Monday, August 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 803

குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!

85

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள்

மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக – அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

எனினும், ஹெட்லைன்ஸ் டுடே என்ற தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம், இக்குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இடையே நடந்த இரகசிய உரையாடல்களை ஒலி-ஒளி பரப்பியிருப்பதும்; இக்குண்டு வெடிப்புகளோடு தொடர்புடைய குற்றவாளிகள் தமக்குள் நடத்திய உரையாடல்கள் மற்றும் இக்குண்டுவெடிப்புகள் தொடர்பாக போலீசாரிடம் உள்ள சாட்சியங்களை  தெகல்கா இதழ் (31 ஜூலை, 2010) வெளியிட்டிருப்பதும் இக்குண்டு வெடிப்புகளை நடத்திய குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் நேரடித் தொடர்பிருப்பதையும் வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துவது பற்றி அவர்கள் விவாதித்திருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளன.

‘‘ஹெட்லைன்ஸ் டுடே” ஒளிபரப்பிய ஒளி-ஒலிப்பேழை ஒன்றில் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்ற இந்துச் சாமியார், இந்திய இராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாகப் பணியாற்றிக் கொண்டே மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியவரான புரோகித், ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க.-வின் முன்னாள் கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எல்.சர்மா ஆகிய மூவரும் முசுலீம்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவது பற்றி விவாதிக்கின்றனர்.  மற்றொரு ஒலிப்பேழையில், தயானந்த பாண்டேயும், ஆர்.பி. சிங் என்ற மருத்துவரும் துணை அரசுத் தலைவர் ஹமித் அன்சாரியைக் கொல்லும் திட்டம் பற்றி விவாதிக்கின்றனர்.

அத்தொலைக்காட்சி ஒலிபரப்பிய இன்னொரு ஒலிப்பேழையில், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலஞ்சென்ற ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சுனில் ஜோஷி என்பவன், ஆர்.எஸ்.எஸ்.-இன் சியச் செயல் கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமாரிடம் அக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கியுள்ளான்.

துணைக் அரசுத்தலைவரை கொல்லத் திட்டம் போட்ட ஆர்.பி.சிங்கிற்கும் விஷ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதையும்; மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய அபிநவ் பாரத் அமைப்பிற்கும் புனேவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.-இன் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ஆப்தேவிற்கு இடையில் நெருக்கமான உறவு இருந்து வந்ததையும்; விஷ்வ இந்து பரிஷத்தின் முக்கியத் தலைவரான பிரவீன் தொகாடியா அபிநவ் பாரத் அமைப்பிற்கு ஒரு இலட்ச ரூபா நன்கொடை அளித்திருப்பதையும் தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள ஒலிப்பேழை உரையாடல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

இவை ஒருபுறமிருக்க, இந்தியா  பாகிஸ்தான் இடையே சென்றுவரும் சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டுவெடிப்புகூட இந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கும் என்றும்; சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு இக்குண்டு வெடிப்பில் நேரடியாகத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான தேவேந்திர குப்தாவிற்கு உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகர ஆர்.எஸ்.எஸ். கிளைத் தலைவரான அசோக் வார்ஷ்னேயும், ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயல் கமிட்டி உறுப்பினரான அசோக் பேரியும்தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.  சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான பஜ்ரங் தள் சட்ட விரோதமாகக்  குண்டு தயாரிக்கும் வேலைகளைச் செய்து வருவது கான்பூரிலும் நான்டேட்டிலும் நடந்த குண்டு வெடிப்புகளின்போதே அம்பலமாகியிருக்கிறது.

மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய கும்பல்தான் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்னா, பர்பானி, நான்டேட் ஆகிய இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதும் புலனாவில் நிரூபணமாகியுள்ளதால், அக்கும்பல் மீதான வழக்குகளை வழக்கமான இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்காமல், பொடாவுக்கு இணையான மகாராஷ்டிரா குற்றக் கும்பல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல்களில் பங்குகொண்டு அதிகாரத்தைப் பிடித்து மேலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நிறைவேற்ற பா.ஜ.க.; கீழிலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நடைமுறைப்படுத்த பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிசத் போன்ற அமைப்புகளை இயக்கி வரும் ஆர்.எஸ்.எஸ்., நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் இரகசியாக இயக்கி வருகிறது என்றுதான் இவ்வுண்மைகள் மூலம் முடிவுக்கு வர முடியும்.

எனினும் கடந்த பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இன் ஆசீர்வாதத்தோடு நடந்துள்ள இக்குண்டு வெடிப்புகள் குறித்து போலீசார் ஒருங்கிணைத்த முறையில் விசாரணை நடத்த மறுக்கிறார்கள்.  மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறியர்களை விசாரணை செய்த பொழுதே, அஜ்மீர், ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கும் இந்து மதவெறி பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது. ஆனாலும், மிகத் தாமதமாகத்தான் அக்குண்டு வெடிப்புகளை நடத்திய சதிகாரர்கள் கைது செய்யப்பட்டனர். அதேசமயம்,  இக்குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த இராம்நாராயணன் கல்சங்கரா, சுவாமி அசிமானந்தா ஆகியோர் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான சுனில் கோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டான். குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மூடிமறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்.குண்டர்கள் அவனை கொன்றிருக்கலாம் எனப் பரவலாக நம்பப்படும் பொழுது, போலீசாரோ “சிமி” அமைப்புதான் அக்கொலையைச் செய்ததாகக் கூறிவருகிறார்கள்.

சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது.  அபிநவ் பாரத் அமைப்போடு தொடர்பு வைத்துள்ள பல இராணுவ அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய விவரங்கள் புலன் விசாரணையில் அம்பலமானாலும் அவர்களுள் ஒருவர்கூட விசாரணைக்கு அழைக்கப்படவில்லை.  குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்-ஐத் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்தால், மத்தியப் புலனாவுத் துறையைச் சேர்ந்த பார்ப்பன அதிகார வர்க்கம் விசாரணையை அப்படியே அமுக்கிவிடுவதாக அம்பலப்படுத்தியிருக்கிறார், மகாராஷ்டிரா மாநில முன்னாள் போலீசு தலைவர் எஸ்.எம்.முஷ்ரிஃப்.

இந்திய அரசு இந்து மதவெறி பாசத்தோடுதான் இருந்து வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் இவை.  இந்தியாவில் குண்டு வெடிப்புகளை நடத்தி வரும் முசுலீம் பயங்கரவாதிகளுக்குக் கிடைக்காத சாதகமான அம்சம் இது.

__________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2010

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பிரேசில் : வர்க்கங்களின் கால்பந்து மைதானம் !!

9

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா – 3

பிரேசில், பகுதி 1 : வர்க்கங்களின் கால்பந்து மைதானம்

“நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!” – Dom Hélder Pessoa Câmara (கத்தோலிக்க மேற்றிராணியார், பிரேசில்)

உலகம் முழுவதும் உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு பிடித்த நாடு பிரேசில். அதற்கப்பால் உலகின் மிகப் பெரிய நாடுகளில் (8.511.965 km) ஒன்றான பிரேசிலை அறிந்து வைத்திருப்பவர்கள் அரிது. மேற்குலகில் பிரேசில் கேளிக்கைகளின் சொர்க்கம். வண்ணமயமான கார்னிவல் அணிவகுப்புகள். பாலியல் பண்டமாக நோக்கப்படும் அழகிய பெண்கள். இவை தான் பலருக்கு நினைவுக்கு வரும். கொஞ்சம் “சமூக அக்கறை கொண்டவர்கள்” என்றால், தெருக்களில் வளரும் குழந்தைகள், நாற்றமடிக்கும் சேரிகளை பார்த்து, வறிய பிரேசில் மீது அனுதாபப் படுவார்கள். ஆனால் எண்ணெய் வளத்தை தவிர உலகின் அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. என்றோ லத்தீன் அமெரிக்காவின் வல்லரசாக வந்திருக்க வேண்டியது. மொழி, இன, மதப் பிரச்சினை என்று பிரிவினையை தூண்டும் காரணிகளும் கிடையாது. அப்படிப்பட்ட பிரேசில் ஏன் இன்றைக்கும் பின்தங்கிய வறிய நாடாக உள்ளது?

மொத்த சனத்தொகையில் இருபது வீதமான பணக்காரர்கள், தேசத்தில் மொத்த உற்பத்தியில் அறுபது வீதத்தை நுகர்கிறார்கள். சனத்தொகையில் நாற்பது வீதமாக உள்ள ஏழைகளின் நுகர்வு பத்து வீதம் மட்டுமே. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு மூல காரணம். சாவோ பாவுலோ, ரியோ டெ ஜனைரோ போன்ற உலகத் தரம் வாய்ந்த நகரங்கள், தென்னகத்து நியூ யார்க் போல காட்சி தரும். விண்ணை எட்டத் துடிக்கும் கட்டிடங்கள், கான்க்ரீட் காடுகளாக காணப்படும். பிராடா, ஷனேல், அடிடாஸ்… உலகில் சிறந்த பிராண்ட் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் ஆடம்பர அங்காடிகள். அவற்றை வாங்குவதற்கு மொய்க்கும் பணக்காரக் கும்பல். வீதி வழியாக கடைக்கு சென்றால், வாகன நெரிசலில் சிக்க நேரிடலாம், அல்லது கிரிமினல்களின் தொல்லை. இதனால் தமது பங்களாக்களில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்து வந்து “ஷாப்பிங்” செய்கிறார்கள்.

பிரேசில் மக்களில் பெரும்பான்மையானோர் நகரங்களில் வாழ்கின்றனர். நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நகரங்களின் எண்ணிக்கையை வைத்து பிரேசிலின் வளர்ச்சியை கணக்கிட்டு விட முடியாது. பொருளீட்டுவதற்காக நாள் தோறும் லட்சக்கணக்கான நாட்டுப்புற ஏழைகள் பெரு நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். அதிர்ஷ்டத்தை தேடி ஓடி வரும் மக்களை அரவணைக்க நகரங்களில் யாரும் இல்லை. இருப்பிடம், வேலை எல்லாம் அவர்களாகவே தேடிக் கொள்ள வேண்டும். இதனால் நகரத்தின் ஒதுக்குப் புறமாக சேரிகள் பெருகி வருகின்றன. அந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கொள்வது. மின் கம்பங்களில் கம்பியைப் போட்டு மின்சாரத்தை திருடுவது. தண்ணீருக்காக குழாய்யடியில் சண்டை போடும் குடும்பங்கள். சுருக்கமாக, இவை “உலகத்தரம் வாய்ந்த சேரிகள்.” புகழ் பெற்ற மும்பையின் தாராவி சேரி பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு அதிகம் விளக்கத் தேவை இல்லை. பிரேசிலில் இவற்றை “பவேலா” (Favela ) என்றழைப்பார்கள்.

பவேலா வாழ் மக்கள் நகரங்களில் பணக்கார வீடுகளில் வேலை செய்வார்கள். டாக்சி ஓட்டுனர்கள், நடைபாதை வியாபாரிகள், ஹோட்டல் பணியாட்கள் என்று உழைத்து முன்னுக்கு வந்த சிலர் சேரிகளிலேயே வசதியான சிறு வீடு கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள். இதைவிட பணம் சேர்க்க சட்டவிரோதமான தொழில்களில் ஈடுபடுவோருக்கும் அது தான் புகலிடம். பாலியல் தொழிலாளர்கள், போதைவஸ்து விற்பவர்கள், மற்றும் மாபியா குழுக்களுக்கு வேலை செய்பவர்கள் என்று பலர். கிரிமினல்களின் தொல்லை தாங்காமல் போலிஸ் அந்தப் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை. அந்த அளவுக்கு பவேலாவில் கிரிமினல்களின் ஆட்சி நடக்கிறது. ஒரு ஜீவன் வாழ்வதற்கு போராட வேண்டிய சூழலில், தாய்மார்களால் கைவிடப்பட்ட குழந்தைகள், தெருக்களில் அனாதைகளாக கிடக்கும். தெருவிலேயே வளரும் குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன. விபச்சாரம், போதைப்பொருள், திருட்டு, கொலை என்று எல்லாவித குற்றச் செயல்களிலும் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களை மாபியக் குழுக்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. பிடிபட்டால் சிறுவர்கள் என்று சிறு தண்டனையுடன் தப்பி விடுவார்கள். இருப்பினும் நாள் தோறும் குறைந்தது பத்து சிறுவர்களாவது, போலிஸ் – மாபியா சண்டையில் மடிகின்றனர்.

லத்தீன் அமெரிக்க கண்டத்தில் தெளிவாகத் தெரியும் வர்க்க முரண்பாடுகளை பிரேசிலிலும் அவதானிக்கலாம். பணக்காரர்கள் தங்களது நலன்களை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். சுரண்டலில் சேகரித்த செல்வத்தை எப்படி செலவழிப்பது என்பது மாத்திரமே அவர்களது கவலை. ஏழைகளும் தமக்குத் தெரிந்த வழியில் பணத்தை சேர்க்க விளைகிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு தொடரும் வரை கிரிமினல்களும் பெருகிக் கொண்டே இருப்பார்கள். “திருடுவது பாவம்” என்று ஏழைகளுக்கு மட்டுமே போதித்துக் கொண்டிருந்த தேவாலயங்களும் பிற்காலத்தில் இந்த யதார்த்தை புரிந்து கொண்டன. எழுபதுகளில் இராணுவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் முற்போக்கு பாதிரிகள் தோன்றினார்கள். அவர்களில் Dom Hélder Câmara பிரேசிலுக்கு வெளியிலும் பலரால் அறியப்பட்டார். “நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!” என்ற அவரின் வாசகம் உலகப் புகழ் பெற்ற பொன்மொழியாகியது.

பிரேசிலில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் சில உள்நாட்டு தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் உள்வாங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து பிடித்து வரப்பட்ட கறுப்பின அடிமைகள், தங்களது மதத்தை பின்பற்ற தடை இருந்தது. இதனால் சில ஆப்பிரிக்க தெய்வங்கள் கத்தோலிக்க புனிதர்களாக வழிபடப்பட்டன. அதே போல பிரேசிலில் பேசப்படும் போர்த்துகீச மொழியும் பல ஆப்பிரிக்க, செவ்விந்திய பழங்குடி சொற்களையும் கொண்டுள்ளது. அனேகமாக கொய்யாப்பழம், போர்த்துக்கேயருடன் பிரேசிலில் இருந்து நமது நாட்டிற்கு வந்திருக்கலாம். பிரேசில் செவ்விந்திய பழங்குடியினர் அந்தக் கனியை “கொய்யாவா” (Goiaba ) என்று பெயரிட்டிருந்தனர். செவ்விந்திய பூர்வகுடிகளின் பிரதான உணவான “மண்டியோக்” போத்துக்கேயரால் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்களத்தில் அதனை திரிபடைந்த போர்த்துக்கேய பெயரால் “மைஞோக்கா” என்பார்கள். தமிழில் அதன் பெயர் மரவள்ளிக் கிழங்கு.

பிரேசிலின் மதமும், மொழியும், கலாச்சாரமும் செவ்விந்திய பழங்குடியின மற்றும் ஆப்பிரிக்க கூறுகளைக் கொண்டிருந்த போதிலும், தேசத்தின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இந்த இரு சிறுபான்மை இனங்களும் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன. அவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் குறைவு. இதனால் பெரும்பான்மையானோர் ஏழைகளாக வருந்துகின்றனர். சல்வடோர் என்ற வடக்கத்திய நகரத்தில் ஆப்பிரிக்க அடிமைகளின் வழித்தோன்றல்கள் அதிகமாக வாழ்கின்றனர். சல்வடோர் ஒரு காலத்தில் பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. பிரேசிலின் வட மேற்கை சேர்ந்த அமேசன் நதிப் பிராந்தியத்தில் செவ்விந்திய பழங்குடியினர் வாழ்கின்றனர். இன்றைய பிரேசிலின் வடக்குப் பகுதி மிகவும் பின்தங்கியுள்ளது. எல்லா வித உற்பத்தியும் நின்று போய், வறுமை தாண்டவமாடுகின்றது. இருப்பினும் அமேசன் ஆற்றுப்படுகைகளில் தங்கத் துகள்களை எடுத்து திடீர் பணக்காரனாகும் ஆசையில் இன்றும் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர் போர்த்துக்கல்லில் இருந்து தங்கம் தேடி வந்தவர்கள் பிரேசிலில் நிரந்தரமாக குடியேறி விட்டனர். கடற்கரையோரம் தங்கம் கிடைக்காததால் உள்நாட்டிற்குள் புகுந்தார்கள். அங்கே தங்கத்தை விட வேறு பல வளங்களையும் கண்டு கொண்டார்கள். குறிப்பாக பலகை ஏற்றுமதிக்காக காடுகளில் இருந்த பிரேசில் மரங்கள் தறிக்கப்பட்டன. பிரேசில் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த பலகைகள் வெளிநாட்டில் தரமானதாக மதிக்கப்பட்டன. ரப்பர், கோப்பி, கரும்பு ஆகிய பயிர்களுக்கான பெருந்தோட்ட செய்கைக்காகவும் காடுகள் அளிக்கப்பட்டன. காடழிப்பு பிற்காலத்தில் மழை வீழ்ச்சிக் குறைபாட்டையும், அதன் நிமித்தம் பிரேசிலுக்கு பொருளாதார பின்னடைவையும் கொண்டு வந்தது. பிரேசில் இன்று வறுமையான நாடாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

“சரித்திரம் எமக்கு அவசியமில்லை”, என்று சில நடுத்தர வர்க்க புத்திஜீவிகள் வாதிடுவார்கள். பிரேசிலில் கறுப்பினத்தவர்களும், செவ்விந்தியர்களும் வறுமையில் வாடுவதற்கு வரலாற்றில் நேர்ந்த ஒரு பாரிய இடப்பெயர்வு காரணமாக உள்ளது. போர்த்துக்கேய காலனியாதிக்கவாதிகள் செவ்விந்தியர்களை தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை வாங்கினார்கள். அவர்களின் உழைப்பை சாகும் வரை பிழிந்து எடுத்தார்கள். பின்னர் ஆப்பிரிக்காவில் (அங்கோலா, கினியா) இருந்து லட்சக்கணக்கான கறுப்பின அடிமைகளை பிடித்து வந்தார்கள். அவர்களின் உழைப்பில் பெருந்தோட்டத் துறை செழித்தது. போர்த்துக்கேயர்கள் மட்டும் பெருந்தோட்ட முதலாளிகளாக இருக்கவில்லை. ஆங்கிலேயர்கள், யூதர்கள் என்று பல்லின முதலாளிகளின் வர்க்கமாக இருந்தது.

ஒரு சாதாரண வெள்ளையின ஐரோப்பியருக்கு கூட பிரேசில் சென்று செல்வந்தனாகும் யோகம் அடித்தது. அடிமையை வைத்து வேலை வாங்குவது என்பது மாடு வாங்கி உழுவதைப் போன்றது. அடிமையை வாங்குவதற்கு சிறிதளவு பணமும், பராமரிக்கும் செலவையும் பொறுப்பெடுத்தால் போதும். யாரும் பெருந்தோட்ட முதலாளியாகி விடலாம். நிலம் கூட வாங்கத் தேவை இல்லை. பூர்வகுடிகளை விரட்டி விட்டு அபகரித்த நிலம் தாராளமாக கிடைக்கும். இவ்வாறு குறைந்த முதல் போட்டு நிறைந்த லாபம் சம்பாதிக்கும் துறையால் பலர் கோடீஸ்வரர் ஆனார்கள். ஒரு கரும்புத் தோட்டம் போட்டாலே போதும். பணம் மழையாகப் பொழியும். ஐரோப்பிய சந்தையில் கரும்புச் சீனி அதிக விலையில் விற்கப்பட்ட ஆடம்பரப் பொருளாக இருந்தது. கடைகளில் ஒரு கிராம் சீனி மருந்து மாதிரி விற்பனையானது.

போர்த்துக்கல் அன்று பிரேசிலை தனது குடியேற்றக் காலனியாக அறிவித்து இருந்தது. குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவிப்பவர்களையும், பொது மன்னிப்பு அளித்து குடியேற அனுப்பி வைத்தார்கள். காலனிகளில் கிரிமினல் குடியேறிகளின் சேவை, காலனியாதிக்கவாதிகளுக்கு வெகுவாக தேவைப்பட்டது. முதலாவதாக, செவ்விந்திய பூர்வகுடிகளை அழித்தொழிக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டார்கள். இரண்டாவதாக, பெருந்தோட்டங்களில் இருந்து தப்பியோடிய அடிமைகளை பிடித்து வரும் பணி ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய அடிமையின் தலையைக் கொய்து வந்தால் சன்மானம் வழங்கப்பட்டது. இந்த பெருந்தோட்டக் காவலர்கள் எல்லாம் முன்னாள் கிரிமினல்கள் அல்லவா? அதனால் அடிமைகளை ஈவிரக்கம் பாராமல் அடக்கினார்கள். Bandeirantes என அழைக்கப்பட்ட இந்தப் போர்த்துக்கேய கிரிமினல்களை நாயகர்களாக சித்தரிக்கும் கதைகளும் அந்தக் காலத்தில் உலாவின. சாவோ பவுலோ நகரில் கொடிய Bandeirantes கிரிமினல்களுக்கு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டுள்ளது.

(தொடரும்)

______________________

– கலையரசன்
______________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

போலி சுதந்திர தினத்தில் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம் !

போபால்:தடையை மீறி டௌ கெமிக்கல்ஸ் முற்றுகைப் போராட்டம்!

சரியாக சன் செய்திகள் முடிந்து, ‘சுதந்திர வம்சம்’ தொடங்கிய நேரம் –

எல்லா மக்களையும் போல சாதாரணமாக இருந்த ஒரு குடும்பத்தின் ‘வம்சம்’, அரசியல் வியாபாரத்தில் வலது காலை எடுத்து வைத்து நுழைந்து ‘குறுகிய காலத்தில்’ முன்னேறி, ஆசிய பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறியதுடன் இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழகத்தை ஒட்டு மொத்தமாக அடகு வைக்கும் தரகு வேலையை கச்சிதமாக செய்தும் வருகிறது. அந்த ‘வம்சத்தின்’ ஆணிவேரான  மாண்புமிகு தமிழக முதல்வரின் பேரன் அருள்நிதி, சன் டிவி நேயர்களுக்கு ‘சுதந்திரதின நல்வாழ்த்துகளை’ புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தபோது –

சென்னை ஈகாட்டுத்தாங்கல் கூவம் நதி மேம்பாலத்தில் ஆரம்பித்து டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் வரை சாலையின் இருபுறமும் காவல்துறையினர் வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பதினைந்தடி இடைவெளியில் நிற்க ஆரம்பித்த காவல்துறை வாகனங்களையும் கருத்தில் கொண்டால் –

‘அமைதிப் பூங்காவான’ தமிழகத்தின் தலைநகரான சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், அதுவும் ஆகஸ்ட் 15 – 64வது ‘சுதந்திரதினத்தில், ஆயிரம் அடி சுற்றளவுக்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

காரணம், மகஇக, விவிமு, புமாஇமு, புஜதொமு, பெவிமு ஆகிய அமைப்புகள் அறிவித்திருந்த முற்றுகை போராட்டம். அதுவும் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ‘டெள’ கெமிக்கல்ஸ் நிறுவனத்தை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்லி இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் நடத்தப் போவதாக அறிவித்திருந்த முற்றுகை போராட்டத்தை முறியடிப்பதற்காகத்தான் இந்த அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு.

அதாவது அமெரிக்ககாரன் ‘சுதந்திரமாக’ வாழ, ‘இந்தியர்களை’ கைது செய்ய, ‘இந்திய’ சுதந்திரதினத்தில், ‘இந்திய’ அரசின் அனுமதியுடன், தமிழக காவல்துறை அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

இந்த ஆரம்பப் புள்ளியே 64ம் ஆண்டு சுதந்திரதினம் யாருக்கு என்பதை தெளிவாக உணர்த்திவிட்டது. ஏகாதிபத்தியத்துக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவர்களது அடிவருடிகளான இந்திய தரகு முதலாளி வர்க்கங்களுக்கும்தான் சுதந்திரம். அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கல்ல என்பதை நிரூபித்துவிட்டது.

‘மாதம் மும்மாரி பொழிகிறதா..?’ என எட்டப்பன் பரம்பரையில் வந்த மாமன்னர் கருணாநிதி தன் கைத்தடிகளிடம் கேட்டிருக்கக் கூடும். அதற்கேற்ப தூறலும் ஆரம்பித்தது. எனவே குதூகலத்துடன், ‘ஆம் மன்னா… இப்போது கூட தூறிக் கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் அஞ்சா நெஞ்சன் அழகிரி வெளியிட்ட ‘தமிழ்ப்பட’த்தையும், ‘எந்திரன்’ படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா உருவான விதத்தையும் பார்த்துக் கொண்டு சந்தோஷமாக வீட்டுக்குள் அடைந்துக் கிடக்கிறார்கள்…’ என்று நா கூசாமல் புளுகியிருக்கவும் கூடும்.

இதற்கேற்றபடி காசி தியேட்டருக்கு அருகிலிருந்த ‘உயர்தர’ சைவ உணவகத்தில் ஓசியில் டிபன் சாப்பிட்டுவிட்டு கீழே இறங்கிய காவல்துறை உயரதிகாரி ஒருவர், ஒயர்லெஸ்ஸில், ‘500லேந்து ஆயிரம் போலீஸ்காரர்கள் இருக்காங்க. நம்மை மீறி எதுவும் நடக்காது. சி.எம்.மை சந்தோஷமா இருக்கச் சொல்லுங்க…’ என பின்பாட்டு பாடவும் செய்தார்தான்.

ஆனால், உண்டுக் கொழுத்தவர்களுக்கு தெரியாது நக்சல்பாரி அமைப்பினரின் போராட்ட வடிவம் ஒருபோதும் பிசுபிசுத்ததில்லை என்று.

இத்தனைக்கும் காசி தியேட்டரிலிருந்து கிண்டியிலுள்ள ‘டெள கெமிக்கல்ஸ்’ அலுவலகம் வரை பேரணி நடத்த அனுமதி வாங்கும் பொருட்டு காவல்துறையை அணுகியபோதே அனுமதி மறுக்கப்பட்டது. போதும் போறாததுக்கு ‘சட்டப்படி’ ஸ்டேவும் வாங்கியிருந்தார்கள். எனவே பேரணியும் நடைபெறாது, தோழர்களும் வரமாட்டார்கள் என்றுதான் காவல்துறை நம்பியது.

ஆனால், ‘தமிழ்ப்படமும்’, ‘எந்திரன்’ பாடல் கேசட் வெளியீட்டு விழா உருவான விதத்தையும் பார்ப்பதற்காக நாங்கள் வாழவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் போபாலில் நிகழ்த்தப்பட்ட படுகொலையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி உழைக்கும் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் ஊனமாகியிருக்கிறார்கள். இன்றும் அந்த மக்களின் ‘வம்சம்’ ஊனத்துடனேயே பிறக்கிறது. அவர்களுக்குரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இந்தப் படுகொலை சம்பவத்துக்கு காரணமான ஆண்டர்சனை கைது செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்து அவனை தப்பிக்க விட்ட காங்கிரஸ் தலைமை தண்டிக்கப்பட வேண்டும். ‘யூனியன் கார்பைட்’ நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கும் ‘டெள கெமிக்கல்ஸ்’ தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்கும் ‘இந்தியப் பிரதமர்’ மன்மோகன் சிங்கையும், உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளோடு தோழர்கள் சென்னையின் காசி தியேட்டர் இடத்தில் குவிந்தார்கள்.

இதை நிச்சயம் இப்போதிருக்கும் ஆளும் வர்க்கமும், காவல்துறையும் எதிர்பார்க்கவில்லை.

தடையை மீறி பேரணி காலை 10.30க்கு புறப்படும் என்று தோழர்கள் பிரசாரம் செய்திருந்தார்கள். எனவே 8 மணி முதலே காசி தியேட்டர் அருகில் காவல்துறையினர் குவிந்தார்கள். தாம்பரத்திலிருந்து வரும் பேருந்து காசி தியேட்டர் நிறுத்தத்தில் நின்றதுமே, சிவப்புச் சட்டை அல்லது சிவப்பு பனியன் அணிந்து யார் இறங்கினாலும் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டார்கள். இதே நிலைமைதான் வடபழனியிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்து விஷயத்திலும் நடந்தது. காசி தியேட்டர் நிறுத்தத்தில் இறங்கும் ஆண், பெண், குழந்தை உட்பட ஒவ்வொரு பயணியும் கண்காணிக்கப்பட்டனர்.

காலை 9.30 மணிக்குள் இப்படியாக 6 பேருந்து வாகனங்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டு விஜயா தியேட்டர் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். வாகனத்தில் ஏறி சென்றபடியே தோழர்கள் எழுப்பிய கோஷம் அப்பகுதி முழுக்கவே எதிரொலித்தது.

9.35 மணிவாக்கில் செங்குன்றத்திலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் பேருந்து காசி தியேட்டர் நிறுத்தத்தில் நின்றது. கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான சிவப்புச் சட்டை தோழர்கள் இறங்கினார்கள். அவர்களை அப்படியே கைது செய்வதற்காக காவல்துறையினர் விரைந்தார்கள்.

அப்போதுதான் பறை ஒலிக்க ஆரம்பித்தது.

விஜயா தியேட்டர் இருக்கும் சாலைக்கு நேர் எதிரான சாலை. மேற்கு சைதாப்பேட்டையை கடந்து ஜாபர்கான் பேட்டை வழியே வடபழனி செல்லும் பேருந்துகள் வரும் சாலையும் அதுதான். அச்சாலையின் முனையிலிருந்துதான் – காசி தியேட்டர் திருப்பத்தில் – பறையொலி எழுந்தது. பேருந்திலிருந்து இறங்கிய தோழர்கள் அந்த ஒலி வந்த திசையை நோக்கி விரைந்தார்கள். அவர்களை கைது செய்ய வந்த காவலர்களும் தோழர்களை பின்தொடர்ந்தார்கள்.

அங்கே மெல்ல மெல்ல பூக்க ஆரம்பித்த காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

சாரிசாரியாக, எந்தெந்தப் பகுதியிலிருந்து எந்தெந்த அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் வருகிறோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்கும் சிவப்பு பேனர் ஏந்தியபடி செஞ்சேனை தோழர்கள் ‘டெள் கெமிக்கல்ஸை’ எதிர்த்தும், போபால் படுகொலைக்கு நீதி கேட்டும் வர ஆரம்பித்தார்கள். பேருந்திலிருந்து இறங்கிய தோழர்கள் அவர்களுடன் இரண்டற கலந்தார்கள்.

திகைத்த காவல்துறை உடனடியாக செயலில் இறங்கியது. இரு காவல்துறை வாகனங்கள் இருபதடி இடைவெளியில் மறித்து நின்றது. ஊர்வலமாக வரும் தோழர்கள் காசி தியேட்டர் மெயின் ரோட்டை அடையக் கூடாது. போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்யக் கூடாது என்பதே காவல்துறையினரின் நோக்கம். அதற்கேற்ப பச்சை நைலான் கயிற்றை எடுத்து இரு வாகனங்களுக்கும் இடைப்பட்ட பகுதியை மறித்தார்கள்.

ஆனால், காவலர்களின் இந்த பயம் அர்த்தமற்றது என்பதை தோழர்களின் தொடர் கோஷங்களும், போராட்டங்களும் உணர்த்தின. உணர்ச்சிக்கு அடிமையாகி நிலைதவற தோழர்கள் என்ன ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சி உறுப்பினர்களா என்ன? சுய ஒழுக்கமும், சுய கட்டுப்பாடும் நிரம்பிய புரட்சிகர நக்சல்பாரி அமைப்பின் அங்கத்தினர்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை எந்தவகையிலும் பாதிக்கக் கூடாது; அதேநேரம் போராட்டத்தின் ஆணிவேரையும் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். தங்களுக்காகத்தான் கொட்டும் மழையிலும் தோழர்கள் போராடுகிறார்கள் என்பதை மக்கள்  உணர வேண்டும்… என்பதற்கு ஏற்பவே செஞ்சேனை தோழர்கள் களத்தில் நின்றார்கள். சாலை ஒருபோதும் தோழர்களால் மறிக்கப்படவில்லை. தோழர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயன்ற காவலர்களால்தான் போக்குவரத்து ஸ்தம்பித்தது என்பது அப்பகுதியை கடந்த ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும், வாகனத்தில் அமர்ந்துக் கொண்டிருந்தவர்களுக்கும் தெரியும்.

காலை 8 மணி முதலே கைது செய்யப்பட்ட தோழர்களை தவிர்த்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் அப்பகுதியில் குவிந்ததும், குழுகுழுவாக பேட்டரியால் இயங்கும் மைக் வழியே தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். யாருக்காக போராடுகிறோம்; யாரை எதிர்த்து போராடுகிறோம்; எதற்காக இந்த முற்றுகைப் போராட்டம் என்பதை மக்களுக்கு உணர்த்தியதும், புமாஇமு அமைப்பை சேர்ந்த தோழர்கள் வீதி நாடகம் நடத்த ஆரம்பித்தார்கள்.

மழை நிற்கவில்லை. தோழர்களும் அசரவில்லை, கலைந்து செல்லவுமில்லை. காவலர்கள்தான் மழைக்கு பயந்து ஆங்காங்கே ஒதுங்க ஆரம்பித்தார்கள். ஆனால், பகுதி மக்கள் தோழர்களுக்கு தோள் கொடுக்கும் வண்ணம் மழையை பொருட்படுத்தாமல் நின்றார்கள். பத்து நிமிடங்கள் நடைபெற்ற அந்த வீதி நாடகத்தில், போபால் படுகொலை சம்பவம் அப்பட்டமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது.

அமெரிக்க கொடியை தலைப்பாகையாக கட்டிய ஒரு தோழரை, உலகவங்கி தொப்பி அணிந்த மற்றொரு தோழர் அழைத்து வருகிறார். கதர் குல்லா அணிந்த தோழர் அவர்கள் இருவருக்கும் கூழை கும்பிடு போட்டு இடங்களை சுற்றிக் காட்டுகிறார். ஓரிடத்தை அமெரிக்க தலைப்பாகை அணிந்த தோழர் தேர்வு செய்கிறார். உலக வங்கி தொப்பி அணிந்த தோழர், கதர் குல்லா அணிந்த தோழரை அழைத்து நிபந்தனைகளை விதிக்கிறார். கதர் குல்லா தோழர் அனைத்தையும் தலையசைத்து ஏற்கிறார். யூனியன் கார்பைடு நிறுவனம் உருவாகிறது. அதை தட்டியில் எழுதப்பட்ட எழுத்துகள் வழியே தோழர்கள் உணர்த்துகிறார்கள். பிறகு சாம்பிராணி புகையின் மூலம் விஷவாயு கசிவையும், அதனால் மக்கள் பட்ட வேதனையையும், இறப்பையும் ரத்தமும் சதையுமாக தோழர்கள் நடித்து கண்முன்னால் கொண்டு வருகிறார்கள். அதுவும் தூளியில் தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையைப் போன்ற பொம்மையை ஏந்தியபடி ஒரு பெண் தோழர் அழுதக் காட்சி, நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த அனைவரது நெஞ்சிலும் அறைந்தது.  எப்பேர்ப்பட்ட அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை முகத்திலறைந்தது போல் இந்த வீதிநாடகம் படம் பிடித்து காட்டியது.

இதனையடுத்து அமெரிக்க கொடியை தலைப்பாகையாக அணிந்த தோழரை, நான்கைந்து தோழர்கள் தூக்கிக் கொண்டு செல்ல, கதர் குல்லா அணிந்த தோழர் கையசைத்து அவரை அனுப்பிவைக்கும் காட்சி, நடந்த உண்மைகளை மக்களுக்கு அப்பட்டமாக உணர்த்தியது.

இந்த நாடகத்தை வீடியோவில் படம் பிடிக்க வந்த காவல்துறையினரை தோழர்கள் தடுத்தார்கள். குரலை மட்டுமே உயர்த்தி, ‘படம் பிடிக்கக் கூடாது’ என்றார்கள். மறுபேச்சில்லாமல் அதற்கு காவலர்கள் கட்டுப்பட்டார்கள். இத்தனைக்கும் தடுத்த தோழர்களிடம் சாதாரண தென்னங்குச்சிக் கூட இல்லை. ஆனால், இமயமலையையே பெயர்த்து எடுக்கும் சக்திப் படைத்த மக்கள் திரள் அவர்களின் பின்னால் இருந்தது. துப்பாக்கி ஏந்திய காவலர்களை கட்டுப்படுத்தும் வலுவான ஆயுதம், மக்கள் திரளே என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சி.

அதேபோல் காவலர்களை புகைப்படம் எடுக்கவும் தோழர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால், முற்றுகைப் போராட்ட பேட்ஜ் அணிந்த தோழர்கள் வளைந்து வளைந்து வீடியோவும் எடுத்தார்கள். புகைப்படமும் எடுத்தார்கள். காதில் புகை வர வர இக்காட்சியை காவல்துறை உயரதிகாரிகள் பார்த்தார்கள்.

செய்தி ஊடகங்களில் என்.டி.டி.வி சேனல் மட்டுமே வந்திருந்தது. தோழர்களிடம் அனுமதி பெற்று அனைத்து நிகழ்வையும் அவர்கள் படம் பிடித்தார்கள்.

வீதி நாடகம் முடிந்ததும் பேரணிக்கு முன்பு வந்த புஜதொமு அமைப்பின் தலைவரான தோழர் முகுந்தன், பேட்டரியால் இயங்கும் மைக்கை வாங்கி முழக்கங்களை எழுப்ப, தோழர்கள் அதை எதிரொலித்தார்கள்.

இதன் பிறகு மகஇக-வின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் 20 நிமிடங்கள் சிறப்புரை நிகழ்த்தினார். ஸ்பீக்கர் இல்லை. மின்சாரத்தால் இயங்கும் மைக் இல்லை. ஆனால், மருதையன் தோழரின்  உரையை அங்கிருந்த அனைவரும், காவலர்கள் உட்பட அமைதியாக கேட்டார்கள். கட்டுப்பாடுக்கும், ஒழுக்கத்துக்கும் எந்தளவுக்கு அமைப்புத் தோழர்கள் பெயர் போனவர்கள் என்பது மீண்டும் நிரூபனமானது.

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும், இரு பிரிவினர்தான் அதிகாலையிலேயே பணிக்கு செல்கிறார்கள். பள்ளி மாணவர்கள் ஒரு பிரிவினர். காவலர்கள் மறுபிரிவினர். பள்ளி மாணவர்களுக்காவது மிட்டாய் கிடைக்கும். காவலர்களுக்கு அதுக் கூட கிடைக்காது. பிரதமர் வந்தாலும் சரி, முதல்வர் சென்றாலும் சரி, ரவுடிகள் நடந்தாலும் சரி பாதுகாப்புத் தர வேண்டியது காவலர்களின் கடமையாகிறது… என்ற பொருள்பட தோழர் மருதையன் தன் உரையை ஆரம்பித்ததும் அங்கிருந்த செஞ்சேனை தோழர்கள் பலத்த கரவொலி எழுப்பினார்கள் என்றால், பல காவல்துறையினர் முகமலர்ந்து தங்கள் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்கள்.

தொடர்ந்து மறுகாலனியாக்கத்தால் நம் நாடு திவாலாகி வருவதை குறித்து பேசிய தோழர், இந்த முற்றுகைப் போராட்டத்தை தடுப்பதன் மூலம், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சுதந்திரம் கிடைத்திருக்கிறது… மக்களுக்கல்ல என்றார்.

இதனையடுத்து மீண்டும் தொடர் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்தும் பேனர்களையும், தட்டிகளையும் ஏந்தியபடி செஞ்சேனை தோழர்கள் தாம்பரம் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரமாக நிற்க ஆரம்பித்தார்கள். இதன் மூலமாக சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒவ்வொருக்கும் பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படும் அவலங்களும், போபால் படுகொலையில் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளும் உணர்த்தப்பட்டன.

‘தயவுசெஞ்சு அரெஸ்ட் ஆகிடுங்க… இல்லைனா எங்களுக்கு வேலை போயிடும்…’ என காவல்துறை உயரதிகாரியின் கெஞ்சலுடன் செஞ்சேனை தோழர்களை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்ற ஆரம்பித்தனர்.

இந்தக் கைது நடவடிக்கை வைபவம் முழுமையாக நடந்து முடிய இரண்டு மணி நேரங்களானது. அந்தளவுக்கு தோழர்கள் புறமுதுகிட்டு ஓடாமல் கைதாகிக் கொண்டேயிருந்தார்கள். கைதான தோழர்களில் கணிசமானோர் பெண்கள். சில பெண் தோழர்கள் குழந்தைகளோடு கைதானார்கள்.

எம்.ஜி.ஆர்.நகர், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், ஜாபர்கான்பேட்டை பகுதிகளிலுள்ள அனைத்து திருமண மண்டபங்களும் தோழர்களால் நிரம்பி வழிந்தன.

அதுவரை மழையும் நிற்கவில்லை.

ஒரு பிஞ்சுக் குழந்தை. ஒண்ணரை வயதுதான் இருக்கும். சிவப்புச் சட்டை, சிவப்பு டிராயர் அணிந்திருந்தார். தன் அப்பாவின் தோளில் அமர்ந்தபடி குடையை விலக்கிவிட்டு மழையில் நனைந்தபடியே போராட்டத்தை கண்கொட்டாமல் பார்த்தார். மழையில் நனைந்தால் தன் மகனுக்கு ஜலதோஷம் பிடிக்கும், காய்ச்சல் வரும் என்றெல்லாம் யோசிக்காமல் நேரடி போராட்டத்தை காணும் வாய்ப்பை தன் மகனுக்கு வழங்கிய அந்தத் தோழருக்கு சிவப்பு வணக்கங்கள்.

சவுகார்பேட்டையிலிருந்து இருவர் இப்போராட்டத்தை காண்பதற்காகவே வந்திருந்தனர். அவர்களுக்கு இப்போராட்டம் குறித்து தெரிந்தது, மின்சார ரயிலில் நடைப்பெற்ற பிரசாரம் மூலமாகத்தான். போபால் படுகொலை நிகழ்வை அம்பலப்படுத்தும் ஜூலை மாத ‘புதிய ஜனநாயக’ சிறப்பிதழையும், ஆகஸ்ட் 15 ‘டெள கெமிக்கல்ஸ்’ முற்றுகைப் போராட்டத்தை வலியுறுத்தும் 2 ரூபாய் பிரசுரத்தையும் விற்பனை செய்வதற்காகவும், நிதிவசூலுக்காகவும் தோழர்கள் வார இறுதியில் சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்தடத்தில் பிரசாரம் மேற்கொண்டார்கள். அப்போது அறிமுகமானவர்கள்தான் அந்த சவுகார்பேட்டை நண்பர்கள். செஞ்சேனை தோழர்களின் போராட்டத்தை முழுமையாக பார்த்த அவர்கள், அமைப்பில் தாங்கள் சேர விரும்புவதாக சொன்னது நிச்சயம் உணர்ச்சிவசப்பட்டல்ல.

குளிர்சாதன அறையில் அமர்ந்து, ஸ்காட்ச் விஸ்கியை குடித்தபடி ‘டெள கெமிக்கல்ஸ்’ நிறுவனத்தின் இந்திய அடியாள்களும், மற்ற பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய தரகர்களும், ஆளும் வர்க்க எட்டன்களும் முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்கிவிட்டதாக மகிழ்ச்சியடையலாம். அதற்கேற்ப காவல்துறையினரும், உளவுத்துறையினரும் ‘சும்மா 10 பேர்தான் போராடினாங்க…’ என பொய்யான தகவல்களை சொல்லி அவர்களை குளிப்பாட்டலாம்.

ஆனால், தில்லி செங்கோட்டையில் பிரதமரும், தமிழகத்தில் முதல்வரும் நாம் சுதந்திரம் வாங்கிவிட்டதாகச் சொல்லும் தேசியக் கொடியை ஏற்றிய அதேநேரத்தில்தான் –

செங்கொடியை ஏந்தியபடி நாம் இன்னும் சுதந்திரம் வாங்கவேயில்லை என்பதை முன்பே கைதானவர்கள் போக மீதமிருந்த தோழர்களில் ஒரு பகுதியினராகிய இரண்டாயிரத்துக்கும் அதிகமான தோழர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

உண்மையான சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு அச்சாரமாய் இந்த முற்றுகை போராட்டம் அமைந்தது. ஆம். போலி சுதந்திர தினத்தில்  ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம்.

_________________________

–    அறிவுச்செல்வன்
_________________________

வினவுடன் இணையுங்கள்

படத்தை பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்

தொடர்புடைய பதிவுகள்

கலைஞர் குடும்பம், நேரு குடும்பம்: பெயர்களின் அரசியல் !

30

குடிசை வீடுகளை மாற்றி காங்கிரீட் வீடு கட்டும் தமிழக அரசின் திட்டத்தின்படி ஒரு வீட்டிற்கு மத்திய அரசு ரூ. 45 ஆயிரம் வழங்குவதாகவும், தமிழக அரசு ரூ.15 ஆயிரம் மட்டும் வழங்கும் நிலையில் அந்த திட்டத்திற்கு கருணாநிதியின் பெயரை வைத்தது நியாயமா என்று காங்கிரசுக் கட்சியின் இளங்கோவன் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது எங்கள் காசைப்பயன்படுத்திக் கொண்டு உங்கள்பெயரை மக்களிடம் பிரபலமாக்குவது சரியா என்பதை அவரது கேள்வி.

இதற்குப் பதிலளித்த கருணாநிதி, இளங்கோவன் கூறும் திட்டம் ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு அங்கமாக இருக்கும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் என்றும், இது 1997 – 98 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும், இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வாழும் வீடில்லாத ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், கொத்தடிமைகளாக விடுவிக்கப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மற்ற பிரிவு மக்கள் ஆகியோருக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்படுமென்றும், இதற்கு 75 : 25 என்ற விகிதத்தில் மத்திய – மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கும் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கும் எந்த சம்பந்தமில்லை என்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு 21 இலட்சம் வீடுகளைக் கட்டும் திட்டம் 2010 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த ஆண்டு மட்டும் மூன்று இலட்சம் வீடுகள் ரூ. 1800 கோடியில் கட்டப்படும் என்றும் கருணாநிதி விளக்கியுள்ளார். இதன்படி மீதமுள்ள 18 இலட்சம் வீடுகளுக்கான நிதி 10,800 கோடி வருகிறது. இந்த தொகையை எப்படி ஒதுக்கப் போகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க இத்திட்டத்தின்படியே ஒரு வீட்டிற்கு ஒதுக்கப்படும் தொகை ரூ. 60,000 என்றுவருகிறது.

இந்த ரூபாய்க்கு குடிசை வீடு கூட கட்ட முடியாத இன்றைய காலத்தில் காங்கிரீட் வீடு எப்படி கட்ட முடியும்? ஒருவேளை கட்டினாலும் அதன் தரம் எப்படி இருக்கும் என்பது புரிகிறது. இறுதியில் இந்த வீடுகளைக் கட்டும் முகாந்திரத்தில் அதிகாரிகள், கட்சிக்காரர்கள், முதலாளிகளும்தான் சம்பாதிக்கப் போகிறார்கள். மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் தி.மு.க அரசு நிகழ்த்தப் போகும் மற்றுமொரு மோசடி. சரி, இது எப்போதும் உள்ள கதைதானே? இனி விசயத்திற்கு வருவோம்.

இந்த விளக்கத்தின் மூலம் கருணாநிதி என்ன சொல்கிறார் என்றால் காங்கிரீட் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை, முற்றிலும் மாநில அரசு நிதிதான் பயன்படுத்தப்படுகிறது என்பதால் இதற்கு கலைஞர் என்ற பெயர் வைத்ததில்  எந்த தவறுமில்லை என்பதே. அதாவது உங்க முதலாளிகளது பணத்தையல்ல, எங்கள் வீட்டுப் பணத்தை பயன்படுத்தும் திட்டத்திற்கு எங்கள் பெயர்தானே வைக்கமுடியும் என்று நியாயம் கேட்கிறார் கருணாநிதி. கூடுதலாக இளங்கோவனது பேச்சு கூட்டணியை வலுப்படுத்தாமல் ‘வலி’ப்படுத்துகிறது என்று வேறு  புலம்பியிருக்கிறார்.

இறுதியில் இந்த அக்கப்போரிலிருந்து நாம் பெறும் விளக்கம் என்ன? மத்திய அரசு என்பது நேரு குடும்பத்தின் சொத்து, மாநில அரசு என்பது கலைஞர் குடும்பத்தின் சொத்து. இருவரும் மக்கள் வரிப்பணத்தை வைத்தே அரசின் செலவுகளை செய்கிறார்கள் என்றாலும் ஏதோ அவர்களது சட்டை பாக்கெட்டிலிருந்து செலவு செய்வதாக கருதிக் கொள்கிறார்கள். அதனால்தான் அனைத்து திட்டங்களும் நேரு, இந்திரா, ராஜீவ், கலைஞர் என்ற பெயர்களைத் தாங்கி வருகின்றன.

இலவச டி.வி என்றால் அது கலைஞர் கொடுத்தது, இலவச மருத்துவக் காப்பீடு என்றால் அது கலைஞர் கொடுத்தது, ஒரு ரூபாய் ரேசன் அரிசியும் அவர் கொடுத்தது, இப்படி தமிழகத்தின் எல்லா திட்டங்களும் கலைஞர் தான் சேர்த்து வைத்த குடும்பச் சொத்திலிருந்து கொடுப்பது போல கருதிக் கொள்கிறார். நேரு குடும்பமும் அப்படியே கருதிக் கொள்கிறது. உண்மையில் கலைஞர் குடும்பத்தின் வருமானம் என்பது ஆசியப் பணக்காரர் பட்டியலில் வரும் தகுதி கொண்டது. அந்த ஆயிரக்கணக்கான கோடிகளே தமிழக மக்களை சுரண்டிச் சேர்த்த பணம்தான். அதிலிருந்து ஒரு காசு கூட சமூகத்திற்கு செலவழிக்காதவர்கள் மக்கள் பணத்தை செலவு செய்வதைக் கூட தமது சொந்த பணத்தை செலவு செய்வது போல பேசுவதும், எண்ணுவதும் எவ்வளவு அயோக்கியத்தனம்?

மக்களும் கூட அப்படித்தான் எண்ணுகிறார்கள் என்பதால் எல்லா ஓட்டுக்கட்சிகளும் இத்தகைய நடைமுறைகளை பச்சையாகக் கையாள்கின்றன. மேலும் மக்கள் வரிப்பணத்திலிருந்தே இவை அமலாக்கப்பட்டாலும் மக்களை ஏதோ பிச்சைக்காரர்கள் போல சித்தரிப்பதும், காங்கிரசு, தி.மு.க கோமான்களை தர்மம் செய்யும் பண்ணையார்களாக காட்டுவதும் மகா மட்டமாக இருக்கிறது.

இந்த திட்டங்கள் எங்கள் பணத்திலிருந்துதான் வருகிறது என்ற உணர்வை மக்கள் பெறாத வரைக்கும் இந்த தர்மவான்களது அயோக்கியப் பெயர்கள் மறையப் போவதில்லை.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!

167

கடந்த 26/07/2010   அன்று சௌதிகெஜட் நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ஒரு செய்தி வந்திருந்தது,  “கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது” என்று.  வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணால் கடத்தப்பட்டு பின்னர் ஒரு பல்பொருள் அங்காடியில் விட்டுச் செல்லப்பட்டிருந்தது அந்த இரண்டரை வயதுக் குழந்தை. குழந்தையின் தந்தை குழந்தையை மீட்க பணம் தரவேண்டும் என்று தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்தச் செய்தியிலேயே (அதே நகரில்) கடந்த ஆண்டும் இதே போல் குழந்தைக் கடத்தல் ஒன்று நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படி நடைபெறும் குழந்தைக் கடத்தல் நிகழ்வுகளை பணத்துக்காக நிகழ்த்தப்படுபவைகள் என்று பொதுமைப்படுத்திவிடவோ ஒதுக்கிவிடவோமுடியாது. ஏனென்றால் இவைகள் பணத்துக்காக நடைபெறுவதைப்போல் காட்டப்படுபவை. அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களை உற்றுநோக்கினாலே தெரியும் இவைகளில் பணம் வினையூக்கியாகச் செயல்பட்டிருக்கமுடியாது என்பது.

  1. இந்தக் கடத்தலைச் செய்வது அந்தந்த வீடுகளில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணிப்பெண்கள்.
  2. இந்தக் கடத்தலில் அவர்கள் பணம் பெறுவதும் இல்லை, காவல்துறை கடத்தப்பட்டவர்களை மீட்பதும் இல்லை. ஏனென்றால் அதே நாளோ அல்லது மறுநாளோ எங்காவது பொது இடத்தில்
    விட்டுச்செல்வதுதான் நடந்திருக்கிறது.
  3. இக்கடத்தலை திட்டமிட்டோ சிலருடன் இணைந்தோ செய்வதில்லை

இது போன்ற காரணங்கள் அந்தக் கடத்தல்கள் பணத்துக்காக நடைபெறுவதில்லை என்பதை நிரூபிக்கின்றன. என்றால் அதன் உண்மையான காரணம் என்ன?

சௌதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை ஒரே வார்த்தையில் உச்சரிக்க வேண்டுமென்றால் ‘நரகம்’ என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அதிகாலையில் எழுந்து வீட்டை கழுவித் துடைத்து, காலை உணவுக்கான தயாரிப்புகளைச் செய்து, குழந்தைகளை எழுப்பி கவனித்துக் கொண்டு சற்று பெரிய குழந்தைகளென்றால் பள்ளிக்கூடத்திற்காக ஆயத்தப்படுத்தி, கடந்த நாளின் அழுக்கடைந்த ஆடைகளை துவைத்து உலர்த்தி தேய்த்து, மதிய உணவை தயாரித்து வழங்கி சுத்தப்படுத்தி, குழந்தைகள் பெற்றோரை தொந்தரவு செய்துவிடாமல் கவனித்துக்கொண்டு, இடையிடையே சௌதிகளின் தேவையறிந்து அவற்றில் உதவி, மாலையில் சௌதிப் பெண்களின் கடைவீதி உலாவுக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பின்சென்று அல்லது வேண்டிய பொருட்களை சுமந்து வருவதற்காக பின்சென்று பின் இரவுச் சாப்பாடு குழந்தைகளைத் தூங்கவைப்பது என்று பின்னிரவு வரை தன்னைத்தானே ஒரு இயந்திரமாய் மாற்றிக் கொள்ளவேண்டியதிருக்கும். வேலை நேரம் ஒழிவு நேரம் என்று தனித்தனியாக கொள்வதற்கு இடம்இருப்பதில்லை. இடையில் கிடைத்தால் சில நிமிடங்களை ஓய்வாக கொள்ளவேண்டியதுதான். இதில் நேர்ந்து விடும் தவறுகளுக்காக திட்டுக்கள் முதல் அடிஉதை வரை அனைத்தும் கிடைக்கும்.

வீடுகளில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையின் சிரமங்கள் அவர்களை ஒரு இயந்திரத்தைப் போல் உணரவைக்கிறது என்றால், நிலவும் சூழல் அவர்களை இயந்திரமாகவே ஆக்கும். வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை, குப்பைகளை கொட்டுவதற்குச் சென்றால்கூட அனுமதியின்றி செல்லமுடியாது. தனியாக செல்லிடப்பேசி வைத்துக் கொள்வதற்கோ, யாருடனும் தொலைபேசியில் பேசுவதற்கோ முடியாது. நாட்டில் பெற்றோர்களிடமோ, உறவினர்களிடமோ பேசுவதற்கு மட்டும் அனுமதிப்பார்கள். சம்பளப் பணத்தை ஊருக்கு அனுப்புவதற்குக்கூட சௌதிதான் வங்கிக்கு சென்று அனுப்புவான். இப்படி ஒழிவின்றி வேலை செய்வதாலும், தங்களின் மனக் குறைகளை பகிர்ந்து கொள்ள வழியின்றி கூண்டுக்குள் அடைபட்ட விலங்கைப் போன்ற சூழலாலும் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதில் சௌதியில் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களின் நிலை சொல்லும் தரமன்று. வேலை செய்யும் வீடு பெரிய பணக்கார வீடாக இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பணிப்பெண்கள் இருந்தால் வேலையில் ஆறுதலுக்கும், பாலியல் கொடுமைகளிலிருந்து சிறிது தப்பித்தலுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் தனியாக மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கோ சொல்வதற்கும் யாருமின்றி, செல்வதற்கும் வழியுமின்றி அந்த பாலியல் வதைகளை சகித்துக் கொள்வதைத் தவிர வேறு கதியில்லை.

அண்மையில் விமான நிலையத்தில் 40 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த ஒரு பணிப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவர் கூறியதைக் கேட்டால் பணிப்பெண்கள் எத்தகைய நிலையில் அங்கு பணிபுரிய வேண்டியதிருக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். “பிறந்ததிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை, கொஞ்சம் விபரம் தெரிந்ததும் என் மாரிலேயே கைவைக்கிறான்” என்று கூறி உடைந்த  போது அவர் கண்களிலிருந்து வழிந்தது இரத்தமாக தெரிந்தது.

“பணிப்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எங்களிடம் தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என்கிறது காவல்துறை. ஆனால் புகார் கொடுக்கும் அளவுக்கான சூழலை ஏற்படுத்தாமல், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்பது எந்த விதத்தில் சரியானது? ஒரு பணிப்பெண் தனக்கு நேரும் பாலியல்கொடுமைகளுக்கோ, வதைகளுக்கோ தொலைபேசி மூலம் காவல்துறைக்கு புகார் கொடுக்கிறாள் என்று கொள்வோம். என்ன நடக்கும்?

சௌதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. முதல் கட்டமாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை என வீட்டிலுள்ள அனைவரும் விசாரணைக்காக வரும் காவல்துறையினரிடம் கூறுவர். அப்படி ஒன்று நடந்தது என்று பாதிக்கப்பட்ட பெண்ணே நிரூபிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிரூபித்தாலும் குற்ற நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசி ஏதாவது இழப்பீட்டுத் தொகை வாங்கி சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதுதான் காவல்துறை செய்யும் அதிகபட்ச நடவடிக்கை. அன்றி கொடுமை நடைபெற்றதை நிரூபிக்க முடியாமல் போனால், இழப்பீடோ, பரிவுத் தொகையோ எதுவுமின்றி சொந்தநாடு திரும்ப வேண்டியதிருக்கும். ஏனென்றால், தொடர்ந்து அந்த வீட்டில் வேலை செய்தால் அது தற்கொலை முயற்சியாகத்தான் இருக்கும்.

முன்னிலும் அதிக சித்திரவதைகளுடனும், நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளுடனும் வேலை செய்ய முடியுமா? புகார் கொடுத்து நிரூபிக்க முடியாத நிலையிலுள்ள பணிப்பெண்களை வேறு இடத்திலிலோ, வேறு வேலையிலோ சேர்த்துவிட காவல்துறை முயலாது. ஏனென்றால் சட்டத்தில் அதற்கு அனுமதியில்லை. வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை வேலைக்காக தருவிக்கும் சௌதி அப்பெண்ணுக்கு வேலைவழங்குனர் மட்டுமல்ல, பாதுகாவலரும்தான்.

பாலியல் கொடுமைகளைச் செய்வது ஆண்கள்தான், வீட்டிலுள்ள பெண்களிடம் அவர்கள் முறையிடலாமே என நினைப்பதும் கொடுமையான அனுபவமாகவே அமையும். அதன்பிறகு பழிவாங்கும் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதோடு பொருளாதார ரீதியிலும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். ஏனென்றால் சம்பளம் கொடுப்பது அதை பணிப்பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைப்பது போன்றவற்றைச் செய்வது சௌதி ஆண்தான்.

நடக்கும் இவைகளுக்கு எதிராக முறித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் இங்கு வரும் பணிப்பெண்களில் பெரும்பாலானோர் இருப்பதில்லை. வாங்கி வந்த கடனும், வீட்டுச்செலவுகளும், தேவைகளும் அவர்களின் முன் பூதாகரமாக அச்சுறுத்துகின்றன. வறுமைக்குப் பயந்து, குடும்பத்தையும் குழந்தைகளையும் பிரியச் சம்மதிக்கும் பெண்கள் வந்த இடத்தில் எதிர்கொள்ளும் கொடுமைகளால், அதற்கு வடிகாலில்லாத நிர்ப்பந்தங்களால் நொறுங்கிப் போகிறார்கள். வேறுவழி தெரியாததால் பலபெண்கள் சம்மதித்து சகித்துப் போகிறார்கள். சிலர் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக குழந்தைகளை துன்புறுத்துவதையும், கடத்திச் செல்வதையும், ஏதாவது வழியில் பழிவாங்க முடியாதா? எனும் எண்ணங்களுக்கு ஆளாகிப் போகிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே சௌதி அரசு உள்ளே வரும் அனைத்து வெளிநாட்டவர்களையும், புகைப்படமும், கைரேகையையும் விமான நிலையத்திலேயே எடுத்து பதிவு செய்து ஆவணமாக்கி வருகிறது. விடுப்பில் செல்லும், இகாமா (இருப்பிடஅனுமதி) புதுப்பிக்கும் யாரும் கைரேகையை பதிவு செய்யாமல் முடியாது எனும் அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஒரு குழந்தையை கடத்திச் சென்று அதன் மூலம் பொருளாதார பலன்களை அடைந்துவிட முடியும் என்பது நடக்க முடியாத ஒன்று. பெண்கள் வெளியேறிச் சென்று தனியாக எங்கும் வேலை செய்து விடவோ, ஊர் சென்று விடவோ முடியாத சூழலை ஏற்படுத்தி வரும் இந்நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண் தன்னுடைய பொறுப்பில் இருக்கும் குழந்தையை கடத்தி பணம் கேட்கிறாள் என்று கூறுவது அதன் பின்னணியில் தொழிற்படும் காரணங்களை மறைப்பதற்காகத்தானேயன்றி வேறொன்றுமில்லை.

இத்தகைய கொடுமைகள், பாலியல் வதைகள் குறித்து ஒரு சௌதி என்ன விதமான கருத்துகொண்டிருக்கிறான் என்பது இதில் இன்றியமையாத ஒன்றாகிறது. ஒரு சௌதிப் பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்படும்போது ஒரு சௌதி ஆணுக்கு ஏற்படும் அதிர்வலைகள், ஒரு வெளிநாட்டு பணிப்பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டாள் எனும் போது ஏற்படுவதில்லை, அது ஒரு சாதாரண செய்தியாகவேபடுகிறது. இதை சொந்த நாட்டுப் பெண்ணுக்கும் அந்நிய நாட்டுப் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என எடுத்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் இல்லை. சௌதியின் உளவியலிலே இத்தகைய வித்தியாசங்கள் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள நாம் குரானிலிருந்து தொடங்கவேண்டும்.

சௌதி ஆணின் பாலியல் தேவைகளை பொருத்தவரை மதகலாச்சாரரீதியாக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. கட்டற்ற பாலியல் சுதந்திரத்திற்கு சில வரம்புகளை மட்டுமே நிர்ணயம் செய்திருப்பதன் மூலம் ஆணின் பாலியல் சுதந்திரத்தை பேணப்படுகிறது.

அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. குரான் 4:3

சட்டபூர்வமாக நான்கு மனைவிகள் அல்லாது எத்தனை அடிமைப் பெண்களையும் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள ஆணுக்கு அது அனுமதியளிக்கிறது. பரிகாரம் எனும் அடிப்படையில் அடிமைகளின் விடுதலை குறித்து குரான் பேசினாலும், அடிமையை வைத்திருப்பதும், அவர்களை பாலியல் ரீதியில் பயன்படுத்துவதும் மத அடிப்படையில் குற்றச் செயலல்ல. இந்த அடிப்படையிலிருந்து எழுந்து வருவதுதான் இப்போதைய சௌதிகளின் மனோபாவம். 1962ல் சட்டபூர்வமாக சௌதியில் அடிமையை வைத்திருப்பது தடை செய்யப்பட்ட பிறகும் இந்த மனோபாவம் தொடர்கிறது.வெளிநாட்டிலிருந்து வீட்டு வேலைக்கு வரும் பெண்களை பாலியல் அடிமைகளாய் வைத்திருப்பது குற்றமல்ல எனும் உளவியல்தான் அவர்களின் செயல்களில் பிரதிபலிக்கிறது.

வேலை செய்ய வரும் வெளிநாட்டு ஆண்களையும் சௌதிகள் இந்த மனோபாவத்துடனே அணுகுகிறார்கள் என்பதற்கு அனேக எடுத்துக்காட்டுகளைத் தரமுடியும். ஆனால், ஆண்களுக்கு இருக்கும் வாய்ப்பும், வேறு வேலை தேடிக்கொள்வதற்கான வசதிகளும், பணம் செலுத்தி தன் பாதுகாவலரை மாற்றிக் கொள்ள முடிகிற நிலையும் அவர்களை அடிமையாக நடத்துவதினின்றும் ஓரளவு பாதுகாக்கிறது. இதேபோல் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் கூட இத்தகைய கொடுமைகளை சந்திப்பதில்லை. வீட்டு பணிப்பெண்களுக்கு அதில் அழுந்திக் கிடப்பதைத் தவிர வேறுவழியில்லை எனும் சூழல் இருப்பதால் ஆணாதிக்கத் திமிரில் அடிமையாக நடத்துவதும் தொடர்கிறது.

அடுத்து பெரும் சொத்தாய் குவிந்திருக்கும் எண்ணெய் பணத்தின் மூலம் சௌதிகள் சாதாரண வேலைகள் எதனையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் வேலையாட்களை வைத்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் வீட்டு வேலைகளுக்கான பெண்களும் அழைத்து வரப்படுகிறார்கள். வர்க்க ரீதியில் இருக்கும் இந்த மேட்டிமைத்தனமான மனோபாவமும் வீட்டு பணிப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் நாகரீகமாகப் பழகும் சௌதிகள் ஆசிய நாட்டவரைக் கண்டால் ஆண்டைகள் போலத்தான் நடத்துவார்கள். இதன்படி பணிப்பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவது குறித்து அவர்கள் குற்ற உணர்வு ஏதும் கொள்வதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பன்ஸ் நாட்டைச் சேர்ந்த சாரா எனும் இளம் பெண் தன்னை பாலியல் வன்முறை செய்ய வந்த ஒரு கிழட்டு ஷேக்கை குத்திக் கொன்றாள். அதற்காக அவளுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து முழு உலகும் போராட வேண்டியிருந்தது. காதல், கள்ளக் காதல், விபச்சாரம் போன்ற குற்றச்சாட்டுகளை வைத்தும் சௌதியில் இருக்கும் ஆசிய நாடுகளின் பெண்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. இத்துடன் ஒப்பிடும் போது சௌதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை மிகவும் குறைவு.

சௌதிகளின் இருப்பை மதம் ஆளுமை செய்து கொண்டிருப்பது வரை அவர்களை இந்த மனோநிலையிலிருந்து மாற்றுவது கடினம். அதேநேரம் வெளியிலிருந்து வருபவர்களும் இவை குற்றம் எனும் நிலையை உணராது மத அடிப்படியில் ஆதரித்து நிற்பது வேதனை. காயம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட பிறகுதான் மருந்திடுவது குறித்து சிந்திக்க முடியும். அந்த வகையில் இதுபோன்ற நிகழ்வுகளை வெளியில் கொண்டு வருவதும், வெளிப்படையாக விவாதிப்பதும் அந்த அடிமைத்தனத்தைக் களைவதற்கான முதற்படியாகும்.

அரசியல், பொருளாதார ரீதியில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சௌதி ஷேக்குகள் உள்நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு மட்டும் இசுலாத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மதச் சட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டுவது, சவுக்கால் அடிப்பது முதலான கொடூரமான தண்டனைகளை அமல்படுத்தி வரும் ஷேக்குகள் அவர்களது சொந்த வாழ்வில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துதான் வருகிறார்கள். இவர்களை எதிர்த்து ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் எழாத வரைக்கும் இந்த வீட்டுப் பணிப்பெண்களுக்கு விடுதலை இல்லை.

உங்கள் பார்வைக்கு சிலஆதாரச் செய்திகள்

http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/07/070704_saudifeature.shtml
http://archive.arabnews.com/?page=1&section=0&article=131847&d=26&m=1&y=2010
http://archive.arabnews.com/?page=1&section=0&article=130001&d=22&m=12&y=2009
http://archive.arabnews.com/?page=1&section=0&article=128343&d=11&m=11&y=2009
http://archive.arabnews.com/?page=1&section=0&article=122151&d=3&m=5&y=2009
http://archive.arabnews.com/?page=1&section=0&article=117683&d=31&m=12&y=2008
http://archive.arabnews.com/?page=1&section=0&article=113798&d=3&m=11&y=2008
http://archive.arabnews.com/?page=1&section=0&article=113929&d=6&m=9&y=2008
http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2010072679168

_____________________________________________
வினவு செய்தியாளர், வளைகுடாவிலிருந்து.
______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உடல்தானம் = அப்போலோவின் இலாபம் ?

34

அமெரிக்காவைச் சேர்ந்த 65 வயதான ரொனல்ட் லெம்மருக்கு ஏற்கனவே பைபாஸ் அறுவைச் சிகிச்சையும், பேஸ்மேக்கரும் வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் இதய மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் எம்.ஆர். கிரிநாத் மற்றும் டாக்டர் பால் ரமேஷ் ஆகியோர் கூறியதாவது: “இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 100 இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. அதில் சென்னை மற்றும் தில்லியில் 40 முதல் 45 அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. சாலை விபத்தில் இறந்த 36 வயதுடைய நபரின் இதயம் தானமாகப் பெறப்பட்டு ரொனால்ட் லெம்மருக்கு பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக உடல் தானம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.”

தமிழக இதயத்தை பெற்றுக் கொண்ட அமெரிக்க தொழிலதிபர் ரொனால்ட் லெம்மர் கூறுகையில், அமெரிக்காவில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று மருத்தவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சென்னையில் அப்பல்லோவை அணுகினேன். பதிவு செய்த மூன்று மாதங்களில் அதிர்ஷ்டவசமாக எனக்கு இதய தானம் கிடைத்தது என்றார்.

அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது: “50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவில் (சுமார் 25 இலட்சம் இந்தியரூபாய்) இந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. நாட்டில் இதய நோய்ப் பிரச்சினை காரணமாக நாளொன்றுக்கு 5,000 பேர் இறக்கின்றனர். அப்பல்லோ மருத்துவமனை மூலம் 5,629 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நிமிடம் ஒன்றுக்கு ஒரு சாலை விபத்து ஏற்படுகிறது. இதில் 50 சதவீதம் பேர் இறந்து விடுகின்றனர். உடல் உறுப்புகளை தானம் அளிப்பது தொடர்பாக விழிப்புணர்வு அவசியமாகும்.”

கூட்டி கழித்துப் பார்த்தால் இந்த செய்தியிலிருந்து என்ன தோன்றுகிறது?

இந்தியாவில் நிமிடத்திற்கு ஒரு சாலை விபத்து எற்படுவது குறித்து பிரதாப் ரெட்டிக்கு கவலையில்லை. அந்த விபத்துக்களில் சாகும் நபர்களின் உறுப்புக்களை தானம் செய்யும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுவது குறித்தே அவரது கவலை. அதிலும் தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது என்று அப்பல்லோ மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் சாலை மேம்பாடு, லாரி டிரைவர்களுக்கு சுமையில்லாத வேலை முறை ஆகியன நடந்தால் சாலை விபத்துக்கள் குறையும். சாலை விபத்துக்கள் குறைந்தால் தானமாக வரும் உறுப்புக்களின் எண்ணிக்கையும் குறையும். அவை குறைந்தால் அப்பல்லோவுக்கு வருமானம் குறையும். அமெரிக்காவில் இதய மாற்று சிகிச்சைக்கு இரண்டாண்டு காத்திருக்கும் அமெரிக்கர்களுக்கு இந்தியாவில் மூன்றே மாதங்களில் இதயம் கிடைக்கும் வாய்ப்பு குறையும்.

என்றாலும் இந்தியாவில் சாலை விபத்துக்கள் குறையப் போவதில்லை. அப்பல்லோவின் வருமானமும் குறையப் போவதில்லை. அமெரிக்காவிடம் நமது நாடு மட்டுமல்ல நமது உடலும், உயிரும் கூட அடமானமாக உள்ளது என்பதற்கு இதை விட எடுப்பான சான்று வேறு வேண்டுமா?

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

60 கோடி அலைபேசி இணைப்புகள், இந்தியா வளர்ந்துருச்சா ?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மூவாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று பின்னர் தேசிய அளவில் தகிடுதத்தம் செய்த மான!மிகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி ஜவகர்லால் பல்கலைகழகத்தில் காங்கிரசு கட்சியின் உட்பிரிவான இந்திய தேசிய மாணவர் அமைப்பின் கூட்டம் ஒன்றில் பேசுகையில் “60கோடி அலைபேசி இணைப்புகள் உள்ள இந்தியாவில் எப்படி 77 விழுக்காடு பொதுமக்கள் வறுமையில் உள்ளார்கள் என ஏற்றுக்கொள்ளமுடியும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

காரைக்குடி செல்வந்தரும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குபவருமான ப.சிதம்பரத்திற்கு ஏழ்மை, வறுமைக்கோடு என்றால் இப்படி தான் புரியும். ப.சிதம்ப‌ரத்தின் கூற்று முற்று முழுதான பொய் என்பதை இந்த கட்டுரை மிக தெளிவாக விளக்குகின்றது. இந்த கட்டுரை சங்கதி (sanhati) இணையதள உறுப்பினர்களால் எழுதப்பட்டது. தோழர்களின் வேண்டுகோளிற்கிணங்க இதை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.

___________________________________________________________

60 கோடி அலைபேசி இணைப்புகள் அதன் உண்மை பற்றி விரிவாக‌ செல்லும் முன்னர், 77 விழுக்காடு பொதுமக்கள் வறுமைக்கோட்டிற்க்கு கீழே உள்ளனர் என்ற தரவு எப்படி வந்தது என பார்ப்போம்.2006 ஆம் ஆண்டு தாங்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டது அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம். இந்த ஆணையம் இந்திய அரசினால் அமைக்கப்பட்ட ஒரு ஆணையம். தேசிய மாதிரி ஆராய்ச்சி நிறுவனம் (இதுவும் இந்திய அரசின் நிறுவனமே) வெளியிட்ட புள்ளிவிரங்களை அடிப்படையாக வைத்தே 77 விழுக்காடு மக்கள் 20 ரூபாய் வருமானம் பெறுகின்றனர் என்ற அறிக்கையை அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம் வெளியிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் அடிவருடியான ப.சிதம்பரத்திற்க்கு இது தெரியவில்லையா அல்லது தெரியாதது போல நடிக்கின்றாரா?

இந்த ஆய்வறிக்கையும், அதன் புள்ளிவிவரங்களும், அதை ஒட்டி பொருளாதார, அரசியல் வார இதழ்(ச‌வகர்லால் பல்கலைகழகத்தின் அரசியல் துறையினால் வெளியிடப்படும் வார இதழ்) என்ற இதழில் வந்த அறிக்கையும் இந்திய நவகாலனிய ஆதரவாளர்களுக்கு ஒரு பேரிடியாக வந்திறங்கியது. ஏனென்றால் இந்த ஆய்வை நடத்தி அறிக்கையை வெளியிட்டிருப்பது அரசின் உதவியினால் நடத்தபடுகின்ற‌ ஆணையம், அப்படியானால் இது வரை இந்திய அரசு மேற்கொண்ட பொருளாதார மறுமலர்ச்சி திட்டங்கள் எல்லாம் படு தோல்வி மற்றும் ஏழ்மையில் வாடும் மக்களின் வாழ்வில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.சமூக பிரிவினைகளிலும், பொருளாதார‌ ஏற்றதாழ்வுகளிலும், மிகக் கொடுமையான வறுமையிலுமே மிகப்பெரும்பான்மையான மக்கள்தொகை உழன்று வருவ‌தை இந்த அறிக்கை மிகத் துல்லியமாக காட்டியுள்ளது.

அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம் வெளியிட்ட இந்த அறிக்கைகளுக்கு பக்க பலமாக இந்தியாவில் வறுமையில் வாழும்,அரசால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக வெளிவரும் புள்ளிவிவரங்கள் உள்ளன. வருமானம் மட்டுமல்ல அடிப்படை மருத்துவ வசதிகள், சுகாதாரமான இடங்களில் வாழ்தல் போன்றவையும் வறுமையை நிர்ணியக்கும் காரணிகள் என்று இந்திய அரசே ஒத்துக் கொள்கின்ற‌து.

இந்தியாவில் 37 கோடிக்கு பேர் அடிப்படை கழிப்பிடம் கூட இல்லாமல் வாழ்கின்றனர் என்று சமீபத்திய ஐ.நா அறிக்கை கூறுகின்றது. இந்தியாவில் 3 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளில் 79 விழுக்காடு குழந்தைகள் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதிற்கும் கீழுள்ள குழந்தைகளில் 40 விழுக்காட்டினர் சத்தான உணவு இல்லாமல் இருப்பதாக கூறுகின்றன சமீபத்தில் எடுக்கப்பட்ட பல மருத்துவ ஆய்வு புள்ளிவிவரங்கள்.  மேலும் சத்தான உணவு இல்லாமலும், பசியால் மக்கள் வாடும் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 65ஆவது இடத்தில் இருப்பதாக ஐ.நாவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ப.சிதம்பரத்தின் மக்கள் வளர்ச்சிக்கான அளவுகோலாக அலைபேசி இணைப்புகளை இந்தியாவில் எடுத்துக்கொள்ள முடியாது என உள்நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிதம்பரம் இந்த‌ வாதத்தை மிகவும் பெருமையோடு அந்த கூட்டத்தில் எடுத்துவைத்துள்ளார். மேலும் கேள்வி எழுப்பிய அந்த பல்கலைகழக மாணவனுக்கு சில பொருளாதாரயியலையும் போதித்துள்ளார். “நீங்கள் ஒரு சிறந்த பொருளாதார நிபுணராவதற்கு நான் உதவமுடியும்”  என மிகவும் கம்பீரமாக கூறியுள்ளார். ப.சிதம்ரத்தின் இந்த கூற்று எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை விளக்க வேண்டியுள்ள‌து. 60 கோடி அலைபேசி இணைப்புகள் வறுமை குறைந்து விட்டதற்கான ஒரு அடையாளமா என்பதை பற்றிய விரிவான ஆய்வை நாம் இங்கே காணப்போகின்றோம். நாம் இதைச் சொல்லவில்லை என்றால் எதிர்காலத்தில் இவர்கள் அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை வைத்து வறுமையை கணக்கிட்டு வறுமையை ஒழித்து விடுவார்கள், இதன் மூலம் உண்மையிலேயே வறுமையில் வாடும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

“ஏழ்மை நிலையிலுள்ள குறிப்பாக நகரப்பகுதிகளில் வாழும் ஏழ்மை நிலையிலுள்ள மக்களில் ஒரு பகுதியினர் அலைபேசி இணைப்புகளை கொண்டுள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர் சந்தையில் தங்களது வேலையை தக்கவைத்து கொள்வதற்கான அடிப்படை தேவையாக இந்த அலைபேசிகள் உள்ளதால் அவர்கள் இந்த அலைபேசி இணைப்பை வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றார்கள்.அலைபேசி கட்டணங்கள் அதிக அளவு குறைந்ததன் காரணமாக தான் ஏழ்மையில் வாழும் மக்கள் அலைபேசி இணைப்பை கொண்டிருப்பது அதிகரித்துள்ளது. இந்த கட்டணம் சிறிய அளவு அதிகரித்தாலும் அவர்கள் அலைபேசி இணைப்பை துண்டித்துவிடுவார்கள்”.

“இதை எல்லாம் விடுத்து அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை கொண்டு வறுமை நிலையை கணக்கெடுத்தால் தில்லியில் வறுமையில் யாருமே இருக்கமாட்டார்கள் ஏனெனில் அவ்வளவு அலைபேசி இணைப்புகள் உள்ளன. தொலைபேசி இணைப்புகள் வேண்டுமென்றால் நடுத்தர வகுப்பினரை காட்டும் ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளலாம்”.

இந்தியாவில் வறுமையில் வாடும் ஒருவருக்கு அலைபேசி ஆடம்பரமா?

இந்த கேள்விக்கு பதில் கூறும் வகையில் சமீபத்தில் அஃகுயூரோ மற்றும் டீ சில்வாவின் கட்டுரை வெளிவந்துள்ளது (“தேர்தெடுக்கப்பட்ட ஆசிய நாடுகளில் அலைபேசி செலவுகள் தொடர்பான ஆய்வு”). இந்த கட்டுரை ப‌சிபிக் த‌க‌வ‌ல் தொட‌ர்பு குழும‌த்தின் க‌ல‌ந்தாய்வில் ச‌ம‌ர்பிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ க‌ட்டுரையில் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் இந்திய‌ ம‌க்க‌ள் தொகை க‌ண‌க்குக‌ளிலிருந்து நேர‌டியாக‌ பெற‌ப்ப‌ட்ட‌வை (இதே போன்ற‌ ஆய்வை ம‌ற்ற‌ வ‌ள‌ர்ச்சி அடையாத‌ நாடுக‌ளிலும் மேற்கொண்டுள்ள‌ன‌ர்). மாத‌ வ‌ருமான‌த்தையும், அதில் அலைபேசிக்கான‌ செல‌வுக்கும் உள்ள‌ தொட‌ர்பையும் புள்ளியிய‌ல் மூல‌ம் ஆராய்கின்ற‌து இக்க‌ட்டுரை. மேலும் அலைபேசியின் மூலமாக‌ அவ‌ர்க‌ள‌து வ‌ருமான‌த்தில் ஏற்ப‌டும் மாற்ற‌த்தையும் இந்த‌க் க‌ட்டுரை ஆராய்கின்ற‌து.

ஒரு எடுத்துகாட்டுக்கு ஒருவ‌ரின் வ‌ருமான‌ம் ஒரு விழுக்காடு குறைந்தால் அவ‌ரின் அலைபேசி உப‌யோக‌ம் எந்த‌ அள‌வுக்கு குறையும். இது போன்ற‌ ஆய்வுக‌ளிலிருந்து அவ‌ர்க‌ள் க‌ண்ட‌ உண்மை அலைபேசி என்ப‌து இந்தியாவில் ஒரு ஆட‌ம்ப‌ர‌ பொருள் அல்ல‌, பொருளாதாராயிய‌லின் வார்த்தையில் அது ஒரு அத்தியாவ‌சிய‌ பொருளாக மாறி உள்ள‌து. அவ‌ர்க‌ளின் வ‌ருமான‌ம் குறையும் பொழுது அலைபேசி ப‌ய‌ன்பாட்டை நிறுத்திவிடுவார்க‌ள். அதே ச‌ம‌ய‌ம் அவ‌ர்க‌ள் வ‌ருமான‌ம் உய‌ரும் பொழுது அலைபேசி ப‌ய‌ன்பாட்டு விகித‌த்தில் எந்த‌வொரு பெரிய‌ மாற்ற‌மும் இருக்காது என்கிற‌து ஆய்வு முடிவுக‌ள்.

இந்தியாவில் வ‌றுமையில் வாழும் ஒருவ‌ர் கூட‌ அலைபேசி இணைப்பு கொள்ள‌ முடியும் என்ப‌து உண்மைதானா?

இந்த‌ கேள்விக்கு பதில‌ளிக்கும் முன் இந்திய‌ அலைபேசி இணைப்புக‌ளின் அப‌ரிமித‌மான‌ வ‌ள‌ர்ச்சியை நாம் பார்த்து விடுவோம். இந்திய த‌க‌வ‌ல் தொட‌ர்பு ஒழுங்குமுறை ஆணைய‌த்தினால் (TRAI) வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ ப‌ல‌ அறிக்கைக‌ளிலிருந்து மேலே உள்ள‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் பெற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

2006 லிருந்து 2007ஆம் ஆண்டில் அலைபேசி இணைப்புக‌ள் க‌ணிச‌மான‌ அள‌வு உய‌ர்ந்துள்ள‌தை அட்ட‌வ‌ணையிலிருந்து நாம் காணலாம். இத‌ற்கு பின்னால் உள்ள‌ கார‌ண‌ங்க‌ளை ஆராய்ந்து ‍‍‍‍‍‍ “Vodafone” நிறுவ‌ன‌ம் ஒரு அறிக்கையை ச‌ம‌ர்ப்பித்துள்ள‌து. ‌ மிக‌ பெரிய‌ அள‌வில் இந்த‌ அலைபேசி இணைப்புக‌ள் அதிக‌மான‌த‌ற்கு “அலைபேசி க‌ட்ட‌ண‌ங்க‌ள் மிக‌ பெரிய‌ அள‌வில் குறைந்த‌தே” கார‌ண‌ம் என்கிற‌து அந்த‌ அறிக்கை.
அறிக்கையிலிருந்து:

அலைபேசியில் ஒருவ‌ரிட‌ம் பேசுவ‌தற்கான‌ ஒரு நிமிட‌ க‌ட்ட‌ண‌ம் ரூபாய் 15.30 (1998) லிருந்து ரூபாய் 0.68(2010) குறைந்துள்ள‌து. இந்த‌ 98 விழுக்காடு க‌ட்ட‌ண‌ குறைவு என்ப‌து உண்மையில் மிக‌ப் பெரிய‌ க‌ட்ட‌ண‌ குறைப்பாகும். மேலும் மிக‌க் குறைந்த‌ க‌ட்ட‌ண‌ அள‌வில் முன்கூட்டியே ப‌ண‌ம் செலுத்தி பேசும்(Pre paid) வ‌ச‌திக‌ளும், அலைபேசியின் விலை ரூபாய். 1000ற்க்கும் கீழீருந்த‌தும் ஒருவ‌ர் அலைபேசி இணைப்பை எடுப்ப‌த‌ற்கான‌ க‌ட்ட‌ண‌த்தை மேலும் குறைத்து, இத‌னால் இந்த‌ ச‌ந்தை மேலும் விரிவ‌டைந்த‌து. இது ம‌ட்டும‌ல்லாம‌ல் அலைபேசிக‌ளுக்கு மாத‌ த‌வ‌ணையில் ப‌ண‌ம் செலுத்தும் முறையும் அலைபேசி விற்ப‌னையாள‌ர்க‌ளால் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. இத‌னால் அவ‌ர்க‌ள் செலுத்தும் மாத‌ த‌வ‌ணை ஒரு மிக‌ப் பெரிய‌ அள‌வில் இல்லாம‌ல் அவ‌ர்க‌ள் வ‌ருமான‌த்திற்குள் வ‌ந்த‌து. ரூபாய் 10 என்ற மிக‌க் குறைந்த‌ க‌ட்ட‌ண‌ அள‌வில் முன்கூட்டியே ப‌ண‌ம் செலுத்தி பேசும் வ‌ச‌திக‌ளும் பெருகின‌. இந்த‌ முன் கூட்டியே ப‌ண‌ம் செலுத்தி பேசும் திட்ட‌த்தில் “வாழ்நாள் இறுதி வ‌ரை”(Life time) அழைப்புக‌ள் என்ற‌ திட்ட‌ம், ஒரே அலைவ‌ரிசைக்குள் பேசினால் ச‌லுகை விலை போன்ற‌ திட்ட‌ங்க‌ளும் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ன‌. புதிய அலைபேசி இணைப்புக‌ளில் 95 விழுக்காடு முன் கூட்டி ப‌ண‌ம் செலுத்தும் திட்டத்தில் உள்ள‌வ‌ர்க‌ள் என்ப‌து ஆச்ச‌ரிய‌மான‌ ஒன்ற‌ல்ல‌. இது மொத்த‌ அலைபேசி இணைப்புக‌ளில் த‌ன‌து ப‌ங்கை 76 விழுக்காட்டிலிருந்து(2007) 85 விழுக்காடாக‌(2008 இறுதி வ‌ரை) அதிக‌ப்ப‌டுத்தி உள்ள‌து. (அறிக்கை ப‌க்க‌ எண்.9)

இந்த‌ அறிக்கையில் உள்ள‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ளை வைத்து நமக்கு அறிய கிடைப்பது என்ன்வெனில் இந்தியாவில் சாதாரண பொதுமக்கள் வெறும் தொட‌ர்புக்கு ம‌ட்டும் ஒரு சாதார‌ண‌ அலைபேசி இணைப்பை பெறுவ‌த‌ற்கு எவ்வ‌ள‌வு ஆகும் என்ப‌தே.

ஒரு அலைபேசியும், வாழ்நாள் இறுதி வ‌ரை அழைப்புக‌ள் உள்ள‌ இணைப்பிற்க்கு ரூபாய் 1,000ற்க்கும் கீழே தான் தேவை, இதுவும் மாத‌ த‌வ‌ணைக‌ளில் செலுத்தினால் போதும். மேலும் இணைப்பை தொட‌ருவ‌த‌ற்காக‌ மாத‌ம் ரூபாய்.10 ம‌ட்டுமே போதும்( Vodafone அறிக்கையின் ப‌டி சாதார‌ண‌ ம‌க்க‌ளின் ச‌ராச‌ரி மாத‌ வ‌ருமான‌ம் ரூபாய். 250) இதில் வ‌ருகின்ற‌ அழைப்புக‌ள் ம‌ட்டுமே போதும் என்றால் மாத‌க‌ட்ட‌ண‌மே தேவை இல்லை. இது போன்ற‌ இணைப்புக‌ளை ஒரு குடும்ப‌த்தில் உள்ள‌ ஒருவ‌ரோ, இருவ‌ரோ வைத்து கொள்ள‌ முடியும், இத‌னால் இவ‌ர்க‌ளுக்கு நாளுக்கு ஆகும் செல‌வு ரூபாய்.20. இந்த‌ அறிக்கையை நாம் கிராம‌புற‌ , ந‌க‌ர்புற‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ இணைப்புக‌ள் எவ்வ‌ள‌வு, ஒவ்வொரு அலைவ‌ரிசைக்கும் எவ்வ‌ளவு இணைப்புகள் உள்ள‌து என‌ பிரித்தும் பார்க்க‌லாம்.

உதார‌ண‌த்திற்க்கு ந‌க‌ர்புற‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ அலைபேசி இணைப்புக‌ளின் அட‌ர்த்தியுட‌ன் ஒப்பிட்டால் கிராம‌ப் ப‌குதியிலுள்ள‌ அலைபேசி இணைப்புக‌ளின் அட‌ர்த்தி 6 ம‌ட‌ங்கு குறைவு.மொத்த‌ அலைபேசி இணைப்புக‌ளில் ந‌க‌ர்புற‌த்தின் ப‌ங்க‌ளிப்பு தோராய‌மாக‌ 80 விழுக்காடு. மேலும் ஒரு நாளைக்கு ரூபாய்.20ற்கும் குறைவாக‌வே பெரும்பான்மையான‌ அலைபேசி உரிமையாள‌ர்க‌ள் செல‌வ‌ழிக்கின்ற‌ன‌ர்.

இந்த‌ அறிக்கையிலிருந்து நாம் தெரிந்து கொள்வ‌து இந்தியாவில் அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை கொண்டு இங்கு வாழும் ம‌க்க‌ளின் வ‌ள‌ர்ச்சியை தீர்மானிப்ப‌து த‌வ‌றாக‌வே முடியும். இதை இவ்வாறு கூற‌லாம் அதாவ‌து ந‌ம‌து ச‌மூக‌த்தில் இந்த‌ அலைபேசி நிறுவ‌ன‌ங்க‌ள் வெற்றிக‌ர‌மாக‌ எல்லா நிலையில் உள்ள‌ ம‌க்க‌ளிட‌மும் சென்று விட்ட‌ன‌. அலைபேசி க‌ட்ட‌ண‌ விகித‌ம் 10 விழுக்காடு அதிக‌ரித்தால் 23 விழுக்காடு வாடிக்கையாள‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை புற‌க்க‌ணித்து விடுவார்க‌ள்( Vodafone அறிக்கை ப‌க்க‌ எண்.14). தேவையின் அடிப்ப‌டையில் ஏழ்மை நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை கொண்டிருப்பினும் ஒரு சிறிய‌ க‌ட்ட‌ண‌ மாற்ற‌ம் கூட‌ அவ‌ர்க‌ளின் அலைபேசி ப‌ய‌ன்பாட்டை வெகுவாக‌ குறைத்து விடும்.

இறுதியாக‌ நாம் இவ்வாறு கூற‌லாம். த‌ன்னுடைய‌  பிற‌ அத்தியாவ‌சிய‌ தேவைக‌ளில் ஒன்றை த‌விர்ப்ப‌த‌ன் மூல‌ம் ஏழ்மை நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை பெற‌ முடியும், ஆனால் அத‌ன் க‌ட்ட‌ண‌ விகித‌த்தில் ஏற்ப‌டும் சிறு அதிக‌ரிப்பு கூட‌ அவ‌ர்க‌ளை அத‌ன் ப‌ய‌ன்பாட்டிலிருந்து முற்றிலுமாக‌ வெளியேற்றி விடும்.

வருடம் அலைபேசி (கோடி பேர்) தொலைபேசி (கோடி பேர்)
2003 1.3 4.148
2004 3.360 4.258
2005 5.221 4.591
2006 9.000 4.975
2007 16.253 4.039
2008 26.109 3.942
2009 39.176 3.796
2010 58.432 3.696

அலைபேசி/தொலைபேசி பயனாளர்கள் 2003 முதல்

ஏன் அலைபேசி இணைப்பு இந்தியாவில் மிக‌ வ‌றுமையில் வாடும் ம‌க்க‌ளுக்கு மிக அத்தியாவ‌ச‌மான‌ ஒன்றாக‌ உள்ள‌து ?

மேலே கூறிய‌வ‌ற்றிலிருந்து ந‌ம‌க்கு தெளிவாக‌ தெரிவ‌து என்ன‌வென்றால் அலைபேசி இணைப்பு வ‌ள‌ர்ச்சிக்கான‌ ஒரு காரணி இல்லை, த‌ன‌து வேலைக்காக‌வும் ம‌ற்ற‌ தேவைக‌ளுக்காகவும் தேவைப்ப‌டும் ஒரு அடிப்ப‌டை பொருள். இங்கு நாம் முக்கிய‌மாக‌ பார்க்க‌வேண்டிய‌து என்ன‌வெனில் இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாள‌ர்க‌ளே மிகப் பெரும்பான்மையாக‌ (93%) உள்ள‌ன‌ர். இதிலும் பெரும்பான்மையின‌ர் த‌ங்க‌ள‌து வ‌ருமான‌த்தை எவ்வாறு ச‌ரியாக‌ செல‌வு செய்வ‌து என்ப‌தில் மிக‌வும் க‌வ‌ன‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள். இதில் ஒரு ப‌குதியின‌ர் அலைபேசி இணைப்புக‌ளுக்கான‌ க‌ட்ட‌ண‌ம் மிக‌வும் குறைவாக‌ ஆன‌ பொழுது அதை உப‌யோக‌ப‌டுத்த‌ தொட‌ங்கிவிட்ட‌ன‌ர் அதுவும் கூட‌ த‌னது வேலை சார்ந்த‌ தொட‌ர்புக‌ளுக்கு ம‌ட்டும். இவை பெரும்பான்மையான‌ ஆய்வாளர்க‌ளால் உறுதி செய்ய‌ப்ப‌ட்டும் உள்ள‌து. குர்கானில் உள்ள‌ அமைப்பு சாரா தொழிலாள‌ர்க‌ளின் நிலை ப‌ற்றி‌ ச‌மீப‌த்தில் வெளிவ‌ந்த ஆய்வுக் குறிப்பிலும் இது குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. (http://sanhati.com/excerpted/2320/)

அமைப்புசாரா தொழிலாள‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து நிர‌ந்த‌ர‌மில்லா வேலைத் த‌ன்மையின் காரண‌மாக‌வும், தனக்கு கிடைத்துள்ள‌ வேலையை தக்கவைத்து கொள்வதற்கும் அலைபேசியை உப‌யோகிக்க‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இதை ஏதோ அவ‌ர்க‌ளுக்கு அலைபேசியில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்பு கொண்டு பேச‌ நிறைய‌ நேர‌ம் உள்ள‌தைப் போல‌ எண்ணிக் கொண்டு இதை வ‌ள‌ர்ச்சியின் ஒரு கார‌ணியாக‌ க‌ருதுவ‌து த‌வ‌று. வ‌ள‌ர்ந்து வ‌ரும் அமைப்புசாரா தொழிற் ச‌ந்தையில் த‌ன‌து வேலையை த‌க்க‌வைத்துக் கொள்ள‌வும், புதிய‌தாக‌ வேலைக்கு சேர‌வும் அலைபேசி செல‌வுக‌ள் த‌விர்க்க‌முடியாத‌ ஒன்றாக‌ மாறிவிட்ட‌ன‌.

இத‌ற்கு நிக‌ரான‌ ஒரு உதார‌ண‌த்தை நாம் வ‌ட‌ அமெரிக்காவில் பார்க்க‌ முடியும், தானிருக்கும் இட‌த்தில் இருந்து வேலைக்கு செல்லும் இட‌த்திற்க்கு அர‌சு போக்குவ‌ர‌த்துக‌ளோ, த‌னியார் போக்குவ‌ர‌த்துக‌ளோ இல்லாத‌ ப‌ட்ச‌த்தில் அங்கு ம‌கிழுந்து வாங்குவ‌தற்கு ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ள் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். இங்கே ம‌கிழுந்து என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌ பொருள் அல்ல‌, அத்தியாவ‌சிய‌மான‌ ஒன்றாக‌ உள்ள‌து. இதை போல‌ தான் இந்தியாவில் அலைபேசி இணைப்பு என்ப‌து சித‌ம்ப‌ர‌ம் கூறுவ‌து போல‌ ஆட‌ம்ப‌ரத்திற்காக‌ அல்ல‌, அத்தியாவ‌சிய‌த்திற்காக‌வே. அமைப்புசாரா தொழில் உள்ள‌ நிர‌ந்த‌ர‌மின்மை கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை பெறுகின்ற‌ன‌ர். இது ம‌ட்டும‌ல்லாம‌ல் ம‌ருத்துவ‌ம், க‌ல்வி போன்ற‌ அடிப்ப‌டை தேவைக‌ள் த‌னியார் ம‌ய‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்டுவிட்ட‌தால் அவ‌ர்க‌ளின் வ‌ருமான‌த்தில் பெரும்பான‌மையை இவை பிடுங்கி விடுகின்ற‌ன‌‌. இவை எல்லாம் இந்திய‌ பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சி திட்ட‌ங்க‌ளால் சமீபத்தில் ந‌டைபெற‌ ஆர‌ம்பித்துள்ள‌வைகள் மட்டுமே. (இது தொடர்ந்தால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோச‌மாக இருக்கும்)

உதார‌ண‌த்திற்கு ந‌க‌ர‌ப்ப‌குதியில் வாழுகின்ற‌ ஐந்து பேர் கொண்ட‌ ஒரு குடும்ப‌த்தை எடுத்துக்கொள்வோம் (ஒரு ஆண், ஒரு பெண், இர‌ண்டு குழ‌ந்தைக‌ள், ஒரு முதிய‌வ‌ர்). இங்கே அந்த‌ குடும்ப‌த்தின் மாத‌ வ‌ருமான‌ம் ரூபாய்.2000. அவ‌ர்க‌ள் குடும்ப‌த்தில் இர‌ண்டு அலைப்பேசி இணைப்புக‌ள்(ஒன்று கண‌வ‌ரிட‌ம், இன்னொன்று ம‌னைவியிட‌ம்). க‌ண‌வ‌ன் அன்றைய தேதியில் காலியாக‌‌ உள்ள‌ வேலைக‌ளைப் ப‌ற்றி தெரிந்துகொள்வ‌த‌ற்கும், ம‌னைவி த‌ன‌க்கு கிடைக்கும் வேலைக‌ள் (ஏதாவ‌தோரு வீட்டில் துணி துவைப்ப‌து, வீட்டை தூய்மைப்ப‌டுத்துவ‌து) ப‌ற்றி தெரிந்து கொள்வ‌த‌ற்கும் உப‌யோக‌ப்ப‌டுகின்ற‌து. இத‌னால் இவ‌ர்க‌ளுக்கு மாத‌ம் ரூபாய் 200 செலவாகின்ற‌து, இதை அவ‌ர்க‌ள் ஏதாவ‌தொரு வேளை உண‌வை குறைப்ப‌த‌ன் மூல‌ம் ச‌ம‌ப்ப‌டுத்திக் கொள்கின்ற‌ன‌ர்.

இந்த‌ ஆய்வுக்க‌ட்டுரை மூல‌ம் நாம் அறிய‌ வ‌ருவ‌து இந்தியாவில் அலைபேசி என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌ பொருள் அல்ல, ஒரு நாளைக்கு ரூபாய்.20 அல்லது அதற்கு கீழ் வருமானம் கொண்ட‌ ஏழை கூட இங்கே அலைபேசி இணைப்பை பெற முடிகின்ற அளவிற்க்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றது. அமைப்பு சாரா தொழில் வேலைவாய்ப்பில் உள்ள‌ நிர‌ந்த‌ர‌மின்மை கார‌ண‌மாக‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ஒரு அத்தியாவ‌ச‌ பொருள் அலைபேசி இணைப்பு.

தொலைபேசி (land lines) இணைப்புக‌ள் ந‌டுத்த‌ர‌ வ‌குப்பை காட்டும் ஒரு கார‌ணி.

த‌க‌வ‌ல் தொட‌ர்புக‌ளின் மூல‌மாக‌ ந‌டுத்த‌ர‌ வகுப்பை ஒருவ‌ர் க‌ண‌க்கிட‌iவேண்டுமானால் தொலைபேசி இணைப்பு ஒரு ச‌ரியான‌ கார‌ணியாக‌ இருக்கும். ஒரே வீட்டிற்க்கு இர‌ண்டு தொலைபேசி இணைப்புக‌ள் இருப்ப‌து அரிதான‌ ஒன்று. இத‌னால் ஒருவ‌ரே அல்ல‌து ஒரு குடும்ப‌மே ப‌ல‌ இணைப்புக‌ள் கொண்டிருப்ப‌து இங்கே அரிது. ந‌ம‌க்கு என்ன‌ எண்ணிக்கை கிடைக்கின்றது?

நாம் தொலைபேசி இணைப்புக‌ள் ப‌க்க‌ம் க‌வ‌ன‌ம் செலுத்துபோது ந‌ம் கவனத்தில் படுவது. 50 விழுக்காடு இணைப்புக‌ள் அர‌சு நிறுவ‌ன‌ங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன‌‌. வெறும் 2 கோடி ம‌க்க‌ள் ம‌ட்டுமே தொலைபேசி இணைப்பை கொண்டுள்ள‌ன‌ர். ச‌ராச‌ரியாக‌ ஒரு குடும்ப‌த்திற்கு 5 பேர் வைத்து கொண்டால், 10 கோடி மக்க‌ள் தொலைபேசி இணைப்பு கொண்டுள்ள‌ன‌ர்.

இதே போல‌ மாத‌க் க‌ட்ட‌ண‌ம் செலுத்தும் அலைபேசி இணைப்புக‌ளை (Post paid) க‌ண‌க்கிட்டு பார்த்தால் மொத்த‌ இணைப்பில் 15 விழுக்காடு மட்டுமே த‌னி ந‌ப‌ர்க‌ளிட‌ம்(பொது ம‌க்க‌ளிட‌ம்) இருக்கும்.  இந்த‌ தோராய‌ க‌ணிப்பும் கூட‌ நாட்டில் உள்ள‌ ப‌ண‌க்கார, ந‌டுத்த‌ர‌ வ‌குப்பில் உள்ள‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கையும் ஒன்றாக‌ உள்ள‌து. ( 2006ல் சென் குப்தா அறிக்கையை பார்க்க‌வும்).

வ‌ளர்ச்சியின் ஒரு அள‌வுகோலாக‌ அலைபேசி இணைப்பை க‌ருதுவ‌தால் ஏற்ப‌டும் தொல்லைக‌ள்.
இந்த‌ நேர‌த்தில் நாம் வ‌ளர்ச்சியின் ஒரு அள‌வுகோலாக‌ அலைபேசி இணைப்பை க‌ருதுவ‌தால் ஏற்ப‌டும் தொல்லைக‌ளைப் ப‌ற்றியும் குறிப்பிட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் உள்ள‌து.

உதார‌ண‌த்திற்கு 2007ன் இறுதியில் பாகிசுதானில் 100பேருக்கு 50பேர் அலைபேசி இணைப்புக‌ளை கொண்டிருந்த‌ன‌ர். இந்தியாவில் அன்று இருந்த‌ அலைபேசி இணைப்புக‌ளின் எண்ணிக்கையுட‌ன் ஒப்பிட்டால் இது இரும‌ட‌ங்கு. ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் க‌ருத்துப‌டி பாகிசுதான் இந்தியாவை விட‌ வ‌ள‌ர்ந்து விட்ட‌து என்றும், இந்தியா இப்போது தான் வ‌ள‌ர்ந்து கொண்டு வ‌ருகின்ற‌து என்ற‌ முடிவிற்கு தான் வ‌ர‌வேண்டும், ஆப்ரிக்காவைச் சுற்றி உள்ள‌ நாடுகளில் மட்டும் 60 கோடி அலைபேசி இணைப்புக‌ள் உள்ள‌ன‌. ம‌னித வள வ‌ள‌ர்ச்சியில் 134 வ‌து இட‌த்தில் உள்ள‌ இந்தியாவையும், 141வ‌து இட‌த்தில் உள்ள‌ பாகிசுதானை அந்த‌ ம‌ட்டிய‌லில் க‌டைசியில் உள்ள‌ நாடுக‌ளுட‌ன் ஒப்பிடுவ‌து எப்ப‌டி ச‌ரியாகும்?

தில்லியில் உள்ள‌ அலைபேசி இணைப்புக‌ளின் எண்ணிக்கை தில்லியில் உள்ள‌ ம‌க்க‌ள் தொகையை விட‌ அதிக‌ம். ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் க‌ருத்துப‌டி தில்லியில் வ‌றுமை முற்றிலுமாக‌ ஒழிந்திருக்க‌ வேண்டும். அவ்வாறா உள்ள‌து தில்லி?
(இதில் ஒரு நிறுவ‌னமோ, தனி நபரோ ப‌ல‌ இணைப்புக‌ளை கொண்டிருப்ப‌தெல்லாம் எடுத்துக் கொள்ள‌ப்ப‌ட‌வில்லை. எங்க‌ளை பொருத்த‌வ‌ரையில் மிக‌ முக்கிய‌மாக‌ ப‌ட்ட‌ கார‌ணிக‌ளை ம‌ட்டுமே இங்கே ஆராய்ந்துள்ளோம்.)
_______________________________________________________
ந‌ன்றி… ச‌ங்க‌தி (sanhati) இணைய‌த‌ள‌ம். மூலப்பதிவு ‍ …. http://sanhati.com/excerpted/2388/
________________________________________________________

அப்ப‌டின்னா அதெல்லாத்தையும் க‌ண‌க்கில‌ எடுத்தா!!!!!.  மான‌! மிகு ப‌.சித‌ம்ப‌ர‌ம் 1984 தில்லி கலவரம் குறித்து தவறாக கூறியதை கண்டித்து அவரை ஒரு சீக்கிய பத்திரிகையாளர் செருப்பாலடித்து போல‌ இங்கு  பொதும‌க்க‌ள் சிதம்பரம் கூறியுள்ள‌‌ இந்த‌ பொய்யிற்கு அவ‌ரை செருப்பால் அடித்தால் அது தப்பா???

தமிழாக்கம்: ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.
___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

தஞ்சை பெரிய கோவில் – கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்டத் திருவிழா !!

40

வரும் செப்டம்பர் 25, 26 தேதிகளில் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாண்டு நிறைவு விழா தஞ்சையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், கலைஞர்கள், வாரிசுகள் அனைவருமாய் கூடி விரிவாக ஆலோசித்து முடிவெடுத்திருக்கின்றனர்.

இதன்படி தஞ்சை நகர் முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்களின் தெருவோர நிகழ்ச்சிகள், பெரிய கோவிலில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி, நூறு ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கம், பெரிய கோவிலில் பொது அரங்கம், மாலையில் திலகர் திடலில் கருணாநிதி தலைமையில் அஞ்சல் தலை, நாணயம் வெளியிடுதல், பெரிய கோவிலின் வரலாற்றை நினைவு கூரும் கண்காட்சி, இந்த விழாவுக்காக தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் எல்லாம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இனி செம்மொழி மாநாட்டுக்கு என்ன நடந்ததோ அத்தனையும் திரும்ப நடக்கும். ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு அமைச்சர் தலைமையில் நியமிக்கப்படும் குழு அடிக்கடி கலந்து பேசி நடத்தும். தமிழக அரசின் அனைத்து அதிகாரிகளும் இனி இரண்டு மாதங்களாய் பெரிய கோவில் விழாவுக்கான வேலையை கவனிப்பார்கள். ஊடகங்களும் இது குறித்து சிறப்பு மலர் வெளியிட்டு கருணாநிதி சோழனது புகழ் பாடும். தொலைக்காட்சிகளில் இசையும், காட்சியும் இதற்கென்றே தயாரிக்கப்பட்டு ஓடும்.

இந்தக் குத்தாட்டத்திற்கு எத்தனை கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை அரசு இன்னும் சொல்லவில்லை. இதிலிருந்து அவர்களது பட்ஜெட் இன்னும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. மக்களும் தமது வாழ்வியல் பிரச்சினைகளை ஒதுக்கி விட்டு இனி இரண்டு மாதங்களாக இந்த கிளாடியேடட்ர் ஷோவை இரசிப்பார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில், சோழ சாம்ராஜ்ஜியத்தின் வலிமையை நினைவுகூரும் வண்ணம் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருக்கிறது. அன்றைய நிலைமையில் இருந்த நிலவுடைமை சமூகத்தின் மிகவும் குறைவான உபரி உற்பத்தி இந்தக் கோவிலுக்காக பயன்பட்டிருக்கிறது. அதன் பொருள் மிகவும் வறிய நிலையில் பசியும் பட்டினியுமாகவே ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோவிலை கட்டியிருக்கிறார்கள். பாறையே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் இது போன்ற எண்ணற்ற கற்கோவில்கள் ஏராளமிருக்கின்றன. அவற்றையெல்லாம் நினைத்துப் பார்ததால் நமது கட்டிடக் கலையின் மகத்துவத்தை விட மக்கள் பட்ட துன்பங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

ராஜராஜ சோழன் காலத்து மக்கள் வாழ்க்கை நிலையிலிருந்து இன்றும் நமது மக்களின் நிலைமை பெரிதும் மாறவிடவில்லை. ஒரு ரூபாய் அரிசிக்கும், குடிசை வீட்டின் பத்து ரூபாய் மின்கட்டணத்திற்கும், வேலைக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பயணத்திற்கும்தான் நமது மக்கள் இன்றும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். எனில் இந்த ஆயிரம் வருட நிறைவின் பொருள் என்ன?

அன்று ராஜராஜ சோழன் தனது சாம்ராஜ்ஜியத்தின் வலிமையினை பறைசாற்றும் வண்ணம் இந்தக் கோவிலை கட்டினான். இன்று அதே கோவிலின் ஆயிரமாண்டு நிறைவை கருணாநிதி சோழன் தனது கட்சி, குடும்ப சாம்ராஜ்ஜியத்திற்காக கொண்டாடுகிறார். ஆக சோழர்களின் சர்வாதிகார ஆட்சி இன்னும் நீடிக்கிறது. அன்று பட்டினியுடன் கோவிலுக்கான கற்களைச் சுமந்த மக்கள் இன்று பசியுடன் அந்த கோவில் கொண்டாட்டத்தினை கண்டு களிக்கிறார்கள். ஆக அன்றைக்கு மேட்டுக்குடிக்கு மட்டும் இருந்த பொழுது போக்கு இன்று எல்லோருக்கும் இருக்கிறது என்பதுதான் இந்த ஆயிரமாண்டு இடைவெளியின் முன்னேற்றமா?

சரி, கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்ட திருவிழா எதுவோ, நினைத்தாலே கிலியாக இருக்கிறது!

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!

7

போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை..

போபால் – காலம் கடந்த அநீதி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே ,

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க அரசு. 23,000 இந்திய மக்களை படுகொலை செய்து , 5,00,000 க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் அந்தப் பயங்கரவாதியை ஒரே ஒரு நாள் கூட கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்கு கூட விரும்பாத மன்மோகன் சிங் அரசு, மக்களுக்கு நிவாரணம் தருவதாகவும், மீண்டும் நீதி விசாரணை கோரப் போவதாகவும் நம்மிடம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த நச்சுவாயுக் கசிவு எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல. அமெரிக்க நிறுவனம் தெரிந்தே செய்த படுகொலை. ஆபத்தான இந்த உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தள்ளி விட்டது குற்றம். மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சு வாயுவிலிருந்து பூச்சிக் கொல்லி தயாரிக்கும் ஆலையை குடியிருப்பு பகுதியில் அமைத்தது குற்றம்.

அதே ஆலையில் பல விபத்துக்கள் நடந்த பின்னரும் இலாபத்தை கூட்டுவதற்காக நச்சுவாயுக் கிடங்கின் பாதுகாப்புச் செலவுகளை குறைத்தது குற்றம்.செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்ற மருத்துவர்களிடம் கூட சயனைடு வாயுவின் பெயரைக் கூறாமல் ஏமாற்றி, பல்லாயிரம் மக்களைத் துடித்துச் சாக விட்டது குற்றம். பூச்சிக் கொல்லி த்யாரிப்பதாக கூறிக் கொண்டு, இரகசியமாக இரசாயன ஆயுதங்களைத் தயாரித்தது தான் மேற்கூறிய குற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையான கொலைக்குற்றம்.

தேடப்படும் குற்றவாளி ஆண்டர்சன்

குற்றவாளி யூனியன் கார்பைடு மட்டுமல்ல; ஆபத்தான இந்த ஆலைக்குத் தெரிந்தே உரிமம் வழங்கியவர் இந்திராகாந்தி. கைது செய்யப்பட்ட ஆண்டர்சனை விடுவித்து மன்னிப்பு கேட்டு, அரசு விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி. ஒரு இந்திய உயிரின் விலை 12,414 ரூபாய் என்று 1989 இல் கார்பைடு நிறுவனத்துடன் கட்டைப் பஞ்சாயத்து பேசி முடித்தது இராஜீவ் அரசாங்கம்.

இந்தக் குற்றத்தை சாலை விபத்து போன்ற சாதாரணக் குற்றமாக குறைத்தது உச்ச நீதி மன்றம். வழக்கை சீர்குலைத்து குற்றவாளி ஆண்டர்சனைத் தப்பவைக்க முயன்றது சி.பி.ஐ. காங்கிரசு அரசின் எல்லா சதிகளுக்கும் உடந்தையாய் இருந்தது, அதன் பின் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு. இந்த குற்றவாளிகள் அனைவரும் எதுவுமே தெரியாதவர்கள் போல் நாடகமாடுகிறார்கள்.

26 ஆண்டுகளாக காத்திருந்த போபால் மக்களுக்கு இன்று இழைக்கப்பட்டிருப்பது அன்றைய படுகொலையைக் காட்டிலும் கொடிய அநீதி. இந்த அநீதி இந்தியாவின் சட்டமாகவே மாறவிருக்கிறது. “இந்திய அரசு அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகள் வெடித்து நாளை இலட்சக் கணக்கான இந்தியர்கள் செத்தாலும், அதற்காக் அமெரிக்க முதலாளிகளிடம் நட்ட ஈடு கூட கேட்க மாட்டோம்” என்கிறது மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி மசோதா. தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் , அன்று வியட்னாம் மக்களைக் கொல்வதற்கு நாபாம் தீக்குண்டுகளை அமெரிக்காவுக்கு தயாரித்து கொடுத்த நிறுவனம்.

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு இந்தக் கொலைகார நிறுவனத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு. “பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்திய மக்களைக் கொல்வதும் மண்ணை விட்டு விரட்டுவதும் நம் தொழில்களை அழிப்பதும் உரிமைகளைப் பறிப்பதும் தான் நீதி: பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம்; அவர்கள் கொழுப்பது தான் நாட்டின் முன்னேற்றம்” என்ற இந்திய அரசின் கொள்கையை அம்பலமாக்கியிருக்கிறது போபால் படுகொலை.

காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கி, பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களை உருவாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களையும், மறுகாலனியாதிக்கத்தின் உண்மை முகத்தையும் உரித்துக் காட்டியிருக்கிறது போபால்.

நீதி வேண்டுமா?.
நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை!. இது போபால் படுகொலை நமக்கு கற்பிக்கும் பாடம்.
நீதி வேண்டுமா ?.. புரட்சி ஒன்று தான் பாதை ..

கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!

முற்றுகை

ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,

பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.

பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.

அனைவரும் வருக‌

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னனி

தொடர்பு கொள்ள:

ம.க.இ.க :  94446 48879
பு.ம.இ.மு :  94451 12675
பு.ஜ.தொ.மு :  94448 34519
பெ.வி.மு :  98849 50952
வினவு :  97100 82506

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பா.ம.க : விற்பனைக்குத் தயார் ! வாங்க ஆளில்லை !!

15

சமீபத்தில் மதுரை செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்  பா.ம.கவின் தற்போதைய நிலை குறித்து பேசியிருக்கிறார். அதில்,

“1967–ம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 43 ஆண்டுகளாகியும் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வந்தபோதும் தி.மு.க அல்லது அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் போட்டியிட்டது. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.”

“1991 தேர்தலிலும், 1996 தேர்தலிலும் சமூக நீதிக் கூட்டணியை பா.ம.க அமைத்தது. அதில் 91ஆம் ஆண்டில் பா.ம.க ஒரு இடத்திலும், 96ஆம் ஆண்டில் நான்கு இடங்களிலும் வெற்றிபெற்றது. வரும் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களில் வெல்லும் நிலையில் உள்ளது. மீண்டும் அது போன்ற சமூக நீதி கூட்டணி உருவாகவும் வாய்ப்பு உள்ளது.”

“முன்பு அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க தானாக வெளியேறியது. தி.மு.க கூட்டணியில் இருந்து பா.ம.கவை தி.மு.க வெளியேற்றியது. குரு பேசிய பேச்சின் விளைவாக இது நடந்தது. பின்னர் தி.மு.க பொதுக்குழு கூடி பா.ம.கவை மீண்டும் சேர்த்துக் கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. நாங்களும் பேசினோம். அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. கருணாநிதியின் சட்ட மேலவை கனவு நிறைவேறுவதற்கு நாங்கள் வாக்களித்ததே காரணம். பதிலுக்கு ராஜ்ஜிய சபை உறுப்பினர் பதவியை அவர்கள் எங்களுக்கு கொடுக்கவில்லை.”

“ தே.மு.தி.க இடம்பெறும் அரசியல் கூட்டணியில் பா.ம.க இடம்பெறுமா என்றும் தி.மு.க பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முன்பு எதிரணியிலிருந்து அழைத்தால் பேசுவீர்களா என்றும் கேட்கிறார்கள். அதுபற்றி இப்போது நான் ஒன்றும் கூறமுடியாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் பா.ம.க எந்தக் கூட்டணியிலும் இல்லை என்பதுதான் உண்மை” என்று கூறியிருக்கிறார் ராமதாஸ்.

காங்கிரசு கட்சி தமிழகத்தில் தனியாக தேர்தலில் நிற்க முடியவில்லை என்றால் அந்தக் கவலை ராமதாஸூக்கு எதற்கு? உண்மையில் பா.ம.கவை இரண்டு கழகங்களும் கழட்டி விட்டால் என்ன செய்வது? அதற்குத்தான் முன்னெச்செரிக்கையாக இப்படி ஒரு பனிக்கட்டியை காங்கிரசு தலையில் வைக்கிறார். ஒரு வேளை அப்படி பலித்து விட்டால் தேர்தல் செலவுக்கு கவலையில்லை. கொஞ்சம் வெற்றி பெற்று தொங்குநிலை சட்டமன்றம் உருவாகும் பட்சத்தில் நல்ல பேரம் பேசலாம். பிறகு பாராளுமன்ற மேலவை தேர்தல் வந்தால் அன்புமணியை அமைச்சராக்கலாம்.

காங்கிரசு, பா.ஜ.க இரண்டு ஆட்சிகளிலும் பங்குபெறுவதற்கு ராமதாஸ் கூச்சப்படுவதில்லை. அடுத்து காங்கிரசு தனியாக போட்டியிடவில்லை என்று கவலைப்படும் ராமதாஸ், பா.ம.கவும் இரண்டு கழகங்களோடு மாறி மாறி சேர்ந்து போட்டியிட்டதைப் பற்றியல்லவா முதலில் கவலைப்படவேண்டும்? தனது இலையில் பாயாசம் விழாது என்ற நிலையில் பக்கத்து இலைக்கு மட்டும் எதற்கு பாயாசம் என்பதே அவரது கவலை.

திராவிடக்கட்சிகளின் ஆட்சி என்று சலித்துக் கொள்ளும் ராமதாஸ் தனது கட்சியை என்னவென்று மதிப்பிடுகிறார்? பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மேல்தட்டு வர்க்கத்தை பிரதிபலித்த திராவிட கட்சிகளின் தொடர்ச்சியில்தான் பா.ம.கவும் வருகிறது. ‘சமூக நீதிக்கட்சி’ என்ற பட்டத்தைக்கூட அவர் இழப்பதற்கு தயார் என்பதே இந்த காங்கிரசு பாசத்தில் வெளிப்படுகிறது. இரண்டு கழகங்களும், காங்கிரசும் கைவிட்டுவிட்டால் அவரது இறுதி அடைக்கலம் சமூக நீதிக் கூட்டணியாம். தமிழகத்தில் இத்தகைய கொள்கை பேசும் லெட்டர் பேடுக் கட்சிகளை வைத்து கூட்டணி அமைக்க பா.ம.க முயன்றாலும் அந்த லெட்டர்பேடுக் கட்சிகள் கூட இப்போது பா.ம.கவுடன் வருவது சிரமம். பா.ம.கவுடன் இணைவதால் கிடைக்கும் ஆதாயத்தை விட தி.மு.கவால் வரும் ஆதாயம் அதிகம் எனும் போது அவைகள் ஏன் ராமதாஸூடன் சேர்ந்து தற்கொலை செய்யவேண்டும்?

இப்போது வன்னியர்கள் கூட ராமதாஸை நம்புவதற்கு தயாராக இல்லை. என்னதான் இட ஒதுக்கீடு,போராட்டம் என்று அறிவித்தாலும் அவரது பிழைப்பு வாதத்தை அவர்கள் நன்றாகவே அறிந்துள்ளார்கள். அதனால்தான் வன்னியர்களும் மற்ற சாதி மக்களைப் போல பல அரசியல் கட்சிகளிலும் பிரிந்துதான் இருக்கிறார்கள். 80களில் இருந்த சாதி ஆதரவில் கால்பங்கு கூட இப்போது பா.ம.கவிற்கு இல்லை.

இத்தனைக்கு மேலும் ராமதாஸ் இரண்டு கழகங்களோடு சேர்வதையே விரும்புகிறார். அதில் அவரது முதல் தெரிவு தி.மு.கதான். சட்டமேலவைக்கு ஆதரவு அளித்ததற்கு பதிலாக ராஜ்ஜிய சபா உறுப்பினர் எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை என்பதால் தி.மு.கவை விரோதிக்க தயாரில்லை. தி.மு.கவின் பணபலம், அதிகார பலத்தினை அ.தி.மு.கவால் மட்டுமல்ல, தன்னாலும் எதிர்கொள்வது சிரமம் என்பது ராமதாஸூக்கு  நன்கு தெரியும். எனவே தி.மு.கவே வலிய வெளியே தள்ளினால்தான் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க சேரும்.அ துவும் இப்போது வாக்கு  வங்கி இல்லாத நிலையில் அம்மா போடும் கண்டிஷன்களை நிறைவேற்ற வேண்டும் என்ற அபயாமும் இருக்கிறது.

அதனால்தான் முன்னெச்சரிக்கையாக அரசயிலில் நண்பனும் இல்லை, விரோதியும் இல்லை என்பதை பெருமையாகவும், தனது சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்தியும் அவரால் சொல்ல முடிகிறது. எனினும் இன்றைய ஒட்டுக் கட்சிகளின் சந்தையில் பா.ம.க என்ற தேய்ந்து போன பொருள், நல்ல விலைக்கு போகும் வாய்ப்பு இல்லை. வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலையில் ராமதாஸின் சந்தர்ப்பவாதம் இன்னும் பச்சையாக பரிணமிக்கும். இதற்கு மேல் பரிணமிக்க என்ன இருக்கிறது என்கிறீர்களா? சரி, அப்படியென்றால் அதான் இது!

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு !

62

விடுதலை வேட்கை பற்றியெரியும் காஷ்மீரில் மக்கள் போராட்டத்தைக் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை மீறித் தெருவில் நடமாடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில் கூடிய உயர்மட்டக் குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்திரவு வந்துள்ளது. மேலும் இரண்டாயிரம் துணை இராணுவப் படையினர் காஷ்மீருக்கு அனுப்பப்பட விருக்கிறார்கள். காஷ்மீரின் ஒவ்வொரு வீதியிலும் இந்த உத்தரவை ஒலிப் பெருக்கியில் கூறி மக்களை மிரட்டி வருகிறது இந்திய இராணுவம். ஆனால், “இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கம் இராணுவத்தின் மிரட்டலையும் விஞ்சி, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் எதிரொலிக்கிறது.

மூன்று மாதங்களில் நூறுக்கும் மேற்பட்டவர்களைத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலிகொடுத்தும் அம்மக்களின் போராட்டம் ஓயவில்லை. கடந்த வாரத்தில் மட்டும் 27 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர், நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ சதி, பிரிவினைவாதிகள் சதி எனப் பத்திரிக்கைகள் காஷ்மீர் மக்களின் இந்தப் போராட்டத்தைக் கொச்சைபடுத்தி எழுதி வருகின்றன. “நம்காலத்து ஜெனரல் டையர்” மன்மோகனோ ஊரடங்கை மீறுபவர்கள் அப்பாவிகள் அல்ல தீவிரவாதிகள், அவர்களைச் சுட்டுக் கொல்வதில் தப்பில்லை என கொலை வெறியுடன் உத்தரவிடுகிறார். கல்லூரி மாணவர்கள், பள்ளிச் சிறுவர்கள், குடும்பத் தலைவிகள், என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தங்களது சுதந்திரத்திற்காகப் போராடி வரும்போது, இதனை தீவிரவாதிகள் சதி என்ற ஒரே வார்த்தையில் ஒதுக்கித் தள்ளிவிடத் துடிக்குது இந்திய அரசு.

இந்திய இராணுவத்தின் பெரும் பகுதியை காஷ்மீரில் நிறுத்தி, கடந்த 30 வருடங்களாக துப்பாக்கி முனையில் ஆட்சி செய்து வருகிறது இந்தியா. துப்பாக்கியின் நிழலில் வாழும் கொடுமையைத் தாங்க முடியாத காஷ்மீர் மக்கள் தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர். தங்களது இளைஞர்கள் தீவிரவாதி என முத்திரை குத்திக் கொல்லப்படுவதையும், தங்கள் வீட்டுப் பெண்கள் இராணுவத்தால் சூறையாடப்படுவதையும் இனியும் காசுமீரிகளால் சகித்துக்கொள்ள இயலாது. அவர்கள் களத்தில் இறங்கி விட்டனர். ஆதிக்க வெறியாட்டம் போடும் இந்திய இராணுவத்தையும், அரசையும் காஷ்மீரிலிருது வெளியேற்றாமல் அவர்கள் ஓயப்போவதில்லை.

ஆனால் இந்திய அரசின் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது. இந்திய அரசுக்கு, தனிநாடு கேட்கும் போராளி இயக்கத்தை எப்படிச் சிதைக்க வேண்டும் என்பது தெரியும். அப்பாவிகளை பிடித்து தீவிரவாதி என போலி மோதலில் சுட்டுக் கொல்லத் தெரியும், ஆனால் அவர்களுக்குத் தெரியாதது, விடுதலை உணர்வு பெற்றுப் போராடும் மக்களின் போராட்டத்தை எப்படி அடக்குவது என்பதுதான். தீயைப் பொட்டலம் கட்ட யாருக்குத்தான் தெரியும்.

அதனால் தான் இவ்வாறு உத்தரவுகளைப் பிறப்பித்து மக்களை மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த வெத்துச் சவடாலுக்கும், மிரட்டலுக்கும் மக்கள் அஞ்சப் போவது இல்லை. இதோ ஆயிரக்கணக்காண காஷ்மீரத்து ஆண்களும் பெண்களும் தெருவிலிறங்கி இந்திய இராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். அவன் துப்பாக்கியால் சுடுவான் எனத் தெரிந்தும் சிப்பாய்கள் மீது கல்லெறிகிறார்கள். ஊரடங்கு உத்தரவைக் காலில் போட்டு மிதித்து ஊர்வலமாகச் சென்று முழங்குகிறார்கள். 30 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிரான அவர்களது விடுதலை வேட்கையைத் தோட்டாக்களாலும், பீரங்கிக் குண்டுகளாலும் தடுக்க இயலாது. இந்திய அரசையும் இராணுவத்தையும் அவர்கள் நிச்சயம் முறியடிப்பார்கள், சுய நிர்ணயத்துக்காண அவர்களது போராட்டம் நிச்சயம் வெல்லும்.

_________________________________
— பாலன். (வாசகர் படைப்பு)
_________________________________

பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht): ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்!

இலக்கிய அறிமுகம் – 4 பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht)

நவீன ஐரோப்பிய நாடக உலகில் ஹென்றிக் இப்ஸன், ஆகஸ்ற் ஸ்ற்றிட்போர்க் என்போருக்கு அடுத்தபடியாக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பிரெக்ட். முற்போக்கான சிந்தனையுடையவரான பிரெக்ட்டின் உலக நோக்கு 1920களின் நடுப்பகுதியில் மார்க்ஸியத்தின் வழிப்படலாயிற்று. அக்காலப்பகுதியில் வெளியான சாளி சாப்ளினின் “கோல்ட் ரஷ்” ஸெர்கெய் ஐஸென்ஸ்ற்றைனின் “போடெம்கின் போர்க்கப்பல்” எனும் திரைப்படங்கள் நாடகம் பற்றியும் சமூகம் பற்றியும் பிரெக்ட்டின் பார்வை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்று கூறப்படுகிறது.

பிரெக்ட்டின் நாடகங்கள் எந்த அளவுக்கு மக்களை கவர்ந்தனவோ அந்த அளவுக்கு அவை ஜெர்மன் ஃபாசிசவாதிகளான நாஜிகளின் வெறுப்பை சம்பாதித்தன. எனவே ஃபாசிசம் அதிகாரத்திற்கு வந்த பின்பு பிரெக்ட்டால் ஜெர்மனியில் வாழ முடியவில்லை. ஐரோப்பியாவினுள் புலம் பெயர்ந்து சுவீடனில் வாழ்ந்த பிரெக்ட் அதன் இறுதியில் ஜெர்மனி வட ஐரோப்பாவை கைப்பற்றிய கையோடு அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார்.

ஐம்பத்து மூன்று நாடகத்தை எழுதிய பிரெக்ட்டின் மிகச்சிறந்த நாடகங்கள் உலகப்போர் காலத்திலேயே எழுதப்பட்டன. கலிலியோவின் வாழ்க்கை, தைரியத்தாய் (Mother Courage),  ஷெச்சுவானின் நல்ல பெண்மணி, காக்கேசிய சுண்ண வட்டம், என்பன இன்றும் பேசப்படுவன.

உலகப்போரின் முடிவையொட்டி தொடங்கிய கெடுபிடிப் போரின் (cold War) போது, அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடும் அரசாங்க நடவடிக்கைகள் முனைப்பு பெற்றன. பிரெக்ட் ஒதுக்கப்பட வேண்டியோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டார். அமெரிக்க மக்களனைவரின் அமெரிக்கருக்குத் தகாத செயற்பாடுகள் குழு (Un-American Activities Committee) அவரை விசாரித்த்து. முதலில் தனது அரசியல் பற்றி எதுவுமே சொல்லமாட்டென் என்று அறிவித்த பிரெக்ட், அமெரிக்காவில் தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பாமல் தான் கம்யூனிஸ்ட கட்சி உறுப்பினரல்ல என்று சாட்சியமளித்து, விடுவிக்கப்பட்டு, 1947 ல் ஐரோப்பாவிற்கு சென்று சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்தார்.

மேற்கு வல்லரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த மேற்கு ஜெர்மனியில், பழைய ஃபாசிசவாதிகள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டதையிட்டு வெறுப்படைந்த பிரெக்ட் பவேரியாவில் தன் ஊருக்கு திரும்பவில்லை. சோஷலிச கிழக்கு ஜெர்மனி அவருக்கு அழைப்பு விடுத்த்தையொட்டி 1949 முதல் இறக்கும் வரை ஜெர்மன் ஜனநாயக குடியரசின் குடிமகனாகவே வாழ்ந்தார். அவரது இறுதி ஆண்டுகளில் அடர் நாடகங்கள் எழுதாத போதும், நாடக இயக்கத்தை முன்னெடுப்பதிலும், புதிய தலைமுறையொன்றை உருவாக்குவதிலும் தனது நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டார். கற்பித்தலுக்கான நாடகங்கள் என்ற வகையில் மார்க்ஸிய சிந்தனையை முன்னெடுக்கும் குறு நாடகங்களையும் அவர் தயாரித்தார்.

பிரெக்ட் பற்றிய அவதூறுகள் சிலரால் இன்னமும் மேற்கில் பரப்பப்பட்டாலும், நவீன நாடகத்துறையில் அவருக்குரிய இடத்தை யாராலும் மறுக்க இயலாதுள்ளது. இன்றைய மக்கள் நாடக அரங்குகட்க்கும், பல்வேறு வெகுஜன புரட்சிகர அரங்குகட்க்கும் பிரெக்ட் ஒரு முன்னோடி என்று உறுதியுடன் கூறலாம். வழமையான நாடகத்துறையிலிருந்து அவர் ஏற்படுத்திய விலகல் முக்கியமானது. வழமையான நாடகங்கள் மேடை நிகழ்வுடன் அவையோர் ஒன்றிப் போவதையே நோக்கமாக்க் கொண்டிருந்த சூழலில், அவையோரை மேடை நிகழ்வினின்று தொலைவுபடுத்தி விலகி நிற்கச் செய்வதை பிரெக்ட்டின் “காவிய அரங்கு” முறை முதன்மைப்படுத்தியது. நாடகத்தின் நடுவே பாத்திரங்கள் அவையோரை விழித்து பேசுதல், பிரகாசமான மேடை ஒளி அமைப்பு, நாடகப் போக்கை இடைமறிக்கும் முறையில் புகுத்தப்படும் பாடல்கள் என்பன அந்த நோக்கஞ் சார்ந்த மேடை உத்திகள். விளக்கங்கூறும் விதமான சுலோக அட்டைகளைக் கூட பிரெக்ட் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. பிரெக்ட் தனது நாடகச் சுவடிகளை தொடர்ந்து திருத்தங்கட்கு உட்படுத்தி வந்தார் என்பது நாடகம் பற்றிய அவரது அணுகுமுறைக்குரிய பண்பாகும்.

நன்மை வெல்லும் என்கிற விதமான நாடக முடிவுகளை பிரெக்ட்டிடம் காண்பது அரிது. தீமையும் அநீதியும் தான் வெல்லுகின்றன என்பதை காட்டுவதன் மூலம், நல்லதும் நீதியும் வேண்டுமாயின் உலகின் ஏற்கப்பட்ட நியதிகளை மாற்றவும் மறுக்கவும் வேண்டும் என்பதை பிரெக்ட் நேரடியாகவும் மறைமுகமாகவும் உணர்த்துவார்.

50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு குறிப்புகளை எழுதிய பிரெக்ட் அமெரிக்காவில் வாழ்ந்த ஏழாண்டுகளில் ஹாலிவுட் திரைப்படத் துறையால் முற்றாக ஓரங்கட்டப்பட்டார் என்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும். கலைஞன் அரசியலை விட்டு விலகி நின்றாலும், அரசியல் கலைஞனை விட்டு வைப்பதில்லை என்பதற்கு பிரெக்ட்டின் அமெரிக்க அனுபவம் ஒரு பயனுள்ள உதாரணம்.

பிரெக்ட் நாடகப்பிரதிகளை எழுதி, நாடகங்களை தயாரித்து Berliner Ensemble என்ற நாடகக் கம்பனியை அவரது இரண்டாவது மனைவியும் புகழ்பெற்ற நடிகையுமான ஹெலெனெ வைகெல் அவர்களுடன் சேர்ந்து நடத்தியவராவர். அதை விட நாடகம் பற்றிய கொள்கையை விருத்தி செய்ததிலும் அவருடைய பங்கு முக்கியமானது. நாடகவியல் பற்றி அவர் ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார்.

பிரெக்ட்டின் நன்கறியப்பட்ட இன்னெரு முகம் கவிதை சார்ந்தது. அவருடைய நாடகங்களில் வரும் பாடலகள் பலவும் கவித்துவம் மிக்கவை. அவற்றுக்கும் அப்பால் அவர் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் எழுதியுள்ளார். இட்துசாரி இலக்கியப் பரப்பில் பிரெக்ட்டின் கவிதைக்கட்கு முக்கியமானதொரு இடமுண்டு. கிழக்கு ஜெர்மன் அரசாங்கம் மக்கள் கிளர்ச்சி ஒன்றை தவறாக கையாண்ட போது, பிரெக்ட் அதை விமர்சிக்க தவறவில்லை. அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கவிதையைக் வைத்து பிரெக்ட்டுக்கும் ஸ்டாலினுக்கும் கடும் முரண்பாடு கற்பிக்கும் முயற்சிகள் இன்னமும் உள்ளன. பிரெக்ட் இறுதி வரை ஸ்டாலினினதும், சோவியத் ஒன்றியத்தினதும் நண்பனாகவே இருந்தார்.

கலை கலைக்காகவே என்ற கோஷத்தை நிராகரித்துக் கலைப் பண்பு குன்றாமல் அரசியல் தன்மை மிக்க ஆக்கங்களை உலகுக்கு வழங்கியவர் பிரெக்ட். சிங்கள நாடக இயக்கத்தின் எழுச்சி காலமான 1950 களின் பிற்கூற்றிற்கும், 1970 கட்குமிடையில், காக்கேசிய சுண்ண வட்டம், ஹுணு வட்டே கதாவ (சுண்ண வட்ட கதை) என்ற பேரில் தயாராகி வெற்றி பெற்றது. அக்கதை ஒரு குழந்தையின் மீதான உரிமை, பெற்றவளுக்கா, பேணி வளர்த்தவளுக்கா என்ற கேள்வியை எழுப்பி உழுபவனுக்கே நிலம் உடைமை என்ற நீதியை உணர்த்தி நின்றது.

கற்பித்தலுக்கான நாடகங்களில் ஒன்றான “விலக்கும் விதியும்” 1970 களில் ஈழத்தில் தமிழில் “யுகதர்மம்” என்ற பேரில் வர்க்க சமூகத்ஹ்டில் நீதியின் வர்க்க சார்பை உணர்த்தும் நாடகமாக வெற்றி பெற்றது. எனினும் தென்னாசியச் சூழலில் பிரெக்ட் பற்றிய அறிவும் அக்கறையும் மேலும் தேவை என்றே நினைக்கிறேன்.

கீழே காக்கேசிய சுண்ண வட்ட்த்தின் இறுதிக்காட்சியில் ஒரு பகுதியைத் தருகிறேன். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தன் குழைந்தையை கைவிட்டு சென்றவளான ஒரு ஆளுநரின் மனைவிக்கும் குழந்தையைக் காப்பாற்றி தன் வறுமையின் நடுவே வளர்த்தெடுத்த மாளிகை பணிப் பெண் க்ருஷாவுக்குமிடையிலான வழக்கு, சந்தர்ப்ப சூழ்நிலையால் நீதிவானாக்கப்பட்ட அஸ்டாக்கின் முன்பு விசாரிக்கப்படுகிறது. அவ்வழக்கை எடுப்பதற்கு முன், இரு முதியவர்களின் மணமுறிவு வழக்கொன்றைப் பற்றிய தீர்ப்பை பின்னர் வழங்குவதாகக் கூறி விசாரணையை தொடர்கிறான். இப்போது க்ருஷாவை நோக்கிப் பேசுகிறான்.

அஸ்டாக் : (க்ருஷாவைத் தன்னிடம் அழைத்து, அவளை நோக்கி சற்று பரிவாக சரிந்தவாறு) உனக்கு நீதியைப் பற்றி கொஞ்சம் பரிவு இருப்பதை கவனித்தேன். இவன் உன் குழந்தையென்று நான் நம்பவில்லை. அப்படி அவன் உன் குழந்தையாக இருந்தால், பெண்ணே, நீ அவன் பணக்காரன் ஆவதை விரும்பமாட்டாயா? நீ மட்டும் அவன் உன் குழந்தை இல்லை என்று சொன்னால் அவனுக்கு ஒரு மாளிகையும் லாயங்களில் பல குதிரைகளும் அவன் வாசற்படிகளில் பல பிச்சைக்காரர்களும் அவனுக்கு பணியாற்ற படை வீர்ர்களும், அவனுடைய வீட்டு முற்றத்தில் பல மனுதாரர்களும் இருப்பர். இல்லையா? என்ன சொல்கிறாய்- இவன் பணக்காரனாவதை விரும்பவில்லையா?

பாடகர் :
சினந்த பெண்ணும் மனதில் நினைத்து
சொல்லா மொழி கேண்மின்
பொன்னாலான பாதனி இருந்தால்
கரடி போல் பொல்லானாய்
அவனது வாழ்வைத் தீயது தாழ்த்தும்
என்னை அவன் இகழ்வான்

வன்கல் இதயம் ஒன்று சுமந்தல்
தொல்லை மிகும் எல்லை
வல்லமை மிக்க தீயவனாதல்
பிள்ளைக் கது கொடுமை

பசித்தவரன்றிப் பசியே அவனின்
பகையாய் ஆகட்டும்
பகலின் ஒளியை அன்றிக் காரிருள்
இரவினை அஞ்சட்டும்!

அஸ்டாக் : பெண்ணே, உன்னை எனக்கு விளங்குகிறதென நினைக்கிறேன்.

க்ருஷா : (திடீரென உரத்து) அவனை நான் கைவிட மட்டேன், நான் அவனை வளர்த்தேன். அவன் என்னை அறிவான்.

(ஷௌவா என்ற பொலிஸ்காரன் குழந்தையுடன் வருகிறான்)
ஆளுநரின் மனைவி : அவன் கந்தல் உடுத்தியிருக்கிறான்.

க்ருஷா : அது உண்மையல்ல. அவனுடைய நல்ல சட்டையை அணிவிக்க எனக்கு நேரம் தரப்படவில்லை.

ஆளுநரின் மனைவி : அவன் ஒரு பன்றி தொழுவத்தில் இருந்திருக்க வேண்டும்.

க்ருஷா : (கடுஞ்சீற்றத்துடன்) நான் பன்றியல்ல. இங்கே பன்றிகள் சில உள்ளன! உன் கைக்குழந்தையை எங்கே விட்டுச் சென்றாய்?

ஆளுநரின் மனைவி : உனக்கு காட்டுகிறேன், இழிந்த ஜன்மமே! (க்ருஷா மீது பாய முனைந்தவளை அவளது வழக்கறிஞர்கள் மறிக்கிறார்கள்) இவள் ஒரு குற்றவாளி, இவளை சவுக்கால் அடிக்கவேண்டும் உடனேயே!

இரண்டாவது வழக்கறிஞர் : (வாய்க்கு மேலாக்க் கையை பிடித்தவாறு ஆளுநரின் மனைவியிடம்) நத்தெல்யா அபாஷ்விலி, நீங்கள் வாக்குறுதி தந்தீர்கள்….. (நீதிவானிடம்) மேன்மை தாங்கியவரே வாதியின் உணர்ச்சி….

அஸ்டாக் : வாதி, பிரதிவாதி! நீதிமன்றம் உங்கள் வழக்குகளை கேட்ட்து. ஆனால் உண்மையான தாய் யாரென்ற முடிவுக்கு வரவில்லை. எனவே நீதிவான் என்ற வகையில் குழந்தைக்கு ஒரு தாயை தெரிவதற்கு நான் கடப்பாடுடையவனாகிறேன். நான் ஒரு பரீட்சை வைக்கிறேன். ஷௌவா ஒரு சுண்ணக்கட்டி கொண்டுவந்து தரையில் ஒரு வட்டம் வரை. (ஷௌவா அவ்வாறே செய்கிறான்) குழந்தையை நடுவில் வை. (ஷௌவா குழந்தை மைக்கலை வட்ட்த்தின் நடுவே வைக்கிறான். குழந்தை க்ருஷாவை நோக்கி முறுவலிக்கிறது.) நீங்கள் இருவரும் வட்ட்த்திற்கு அருகே நில்லுங்கள். (பெண்கள் இருவரும் வட்ட்த்தை நெருங்குகின்றனர்) ஒவ்வெருவரும் குழந்தையின் ஒரு கையைப் பற்றுங்கள். (செய்கிறார்கள்) வட்ட்த்திற்கு வெளியே இழுப்பவளே உண்மையான தாய்.

இரண்டாவது வழக்கறிஞர் : (துரிதமாக) உயர் நீதிமன்றமே, இதை நான் எதிர்க்கிறேன்! பெருமைக்குரிய அபாஷ்விலியின் சொத்துக்கள் அவருடைய வாரிசு என்ற வகையில் இக்குழந்தையுடன் தொடர்புடையனவாக இருப்பதால் அவை இவ்வளவு ஐயத்துக்குரிய ஒரு போட்டியின் மீது தங்கியிருக்கக்கூடாது. அதைவிட என் கட்சிக்காரர் கடும் உழைப்பிற்குப் பழக்கப்பட்ட இவளின் உடல்வலிமையை கொண்டவரல்ல.

அஸ்டாக் : எனக்கு அவர் நன்கு தின்று கொழுத்தவராகவே தெரிகிறார்… இழுங்கள்!….
_____________________________________________

பிரெக்ட்டின் சில கவிதைகள்:

பிரிதல்

நாம் தழுவுகிறோம்
உயர் வகையான துணி என் விரல்களிடையே
மட்டரகமான துணி என் விரல்களிடையே
துரிதமான ஒரு தழுவுதல்
உன்னை இராப் போசனத்துக்கு அழைத்துள்ளனர்
என்னை சட்டத்தின் ஏவலர்கள் பின் தொடர்கின்றனர்.
பருவ நிலையைப் பற்றியும் நம் நிலையான நட்பைப் பற்றியும்
பேசுவோம். மற்ற எதுவுமே கசப்பானதாகவே இருக்கும்.
___________________________________________
விமர்சனக் கண்ணோட்டம் பற்றி

விமர்சனக் கண்ணோட்டம்
சிலருக்கு பயனற்றதாக தெரிகிறது
ஏனென்றால்
அவர்களுடைய விமர்சனத்தை
அரசு அலட்சியப்படுத்துகிறது.
இங்கே பயனற்ற கண்ணோட்டம்
பலவீனமான கண்ணோட்டமே
விமர்சனத்தை ஆயுதபாணியாக்கினால்
அது அரசுகளை அழித்தொழிக்கும்.

ஆற்றிற்கு அணை கட்டல்
கனிமரத்திற்கு ஒட்டு வைத்தல்
எவருக்கும் கற்பித்தல்
அரசை மாற்றியமைத்தல்
இவையெல்லாம்
ஆக்கமான விமர்சனத்திற்கு எடுத்துக்காட்டுக்கள்
அதே வேளை
கலைக்குரிய எடுத்துக்காட்டுகளுமாம்.
___________________________________
எனக்கு இடங்கொடுத்தவன்

எனக்கு இடங்கொடுத்தவன்
தனது வீட்டை இழந்தான்
எனக்காக இசை மீட்டியவன்
தனது இசைக்கருவியை இழந்தான்

சாவைக் கொணர்பவன் என அவன்
என்னைச் சொல்வானா?
அல்லது
தனது உடைமைகள் அனைத்தையும்
பறித்தவனைச் சொல்வானா?
________________________________________________

–    சி.சிவசேகரம்.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சுயமோகன்: ஊட்டி இலக்கியச் சந்திப்பு குறித்து…

46

ஊட்டி சந்திப்பு குறித்து நிறைய சந்தேகங்கள், அளவிலா சம்சயங்கள், முடிவில்லா விசாரணைகள், வந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே அவை குறித்து ஒரு நீண்ட பொதுவான விளக்கம் தரப்படவேண்டியதாகி இருக்கிறது. இது ஒரு சிக்கலான தத்துவப் பிரச்சினையாக இருப்பதால் இலக்கியத்தை மேம்போக்காக சொறிபவர்கள் மேலே படிக்க வேண்டாமென்று அன்புடன் ஆணையிடுகிறேன். லுக்கி லக், பாரு நிவேதிதா போன்ற பதிவுலகின் கஞ்சா காக்டெயில் வழிந்தோடும் வஸ்துக்களை வெறியுடன் குடிக்கும் அடிமைகள் தயவு செய்து கன்ட்ரோல் பிளஸ் டபிள்யு அழுத்தி டாப்பை மூடிவிட்டு சென்று விடுங்கள். இதையே எத்தனை தடவை எழுதுவது, சலிப்பாக இருக்கிறது. ஒரு வேளை நான் எழுத்தை வெறுத்துவிட்டு ரஜினியுடன் இமயமலை சென்று செட்டிலாகிவிட்டேன் என்றால் அதற்கு இதுவே காரணமாக இருக்குமென்று தோன்றுகிறது.

அதே நேரம் வார்த்தைகளால் விளங்கிக் கொள்ள முடியாத, சூக்குமம் சூல் கொண்டுள்ள, குழப்பத்திற்கும் – தெளிவிற்கும் நடுவே நாட்டியமாடும் நன்னெறிக் கருத்துக்களை அபிநயிக்கும் பதிவுகளை பொறுமையாக, விடாப்பிடியாக, தலைவலியோடு, தம்மத்தின் பெருமிதத்தோடு படிக்கும் வாசகர்கள் நிமிர்ந்த நடையுடன் மேலே படிப்பதற்கு தடையொன்றும் இல்லை.

ஊட்டி சந்திப்பு குறித்த அறிவிப்பு வந்தபின் ஆயிரக்கணக்கனோர் இதுவரை வருவதாக மின்னஞ்சல், தொலைபெசி மூலம் தெரிவித்திருக்கிறார்கள். அர்ஜெண்டினா முதல் ஜப்பான் வரை என்னெழுத்துக்களை விடாது படிப்பவர்கள் அவர்களில் அடக்கம். இருப்பினும் அவர்களில் தகுதியானவர்களை பரிசீலித்து ஐம்பது பேரை மட்டுமே நான் அழைத்திருக்கிறேன். அதற்கு மேல் குருகுலத்தில் தங்க வழியில்லை என்பதால் இந்த முடிவு. சாமியார் மடமென்றாலும் அங்கே பன்றிக்குட்டிகள் போல வதவதவென்று யாரும் தங்க முடியாது. சிங்கிளாக காட்டையாளும் சிங்கங்கள் போன்றோரே எங்களுக்குத் தேவை. மற்றவர்கள் ஏமாற வேண்டாம். சந்திப்பு முடிந்து எப்படியும் ஒரு பத்து பதிவு அதைப் பற்றி இருக்குமென்பதால் யாரும் மிஸ் செய்ததாக வருந்தத் தேவையில்லை.

தமிழகம் மட்டுமல்ல அகில உலகமே கண்டிராத இந்த காப்பியச் சிறப்புள்ள இலக்கியச் சந்திப்பிற்கு வருவதாகச் சொன்ன சிங்கங்கள் ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் உறுதி செய்ய வேண்டும். ஏதோ தொலைபேசி, மின்னஞ்சலில் தெரிவித்து விட்டோம் என்று அசால்ட்டாக இருத்தல் கூடாது. உங்களுக்காக குருகுலத்தில் பல ஏற்பாடுகள், கொசுவத்தி சுருள் வாங்குதல், தலையணை உறை துவைத்தல், நாற்காலிகளை துடைத்தல், தயிர் சாதத்திற்கு பால் சேகரித்தல், நொறுக்குத் தீனியாக ஊட்டி பொறையை வாங்கிவைத்தல் முதலானவற்றை பெரும் சிரமத்துக்கிடையில் செய்ய வேண்டியிருப்பதை சிங்கங்கள் உணரவேண்டும்.

வருவதாகச் சொல்லிவிட்டு வராமலிருந்தால் நீங்கள் மிகப்பெரும் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டுமென்பதை ஒரு எச்சரிக்கையாகவே கூறுகிறேன். மேற்கத்திய நாடுகளில் இப்படி நடந்து கொள்வதை மிகவும் இழிவாக கருதுகிறார்கள். இந்தியாவில் இத்தகைய நாகரீகம் என்னைப் போன்ற ஒரு சில உன்னத இலக்கியவாதிகளால் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது. அந்த சத்திய ஆவேசத்திலிருந்து இதை எழுதுகிறேன். இதையும் மீறி நீங்கள் வராமலிருந்தால் அப்புறம் பேச்சு பேச்சாக இருக்காது. மேலும் அதன் பிறகு நீங்கள் எந்த இலக்கிய சந்திப்புகளிலும் அழைக்கப்பட மாட்டீர்கள். உங்களைப் பற்றிய விவரங்கள் புகைப்படத்தோடு எல்லா இலக்கிய பத்திரிகைகள், நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு கருப்பு பட்டியிலில் ரவுடி போல சேர்க்கப்படுவீர்கள்.

அப்படி கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால் உங்கள் இலக்கிய வாழ்க்கை அதோகதிதான். இப்போது கூட அப்படி பழைய கருப்புப் பட்டியலிலிருந்து சிலர் ஊட்டிக்கு வரவா என்று நைசாக கேட்டிருப்பது எனது கவனத்திற்கு வராமலில்லை. என் வாழ்வில் ஒருவன் ஒருமுறை என்னிடம் மாட்டிக் கொண்டால் அந்த நினைப்பு எப்போதும் அழியாது. உலகமே அழிந்தாலும் எனது மென்பொருள் மெமரி சர்வரை ஆண்டவனே வந்தாலும் பிடுங்க முடியாது. ஆகவே கருப்பு ரவுடிகள் ஒழுங்கு மரியாதையாக அடக்க ஒடுக்கமாக கிடப்பது ஒன்றே நல்லது. இதற்கு மேலும் நான் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். என்ன செய்வேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் உண்மை என்பதையும் சேர்த்து இங்கே வன்மையாக எச்சரிக்கிறேன்.

ஏதோ விஜய் பட காட்சி போல இலக்கிய கூட்டங்களை கருதும் சில்லறை மனநிலை தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. கழுதைக்கு கற்பூற வாசனை தெரியாது என்றாலும் அந்தக் கழுதைகள் எங்களைப் போன்ற கற்பூரங்களையே நாடி வருகின்றன என்பது ஆச்சரியமான ஒன்று. காசிக்குப் போனால் பாவம் போகும் போல சுயமோகனை தரிசித்தால் அறிவு ஜீவியாகலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ? இலக்கியம்தான் வாழ்வின் முக்கியமான அங்கம். அத்தகைய தவங்களை யாகம் போல மிகுந்த எத்தனிப்புகளுடன் செய்கிறோம். யாகத்திற்கு முடிந்தால் போகலாம் என்ற மனநிலை இருப்பதிலேயே மிகவும் ஆபாசமானது.

இலக்கிய வேள்வியில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் நிறைய இழக்கவும், உழைக்கவும் தயாராக வேண்டும். சென்னை டீக்கடைகளில் ஏனோ தானோவென்று சாயா போடும் மாஸ்டர்களின் உழைப்பல்ல இது. தஞ்சை வயல்களில் குனிந்த இடுப்போடு நாத்து நடும் பெண்களின் ஜாலியான வேலையல்ல இது. நமது தலையில் உள்ள மூளையின் மெல்லிய நரம்புகளை பின்னிப் பினைத்துக் கொண்டு காலவெளியில் கருத்துக்களால் நாட்டியமாடுவது என்பது என்ன சாதாரணமா? ஆகவே இத்தகைய மனிதகுலம் கண்டிராத பேருழைப்புக்கு வணங்காத ஜன்மங்கள் தயவு செய்து எங்களிடமிருந்து விலகிப் போங்கள். இல்லையேல் இனியும் நாங்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் காந்தியை போல அமைதியாக வீற்றிருக்க முடியாது. நான்கூட இலக்கிய வேள்விக்காக எனது பி.எஸ்.என்.எல் வேலையை தூக்கி எறிந்திருக்கிறேன். எனது தியாகத்தோடு மற்றவர்கள் நெருங்க முடியாது என்றாலும் அதில் ஆயிரத்தில் ஒரு பங்காவது நீங்களும் செய்ய வேண்டும் என்று நான் கோரினால் அது பாவமா? புண்ணியமே செய்திராத புண்ணியவான்களே பதில் சொல்லுங்கள்!

இந்தக் கூட்டத்திற்காக எனது நண்பர்கள் அமெரிக்கா முதல் ஆலங்குடி வரை பலநாட்கள் கடுமையாக உழைக்கிறார்கள். ஊட்டி குருகுலத்தில் மூன்று நாட்கள் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்துவது என்றால் அது லேசானது அல்ல. எவ்வளவு வேலைகள்! நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. செம்மொழி மாநாட்டுக்கு பணபலமும், ஆள்பலமும் இருந்தன. எங்களுக்கு பணபலம் மட்டுமே இருக்கிறது. அந்தப் பின்னணியில் இந்த கூட்டத்திற்காக எனது நண்பர்கள் படும் உழைப்பை கேலி செய்யும் செயலை நான் ஒருபோதும் மன்னிக் மாட்டேன். அனுமதிக்கவும் மாட்டேன்.

இந்தக் கூட்டத்திற்காக நான் விதித்திருக்கும் நிபந்தனைகள் பற்றி பாருவின் சில்லறை அடியாட்படை ட்விட்டரிலும், கூகிள் பஸ்ஸிலும் ஒரு விசமப் பிரச்சாரத்தை செய்து வருகிறது. இந்த உலகம் கண்ட எதனையும் ஒரு அடியில் கவிழ்த்துப் போடும் என்னிடமே இந்த வாண்டுகள் அதுவும் அரைக்கால் டிராயரை மட்டும் அவிழ்த்து போட்டுவிட்டு அதையே கலகம் என்று ஊதிப்பெருக்கும் மொக்கைகள் விளையாடுகின்றன. வார்த்தைகளின் சித்தனான என்னிடமே டிவிட்டரின் 140 எழுத்துகளில் விளையாடுகிறீர்களா? நொடிக்கு நூறு எழுத்துக்களை தும்மும் என்னிடமே மோதுகிறீர்களா? எனினும் இதையெல்லாம் நிறைய பார்த்துவிட்டேன், பிழைத்துப் போங்கள்.

இந்த சந்திப்பிற்கு குடிக்காமல் இருங்கள் என்று சொன்னதினாலேயே சிலர் எங்களை ஆச்சார ஒழுக்கர்கள் போல சித்தரிக்கிறார்கள். இலக்கியம் என்ற ஒற்றைக் குறிக்கோளுக்காக நானும் எல்லா வாதங்களையும் – அதாவது பிழைப்புவாதம், காரியவாதம், மிதவாதம், தீவிரவாதம், மதவாதம், சாதிவாதம், பொறுக்கிவாதம், கிரிமினல்வாதம், சதிவாதம், நயவஞ்சக வாதம், நரிவாதம் முதலானவற்றை செய்திருக்கிறேன். அத்தனையும் இலக்கியத்தை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுக்காக. இதை நான் மட்டுமே தனியொருவனாக நெடுங்காலம் செய்து வந்திருக்கிறேன் என்பதால் நானும் ரவுடிதான், ஜீப்பில் ஏறியவன்தான் என்பதை அந்த வாண்டுக் கலக குட்டிகள் உணரவேண்டும்.

ஆனால் ஒரு இலக்கிய சந்திப்பில் வாழ்வின் மற்ற கலக நடவடிக்கைகளை இணைப்பது அபத்தத்திலும் அபத்தம். குற்றாலத்தில் எனக்குத் தெரிந்த சில இலக்கியவாதிகள் நடத்திய கூட்டங்கள் ஏன் தோல்வியுற்றன? குடி ஒன்றே காரணம். குடிக்காத போது நமது கருத்து உண்மையென்றாலும் எதிரில் இருப்பவரின் முஷ்டிகளை நினைவில் கொண்டு கொஞ்சம் நாசுக்காக பேசுவது சிற்றிதழ் மரபு. ஆனால் குடிக்கும் போது இந்த சபை நாகரீகம் குலைந்து உண்மையான கருத்துக்கள் வெளிவருகின்றன. உண்மை வெளிவந்ததும் உடல் பலம் எழுகிறது.

வார்தைகளின் மயக்கமான இலக்கியத்தை மப்பு பார்ட்டிகள் லௌகீக விசயமாக மாற்றி பார்ப்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? நேர்பேச்சில் என்னிடம் குழைபவர்கள் கூட குடிப்பேச்சில் உண்மையை போட்டு உடைத்தால் எப்படி தாங்கமுடியும்? ‘எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்’ என்று பொழுது போக்கும் இலக்கியவாதிகளை திட்டாமல் வீடு, நாடு, காடு, ஆடு, மாடு என அனைத்திலும் இலக்கியத்தையே சுவாசித்து வாழும் என்னையல்லவா திட்டுகிறார்கள்? இதுதான் குற்றால சந்திப்புக்களின் தோல்வி. அதிலிருந்து பெற்ற அனுபவத்திலிருந்தே குடியை நிராகரிக்க வேண்டுமென்று கூறுகிறேன்.

நானும் கூட குடித்திருக்கிறேன். சுந்தர ராமசாமி இறந்த போது இழப்பின் துக்கத்தை கொண்டாட்டமாக மாற்ற எத்தனித்து குடித்தேன். எத்தனை பெக் அடித்தும் போதை என்னிடம் எழவில்லை. வார்த்தைகளின் பின்னிப் பிணைந்த ராக, ஆலாபனைகளில் களித்திருக்கும் என் மூளையின் மடல்களை இந்த குடிபோதை நெருங்க முடியுமா? எனினும் எல்லோரும் என்னைப் போன்று இல்லை என்பதாலேயே குடிக்குத் தடை வேண்டும் என்கிறேன். தாமிரபரணி ஆற்றின் நெல் சோற்றை உண்டு நல் கவிதைகளாக வெளியிட்ட அண்ணாச்சி விக்கிரமாதித்யன் எத்தனை கூட்டங்களை கலைத்திருக்கிறார்? மற்றவர்களைக்கூட சமாளிக்கலாம். ஆனால் அண்ணாச்சி வந்தால் விஷ்ணுபுரத்து பரப்பிரம்மம் கூட ஓடவேண்டியதுதான். ஒருவேளை ஊட்டி சந்திப்பிற்கு அண்ணாச்சி வந்து விட்டால் என்ன ஆகும் என்று யோசித்தே இந்த தடையை மிகுந்த வலியுடன் அமல்படுத்துகிறேன்.

பதிவுலகில் சில ஷோக்குப் பேர்வழிகள் டீக்கடைக்கு செல்வது போல நட்சத்திர விடுதிகளில் குடிப்பதைப்பற்றி ஏதோ உலக சாதனை போல எழுதுகிறார்கள். சீமைச் சாராயத்தை குடித்த இவர்கள் எவரும் கனவிலும், நனவிலும் கலந்துகட்டி அடிக்கும் பெருவாழ்வு தருணங்களை கண்டவரில்லை. கொண்டவருமில்லை. ஆகவேதான் சாராயத்தை உண்டியாக்கி மண்டூ போல தெண்டமாய் கண்டதையும் விண்டு வைக்கிறார்கள். மதிகெட்டவர்களின் கூட்டம் ஊட்டிக்கு வந்து காரியத்தை கெடுத்து விடக்கூடாதல்லவா? அதனால்தான் இது என்பதை என்னுள் துடிக்கும் சத்திய ஆவேசத்தை தரிசித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

குடிப்பவர்களை தடுத்துவிட்டாலும், குடிக்காமல் வந்து காரியத்தை கெடுப்பவர்களையும் பற்றி நான் நெடுங்காலமாய் யோசித்து வந்திருக்கிறேன். நான் மையமாக வீற்றிருக்கும் இலக்கிய கொலுவரங்கில் ஒரு மொக்கை நபர் அவையடக்கமிழந்தால் என்ன நடக்கும்? சான்றாக, பாரதீய ஆன்மீகத்தின் குகைக்குள் அவையோரை சிரமப்பட்டு கை கூட்டிச் செல்லும் போது ஆன்மீகம் என்று சொன்னதை வைத்து நீயும் இந்துத்வாவா என்று மலிவாகக் கேட்டால் என்ன செய்வது? திரும்பவும் முதல்ல இருந்தா ஆரம்பிக்க முடியும்? அப்படியே பொறுமையாக விளக்கினாலும் எனது விஷ்ணுபரத்தை ஆர்.எஸ்.எஸ் விற்பனை செய்கிறதே என்று கேட்டால் என்ன செய்வது? ஒரு வாசிப்பின் பரந்துபட்ட தளங்களை அறியாத சில்லுண்டிகளை என்ன பேசியும் புரிய வைத்துவிட முடியாதே? அதற்குத்தான் கீழ்க்கண்ட நிபந்தனைகளை இலக்கியத்தின் உன்னதத்தை தனியொருவனாக காப்பாற்றும் சுமையின் பொருட்டு உங்கள் முன்வைக்கின்றேன்.

இலக்கிய சந்திப்பில் பங்கு பெறுவோர் கடைபிடித்தே ஆகவேண்டிய நிபந்தனைகள்:

1. வருபவர்கள் எல்லா அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். தமிழ் சினிமாக்களில் பாட்டு வரும்போது சகிக்கவில்லை என்று தம்மடிக்க போவது போல இங்கே நடப்பதற்கு அனுமதி இல்லை. முக்கியமாக குருகுலத்திற்குள் புகை பிடிக்க அனுமதி இல்லை. ஊட்டி குளிருக்கு இதமாக இருக்குமென்ற காரணத்திற்காக சிகரெட்டை நாடாதீர்கள். இலக்கியபுகை தராததையா நிக்கோடின் புகை தரப்போகிறது?

அடுத்து சிறுநீர் கழிக்க வேண்டிகூட இடையில் எழுந்து போக அனுமதி இல்லை. ஊட்டி குளிருக்கு அடிக்கடி இந்த உபத்திரம் மூத்திரத்தால் வருமென்றாலும் நீங்கள் குடிக்கும் தண்ணீரை குறைத்துக் கொண்டால் இது பெரிய பிரச்சினை இல்லை. அமர்வுகள் ஆரம்பிக்கும் போது அனைவரும் அரங்கினுள் இருக்க வேண்டும். தாமதமாக வருபவர்கள் உடனடியாக குருகுலத்தை விட்டு நீக்கப்படுவார்கள். எங்களுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல, தரம்தான் முக்கியம். பன்றிகளல்ல, சிங்கங்களே வேண்டும். அதே நேரம் பல்லும், நகமும் பிடுங்கப்பட்ட சிங்கங்களாக இருத்தல் நலம்.

2. தனிப்பட்ட விமர்சனங்களும், கடுமையான நேரடி விமரிசனங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. எது தனிப்பட்ட விமரிசனம், எது கடுமையான விமரிசனம் என்று தெரிய நினைப்போர் பத்தாயிரம் ரூபாய் டி.டி அல்லது ஆன்லைனில் செலுத்தினால் அதற்கான யூசர் மேனுவல் அனுப்பித் தரப்படும். எடுத்துக் காட்டாக ஊழல் மந்திரி டத்தோ சாமிவேலு பணத்தில் நான் மலேசியா சென்றதை யாராவது கேட்டால் அது தனிப்பட்ட மற்றும் கடும் விமரிசனமாக கருதப்படும். நாம் பேச இருப்பது சங்க காலப்பாடல்கள் குறித்து. அதை விடுத்து என் சொந்த வாழ்க்கை சமாச்சாங்களை பேசுவது தடைசெய்யப்படும். இதற்காகவே எனது அமெரிக்க நண்பர் வார்லஸ் சில வாட்டசாட்டமான வெள்ளைக்கார பவுன்சர்களை அவரது செலவில் அழைத்து வருகிறார். அவர்கள் சண்டை போட்ட காட்சிகளை டென் சானலில் பார்க்கலாம். பார்த்து விட்டு வந்தால் தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.

ஒருவேளை கூட்டத்தில் விமரிசனம் பேசிவிட்டு பவுன்சர்களால் வெளியேற்றப்பட்டு அரங்கின் வெளியே சென்று பேசிவிடலாம் என்று நினைத்துவிடாதீர்கள். குருகுலம் முழுவதும் சி.சி.டி.வி சர்வைவலன்ஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. என்னையறியாமல் ஒரு எழுத்து கூட நாவிலிருந்து விழாது. இதற்கான தொழில் நுட்ப பணிகளை என்னுடைய ரசிகர் அரவிந்தன், பெங்களூர் இன்போசிஸ் செய்கிறார்.

3. சந்திப்பு நிகழும் மூன்று நாட்களிலும் அரங்கிலும் வெளியிலும் மது அருந்தக் கூடாது. இது குறித்து மேலே விரிவாக பேசியிருக்கிறேன். ஒருவேளை திருட்டுத்தனமாக குடிக்கலாம் என்று யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம். இதற்காக எனது சென்னை நண்பரும் போலீசு அதிகாரியுமான கயவாரம் வருகிறார். ஒவ்வொரு அமர்வின் போதும் என்னைத் தவிர்த்த அனைவரும் இவர் முன் ஊதிக்காட்ட வேண்டும். ஒரு மில்லி அடித்தால் கூட இவரது மூக்கை ஏமாற்ற முடியாது.

4. விவாதங்களின் போது மையப்பொருளுக்கு வெளியே சென்று பேசுவதற்கு அனுமதி இல்லை. எது மையம், எது வெளியே என்பது என்னால் தீர்மானிக்கப்படும். எனது படைப்புக்களை பலமுறை உருப்போட்டு வாசித்திருப்பவர்கள் இந்த மைய, எல்லை வரைபடங்களை சுலபமாக அறிவார்கள். அறியாதவர்கள் அடக்கமாக இருக்க வேண்டும். மீறினால் பவுன்சர்கள் அடக்குவார்கள். சங்ககாலப் பாடல்கள் விவாதத்தின் போது இது தொடர்பாக கோழிப்பண்ணை பொ.மாலுசாமி எனக்கு உதவுவார். அவர் உதவுவதா, கூடாதா என்பதையும் நான் தீர்மானிப்பேன்.

5. நான் உறுதி செய்தவர்களை தவிர வேறு வெளியாட்கள் வர அனுமதி இல்லை. அதே போல அனுமதி பெற்று வருபவர்கள் கூட வேறு யாரையும் கூட்டி வரக்கூடாது. அவர்களது மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தாரையும் அழைத்துவர அனுமதி இல்லை. ஒரு வேளை அந்தக் குழந்தை எனது இலக்கிய தேர்வில் வெற்றிபெறும் பட்சத்தில் அதை நானே முன் கூட்டி தெரிவிக்கும் பட்சத்தில் அழைத்து வரலாம். இலக்கியத் தகுதிக்கு பால், வயது, இனம் வேறுபாடு இல்லை. இந்த விதி எனது குடும்பத்திற்கு மட்டும் பொருந்தாது. கம்பன் வீட்டுத்தறியும் கவிபாடும், இளையராஜா வீட்டு இட்லி சட்டியும் இசையமைக்கும் என்பதுபோல சுயமோகன் வீட்டு நாய் கூட இலக்கியம் பேசும் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.

வெளியாட்கள் யாரும் வருகிறார்களா என்பதை டெல்லியிலிருந்து வரும் எனது நண்பரும் மத்திய உளவுத்துறை அதிகாரியுமான பங்கட் சாமிநாதன் கண்காணிப்பார். இவரது திறமையை இங்குள்ளவர்களை விட பாக்கின் ஐ.எஸ்.ஐ நன்கு அறியும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

6. அமர்வு நடக்கும் மூன்று நாட்களிலும் வெளியில் தங்குவதற்கு அனுமதி இல்லை. அதை அனுமதித்தால் மது குடிப்பதை தடுக்கமுடியாது. மேலும் அமர்வு இல்லாத நேரங்களில் இடைவிடாமல் சாப்பாட்டு நேரத்திலும் கூட நான் பேசும் சொல்லாடல்களை கேட்டுப் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த நிபந்தனையை விதித்திருக்கிறேன்.

7. அமர்வு நடக்கும் நேரங்களில் அனைவருக்கும் சைவச்சாப்பாடுதான் வழங்கப்படும். சிக்கன் 65, சில்லி பீஃப், ஜிஞ்சர் மட்டன் என்ற நினைவுகளை நாக்கில் வைத்து வாழும் ருசியர்கள் இந்த இலக்கியக் கூட்டத்திற்கு வரத் தேவையில்லை. குருகுலம் முற்றிலும் சைவச்சாப்பாட்டையே கடைபிடிக்கும் என்பதையும் நீங்கள் ஏற்க வேண்டும். முற்றும் துறந்தவன் சைவத்தை மட்டும் ஏன் துறக்கவில்லை என்று கேட்பவர்கள் எங்களுக்கு தேவையில்லை.

இலக்கியம் என்று வந்துவிட்டால் ஒரு மூன்று நாட்களுக்கு நாக்கை கட்டிப் போட்டால் என்ன குடிமுழுகும்? மேலும் அசைவ உணவு உண்டு, அசுர குணத்தை பெற்று விவாதத்தில் என்னை மீறி சென்று விட்டால் என்ன செய்வது? தயிர் சாதமும், சாம்பார் வடையும் உண்பவனே எனது பேச்சை எதிர் கேள்வியின்றி பின் தொடருவான். நீங்கள் குருகுலத்தை விட்டு வெளியே சென்றால் எனது உளவாளிகள் அசைவம் சாப்பிடுகீறீர்களா என்று பின்தொடர்வார்கள். எச்சரிக்கை.

நிகழ்ச்சி விவரங்கள்:

வெள்ளியன்று காலை எனது நண்பர் வார்லஸ் ஏசுநாதர் அப்பம் பங்கிட்ட கதையை மெய்யியலாக பேசுவார். அதுவும் அரை மணிநேரம் மட்டுமே அனுமதி. பின்னர் நீங்கள் அந்த அப்பம் எப்படி சுட்டார்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்கலாம்.

இரண்டாவது அமர்வாக நான் பேசுகிறேன். இந்த சந்திப்பின் மையமான நிகழ்வாக இது இருக்கும். பாரத தத்துவ மரபை பற்றி நேர அளவுகோல் இல்லாமல் பேசுவேன். நசிகேதனது உயிர் தேடல் முதல் நல்லி சில்க்ஸ் குப்புசாமி வரைக்கும் உள்ள தொன்மத்தின் தொடர் இழையை எவரும் வியப்பூட்டும் வண்ணம் பேசுவேன். அது குறித்து என்னளவு யாருக்கும் தெரியாது என்பதால் நிறைய கேள்விகள் வராது. வந்தாலும் அந்தக் கேள்விகளின் பாமரத்தனத்தை புரிய வைத்து விட்டால் பதிலுக்கு தேவையுமில்லை.

மதிய அமர்வில் இந்திய சிந்தனை மரபு குறித்து கேள்விகள் என்னிடம் கேட்கலாம். மாலை ஐந்து மணி வரை நான் பேசிக்கொண்டே இருப்பேன். எனது பதில்கள் மணிக்கணக்கில் இருக்குமென்பதால் கேள்விகள் விநாடிக்கணக்கில் மட்டுமே கேட்கவேண்டும். என்னைத்தவிர வேறுயாரும் பதில் சொல்ல முன்வரமாட்டார்கள் என்பதால் எனக்குச் சுமை அதிகம் என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பட்டியில் அடைபட்டிருக்கும் எருமைமாடு அசைபோட தயங்காது. கற்றார் அவையில் பேசுவதற்கு சுயமோகன் அஞ்சமாட்டான்.

இரவில் சங்க காலப்பாடல்களை வாசித்து இன்புறலாம். தலைவன் தலைவியின் ஊடல், கூடல், காதல், ஈதல் எல்லாம் நுண்ணோக்கிய இரசனையில் கேட்டு இன்புறலாம். அந்த நுண்ணோக்கி பற்றி அறிய விரும்புவர்கள் எனது உரையைக் கேட்டால் போதுமானது.

மறுநாள் அமர்வில் சிக்ஸ்பேஸ் தமிழன் காப்பிய காலத்து பாடல்களை என் அனுமதி பெற்று முன்வைத்து இரசிக்க வைப்பார். அப்போது ஆஹா, ஓஹோ என்று இரசிக்காதவர்கள் கருப்பு ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். பிறகு நாஞ்சில் வேடன் கம்பனது பாடல்களை எனது இரசனைக்கேற்ப அறிமுகம் மட்டும் செய்வார். விவாதத்தை நான் பார்த்துக் கொள்வேன். இராம சரிதத்தின் பரிணாமமாக அயோத்தி ராமன் கோவில் இனி கட்டப்படும் இனிய வேளைக்கு இந்த அமர்வு பொருத்தமாக இருக்கும்.

இப்படி பல நிகழ்வுகள் இருக்கின்றன. முக்கியமாக பாடல்கள், கவிதைகள் குறித்த விவாதம் நான் கூறுகிறபடி மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது கவிதையின் இரசனையே முக்கியமன்றி உள்ளடக்கம் இல்லை. ஒரு கவிதையில் ஓத்தா, ஙொம்மா என்று வருவது பிரச்சினையல்ல. அது எவ்வளவு ரைமிங்காக வருகிறது என்பதே இரசனை. இதற்கும் நீங்கள் நான் எழுதிய கவிதை இரசனை என்ற பத்தாயிரத்து பக்க நூலை வாசித்து மனப்பாடம் செய்து வருவது நல்லது.

6 Response to “ஊட்டி சந்திப்பு குறித்து”

1. சுமோ,

நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகள் எப்படி இலக்கியத்திற்கு தேவையோனதோ அதுபோன்றுதான் நமது வருணாசிரம தர்மமும் சமூகம் இயங்குவதற்காக சில நிபந்தனைளை விதித்திருக்க்கிறது. அதை சொன்னால் உடனே பாப்பான், வெறி என்று கிளப்புகிறார்கள். உங்களைப் போன்ற ஞானிகள் இருப்பது இந்து மதம் செய்த புண்ணியம் என்று என் நெஞ்சம் விம்முகிறது.

– ஹாய்ராம், சென்னை.

2. சுயமோகன்,

மேற்கத்திய நாடுகளில் நிபந்தனை இல்லாமலே மக்கள் நாகரீகமாக வாழ்கிறார்கள். முதலீட்டியம் அல்லது உண்மையான முதலாளித்துவம் செய்திருக்கும் சாதனை அது. இங்கே ஏழ்மை என்ற பெயரில் பன்னாடைகள் வசிக்கும் நாட்டில் இத்தகைய நிபந்தனைகளை வேறுவழியின்றி விதிக்க நேரிடுகின்றது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். இதற்காக கடுமுழைப்பு கோரும் நூறு லிங்குகளை இங்கு இணைத்திருக்கிறேன்

– கே.ஆர். பதியமான், கல்லுக்கனி ப்ளாக் ஸ்பாட், திருப்பூர்.

3. சுயமோகன்,

சிறுநீர் கழிப்பதற்கு கூட அனுமதி இல்லை என்பது தவிர மற்ற நிபந்தனைகளுடன் உடன்படுகிறேன். இங்கே அமெரிக்கா வந்தபோது உங்கள் நேர்ப்பேச்சில் கண்ட அதே இனிய திமிர் இங்கும் இருக்கிறது. எனக்கும் பிடித்திருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள் என்ற மருத்துவ உண்மையை மட்டும் நீங்கள் பரிசீலிக்க வேண்டும். வாழ்த்துக்கள்!

– கார்.வி, அமெரிக்கா.

4. ஸ்ரீமான் சுயமோகன்,

அவா அவா மல்டிபிளக்ஸ், டிஸ்னி லேண்ட், வாட்டர் ஸ்போர்ட்ஸ் என்று கலிமுத்திய காலத்துல சுத்துறா. நீங்க மட்டும் இலக்கியத்துக்காச்சே வாழரேள். நம்மவா அந்தக்காலத்துல பூணூல பிடிச்சுண்டு இந்த லோகத்தை என்னமா ஆண்டா. உங்க எழுத்த பாக்கறச்சே அது நினைவுக்கு வர்ரது. நன்னா இருங்கோ, நானும் ஊட்டி வாரேன்…

-அன்புடன்
காண்டு கஜேந்திரன்

5. சுயமோகன் சார்,

உங்க நிபந்தனைகள் எனக்கும் ஓகே. ஆனா பான்பாராக், ஹன்சா பொகையிலை முதலான லாகிரி வஸ்துக்களையும் சேர்த்து தடை செய்யனும். இது பத்தி விக்கியில் வந்த கட்டுரைகளை லிங்கு குடுத்திருக்கேன். படிச்சுப் பாருங்கோ.

-கிருஸ்ணமூர்த்தி சர்மா, புது தில்லி.

6. dear suyamohan

இங்கே மைக்கேல் ஜாக்சன் தனது பண்ணை வீட்டில் விருந்து கொடுக்கும் போது கூட நிறைய டிரஸ் கோடு, ஆட்டிட்டியூடு கோடு, டேபிள் மேனர் கோடு, வாக்கிங் கோடு, ஈட்டிங் கோடு போன்றவை உண்டாம். சீமான்களது உலகத்தில் இவையும் புகழ் பெற்றவை. சமீபத்தில் கிளிண்டன் டாட்டர் மேரேஜ்ல கூட இது மாதிரி நிறைய இருந்துச்சு. ஐ லைக் யூ வெரி மச். பை

– சாம்ஜி யாஹூ, ஹைதராபாத்.

______________________________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?

17

வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது.
இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது?

_______________________________________________________________________

2002 புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் இதழில் மதுரையைச் சேர்ந்த தோழர் சாக்ரடீஸ் எழுதிய வாசகர் கடிதம் வெளியாகியிருந்தது. புதிய கலாச்சாரத்தில் நூலறிமுகம் பகுதி தொடர்ந்து இடம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தத் தோழர் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் போது,

“…. அரசியல் புத்தகம் படிப்பதற்குத்தான் தோழர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். எனக்கென்னவோ அரசியலும் இலக்கியமும் இரண்டு தண்டவாளங்கள். ஒன்றுக்கொன்று இணையாகச் சென்றால்தான் நாம் நம்மை வறண்டு போகாமல் இருக்கச் செய்ய முடியும். துன்பப்படுகிற மக்களைப் பார்த்து ஏதாவது செய்தாக வேண்டும் என ஈரத்தோடு உள்ளே வருகிறவர்கள், எல்லாவற்றிற்கும் அறிவு ரீதியான விளக்கங்கள் அறிந்து கொண்ட பிறகு நெஞ்சில் இருந்த ஈரம் வற்றி விடுகின்றது. இந்த ஈரம் வற்றாமல் பாதுகாப்பது என்னைப் பொறுத்தவரையில் இலக்கியங்கள்தான்…”

என்று குறிப்பிட்டிருந்தார்.

புரட்சிகர அமைப்பிற்குள் புதிதாக வரும் தோழர்களிடம் இருக்கும் இரக்க உணர்வு, அறிவுரீதியான அரசியல் விளக்கத்தைத் தெரிந்து கொண்ட பிறகு மங்கி விடுகிறது; அப்படி மங்காமல் தங்குவதற்கு அரசியலுக்கு இணையாக இலக்கியமும் அவசியம் என்கிறார் இந்த வாசகர். அரசியலின் அறிவு, இலக்கியத்தின் உணர்வு இரண்டோடும் உறவு கொள்ளும் புதிய தோழர்களைப் பற்றிய இம்மதிப்பீடு தவறாக இருக்கின்றது. மேலும், அரசியல், மார்க்சியம், கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் உருவாக்கியிருக்கும் பொது உளவியலும், அரசியல்வாதிகள் இரக்கமற்றவர்கள், இலக்கியவாதிகள் ஈரமிக்கவர்கள் என்பதையே அடிப்படையாக வைத்து இயங்குகிறது. இத்தகைய இலக்கியவாதிகளைத்தான் போலி கம்யூனிஸ்டுகள் ஆரத் தழுவி அங்கீகரிக்கின்றனர். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்கென்றே த.மு.எ.ச. போன்ற அரட்டை மடங்களை நடத்துகின்றனர். இலக்கியத்தின் அற்பவாதிகளும், கம்யூனிசத்தின் போலிகளும் ஒருவரையொருவர் பற்றி நிற்பதில் முரண்பாடு ஏதுமில்லை.

ஆனால் புரட்சியை நேசிக்கும் புதிய தோழர்கள் இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள ஒரு கம்யூனிஸ்டாக மாறுவது குறித்த ஆழ்ந்த பரிசீலனையைத்தான் முதலில் கற்க வேண்டும். வாழ்வில் முதன்முதலாக மார்க்சியத்தைக் கற்கும் இவர்கள் அறிவுரீதியாகப் பெறும் விளக்கம்தான் என்ன?

ஆரம்பமே அவர்களது பழைய அறிவு அழிவதுதான். உலகம், சமூகம், அரசு, பண்பாடு, குடும்பம் அனைத்தும் புதிய பொருளுடன் தென்பட ஆரம்பிக்கின்றன. இவைகள் பற்றிய புதிர்களுக்கு விடை தராத பழைய உலகக் கண்ணோட்டம் உதிர்ந்து போகிறது. விடை தரும் புதிய கண்ணோட்டம் பழைய உலகின் உணர்ச்சிகளை அழிப்பதிலும் தவறுவதில்லை. ஆம். கட்சிக்குள் வரும் புதியவர்கள் தங்களிடமிருக்கும் “ஈரத்தையும், உணர்வையும்’ வெட்டி எறிகிறார்கள். காரணம் அவை புதிய உலகிற்குத் தேவைப்படாத, சுயநலத்திலிருந்து எழும் அற்பவாத மிகையுணர்ச்சிகள்.

இதை எப்படிப் புரிந்து கொள்வது? உயிரின் இயக்கத்தையும் அது நின்று போவதையும் மருத்துவ அறிவியலாகக் கற்றுத் தேறும் ஒரு மருத்துவர் அவரது மனைவி இறந்து போனால் வருந்துவாரா? வருந்துவார். உயிரின் அறிவுரீதியான விளக்கத்தைக் கற்றதனாலேயே அவர் வருந்தாமல் இருக்க மாட்டார். காரணம் அவரது மனைவியுடன் நெருக்கமான ஒரு வாழ்க்கை உறவு உள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத தருமபுரியின் கூலி விவசாயி, எலிக்கறி சாப்பிடும் தஞ்சையின் கூலி விவசாயிகளைக் கேள்விப்பட்டாலே வருத்தப்படுவார். இவருக்கு அறிவு ரீதியான விளக்கமோ, இதயத்தைத் தொடும் இலக்கியமோ தேவைப்படுவதில்லை. காரணம் கூலி விவசாயியாகச் சமூகத்தில் கொண்டிருக்கும் உறவு அந்தத் துயரத்தை எந்தப் பீடிகையுமில்லாமலேயே உணர்த்தி விடுகிறது.

இப்படிச் சமூகத்திலிருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு அரசியல் கல்வியின்றியே, அறிவு விளக்கமின்றியே சக மனிதனை நேசிக்கும் உணர்வு ஏதோ ஒரு வகையில் இருக்கத்தான் செய்கிறது. இதில் சுயநலம் சார்ந்த உறவு (குடும்பம், உறவினர்) பொருளாதார அடிப்படையிலிருப்பதால் நீடிக்கின்றது. அத்தகைய அடிப்படை ஏதுமற்ற பொதுநலம் சார்ந்த உணர்வு (இலக்கியம் மட்டும் படிப்பவர்களையும் உள்ளிட்டு) வெறும் அனுதாபம் என்ற அளவிலே விரைவில் நீர்த்தும் போகிறது. அரசியல் கல்வி நடைமுறையற்ற சகல பிரிவினருக்கும் இதைத் தவிர்த்த உணர்வு ஏதும் கிடையாது.

ஆனால் ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் துவக்கும் ஒருவர் இந்த இரண்டு அளவுகோல்களிலிருந்தும் வேறுபடுகிறார். இங்கே சுயநலம் சார்ந்த உணர்வு அழிவதையும், பொதுநலம் சார்ந்த உணர்வு திட்டமிட்டு முகிழ்வதையும் பார்க்க முடியும்.

வெளிநாடு சென்று பொருளீட்டுவான் என்பதற்காக, சில வருடங்கள் தன் மகனைப் பிரிந்து வாழச் சம்மதிக்கும் ஒரு தாய், அதே மகன் புரட்சிகர அமைப்பில் பணியாற்றுவதை விரும்புவதில்லை. அழுது அரற்றி அனுமதி மறுக்கும் அந்தத் தாயுடனான பழைய பாசம் இனியும் நீடிக்க முடியாது. உடன் பிறந்தோரை வரதட்சணை, சடங்கு, சாதி எனப் பிற்போக்குச் சங்கிலியுடன் மணம் செய்து கொடுக்கும் தந்தையுடன், கண்டிப்புடன் கூடிய அந்தப் பழைய மரியாதையை இனிமேலும் கொடுக்க முடியாது. பழைய அந்தஸ்தின் மூலம் கிடைத்த நண்பர்கள், கம்யூனிஸ்டு என்ற இந்தப் புதிய தகுதியை விரும்பாத போது அந்த நட்பு எப்படி நீடிக்க முடியும்? கந்து வட்டிக்கு விடும் தாய் மாமனேயானாலும் இனியும் ஒட்டி உறவாட முடியாது. பழைய வாழ்க்கை வழங்கியிருக்கும் இத்தகைய அன்பு, பாசம், நட்பு போன்ற உணர்ச்சிகளெல்லாம் புதிய வாழ்வின் செயலூக்கத்தில் நிச்சயம் வறண்டு போகும்.

அதேபோன்று முதல் வாழ்க்கையில் தோன்றியும் புரிந்துமிராத உணர்ச்சிகளெல்லாம் இந்த இரண்டாம் வாழ்க்கையில் புதிது புதிதாய்ப் பிறந்து வளரும். இன்று தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடும் ஒரு தோழர், அவர் தேவராக வாழ்ந்த நாட்களில் இதைக் கனவிலும் கருதியிருக்க மாட்டார். அதிகார வர்க்கத்தையும், காக்கிச் சட்டையையும் தைரியமாக எதிர்த்துப் போராடும் ஒரு தோழர், அவர் கூலி விவசாயியாக மட்டும் வாழ்ந்த காலத்தில் இவையெல்லாம் இயற்கைக்கு மாறானது என்றே நம்பியிருப்பார். மனைவியுடன் ஜனநாயக முறைப்படி வாழும் ஒரு தோழர் அவர் ஆணாதிக்கவாதியாக ஆட்சி நடத்திய நாட்களை நினைத்து இப்போது வெட்கப்படுவார். சிறைவாசம் அனுபவித்திருக்கும் பெண் தோழருக்கு அவரது பழைய அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து வெளியேறிய போராட்டம் இப்போதும் நம்பிக்கையளிக்கும்.

இப்படிச் சமூக வாழ்க்கையில் பழைய உணர்வுகள் நீர்த்துப் போய் புதிய உணர்வுகள் மலருகின்றன. கூடவே அரசியல் அரங்கிலும் புதிய கடமைகளுக்கேற்ற உணர்வுகள் பிறக்கின்றன. கம்யூனிசத்தை அறிவியல் ரீதியாகக் கற்பதன் மூலம் புரட்சி சமூக மாற்றம் பற்றிய எளிமைப்படுத்தப்பட்ட சித்திரங்கள் மறைகின்றன. ராபின்ஹூட் பாணியிலான சாகசம், புரட்சி என்பது ஒரு ரம்மியமான மாலை நேர விருந்து போன்ற “ரொமாண்டிக்’ கற்பனைகள் விரைவிலேயே வெட்கத்துடன் விடை பெறுகின்றன. அதனால்தான் துன்பப்படுகின்ற மக்களைப் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற இரக்க உணர்ச்சி மறைந்து இன்னதுதான் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்ச்சி பிறக்கின்றது.

ஏழைகளைப் பார்த்து வெறுமனே இரக்கப்படும் பழைய உலகின் இலக்கியங்களும், திரைப்படங்களும் இனிமேலும் புதிய தோழர்களை உணர்ச்சிவசப்படுத்துவதில்லை. தன்னுடைய இயலாமை அற்பவாதத்தையே தியாகமாக நினைக்கும் “அழகி’யின் சண்முகமோ, இந்து மதவெறியை மறைப்பதற்காகச் சோகங்கொள்ளும் “பம்பாயின்’ காதலர்களோ, ஒரு மாபெரும் வரலாற்றுக் காலத்தைத் தன்னுடைய நடுத்தர வர்க்கத்தின் குடும்பக் கண்ணோட்டத்தில் பார்க்கும் சாகேத ராமனின் (ஹேராம் திரைப்படம்) வேதனையோ நமது இதயத்திற்குள் இறங்குவதில்லை.

நம்மைத் தவிர முழு உலகமும் இத்தகைய காவியத் திரைப்படங்களின் கண்ணீரில் முழுகியபோது இந்த மிகையுணர்ச்சிக் கண்ணீரின் கிளிசரின் மோசடியை அகற்றிவிட்டு உண்மையான கண்களையும் கண்ணீரையும் நமக்கு உணர்த்தியது நாம் கற்றுக் கொண்ட கம்யூனிச அரசியல்தான்.

எனவே அரசியல் அறிவு உங்களின் பழைய உணர்ச்சிகளைக் காவு கொள்வதில் கண்டிப்புடன் நடந்து கொள்கிறது; கூடவே புதிய உணர்ச்சிகளை உருவாக்க இடையறாது போராடுகிறது. புதிய தோழர்கள் பெறும் அறிவு விளக்கத்திற்கும், அது அழித்து உருவாக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையிலான இயங்கியல் உறவு இப்படித்தான் இருக்கிறது. ஆதலால் அரசியல் அறிவு உணர்ச்சியை வற்ற வைப்பதில்லை; உண்மையான ஊற்றைத் தோண்டிச் சுரக்க வைக்கின்றது; கண்ணீர்க் குளமாக்குகிறது; இதுவரையிலும் அழாதவற்றுக்கும் அழவைக்கிறது.

ஆயினும் இந்த உண்மையான உணர்ச்சி அவ்வளவு சீக்கிரம் ஏற்பட்டுவிடுவதில்லை. இதையே “எல்லாவற்றிற்கும் விளக்கங்கள் அறிவுரீதியாக அறிந்து கொண்ட பிறகு நெஞ்சிலிருந்த ஈரம் வற்றி விடுகின்றது” என்று வாசகர் சாக்ரடீஸ் தவறாகக் குறிப்பிடுகிறார். நீக்கமற நிரவியிருக்கும் பிற்போக்கான வாழ்க்கை மதிப்பீடுகளிலிருந்து வரும் ஒரு நபர், ஒரு தோழராக மாறுவதில் பல்வேறு சிக்கல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது.

முதலில் புதிய தோழர்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அறிவுரீதியான விளக்கங்களை அறிந்து கொள்வதில்லை; அது சாத்தியமுமில்லை. “முன்னரே தயாரிக்கப்பட்ட முடிவுகள் முழக்கங்கள் உதவியுடன் மார்க்சியத்தை அளவுக்கு மீறி எளிமைப்படுத்திக் கற்பதற்கு” எதிராக லெனின் எப்போதும் எச்சரிக்கை செய்தார். நாம் கற்கும் முதல் விசயமே நமது பழைய உலகக் கண்ணோட்டம் தவறு என்பதைத்தான். அதனாலேயே நாம் உருவாக்க விரும்பும் புதிய உலகைப் பற்றிய கண்ணோட்டத்தைக் கற்று விட்டோம் என்பதல்ல. அதற்கு அரசியல் அறிவு மட்டும் போதுமானதல்ல; செயலூக்கம் நிறைந்த நடைமுறைப் போராட்டம் தேவை. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், சமூகத்தை ஆய்வு செய்து வினையாற்றுவதற்கு நம்மிடம் அளிக்கப்பட்ட மிகச் சிறந்த வாளே மார்க்சிய லெனினிய ஆய்வு முறையாகும்; ஆயினும் அந்த வாளைத் திறமையாகச் சுழற்றக் கற்றுக் கொள்வதில்தான் அதன் பலம் உறைந்திருக்கிறதே ஒழிய உறையில் போட்டு வைத்திருப்பதனால் அல்ல.

வெளிஉலகில் நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் அக உலகில் நாம் வரைந்து வைத்திருக்கும் புரட்சியுடன் இணைப்பது பற்றிய பிரச்சினை, கேள்வி, ஆய்வு, போராட்டங்கள் ஒரு கம்யூனிஸ்ட கட்சி உயிர் வாழ்வதன் அடிப்படையாகும். இதிலிருந்து மாறுபடுகிறவர்களையே போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கிறோம். மேலும் கட்சியில் புதிதாக வரும் தோழர்களும் தங்களை இறுதி வரை கம்யூனிஸ்டாக வைத்திருப்பதன் பொருளும் மேற்கண்ட பிரச்சினையையும் போராட்டத்தையும் இறுதிவரை செய்வது என்பதே.

முக்கியமாக, இந்தப் போராட்டத்தில்தான் அவர்களது பழைய வர்க்கக் கழிவுகள் நீக்கப்பட்டு மறுவார்ப்பு செய்யப்படுகிறார்கள். அது “நானேதான்’ என்று உறுதியான அகந்தையை அழிக்கிறது; சக தோழர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் வரும் விமர்சனங்களைக் கண்டு அஞ்சும் கோழைத்தனத்தை ஒழிக்கிறது; தனது தவறுகளைத் தானே கண்டுபிடித்து ஏற்கும் வீரத்தைக் கொடுக்கிறது; கற்றுக் கொள்வதில் பணிவையும், கற்றுக் கொடுப்பதில் பொறுமையையும் உருவாக்குகிறது; அடக்குமுறைக்குப் பணியாத கம்பீரத்தைத் தருகிறது; மக்களுடன் இரண்டறக் கலக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.

இவையெல்லாம் ஓரிரு வாரங்களிலோ, மாதங்களிலோ, வருடங்களிலோ கற்றுக் கொள்ளும் பாடமல்ல. சாகும் வரையிலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டிய புரட்சியின் கடினமான பாடம். ஏனெனில் புரட்சியை நேசித்துக் கட்சியால் ஈர்க்கப்படும் தோழர்கள் உழைக்கும் மக்களையும் அப்படி ஈர்க்கின்ற வேலையே அவர்களது அரசியல் வேலையின் சாரமாக இருக்கின்றது.

கள்ளங்கபடமற்ற கூலி விவசாயிகளோ, அரசியல் அறியாமையிலிருக்கும் தொழிலாளிகளோ, கருத்தாதரவும் செயலின்மையும் ஒருங்கே கொண்ட நடுத்தர மக்களோ, புத்தம் புது மலர்களாக இருக்கும் மாணவர்களோ இத்தகைய மக்கட் பிரிவினரிடம் சென்று, ஒன்றி, வாழ்ந்து, கேட்டு, கற்று, இறுதியில் வென்று காட்டும் அந்த பாடம்தான் புதியவர்களைக் கம்யூனிஸ்ட்டாக மாற்றிக் காட்டும். பழைய உலகின் உணர்ச்சிகள் சூழ வாழும் புதிய தோழர்கள் இந்தப் பாதையின் செங்குத்துச் சரிவில் களைப்படைவதும், சோர்வடைவதும் உண்டு. ஆரம்பத்தில் அவர்களிடமிருக்கும் உற்சாகமும், துடிப்பும், உணர்வும் இடையில் சற்று வறண்டு போவதன் காரணம் இதுதான். ஆயினும் இறுதியில் சிகரத்தின் உச்சியைத் தொடுவோம் என்பதால் இடையில் வரும் இந்தத் தடங்கல்களுக்கு அயர வேண்டியதில்லை. மீண்டும் மீண்டும் நடைமுறையில் ஈடுபட வேண்டும். இதைத் தவிர நமது இதயம் ஈரத்தைத் தக்கவைப்பதற்கு வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை.

ஆகவே, இலக்கியம் ஏதும் தேவையில்லை என்கிறோமா? இல்லை. இன்றிருக்கும் பெரும்பான்மை கலை இலக்கியங்கள் பழைய உலகின் உணர்ச்சிகளோடு கட்டுண்டு கிடப்பவையே. நமது புதிய உலகின் உணர்ச்சிகளுக்கு உற்சாகமளிக்கும் இலக்கியங்கள் குறைவுதான். இருப்பினும் கிடைக்கும் எதனையும் படியுங்கள். அவை பழைய உலகம் பற்றிய உங்களின் விமர்சனப் பார்வையைக் கூர்மைப்படுத்த நிச்சயம் பயன்படும். அதுவும் உங்களின் அரசியல் கல்வி போராட்ட நடைமுறையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமைய முடியும்.

ஆம். இலக்கியங்களிலிருந்து உணர்வும், உற்சாகமும் தன்னியல்பாய்ப் பிறக்க முடியாது. பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது.
_____________________________________________

– புதிய கலாச்சாரம் ஆசிரியர் குழு, செப்டம்பர்- 2002

_____________________________________________

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

3

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

  1. வறுமை: ஆப்பிரிக்காவை வென்றது ‘வல்லரசு’ இந்தியா!
  2. குண்டுவைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள்
  3. உணவு தானியத்திலிருந்து சாராயம்: ஏழைகள் மீது ஏவிவிடப்படும் இன்னுமொரு போர்!
  4. கயர்லாஞ்சி – மேலவளவு தீர்ப்புகள்: நீதிமன்றங்களின் வன்கொடுமை
  5. நோக்கியா: பன்னாட்டு வர்த்தக கழக ஆட்சி!
  6. வீர வணக்கம், தோழர் ஆசாத்!
  7. பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்: சுரங்கத் தொழில் மாஃபியாக்கள்
  8. உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி! கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை!
  9. இந்தியாவின் ஆசியுடன் ராஜபக்சவின் ஆதிக்கம்
  10. ஆப்பிரிக்கா: பன்னாட்டு முதலாளிகள் நடத்தும் நிலப்பறிப்பு
  11. தில்லைக்கோயில் தீண்டாமைச் சுவர்: ‘மார்க்சிஸ்டு’ – கலைஞர் நிழற்சண்டை!
  12. திரவியம் தேடிப் போனவர்களின் துயரக்கதை
  13. பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம்: தடையற்ற கொள்கைக்கு அனுமதி!

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

தொடர்புடைய பதிவுகள்

<a href=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/08/bhopal_special_puja_july_2010.pdf” target=”_blank”><img class=”aligncenter size-full wp-image-8337″ title=”bhopal-special-issue” src=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/07/bhopal-special-issue.jpg” alt=”” width=”500″ height=”699″ /></a>

<a href=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/08/bhopal_special_puja_july_2010.pdf” target=”_blank”><strong>புதிய ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF)</strong><strong> பெற   இங்கே  அழுத்தவும்</strong></a>
<ol>
<li>போபால்: நீதியின் பிணம்</li>
<li>போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்</li>
<li>மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…</li>
<li>விபத்தா, படுகொலையா?</li>
<li>உயிர் பிழைத்த துர்பாக்கியசாலிகள்</li>
<li>அவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை</li>
<li>ராஜீவ் காந்திக்கு ஒண்ணுமே தெரியாதாம்!</li>
<li>ஓட்டுநர் செய்த தவறுக்கு ஓனரையா தண்டிக்க முடியும்? உச்ச நீதிமன்றத்தின் மரத்தடி பஞ்சாயத்து</li>
<li>அமைச்சர்கள் குழுவா? அடிவருடிகள் கும்பலா?</li>
<li>யோக்கியன் வர்றான்..போபால் படுகொலை தீர்ப்பைக்   காட்டிகாங்கிரசைச் சாடி வரும் பா.ஜ.க.வின் மறுபக்கம்.</li>
<li>இந்தியா வல்லரசாகிறதா? வல்லரசுகளின் குப்பைத் தொட்டியாகிறதா?</li>
<li>அமெரிக்கக் கடலில் கலந்த எண்ணெய் இந்தியக் காற்றில் கலந்த நஞ்சு – பேரரசின் நீதி</li>
<li>பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல் – பி.சாய்நாத்</li>
<li>டௌ கெமிக்கல்ஸ்: பன்னாட்டு கொலைத் தொழிற்கழகம்</li>
<li>ஆண்டர்சனின் அடிச்சுவட்டில் அணுசக்தி கடப்பாட்டு மசோதா</li>
<li>அன்னியரும் துரோகியரும் கிளப்பிய நச்சுக்காற்று சுழன்றடிக்கிறது செத்து மடிவீரோ? விடுதலைக்காய் வெகுண்டெழுவீரோ?</li>
<li>இதற்குப் பெயர் நிவாரணமா?</li>
</ol>
<strong> </strong><a href=”https://www.vinavu.com/wp-content/uploads/2010/08/bhopal_special_puja_july_2010.pdf” target=”_blank”><strong>புதிய  ஜனநாயகம் ஜூலை 2010 மின்னிதழ் (PDF)</strong><strong> பெற   இங்கே  அழுத்தவும்</strong></a><strong> </strong>

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக்    செய்து காத்திருக்கவும் அல்லது  சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ்    ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or    SAVE TARGET AS or SAVE LINK AS).
<ul>
<li><strong><a onclick=”javascript:pageTracker._trackPageview(‘/outbound/article/http://feedburner.google.com/fb/a/mailverify?uri=vinavu&amp;loc=en_US’);” href=”http://feedburner.google.com/fb/a/mailverify?uri=vinavu&amp;loc=en_US” target=”_blank”>வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…</a></strong></li>
<li><strong><a href=”http://www.facebook.com/vnavu” target=”_blank”>பேஸ்புக்கில்          வினவு</a>
</strong></li>
<li><strong><a onclick=”javascript:pageTracker._trackPageview(‘/outbound/article/http://twitter.com/vinavu’);” href=”http://twitter.com/vinavu” target=”_blank”>வினவை டிவிட்டரில் தொடர்க</a></strong></li>
<li><strong><a href=”../support/” target=”_blank”>வினவை ஆதரியுங்கள்</a></strong></li>
</ul>
<strong>தொடர்புடைய பதிவுகள்</strong>
<ul>
<li><strong><a href=”https://www.vinavu.com/category/politics/puja/” target=”_blank”>புதிய    ஜனநாயகம் கட்டுரைகள் </a></strong></li>
<li><strong><a title=”Permalink to புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF)  டவுண்லோட்  !” rel=”bookmark” href=”../2010/06/04/puja-june-2010-2/”>புதிய ஜனநாயகம் ஜூன் 2010</a></strong></li>
<li><strong><a title=”புதிய  ஜனநாயகம் – மே, 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!” href=”../2010/05/13/puja-may-2010/”>புதிய  ஜனநாயகம் மே, 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2010 மின்னிதழ் (PDF)   டவுன்லோட்!” rel=”bookmark” href=”../2010/04/02/puja-april-2010/”>புதிய ஜனநாயகம் ஏப்ரல், 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) –  டவுன்லோட்  !” rel=”bookmark” href=”../2010/03/04/puja-mar-2010/”>புதிய ஜனநாயகம் மார்ச் 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010 மின்னிதழ் (PDF) –   டவுன்லோட் !” rel=”bookmark” href=”../2010/02/05/puja-feb-2010/”>புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) –  டவுன்லோட்  !” rel=”bookmark” href=”../2010/01/12/puja-jan-10/”>புதிய ஜனநாயகம் ஜனவரி 2010
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) –   டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/12/07/puthiya-jananayagam-december/”>புதிய ஜனநாயகம்  டிசம்பர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) –   டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/11/04/puthiya-jananayagam-november-2009/”>புதிய  ஜனநாயகம் நவம்பர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 மின்னிதழ் (PDF) –   டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/10/14/puthiya-jananayagam-october-2009/”>புதிய  ஜனநாயகம் அக்டோபர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 மின்னிதழ் (PDF) –   டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/09/09/puja-sep-09/”>புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009
</a></strong></li>
<li><strong><a title=”புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009 மின்னிதழ் (PDF) –   டவுன்லோட்” rel=”bookmark” href=”../2009/08/11/puja-aug-2009-download/”>புதிய ஜனநாயகம் ஆகஸ்டு  2009</a></strong></li>
</ul>
<strong><a title=”Permalink to புதிய ஜனநாயகம் ஜூன் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட்  !” rel=”bookmark” href=”../2010/06/04/puja-june-2010-2/”>
</a></strong>

<abbr title=”2010-06-04T08:03:18+0000″></abbr>