1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 20 | 1988 செப்டம்பர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட அரியநாயகிபுரம் கிராமத்தில் செங்கல் சூலையில் வேலை செய்யும் தங்க கணேஷ், மாலதி தம்பதியின் மூத்த மகனான தேவேந்திரராஜா பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று (10/03/25) காலை 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அரியநாயகி புரத்தில் இருந்து பேருந்தில் சென்ற பறையர் சாதியைச் சேர்ந்த தேவேந்திரராஜாவை பக்கத்து ஊரான கெட்டியம்மாள்புரம் கிராமத்தில் உள்ள தேவர் சாதியைச் சேர்ந்த மூன்று பேர் (18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள்) கெட்டியம்மாள்புரம் கிராமத்தில் பேருந்து நிற்கும் போது பேருந்திலிருந்து இறக்கி, அருகிலிருந்த பேருந்து நிறுத்தம் அருகே கூட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமும், முதுகில் பல இடங்களில் வெட்டப்பட்டும், இடது கையில் 3 விரல்கள் துண்டிக்கப்பட்டும், வலது கை மணிக்கட்டில் வெட்டப்பட்டும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தேவேந்திரராஜா அனுமதிக்கப்பட்டார். தற்போது ஆபரேஷன் முடிந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடந்த சம்பவம் கேள்விப்பட்டு மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் கின்ஷன் மற்றும் தோழர்கள் மருத்துவமனைக்குச் சென்று, தேவேந்திர ராஜாவின் அப்பா தங்க கணேஷ் அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தோம்.
கடந்த மாதம் நடைபெற்ற கபடி போட்டியில் கெட்டியம்மாள்புரம் அணியை, அரியநாயகிபுரம் அணி வென்றுள்ளது. கபடி விளையாட்டில் ஆர்வமுடைய தேவேந்திரராஜா இந்த போட்டியில் கலந்து கொண்டார். வெற்றியைக் கொண்டாடியுள்ளார். இதனை சாதி ரீதியாகப் பார்த்த, ஆதிக்கச் சாதி வெறி தலைக்கேறிய மேற்கண்ட மூவரும் இன்று தேவேந்திரராஜாவை பைக்கில் பின்தொடர்ந்து சென்று வெட்டியுள்ளனர்.
தென்மாவட்டங்களில் சாதி வெறி தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. நாங்குநேரி சின்னதுரை வெட்டப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வை உண்டாக்கியது. ஆனால் கைது, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றைத் தாண்டி அரசு நிர்வாகம், சாதிவெறியைத் தடுக்க இப்பகுதியில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இதுபோன்ற சாதிவெறித் தாக்குதல்கள் தற்போதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த சாதிவெறி தாக்குதலுக்கு எதிரான அரசின் நடவடிக்கையும் பத்தோடு பதினொன்றாக நடந்து முடிந்து விடும் என்பதாகவே நிகழ்வுகள் காட்டுகின்றன. இதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுப்பதாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டோர், ஜனநாயக சக்திகள், போராடும் அமைப்புகள் ஓரணியில் திரண்டு களமிறங்கி, முற்றிலும் சாதிரீதியான வன்கொடுமைகள் நடப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 19 | 1988 ஆகஸ்டு 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 18 | 1988 ஆகஸ்டு 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்னால், குழந்தையின் கண்முன்னேயே தாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்ணின் கணவர் வெளியூருக்கு வேலைக்கு சென்றதை அறிந்து இரவில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு காமவெறிப்பிடித்த மிருகங்கள், பத்து மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி குழந்தையின் தாயான இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், அச்சத்தையும் விதைத்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பமும் குற்றமிழைத்த மிருகங்ககளும் ஆதிக்கச் சாதியான தேவர் சாதியை சேர்ந்தவர்கள். ஆனால், பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களுக்கு ஆதரவாக எந்தவொரு தேவர் சாதி சங்கமும் இதுவரை குரல் கொடுக்கவில்லை. மாறாக, குற்றமிழைத்தவர்களுக்கு ஆதரவாக அவர்கள் பக்கமே நிற்பதாக தெரிகிறது.
குழந்தையின் உயிரை பணயமாக வைத்து ஒரு தாயை வல்லுறவு செய்யும், தன் இச்சையை தீர்த்துக் கொள்ளும் அளவிற்கு மனித சமுதாயம் மிருகத்தை விட கேவலமாக மாறியுள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கஞ்சா, மது போதையின் பின்னணியில் இக்குற்றம் நடைபெற்றுள்ளது.
மற்றொரு சம்பவத்தில் மயிலாட்துறை மாவட்டம் சீர்காழி அருகே 16 வயது சிறுவன் நான்கு வயது குழந்தையை வன்புணர்வு செய்ய முயற்சிக்க, அக்குழந்தை கத்தி அழுததால் குழந்தையின் தலையில் சிறுவன் கல்லால் தாக்கியுள்ளான். இக்கொடூரமான தாக்குதலில் அக்குழந்தை பலத்த காயமடைந்ததுடன் குழந்தையின் ஒரு கண் சிதைந்துள்ளது.
மகாராஷ்டிராவில் பேருந்துக்கு காத்திருந்த பெண்ணை ஒருவன் ஏமாற்றி ஆளில்லா பேருந்தில் வைத்து வன்புணர்வு செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இக்குற்றத்தில் ஈடுபட்டவன் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளதாக போலீசு தெரிவித்திருக்கும் நிலையில், அம்மிருகம் இச்சமூகத்தில் சுந்ததிரமாக சுற்றித் திரிந்துள்ளது.
இதுமட்டுமின்றீ, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் கைது, 70 வயது முதியவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது என அன்றாடம் வெளியாகும் பாலியல் குற்றங்கள் குறித்தான செய்திகள் நெஞ்சை பதைபதைக்கச் செய்கின்றன. நாமும் இச்செய்திகளை இயல்பாக கடந்து செல்ல பழகிக்கொண்டோம். பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படலாம், சிறுவன் முதல் வயதான ஆண் வரை எவரொருவரும் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதற்கான சூழலை நோக்கி தள்ளப்படலாம் என்கிற மிக அபாயகரமான சூழல்தான் இன்று சமூகத்தில் நிலவுகிறது.
ஒரு குளிர்பானத்தை குடித்துவிட்டு அதன் போத்தலை தூக்கி எறிவது போல, ஒரு பெண்ணையும் பார்க்கும் நுகர்வு கலாச்சாரத்தை ஏகாதிபத்தியம் நமக்குள் விதைக்கிறது. எது அத்தியாவசியம், எது அனாவசியம் என அறியாமல் நாமும் தொடர்ந்து நுகர்ந்து, இறுதியில் இந்த நுகர்வுவெறிக்கு நாமே பலியாகி பிறரையும் பலியாக்குகிறோம்.
நுகர்வுவெறி உள்ளிட்ட பண்பாட்டு, பொருளாதார காரணங்களால் நாடு மீண்டும் மறுகாலனியாக்கப்படுகிறது. இதற்கு ஏற்ப ஆளும் வர்க்கம் தனது பாசிச சட்டங்களை அமல்படுத்துகிறது. சமீபத்தில் இயற்கைக்கு மாறான உடலுறவால் கணவனால், மனைவி கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரித்த சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம், ‘கணவன் செய்யும் பாலியல் வன்கொலை குற்றமாகாது’ என்கிற வகையில் தீர்ப்பளித்துள்ளது. ஆணுக்கு பெண் அடிமை, ஆணின் சொத்து பெண் என்கிற பார்ப்பன மனுநீதியின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது, பாலியல் குற்றவாளிகளுக்கு தேசியக் கொடி வரவேற்பு கொடுப்பது வரை இவையெல்லாம் பா.ஜ.க-வின் இந்துத்துவ பாசிச ஆட்சியில் சாதாரணமாக நடைபெறுகிறது. இவை பாசிசக் கும்பல் கனவு கானும் இந்துராஷ்டிரமானது பெண்களுக்கு எதிரானது என்பதற்கான சான்றுகளாகும். பாசிசக் கும்பலை வீழ்த்தாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை என்பதை மேற்கூறிய சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன.
பிக்பாஸ்கள் நமது வீட்டின் தாழ்வாரத்திலேயே கடை விரிக்கின்றன. ஆபாச இணையதளங்கள் இளம் சிறார்களின் பார்வைக்கு எளிதாக கிடைக்கின்றன. கஞ்சா, போதைப்பொருட்கள் பள்ளி மாணவர்களிடையே இயல்பாக புழங்கும் பண்டமாகிவிட்டது. மது, அத்தியாவசியப் பொருள் போல் 24 மணி நேரமும் கிடைக்கிறது. இவையனைத்தும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தூண்டுகோலாக இருக்கின்றன.
ஆபாச இணையதளங்கள், டேட்டிங் செயலிகள், கஞ்சா, மதுபோதைகளை தடை செய்யாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது. இவற்றை தடை செய்வதற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்தவும் பெண்கள், ஜனநாயக சக்திகள் உள்ளிட்ட அனைவரும் களப்போராட்டத்தை கட்டியமைக்க வேண்டியது அவசியம். இவற்றின் மூலமாகவே மக்களுக்கான ஜனநாயகத்தை நாம் வென்றெடுக்க முடியும்.
(இப்பதிவு முதலில் மார்ச் 8, 2019 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்டது.)
***
மிக நீண்ட நாட்களாக பெண்கள் சார்ந்த இந்த தினத்தைப்பற்றி எழுத வேண்டும் என்றும் நினைத்தேன். சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த எனது கண்ணோட்டத்தின் நீட்சியே இக்கட்டுரை.
இன்று நாம் கொண்டாடும் மகளிர் தினத்தில், கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகுப் போட்டி என பல போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்படுகின்றன. ஊடகங்களும், வர்த்தக நிறுவனங்களின் மூலம் பெண்கள் பயன்படுத்தும் பொருளுக்கு தள்ளுபடியுடன் கூடிய வாழ்த்துகளை கூறுகின்றன. இதைத்தான் கார்ப்பரேட்டுகள், “ஊடகங்களின் மூலம் சந்தைப்படுத்துதல்” என நமக்கு சொல்லி தருகின்றன. இதுதான் உண்மையில் மகளிர் தினமா ?
இல்லை.. உண்மை அதுவல்ல. மகளிர் தினம் குறித்து அறிய அதன் தோற்றத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். 1910-ம் ஆண்டு, டென்மார்க் தலைநகரில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் கிளாரா ஜெட்கின் தலைமையிலான உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில், பெண்களின் பிரச்சினைகளுக்கு சோசியலிஸ்ட் பார்வையுடன், உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் 1917-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியன்று பெண்கள் மற்றும் தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர். இந்தப் புரட்சிகர தினமே உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான ஆண்களும் கலந்துகொண்டனர். ஆணும் பெண்ணும் சேர்த்தேதான் மகளிர் தினத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது கருத்தும்கூட.
இதை முன்னெடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தீம் (Theme) முன்னெடுக்கப்படுகிறது. அதில் இந்த ஆண்டுக்கான தீம் #BalanceforBetter என்பதாகும். ஆணும் பெண்ணும் சமம் என்கிறது. Gender Equality (பாலின சமத்துவம்) என்பது கல்வி, கடமை, வேலை வாய்ப்பு, உரிமை என எல்லாம் இருவருக்கும் ஒன்று என்பதே.
ஆனால், எதார்த்தத்தில் சமூகம் அப்படியானது அல்ல; அது பெண் என்பவளை உடல் சார்ந்தவளாகவும், அவளது உழைப்பை பயன்படுத்தி கொள்ளவும் மட்டுமே பார்த்து வருகிறது. தற்போது இது மாறிவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது தவறு.
இந்தியாவில் ஆண்கள் சராசரியாக 7 மணி நேரமும், பெண்கள் 9 முதல் 11 நேரம் வரை உழைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு சொல்கிறது. இதில் பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளை கணக்கில் கொள்வதில்லை என்கிறது. ஆனால், ஆணோ பெண்ணோ யார் எதைச் செய்தாலும் அது வேலையே. ஆனால், நம் சமூக அமைப்பு இதிலிருந்து வேறுபடுகிறது. உலக பாலியல் பேத பட்டியலில் (Global Gender Gap Index) ஆய்வறிக்கை 149 நாடுகள் கொண்ட பட்டியலில் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 108-வது இடத்தை பெற்றுள்ளது. இதே போன்று மற்றுமொரு ஆய்வில் உலகில் சமத்துவத்தை பாதுகாக்கின்ற நாடுகளில் முதலிடத்தில் பெல்ஜியம் அதைத் தொடர்ந்து டென்மார்க், பிரான்ஸ், லட்டவியா, லக்ஸ்சம்பர்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள்தான் முன்னிலையில் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. அதில் பிரான்ஸ் அபரித வளர்ச்சியை கொண்டுள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.
பெண்களின் பாதுகாப்பு
பெண்கள் என்றவுடன் அவர்களின் பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில், பெண்களின் பாதுகாப்பு பற்றிய ஆய்வின் முடிவுகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உலகில் பெண்கள் வாழ்வதற்கு மிக மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. போர் சூழ்ந்து உள்ள ஆப்கானிஸ்தான், சோமாலியா, பாகிஸ்தான், காங்கோ போன்ற நாடுகள் கூட நம்மைவிட பின்னால் இருக்கின்றன. இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியா, பெண்களின் மீதான பாலியல் வல்லுணர்வு, அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடான ஒன்று.
பெண் கல்வி
பாதுகாப்பு இப்படி இருக்கையில் பெண் கல்வி கேள்விக்குறியாக மாறிவருகிறது. மாணவி அனிதாவின் டாக்டர் கனவைக் காவு வாங்கிவிட்டு ‘பேட்டி படோ’ என்கிறது மத்திய அரசு. உள்நாட்டு உற்பத்தியில் ஜி.டி.பி.யில் 6 சதவிதத்தில் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று கோத்தாரி கல்விக்குழு பரிந்துரைக்கிறது. ஆனால், 2013-14 ஆண்டு 0.71 சதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கப்பட்டுவருகிறது. அதை ஆளும் மத்திய அரசு 0.45-யாக மேலும் குறைத்துள்ளது. இப்படி கல்வியும் அடிபாதாளத்தில் போய் கொண்டு இருக்கிறது. இதில் பெரும் பாதிப்பு பெண்களுக்கே.
பள்ளி கட்டிடங்களில், கழிவறைகள் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்பு இல்லாமல் பெண் உயர் கல்வி இடைநிற்றலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்போது சத்துணவையும், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட முட்டை போன்ற புரதச்சத்து கொடுக்ககூடிய உணவுகளை தவிர்க்கக்கூடிய தனியார் NGO-விடம் கொடுக்க அரசு முயன்று வருகிறது. மேலும், கடந்த மாதம் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்து எதிர்ப்புகள் கிளம்பியபின் அதை ரத்து செய்தது. இந்த ஆண்டு மட்டுமல்லாமல் வரும் ஆண்டும் பள்ளிக் கட்டமைப்பை, ஆசிரியர் மேம்படுத்தல், புதிய கற்றல் முறை போன்று கற்றலை மேம்படுத்த வேண்டுமே தவிர குழந்தைகளின் தலையில் சுமையை ஏற்றுவது தவறு.
இவ்வாறு செய்வதன் முலம் பெண் கல்வியை கேள்விக்குறியாக்குகிறது. இப்படி மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் செயல்படுகிறது அரசு. ஆனால், இதற்கெல்லாம் மாறாக கேரளா இடதுசாரி அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு மக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றி வருகின்றனர்.
பெண்களின் வேலை மற்றும் ஊதியம்
உலக அளவில் இந்தியாவில்தான் ஊதிய பாகுபாடு பெரும் அளவில் இருப்பதாக International Labour Organization (ILO) 2018-19 ஆண்டின் ஆய்வு அறிக்கை Business Standard இதழில் கடந்த நவம்பர் மாதம் வெளி வந்துள்ளது. 73 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் பெறவில்லை எனவும் அது 34% ஆண்களை விட பெண்கள் குறைந்த ஊதியத்தை வாங்குகின்றனர் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிலும் பகுதி நேர வேலை செய்யும் 16% பெண்கள், ஆண்களை காட்டிலும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். இப்படி கல்வித்துறையில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வரும் வேளையிலும் இந்த இடைவெளி தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டு 20%-ஆக இருந்த இருந்த பாலின ஊதிய இடைவெளி (Gender Wage Gap ), இந்த 2018-19-ம் ஆண்டும் தொடர்கிறது.
இப்படி கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராட வேண்டிய நிலையில் உள்ள இச்சூழலில் மகளிர் தினக் கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் நம் உரிமைகளை கோரி …
(இப்பதிவு முதலில் மார்ச் 8, 2021 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்டது.)
***
ஒரு புரட்சியின் கொண்டாட்டம்
மகளிர் தினம் அல்லது உழைக்கும் மகளிர் தினம் என்பது சர்வதேச ஆதரவுக்கான நாள் மற்றும் உழைக்கும் பெண்களின் பலம் மற்றும் அமைப்பை மறுபரிசீலனை செய்யும் நாளாகும்.
ஆனால் இது பெண்களுக்கு மட்டும் உரிய சிறப்பு தினம் அல்ல. மார்ச் 8-ஆனது உலகின் அனைத்து தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், ரசிய தொழிலாளர்களுக்கும், உலக தொழிலாளர்களுக்கும் நினைவுகூரத்தக்க வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். 1917-ம் ஆண்டு இந்த நாளில் மாபெரும் பிப்ரவரி புரட்சி வெடித்தது. பீட்டர்ஸ்பெர்கின் உழைக்கும் பெண்கள்தான் அப்புரட்சியைத் துவங்கினார்கள். அவர்கள்தான் ஜார் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு எதிராக பதாகைகளை உயர்த்த முடிவு செயதனர். எனவே பெண்கள் தினம் நமக்கு இரட்டை கொண்டாட்டமாகும்.
ஆனால் இது அனைத்து தொழிலாளர்களுக்கான பொது தினம் எனும்பட்சத்தில் ஏன் மகளிர் தினம் என்று அழைக்கிறோம்? பிறகு ஏன் உழைக்கும் பெண்களையும், விவசாயப் பெண்களையும் மையப்படுத்தி சிறப்பு கொண்டாட்டங்களும், கூட்டங்களும் நடத்துகிறோம்? இது உழைக்கும் வர்க்கத்தினரின் ஒற்றுமையையும் ஆதரவையும் மறுதலிக்காதா? இதற்கெல்லாம் விடைகிடைக்க வேண்டுமென்றால் பெண்கள் தினம் எப்படி உருவானது என்பதையும், அது எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது என்ற வரலாற்றையும் நாம் பின்நோக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
மிகப்பல வருடங்கள் அல்ல, ஒரு பத்து வருடத்திற்கு (1909-10) முன்பாகதான் பெண்களுக்கான சம உரிமை என்ற கேள்வியும் மற்றும் ஆண்களோடு பெண்களும் அரசு நிர்வாகத்தில் சரிசமமாக பங்கெடுக்க முடியுமா? என்பது குறித்தும் காராசாரமான விவாதங்கள் நடத்தப்பட்டன. அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் வர்க்கம், உழைக்கும் மகளிரின் உரிமைகளுக்காக போராடியது. ஆனால் முதலாளிகள் இவ்வுரிமைகளை ஏற்கத் தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் உழைக்கும் மக்களின் வாக்கினை பலப்படுத்துவதென்பது முதலாளிகளின் நலன்களுக்கு எதிரானது. ஆகையால் அனைத்து நாடுகளிலும் அவர்கள் உழைக்கும் பெண்களுக்கு உரிமைகள் வழங்கும் சட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடையாக இருந்தனர்.
வட அமெரிக்க சோசலிஸ்டுக்கள் விடாமுயற்சியுடன் தங்களுடைய ஓட்டுரிமை கோரிக்கையினை வலியுறுத்தினர். 28.02.1909 அன்று அமெரிக்க பெண் சோசலிஸ்ட்டுக்கள், உழைக்கும் பெண்களுக்கான அரசியல் உரிமை கோரி நாடு முழுவதும் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தினர். இதுதான் முதல் மகளிர் தினம். எனவே மகளிர் தினத்தினை துவங்கிய பெருமை அமெரிக்க உழைக்கும் மகளிரையே சாரும்.
1910-ம் ஆண்டு நடைபெற்ற உழைக்கும் மகளிரின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில், கிளாரா ஜெட்கின் அவர்கள், உலகளவிலான மகளிர் தின ஒருங்கிணைப்பு குறித்த கேள்வியை முன்வைத்தார். அம்மாநாட்டில், ஒவ்வொரு வருடமும், அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென்றும், அது ”பெண்களின் ஓட்டுரிமை, சோசலிசத்திற்கான போராட்டத்தில் நமது வலிமையை ஒருங்கிணைக்கும்” என்ற முழக்கத்தின் கீழ் இருக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.
அலெக்சாந்த்ரா கொலந்தாய்
இவ்வருடங்களில், ஓட்டுரிமையை விரிவுபடுத்துவது, குறிப்பாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பதின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் ஜனநாயகமுடையதாக ஆக்குவதென்பது மிக முக்கிய நோக்கமாக இருந்தது. முதல் உலகப் போருக்கு முன்பே ரஷ்யா தவிர அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாளிகள் ஓட்டுரிமை பெற்றிருந்தனர். இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தில் மகளிரின் பங்களிப்பு அவசியமாயிருந்தது என்பதுதான் முதலாளித்துவத்தின் மறுக்கமுடியாத நிதர்சனமாக இருந்ததது. ஒவ்வொரு வருடமும் ஆலைகளில், தொழிற்கூடங்களில் வேலையாட்கள், பணிப்பெண்கள் என வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. பெண்கள் ஆண்களுக்கு இணையாக உழைத்து நாட்டின் பொருளாதாரத்தை தமது கைகளால் உருவாக்கினர் என்றாலும் அவர்கள் ஓட்டுரிமையின்றி இருந்தனர்.
போருக்கு முந்தைய வருடங்களில் காணப்பட்ட விலைவாசி உயர்வு மிகவும் அமைதியான குடும்பப் பெண்களைக்கூட அரசியலில் ஆர்வம் காட்டவும், முதலாளித்துவ பொருளாதார கொள்ளைக்கெதிராக உரத்த குரலெழுப்பவும் முந்தித்தள்ளியது. ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ”குடும்பப் பெண்களின் எழுச்சி” அடிக்கடி வெடித்துக் கிளம்பும் நிகழ்வாக அதிகரித்துக்கொண்டே சென்றது.
கடைத்தெருக்களில் கடைகளை உடைப்பதும், முறையற்ற வணிகர்களை மிரட்டுவதும் விலைவாசியை கட்டுப்படுத்த உதவாது என்பதனை உழைக்கும் மகளிர் புரிந்துகொண்டனர். அரசாங்கத்தின் அரசியலில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றும் அதனை சாதிப்பதற்கு உழைக்கும் வர்க்கம் ஓட்டுரிமையை விரிவுபடுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டுமென்பதையும் அவர்கள் புரிந்துகொண்டனர்.
உழைக்கும் மகளிருக்கான ஓட்டுரிமையை பெறும் நோக்கத்தில் அனைத்து நாடுகளிலும் மகளிர் தினத்தினை ஒரு போராட்ட வடிவமாக ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது. பொது நோக்கத்திற்கான போராட்டத்திற்கும், சோசலீச பாதாகையின் கீழ் உழைக்கும் மகளிரின் ஒருகிணைப்பினை மறுஆய்வு செய்வதற்கும் உலகளவிலான ஆதரவினை நல்கும் ஒரு நாளாக மகளிர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.
முதல் உலக மகளிர் தினம்
சோசலிச பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு வெறும் காகிதத்தோடு நிற்காமல், 1911 வருடத்தின் மார்ச் 19 தேதியன்று முதல் உலக மகளிர் தினத்தினை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நாள் பொத்தாம் பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. 1848-ம் ஆண்டு மார்ச் 19 அன்று ப்ரஷ்ய மன்னன் ஆயுதமேந்திய மக்களின் போராட்ட வலிமையைக் கண்டு, பாட்டாளி வர்க்க எழுச்சிக்கு அஞ்சி பல வாக்குறுதிகளை அளித்தான். பெண்களுக்கான ஓட்டுரிமை போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென்றாலும், இந்த மார்ச் 19 நாளானது ஜெர்மன் பாட்டாளிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆகவேதான் இந்த நாளை உகல மகளிர் தின நாளாக தேர்ந்தெடுத்தனர்.
ஜனவரி 11-ம் தேதிக்குப் பிறகு ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் பெண்கள் தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்நாளில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை வாய்வழிப் பிரச்சாரங்கள் மற்றும் பத்திரிக்கைகள் மூலம் தெரியப்படுத்தினர். பெண்கள் தினத்திற்கு முந்தைய வாரத்தில் “ஜெர்மனியில் பெண்களுக்கான ஓட்டுரிமை” மற்றும் “ஆஸ்திரியாவில் பெண்கள் தினம்” என்ற இரு பத்திரிகைகள் கொண்டுவரப்பட்டன. மேலும் “பெண்களும் பாராளுமன்றமும்”, “உழைக்கும் பெண்களும் நகராட்சி நிர்வாகமும்”, “குடும்பப்பெண்களுக்கு அரசியலில் என்ன வேண்டியிருக்கிறது?” மற்றும் பல கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. அவைகள் அரசாங்கத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கான சம உரிமை குறித்து துல்லியமாக ஆய்வு செய்திருந்தன. மேலும் அனைத்து கட்டுரைகளும் பெண்களுக்கு வாக்குரிமையளிப்பதன் மூலம் பாராளுமன்றத்தை மேலும் ஜனநாயகமுள்ளதாக ஆக்க வேண்டியிருப்பதன் அவசியத்தை வலியுறுத்தின.
முதல் உலக மகளிர் தினம் 1911-ம் ஆண்டு நடைபெற்றது. அது அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றியது. ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் மகளிர் தினத்தன்று கனல் தெறிக்கும் அலைகடலென பெண்கள் திரண்டனர். கிராமங்கள், நகரங்கள் என எங்கெங்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து அரங்கங்களும் நிரம்பிவழிந்தன. வேறுவழியின்றி ஆண் தொழிலாளர்களின் இருக்கைகளை விட்டுக்கொடுக்கச் சொல்லி கேட்க வேண்டிய நிலையை அது ஏற்படுத்தியது.
உழைக்கும் மகளிர் தங்களுடைய போர்குணத்தை காட்டிய முதல் காட்சியாக இவ்வுலக மகளிர்தினம் நிச்சயமாக அமைந்திருந்தது. மாற்றத்திற்காக ஆண்கள் வீட்டில் குழந்தைகளோடு இருந்தனர் மேலும் அவர்களுடைய மனைவிகள், குறிப்பாக குடும்பப் பெண்களாயிருந்த அவர்கள் கூட்டங்களுக்குச் சென்றனர். 30,000 பெண்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய தெருமுனை ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் பதாகைகளை அகற்ற முடிவு செய்தனர். பெண்கள் அதை எதிர்கொள்வதென முடிவு செய்தனர். இச்சம்பவத்தில் காவல்துறைக்கும் பெண்களுக்கும் ஏற்பட்ட மோதல் பாராளுமன்றத்தின் சோசலிஸ்ட் பிரதிநிதிகளின் உதவியோடு மட்டுமே இரத்தக் களறியாகாமல் முடிவுக்கு கொண்டுவரமுடிந்தது.
1917-ல் ரசியாவில் ஜார் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட சர்வதேச பெண்கள் தினப் பேரணி – பிப்ரவரி புரட்சியை பற்ற வைத்த நெருப்புப் பொறி
1913-ம் ஆண்டு உலக மகளிர்தினம் மார்ச் 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இத்தினம் உழைக்கும் மகளிரின் போராட்ட தினமாக நிலைபெற்றது.
அக்காலகட்டத்தில் சோசலிச புரட்சி குறித்த மிரட்சி முதலாளிகளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. ஆகையால் எந்த முதலாளித்துவ பாராளுமன்றமும் தொழிலாளிகளுக்கு கருணை காட்டவோ, பெண்களின் கோரிக்கைகளை ஏற்கவோ அல்லது பரிசீலிக்கவோ முன்வரவில்லை. ஆனால் மகளிர்தினம் இதனை ஓரளவுக்கு சாதித்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மகளிர் தினம் வியக்கத்தக்க பலன்களை அளித்தது. இது அரசியல் அறிமுகம் குறைவாகயிருந்த நமது சகோதரிகள் மத்தியில் போராட்ட வழிமுறையை உருவாக்கியது. அவர்களுடைய கவனம் பெண்கள் தின கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சுவரொட்டிகள், கைப்பிரதிகள் மற்றும் செய்தித்தாள்களை நோக்கி குவிந்தது.
அரசியல் பின்புலமற்ற பெண்கள்கூட “இது நம்முடைய தினம், உழைக்கும் பெண்களின் திருவிழா“ என்று நினைத்தனர். மேலும் கூட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் விரைந்து சென்றனர். ஒவ்வொரு பெண்கள் தினத்திற்குப் பிறகும் ஏராளமான பெண்கள் சோசலீச கட்சியில் இணைந்தனர். மற்றும் தொழிற்சங்கங்கள் வளர்ச்சியடைந்தன. அரசியல் உணர்வு மேம்பட்டது மேலும் அமைப்புக்கள் முன்னேற்றமடைந்தன.
உலக மகளிர் தினத்தையொட்டி ஜெர்மன் தோழர்கள் இங்கிலாந்து செல்வதும், இங்கிலாந்து தோழர்கள் ஹாலந்து செல்வதும் என பல்வேறு நாடுகளின் கட்சிகள், பேச்சாளர்களைப் பரிமாறிக்கொண்டனர். இவ்வொத்திசைவு, உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடுவதற்கும், உழைக்கும் வர்க்கம் வலுப்பெறுவதற்கும் மற்றும் பாட்டாளிகளின் போராட்ட வலிமையை கூட்டுவதற்கும் வினையாற்றியது.
தீரம் மிக்க மகளிர்தினம், உணர்வு மேம்பாட்டையும், மகளிரை அமைப்பாக்குவதற்கும் உதவியாக இருந்தது. மேலும் உழைக்கும் வர்க்கத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக போராடுபவர்களின் வெற்றிக்கும் அது பங்காற்றியது என்பது தீரம் மிக்க ‘உலக மகளிர் தினத்தின்’ பலன்களாகும்.
ரஷ்யாவில் உழைக்கும் மகளிர் தினம்
ரஷ்ய பெண் தொழிலாளர்கள் முதன்முதலில் 1913-ம் ஆண்டு நடைபெற்ற “உழைக்கும் மகளிர் தினத்தில்“ பங்கெடுத்தனர். இது ஜார் மன்னனின் ஆட்சி உழைப்பாளிகளையும், விவசாயிகளையும் தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த கால கட்டமாகும். திறந்தவெளி ஆர்ப்பாட்டங்கள் நடத்தமுடியாத சூழல் இருந்தபோதும், மகளிர் தினத்தை உலக தினமாக அவர்கள் சிறப்பித்துக்காட்டினர். போல்ஷ்விக் ‘பிராவ்தா’ – மென்ஷ்விக் ‘லூச்’ ஆகிய சட்டபூர்வ உழைக்கும் வர்க்க பத்திரிக்கைகள் ‘உலக மகளிர் தினம்’ குறித்த சிறப்புக் கட்டுரைகள், உழைக்கும் மகளிருக்கான இயக்கங்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள், பெபல் மற்றும் ஸெட்கின் போன்ற தோழர்களின் வாழ்த்துக்களை பிரசுரித்தன.
கூட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்த இருண்ட காலத்திலும், கட்சியின் உழைக்கும் மகளிர் பெட்டோகிராட்டின் கலாஷ்கோவஸ்கி முனையத்தில் “மகளிர் கேள்விகள்“ என்ற ரகசிய பொது மன்றத்தை ஏற்பாடு செய்தனர். ஐந்து கோபெக்குகள் கட்டணமாக வசூலிக்கப்பட்டபோதும் அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் கட்சியின் உறுப்பினர்கள் உரையாற்றினர். ஆனால் இந்த உயிர்ப்பான ரகசியக் கூட்டத்தின் ஒரு கட்டத்தில் காவல்துறை தலையிட்டு, பல பேச்சாளர்களைக் கைது செய்ததால் முடிக்கப்பட்டது.
ஜார் மன்னரின் கடுமையான ஒடுக்குமுறையின் கீழிருந்த ரஷ்யாவில் “உலக மகளிர் தின“த்தில் திரளாக பெண்கள் கலந்துகொண்டதும், அந்த நாளை அங்கீகரித்த்தும் உலகத் தொழிலாளர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது ரஷ்ய எழுச்சியின் விடிவெள்ளியாகவும், ஜார் மன்னனின் சிறைகளும், தூக்குமேடைகளும், தொழிலாளர்களின் போராட்டங்களையும், போராட்ட உணர்வையும் அழிக்கவியலாமல் வலுவிழந்ததையே எடுத்துக்காட்டியது.
1914-ம் ஆண்டு ரஷ்யாவின் ‘உழைக்கும் மகளிர் தினம்’ மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட இரண்டு பத்திரிக்கைளும்கூட கொண்டாட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டன. நமது தோழர்கள் ஏற்பாடுகளில் கடும் உழைப்பைச் செலுத்தியபோதும் காவல்துறையின் குறுக்கீட்டால் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ய முடியாமல் போனது. ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்ட தோழர்கள் ஜார் மன்னனின் சிறைகளுக்கும், பிறகு பலர் கடுங்குளிர் வடக்குபகுதிக்கும் அனுப்பப்பட்டனர். இது ‘உழைக்கும் மகளிருக்கு ஓட்டுரிமை’ என்ற முழக்கத்தை ‘ஜார் மன்னனின் எதேச்சதிகாரத்தை தூக்கியெறிவோம்’ என்ற அறைகூவலாக மாற்றியது.
ஏகாதிபத்திய போரின் தருணத்தில் உழைக்கும் மகளிர் தினம்
முதல் உலகப்போர் மூண்டது. அனைத்து நாடுகளின் உழைக்கும் வர்க்கமும் போரின் இரத்தத்தில் தோய்ந்திருந்தன. 1915 மற்றும் 1916-ம் ஆண்டுகளில் பிற நாடுகளில் “உழைக்கும் மகளிர்தினம்“ சாத்தியமற்றதாக இருந்தபோதும், போல்ஸ்விக் கட்சியின் கொள்கைகளையுடைய இடதுசாரி பெண் சோசலிஸ்டுகள், மார்ச் 8-ஐ போருக்கு எதிரான உழைக்கும் மகளிரின் ஆர்ப்பாட்டமாக மாற்ற முயற்சித்தனர். ஆனால் ஜெர்மனி சோசலிச கட்சியிலிருந்த துரோகிகள் அதனைத் தடுத்து நிறுத்தினர். நடுத்தர கொள்கையுடைய நாடுகளில், முதலாளிகளின் எண்ணங்களுக்கெதிராக உலக தொழிலாளர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட உலக மகளிர்தின கூட்டங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்தில், அத்தருணத்தில் பெண் சோசலிஸ்டுகளுக்கு கடவுச்சீட்டு மறுக்கப்பட்டது.
1915-ல் நார்வே நாட்டில் மட்டுமே ஓரளவு சமாளித்து மகளிர் தினத்தில் உலகளவிளான ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன, அதில் இரஷ்யா மற்றும் நடுநிலை நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அக்காலகட்டத்தில் ஜார் மன்னராட்சியின் ராணுவ ஒடுக்குமுறைக் கருவிக்கெதிராக, பெண்கள் தின ஒருங்கிணைப்பை இரஷ்யாவில் யோசிக்கக்கூட முடியாக நிலை இருந்தது.
அதன்பிறகு மிகச் சிறப்பான 1917-ம் ஆண்டு பிறந்தது. பசியும், பிணியும், போர் பயிற்சிகளும் பெண் தொழிலாளிகள் மற்றும் விவசாயப் பெண்களின் பொறுமையை உடைத்தெறிந்தன. 1917, மார்ச் 8-ம் நாள் (அன்றைய பிப்ரவரி 23) பெண்கள் தினத்தன்று பெண்கள் மிக தைரியமாக பெட்ரோகிராட் தெருக்களில் கூடினர். அப்பெண்களில் சிலர் தொழிலாளர்கள், சிலர் வீரர்களின் மனைவிகள். அவர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு ரொட்டி கோரியும் இரானுவத்திலிருந்து தங்களுடைய கணவர்களை திருப்பியனுப்பும்படி முழக்கமிட்டனர். இந்த உச்சகட்ட சூழலில் உழைக்கும் மகளிரின் போராட்டத்தில், ஜார் மன்னரின் பாதுகாப்பு படைகள் வழக்கமான ஒடுக்குமுறையை கையாளமுடியாமல், அலைகடலென திரண்டிருந்த மக்களின் கோபக் கனலை மிரட்சியுடனும் குழப்பத்துடனும் நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
1917-ம் ஆண்டின் உழைக்கும் மகளிர் தினம் வரலாற்றில் நினைவுகூரத்தக்கதாக மாறியது. அத்தினத்தில்தான் இரஷ்ய பெண்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தீப்பொறியை உயர்த்தினர். அது உலகம் முழுக்க பற்றியது. பிப்ரவரி புரட்சியின் துவக்க நாளாக அது அமைந்தது.
போருக்கான நமது அழைப்பு
பத்து வருடத்திற்கு முன்பு “உழைக்கும் மகளிர் தினம்” முதன் முதலாக பெண்களுக்கு அரசியல் சமத்துவம் மற்றும் சோசலிசத்துக்கான போராட்டம் என்ற பிரச்சாரங்களை முன்வைத்து நடத்தப்பட்டது. இரஷ்ய மகளிர் இவ்வுரிமைகளைப் பெற்றனர். சோவியத் குடியரசில் உழைக்கும் பெண்களும், விவசாயிகளும் ஓட்டுரிமை மற்றும் குடியுரிமைகளை ஏற்கெனவே வென்றெடுத்துவிட்டதால் அவ்வுரிமைகளுக்காக போராடவேண்டிய தேவை எழவில்லை. இரஷ்ய தொழிலாளர்களும் விவசாய பெண்களும் சம உரிமையுள்ள குடிகளாகிவிட்டனர். அவர்களிடம் ஓட்டுரிமையும், சோவியத் மற்றும் பிற கூட்டுறவு அமைப்புக்களிலும் பங்கெடுக்கும் அதிகாரங்கள் உள்ளன. மேம்பட்ட வாழ்க்கையை எளிமையாக அடைவதற்கு உதவும் ஆயுதங்களாகிய இவைகளை அவர்கள் கைக்கொண்டிருந்தனர்.
ஆனால் உரிமைகள் மட்டும் போதாது. அவைகளை எப்படி பயன்படுத்துவது என்பதையும் கற்க வேண்டும். ஓட்டளிக்கும் உரிமையை நம்முடைய பலனுக்கானதாக எப்படி ஆக்குவது என்பதை கற்கவேண்டும். இந்த இரண்டு வருட சோவியத் அதிகாரத்தில், நமது வாழ்க்கை முற்றிலும் மாறிவிடவில்லை. நாம் கம்யூனிசத்தை அடைவதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். அதே சமயத்தில் பழைய இருண்ட மற்றும் அடக்குமுறைகளைக் கொண்ட பழைமையான உலகாலும் சூழப்பட்டுள்ளோம். குடும்பச் சங்கிலி, வீட்டு வேலைகள், விபச்சாரம் போன்றவைகள் இன்னமும் உழைக்கும் பெண்கள் மீது கனத்துக்கொண்டுதான் இருக்கின்றன. உழைக்கும் பெண்களும் விவசாயப் பெண்களும் இவைகளிலிருந்து விடுபட்டு சமத்துவத்தை அடைய வேண்டுமென்றால் அது இரஷ்யாவை உண்மையான கம்யூனிச சமூதாயத்தை நோக்கி கொண்டுசெல்வதில் நம்முடைய உழைப்பைச் செலுத்தினால் மட்டுமே சாதிக்க முடியுமே தவிர வெறும் சட்டத்தால் இயலாது.
இதனை விரைந்து சாத்தியமாக்க நாம் முதலில் இரஷ்ய பொருளாதாரத்தை நேர்நிலைப்படுத்த வேண்டும். இதனைச் சாதிக்க அடிப்படையாக நம்முன் இரண்டு முதன்மைக் கடமைகள் உள்ளன. ஒன்று எஃகுறுதிகொண்ட அரசியல்படுத்தப்பட்ட தொழிலாளர் கட்டமைவை ஏற்படுத்துவது மற்றொன்று போக்குவரத்தை மறுசீரமைப்பு செய்வது. நம்முடைய தொழிலாளர்கள் துரிதமாக செயல்பட்டால் மிகவிரைவில் நீராவி எந்திரங்களைப் பெற்று மீண்டும் இரயில்களை இயக்கலாம். இதன்மூலம் உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் அவசியத் தேவையான ரொட்டியையும் விறகினையும் பெறலாம்.
போக்குவரத்தை மீட்பது கம்யூனிச வெற்றியை விரைவுபடுத்துவதாகும். கம்யூனிச வெற்றியுடன் பெண்களின் சமத்துவதும் வென்றெடுக்கப்படுகிறது. எனவே உழைக்கும் பெண்கள், விவசாயப் பெண்கள், தாய்மார்கள், மனைவிகள் மற்றும் சசோதரிகள் அனைவரும் இரயில்வே மற்றும் போக்குவரத்தை மறுசீரமைப்புச் செய்வதில் மற்றும் உணவு, விறகு மற்றும் மூலப்பொருட்களை கொணர்வதில் பாடுபடும் நமது தொழிலாளர்களுக்கு இருக்கும் சிரமங்களை போக்குவதற்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என்பதை இந்த உழைக்கும் மகளிர்தினத்தின் செய்தியாக முன்வைக்கிறோம்.
சென்ற வருட மகளிர் தினத்தின் முழக்கம் “அனைத்தும் செம்படையின் வெற்றிக்கு!“ என்பதாகும். தற்போது நமது உழைக்கும் மகளிரை நம்முடைய உழைப்பாளிகளின் ரத்தம் சிந்தா அணிவகுப்பின் பின்னால் அனிவகுக்க அழைப்பு விடுக்கிறோம். செம்படை ஒருங்கமைக்கப்பட்டதாக, ஒழுங்கமைக்கப்படதாக மற்றும் சுயதியாகம் செய்ய தயாராக இருந்ததால்தான் புற எதிரியை தோற்கடித்தது. தற்போது நமது ‘தொழிலாளர் குடியரசு’ உள்நாட்டு எதிரிகளான போக்குவரத்து இடப்பெயர்வு, பொருளாதார சூழல், பசி, குளிர் மற்றும் நோய்கள் ஆகியவற்றை வெல்லும். “நாம் அனைவரும் தொழிலாளர்களின் இரத்தம் சிந்தா முன்னனியின் வெற்றிக்கே! அனைவரும் அதன் வெற்றிக்கே!“
உழைக்கும் மகளிர் தினத்தின் புதிய இலக்கு
அக்டோபர் புரட்சி நமது பெண்களுக்கு சமத்துவத்தையும், ஆண்களோடு சமமான குடியுரிமைகளையும் வழங்கியது. சில காலத்திற்கு முன்புவரையில் மிகுந்த துரதிஷ்டவசத்திலும், ஒடுக்குமுறையிலும் இருந்த இரஷ்ய பெண் பாட்டாளிகள் தற்போது சோவியத் குடியரசில், பிற நாட்டு தோழர்களுக்கு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மற்றும் சோவியத் அதிகாரத்தை அமைப்பதன் மூலம் அரசியல் சமத்துவத்தை அடையமுடியும் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலாளித்துவ நாடுகளில் இன்றும் பெண்கள் உழைப்புச் சுரண்டப்படுபவர்களாகவும், வாய்பற்றவர்களாகவும் இருப்பதால் அங்கு நிலைமை வேறாக உள்ளது. நார்வே, ஆஸ்திரேலியா, பின்லாந்து மற்றும் வட அமெரிக்கா போன்ற சில நாடுகளில் போருக்கு முன்பே பெண்கள் குடிமை உரிமை பெற்றனர் என்றாலும் அந்நாடுகளில் உழைக்கும் பெண்களின் குரல் பலவீனமாகவும், உயிர்ப்பின்றியும்தான் இருக்கின்றது.
ஜெர்மனியில், கெய்சர் தூக்கியெறியப்பட்ட பின்பு, சமரசவாதிகள் தலைமையில் முதலாளித்துவ குடியரசு அமைக்கப்பட்டது. அதில் 36 பெண்கள் பாராளுமன்றத்திற்குள் பங்கெடுத்தனர். ஆனால் அதில் ஒரு கம்யூனிஸ்ட் கூட இல்லை.
1919-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு பெண் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக முதன்முறையாக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால் அவர் யார்? ஒரு நிலச்சுவாந்தாரரும், மேல்தட்டு வர்க்கத்தைச் சோ்ந்த சீமாட்டியும் ஆவார் அவர்.
பிரான்சில் கூட பெண்களுக்கு ஓட்டுரிமையளிப்பது தொடர்பான கேள்வி எழுந்தது.
ஆனால் முதலாளித்துவ பாராளுமன்ற கட்டமைப்பில் உழைக்கும் பெண்களுக்கான இவ்வுரிமைகள் என்ன பலனைத் தரும்? அதிகாரம் முதலாளிகள் கையிலும், சொத்துடைமையாளர்கள் கையிலும் இருக்கும்போது எந்த அரசியல் உரிமையும், உழைக்கும் பெண்களை பழைமையான குடும்ப மற்றும் சமூக அடிமைத்தனத்திலிருந்து மீட்காது. இந்நிலையில் பிரான்சில் உழைக்கும் வர்க்கங்கள் மத்தியில் போல்ஸ்விக் கருத்துக்கள் மேலோங்கி வருவதால், பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கும் பெயரில் உழைக்கும் வர்க்கத்திற்கு மேலுமொரு பருக்கை தர முடிவு செய்தது.
அக்டோபர் புரட்சியின் அனுபவம் பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளின் உழைக்கும் பெண்களுக்கு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மட்டுமே, சோவியத் அதிகாரம் மட்டுமே, முழுமையான நிரந்தரமான சமத்துவத்தை உத்திரவாதப்படுத்த முடியும் என்பதையும், கம்யூனிசத்தின் வெற்றி பல நூற்றாண்டுகால ஒடுக்குமுறைச் சங்கிலியை அறுத்தெறியும் என்பதையும் தெளிவுபடுத்தியது. இதற்கு முன்பு உழைக்கும் மகளிர் தினத்தின் இலக்கு முதலாளிகளின் பாராளுமன்றத்திற்கு முன்பு ஓட்டுரிமைக்கான போராட்டமாக இருந்தது. தற்பொழுது உழைக்கும் பெண்களை “மூன்றாம் அகிலத்தின்“ போராட்ட முழக்கங்களை நோக்கி அணி திரட்ட வேண்டிய புதிய இலக்கு பாட்டாளி வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. முதலாளிகளின் பாராளுமன்றத்தில் உழைப்பைச் செலுத்துவதற்குப் பதிலாக, இரஷ்யாவின் அழைப்பிற்கு செவிசாயுங்கள்“.
“அனைத்து நாடுகளின் உழைக்கும் பெண்களே!
உலகைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த பாட்டாளிவர்க்க முன்னனியை கட்டுவோம்!
முதலாளித்துவ பாராளுமன்றத்தை புறக்கணிப்போம்!
சோவியத் அதிகாரத்தை வரவேற்போம்!
உழைக்கும் ஆண்களையும் பெண்களையும் பிடித்திருந்த வேற்றுமைகளையும் – ஏற்றத்தாழ்வுகளையும் களைந்தெறிவோம்!
உலக கம்யூனிச வெற்றிக்காக தொழிலாளிகளுடன் இணைந்து போராடுவோம்!“
இந்த அழைப்பு முதலில் புதிய முறையின் முன்னோட்டத்திற்கு மத்தியில் ஒலித்தது. பனிப்போரில் இது கேட்கும் மற்றும் இது பிறநாடுகளின் உழைக்கும் பெண்களின் இதயத்தில் சுருதிமீட்டும். உழைக்கும் பெண்கள் இந்த அழைப்பைக் கேட்டு சரியானதென நம்புவார்கள். சிறிது காலத்திற்கு முன்புவரையில் எப்படியாவது தங்கள் தரப்பிலிருந்து சிலரை பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளாக அனுப்பிவிட்டால் அவர்களுடைய வாழ்க்கை எளிமையானதாகவும், மூலதன ஒடுக்குமுறை கடக்கக்கூடிய ஒன்றாகவும் ஆகிவிடும் என்று எண்ணியிருந்தனர். தற்பொழுது உண்மை அவர்களுக்குப் புரியும்.
மூலதன ஆட்சியை தூக்கியெறிவதும், சோவித் அதிகாரத்தை நிறுவுவதுமே உலகைத் துயரிலிருந்தும், உழைக்கும் பெண்களை அவர்களின் வாழ்க்கையை கடினமாக்கும் தாழ்மை மற்றும் சமத்துவமின்மையிலிருந்தும் மீட்கும். ஓட்டுரிமைக்காக நடத்தப்பட்ட “உழைக்கும் மகளிர் தினம்“ இன்று பெண்களுக்கான முழுமையான விடுதலைக்கானதாக, அதாவது சோவியத் மற்றும் கம்யூனிசத்தின் வெற்றிக்கான போராட்டமாக மாறுகிறது.
உடைமை மற்றும் மூலதன அதிகாரம் ஒழிக ! முதலாளித்துவ உலக மரபுகளான – ஏற்றத்தாழ்வு, உரிமையின்மை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவைகளை விட்டொழிப்போம்!
ஆண் பெண் உழைப்பாளர்களின் உலக ஒற்றுமையை முன்னெடுப்போம்!
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள்!
பாட்டாளிவர்க்கத்தின் இருபாலினரும்!
000
கட்டுரை தலைப்பு :உலக மகளிர் தினம் எழுதியவர் : தோழர் அலெக்சாந்த்ரா கொலந்தாய் முதல் பதிப்பு : மெழ்துனரோதின்யி தென், 1920 ஆங்கில மொழி பெயர்ப்பு : அலிக்ஸ் ஹோல்ட் 1972 தமிழாக்கம் : ச. மீனாட்சி (சமூக ஆர்வலர்)
பெண் விடுதலை பேசத்துவங்கி நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், பெண்கள் மீதான வன்முறைகள் நின்றபாடில்லை.
தினந்தோறும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள், சக மனிதர்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலை படம் பிடித்துக் காட்டுகிறது.
அரசின் போக்சோ சட்டமும், வன்கொடுமை வழக்கும், கண்காணிப்பு கேமராவும், திருமண வயது உயர்வும் பெண்களை பாதுகாக்கவில்லை.
எண்ணும் எழுத்தும் தான் கல்வி என்கிற பாடத்திட்டமானது முதலாளிகளிடம் கூலிவாங்கும் அடிமையாகத்தான் பெண்களையும் மாற்றுகிறது. இந்த கல்வியின் நோக்கம் சிந்திக்க வைப்பதல்ல. ஏன் படித்த பெண்கள் கூட சமூக புரிதலின்றி பெரும் சிக்கலில் மாட்டித் தவிக்கிறார்கள்.
அரசின் பெண் கல்வி – பெண்கள் முன்னேற்றம் என்பதெல்லாம் குறைவான கூலிக்கு வேலையாட்களை உருவாக்கும் நோக்குடையதேயாகும்.
புதிதாக முளைத்துள்ள இணையதளம் – ஆன்லைன் கல்விமுறை மாணவிகள் மீதான இன்னொரு தாக்குதலாகிவிட்டது!
ஆண்களின் தின்பண்டமாக காட்டும் ஆபாச சினிமா / வீடியோக்கள், TV போதை, ஊடக வக்கிரங்கள் இணையதளம் – செல்போன்… இவையெல்லாம் பெண்கள் மீது அதிகரித்துள்ள பாலியல் வன்முறைக்கு களம் அமைக்கின்றன.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு – நல்ல சிந்தனை, விழிப்புணர்வு, ஆண்களின் மனமாற்றம் என்று ஆளும் வர்க்க ஊடகங்கள் பேசி, எழுதி படம் காட்டி வருகிறார்கள். வன்முறைக்கான அடிப்படை அரசியல் – சமூக – அறிவியல் காரணிகளை பேசுவதில்லை. ஏன்?
ஜனநாயகம் பேசும் முதலாளித்துவம்; கட்டற்ற சுரண்டலுக்கு எளிதான இலக்காகவும், பாலியல் வக்கிரத்துக்கு தகுந்த இரையாகவும் பெண்களை பாவிக்கிறது.
முதலாளித்துவமானது இலாபம் என்பதை சமூக விதியாக்கிவிட்டது. இதனால், கிராமப்புற விவசாய சமூகத்தில் இருந்த பெண்களின் மீதான குறைந்தபட்ச மதிப்பீடு – அனுதாபம் கூட அழிந்து வருகிறது.
இலாபத்திற்காகவும் இன்பத்திற்காகவும் சுயநலனுக்காகவும் எதையும் செய்யலாம் என மனித உணர்வுகளை படுமோசமாக, மிருக நிலைக்கு கீழாக கார்ப்பரேட் உலகம் தள்ளிக்கொண்டிருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆண்டுதோறும் இலாப விகிதத்தை உயர்த்துவதால், விலைவாசி உயர்கிறது. கூலியாக வழங்கப்படும் பணத்தின் மதிப்பும் குறைந்து விடுகிறது.
பணத்தின் மதிப்பு குறைவதால் குடும்பச் செலவை ஈடுகட்ட பெண்கள், குழந்தைகளும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இயற்கை வளக் கொள்ளை, மானியங்கள் – கார்ப்பரேட் வரி குறைப்பு என அரசு கஜானாவையும் கொள்ளையடித்து விட்டு. அதன் பிறகு நேரடியாகவும் முன்பை விட அதிகமாகவும் பெண்களை உழைப்புச் சுரண்டலுக்கு கார்ப்பரேட் கும்பல் தயார்படுத்துகிறது.
மிகக் குறைந்த கூலிக்கு வேலையாட்களாக பெண்கள், குழந்தைகளையும் திட்டமிட்டு தள்ளுகிறார்கள். இது முதலாளித்துவ இலாப சுரண்டல் விதியாகும்.
பெண்களின் பாதிப்புக்கு காரணம் இயற்கை, விதி, தலையெழுத்து என அடக்கி, ஒடுக்கி வைப்பதை நியாயப்படுத்தும் சமூகமானது ஹார்மோன்களின் வளர்ச்சி – உடற்கூறியல் – அறிவியல் உண்மை குறித்து பேச மறுக்கிறது.
உற்பத்தி முறை, பணத்திமிர், அதிகார வெறி ஆண்களை வேட்டையாடும் மனநிலைக்கு தள்ளிவிட்டது. பெண்களை வேட்டையாடும் கொடூர மனநிலைக்கும் உற்பத்தி முறைக்கும் உள்ள தொடர்பினை பற்றி சமூக இயக்கங்கள், சிந்தனையாளர்கள் பேசுவதில்லை.
முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையில் உழைப்பிற்கேற்ற பங்கும் மரியாதையும் கிடைப்பதில்லை, அதன் காரணமாக சகமனிதர்களை ஏமாற்றுவதில் தொடங்கிய பழக்கம் சமூக பண்பாடாகவே மாறிவிட்டது, எனவே, ஆண்கள் எந்த குற்றவுணர்ச்சியும் இன்றி பெண்களை ஏமாற்றுகிறார்கள், சுரண்டுகிறர்கள்.
சமூக காரணங்கள்!
பழம்பெருமை பேசும் மதமும் ஜாதியும் பெண்களின் உரிமைகளை மறுத்து, பெண்களை அலங்கார – போகப்பொருளாக, குடும்பச் சொத்துக்களில் ஒன்றாக இருத்தி, இன்னொரு வீட்டு விலங்காகவும் 90% நீடிக்க செய்கிறது.
பிறந்த வீடு – பள்ளி – கல்லூரி – புகுந்த வீடு என்று பெண்கள் வாழ்க்கை சுருக்கப்பட்டிருப்பதால் ஆணாதிக்க சமூகத்தின் ஆபத்தான, கேடான போக்கினை அறியாமல் இருக்கின்றனர்.
பெண்கள் உயர்கல்வியும், மேன்மைமிக்க பதவிகளும் அடைந்திருந்தாலும் பாதிப்புகள் – அடக்குமுறைகள் பெருமளவு நீடித்தே வருகின்றது.
தொடரும் கார்ப்பரேட் – பாசிச உற்பத்தியில் பெண்களின் குடும்ப உழைப்பிற்கு உரிய பங்கும் வழங்குவதில்லை. மேலும், குழந்தைகளை (உற்பத்தி சக்திகளை) வளர்த்தெடுக்கும் – ஆண்களின் துணையாகவே கருதப்படுகிறார்கள்.
சுரண்டல் மிகுந்த எந்த சமூக அமைப்பும் மனிதர்களிடையே சமத்துவத்தை உருவாக்க முடியாது.
தீவிர உழைப்புச் சுரண்டலுக்காக சட்ட உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அதன் எதிர்விளைவாக மனிதர்கள் நாடோடிகளாக – ஒழுங்கற்ற – தான் தோன்றிகளாக மாற்றப்படுகிறார்கள்.
தீவிர கார்ப்பரேட் சுரண்டலுக்கு வசதியாக சமூக அமைப்பே சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்காக சீரழிவுகளை தண்டிக்காமல், மோசமான தீர்ப்புகள் மூலம் வளர்த்தெடுக்கப்படுகின்றன.
முன்பை விட அரசின் உறுப்புகள் நீதித்துறை – போலீசு என அனைத்தும் மக்களுக்கு எதிராகவும் ஒடுக்கும் கருவியாகவும் வளர்க்கப்படுகிறது.
இதன் மொத்த எதிரொலியாக சமூகத்தில் பலவீனமான பிரிவினராக கருத்தப்படும் பெண்கள் மீது பாலியல் வன்முறையாக நிகழ்த்தப்படுகிறது.
பெண்ணடிமைத்தனம் மிகுந்த சமூகத்தளமும், அதனை உள்ளடக்கிய அரசுக் கட்டமைப்பும் நீடிக்கும் வரை பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளும் தொடரும்…
அரசியல் காரணங்கள்!
அரசின் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்திய பிறகு பெண்கள் சந்திக்கும் பாதிப்புகளும் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது.
கார்ப்பரேட்மயமாக்கலை வளர்த்து, பாதுகாப்பதே அரசின் நோக்கம், பெண்களைப் பாதுகாப்பதல்ல என்பதை தினசரி பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளே சாட்சியாகும்.
கல்வி, மருத்துவம், விவசாயம் – இயற்கை வளம், தொழில்துறை – பொதுத்துறை என எல்லாத் துறைகளிலும் கார்ப்பரேட்டைப் புகுத்திய அரசு பெண்களுக்கு எப்படி நன்மை செய்யும்? சிந்தியுங்கள்!
கார்ப்பரேட் சார்ந்த அரசுக் கட்டமைப்பு என்பதால் பெண்களுக்கு சிந்திக்கும்படியான கல்வி – பாடத்திட்டங்களை வழங்குவதில்லை, வழங்கப் போவதுமில்லை.
பெண்கள் மீதான தாக்குதலுக்கு அரசுக் கட்டமைப்பு முழுமையாக தீர்வோ- தண்டனையோ வழங்காது. குற்றங்களின் ஆணிவேரை அடையாளப்படுத்தியும் காட்டாது, காட்ட முடியாது!பெருகி வரும் பாலியல் குற்றங்களை தடுக்க வழக்கு – சிறைத்தண்டணையுடன் சொத்துக்களைப் பறிமுதல் செய்து தண்டிக்காமல் வாய்தா வழங்கி வேடிக்கை பார்க்கிறது, அரசு!
ஆகையால், டோட்டல் சிஸ்டத்தையும் (சமூகம்+மதம்+அரசு) புரிந்து கொண்டு வீதியில் இறங்கினால்தான் 75 கோடி பெண்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்ய முடியும்.
தத்துவார்த்த காரணங்கள்!
மனித குல வரலாற்றில் மாறிக் கொண்டே வரும் பொருளுற்பத்தி முறை தான் மனிதர்களின் உணர்வு, சிந்தனை, ரசனை, கலாச்சாரம், நடை, உடை, பாவனை, ஆயுள் என சகலத்தையும் தீர்மானிக்கிறது என்று மார்க்சியம் சொல்கிறது.
மனிதனைத் தீர்மானிப்பதில் பொருளுற்பத்தி முறைதான் தீர்மானகரமான சக்தியாக உள்ளது. இதனைத் தொடர்புபடுத்தியதாக பாடத்திட்டங்கள் இல்லாததால் சுற்றியுள்ள ஆபத்தை உணர முடியாத நிலையில் பெண்கள் உள்ளனர்.
காய் – பழம், கிழங்கு, இலைகளை உண்டு மரங்களில் வாழ்ந்த மனிதன் விலங்கினங்களை ஒத்த உறவுகளிலேயே காணப்பட்டான்.
நதிக்கரை ஓரங்களில் நீர், நிலம் சார்ந்து – பயிரிட்டு வாழத் துவங்கிய மனிதனுக்கு உற்பத்தி – உழைப்பிற்கு சக மனிதர்களின் உதவிகள் தேவைப்பட்டது. அங்கு தான் உறவுகளின் தேவை ஏற்பட்டது. பொருளுற்பத்தியோடு தான் உறவுகள் தோன்றி வளர்ந்தது.
உற்பத்தியோடு ஏற்பட்ட வேலைப் பிரிவினையில் பெண்கள் வீட்டு வேலைக்கு ஒதுக்கப்பட்டார்கள் என்பது ஆணாதிக்க வரலாற்றின் துவக்க காலகட்டமாகும். (மாதவிடாய், பேறு காலத்தை கேடாக காட்டி விட்டார்கள்)
அங்கு உருவான தேவைக்கு மிஞ்சிய உபரி பொருட்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டவன் குழுத் தலைவன் என உருவெடுத்தான். அத்துடன் அதிகாரமும் (ஆணாதிக்கம்) உருவானது. பெண் அடிமைத்தனமும் தொடங்கியது
தீர்வுகள்!
பெண்கள் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதனை நேற்று – இன்று – நாளை என முப்பரிணாமத்தில் பார்த்து தீர்வு காண முயல வேண்டும். பிரச்சனைகளின் பரிணாம வளர்ச்சியையும் அதன் இயக்க போக்கையும் கவனிக்க வேண்டும்!
குறைந்தபட்சம் அறிவியல் பார்வை, நேர்மை, சுயகட்டுப்பாடு, சுரண்டல் – நுகர்வு வெறி – மூட நம்பிக்க – எதிர்ப்பு, திறமைக்கேற்ற 8 மணி நேர உழைப்பு, சமத்துவம், ஒழுக்கநெறி ஆகியவற்றைக் கொண்ட சோசலிச விழுமியங்களை பெண்கள் உயர்த்தி பிடிக்க வேண்டும்!
சோசலிசக் கொள்கையில்தான் பெண்களின் சமஉரிமையும், சுதந்திரமும், சமூக பாதுகாப்பும், விடுதலையும் அடங்கியுள்ளது என்பது சோவியத் ரசியாவில் நிரூபணம் செய்யப்பட்டது!
இன்றளவும் நிலம் அரசுடமையாக உள்ள வியட்நாமில் டைவர்ஸ் வழக்குகள் – சிவில் வழக்குகள் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை!
சமத்துவ – சோசலிச சமூகத்தில் தான் பெண்களின் மீதான சமூக மற்றும் குடுமப வன்முறைகள் தடுக்கப்பட்டு, பாலின சமத்துவம் உறுதிசெய்யப்படும்!
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 18 | 1988 ஜூலை 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 17 | 1988 ஜூலை 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
புதிய ஜனநாயகம் மார்ச் 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
தலையங்கம்– மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: குக்கி மக்களை ஒடுக்குவதற்கான சூழ்ச்சி!
திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டின் அயோத்தியல்ல, பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் தொடர்ச்சி!
முருகனைப் பற்றிய பார்ப்பனப் புரட்டு: களவாடும் பார்ப்பனக் கும்பலை விரட்டு!
டெல்லி தேர்தல் முடிவு: பாசிச எதிர்ப்பு சித்தாந்தம் – திட்டமற்ற கட்சிகளின் அந்திமகாலம்
பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்: தீர்வு தரும் திசை எது?
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை நிதி தர முடியாது: மிரட்டும் மோடி அரசைப் பணியவைக்க போர்க்களம் புகுவோம்!
கத்தார் மன்னரின் இந்திய வருகை: செல்வம் கொழிக்கப் போகும் அதானி
இராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை
ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க
டெண்டர் அறிவிப்பு! தமிழ்நாட்டை சூறையாட அனுமதியோம்!
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 15 | 1988 ஜூன் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
2024 டிசம்பரில் தனிநிர்வாக அதிகாரம் கோரி பா.ஜ.க-வின் குக்கி எம்.எல்.ஏ-க்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலால் தொடங்கப்பட்ட குக்கி பழங்குடியின மக்கள் மீதான இனவெறி கலவரத்தால், இன்றுவரை ஒட்டுமொத்த மணிப்பூரும் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 9 அன்று, இக்கலவரத்தை முன்னின்று நடத்திவந்த மெய்தி இனவெறியாளனும் மணிப்பூர் முதல்வருமான பைரன் சிங் பதவி விலகியுள்ளார்.
இதனையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டதை வரவேற்கும் பலரும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இதுவே சரியான சூழல் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், குக்கி பழங்குடியின மக்களை மணிப்பூரின் காடுகளை விட்டு விரட்டியடித்துவிட்டு அங்குள்ள வளங்களை அம்பானி-அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடும் சதித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலால் இக்கலவரம் தூண்டிவிடப்பட்டது. அந்த பாசிச சதித்திட்டத்தில் உறுதியாக உள்ள பாசிச கும்பல் அதன் ஓர் அங்கமாகவே தற்போது மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்துள்ளது.
தீவிரமடைந்த பாசிச கும்பலின் நெருக்கடி
மணிப்பூரில் இந்த இரண்டாண்டுகளில் நூற்றுக்கணக்கான குக்கி பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டு 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மெய்தி இனவெறியர்களால் இரண்டு குக்கி பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கொடூரச் சம்பவம், மணிப்பூரில் இயல்புநிலையாக்கப்பட்டுள்ளது. மெய்தி மக்கள் வாழும் சமவெளிக்கும் குக்கியின மக்கள் வாழும் மலைகளுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள பள்ளி-கல்லூரிகள்; மருந்து, உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு; முகாம்களில் தொற்றுநோய் பரவல் என மணிப்பூர் மக்கள் மனிதகுல நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இது குக்கி பழங்குடியின மக்கள் மத்தியில் மட்டுமின்றி மெய்தி மக்கள் மத்தியிலும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை உருவாக்கியுள்ளது.
இந்த எதிர்ப்புணர்வு காரணமாகவும், குக்கி பழங்குடியின மக்களின் ஆயுதந்தாங்கிய போராட்டம்; குக்கி மக்களின் தனிநிர்வாக அதிகாரத்திற்கான கோரிக்கை காரணமாகவும் கலவரம் தொடங்கிய சிறிது காலத்திலேயே பாசிச கும்பலின் தோல்வி முகம் தீவிரமடைந்து கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலைக்கூட நடத்த முடியாத சூழல் நிலவியதால், இக்கலவரத்திற்கு தொடக்கப்புள்ளியாக இருந்த மெய்தி மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க உத்தரவிட்ட, மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரனின் தீர்ப்பை இரத்து செய்தது. ஆனால், குக்கி அமைப்புகளும் பெரும்பாலான மக்களும் தேர்தலைப் புறக்கணித்தனர்; அத்தேர்தலில் மணிப்பூரில் உள்ள இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் காங்கிரசிடம் பா.ஜ.க. பறிக்கொடுத்தது.
இந்நிலையில்தான், கடந்த 2024 ஆகஸ்டில், மணிப்பூர் கலவரம் எவ்வாறு தனது தலைமையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்பது குறித்து முதல்வர் பைரன் சிங் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் ஒலிப்பதிவு ஒன்று குக்கி மாணவர் அமைப்பால் வெளியிடப்பட்டது. இந்த குரல்பதிவு போலியானது என்று காவிக் கும்பல் கூக்குரலிட்டாலும், தனியார் ஆய்வகம் நடத்திய சோதனையில் இந்தக் குரல்பதிவானது 93 சதவிகிதம் பைரன் சிங் குரலுடன் ஒத்துப்போவதாக, இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது குக்கி மற்றும் மெய்தி மக்களிடையே கடும் எதிர்ப்பையும், பா.ஜ.க. அரசுக்கு எதிரான போராட்ட உணர்வையும் கட்டவிழ்த்துவிட்டது. இனக்கலவரம் வெடித்து 16 மாதங்கள் ஆகியும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டாத ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து இம்பால் பள்ளத்தாக்கில் மெய்தி மாணவர்களும் மக்களும் போராட்டங்களில் இறங்கினர்.
குக்கி மக்கள் மத்தியிலும் போராட்டங்கள் வெடித்த நிலையில், நவம்பர் 2024-இல் அரம்பை தெங்கோல் இனவெறிக் கும்பலால் சோ என்ற பழங்குடியினப் பெண் வீடு புகுந்து கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியது. மேலும், குக்கி மக்களுக்கான குடிநீர், சுகாதாரம், மருந்துப்பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதில் பைரன் சிங் அரசு காட்டிய பாரபட்சம் ஆகியவை குக்கி பழங்குடியின மக்களின் தன்னாட்சி கோரிக்கையை தீவிரமடையச் செய்தது.
மறுபுறம், மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் தீவிரமடைந்தன. முன்னர் உருட்டுக்கட்டைகள், துப்பாக்கிகளைக் கொண்டு நடத்தப்பட்ட வன்முறைகள், பைரன்சிங்கின் குரல் ஒலிப்பதிவு வெளியானதற்கு பிறகு டிரோன்கள், வெடிமருந்துகள் நிரப்பிய ஏவுகணைகளைக் கொண்டு மூர்க்கத்தனமாக நடத்தப்பட்டன. மக்கள் மீது மட்டுமின்றி, இம்முறை பைரன்சிங், பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்களின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராட்டங்களின் போது பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில்தான், பிப்ரவரி 10 அன்று பைரன் சிங் அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக மணிப்பூர் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில், மணிப்பூரில் அதிகாரத்தை இழக்கும் நெருக்கடி பாசிச கும்பலுக்கு உருவானது. இதனையடுத்து, பிப்ரவரி 9 அன்று பைரன் சிங் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் அவசர அவசரமாக டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்தப்பிறகு, அன்று மாலையே தான் பதவி விலகுவதாக மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லாவிடம் கடிதம் கொடுத்தார்.
இருப்பினும் பைரன் சிங்கிற்கு மாற்றாக வேறு யாரையும் முதல்வராக நியமிக்க முடியாத நிலையில் உள்ள பாசிச கும்பல், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்துள்ளது. இது மணிப்பூரின் ஆட்சியதிகாரத்தை பாசிஸ்டுகளின் கரங்களில் தக்கவைத்து கொள்வதற்கான ஏற்பாடே அன்றி, பாசிச கும்பல் கனவிலும் விரும்பாத, அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையல்ல. காஷ்மீரின் சிறப்புரிமையை இரத்து செய்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்து காஷ்மீர் மக்களை ஒடுக்கியது போலத்தான் மணிப்பூரிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டுள்ளது.
பாசிச சதித்திட்டதை முறியடிப்போம்!
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டுள்ள நிலையில், அமித்ஷாவிற்கு நெருக்கமான பாசிச அடிவருடியான ஆளுநர் அஜய் பல்லாவிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன. இதன்மூலம் குக்கி மக்கள், குழுக்களை ஒடுக்குவதற்காக பாசிச கும்பல் சத்தமின்றி ஆயத்தமாகி வருகிறது.
மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லா பிப்ரவரி 20 அன்று, சட்டவிரோத ஆயுதங்களை அனைத்து குழுக்களும் ஏழு நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டுமென்றும் இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உத்தரவிட்டார். இதனையடுத்து, இன அழிப்புக் கலவரத்தை முன்னின்று நடத்திவரும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட மெய்தி இனவெறி அமைப்பான அரம்பை தெங்கோல், பிப்ரவரி 28 அன்று 300 ஆயுதங்களைச் சமர்ப்பித்தது. மேலும், அரசின் உத்தரவை மதித்து பிற குழுக்களும் ஆயுதங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று குக்கி குழுக்களுக்கு ‘அறிவுரை’ வழங்கியது. இதனையடுத்து ஆயுதங்களைச் சமர்ப்பிப்பதற்கு மேலும் ஆறு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆயுதக் கிடங்குகளிலிருந்து மெய்தி இனவெறி அமைப்புகளால் கொள்ளையடிக்கப்பட்ட 6,000 ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது, அரம்பை தெங்கோல் சமர்ப்பித்திருப்பது வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே என்பதைக் குக்கி அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. மேலும், அரம்பை தெங்கோல் ஆயுதங்களைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லா அரம்பை தெங்கோலின் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது, குக்கி மக்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதற்கான சதிவேலைகள் நடந்துவருவதை உறுதி செய்கிறது.
2008 ஆகஸ்ட், மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில், ஒன்றிய அரசு, மணிப்பூர் அரசு மற்றும் 25 குக்கி போராளி அமைப்புகளுக்கிடையே கையெழுத்தான முத்தரப்பு சண்டை நிறுத்த (போர் நிறுத்த) (Suspension of Operations) ஒப்பந்தம், பின்னாட்களில் குக்கி போராளிக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு வழிவகுத்தது. ஆனால், மணிப்பூர் கலவரத்திற்கான தயாரிப்புகளில் பாசிச கும்பல் ஈடுபட்டிருந்தபோது, 2023 மார்ச் மாதத்தில், குக்கி தேசிய இராணுவம் (KNA) மற்றும் சோமி புரட்சிகர முன்னணியுடனான (ZRF) அமைதி ஒப்பந்தத்திலிருந்து மணிப்பூர் அரசு திடீரென விலகியதன் மூலம், ஆயுதங்களை ஒப்படைத்து நிராயுதபாணியாகியிருந்த குக்கி போராளி குழுக்களை ஒடுக்குவதற்கு ஆயத்தமானது.
கலவரம் தொடங்கியவுடன் மணிப்பூர் அரசும், மணிப்பூர் அரசால் தாரைவார்க்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு மெய்தி இனவெறி அமைப்புகளும் இணைந்து நிராயுதபாணியாகியிருந்த குக்கி பழங்குடியின மக்கள், போராளி குழுக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்தின. இதனால் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான குக்கி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து தங்கள் மீதான இனவெறித் தாக்குதல்களை எதிர்த்துப் போரிடுவதற்காக இரும்பு பட்டறைகளில் கைத்துப்பாக்கிகள், சிறு ஆயுதங்களைத் தயாரித்து குக்கி பழங்குடியின மக்கள் எதிர்த்துப் போரிட்டு வருகின்றனர். குக்கி பழங்குடியின மாணவர்கள்-இளைஞர்கள் பள்ளி-கல்லூரி படிப்பைத் துறந்துவிட்டு ஆயுதமேந்திப் போராடி வருகின்றனர். கிராம தன்னார்வலர்கள் (Village volunteers) என்ற பெயரில் தங்களை அமைப்பாக்கிக் கொண்டும் நாகா ஆயுதக் குழுக்களுடன் இணைந்தும் போராடுகின்றனர்.
ஒன்றிய-மாநில அரசு என்ற பிரம்மாண்ட-ஆயுதமயமாக்கப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக, தங்களது நிலத்தையும் இனத்தையும் காப்பதற்காக உறுதியுடன் போராடிவரும் குக்கி பழங்குடியின மக்களின் எழுச்சி பாசிச கும்பலுக்கு கிலியூட்டியுள்ளது. எனவே, மீண்டும் குக்கி மக்களை நிராயுதபாணியாக்க வேண்டுமென்பதற்காகவே ‘அனைத்து’ சமூகக் குழுக்களும் ஆயுதம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற அறிவிப்பும் அரம்பை தெங்கோல் ஆயுதம் சமர்ப்பித்துவிட்டது என்பது போன்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2024 நவம்பரிலும் குக்கி அமைப்புகளிடமிருந்து மட்டும் சட்டவிரோத ஆயுதங்களைப் பறிமுதல் செய்யவுள்ளதாக மணிப்பூர் அரசு நிறைவேற்றிய தீர்மானம், குக்கி அமைப்புகளாலும் எம்.எல்.ஏ-க்களாலும் கடுமையான எதிர்ப்பிற்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பாசிச கும்பலின் கோரமுகத்தை தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்துள்ள குக்கி அமைப்புகள், “தனிநிர்வாக அதிகாரம்”, “குக்கி மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து மணிப்பூர் போலீசை திரும்பப்பெறுதல்”, “மெய்தி குழுக்கள் கொள்ளையடித்த ஆயுதங்களை முழுமையாக ஒப்படைத்தல்” மற்றும் “குக்கி கிராம தன்னார்வலர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குதல்” உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் ஆயுத சமர்ப்பிப்பு செய்ய முடியும் என்று உறுதிபடக் கூறியுள்ளனர்.
குக்கி கூட்டமைப்புகளின் இந்த நிலைப்பாடு சரியானதும் வரவேற்கத்தக்கதுமாகும். எனினும், குக்கியின அமைப்பினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை கைது செய்து சிறையிலடைப்பது; கொன்று குவிப்பது; இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படும் துல்லியமான அதீத ஆற்றல்கொண்ட கொடூரமான ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது; ஊரடங்கு, இணைய முடக்கம் பிறப்பித்து ஒடுக்குவது என பல்வேறு வகைகளில் குக்கி இன மக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகள் மணிப்பூரில் அரங்கேறி வருகின்றன. ஆனால், மோடி அரசின் அடிமையாகிப்போன ஊடகங்கள் மக்களுக்கு இச்செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில்லை.
எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டிவிடும் என்ற ஆளும் வர்க்க ஊடகங்களின் பொய் பிரச்சாரங்களை முறியடித்துவிட்டு, குக்கியின மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் தனிநிர்வாக கோரிக்கையை வலியுறுத்தியும் குரல் கொடுப்பதும் போராட்டங்களைக் கட்டியமைப்பதும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள், பலதரப்பட்ட மக்களின் கடமையாகும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 14 | 1988 ஜூன் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய