privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்தமிழகமெங்கும் பற்றி பரவட்டும் மாணவர் போராட்டத்தீ!

தமிழகமெங்கும் பற்றி பரவட்டும் மாணவர் போராட்டத்தீ!

-

ழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும், சிங்கள இனவெறி இராஜபக்சேவுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டங்கள், ஒருநாள் அடையாள போராட்டமாகவும், உயிரற்றப் போராட்டங்களாகவும் முடங்கி விடாமல், 80-களின் மாணவர் எழுச்சியை தமிழகத்தில் உருவாக்க தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி அனைத்துக்கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 21.03.2013 இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைமறியல் போராட்டங்களை நடத்த இருக்கிறது.

1) பச்சையப்பன் கல்லூரி, கோயம்பேடு செயின்ட் தாமஸ் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து காலை 11.00 மணிக்கு, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள, பச்சையப்பன் கல்லூரி முன்பாக சாலை மறியல்.

2)  ஏ.எம்.ஜெயின் கல்லூரி, தாகூர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து, காலை 10.30 குரோம்பேட்டை பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியல்.

3) பொன்னேரி, எல். என்.ஜி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பகுதி மக்களை ஒருங்கிணைத்து பொன்னேரி இரயில் நிலையத்தில் வடமாநிலம் நோக்கி செல்லும் இரயிலை மறித்துப் போராட்டம்.

என பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்த இருக்கிறோம்.

எமது ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி ஒருங்கிணைத்து நடத்துகின்ற இந்த மறியல் போராட்டங்களில் மாணவர்களோடு பெருந்திரளாக பொதுமக்களும் பங்கேற்க வேண்டுமென்று அறைகூவி அழைக்கிறோம்.

தமிழகமெங்கும் பற்றி பரவட்டும் போராட்டத்தீ!

தகவல்:
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க