ஐபிஎல் : முதலாளிகளின் மங்காத்தா – 2
ஐபிஎல் மங்காத்தாவில் விளையாடும் முதலாளிகளின் ஆட்டம் இப்போது இன்னும் சூடு பிடித்திருக்கிறது. இதிலும் ஃபிக்சிங் உண்டு, விக்கெட்டுகள் சரிவது உண்டு. இப்போது ஆட்டம் கண்டிருக்கும் விக்கெட் சென்னை ஐபிஎல் அணியின் முதலாளி சீனிவாசனுடையது.
கிரிக்கெட் தொழிலைப் பொறுத்த வரை சீனிவாசன் வீழ்த்திய முதல் விக்கெட் ஸ்பிக் முதலாளி ஏ சி முத்தையா. உர மான்யம் மூலமாக மக்கள் வரிப்பணத்தை ஆட்டையை போட்டுக் கொண்டே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் இருந்தவர் ஏ சி முத்தையா. அவரது தயவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் சீனிவாசன். அந்த கால கட்டத்தில் தினமும் ஏ சி முத்தையாவின் வீட்டுக்கு காரில் போய் அவரை சந்தித்து பேசி விளையாட்டுத் தொழிலில் தனது நுழைவுக்கு ஆதரவு கேட்பாராம் சீனிவாசன்.
சீனிவாசன் கிரிக்கெட் சங்கத்தில் நுழைவதை 146 உறுப்பினர்களில் 118 பேர் எதிர்த்ததாகவும் முத்தையா அவருக்கு உறுதியாக உதவியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு உள்ளே நுழைந்த சீனிவாசன் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டத்தில் முத்தையாவை வீழ்த்தி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை கைப்பற்றியதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள் காலடி எடுத்து வைத்தார். இவையெல்லாம் தெருவோர கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் போடும் சண்டை அல்ல. அமுத சுரபி போல அள்ளித்தரும் கிரிக்கெட் எனும் மாபெரும் வர்த்தகத்தை கைப்பற்றும் சாம்ராஜ்ஜியப் போர்!
சீனிவாசன் பங்கேற்ற அடுத்த காய் நகர்த்தல் வங்காள கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியாவை வீழ்த்துவதற்கானது. 1980-களுக்குப் பிறகான மறுகாலனியாக்க சூழலில் ரியல் எஸ்டேட் குடும்பத் தொழிலை விட வளர்ந்து வந்த கிரிக்கெட் தொழில் லாபகரமானது என்று முடிவு செய்து 20 ஆண்டுகளுக்கு மேல் இந்திய/உலக கிரிக்கெட் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தியவர் ஜக்மோகன் டால்மியா. டால்மியா பதவி விலகும் வரை அல்லது விலக்கப்படும் வரை பெரும் ஊழல்கள் செய்தவர். அந்தக் குற்றச்சாட்டுகள் வழக்குகளாக மாறியதும் உண்டு. அத்தகையவரது தயவில் வாரியத்தின் நிதிக் குழு தலைவர் பதவியை பிடித்தார் சீனிவாசன்.
2005 முதல் 2010 வரை நேரடியாகவும், பினாமி மூலமாகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கட்டுப்படுத்திய சரத் பவார் மத்திய ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசின் விவசாய அமைச்சராகவும் இருந்தார். மத்திய அரசின் மக்கள் விரோத விவசாய கொள்கைகளால் மராட்டிய நீர்ப்பாசன ஊழலில் ஆயிரக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் கொள்ளை போனது; அந்தக் கொள்ளையில் சரத் பவாரின் உறவினராக அஜித் பவாரும் ஏனைய பினாமிகளும் பங்கேற்றனர். கூடவே, மாராட்டிய மாநில சர்க்கரை ஆலைகளும் பவாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அந்த வகையில் அவர் மிகப்பெரும் தரகு முதலாளி.
இவர் விவசாய அமைச்சராக இருக்கும் போதுதான் அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த கால கட்டத்தில் சரத்பவார் முழு நேர கிரிக்கெட் நிர்வாகியாக தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார்.
அவர் 2004-ம் ஆண்டு கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது டால்மியாவின் பினாமியிடம் தோல்வியடைந்தார். அடுத்த ஆண்டே தமிழ்நாட்டின் சீனிவாசன், அப்போது ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க பிரதிநிதியாக இருந்த லலித் மோடி உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் டால்மியாவை மண்ணைக் கவ்வ வைத்து கிரிக்கெட் வாரியத்தை கைப்பற்றினார் சரத்பவார். அதைத் தொடர்ந்து டால்மியா மீது மோசடி, பண கையாடல் வழக்குகள் போடப்பட்டு அவர் கல்கத்தா கிரிக்கெட் சங்க பதவியிலிருந்தும் நீக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். டால்மியா மீது மும்பை போலீசில் புகார் கொடுத்தவர் சீனிவாசன்.
சரத் பவார் தலைவர் ஆனதும் சீனிவாசன் வாரியத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். சீனிவாசன் 2008-ல் ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியை குத்தகைக்கு எடுத்தார். “வாரிய நிர்வாகிகள் எந்த கிரிக்கெட் போட்டியிலும் வணிக ஆதாயம் ஈட்டக் கூடாது” என்ற விதி திருத்தப்பட்டு ஐபிஎல் மற்றும் பிற டி-20 போட்டிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. எந்த சட்டமும், விதிகளும் முதலாளிகளின் நலன் பொருட்டே அவதரிக்க மட்டுமல்ல, திருத்தவும் படும். அதன் மூலம் வெளிப்படையாக பலன் அடைந்தவர் சீனிவாசன். இந்தியா சிமென்ட்ஸ் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் சொந்தக்காரராக இருந்த அதே நேரத்தில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பொருளாளர், செயலாளர், தலைவர் என்று அடுத்தடுத்து பதவி வகித்தார்.
இரு பதவிகளையும் ஒரே முதலாளி வைத்திருப்பதால் ஏற்படும் பொருளாதார நல முரண்பாட்டை எதிர்த்து அவரது ஆரம்ப எதிரி ஸ்பிக் ஏ சி முத்தையா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சமாளிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் விவகாரங்களை தனது மருமகன் குருநாத் மெய்யப்பனிடம் விட்டிருந்தார் சீனிவாசன். உச்ச நீதிமன்ற அமர்வின் 2 நீதிபதிகள் எதிரெதிரான தீர்ப்புகளை அளித்தனர். விரிவான அமர்வு ஒன்றின் விசாரணைக்காக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அது ஒரு புறமிருக்க இந்திய கிரிக்கெட் தொழிலில் தனது பிடியை வலிமையாக்கிக் கொண்டார் சீனிவாசன்.
இந்தியா சிமென்ட்சில் வெறும் 0.14 சதவீதம் பங்குகளை மட்டும் வைத்திருக்கும் அவர் பல்வேறு உறவினர்கள், அறக்கட்டளைகள் என்று பினாமி மூலமாக சுமார் 28 சதவீதம் பங்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவற்றின் மூலம் கம்பெனியை 100 சதவீதம் கட்டுப்படுத்துகிறார். மூலதனமும், பங்குகளும், உரிமையும் எப்படி கண்ணுக்குத் தெரியாமல் இணைக்கப்பட்டிருக்கின்றதோ அதே போன்ற மங்காத்தா விளையாட்டைத்தான் கிரிக்கெட்டிலும் நடத்துகிறார், சீனிவாசன். கோடிக்கணக்கான மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்குவதன் மூலம் இப்போதைய கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் ஆட்டக்காரர்கள், மாநில கிரிக்கெட் சங்கங்கள் அனைவரின் விசுவாசத்தையும் வாங்கியிருந்தார். கிரிக்கெட் வர்த்தகத்திற்கு விலை போகாதவர்கள் என்று எவருமில்லை.
ஐபிஎல்லை உருவாக்கி நிர்வகித்த, சரத் பவாரின் ஆதரவு பெற்ற லலித் மோடியை அவரது மோசடி, முறைகேடுகளை பயன்படுத்திக் கொண்டு 2010-ம் ஆண்டு நாட்டை விட்டே ஓடிப் போக வைத்தார், சீனிவாசன். அவர் மீது சென்னை போலீசில் மோசடி புகார் கொடுத்தவரும் சீனிவாசன்தான். இதெல்லாம் பிசிசிஐ எனும் நிறுவனத்தின் ஆதாயங்களை அடைய சண்டை போட்ட முதலாளிகளின் குடுமிபிடிச் சண்டையின் விளைவுகள். அதனால் ஏதோ சீனிவாசன் தர்ம நியாயங்களுக்கு கட்டுப்பட்டு ஊழல்களை அம்பலப்படுத்தினார் என்று புரிந்துகொள்ளக் கூடாது.
அது உண்மைதான் என்பது மருமகன் குருநாத் மெய்யப்பன் மூலம் நடத்தப்பட்ட ஐபிஎல் சூதாட்டங்களின் மூலம் சீனிவாசன் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதன் மூலம் தெரிய வருகிறது.
தமிழ் திரையுலகின் தாதாக்களான ஏவிஎம் குடும்பத்தைச் சேர்ந்த குருநாத் மெய்யப்பன், சீனிவாசனின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். ‘சிமென்ட் தொழிலில் மற்ற முதலாளிகளுடன் கூட்டணி வைத்து விலையை உயர்த்தி, ஆண்டுக்கு ரூ 4,200 கோடி விற்பனையில் சுமார் ரூ 100 கோடி லாபம் பார்க்க முடிகிறது. இதுவே சென்னை சூப்பர் கிங்ஸை சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரு மாதத்திலேயே அவ்வளவு லாபம் சம்பாதித்து விடலாம், எல்லாம் என்னிடம் விட்டுடுங்க’ என்று குருநாத் மாமனாரிடம் சொல்லியிருக்கலாம்.
மாமனார் கிரிக்கெட் வாரியத்தை கட்டுக்குள் வைத்திருக்க, மருமகன் சென்னை ஐபிஎல் அணி விவகாரங்களை பார்த்துக் கொள்ள சென்னை அணியின் பிராண்ட் மதிப்பு வாங்கிய போது இருந்த ரூ 500 கோடியை விட சில மடங்காவது தாண்டியிருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட மகேந்திர சிங் தோனியை இந்திய அணி தலைமை பொறுப்பிலிருந்து நீக்குவதாக தேர்வுக் குழு முடிவு செய்த போது வாரியத்தின் தலைவர் என்ற முறையில் சீனிவாசன் அதைத் தடுத்திருக்கிறார். தோனியின் கட்டுப்பாட்டில் இந்திய அணி இருப்பது வரை சென்னை சூப்பர் கிங்ஸின் பிராண்ட் மதிப்பு உயரும். அதைப் பாதுகாக்க வேண்டியதுதான் சீனிவாசனின் முதல் கடமை. அதைத் தவறாமல் செய்திருக்கிறார். மேலும் தோனி தற்போது இந்தியா சிமெண்ட்சின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக பந்தயம் வைத்து சூதாடியதற்காக குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்ட செய்தி வந்ததும் பங்குச் சந்தையில் இந்தியா சிமென்ட்சின் பங்கு விலை 20% சரிந்து ரூ 87.40-லிருந்து ரூ 71.65 ஆக இறங்கியது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் ரூ 500 கோடி வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ரூ 500 கோடி பிராண்ட் மதிப்புடைய சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற வால்தான், ரூ 2,000 கோடி சந்தை மதிப்புடைய இந்தியா சிமென்ட்ஸ் என்ற நாயை ஆட்டுகிறது என்றால் ஐபிஎல் அணியின் சொத்து மதிப்பை புரிந்து கொள்ளலாம்.
குருநாத் மெய்யப்பனின் தவறுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று, ‘பெரிய மனது’ வைத்து, ஐபிஎல்லின், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மாண்பை மக்கள் முன்பு காப்பாற்றுவதற்கு சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகளும் மற்ற அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். வாரியத்தின் விதிகளின்படி சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது, சொல்லவும் மாட்டார்கள்.
ஐபிஎல் போட்டி தொடர்பான சூதாட்ட கும்பலில் ஒருவராக குருநாத் கைது செய்யப்பட்டதும், அதுவரை அணியின் உரிமையாளராக முன் நிறுத்தப்பட்டு வந்த அவர், ஒரு சாதாரண கிரிக்கெட் ஆர்வலர்தான், சும்மா டீம் கூட சுத்திக் கிட்டு இருப்பார் என்று சீனிவாசன் நிறுவ முயன்றதை இவர்கள் யாரும் தட்டிக் கேட்கவில்லை. ஒரே நாளில் குருநாத்தின் டுவிட்டர் புரொஃபைல் மாற்றப்பட்டதையும், பொது வெளியில் இருக்கும் டுவிட்டர் விபரங்களுக்கே இந்த கதி என்றால் சீனிவாசன் & கம்பெனி கையில் இருக்கும் இந்தியா சிமென்ட்சிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலும் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய விபரங்கள் என்னவாகியிருக்கும் என்பதையும் கிரிக்கெட் முதலாளிகள் யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை.
ஐபிஎல் ஆணையராக பதவி வகிக்கும் காங்கிரஸ் அமைச்சர் ராஜீவ் சுக்லாவும், கிரிக்கெட் வாரிய துணைத் தலைவராக இருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் ராஜ்ய சபா துணைத் தலைவர் அருண் ஜேட்லியும், குருநாத் மெய்யப்பன் விவகாரத்தை விசாரிக்கப் போகும் குழுவை அமைப்பதில் சீனிவாசன் தலையிட்டு விடக் கூடாது என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்களாம். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், தொலைக்காட்சி நிலையங்களிலும், பத்திரிகைகளிலும் ஊழலுக்கு எதிராக வீரமாக முழக்கமிடும் அருண் ஜேட்லி கிரிக்கெட் மோசடிகள் வெளியில் வந்து நாறுவது வரை அவற்றை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்றால் ஊழல் எதிர்ப்பு இந்துத்துவ அரசியலின் நேர்மையை புரிந்து கொள்ளலாம்.
அவரது ஐபிஎல் அணிக்கு சொந்தமான தோனியை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்குவதை தடுத்தது போல அவரது மருமகன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு குழு அமைப்பதில் வாரியத் தலைவர் என்ற முறையில் சீனிவாசன் தலையிட்டிருந்தால் வாரிய விதிகளோ, சக முதலாளிகளோ எதுவும் செய்திருக்கப் போவதில்லை, செய்திருக்கவும் முடியாது.
கிரிக்கெட் வாரிய பதவிகள் வகிக்கும் போதே ஐபிஎல் அணி முதலாளியாகவும் இருந்த சீனிவாசனை 3 ஐபிஎல் அணிகளில் பினாமிகள் மூலம் பங்குகள் வைத்திருந்த லலித் மோடியோ, புனே அணியில் பினாமி பங்குகள் வைத்திருப்பதாக சொல்லப்படும் சரத்பவாரோ விமர்சிப்பார்களா, என்ன?
குருநாத் மெய்யப்பன் சிக்கலில் மாட்டியதும், சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று மே 24-ம் தேதியே சரத்பவார் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி பி திரிபாதி அவசரக் குடுக்கையாக கூறினார். அதை உடனடியாக வாபஸ் வாங்கிய சரத்பவார், ஒரு வாரத்துக்குப் பிறகு, காலம் கனிந்து விட்டது என்று உணர்ந்து அதே கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். “நான் வாரியத் தலைவராக இருந்திருந்தால் இத்தகைய முறைகேடுகள் நடந்திருக்காது” என்று இப்போது அவர் சொல்கிறார். “கிரிக்கெட்டை காதலிக்கும் லட்சக்கணக்கான பேர் கோபமாக உள்ளனர். அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டால் அது இந்த நாட்டில் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்” என்று முதலைக் கண்ணீர் விடுகிறார் சரத்பவார்.
சரத்பவார் வழிகாட்டியதும், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகமும் களத்தில் குதித்திருக்கிறது. “கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை முடிவது வரை அதன் தலைவர் தார்மீக அறங்களின்படி பதவி விலக வேண்டும்” என்று ஒரு பிட்டை போட்டிருக்கிறது.
உறுதியான நிர்வாகம், ஊழலற்ற அரசியல் என்று இந்துத்துவா அம்பிகளால் விதந்தோதப்படும் நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கும் குஜராத் மாநில கிரிக்கெட் சங்கமோ ‘அவரே எந்த தவறும் செய்யாததால்’ சீனிவாசனை உறுதியாக ஆதரிப்பதாக சொல்கிறது. தான் பிரதமர் ஆவதற்கு உதவும் என்றால் கர்நாடகாவின் எடியூரப்பாவையும் ஆதரிப்பவர்தான் மோடி.
ஐபிஎல் சூதாட்டம் பற்றி விசாரித்து உண்மைகளை கண்டறிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியமித்திருக்கும் மூன்று நபர் குழு உண்மையில் எதையும் கண்டறியவோ, சரி செய்யவோ போவதில்லை என்பதை சீனிவாசனே கூறி விட்டார். “நாங்கள் ஒரு தனியார் அமைப்பு, அரசு இல்லை. எங்களுக்கு விசாரணை செய்யும் அதிகாரங்கள் இல்லை” என்று அவர் ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சூதாட்ட தரகர்கள், சூதாடும் வீரர்கள் யாரையும் கண்காணிக்கவோ, தகவல் தொடர்புகளை ஒட்டுக் கேட்கவோ, தவறு செய்பவர்களை கைது செய்யவோ அதிகாரம் இல்லாத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல் முறைகேடுகளை எப்படி ஒழுங்குபடுத்தும் என்று கேட்டவர் இந்த சீனிவாசன். ஒரு முறைகேடே முறைகேடுகளை ஒழுங்குபடுத்த முடியுமா என்ன?
சுருக்கமாகச் சொன்னால், இப்போது அம்பலமாகியிருக்கும் சீனிவாசன், குருநாத் மெய்யப்பன் உள்ளிட்ட சூதாடிகளின் திருவிளையாடல்கள் அனைத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளாலும் அவரது சக முதலாளிகளாலும் அனுமதிக்கப்படுபவை. அதனால்தானோ என்னவோ சூதாட்ட கிங்குக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2013-ல் களத்தில் “நெறிமுறை தவறாமல் நேர்மையாக விளையாடிய அணி (fair play)” என்ற பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
கிரிக்கெட் வாரிய விதிகளின்படி சூதாடி முதலாளிகளை நீக்க முடியாது; ஊழல்களை சரி செய்ய முடியாது; கிரிக்கெட் விளையாட்டின் ஆரோக்கியத்தை மீட்க முடியாது எனும் போது சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டியது பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான். ஆனால், மேட்ச் பிக்சிங்குக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதாக சொல்லும் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசு தலையிடாது என்று முதலாளிகளுக்கு உறுதி அளித்திருக்கிறார். அதன் மூலம் சீசன்களின் போதும், சீசன்களுக்கு இடையேயேயும் முதலாளிகளின் மங்காத்தா தொடர்வதற்கு உத்தரவாதம் வழங்கியிருக்கிறார்.
ஐபிஎல் மோசடிகளையும் ஊழல்களையும் வெறுமனே கிரிக்கெட் எனும் ஒரு விளையாட்டு வர்த்தகமாக ஆனதின் பிரச்சினைகள் என்று எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளக்கூடாது. இது உண்மையில் பல ஆயிரம் கோடிகள் புழங்கும் கிரிக்கெட் எனும் சாம்ராஜ்ஜியத்தில் முதலாளிகள் எப்படி தொழில் செய்கிறார்கள், சட்டம், விதிமுறை, நெறிமுறை அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு தங்களது கொள்ளைக்கேற்ப தொழிலை எப்படி வடிவமைக்கிறார்கள், ஆளும் வர்க்கங்களின் அரசியல்வாதிகள், முதலாளிகள், அதிகாரிகள், ஊடகங்கள் அனைத்தும் இதில் எப்படி சங்கமத்திருக்கிறார்கள் என்பதை நமக்கு காட்டுகிறது.
முதலாளித்துவம் என்றால் என்ன அதன் கோரம் என்ன என்பதை புரிந்து கொள்ளாதவர்களுக்கு பிசிசியும் அதன் தலைவர் சீனிவாசனும் எடுத்துக்காட்டுகள். ஐபிஎல்லை தடை செய்து, பிசிசிஐ நாட்டுடமையாக்கி, அதன் சொத்துக்களை மக்களுடைமையாக்குவது தவிர இந்த கொள்ளையர்களை துரத்துவதற்கு வேறு வழியில்லை.
(தொடரும்)
____________________
– அப்துல்
____________________
//… ஐபிஎல்லை தடை செய்து, பிசிசிஐ நாட்டுடமையாக்கி அதன் சொத்துக்களை மக்களுடைமையாக்குவது தவிர இந்த கொள்ளையர்களை துரத்துவதற்கு வேறு வழியில்லை…//
இதற்கு பதில் மொத்த கிரிகட்டயுமே தடை பண்ணிடலாம்.
பசியால் வாடும் ஆப்பிரிக்க மக்களுக்கு கொடுப்பதை காட்டிலும் கோதுமையை கடலில் வேண்டுமானாலும் வீசுவோம்
– அமெரிக்க ஐக்கிய நாடுகள்
When India was starving America gave it is Wheat, Not Russia, Cuba …
கிரிக்கெட் அவாள் விளையாட்டு!இதன் ஊழல்களை மனுதர்மப்படி மட்டும் விசாரித்து ரொம்ப நல்லவா என சான்றும் ஜாமினும் உடனுக்குடன் வழங்கப்படும்.
Wonderful analysis…Tamils have the highest IQ
//..”Wonderful analysis…Tamils have the highest IQ”..//
Of course you are correct Ram and this happens in practical also.
னல்ல கூத்து சாமியோவ்!
இன்டியாவில் எல்லோரும் திருட்ர்கல்தாம் (:-).தாலுகா ஆபிசு பியோன் முதல் சுப்ரெம் கோர்ட் ஜட்ஜ் வரை எல்லொரும் ஒன்ருதான்.
Ithukum modikum enna sampantham seema comedy vinavu
பத்தாண்டுகளுக்கு முன் இந்தியா சிமெண்ட் என்ற நிறுவனம் வீழ்ந்த போது தூக்கி நிறுத்தியது வங்கிகளும் மற்ற நிதி நிறுவனங்களும்தான். ஐசிஐசிஐ முதல் 27 வங்கிகளுக்கு வாங்கிய அசலில் 15 சதவீதம் மட்டுமே செலுத்தி நிறுவனத்தை லாப பாதைக்கு மாற்றியதோடு மட்டுமல்ல, வேறுசில சிமெண்ட் ஆலைகளை வாங்கினார்.
அன்று வங்கிகளை ஏமாற்றினார், மக்கள் பணத்தை மறைமுகமாக கொள்ளையடித்து
இன்று நேரடியாக ஏமாற்றுகிறார்
N Srinivasan is a big scoundrel and thief.The company started by his father was a good company and did well,after a point they aligned too much with murasoli maran and this company if proxy owned by the DMK,N Srinivasan is just a benami,
கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்று சொல்வதெ தவறு. அது ஒரு போங்கு ஆட்டம். மக்களை முட்டாளா ஆக்கூற ஒரு சூதாட்டம். அதை தடை செய்ய வேண்டும்.
தன்னை ஆளபோகிற ஒரு எம் எள் எவை பற்றி அறிந்து கொள்ள மூன்று வினாடுகளுக்கு மேல் செலவழிக்காத , ஆனால் பணக்காரர்களால் இயக்கப்படும் கிரிகெட் நாடகத்தை நான்கு மணிநேரம் அமர்ந்து பார்க்கும் கூட்டம் வெட்டி கூட்டம் தான்
ஆனாலும் மக்கள் இதைதான் செய்ய வேண்டும் என்று கட்டாயபடுதுவது எனபது சர்வாதிகாரம் ஆகும்.
அந்த எண்ணமே தடை செய்யப்படவேண்டும் 🙂
//..தன்னை ஆளபோகிற ஒரு எம் எள் எவை பற்றி அறிந்து கொள்ள மூன்று வினாடுகளுக்கு மேல் செலவழிக்காத , ஆனால் பணக்காரர்களால் இயக்கப்படும் கிரிகெட் நாடகத்தை நான்கு மணிநேரம் அமர்ந்து பார்க்கும் கூட்டம் வெட்டி கூட்டம் தான்..//
Raaman இப்படி பழி போடுவது ரொம்ப சுலபம்.. அதை அழகா செய்யுறீஙக்…
அனா பிரச்சனை என்ன, அதன் மூலம் என்னனு பார்க்க அறிவு, பயிற்சி எல்லாம் வேண்டும், பெரும்பாலான மக்களுக்கு அப்படி எதுவும் கிடைத்துவிட்டால் தம் பதவிகள் ஆட்டம் கண்டுவிடும் எனவே அவர்களை அறிவிப்பூர்வமாக சிந்திக்க விடாமல், உழைப்பயும் சுரண்ட தான் தொலைகட்சி முதல்.. கிரிக்கட்டு டாஸ்மாக் ஈராக எல்லாமே…
சிந்திப்பர்கட்கு இது நன்றாக தெரியும். இவைகளை தடை செய்து.. மக்களை இதிலிருந்து திருப்பி வளர்ச்சி பாதையில் ஈடுபடுத்த வேண்டும் …
அப்படி திசை திருப்பினாலே.. சிந்திக்க ஆரம்ப்த்தால் இலவசஙகளை கொடுத்து மக்களை ஏமற்ற முடியாது.. ஆள்வோர் வசதிகளை பெருக்கி சுக வாழ்வு வாழ இயலாது எனவே..மக்கள் இப்படி இருக்கவேண்டும் என்பது தானே சாணகிய நீதி முதல் சொல்லப்பட்டு வரும் தந்திரம் ?
சீனிவசனின் மென்டார் எனப்படும் ஏ சி முத்தையா யாரிடைய பினாமி?
I dont knw.
கிரிகெட் ஒரு விளையாட்டு என்று பலர் கருதினாலும், கிரிகெட் போர்ட் விளையாட்டு துறையின் கீழ் வராதாம்! கிரிகெட் போர்ட் சமூக செவை எதுவும் செய்வதாக தெரியாததால், சாரிடபிள் டிரச்ட் என்ற பிரிவிலும் வராது! விபசாரம் போல அவர்கள் வியாபாரத்தை வெளிப்படையாக செய்யாததால் வியாபார கம்பனி சட்டப்படியும் தண்டிக்க முடியாது! நிறைய கருப்பு பணம் புழஙகுவதாலும், எம் அல் ஏ களை போல , வீரர்களை விலை கொடுத்து வாங்குவதாலும், இது ஒரு மாற்று அரசியல் களம்!
//முதலாளித்துவம் என்றால் என்ன அதன் கோரம் என்ன என்பதை புரிந்து கொள்ளாதவர்களுக்கு பிசிசியும் அதன் தலைவர் சீனிவாசனும் எடுத்துக்காட்டுகள். ஐபிஎல்லை தடை செய்து, பிசிசிஐ நாட்டுடமையாக்கி, அதன் சொத்துக்களை மக்களுடைமையாக்குவது தவிர இந்த கொள்ளையர்களை துரத்துவதற்கு வேறு வழியில்லை.//
அய்யா வினவு ஆசிரியரே,
இந்த கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சங்கம் (Board of Cricket Control India – BCCI) என்பது தமிழ் நாட்டு சங்கங்களின் விதிகள் படி பதிவு செய்யப் பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது உண்மை என்றால் தமிழ் நாட்டு சங்கங்களின் பதிவாளருக்கு முறையற்ற பணியில் ஈடுபட்டு வரும் இத்தகைய ஒரு சங்கத்தின் நடவடிக்கைகளை முடக்கி வைக்க போதிய அதிகாரம் உண்டு. தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் (1975), பிரிவு 35 ன் கீழ் அந்த சங்கத்தின் செயற குழுவை கலைத்து விட்டு ஒரு தனி அதிகாரியை நியமித்து அதன் நடவடிக்கைகளை சரி செய்ய பதிவாளருக்கு இந்தப் பிரிவு அதிகாரம் அளிக்கிறது.
இந்த திருத்தம் கொண்டு வந்ததற்கு ஒரு பின்னனி உண்டு. அப்போது தீவிரமாக செயல்பட்ட ஒரு கிறித்தவ தன்னார்வ நிறுவனத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர ஜெயலலிதாவின் அரசு முயற்சி செய்தது. அதன் ஒரு பகுதியாக இப்படி ஒரு திருத்தத்தை 1995 ம் ஆண்டுக்கு பிறகு இந்தப் பிரிவை புகுத்தினார்கள். பிறகு வந்த தி.மு.க. அரசும் இந்தப பிரிவை ரத்து செய்யவில்லை. இன்னும் அந்தப் பிரிவு நடைமுரையில் உள்ளது.
இந்திய சங்கங்கள் பதிவு சட்டம் என்பது இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு பின் அப்போதைய காலனி அரசால் 1860 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு இந்த அதிகாரம் மாநிலங்களின் பட்டியலில் வந்தாதால் ஒவ்வொரு மாநிலமும் தனிதனி சட்டங்களை இயற்றி சங்கங்களின் பதிவுகளை தங்கள் மேற்பார்வையில் வைத்து இருக்கின்றன. அதன்படி, தமிழ்நாட்டுச் சங்கங்களின் பதிவுச்சட்டம் (1975) ன் திருத்தப்பட்ட பிரிவு 35 ன் படி சங்கத்தின் செயற குழுவைக் கலைக்கும் அதிகாரம் இங்குள்ள பதிவு அதிகாரிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்தப் பிரிவினைப் பயன்படுத்தி சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தன்னார்வ நிறுவனத்தை மாவட்ட பதிவாளர் சில ஆண்டுகளுக்கு முன்பு கலைத்துள்ளார். அப்போது தொடரப்பட்ட வழக்கில் ஐ கோர்ட் இந்தப் பிரிவு செல்லும் என்று தீர்ப்பும் அளித்துள்ளது. எனவே கலைக்கும் முன்னுதாரனமும் அரசுக்கு உள்ளது. ஏன் ஜெயளைதாவின் அரசு மவுனமாக இருக்கிறது என்பது ஒரு மர்மம் தான். எனவே, உங்கள் வழக்குரைஞர்கள் இது குறித்து ஒரு போது நல வழக்கினைத் தொடர்ந்து தமிழக அரசை கலைக்கும் அதிகாரத்தை பயன் படுத்தக் கட்டாயப படுத்தவேண்டும். நிச்சயம் ஐ கோர்ட் இப்படியொரு வழக்கை அனுமதிக்கும்.
இந்த கலைக்கும் பிரிவு பிற மாநில் சங்கங்களின் பதிவு சட்டங்களில் இல்லை என்பதும் தமிழ் நாட்டு அதிகாரவர்க்கம் கூட்டுறவுகளைக் கையாண்ட தங்கள் சுகமான அனுபவத்தில் அதே சட்டப் பிரிவினை சங்கங்கள் பதிவுச் சட்டத்திலும் 1995 ம் ஆண்டுக்குப் பிறகு புகுத்தியுள்ளது. இந்தப் பிரிவை நீக்க பல சக்தி வாய்ந்த கிறித்தவ தொண்டு நிறுவனகள் அப்போது உயர்ச்சி செய்த போதும் ஜெயலலிதாவின் பார்ப்பன அதிகாரிகள் இந்த மாற்றத்தை மறு பரிசீலனை செய்ய மறுத்து விட்டனர். மதுரை போன்ற மாவட்டங்களில் சில பதிவாளர்கள் இந்த பிரிவு வந்தவுடன் ஸ்பெசல் வச்சொல் செய்து தங்கள் அதிகாரத்தை அவ்வப்போது காட்டி வருகின்றனர்.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கம் தமிழ் நாட்டு சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் வருவதால் அதன் அறிக்கைகள் சங்கப் பதிவு அதிகாரியிடம் ஆண்டு தோறும சமர்ப்பிக்கப் படவேண்டும். இதன நகல சட்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கும். அதன் முகவரியிலிருந்து எந்த பதிவாளரிடம் பதியப் பட்டுள்ளது என்ற விபரத்தை அறிய முடியும். அதற்கான விண்ணப்பங்கள் சங்கப் பதிவாளரிடம் கிடைக்கும். உங்கள் ஊழியர்கள் சிரமம் பார்க்காமல் அந்த சங்க விதிகளின் நகல், வரவு செலவுக் கணக்குகளை (Balance Sheet and Annual Accounts) வாங்கி ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடர ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் நாட்டு அதிகார வர்க்கம் எப்போதும் ஒரு கிரிமினல் புத்திகாரர்களின் கூடாரம் என்பது நீங்கள் அறியாத ஒன்று அல்ல. ஒரு உதாரணமாக, இந்தியக் கூட்டுறவு சட்டம் (1905)ன் கீழ் இயங்கும் கூட்டுறவுகளை கலைக்கும் செப்படி வித்தைகளை தமிழ் நாட்டின் பார்ப்பனர்கள் தான் முதன் முதலில் இந்த நாட்டுக்கே அறிமுகம் செய்து வைத்தார்கள். தமிழ் நாட்டின் காங்கிரஸ் ஆட்சியின் பொழுது, திருவல்லிக்கேனியில் இயங்கி வந்த செல்வாக்கு மிக்க ஒரு நகரக் கூட்டுறவு சங்கத்தை, ஒரு கோஷ்டி காங்கிரஸ்காரர்கள் இந்தக் கலைக்கும் பிரிவினை உருவாக்கி அதனைப் பயன்படுத்தி ஒரு சங்கத்தை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். பின்னாளில் வந்த கழக அரசுகள் கூண்டோடு கூட்டுறவுகளை கலைக்கும் திருப்பணிகளை விருத்தி செய்து விட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆக, இப்படி தமிழ் நாட்டுப் (பார்ப்பன) அதிகாரிகளின் செப்படி வித்தைகல் இன்று பல மாநிலங்களிலும் கையாண்டு குறைய கூட்டுறவு என்றால் அரசாங்கத்தின் கட்டுப்பாடு என்ற நிலை உருவாகியுள்ளது. விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கும் அற்பமான கூட்டுறவுகளையே அடிக்கடி கலைத்து லாபம் பார்க்கும் இந்த அதிகார வர்க்கம் பணம் காய்ச்சி
மரமான கிரிக்கெட் சங்கத்தை இது வரை தொடாதது மர்மமாகவே உள்ளது.
எனவே, நீங்கள் ஒரு வழக்கு தொடர்ந்து இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வரவேடுமாய் கேட்டுக கொள்கிறேன். வசக்கு ஜெயிக்கவிட்டால் கூட ஒரு பிரச்சாரமாவது நடக்கும் என்பது தெளிவு.
குமரேசன்
தமிழக அரசு சில, பல காரணங்களுக்காக தலையிட தவறினால், சமீபத்தில் பச்சையப்ப முதலியார் ட்ரச்டு களில் கோர்ட் தலையிட்டு, முன்னால் தேர்தல் அதிகாரி சேஷனை நியமித்த முறையிலேயே , புதிய தலைமையை கொண்டு வரலாம்! இன்னொரு தகவலும் கூற விரும்புகிறேன்; தமிழ்னாட்டில் குதிரைபந்தயமும் ஒருகாலத்தில் , இதெ கும்பலால் நடத்தப்பட்டு, ஏராளமான நடுத்தர மக்களின் பணம் சுருட்டப்பட்டது! தமிழ்னாட்டில் குதிரைபந்தயம் தடை செய்யப்பட்டாலும் , அண்டை மானிலங்களில்நடக்கும் பந்தயத்திற்கு இஙகு புக்கிகள் எனப்படும் தரகர் மூலம் பணம் கட்டப்படுகிறது! இதில் பயனடைவது அதிகார வர்க்கமும்,ஆதிக்க வர்க்கமும் என்பதால் மிக எளிதில் இதை ஒழிக்க முடியாது!
//முதலாளித்துவம் என்றால் என்ன அதன் கோரம் என்ன என்பதை புரிந்து கொள்ளாதவர்களுக்கு பிசிசியும் அதன் தலைவர் சீனிவாசனும் எடுத்துக்காட்டுகள். //
இது சட்டம் ஒழுன்ன்கு பிரச்சினை, முதலாளிக்துவம் இதற்கு என்ன செய்யும் .
முதலாளிகளை ஆட்டி வைக்கும் அரசியல்வாதிகளின் குடுமி மக்களை கையில் உள்ளது.
வாக்குகளை விலைக்கு அல்லது விலையில்லா பொருளுக்கு விலை போவதினால் வரும் வினை இது.
//நாட்டுடமையாக்கி, அதன் சொத்துக்களை மக்களுடைமையாக்குவது தவிர //
இது போன்ற தீர்வுகள் ரசியாவில் போலந்தில், சீனாவில், நார்த் அமெரிக்காவில் சோதித்து பார்க்கப்பட்டு விட்டன. தனி மனித சொத்து உரிமைகளை எடுத்துவிட்டால் மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கும் போதுவுடுமை கட்டுரையாளர்களை கியூபா நோர்த் கொரியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி மூன்று வருடம் கட்டாயம் வாழ்ந்து விட்டு வர வேண்டும் ஒரு உத்தரவு போடா வேண்டும்
விளையாட்டு ஆர்வலர்கள்(காசு கொடுத்து டிக்கெட் வாஙகுபவர்கள்) தவிர, ஓசி டிக்கெட்டுகள், அன்பளிப்பு டிக்கெட்டுகள் எல்லாம் லஞசமே! சூதாட்டத்தில் கைமாறும் பணமும் லஞச பணமே! இந்த லஞசபணம் எஙகிருந்து வந்தது? பொதுமக்களாகிய நுகர்வோரிடம், நியாய மற்ற விலையின் மூலம் பிடுஙகப்படும் பண்மே அது! இதன் தீமை என்னவென்றால், உற்பத்தி துறையில் புழஙுவதற்கு பதிலாக, உல்லாசத்துறையிலேயே அதிகம் புழஙகுவதால்,சாதாரணமக்களிடையே பண புழக்கம் குறைந்து, உற்பத்தி இழப்பு உள்ளிட்ட பொருளாதார பேரிடர் ஏற்படலாம்!
இன்றைய செய்திப்படி ரூ.இரண்டாயிரத்து நானூறு கோடிக்கு மேல் கைமாறியிருக்கிறதாம்!