அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடை நீக்கம்: பெரியார் பிறந்த மண்ணை பார்ப்பனியத்தின் கல்லறை என நிரூபிப்போம்!
09-06-2015 அன்று மூத்த வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு, முத்துகிருஷ்ணன் ஆகியோரும், வழக்குரைஞர்கள் பாரதி, பார்த்தசாரதி, செங்கொடி, கேசவன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் செயலர் மில்ட்டன், மீனாட்சி, சரவணன், இந்திரா மற்றும் இன்னும் பல உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஒன்று கூடி, வளாகத்தில் ஊர்வலமாய், எழுச்சிமிக்க முழக்கங்களை எழுப்பி உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கும், பெரியார் படத்திற்கும் உற்சாகமாய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியாருக்கெதிரான பார்ப்பனிய தீண்டாமையை முறியடித்தோம்!
தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் பார்ப்பனிய ஆதிக்கத்டிற்கு முடிவு கட்டுவோம்!
சென்னை ஐ.ஐ.டி பார்ப்பன பண்டாரங்கள் கூடுகின்றா மடமல்ல பார்ப்பன ஆதிக்கத்தின் பரம்பரை சொத்தல்ல!
பெரியார் பிறந்த தமிழ்நாடு பார்ப்பனியத்தின் கல்லறையென்பதை நிரூபிப்போம்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மூத்த வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு, முத்துகிருஷ்ணன் மரியாதை
சூத்திரன் என்றால் செருப்பாலடிக்கும் மனுநீதியை குழிதோண்டி புதைக்கும் அம்பேத்கர்-பெரியார் என்னும் முனை மழுங்கா ஆயுதங்களை உயர்த்திப்பிடிப்போம்!
அம்பேத்கர்-பெரியார் பெயரில் பார்ப்பன கொடுங்கோன்மைக்கு கல்லறையெழுப்ப உறுதியேற்போம்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்துத்துவம் தனது கோரமான தலையை தூக்கும் பொழுதெல்லாம், இப்பொழுது நடத்திய போராட்டங்கள் போல ஒன்றிணைந்து அடிக்கவேண்டும். இல்லையெனில் பார்ப்பனிய இருளில் தமிழகத்தை மூழ்கடித்துவிடுவார்கள். எப்பொழுதும் நாம் விழிப்போடு இருப்போம்!
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை
9094666320
http://www.dinamani.com/junction/arithalin-ellaiyil/2015/06/07/வெற்றிடத்தின்-விஷக்-காளான்/article2850849.ece தினமணியில் வந்த
ஆயிரக்கணக்கில் வார்த்தைகள் அடங்கிய ஒரு கட்டுரை.ஆனால் முதல்
நாலு வரி அப்புறம் கடைசி நாலு வரி மட்டும் ஐ ஐ டி பற்றி.
மீதம் அனைத்தும் அம்பேத்கர் ஹிந்து சனாதானத்தின் நெஞ்சை நக்கினார்
என்ற ரீதியிலேயே கட்டுரை முழுதும் விஷம் கக்கி இருக்கிறது,
அரவிந்தன் “நீல”கண்டன் எனும் விஷப்பாம்பு.