வினவு தளத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் உங்கள் பார்வைக்கு. தொடர்ந்து இணைந்திருங்கள்… ஆதரவு தாருங்கள்…

***

1. நாம் தமிழர் எனும் முள்பொறுக்கிகளின் மற்றுமொரு பலியாடுவண்டாரி தமிழ்மணி !

ந்துத்துவத்தை பல்லக்கில் சுமந்து வருகிறது பாஜக – அதற்காக பெரியாரியம் என்கிற ‘முட்களை’ அகற்றும் முள்பொறுக்கி வேலையைச் செய்து கொண்டிருக்கிறார் சீமான்.

இதற்கு ஏற்ப மொத்த கட்சியும் ஜனநாயகமற்ற நாஜிக் கட்சியின் பாணியில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த பலிபீடத்தில் தான் தமிழ்மணிகள் பலியிடப்படுகின்றனர். தலைமையின் மேல் கேள்விக்கிடமற்ற பக்தியும், உட்கட்சி ஜனநாயகமின்மையும் ஏற்கனவே கிறுக்குப் பிடித்த குரங்கிற்கு சாராயம் ஊற்றிக் கொடுத்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. (கட்டுரையை படிக்க)

***

2. ‘நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் !

டந்த ஓராண்டாக மிகக் கடுமையாக நீட்டுக்கு படித்து வந்தாள். தனியார் நிறுவனத்தில் பணம் கட்டிப் படிக்க வசதியில்லை. இரவு பகலாகப் படித்து 320 மதிப்பெண் எடுத்திருந்தாள். இந்த மதிப்பெண்ணுக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியில் அரசுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலும் இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியின் நிர்வாகக் கோட்டா அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கிடைக்கலாம். எப்படியும் வருடத்திற்கு 12 லட்சம் வரை செலவாகலாம். தர்ஷினி மருத்துவ படிப்புக் கனவைக் கைவிடும் முடிவை எடுத்திருப்பதாகச் சொன்னார்கள். வெளியூர் சென்று விட்டு மூன்று வாரம் கழித்துதான் அவளைப் பார்க்கச் சென்றேன்.

“என்ன படிக்கப் போறே தர்ஷி..”

“நர்சிங்குக்கு அப்ளை பண்ணிருக்கேன் சித்தப்பா” அவள் முகத்தில் மெலிதான சோகம் தவிர பெரிய துக்கம் ஏதும் இல்லை.

“வருத்தமா இல்லையா தர்ஷி?..”

“எனக்கென்ன சித்தப்பா… அப்பாவுக்கு முடியாம போனா நானே பார்த்துக்கனும்னு நினைச்சேன். அவங்க கைய பாத்தீங்களா? வேற யாரும் அக்கறையா பார்த்துக்க மாட்டாங்க. இப்ப என்ன? டாக்டரா இல்லாட்டி, நர்சா இருந்து பார்த்துக்கப் போறேன். அவ்ளோ தானே?” சிரித்தாள்.  (கட்டுரையை படிக்க)

***

3. கொலை செய்தது போலீசுதான் – மதுரை படுகொலையில் முதல் திருப்பம் !

டற்கூறாய்வு அறிக்கையில் போலீசு தாக்கியதால்தான் விவேகானந்தகுமார் மரணமடைந்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. அதில் “இரண்டிலிருந்து ஆறு வரை உள்ள நெஞ்சு எலும்பு உடைந்திருக்கிறது என்பதும் அவரது மரணத்திற்கு முன்பே, கையில் லத்தியின் அளவுக்கு காயம் (லத்தியால் தாக்கியதால்) ஏற்பட்டதையும்,  மண்டை உடைந்து காதில் ரத்தம் வழிந்துள்ளதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உடற்கூறாய்வு அறிக்கை மூலம், நெஞ்சு எலும்பு உடைந்ததற்கு காரணம் லத்தியைக்கொண்டு அடித்ததுதான் என்பது உறுதியாகியிருக்கிறது. (கட்டுரையை படிக்க)

***

4. பருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் !

பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றம் குறித்த முன்னெச்சரிக்கை திட்டங்கள் எதுவும் இவர்களிடம் இல்லை.

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் 30% குறைந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதன் காரணமாக ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே எந்தவொரு ஆய்வின் முடிவும் தெரிவிக்கும் உண்மை. (கட்டுரையைப் படிக்க)

***

5. சேலம் ஆட்சியர் ரோகிணியின் மறுபக்கம் !

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கன்வாடி மற்றும் சத்துணவு பிரிவில் இருந்து ஒருவர் கூடக் கலந்து கொள்ளவில்லை. காரணம், ஆட்சியரிடம் இருந்து இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிரட்டல். போராட்டத்தில் கலந்து கொண்டால் வேலையை விட்டு நீக்கப்படுவீர் என்ற வகையில் மிரட்டல் சென்று உள்ளது.

ஆனால் ஆசிரியர்களுக்கு இந்த மிரட்டல் செல்லவில்லை, காரணம் ஆசிரியர்களிடம் இந்த மிரட்டல் செல்லுபடி ஆகாது என்பதும், அதே நேரத்தில் தனக்கு எதிராகத் திரும்பும் என்பதும் ரோகிணிக்கு நன்றாகத் தெரியும். (கட்டுரையைப் படிக்க)

***

6. நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

வற்றையெல்லாம் காணச் சகிக்காத முற்போக்கு மாணவர்கள் சிலர், ‘’கல்லூரி கலையரங்கமா, மோடியின் விளம்பர இடமா’’ என்று கேள்வி எழுப்பி அரங்கம் அதிர கலகம் செய்தனர். ‘’எக்ஸாம் ஸ்ட்ரசுக்கா நடத்துறியா? எலெக்சன் ஓட்டுக்கா நடத்துறியா?’’ என்ற முழக்கங்களை எழுப்பினர். முற்போக்கு மாணவர்களுக்கு ஆதரவாக, கூடியிருந்த மாணவர்கள் எழுப்பிய கரவொலியும் விசில் சத்தமும் காதை பிளந்தது. மோடியின் நேரலை நிகழ்வும் அத்தோடு நிறுத்தப்பட்டது. மாணவர்கள் உற்சாகத்தோடு கலைந்து சென்றனர். (கட்டுரையை படிக்க)

***

7. வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !

ராட்டிய மாநிலத்தின் பீட் நகரத்தில் குடிநீர் காலியாகி, உடைகளை துவைக்கவும், குளியல் – கழிப்பறை தேவைகளுக்குமான நீர் கூட இல்லை. தேவையான நீரைக் குடிக்காததினால் வரும் வெப்ப நோய்களாலும், மாசடைந்த நீரைக் குடிப்பதனால் வரும் வயிற்றுப் பிரச்சினைகளாலும் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வருகின்றன.

நகரத்தின் வசதி வாய்ந்த நடுத்தர வர்க்கம் ஆயிரம் லிட்டர் நீரை சுமார் 265 ரூபாய்களுக்கு தனியார் நீர் வணிகர்களிடமிருந்து பெற்று வருகின்றனர். கூடவே மருத்துவமனைகளுக்கு வரும் கூட்டமும் அதிகரித்து வருகிறது. சேறு கலந்த நிரை குடிப்பதற்கு மாடுகளே மறுத்து வருகின்றன. இந்த சேறு கலந்த நீர் வறண்டு போன அணைகள், குளங்களில் கொஞ்சம் இருக்கின்றன. (கட்டுரையை படிக்க)

***

8. அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு

தெப்பக் குளத்தில் மூழ்கியிருந்து விட்டு நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை அவர் வெளியே வந்து தரிசனம் கொடுப்பதாக ஒரு புரட்டை பார்ப்பன பீடங்கள் அவிழ்த்து விட்டன. வரலாற்றின்படி இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. தமிழகத்தில் அரசியல் ரீதியாக வெற்றி பெற முடியாத இந்துத்துவக் கூடாரமும், பார்ப்பன கிச்சன் கேபினட்டும் இணைந்து இந்த அத்தி வரதர் கூத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

இந்தப் புரட்டுக்கு அடிமை எடப்பாடி அரசு ஓகே சொல்லி, பிறகு ஊடகங்கள் அதுவும் பார்ப்பன ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அத்தி வரதரைப் பற்றி இத்துப் போன கதைகளை பலவற்றை வெளியிட்டு வருகின்றன. பிறகு தினமும் இலட்சக்கணக்கானோர் காஞ்சிபுரம் வருகின்றனர் என்று ஊடகங்கள் கொளுத்திப் போட்டன. (கட்டுரையை படிக்க)

***

9. அசோக் லேலண்ட் : அநியாயமான வேலைநாள் பறிப்பும் சம்பள வெட்டும் !

திய  உயர்வுக்காக 6-வது நாள் சட்ட உரிமையை அடகு வைக்கக்கூடாது என்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிரசுரம், அவசரக்கடிதம், சுவரொட்டி  மூலம் கருத்துக்கள் வெளியிட்டதை மீறி கி.வெ. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுதான் விவாதிக்க வேண்டிய விசயம். திரு.கி.வெ அவர்கள் மாற்று சிந்தனையாளர் அல்ல. மாறாக, முதலாளித்துவ சிந்தனையாளர் என்பதைத் தாண்டி நேர்மையில்லாதவர் என ஏன் சொல்ல வேண்யுள்ளது என்றால் “6thday”-வின் பாதகமான மிகைஉற்பத்தி, சம்பளவெட்டு,  ஆட்குறைப்பு ஆகியவற்றை மறைத்தார் என்பதால்தான், இவருக்கு அறப்பார்வை கொண்டவர், நெருப்பு போன்ற நேர்மையாளர், சிறந்த ஆளுமை கொண்டவர் என்று  ‘ஒளிவட்டம்’ போடப்பட்டது. ஆனால், ஒரே ஒப்பந்தத்தில் கட்டியெழுப்பப்பட்ட பிம்பங்கள் இரண்டே ஆண்டுகளில் முதலாளித்துவத்தாலே தகர்ந்து போனது.

திரு.கி.வெ. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, “ ‘win – win’ – என் பாலிசி, மற்ற தலைவர்கள் சரியில்லை, இதயத்தோடு பேசுகிறேன்” என்று தேன் தடவி பேசினாலும் முதலாளித்துவ சுரண்டல், வஞ்சகத்தை எத்தனை நாளைக்கு மறைத்திட முடியும் (கட்டுரையை படிக்க)

***

10. சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !

“ஒரு மணி நேரம் எங்கண்ணன் காட்டுக் கத்து கத்தியும், சோத்து மேட்டரை மட்டும் பிடித்துத் தொங்கினால் எப்படி?” என்று நாதக தம்பிமார்கள் மனங்கோணி விடக் கூடாது. கடந்த பத்தாண்டுகளில் அண்ணன் நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசியிருந்தாலும் எல்லா மேடைகளிலும்  “புஹாஹாஹா” “வாய்ப்பில்ல ராஜா” “தொலைச்சிபுருவேய்ன்” “பிச்சிப்புருவேய்ன்” “கிழிச்சிப்புருவேய்ன்” “அடிச்சிப்புருவேய்ன்” “தீர்த்துப்புருவேய்ன்” “கொண்டேடேடே….புருவேய்ன்” போன்ற  வழக்கமான தத்துவங்களையே வெளிப்படுத்தி வருகின்றார். இடைக்கிடையே அண்ணன் முன்வைக்கும் இது போன்ற சைடுடிஷ்கள் தான் நமக்கு  சுவாரசியமூட்டுகின்றன.

மேற்படி பேச்சுக்கு தம்பிமார்கள் கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். மண்டையில் மூளை என்கிற வஸ்து இருக்கிறவர்களால் எப்படி இதற்கெல்லாம் கைதட்ட முடியும் என்கிற சந்தேகம் சமீப நாட்கள் வரை நமக்கும் இருந்தது; ஆனால் இந்த தம்பியின் பராக்கிரமத்தை படித்த பின் அந்த சந்தேகம் நீங்கியது. (கட்டுரையைப் படிக்க)

தொகுப்பு :