privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகாவிரியை பாதுகாக்க மன்னார்குடி முற்றுகை போராட்டம்

காவிரியை பாதுகாக்க மன்னார்குடி முற்றுகை போராட்டம்

-

உழுபவனுக்கே நிலம்! உழைப்பவனுக்கே அதிகாரம்!!

vivimuவிவசாயிகள் விடுதலை முன்னணி, தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டம்

தோழர் கு.ம. பொன்னுசாமி,
மாவட்ட அமைப்பாளர், பேசி : 9442889041

முற்றுகைப் போராட்டம் – வேண்டுகோள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே… விவசாயிகளே… வணிகர்களே… பொதுமக்களே…

வணக்கம்!

எதிர்வரும் 03.01.2015 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக்குழு, விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் நடைபெற இருக்கும் மன்னார்குடி தலைமை தபால் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள அனைவரும் வாரீர் என அன்புடன் அழைக்கின்றோம்.

ஏன் இந்த முற்றுகைப் போராட்டம்?

  • காவிரிப் படுகையைக் காய வைப்பதன் மூலம் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு, காவிரிப் படுகையின் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைத் தாரை வார்க்கும் மோடி அரசின் சதிச் செயலைக் கண்டித்தும்…
  • காவிரிப் படுகையில் மீத்தேன் – பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் ஒப்பந்தங்களைக் கிழித்தெறியக் கோரியும்…
  • காவிரிப் படுகையிலுள்ள ஓ.என்.ஜி.சியின் துரப்பணப் பணிகளை உடனடியாகக் கைவிடக் கோரியும்…
  • காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் தடுப்பணைகளைக் கட்டும் கர்நாடகத்தின் அடாவடித்தனத்தை கண்டிக்காது வேடிக்கை பார்க்கும் மத்திய அரசினைக் கண்டித்தும்…
  • காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவையும் உடனே அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தியும்..
  • விவசாயிகளின் கழுத்தை நெறிக்கும் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து முழு பிரீமியத் தொகையையும் அரசே செலுத்திட வற்புறுத்தியும்…
  • கூலி ஏழை விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாய் விளங்கும் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டச் சதி செய்யும் மத்திய அரசின் செயலைக் கண்டித்தும்.

இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

காவிரி டெல்டா

காவிரி டெல்டா பகுதியின் 50 இலட்சம் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆதாரமாகவும், சென்னை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வாழும் 3 கோடி தமிழர்களின் நீர் ஆதாரமாகவும், பல்லுயுரினப் பெருக்கத்தின் உயிர்ச்சங்கிலியாகவும் விளங்கும் காவிரி டெல்டாவைப் பாதுகாத்திட இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள அனைவரும் வருக!

இப்படிக்கு
தோழர் கு.ம. பொன்னுசாமி
திருவாரூர் மாவட்ட அமைப்பாளர்,
விவசாயிகள் விடுதலை முன்னணி.

methane-siege-notice

காவிரியின் குறுக்கே அணைகட்டும்
கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு
பக்கவாத்தியம் வாசிக்காதே!

மரபணு மாற்ற பயிர்களை
அனுமதிக்காதே

விவசாயிகளின் கழுத்தை
நெறிக்கும் புதிய பயிர் காப்பீட்டுத்
திட்டத்தை ரத்து செய்!
முழு பிரீமியத் தொகையையும்
அரசே செலுத்த ஏற்பாடு செய்!

கூலி ஏழை விவசாயிகளுக்கு
வாழ்வாதாரமாக விளங்கும்
100 நாள் வேலை திட்டத்தை
ஒழித்துக்கட்ட சதி செய்யாதே!

மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு
விவசாயிகள் விடுதலை முன்னணி
ம.க.இ.க பு.மா.இ.மு
7502607819, 9443157641, 9943494590, 9362704120

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க