Friday, February 7, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by பொம்மி

பொம்மி

பொம்மி
155 பதிவுகள் 0 மறுமொழிகள்

இஸ்ரேல் நர வேட்டை — ஜபாலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல்!

0
“நான் ரொட்டி வாங்க வரிசையில் காத்திருந்தபோது, திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி ஏழெட்டு ஏவுகணைகள் வந்து விழுந்தன. தரையில் ஏழெட்டு பெரிய துளைகள் உருவாயின. கொல்லப்பட்டவர்களின் பிணங்களும், உடல் பாகங்களும் அப்பகுதியெங்கும் நிறைந்திருந்தன. அது உலகத்தின் முடிவு போலக் காட்சியளித்தது”

காசா: பாலஸ்தீன தாய்மார்களுக்கு பால் சுரப்பதே நின்றுவிட்டது!

0
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் பெண்கள், தங்களுக்குப் பால் சுரப்பதற்குக் கூடுதலாக நீர் அருந்த வேண்டிய தேவையுள்ளது. ஆனால், போதுமான குடிநீர் கிடைக்காததால்‌ பல தாய்மார்களுக்குப் பால் சுரப்பதே நின்று போய்விட்டது.

நியூஸ் கிளிக் எஃப்.ஐ.ஆர் நகலை எரிக்கப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

0
ஊடகங்கள் செய்ய வேண்டிய கடமையை மட்டுமே நியூஸ் கிளிக் செய்தது. நியூஸ்கிளிக் மூலம் பெறப்பட்ட பயங்கரவாத நிதியுதவி கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டது என்ற வதந்தியைப் பரப்பி, அதன்மூலம் விவசாயிகள் போராட்டம் மக்கள் விரோதமானது, தேச விரோதமானது என்று சித்தரிக்க பாஜக அரசு இந்த கேலிக்கூத்தான எஃப்.ஐ.ஆர்-ஐ பயன்படுத்துகிறது.

காசா மீதான போரைக் கண்டித்து அமெரிக்க வெளியுறவுத்துறை இயக்குனர் ராஜினாமா!

0
”வாஷிங்டன் (அமெரிக்கா) பல பத்தாண்டுகளாக செய்து வரும் அதே தவறை, ஜோ பைடன்‌ நிர்வாகமும் தொடர்ந்து செய்து வருகிறது. இனிமேலும் நான்‌‌ அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை.”

பிக் பாஸும் பவா செல்லத்துரையும்

0
தங்களின் சுய விளம்பரத்திற்காக, சமூக சீரழிவை ஏற்படுத்துவதும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக நடத்தப்படுவதுமான பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்த சமூகப் பொறுப்பற்ற பிழைப்புவாத நடவடிக்கையைத் தான் நாம் கண்டிக்கின்றோம்.

லிபியா பேரழிவு: இரத்தவெறிபிடித்த அமெரிக்காவும் நேட்டோவுமே முதல் குற்றவாளிகள்!

0
லிபியாவில் கடாஃபியை ஒழித்துக் கட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்கா ஊட்டி வளர்த்தது. அதன் காரணமாகத்தான் லிபியாவில் தற்போது வரை உள்நாட்டுப் போர் தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போர் சூழலால்தான் லிபியாவில் ஒரு நிலையான அரசு அமையவில்லை. இதனால் லிபியாவின் பெரும்பாலான பகுதிகள் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கியுள்ளன.

“ஒரே நாடு, ஒரே தேர்தல்”: பூச்சாண்டி காட்டும் பாசிஸ்டுகள்!

0
முன்னதாக, ”இந்தியா கூட்டணி” கூடிய போது பா.ஜ.க-வும் லெட்டர் பேட் அமைப்புகளையும் உள்ளடக்கிய என்.டி.யே (NDA) கூட்டணியைக் கூட்டி கவனத்தை தன்பக்கம் ஈர்க்க முயன்றது. இந்தியா கூட்டணி மீண்டும் ஆகஸ்ட் 31 அன்று கூடியபோது, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு எதிர்க்கட்சிகளுக்கு “ஒரே நாடு, ஒரே தேர்தல்” பூச்சாண்டி காட்டுகிறது.

“தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!

0
”காஷ்மீர் வாலாவின் கதை காஷ்மீர் பகுதியில் பத்திரிகை சுதந்திரத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய கதையாகும். கடந்த 18 மாதங்களில், எங்கள் வாசகர்களான உங்களைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டோம். காஷ்மீர் வாலாவை 12 ஆண்டுகளாக ஆர்வத்துடன் படித்து ஆதரவளித்த இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு நன்றி”

முசாஃபர்நகர் முஸ்லீம் மாணவர் மீதான தாக்குதல்: பாசிசம் வேரூன்றியிருப்பதன் சமிக்ஞை

0
நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பின் விளைவாகத் தான் தனது மகன் மோசமாக நடத்தப்பட்டதாக இர்ஷாத் கூறினார். இர்ஷாத்தின் கூற்று முற்றிலும் சரியானது என்பதை இக்காணொளியில் உள்ள ஆசிரியரின் கருத்துகள் நமக்கு உணர்த்துகின்றன.

அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்

0
உதவிப் பேராசிரியர் தாஸ் அவர்களின் ஆய்வுக் கட்டுரையை பாசிச பா.ஜ.க கடுமையாக எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் அவர் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டுள்ளார். இதைக் கண்டிக்கும் விதமாக பொருளாதாரப் பேராசிரியரான புலப்ரே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!

0
இச்சட்ட மசோதா, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்கிவைக்கிறது. தலைமை நீதிபதிக்கு மாற்றாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினட் அமைச்சரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்கும் வகையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா: புல்டோசரைக் கொண்டு முஸ்லீம்கள் மீது அரசு நடத்தும் மதவெறி தாக்குதல்

0
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் முஸ்லீம்களுக்குச் சொந்தமான 400-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், உணவகங்களை ஹரியானா பா.ஜ.க அரசு இடித்துள்ளது.  இது குறித்துப் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராமன் மாலிக் பொது நிலங்களில் இருந்த ’சட்டவிரோத ஆக்கிரமிப்புகள்’ அகற்றப்பட்டு வருவதாகவும், கலவரத்திற்கும் தங்கள் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமிராகப் பேசியுள்ளார்.

புள்ளிவிவரங்களைத் திரிக்க மறுத்தால் இடைநீக்கம்!

0
மோடிக்கு ’வளர்ச்சி நாயகன்’ என்ற பிம்பத்தைக் கட்டமைத்து, அதனைத் தனது தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வியூகம் வகுத்திருந்தது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல். ஆனால், ஐ.ஐ.பி.எஸ் வெளியிட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 (என்.எஃப்.எச்.எஸ் -5) அதற்கு ஏதுவாக இல்லை.

ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அண்ணாமலையின் யாத்திரை!

1
ராமநாதபுரம் முழுவதும் ”என் மண் என் மக்கள்” யாத்திரையைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், ”பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?” என்று அண்ணாமலையைப் பார்த்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ரோஹிங்கியா அகதிகளை சித்திரவதை செய்யும் பாசிச மோடி அரசு!

0
ரோஹிங்கியா அகதிகளால் ஜம்மு பகுதி முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்டதாக மாறிவிடும் என்று கூறி, பா.ஜ.க-வும் சங்க பரிவார கும்பல்களும் ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றன.