Monday, March 17, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by பொம்மி

பொம்மி

பொம்மி
155 பதிவுகள் 0 மறுமொழிகள்

கலவரத்திற்கு பாஜக அரசுதான் காரணம்: மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ

1
ஆளும் பாஜக அரசு குக்கி மக்களைத் திட்டமிட்டுத் தாக்கி வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு என்பதை மூடுதிரையாகப் பயன்படுத்தி காடுகளிலும் மலைகளிலும் இருந்து குக்கி மக்களை அகற்றும் பணியைச் செய்து வருகிறது.

மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!

0
மணிப்பூரின் பயங்கரத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதென்பது ஒரு திசைதிருப்பலாகும். இதைத்தான் பிரதமர் மோடி செய்கிறார். மணிப்பூர் வன்முறையை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை மறைக்க முயல்கிறார்.

தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!

0
கிடங்கின் குறுக்கே உள்ள பல்வேறு அடுக்குகளில் இருந்து குறிப்பிட்ட பொட்டலங்களைக் கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டியது நிஷாவின் பணி. பணியின்போது அவர் ஓய்வின்றித் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் நடக்க வேண்டும்.

பட்டினியால் வாடும் 78.3 கோடி மக்கள் – புழுத்து நாறும் முதலாளித்துவம்!

0
கடந்த ஆண்டு (2022) 240 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் 29.6 சதவிகிதம் பேர், தங்களுக்கு தேவையான சரியான உணவைப் பெற முடியவில்லை. அதில் 90 கோடி பேர் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 78.3 கோடி பேர் பட்டினி கிடந்தனர்

மகாராஷ்டிரா: சங்கிகளின் பேச்சைக்கேட்டு நமாஸ் செய்வதைத் தடை செய்த கலெக்டர்!

0
வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் சொத்து பிரச்சினைகள் தொடர்பாக எழும் சர்ச்சைகளை வக்பு வாரியத்தைத் தவிர வேறு எந்தத் துறையும் விசாரிக்க முடியாது என வாரியத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி ஜுனைத் சையத் இப்பிரச்சினை குறித்துப் பதிலளிக்கையில் கூறியுள்ளார்.

கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!

0
எம்.எல்.ஏ-க்களின் குதிரை பேரமும் கட்சித் தாவல் நடவடிக்கைகளும் முந்தைய அரசாங்கங்களின் போதும் நடைபெற்றுள்ளன. ஆனால் பாசிச பா.ஜ.க அரசு அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!

0
தனது பிம்பம் உடைபட நேரிடும்போது அதற்குக் காரணமானவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது; ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. உண்மை கண்டறியும் குழுவினரும் இதற்கு விதிவிலக்கல்ல.

இட ஒதுக்கீட்டைத் தடை செய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

0
இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் இந்த அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது கறுப்பின மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகும். அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் இனப் பாகுபாட்டைப் பாதுகாத்து நிலை பெறச் செய்வதற்கான பாசிச‌ இனவெறி நடவடிக்கையாகும்.

பீகார்: ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் மீண்டும் ஒர் படுகொலை!

0
பீகார் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1955, பசுக்கள் மற்றும் கன்றுகளை கெல்வதைத் தடை செய்கிறது. இது போன்ற பசுவதை தடைச் சட்டங்கள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த ஏதுவாக இருக்கின்றன.

இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் சங்கப் பரிவாரத்தின் ஆதரவும்!

0
பாலாசாகேப் தியோராஸ் (Balasaheb Deoras) என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் அப்போதைய சர்சங்சாலக்கான மதுகர் தியோராஸ் (Madhukar Deoras) எரவாடா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதியுள்ளார்.

ஜனநாயகத்தை மறுக்கும் தெற்காசிய பல்கலைக்கழகம்!

0
“பேராசிரியர்கள் தெற்காசியப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மார்க்சிய படிப்பு வட்டமான அய்ஜாஸ் அகமது படிப்பு வட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா?” என்று பல்கலைக்கழகம் விளக்கம் கேட்கிறது. பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் படிப்பு வட்டங்கள் செயல்படுவதென்பது ஒரு இயல்பான நிகழ்வாகும்.

உணவு தானியங்கள் குறைப்பு: காஷ்மீர் மக்களை பஞ்சத்திற்குள் தள்ளும் மோடி அரசு!

0
ஆகஸ்ட் 2021-இல் ஒதுக்கீடு 5,10,000 குவிண்டாலாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜே.கே.எஃப்.இ.எஸ் திட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒதுக்கீடு 4,55,000 குவிண்டாலாகக் குறைத்தது. பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து 2023 ஜனவரியில் 2,83,051 குவிண்டால் ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டது.

இந்து ராஷ்டிரமாக உருவெடுத்து வருகிறது உத்தரகாண்ட்!

0
உத்தரகாண்ட் ஒரு ‘தேவபூமி’ என்ற கருத்தாக்கத்தின் மூலம் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்துத்துவ சாமியார் சுவாமி ஆதி யோகி கூறுவது போல், 2024-இல் இந்து ராஷ்டிரம் அமைக்கும் பணி உத்தரகாண்டில் இருந்து துவங்கும் நிலைதான் அங்கு நிலவுகிறது.

“இந்தியா… திரியை கொளுத்திப் போட்டது யார்?”: அல் ஜசீரா ஆவணப்படத்திற்குத் தடை!

0
‘தீய விளைவுகளை’ ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த ஆவணப்படத்தை எதிர்த்துத் தொடுக்கப்பட்டுள்ள மனுவை விசாரித்து முடிக்கும் வரை ஒளிபரப்புவதற்குத் தடை விதிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், சட்டப்படி செய்தி சேனல்கள் ஆவணப்படங்களை வெளியிட எவ்வித சான்றிதழையும் பெறவேண்டியது இல்லை.

காவிமயமாகும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள்: தங்களது பெயர்களை நீக்கக்கோரும் தலைமை ஆலோசகர்கள்!

0
“சிதைக்கப்பட்ட, கல்வி ரீதியாக முடமாக்கப்பட்ட இந்த பாடப்புத்தகங்களில் எங்கள் பெயர்களைத் தலைமை ஆலோசகர்கள் என குறிப்பிடுவதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம்” என்று பால்சிகர் மற்றும் யாதவ் கூறியுள்ளனர்.