privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க1 வயது குழந்தைக்கு சிறை - திருச்சி போலீசின் 'தாயுள்ளம்'!

1 வயது குழந்தைக்கு சிறை – திருச்சி போலீசின் ‘தாயுள்ளம்’!

-

நேற்று சீரங்கம் கோயிலில் அன்னதானம் செய்ய வந்த அம்மாவுக்கு கருப்புக் கொடி காட்டி, அதிமுக காலிகளால் தாக்கப்பட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் நேற்றிரவே திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். மாஜிஸ்திரேட் காயத்தை பதிவு செய்து கொண்டார். ஆனால் காயத்துக்கு காரணமானவர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று போலீசை கேட்டதாகத் தெரியவில்லை. அதெற்கெல்லாம் பி.ஆர்.பி யாகப் பிறக்க வேண்டும்.

நேற்று கைது செய்யப்பட்டிருப்பவர்களில் 11 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 3 குழந்தைகள். சிறுவர்கள் அல்ல குழந்தைகள்.

இளமாறன் –வயது 3, சிந்தனை -வயது 2, அஜிதா –வயது 1 . இந்த மூவரும் இப்போது திருச்சி மத்திய சிறையில்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143, 153, 188, 189, 190, 353, 500, 501, 504, 506(1) ஆகிய பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீசு.

கூடங்குளம் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டிருக்கும் மக்களை, பாளையங்கோட்டை சிறையில் வைத்தால் சொந்த பந்தங்கள் வந்து பார்த்து விடக்கூடுமே என்பதனால், அதைத் தடுப்பதற்காக, அவர்களை திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பியது நெல்லை போலீசு. இப்போது 3 குழந்தைகள் உட்பட 21 பேரை திருச்சி சிறைக்கு அனுப்பி அம்மக்களின் வாட்டத்தைப் போக்கி விட்டது திருச்சி போலீசு.

அம்மாவுக்கே தெரியாமல் போலீசாரின் உள்ளத்தில் புகுந்து வேலை செய்கிறது அம்மாவின் தாயுள்ளம் – அடேங்கப்பா!

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. அம்மாவுக்கு பிரதமர் ஆசை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது.கோ தானம் கொடுத்து,10 பாப்பாத்திகளுக்கு தன் கையால் சோறு போட்டால் பாராளு மன்றத் தேர்தலில் 40/40 ஜெயித்துவிடலாம் என்று எவனோ மலயாள ’சோ’சியன் சொல்லியிருப்பான்.அதோட நாலு குழந்தைகளையும் ஜெயிலில் தள்ளினால் சுபிச்சம்ன்னு எவனாவது மந்திரவாதி(வீரத்துறவி ராமகோபாலனா கூட இருக்கலாம்)சொல்லியிருப்பான்.இப்படிப்பட்ட அடிமுட்டாள்களாலதான் நாம ஆளப் படுறோம் என்பதை நினைக்கும்போது வெக்கக்கேடாத்தான் இருக்குது.இந்த பாவம் சும்மா விடாதுன்னு சொல்லிட்டு பேசாம இருந்துடக்கூடாது.பழிவாங்கியே தீரனும்.

  2. இளமாறன் –வயது 3, சிந்தனை -வயது 2, அஜிதா –வயது 1

    கண்டிப்பாக இவர்கள் பயங்கரவாதிகள் தான் இவர்கள் பயங்கரவாதிகள் என்பதற்கு மிகப்பெரிய ஆதாரம் இவர்கள் பெயர்களை பாருங்கள் இப்படிபட்ட பெயர்கள் எல்லாம் தீவிரவாதிகள் தான் வைப்பார்கள்

    சட்டீஸ்கர் பழங்குடியினரை சுட்டு கொண்றுவிட்டு டிஞ்சர் பாட்டிலும் கட்டும் துணியும் வைத்திருந்தார்கள் ஆகவே அவர்கள் மாவோஸ்டுகள்தான் என்று ஒரு போலிஸ் அதிகாரி கதையளந்தான் (ஆனந்தவிகடன் கட்டுரையில் படித்தேன்)

    அதை போலவே இந்த குழந்தைகளும் கண்டிப்பாக பயங்கரவாதிகள்தான்

  3. ஜனநாயகம் என்ற பேரில் அசிங்கமான சர்வாதிகார ஆட்சி ! இன்னமும் புத்தி வராத மக்களை சொல்ல வேண்டும்.

  4. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் தவறை சுட்டிகாட்ட அந்த மக்களுக்குகாண ஜனநாயக உரிமை மறுக்கப்படுகின்றது. இதுதான் மக்களாட்சி முறையின் நியாயமா? ஒருவயது குழந்தையயும் சிறையில் அடைக்க முடிகிறது என்றால் அம்மாவின் தாய் உள்ளதை எப்படி வர்ணிப்பது? இதை தமிழ் நாட்டுமக்கள் சிந்திப்பீர்!

  5. ஒரு வயது குழந்தை கூட எதிர்க்குதுப்பா அம்மா (கொடைநாட்டு)ஆட்சியையும் ,(கூடங்கூலம்)அராஜகத்தையும்.உள்ளே இருந்து அழுகிற குழந்தை தன் தாயை பார்த்து அல்ல. இந்த பேயை பார்த்து.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க