Saturday, May 10, 2025
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் அடிமை எடப்பாடி அரசைக் கண்டிக்கின்றனர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பீட்டர் அல்போன்ஸ்.
சிந்திய குருதியில் எங்கள் வீரம் புதையுமா? நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா? புதைந்தது உடலல்ல விதையான வீரமடா! - ம.க.இ.க. பாடல்
துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தவே NSA அடக்குமுறை! கண்டிக்கிறார்கள், சென்னைப் பல்கலை கழக பேராசிரியர் வீ. அரசு; திராவிடர் விடுதலை கழகத்தின் விடுதலை இராசேந்திரன் மற்றும் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.
மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது ! சேலத்தில் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று பேட்டியளித்த மக்கள் கைது ! இது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையன்றி, வேறென்ன? அம்பலப்படுத்துகிறார்கள், டி.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) மற்றும் வீ.சுரேஷ், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.
மக்கள் அதிகாரத்தின் குரல்வளையை நெறிப்பது; அவர்களின் போராடும் உரிமையை, கூட்டம் போடும் உரிமையை மறுப்பதன் மூலம் அநீதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதை தடுக்க முனைகிறது, அரசு. - சங்கரசுப்பு.
போராடும் மக்களுக்கு தேவையான உதவிகளை ஆலோசனைகளை வழங்குவது தேச விரோதக் குற்றமா? தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்று இந்த அடக்குமுறையை முறியடிப்போம். – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு கண்டன உரை.
வெள்ளிவிழா கொண்டாடும் கீழைக்காற்று பதிப்பகம் இதுவரை கடந்துவந்த பாதைகளை பற்றி, வாசகர்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், தோழர் துரை சண்முகம். பாருங்கள், பகிருங்கள்!
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக மக்கள் அதிகாரம் தோழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலீசு. இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் 11.06.2018 அன்று தோழர் காளியப்பன் பேசுகிறார்.
காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல இவை திட்டமிட்டு நடத்தப்படும் போர் என்பதை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் ஏப்ரல் - 2018 இதழில் வெளியான தலையங்கம்.
“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு - கருத்தரங்க நிகழ்வில் பேராசிரியர் ஜெ.அமலநாதன், பேராசிரியர் சி.சாந்தி, வழக்கறிஞர் சு.மில்டன், பேராசிரியர் ப.சிவக்குமார் மற்றும் தோழர் கணேசன் ஆகியோர் ஆற்றிய உரை.
“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு - கருத்தரங்க நிகழ்வில் பேரா. கருணானந்தன் மற்றும் பேரா. அ.சீனிவாசன் ஆகியோர் ஆற்றிய உரை...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழுவினரின் கண்டுபிடிப்புகள் குறித்து பேராசிரியர் அ. மார்க்ஸ் விளக்குகிறார். இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல் நேரலை: https://www.facebook.com/vinavungal/videos/10156274704114336/
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியாணவர்களின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களின் உறுதியான போராட்டம்தான் அரசை பீதியடையச் செய்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் எழுத்தாளர் நிர்மலா கொற்றவை, எழுத்தாளர் அஜயன் பாலா, ஊடகவியலாளர் செந்தில், சினிமா கலைஞர் சீனு இராமசாமி.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகர்கள் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன் - ஆகியோரிடம் 25.05.2018 மாலை எடுக்கப்பட்ட பேட்டி. (பாகம்-1)

அண்மை பதிவுகள்