மக்கள் உண்ணும் உணவு, உடை, பருகும் நீர் வரை அனைத்தையும் தீர்மானிக்கும் முதலாளித்துவம் அதன்வழி நமது சிந்தனையையும் கட்டுப்படுத்துகிறது.
இன்று நமது இளைய தலைமுறையை மட்டுமல்ல, பெரியவர்களையும் அடிமைப்படுத்தி விட்டது துரித உணவுப் பழக்கம். அறுசுவைகளின் அதீத பயன்பாடும் அது உருவாக்கும் சுவை வெறியும் நம்மை எப்படி உருவாக்கும்? பதிலளிக்கிறது “பன்றித்தீனி” புத்தகம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஓவியா இராணுவம் மட்டும் பிரச்சினையல்ல. சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் ஓவியாமயமாக்கம் எப்படி நடைபெறுகிறது என்பதை விரிவாகவும், ஆழமாகவும் முன்வைக்கும் நூல் – ஒரு பிக்பாஸ் – ஒரு கோடி அடிமைகள்
இரண்டு அமெரிக்க் குளிர்பானங்கள் முழு உலகிலும் நடத்திய வேட்டையின் வரலாறு இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது – கோக், பெப்சி- கொலைகார பானங்கள்.
சமூகவலைத்தளங்களில் கடிவாளம் உங்களிடமில்லை. நம்மை எந்திரங்கள் போல பயிற்றுவிக்கும் நவீன தொழில் நுட்பத்தின் ஆன்மா இந்த செயற்கை நுண்ணறிவில் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு – நவீன அடிமை யுகம்.
இருபது ரூபாய் விலையில் அழகிய கட்டமைப்பில் ஆழமான பொருளில் புதிய கலாச்சாரம் வெளியிடும் மாத நூல்களை வாங்கிப் படியுங்கள்.
***
41வது சென்னைப் புத்தகக் காட்சியில் நூல்கள் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டகம்
கடை எண் 297, 298
நாள் : 10.01.2018 முதல் 22.01.2018 வரை
நேரம் :வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 வரை.
விடுமுறை நாட்கள் : காலை 11 – இரவு 9 வரை.
இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம்
( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30
முகவரி :
கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367