பண மதிப்பிழப்பு குறித்து நவம்பர் 8, 2016 முதல் இதுவரை 50-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வந்து விட்டன. தான்தோன்றித்தனமாகத்தான் இந்த அரசு செயல்படுகிறது என்பதற்கு இந்த அறிவிப்புகளே போதுமானவை. இருப்பினும் கருப்புப் பண முதலைகளைத் திணறடிக்கும் நடவடிக்கை என்று இவற்றை கொண்டாடுகின்றனர், பா.ஜ.க.வின் ஊடக கூஜாக்கள்.
வேலைவாய்ப்பைக் குறைப்பதும், சிறு தொழில்களை அழிப்பதும், பண முதலைகளின் கையில் மென்மேலும் செல்வம் குவியுமாறு செய்வதும், ஏழைகளைப் பரம ஏழைகளாக்குவதும் எந்தக் கொள்கையோ – அதுதான் கருப்புப் பணத்தையும் உருவாக்குகிறது.
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகனராவ் உள்ளிட்டு பலரிடம் நடத்தப்படும் வருமான வரி சோதனை குறித்த செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. இதை வைத்து கருப்புப் பண ஒழிப்பு சூடு பிடித்திருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது. திருப்பூர் கன்டெயினர், அன்புநாதன் கோடவுனில் கைப்பற்றப்பட்ட பணம் ஆகியவற்றின் கதி என்ன? நத்தம், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் போடப்பட்ட சோதனைகள் இன்று என்ன ஆயின? இவை வெறும் கந்துடைப்பேயன்றி வேறென்ன ?
போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து 2,500 கோடி ரூபாயைக் கூரை வரை அடுக்கி வைத்திருந்த கேதன் தேசாய் என்ற உத்தமனை உலக மருத்துவ கவுன்சில் தலைவராக சிபாரிசு செய்யவில்லையா திருவாளர் மோடியின் குஜராத் அரசு ?
சொந்தப் பணத்தை மாற்றுவதற்கு பிச்சைக்காரர்களைப் போல வங்கிகளின் வாசலில் காத்து நிற்கிறார்கள் மக்கள். தொழில்கள் அழிகின்றன. சிறு வணிகம் அழிகிறது. நோயாளிகள் சாகிறார்கள். நாடே நிலைகுலைந்திருக்கிறது.
4-ஜி ஆண்டிராய்டு போன், ஆதார் அட்டை, கடன் அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின் கண்காணிப்புக்கும் உட்படுத்துவது;
இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா அல்லது டிஜிட்டல் பாசிசம்.
ஏமாந்தது போதும்,கேள்வி எழுப்புங்கள். நம்மை வீதிக்கு வரவழைத்து விட்டார் மோடி ! வீதியில் இறங்கி வீறு கொண்டு போராடுவதற்கு இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் உதவும்.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
- மோடி ஆசியுடன் 500 கோடி கருப்பு பணத்தில் ரெட்டி திருமணம்
- மோடியின் பலிபீடம்: 7 நாளில் 33 பேர் பலி !
- பா.ஜ.க தலைவர்கள்:
120 கோடியிலே 100 பேர் செத்தால் என்ன ? - உங்களது இரக்கமின்மையை நியாயப்படுத்த முடியாது
- மோடியின் நண்பர்கள்
முன்பே பணத்தை மாற்றிவிட்டனர் – யாதின் ஓசா - மோடியின் தாக்குதலால்
பிணத்தை அடக்கம் செய்ய முடியவில்லை - கபாலி ரஜினியின் கருப்புப் பணம் எவ்வளவு ?
- கட்டுமானத் தொழிலாளர்களை பட்டினியில் தள்ளிய மோடி !
- கருப்புப் பணம் என்றால் என்ன ? – பிரபாத் பட்நாயக்
- வருமானத்திலும் வரி ஏய்ப்பிலும் காங், பா.ஜ.க சாதனை!
- ஓராண்டில் 56 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் − ஜெயரஞ்சன்
- மோடியின் முடிவை காறி உமிழும்
வெளிநாட்டு பத்திரிக்கைகள் ! - சில்லறை வணிகத்தை கொல்லத் துடிக்கும் ரிலையன்ஸ் ஜியோ !
- கேடி மோடிக்கு பயப்படும் கோழைகளா நாம் ?
- வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
_____________