privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராட்டத்தில் நாங்கள்DMC தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும் !

DMC தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும் !

-

 திருவள்ளூரில் இருந்து  ஊத்துக் கோட்டை  செல்லும்  சாலையில்  இயங்கி வருகின்றது  DMC ஆட்டோ மோட்டிவ் (லிட்)  என்ற  தென் கொரியா  ஆலை. இந்த ஆலையில்  21 பேர் மட்டுமே நிரந்தர தொழிலாளர்களாக உள்ளனர்.

ஐந்து முதல் எட்டு ஆண்டுகள்  வரை பணி புரியும் தொழிலாளர்கள் 56 பேர் உள்ளனர். இந்த தொழிலாளர்கள் வேலைக்கு சேர்ந்த போது, மூன்று ஆண்டுகளில் பணி நிரந்தர ஆணை வழங்குவதாக  உறுதியளித்தது நிர்வாகம்.  அதை செய்யக்கோரி நிர்வாகத்திடம் பணி நிரந்தர ஆணை கேட்ட தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கி, அடக்கு முறையை ஏவி அச்சுறுத்துகிறது .

இங்கு பணி புரியும் தொழிலாளர்கள் அனைவரும்  ஆலையை சுற்றியுள்ள கிராமங்களான நெல்வாயல்,  ஒதப்பை பூண்டி, கச்சூர், கலவை, சித்தஞ்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த  இளம் தொழிலாளர்கள்.

தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது கொத்தடிமையாக நடத்துவது என்ற நடை முறையை ஒவ்வொரு ஆலை நிர்வாகமும் ஒவ்வொரு விதமான அனுகும் முறையை கையாண்டாலும்  சாரம்சம் தொழிலாளர்களை கொத்தடிமையாக்குவதுதான் நோக்கமாக உள்ளது.  நிர்வாகமே ஒர்க்கர்ஸ் கமிட்டி ஏற்படுத்தி  தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்ப்பதாக  கூறியது. ஆனால்  தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மேற்படி கமிட்டி  நிர்வாகத்தின் ‘சொம்பாக’ செயல்பட்டது.

இந்த ஏமாற்றத்தில் இருந்து மீளவும்  பிரச்சனையை தீர்க்கவும்  தொழிலாளர்கள் சார்பாக  ஒர்க்கர்ஸ் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது, இதன் பிறகு நிர்வாகத்தின்  தாக்குதல் நாள் தோறும் அதிகரித்த வண்ணம்  இருக்கிறது. சான்றாக  தொழிலாளர்களுக்கு  வழங்கப்பட்ட  இனிப்பு  (ஸ்விட்)  குறைவாக  இருக்கின்றதே  என சகஜமாக கேட்ட தொழிலாளியை  அதிகாரியிடம்  அத்து மீறி பேசி விட்டுதாக சொல்லி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு  உள் விசராணையை  எதிர் கொண்டு வருகின்றார். இதேப் போல தொழிலாளர்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதி  ஒருவரையும் பொய் குற்றசாட்டி கூறி வேலையை பறித்துள்ளது. இப்படி தினந்தோறும் ஆலையில் பணி புரிவது என்பதே  ஏதோ  போர்க் களத்திற்கு  சென்று வருவதுப்  போல் உள்ளதாக கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

நிர்வாகத்தின் அடக்கு முறைக்கெதிராக தொழிலாளர் நீதி மன்றத்தில்  பணி நிரந்தரம் கோரும் வழக்கை நடத்தி வருகின்றனர். தங்களுக்கான  சங்கத்தையும்  பதிவு செய்யும்  நோக்கத்தோடு  செயல்படும் தொழிலாளர்களை அச்சுறுத்த  கடந்த 9.3.2018 அன்று  மாலை முன்னணி தொழிலாளர்கள்  மூன்று பேரை  எவ்வித குற்றச்சாட்டும் விசாரணையும் ஏதும் இன்றி டெர்மினேட் செய்தது. குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு  இந்நிகழ்வு  மேலும் கொதிப்பை  ஏற்படுத்தியது. மறு நாள் 10.3.2018  அன்று  இதற்கெதிராக பணி செய்ய மறுத்து  வேலை நிறுத்தத்தில்  ஈடுப்பட்டனர் தொழிலாளர்கள்.

பிறகு  ஆலை முன்பு போலீசை குவித்து தொழிலாளர்களை அச்சுறுத்தியது  நிர்வாகம். பிற்பகல் 12:00 மணிக்கு துவங்கிய பேச்சு வார்த்தை மாலை 4:00 மணி வரை நீடித்தது. பேச்சு வார்த்தையின் முடிவில் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட  மூன்று பேரை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்வது  பணி நிரந்தரம் செய்வதை பொறுத்த வரையில்  நீதி மன்றத்தில்  நடந்து வரும் வழக்கின் முடிவை  ஏற்றுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை (சட்ட விரோத பணி நீக்கத்தை  ரத்து செய்யும்  வகையில்) எழுத்துப் புர்வமாக  எழுதி தருவதாக ஒப்புக் கொண்ட  நிர்வாகம்  சதி வேலையில் ஈடுப்பட்டது.

எடுத்த முடிவுக்கு மாறாக நிர்வாகம் கொடுக்கும்  ஒவ்வொரு  கடிதத்தையும் தொழிலாளர்கள் நிராகரித்தனர். இறுதியாக  மாலை  5.30 மணியளவில்  கொடுத்த கடித்தில் டெர்மினேட் செய்யப்பட்டதை நிறுத்தி வைப்பதாக சொல்லி கொடுத்த  கடிதத்தை  தெழிலாளர்கள் நிராகரித்து டெர்மினேட் செய்ததை ரத்து செய்வதாக   திருத்தம் செய்ய வேண்டும்  கேட்ட போது நேரம் ஆகி விட்டது HR மற்றும்  மேனேஜர் எல்லாம் கிளம்பி போய்விட்டார்கள்  எனக்  கூறி திங்கள் கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்றனர் இராண்டாம் நிலையில் இருந்த அதிகாரிகள்.

வேலைக்கு எடுத்துக் கொளகின்றேன்  என சொல்லி  போராட்டத் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம்   என்ற சதியை முறியடிக்கும் வகையில் போராட்டம் தொடர்கின்றது உள்ளிருப்பு போராட்டமாக தொடரும் என அறிவித்து மறு நாள் ஞாயிறு முழுவதும் தொடர்ந்து திங்கள் கிழமையும் போராட்டம் தொடர்கின்றது. காலை நிலவரப்படி 40 தொழிலாளர்களை  20 – 25 நாட்கள்  தற்காலிக பணி நீக்கம்  செய்திருக்கிறது நிர்வாகம். உரிமையை,  வேலை பறித்து  பட்டினிக்கு தள்ளும்  முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக  போராடிக் கொண்டிருக்கின்றார்கள் தொழிலாளர்கள்.

போராடும் தொழிலாளிகளை ஆதரித்து கேட்டின் முன் நின்று பேசும் புஜதொமு தோழர் சிவா

இந்த பிரச்சனையில் நிர்வாகத்தின் யோக்கியதை  எந்தளவிற்கு கீழ்த்தரமாக இருக்கின்றது பாருங்கள் ! அதிகாரியாக இருப்பவர்கள் எல்லாம்  பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் இவர்களுக்கு அறிவு நாணயம் இருக்கின்றதா ?எடுத்த முடிவு என்ன ? எழுதிக் கொடுப்பது  என்ன ? இங்கு எப்படி  வேண்டுமானாலும் தொழிலாளர்களை ஏமாற்றலாம்  எந்த  சட்டத்திற்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்தலாம் இதைத்தான் பாசிச மோடி  வளர்ச்சி என்கிறார்.

தொழிலாளர்களின்  அடிப்படையான கோரிக்கை என்ன? மிக மிக சாதரணமான சட்டப்படியான உரிமைதான் பணி நிரந்தர கோரிக்கை இதனை தெழிலாளி வர்க்கம்  நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. துறைச் சார்ந்த அதிகார வர்க்கம் மத்திய – மாநில  அமைச்சர்கள் நீதிமன்றம் தொழிலாளர் நீதி மன்றம் என இவ்வளவு இருந்தும் தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமையை  பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

மாறாக  இந்த நிறுவனங்கள் எல்லாம்  தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதில் நோக்கமாக இருக்கின்றது. இது ஏதோ DMC தொழிலாளர்களின்  பணி நிரந்தர கோரிக்கைக்கான போராட்டம் மட்டும் அல்ல  நாடு முழுவதும் உள்ள  தொழிலாளர்களின்   நிலையும் இப்படித்தான் உள்ளது. எனவே இப்போராட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணித் தோழர்கள் நேரில் சென்று ஆதரித்து வருகின்றனர்.

இந்த அரசின் கொள்கையே தொழிலாளர்கள் மக்களின்  வாழ்வை  பறிப்பதாக உள்ளது இதற்குகெதிராக தொழிலாளி வர்க்கம் அமைப்பாக திரள்வதும்  புரட்சிகர அரசியலை கற்று போராடுவதின் ஊடாகத்தான்  முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட முடியும். !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர்  முன்னணி,
திருவள்ளுர் மாவட்டம்  ( கிழக்கு ), 94444 61480.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க