மதுரையில் ஆடு பூனைக்கு வரி
குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை | புகார் மனு
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
புதிய ஜனநாயகத்தின் மார்ச் 2025 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
தோழமையுடன்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 13 | 1988 மே 15-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 12 | 1988 மே 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 11 | 1988 ஏப்ரல் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 10 | 1988 ஏப்ரல் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இப்போது ஆளுமையில் இருப்பது, திராவிட அரசியலோ, தேசிய அரசியலோ அல்ல. பொறுக்கி அரசியல். இப்போது நடக்கும் அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அவற்றிலே பேசப்படும் வசனங்கள் – வசவுகள், பேசும் பேச்சாளர்கள், கூடும் மக்கள் போடும் கோஷங்கள், அவற்றை ஏற்பாடு செய்யும் அணிகள் பொறுப்பாளர்கள், இந்த விவரங்களை நிரப்பிக் கொண்டு வரும் செய்தித் தாள்கள்-பத்திரிக்கைகள் இவை அனைத்தும் காட்டுவது பொறுக்கி அரசியலின் ஆளுமையைத்தான்!
“நாட்டில் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது” என்று ஒரு ஓரத்தில் ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும் மெத்தப்படித்த அறிவாளிகளின் கூட்டம் இந்தப் பொறுக்கி அரசியலைச் சகித்துக் கொள்ளவும், அதனுடன் வாழ்வும், அதையே ரசிக்கவும்கூடப் பழகி விட்டார்கள். கும்பலை ஈர்ப்பவர் (Crowd Pullers) – கவர்ச்சி நிறை தலைவர்கள் (Charismatic Leaders) தான் நாட்டை ஆளத் தகுதியானவர்கள், உரிமை உடையவர்கள் என்று பச்சையாகவே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
“பொறுக்கி அரசியல்” என்று சொல்லும்போது இன்றைய அரசியலின் இழிநிலை கண்டு வெறுமனே வெறுப்பு – விரக்தி, பொறாமை ஆத்திரத்திலே சொல்லவில்லை. முதலாளித்துவ அரசியலில் ஒரு வகை, ஒரு வடிவம் என்கிற வரையறுப்போடுதான் சொல்லுகிறோம். பொறுக்கி அரசியலுக்கு என்று ஒரு சமூக அடிப்படை, ஒரு சித்தாந்த அடிப்படை, ஒரு அமைப்பு அடிப்படை உண்டு. இன்று தமிழக அரசியலில் முழுமையடைந்த வடிவில் பொறுக்கி அரசியல் பிரகாசிக்கிறது. பொறுக்கி அரசியலைத் தோற்றுவித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு; என்றாலும் அதை வளர்த்து முழுமையாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்குத்தான் உரித்தாகும். செத்த பின்னும் எம்.ஜி.ஆரின் புகழ் பரப்புவது பொறுக்கி அரசியல் நான்.
பொறுக்கி அரசியலின் சமூக அடிப்படை – உதிரித் தொழிலாளர்கள், கிராமப்புறப் பாமர மக்கள்:
காலனிய ஆட்சிக்கு முன்பிருந்த இந்திய கிராம சமுதாயத்தில் அடிமைகளாகவோ, கொத்தடிமைகளாகவோ, கிராமக் கைத் தொழிலாளர்களாகவோ ஒரு தொழிலும், வேலையும் கொடுத்து குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படையாயிருந்தது. காலனிய ஆட்சியும், அதன் பிறகு வந்த காங்கிரசு ஆட்சியும் நகரத்துக் குப்பங்களிலும், கிராமங்களிலும் கோடிக்கணக்கான நிரந்தர வேலையோ, வருமானமோ இல்லாத மக்களைக் குவித்திருக்கிறது. கிராம சமுதாயத்தில் முன்பு கிடைத்த குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.
வருடத்தில் பல நாட்கள் வேலை வாய்ப்புகளின்றி பஞ்சத்திலும், பட்டினியிலும் கிடந்து தவிக்கும் கூலி, ஏழை விவசாயிகளோடு ஓட்டாண்டிகளாகும் நடுத்தர விவசாயிகளும் சேர்கிறார்கள். அரை குறையாகக் கல்வி பயின்ற இளைஞர்கள். படித்தும் வேலை வாய்ப்பின்றி சீரழிந்த கலாச்சாரப் பாதிப்புக்குள்ளான இளைஞர்கள் மூலமாக பொறுக்கி அரசியல் இந்தக் கிராமப்புறப் பாமர மக்களைச் சென்றடைகிறது. ஏற்கனவே நகரத்து குடிசைப் பகுதிகளில் வழியும் உதிரித் தொழிலாளர்களுடன், கிராமப்புறங்களில் இருந்து விரட்டப்படும் விவசாய ஏழை மக்கள் நகரத்து வீதிகளில் குடியேறுகின்றனர்.
பல்வேறு சிறு தொழில்களையும், அன்றாடக் கூலி வேலைகளையும் நம்பி வாழும் இவர்கள் நகர்புற சீரழிவுகளுக்கு எளிதில் பலியாகிறார்கள். அது மட்டுமின்றி கள்ளச்சாராயம், சூதாட்டம், விபச்சாரம் போன்ற சமூக விரோத சீரழிவுகள் கணிசமான உதிரித் தொழிலாளர்களைக் காவு கொள்கின்றன. நிரந்தர வேலையும், வருமானமும் இல்லாத இவர்களை பொறுக்கி அரசியலும் கவர்ச்சிவாதமும் (பாப்புலிசம்) எளிதில் ஈர்த்துக் கொள்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுக்குத் தலைமையளித்து அணிதிரட்டிக் கொள்கிறார்கள்.
பொறுக்கி அரசியலின் சித்தாந்த அடிப்படை: கவர்ச்சிவாதம் (பாப்புலிசம் populism)
பிற்போக்கு சிந்தாந்தங்களை வெளிப்படையாக வைத்து பரந்துபட்ட மக்களை இனிமேலும் ஈர்க்க முடியாது என்கிற அரசியல் ஓட்டாண்டித்தனம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுகின்றன.
ஆனால் ஆட்சியைப் பிடிப்பதற்கு அவை ஒரு உத்தியைக் கையாளுகின்றன. தமது பிற்போக்கு சித்தாந்தங்களை மூடி மறைத்துக் கொண்டு பாமர மக்களின், குறிப்பாக உதிரித் தொழிலாளர்கள், ஓட்டாண்டிகளான கிராமப்புற ஏழைகளின் அன்றாடத் தேவைகள், விருப்பங்கள், சுவைகளுக்கேற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றன. தமக்கென்று ஒரு உலகப் பார்வை கொண்ட சித்தாந்தமோ, அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையோ உருவாக்கிக் கொள்ள முடியாத இந்தப் பாமர மக்கள் கவர்ச்சிவாதத்துக்குள் மூழ்கி தம்மை அறியாமலேயே பொறுக்கி அரசியலை ஆதரிக்கிறார்கள்.
கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) என்று சொல்லும்போது எம்.ஜி.ஆர் உருவாக்கியதைப் போன்ற சினிமா கவர்ச்சியை மட்டும் குறிப்பிடவில்லை. அது பொறுக்கி அரசியலின் கலாச்சார வடிவம். எம்.ஜி.ஆர் உருவாக்கிய ”அண்ணாயிசம்” பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதத்தின் முக்கியமான சித்தாந்த அங்கமாகும். “முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம்” மூன்றும் இணைந்ததுதான் ’அண்ணாயிசம்’ என்று எம்.ஜி.ஆர் அதற்கு விளக்கம் கொடுத்தார். அவரது விளக்கம் எதுவானாலும் அவரது ஆட்சியின் நடைமுறையிலிருந்து ‘அண்ணாயிச’த்துக்கான பொருளை நாம் புரிந்து கொள்ள முடியும்.
தரகு அதிகார முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் நலன்களைத் தொடர்ந்து கட்டிக் காத்து வளர்ப்பது, அதே சமயம் சோசலிசம், கம்யூனிசம் பற்றிய பாமர மக்களின் மிக மிக மோசமான கருத்துக்கேற்ப கவர்ச்சிவாத (பாப்புலிச) நடவடிக்கைகளை மேற்கொள்வது, இதுதான் எம்.ஜி.ஆர் கடைப்பிடித்த அண்ணாயிசம். தேசியமா, திராவிடமா என்று எம்.ஜி.ஆரின் அரசியல் நிலைப்பாடுகளைக்கூட பாகுபடுத்திப் பார்க்க முடியாமல் கவர்ச்சிவாதத்தால் மக்களை அடித்து வீழ்த்துவது; மொழி, இன ஒடுக்குமுறை பாசிச, குரூர, கோமாளித்தனமான ஆட்சி இருந்தாலும் சத்துணவு, பற்பொடி, செருப்பு, வேட்டி, சேலை, தண்ணீர் குடம், வறட்சி, வெள்ளம், தீ, நிவாரண அன்பளிப்புகள் ஆகிய இலவசத் திட்டங்களால் நல்லாட்சி நடப்பதாக ஒரு பிரமையை உருவாக்குவது; தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் ஆகிய எந்தச் சமுகப் பிரிவினர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடினாலும் ஈவிரக்கமின்றி நசுக்கும்போதே ஆட்சியாளர்களின் வள்ளல் தன்மையை பறைசாற்றும் “அன்பளிப்பு”களால் வாயடைக்கச் செய்வது. சுருக்கமாகச் சொன்னால் அரசாங்க “இலவச – அன்பளிப்பு”த் திட்டங்களின் கீழ் கணிசமான அளவு மக்களை வைத்துக் கொள்வதன் மூலம் பாமரத்தனமான சோசலிசத் தோற்றத்தை ஏற்படுத்துவது – இதுதான் எம்.ஜி.ஆரின் ‘அண்ணாயிசம் – கவர்ச்சிவாதம்’.
பொறுக்கி அரசியலின் அமைப்பு அடிப்படை: பிழைப்புவாத அரசியல் அமைப்புகள்:
காந்தியம், இந்து ராஷ்டிரம், அம்பேதகாரிசம், இனவாதம் போன்ற தேர்தல் அரசியல் கட்சிகள் தமது கொள்கைகளைக் கொண்டு அணிகளை – அமைப்புகளைக் கட்டுகின்றன. ஆனால் பிழைப்பு வாதத்தையே அரசியல் கொள்கையாக்கிக் கொண்டுள்ள அரசியல் அமைப்புகள் சில தோன்றியுள்ளன. அவை தமது தலைவர்கள் – அணிகளின் பிழைப்புவாதத்துக்கேற்ற முறையில் அரசியலையும் போராட்டங்களையும் வகுத்துக் கொண்டு இயங்குகின்றன. விவசாயம், வியாபாரம், ஆலை உற்பத்தி, மருத்துவம், காண்டிராக்ட் ஒப்பந்தம், சட்டத்துறை போன்று சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாகக் கருதி இயக்கும் அரசியல் அமைப்புகளையே பிழைப்புவாத அமைப்புகள் என்கிறோம்.
தலைவர்கள் மட்டுமல்ல நகர வட்டங்கள் – கிராமங்களுக்குப் பொறுப்பாக உள்ள கட்சி அணிகள் வரை மேலிருந்து கீழ்மட்டம்வரை பிழைப்பு வாதத்தையே அரசியலாகக் கொண்ட அமைப்புகள். எத்தக் கட்சியில், அதிலும் எந்த கோஷ்டியில் இருப்பது வருமானத்துக்குரிய ஆதாயமாக இருக்கும் என்பதை பரிசீலித்து, விவாதித்து இவர்கள் தெரிவு செய்கிறார்கள். மேல்மட்டத் தலைவர்கள் லஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் மூலம் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே உள்ள பிழைப்பு வாதிகள் அரசியல் தரகு வேலையை ஒரு தொழிலாக அதற்கே உரிய விதிமுறைகளுடன் செய்கிறார்கள்.
தேர்தல் காலங்களில் பிரச்சார வேலைகள், ஆள்பிடிக்கும் வேலைகள், ஓட்டுக்களுக்கான பேரங்கள் ஆகியவற்றில் கட்சி நிதியையே சுருட்டிக் கொள்ளுகிறார்கள். மற்ற காலங்களில் சத்துணவுத் திட்டம் போன்ற இலவசத் திட்டங்கள், வெள்ளம் – வறட்சி – தீ விபத்து ஆகியவற்றுக்கு முன்னின்று அதிகாரிகளுடன் சேர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள். இப்போது இந்த வேலைகள் செய்வதற்காக இவ்வளவு தொகை தமக்குக் கமிஷனாகத் தரவேண்டும் என்று உரிமையோடு அவர்களே எடுத்துக் கொள்ளுகிறார்கள். அரசு கடன் வழங்கும் விழாக்கள், போலீஸ் நிலைய வழக்குகள், வேலைவாய்ப்புகள் – சிபாரிசுகள் போன்றவற்றில் அரசாங்கத்தின் ”அங்கீகரிக்கப்பட்ட” தரகர்களாக இருக்கிறார்கள்.
கட்சித் தலைவர்களின் எடுபிடிகளாகவும், அரசியல் தூதர்களாகவும் இருந்த பிழைப்பு வாதிகள் கிராமப் பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகள், மக்கள் கமிட்டிகளில் நியமனம் பெறுவது, பிறகு பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகளுக்குத் தேர்தல்களில் நிற்பது என்று முன்னேறி எம்.எல்.ஏக்-கள், எம்.பி-கள் மட்டுமல்ல, மந்திரிகள் அளவுக்கு உயர்ந்து விட்டார்கள். கூட்டுறவுகள், உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களைத் தள்ளி வைத்து இந்தப் பிழைப்புவாதிகளுக்கான மடங்களாக்கிய எம்.ஜி.ஆர் ஆட்சியில் கோவில்கள், வாரியங்கள், பள்ளி – கல்லூரிகள் போன்ற சகலமட்டங்களிலும் கட்சி பிழைப்பு வாதிகளுக்கு “பொறுப்புகள்” பகிர்ந்தளிக்கப்பட்டன. கட்சிக்காகப் பாடுபடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு “ஏற்பாடு” செய்து தருவதைத் தமது பொறுப்பாகவும் – அவர்களது உரிமையாகவும் பகிரங்கமாகவே ஒழுங்குபடுத்தினார் எம்.ஜி.ஆர்.
பொறுக்கி அரசியல், தமிழகத்துக்கு ஒரு பாரம்பரியம் உண்டு:
பொறுக்கி அரசியலை அறிமுகப்படுத்தி, நிறுவி வளர்த்ததில் தமிழ்நாட்டுக்கு ஒரு பாரம்பரியப் பெருமை உண்டு, அதன் பிதாமகனும் பெருமைக்குரியவரும் கருணாநிதிதான்! மூப்பனார், வாண்டையார், தென்கொண்டார், மன்றாடியார் போன்ற நிலப்பிரபுக்களின் பண்ணை வீடுகளிலும், கோவை நாயுடுக்கள், வடபாதி மங்கலம் முதலியார், சென்னை டி.டி.கே – சிவசைலம், மதுரை டிவிஎஸ் போன்ற முதலாளிகளின் விருந்தினர் மாளிகைகளிலும் காமராஜர் தேர்தல் அரசியல் நடத்தி வந்தார். வோட்டர்களைக் கொத்தடிமைகளாக வைத்து சாதி அரசியல் பேரங்கள் மூலமே ஆட்சி நடத்தினார்.
அந்த சாதி அரசியலை வீழ்த்த பொறுக்கி அரசியலால்தான் முடிந்தது. “பேரறிஞர், நாவலர், சொல்லின் செல்வர், கலைஞர், பேராசிரியர்” போன்றவர்கள் மட்டுமே இருந்திருந்தால் காமராஜரின் சாதி அரசியலை வீழ்த்தியிருக்க முடியாது. அதை முறியடிக்க மாவட்டத்துக்கு ஒரு பொறுக்கி அரசியல் தலைமையை உருவாக்கினார் கருணாநிதி. நெல்லைக்கு ஒரு தூத்துக்குடி சாமி, மதுரைக்கு ஒரு முத்து, திருச்சிக்கு ஒரு அன்பில், தஞ்சைக்கு ஒரு மன்னை, கோவைக்கு ஒரு ராஜமாணிக்கம், சேலத்துக்கு ஒரு வீரபாண்டி, ஆற்காடுக்கு ஒரு ப.உ.ச என்று பொறுக்கி அரசியலுக்குரிய சகல தகுதிகள் கொண்ட தலைமையை உருவாக்கியவர் கருணாநிதி.
அவர்கள் திராவிட அரசியலின் ”பழக்கதோஷம்” உள்ளவர்கள் – கருணாநிதிக்கு விசுவாசமாக நின்று விட்டவர்கள் – என்ற நிலையில் முழுக்க முழுக்க தமது ரசிகர்களை மட்டும் கொண்ட புதிய பிழைப்புவாதக் கட்சியை உருவாக்கினார் எம்ஜிஆர். இன்று வீரப்பன் கும்பலின் முன்னணித் தலைவர்களான முன்னாள் மந்திரிகள், ஜேப்பியார் போன்றவர்கள், ஜெயலலிதா கும்பலின் கருப்பசாமி பாண்டியன், சேடப்பட்டி முத்தையா, சாத்தூர் ராமச்சந்திரன், மதுரை நவநீதகிருஷ்ணன், சென்னை மதுசூதனன், திருநாவுக்கரசு.போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் பொறுக்கி அரசியலின் செல்லப் பிள்ளைகள். இவர்களில் எவருக்கும் திராவிடம், தேசியம் என்கிற பேதமில்லை. “எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம்”தான் இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள சித்தாந்தம். பிழைப்பு வாதம்தான் இவர்களின் லட்சியம். பொறுக்கி அரசியல்தான் இவர்களின் கொள்கை!
பொறுக்கி அரசியலில் தேசியவாதிகளும் தஞ்சம் புகுந்தார்கள்.
காங்கிரசின் ஜனநாயக சோசலிசப் பித்தலாட்டத்தை மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கி 1987 தேர்தலில் பல மாநிலங்களில் தோற்கடித்தனர். மத்தியிலும் சொற்பப் பெரும்பான்மையே பெற்றது. கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) தான் காங்கிரசைக் காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்த இந்திரா மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேச உடைமை, அரசுத்துறை தொழில்களுக்கு முக்கியத்துவம் போன்ற போலி சோசலிச நாடகமாடத் துவங்கினார். மொரார்ஜி, காமராஜ், பாடீல், சஞ்சீவரெட்டி, அதுல்யாகோஷ், சி. பி. குப்தா போன்ற பழம்பெரும் காங்கிரசு பெருச்சாளிகளுக்குப் பதிலாக ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது போன்ற பிழைப்புவாதத் தலைவர்களை அணிசேர்த்தார். இந்திராவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக பொறுக்கி அரசியல் வழிமுறைகளில் கூட்டம் சேர்க்கத் தலைப்பட்டார். 1921 வங்கதேசப்போரும், தேர்தல் வெற்றியும் ஏற்படுத்திய செல்வாக்கு மங்கி அரசியல் பொருளாதார நெருக்கடிகள் முற்றியது. நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வெடித்தபோது அரசு எந்திரத்தைக் கொண்டு அவற்றை அடக்கிய அதே சமயம் பிழைப்புவாதிகளைக் கொண்டு அரசியல் முட்டுக் கொடுத்து காங்கிரசைத் தூக்கி நிறுத்தினார்.
குஜராத், பீகார் போராட்டங்கள் வெடித்து, வளர்த்து கடைசியாக இந்திரா தேர்தல் செல்லாது என்கிற தீர்ப்பு வந்து அவரது ஆட்சியே ஆட்டங்கண்டபோது, நாடாளுமன்றத்துக்கு வெளியே நேரடியான மோதலில் எதிர்க்கட்சிகள் இறங்கின. இந்திரா காங்கிரசு முழுக்க முழுக்க பொறுக்கி அரசியலில் தஞ்சம் புகுந்தது. பணத்தை வாரி இறைத்து லாரிகளில் ஆள் பிடித்து வந்து இந்திரா வீட்டு முன்பு பேரணிகள் நடத்தப்பட்டன. சஞ்சய் காந்தி இந்திராவின் வாரிசாக மட்டுமல்ல,பொறுக்கி அரசியல் தலைவராகவும் உயர்ந்தார். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பிழைப்புவாதிகளின் குண்டர்படை கட்டினார். அவசரநிலை ஆட்சியின்போது உள்ளூர் அதிகாரம் அவர்களின் கைகளில்தான் இருந்தது.
அவசரநிலை ஆட்சிக்குப்பிறகு பிரச்சாரங்கள், கூட்ட ஏற்பாடுகள் உட்பட எல்லாத் தேர்தல் வேலைகளும் தொழில் ரீதியில் நடத்துபவர்களுக்கே ஒப்படைத்தது காங்கிரசு. மற்ற தேர்தல் அரசியல் கட்சிகளும் அதைப் பின்பற்றத் தொடங்கின. டெல்லி, பம்பாய் போன்ற பெரும் நகரங்களில் தேர்தல் கூட்டங்களுக்கு (ஆள் சப்ளை) மக்களைத் திரட்டித் தருவதையே தொழிலாகக் கொண்டே கும்பல்கள் உள்ளன. பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிரிமினல் குற்றவாளிகளே எம்.எல்.ஏக்-கள் மந்திரிகளாகும் அளவுக்குப் பொறுக்கி அரசியல் வளர்த்து விட்டது.
சஞ்சய் காந்தியின் பொறுக்கி அரசியலை எதிர்ப்பதாகவும், அரசியல் தரகர்களை ஒழிக்கப்போவதாகவும் ஆட்சிக்கு வந்தபோது சவடாலடித்தார் ராஜீவ். ஃபேர் பேக்ஸ், போபார்ஸ் விவகாரங்கள் அம்பலமாகி ராஜீவின் யோக்கியதைகள் தெரிந்துவிட்ட நிலையில் அவரும் பேரணிகள் நடத்தத் துவங்கி விட்டார். நவீனப்படுத்துவது, தொழில் மயமாக்குவது, திறமை -நிர்வாகத்துக்கு முதலிடம் தரப் போவதாக சவடாலடித்தவர் கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) தான் தமது கொள்கையென்று சஞ்சம் புகுந்து விட்டார். பிழைப்புவாத அரசியல் கும்பலிடம் சரணடைந்து விட்டார். எம்.ஜி.ஆர் பாணியிலான “இலவச அன்பளிப்பு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கி தேர்தலைக் குறிவைத்து செயல்படுகிறார். எம்.ஜி.ஆர் பாணியிலே சினிமா நடிகர்களைக் காட்டி ஓட்டுப் பொறுக்குவதில் இறங்கியுள்ளார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இழிந்த இறுதி நிலை பொறுக்கி அரசியல்:
காமராஜரின் காலத்தில் பண்ணையார் – முதலாளிகள் மாளிகையில் நடந்த சாதி அரசியல் வீழ்த்தப்பட்டு கருணாநிதியின் பொறுக்கி அரசியல் முன்னுக்கு வந்தபோது “பழுத்த ஜனநாயகவாதிகள்” அருவருப்பாகப் பார்த்தார்கள். ஆனாலும் அண்ணாத் துரையின் ”பெருந்தன்மை”, கருணாநிதியின் ”நிர்வாகத் திறமை”, பிறகு எம்.ஜி.ஆரின் ”மனிதாபிமானம்” ஆகியவற்றைச் சொல்லிச் சகித்துக் கொண்டார்கள். சஞ்சய் காந்தியின் அவசரநிலை ஆட்டங்கள் அந்தப் பழுத்த ஜனநாயகவாதிகளுக்கு பீதியூட்டினாலும் ராஜீவ் பதவிக்கு வந்தபோது “பரிசுத்தம்” வந்ததென்று மகிழ்ந்து போனார்கள். இப்போது தமிழ்நாட்டில் வீரப்பன் – ஜெயலலிதா கும்பல்களும், டில்லியில் ராஜீவும் பொறுக்கி அரசியலை முழு வீச்சில் நடத்துகிறார்கள். அது “பழுத்த ஜனநாயகவாதிகளுக்கு” பீதியூட்டுகிறது.
“உலகிலேயே சிறந்தது, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை; சில பிழைப்புவாதிகள் அரசியலில் புகுந்து கெடுத்து விட்டார்கள்; அரசியல் தரம் தாழ்ந்து போய்விட்டது” என்று ‘சமாதானம்’ சொல்லுகிறார்கள், போலிக் கம்யூனிஸ்டு கட்சிகள், ஜனதா, காங்கிரசிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அரசியலுக்கு வெளியிலுள்ள “பழம் தேசபக்தர்கள்” ஆகிய “பழுத்த ஜனநாயகவாதிகள்”. ஆனால் பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்க ரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எல்லா போலித்தனங்களையும் வீசி எறிந்துவிட்டு அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான சமூக, சித்தாந்த, அமைப்பு அடிப்படையை பொறுக்கி அரசியல் ஏற்படுத்துகிறது. பாசிசத்தை நிறுவுவதற்கு இனவாதம், தேசியவாதம், போலி சோசலிசம் அடங்கிய சித்தாந்தமாக தேசிய சோசலிசம் அதாவது நாஜிசம் அமைத்ததைப் போல கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) பாசிச ராஜீவ் கும்பலுக்கு உதவும். நாஜிக் கட்சியைப் போல பிழைப்பு வாதிகளைக் கொண்ட காங்கிரசு, எம்.ஜி ஆர், கருணாநிதி கட்சிகள் அரசியல் – அமைப்பு அடிப்படையைக் கொடுக்கும்.
ஒழுங்கு படுத்தப்பட்ட ஆலை உற்பத்தியில் இருக்கும் தொழிலாளர்கள் பொருளாதாரவாதத்தின செல்வாக்கில் இருக்கிறார்கள். போலிக் கம்யூனிஸ்டுகளின் பிழைப்பு வாதக் கொள்கைதான் தொழிலாளர்களைப் பொருளாதார வாதத்துக்குள் தள்ளிவிட்டது. மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தைத் திரித்து பாமரத்தனமான சோசலிச சித்தாந்தத்தைப் போலி கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்வதனால்தான் பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) வெற்றி பெற முடிகிறது. ஆகவே, தொழிலாளர்கள் தலைமையிலான தொழிலாளர் – விவசாயிகள் கூட்டை சமூக அடிப்படையாகவும், மார்க்சிய – லெனினியத்தை சித்தாந்த அடிப்படையாகவும் கொண்ட புரட்சிகர அமைப்பு மட்டுமே பொறுக்கி அரசியலுக்கு மாற்றாக இருந்து அதை முறியடிக்க முடியும்.
ஆர்.கே.
(புதிய ஜனநாயகம் – மார்ச் 01 – 15, 1988 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 09 | 1988 மார்ச் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 08 | 1988 மார்ச் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 07 | 1988 பிப்ரவரி 16-29 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 06 | 1988 பிப்ரவரி 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
2021-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஊராட்சிகளை பேரூராட்சியாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் ‘தரம்’ உயர்த்துவது, ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைத்து மாநகராட்சியாக்குவது, ஏற்கெனவே உள்ள மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவுபடுத்துவது என நகர விரிவாக்கப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 2024-இல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளுடன் அருகிலிருந்த கிராம மற்றும் நகரப் பஞ்சாயத்துகளை இணைத்து மாநகராட்சிகளாக உருவாக்கியது. இப்புதிய மாநகராட்சிகளை உருவாக்கிய ஐந்து மாதத்திற்குள்ளாகவே தற்போது மீண்டும் நகர விரிவாக்கத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தி.மு.க. அரசு.
சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, கடலூர், திண்டுக்கல், மதுரை, ஓசூர், சேலம், திருப்பூர், ஆவடி, கும்பகோணம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சிவகாசி என தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளில் 16 மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்குவதற்கான அரசாணைகளை அந்தந்த மாநகராட்சிகள் வெளியிட்டுள்ளன. இதற்காக 147 கிராமப் பஞ்சாயத்துகளும், ஒரு நகரப் பஞ்சாயத்தும் மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இத்துடன், புதிதாக சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை, கவுந்தபாடி, போளூர், செங்கம், கன்னியாகுமரி, சூலூர், மோகனூர், நரவரிகுப்பம் மற்றும் வேப்பம்பட்டு ஆகிய 13 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 14 மாவட்டங்களைச் சேர்ந்த 25 கிராமப் பஞ்சாயத்துகள் நகரப் பஞ்சாயத்துகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களைச் சார்ந்த 29 கிராமப் பஞ்சாயத்துகள் நகரப் பஞ்சாயத்துகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தரமான அடிப்படை வசதிகளை வழங்குவது – அதாவது சாலைவசதி, பாதாள சாக்கடை, தரமான-பாதுகாப்பான குடிநீர் மற்றும் மின் விளக்குகள், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் திட்டமிடுவது, இதனூடாக வளங்களைத் திறம்படப் பயன்படுத்துவதே இந்த மாநகர விரிவாக்கத்தின் நோக்கம்” என தெரிவித்துள்ளது.
குடிநீர், சாலை வசதி, சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துத்தரக்கோரி தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராம மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். அரசு நினைத்தால், மக்கள் கோரும் அடிப்படை வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க முடியும். ஆனால், மக்களின் கோரிக்கைகளும் போராட்டங்களும் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பெரும் பேசுப்பொருளாகினால் தவிர, மக்களின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்வதில்லை. சமீபத்தில், “ஜி தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சரி-க-ம-பா” ரியாலிட்டி நிகழ்ச்சியில் திண்டிவனத்திலிருந்து கலந்துகொண்ட அரசு பள்ளி மாணவியின் அம்மணம்பக்கம் கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லை என்பது வெட்டவெளிச்சமாகியதையடுத்து தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஓடோடிச் சென்று பேருந்து பயணத்தைத் துவக்கி வைத்தது, இதற்கு சிறந்த சான்றாகும்.
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைத்தால்தான் மக்களுக்கான அடிப்படை வசதிகளையெல்லாம் செய்துத்தர முடியும் என தி.மு.க. அரசு கூறுவது நயவஞ்சகமானதாகும். உண்மையில், தி.மு.க. அரசின் நகர விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னால் உழைக்கும் மக்கள் விரோத – பிரம்மாண்டமான கார்ப்பரேட் திட்டம் ஒளிந்துள்ளது.
கார்ப்பரேட்மயமாகும் கட்டமைப்புகள்
2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவது என்று இலக்கு நிர்ணயித்துள்ள தி.மு.க. அரசு, அதற்காக பல்வேறு கார்ப்பரேட் நல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் உள்கட்டமைப்பு திட்டங்களில் கார்ப்பரேட்டுகளின் முதலீடுகளை ஊக்குவிப்பது முக்கியமானதாகும். கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் சொற்ப அளவிலேயே தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில், அந்த நிலையை முடிவுக்கு கொண்டுவந்து கார்ப்பரேட் முதலீடுகளை தீவிரப்படுத்தும் வகையில் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது தி.மு.க. அரசு.
அதனடிப்படையில், மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்புக்கான வளர்ச்சித் திட்டங்கள் அரசு-தனியார் கூட்டு (Public-Private Partnership) அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள தி.மு.க. அரசு, அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக, நகரப் போக்குவரத்து, திடக்கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அரசு-தனியார் கூட்டு அடிப்படையில் செயல்படுத்தவே திட்டமிட்டிருக்கிறது தி.மு.க. அரசு. இத்திட்டங்கள் யாவும் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
எனவே, அரசு மக்களுக்கு செய்யக்கூடிய சேவைகள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்காகவும், அதன்மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன என்பது தெளிவாகிறது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நகரங்களின் உள்கட்டமைப்புகளை கார்ப்பரேட்மயமாக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், இதற்குள் பிற பகுதிகளையும் கொண்டுவந்து அதன் எல்லைகளை விரிவுப்படுத்துவதற்காகவே தொடர்ச்சியாக நகர விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, அரசு மக்களுக்கு செய்துத்தர வேண்டிய அடிப்படைக் கடமைகளான குடிநீர்-மின்சாரம் விநியோகத்தை கார்ப்பரேட்மயப்படுத்தி வருகிறது தி.மு.க. அரசு. இதற்காக தமிழ்நாடு முழுவதும் மூன்று தவணைகளில் கிட்டத்தட்ட மூன்று கோடி மின்சாரத்-திறன் மீட்டர்களைப் பொருத்துவதற்கு அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. மின்சாரத்துறை ஒப்பந்தத்திற்காக மாநில அரசுகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததை அமெரிக்க நீதிமன்றம் அம்பலப்படுத்தியதையடுத்து, தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு-அதானி கள்ளக்கூட்டு தோலுரிக்கப்பட்டதால் அதானி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனினும் திறன் மீட்டர்கள் பொருத்துகிற திட்டம் நடைமுறையில்தான் இருக்கிறது. இந்த திறன் மீட்டர்கள் பொருத்துவதானது சோதனை அடிப்படையில் முதலில் மாநகராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் உச்சநேர மின்சாரப் பயன்பாட்டை ஆராய்வதற்காக நேர அடிப்படையிலான திறன் மீட்டர்கள் பொருத்துவதற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இதனை வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து குடியிருப்புகளுக்கும் அமல்படுத்தப் போவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது.
மேலும், தரமான-பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக ஊராட்சிகளை மாநகராட்சிகளுடன் இணைப்பதாக கதையளக்கும் தி.மு.க. அரசு, கோயம்புத்தூர் மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை “சூயஸ்” (SUEZ) என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. பிற மாநகராட்சிகளிலும் குடிநீர் விநியோகத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.
இதற்காக, பிப்ரவரி-மார்ச் 2025 வரை காலவரையறை முடிவு செய்யப்பட்டு, சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் குடிநீர் விநியோகத்திற்கான திறன் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றால், ஒரு சொட்டு தண்ணீரைக் கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். இது மறுகாலனியாக்கத்தின் உச்சமாகும்.
அதேபோல் நகரப் போக்குவரத்துத்துறையும் தொடர்ந்து கார்ப்பரேட்மயமாகி வருகிறது. அரசு-தனியார் கூட்டில் கட்டப்பட்டு, பராமரிப்பிற்கு கார்ப்பரேட் நிறுவனத்திடம் 15 ஆண்டுகால ஒப்பந்தத்திற்கு விடப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத் திட்டம் இதற்கு துலக்கமான எடுத்துக்காட்டாகும். சமீபத்தில் கூட, சென்னையில் முதன்முதலாக தனியார் சிற்றுந்துகளை (Mini Bus) இயக்க தி.மு.க. அரசு அனுமதியளித்துள்ளது. அதேசமயத்தில், ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் அரசு சிற்றுந்துகளின் (Small Bus) கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இவையன்றி, சென்னை மாநகராட்சியில் சுடுகாடு கட்டுவதற்கான ஒப்பந்தம் கார்ப்பரேட்டிற்கு வழங்கப்பட்டிருப்பது; அரசு-கார்ப்பரேட் ஒப்பந்தத்தின் பேரில் ஆற்றங்கரையோரத்து பூர்வக்குடி மக்கள் துரத்தியடிக்கப்பட்டு பூங்காக்கள் கட்டப்படுவது; மருத்துவத்துறையில் கட்டணப் பிரிவு உருவாக்கப்படுவது; மாநகராட்சி வசமிருந்த கழிவு மேலாண்மை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் சுரண்டப்படுவது என மருத்துவத்துறை முதல் சுடுகாடு வரை உள்கட்டமைப்புகள் அனைத்தும் கார்ப்பரேட்மயமாகிக் கொண்டிருக்கின்றன.
நகர விரிவாக்க அறிவிப்பின் மூலம் வருங்காலங்களில் இது சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். நகர விரிவாக்கம் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என தி.மு.க. அரசு தேனொழுகப் பேசுவதற்கு பின்னால் நகர ”உள்கட்டமைப்புகள் கார்ப்பரேட்மயமாக்கம்” எனும் அபாயகரமான, மக்கள் விரோதத் திட்டம் மறைந்துள்ளது.
பறிபோகும் விவசாய நிலங்கள்
நகர உள்கட்டமைப்புகள் கார்ப்பரேட்மயமாக்கம் மட்டுமின்றி நகர விரிவாக்கம் மூலம் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நோக்கமும் தி.மு.க. அரசிற்கு உள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள டைடல் பூங்கா போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கட்டமைப்புகளை 2 மற்றும் 3-ஆம் தர வரிசையில் உள்ள சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் மாதிரி அடிப்படையில் சிறிய டைடல் பூங்காக்களை (நியோ டைடல் பார்க்) உருவாக்கத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது அரசு. சேலம் மாநகராட்சியில் (கருப்பூர்), தூத்துக்குடி, திருச்சி மாவட்டங்களில் நியோ டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவைதவிர ராணிப் பேட்டை மற்றும் தூத்துக்குடியில் மின்சார வாகனத் தயாரிப்பிற்கான தொழிற்சாலைகள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் வெறும் முன்னோட்டம் மட்டுமே. எட்டுவழிச்சாலை, பாரத் மாலா, சாகர் மாலா, துறைமுகங்கள் விரிவாக்கம் போன்ற பல்வேறு ஒன்றிய – மாநில அரசுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தக் காத்திருக்கின்றன.
இந்த கார்ப்பரேட் நலன்களிலிருந்து, விரிவாக்கப்படும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், பொது நிலங்கள் அனைத்தும் கையகப்படுத்தப்படும் பேரபாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தீவிரமாகிவரும் நகரமயத்தால் விவசாய நிலங்களின் பரப்பளவு ஆண்டிற்கு ஆண்டு சுருங்கிக் கொண்டே வருகிற சூழலில் மாநகராட்சி விரிவாக்கத்தால், நிலங்களின் மதிப்பு உயர்ந்து விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது தீவிரமாகும், உணவு உற்பத்தியும், விவசாயம் சார்ந்த துணைத் தொழில்களும் பாழாக்கப்படும். பெரும்பான்மை மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிற, வாழ்வாதாரமாக உள்ள இந்தத் தொழில்கள் பாழாக்கப்பட்டால் இத்தொழில்களிலிருந்து பல லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர் தொழிலாளர்களாகத் துரத்தியடிக்கப்படுவார்கள்; விவசாயத்திலிருந்து வெளியேறும் தொழிலாளர்களை உட்கவர்வதற்கான போதிய தொழிற்துறை தமிழ்நாட்டில் கிடையாது. இது, வேலையின்மையைத் தீவிரமாக்கும். மேலும், இது வடமாநிலப் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மூலைமுடுக்கெங்கும் நிரம்பியுள்ள சூழலில், சமூக நெருக்கடிக்களைத் தீவிரமாக்கும்.
அதுமட்டுமின்றி, விவசாய நிலங்களும், பொதுநிலங்களும், ஏரி, குளங்களும், நீர்வழிப்பாதைகளும் நகரமயத்திற்கு தொடர்ந்து பலியாகி வருகின்றன. குறிப்பாக பாதாள சாக்கடைத் திட்டமும், விரிவாக்கப்படும் சாலைகளும், நீர்நிலைகளையும் நீர்வழிப்பாதைகளையும் அழித்தே உருவாக்கப்படுகின்ற சூழலில் தமிழ்நாடு முழுவதும் சூழலியல் நெருக்கடிகள் தீவிரமாகும். இதற்கு, முறையாகத் திட்டமிடப்படாத நகரமயமாக்கத்தால் சென்னை மாநகரம் ஒவ்வோர் பருவமழைக் காலத்திலும் பேரிடர்களால் பாதிக்கப்படுவதும், மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதே சான்று.
மேலும், மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட முப்பதாண்டு காலத்தில் ரியஸ் எஸ்டேட் மாஃபியாக்கள் புற்றீசல்கள் போல முளைத்திருக்கின்றனர். இந்த மாநகராட்சி விரிவாக்கமானது, இந்த மாஃபியாக்கள் கொழுக்கவே துணைபுரியும்.
ஏற்கெனவே கார்ப்பரேட் நலனுக்காகத் சிப்காட் மூலம் திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதும் நாமறிந்ததே.
இவ்வாறு நிலம் கையகப்படுத்துவதற்காக மக்கள் போராட்டங்களைத் தடுப்பதற்காக, விவசாயிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் எதிர்ப்புகளையும் மீறி அவசர அவசரமாக நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அரசிதழில் வெளியிட்டு நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதன்மூலம், கண் துடைப்பிற்குக்கூட மக்களிடம் கருத்துக்கேட்க அவசியமின்றி கார்ப்பரேட்டுகள் விரும்புகிற நிலத்தை, மக்களிடமிருந்து பறித்துக் கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்க முடியும்.
தமிழ்நாட்டை மறுகாலனியாக்குகிற இந்த மக்கள் விரோத- கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களை ‘மக்கள் நலனு’க்காக செய்வதாக நயவஞ்சக நாடகமாடுகிறது தி.மு.க. அரசு. ஆக, மனித முகம் கொண்ட மறுகாலனியாக்கம்தான் திராவிட மாடல்.
ஒட்டச் சுரண்டும் திராவிட மாடல்!
மக்களை ஒட்டச் சுரண்டி கார்ப்பரேட்டுகளின் லாபவெறிபிடித்த தொந்தியை நிரப்புவதற்காகவும், மாநிலங்களை ஒன்றிய அரசின் சிற்றரசுகளாக மாற்றுவதற்காகவும் ஒன்றிய பாசிச மோடி அரசு ஜி.எஸ்.டி. என்ற வரி பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை எதிர்ப்பதாக சொல்லும் தி.மு.க. அரசோ, மோடி அரசிடமிருந்து முறையாக வரிப்பகிர்வை பெறுவதற்கும் ஜி.எஸ்.டி-ஐ ரத்து செய்வதற்கும் போராடாமல் தமிழ்நாடு மக்கள் மீது வரி உயர்வையும், கட்டண உயர்வையும் சுமத்தி வருகிறது.
மாநிலத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை, அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றால் சொத்துவரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்திப்பதாக கண்ணீர் வடிக்கும் தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை இரண்டு முறை சொத்துவரியையும் மூன்று முறை மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில், தமிழ்நாடு முழுவதும் 25 முதல் 150 சதவிகிதம் வரை சொத்துவரியை உயர்த்தியது. கடந்த 2024 அக்டோபர் மாதம் மாநகராட்சிகளில் சொத்துவரியை ஆண்டுக்கு ஆறு சதவிகிதம் உயர்த்துவதற்கான தீர்மானம் மாநகராட்சிகளின் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சிகளில் மட்டுமின்றி உள்ளாட்சிகளிலும் ஆண்டுக்கு ஆறு சதவிகிதம் சொத்து வரியை உயர்த்திக்கொள்ளவும் அனுமதியளித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
திருச்சி மாநகராட்சியில் ஏற்கெனவே இருந்த 65 வார்டுகளிலிருந்து ரூ.148 கோடி வரி வருவாய் கிடைத்தது. ஆண்டுதோறும் ஆறு சதவிகித வரி உயர்வால் திருச்சி மாநகராட்சியின் வருவாய் ரூ.160 கோடியாக உயரும் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், திருச்சியில் மட்டும் புதிதாக 35 வார்டுகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் இந்த வருவாய் இன்னும் பல கோடி ரூபாய் வரை அதிகரிக்கும். இதேபோல மீதமுள்ள 24 மாநகராட்சிகளின் வரி வருவாயும் அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி, சொத்துவரி உயர்வால் குடிநீர் வரி, கழிவுநீர் அகற்று வரி, குப்பை வரி என பல வரிகள் உயரும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த சொத்துவரி உயர்வால் மாதந்தோறும் குடிநீர், கழிவு நீர், குப்பை ஆகியவற்றிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இவற்றுடன், தொழில்வரி, தொழில் உரிமக் கட்டணம், கல்வி செஸ் வரி (ஆண்டு சொத்து மதிப்பில் ஐந்து சதவிகித உயர்வு), நூலக செஸ் வரி என இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டால், தமிழ்நாடு மக்களிடமிருந்து பல கோடி ரூபாயை சொத்துவரியாக பகற்கொள்ளையடிக்கிறது தி.மு.க. அரசு.
இந்த சொத்து வரியிலிருந்து யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக புவிசார் தகவல் அமைப்பு தொழில்நுட்பம் மூலம் வரைபடம் உருவாக்கப்பட்டு மாநகர-நகர-உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள சொத்துகளின் விவரங்கள் திரட்டப்படுகிறது. இதன் முதல் மாதிரியை பொன்னேரியில் செயல்படுத்தியது தமிழ்நாடு அரசு. கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை பெருநகரத்தில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், டிஜிட்டல் வரைபடத்தில் உள்ள சொத்திற்கேற்ப வரியைக் கட்ட வேண்டும். அதாவது, மாநகராட்சிகளின் சொந்த வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரையின்பேரில் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது.
இந்த சொத்துவரி உயர்வுக்கு முன்பாக, கடந்த ஜூலையில் மின்சாரக் கட்டணமும் (யூனிட்டிற்கு 25 பைசா முதல் 55 பைசா வரை) உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவித்துள்ளபடி ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து குடியிருப்புகளுக்கு உச்சநேர மின்கட்டணத்தை அமல்படுத்தினால், மக்களை ஒட்டச்சுரண்டுவதாக இருக்கும். குறிப்பாக இந்த உச்சநேரக் கட்டணத்தை அமல்படுத்தினால், மின்சாரக் கட்டணம் சுமார் 10 முதல் 20 சதவிகிதம் வரை உயரும் என்று கடந்த 2023-ஆம் ஆண்டில் கூறியிருக்கிறார் அன்றைய ஒன்றிய மின்சாரத் துறை அமைச்சாரான ஆர்.கே. சிங்.
மேலும், தமிழ்நாட்டில் ஒரு கோடி மக்கள் 100 யூனிட் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்துகிற சூழலில் திறன்மீட்டர் பொருத்துவதே தேவையற்றது என்கிறார், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரான திரு.எஸ்.நாகல்சாமி. அனைத்துக் குடியிருப்புகளுக்கும் திறன் மீட்டர் பொருத்தப்பட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் கேள்விக்குறியே!
இவையெல்லாம், மாநகராட்சி விரிவாக்கத்தால் ஏற்படும் நேரடி பாதிப்புகளாகும். மறைமுகமாக வாடகை உயர்வு, மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம், காய்கறி-மளிகை விலை உயர்வு என அனைத்து விலை உயர்வுகளும் மக்கள் மீதுதான் விழும். கல்வி மற்றும் மருத்துவ செலவினங்கள், எகிறும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி நிற்கும் நிலையில், அவர்களிடம் மேலும் வழிப்பறி செய்வதாகவே இந்த வரி உயர்வு அமையும்.
போராட்டமே தீர்வு:
இத்துணை மக்கள்விரோத தன்மை கொண்ட நகர விரிவாக்கத்தைத்தான் உள்கட்டமைப்பு வளர்ச்சி, நகரமயமாக்கல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க. அரசு. ஆனால், சமூகப் பொறுப்பற்ற சிறு கும்பலிடம் உற்பத்தி சக்திகளை குவித்து மேற்கொள்ளப்படும் இந்த உள்கட்டமைப்பு திட்டங்களும் நகரமயமாக்கலும் மக்களுக்கு பயனளிப்பதாக அல்லாமல், உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது.
1990-களில் விவசாய நெருக்கடியால் மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறியது அன்றைய சூழலில் நகரமயமாக்கலுக்கான முக்கிய அம்சமாக இருந்தது. அப்போது மக்களை உள்வாங்கி கொள்ளும் கட்டமைப்பு இல்லாதது நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மேற்கொள்ளப்படும் நகரமயமாக்கலும் உற்பத்தியின் விளைவாகவோ புதிய வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவோ அல்லாமல் வெறும் குவிதலாக மட்டுமே உள்ளது. வேலைவாய்ப்பு, சுகாதாரம், ஆரோக்கியம் என எதையும் கணக்கில் கொள்ளாத, கேடுகளின் மையமாகவும் மேலிருந்து திணிக்கப்படுவதாகவும் உள்ளது. மேலிருந்து திணிக்கப்படுகின்ற-கார்ப்பரேட் சேவையை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ள இந்த நகரமயமாக்கலை உழைக்கும் மக்களால் உள்வாங்கிக்கொள்ள முடியாது.
மேலும், சேவைத் துறையிலிருந்து அரசு விலகல், வரிச் சுரண்டல், விலைவாசி-கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்ட இந்த நகரமயமாக்கலால் மக்களின் வாழ்க்கை செலவினம் அதிகரிக்கும். இந்திய பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் குறைந்த வாழ்க்கை செலவினத்தை கொண்டுள்ள தமிழ்நாட்டின் சென்னை போன்ற நகரங்கள் உழைக்கும் மக்கள் வாழ முடியாத அதிக வாழ்க்கை செலவினத்தை கோருகின்ற நகரங்களாக மாற்றப்படும். இதனால் சமூக நெருக்கடி தீவிரமடைவதோடு உழைக்கும் மக்கள் புலம்பெயர்வதும் அகதிகளாவதும் தீவிரமடையும். பாசிச மோடி அரசின் கார்ப்பரேட்மயமாக்கத்தையும் பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதையும் எதிர்ப்பதாக கூறிக்கொண்டே அதனை வேறு வழிகளில் நடைமுறைப்படுத்துகிறது தி.மு.க. அரசு.
இந்நிலையில்தான், தி.மு.க. அரசின் மாநகராட்சி – நகராட்சி விரிவாக்க அறிவிப்பு வெளியான உடனே, தங்களது கிராமங்களை மாநகராட்சி – நகராட்சியுடன் இணைக்கூடாது என்று திருச்சி, மதுரை, கும்பகோணம், கரூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், கடலூர், விழுப்புரம் என தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. சாலைமறியல், கடையடைப்புப் போராட்டம், கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை என பலவழிகளில் மக்கள் போராடி வருகின்றனர். ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சி – நகராட்சியுடன் இணைப்பதால் வரி உயரும், 100 நாள் வேலை கிடைக்காது, தொகுப்பு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படாது போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து மக்கள் போராடி வருகின்றனர். உயர்த்தப்படும் வரி உயர்வுக்கு ஏற்ப மக்களின் சம்பளம் உயர்கிறதா? என்பதே போராடும் மக்களின் உள்ளுணர்வாக இருக்கிறது. பல்வேறு ஜனநாயக சக்திகளும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். சி.பி.ஐ(எம்) கட்சி தனது மாநில மாநாட்டில் மாநகராட்சி விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறது.
தங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள தன்னெழுச்சியாகப் போராடும் மக்களுக்கு ஆதரவளிப்பது புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் தார்மீகக் கடமை எனினும், போராடும் மக்களுக்கு பிரச்சினையின் முழுப்பரிமாணத்தைப் புரிய வைப்பதும், அரசியல்-சித்தாந்த-அமைப்பு ரீதியாக மக்கள் போராட்டங்களுக்குத் தலைமையளிப்பதும், மக்கள் போராட்டத்தை மறுகாலனியாக்கம் – பாசிசத்திற்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுப்பதும் புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் வரலாற்றுக் கடமையாகும்.
அப்பு
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram