privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஆகஸ்டு 30 முதல் மதுரை புத்தகத் திருவிழாவில் கீழைக்காற்று !

ஆகஸ்டு 30 முதல் மதுரை புத்தகத் திருவிழாவில் கீழைக்காற்று !

-

முக்கத்தில்… கீழைக்காற்று…
8-வது மதுரைப் புத்தகத் திருவிழா
ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை, 2013

கீழைக்காற்று நூல்கள்மக்களை மழுங்கடிக்கும் கருத்துகள், கட்-அவுட்டுகள்
ரவுண்டுகட்டும் ரசிகர் மன்றங்கள்…….. நச்சுத்தளைகளை மீறி,
போராடும் மதுரையின் பொலிவை மலர்விக்கும்
நூறு பூக்களுடன் இப்போது உங்களருகில் கீழைக்காற்று

“கூந்தலுக்கு வாசம் உண்டா?” என இலக்கிய மொக்கைகள்
ஈறும் பேணுமாய் மேய்ந்து, மேய்ந்து
இற்றுப்போன தமிழன் தலையை,
இந்த “ கூலி அமைப்பு முறைக்கு மாற்றம் உண்டா?” என
ஏங்கி மனம் வாடும் நிலையை…
மாற்றுதற்குரிய ஒரே சித்தாந்தம் மார்க்சியம்-லெனினியம்
என்ற உழைக்கும் வர்க்கத்தின் நம்பிக்கை ஒளியை….
உயர்த்திப்பிடிக்கும் கீழைக்காற்றில் –

அரசியல், அறிவியல், வரலாறு, சமூக அறிவு தரும்
பல்துறை நூல்கள்…
மனித வளர்ச்சிக்கும், மனவளர்ச்சிக்கும் உதவும்
கதைகள், கவிதைகள், சினிமா விமர்சனங்கள்…
சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்களை
தெளிவிக்கும் அவசியமான சிறுநூல்கள்…
மார்க்சியம்… பெரியார், அம்பேத்கர் சிந்தனைகள்…
ம.க.இ.க. அரசியல் ஒலி/ஒளி வட்டுகள், பத்திரிகைகள்…

அனைத்தும் ஒரே கூரையின்கீழ்…. மதுரையில்….

இடம் :-

தமுக்கம் மைதானம், மதுரை
காலை 11 முதல் இரவு 9 மணி வரை

முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று
10, அவுலியா தெரு,
எல்லீசு சாலை,
சென்னை – 2.
044-28412367