privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்மார்ச் 23 : தமிழகமெங்கும் தியாகிகள் நினைவு தினம்

மார்ச் 23 : தமிழகமெங்கும் தியாகிகள் நினைவு தினம்

-

மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
மார்ச் 23 பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு நினைவு நாள் :  மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்

விருத்தாச்சலம்

மார்ச் 23 பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு நினைவு நாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக கடைப்பிடித்து விருத்தாசலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் சைக்கிள் பேரணி நடத்தினர்.

சைக்கிள் பேரணி
பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு நினைவு நாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக கடைப்பிடித்து சைக்கிள் பேரணி.

மார்ச் 23, 1931  – காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிய பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு நாட்டுக்காக தம்முடைய உயிரையும் கொடுத்த நாள். தனியார்மயம், தாராளாமயம், உலகமயம் கொள்கையால் நாடு மீண்டும் அடிமையாகி பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாக மாறியுள்ளது.

மறுகாலனியாக்க எதிர்ப்பு நாள்
தனியார்மயம், தாராளாமயம், உலகமயம் கொள்கையால் நாடு மீண்டும் அடிமையாகி பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாக மாறியுள்ளது.

அதை மேலும் தீவீரப்படுத்தும் “56 இஞ்ச் மார்பு” கொண்ட மோடி “திறமை”யாக மறுகாலனியாக்கத்தை வேகமாய் நடத்தி வருகிறார். இச்சூழலில் மார்ச் 23 போராளிகளின் நினைவை நெஞ்சிலேந்தி, அவர்களின் போராட்டப்பாதையை நாம் வரித்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாக அவர்கள் தூக்கிலிடப்பட்ட நாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக விருத்தாசலத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடைப்பிடித்தது.

மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
மார்ச் 23 போராளிகளின் நினைவை நெஞ்சிலேந்தி, அவர்கள் தூக்கிலிடப்பட்ட நாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக விருத்தாசலத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடைப்பிடித்தது.

விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி முன்பு, “மார்ச் 23 பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு நினைவு நாளில் மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக கடைபிடிப்போம்” எனும் முழக்கத்துடன் சுவர் விளம்பரம் எழுதப்பட்டது.

இந்த அறிவிப்பைக் கண்ட க்யூ பிரிவு போலீசு பு.மா.இ.மு எங்கு கூட்டம் நடத்த இருக்கிறது என மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது. முன்னணியாளர்களை கண்காணித்து வந்தது.

மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
போலீசு அச்சுறுத்தலை மீறி பேரணி நடத்தப்பட்டது.

இதையெல்லாம் மீறி பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக திரு கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, வெளியூர் செல்லும் கல்லூரி பேருந்துகளிள் பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

சைக்கிள் பேரணி சரியாக காலை 11 மணிக்கு துவங்கப்பட்டது. சைக்கிளில் பகத்சிங் படங்களை மாட்டிக்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பு.மா.இ.மு தோழர்கள் புறப்படத் தயராயினர். RSYF என எழுதி இருந்த தொப்பிகளை அனைத்து தோழர்களும் அணிந்து இருந்தார்கள்.

மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
சைக்கிளில் பகத்சிங் படங்களை மாட்டிக்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பு.மா.இ.மு தோழர்கள்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் புஷ்பதேவன் பேரணியை தொடங்கிவைத்து பேசினார். “காலனியாக்கத்துக்கு எதிராக போராடி நாட்டுக்காக தன்னுடைய உயிரையும் கொடுத்தவர் பகத்சிங். ‘வெள்ளையர்களை அடித்து விரட்ட வேண்டும். பிச்சைகேட்பது அல்ல சுதந்திரம்’ என்பது  பகத்சிங் பாதை. அதே வழியில், மறுகாலனியாக்கத்திற்கு எதிராக இன்றைய மாணவர்கள் இளைஞர்களை அணிதிரட்டுவது தேவையாக உள்ளது” என பேசினார்.

அதைத் தொடர்ந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் மாணவர்களின் பேரணி தொடங்கியது. பேரணி கல்லூரியில் இருந்து ஆலடிரோடு, மார்க்கெட், ஸ்டேட் பேங்க் வழியாக பாலக்கரை, கோர்ட் வரை சென்று நிறைவடைந்தது.

மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்
‘வெள்ளையர்களை அடித்து விரட்ட வேண்டும். பிச்சைகேட்பது அல்ல சுதந்திரம்’ என்பது பகத்சிங் பாதை.

மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் சைக்கிளை நிறுத்தி பிரசுரம் கொடுக்கப்பட்டது. “பகத்சிங் சுகதேவ், ராஜகுரு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தூக்குமேடை ஏறிய நாள், இன்று. இதை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும்” என பிரசுரம் கொடுத்து மக்கள் மத்தியில் தோழர்கள் பிரச்சாரம் செய்தனர்.

பேரணி முடிந்தவுடன் அறைக்கூட்டம் நடைபெற்றது. அதில் விருத்தாசலம் பகுதிபு.மா.இ.மு அமைப்பாளர் தோழர் முருகானந்தம் பேசினார். “பகத்சிங், சுகதேவ், ராஜகுரு பற்றி தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவர்களை போல நாமும் நாட்டை மீட்டெடுக்கும் பணியை நம் தோள்களில் சுமக்க வேண்டும். மறுகாலனியாக்கத்துக்கு எதிராக போராட வேண்டும்” என்று அறைகூவி அழைத்தார்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
விருத்தாசலம்
97912 86994

தஞ்சை

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் “மோடி அரசின் நில கையகப்படுத்தும் சட்டம், மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேச துரோகம்” என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளிப்பன் கண்டன உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை

சென்னை, திருச்சி

மோடியின் ஆட்சி ’தேசிய’ப் பேரழிவு என்ற தலைப்பில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23 அன்று சென்னை, திருச்சி ஆகிய இரு மையங்களில்  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்தியில் ஆட்சி செய்து வருகின்ற மோடியின் அரசானது காங்கிரசு கட்சி கொண்டு வந்த தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கைகளை காங்கிரசை விட தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் அமலாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவை மோடி அரசின் செயல்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் வாழ்வுரிமையை இழந்து தவிக்கின்றனர்.

  • கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தங்கள் செய்வது
  • பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டினை அதிகரிப்பது
  • நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்களை கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் வரையறையின்றி சூறையாட அனுமதிப்பது
  • உழைக்கும் மக்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு செலவிடப்படுகின்ற மானியத்தை வெட்டி விட்டு கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடிகளுக்கு வரிச்சலுகைகளை வாரி இறைப்பது
  • விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டி விட்டு அவர்களது நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு கையகப்படுத்தி தருவது
  • இவையனைத்தையும் அவசர சட்டங்கள் என்கிற ஜனநாயக விரோத வடிவத்தில் அமல்படுத்தி வருவது

போன்றவற்றை மோடி அரசின் மக்கள் விரோத – தேச விரோத செயல்பாடுகளுக்கு உதாரணமாக தெரிவிக்கலாம். மோடியின் ஆட்சி ஒரு தேசியப் பேரழிவுக்கு ஒத்ததாக இருக்கிறது என 22.2.2015 அன்று நடைபெற்ற எமது மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மோடி அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் மத்தியில் ஒருமாத காலத்துக்கு பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. மார்ச் 23 அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியான பகத்சிங் நினைவு நாளில் சென்னை அம்பத்தூர் தொழிற்பாட்டையிலும், திருச்சியில் சிந்தாமணி அருகிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்துக்கு எமது மாநிலத் தலைவர் தோழர் அ. முகுந்தன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் மு.முகிலன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் சிவா, புதுச்சேரி பகுதி செயலாளர் தோழர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

திருச்சியில் சிந்தாமணி அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு எமது இணைப்புச் சங்கமான திருச்சி பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளர் தோழர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். எமது அமைப்பின் மாநில துணைத்தலைவர்கள் விளவை இராமசாமி மற்றும் பரசுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு

திருவாரூர் சுவரொட்டி பிரச்சாரம்

rsyf-thiruvarur-poster

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருவாரூர்