privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: நாகர்கோவிலில் உதயகுமாரின் பள்ளிக்கூடம் இடிப்பு

கூடங்குளம்: நாகர்கோவிலில் உதயகுமாரின் பள்ளிக்கூடம் இடிப்பு

-

இடிந்தகரையில் போராடும் மக்களோடு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் சக்தி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை மிரட்டும் வண்ணம் போலீசு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் அவரை தொலைபேசியில் கூப்பிட்ட அதிகாரிகள் சரணடைந்து விடுமாறு மிரட்டினர். அவரோ தான் எங்கேயும் ஒளிந்து கொண்டிருக்கவில்லை, மக்கள் மத்தியில் பகிரங்கமாக இருந்து வருகிறேன், மக்கள் முடிவின் படிதான் இங்கு இருக்கிறேன் என்று அந்த மிரட்டலை புறந்தள்ளினார். இதனால் ஆத்திரமுற்ற போலீசு வேறு ஒரு வழியினை கண்டுபிடித்திருக்கிறது.

உதயகுமாரின் மனைவி மீரா உதயகுமார் நாகர்கோவிலில் சாக்கர் மெட்ரிகுலேஷன் நடுநிலைப்பள்ளியினை நடத்தி வருகிறார். ஏற்கனவே இங்கு இந்துமுன்னணி காலிகள் சுற்றுச்சுவரை இடித்து நாசப்படுத்தியிருக்கின்றனர். அதை புகார் செய்த பிறகு காவல்துறை ஒரு போலீஸ் சென்ட்ரியை பாதுகாப்பிற்கு நியமித்திருக்கிறது. ஆனால் முந்தாநாள் மட்டும் அந்த போலீசு காவலை வாபஸ் வாங்கியிருக்கிறது. போலீசு சென்ற பிறகு போலிசு அமர்த்திய கூலிப்படையினர் பள்ளிக்குள் நுழைந்து அனைத்தையும் நாசப்படுத்தியிருக்கின்றனர். பள்ளி வேன், நூலகம், நாற்காலிகள், கண்ணாடிகள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை அந்த கும்பல்.

இது போலீசு செய்ததாகவோ இல்லை போலிசு ஏற்பாடு செய்து நடத்தியதாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் உதயகுமாரை சரண்டர் செய்யுமாறு மிரட்டியதற்கு அடுத்த நாள்தான் இது நடந்திருக்கிறது. அதுவும் போலீசு காவலை நீக்கிய பிறகு கச்சிதமாக நடந்திருக்கிறது. இதை எதிர்த்து மீரா உதயகுமார் புகார் செய்தும் அதை பதிவு செய்து வரிசை எண் கொடுப்பதற்கு போலீசு மறுத்து வருகிறது.

அணு உலையை எதிர்க்கிறேன் என்று பேசுவதற்கு கூட இந்த நாட்டில் ஜனநாயக உரிமை இல்லை என்பதோடு அப்படி பேசினால் வாழும் உரிமை கூட இல்லை என்பதற்கு இந்த சம்பவமே சான்று. கீழே பள்ளியில் வன்முறைக்கும்பல் நடத்திய அராஜகத்தினை விள்க்கும் புகைப்படங்கள் உள்ளன.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

______________________________________________________________

– செய்தி-படங்கள்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: