கடந்த 2006-ம் வருடம் ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை உடைத்ததற்காக இந்து மக்கள் கட்சி எனும் கூலிப்படை மீது, டிசம்பர் 7-ம் தேதி அன்று தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் மத கலவரத்தை தூண்டியதற்காக வழக்கு போடப்பட்டு, அதன் விசாரணை திருச்சி முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் குற்றவாளியும் இந்து மக்கள் கட்சி கூலிப்படை தலைவருமான அர்ஜுன் சம்பத், இன்று வழக்கு விசாரணை முடித்து வந்தபோது நீதிமன்ற வளாகத்த்திற்குள்ளாகவே மதவெறியைத் தூண்டி மத கலவரத்தை தூண்டும் வகையில் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததோடு உடன் வந்த ரவுடிகள் 15 பேரும் முழக்கமிட்டனர். முக்கியமாக தமிழகத்தில் பெரியார் சிலைகள் இருக்காது என ஊளையிட்டனர்.
இதனை காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். உடனே மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் சங்கர்,ஆதிநாராயணமூர்த்தி ,மனோஜ் குமார்,செபஸ்டியன் ஆனந்த்,நெடுஞ்சேரலாதன் உள்ளிட்டவர்களுடன் வழக்கறிஞர்கள் கென்னடி,பிரபு, ராமசந்திரன்,பழனியப்பன், உள்ளிட்டோர் அர்ஜூன் சம்பத் மற்றும் இதர ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்ற வளாகத்திற்குள் முழக்கமிட்டனர். அதன் பிறகு சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்து மக்கள் கட்சியை தடை செய், காவி பயங்கரவாதி அர்ஜுன் சம்பதின் பிணையை இரத்து செய்., பெரியார் பிறந்த மண் இது, பார்ப்பனிய பிசாசே வெளியேறு என்று முழக்கமிட்டவாரே மாவட்ட அமர்வு நீதி மன்ற காவல் நிலையம் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதி ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை விளக்கி புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினர்.
மாவட்ட அமர்வு நீதி மன்ற நீதிபதி குமரகுரு மற்றும் கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் அசோக் குமார் ஆகியோர் இன்று மாலைக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.
படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்:
தகவல் : மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி கிளை,
பேச 9487515406
ஈ.வே.ராமசாமியை எனக்குப் பிடிக்காது. இருப்பினும் அவருக்கு எதிரான மாற்றுக் கருத்தை முன்வைக்க நமக்கு உரிமையுண்டு. அவருடைய சிலைகளை உடைப்பது. அவருடைய இயக்க உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது என்பது ஏற்புடையது அல்ல. மாற்றுக் கருத்துக்கள் உள்ளத்தை பக்குவப்படுத்தும். மதவெறி மனிதரை மிருகம் ஆக்கும்.