privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கசென்னை ஐ.ஐ.டி முதல் கோவில்பட்டி வரை JNU ஆதரவு போராட்டம் !

சென்னை ஐ.ஐ.டி முதல் கோவில்பட்டி வரை JNU ஆதரவு போராட்டம் !

-

ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கட்டவிழ்த்துவிட்ட தேசத்துரோக நாடகம் அம்பலப்பட்டு சந்தி சிரித்திருக்கிறது. இவர்களை மேலும் தனிமைப்படுத்தும் விதத்தில் நாடெங்கிலும் ஜனநாயக சக்திகள், அறிவுத்துறையினர், பேராசிரியர்கள், மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை கட்டியமைத்து வருகின்றனர்.

iit-abvp-alliance-against-apsc-jnu-protestஇதன் ஒருபகுதியாக சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்தும் மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமாரை விடுதலை செய்யக்கோரியும் 22-02-2016 அன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது.

அதற்காக அனுமதி கோரி ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு கடிதம் அளித்தனர். ஆனால் ஐ.ஐ.டி டீன் கடைசி நேரம் வரை அ.பெ.ப.வ அமைப்பினரை போராட அனுமதிக்காமல் இழுத்தடித்தார்.

மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் போராட்டத்தை நடத்த அனுமதிக்க இயலாது என்றுமுதலில் சொல்லப்பட்டது. ஆனால் ஒழுங்குவிதிகளை மாணவர்களின் மீது திணிப்பதற்காக இதே தேர்வு காலத்தில் ஐ.ஐ.டி நிர்வாகம் கடந்த வாரங்களில் மட்டும் இரு கூட்டங்களை நடத்தியிருக்கிறது என்பதை மாணவர்களே எடுத்துக்காட்டி ஐ.ஐ.டி நிர்வாகத்தின் நரித்தனத்தை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர்.

சொல்லப்போனால் ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பல் தற்பொழுது நாட்டில் தொடுத்துவரும் பாசிசபயங்கரவாதம் தான் தங்களது தேர்வுக்கும் வாழ்வுக்கும் இடைஞ்சலாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட மாணவர்கள் டீன் பயன்படுத்திய அதே அஸ்திரத்தை அப்படியே ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிராக திருப்பிவிடும் பொருட்டு அ.பெ.ப.வ நடத்தவிருந்த போராட்டத்தில் திரளாக கலந்துகொண்டனர்.

ஆனால் எப்படியாவது போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்பதில் குறியாய் இருந்த ஐ.ஐ.டி டீன், போராட்ட நாளை தள்ளிவைத்து போராட்ட நிபந்தனைகள் என்பதன் பெயரில் மோடி கும்பலின் அடக்குமுறை அட்டூழியங்களை மாணவர் மீது திணித்தார்.

இதன்படி துண்டுபிரசுரம் கொடுக்கக் கூடாது, முழக்கமிடக் கூடாது, பதாகை ஏந்தக் கூடாது, பேசி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது, பத்திரிக்கையாளர்களை அழைக்கக் கூடாது, என தான் ஒரு மோடியின் கைதேர்ந்த அடியாள் என்பதை வெளிக்காட்டிக்கொண்டார்.

இதனிடையே அ.பெ.ப.வ போராட்டம் நடத்தினால், கடுமையான தாக்குதலை சந்திக்க நேரிடும் என ஆர்.எஸ்.எஸ் காலிகள் இணையத்தில் பகிரங்க மிரட்டல் விடுத்தனர். மிரட்டியபடியே 30-க்கும் மேற்பட்ட இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடைபெறும் ஐ.ஐ.டி விடுதி வளாக புல்வெளியில் சூழ்ந்திருந்தனர். இவர்கள் மாணவர் அமைப்பு சார்பாக டீனிடம் எந்தவித முன் அனுமதியோ, கடிதமோ எதுவும் பெறவில்லை. டில்லியில் வக்கீல்களின் போர்வையில் மூன்று மணிநேரம் கண்ணையா குமாரைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன்அனுமதிக்கடிதமா பெற்றிருந்தது?

காவிக்கும்பல் பாரத் மாதா கி ஜே! வந்தே மாதரம்! என்று அனுமதியின்றி கூட்டம் நடத்தியது, கோசம் போட்டது மட்டுமில்லாமல் போராட வந்த மாணவர்களை தாக்குவதாக கூட்டத்திற்குள்ளேயே பேசியது. அ.பெ.ப.வ அமைப்பினர் பகத்சிங் பாடலை பாடமுயன்ற பொழுது, காவல் துறை, ஐ.ஐ.டி செக்க்யூரிட்டி போலீசு, ஐ.ஐ.டி நிர்வாகம் அனுப்பி வைத்த பேராசிரியர் அனைவரும் பாடலை பாடவிடாமல் தடுத்தனர். ஆனால் மறுபுறத்திலோ வந்தேமாதரம் கூச்சலை அனுமதித்து எந்த கேள்வியும் எழுப்பாமல் இருந்தது ஐ.ஐ.டி நிர்வாகம். இந்தக் கூச்சல் மட்டும் தேர்வு எழுதும் மாணவர்களை இடையூறு செய்யாதா? இல்லை பகத்சிங் பாடல் மட்டும் மாணவர்களை இடையூறு செய்யுமா?

போராட்டத்திற்கு வந்திருந்த மாணவர்கள் அந்த இடத்திலேயே உன் ஒழுங்குமுறை விதிகளின் யோக்கியம் ஏன் காவிக்கும்பலுக்கு மட்டும் பொருந்தாது என கேள்வி எழுப்பினர். மடி அறுத்து பால் குடிக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் கேள்வி முறைகளுக்கெல்லாம் உடன்பட்டவர்களா என்ன?

சான்றாக ஜே.என்.யு விவகாரத்தில் ஐ.ஐ.டியின் நிலைப்பாடு என்னவென்று ஐ.ஐ.டி இயக்குநரிடம் இந்து, எக்ஸ்பிரஸ் கேள்வியை முன்வைத்த பொழுதே அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் கருத்து கூற முடியாதென்றும் பதிலளித்த இதே இயக்குநர் தான் ஒவ்வொரு வருடமும் ஆர்.எஸ்.எஸ்ஸின் விவேகானந்தர் படிப்பு வட்டத்தில் தொடக்கவுரை ஆற்றுகிறார் என்பது உலகறிந்த உண்மை.

மோடியின் கொள்கைகளையும் இந்துத்துவத்தையும் விமர்சித்ததற்காகத்தான் அ.பெ.ப.வ சென்றவருடம் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலால் தேசத்துரோகியாக முத்திரை குத்தப்பட்டு ஐ.ஐ.டி அவாள் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டது. அப்பொழுது பிஜேபி ஹெச்.ராஜாவின் தலையீடு இருந்ததும் விவேகானந்தா வாசகர் வட்டம் மாணவர் அமைப்பாக காட்டும் விதத்தில் லோகோ மாற்றப்பட்டதும் அம்பலமானது.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா முசாபர் நகர் கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முகத்தை அம்பலப்படுத்தியதற்காக ஏ.பி.பி.வி குண்டாந்தடிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு தூக்கில் தொங்கினார். சென்ற மாதம் அ.பெ.ப.வ அமைப்பினர் ரோகித்தின் விசயத்தில் இந்துத்துவ பாசிசத்தின் நேரடி தலையீட்டை வெளிக்கொண்டு வரும் விதத்தில் ஐ.ஐ.டிக்குள் வீச்சான போராட்டத்தை நடத்தினர். அப்பொழுதும் ஹெச்.ராஜா போன்ற பி.ஜே.பி கும்பல்கள் நேரடியாக தலையீட்டு அ.பெ.ப.வ அமைப்பினர் ரவுடிக் கும்பல்கள் என்று திட்டமிட்டு பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தனர். ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களும் வெண்முரசு எழுதும் வேலையையும் ஒதுக்கிவைத்துவிட்டு அம்பேத்கர் பெரியார் ஒன்றாக இருக்க முடியாது என்று ஹெச். ராஜாவின் கருத்தையே வலியுறுத்தியிருந்தார். ஐ.ஐ.டிக்குள்ளேயே காவிக்கும்பலும், ரோகித் வெமுலாவிற்கான போராட்டத்தில் அ.பெ.ப.வ பார்ப்பன பாசிசம் பற்றி பேசுகின்றனர்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர். இதற்கெல்லாம் ஒழுங்கு விதிமுறை என்று அடாவடி செய்த ஐ.ஐ.டி நிர்வாகம் இப்பொழுதும் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவாக போராடுவதற்கும் அ.பெ.ப.வ மாணவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு மறுபுறத்தில் காவிக்கும்பலை ஏவிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்தவகையில் 22-02-2016 அன்று அ.பெ.ப.வ அமைப்பினர் மீது தாக்குதலை நடத்துவோம் என்று அனுமதியின்றி கூட்டம் நடத்திய காவிக்கும்பலின் மீது ஐ.ஐ.டி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் ஒழுங்குமுறை விதிகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு தளர்த்தி, கண்டும் காணாமல் இருப்பதையும் மக்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

பாட்டியாலா நீதிமன்றத்தில் சவுகான் தலைமையில் கண்ணையா குமார் தாக்கப்பட்ட சம்பவமும் 22-02-2016 அன்று ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு தெரிந்தே அ.பெ.ப.வ போராட்டத்திற்கு எதிராக காவிக்கும்பல் நடத்திய ரவுடித்தனமும் ஒன்றே என்பதையும் மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்த வகையில் ஒட்டுமொத்த எபிசோடில் ஐ.ஐ.டி நிர்வாகம், காவிக்கும்பல், பி.ஜே.பி ஹெச். ராஜா ஆகியோரில் யார் ரவுடி என்பதை எவர் ஒருவரும் எளிதில் இனம் காணமுடியும்.

பாசிச சக்திகள் தனிமைப்பட்டு அம்பலப்பட்டு நிற்கும் நேரத்தில், இனி வெறும் அவதூறுகளும் போலி மோதல்களும் என்கவுண்டர்களும் நடைபெற்றால் ரவுடிகள் எங்கு எப்படி உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு பாசிசத்தை வேரறுக்க முன்வரவேண்டும்.

2. கரூர்

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் பேரவை தலைவர் திரு கண்ணையா குமார் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும், பாட்டியாலா நீதிமன்ற வளாகத்திலேயே மாணவர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்யக் கோரியும் 19-02-2015 அன்று காலை 10 மணி அளவில் கரூர் தந்தி அலுவலகம் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் தோழர் இரா.பாக்கியராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. karur-rsyf-demo-on-jnu-poster இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முதல்நாள் இரவு காவல்துறை அனுமதி வழங்கியது. ஆனால், காலை 8 மணியளவில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று காவல்துறையிலிருந்து தகவல் சொல்லப்பட்டது. அரசு ஊழியர் போராட்டம் நடத்த இருப்பதால் காவலர்கள் பற்றாக்குறையாக உள்ளது, அதனால் 4 நாட்கள் கழித்து நடத்திக் கொள்ளுங்கள் என்று காரணம் சொன்னார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்] ஆனால், ஆர்ப்பாட்டம் தொடங்கும் முன்பு ஆர்ப்பாட்ட இடத்தில் போலீசு குவிக்கப்பட்டிருந்தது. தோழர்கள் திரண்டு முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தோழர்கள் முழக்கமிட்டவாறு கைதாகினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கரூர்

3. திண்டிவனம்

jnu-rsyf-vpm-poster4. கோவில்பட்டி

  • JNU மாணவர் பேரவைத் தலைவர் கண்ணையா குமாரை விடுதலைசெய்!
  • மாணவர்கள் , வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய BJP, ABVP குண்டர்களை கைதுசெய்! 

23-02-2016 அன்று காலை 10.30 மணியளவில அரசு அலுவலக வளாகம் அருகில் கோவில்பட்டி பு.மா.இ.மு தோழர்கள் ஆர்ப்பாட்டம்

ரோஹித் வெமுலாவைத் தற்கொலைக்குத் தள்ளிய பின், இப்போது கண்ணையா குமாரை பொய்க்குற்றச்சாட்டின் கீழ் தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்து சிறையில் தள்ளியுள்ளது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையாக இந்த நிகழ்வு நடந்துள்ளது. முற்போக்கு, ஜனநாயக சிந்தனையுள்ளவர்களாக மாணவர்கள் இருக்கக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளின் நோக்கமாக உள்ளது.

நாடு முழுக்க, உலகம் முழுக்க ஜனநாயகவாதிகளும், மாணவர்களும் கண்ணையா குமாரின் கைதைக் கண்டித்தும், JNU மீதான மத்திய பி.ஜே.பி அரசின் தாக்குதலைக் கண்டித்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாகத்தான் கோவில்பட்டி பு.மா.இ.மு. தோழர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் அனுமதி கொடுத்த போலீசு, பின்னர் அன்று இரவே அனுமதியை ரத்து செய்து ஒரு கடிதம் அனுப்பியது. கடிதத்தில், கண்ணையா குமாரின் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதால் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்று மிகவும் ‘அறிவுபூர்வமாக’ விளக்கம் அளித்திருந்தது.

அனுமதி இல்லாவிட்டாலும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது, நமது கருத்தை மக்கள் மத்தியில் பதிவு செய்வது என்று முடிவெடுத்து, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்போடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர்கள் போலீசு கைது செய்யும் என்ற நிலைமையிலும் அச்சமின்றி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக முழக்கங்களை எழுப்பினர். சுற்றியிருந்த மக்களிடம் நூற்றுக்கணக்கான பிரசுரங்களை கொடுத்து செயலாற்றினர்.

முதலில் ஆர்ப்பாட்டத்தை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று ஆணையிட்ட போலீசு, தோழர்கள் ‘கைது செய்தால் கைது செய்யுங்கள், முழக்கமிட்டு, பேட்டியளித்த பின்தான் ஆர்ப்பாட்டத்தை முடிப்போம் என்று கூறிய பிறகு, வேறு வழியில்லாமல் வேடிக்கை பார்த்தது.

பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள், தட்டிகள், என நூற்றுக்கணக்கான மக்களிடத்தில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி பாசிச கும்பலின் உண்மை முகத்தை வெளிக்கொணர்வதாக ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவில்பட்டி

5. விழுப்புரம்

சென்னை IIT, ஐதராபாத் பல்கலை கழகத்தை தொடர்ந்து டெல்லி JNU வை ஆக்கிரமிக்க துடிக்கும் RSS ன் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை முறியடிப்போம்

கடந்த 12-ம் தேதி ஜே.என்.யு  மாணவர் தலைவர் கண்ணையா குமார் தேசிய பாதுக்காப்பு சட்டத்தில் பார்ப்பன மோடி அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய கைதை கண்டித்து உலகம் முழுவதும் 400 பல்கலை கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 166 க்கும் மேற்பட்ட பல்கலை கழக பேராசிரியர்கள் , முற்போக்கு சிந்தனையாளர்கள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து கண்ணையா குமாரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக 22-02-2016 திங்கள் அன்று மாலை 4.00 மணிக்கு விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தோழர் மணிமேகலை
தோழர் மணிமேகலை

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் மணிமேகலை தலைமை தாங்கி, “JNU மாணவர் தலைவர் கண்ணையா குமார் கைது என்பது மாணவர்களை அச்சுறுத்துவதற்க்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தான். குறிப்பாக பார்ப்பன மோடி அரசை விமர்சித்து தொடர்ந்து JNU மாணவர்கள் போராடி வருகிறார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பார்ப்பன கும்பல் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் திட்டமிட்டு ABVP காலிகள் கலவரம் செய்துள்ளனர். கண்ணையா குமார் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றபோதும் கூட கண்ணையா குமாரை விடுதலை செய்ய மறுக்கிறது என்றால் இது மாணவர்களை அச்சுறுத்துவதற்க்கான நடவடிக்கை தான்” என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

தோழர் திலீபன்
தோழர் திலீபன்

அடுத்ததாக கண்டன உரையாற்றிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் திலீபன், “சமூக அக்கறையோடு போராடிய JNU மாணவர்களை தேடி தேடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மாபெரும் தாக்குதல். மார்டின் லூதர் கிங் கூறியது போல “ எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விட , நல்லவர்களின் மவுனம் தான் மரணத்தை ஏற்படுத்துகிறது.அதுபோல் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பல் மாணவர்கள் மத்தியில் சாதி ரீதியாக, மத ரீதியாக பிளவை ஏற்படுத்தி அவர்களின் கனவான இந்து ராஷ்டிரத்தை நிறுவிக்கொள்ள துடிக்கிறார்கள். இந்த அபாயத்தை எதிர்த்து போராடாமல் இருப்பது தான் நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால் தான் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை விதித்தனர். ஐதராபாத் பல்கலை கழக மாணவர் ரோஹித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளினர்.தற்பொழுது டெல்லி ஜே.என்.யு மாணவர்களை ஒடுக்குகிறது. இந்த பார்ப்பன பாசிச கும்பலை விரட்டியடிக்காமல் உழைக்கும் மக்களிடம் ஒற்றுமையை நிலைநாட்ட முடியாது” என்பதை உணர்த்தி பேசினார்.

தோழர் ஞானவேல்
தோழர் ஞானவேல்

இறுதியாக கண்டன உரையாற்றிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் அமைப்புக்குழு செயலர் தோழர் ஞானவேல், ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்வமாக வந்து கலந்து கொண்ட பள்ளி மாணவர்களை அச்சுறுத்தி கலைய வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சந்துருவை பாப்பானின் ஏவல் படை என்பதை அம்பலப்படுத்தி பேசிய பின்பு, “டெல்லி ஜே.என்.யு என்பது மற்ற பல்கலை கழகங்களை போல் பட்டம் தயாரித்து வழங்கும் தொழிற்சாலை அல்ல. முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை உருவாக்கும் அறிவுத்துறையினரின் பிறப்பிடம். இந்த கேடுகெட்ட அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடுபவர்கள் தான் ஜே.என்.யு மாணவர்கள். அங்கு பணியாற்றக்கூடிய பேராசிரியர்களும் தொடர்ச்சியாக உழைக்கும் மக்களுக்காக போராடக்கூடியவர்கள் தான். ஆகவே தான் ஜே.என்.யு மற்ற எல்லா பல்கலை கழகங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது. இதனை சகித்துக்கொள்ள முடியாத பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டமிட்டு நிகழ்த்தியது தான் கண்ணையா குமார் கைது. மேலும் ஐதராபாத் பல்கலை கழக மாணவர் ரோஹித் வேமுலாவின் தற்கொலை, சென்னை ஐ.ஐ.டி யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தடை போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பார்ப்பன கும்பலின் சத்திதனங்களை அம்பலப்படுத்தினார். குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசுத்துறைகளிலும் RSS பார்ப்பன கும்பலை நியமித்து வருகிறது மோடி அரசு. கல்வி நிலையங்களை காவிக்கூடாரமாக்க துடிக்கிறது. அதனால் தான் உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து மாணவர்கள் மீது தாக்குதலை நிகழ்த்தி வருகிறது RSS பார்ப்பன கும்பல். நெருங்கி வரும் இந்த மாபெரும் அபாயத்தை முறியடிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். அதற்கு ஓட்டுக்கட்சிகளை நம்பி பயனில்லை. மக்கள் அனைவரும் புரட்சிகர அமைப்புகளில் அணி திரள்வதே தீர்வு” என்பதை விளக்கி தனது உரையை முடித்துக்கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க