சென்னையின் அடையாளமாகிப் போன புத்தகக் காட்சியில் பல நூறு அரங்குகள், பல ஆயிரம் தலைப்புகளில் நூல்கள்… என்ன பிரமிப்பை ஏற்படுத்துகிறதா ?
நம்மில் பலரும் புத்தகங்களை படிக்க விரும்புகிறோம். ஆனால் நேரமில்லை, வாய்ப்பில்லை என தவிர்க்கிறோம். வாழ்க்கை போராட்டம் போல கற்பதையும் ஒரு போராட்டமாக இன்று செய்ய வேண்டியுள்ளது.
பல தலைப்புகள் இருந்தும் இன்றும் மக்கள் சமூக பிரச்சினைகள் சார்ந்த நூல்களை தேடி வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் சமூக அக்கறையுள்ள நூல்கள் மற்றும் நூல் வெளியீட்டாளர்களை அறிமுகம் செய்கிறது இந்த காணொளி. இதனை பாருங்கள்… பகிருங்கள்…
நூல்களை வாங்கிப் படியுங்கள்… பயன் பெறுங்கள்…
41வது புத்தகக் காட்சியில் புதிய கலாச்சாரம் வெளியீடுகள் ! | வீடியோ
தமிழகத்தில் தேவதாசிகள், அம்பேதகர் – இன்றும் என்றும் – நூல் அறிமுகம் | வீடியோ
சூடிக் கொடுத்த சுடரை தேவதாசி என சொன்னதற்காக வைரமுத்துவை வசைபாடுகிறது ஆர்.எஸ்.எஸ். கூட்டம். ஆண்டாளைச் சொன்னால் மட்டும் தான் உங்களுக்கு வலிக்கிறது. ஆண்டாண்டு காலமாய் கோவிலுக்கு நேர்ந்துவிட்டு அவர்களைச் சூறையாடியதை அந்த அவலத்தை அடக்கமாக விளக்குகிறது இந்த நூல்.
வரலாறு தெரியாதவன் வரலாற்றைப் படைக்க முடியாது ! என்றார் அம்பேத்கர் அவரின் வரலாற்றை, அவரது இன்றைய தேவையை விவரிக்கும் வகையில் இந்நூலை வெளியிட்டுள்ளது விடியல் பதிப்பகம்.
இந்த நூல்களை வாங்கிப் படியுங்கள்… பயன் பெறுங்கள்…
***
41வது சென்னைப் புத்தகக் காட்சியில் நூல்கள் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டகம்
கடை எண் 297, 298
நாள் : 10.01.2018 முதல் 22.01.2018 வரை
நேரம் :
வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 வரை.
விடுமுறை நாட்கள் : காலை 11 – இரவு 9 வரை.
இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம்
( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30
முகவரி :
கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367