privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇஸ்ரேல் பயங்கரவாதம்

இஸ்ரேல் பயங்கரவாதம்

-

சென்ற செவ்வாய்க்கிழமை (ஜூலை 8, 2014) அன்று தொடங்கிய மத்திய கிழக்கின் ரவுடி இஸ்ரேலின் ஆப்பரேஷன் புரொடக்டிவ் எட்ஜ் (பாதுகாப்பு முனை) எனும் பயங்கரவாதத் தாக்குதல்ஆரம்பித்தது முதல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 167 பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், அதில் 30  குழந்தைகளும் அடக்கம். 1,100 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தப்பி ஓடுகின்றனர். அமெரிக்க ஆதரவுடன், அமெரிக்க ஆயுதங்களுடன் உலக பயங்கரவாதி இஸ்ரேல் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்புப் போரை தொடர்ந்து நடத்துகிறது.

இஸ்ரேல் - காசா தாக்குதல்
1. அல் சூடானியா – இஸ்ரேலி தாக்குதல் படையினர் காஸா நகருக்குள் நுழைய முயற்சித்தனர் 2. பெய்ட் லஹியா – மக்களை ஊரை விட்டு வெளியேறும்படி கூறும் துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டன 3. அல் – துஃபா : காவல்துறை அதிகாரி வீட்டிம் மீது தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர், 45 பேர் காயம் 4. டெல் அல்-ஹ்வா : ஹமாஸ் பாதுகாப்பு கட்டிடத்தின் மீது குண்டு வீச்சு, பக்கத்து வீடுகள் சேதம் 5. ஹெப்ரான், பெத்லகம் : ஜெருசேலத்தை குறி வைத்த ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டன.
பொதுமக்கள்
காஸா நகரில் வசிப்பிடப் பகுதியை இஸ்ரேல் தாக்கியதைத் தொடர்ந்து தப்பி ஓடும் மக்கள்.
ஏவுகணை
ரஃபா நகரில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலின் சிதைவுகளை பார்வையிடும் பகுதி மக்கள்
காஸா
காஸா நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த வீட்டினுள்..
காஸா நகர்
காஸா நகரில் இ்ஸ்ரேலி தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்தை கடந்து செல்லும் இளைஞர்கள்
இன்ஷிரா சல்மான்
காஸாவின் ஜபாலியாவில் திறக்கப்பட்டுள்ள ஐ.நா அகதிகள் முகாமில் இன்ஷிரா சல்மான் தனது குடும்பத்தினருடனும், அண்டை வீட்டார்களுடனும்
டாக்டர் நாசர் டாட்டர்
டாக்டர் நாசர் டாட்டர் தனது வீட்டில் இயங்கி வந்த சொந்த கிளினிக்கின் சிதிலங்களுக்கு மத்தியில்.
காஸா கார்ட்டூன்
பாலஸ்தீன விடுதலை போராட்டத்தை – “யூத எதிர்ப்பு” என்று ஒடுக்கும் இஸ்ரேல்.
நன்றி : http://haimbresheeth.com

 

காஸா கார்ட்டூன்
இஸ்ரேலி ஆக்கிரமிப்பு படைகள் :
1. மின்னிணைப்பையும், எரிவாயுவையும் துண்டித்து விட்டோம், அடுத்து எதை துண்டிப்பது?
2. தலைகளை!
நன்றி : http://haimbresheeth.com
காஸா தாக்குதல்
உலக ஊடகங்களின் அறம் (நன்றி : https://twitter.com/3ajel_news/status/487406719102758914/photo/1)
அமெரிக்க குரங்கு
அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், அமெரிக்க நவீன குண்டுகள், அமெரிக்க ஏவுகணைகள், எஃப் 16 விமானங்கள், அமெரிக்க கொத்து குண்டுகள் ! (நன்றி : http://haimbresheeth.com
காஸா ரத்தக் குளம்
நன்றி : http://haimbresheeth.com
இஸ்ரேல் - மேற்குலகம்
நன்றி : http://www.blackcommentator.com
இஸ்ரேல் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இத்தாலியில் ஆர்ப்பாட்டம்
நெதர்லாந்து ஆர்ப்பாட்டம்
நெதர்லாந்தில் காஸாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் யூதர்
பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் யூதர்
யூதர்கள் இஸ்ரேலிய எதிர்ப்பு
நான் ஒரு யூதர் : இஸ்ரேல் பாலஸ்தீனர்களை கொல்வதை நிறுத்தக் கோருகிறேன்.

 (தாக்குதல் படங்கள் :http://haimbresheeth.com   rt.com theguardian.com)
(போராட்டப் படங்கள் : தோழர்
கலையரசன் முகநூல் பக்கம்

  1. மிகப் பெரிய போய்ப் பிரச்சாரம். நான் வினாவில் படித்த கட்டுரைகளில் இதுதான் முதல் உண்மையற்ற கட்டுரை. காசாவிளிருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் தான் ராக்கெட் மூலம் அடிக்கடி இஸ்ரயேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இஸ்ரயேல் போரை தொடங்கவும் இல்லை, இதில் எங்கே இருக்கு ஆக்கிரமிப்பு? இன்று இஸ்ரயேல் எகிப்தின் சமாதான முயற்சியை ஏற்று போர்நிறுத்தம் செய்ய தயார் என்றது. ஹமாஸ் தீவிரவாதிகள் போர் நிறுத்தம் செய்ய விரும்பவில்லை. கவனிக்க வேண்டிய விஷயம், காசா மக்களும் இஸ்ரேலும் போரை விரும்பவில்லை. தீவிரவாதிகள் மட்டுமே போரை விரும்புகின்றனர். ஹமாசுக்கு இன்னும் நிறைய பிணங்கள் வேண்டும் போலும் அரசியல் செய்ய.

    • இந்த பதிவை சரியான நேரந்தில் வெளியிட்டதற்கு வினாவிற்கு நன்றி.

      ஹரி – பெயர்ல இருந்தே தெரியுதே இஸ்ரேல் விசுவாசம்.

      சுமார் கிட்டத்தட்ட 1999ல் இருந்து பல்வேறு வகைகளில் இஸ்ரேலால் காசா மக்கள் மிகவும் துன்பப்படுறாங்க. அதற்க்கு முன்பிருந்தே 1947 ல் இருந்தே பிரச்சினைதான். பொருளாதார முடக்கம், ஆலிவ் விளைநிலங்களை அழித்து யூத காலணிகளை கட்டமைப்பது. பாலஸ்தீன மக்களை அவர்களுடைய வீடுகள புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கி அவங்க இருப்பிடதுல இருந்து அப்புரப்படுதுறது. மீன் பிடிக்க கட்டுப்பாடு. எகிப்து பார்டருக்கு பக்கத்தில உள்ள ரபாஹ் எல்லைய மூடினதுனாலே எகிப்துல இருந்து எந்த உதவியும் கிடைக்க விடாம செய்தது. பெட்ரோல் , டீசல் தட்டுப்பாட்டை உண்டாக்கி மின்சாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளில் அல்லாட வைப்பது. தடுப்புச் சுவர் மூலம் மக்களின் வெளியுலகத்தின் தொடர்புகளை கட்டுபடுதியது. மருந்து தட்டுப்பாடு. வருமானம் ஈட்டக்கூடிய பாலஸ்தீனர்களை ஜெயிலில் அடைச்சதாலே குடும்ப வறுமை.
      கிட்டத்தட்ட காசா ஒரு திறந்த வெளி சிறைச்சாலை போலத்தான்.
      எவ்வளவு நாளாகத்தான் மக்கள் பொறுத்துப் பார்ப்பாங்க.

      • எல்லாம் சரிதான் ஜாப்பார், யூதர்களை கடலுக்குள் தள்ளுவதே சரி என்று இருக்கும் பாலஸ்தீனர்களிடம் எப்படிநடந்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்களேன் ? 3000 வருடத்திற்கு மேல் அங்கே இருப்பவர்கல் அந்த மண்ணை விட்டு வெளியேர சொன்னால், சரி என்று கிளம்பி விடுவார்களா ?

        • தம்பி மைக்கேல், சும்மா வரலாறு தெரியாம பேசக்கூடாது.
          பாலஸ்தீனப் போர் நடந்தது 1947ல், அதற்கு சற்று காலம் முன்பு (1925) அதாவது உதுமானியப் பேரரசு (ottoman empire/caliphat) இருக்கும் பொது அவர்கள் சிறிது சிறிதாக ஐரோப்பாவிலிருந்தும், ரஷ்யாவிளிருந்தும், எதியோப்பியவிளிருந்தும் அவர்கள் பலஸ்தீனில் அவர்கள் வந்து குடியேறினர். ஏனென்றால் அப்போது அவர்கள் ஜெர்மனியில் ஹிட்லராலும், ரஷ்யாவில் தோழர் ஸ்டாலின் அவர்களாலும், ஷ்கேண்டிநேவியாவிலும், ரோம கிரேக்கத்திலும் அங்குள்ள அரசுகளாலும் விரட்டப்பட்டனர். வட்டி முறையினாலான பொருளாதரத்தினால் அவர்கள் உழைக்கும் மக்களை சுரண்டியாதாலும், அவர்களுக்கேயுரிய குயுக்தி புத்தியால் அரசுகளுக்கு தொந்திரவு கொடுத்ததாலும்.

          ஆனால் அவர்களை அரபுகள் பெரிய மனதுடன் அரவணைத்தனர்.

          இதுதாண்டா சமயம், இவர்களின் தொந்திரவு விட்டது என்று இங்கிலாந்தும், அமெரிக்காவும் அரபுகளுக்கு அரசியல் ரீதியாக செக் வைக்க ஆயதங்களை வழங்கி அதனால் அவர்கள் அண்ட வந்தவனே இன்று ஆக்கிரமிதவனாகி விட்டான் இன்று அரபுகளுக்கு.

          அவர்களை ஹமாஸ் கடலில் எல்லாம் தள்ள சொல்லவில்லை, ஆக்கிரமித்த நிலங்களை திருப்பி கொடுத்தாலே போதும். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கே செல்ல வேண்டும். அவ்வளவுதான்.

          • ஜாப்பார்,

            வரலாறு தெரியும் என்கிறீர்கள் , உங்கள் குரானிலேயே அந்த நிலம் இஸ்ரேலியர்களுக்கு கொடுத்தது என்று எழுதப் பட்டிருக்கிறது. இதை என்னவென்று சொல்கிறீர்கள் ? இஸ்லாம் தோற்றுவிக்கப் படுவதற்கு முன்பிருந்தே அங்கே இருக்கிறார்கள். என்னவோ 1947ல் தான் இஸ்ரேலுக்கு வந்தது போல் சொல்கிறீர்கள்.

      • //ஹரி – பெயர்ல இருந்தே தெரியுதே இஸ்ரேல் விசுவாசம்.//

        அப்துல் ஜப்பார் – பெயர்ல இருந்தே தெரியுதே பாலஸ்தீன விசுவாசம்.

  2. //மிகப் பெரிய போய்ப் பிரச்சாரம். நான் வினாவில் படித்த கட்டுரைகளில் இதுதான் முதல் உண்மையற்ற கட்டுரை. காசாவிளிருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் தான் ராக்கெட் மூலம் அடிக்கடி இஸ்ரயேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இஸ்ரயேல் போரை தொடங்கவும் இல்லை, இதில் எங்கே இருக்கு ஆக்கிரமிப்பு? இன்று இஸ்ரயேல் எகிப்தின் சமாதான முயற்சியை ஏற்று போர்நிறுத்தம் செய்ய தயார் என்றது. ஹமாஸ் தீவிரவாதிகள் போர் நிறுத்தம் செய்ய விரும்பவில்லை. கவனிக்க வேண்டிய விஷயம், காசா மக்களும் இஸ்ரேலும் போரை விரும்பவில்லை. தீவிரவாதிகள் மட்டுமே போரை விரும்புகின்றனர். ஹமாசுக்கு இன்னும் நிறைய பிணங்கள் வேண்டும் போலும் அரசியல் செய்ய.// will they keep the same logic on Indian soldiers shelling occupying pakistan China soldiers? There is limit to boot licking. and Hari and Shan has reached and ne never ashamed off. The chronology of aggression in GazA http://uruknet.info/uruknet-images/palestine-theft-maps.jpg

    • poii,
      i am all for withdrawal of israel into pre 1967 border. that is for sure.
      i just ask you simple question. do you agree to the existence if state of israel or you wants to destroy israel completely ?

      • //காசாவிளிருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் தான் ராக்கெட் மூலம் அடிக்கடி இஸ்ரயேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இஸ்ரயேல் போரை தொடங்கவும் இல்லை, இதில் எங்கே இருக்கு ஆக்கிரமிப்பு? // Could you please explain this? Then would talk about the Israel existence.

        • Hamas Terrorists use civillians as shield and send rockets from roof tops of residential buildings,so the people cannot complain if the IDF hits you back,

          everyone’s patience runs out,Thats why the international community ignores what happened in mullivaikkal,because u cannot involve civillians as shields n hide behind,thats not how a warrior functions.

          hamas are pussies,they hdie behind civillians.They think they live in medieval times and that they ll go on horseback and conquer jersualem.

          sadly thats not happening,Infact Israel should ethincally cleanse their country off arabs,arabs can go to syria/jordan/lebanon and even Saudi Arabia/pakistan.

        • Poii,

          i don’t get you ? what you are trying to say? if palestinian ready for 2 state solution, international community will push for withdrawal of israel to old border. But muslim only wants to destroy israel and jews follows the “hate jews” indoctrination of their religion.
          This has give israel all the right to defend them self. International community is silent due to this.

          kingdom of israel exist even before 700 BCE.

          http://en.wikipedia.org/wiki/History_of_ancient_Israel_and_Judah

          what makes you think only palestinians have right on this land ? Jews are there with their religion and culture long before islam is founded. How do you say muslim have more rights ?

    • israel asked for a very small portion in 1947,palestinians went to fight and lost everything,

      Porgunam is a good thing but if you lose,you lose everything.

      • //israel asked for a very small portion in 1947,palestinians went to fight and lost everything,

        Porgunam is a good thing but if you lose,you lose everything.

        / YEs Hari will give the small portion of India to China instead of fighting

        • China has already occupied aksai chin which is Indian property,so a fight is inevitable.

          China cant do it easily because India ll fight.

          Israelis/Jewish people have been living in that land since a long long time,more and more people came after the second world war escaping persecution.

          why were the palestinians not fighting the british like they are fighting the israelis now and who are these palestinians?

          They are people who were immigrated gradually into the region by the sunni muslim ottoman sulatanate which did it by force,did it by violence and not by any democratic means,there are so many palestinians i know myself who have been denied jordanian citizenship based on flimsy reasons.

          Jewish people own that land since forever.

          I repeat,you go for a fight and you lose,nobody ll sympathize with you.

          These same palestinians are some of the worst characterless people in the world with no idea of morals,i am hardly surprised they suffer this fate.

          It is also funny that you forget european Istanbul,which is forcibly occupied with orthodox cathedrals converted to mosques in a shabby manner.

          people everywhere ll fight,non muslims wont always allow muslim violence as a part of the game and muslims alone have human rights.

          all these palestinians eat good food and earn a decent living only because of Israel,israel is here to stay and for good.Palestinians can migrate.

  3. 1946 இக்கு முன்னர் இஸ்ரேல என்ற ஒரு நாடே கிடையாது , பாலஸ்தீனத்திடமிருந்து அபகரிக்கப்பட்ட இடம் தான் இஸ்ரேல என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த அபகரிப்பிட்க்கு ஒத்து ஓதியவனே அமெரிக்காதான் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இவை அனைத்தும் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.

    • There was no country called palestine also before 1947,it was a british protectorate.

      Moreover the country called Jordan was made after 1947 for the palestinians,why dont u ask Jordan to give citizenship to people in Palestine?

      • //There was no country called palestine also before 1947,it was a british protectorate.

        Moreover the country called Jordan was made after 1947 for the palestinians,why dont u ask Jordan to give citizenship to people in Palestine?

        // There is no country called India before British conquest. History is full of bullshit ofcourse. Israel is point of conflict since ages. It is this place where the failures of Feudal Europe was masked in the name Religion – with Crusades. After this it is under Ottoman regime. Then came the British, as they are famous for divide and rule(Churchill White Paper, Mandate for Palestine etc), they did divide israel in to the hands of Jews and Arabs to make sure ever lasting conflict. Famous Quote from Churchil on Palestine

        “I do not admit that the dog in the manger has the final right to the manger, even though he may have lain there for a very long time…I do not admit, for instance, that a great wrong has been done to the Red Indians of America, or the black people of Australia…I do not think the Red Indians had any right to say, ‘The American Continent belongs to us and we are not going to have any of these European settlers coming in here’. They had not the right, nor had they the power.”

        But you know what? Palestian Arabs are neither Dog nor they are deleted from the history like ‘Red Indians’.

      • தாங்கள் எழுதும் கருத்தில் ஏதேனும் இஸ்லாமியர்களை தாழ்த்தி பேச வேண்டும் என்பதை தவிர்த்து வேறு ஏதேனும் நல்ல கருத்து உள்ளது. தங்களின் இன்கிதத்தின் லட்சணம் இதுதானா.. (அப்புறம் ஏனப்பா உங்க அல்லா அந்த மண் இஸ்ரேலியர்களுக்கு கொடுத்தது என்று உளறி வைத்தார் ?)
        ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள் அன்றைய இஸ்ரேலியர்கல் அன்றைய தவ்ராத்தையும் நபி மூஸாவையும்(அலை) இறை தூதராக ஏற்றவர்கள் பின்பு வந்த கிறித்துவர்கள் இன்ஜீலையும் இறை தூதர் ஈஸாவையும் (அலை) ஏற்று இறைவனுக்கு கட்டுப்பட்டு நடந்தவர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள் என்று அதே இறைவேதம் தான் சொல்கிறது . அதை மட்டும் உங்கள் காண வில்லை என்றால் தோழர் நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது. இஸ்லாம் என்ற பதத்திற்க்கு இறைவனுக்கு முழுவதுமாக அடிபணிதல் என்ற பொருள் உள்ளதை தாங்கள் அறியாமல் இருந்தால் தற்போது அறிந்துக்கொள்ளுங்கள். அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என்று நான் சொல்லும் விஷயங்கள் தங்களுக்கு கண்ணைக்கட்டி விட்டது போல் தெரியலாம். எனவே தாங்களே படித்து அறிந்துக்கொள்ளுங்கள் , நிச்சயமாக குறை கூரும் நோக்கத்திலேயே படியுங்கள் பிரச்சனை இல்லை. எஅனனில் இன்று இஸ்லாத்தை ஏற்றுள்ள பாதி நபர்கள் இஸ்லாத்தை விமர்சனம் செய்தவர்களே. ஆனால் உன் உங்கள் விமர்சனத்தில் நடுநிலைமையும் கண்ணியமும் இருக்கட்டும்.

  4. தென்னாப்பிரிக்காவில், வெள்ளையர்களோடு சேர்ந்து வாழ்வதுதான் தீர்வு முற்றிலும் துரத்த முடியாது என்று சமரசம் செய்த பின்னர் தான் அமைதி திரும்பியது .

    பாலஸ்தீன மக்களும் யூதர்களோடு ஒத்து போகத்தான் வேண்டும். பழங்கதை பேசி அவர்களை துரத்துவோம் எனபது நடக்காது.

    மத அடிப்படையில் இசுரேல் சுவர் தான் எங்கள் ஆதி கோவில் , நாங்கள் அங்குதான் வருவோம் என்பதை நாத்திக வாதிகள் வேண்டுமானால் தார்மீக ரீதியில் எதிர்த்து பேசலாம் . ஆனால் இன்னொரு மத வாதிகள் பேசுவது அதிசயம் தான்

    இதே மக்காவை கிருத்துவர்கள் கைப்பற்றி இருந்தால் , எத்துனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மத அடிப்படையில் அதே புனித இடம் வேண்டும் என்று இவர்கள் அடம் பிடித்து இருப்பார்கள் .

    இதே மத வழியை பின்பற்றி ராமர் கோவில் என்று இந்தியாவிலும் சண்டித்தனம் செய்தார்கள் .

    இங்கே யூதர்களை மட்டும் திட்டுவதால் யாதொரு பயனும் இல்லை . மதம் என்னும் வியாதி உள்ளவர்கள் செய்வதைத்தான் அவர்களும் செய்கிறார்கள்

    • //தென்னாப்பிரிக்காவில், வெள்ளையர்களோடு சேர்ந்து வாழ்வதுதான் தீர்வு முற்றிலும் துரத்த முடியாது என்று சமரசம் செய்த பின்னர் தான் அமைதி திரும்பியது .

      பாலஸ்தீன மக்களும் யூதர்களோடு ஒத்து போகத்தான் வேண்டும். பழங்கதை பேசி அவர்களை துரத்துவோம் எனபது நடக்காது.

      // Some people tend to read history always in reverse… can not help much but to laugh at their impunity on this utter stupidity

  5. Zahir & Abdul Jabbar,

    No use in explaining all these to some people. There goal is to oppose Islam & muslims. They will definitely support Israel, Burma, SriLanka, Central Africans since they are openly killing muslims.

    Their hearts are locked out from understanding the truth. Let them enjoy in their illusions.

    • தமிழன்,

      யூதர்களை வெறுப்பது உங்களுக்கு பால பாடம். இஸ்ரேல் இருப்பதற்கு உள்ள நியாயம் உங்களுக்கு எப்பொழுதுமே புரியாது. இஸ்ரேலுடன் சமரசம் பேச முஸ்லிம்கள் முன் வரட்டும், பிரச்சனை சீக்கிரம் தீரும். முஸ்லிம்களுக்கு மட்டும்தான் மற்றவர்களை அழிக்க உரிமை இருக்கிறது என்கிறீர்களா?

      மேலே நான் சொன்னதுபோல் குரானே அவர்களின் மண் என்று சொல்லி விட்டதே. இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் ?

      அதுசரி உங்களுடைய “உண்மையை” புரியாதிருக்க எங்களின் கண்ணை குருடாக்கி, காதை செவிடாக்கி, மூக்கில் சளி வராமல் செய்தது உங்களுடைய அல்லாதானே ? பிறகு ஏன் எங்களை குறை சொல்கிறீர்கள் ? போங்கப்பா , போய் உங்க அல்லாகிட்ட பூட்ட தொறக்க சொல்லுங்க. அத விட்டுட்டு இங்க வந்து ஒப்பாரி வெக்கிறீங்க.

      • இதுதான் பிரச்சனையே இஸ்லாமியர்களான நாங்கள் ஆதம் (அலை) முதல் முஹம்மது நபி(ஸல்) வரைந் அனைவரும் இறைவனின் தூதர் என்றும் அனைவரும் ஆதமின் மக்கள் என்பதிலும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லாமல் தான் இருக்கிறோம். ஆனால் பிரச்சனை எதில் வருகிறது என்றால் ஏற்கனவே பாலஸ்தீன மக்கள் இருக்கும் இடத்தில் வியாபரத்தை மையமாக கொண்டு அங்கு போய் டெண்ட அடித்த இஸ்ரேலியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தனது எல்லையை பெருக்கியும் பாலஸ்தீனத்தின் பகுதிகளை அபகரிக்கும் நோக்கிலும் மிக அதிக அளவில் குடி ஏற்றங்களை அமைத்தது, இதற்க்கு அமெரிக்காவும் முழு உடந்தையாக இருந்தது. பாலஸ்தீனர்கள் செய்த ஒரே தவறு ஆரம்பத்தில் தங்களின் நிலம் பரிபோவதை சுதாரிக்காமல் இருந்தது. அதற்க்கு தான் இன்று தண்டனையை அனுபவிக்கிறது. உலகம் முலுவதும் பல பெரசுகலாலும் கிட்லர் முசோலினி பொன்ட்ரோராலும் அலிட்தொலிக்கப்பட்ட ஒரு இனம் தான் இந்த இச்ராயெல்கல்;,இ வர்கலுக்கு அடைகலமும் பொருலாதர வர்ச்ஷிக்கு உதவியும் சைதவர்கல் தான் இன்டக் பாலச்டேனியர்கல். ஆனல் அப்பொது அவர்கலெளக்கு தெரிந்திருக்காது இவர்கல் வரம் கொடுட்தவன் தலைலெயெ கைவைப்பவர்கல் என்ட்ரு. இன்ட்ரு அனைவரும் தெரியும்நெரம் வந்தும் பயனில்லை

        • சரி சாகிர்,
          இஸ்ரேல் பழைய எல்லைக்கே செல்லட்டும், யூதர்களின் தனி நாடை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ?

          இன்றைய இஸ்ரேலியர்களுக்கும் அன்றைய இஸ்ரேலியர்களுக்கும் என்ன வித்தியாசம் ? ஆதாரத்தோடு பேச வேண்டும்.

          உங்களுடைய புத்தகங்களை ( குரான், சாகி முஸ்லிம், சாகி புகாரி, அல் தபாரி, சீரா) படித்தவன் என்ற முறையில் சொன்னால், படிப்பதற்கு முன் இருந்த மரியாதை படித்த பிறகு இல்லை.

          • என்னுடைய பார்வையில் இஸ்ரேலியர்கள் ஒரு புற்று நோயை போன்றவர்கள் அவர்களுக்கு எங்கேனும் சிறு இடத்தினை கொடுத்ததாலும் அதனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தங்களது எல்லைகளை படரவே செய்வார்கள். மேலும் இவர்களை ஈசா (அலை) பாம்பு நட்டுவாக்களி என்று விஷஜந்துவுடன் உப்பிட்ட வர்ணனைகளையும் பைபிளில் பார்க்க முடிகிறது. இவர்களின் கிரிமினல் புத்தி என்றுமே மாறாது என்பதுதான் என்னுடைய அசைக்க முடியாத கருத்து(இதில் சில நல்லவர்கள் இருக்காலாம் ஆனால் நான் குறிப்பிடுவது பெரும்பான்மையை).
            (உங்களுடைய புத்தகங்களை ( குரான், சாகி முஸ்லிம், சாகி புகாரி, அல் தபாரி, சீரா) படித்தவன் என்ற முறையில் சொன்னால், படிப்பதற்கு முன் இருந்த மரியாதை படித்த பிறகு இல்லை.) ஏன் இல்லை என்பதையும் சேர்த்து பதிவு சைதிருக்க்கலாமே. அல்லது சிலவற்றை கூரி இருந்தால் எனக்கு தெரிந்தவற்றை நானும் சொல்லி இருப்பேனே.

            • சாகிர்,
              சிறு வயதிலிருந்து போதிக்கப் பட்ட யூத வெருப்பைத்தான் உங்களிடம் காண முடிகிறது. புற்று நோயை குணப்படுத்தும் லேசர் அவர்களுடைய கண்டு பிடிப்புத்தான். அவ்ர்களுடைய கண்டு பிடிப்புகளின் உதவியோடுதான் அவர்களின் மேல் வெறுப்பை உமிழ்கிறீர்கள் பின்னூட்டத்தின் வழி.

              முஸ்லிம்களைவிட அதிக அளவில் உலக முன்னேற்றத்திற்கு பங்காற்றியிருக்கிறார்கள்.
              190 நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். அதன் மூலம் அவர்களின் பங்கு மிகப் பெரியது.

              முஸ்லிம்களின் பங்கு என்ன ?

              ” கல்லுக்கு பின்னால் ஒழிந்திருக்கும் யூதனை, அந்த கல் காட்டி கொடுத்து கொல்ல சொல்லும், கர்காட் மரம் மட்டும் காட்டிக் கொடுக்காது ஏனென்றால் அது யூத மரம்” போன்ற பாட்டிக் கதைகளை நம்புபவர்களாக உலகில் உள்ள அனைவரையும் ஆக்க வேண்டும் என்பதில்தான் முஸ்லிம்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

              வேறு எந்த நாட்டை அவர்கள் பிடித்தார்கள் என்று ஆதாரத்தோடு விளக்க வேண்டும்.

              கிருஸ்தவ மதத்தில் யூத வெறுப்பு இருப்பது உண்மைதான். இன்றைய முஸ்லிம்களைப் போல் எதற்கெடுத்தாலும் யூதர்களை காரணம் காட்டும் பழக்கம் அவர்களுக்கும் இருந்தது. இத்தாலியில் ப்லேக் நோய் வந்ததற்காக நூற்றுக் கணக்கான யூதர்களை எரித்தார்கள்.

              அதே மூடத்தனத்தில் எல்லா காலமும் இருக்க முடியுமா ? அறிவு வளரும்போது அந்த மூடத்தனங்களை ஒதுக்க வேண்டாமா ?

              எதில் அவர்களுடைய கிரிமிணல் புத்தி உங்களை பாதித்தது ? ஆதாரம் வேண்டும், நம்பிக்கை மட்டுமே போதாது.

              ஆதாரமில்லாத கண் மூடித்தனமான வெறுப்புதான் உங்களிடம் மற்றும் பிற முஸ்லிம்களிடம் காண முடிகிறது.

              • thanakku irukka idam koduttha paalasteeniyarukke indru irandakam saithuvittaarkale athu pothaathaa thankalukku innum veru aathaaram veru theviyaa? anekamaaka unkal veettil evvitha elavum vilaatha varai elavu ondru iruppathaakaa theriyavillaai endru tharkikkum pokkai thaan thankalidamirunthu naan kaankiren.

                • சாகிர்,
                  நான் ஏற்கன்வே சொல்லி விட்டேன், இஸ்ரேல் தனது பழைய எல்லைக்கு செல்ல வேண்டும். எங்களுடைய எண்ணம் அங்கு அமைதிநிலவ வேண்டும். அமைதிக்கு உங்கள் மதமும் மக்களும் எந்த வகையிலாவது ஒத்து வருகிறதா ?

                  அமாஸின் ஒரே கொள்கை, யூத இனத்தை பூண்டோடு அழிப்பதுதான். அப்படி இருக்க , இஸ்ரேலிடமிருந்து எதை எதிர்ப் பார்க்க முடியும் ?

                  பாலஸ்தீனர்களுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவுக்கு உரிமை இஸ்ரேலியர்களுக்கும் உள்ளது.

                  • I don’t think it will happen, b’cos the person , who has given his wealth and families life will always see them as enemies and it will not come to end. this applies for both palasteen and Isreal.and isreal is having vital support from america and palasteen is helpless and unarmed.

  6. இது இடம் குறித்த பிரச்சனை என்றால் இதற்க்கு எப்போதோ முடிவு வந்திருக்கும். உ.ம் காஷ்மீரை , பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடுகிறது, இதனை கொடுத்து விட்டால் அமைதி திரும்பிவிடுமா? எப்படி பாகிஸ்தான் ,இந்தியா முழுவதையும் ஆக்கிரமிக்க , __________விரும்புகிறதோ ,அதை போல‌
    பல முஸ்லீம் நாடுகள்( நம் நாட்டில் உள்ள முஸ்லீம் சகோதர்களும் சேர்த்து) ________ விரும்புகிறார்கள்.

    பின் எப்படி அமைதி வரும். முதலில் ஹிஸ்புல்லா/ஹமாஸ் மற்றும் இன்ன பிற வெளி நாட்டு அமைப்புகள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற வேண்டும்(சன்டையை மதத்தின் பெயரால் தூண்டி விடுபவர்களே இது தான்).

    இங்கும் பலர் ( இந்தியாவில்) குளுகுளு அறையில் உட்கார்ந்து கொண்டு,அல்லாகு அக்பர் என கூவுபவர்களுக்கு அங்குள்ள மக்களின் வலியும் வேதனையும் தெரியாது.

    மற்ற நாடுகளோ ,அமைப்புகளொ இவர்கல் சொந்த விசயத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்.
    பாலஸ்தினியர்கள் இந்த பிரச்சனையை மதக் கண்ணோட்டதோடு அணுகாது ,தங்கள் உரிமை பிரச்சனையாக கருத வேண்டும்.
    பாலஸ்தீனியர்கள்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு வார்த்தையை துவங்க வேண்டும்(இரு தரப்பும் விரும்புவது இது தான்).
    அமைதியை விரும்ப ஆரம்பித்தாலே,அமைதிக்கான வழியும் தானாகவே பிறக்கும்

  7. இஸ்ரேல் எனும் நாடு 47க்கு முன் இல்லைதான். ஆனா அதே சமயம் யூதர்கள் முஸ்லீம்களுக்கு முன்னமே 2000 ஆண்டுகள் அங்கிருந்திருக்காங்க. அவங்களதான் முஸ்லீம்கள் துரத்தி அடிச்சிருக்காங்க… 47ல் அவங்களுக்குனு ஒரு நாடு உருவாக்கி கொடுக்க பட்டிருக்கு..
    அந்த சின்ன இடம் கூட அவங்களுக்கு கொடுக்க கூடாதுனு சண்டை போட்டுகிட்டு இருக்காங்க இந்த முஸ்லீம் தீவிரவாதிகள் அதை பத்தி எதுவும் பேசாம இஸ்ரேல் அடிச்சா மட்டும் வலிக்குதேநா என்ன செய்ய முடியும்?

  8. பலஸ்தீன இனபடுகொலைக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டி, இஸ்ரேலுக்கு தக்க பாடத்தை புகுட்டுவதை விட்டு விட்டு, அங்கே செத்து மடியும் பாலஸ்தீன சிசுக்களின் படங்களை போட்டு, அவர்கள் ஜிகாதிகள் சொர்க்கம் செல்வார்கள், இஸ்ரேலிய யூதர்களுக்கு மறுமையில் தண்டனை கிடைக்கும் போன்ற பதிவுகள் அநீதிக்கெதிரான தீர்வா?
    செல்வ மழையில் உல்லாசபுரியில் வாழும் அரபு யூனியன் பாலஸ்தீனத்திற்க்கு நிவாரணமாக டாலர்களை மட்டும் கொடுப்பது மட்டும்தான் அவர்களின் கடமையா?
    ஐநா மன்றம் ஸ்தம்பிக்க வேண்டாமா? உரிய போர் பயிற்சியோடு கூடிய வலுவான அரபு ராணுவத்தை கட்டமைக்க வேண்டாமா?
    அமெரிக்காவின் கைப்பாவையான இஸ்ரேலை நிலைகுலைய செய்ய அரபு யூனியனால் முடியாதா? இதையெல்லாம் செய்யாமல் தங்களை காத்துக்கொள்ள தனித்தனியாக பதுங்குவது இஸ்லாமியனுக்கு அழகா? சாதி மதம் இனம் மொழி என அனைத்தையும் கடந்து அநீதிக்கு எதிராக போராடுவதற்க்கு பெயர்தான் ஜிகாத் – அஸ்லம் கான்

  9. இந்தியாவும் இஸ்ரேலின் பாணியை பின் பற்றி இங்குள்ள தீவிரவாதிகளை (இலங்கை தீவிரவாதிகளையும் சேர்த்து) ஒழித்து கட்ட வேண்டும்.
    இதில் இஸ்ரேலின் உதவியை நாட எந்த தயக்கமும் கூடாது; கடுமையான சட்ட திட்டத்தோடு தீவிரவாதத்தை நசுக்க வேண்டும்.

    • முதலில் தமிழ் நாட்டில் தமிழ்இன தூரேகி மற்றும் காவிதீவிரவாதத்தை ஒழித்து கட்ட வேண்டும்

  10. பலஸ்தீனத்தின் எதிரி பலஸ்தீனத்திற்குள்ளேயே உள்ளான்.

    இஸ்ரயேலின் எதிரி இஸ்ரேலிலுக்குள்லேயே உள்ளான்.

    அதுபோல் தான் தமிழனின் எதிரியும்.

    உலகப் பாட்டாளிகளின் பொதுஎதிரி ஏகாதிபத்தியம்-முதலாளித்துவம்.

    இன்றுள்ள ஆயுதஇயக்ககள் எதுவும் பொது எதிரிக்கெதிராக போராடுவதில்லை.இவர்களின் போராட்டம் சொந்த நாட்டு மக்களுக்கே அழிவைத்தேடிக் கொடுக்கிறது.

    நல்ல உதாரணம் ஈராக் லிபியா.

    இராணுவபலம் அணுயாயுதம் ஏகாதிபத்தியத்தின் நேரடி மறைமுக ஆதரவு கொண்ட இஸ்ரயேலுக்கு எதிராக சில சீறிவாணங்களை கொழுத்திவிட்டால் பதிலுக்கு அவர்கள் வீடு மனைகளை தரைமட்டம் ஆக்கிவிடுவார்கள் என்பது இன்றைக்கு வரும் செய்தியா? ஜசீர் அரபாத் காலத்திலும் இதுதானே! நடந்து கொண்டிருந்தது.

    ஏன்? இலங்கையின் முப்பது வருட உள்நாட்டு யுத்ததிலும் இது தானே! நடந்தது. சாவும் பலியும் வேதனையும் துயரமும் இலங்கைபாட்டாளிகளுக்காகவே ஒதுக்கப்பட்டது.இவர்களின் போராட்டவடிவம் இலங்கையரசுகளை இம்மியளவும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லையே!..?

    தமதுநாட்டை சமத்துவவழிக்கு இட்டு செல்ல நினைப்பவர்கள் முதலில் இனமத சமூகவெறி கொள்கையில் இருந்து விடுதலை அடைய வேண்டும்.முதலாளித்துவத்தின் தொங்குதசைகளாக ஆலோசகர்களா போராட்டம் நடத்தும் சகல குட்டிமுதலாளித்து இயக்கங்களை நிராகரிக்க வேண்டும்.

    அப்படியானால் மட்டுமே அரசியலில் பிரவேஷிக்க முடியும் இல்லையேல் ஏகாதிபத்திய தாசர்களாகவே என்றும் உங்கள் இருப்பை காட்டிக்கொள்ளும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க