privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம் ! - தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்

ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம் ! – தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்

-

அதிகாரத்தைக் கையிலெடு, ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறி! – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்.

1. சென்னை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களின் சார்பாக,

“முடங்கிப்போய் ஆள அருகதையற்றுக் கிடக்கும் அரசை அகற்றுவோம்!
மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்!
ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம்!”

என்கிற முழக்கத்தின் கீழ் பூந்தமல்லி அருகிலுள்ள குமணன் சாவடியில், குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் தீயணைப்பு நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா தலைமை தாங்கினார்.

ndlf-chennai-demo-against-encroachments-01அவர் தனது தலைமையுரையில், “இந்த அரசுக்கட்டமைப்பு ஆளத் தகுதியிழந்து விட்டது என்பதை மக்கள் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாக உணர்ந்துள்ளனர். ரோம் நகரம் பற்றியெறியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தாக வரலாறு உண்டு.

காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா
காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா

அதையொத்த செயலாகத் தான் இந்த அரசு மழை வெள்ள பாதிப்பில் மக்கள் மாண்டு கொண்டிருந்த போது செய்தது. மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, அரசு நிர்வாகமே களத்தில் இறங்கி ஜெயலலிதா மூஞ்சியை ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருந்ததை நாடே காறித்துப்பியது. இந்த வக்கிரம் பிடித்த, ஆளத் தகுதியிழந்து விட்ட அரசை நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்?

மழை வெள்ளத்தில் மக்கள் தங்கள் உயிருக்காகவும் உடைமைகளுக்காகவும் போராடிக் கொண்டிருந்த போது, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தான் உதவி செய்தார்கள். அரசு செயலற்று முடங்கிப் போய் கிடந்தது. கலெக்டர், தாசில்தார், DRO, PRO இந்த வெங்காயமெல்லாம் ஒன்றும் செய்யாமல் செயலற்றுத்தான் கிடந்தது.

இந்தப் பேரிடருக்குக் காரணமே அரசு பின்பற்றி வரும் தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகள் தான். ஒவ்வொரு துறையும் தோற்றுப் போய் உள்ள இந்த அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்குவது தான் நாம் செய்ய வேண்டிய முதல் பணி. அதற்கு உழைக்கும் ஓரணியில் திரள வேண்டும்” என அறைகூவி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேஷ்குமார் தனது கண்டன உரையில், “மழை வெள்ளத்தைக் காட்டிலும் மிகக் கொடூரமானது அரசு என்பதை ஜெயா நிரூபித்துக் காட்டியுள்ளார். ஈழ மக்கள் படுகொலைச் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது, போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று அன்றைக்கு கூறியதைப் போலவே, மழை வெள்ளம் வந்ததால் மக்கள் செத்தார்கள் என்று ஆணவமாகப் பேசினார் ஜெயலலிதா. மழை வெள்ளத்தால் மக்கள் செத்துக் கொண்டிருந்த போது, மக்களைப் பார்த்து வாக்காள பெருமக்களே என்று அழைத்தது ஆணவத்தின் வெளிப்பாடே!

ndlf-chennai-demo-against-encroachments-08
மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேஷ்குமார்

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசும்போது, 8-ம் வகுப்புப் பாடத்தில் வேலை மற்றும் காலம் குறித்த பாடத்தை படித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இவர்தான் மக்களுக்கான முதல்வரா?

அரசே பல இடங்களில் ஆக்கிரமிப்புச் செய்துள்ளது. உதாரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையே ஆற்றை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டிருக்கிறது. இது போல பல இடங்களில் அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் ஏரி குளங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன. மறுபுறத்தில் மியாட் மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை உள்ளிட்ட உயர்ரக சிகிச்சை தருவதாக மக்களிடம் கொள்ளையடிக்கும் மருத்துவமனைகள் உள்ளிட்டு, காசு கொடுத்தால் கல்வியளிக்கும் ´கல்வி வள்ளல்களின்’ கல்லூரிகளும் ஏரி குளங்களை ஆக்கிரமித்துத் தான் கட்டப்பட்டிருக்கின்றன. ஜேப்பியார், ஏ.சி சன்முகம், போன்ற கல்வி முதலாளிகளின் ஆக்கிரமித்ததன் விளைவாகவே ஏரித் தண்ணீர் வீடுகளில் புகுந்துள்ளது.

இங்கு குமணன் சாவடியில் உள்ள பகவதி திரையரங்கத்துக்கு முன்னால் உள்ள குளத்தைக் காணவில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சினிமாவில் நகைச்சுவைக்காக வடிவேலு கிணறைக் காணவில்லை என்று கூறுவதைப் போல இங்கு உண்மையிலேயே ஒரு குளத்தையே காணவில்லை என 11-வது வார்டு மக்கள் சென்று அதிகாரிகளிடம் முறையிட்டால், “எங்களுக்குச் சுரணை இல்லை, பணம் சம்பாதிப்பது மட்டும் தான் எங்கள் நோக்கம்” என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறார்கள் அதிகாரிகள். ஆணவப் பாசிச வக்கிர ஜெயா அரசின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம் இதைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும்.

ஜெயலலிதா மட்டுமின்றி கட்சி பேதமின்றி அனைவருமே ஆக்கிரமிப்புகளைச் செய்துள்ளனர். இதை மறைத்து கூட்டணி லாவணி பாடிக்கொண்டு திரிகின்றனர் ஓட்டுக்கட்சிகள். யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களின் பிரச்சனை தீரப்போவதில்லை. காரணம் அரசு உழைக்கும் மக்களுக்கு எதிரானது. எனவே ஆளத் தகுதியிழந்து விட்ட அரசைத் தூக்கியெறிந்து உழைக்கும் மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும்” எனக் கூறி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், ஆர்ப்பாட்டத்தையொட்டி பிரச்சாரம் செய்த தோழர்களுக்கும், ஒளி, ஒலி அமைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம், திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), வேலூர் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 8807532859, 9445389536, 9445368009, 9994386941

2. புதுச்சேரி

முடங்கிப் போய், ஆள அருகதையற்றுக் கிடக்கும் அரசை அகற்றுவோம்!
மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்!
ஆக்கிரமிப்புக்களைத் தகர்த்தெறிவோம்!

  • நீர்நிலைகள், ஆறுகள், கால்வாய்களை ஆக்கிரமித்து இயற்கைப் பேரழிவிற்குக் காரணமானவர்கள் தனியார் மட்டுமல்ல. மத்திய – மாநில அரசுகளும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகார வர்க்கத்தினரும், செயலிழந்து ஆள அருகதையற்றுப் போன தமிழக ஜெயா அரசும், புதுச்சேரி என். ஆர். அரசும் தான்!
  • ஜெயலலிதா அரசோ, என்.ஆர். அரசோ அல்லது வேறு எந்தக் கட்சியோ ஆக்கிரமிப்புக்களை அகற்றுவார்கள் என நம்புவது மூடநம்பிக்கையே!
  • போராடும் நாம், போராடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், நாமே அதிகாரத்தை எடுத்துக் கொண்டு மக்கள் அதிகாரத்தை நிறுவி, அதன் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே ஒரே வழி!

ndlf-puduvai-demo-against-encroachments-2கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், மக்கள் உயிரிழந்து, வீடிழந்து, உடைமைகளை இழந்து பெருந்துயரத்திற்கு ஆளானார்கள். தலைமுறைகளாக உழைத்துச் சேர்த்த சேமிப்பு அனைத்தும் வெள்ளத்திலே பறிகொடுத்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றப் பட்டார்கள். அவர்களைக் காப்பாற்ற இந்த ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கதினரும் வரவில்லை. முன் பின் முகம் தெரியாத சக மனிதர்கள் தான் வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றினர். அரசோ, வெள்ளத்தை ஏற்படுத்தி மக்களை நடைப்பிணங்களாக மாற்றி விட்டு தவறை மறைக்க நிவாரணம் என்ற பெயரில் வாய்க்கரிசி போட வந்தது.

இந்த கனமழைக்கும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்திற்கும், காரணமே ஆட்சியாளர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், செயல்படாத ஆளும் அருகதையற்றுப் போன இந்த அரசும் தான். இவர்கள் தான், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றவர்கள். ஆனால், இவர்களே, ஆறுகள், நீர்நிலைகள், நீர்வழித் தடங்களை கார்ப்பரேட் – ஐடி பயங்கரவாதிகளும், கல்விக் கொள்ளையர்களும், மணல் மாஃபியாக்களும், ரியல் எஸ்டேட் கிரிமினல்களும், கொலைகார மருத்துவமனைகளும் ஆக்கிரமிக்க துணை நின்றவர்கள். இவர்கள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள் என்று நம்பி மனு கொடுப்பதும், மன்றாடுவதும் பயனில்லை. இவர்கள் மக்களை ஆளத்தகுதியற்றவர்கள். இந்த அரசுக் கட்டமைப்பின் அனைத்து உறுப்புக்களும் செயலிழந்து, இற்றுப் போய் மக்களுக்கு எதிர்நிலை சக்திகளாக மாறிவிட்டது. எனவே மக்களாகிய நாமே நமது அதிகாரத்தை நிலைநாட்டுவோம். ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து புதுச்சேரி பேருந்து நிலையப் பகுதியான சுதேசி மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

ndlf-puduvai-demo-against-encroachments-4ஆர்ப்பாட்டத்திற்கான பிரசுரத்தை படித்த ஒருவர், “நமது பகுதியில் இது போன்ற ஒரு அருமையான பிரசுரத்தைப் போட்டு மக்களிடம் தருகிறீர்களா?” என்று கேட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகம் நின்று கவனிக்கும் வகையில் அமைந்த பழைய பேருந்து நிலையம் அருகே நடத்த திட்டமிட்டு போலிசு அனுமதி கோரியிருந்தோம். கடிதத்தை வாங்கிய போது எதுவும் சொல்லாத போலிசு, நிகழ்ச்சி நடத்த இரண்டு நாட்கள் முன், “நீங்கள் கேட்ட இடத்தில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ய கடிதம் கொடுத்துள்ளதால், வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தது. அதனால், அருகாமை மக்கள் கூடும் பகுதியான சுதேசி மில் அருகில் நடத்துவதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக போலிசு அதிகாரியை நேரில் சென்று பேசப் போன போது, நாம் கேட்காமலேயே, இடத்தை மாற்றியதற்கான காரணமாக, “நீங்கள் 50 பேர் என்று சொல்லிவிட்டு, 200, 300 பேர் வருவீர்கள். அந்த இடம் போதாது போக்குவரத்து பாதிக்கப்படும்” என வலிய வந்து சொன்னார். ஆனால், உண்மையில் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிப்பில்லாமல் 300 பேருக்கு மேல் சாதாரணமாகக் கூட முடியும் என்று சொல்லியும், மழுப்பலான பதில் சொன்னார். ஆனால், நாம் கடிதம் கொடுத்த பிறகு தான் திராவிடர் கழகத்தினர் கடிதம் கொடுத்ததும், நமது பிரச்சாரத்தின் வீச்சை முடக்க, போலிசு செய்த வேலை தான் இடத்தை மாற்றியது என்பதும் தெரிந்தது. அது மட்டுமல்லாமல், நமது ஆர்ப்பாட்ட இடத்திற்கு கூடுதல் போலிசைக் குவித்து, பயமுறுத்தும் வேலையையும் செய்தது.

ndlf-puduvai-demo-against-encroachments-3இந்த ஆர்ப்பாட்டத்தை, புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமை ஏற்று நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் லோகநாதன் விளக்கவுரையாற்றினார்.

தோழர் சரவணன் தனது தலைமையுரையில், “மக்களுக்காகத் தான் இருக்கிறேன். மக்களின் முதல்வர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஆட்சியில் இருக்கும் ஜெயா அரசு, சாதாரண உழைக்கும் மக்களின் உயிரையும் வாழ்க்கையையும் பறித்துள்ளது. சிறுகச் சிறுக கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்தவற்றையெல்லாம் பறிகொடுத்து நிர்க்கதியாக்க விட்டுள்ளது. அதனால், நாம் இந்த அரசை, கொலைபாதக, ஆணவ, ஆபாச- வக்கிர, பித்தலாட்ட, செயல்படாத, பார்ப்பன – பாசிச ஜெயா அரசு என்று சொல்கிறோம்.

தமிழகத்தின் ஜெயா மட்டுமல்ல, புதுச்சேரி என். ஆரும் இதில் சளைத்தவர் அல்ல. இங்கும் கூட ஆறு, ஏரி, குளங்கள், கால்வாய்களின் மேல் தான் பல தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், புதுச்சேரி அரியாங்குப்பம் பைபாஸ் சாலைக்காக, மக்களை வெளியேற்றி, அவர்களை சுண்ணாம்பாறு வடிகால் பகுதியில் மாற்று இடம் கொடுத்து குடியமர்த்தியதால், அந்த வெள்ளத்தினால், அந்தப் பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாயினர். இந்த லட்சணத்தில் அந்தக் குடியிருப்புக்குப் பெயர். என். ஆர். நகர்.

மேலும், சென்னையில் VGN ரியல் எஸ்டேட் கும்பல் அடையாறை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட உயர்தர அடுக்கு மாடிக் குடியிருப்பை திறந்து வைத்ததே கவர்னர் ரோசையா தான். உண்மை நிலைமைகள் இப்படி இருக்க, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் மாற்று இடம் கேட்டும் இந்த ஆட்சியாளர்களிடமும், அதிகார வர்க்கத்தினரிடமும் மனு கொடுப்பதும், கோரிக்கை வைத்து முறையிடுவதும் மூடநம்பிக்கை. எனவே, பாதிக்கப்பட்ட மக்களாகிய நாமே அதிகாரத்தைக் கையில் எடுத்து ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதும், மாற்று இடங்களைத் தீர்மானிக்கவும் வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

விளக்கவுரையில் தோழர்.லோகநாதன், “ஒப்பீட்டளவில், சென்னை, கடலூரை விட புதுச்சேரியில் பாதிப்புகள் குறைவு. அதனால், இங்கு ஏன் இந்த விசயத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்று மக்கள் நினைக்கலாம்.” ஆனால் தமிழகத்தில் உள்ளதைப் போன்ற நீர்நிலை, நீர்வழித்தட ஆக்கிரமிப்புக்கள் இங்கும் தான் உள்ளது. சங்கராபரணி ஆற்றை ஆக்கிரமித்துள்ள அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரின் ஆச்சாரியா பள்ளி, கல்லூரிகள், பத்துக்கண்ணு கால்வாயைக் களவாண்ட போகோ லேண்ட் தீம் பார்க், ஊசுடு ஏரிக்கரை ஆக்கிரமிப்பில் உள்ள, ஜெகத்ரட்சகனின் லெட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி, குளத்தையும், கால்வாயையும் விழுங்கிய என்.ஆர். காங்கிரசு பிரமுகர் சுகுமாறனின் மணக்குள விநாயகர் கல்லூரி, முதல்வர் ரங்கசாமியின் தொகுதிக்குள்ளேயே கதிர்காமம் குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள இந்திராகாந்தி மருத்துவமனை.” என்று பட்டியலிட்டார். “ஆகவே, இன்றைய தமிழகத்தின் நிலை நாளை புதுச்சேரியிலும் நிகழலாம். ஏனெனில் தமிழகத்தைப் போன்ற ஆட்சி தான் இங்கும் உள்ளது.” என்று பேச வேண்டிய அவசியத்தை விளக்கினார்.

ndlf-puduvai-demo-against-encroachments-1மேலும், “இங்கு பாதிப்புக்குள்ளான, நடேசன் நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் பகுதி மக்கள் முதல் பொதுவாக அனைவருமே, அடித்தட்டு மக்கள் அடையாற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கருதுகிறார்கள். ஊடகங்களும் இதை தான் சொல்கின்றன. இவர்கள் தான் ஆக்கிரமிப்பாளர்கள் என்றால், மியாட்டும், குளோபல் போன்ற உயர்ரக மருத்துவமனைகளும், கார்ப்பரேட் – ஐடி கம்பெனிகளும், எஸ்.ஆர்.எம்., வேல்ஸ், வேல்டெக், ஜேபியார் கல்வி – பல்கலைக் கழக முதலாளிகளும், யார்? ஒண்டக் குடிசை போட்டு வாழ்வையே இழந்து நிற்கும் உழைக்கும் அடித்தட்டு மக்களா? தான் உட்கார்ந்து திண்ண ஊரையே அடித்து உலையில் போடும் இந்தக் கொள்ளையர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

“பின் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள விஞ்ஞான வசதிகள் இருந்தும், அதைப் பயன்படுத்தி மக்களைக் காப்பாற்றத் துப்பில்லாமல், அதை அலட்சியம் செய்து மக்களை நிர்க்கதியாக்கியது. அதனால் தான் சொல்கிறோம். இந்த அரசு ஆளும் அருகதை அற்றுப் போய்விட்டது என்று. ஒருபுறம், மக்களைக் காப்பாற்றத் துப்பில்லாத அரசு, மறுபுறம் வாழ்விழந்து உயிர்வாழ நிவாரணம் கேட்டுப் போராடினால் போலிசை வைத்து அடிக்கிறது. அதனால் தான் சொல்கிறோம். இந்த அரசு மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது என்று.”

“வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவி ஏரிகளையும் குளங்களையும், கால்வாய்களையும் பட்டா போட்டு விற்று, சென்னையை வீங்க வைத்ததால் தான் இந்த நிலை. ஆனால், இதை மறைத்து, மூன்றே நாளில் மூன்று மாதத்து மழை பெய்து விட்டதால் தான் காரணம் என்று கூசாமல் பொய் சொல்கிறார் ஜெயா. உண்மையில் இதற்கு முன் 2005-ல் ஒரே நாளில், 270 மிமீ-ம், 1976-ல் 450 மிமீ-ம், 1969-ல் 270 மிமீ.ம் மழை பெய்துள்ளது. அப்போதெல்லாம் வராத வெள்ளம் இப்போது மட்டும் வந்ததற்குக் காரணமே, அலட்சியத்துடனும், செயல்படாமலும் இருந்த ஜெயா அரசுதான்.” என்று உண்மை நிலையை தோலுரித்துக் காட்டினார்.

“ஆகவே, இந்த கனமழை, பெரு வெள்ளத்திற்குக் காரணமே, கார்ப்பரேட், கல்வி முதலைகளின் லாபவெறிக்காக, இயற்கையைச் சூறையாடி, நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்தது இந்த ஆட்சியாளர்களும், ஐ.ஏஸ். – ஐபிஎஸ். அதிகாரிகளும், ஆளும் அருகதையற்றுப் போன அரசும் தான்.” எனவே, இந்த ஆளும் அருகதையற்றுப் போன அரசை அகற்றி, அதிகாரத்தை மக்களே கையில் எடுத்து, ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம்!” என்று ,மக்களை அறைகூவி அழைத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில், “இப்படி விசயங்களைப் பேசிவிட்டுப் போவதால் நிலைமைகள் மாறிவிடப் போவதில்லை. செயல் வடிவம் கொடுக்கும் போது மாற்றங்கள் ஏற்படும் எனவே, பேசிய விசயங்களை செயலாக்கும் வகையில் முன்னுதாரணமாக, வருகின்ற 11.01.2016 அன்று எங்களது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் அதன் தோழமை அமைப்புக்களான, விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியுடன் இணைந்து கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றில் உள்ள ஒரு ஆக்கிரமிப்பை மக்களே தமது அதிகாரத்தின் மூலம், அகற்ற உள்ளோம். இப்போராட்டத்தில் கலந்து கொள்ள உழைக்கும் மக்கள் திரளாக வர வேண்டும்.” என்று தொடர்பு எண்ணுடன் அறிவிக்கப்பட்டது.

எனவே, இந்த செய்தி வாயிலாக மீண்டும் மக்களை அழைக்கின்றோம்.

தொடர்புக்கு,

தோழர். த. பழனிசாமி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்பு எண்: 9597789801

3. திருச்சி

முடங்கிப்போய் ஆள அருகதையற்றுக் கிடக்கும் அரசை அகற்றுவோம்!
மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்!
ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம்

என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையின் கீழ் நடந்த ஆர்ப்பாட்டம்

காலை 10 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொருளாளர் தோழர் ராமசாமி தலைமை வகித்தார். தோழர் கோபி (ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர்), தோழர் பழனிச்சாமி (அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலர்) கண்டன உரையாற்றினர்.

இறுதியாக சிறப்புரையாற்றிய தமிழ்நாடு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன், “சமீபத்திய மழை வெள்ளம் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்களை நீரில் மூழ்கடித்து நடுத்தெருவுக்குத் தள்ளியது. ஆயிரக்கணக்கான மக்களை காவுகொண்டது. இதற்கு நீர்வழித்தடங்களான ஏரிகள், ஆறுகள், குளங்கள் மீதான ஆக்கிரமிப்பும், ஆற்று மணல் கொள்ளயர்களும்தான் காரணம்.

ஆக்கிரமிப்பை அகற்றுகிறேன் என்ற பெயரில் குடிசைகளையும், சாதாரண வீடுகளையும் மட்டும் குறிவைத்து இடித்து விட்டு கொக்கரிக்கிறது ஜெயா அரசு. பொத்தேரியை ஆக்கிரமித்த எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக பச்சைமுத்துவின் புதிய தலைமுறை ஆக்கிரமிப்பு பற்றி விவாதம் நடத்தியது. போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, வேல்ஸ் பல்கலைக் கழகம், ஏ.சி.சண்முகத்தின் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம், ஜே.பி.ஆர் பனிமலர், சத்தியபாமா ஆகிய கல்வி நிறுவனங்கள் ஏரிகள், ஆறுகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டன. இதெல்லாம் அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லை. ஏன்? அவை இவர்களின் அனுமதியோடுதான் கட்டப்பட்டிருக்கின்றன. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு கட்டப்படும் வீடுகள் ஏரியின் மீதுதான் கட்டப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பாளர்கள் கார்ப்பரேட்டுகளா? மக்களா? உலகத் தரம் வாய்ந்த மியாட், குளோபல் ஆகிய மருத்துவமனைகளும் ஏரியில்தான் கட்டப்பட்டுள்ளன. குளோபல் மருத்துவமனைக்குச் சொந்தக்காரரான மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெள்ள ஆய்வு என்ற பெயரில் தனது ஆக்கிரமிப்புகளை காப்பாற்றிக் கொண்டார்.

நாகிரெட்டி தோட்டப் பகுதியில் 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என துரத்தியபோது, மக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளை விரட்டியடித்துள்ளனர். எங்கள் வீடுகளை இடிப்பதற்கு முன்பு மியாட், குளோபல் மருத்துவமனைகளை இடி என்ற போராட்டம் நடத்தினர். அதிகாரிகளிடமோ, கவர்னரிடமோ மனு கொடுத்து பயன் இல்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர். மாற்று இடத்தில் வீடு கட்டித்தரச் சொல்லி போராடுகின்றனர். ரேஸ் கோர்ஸ் மைதானம் 1000 ஏக்கர், கோல்ஃப் மைதானம் 800 ஏக்கரையும் இடம் காட்டியுள்ளனர்.

நிவாரணம் எது? அரசு கொடுக்கும் 5,000 10,000 அல்ல. கார்ப்பரேட் கம்பெனிகள், ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள், அதிகாரவர்க்கம், ஓட்டுக்கட்சி பிரமுகர்கள் ஆக்கிரமித்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து தண்டிப்பதுதான் உண்மையான நிவாரணமாகும். இதுதான் நமது பாரம்பரிய நீர்நிலைகளையும், நமது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும். இதற்கு மக்களே அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும்” என்ற தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக தோழர் குத்புதீன் (சு.ப.தொ.பா.ச_ நன்றி கூறினார். கூட்டத்தின் இடைஇடையே மக்கள் கலை இலக்கிய மையக் கலைக்குழுவின் புரட்சிகரப் பாடல்கள் இடம்பெற்றன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க