________________
கடைசியாக வந்த செய்தி :
தருமபுரி பேருந்து நிலையம் அருகில் துண்டறிக்கை வினியோகித்துக் கொண்டிருந்த விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் சிவாவை கைது செய்து, இந்திய குற்றவியல் பிரிவு 124A (தேச துரோகம்) உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சேலம் சிறையில் அடைத்திருக்கிறது போலீஸ்.
போலி சுதந்திரம் என்று ஒரு துண்டறிக்கை வினியோகித்தால் ராஜ துரோகம் என்றால் இது போலி சுதந்திரமா, இல்லை உண்மை சுதந்திரமா?
1947-க்கு முன்பு ஆங்கிலேயர்கள் காலனி எஜமானர்களாக இந்தியாவை ஆண்டார்கள். இப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் தமது விசுவாசமான தரகர்கள் மூலம் இந்திய மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
எனவேதான், போலி சுதந்திரம் என்று சொல்லும் உரிமையைக் கூட இந்த தரகர்களின் அரசு மறுக்கிறது.
___________________
“ஆகஸ்ட் 15 போலி சுதந்தரம், இதற்கென்ன கொண்டாட்டம்? தொடங்குவோம் புதியதோர் விடுதலை போராட்டம்” என்ற முழக்கத்தின் அடிப்படையில் விவசாயிகள் விடுதலை முன்னணியினர் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டாரப் பகுதிகளில் 9 கிராமங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்தனர். ஓட்டுக் கட்சிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தி இந்த பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.
கிராமத்துக்கான அடிப்படை கட்டுமான வசதிகளைக் கூட செய்து தராத காரணத்தால் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டு போடுவதில்லை என்று ஒரு கிராம மக்கள் தெரிவித்தார்கள். எல்லா இடங்களிலும் ஓட்டுக் கட்சிகள் மீது நம்பிக்கையின்மையை மக்கள் வெளிப்படுத்தினார்கள்.
2,000 பிரசுரங்கள் அச்சிட்டு தருமபுரி, பென்னாகரம் பகுதிகளில் வினியோகிக்கப்பட்டன. கையால் எழுதிய 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
போஸ்டர் ஒட்டியதாக தருமபுரி அருகில் புலிக்கரை பகுதியைச் சேர்ந்த விவிமு தோழர் தோழர் ராமலிங்கத்தை போலிசார் கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். காலில் கல் விழுந்து 2 மாதங்களாக வீட்டு ஓய்வில் இருக்கும் தோழர் ராமலிங்கம் அந்த பகுதியில் விவிமு செயல்பாடுகளில் தீவிரமாக உள்ளதால், அவரை பழி வாங்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு பொது இடங்களில் தீங்கு விளைவிப்பு, அமைதி குலைப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்திருக்கின்றனர்.
கருத்துரிமை, அரசியல் உரிமை அனைத்தையும் பறிக்கும் இந்த போலீசுதான் இந்த போலி சுதந்திர தினத்தின் ஊர்வலங்களில் விறைப்பாக அணிவகுப்பு செய்து சல்யூட் அடிக்கிறது. ஒரு சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட இந்த நாட்டில் உரிமை இல்லை என்றால் பிறகு இதில் என்ன சுதந்திரம் வாழ்கிறது? போலி சுதந்திரம் என்று ஒரு சுவரொட்டியில் எழுதினால் கைது செய்கிறார்கள் என்றால் பிறகு இது போலி சுதந்திரமா, இல்லை உண்மை சுதந்திரமா?
வினியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தின் உள்ளடக்கம்
ஆகஸ்ட் 15 போலி சுதந்திரம், இதற்கென்ன கொண்டாட்டம்?
தொடங்குவோம் புதியதோர் விடுதலை போராட்டம்
பிரச்சார இயக்கம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
காலங்காலமாக செய்து வரும் சடங்கு போல ஆகஸ்ட் 15 வந்தால் கொடியேற்றி இனிப்பு வழங்குகிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால் இந்த இனிப்பை சுவைக்கும் பலருக்கும் நம் நாடு வெகு விரைவில் திவாலாக போகிறது என்ற கசப்பான உண்மை தெரியாது.
கடும் பொருளாதார நெருக்கடியை இந்தியா இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. டாலர் கையிருப்பு குறைந்து, வரலாறு காணாத வகையில் ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது. ஏற்றுமதி குறைந்து விட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து விட்டது. அன்னிய கடன் வரலாறு காணாத வகையில் உயர்ந்து விட்டது.
இவை வெறும் பொருளாதார வார்த்தைகள் அல்ல; நம் வாழ்வை துன்பக் கடலுக்குள் இழுத்து செல்ல உள்ள பொருளாதார சுனாமி. ஈழத்து மக்கள் இந்திய அரசின் இரசாயன கொத்துக் குண்டுகளுக்கு பலியானதைப் போல, நம் மீது விழ உள்ள இந்திய அரசின் பொருளாதார கொத்துக் குண்டுகள்.
இந்தியாவின் இன்றைய நெருக்கடிக்கும் அமெரிக்க மற்றும் மேற்கு அய்ரோப்பிய நெருக்கடிக்கும் பல நாடுகள் திவாலானதற்கும் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் எனும் பொருளாதார கொள்கைகள்தான் காரணம். எனினும் இந்த உண்மையை மறைத்து விட்டு இப்பொருளாதாரக் கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தினால்தான் இன்றைய நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று கூறி மீண்டும் ஈவிரக்கமின்றி ஒரே அடியாக மக்களைக் கொல்லத் துணிகிறது மன்மோகன்-சிதம்பரம்-அலுவாலியா கும்பல். இவர்கள்தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட கொடிய பயங்கரவாதிகள்.
தொலைபேசித் துறை, ஆயுத தளவாட உற்பத்தி, காப்பீடு, தேயிலை தோட்டங்கள், கூரியர் சேவை, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, விமான போக்குவரத்து, மின்சார சந்தை, சிங்கிள் பிராண்டு சில்லறை வணிகம் உள்ளிட்ட 13 தொழில் மற்றும் சேவைத் துறையில் அந்நிய மூலதனம் புதிதாக நுழைய அல்லது ஏற்கனவே உள்ள தமது மூலதன பங்கை அதிகரித்து கொள்ளை பன்னாட்டு முதலாளிகளுக்கு அனுமதி அளித்து நாட்டையே மறு அடகு வைக்கிறது மன்மோகன்-சிதம்பரம் கும்பல். அது மட்டுமின்றி இவர்களுக்கு சேவை செய்யும் வகையில், இந்த மழைக்கால கூட்டத் தொடரில் உணவு பாதுகாப்பு மசோதா, தேசிய நீர் கொள்கை, விதை மசோதா என பல மசோதாக்களை சட்டமாக்க முயற்சித்து உணவு, தண்ணீர் விதையையும் ஏழைகளிடமிருந்து தட்டிப் பறிக்கிறார்கள்.
ஏற்கனவே கல்வி, மருத்துவம், சுகாதாரம் மற்றும் தொழில்துறைகளில் முதலாளிகளுக்கு சுதந்திரமாக கொள்ளையடிக்க திறந்து விட்டதால்தான், இன்று வறுமையிலும், ஊட்டச் சத்து குறைபாட்டிலும் முதலிடத்தில் உள்ளது இந்தியா. விவசாயம் அழிந்து விட்டது, கல்வி கடைச்சரக்காகி விட்டது. தங்கம், வெள்ளி, நிலக்கரி, பாக்சைட் போன்ற அரிய கனிமவளங்களை பன்னாட்டு முதலாளிகள் கொள்ளை அடிக்க பழங்குடி மக்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டி அடிக்கப்படுகிறார்கள். அரை மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். மின்வெட்டு, மின் கட்டண உயர்வால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். இந்திய நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க கலாச்சாரமும், மேலை நாட்டு ஆபாச வக்கிர கலாச்சாரமும் இணைந்து பெண்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு கடித்துக் குதறப்படுகிறார்கள். ஏழை எளிய மக்கள் சாதியாலும், மதத்தாலும் பிரிக்கப்பட்டு அன்றாடம் தாக்குதலை சந்தித்து, எந்நேரமும் அச்சத்தில் உறைந்து இருக்கிறார்கள். இவ்வாறு எவ்வித சுதந்திரமும் இன்றி வாழ்வதற்கே உயிரை பணயம் வைத்து வாழ்ந்து வரும் மக்களை மன்மோகனின் இந்த பொருளாதார சீர்திருத்தம் ஒரே அடியாக மரணக் குழியில் தள்ளப் போகிறது. இந்நிலையில் இந்த ஆகஸ்ட்-15 சுதந்திர தின விழா யாருக்கு கொண்டாட்டம்? யாருக்கு சுதந்திரம்?
- போலி சுதந்திரம், இதற்கேன் கொண்டாட்டம்?
- “கவர்னர் ஜெனரல்” மன்மோகன் தலைமையில் மறுகாலனியாகிறது நாடு !
- வளர்ச்சி, வல்லரசு, சுதந்திரம் என்பதெல்லாம் ஃபிராடு
- உண்மையான சுதந்திரம், சுயசார்பு ஜனநாயகத்திற்காக போராடுவோம்!
- புதிய ஜனநாயக புரட்சிக்கு அணி திரள்வோம்!
தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி.
பென்னாகரம் வட்டம்
தொடர்புக்கு பேச : 9943312467
சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்தேதான் வெள்ளக்காரன்போலீசு பெற்றெடுத்த இந்தியன் போலீசு,“அய்யா கூப்பிடுறான்னு கூட்டுட்டு போயி போய் கேசு போய் போட்டுகிட்டே இருக்குது
The arrest is correct step. why do you want to disrupt the celebration on the 15th aug?
// இந்த மழைக்கால கூட்டத் தொடரில் உணவு பாதுகாப்பு மசோதா, தேசிய நீர் கொள்கை, விதை மசோதா என பல மசோதாக்களை சட்டமாக்க முயற்சித்து உணவு, தண்ணீர் விதையையும் ஏழைகளிடமிருந்து தட்டிப் பறிக்கிறார்கள்.//
இதன் பிண்ணனியில் இருப்பதுதான் பாகிஸ்தான் பீதி
“மக்கள் ஜனநாயகம்” வேண்டாம். போலி “புதிய ஜனநாயகம்” தான் வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. இஸ்லாமிய பயங்கர வாதத்திற்கு துபமிடுவதுதான் உண்மையான ஜனநாயகமாம். என்ன கொடுமை பாருங்கள்!!இப்போது ஜனநாயக உரிமை இருப்பதால்தான் உங்களால் இப்படியெல்லாம் எழுத முடிகிறது. இல்லாவிட்டால் சீனாவைப் போல் எழுத்தாளர்கள் எல்லாம் கம்பி எண்ண வேண்டியதுதான்.
ஜனநாயகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருப்பவர்கள் தான் இப்போது இருப்பதை “மக்கள் ஜனநாயகம்” என்று கொண்டாடுவார்கள். இது மக்கள் ஜனநாயகமாக இருப்பதால்தான் சுரொட்டி ஒட்டியதற்குத் தேசப்பாதுகாப்புச் சட்டமா?
ஜாதி என்ற மிகப்பெரிய ஜனநாயக விரோத நிறுவனத்தை தன்னகத்தை வைத்திருக்கும் இந்திய சமுதாயத்தை, பல்வேறு தேசிய இன மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல், ஒருமைப்பாடு என்கிற பெயரில் அம்மக்களைக் கொடூரமாக ஒடுக்கும் இந்திய அரசை, இயற்கை வளங்களைப் பன்னாட்டு நிறுவனத்துக்குத் தாரைவார்க்கத் துடிக்கும் இந்திய அரசை, “மதச்சார்மை” என்று வைத்துகொண்டு ஒரு இந்து மதவெறி அரசாகச் செயல்படும் இந்திய அரசை ஜனநாயக அரசு அதுவும் “மக்கள் ஜனநாயக அரசு” என்று கூறுகிறீர்கள் என்றால் ஜனநாயகத்தைப் பற்றிய உங்கள் புரிதல் என்னைப் புல்லரிக்க வைக்கிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று பீற்றிக்கொள்ளும் உங்கள் ஜனநாயக அரசால் “நரவேட்டை” நரேந்திர மோடியை ஏன் தண்டிக்க முடியவில்லை? உங்கள் சட்டத்தால் எத்தனை சாதி வெறியர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? உங்கள் சட்டத்தால் மக்களின் சொத்தைக் கொள்ளையடிக்கும் எத்தனை முதலாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?
இது மக்களுக்கான ஜன்நாயகம் இல்லை. இதைத்தான் நாங்கள் போலி ஜனநாயகம் என்கிறொம். இந்தப் போலி ஜனநாயகம் சாதிவெறியர்களையும், நிலப்பிரபுக்களையும், பன்னாட்டு முதலாளிகளையும் பாதுகாக்கத்தான் பயன்படுகிறது.
ஜனநாயகத்தின் காவலர்கள் என்று பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் ஜனநாயக யோக்கியதை இப்போது நாறிக்கொண்டிருக்கிறது. தம் குடிமக்களையே கண்காணிக்கும் அளவுக்கு சீரழிந்திருக்கிறது அமெரிக்க ஜனநாயகம்.
இதிலிருந்து மாறுபட்டதுதான் புதிய ஜனநாயகம். அனைத்து வகைப்பட்ட மக்களுக்கும் ஜனநாயகத்தை உத்திரவாதப்படுத்துவது புதிய ஜனநாயகம். இது பற்றி மேலும் அறிய கீழ்க்காண்பவற்றை படிக்கவும்/கேட்கவும்.
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
https://www.vinavu.com/2011/04/13/state-of-indian-politics/
போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கனிப்போம், மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைப்போம் – பாகம் -1 தோழர்.காளியப்பன்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2113:kaliappan11&catid=111:speech&Itemid=111
போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கனிப்போம், மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைப்போம் – பாகம் -2 தோழர்.காளியப்பன்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2112:kaliyappan12&catid=111:speech&Itemid=111
இவர்கள் கூறும் புதிய ஜனநாயகத்தில் எப்படி மக்கள் பிரதிநிதிகள் “நியமிக்கப்படுவார்கள்” என்று கூற முடியுமா? இஸ்லாமிய அரசை கொண்டு உலகத்தில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத சர்வாதிகார அரசை நியமிப்பார்கள்!!!! இதற்குப் பெயர் “புதிய ஜனநாயகம்”!!
ஒரு முதல்வரையோ அல்லது ஒரு பிரதமரையோ எப்படி தேர்ந்தெடுப்பது என்பதை இவர்கள் விளக்க முடியுமா!
சர்வீஸ் கமிசன் மூலமோ எம்ப்ளாய்மென்ட் மூலமோ மேலே கண்ட தலைவர்களை நியமிக்க முடியுமா!!!! “புதிய ஜனநாயகம்” இதழை படித்துக்கொண்டு இருந்த ஒரு நபரிடம் எப்படி தலைவர்களை நாட்டுக்கு நியமிப்பீர்கள் என்று கேட்டதற்கு, இதுவரை அவர் பதில் கூறவில்லை. ஏனெனில் யாருக்கும் இது தெரியாது. தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டு படு பயங்கரமான சர்வாதிகாரத்தை மக்கள் மீது திணிப்பார்கள். அதன் பிறகுதான் இவர்களை ஓட ஓட விரட்டி யடித்து மக்கள் உண்மையான புரட்சி செய்வார்கள். இப்போது கூட எகிப்து போன்ற இஸ்லாமிய நாடுகளில் இதுதான் நடந்து வருகிறது.
// தனியார் மயம், தாராள மயம், உலக மயம் எனும் பொருளாதார கொள்கைகள்தான் காரணம் //
Can Vinavu provide the list of countries which have not gone through this path?
Also comparison of the quality of life between these countries Vs India
I am also googling!
Thanks
மக்கள் சுதந்திரமக அவர்களின் கருத்தை சொல்லக்குட சுதந்திரம் கிடையது அப்பரம் என்ன மயித்துக்கு இந்திய சுதந்திர நாடுனு சொல்லிட்டு திரியிரனுங்க
சிதம்பர ரகசியத்தை இப்படி வெளிப்படையாக போஸ்டர் அடித்து ஒட்டியதை, அரசு ரகசிய காப்பு சட்டத்தின்படி குற்றமாக கருதுகிரார்களோ !
1947 ஆகஸ்ட்-15, இந்திய தேசத்தின் ஒரு அவமானகரமான நாள், கட்டபொம்மு, மருது சகோதரர்கள், ஹைதர், திப்பு,பகத்சிங்,ஆசாத் போன்ற எண்னற்ற தியாகிகளின் ரத்தத்தை பருகிய ஏகாதிபத்தியம் தனது யுத்த காயங்களை ஆற்றிக்கொள்ள தனது நம்பிக்கைக்குரிய ஏஜன்ட்டான தரகு முதலாளிகள் மற்றும் நிலபிரபுக்களின் கட்சியான இந்தியதேசிய காங்கிரெஸ்சிடம் இந்திய மக்களை சுரண்டும் ஏகபோக உரிமையையும் தனக்கு முழு அடிமையாக இருக்கவும் ஒரு எழுதப்படாத அடிமை சாசனத்தை பெற்றுக்கொண்டு ஒரு போலி சுதந்திரத்தை வழங்கியது , அதிலிருந்து இந்திய தேசம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேரடிக்காலனி நாடு என்ற நிலையில் இருந்து அரைக்காலனி நாடாகவும் அரை நிலப்பிரப்புத்துவ நாடாகவும் பிரமோசன் பெற்றதன் விளைவாக 65 வருடங்களாக இந்தியாவின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளையும், தொழிலாளர்களையும், இயற்கை வளங்களையும் தொடர்ந்து தடை இன்றி ஏகாதிபத்திய கமபனிகலும் அவர்களின் ஏவல் நாய்களான இந்திய தரகு முதலாளிகள் மற்றும் அதிகாரவர்கமும், தரகு கட்சிகலும் சுரண்டி வருகின்றன, அதை எதிர்த்த போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தெலுங்கான பகுதியில் தொடங்கி பின்னர் சந்தர்ப்பவாத தலைவர்களின் துரோகத்தால் பின்னடைவுக்குள்லானது, இருந்தபோதும் அப்போர் மீண்டும் நக்சல்பாரியில் புரட்சிகர கம்யூனிஸ்ட்கலின் தலைமையில் விவசாயிகளின் பேராதரவு மற்றும் முழு பங்களிப்புடன் இந்திய அரைக்காலனிய அரசுக்கெதிராகவும் நிலபிரப்புகளுக்கு எதிராகவும் தொடங்கப்பட்டது, வசந்தத்தின் இடியைப்போலும், அது கட்டுதீயைப்போல் நாடெங்கும் பரவி படர்ந்து கொண்டு இருக்கிறது, 1970 களில் பண்ணையார்களுக்கு எதிராக நிலமற்ற ஏழை விவசாயிகளும், 2000 களில் தொடங்கி இன்றுவரை பழங்குடி மக்கள் ஏகாதிபத்திய கம்பனிகளுக்கு எதிராகவும் அரைக்காலனிய இந்திய அரசிர்க்கெதிராகவும் தாய் நாட்டின் இயற்க்கை வளங்களைக்காக்கவும் மாவோயிஸ்ட்களின் தலைமையிலும் அவர்களின் விலைமதிக்கமுடியாத தியாகத்தினூடகவும் வீரப்போர் புரிந்துவருகின்றனர், மேலும் சென்ற ஆண்டு ஹரியானா மாநிலத்தின் மனேசர்ரில் அமைந்துள்ள மாருதி ஆளைத்தொளிலாளர்களும் ஏகாதிபத்திய சுரண்டல் மற்றும் அடக்குமுறைக்கெதிராகவும் அரைக்காலனிய இந்திய அரசிர்க்கெதிராகவும் விடுதலைப்போரை தொடங்கி விட்டனர், நாட்டின் உண்மையான விடுதலை என்பது ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டு வரும் வர்க்கமான தொழிலாளர்களின் தலைமையிலும் ஏழை விவசாயிகள்,குட்டி முதலாளிகள் மற்றும் தேசிய முதலாளிகளின் கூட்டணியில் புதிய ஜனநாயக புரட்சியின் மூலமெ சாத்தியம் . எனில் இந்தப்புரட்சியின் மூலம் ஏகதிபத்தியத்தின் அதிகாரமும், தரகு முதலாளிகளின் அதிகாராமும், நிலபிரப்புக்களின் அதிகாரமும் தூக்கி எறியப்பட்டு நாட்டின் அரசியல் அதிகாரம் முழுவதும் மக்களால் கைப்பற்றப்படும், பாராளுமன்ற போலி ஜனநாயக முறை ஒழிக்கப்பட்டு நேரடி மக்கள் ஜனநாயகம் அமலுக்கு வரும், மேலும் நாட்டின் சொத்துக்கள், இயற்க்கை வளங்கள், முக்கிய தொழில்கள், நிலங்கள் ஆகிய அனைத்தும் ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்தும், தரகுமுதலாளிகளிடமிருந்தும், பன்னையார்களிடமிருந்தும் புரட்சிகர மக்கள் அரசால் கைப்பற்றப்பட்டு அரசுடமை ஆக்கப்படும் இதன் மூலம் சுரண்டல், கூலிஅடிமை முறை ஆகியவை ஒழிக்கப்பட்டு பொதுவுடைமை சமூகத்தை நோக்கிய பயணம் முடுக்கிவிடப்படும், எதிரிகளுக்கு எதிரான போராட்டம் மக்கள் தலைமையில் தொடர்ந்து நடத்தப்படும். உலகம் முழுவதும் ஏகாதிபத்தியத்தின் லாப வெறி யுத்தத்தை முடிவுகட்ட தன் உச்ச நிலையில் இருக்கும் முதலாளித்துவ சுரண்டல் முறையை ஒழிக்க புரட்சிகர மக்கள் அரசு பாடுபடும்.
தோழர் ”பகத் சிங் ” கால் அன்று முழங்கப்பட்ட அநீதிக்கு எதிரான, ஏகதிபத்தியத்திற்கு எதிரான, முதலாளித்துவ சுரண்டல் முறைக்கெதிரான, போர் அவர்கலால் தொடங்கப்படவும் இல்லை அவர்களுடன் முடியப்போவதும் இல்லை என்ற மெய்யான போர்முழக்கம் இன்று அவர் காட்டிய பாதையில், கம்யூனிஸ்ட் புரட்சிக்கான பாதையில் மாவோயிஸ்ட் புரட்சியாளர்களின் தலைமையில் வீறுநடை போட்டு முன்னேறுகின்றது, புரட்சி நீடுழி வாழ்க!!! மக்களின் விடுதலைக்கான போரில் உயிர் நீத்த தோழர்களின் நினைவும் தியாகமும் நீடுழி வாழ்க!!! ”மார்க்சியம் லெனினியம் மாவோயிசம்” நீடுழி வாழ்க!!!. ஏகாதிபத்தியம் அதன் அடிவருடிகளுடன் ஒழிக!!! போலிசுதந்திர்க்கும் அதன் அடிவருடி கொள்ளையர்களுக்கும், சுரண்டல் மன்றமான பாராளுமன்றத்திற்கும் சமாதி கட்டுவோம்!!! புரட்சிகர மக்கள் யுத்தத்தை தொடங்குவோம்!!!
இது சுதந்திர வேட்கை
http://ibnlive.in.com/videos/414601/bjp-congress-leaders-come-to-blows-at-iday-function.html
இது எப்படியிருக்கு?
டாடா,பிர்லா,அம்பானி,காங் கயவாளிகள்,பி.ஜெ.பி திருடர்கள்,ஊழல் அதிகாரவர்க்கம்,காவல்துறை ரவுடிகள்,கருப்பு அங்கி சாத்தான் களுக்கு சு(தந்திர)தினம்.உழைக்கும் மக்களுக்கு அல்ல!
Edhukku yaa anniya mudhaleettukku alayuraanga india arasu ??
dollar venum
Edhukku yaa dollar venum ?
Neenga daily oyyaaaramaa pora bike, car ku petrol.. Diesel irakkumadhi panna…
Beeero neraya thanga nagaigal vechikka .. Thangam irakkumadhi panna ..
Nalla vagai vagai yaa .. Touch phone .. Smart phone .. Irakkumadhi panna …
Vetti thanamaana pechugalum … Aattam paattamum paarka .. Tv ku current kudukka … Nilakkari irakkumadhi panna …
Melum nee dhinamum payan paduthura pala vishayangal irakkumadhi panna dollar dhaan venum …
Naaama dollar achadikka mudiyaadhu ..
Adhanaala dhaan anniya mudhaleettaalargal ulla uttu .. Dollar avanga kitta irundhu vaangikkurom ….
Inga irukkura endha veeranaachum … Idhu anaithum engalukku vendaaam …
Irakkumadhiyai niruthungal nu sollunga paaapom …
Vaai pechil veerargaley ..
கவர்னர் ஜெனரல் தன் பணியை செவ்வனே முடித்த பிறகு அமெரிக்காவில் செட்டிலாகிவிடுவார்..