
கொஞ்சம் கூட புரியவில்லை.
ஸ்டாலின் கால படுகொலைகளை பற்றிய புரட்டை ஆதாரத்துடன் நிராகரிக்கும் நூலின் சுட்டி..
http://rationalrevolution.net/special/library/tottlefraud.pdf
// நடைமுறையில் இல்லாதவர்கள், தங்கள் கருத்தில் பெரிய பாரிய வேறுபாடு வருவதில்லை. //
கொஞ்சம் கூட புரியவில்லை.//
களப்பணியோ, நடைமுறையோ இல்லாதவர்கள், சொன்னதையே திரும்ப திரும்ப சளைக்காமல் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்கிறேன்.
// / நடைமுறையில் இல்லாதவர்கள், தங்கள் கருத்தில் பெரிய பாரிய வேறுபாடு வருவதில்லை. //
கொஞ்சம் கூட புரியவில்லை.//
களப்பணியோ, நடைமுறையோ இல்லாதவர்கள், சொன்னதையே திரும்ப திரும்ப சளைக்காமல் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்கிறேன். //
அடேங்கப்பா!
நடைமுறையில் இல்லாதவர்கள் என்பதை முதலிலேயே புரிந்து கொண்டேன். “தங்கள் கருத்தில் பெரிய பாரிய வேறுபாடு வருவதில்லை” என்றால் “சொன்னதையே திரும்ப திரும்ப சளைக்காமல் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் ” என்று அர்த்தமா? எங்கியோ போயிட்டீங்க!
One line for the time being. I don’t want you to jump any unwarranted conclusions either.
In 2006, the Ukrainian Parliament passed a bill branding the Holodomor an act of genocide against the Ukrainian people.