privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைசின்ன சங்கரனை குண்டர் சட்டத்தில் கைது செய் ! கொதிக்கிறது ஃபேஸ்புக் !

சின்ன சங்கரனை குண்டர் சட்டத்தில் கைது செய் ! கொதிக்கிறது ஃபேஸ்புக் !

-

ச்ச ராஜாவின் தந்தையார் “தமிழ் – சமஸ்கிருதம்” அகராதி தயாரித்து, அதை வெளியிடும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த போது சபை நாகரீகத்துக்காகக் கூட எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தார் சின்ன‘வாளு’. அதனை பல முகநூல் பதிவர்களும் கண்டித்துள்ளனர். இதே விஜயேந்திரன், தேசிய கீதம் பாடும் போது மட்டும் எழுந்திருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏன் எழுந்திருக்கவில்லை என்றால் அப்போது அவர் தியானம் செய்தாராம். இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறது, காஞ்சி சங்கர மடம். அவாளின் கொழுப்புத் திமிரை ஆக்ரோசமாக கேள்வி கேட்கிறார்கள் நமது தமிழ் ஃபேஸ்புக் பதிவர்கள்.

– வினவு

*****

 Arul Doss Borntowin

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் , மதக் கலவரத்தை தூண்டும் எச்.ராஜா , மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து பேசி வரும் நித்தியானந்தா பெண் சீடர்கள் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் பொதுவானதே .

__________

__________

KR Athiyaman

அந்த நிகழ்ச்சியில் எதுக்கு தமிழ் தாய் வாழ்த்து ஒலிபரப்பனும் ? அருமை தெரியாதவர்கள், அடிப்படை சபை நாகரீகம் தெரியாதவர்கள் chief guestஆ இருக்கும் நிகழ்ச்சியில் இதை இசைத்தது தான் தவறு.

_______________

Nelson Xavier

கல்கி கிருஷ்ணமூர்த்தி இல்ல திருமண விழாவில் வீட்டார் அன்போடு தந்த குங்குமத்தை நெற்றிப் பட்டையில் இட்டும், திருச்சியில் இராமசாமி அய்யர் கட்டிய மகளிர் கல்லூரி திறப்பு விழாவில் சமஸ்கிருதத்தில் ஒலித்த இறை வாழ்த்துப் பாடலுக்கு சபை மரியாதைக்காக எழுந்து நின்ற பெரியாரின் அணுகுமுறைதான் இந்த மண்ணின் பெருமிதம்.

யாருக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்பதல்ல, யாரிடமிருந்து பாடம் கற்கப் போகிறோம் என்பதே எப்போதும் முக்கியம்

_________

“தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர்,
மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்”

-தந்தை பெரியார் திராவிடர் கழகம் .

_______________

Thiru Yo

செத்துப்போன தனது தாய்மொழிக்காக ‘தியானமிருந்த’ விஜயேந்திரனை இப்படி வறுத்தெடுக்கலாமா?

_______________

Panuval Mugund

இனி தேசிய கீதம் பாடும் போது தியானம் செய்வோம் என்று உறுதி ஏற்ப்போம்

-காஞ்சி பாறைகள்

_______________

_______________

Poornachandran Ganesan

ஓர் ஆள், மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்கவில்லை. தேசியகீதம் பாடுமபோது மட்டும் எழுந்து நிற்கிறார். தமிழ அவருக்குத் தாய்மொழியாக இல்லாமல் போனால் போகிறது. மேடை மரபைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லையா? எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்தந்த நாட்டின் மரபுகளுக்கு மரியாதை கொடுத்து எழுந்து நிற்பதுதான் நல்லொழுக்கம். அதெல்லாம் இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

நேற்று (23.1.2018) சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூனியர் காஞ்சி சங்கராச்சாரியாரான விஜயேந்திரர், ஆளுநர் மற்ற சிலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நேரத்தில் எழுந்து நிற்காமல், இறுதியில் தேசியகீதம் என்ற ஜன கன மண பாட்டுப் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றுள்ளார் என்ற செய்தி இன்றைய (24.1.2018) டெக்கான் கிரானிக்கள் ஆங்கில நாளேட்டில் வந்துள்ளது!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு!

ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந்து, பிறழ் சாட்சிகள் 83 பேர்களின் தயவால் கொலைக் குற்றத்திலிருந்து, புதுவை செஷன்ஸ் கோர்ட்டில் விடுதலை பெற்று, மேல்முறையீடு செய்யாது தப்பித்துக் கொண்டதால், வெளியில் நடமாடும் இவர், அந்த சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அதுவும் ஆளுநர் போன்றவர்கள் எழுந்து நின்ற நிலையில்கூட, எழுந்து நிற்க மறுத்து, அடாவடித்தனமாக அப்படியே அமர்ந்திருப்பது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

இது அவை நாகரிகத்திற்கேகூட அவமரியாதை அல்லவா?
தமிழ் நீஷ பாஷை – சமஸ்கிருதம் தேவ பாஷை என்று கருதும் – கூறும் புத்திதானே இதற்கு மூலகாரணம்?

தந்தை பெரியார் கட்டிக் காத்த தனிப் பண்பாடு

தள்ளாத வயதில்கூட, கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளில், கடவுள் வாழ்த்து பாடப்பட்ட நேரத்திலும், நாட்டுப் பண் இசைக்கப்பட்டபோதும் எழுந்து நின்று அவை நாகரிகத்தினைப் பேணிக் காப்பாற்றிய வரலாறு நாடறிந்த ஒன்று அல்லவா!

இன்னமும் மொழியிலும் உயர்வு- தாழ்வு மனப்பான்மை, பேதத்தன்மை, பார்ப்பனர்களிடம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும்!

மன்னிப்புக் கேட்கவேண்டும் சங்கராச்சாரியார்!

தமிழ்நாட்டிலிருந்து கொண்டு, தமிழர்களிடம் காணிக்கை கணிசமாகப் பெற்றுக்கொண்டு பிழைக்கும் பார்ப்பன மடாதிபதியின் தமிழ் அவமதிப்பை – தமிழர்கள் புரிந்துகொள்வார்களா – அம்மேடையில் அமர்ந்திருந்த பட்டிமன்றப் புலவர் சாலமன் பாப்பையா உள்பட?

தமிழர்களே அடையாளம் காண்பீர்! சங்கர மடம் இதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்!

-கி.வீரமணி, தலைவர்
திராவிடர் கழகம்.

_______________

Karthik Meka

வள்ளலாரை ஏற்று கொள்வதும் தமிழ் அய்யா வழியை ஏற்று கொள்வதும் தமிழ். காஞ்சி மடத்தை விரட்டுவதும் தமிழ். நித்தியானந்தாவை விரட்டுவதும் தமிழ்.

தமிழுக்கு ஆக்கவும் தெரியும் அழிக்கவும் தெரியும்.

_______________

Shankar A

இப்படி தமிழர்களையும் தமிழையும் தொடர்ந்து அவமதிப்பீர்கள். நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா ? உங்களுக்கு தமிழகத்தில் என்ன வேலை ? வெளியேறுங்கள்.

_______________

_______________

Mathava Raj

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எல்லோரும் எழுந்து நிற்கும்போது நீ ஏன் எழுந்து நிற்கவில்லை என்று கேட்டால், அந்த நேரம் அவாள் தியானத்தில் இருந்ததாகவும், கடவுள் வாழ்த்தின் போது பெரியவாள், சிறியவாள் எல்லாம் தியானத்தில் இருப்பதுதான் வழக்கம் என்றும் ஒரு விளக்கம் மடத்திலிருந்து தரப்பட்டு இருக்கிறது.

தமிழ் மொழியை, தமிழர்களை துச்சமாக மதித்து விட்டு அதற்கு இப்படியொரு திமிரான விளக்கம் அளிக்க பார்ப்பனிய பீடங்களுக்கு மட்டுமே இங்கு சாத்தியமாகும்.

அந்த எழவு தியானத்தை எழுந்து நின்று செய்தால் என்ன, மடத்தின் குடி முழுகியாப் போய்விடும்?

_______________

Keetru Nandhan

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி விஜயேந்திரனால் தமிழர்களின் மனம் புண்பட்டு விட்டது. எனவே மனோன்மணியம் சுந்தரனார் சமாதிக்குச் சென்று அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது…

அவர் மன்னிப்பு கேட்கும்வரை, இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களும் காஞ்சி மடத்தின் முன்பு தொடர் போராட்டங்களை அறிவிக்க வேண்டும்.

_______________

ராஜா ஜி

தமிழ்த்தாய் வாழ்த்தை முழுவதும் பாடினால் மட்டுமே ஆரியம் நடுநடுங்கும், 1970-இல் கலைஞரின் பெருந்தன்மையால் விடுபட்ட இந்த வரிகளை பாடி மனோன்மணியம் சுந்தரம்பிள்ளைக்கு நன்றி சொல்லுவோம்;
இதோ பாடல் வரிகள்…..?

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.
இதை இணைத்தே பாடுவோம், ஆரிய கூட்டம் நடுங்கட்டும்…..

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.

_______________

Kasi Krishna Raja

கல்வி அறிவற்ற ஒரு தற்குரி பிராமணன் ஒரு அடி மேலே…உயர் தமிழறிவு பெற்ற பேராசான் பாப்பையா ஓரடி கீழே…இது தான் பிராமண ஹிந்தியா…நீ பண்ணிய செயலுக்கு பாப்பையாவும் இந்நேரம் தீவிர தமிழ் தேசியவாதியாகியிருப்பார். தமிழன் மதமற்றவன். உன் அஸ்திவார செங்கல்லை ஓவ்வொன்றாக உருவுவோம்.

_______________

R T Muthu

விழா தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிறைவின் பொழுது தேசிய கீதமும் இசைப்பது என்பது தமிழ்நாட்டில் யாவரும் பின்பற்றும் நடைமுறை என்று , சின்னசங்கரனுக்கு அந்த காமாட்சி கூட, அசரீரி சொல்லவில்லையா?

_______________

மலையமான் தே.கி.

ஆண்டாள் டிஸ்சார்ஜ்ட்; சங்கராச்சாரி சின்னது அட்மிட்டட்..(பெருசும் அட்மிட்டட் தான்)

_______________

Villavan Ramadoss

ஐ திங்க்,

நாம ஈக்வலா ஓட்ட வேண்டியது சாலமன் பாப்பையாவையும்தான். சோறு திங்கிறது இங்க, பில்லை கட்டுறது அங்கயா?? ஜயேந்திரா, என்னை வாழ்த்தும்போது ஏண்டா ஏந்திரிக்கல?

_______________

ராஜா ஜி

ஏற்கனவே வைரமுத்து – ஆண்டாள் பிரச்சினையில் மாட்டிக்கிட்டோம்,
இப்போ விஜயேந்திரன் பிரச்சினை வேறு வந்துவிட்டதே!
– புலம்புறது யாரு தெரியுமா?

வைரமுத்துவை அழைத்து, விழா ஏற்பாடு செய்த தினமணி வைத்தியநாதய்யர் செய்யாத தப்புக்கு அய்யங்கார் ஜீயரிடம் மன்னிப்பு கேட்டுட்டார்.

எச்.ராஜா சர்மா முன்னிலையில் தமிழை அவமதித்த சங்கரரை , சர்மாஜி என்ன சொல்லி திட்டப்போகிறார்?
சர்மாஜியை நித்தியானந்த சீ.டிகள் என்ன அர்ச்சனை செய்யப் போகிறார்கள்?
நைனார் நாகேந்திரன் யாருக்கு என்ன விலை வைக்கப்போகிறார்?
தலை உருளப்போகிறதா?
நாக்கை வெட்ட வேண்டுமா?
மாமிகள் தலைமையில் போராட்டம் தொடங்கிய ஜீயர் என்ன செய்யப்போகிறார்?
2000 சிப்ஸ் விஞ்ஞானி எஸ்.வி.சேகரின் வாய்மூலம் என்ன?

_______________

Sivasankaran Saravanan

தேசியகீதம் பாடினால் எழுந்து நில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தலை வணங்கு, தேசிய கொடியை கண்டால் வணக்கம் செலுத்து என்றெல்லாம் நிர்ப்பந்தப்படுத்துவதற்கு நாம் நீதிமன்றம் போல கொடுங்கோலர்கள் அல்ல.

ஆனால் தேசியகீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க தெரிந்த விஜயேந்திரருக்கு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது தெனாவட்டாக உட்கார்ந்திருந்தார் என்றால் அது நிச்சயமாக தமிழர்களையும் தமிழையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான்.

என்னதான் அவர்கள் தமிழ்நாட்டில் உண்டு, தமிழர்களின் உழைப்பை உறிஞ்சி கொழுத்தாலும் ஆரியக்கூட்டம் தங்களை தமிழர்களாக உணரமாட்டார்கள் என்பதற்கு இதுவே சான்று!

தமிழ்த்தாயை அவமானப்படுத்தி ஒட்டுமொத்த தமிழர்கள் மனதையும் புண்படுத்திய சங்கராச்சாரி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்!

_______________

வினோத் களிகை

செய்யாத தவறுக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்க சொன்னார்கள்

இப்போ (இந்து) தமிழரால் பிழைப்பு நடத்தும் காஞ்சி சின்னவா தமிழ்த்தாயை அவமரியாதை செய்துட்டா

மன்னிப்பு கேட்பாரா? மன்னிப்பு கேட்க செல்வார்களா?

_______________

இரவிக்குமார்

“ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ”
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே…

என்றிருந்த தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏன், கலைஞர் 1970-ல் ” ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ” என்ற வரிகளைக் கலைஞர் ஏன் உருவினார்?

அங்கிருந்து துவங்குகிறது திராவிடத்தின் வாயடைத்தது…

அத்தகைய திருத்தம் செய்தவர், “செயல் மறந்து வாழ்ததுதுமே” என்பதைச் “செயல் புரிந்து வாழ்த்துதுமே” என்று திருத்தியிருந்தால் அது வரவேற்கத் தக்கதாயிருந்திருக்கும்…

அன்றிலிருந்தே தமிழை வளர்க்கும் செயல் மறந்துதான் போனார்கள் திராவிடக் கட்சியினர்…

அதன் நீட்சிதான், இன்றும் தமிழ் முழுமையான ஆட்சி மொழியாகவில்லை, கல்வி மொழியாகவில்லை, வழக்கு மொழியாகவில்லை, மருத்துவ மொழியாகவில்லை, பொறியியல் மொழியாகவில்லை…

திராவிடக் கட்சியின் தலைகள் பலரும், தமிழ்ப்பள்ளி துவங்கவில்லை… ஆங்கிலப் பள்ளிகளைத் திறந்து, அங்கே தமிழில் பேசினால், பேசுகிற மாணவருக்குத் தண்டனை வழங்கும் வழக்கத்தை இயல்பாக நிறுவினர்…

தமிழ் கற்காமலேயே மிக்குயர் கல்வி வரை ஒருவர் தமிழ்நாட்டில் மட்டுமே கற்க முடியும்…

உலகத் தமிழ் மாநாடுகளைப் படாடோபமாய் நடத்தி என்ன பயன்?

தமிழர் நாவுகளிலிருந்து தமிழை அறுத்தெறியும் கொடுமையை இவர்களின் புற்றீசல் ஆங்கிலப் பள்ளிகள் செவ்வனே செய்கின்றன…

அதோடு ஏற்கெனவே உள்ள வடக்கு அபாயங்களான இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு…

தமிழ் இத்தனை இடிகளையும், துரோகங்களையும் தாண்டித்தான் மக்கள் நாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது…

_______________

பெருமாள்சாமி சுப்புராஜ்

தமிழ் மொழியை அவமரியாதை செய்த விஜயேந்திரன் காஞ்சிபுரம் மடத்தின் வாசலில் நின்று கொண்டு அங்கு வருவோர் போவோர் காலில் எல்லாம் ஒரு நாள் விழ வேண்டும் அப்போதுதான் செய்த தவறுக்கு தமிழகம் ஓரளவுக்கு அமைதியாகும் . தமிழுக்காகவே ஆண்டாள் பிரச்சினையில் குரல் கொடுத்த ராஜா இதை வலியுறுத்துவார்

 

  1. தமிழ்தாய் வாழ்த்து எழுதுன “மனோன்மணியம் பெ.சுந்தரனார்” அப்பவே இவனுங்களையும், இவனுங்க ஆரிய சமஸ்கிருத மொழியயையும் காறி துப்பிட்டு போய்ட்டாரு..

  2. காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி தமிழ் தாய் வாழ்த்தை தாம் புறக்கணிக்கவில்லை என நிரூபிக்கும் விதத்தில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கும் போது எழுந்து நிற்காததற்கு வருத்தம்/மண்ணிப்பு தெரிவிக்க் வேண்டும்.

    • சீனியர் சார்.., தமிழ் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மட சங்கரமட மரபு இல்லையாம்! அறிக்கை கொடுகின்றாணுங்க! என்ன செய்யலாம் இந்த சங்கர மட ****…? என்ன செய்யலாம் விஜயேந்திரனை?

      • சங்கர மடம் (மட்டுமே?) இந்து மத தலைமை பீடம் இல்லை இந்து மதத்தின் சாரமே “உலகம் ஒரே குடும்பம்” என்பதும் நானும் நீயும் கடவுள் என்பதுவுமே.. மாணவர் கூட இறை நம்பிக்கை அர்பணிப்பு உணர்வும் இருந்தால் மடம் திறக்கலாம் , ச

    • உங்கள் நியாய உணர்வுக்கு வாழ்த்துக்கள் ரங்கராஜன். இந்த உணர்வு உங்களுக்கு நீடித்தால் நீங்கள் நிச்சயம் வினவு ஆதரவாளர் ஆகிவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

      • நண்பரே , நான் சாதி/மத/மொழி/இன வெறியன் இல்லை ஆனால் நான் (அறவுணர்வு ஓரளவு உள்ள) மதவாதி மட்டுமே , என்னால் எனது நம்பிக்கையை விட்டு விட்டு எந்த இசத்தையும் பின்பற்ற இயலாது , நீவிர் தொடர்ந்து மததாக்குதல் செய்து வருவது எமது மதபற்றை மேலும் தீவிரமாக்குகிறது , நன்றி..

        • //அறவுணர்வு ஓரளவு உள்ள//
          இதைத்தான் நான் கூறினேன். இது நீடித்தால் உங்கள் மத உணர்வு தீவிரமாக வாய்ப்பு இல்லை. இதை நியாய உணர்வு மற்றும் மனசாட்சி என்றும் கூறுகிறோம். RSSன் விச பிரச்சாரங்களை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று யோசியுங்கள். இறை நம்பிக்கைக்கும் மத உணர்விற்கும் சம்பந்தமில்லை. அத்வைத தத்துவத்தை அறிந்தவர்கள் ராமனை கொண்டாட முடியாது. அத்வைதம் எனக்கும் ஆச்சரியமூட்டிய தத்துவம்.

  3. மைலாப்பூர் மஃபியா மற்றும் ராம்நாட் ரோக் (ஏச்ச ராஜா) ஆகியோருக்கு தமிழை தூக்கிப்பிடிக்கவேண்டிய கட்டாயம், அரசியலுக்காக! நாரோயில் நாதாரிக்கு தமிழை நக்கிப்பிழைக்கவேண்டிய கட்டாயம், சோத்துக்காக!! என்ன டேஷ்சுக்காக ‘காம-கேடி’ தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவேண்டும். காலையுணவுக்குப்பின்னே சொர்ணாக்காவுக்கும், மாலையுணவுக்குப்பின்னே மால்யாக்காவிற்கும் பூஜை செய்து முட்டி செத்து போயிட்டதால் அவனால நிற்க முடியாது. பாவம் அவன் கஷ்டம் அவனுக்கு!

  4. தமிழன் அகராதி வைத்து சமஸ்கிருதம் படிக்கவேண்டும். ஆனால், கோயிலில் பூசை மட்டும் வைக்கக்கூடாது. வியாபாரத்தில்தான் எத்தனை நேர்த்தி!

  5. ஆண்டாள் , விஜயந்திரன், எச்ச ராஜா , பெண்ணன் , தமிழசை என்று பார்பனர்களும் , பார்பன கால்நக்கிகளும் அம்பலபட்டு , அவமானபட்டு நிற்கின்றதுகள்…

    தொடரட்டும் தமிழர்களின் ஆரியத்துக்கு எதிரான சினம்…!

    • திராவிடத் தமிழர்கள் என்று திருத்திக்கொள்ளுங்கள் குமார்

      • தமிழர் என்றாலே நாம் திராவிடர் என்ற வகைபாட்டுகுள் தான் வருவோம் என்பதே உண்மை…

        • குமாரின் கருத்தை முழுமையாய் வழி மொழிகிறேன்.
          தமிழ்ர்கள் ஜாதி மதம் மறந்து ஒன்றிணைய வேண்டுமென்றால் அது பெரியாரின் சிந்தனையின் மூலமாகவே முடியும்.
          பெரியாரை புறக்கணித்து தமிழ் தேசியம் பேசித்திரியும் புண்ணாக்குகள் கடைசியில் போய் அடைக்கலமாகுமிடம் இந்துத்துவம் அல்லது பார்ப்பணியம்.

    • ஆரிய திராவிட பிரிவினை வாதத்திற்கு உரிய இடம் குப்பை தொட்டி – சொன்னவர் பாரத ரத்னா பாபா சாஹிப்
      சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர்..

      • ஆண்டாள் மற்றும் ராமனுக்காக கம்பு சுற்றி பதில் சொல்லாமல் அடிவாங்கி ஓடியவர்தான் இந்த ரங்கராசன்.
        இவர் கூறும் அம்பேத்கரின் ஆரியர்கள் மீதான கருத்தை தோழர்கள் யாராவது விளக்கினால் நன்று.

  6. நாடார் முதலாளிங்க எல்லாம் பாப்பானுக்கு குறிப்பா பிஜேபிக்கு சொம்பு அடிகிராணுங்க…

    சீலை மாராப்பு கூட போட அனுமதிக்காக பாப்பானுங்க கிட்ட முன்னே போராடிய தன்மான கூட்டம் இன்று அதே பாப்பான் காலை நக்கிகிட்டு இருக்கு!

    குறிப்பா

    #தந்தி

    #பொன்னன்

    #தமிழிசை

    • விஜயேந்திரர் செயல் /
      செயலின்மை , அது என்ன காரந்தினாலிருப்பினும் கண்டணத்திற்கு உரியது , அவர் மண்ணிப்பு கேட்டே ஆக வேண்டும் அது முக்கியம் ,

      ஆனால்

      வைரமுத்து பிரச்சனையால் ஏற்பட்ட இந்து சகோதரத்துவத்தை சிதைக்கும் , குலைக்கும் நோக்கில் பிரிவினைவாத வன்முறை சக்திகள் குறுகிய அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டுவதும் இந்து மதத்தின் மீது அவதூறை அள்ளி வீசுவதும் கூட கண்டிக்கத்தக்கதே ,

      விஜயேந்தர் செய்ய வேண்டியதை செய்ய வில்லை..

      ஆனால்

      வைரமுத்து செய்யகூடாததை செய்தார்.. ( வருந்தினாரே தவிர தவறை கடசிவரை நியாயப்படுத்தினார் என்பதும் கவனத்தில் கொள்ளதக்கது )..

      அந்தணர்கள் எக்காலத்திலும் தமிழை வளர்த்தே வந்துள்ளனர் (தொல்காப்பியர் முதல் உ வே சா சுந்தர ராமசாமி , சுஜாதா வரை ) எனவே விஜயேந்தரை கண்டிக்கிறேன் என்ற போராட்டம் அந்தணர்களை குறி வைத்து தாக்கும் ஹிட்லர் பாணி அழித்தொழிப்பு வெறியாட்டமாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்
      ஆகவே வன்முறை ஆர்பாட்டம் நியாயமற்றது..

      • வக்க்க்கீலு………….கேப்புல பசுமாட்டையே வெட்டுகிறீரே…

        முதலில் அந்தணன் என்பவன் பார்பானா? பின்னவர் பார்ப்பனர்கள் தாம் என்பதில் ஐயமில்லை. ஆனால் தொல்காப்பியரையும் பாப்பானாக சித்தரிக்கிரீன்களே…நல்லவேளை திருவள்ளுவருக்கு பட்டய போடுவதா நாமத்தை போடுவதா என்ற பிரசினையை திராவிட இயக்கம் தீர்த்து வெச்சது. இல்லைனா தமிழையே கண்டுபிடித்தது திண்ணையில் உக்காந்து தின்னு குசு விடும் பாப்பான் என்று சொல்லிவிடுவீர்கள்.

        • ஆனாலும் உங்க குசுத் தொல்ல தாங்க முடியல…
          பார்ப்பனர்கள் தான் தமிழா வளத்தாங்க னு சொன்னா மண்டகபடி பாடிடிடுவாங்கனு அந்தனர்னு சொல்றீங்களே…

          • மொதல்ல, ஜெயேந்திரன் மாறி திண்ணை சோறு தின்னு தொப்பைய வளத்த ஒரு பாப்பானால திருப்பாவை மாதிரி ஒரு ஆபாச குப்பையா எழுதிருக்க முடியுமே தவிர ஒரு பரந்த மக்களோட வாழ்வியல விளக்கியிருக்க முடியாது..
            அதனால கணம் வக்கீலு அவர்களே, தொல்காப்பியத்தை ஒரு பாப்பானால எழுதியிருக்க முடியாது..

            ரெண்டாவது, தொல்காப்பிய காலகட்டத்துல வடமொழியின் தாக்கம் இங்கே இருந்திருக்கலாமலே ஒழிய சம்ஸ்கிருதத்த கொண்ட ஒரு ஆரிய பாப்பான் எழுதியிருக்க வாய்ப்பே கிடையாது….என்னக்கேட்ட அது ஒரேயொரு தனிமனிதனால எழுதியிருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. அதுக்கும் வெகு காலத்தற்கு முன்பே தமிழ் சமூகத்துடன் ஒன்றுகலந்த பல பெருமக்களால் தான் இது எழுதப்பட்டிருக்கும். நூலாசிரியர் பெயர் தெரியாததால் தானே அவருக்கு தொல்கப்பியர் என்று பெயர். இந்த கேப்புல உங்க நூலை விட்டு பார்க்க முயற்சி செய்வது அருவருக்கத்தக்க செயல்.

            அதனால இந்த முயற்சிய தமிழகத்த காவி வீழ்த்திய பிறகு பண்னுங்க…

            • உமது பதிலில் அநாகரிகம் உம்மை அடையாளம் காட்டுகிறது..

              எனினும் சொல்லுகிறேன் “அந்தணர் /பிராமணர் எனும் பதம் அறிஞர் குழாத்தையும் சான்றோர்களையுமே சுட்டுகிறது எனினும் ஆதியில் இல்லாமல் பாதியில் வந்த சாதியால் எல்லா தொழிலும் பிறப்பின் அடிப்படையில் என்று (தவறாக ) மாறியது போல அந்தணத்துவமும் (Brahmanism ) சாதியாக மாற்றப்பட்டது , உமது மதமாற்ற வெறி மன்னிக்கவும் “மதமற்ற” வெறி தனி நபர் செய்த தவற்றுக்காக ஒரு தரப்பு மனிதர்களையே மாய்க்க துடித்தால் சட்டம் அதை தடுத்தேதீரும்.. (சொல்லும் கருத்து எந்த அளவுக்கு முக்கியமோ ,, அந்த அளவுக்கு சொல்லும் விதமும் முக்கியம் எனவே இனியாகிலும் கண்ணிய பேச்சை பேசுங்கள் அப்பொழுதுதான் உம் பேச்சு எடுபடும்)..

              • சரிங்க மிஸ்டர் வக்கீல் ரங்கராஜன் சார்,

                என்னோட கேள்வி என்னனா தொல்காப்பியம் எழுதியது யாருனே தெரியததால தான் அவருக்கு தொல்காப்பியர்னு பேரு வந்துச்சு. அப்புறம் எப்படி அத எழுதியது ஒரு பார்ப்பனருனு எப்படி சொல்றீரு….
                ஆதாரம் ப்ளீஸ்?

                கேட்டா படிச்சவன் எல்லாம் பாப்பானு சொல்றீங்க.
                சரி. பழங்கதை எல்லாம் உட்ருவோம். உங்க லாஜிக் படியே வருவோம். இப்போ பார்பனர் என்பவர்கள் யாவர்? செத்துப் போன சங்கராச்சாரி, சின்ன ஜெயேந்திரன் உள்ளிட்ட போன்ற பார்பனர்கள் தமிழை நீச பாசை என்று வசைபாடுவதன் பொருள் என்ன?

                உங்க வாதப்படியே பின்னால் சாதி வந்தது என்றால் அந்த உசந்த சாதி மேட்டிமைத்தனம் எப்படி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தாக ஆனது? முஸ்லிம்கள் தான் அதை செய்ததாக இந்தத்துவ வெறியர்கள் கூறுகிறார்கள். அனால் ஆபடியானால் இந்நேரம் பார்ப்பனர்கள் தான் ஒடுக்கப்பட்ட சாதியாக இருப்பார்கள். ஆனால் எதார்த்தம் வேறு விதமாக இருக்கிறது…

                விஜேந்திரனை போன்றவர்கள் தான் பார்ப்பனர்களாக தங்களை வெளிப்படையாகவே பூணுலை காட்டிக் கொண்டு திரிகிறார்கள்.

                அதாவது இன்னும் எளிமையாக திருக்குறள் வழியில் கூறினால்,
                பார்ப்பான் என்பவர் பிறப்பு அடிப்படையில் (வர்ணாஸ்ரம நெறிப்படி) வாழ்பவர்
                அந்தணர் என்பவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அற வழியில் வாழ்பவர்.

                எனவே ரெம்பவும் மெனக்கெட வேண்டாம்.

        • இருதரப்பும் ஓன்றே , முன்னது குணத்தின் அடிப்படையில் உருவானது பின்னர் அதுவே காலத்தின் கோலத்தால் பிறப்பினடிப்படையில் என்று மாறியது.. எனினும் பிற்கால அந்தணரும் ஒன்றும் மோசமில்லை..

      • மிஸ்டர் ரங்கராஜன், தமிழக வரலாற்றில் இதுவரைக்கும் எத்துனை பார்பனர்கள், பார்பனர்கள் எல்லாம் ஆரிய மைந்தனாக ஆராதனை செய்யும் ஹிட்லர் படுகொலை செய்த பாணியில் கொல்லப்ப்ட்டு இருக்காங்க என்ற விவரங்களை தரமுடியுமா? எத்துனை பார்பனர்களின் சொத்துகள் சூறையாடப்ட்டு உள்ளன என்று பட்டியல் இட முடியுமா?

        • இந்திய தேசத்தை உடைக்க , இந்துகளையும் இசுலாமியர்களையும் ஒரு தரப்பு பற்றி மற்றொரு தரப்பிடம் என மாறி மாறி விஷ வெறுப்பு பிரசாரம் சில அண்ணிய ஆதரவு சக்திகளால் நடைபறுகிறது ,

          • அது போல இந்து மதத்தில் தீவிர நம்பிக்கை உள்ள அந்தணர்களை ஒழித்துவிட்டால் இந்து மதத்தை ஒழித்து விட்டு மதமாற்றம் மற்றும் தனிநாடு ஆகிய சதிதிட்டங்களை நிரைவேற்றிவிடலாம் என்ற நோக்கிலேயே

    • தமிழின் உயர்வு , சிறப்பு அவாள்களுக்கு என்றுமே பொறாமை. இது இவர்களின் நாகரீகம்.

  7. பிஞ்சுபெண்(பிராமண) குழந்தையை காஞ்சிகாமகேடி மடத்தில் பாலியல் படுகொலை செய்த காமுகன்தான் இந்த விஜயேந்தின் ,மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கவேண்டியவன் தனது பார்ப்பன’மட’ செல்வாக்கினால் தப்பிவைக்கப்பட்டவன்,பட்டப்பகலில் தனது அயோக்கித்தன கிரிமினல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதால் அவனது பார்ப்பன சாதியைசார்ந்த சங்கரராம ஐயரை படுகொலை செய்தவர்கள் இந்த காஞ்சி சங்கர மட பெரிவா சின்னவா என்ற குற்றவரலாற்றையும் நினைவு கொள்ளவேண்டும்…

  8. இந்த மரியாதை தெரியாத மானுடப்பதற் , தமிழக ஆளுநரைவிட வயதில் சிறியவ…அந்த பெரியமனிதர் எழுந்து நின்று மரியாதை செலுத்தும்போது…சின்ன பய உனக்கு என்ன ஆச்சு? முட்டியில் கொழுப்பா….அவை நாகரீகம் கூட தெரியாத அற்ப பதர்…தமிழ் உனக்கு வேண்டாத மொழியை இருக்கலாம்…ஆனால் வயதில் மூத்த ஆளுநர் நிறக்கவில்லயா? …
    என்னாச்சு ஒய் உனக்கு…

  9. சங்கராச்சாரியார் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்க வேண்டும் என்பது எனது கருத்து…
    ஆனால் இதே தவறை இதற்கு முன் பல இஸ்லாமியர்கள் செய்த போது, அனைவரும் அமைதியாக இருந்தனர்..
    இஸ்லாமிய கூட்டத்தில், தமிழ் தாய் வாழ்த்து பாட்டிற்கு மரியாதை செலுத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது எங்கே போனார்கள் இந்த போராளிகள்?

    • காட்டுமிராண்டி கூட்டத்தோடு அதிகாரத் திமிரில் ஆடும் சங்கர மடத்தாரை ஒப்பிடக்கூடாது.

      • பெரியசாமி நாவடக்கம் முக்கியம்.
        உங்கள் பைத்தியக்கார தமிழ்வெறிக்கூட்டம் கடைசியில் அமரப்போவது ஜெயேந்திரன் களின் மடியில்தான் என்பது எங்களுக்கு தெரியும்.

        • இப்படியெல்லாம் திசை திருப்பி பேசுவதன் மூலம் உங்களின் மதவெறியை நியாயப்படுத்த முடியாது.

          • மதவெறி எம்மிடம் இருக்காது இருக்கவும் முடியாது.
            புதிதாய் கிளம்பி இருக்கும் உங்களிடம் இருப்பது காவிகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பைத்தியம் பிடிக்க வைக்கிற இனவெறி.

            எச்ச ராஜாவிடம் இருக்கும் அதே மொழிதான் சீமானிடம் இருப்பது.
            இடம்தான் வேறு நிறம்தான் வேறு.
            ஒருகாலம் வரும்….ரெண்டும் ஒன்று சேரும்.
            சாதாரண தொலைகாட்சி விவாதங்களில் கூட இந்த ஒற்றுமையை பார்க்கலாம்.
            மாற்று கருத்தாரை பேசவிடாமல் கொக்கரிப்பது.வலிப்பு வந்தவனைப்போல உடலை குலுக்கி ஆவேச வேகத்தில் கத்துவது.
            கொஞ்சமும் மரியாதை இன்றி எதிராளிகளை விளிப்பது….

            தோழர் அருணனை மிக மோசமான வார்த்தைகளால் பேசி அவமதித்ததை இன்று நினைத்தாலும் பத்திக் கொண்டு வருகிறது.

            இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அதே நாம் தமிழர் கட்சியின் ஒரு அரைவேக்காடு கமலுக்கு ஆதரவாக பேசும் ஒருவரை(கமல் ஆதரவாளரையெல்லாம் நாம் ஆதரிப்பதில்லை யாராக இருந்தாலும் பண்பு என்ற ஒன்று உள்ளதே)
            நீ…வா…போ….என்று ஒருமையில் விளித்து பேசுகிறான்
            தமிழின் மரியாதைக்குரிய வார்த்தைகள் பற்றிகூட அறியாமல் தமிழ் உணர்வைப் பற்றி பேசுகிறான்.
            இந்த லச்சணத்தில் உள்ளவன்தான் அத்தனை தமிழ் வேடம் போடும் பைத்தியமும்.

            திராவிட இயக்கம் செய்யாத சொல்லாத மாநில உரிமைச்சிந்தனையை இவனுங்க சொல்லிட்டானுங்க.
            இன்றைக்கு இருக்கிற திராவிட இயக்கத்தான் பதவிக்கும் பணத்திற்க்கும் கொஞ்சம் விலைபோனது உண்மை
            அதற்க்காக இந்த பைத்தியங்களை ஆதரித்தால் அது தமிழன் தன் கண்ணில் கொள்ளி கட்டையை சொருகி கொண்டதற்க்கு சமம்.
            ஏனெனில் இவனுங்க அத்தனை பேரும் ஒரு காலத்தில் பார்ப்பணிய மடியில்தான் சங்கமிக்க போகிறவன்கள்.

            பெரியாரை பெரியாரின் அசல் கொள்கையை பற்றிபிடித்தலே எங்களுக்கு போதுமான ஈடேற்றத்தை கொடுக்கும்
            பெரியசாமிகள் இங்கு வந்து குறுக்குசால் ஓட்ட வேண்டாம்

      • பார்ப்பனியம் தன் மீதான விமரிசனத்துக்கு பதில் சொல்ல வக்கற்று இந்த பிரச்னையில் முசுலிம்கள் மீது கற்பனையான குற்றங்களை சுமத்தி விவாதத்தை திசை திருப்புகிறது. வக்கீலுக்கும் உமா சங்கருக்கும் சொம்படிக்க “பிராம்ப்டா” ஆஜராவுது தமிழ் தேசியம். சும்மாவா சொல்றாங்க அது தமிழ் R S S என்று.

    • //ஆனால் இதே தவறை இதற்கு முன் பல இஸ்லாமியர்கள் செய்த போது//
      யாராக இருந்தாலும் அது கண்டனத்துக்குரியதுதான். இஸ்லாமியரின் தமிழ்ப்பற்றை சந்தேகிக்க இயலாது. இதுவும் RSSன் அவதூறு போல்தானா?
      தரவுகள் தர முடியுமா?

    • //இதே தவறை இதற்கு முன் பல இஸ்லாமியர்கள் செய்த போது, அனைவரும் அமைதியாக இருந்தனர்..
      இஸ்லாமிய கூட்டத்தில், தமிழ் தாய் வாழ்த்து பாட்டிற்கு மரியாதை செலுத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது எங்கே போனார்கள் இந்த போராளிகள்?//

      இது எப்போது எங்கே யாரால் நடந்தது உமாசஙகர்?
      விஜயேந்திரனுக்கு எதிராக திரளும் தமிழர்களின் ரோஷத்தை குறைக்கிங்களாக்கும்!
      இப்படி மடைமாற்றிவிட்டால் சங்கரமடத்து பதர்களை வேறு திசையில் குரைக்க வைக்கலாம் என்ற நினைப்போ….

      தேசியகீதமோ மாநிலகீதமோ இவைகளுக்கெல்லாம் ஒரு புனிதம் கொடுக்கும் பம்மாத்து எங்களுக்கில்லை என்பது உண்மைதான்.
      ஆனால் ஒரு போதும் தமிழை இழிவாகவும் வேறு எந்த மொழியையும் உயர்வு புனிதம் என்றும் கொள்கிற மடத்தனம் எஙகளிடம் கிடையவேகிடையாது.
      அந்த மேடையில் நடந்த அனைத்தும் ஒட்டுமொத்த மக்களின் தன்மானம் சுயமரியாதையை பதம் பார்த்த செயல்.

      ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு மட்டும் மேடைக்குள்ளேயே மேடை.அதுவும் தனியாக ஓரிடத்தில்.
      ஆளுனரே கலந்து கொள்ளும் ஒரு விழாவின் பாதுகாப்பை தாண்டி ,ஒரு துறவிக்கு ரெண்டு மெய்காவலர்கள் வேறு.
      மேடையில் வீற்றிருந்த அனைவரும் அவரிடம் காட்டும் பவ்யம் கலந்த பணிவு.

      தமிழ்த்தாய் வாழ்த்திற்க்கு எழுநது நிற்காதது அல்ல அசல் பிரச்சினை.அந்த விழா சூழலே அசிங்கம் நிறைந்த ஒன்று.
      அகங்காரம் நிறைந்த ஒரு மனிதனுக்கு அவன் அகங்காரத்தை அப்படியே ஏற்று அடிமை சாஸனம் எழுதிய மேடையே அந்த மேடை

      • மதத்தின் ஆட்சி எனும் கருத்தை கொண்டுள்ள
        நம்பிக்கையை ஏற்றுள்ள மீராபாய் மதவாதிக்கு மரியாதையா என கேட்பது முரண்பாடு , இதுவே அவரது மதகாரர் சம்மந்தப்பட்டிருந்தால் இவ்வாறு பேசமாட்டார் , அவர் மாற்றுமதம் என்பதால் மனம் போனபடி அவதூறு செய்கிறார்..

        • என் மதக்காரர் ஒருபோதும் மக்களை மேலோன் என்றும் கீழோன் என்றும் பிரிக்க மாட்டான்
          தான் சாமானிய மனிதனுக்கு அப்பாற்பட்டவன் என்றும் கருத மாட்டான்
          முஸ்லிம் மத தலைவனை எந்த முஸ்லிமும் காலில் விழுந்து தொழவம் மாட்டான்
          அவனுக்கு தெய்வாம்சம் பொருந்திய அருள் இருக்கிறது என்று நம்பவும் மாட்டான்
          அவன் கொலையே செய்தாலும் அதையும் நியாயப்படுத்தி அவனை பட்டு குஞ்சத்தில் அலங்கரித்து பல்லக்கிலும் சுமக்க மாட்டான்

          • எல்லாம் ஓகே ஆனால்,
            //என் மதக்காரர் ஒருபோதும் மக்களை மேலோன் என்றும் கீழோன் என்றும் பிரிக்க மாட்டான்//

            சவூதியில் பணியாளர்களை நாயினும் கேவலமாக நடத்தும் பன்றிகள் தங்கள் மதம் இல்லையா? அல்லது அது தனிமனித பிரச்சினையா? அல்லது சவூதி இஸ்லாம் வேறு இஸ்லாமா? அல்லது சவூதிகாரனுக்கு காசிருப்பதால் விதிவிலக்கா?

            • சந்தேகமே இல்லை…மிஸ்டர் சின்னா…நீர் அவனுக்களேதான்…
              டவுசர்களோடு குறிப்பாய் மணிகண்டன் என்ற சகோதரரோடு விவாதிக்கும் உணர்வு அப்படியே வருகிறது.
              நீர் தப்பி பிறந்தவரா அல்லது கம்யூனிஸ வேடம் தரிப்பவரா…
              காவிகள் எங்கும் மறைந்திருப்பர்.அல்லது யார் மண்டையிலும் குடியிருப்பார்.சின்னாவின் எழுத்து என் சந்தேகத்தை கூட்டுகிறது.

              ஒரு மடாதிபதி ஒரு விழாவில் பங்கேற்க்கிறார்.அதில் ஆளுன்ரே கலந்து கொள்கிறார்.
              அதில் தனக்கென்று ஒரு இருக்கை.ஒட்டுமொத்த விழா மன்றமும் ஒரு மரபை பின்பற்ற அதற்க்கும் எனக்கும் சம்மந்தமில்லை நான் தனித்தவன் எங்கென்று தனி வழி உண்டு என்று காட்டுகிறார்.அதில் கலந்து கொண்ட அனைவரும் அதை ஆமோதித்து அதை சப்பைகட்டு கட்டுகிறான்.அதைப்பற்றித்தான் விவாதம் நடக்கிறது.
              இதே மடத்தின் இன்னொரு ஆச்சாரி கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருப்பும்பொழுதும் வாழை இலையில் பேண்டு வைக்கிறார்.அவர் மலம்கூட மதிப்புமிக்கது என்று பார்க்கப்படுகிறது.அதை நாடும் சட்டமும் அனுமதிக்கிறது.இந்த கேவலங்களை பெசிக்கொண்டிருக்கிம்போது

              சம்மந்தமேயில்லாமல் சவூதியில் பணியாள்ர்களை கேவலமாக நடத்துகிறான் என்று இணைப்பதற்க்கு அசல் காவியாக இருந்தால்தான் சாத்தியம்.
              நான் என் கடை ஊழியர்களை கொத்தடிமையாய் நடத்தினால் என் மதத்தைதான் குறை கூறுவீரோ சின்னா
              பெயருக்கு பொறுத்தமாய் அறிவும் சின்னதுதான் போல….அதனால்தான் சின்னாவோ
              இஸ்லாம் என்பது சவூதியில் மட்டும்தான் இருக்கிறதோ..
              சவூதியும் அரேபியனும்தான் இஸ்லாத்த்கிற்க்கு அத்தாரிட்டியோ..
              இதற்க்கு பஜக கல்யாணராமன் பரவாயில்லையே…..இதில் நீர் கம்யூனிஸ்ட் வேறா
              சத்தமாய் சொல்லாதீரும்..கம்யூனிஸ்ட் காரன் இந்தியாவையே காலிபண்ணிட்டு போய்டுவான்.

              நான் நினைத்தது ” கம்யூனிஸ சிந்தனை உள்ள மனிதன்…சரியாய் நம் கருத்தை புரியவில்லை
              கொஞசம் விளக்கினால் விளங்கிவிடும் என்றுதான் நினைத்தேன்.
              இது என்ன வகை கம்யூனிஸ்ட் என்றே தெரியவில்லையே…
              காவியோடு சிவப்பு கலந்த புதுவகை கம்யூனிஸ்ட்டோ….
              கமல் காவியோடு கருப்பை கலந்த்ததுபோல இவர் காவியோடு சிவப்பை சேர்க்கிற புரட்சியாளர்போல…
              சின்னா…கம்யூனிஸ்ட்

              • மீரான் பாய் ,சின்னா பேசுவது கம்ம்யுநிசமும் இல்லல… அவர் சிந்திக்கும் முறையும் கம்யுனிச சித்தாந்தத்தை அடிபடையாக கொண்டதும் அல்ல… நீங்க சொல்றீங்க பாருங்க ஒரு விசயம்…..

                “”நான் என் கடை ஊழியர்களை கொத்தடிமையாய் நடத்தினால் என் மதத்தைதான் குறை கூறுவீரோ சின்னா””

                இதில் தான் விசயமே இருக்கு பாய்…! “தொழிலாளர் நலனை இஸ்லாம் புறம் தள்ளுதா?” என்று விவாதிக்க சந்தர்பம் கிடைத்து இருக்கு. எப்படியே இந்த விசயத்தில் நல்ல விவாதம் தொடங்கி இருக்கு! அடிச்சிகாம பேசுவோமே! நீங்க சொல்லுங்க பாய் இஸ்லாம் தொழிலாளர் நலனில் முன் நிற்கின்றது என்று. நான் வேண்டுமானால் ஒரு பாயிண்ட் எடுத்து தரேன்… உழைப்பாளியின் வியர்வை காயும் முன்னே கூலிய கொடு !

                • குமார் அவர்களே உங்கள் தெளிவான சிந்தனையை வரவேற்கிறேன்…
                  இந்த விவாதத்தின் தலைப்பு என்ன்வென்றே தெரியாமல் வேறு எங்கோ கொண்டு வந்து நிறுத்திய பேதமையை என்ன சொல்வது..

                  ஒரு அகங்காரம் பிடித்த சாமியார் சட்டமோ மரபோ சமூகமோ எதுவும் எனக்கு ஒரு பொருட்டல்ல…நான் அனைத்தையும் கடந்தவன் என்ற அகம்பாவத்தோடு நடந்த செயல்தான் இந்த பதிவின் தலைப்பு.
                  இது ஒரு விழாவில் நடந்த நிகழ்வல்ல…
                  இந்த சங்கரமடத்தின் இன்னொரு ஆசாரி கொலை குற்றவாளியாய் இருந்து நடந்து கொண்டதும் அதற்க்கு சட்டம் பணிந்து விழுந்து கிடந்ததும் உலகமே அறிந்து துப்பியது.
                  இவையெல்லாம் இந்த தலைப்பில் விவாதிக்கதக்க தொடர்புள்ள கருத்துகள்.
                  ஆனால் உமாசங்கர் என்பவரின் திட்டமிட்ட திசைதிருப்பலுக்கு பலியாகிவிட்டு பெரிய சிந்தனை சிற்பியை போல பேசி திரிகிறார் இந்த சின்னா…

                  ஜெயேந்திரன் பற்றிய விவாதத்தில்
                  இஸ்லாத்தில் தொழிளாலர் நலன் பற்றி பேச வைத்திருப்பது யாருடைய கைங்கர்யம்?

              • மீரன்சகிப்,
                என் மதக்காரர் ஒருபோதும் மக்களை மேலோன் என்றும் கீழோன் என்றும் பிரிக்க மாட்டான்
                என்ற வரிக்கே எனது மிக எளிய கேள்விகள் கேட்கப்பட்டன, இதில் எங்கே ‘சம்பந்தம்; இல்லாமல் போனது? விவாதத்தை இந்த நிலைக்கு கொண்டுவந்தது அட்வோகேட் எனினிமும் நீங்களும் உங்கள் மதத்தை தூக்கி பிடித்தீர்கள், ஆக என்னை கேட்க தூண்டியது.

                எப்படி எப்படிங்க, உங்களை சொன்னா உடனே சொல்பவரை காவி என்கிறதா? இதுக்கும் காவிகளை தாக்கினால் உடனே முஸ்லிமிடம் காசு வாங்கிகொண்டு குறைப்பதாக வழமையாக இங்கு புலம்புவர்களுக்கும் என்ன வித்தியாசம்? மறுபடியும் அவர்கள் போலவே நீங்களும் என்ற எனது கூற்றை உறுதிபடுத்துகிறது. இப்போது எழுந்து நிற்காத பயலை ஒருவாட்டி திட்டித்தான் உங்களிடம் கேள்வி கேக்கணுமா? எனது பின்னூட்டங்களை படிப்பவர்க்கு தெரியும் காவிஎதிர்ப்பில் எந்தளவுதீவிரமானவன் என்ற உண்மை. இப்போதும் ஏன் கேள்வியில் உறுதியாக இருக்கிறேன் – ‘என் மதத்துகாரார்’ என்று தெரியாமல் வெளியில் விட்டுவிட்டீர் போல. சவுதிக்காரன் வேறு என விலகி ஓடவேண்டாம். ‘என் மதத்துகாரர்.. என பெருமையாக துவங்கியது போல பதிலையும் மழுப்பாமல் சொல்லவும்.

                இல்லை வழமைபோல் victim card பாவித்து என்னை மீண்டுமொருமுறை காவி என்றுவிட்டு போகவும்.

                • திரு சின்னா,
                  நான் மீண்டும் சொல்கிறேன் உம்மை பெரிய நாடுநிலைநாயகன் என்று நினைக்க வேண்டும்
                  என்று பதறாதீரும்.
                  “மேலோன் கீழோன்” என்று நான் சொன்னதெல்லாம் ரொம்ப பிறகு..அதும் அட்வகேட்டின் திசைதிருப்பலுக்கு பிற்கு.
                  இதில் அட்வகேட் ஆரம்பத்தில் எந்த திருப்பலையும் செய்யவில்லை.உமாசங்கர் என்ற ஒருவர்தான் அவருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை நைச்சியமாக கக்கினார்.
                  அதை பிடித்துக்கொண்டுதான் நீர் தொங்கினீர்.

                  இது எதனால் வருகிறது என்றால்,
                  சமீபகாலமாக காவிகள், அவன் களின் காலித்த்னத்தை மடத்தனத்தை குத்தும்போதெல்லாம் “முஸ்லிமை சொல்வியா கிறிஸ்த்தவனை சொல்வியா”என்று சாதாரண பொது மக்களை உசுப்பேற்ற நினைக்கிறான்

                  இந்த ஆண்டாள் விவகாரத்திலும் எச்ச ராஜா, வைரமுத்தை கண்டிக்கிறேன் என்று
                  “முகம்மது நபியை பேசுவியா” என்றுதான் கேட்டது.

                  என்றைக்காவது முஸ்லிம்கள் மேடை போட்டு இந்து கடவுளர்களை திட்டியதாக செய்தி உண்டா..
                  எங்கள் நம்பிக்கைகளை நாங்கள் உரத்து சொல்வோம் பரப்புவோம் பின்பற்றுவோம்.
                  அடுத்த்வர்களை போய் பராண்டுவது எங்கள் செயலாக இருந்ததே இல்லை.
                  ஆனால் காவிக்கூட்டம் எவ்வளவு ஆபாசமாக எழுதுகிறான் கள் தெரியுமா…
                  கல்யாணராமன் என்ற தறுதலையின் முகநூலில் சொல்லமுடியாத ஆபாசத்தோடுதான் முகம்மது நபியை அவர் குடும்பத்தை அவன் காரணமே இல்லாமல் எழுதி வருகிறான்.

                  அவன் சூழ்ச்சி என்னவென்றால் பதிலுக்கு ஏதாவது ஒரு துலுக்கன் நம் கடவுளை திட்டமாட்டானா அதைக்கொண்டு மக்களை திருப்பிட மாட்டோமா என்ற நப்பாசை..
                  ஆனால் இதை புரிந்து கொண்டு யாரும் கண்டு கொள்வதுமில்லை.கொஞசம் விபரமில்லா இளைஞர்கள் கூட பதிலுக்கு அவனை ஆபாசமாய் தாக்கி முடித்துக்கொள்கிறார்களே அன்றி அவன் சூழ்ச்சிக்கு இரையாவதில்லை.
                  ஒரு நடுநிலைவாதி என்பவன், ஒரு மதமோ ஒரு கட்சியோ ஒரு அமைப்போ அல்லது தனி மனிதனோ இந்த சமூகத்திற்க்கு சமூக ஒற்றுமைக்கு சமூக முன்னேற்ற்த்திற்க்கு ஊறுவிளைவிப்பதாக ஊனப்படுத்துவதாக இருந்தால் அது யாராக இருந்தாலும் கண்டிக்க வேண்டும் பொங்க வேண்டும்.

                  ரெண்டு கட்சிக்கர்ரன் இருக்கிறான்.அதில் ஒருவனின் அட்டகாசமும் அக்கிரமும் எல்லை மீறுகிறது…
                  அனைவரும் கண்டிக்கிறார்கள்.அவன் தனக்கு எதிரில் உள்ளவனை கை காட்டி “அவனை மட்டும் ஒன்றும் சொல்லாமல் என்னை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்” என்று தப்பிக்க பார்த்தால்,”எவனால் ஆபத்து ஏற்படுகிற்தோ அவனைதானடா கண்டிக்க முடியும் “என்று சொல்வீர்களா..
                  சும்மா இருப்பவனையும் சேர்த்துவைத்து தோல் உரிப்பீர்களா…இதற்க்கு பெயர் நடுநிலை!
                  இஸ்லாமிய மதத்தில் இதுபோன்ற சட்டத்திற்க்கு அப்பாற்பட்ட துறவிகள் உண்டா..
                  அவன் கடவுளுக்கு சமமானவன் என்று நம்பும் மூடத்தனம் உண்டா..
                  ஒரு குறிப்பிட்ட மொழியே உயர்ந்தது மற்றது உச்சரிக்கவே பாவமானது என்று கருதும் ஆண்வம் உண்டா..
                  இவைதானே இன்றைய தலைப்பில் விவாதிக்க உகந்த விசயங்கள்.
                  இஸ்லாத்தில் உங்களுக்கு எதில் ஆட்சேபனையோ அதை விளக்க நாங்கள் தயாராய் இருக்கிறோம்.
                  அதைவிட்டு ஒன்றிலிருந்து மடைமாற்றி வேறொன்றிர்க்கு கொண்டுபோவதே தெரியாமல் பலியாகிவிட்டு இங்குவந்து மீசையில் மண் ஒட்டவில்லை என்று வழிந்து கொண்டிருப்பதில் உங்களின் பேத்தனம் பல்லிலிக்கிறது

                  • எனது பேத்தனமா அல்லது உங்கள் நரித்தனமா பல்லிளிக்கிறது என்பது படிப்பவர்க்கு தெரியும், இந்துத்துவா பற்றிய பதிவுகளிலும் அஅறிவியல் பற்றிய பதிவுகளிலும் மட்டும் வந்து பச்சையாக மதத்துக்காக கம்பு சுற்றிவிட்டு எதோ சமூக பற்று போல அளக்க வேண்டாம். முஸ்லிமை சொன்னிய கிறிஸ்தவனை சொன்னியா என்பது சமீப காலமாக காவிகள் செய்வதில்லை , காலங்காலமாக செய்கிறார்கள் எனது ஆட்சேபனை எல்லாம் ‘இஸ்லாத்தில்’ அது இது என்று இல்லை, மூலதனத்துக்கு ********* மதங்கள் என்பதே. அதற்கு சான்று கொடுத்த்தும் உடனே தனிமனித தவறு ஏன் மதத்தை சொல்கிறாய் என ஓடுகிறீர்கள், (எல்லாவற்றைம் போதிக்கும் ‘மார்க்கம்’ என்று பினாத்திவிட்டு கேள்விகேட்டவுடம் ‘மதம்’ என மாத்தி சொல்ல எப்பிடி சகோ முடிகிறது??)

                    சத்தியமா சொல்றேன் , இந்து – முஸ்லிமா பஞ்சாயத்து பனுவது ஏன் நோக்கம் அல்ல, ஆனால் அடுத்த மத நம்பிக்கையாளர்களை நக்கலடிப்பது இல்லை என புளுக வேண்டாம், உங்கள் ‘அறிஞ்சர்’ பெருமக்கள் கில்லாடிகள் அதில். தாம் எவ்வளவு முட்டாள் தனமா பெசுகிராம் என்பது புரியாமல் இன்னும் முட்டாள் கலை பார்த்து அவர்கள் சிரிப்பதை பார்த்து நான் சிரித்திருக்கிறேன், (நாம் தமிழர் பாணி விசிலடிச்சான் குஞ்சுகள் கை தட்டுங்கள்).

                    என்னிடம் போய் இந்துத்துவ முட்டாள் தனங்கள் எங்களிடம் உண்டா என கேகிரீர்?? அதை பத்தி அசக் என்பவருக்கு ஏற்கனவே உங்கள் பங்கு முட்டாள்தனங்களை பத்தி கேட்டாசு, இனி மேலும் இந்துத்துவ பதிவுகளில் மட்டும் வந்து எசைப்பாட்டு பாடாமல் கொஞ்சம் மற்றைய சமூக பிரச்சினைகள் பற்றிய பதிவுகளில்ம் உங்கள் கருத்தை தெரிவித்தால் இஸ்லாம் எந்தளவு மு’துவத்துக்கு ******** விடுகிறது என்பதை வாசகர்க்கு தெளிவுபடுத்த உதவியாய் இருக்கும் , செய்வீரா?

            • இந்த பாகுபாடுகளை செய்வது இஸ்லாம் என்ற மதமா அல்லது இது தொழிலாளர்-முதலாளி பிரச்சனையா?

              • குமார்,
                அடிப்படையில் அது வர்க்கபிரச்சினையாஇருந்தாலும், இவரின் ‘என் மதத்துக்காரர்..’ என்ற பெருமை பேச்சுக்காக கேட்டேன். இவர்கள் வழமையாக என்ன சொல்பவர்கள்?? – இஸ்லாம் மதமல்ல அது வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் போதிக்கும் ஒரு மார்க்கம் என்றல்லவா? மார்க்கம் இந்த சமதத்துவத்தை போதித்தால் ,இப்போது ‘மதம்’ என்று சொல்லி நழுவுவது ஏன் ? சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி மாறுமா இஸ்லாம்?? ஒரே கேள்விதான் ‘என் மதத்துக்காரர்’ என்று குடுமியை தெரியாமல் வெளியில் விட்டுவிட்டார், நீங்க முடிந்தால் உங்கள் இஸ்லாம-வர்க்கபிரச்சினையா குடுமி சண்டையை அவரிடம் போட்டு பதிலை பெறுங்கள். நானும் ஆவலாயிருக்கிறேன்.

                • சின்னா,
                  நீர் உம்முடைய விவாதிக்கும் கலையை இன்னும் மேம்படுத்திக்கொள்ளும்.
                  நானாக என் மதத்துக்காரர் என்று யாரையும் பீற்றிக்கொள்ளவில்லை.
                  வக்கீல்ரங்கராஜன் தான் ” உங்கள் மதத்துக்காரர் ” என்று நான் ஜெயேந்திரை பற்றி பேசியதற்க்கு குறிப்பிட்டார்.அதனால் அந்த வார்த்தையை கொண்டுதான் அவருக்கு பதிலடி தரமுடியும்.
                  என் மதத்துக்காரன் எல்லாம் குற்றங்குறை அற்ற மாணிக்கம் என்ற அர்த்தத்திலும் அந்த பதிவை நான் செய்யவில்லை.
                  ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு புனித நிலை கட்டி அவனை கோபுரத்தில் உயர்த்திவைக்கும் மடமும் எங்கள் மதத்தில் இல்லை.அந்த மடத்தனமும் எஙகள் மதத்தில் இல்லை
                  என்ற அர்த்த்தத்தில் குறிப்பிட்டதே ஒழிய ஒவ்வொரு மனிதனையும் உத்தமசீலனாக நான் சித்தரிக்கவில்லை.

                  நான் கேட் கிறேன் உம்முடைய தனிப்பட்ட குறைகளுக்கும் குற்றங்களுக்கும் உங்களின் கம்யூனிஸம் தான் பொறுக்கேற்க்குமா?
                  எவனோ ஒரு நாதாரி பொண்டாட்டியை கொடுமைபடுத்துவான்..ஊழியரை கசக்கி பிழிவான்
                  கடத்தல் பண்ணுவான் அவன் பெயர் இபுராகீமாகவோ இஸ்மாயீலாகவோ இருந்தால் அவனுக்கு இஸ்லாம் பொறுப்பேற்க்க வேண்டுமோ….
                  இப்படித்தான் காவிகள் வகைப்படுத்துவான் .அந்த குணத்தோடு இருப்பதால் காவி என் கிறேன்.

                  • நண்பரே, விவாதிக்கும் திறமையை விட முதலில் புரிந்துகொள்ளும் திறனை நீங்கள் வளர்த்துகொள்ளுங்கள். நான் சந்தேகபடுவது என்ன? அடிப்படையில் இந்துத்துவா பதிவுகளில் மட்டும் வந்து மெச்சும் உங்களை ‘எது நல்ல மதம் என நைசாக ஒப்பீடு செய்வதாக’ அட்வோகேட் சொல்வதை என்னால் மறுக்க முடியவில்லை. உங்கள் பின்னூட்டங்கள் அப்படி அம்மணமாக மதபிரசார நெடி கொண்டிருக்கிறது காவிகளுக்கு சற்றும் குறைவில்லாமல். இப்போதும் கூட வக்கீலின் தூண்டலில் சிக்கி மறுபடியும் உங்கள் மதபிரசாரத்தை தொடங்கிவிடீர்கள்.

                    ஆரம்பத்திலும் என்னை காவிகலந்த கம்யூனிஸ்ட் என்றீர், இப்போதும் //நான் கேட் கிறேன் உம்முடைய தனிப்பட்ட குறைகளுக்கும் குற்றங்களுக்கும் உங்களின் கம்யூனிஸம் தான் பொறுக்கேற்க்குமா?// என்கிறீர், இதற்கு பதில் –

                    நண்பரே கம்யூனிசம் தனிமனித பிரச்சினைகளுக்கு என்ன காரணங்கள் (பெரும்பாலும் மு.துவத்தில் வந்து முடியும்) விரிவாக விளக்கும், அதற்கு தீர்வும் உண்டு (தனிசொத்துடமை,வர்க்க, பண, அரசு ஒழிப்பு) அதை எவ்வாறு செயட்படுத்டுவது என்பது மார்க்க்சியம். இப்போது இசுலாம் முதாளிதுவதுக்கு சேவையே செய்து வருகிறது,
                    மன்னர் பெருமக்கள் பல மனைவி , பெருங்குட்ட்ரம் செய்தாலும் சிறு தண்டனை, உழைப்பில்லாத வாழ்க்கை ஆனால் ஏழை ‘இஸ்லாமியனோ’ அதே கடின வாழ்க்கை. உங்களை போன்ற ஒருவரிடம் கேட்ட்டால் ‘பல்லாக்கு தூக்குவது’ யாராம்??
                    இவ்வாறான பிரச்சினைகள் பற்றிய பதிவுகளில் உங்கள் வகையறாக்களை காணவே கிடைக்காது, ஆனால் இந்துதுவாய் திட்டி பதிவு போட்டால் மட்டும் டாண்ணு வந்து நைசாக குலவ வேண்டியது. இது தான் நண்பரே எனது பின்னூட்டங்களின் சாராம்சம். இப்போது நான் காவியா , காவி கலந்த கம்யூனிஸ்டா, இல்ல சுத்த கம்யூனிஸ்டா என மறு பரிசீலனை செய்யுங்கள் நேர்மை இருந்தால் பதில் அளித்து விட்டு.

                    • சின்னா
                      கடைசியாக தெளிவாக விளக்கிவிடுகிறேன்
                      நான்ங்கு வருடமாக நான் வினவில் பதிவிடுகிறேன்.என் பதிவுகள் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு தோழ்ர்களோடு விவாதித்தது இருக்கிறது.
                      நான் எப்பொதுமே பிற மதங்களை குறை கூறும் தலைப்புகளில்,அதில் நியாயம் இருந்தாலும் முந்திரிகொட்டையாய் உள் நுழைந்தது கிடையாது.அது சம்மந்தபட்டவர்களின் பிரச்சினை என்று அமைதி காத்திடுவேன்.

                      உமாசங்கரைப்போல சிலர் இழுத்துவிடுவார்கள்.இதுதான் சாக்கு என்று காவிகள் உடனடியாக ஆஜராகி உங்களைப்போலவே வேறு திசையில் இழுத்துச்செல்வார்கள்.
                      அப்போதுதான் நான் நுழைய வேண்டிய தேவை வரும்.
                      ஆண்டாள் பிரச்சினையில் “முகம்மத் நபியை பற்றி வைரமுத்து எழுத முடியுமா”என்று எச்ச ராஜா கேட்டதைப்போல
                      திக காரர்கள் கீதையையோ ராமனையோ பற்றிப்பேசினால், “கற்பில் சிறந்தவள் கதீஜாவா கன்னிமேரியா” என்று இந்து முன்ன்ணிகாரன் கூவுவதைப்போல..
                      இப்போது சொல்லும் உம்முடைய நிலை காவிகள் நிலையை ஒத்திருக்கிறதா…

                      நான் எக்காலமும் பிற நம்பிக்கைகளை குறை சொல்ல எக்காளமிட்டு உள்நுழைந்தே இல்லை.அந்த அவசியமும் எனக்கில்லை.என சமயம் சார்ந்த தெளிவும் ஆழ்ந்த நம்பிக்கையும் எனக்குண்டு பிறரை குறை சொல்லித்தான் எனதை நிலைநிறுத்த வேண்டும் என்ற தேவை எனக்கில்லை.அப்படியே நான் விவாதித்தாலும் அவர்கள் வழியில் என் வாதம் இருக்குமே அன்றி நான் எல்லை மீறி கண்ணியகுறைவாய் நடந்து கொண்டதே இல்லை.

                      திரும்ப திரும்ப இஸ்லாத்தில் குறை இருக்கிறது என்று காட்ட,
                      சவூதி, மன்னர், பல மனைவி என்று போகிறீரே,ஏன் பாகிஸ்தானை விட்டுவிட்டீர்.
                      ஒருவேளை பாகிஸ்தான் என்று சொன்னால் காவிகளை அப்படியே காப்பி அடிப்பதாக ஆகிவிடும்…நாம் வித்தியாசமான கம்யூனிஸ்ட் என்று காட்ட சவூதியோடு எங்களை தள்ளுகிறீரோ…

                      வினவுவோ கம்யூனிஸமோ என் கொள்கை அல்ல.
                      நான் ஒரு முஸ்லிம்.இஸ்லாத்தை முழுமையாய் ஏற்றுக்கொண்டவன்.சில பொதுவான பிரச்சினைகளில் நான் யாரோடும் இணைந்தும் இணங்கியும் சேர முடியும்.
                      எனக்கு கிறித்துவ நண்பன் இருப்பான் இந்து நண்பன் இருப்பான் நாத்திக நண்பன் இருப்பான் கம்னியூச நண்பன் இருப்பான் எதில் இணங்க முடியுமா எதில் இணைய முடியுமா அதில் இணங்கி இணைந்து வாழ்கிறோம்.
                      இதில் செலக்டிவ் என்பதற்க்கு எந்த அர்த்தமும் இல்லை.
                      அதேவேளை ஒப்பீட்டளவில் மற்ற எல்லா இஸங்களையும் விட கம்யூனிஸமும் அதையும்விட பெரியாரிசமும் இஸ்லாத்தோடு நெருங்கி வரும்.அதற்க்காக எதற்க்காகவும் என் கொள்கையில் நான் சமரசம் செய்து கொண்டு யாரோடும் இணைய மாட்டேன இப்படியே ஒரு கம்யூனிஸ்ட்டும் பெரியாரிஸ்ட்டும் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.இப்படி இருந்து கொண்டே மூவரும் நண்பர்களாய் இருக்க முடியும் என்றும் நம்புகிறேன். விவாதம் என்று வந்தால் கடுமையாய் கொள்கைரீதியாய் நாம் கருத்து யுத்தமும் நடத்தலாம்.அர்த்தமற்று கிளை தாவுவது விவாதத்தில் வராது.
                      ஒருவர் மடைமாற்றிவிட்டு போய்விட்டார் அதற்க்கு நீர் பலியாகிவிட்டீர்.
                      அதை ஒத்துக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தலைப்பிற்க்கு தொடர்பற்று, ஏகாதியபத்திற்க்கு கால் நக்கும் சவூதிகாரனையும் அவன் வாழும் வாழ்க்கையயும் என்னிடம் வந்து சொல்லி நேரத்தை வீணாக்காதீர்.
                      உழைப்பாளர் நலன் பற்றி இஸ்லாத்தின் நிலை வேண்டுமா பேசலாம்.
                      கண்டிப்பாக இதே வினவில் அது சம்மந்தமாயும் கட்டுரைகள் வரலாம்.
                      வினவோடு நான் உடன்பட்ட பல விஷயங்களும் உண்டு( பிற மதத்தை தாக்கும் கருத்தை சொல்லவில்லை )கடுமையாய் முரண்பட்டதுகளும் உண்டு.
                      சில கம்யூனிஸ்ட்டுகள் மிகக்கடுமையாய் இந்துத்துவர்களை தனிப்பட்டு தாக்கும்பொழுது உடனே நான் கண்டித்து பதிவிட்டதும் இதே வினவில் இருக்கிறது.
                      என்னோடு விவாதித்த தோழர்களுக்கு தெரியும்.

                      நான் மீண்டும் சொல்கிறேன் உமாசங்கர் மட்டும் ஒரு பொய்யை கொண்டு திருப்பி இருக்காவிட்டால் இந்த பதிவிற்க்கு நான் வந்தே இருக்க மாட்டேன்.
                      எச்ச ராஜா புத்தகமும் ஜெயேந்திரனின் வருகையும் எனக்கு அவசியமே இல்லாத ஒன்று

                    • நீங்க கடைசியா வெளக்குரன் கழுவுறன்ன்னு அரைத்த மாவையே (playing victim card) அரைக்கிரீர்.

                      //ஆண்டாள் பிரச்சினையில் “முகம்மத் நபியை பற்றி வைரமுத்து எழுத முடியுமா”என்று எச்ச ராஜா கேட்டதைப்போல
                      திக காரர்கள் கீதையையோ ராமனையோ பற்றிப்பேசினால், “கற்பில் சிறந்தவள் கதீஜாவா கன்னிமேரியா” என்று இந்து முன்ன்ணிகாரன் கூவுவதைப்போல..
                      இப்போது சொல்லும் உம்முடைய நிலை காவிகள் நிலையை ஒத்திருக்கிறதா…//

                      நான் அப்படியா கேட்டேன்?? அப்படி கூவிய ஒருவரின் கருத்து பற்றிதானே இந்த விவாதமே நடக்கிறது, அதை விடுத்து அவசர அவசரமாக எனக்கு காவி பூசுவதில்யே குறியாக உள்ளீர். மறுபடியும் நண்பரே இஸ்லாத்தில் குறை காட்டுவதற்கு சவூதிகாரனை குறித்து சொல்லவில்லை, பொதுவாக மதங்களின் கண்துடைப்பையும் அதிலும் எல்லாவற்றிட்டுக்ம் தீர்வு சொல்லும் அற்புதம் எனும் பினாத்தலையும் சற்று சவால் விட்டு பார்த்தென், வழமை போல் மதத்தை தூக்கிவைக்க வந்துவிட்டு அதை ஒருவர் விமர்சித்தவுடன் பிளேடை திருப்பி போடுவது.

                      பி-கு
                      கம்யூனிசம் பெரியாரிசம் போன்றவைக்கும் இசுலாதுக்கும் வெகுதூரம் நண்பரே. ஒரு பேச்சுக்கு இப்போது இந்தியாவில் இசுலாமிய ஆட்சி அமைந்தால் காவிகளை விட முதலில் பிராண்டபட போவது நாமென்றும் தெரியும் நண்பரே.

      • நீர் இந்து மதம் பற்றிய விவாதத்தில் வலியவந்து கலந்து கொண்டு இந்து மதத்தை இழிவுபடுத்தியும் நைசாக உமது மதத்தை உயர்த்தி பேசிவருவதற்கும் காரணம் உமது மதமாற்ற ஆவேசமே..

        இனிதமிழக மசூதிகளில் தமிழில் தொழுகைக்கு அழைத்து தமிழில் வழிபாடு செய்வீரா?..

        • வக்கீல் ரங்கராஜன் இதுமாதிரி கேள்விகேட்டு மடக்குவதாக நினைத்துக்கொள்வார்.இதற்க்கு சின்னா மாதிரியான காவிகலந்த கம்னியூஸ்ட்டும் வந்து ஒத்து ஊதுவார்.பெரியசாமி போன்ற தமிழை தலையில் தூக்கிவைத்து காப்பாற்றும் ஒப்பற்ற தமிழ்போராளியும் நாளை வந்து ஊளையிடுவார்.

          முதலில் முஸ்லிகளின் வழிபாட்டுமுறை எப்படிபட்டது என்பதை பள்ளிவாசல்களில் சென்று பார்வையிடுங்கள்.

          தொழுகைக்காக முஸ்லிகள் நின்று குனிந்து பிற்கு சிரம் பணிந்து செய்யும் வழிபாடு ஒருவரின் தலைமையில் நடக்கும்.தலைமை ஏற்பவர் அரபி மொழியில்தான் குரானுடைய சில வசனங்களை ஓதுவார்.
          முஸ்லிம்கள் யாருக்கும் அரபி தெரியாது(அரபியரை தவிர)தொழுகைக்கான அந்த அத்தியாங்களை மட்டும் சிலர் மனனம் செய்திருப்பர்.அரபி என்ற மொழி உயர்ந்தது என்றோ அது புனிதமிக்கது என்றோ எந்த முஸ்லிமும் கருதமாட்டான்.குரான் அரபி மொழியில் இருக்கிறது.உலகளாவிய ஒரு சமயத்தின் வழிபாட்டு முறையை குரானுடைய சில வசனங்களை ஓதி நடத்துகிறார்கள்.

          ஜெயேந்திரர் தியானம் செய்யாமல் எழுந்து நின்றாரே ,தேசியகீதத்திற்க்கு! அந்த மொழி என்ன தமிழா சமஸ்கிருதமா..
          வங்காள மொழி உயர்ந்தது என்றா ஜனகனமன தேசியகீதமாய் ஆக்கப்பட்டது?
          தேசியகீதத்தை அவரவர் மாநில மொழியில் மொழிபெயர்த்து பாடமுடியுமா…
          அப்படி பாடினால் அது தேசியகீதம் என்று ஆகுமா…
          தேசியத்திற்க்கு என்ற அடையாளம்தானே தேசியகீதம்.கடைகோடி இந்தியனும் அடையாளம் காணும் பொருட்டும் ,அவனை ஒன்றிணைக்கும் பொருட்டும்தானே நமக்கு சற்றும் தொடர்பற்ற ஒரு மொழியை தேசியகீதமாக்கி அதற்க்கு அனைவரும் மரியாதையும் செய்கிறோம்.
          இதுதான் தொழுகையில் சில குரானுடைய வசனங்களை அரபிமொழியில் ஓதி தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.

          லண்டனிலும் அரபிதான் ஜெர்மனியிலும் அரபிதான் மலேசியாவிலும் அரபிதான் மன்னார்குடியிலும் அரபிதான்.
          அரபி உயர்ந்தது என்று அல்லவே அல்ல.இறைவனுக்கு அரபிதான் பிடிக்கும் என்றும் அல்ல.
          தொழுகை முடிந்து அவரவரின் வேண்டுதல் அவரவர் தாய் மொழியிலேயே இருக்கும்.
          தமிழ் நாட்டு முஸ்லிம்களாகிய நாங்கள, தொழுகை என்றும் பள்ளிவாசல் என்றும் நோன்பு என்றும் பெருநாள் என்றும் அழகிய தமிழிலேயே எங்களின் வழிபாட்டு வார்த்தைகளைக்கூட வைத்திருக்கிறோம்.
          நமாஸ், மசூதி ,விரதம் ரம்ஜான் என்பதெல்லாம் எங்களுக்குள் நாங்கள் சொல்லிக்கொள்கிற வார்த்தைகளே அல்ல.
          சோறு புளியானம் கறியானம் மீனஆனம் பசியாற இவைதான் எங்கள் வீடுகளுக்குள் புலங்கும் வார்த்தைகள்.
          சாதம் ரஸம் சால்னா நாஸ்டா இவைகளெல்லாம் எங்களுக்கு வெளியில் இருந்து கேட் கிற வார்த்தைகள்.

          • நீங்க அட்வோசெட் மற்றும் பெரியசாமி கூட என்னநாளும் பெசிகொல்லுங்க, நான் நேரடியாக கேட்ட கேள்விகளுக்கு எந்த முசிலிமும் ஒழுங்காக பதில் அளித்ததில்லை, அதை விட்டு வீணாக என்னை இந்துதுவாவுக்கும் தமிழ் தேசியதிற்கும் ஒத்து ஊதுவதாக சொல்லவேண்டாம். அது நீங்கள் வினவை செலக்டிவ் ரீடிங் பண்ணுவதையே காட்டுகிறது. ஒழுங்காக கொஞ்சம் மற்றைய சமூக பிரசினைகளையும் அதற்கு காரமான மு.துவதுக்கு மதங்கள் துணைபோவதை உணர்ந்தால் வீணாக ஏன் மீது பழி போடா மாட்டீர்.

            • “முற்போக்குதுவத்தின்”தளகர்த்தரே, நான் “முட்டாள்துவத்தின்”பிரதிநிதி பேசுகிறேன்…
              நீங்கள் எந்த கேள்வியை கேட்டு எந்த முஸ்லிம் பதிலளிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
              ஒன்றை பேசிக்கொண்டிருக்கும் போது தொடர்பற்று வேறு ஒன்றை பேசக்கூடியவராக நீர் இருப்பதால் குழம்பிபோய் உம்முடைய கேள்வியை அந்த முஸ்லிம் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறி இருப்பாரோ என்னவோ

              அதுமட்டுமில்லாமல் ஒரு முற்போக்குவாதியின் பேச்சு முஸ்லிம் தற்குறிகளுக்கு அவ்வளவு எளிதில் விளங்கியும் இருக்காது.
              நான் வேண்டுமானால் கொஞசம் முயற்ச்சித்து பார்ர்க்கிறேனே கேளுமே..

        • சின்னா…
          இன்னும் தவறை ஒப்பும் மனம் வரவில்லை இல்லையா..

          காவிகளுக்கென்று ஒரு குணம் உண்டு.இதை தொலைகாட்சி விவாதங்களிலும் பார்த்திருக்கலாம்.
          இந்த வினவு விவாதங்களிலும் பார்க்கலாம்.தனிப்பட்ட முறையில் சிலரோடு விவாதிக்கும் பொழுதும் நான் கண்டிருக்கிறேன்
          ஒன்றைப்பற்றி பேசினால் அதற்க்கு தொடர்பே இல்லாமல் வேறு ஒன்றை கூறி திருப்பி சபை குழப்பி ,விவாதம் என்பதை ஒரு சண்டை கூடமாய் ஆக்கி கிளம்பி விடுவது.

          ஜெயேந்திரன் ஒரு மதவாதியாக இருக்கலாம்.ஆனாலும் இங்கே மதங்களைப் ப்ற்றி நாம் விவாதிக்கவில்லை.
          ஜெயேந்திரன் என்ற ஒரு தனி நபர் ஒரு அரங்கில் அதும் ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் தனக்கென்று தனி மரியாதையாய் அகங்காரத்தோடு நடந்து கொண்டதே விவாதம்.
          நான் மீண்டும் சொல்கிறேன்…. இந்த நிகழ்வுக்கு நான் கருத்து சொல்ல முனையவில்லை.
          அந்த விழா அது நடந்த காரணம் எனக்குத்தேவையே இல்லாத ஒன்று.

          இதைப்போலவே ஒரு முஸ்லிம் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டு அதில் ஆளுநர் போன்ற ஆட்சி பிரமுகர் கலந்து கொண்டு அதில் தமிழ்தாய் வாழ்த்தோ அல்லது தேசியகீதமோ பாடப்பட்டு அதில் ஒரு முல்லா, கல்லுசாமியாராய் உட் கார்ந்து கொண்டு அல்லது அந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் உட் கார்ந்து அவமதித்த நிகழ்வின் ஆதாரம் இருந்தால் அதை சுட்டிக்காட்டி பேசலாம்.

          எந்த அர்த்தமும் இல்லாமல் ஆதாரமும் இல்லாமல் ஒரு பொக்கரிப்பு மனம் கொண்ட ஒருவர் கொளுத்திப்போடுகிறார் அதை பிடித்து தொங்கி கொண்டு கிளைத்தாவி
          “மதங்களின் கண்திடைப்பு, பினாத்தல் ” என்று எதற்க்கு சப்பைகட்டு கட்டுகிறீர்.இதுதானே காவி கைங்கர்யம்.கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டால் “காவித்தன்ம்” மாறிவிடுமா….

          கம்யூனிஸமும் பெரியாரிஸமும் இஸ்லாத்தோடு ஒட்டியது என்று நான் ஒன்றும் சான்றளிக்கவில்லை.
          அனைத்தையும் இறைவனை முன்னிறுத்தியதாக இருக்கிற இஸ்லாம் எப்படி நாத்திகத்தை ஒத்திருக்கும்?
          சில உலகியல் நடைமுறைகளில் மற்ற மற்ற மதங்கள் இஸங்களைவிட இஸ்லாத்திற்க்கு இவை இரண்டும் ஒப்பீட்டளவில் கொஞசம் ஒற்றுமையை கொண்டிருக்கின்றன
          என்றுதான் சொல்கிறேன்.
          “நான் கம்யூனிஸ்ட் நான் நாத்திகன்” என்று கூவினால் நீர் உடல் முழுக்க மூளை கொண்டவர் என்று தனக்குத்தானே பெருமை கொண்டிராதீர்.உம்முடைய விவாதத்திறனே உம்மை தெளிவாய் அடையாளம் காட்டுகிறது.

          • கேப்ல கடைய விரிக்கதிங்கன்னு அடையாள படுத்தினா தவறா? அப்ப ஒத்துகொள்கிறேன் நான் ‘தவறு’ தான் செய்துவிட்டேன். நானும் சொல்கிறேன் இப்போது மதத்தை பற்றி விவாதிக்கவில்லைதான், ஆனால் அட்வோகேட்டின் தூண்டிலுக்கு வாயை குடுத்து மதவெறியை வெளிப்படுத்திவிட்டீர்., அதை கடவுள் மறுப்பாளன் என்ற ரீதியல் சுட்டிகாட்டினேன், நீங்க தெரிந்தோ தெரியாமலோ உங்கள்ம தத்தை promote பண்ணும் வேலையை செய்கிறீர்கள்.

            //கம்யூனிஸமும் பெரியாரிஸமும் இஸ்லாத்தோடு ஒட்டியது என்று நான் ஒன்றும் சான்றளிக்கவில்லை.
            அனைத்தையும் இறைவனை முன்னிறுத்தியதாக இருக்கிற இஸ்லாம் எப்படி நாத்திகத்தை ஒத்திருக்கும்?
            சில உலகியல் நடைமுறைகளில் மற்ற மற்ற மதங்கள் இஸங்களைவிட இஸ்லாத்திற்க்கு இவை இரண்டும் ஒப்பீட்டளவில் கொஞசம் ஒற்றுமையை கொண்டிருக்கின்றன//

            அடிப்படை காரணியில் (கடவுள்) முரண்பட்டுக்கொண்டு எப்படி பெரியாரிசம்-கம்யூனிசம் இசுலாதோடு ‘கொஞ்ச ஒற்றுமை’ யை கொண்டிருக்கும்? அப்படியே அந்த ஒற்றுமை genuine ஆக பயனுள்ளதாக இருக்குமா? புரியலியா ?

            உதரணத்துக்கு இந்து மதத்தின் சாதிபாகுபாட்டை நாய்பீ என்று எடுத்து கொள்ளுங்கள், இப்போ நாய் பீயை பார்த்தாலே தெரியும் அது என்னவென்று. உங்கள் இசுலாம் போதிக்கும் ‘சமத்துவத்தையும்’ (போதிக்கும் என்றுதான் சொன்னேன், நடைமுறைகள் எப்படி என மனசாட்சியோடு சிந்திக்கவும்) கம்யூனிசம் பெரியாரிசம் போதிக்கும் சமத்துவத்தையும் சுண்ணாம்பு மற்றும் தயிரின் வெண்மைக்கு ஒப்பிடலாம், அந்த ஒற்றுமைக்காக இரண்டும் ஏதாவது ஒரு பிரயோசமான புள்ளியில் இணைய முடியுமா?? முடியாது. ஏனெனில் இரண்டும் அடிப்படையில் வேறுபட்டவை நண்பரே.

            எனக்கு உடல்முழுக்க மூளை என்று பெருமை இல்லைங்க , எதோ இருக்கிறத யூஸ் பண்றேன்.

            • //ஆனால் அட்வோகேட்டின் தூண்டிலுக்கு வாயை குடுத்து மதவெறியை வெளிப்படுத்திவிட்டீர்.,//

              மதப்பிரச்சாரமென்று திருத்தி கொள்ளலாமே சின்னா!

              • கார்திகேயன்..
                நான் ஒரு சமயம் சார்ந்தவன் அதில் பற்றும் கொண்டவன்.இதை நான் மறைக்கவும் இல்லை.
                மறுக்கவும் இல்லை.
                நான் திரும்பவும் சொல்கிறேன்….வேறு சமயம் சார்ந்த நம்பிக்கையை நான் இகழவோ அவமதிக்கவோ இல்லை.
                ஜெயேந்திரனின் செயல்பாட்டை விமர்சித்த கட்டுரை.அதற்க்கான மறுமொழி.
                இதில் தேவையற்று ஒரு பொய் எதற்க்கு…அதற்க்கு ஒத்தூதும் தேவையதற்க்கு..

                அதுவும் நம் “பேரறிஞர்”சின்னா “இருக்கும் நடந்திருக்கும் ” என்று அந்த பொய்யை ஆமோதித்து வருகிறார்..
                பொய்யை இவருக்கு எடுத்து கொடுத்தவரையும் அதன் பிறகு காணோம்..
                அதற்க்கு சப்பு கொட்டிய “தமிழ் தாங்கி”பெரியசாமியையும் காணோம்..
                இவர் மட்டும் அட்டைகத்தியில் சண்டை போட்டு திரிகிறார்.
                என் மதம் சார்ந்து தேவையில்லாமல் எங்களை விமர்சித்தால் என் பதிலும் மதம் சார்ந்துதானே இருக்கும்.
                நான் என்ன கம்யூனிஸ்ட் என்றா நடித்து திரிகிறேன்..
                என் பெயரும் நான் கு வருடமாக என் பதிவுகளும் நான் அழுத்தமான் இஸ்லாமிய நம்பிக்கை உள்ளவந்தான் என்பதை ஒளிவு மறைவு இன்றி வெளிப்படுத்தித்தான் வருகிறது.

                ஜெயேந்திரன் விவாகாரத்தில் சம்மந்தமே இல்லாமல்,” எங்கள் மதத்தில் இப்படியெல்லாம கிடையவே கிடையாது எங்கள் மதம் எப்படி தெரியுமா..”

                இப்படியெல்லாம் நான் ஆரம்பித்தேனா…
                அப்படி இருந்தால்தானே “மதவெறி “என்று அவர் சொல்லலாம்
                நீங்கள்” மதப்பிரச்சாரம்” என்று திருத்தலாம்.அப்படியெல்லாம் எதுவுமே நடக்கவில்லையே கார்த்திகேயன்.
                நீங்களாகவே ஒன்றை ஆரம்பித்து அதை வளர்த்து அதற்க்கான விளக்கத்தை நான் கொடுத்தால் , ஒருவர் மதவெறி என் கிறீர்கள்…இன்னொருவர் “மதப்பிரச்சாரம்”என்று திருத்துகிறீர்கள்..
                என்ன ஆச்சு…இது எந்த வகை..

                • மீரன்பாய், உமாசங்கரும் பெரியசாமியும் பச்சை பொய்யர்கள் என்றே வைத்துகொள்வோம், இப்போது விவாதம் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து உங்கள் மதப்ரோமோசனுக்கு தாவியாச்ச்சு (உங்களுக்கும் அட்வோகேடிடிகும் நன்றி)

                  அதனால் விலகி ஓடாமல் எப்படி மதத்தை தூக்கி பிடித்தீரோ அதே போல் பதிலகளையும் கூறவும், கேட்டால் சவூதி வேறு, இஸ்லாம் வேறு, மொட்டையாக கேட்கிறார் அது இது என்று பினாத்தல்கள். இப்பொது புரிகிறது நேரடி விவாதங்கள் இப்படியான திறமைகளுக்கு நல்ல வாய்ப்பு.

                  //எங்கள் மதத்தில் இப்படியெல்லாம கிடையவே கிடையாது எங்கள் மதம் எப்படி தெரியுமா..”இப்படியெல்லாம் நான் ஆரம்பித்தேனா//

                  அப்போ இது என்னங்க?, அட்வோகேட்டிட்கு பதில் என்னும் போர்வையில்,

                  /என் மதக்காரர் ஒருபோதும் மக்களை மேலோன் என்றும் கீழோன் என்றும் பிரிக்க மாட்டான்/

                  மேட்கண்ட கூற்றுக்கு எனது பதில் 2௦ நன்றாக விளக்குகிறது. அதற்கு பதில் ஏதுமில்லை, விவாதத்திற்கு சம்பந்தம் இல்லை என விலகி ஓடவேண்டியது. தெரியாமல் வாயை குடுத்தால் பதில சொல்லித்தான் ஆகவேண்டும்.

                  இறுதியாக நண்பர் கார்த்திகேயன் காரத்தை குறைக்கலாமே என்ற அறிவுரையின் பேரில் திருத்தினேன், எனினும் உங்கள் மறைமுக மதபிரசாரத்தின் ஊற்று மதவெறியே என உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.

                • மீரான் பாய்,
                  உங்கள் வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன். நண்பர் சின்னாவின் வேகத்தை கட்டுப்படுத்தவே மதவெறியில்லை பிரச்சாரம் என ஆலோசித்தேன். அது உங்களை பாதித்திருந்தால் வருந்துகிறேன்.

                  சின்னா நண்ப,
                  மீரான் பாயின் விளக்கங்கள் எனக்கு சரியாகவே படுகிறது. இஸ்லாம் மதம் மற்றும் மதவெறி ஆகியவற்றை பிறிதொரு சரியான இடத்தில் விவாதித்துக்கொள்ளலாமே! தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை செய்யாத விஜயேந்திரனை விமர்சிக்க தமிழராகிய மீரான் பாய்க்கு சகல உரிமையும் உண்டு என்பதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது என நம்புகிறேன். அவர் மத நம்பிக்கையாளராக இருக்கட்டுமே! அதேநேரத்தில் அவர் மதத்திலிருக்கின்ற மதவெறியர்களை நிச்சயம் கண்டிப்பார் என நம்புவோமாக! அத்தகைய ஒரு நேசசக்தியாக அவரை கொள்ளலாமே!
                  இன்று இந்தியாவில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் தாக்குதல்கள், அவர்களின் மன வேதனைகள் மற்றும் உளைச்சல்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா?

                  • நண்பரே, ஆம் ஒட்டுமொத்த மனிதகுலதுக்காக யோசிக்கும் கம்யூனிச சிந்தை மீரானின் மறைமுக மத புரோமோசனை கூட ஒதுக்கி விட்டு அனைத்து போக சொல்கிறது, ஆனால் இவர் விஜயேந்திரனை விமர்சிப்பது விமர்சிக்காதது பற்றியல்ல எனது வாதங்கள், இவர் ஒரு ஒற்றை வரியை வெளியில் விட்டுவிட்டார் //என் மதக்காரர் ஒருபோதும் மக்களை மேலோன் என்றும் கீழோன் என்றும் பிரிக்க மாட்டான்//
                    என்று. அதுவே போதும் வினவு தளம் தொடங்கிய நாளில் இருந்து இவர் வகையறாக்கள் என்ன செய்ய முயற்சிப்பவர்கள் என அனைவருக்கும் தெரியும், என்ன ஆரம்பத்தில் வெளிப்படையாக சந்தர்ப்பவாத சமூக அக்கரையை இந்துத்துவா பதிவுகளில் மட்டும் வந்து வெளிப்படுத்துவார்கள், இப்போது மிக நைச்சியமாக முயன்றும், மாட்டிவிட்டார் பாய்.

                    //அத்தகைய ஒரு நேசசக்தியாக அவரை கொள்ளலாமே!
                    இன்று இந்தியாவில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் தாக்குதல்கள், அவர்களின் மன வேதனைகள் மற்றும் உளைச்சல்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா?//

                    நாம் தான் அவ்வாறு அக்கறைபடுகிறோம் தோழரே, இஸ்லாத்தின் ‘மனித குலத்தின் ultimate’ நோக்கம் பற்றிய விளக்கம் தெரியுமா? அதாவது உலக வாழ்கையே சோதனை களமாம், அதிலும் குறிப்பாக பொருளாதார ஏற்ற தாழ்வுகள் ஒவ்வொருவரையும் சோதிப்பதற்காம், இப்போது சொல்லுங்கள் சமதுவதுக்காக போராடும் நாமும் ஏற்ற தாழ்வை இறைவன் கொடுத்தது என நம்பும் மூடர்கூட்டமும் நேசசக்திகளாக இருக்க முடியுமா? இப்போதும் மீரன்பாயை இதை மறுத்து சொல்ல சொல்லுங்கள், அவர் உண்மையிலேயே இங்கு மதபிரசாரம் செய்யவில்லை என நான் மன்னிப்பு கேட்கிறேன்.

      • They used to say that a particular protocol to be followed in functions in which Governor is participating.Why such protocol was not followed in this stage?How it was permitted to have separate dais for the Sankara Mutt’s deputy chief?

    • அல்லாவை தவிர வேறு எதையும் வணங்க கூடாது என்ற இசுலாமியர்களின் விதியை சில தீவிர உலமா மெண்டல்கள் இவ்வாறு பிரிவினையை தூண்டும் விதம் சொல்லியிருக்கலாம். அவர்கள் தான் எல்லா இசுலாமியர்களுக்கும் ‘நம்ம’ ‘நம்ம’ என்று பிரித்து பழக்குபவர்கள். இந்த வீரம் எல்லாம் காட்டமுடியும், வானரங்கள் வெறியாட்டம் போட்டால் குசு சத்தம் கூட வராது, அதுக்கும் நாம்தான்.

      யாரும் வணங்க சொல்லவில்லை, மரியாதையை செலுத்த தான் எழுந்து நிற்பது. இந்த அவமரியாதை யார் செய்தாலும் செருப்பால் அடிக்கவேண்டும்.

      • வந்துட்டாரு…”மரியாதைக்கு”மரியாதை செய்யும் மரியாதைக்குரியவர்.
        அல்லாவைத்தவிர எதையும் வணங்ககூடாது என்பதற்க்கும் பிரிவினையை தூண்டுவதற்க்கும் என்ன சம்மந்தம்?
        எழுந்து நிற்க கூடாது அல்லது எழுந்து நிற்கமாட்டோம் என்று நான் எங்கேயாவது சொன்னேனா…

        மொழிக்கோ மொழி சார்ந்த பாட்டிற்க்கோ புனிதம் என்ற ஒன்றை கொடுப்பதை நாங்கள் ஆதரிப்பதில்லை என்றுதான் சொன்னேன்.
        இந்த புனித படுத்துவதுதான் அப்படியே வளர்ந்து மாடு ஆடு பன்றி என்று எதுதான் புனிதம் என்று தெரியாத அளவிற்க்கு போய் கடைசியில் மாட்டிற்க்கெல்லாம் வெட்டிக்கொண்டு சாவதுவரை போகிறது.

        எழுந்து நிற்பதை வணக்கம் என்றும் நான் கருதவில்லை.எழுந்து நிற்க மாட்டோம் என்றும் நான் கூற்வில்லை.
        அதற்க்காக ஜெயேந்திரன் காலில் விழுவதையும் மரியாதை என்று கூறி விழமாட்டேன்.
        இது பிரிவினை என்றால் நான் பிரிவினைவாதியே…

        • உள்ளுக்குள் மதவெறி ஊறி இருந்தால் இப்படித்தான் கண்மண் தெரியாம பேசசொல்லும்,
          மீரன்சகிப்,

          முதாலவது,
          நான் அந்த பின்னூட்டம் எழுதும்போது உங்கள் பின்னூட்டம் வினவால் 9.3 போடபடவேயில்லை, எனது கருத்து உமா சங்கரின் கருத்தை பற்றியதே. முதல் பத்தியின் இறுதி வரிகள் உண்மையை உரைப்பதால் கொஞ்சம் உறைத்து விட்டது போல.

          இரண்டாவது,
          அல்லாவை தவிர எதையும் வணங்ககூடாது என்பதை சில தீவிர கூட்டம் சேர்க்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள இசுலாமிய ‘அறிஞ்சர்கள்’ திரித்து மற்றைய காலாச்சரங்களை வெறுக்கும் விதம் பேசுபவர்கள் (மொட்டையாக சொல்வதென்றால் நேற்றுதான் மதம் மாறியிருப்பான் ஒரு தமிழன், அவனையே அரேபிய வழிதோன்றல் என்னும் மனநிலைக்கு இட்டுசெல்வது போல)

          ஒருவனே இறைவன், இறைவன் என்று ஓவியங்கள் கூட வரையாமல் இறைவனை abstract ஆக வணங்கும் இசுலாத்தை மெச்சுபவன் நான் (இறைமறுத்தாலும்). சபை நாகரிகம் எழுந்து நிற்பது எப்படி தமிழை ‘புனித’ படுத்துவது ஆகும்? எழுந்து நிற்கவில்லை என்றால் ‘அரேபிய வழிதோன்றல்’ மனநிலை உறுதி செய்யப்படும். உமா சங்கர் கூறுவது உண்மைதான், இரகசிய ‘தனித்துவம்’ போதிக்கத்தான் படுகிறது.

          • எனக்கு மதவெறி கண்ணை மறைக்கவில்லை.மறைக்கவும் செய்யாது.வெறிபிடித்தால்தானே மறைக்கும். உமக்குத்தான் “முற்போக்கு” மூளை முற்றி வழிகிறது.
            எழுந்து நிற்பதை வணக்கம் என்று நம்பவும் இல்லை.எழுந்துநிற்க மாட்டோம் என்று நான் உரைக்கவுமில்லை.
            அப்படியிருந்தும், “ஓவியங்கள் கூட வரையாமல் இஸ்லாத்தை மெச்சுபவன் அரேபிய வழித்தோன்றல்”
            இந்த தேவையற்ற வார்த்தை பயன்பாடு ஏன்?
            உமாசஙகர் என்பவர் மிக திட்டமிட்டு திசை திருப்ப முயற்சிக்கிறார் அவர் கூட சேர்ந்து தாளம் போட்டு இவரின் முற்போக்கு அறிவை காட்டுகிறாராம்.
            இதில் எனக்கு மதவெறி என்ற அரிய கண்டுபிடிப்பு வேறு.

            • இங்கே எனது முற்போக்கு மூளைக்கு வேலை ஏதும் இல்லை நண்பரே, காவிகுரங்குகளை திட்டும்போது சந்தோசித்து எசைப்பாட்டு பாடுபவர்கள் பற்றி தான் என் சந்தேகம். நீர் கூறலாம் எழுந்து நிற்கமாட்டேன் என சொல்லவில்லை என , நாம் தமிழர் கூட்ட பாணியில் இஸ்லாமிய மதவெறி கூட்டங்களில் உமாசங்கர் கூறுவது நிச்சயம் நடந்திருக்கும், அது மட்டுமல்ல நான் முன்பே கூறியது போல ‘அரேபிய வழித்தோன்றல்’ மனநிலை போதிக்க பட்டு போராடும் மக்கலை துண்டாடுகிரார்கள், இந்து மத சாமியார்கள் எதை செய்கிறார்களோ அதையே இசுலாமிய ‘அறிஞ்சர்’ பெருமக்களும் செய்கிறார்கள்.

              • திரு சின்னா
                “நான்தான் பெரிய நடுநிலை நாயகன்”என்ற நினைப்பில் எதற்க்கோ பலியாகாதீர்.
                காவிக்குரங்குகளை திட்டுவதால் நாங்கள் குஷியாகி எசப்பாட்டு பாடுகிறோம் என்கிறீரே
                இதை எங்கிருந்து கண்டுபிடிக்கிறீர்….
                காவிகளோ..மற்ற யாரோ அவரவர் வழியில் அவரவர் இருக்க யாரும் யாரையும் திட்டவேண்டியதுமில்லை.
                ஒருவரை திட்ட இன்னொருவர் ஆனந்த கூத்தாட வேண்டியதுமில்லை.அநியாயமாய் ஒருவர் திட்டப்படும்பொழுது அவருக்கு அனுசரணையாய் நிற்க வேண்டிய கடமைதான் அனைவர்க்கும் இருக்கிறது.
                காவிகள் ரத்தக்காட்டேறிகளாய் சமூக ஒற்றுமைக்கே வேட்டு வைக்கும் காரணத்தால்தான் எல்லா சிந்தனையாளர்களாலும் காறி உமிழப்படுகிறார்கள்.

                இந்த பதிவில் கூட நான் எந்த கருத்தும் தெரிவிக்கும் எண்ணத்தில் இல்லை
                வெறிநாய் கடிக்கு ஆளான ஒருவன் ஒரு புத்தகத்தை அவனைச் சேர்ந்த ஒரு கூட்டத்தை கூட்டி வைத்து வெளியிடுகிறான்.
                அவனுங்களுக்கு மனிதர்களே ஒரு பொருட்டல்ல மொழிக்கு மரியாதை செய்வதெல்லாம் ஒரு பொருட்டா..
                தேவையே இல்லாமல் உமாசங்கர் என்பவர் ஆதாரமின்றி ஒன்றை புழுகி திருப்புகிறார்
                அதற்க்கு மத்தளம் வாசித்து “இருக்கும்….நடந்திருக்கும்” என்கிறீரே
                உம் வார்த்தையில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா..
                ஒரு சமூக மக்களுக்கு எதிரான வெறுப்புதான் இருக்கிறது

                இஸ்லாமிய மதவெறி கூட்டம் என்கிறீரே
                அது எங்கே நடந்தது அதில் யாருக்கு எதிராய் திட்டம் தீட்டப்பட்டது
                ஒருவன் தான் சார்ந்த மதக்கொள்கையிலும் அதில் பிடிப்போடும் இருப்பதற்க்கு தனக்குத்தானே கூட்டம் போட்டு உரையாற்றிக்கொள்வதில் உமக்கு ஏன் அரிப்பும் வலிப்பும் வருகிறது

                சின்னா…..நடுநிலை வேசத்தை ஓவராய் போட்டுவிடுகிறீர்..

                • வேசம் போடவேண்டிய அவசியம் எனக்கில்லை, மற்றைய முட்டாள்தன மதங்களை விடுங்கள் ஆத்திகர்களையும் இசுலாமிய பிற்போக்கு தனங்களை விமர்சிப்பவர்களையும் நக்கல் மிரட்டல் செய்வதும் நடப்பதில்லை என்கிறீரா? அவற்றை இரகசியமாக ஆதரித்து விட்டு எப்படி காவிகளின் கூத்துகளை தங்களால் விமரிசிக்க முடிகிறது, கம்யூனிஸ்டுகள்நாம் தான் எல்லாவற்றையும் தூக்கிபோட்டு மிதிக்கிறோம், தங்களின் ‘செலக்டிவ்’ சமூகப்பற்று எப்படி நைச்சியமாக வேலை செய்கிறது என்பதில்தான் எனக்கு அரிப்பும் வலியும் நண்பரே.

    • நாள் 30 -1 -2012
      இடம் தமிழக சட்டப பேரவை.
      ஆளுநர் உரையாற்றுகிறார்
      உரைக்கு முன் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படுகிறது ஜவாஹிருல்லா உள்ளிட்ட முசுலீம் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துகின்றனர்.

      அவதூறு பரப்பாதீர்.

    • மிசுட்டர் உமா சங்கர் அண்ட் பெரியசாமி,

      ஜெயேந்திரன் மாதிரி ரெண்டு அடுக்கு மேடைல நெய்யுரண்ட ஜீரணமாகாம கண்ணா மூடி முசல்மான்கள் குந்திகினு இருந்ததா சொல்றீங்களே அதுக்கு ஆதாரம் இருந்தா கொடுங்க.

      முஸ்லிம்கள் எழுந்து நின்னு மரியாதை செய்தார்கள் என்று நண்பர் திப்பு ஒரு ஆதராம் கொடுத்து இருக்காரு. அதே மாதிரி….சங்கரமடத்து சின்ன ஜெஎந்திரனும் பெரிய ஜெஎந்திரனும் செத்து போன பெரியவரும் தமிழுக்கு இபப்டி ஒரு மரியாதை கொடுத்ததா ஒரு எடுத்துக்காட்டு சபைல எடுத்து விடுங்க….

    • ஆதாரம் எடுக்க சென்ற உமா ஷங்கரை காணவில்லை. நண்பர்கள் கண்டுபிடித்து தரவும்.

  10. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது மாநில அரசின் அடையாளங்களுள் ஒன்று. ஆனால் சங்கர மடத்தினரோ மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் சர்வ வல்லமை கொண்ட மத்திய அரசில் செல்வாக்கும் அதிகாரமும் செலுத்துபவர்கள். ஆகையால் போயும் போயும் மாநில அரசின் அடையாளங்களுக்கு எல்லாம் மரியாதை செலுத்த வேண்டுமா என்னும் ஆணவத்தில் அவர் அவ்வாறு நடந்துள்ளார். சங்கர மடத்தினரை போலல்லாமல் திராவிட கட்சிகளுக்கும் தமிழ் அமைப்பினருக்கும் தமிழ்நாட்டுக்கு வெளியே எந்த செல்வாக்கும் அதிகாரமும் கிடையாது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு உள்ளேயே கூப்பாடு (அது மட்டும்) போட வேண்டியதுதான். அது தான் இப்போது நடக்கிறது. வேண்டுமானால் எதிர்காலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசின் இலட்சினையில் இருக்கும் கோபுர சின்னத்தை மத அடையாளம் என்று சொல்லி நீக்கி தங்களை மதச்சார்பற்றவர்களாக காட்டிக் கொள்ளலாம். மத சிறுபான்மையினரிடம் ஓட்டு பொறுக்கலாம். ஆனால் அதற்கு அதிமுகவுடன் மோத வேண்டி இருக்கும். கர்நாடகத்தில் இருப்பதை போல் மத்திய அரசு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் ஸ்தம்பிக்க வைக்கும் வல்லமை கொண்ட தேர்தல் அரசியலில் ஈடுபடாத வலுவான தமிழ் அமைப்புகள் இப்போதைய தேவையாகும்.

  11. வேதத்தை தவிர கடவுளை கூட ந்மபாத ஆதி சங்கரர் கூட்டம் அதாங்க விஜயேந்திரா ஆட்கள் தியானம் இருந்தேன் என்று கூறுவது தப்பிக்கும் வாதம் மட்டுமே!

    மேலும் விவரங்களுக்கு பரமசிவம் ஐயா எழுதிய இந்து தேசியம் என்ற நுலில் உள்ள சங்கரமடம் பற்றிய விவரங்களை படியுங்க தோழர்களே!!

  12. விஜயேந்தர் தவறுக்கு அவர் மட்டுமே பொறுப்பு , வைரமுத்து தவறுக்கு அவர் மட்டுமே பொறுப்பு , ஆனால் இந்துக்கள் மீது வன்முறையை பிரயோகிக்க இதை நல்ல வாய்ப்பாக சமுக விரோத சக்திகள் பயன்படுத்திக்கொள்வது வருத்தமளிக்கிறது , விஜயேந்தர் தவறுக்கு ஒட்டு மொத்த இந்துக்கள் எப்படி பொறுப்பாக முடியும்?..

    • மிஸ்டர் ரங்கராஜன் கிளின் போல்ட் ஆகிட்டாரு…. யோவ் யாருயா ஆண்டாள் மேட்டரில் கழுத்த வெட்டுவேன்… அவன் அம்மா தப்பானவங்க என்று எல்லாம் குடி போதையில் பெனத்தியது? எச்சை ராஜாவும் , நயினாரும் தானே? இவிங்க எல்லாம் யாரு ? யார் கட்சி?

      • கட்சிகாரன் பேசினா அவனோட விவாதம் பண்ணு அல்லது திட்டு அதை விட்டுட்டு ஏன் மதத்த திட்டுரீரு.. ராஜா பேசியது தப்புதான் ஆனால் நீர் முதலில் பேசிய வைரமுத்துவ கண்டிக்காமல் ராஜாவையும் விட்டுவிட்டு இந்து மதத்தை மட்டும் திட்டுவது
        ஏனோ?..

    • வைரமுத்து என்ன தவறு செய்தார் அவர் பொறுப்பாவதற்கு? எங்களை இழிவு செய்த பார்ப்பனர்களை தட்டிக்கேட்டால் எங்களை சமூக விரோதிகள் என்பதா?
      அது சரி . ., நீங்களெல்லாம் எச்ச.ராஜாவின் பிரான்டுதானே!

      • வைரமுத்து செய்த தவறு ஆண்டாளை அவதூறாக பேசியது, உமது இந்து வெறுப்பு டெம்ப்ளேட் காரணமாக அது உமது கண்ணில் படவில்லை , ஆனால் விஜயேந்தர் செய்த தனிமனித செயலின்மை/தவறுக்கு இந்து மதம் , அந்தணர்கள் என அணைவருமே தமிழ் மொழி மதியாதார் என நீர் சித்தரிக்க முயல்வது ,இயாகோ சின்ரோம் எனும் மனநோய் அதாவது முதலில் வெறுப்பை வளர்த்துக்கொண்டு பிறகு சட்டையிட அழிக்க சாக்கு தேடுவது..

  13. மிசுடர் வக்கீலு,

    ஜெயேந்திரன பத்தி பேசுனா நீர ஏன் ஒய் ஒட்டுமொத்த இந்துக்களையும் பேசுறதா பினாத்தறேல்?

    • உண்மையைதானே சொல்கிறேன் 5.1.1 , 5.1.1.1. , 5.1.1.1., இதெல்லாம் என்ன?.. எதுமறியாத சராசரி அந்தண குடும்பங்களை விஜயேந்தர் செய்த தவறுக்காக பலிகடா ஆக்குவதும், அவதூறு செய்வதும் , அவர்களுக்கு எதிராக தொடர் வெறுப்பு பிரச்சாரம் செய்வதும் , நியாயம் கேட்போருக்கு இந்துத்துவ முத்திரை குத்தி பேசவிடாமல் செய்வதுமே உமது எண்ணம் ,
      அதற்கு காரணம் சர்வதேச மதமாற்ற நோக்கத்திற்கு துணை போகும் உமது பிழைப்புவாதம்.. விஜயேந்தரை குறை சொல் ,
      இந்துமதத்தை பழிக்காதே..

      • செல்வம் சரியாத்தான உங்களுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்காரு.
        //சர்வதேச மதமாற்ற நோக்கத்திற்கு துணை போகும் உமது பிழைப்புவாதம்..//
        அவதூறு செய்வது நீங்களா, அவரா?
        //விஜயேந்தரை குறை சொல் ,
        இந்துமதத்தை பழிக்காதே..//
        அடேயப்பா . . .! முழக்கமெல்லாம் பயங்கரமாத்தானிருக்கு . .!
        விசயேந்திரனுக்கும் இந்து மதத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கு?

        • இந்து மதம் மதசுதந்திரம் உள்ள மதம் , இங்கு போப் இல்லை , தலைமை காஜியும் இல்லை , மொத்தத்தில் விஜயேந்தர் ஒட்டு மொத்த இந்துக்களின் தலைவரும் இல்லை..

      • சார்வால்…

        ஆத்திரத்தில் பேசும் போதும் உம்முடைய கேப்பில் நூலை விடுவதில் விவரமாக தான் இருக்கிறீர் ஒய்.

        அந்தணர் எனப்படுவோர் திருக்குறளின் படி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
        என்று அறவழியில் வாழ்வோர். எனவே அந்தணருக்கும் வர்ணஸ்ராம தர்மத்தின் படி வாழும் பார்ப்பனருக்கும் எவ்வத சம்மந்தமும் இல்லை. எனவே பேசும் போது கவனமாக பேசணும்.

        இன்னொரு விசயத்தையும் சொல்ல கடமைபட்டுள்ளேன். தமிழகம் தவிர வேறு சோ சால்ட் ஹிந்து ஹிந்தி பெல்டில் இப்படி பேசினாலும் இநேரம் மதக்கலவரத்தை நீவிர் தூபம் போட்டு தொடக்கி இருப்பீர். எதிர்காலத்தில் அங்கிருந்து ஆட்களை இறக்கிவிட்டு கூட நீங்கள் செய்யலாம். அதெலாம் ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவில் இல்லாமலா இருக்கும்.

        எனவே சின்ன ஜெயேந்திரனை பற்றி பேசினால் ஒட்டுமொத்த இந்துக்களையும் பேசுவதாக கற்பிதம் செய்ய வேண்டாம். ஏற்கனவே ஆண்டாள் பிரச்சினையில் ஒட்டுமொத்த் தமிழக இந்துக்களையும் வன்முறைக்கு அழைத்தார்கள். ஆனால் பாவம். உண்மையான இந்துக்களான பார்ப்பனர்களை தவிர வேறு “இந்துக்கள் யாரும் வரவில்லை”.

        ஏனெனில் “உழைக்கும் இந்து மக்களுக்கு” பேருந்து கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, நீட், விவசாய சமந்தமான பிரச்சினைகள் என மூச்சு முட்டும் அளவுக்கு இருப்பதால் அதிலேயே நேரம் செலவாகி விடுகிறது.

        இதையெல்லாம் உங்களது புதிய சோதனைக் சாலையாகிய உத்திரபிரதேசதிலேயே வைத்து கொள்ளும் சார்வால். இங்கே உங்களது வாலை சுருட்டிக் கொண்டு இரும்.

      • அட்வகேட் ரங்கா…,ஆண்டாள் மேட்டருக்கு பாப்பான உங்கள் ஆட்கள் எல்லாம் கூடி கும்ம்பி அடிப்பேல் …. அதே நேரம் விஜயேந்திரன் மேட்டர் என்றால் அது அவனின் தனிபட்ட மேட்டர் எங்கள எதுக்கு அதுல இணைகின்றேல் என்று பம்முவேல்…. இது தானே நீர் கூறும் விசயத்தின் லாஜிக்.

        யோவ் பெரிசு, சோடா பாட்டில் வீசுவேன்… கல் எறிவேன் என்று வீர வசனம் பேசும் ஜீயர் என்ற பொருக்கி ஒருத்தன் இருக்கான் அவன் கிட்ட உம்ம ப ஞ்சாயத்த கொண்டு போவுமையா! நல்லா பண்ணுவான் கட்ட பஞ்சாயத்து.

        • ஜீயரும் சோடா பாட்டிலும்..

          ஜீயர் பேசிய வீடியோவை முழுமையாக பார்த்தேன் அதில் அவர் தவறாக எதுவும் பேசிவிடவில்லை..

          இந்துகளை இந்து விரோதிகள் தாக்கினால் இந்துக்கள் தக்க பதிலடி கொடுப்பர் என சொல்ல முயன்று வாய் தவறி “எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் “என பக்கத்திலிருந்த நித்தி ஜாடை சாமியார் சொன்னதை மேற்கோள் காட்டியுள்ளார் மேலும் அவ்வாறு செய்யக்கூடாது , செய்தால் தவறு எனவும் சொல்லியுள்ளார்.. இதைத்தான் திராவிட தொழில்முறை போராட்டக்காரர்கள் ஊதி பெருசாக்குகிறார்கள்..

          துறவு பூண்டோர் தற்காப்பு (அமெச்சூர்) அரசியல் முயற்சியில் ஈடுபடுவதால் வரும் சைடு எபக்ட்..

          • நீங்க வைரமுத்து விவகாரத்தை ஊதி பெரியதாக்கியதை விடவா நாங்கள் செய்துவிட்டோம். வைரமுத்து பேசாததை பேசியதாக சொல்லி கலவரத்தை உண்டாக்க முயற்சி செய்தீர்கள். ஆனால் நாங்கள் ஜீயர் பேசியதைத்தானே சொல்கிறோம்.
            ஆண்டாளுக்காக எந்த இந்து வீதியில் இறங்கி போராடினான்? பார்ப்பனர்களைத் தவிர!

  14. //அந்தணருக்கும் வர்ணஸ்ராம தர்மத்தின் படி வாழும் பார்ப்பனருக்கும் எவ்வத சம்மந்தமும் இல்லை// அந்தணரே பிராமணர், அந்தணத்துவம் குணத்தின் அடிப்படையிலேயே ஏற்படும் , பிறப்பின் அடிப்படையில் அல்ல.. மற்றபடி திருப்பதியை தாண்டி வடதிசை செல்லாத என்னை உ.பி போக சொல்லுவதும் , பிஜேபி ஆர்எஸ்எஸ்ஸுடன் சேர்த்து பேசுவதும் உமது கம்யூனிஸ்ட் பிரபகண்டா தந்திரம் இப்படி நீவிர் பேசி பேசி தான் யோகி பக்கம் மக்கள்
    பயந்து போய் சாய்ந்து விட்டனரோ , என்னவோ..

  15. சும்மா காமெடி பண்ணிக்கிட்டு இருக்காதீங்க. பத்து வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் இந்து மதத்த விமர்ச்சித்தாலே எவனும் வாய தொறக்க மாட்டான். இப்போ என்னடான்னா ஆர் எஸ் எஸ்னு ஒரு திராவிட கட்சி காரர் சொன்னதுக்கே கூச்சல் போட்டு அமளி துமளி ஆக்கீர்ராங்க. அப்போ இருந்த இந்துதான இப்போவும் இருக்காங்க. இப்போ மட்டும் என்ன ஆக்ரோஷம்? அது வேற ஒன்னும் இல்ல. பகுத்தறிவாதிமேலயும், நாத்திகன் மேலயும் இந்துக்களுக்கு இருந்த மரியாத சுத்தமா போச்சு. அதான் காரணம். பகுத்தறிவாதின்றவன், தனக்கு எவ்வளவு வேண்டப்பட்டவனா இருந்தாலும் பகுத்தறிவு பிறலும்போது மூஞ்சியிலயே காரி துப்பர தைரியம் இருக்கனும். அப்போதான் அவன் பகுத்தறிவாதி. higher criticism ம்றது அதுதான். ஆனா நீங்கள்ளாம் செய்றது செலக்டிவ் கிரிடிசிசம். என்னைக்காவது ம க இ க குறைகள இங்க பதிவா போட்டுருக்கீங்களா? நீங்கள்ளாம் ஞாயவானாக்கும்.

  16. என்னைக்காவது ம க இ க குறைகள இங்க பதிவா போட்டுருக்கீங்களா? நீங்கள்ளாம் ஞாயவானாக்கும்.
    – ஏன் நீங்கள் போடவேண்டியதுதானே shan? ஆனைக்கு அர்ரம்னா, குதிரைக்கு குர்ரம்னான்ற கதயால்ல இருக்கு. சரி, ஜீயரிடம் சோடா பாட்டில் எப்படி? சரக்கிற்கு வாங்கியதா?

  17. தமிழ் தாய் வாழ்த்து என்பது இறைவணக்கம் அல்ல என்ற விசயத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் இங்கே சின்னாவும் ,மீரானும் சண்ணடை போட்டு கிட்டு இருக்கீங்க….தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவிக்க குரானோ, இல்ல இந்து மதமோ , கிருஸ்துவமோ யாரையுமே தடுப்பது கிடையாது என்ற உண்மையை உரக்க கூற விரும்புகின்றேன்.

  18. மன்னிக்க வேண்டும் குமார்..
    தமிழ்தாய் வாழ்த்து இறைவணக்கம் அல்ல என்பதை முழுமையாய் புரிந்தே நான் விவாதிக்கிறேன்.
    என் வாதமெல்லாம் இப்பொழுது தமிழ்தாய் வாழ்த்து பற்றியது அல்ல என்பதை நீங்கள் எப்படி புரியதவறினீர்கள் என்று தெரியவில்லை.
    சின்னாவிடம் இருப்பது அர்த்தமற்ற வெறுப்பு.ஒன்றை பேசிக்கொண்டிருக்கும் போது வலிந்து வேறொன்றை கற்பனையாய் உருவாக்கி தான் பெரிய நடுநிலைவாதி என்று நிரூபிக்கிறாராம்.!

    என் தாய்மொழியை நேசிக்க மதிக்க உவகைகொள்ள என் மதத்தில் எந்த தடையுமில்லை.
    மொழியில் உய்ர்வு தாழ்வு ,புனிதம் புனிதமற்றது என்ற வகையான பார்வையும் எங்களுக்கில்ல

    “அவர்களை என்ன சொல்வது நீங்களும் தானே வேத மொழி என்று ஒன்றை வைத்து அதுதான் தேவமொழி என்று நம்புகிறீர்கள் ”

    என்று விவாதம் போனாலும் பரவாயில்லை.
    வெறுமனே மொட்டையாக மதம், சவூதி ,தொழிளாருக்கு இஸ்லாம் என்ன செய்தது ”
    இது என்னவகை விவாதம்
    நானும் பேசுவேன் என்று காட்ட எதையாவது உளறுவதா…

    மற்றபடி தமிழ்தாய் வாழ்த்து என்பதை நாங்கள் முழுமையாய் ஏற்றுக்கொள்கிறோம்.
    இன்னும் சொல்லப்போனால் அந்த தமிழ்தாய் வாழ்த்தின் ஒரு வார்த்தைகூட எங்கள் கொள்கைக்கு எதிரானதல்ல.

    தமிழின் பல மொழிகள் எங்களோடு கச்சிதமாய் உடன்பட்டதே..
    “ஒன்றே குலம் ஒருவனே தேவன் யாதும் ஊரே யாவரும் கேளீர்
    அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை”

    மறைந்த தமிழ் பழம் மா.நன்னன் அவர்கள் பேசிய ஒரு பேச்சு யூடியூபில் காணக்கிடைக்கிறது.
    அழகாக சொல்கிறார் நன்னன்:வணக்கம் என்று முகமன் சொல்வது தமிழர்களின் வழக்கத்தில் உள்ளது இல்லையாம்.
    வாழ்த்து என்ற பதமே தமிழர்களின் வழக்கமாக இருந்திருக்கிறது.வணக்கம் என்பதற்க்கு ஒரு சான்றும் கிடையாதாம்.
    பார்ப்பணர்கள் நமஸ்கார் நமஸ்காரம் என்று வழக்கத்தை திணிக்கவே பின்னால்வந்த திராவிட இயக்கத்தினர் அனைத்தையும் தமிழ் படுத்தியதைப்போல இதையும் தமிழ் படுத்திவிட்டார்கள்.வாழ்த்து என்று சொல்வதே தமிழர்களின் தொன்மையான முறை ”
    என்று அந்த திராவிடையக்க கொள்கைசார்ந்த நன்னன் அவர்கள் விளக்குகிறார்.
    இதற்க்குத்தான் இஸ்லாமிய கொள்கையின் பல திராவிட இயக்க சிந்தனையோடு பொருந்திவருவாதாகவும் குறிப்பிட்டேன்.
    அதற்க்கும் பேரறிஞர் சின்னா “திராவிட கம்யூனிஸ கொள்கைக்கும் இஸ்லாத்திற்க்கும் ரொம்ப தூரம்”
    பாடம் நடத்துகிறார்.
    என்ன பேச வருகிறோம் என்றே புரியாமல் தான் பெரிய அறிவாளி என்ற நினைப்பில் அலையும் இது போன்ற கத்துகுட்டிகளை புரியவைக்க முடியாது

    • உங்கள் நீண்ட பொறுமையான விளக்கத்துக்கு மிக்க நன்றி மீரான்பாய். இந்த விவாதத்தில் தேவையற்ற அத்துமிறல்களை/திசை திருப்பலை செய்யபவர்கள் யாராக இருந்தாலும் வினவு தான் அவர்களுக்கு சரியாக அவர்களுக்கு திசைகாட்டனும் மீரான். ஒரு கம்யுனிஸ்டு என்று தன்னை பறை சாற்றிகொள்பவர்(சின்னா) தேவையற்ற திசைதிருப்பலை குழப்பத்தை இந்த விவாதத்தில் ஏற்ப்டுத்தகூடாது அல்லவா?

      • சகோதரர்கள், மாணவன் குமார் மற்றும் கார்த்திகேயன் இருவருக்கும் என்னை புரிந்து கொண்டமைக்கு நெஞசார்ந்த நன்றிகள்.

        என் வாதத்தில் உள்ள நியாயத்தை கண்டுதான், உங்களோடு கொள்கை மாறுபட்ட முஸ்லிமாக நான் இருந்தாலும் உண்மையை சொன்னீர்கள்.
        சின்னா தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டாலும் அவரின் வாதம் ஏற்புடையதல்ல என்பதை சொல்ல,நம்மவரா மற்றவரா என்று நீங்கள் அடையாளம் தேடவில்லை.
        இதன் பெயரே நடுநிலை…இதுவே நியாயமான பார்வை.

        வேறு ஒரு விவாதத்தில் என்னோடு கடுமையாக மோதும் நிலை உங்களுக்கும் வரலாம்.
        அது கருத்தின் அடிப்படையில் இருக்குமே அன்றி நிச்சயம் அடையாளம் சார்ந்து இருக்காது.
        உங்களைப்போன்ற நண்பர்களே நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கிறீர்கள்.

        சின்னாவுக்கு மெதுவாக புரியலாம்…

        • மீரான் பாய்,
          சின்னா தோழரை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. மற்றொரு விவாதத்தில் மாணவன் குமார், இஸ்லாமியர்கள் ஜின்னா காலத்திலேயே பாகிஸ்தான் சென்றிருக்க வேண்டும் என்று வாதிட்டவர். அவரை சின்னா, சின்னாபின்ன படுத்தியதை வாசகர்கள் அறிவார்கள். நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
          சின்னாவின் கவலை வேறு. மதமா? அறிவியலா? என்ற விவாதத்தில் அறிவியல் கருத்துக்களை ஏற்காத இஸ்லாமிய மதவாதிகள் இந்துமத விவாதத்தில் மட்டும் இந்து மதவாதிகளை விமர்சிக்கும் போக்கு பற்றியதுதான்.
          மற்றப்படி, உங்கள் இருவருக்கும் இடையில் உள்ள புரிதலில் Misfire ஆகியிருக்கும் என எண்ணுகிறேன்.

          • கார்திகேயன்,
            சின்னாவை குறைத்து மதிப்பிடுதல் என் நோக்கமல்ல. மற்ற விவாதங்களில் அவர் என்ன பதிவிட்டார் என்பதையும் அவர் சிந்தனை எப்படிபட்டது என்பதிலும் நான் ஆர்வமாய் இருக்கிறேன்.
            விவாதம் என்பது ஒரு தலைப்பின் கீழ் .இந்த தலைப்பில் அவரின் போக்கு சரியா என்பதே என் கேள்வி..
            அவரை ஒட்டுமொத்தமாய் மறுக்கவோ வெறுக்கவோ எனக்கு என்ன தேவையிருக்கிறது?

            விவாதம் என்பது நம்மை மேலும் மேலும் கூர்மை படுத்திக்கொள்வதற்க்குத்தானே ..
            என்னோடு உடன்பட்டு என்னை ஆமோதித்து கொண்டே இருப்பவரிடம் விவாதித்து ஒரு பயனும் இல்லையே..
            சின்னாவும் நானும் விவாதித்தல் எங்கள் இருவருக்கும் மட்டும் உள்ளதாகவும் ஆகாது.
            அது மூலமாய் பலர் பல கோண்ங்களையும் கண்டுகொண்டிருப்பர்.ஆக நான் சின்னாவை மறுக்கவில்லை விரும்புகிறேன்..

            அறிவியல் கருத்துகளை ஏற்காத விவாதத்தில்தான் அது பற்றி பேசமுடியும்.இந்த நேரத்தில் அது பற்றி பேசுவது பொறுத்தமற்றது என்பதோடு விவாத தலைப்பையே முனை மழுக்கிவிடுமில்லையா…

            அறிவியல் கருத்து என்றால் என்ன அறிவியல் கருத்து?எல்லா அறிவியல் கருத்து நிலையான் தன்மையை கொண்டிருப்பதில்லை.பல அறிவியலாளர்களால்யே மாற்றமும் பெற்றிருக்கிறது.

            “அறிவியல் என்று நான் நம்பியதை அல்லது உணர்ந்ததை நீயும் ஒத்துக்கொண்டாகவேண்டும் இல்லையென்றால் வேறு வகை விவாதத்தில்கூட, என்னோடு விவாதித்தவன் சமூகத்தை சேந்தவன் நீ என்றால் உன்னோடு எனக்கு விவாதம் இல்லை என்றாலும் உன்னை வந்து பழி வாங்குவேன் ”

            என்பது நல்ல முறையா…

          • கார்த்திகேயன், இஸ்லாமியர்கள் ஜின்னா காலத்திலேயே பாகிஸ்தான் சென்றிருக்க வேண்டும் என்ற என் கருத்துக்கு பதில் கொடுக்க அருகதை அற்று, வக்கு அற்று நின்றவரை பார்த்து சின்னா சினன்னா பின்ன படுத்தினார் என்று எதுகை மோனையுடன் பேசினால் எப்ப்படி கார்த்தி? சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னாவை பார்த்தால் சிரிப்பு வருது…

            உங்களுக்கு துப்பு இருந்தால் அந்த கட்டுரையில் மீண்டும் வந்து விவாதிக்லாமே கார்த்தி! எதுக்கு இங்கே விவாதத்தை திசை திருப்பனும் என்கின்றேன்…?

  19. நண்பரே உங்களுக்கு புரிதல் குறைபாடு ஏதும் உள்ளதா?
    //பெரிய நடுநிலைவாதி என்று நிரூபிக்கிறாராம்//
    இந்து மதத்தையும் இசுலாத்தையும் ஒரேயடியாக மறுப்பது எப்படி நடுநிலையாகும்? உண்மையில் நீங்க இருவரும் ஒரு பக்கம் நான் ஒரு பக்கம். நான் நடுநிலைவாதியல்ல உங்கள் கருத்து எதிராளி.

    //வெறுமனே மொட்டையாக மதம், சவூதி ,தொழிளாருக்கு இஸ்லாம் என்ன செய்தது //
    ஒரு மொட்டையும் இல்ல கொட்டையும் இல்லை, மறுபடியும் சொல்கிறேன் நீங்க ‘என் மதத்துக்காரன் மேலோன் கீழோன் என பிரிக்க மாட்டான்’ என பேசினீர் அல்லவா? இப்போது சாதி ரீதியான மேலோன்-கீழோன் இசுலாத்தில் இல்லைதான், பாராட்டுக்கள். (மரைக்கார் அது இதுங்குறாங்க அப்பிடின்னா என்னங்க? எனக்கு தெரியல வினவு அண்ணன் கூட எதோ போட்டிருக்காக இங்க https://www.vinavu.com/2009/11/11/casteism-in-islam/ என்னான்னு சொல்லுங்க ப்ளிஸ், அதிலும் sahid எனும் தோழர் பதில் 77 இல் அருமையாக விளக்கியுள்ளார்,இதெல்லாம் படிக்கமலா கம்பு சுத்துரிங்க)

    உங்க வசதிக்காக சாதி ரீதியான மேலோன் -கீழோன் இசுலாத்தில் இல்லை என்றே கொள்வோம்.
    சாதி பாகுபாடு இல்லன்னாலும் பொருளாதார மேலோன்-கீழோன்உக்கு எந்த முஸ்லிமும் உருப்படியா பதில் அளித்ததில்லை (பல்லக்கு தூக்குவது யாரு என்ற ஆழ்ந்த பதிலை தவிர).
    ஆக எந்த ரீதியான மேலோன் – கீழோன் இசுலாத்தில் இல்லை என்றீரோ அதற்கே எனது எளிய சவூதிகாரன் பற்றிய கேள்வி இருந்தது. இதில் என்ன மொட்டை? அறிவாளி நீங்க வேணுன்ன காபா
    வைத்திருக்கும் சவூதிக்காரன் இஸ்லாமியன் அல்ல என்னுட்டு போங்க. சவூதி மன்னர் பரம்பரை சேக்குகள் இன்னும் மேலோன்தான், உழைக்கும் ‘இசுலாமியன்’ இன்னும் கீழோன் தான். வந்துட்டாரு..

    உங்கள் இறுதி பகுதி தான் நல்ல சிப்பு,
    முதலில் தமிழர் ‘வாழ்த்து/வணக்கம்’ சொல்வதற்கும் இசுலாம்-பெரியாரிசதுக்கும் என்ன தொடர்பு?
    ரொம்ப முயற்சிக்க வேண்டாம் பாய், உங்களை போலதான் பல பாயிங்க ‘வணக்கம்’ தப்பு அஸ்ஸலாமு அலைக்கும் என அழகிய முகமன் கூற சொல்கிறார்கள், ஆனா இந்த மதபிரசார விசயத்தை எனது ஒரிஜினல் பதிலான 10.3.2.2.1 இன் இறுதி பகுதிகளில் எவ்வாறு இசுலாமும் பெரியாரிசமும் இணங்க முடியாதவை என்ற விளக்கத்துக்கு கோத்து விட்ட பெருமை உங்களையே சாரும். மதபிரசாரம் என்ற குட்ட்ரசாடு தொடர்பான விவாதத்திலும் மதபிரசாரம், யா அல்லா.

    -சிற்றறிஞர் சின்னா

  20. ADVOCATE RANGARAJAN comment #2 வோடு நானும் ஒத்துப்போகிறேன். ஆனால் கீழே உள்ள என்னுடைய கேள்விக்கு விளக்கம் தேவை

    1) தமிழ்த்தாய் வாழ்த்தை முழுதாக படித்தவர்கள் எத்தனை பேர் ?

    2) சென்னை பகுத்தறிவாளர் கழகம், டாக்டர் பட்டம் பெற்ற கருணாநிதியை பாராட்ட 14ம் தேதி (14-8-71)பெரியார் திடலில் ஒரு கூட்டம் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் குன்றக்குடி அடிகளார், என்.டி.சுந்தரவடிவேலு, ஏ.என்.சட்டநாதன், கீ.வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர். அப்போது புதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய ஈ.வெ.ரா. ‘ கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக இது என்றால், ஒரு முட்டாள்தனத்துக்குப் பதிலாக இன்னொரு முட்டாள்தனம் என்றுதானே அர்த்தம்?’ என்றார்.

    நூல் : தந்தை பெரியார், கவிஞர் கருணானந்தம், பக் 569

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதற்கே மன்னிப்பு கேட்கணும்னா தமிழ்த்தாய் வாழ்த்தை முட்டாள்தனம் என்று சொன்ன ஈ.வெ.ரா. மன்னிப்பு கேட்டாரா?

    நன்றி

    • எகைன்ஸ்ட்Fபேக் எந்த நோக்கத்தில் கேட் கிறாரோ… கேள்வி சரியான கேள்வி
      பெரியாரை சரியாக புரிந்தவர்களால்தான் இதற்க்கான பதிலை தரமுடியும்
      வெறும் உணர்ச்சிக்கு இலக்கானவர்கள் கொந்தளிக்கத்தான் முடியும்.
      சொல்லுங்களேன் பதிலை..

    • விஜயேந்திரனும் தந்தை பெரியாரும் ஒன்றா AgainstFake ?
      சமூகத்தில் நோய் பரப்பும் நோய்கிருமியும் அந்த நோயை குணப்படுத்தும் மருத்துவரும் உங்களுக்கு ஒரு நிலையா?
      எதை எதனுடன் ஒப்பிடுவது?
      முட்டாள் மாதிரி யோசிக்காமல் அறிவார்ந்து சிந்தியுங்கள்.

      • திரு. போலி எதிர்ப்புக்கு தாங்கள் உரிய பதிலளிக்கவில்லையோ?.. கருத்து அடிப்படையில் ராஜா, ஜெயேந்தர் , ஈ.வே.ரா , ஆகியோர் கருத்து தமிழ் மொழி மீதான அவமதிப்பு மட்டுமே..

        • சற்று ஆழமாக பார்த்தால் பதில் அதிலேயே இருக்கிறது. ஒரு குழந்தையை தாயார் கண்டிப்பதற்கும் மூன்றாம் நபர் கண்டிப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான். ஏன் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூடத்தான் சொன்னார். இது நம் குழந்தையை நாம் செல்லமாக’பொறுக்கி’ என்று அழைப்பது போன்றது.
          தமிழில் ‘நமஸ்காரம்’ என்ற ஆதிக்க சாதி சொல்லையும், ‘கும்புடுறேன் சாமி’ என்ற அடிமை சாதி சொல்லையும் ஒழித்து ‘வணக்கம்’ என்ற சுயமரியாதை சொல்லை புகுத்தியவர் பெரியார் மற்றும் அவரது இயக்கம். (நன்றி: மதிமாறன்). இன்று வணக்கம் என்ற சொல்லே உலகம் முழுதும் வியாபித்திருக்கிறது.
          இப்போது சொல்லுங்கள் தந்தை பெரியாரையும் விஜயேந்திரனையும் ஒப்பிடலாமா?

      • நண்பரே , இங்கு மதமறுப்பு என்ற ஒரே விசயத்துக்காக பெரியாரை இந்த மொன்னை வாதம் மூல சிருமைபடுத்த அட்வோகேட், மீரன்பாய் மற்றும் அகைன்ஸ்ட்டு பேக்கு என சங்கமித்து நிற்கும் அதிசயத்தை பாரும். இங்குதான் பகுத்தறிவையும் மக்கள் விழிப்பையும் வெறுக்கும் மதவாதிகளின் ஒற்றுமை அச்சாவாக துலங்குகிறது.

    • பெரியார் நேரடியாக தானே தன் கொள்கையின் அடிப்டையில் பேசியுள்ளார். அது அவரின் கருத்து என்று ஏற்க்க ஏன் உங்களால் முடியவில்லை..? எதுக்கு மன்னிப்பு கேட்கனும் என்கின்றேன்? அதே நேரத்தில் திருச்சி தனியார் க்ல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இறைவணக்கத்துக்கு கூட எழுந்து நின்றவர் தானே பெரியார்! பெரியார் தமிழ் தாய் வாழ்த்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்தார் என்று உங்களால் நிருபணம் செய்ய இயலுமா?

      //தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதற்கே மன்னிப்பு கேட்கணும்னா தமிழ்த்தாய் வாழ்த்தை முட்டாள்தனம் என்று சொன்ன ஈ.வெ.ரா. மன்னிப்பு கேட்டாரா? //

    • ஐயா அகைன்ட்ஸ்ட்டு பேக்கு,
      1)அப்போ தமிழ்த்தாய் வாழ்த்து அச்சு பிசகாமல் பாடமாய் இருந்ததால் தான் சபைநாகரிகத்தை கூட கணக்கில் எடுக்காமல் அவமதித்த பயலை விமர்சிக்கனுமா? இப்போ நீங்க என்ன தான் சொல்லவரிங்கோ? விஜயேந்திரனை பற்றிய விமரிசனமெல்லாம் அனைவரும் எந்திருக்கும் பொது உனக்கென்னடா சிறப்பு ‘தியான’ ஒளிவட்டம் ?? என்பதை பத்தியது.

      2)பெரியார் எதற்கும் புனிதம் கொடுப்பதை தான் ‘முட்டாள்தனம்’ என்றார் (அதை முன்பு அமோதித்த அதே மீரான்பாய் பெரியாரின் மதமறுப்பு எனும் ஒரே காரணத்துக்கு இங்கே உங்களுக்கு இசைப்பாட்டு பாடுவது வேறு சிப்பு ஹிஹிஹிஹ்) மற்றைய படி தமிழை அவமதிப்பது அவர் நோக்கமல்ல. நீங்க உங்க ‘வசதிக்காக’ பெரியாரை அவ்வாறு புரிந்து கொண்டால் அதற்கு அவர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நானும் இப்போது சொல்கிறேன் தமிழ் மட்டுமல்ல எதற்கும் புனித பிம்பம் கொடுப்பது அடி முட்டாள்தனமே! ஆனா அனைவரும் எந்திரிக்கும் பொது ‘தியானம்’ அது இதுன்னு எந்த பயலாச்சும் தனக்கு புனித பிம்பத்தை போட்டுக்கொள்ள முயற்சிபானாகில் அவனுக்கு செருப்படி விழும்னு சொல்லிவைக்கிறேன். இந்த பதிவு கூட அந்த நோக்கத்திலேயே போடபட்டது. இப்போ எது முட்டாள்தனம்னு புரிஞ்சுதா?? இனி மேலும் இப்பிடி மொன்னை வாதங்கள் மூலம் பெரியாரை சிருமைபடுத்த சிறுமதி கொண்ட நீங்க முயற்சித்து அசிங்க படவேண்டாம்.

  21. மிஸ்டர் வக்கீல், எதை எதனோடு கோர்கிறீர்….
    பெற்ற பிள்ளையை அக்கறையோடு கண்டிக்கும் தாய் அனபையும் பிள்ளை பிடிப்பவன் கை கால் உடைத்து பிள்ளைகளை பிச்சை எடுக்க வைப்பதையும் ஒன்றாய் ஒப்பிடுகிறீரே…

    நான் என் முதல் பதிவிலேயே குறிப்பிட்டேன். மொழியில் புனிதம் என்றும் இல்லை நீசம் என்றும் இல்லை.மொழி மொழிதான்..அதைத்தாண்டி அதில் என்ன..

    என் மொழி தொன்மையான மொழி பல மொழிகள் கிளைக்க காரணமான மொழி தனித்து இயங்கும் த்னிச்சிறப்பான மொழி
    இவையெல்லாம் கூடுதலாய் நான் கொஞசம் பெருமிதப்படலாம்.இதைத்தாண்டி இதிலேயே உழன்று கொண்டிருக்க முடியுமா…
    அந்த மொழிக்குரிய இனம் என்ன செய்கிறது எப்படி வாழ்கிறது என்பதிலில்லையா இருக்கிறது அடுத்தகட்ட பெருமை…
    இந்த ஆதங்கமே பெரியாருக்கு…
    சும்மா வாய் பந்தல் போடுபவ்ர்களையும் அலங்கார அடுக்கு மொழி பேசுப்வர்களையும் பெரியார் விரும்புவதில்லை.அதை நையாண்டி செய்கிறார்.
    ஜெயேந்திரனின் இறுமாப்பு இந்த வகையில் சார்ந்தது அல்ல.மனிதனை பேதம் பிரிப்பது போல் அவன் பேசும் மொழியையும் பேதம் பிரித்து ஒன்று உயர்ந்தது ஒன்று தாழ்ந்தது என்ற அகங்கார எண்ணத்தில் பிறப்பது.
    இரண்டிற்க்கும் எள்ளின் முனையளவும் ஒற்றுமை இல்லை.
    மொழியை கொண்டு பெருமை பேசி திரிபவன் காட்டுமிராண்டி என்ற பெரியாரின் கருத்து
    சமஸ்கிருதத்தை தூக்குபவனுக்கும் பொருந்தும் தமிழை தூக்குபவனுக்கும் பொருந்தும்.
    தமிழை காட்டுமிராண்டி என்று அவர் சொன்னது தமிழை கொண்டு பிழைப்பு நடத்துபவரையே…

    அதே பெரியார் தான் தமிழுக்கு எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தார்.
    எந்த ஒருவரின் செயலுக்கும் பின் உள்ள நோக்கம் அறியுங்கள் சகோதரர்களே

  22. பெரியாரின் மொழிப்பார்வை பகுத்தறிவின்பாற்பட்டது.இங்கே பகுத்தறிவு என்பதே கடவுள் இல்லையென்று சொல்வது மட்டுமே.பெரியாரை எதிர்ப்பவனும் இதைக்கொண்டு அவரை சுருக்குகிறான்
    அவரை ஆதரிப்பதாக சொல்பவனும் அதை மட்டும் வைத்தே அவரை சிறை வைக்கிறான்.
    மொழியை வைத்து உணர்ச்சியை தூண்டி ஊளையிடும் பைத்தியங்களுக்கு ஏது பகுத்தறிவு?
    இன்றைய காலத்திற்க்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்க்கு பெரியார் மிகவும் தேவைப்படுகிறார்.
    அவரை மிகச்சரியான பார்வையில் பார்த்து சமூகத்திற்க்கு கொண்டு சேர்க்கும் மிகப்பெரும் பொறுப்பு அவரை ஆதரிப்பவருக்கு இருக்கிறது.தயவு செய்து அவரை குறுக்கி எதிரியின் சூழ்ச்சிக்கு இரையாகிவிடாதீர்.

  23. அப்பாடா ஒரு வழியாக எல்லோரும் கொந்தளித்து முடித்து விட்டார்கள். என்னால் முடிந்தளவுக்கு எல்லோருக்கும் இப்பதிவில் விடை அளிக்கிறேன்

    // மொன்னை வாதம் மூல சிருமைபடுத்த அட்வோகேட், மீரன்பாய் மற்றும் அகைன்ஸ்ட்டு பேக்கு என சங்கமித்து நிற்கும் அதிசயத்தை பாரும். //

    சின்னாவுக்கு ‘அவர்’ சொல்வதை தவிர மற்றவர்கள் சொல்வது அனைத்துமே ‘மொண்ணை’ வாதங்கள் தான்

    @@Karthikeyan

    // முட்டாள் மாதிரி யோசிக்காமல் அறிவார்ந்து சிந்தியுங்கள் // நான் முட்டாளாகவே இருந்துவிட்டு போகிறேன். ஆனால் படித்த புத்திசாலிகள், அறிவாளிகள் ‘பகுத்தறிவாதி’ என்று ‘ராமசாமியை’ எப்படி ஏற்றுக்கொண்டனர் ?

    இது வரை எந்த புத்திசாலியும் ‘ராமசாமி’ “ஏன் 72 வயதில்” திருமணம் செய்து கொண்டார் என்று விளக்கவில்லையே ? இதை நேரம் கிடைக்கும் போது எனக்கு விளக்குங்கள். நானும் படித்து தெளிகிறேன்

    // ஒரு குழந்தையை தாயார் கண்டிப்பதற்கும் மூன்றாம் நபர் கண்டிப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான். ஏன் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூடத்தான் சொன்னார். //

    பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்களே. மூன்றாம் நபர் (தமிழர் அல்லாதோர்) என்பதாலே தானே ‘தமிழ் காட்டுமிராண்டி’ பாஷையானது?

    ‘ராமசாமி’ கன்னடத்தை (அல்லது) தெலுங்கை அப்படி சொல்லி இருக்கலாமே ? (அல்லது) ‘கன்னடம்’, ‘மலையாளம்’ மற்றும் ‘தெலுங்கை’ அவர் ஏன் ‘காட்டுமிராண்டி பாஷை’ என்று சொல்லவில்லை ?

    இல்லை அப்படி எல்லாம் கிடையாது என்றால் தாராளமாக மறுத்து பேசவும்.

    @@Kumar

    // அது அவரின் கருத்து என்று ஏற்க்க ஏன் உங்களால் முடியவில்லை..? எதுக்கு மன்னிப்பு கேட்கனும் என்கின்றேன்? //

    இதே போன்று பொது மேடையில் யார் எந்த கருத்தை பேசினாலும் ‘அவர் கருத்து’ என்று விட்டுவிடலாமா (அல்லது) ராமசாமிக்கு மட்டும் இந்த சலுகை பொருந்துமா ?

    மேடையில் இருப்பவர்கள், audience எல்லாம் முட்டாள்கள் ‘ராமசாமியை’ தவிர

    // பெரியார் தமிழ் தாய் வாழ்த்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்தார் என்று உங்களால் நிருபணம் செய்ய இயலுமா? //

    நான் எப்போது ‘ராமசாமியை’ பற்றி இப்படி சொன்னேன். அதை ‘copy / paste’ செய்யவும்

    @@ஐயா சின்னா

    // இப்போது சொல்கிறேன் தமிழ் மட்டுமல்ல எதற்கும் புனித பிம்பம் கொடுப்பது அடி முட்டாள்தனமே! //

    நீங்கள் முழுப்புல்லை மேய்ந்தவர் என்று எனக்கு தெரியும். என்னால் முடிந்தவரை சொல்கிறேன்.

    ‘மொழி என்பது வெறும் கருவி எல்லாம் கிடையாது’. ‘ராமசாமிய’ பின்தொடர்பவர்களுக்கு அது வெறும் கருவி தான். நீங்கள் பகுத்தறிவாதிதானே ?

    மொழி என்பது ‘உங்கள் எண்ணங்களை / புலன்களை’ இயக்க வல்லது

    உதாரணமாக உங்களை யாரவது திட்டினால் உங்களுக்கு ‘கோபம்’ வரும் தானே ? உங்களை பற்றி பாராட்டி பேசினால் நீங்கள் ‘மகழ்ச்சியடைவீர்கள்’ தானே ?

    மொழி என்பது ஒரு இனத்தின் ‘பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின்’ அடையாளம். உதாரணமாக ‘தமிழர்கள்’ கொண்டாடும் ‘பொங்கலுக்கும்’ , ‘தெலுங்கர்கள்’ கொண்டாடும் ‘மகர சங்கராந்திக்கும்’ வழிபாட்டு முறைகளில் வேறுபாடு உண்டு.

    ராமசாமிக்கு வேண்டுமானால் ‘எதுவுமே’ (எதுவுமே) புனிதம் இல்லாமல் இருக்கலாம்.

    // அப்போ தமிழ்த்தாய் வாழ்த்து அச்சு பிசகாமல் பாடமாய் இருந்ததால் தான் சபைநாகரிகத்தை கூட கணக்கில் எடுக்காமல் அவமதித்த பயலை விமர்சிக்கனுமா? இப்போ நீங்க என்ன தான் சொல்லவரிங்கோ? //

    ஆகா கேள்வியே விளங்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தும் யாருக்கும் முழுமையாக தெரியவில்லை.

    // விஜயேந்திரனை பற்றிய விமரிசனமெல்லாம் அனைவரும் எந்திருக்கும் பொது உனக்கென்னடா சிறப்பு ‘தியான’ ஒளிவட்டம் ?? என்பதை பத்தியது. //

    நான் மட்டும் என்ன ஐயா சொல்லி இருக்கிறேன். // ADVOCATE RANGARAJAN comment #2 வோடு நானும் ஒத்துப்போகிறேன் //

    // இப்போ எது முட்டாள்தனம்னு புரிஞ்சுதா?? இனி மேலும் இப்பிடி மொன்னை வாதங்கள் மூலம் பெரியாரை சிருமைபடுத்த சிறுமதி கொண்ட நீங்க முயற்சித்து அசிங்க படவேண்டாம். //

    உங்களுக்கு புரிஞ்சா சரி. ராமசாமி யாரு, அவர் பகுத்தறிவாதம் என்ன, அவர் பெண்ணியத்தை எப்படி எல்லாம் நிலைநாட்டினார் என்று. முதலில் நீங்கள் ராமசாமியின் மறுபக்கத்தை பற்றி படித்து தெளிவாகுங்கள். பிறகு எனக்கு பாடம் எடுக்கலாம்

    நன்றி

  24. //இது வரை எந்த புத்திசாலியும் ‘ராமசாமி’ “ஏன் 72 வயதில்” திருமணம் செய்து கொண்டார் என்று விளக்கவில்லையே ? இதை நேரம் கிடைக்கும் போது எனக்கு விளக்குங்கள். நானும் படித்து தெளிகிறேன்//

    ராமசாமி 72 வயதில் ஏன் திருமணம் செய்து கொண்டார் என்பது பற்றி உமக்கு என்ன அக்கறை?
    திருமணம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பம் உரிமை.
    அவர் யாரையும் கடத்தி கொண்டு போய் கட்டாய திருமணம் செய்து கொண்டாரா?அப்படி ஏதேனும் குற்றச்சாட்டோ வழக்கோ அவர் மேல் இருக்கிறதா?
    ஒரு பெண் அவரை விரும்பி திருமணம் செய்து கொண்டார் அவரும் அதை ஏற்று மனைவியாக்கி கொண்டார்.
    இது அவர்கள் இருவருக்குமான தனிப்பட்ட விருப்பம் உரிமை.இதில் உமக்கு என்ன புகைச்சல்.

    கள்ள்தனமாய் ஒருவன் ஒரு பெண்ணை அல்லது பல பெண்களை வப்பாட்டியாய் வைத்துக்கொள்கிறான்
    அது குற்றமில்லை இல்லையா…
    தன் உடல் தேவை தீர்ந்துபோன தள்ளாத வயதில், மணவாழ்க்கையில் விருப்பமற்று இருந்த ஒரு பெண், சேவை செய்தலே தனக்கு போதும் என்ற நிலையில் தானாக வந்து ஒருவரை மணந்து கொள்ளுதல் தவறா..
    ஆசிரமம் என்ற பெயரில் ப்ல இளம் பெண்களை நிர்வானமாக போட்டுக்கொண்டு தானும் அவர்களோடு கிடந்து கொண்டு ” மனக்கட்டுப்பாடு பயிற்ச்சி பெறுகிறேன்” என்று சொன்னவரும் இந்நாட்டின் தேசத்தந்தையாக ஆக்கப்பட்டிருக்கிறார்
    இதைப்போலவே ஆன்மீக வேடம் தரித்து ஆசிரமும் அமைத்துக்கொண்டு பல இளம்பெண்களின் கற்பை சூரையாடுகிற சாமியார்களும் ( எல்லா மத சாமியார்களும்தான்)பல உண்டு.

    இவர்களுக்கு மத்தியில் ஊரறிய உலகறிய பகிரங்கமாக ஒரு பெண்ணை மனைவி என்ற தகுதியோடு வாழ்க்கை துணை ஆக்குவது நம் சமூக அமைப்பில் சாதாரணமா…
    அதற்க்கு எவ்வளவு நெஞ்சுரமும் துணிவும் ஒளித்தல் மறைத்தல் இல்லாத நேர்மையும் வேண்டும்?

    தலைவன் தலைவன் என்று கூட இருந்த குள்ளநரி கூட்டங்களே இதையே சாக்காக வைத்து ஓடியதுங்களே…
    அவைகளுக்கு அதிகார பசி…”இந்த கிழவனை நம்பினால், பகுத்தறிவு சுயமரியாதை வெங்காயம் என்று ஊர் சுத்திக்கொண்டுதான் இருப்பான்.திரளான மக்கள் கூட்டத்தை அப்படியே ஓட்டாய் மாற்றி அரியணையை பிடிப்போம்”
    என்றுதானே இதையே சாக்காய் வைத்து தந்தை பெரியாரை கை கழுவி போனது..

    அவருக்கு தெரியாதா…இந்த புழுத்துப்போன சமூகம் இதை எப்படி எடுத்துக்கொள்ளும்….இதைக்கொண்டு நம்மை எப்படி புழுதிவாரி தூற்றும் என்று…..

    தெரிந்தேதான் செய்தார்…அவருக்கு எது சரியோ அதைச்செய்தார்.ஒழுக்கமாய் செய்தார் கண்ணியமாய் செய்தார்..
    பெரியாரின் வப்பாட்டி மணியம்மை என்ற இழிவை அந்த பெண்ணிற்க்கு அவர் தரவில்லை.
    பெரியாரின் மனைவி என்ற உயர் தகுதியை கொடுத்தார்.

    மனநோயும் முதிர்ச்சியும் அற்ற உங்களுக்கு ஒரு கண்ணியமான திருமணம் அலங்கோலமாய் தெரிகிறது…பல பெண்களோடு குலாவி அந்த பெண்களையும் நிராதரவாக்கி அவள் பெற்ற பிள்ளைகளையும் முறைதவறி பிறக்கச்செய்ய காரணமானவன் சாதாரணமாக தெரிகிறான்

    இது உங்கள் அறிவு பகுத்தறிவின்பாற்பாட்டு வராமல் பாழ்பட்டு கிடப்பதின் வெளிப்பாடு.

  25. நித்தியானந்தா, முறையாக ரஞ்சிதாவை திருமணம் செய்திருந்தால் இவ்வளவு அசிங்கப்பட்டிருப்பானா
    அவனை வீடியொ எடுத்தவன் தான் அசிங்கப்பட்டிருப்பான்.
    நரேந்திரமோடி யசோதையை மனைவியாக தன்னோடு வைத்திருந்தால் கேள்விக்கு உள்ளாகி இருப்பாரா
    மனைவி என்பது ஒரு பெண்ணிற்க்கு எவ்வளவு உயர் தகுதி?அதுவே சில தற்குறிகளுக்கு அசிங்கமாய் படுகிறது…அறிவு குறைபாடு…

    இன்றைக்கே ய்சோதாபென்னோடு வாழ பிடிக்கவில்லை என்றால் முறையாய் மணவிலக்கு செய்யட்டும்.
    ஒரு பதினெட்டு வயது பெண்ணை அவள் விரும்பினால் மணம் புரியட்டும்..
    அவர்தான் 56இன்ச்….மார்பாச்சே…
    அதை யாரும் கேள்வி கேட் க முடியாது.அவர் ஆற்றல் பெற்றவராக இருக்கிறார்.அந்த பெண்ணும்
    அவரை விரும்புகிறாள்
    இதில் வேறு யாருக்கென்ன தலையிட உரிமை.பிரதமரின் மனைவியாக அவர் கம்பீரமாக உலகம் சுற்றி வருவார்.சில பொறாமை பிடித்தவன் வெந்து சாவான்.
    அவர்கள் கணவன் மனைவியாக வாழலாம்..அல்லது நல்ல வாழ்க்கை துணைவர்களாக மட்டும் கூட இருக்கலாம்.அது அவர்களுக்க்குள் உண்டான தனிப்பட்ட விசயங்கள்.
    ஒரு ஆணோடு இரண்டர கலந்து ஒரு பெண் இருக்க விரும்பினால் அவனின் மனைவி என்ற தகுதியோடு இருப்பதே கண்ணியம் மாண்பு ஒழுக்கம்.
    சீடர் தோழி பக்தை என்றெல்லாம் பம்மாத்து காட்டுவது அசிங்கம்.
    பெரியாரின் திருமணம் ஆகச்சிறந்தது….ஆக உயர்ந்தது…

  26. மொழி மீது மரியாதையை கொள்வது வேறு, புனித படுத்துவது வேறு. ஆம் ராமசாமிக்கு எதுவுமே புனிதம் இல்லைதான், எனக்கும் இல்லைதான். உங்களுக்கு அதில் என்ன பிரச்சினை?? ‘எண்ணம்’புலனை’ மொழி வடிவமைக்கிறது தான்,அதுக்காக அது எப்படி புனிதம் அடைகிறது? நீங்கதான் விளக்குங்களேன் உள்ளதை உள்ளபடியே பார்க்க பழக்கிய முட்டாள் ராமசாமியின் சீடர்கள் எங்களுக்கு.

    //உங்களுக்கு புரிஞ்சா சரி. ராமசாமி யாரு, அவர் பகுத்தறிவாதம் என்ன, அவர் பெண்ணியத்தை எப்படி எல்லாம் நிலைநாட்டினார் என்று. முதலில் நீங்கள் ராமசாமியின் மறுபக்கத்தை பற்றி படித்து தெளிவாகுங்கள்.//
    உங்கள் குற்றசாட்டுகளை தான் கூறுங்கள் பார்ப்போம். அப்படி என்ன பெரியாரின் மறுபக்கம்?

    எனக்கு தெரிந்தவரை மனைவியை அனுப்புவாயா என கேட்டவனுக்கு அவளாக வந்தால் கூட்டிபோ செருப்பால் அடித்தாலும் வாங்கிக்கோ என செவிட்டில் அறைந்தவர். இதற்கு எதிர்மாறாக ஏதும் கதை உள்ளதா உங்களிடம்?

  27. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திரர் இன்று 28.2.18 காலை 9.05 மணிக்கு மூச்சு திணறல் காரணமாக இறந்து விட்டார்.அவர் ஆன்மா ஷாந்தி அடையட்டும்.

  28. தண்டனையிலிருந்து தப்பித்த கிரிமினல், ஒரு பொம்பிளை பொறுக்கி செத்துப்போனான் அவ்வளவுதான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க