Friday, March 31, 2023
முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்போர்னோ : உங்களுக்காக மலம் சுவைக்கும் நடிகைகள் !

போர்னோ : உங்களுக்காக மலம் சுவைக்கும் நடிகைகள் !

-

போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம் – பாகம் 3

1993-ம் வருடத்தில் போர்னோ உலகில் நுழைந்தேன். இது நாள் வரை ஒரு விபச்சாரியாக, ஆபாச நடன மங்கையாக வாழ்ந்த எனக்கு நடிப்பு மற்றும் வெகு இயல்பாகப் பொய் பேசும் திறமை நன்றாக வளர்ந்திருந்தது. பணத்திற்காக உடல், உடலுக்காகப் பணம்; இதற்காகத் தான் எல்லாமே என்ற புரிதலில் போர்னோ உலகில் நுழைந்தேன்.

முதல் நாள் ஷூட்டிங்கிற்காக நான் தயாராகினேன். தலைமுடிக்கு வர்ணம் பூசி, அழகான குட்டைப் பாவாடை அணிந்து ஒரு ஹாலிவுட் நடிகையைப் போன்று என்னை அலங்கரித்துக் கொண்டு கொஞ்சம் மதுவும் அருந்தி விட்டு அந்த இரகசிய வீட்டிற்குள் சென்றேன். அந்த வீட்டிற்குள் நுழைந்தவுடனே ஒரு கரும்புகை என்னை ஆட்கொண்டது. ஆம் அது சிகரெட் புகை. ஒரு அறையிலிருந்து என்னை ஒரு மனிதன் அழைப்பதை உணர்ந்தேன்; ஆனால் வீடு முழுவதும் புகை படிந்திருந்ததால் அவர் முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

அந்த அறையின் மூலையில் மிகப்பெரிய வீடியோ கேமரா சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தது. அந்தக் கேமராவின் லென்ஸ் எதிரிலிருந்த ஒரு சோபாவை முழுதாகக் கவர் செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. எனக்கு இப்போது எல்லாமே தவறாகத் தெரிந்தது. நான் தவறான உலகத்திற்குள் நுழைந்து விட்டேனா? எண்ணற்ற கேள்விகள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

ராக்சியின் போர்னோ வாழ்க்கை

நீதான் அந்த சமந்தா சொல்லியனுப்பிய பெண்ணா என்று அந்த ஆண்குரலின் கேள்வி என் சிந்தனைக்குத் தடைபோட்டது. உடனே ஆம் என்றபடி என்னுடைய மருத்துவ சோதனைச் சான்றிதழை அவரிடம் நீட்டினேன். ம்ம்ம்… நீ இந்தத் தொழிலில் சிறந்த பெயரெடுப்பாய் என்று அவர் எனக்கு சான்றிதழ் கொடுத்தார்.

சரி அடுத்த அழைப்பு வருவதற்குள் கொஞ்சம் மது அருந்திவிட்டு வரலாமென்று நினைத்து அங்கிருந்த குளியலறைக்குள் சென்று மது அருந்தினேன். சரி நான் நடிக்கப்போகும் ஆணுடன் என்னை எப்படி அறிமுகம் செய்து கொள்ளப்போகிறேன்?? “ஹாய்! நான் ராக்கி! இன்று நான் உங்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளப் போகிறேன்! “ ம்ம்ம்…இது சரியில்லை “ஹாய்! உங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி; நாம் இருவரும் இன்று நடிக்கப்போகிறோம்!“ . இது நல்ல அறிமுக வார்த்தைகளாகத் தோன்றியது. மறுபடி சில முறை கண்ணாடியைப் பார்த்து சொல்லிக் கொண்டேன்.

திடீரென ஷுட்டிங்-கிற்கு தயாராகுமாறு அந்த டைரக்டரிடமிருந்து அழைப்பு வந்தது. அங்கே சில பெண்கள் உடையில்லாமல் நின்று கொண்டிருந்தனர். சில ஆண்களும் அங்கே இருந்தனர். போர்னோ டைரக்டர் அன்றைய தினம் எடுக்கப்போகும் படம் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

கதை என்னவென்றால் ஒரு கல்லூரிப் பேராசிரியர் தன்னுடைய குறும்புக்கார மாணவிகளுக்குக் காமவிளையாட்டுக்கள் குறித்து செய்முறை வகுப்புக்கள் நடத்திக் காண்பிப்பதாம். அப்படியென்றால் நான் என்னை அறிமுகம் செய்து கொள்வதற்காகச் கண்ணாடி முன் செய்த தயாரிப்புக்கள்?? என்ன ஒரு முட்டாள்தனம் செய்தேன்; என்னையே நான் நொந்து கொண்டேன் அந்தத் தருணத்தில்.

ஒரு வழியாக நான் கேள்விப்படாத அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கதையை அந்த டைரக்டர் ஸ்பீல்பெர்க் ரேஞ்சுக்கு சொல்லிமுடித்து விட்டு “ஓகே..ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்” என்று சொன்னார்.

போர்னோ பெண்களைக் கொச்சைப்படுத்துகிறது

“லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன்” ஆண்கள் ஒவ்வொருவராக உடைகளைக் கழட்டி எறிந்தனர். என்னுடன் இருந்த சக பெண் ஒருவர் பேராசிரியராக நடிக்கவிருந்த ‘அந்த’ நபரிடம் சென்று எனக்கு நன்றாக வகுப்பு எடுக்க முடியுமா என்று கேட்டு என்னையும் காண்பித்து அவளுக்கும் இது குறித்து ஒன்றும் தெரியாது; எனவே அவளுக்கும் சேர்த்து வகுப்பெடுங்கள் என்று கூற உடனே எனக்குக் கோபம் வந்துவிட்டது.

எத்தனை நபர்களைப் பார்த்திருப்பேன்; சட்டப்பூர்வமற்ற அந்தத் தொழில்களிலேயே சமாளித்தவள் நான்; போர்னோ சட்டப்பூர்வமானது தானே இதில் எனக்கு என்ன கற்றுத்தரவேண்டியுள்ளது. வா! நான் உனக்குக் கற்றுத்தருகிறேன் என்று அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்தேன். உடனே டைரக்டர் “ ராக்சி! உன் நடிப்பு வெகு இயல்பாக உள்ளது! நீ வெகுவிரைவில் போர்னோ உலகின் ராணியாவாய்” என்று உசுப்பி விட்டார்.

போதாக்குறைக்கு ஜாக் டேனியல் வேறு நிறைய உள்ளே சென்றதால் எனக்கு மேலும் சாதிக்க வேண்டும் என்ற அற்ப வெறி அதிகரிக்க அந்தப் பெண்ணால் என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் திடீரென டைரக்டர் குறுக்கிட்டு ஓகே இப்போது இந்தப் படத்தின் முக்கியமான காட்சிக்கு வந்துவிட்டோம்; “ராக்சி, உன் கவர்ச்சியான கண்களைக் காட்டு: கேமராவை ராக்சியின் கண்களை நோக்கித் திருப்புங்கள்” என்று கட்டளையிட்டார்.

சக பெண்ணிடம் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பேராசிரியர் தன் ஆணுறுப்பை வெளியில் எடுத்து விந்தணுவை என் முகத்தின் மீது தெளிக்க விட்டார். பெருத்த அவமானத்துடன் கோபமும், அழுகையும் பீறிட்டு வர மற்றவர்களிடம் காண்பிக்க முடியாமல் அந்த நடவடிக்கையை வரவேற்பது போல நடித்தேன். நடிப்பு எனக்குப் புதிதா என்ன? எல்லாவற்றையும் மீறி சில கண்ணீர்த் துளிகள் வெளிவந்தன.

ஆஹா! என்ன ஒரு அருமையான காட்சி! என்று டைரக்டர் கைதட்டினார். உடனே அருகிலிருந்த ஆண் ஒருவர் என் மீது ஈரக் காகிதங்களை வீசினார். முகம் முழுவதும் தெளிக்க விடப்பட்ட விந்தணுக்களைத் துடைத்த அவமானம் தாங்க முடியாமல் செத்துப் போய்விடலாமா என்று நினைத்தேன். ஆனால் எக்காரணம் கொண்டு என் சோகத்தை வெளியில் யாருக்கும் காண்பிக்கக்கூடாது என்று வைராக்கியத்துடன் இருந்தேன்.

பெண்கள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறையின் ஊற்றுக்கண் வேறு எதுவுமல்ல…போர்னோ தான்.

டைரக்டர் என்னைப் புகழ்ந்த கையோடு அடுத்த படத்திற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியிருந்தார். என் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும் போது டைரக்டர் என்னிடம் அந்த நாளுக்கான பணத்தைக் கொடுத்து கூடவே பிரபல போர்னோ டைரக்டர் பாபி ஹொலாந்தே -யின் விசிட்டிங் கார்டையும் என் கையில் கொடுத்து அவரைப் போய் பார் என்றார்.

கையில் பணம், இரத்த நாளங்களில் மது பானம், மனதில் எல்லையில்லா வெறுப்பு, அடுத்த போர்னோ நட்சத்திரம் ஆக வேண்டுமென்ற வெறியுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினேன்.

ஆண்கள் மீது ஏற்பட்ட இயல்பான வெறுப்பு மற்றும் போர்னோ உலகில் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறியுடன் தீவிரமாக நடிக்க முடிவெடுத்தேன். லாஸ் ஏஞ்செல்சில் உள்ள வான் நைஸ்-இல் நான் நடித்த படம் போர்னோ உலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாபி ஹொலாந்தேவை ஈர்த்துவிட்டது போலும்.

என்ன ஒரு அழகான இடை உனக்கு? இது பாபி ஹொலாந்தே. கழுத்தில் ஒரு பட்டைச் செயினுடன் பார்ப்பதற்கு ஒரு ரவுடி போல இருந்தார் அவர். என்னை அழைத்து அவருடைய மடியில் அமர வைத்துத் தடவிக்கொண்டே “நீ மிகவும் அழகாக இருக்கின்றாய். என்னுடைய அடுத்த படத்தில் நீ தான் நடிக்கப்போகிறாய்” என்றார். எனக்கோ ஹாலிவுட் மாடல் ஆக வேண்டும் என்று விருப்பம் என்றேன். போர்னோ படங்களில் நீ சிறப்பாக நடித்தால் ஹாலிவுட் வாய்ப்புக்கள் தானாகத் தேடி வரும் என்று அவர் சொல்லியதை முழுவதுமாக நம்பிவிட்டேன்.

1993 -ல் பாபி ஹொலாந்தேவுக்காக நான் நடித்த அந்தப் படத்தை, நான் நடித்த போர்னோ படங்களிலேயே உண்மையான போர்னோ படம் என்று சொல்லலாம். பிரம்மாண்டமான பண்ணை வீட்டிற்குள் நுழையும் போதே பதற்றத்துடன் தான் நுழைந்தேன். பாபி என்னுடைய பதற்றத்தைப் புரிந்து கொண்டு என்னைத் தோளில் அரவணைத்துக் கொண்டே அங்கிருந்த ஆண்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். இவள் தான் போர்னோ உலகின் அடுத்த இராணி என்ற அளவுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரு ஹாய் என்ற புன்னகையுடன் தலைகுனிந்து நின்றேன். என்ன தான் போர்னோ தொழில் என்றாலும் பட்டப்பகலில் வெட்டவெளியில் நிர்வாணமாய் நிற்கும் ஆண்களிடம் சென்று எப்படி நான் கைகுலுக்க முடியும்? அதுவும் அறிமுகமே இல்லாத அந்த ஆண்களிடத்தில்?

பாபியிடம் பாத்ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டு அங்கே உடனடியாக விரைந்தேன். பையில் வைத்திருந்த வோட்காவை உள்ளே தள்ளி விட்டு, என்னால் இங்கு துளியும் இருக்க முடியாது என்ற மனநிலைக்கு வந்தேன். சில நிமிடங்களில் பாத்ரூம் கதவு தட்டப்பட்டது. யாரென்று கேட்கையில் ஒரு பெண் குரல் “ஏ! பெண்ணே எனிமா உனக்குத் தந்துவிட்டார்களா?” என்று கேட்க எனக்கு ஒன்றும் புரியாமல் “எனக்கெதற்கு எனிமா” என்று திருப்பிக் கேட்டேன். ஓ! அது தெரியாதா உனக்கு? எனிமாவைப் பயன்படுத்தி மலக்குடலைச் சுத்தம் செய்தால் தான் செக்ஸ் பொம்மையைப் உன் மலத்துவாரத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும் என்று அந்தப் பெண் கூறினாள்.

மீதமிருந்த வோட்காவை உள்ளே தள்ளிவிட்டு, என்னிடம் ஆசை வார்த்தைகள் பேசி நல்லது செய்வதாகப் பொய் பேசி நடித்து, என்னைப் படுகுழியில் தள்ளிய அந்த பாபியின் படத்தில் நடித்த அனுபவம் சொல்லி மாளாதது. அதைச் சொல்லும் அளவுக்கு எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் என்னிடம் எனிமா குறித்து கேட்ட அந்தப் பெண் செயற்கை ஆணுறுப்பை என் மலக்குழாயில் திணித்து என்னை வதைத்த கொடுமையை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை.

மறுபடியும் செத்து விடலாமா என்று நினைத்தேன். இனியும் போர்னோ படங்களில் நடிக்கக்கூடாது என்று சபதமெடுத்தேன். உடனடியாக எனக்குத் தெரிந்த ஹாலிவுட் தொடர்புகளிடம் பேசியதில் ஒரு வாய்ப்பு ஒன்று கிடைத்தது. “டான் ஜுவான் டிமார்கோ” என்ற படத்தில் 250 பெண்கள் பழங்காலத்து அரசன் ஒருவனின் அந்தப்புற மாளிகையில் நிர்வாணமாக இருக்கும் காட்சி படமாக்கப்படவேண்டும். அதற்கான தேர்வுக்குச் சென்றபோது பல நூறு பெண்கள் அந்த வாய்ப்பைத் தேடி வந்திருந்தனர். அதில் நான் தேர்வு செய்யப்பட்டேன்.

போர்னோவில் பெண்கள் வெறும் இறைச்சி உணவாக மட்டும்…

ஹாலிவுட் வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையில், பணம் பிரதான தேவையான போது வேறு வழியின்றி மீண்டும் போர்னோ உலகிற்குள் நுழைந்தேன். ஆனால் ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தேன். ஆண் மிருகங்களிடம் சிக்கி வதைபட்டு இறுதியில் எல்லா எச்சங்களையும் முகத்தில் சிந்தவிடும் அந்தக் காட்சிகள் என்னை மிகவும் பாதித்திருந்தபடியால் இனியும் ஆண்களுடன் சேர்ந்து நடிப்பதில்லை என்பதில் தெளிவாக இருந்தேன்.

கொலை மிரட்டல், பண மோசடி, நோய்கள் இப்படி எதுவுமே இங்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விதித்த நிபந்தனைகள் அத்தனையையும் காற்றில் பறக்கவிட்டனர். எதையெல்லாம் செய்ய முடியாது என்று சொன்னேனோ அவையனைத்தையும் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

கொஞ்சம் கூட பாதுகாப்பில்லாத வகையில் உடலுறவுக் காட்சிகள் படம்பிடிக்கப்படும். ஆபாசப் படங்களில் கண்டிப்பாக ஆணுறை அணிய வேண்டும் என்பது அமெரிக்கச் சட்டம். ஆனால் பார்ப்பதற்கு இயல்பாக இருக்காது என்ற காரணத்தால் ஆணுறை இல்லாமலேயே படம் பிடிக்கப்படும். மொத்தத்தில் ஆபாசப் படத்தொழிலை பாலியல் கடத்தல் தொழில் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

பெரும்பாலும் இரகசிய வீடுகளுக்குள் படம்பிடிக்கப்படுவதால் பெண் என்ற முறையில் எங்கள் குரலை உயர்த்திப் பேசக்கூட அனுமதியில்லை. பல ஆண்கள் ஒன்று சேர்ந்திருக்கையில் எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? கொடுக்கப்படும் போதைப்பொருட்களை உட்கொண்டுவிட்டு அவர்கள் சொல்வதை நிறைவேற்றித்தரவேண்டும்.

ஆபாசப் படம் எடுக்கப்படும் இரகசிய வீடுகள் இயக்குனர்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் இருக்கும். சில சமயங்களில் பல ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டி நிர்ப்பந்திப்பார்கள். சில சமயங்களில் வலி தாங்காமல் அழுகை வரும். ஒருவேளை அப்படி அழுதுவிட்டால் முகத்தில் குத்து விழும் அல்லது சம்பளம் கிடைக்காது. வாயும் வயிறும் இருக்கின்ற ஒரே காரணத்தால் வேறு வழியில்லாமல் அத்தனை பேருக்கும் ஈடுகொடுத்தேயாக வேண்டும்.

ஒரு முறை மிக மோசமான காம வெறியன் ஒருவன் என்னுடைய அனுமதியின்றி என்னுடைய மலத்துவாரத்தில் தன்னுடைய ஆணுறுப்பைத் திணித்து உடலுறவு கொண்டான். நரக வேதனையால் துடித்த எனக்கு அழுகையைக் கட்டுப்படுத்த இருந்த ஒரே வழி என்ன தெரியுமா? என் முன்னாலிருந்த நின்று கொண்டிருந்த இன்னொரு ஆணின் பிறப்புறுப்பை வலுக்கட்டாயமாக வாயில் திணித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. மிகக் கொடூரமான மனித சித்திரவதை அது.

ஆனால் இது போன்ற படங்கள் உங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு இணையத்தில் நீங்கள் பார்க்கும் போது பிரமாதமானதாகத் தெரியும்; ஆனால் உண்மையில் அப்படியல்ல… முகம், கண், வாய் தொடங்கி பிறப்புறுப்பு வரை தெளிக்கப்பட்ட மூத்திரம், விந்தணு, இரத்தம் மேலும் மலத்துவாரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆணுறுப்பில் இருந்து வெளிவரும் நாற்றம், அதை வாயில் வேறு வைத்துத் திணிப்பார்கள்; மறுப்பு தெரிவிக்க ஏது வாய்ப்பு; என்ன இருந்தாலும் நான் ஒரு இகழ்ச்சிக்குரிய பெண்ணல்லவா? எனவே இப்படி சகித்துக் கொள்ள முடியாத காட்சிகள் இங்கு மிகவும் சாதாரணம்.

பாத்ரூம்கள் குறித்து சொல்ல வேண்டியதேயில்லை. எனிமா எனப்படும் மலக்குடலைச் சுத்தம் செய்யும் மாத்திரைகள், ஆங்காங்கே வீசியெறியப்பட்ட சேவிங் பிளேடுகள்…அப்பப்பா ஏன் தான் இந்த போர்னோ படங்களை இரகசிய வீடுகளில் வைத்து எடுக்க அனுமதிக்கின்றார்களோ தெரியவில்லை. நடக்கும் வழியெங்கும் எச்சில், இரத்தம்,மூத்திரம், துடைத்தெறியப்பட்ட காகிதங்கள் என சுகாதாரம் கொஞ்சம் கூட இருக்காது. ஆனால் என்னை இந்த உலகத்திற்குள் அழைத்து வரும் முன்னர் அவர்கள் பேசியதில் என்னை வெகுவாக ஈர்த்தது சுகாதாரம் குறித்த அவர்களின் உத்திரவாதம் தான்.

சரி ஆண்களுடன் நடிக்கப்போவதில்லை என்றால் மாற்றுவழி என்ன? பெண்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதுதான். அதில் எனக்கு ஈடுபாடில்லை என்றாலும் முந்தையதுடன் ஒப்பிடுகையில் சக பெண்ணைப் பார்த்தவுடன் காம உணர்ச்சி ததும்பி வழிவது போல் நடிக்க வேண்டும் அவ்வளவுதான். நடிப்பு, பொய், வெற்றுவேடம் இரத்தத்தில் ஊறிப்போய் விட்டது.

இப்படி நடித்துக்கொண்டிருக்கையில் ஒரு லெஸ்பியன் படத்தில் விந்தையான நிகழ்வைச் சந்தித்தேன்; ஆம் படுக்கையறையில் அமெரிக்க தேசியக்கொடியை மெத்தை விரிப்பாகப் பயன்படுத்தியிருந்தனர்.

என் சிறு வயதில் நான் தேசப்பற்றுடன் இருந்த நிகழ்வு இப்போது என்னைச் சூழ்ந்து கொண்டது. 1976-ம் ஆண்டு நடந்த அமெரிக்கப் புரட்சிகரக் கொண்டாட்டங்களின் 200-ம் ஆண்டு நிகழ்வின் போது என் தாய்க்கு அமெரிக்க தேசியக்கொடி பதித்த ஒரு தட்டை வாங்கி பரிசளித்தேன். அந்தச் சிறுமி எப்போதோ இறந்து விட்டாள்.

வாழ்க்கை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது. எனக்கு நன்கு அறிமுகமான போர்னோ டைரக்டர் ஒருவர் என்னை ஒரு நாள் அணுகி “ராக்சி! உன்னுடைய படங்களுக்கு இப்போது மவுசு குறைந்து கொண்டு வருகிறது. எனவே நீ ஏன் ஒரு போர்னோ நடிகையாக விபச்சாரம் செய்யக்கூடாதென்று கேட்டார். விபச்சாரமே வேண்டாமென்று தானே இந்தத் தொழிலுக்கு வந்தேன் என்று பதிலளித்தேன். இது அப்படிப்பட்ட விபச்சாரமல்ல, போர்னோ உலகில் உனக்கு இரசிகர்களாக இருக்கும் பெரிய மனிதர்களிடம் வார இறுதியைச் செலவிட்டால் உனக்கு 2500 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்றார்.

ஒரு பணக்கார வக்கீலிடம் 2,500 அமெரிக்க டாலர்களுக்கு விலை போனேன். சென்ற பிறகு தான் தெரிந்தது அந்த ஆள் ஒரு மோசமான போதை வண்டி என்று. என்ன செய்ய, இரண்டு நாட்கள் தானே. தொடர்ச்சியாக மணிக்கணக்கில் அந்த மிருகம் என்னைக் கொடுமைப் படுத்தியது. போதாத குறைக்கு ஆணுறையை வேறு அணியமாட்டேன் என்று ஆணவத்துடன் கூறி என்னைச் சிதைத்தது.

2,500 டாலர்களுடன் வீட்டிற்குத் திரும்பிய நான் இரண்டு நாட்களாகப் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. அப்படி ஒரு உறக்கமும் ஓய்வும் தேவைப்பட்டது. பிறகு மறுபடியும் ஆபாசப் படங்களில் நடிப்பது என்று வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது நான் வெகுவாக மாறிவிட்டேன்.

பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு விபச்சாரத்தால் பாதிக்கப்பட்ட நான் ஒரு கட்டத்தில் மற்றவர்களை அதாவது என்னுடன் படத்தில் நடிப்பவர்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்த ஆரம்பித்து விட்டேன். இது போர்னோ பட இயக்குனர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டிக் கொடுக்க, அவர்கள் மேலும் என்னை இவ்வாறு செய்யத் தூண்டினர். இப்படி என்னுடைய மிருக குணத்தை வைத்து அவர்கள் நல்ல காசு பார்த்தனர்.

ஹெர்பெஸ் நோய்த் தாக்குதலுக்குட்பட்டவரின் உதடுகள்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயங்கி வரும் என்னைப் போன்ற பெண்களுக்கு வரும் நோய்களுக்குப் பஞ்சமா என்ன? ஏறக்குறைய 30 படங்களில் நடித்த பிறகு எனக்கு இரண்டு கொடிய பால்வினை நோய்கள் வந்தது. அதில் ஹெர்பெஸ் (Herpes) எனப்படும் நோய் மிகக் கொடூரமானது. இதைக் குணப்படுத்த மருந்துகளும் இல்லை. ஒரு நாள் காலையில் நான் தூக்கத்திலிருந்து எழுந்த போது 103 டிகிரி அளவுக்குக் காய்ச்சல் அடித்தது. முகமெல்லாம் வெளிறிப்போய் என் முகத்தைக் கண்ணாடியில் கூட பார்க்கத் துணிவின்றி, மருத்துவரிடம் சென்றேன்.

மருத்துவரோ உனக்கு வந்திருக்கும் ஹெர்பெஸ் நோய் இது வரை நான் கண்டிராத மிக மோசமான பாதிப்புக்களை உனக்கு ஏற்படுத்தியுள்ளது என்று அதிர்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் என்னுடைய இரத்த மாதிரிகளை சோதனைக்காக எடுத்துக்கொண்டார். இது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. உலகத்திலிருந்து தனித்து விடப்பட்டதைப் போல உணர்த்தேன்; தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு நல்ல வழி எனக்கு அப்போது தெரியவில்லை; வலி நிவாரணிகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் சாகாமல் பிழைத்தேன்.

என் உடலில் எங்கு பார்த்தாலும் ஹெர்பெஸ் நோயின் தாக்கம் வெளிப்பட்டது. உதடுகள், தொண்டை, பிறப்புறுப்பு, மலத்துவாரம் என எல்லா இடங்களிலும் இந்த நோய் என்னை வாட்டி வதைத்தது. இனியும் போர்னோ உலகத்தில் இருப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்தபின் விபச்சாரத்திற்குள் நுழைவது சரியென்று பட்டது. அது மட்டுமே எனக்கு முன்னிருந்த வாய்ப்பு என்பது வேறு கதை. ஆணுறை அணிந்தால்தான் உறவு என்று நிபந்தனை விதித்து விபச்சாரம் செய்வது சாத்தியம் என்று நினைத்தேன். ஆனால் வாழ்க்கை வேறு வழியில் என்னை அழைத்துச் சென்றது…

(தொடரும்)

-வரதன்

(இக்கட்டுரையின் முந்தைய பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்)

 _____________

இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறதா? மக்களின் விழிப்புணர்ச்சிக்கு போராடும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. பத்தி பத்தியா பேசி இவர்களின் வசதி வாய்புகளுக்களை தேடி இவர்கள் பெரும் வலிகளை நாம் நம் வாதங்கள் மூலம் தவிடு பொடியாக்க முடியும் வினவு.

    ஆனால் ஒரே ஒரு விசயத்தை-வாதத்தை மட்டும் சொல்லிட்டு போயிடுறேன். சமுக பாதுகாப்பு அற்று தினம் கூலி வேலை செய்யும் பெண்கள்…, வீட்டு வேலை செய்யும் தாய்மார்கள்.., அங்கன் வாடிகளில் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் பெண்கள் , மிக குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளி ஆசிரியைகள் என்று உழைக்கும் பெண்களை காணும் தருணத்தில் இந்த போர்னோ பெண்கள் எல்லாம் வசதி வாய்ப்புகளுக்காக தான் பீயை கூட தின்ன முனைகின்றார்கள் என்பது மட்டுமே உண்மை…

    • குமார்,

      உங்களுடைய ஒட்டுமொத்த கோபமும் ஆணாதிக்க உலகத்தின் மேலோ அல்லது முதலாளித்துவ உலகம் ஏற்படுத்தும் சமூக அவலங்களின் மீதோ திரும்பியிருக்கவேண்டும்; அல்லது குறைந்தபட்சம் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மீது கொஞ்சம் இரக்கமாவது காட்டியிருக்கலாம்.

      பெண்களில் நல்ல பெண்கள், தீய பெண்கள் என்று எப்படி வகைப்படுத்தலாம் என்றால் அவர்கள் சார்ந்திருக்கும் வர்க்கத்தையோ அல்லது அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் தொழிலையோ வைத்து எடை போடலாம். ஆரம்பத்தில் யாரோ ஒரு ஆணாதிக்க வெறியனால் பாதிக்க்கப்ட்ட இந்தப் பெண் பாலியல் தொழிலில் விரும்பியா வந்தாள்?

      பீ தின்றால் பணம் கிடைக்கும் என்ற பட்சத்தில் நம் பிள்ளைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவோமா என்ன? உழைக்கும் பெண்களை ஆதரிக்கிறேன் என்று கூறிக்கொண்டே மறுபுறம் ஆணாதிக்க வெறியையும், முதலாளித்துவ சமூகச் சீர்குலைவு ஏற்படுத்தும் பாதிப்புக்களை விமர்சிக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் அவலத்தை சுகவாழ்க்கை என்று விமர்சிக்கும் உங்களுக்கும், நான் வலதுசாரியுமில்லை இடதுசாரியுமில்லை நடுநிலைதான் எனது அரசியல் என்று பேசும் கமலுக்கும் என்ன வேறுபாடு காணமுடியும்.

      • ராஜா,

        சமுகத்தில் நடைபெறும் அவலங்களுக்கு எல்லாம் மூல காரணம் இன்றைய முதலாளித்துவ சமுக ,அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள் தான் காரணம் என்பதால் அதன் விளைவுகளான சமுக குற்றங்களான கொலை,கொள்ளை,திருடு போன்ற இன்ன பிற சமுக குற்றங்களை ஆதரிக்க முடியுமா ராஜா?

        உழைக்கும் பெண்கள் என்று என் பின்னுட்டத்தில் தெளிவாகவே குறிப்பிட்டு இருகின்றேன். அப்படி இருக்க உழைக்கும் பெண்கள் எல்லாம் என்ன உங்களுக்கு இளக்காரமா?

        பீ தின்றால் பணம் கிடைக்கும் என்ற நிலை வரும் என்றாலும் நாம் நம் பிள்ளளை களை அந்த தொழிலில் ஈடுபட விடமாட்டோம் என்று தெரிந்தும் எண்ணத்துக்கு வெட்டி பேச்சு ராஜா?

        • குமார்,

          இதையே தான் நானும் உங்களிடம் கேட்கிறேன். திருட்டு, கொலை, கொள்ளை, விபச்சாரம் எல்லாம் முதலாளித்துவ வெறியின் வெளிப்பாடுகள் என்பதால் இந்தச் சமூக அவலம் மாறும் வரை அவற்றையெல்லாம் இரசித்துத் தான் அல்லது ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்கின்றீர்களா?

          பிரச்சினை உழைக்கும் பெண்களைப் பற்றியதல்ல….பாலியல் தொழிலில் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிக் கொள்ளும் பெண்களின் அவலத்தைப் பற்றியது தான் இது.

          ஒரு குழந்தை பெற்றோரிடமிருந்து தனித்து விடப்பட்டாலோ அல்லது கடத்தப்பட்டாலோ என்ன நடக்குமென்பது தான் ஷெல்லி லூபெனின் வாழ்க்கை. ஒரு தந்தைக்கு தன் மகளின் அக்கறை குறித்து நேரம் செலவிட முடியாத சூழ்நிலையை உருவாக்கியது யார்?

          குடும்ப உறவுகள் சிதைபடக் காரணம் யார்? ஆபாசத்தின் மூலம் எங்கிருந்து வந்தது. அந்தப் பெண் ஒன்றும் பீ தின்று வாழ வேண்டும் என்று விரும்பி இந்தத் தொழிலைச் செய்யவில்லை.காட்சிப்படுத்தலுக்காக அவ்வாறு அழுத்தம் கொடுக்கப்படுவதும் மேலும் அவளுடைய சம்மதமின்றியும் தான் இந்த அவலங்கள் நடக்கின்றன. முடிந்தால் நீங்கள் காலம் காலமாக விபச்சாரம் செய்து வரும் பெண்ணிடம் பேசிப் பாருங்கள். அவர்களுக்கு மற்ற தொழில்கள் மீது நாட்டமிருக்காது. உளவியல் ரீதியிலான பாதிப்புக்கள் மேலோங்கியிருப்பதால் அவர்களுக்கு வேறு எதுவும் இதை விட எளிதாகத் தெரியாது

          சரி! சமூகப் பாதுகாப்பற்று உழைக்கும் பெண்களில் பலருக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடப்பதில்லையா? ஒரு வேளை அப்படி பாதிக்கப்பட்ட ஒரு பெண் நம் குடும்ப உறுப்பினராக இருக்கும் போது உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

    • குமார் அவர்களே இந்த கட்டுரையின் நோக்கம் போர்னோ நடிகைகள் மீது இராக்கம் ஏற்படுத்த எழுதப்பட்டதாக நான் நினைக்கவில்லை. இது அம்பலப்படுத்தும் செய்தியானது போர்னோ பார்ப்பது தனது சுதந்திரம் என்று பேசுவதையும், மேலும் ஆரம்பத்தில் ஒரு குறுகுறுப்புடன் போர்னோவிற்கு அறிமுகமானவர்கள் அதன் இருண்ட பக்கங்களைத் தெரிந்து கொள்வதோடு அதைப் பற்றிய விவாதத்தை தொடங்குவது ஆகும்.

      இந்த தொடரின் ஆரம்பக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள் அதில் போர்னோவானது ஒருவரின் விழுமியங்களை சிதைத்து எல்லாம்ஆண்குறியின் நீளம் தான் தீர்மானிக்கிறது என மோசமான கண்ணோட்டத்திற்கு வருகிறார்கள்மா என்பதை தெளிவாக விளக்குகிறது. இன்று இணையம் பயண்படுத்தும் யாரும் போர்னோவை தவிர்க இயலாது அது சம்மந்தமான விழிப்புணர்வு இக்கட்டுரை தருகிறதா எனப் பாருங்கள்.

      • ராஜா மற்றும் குரு…,

        குரு,இந்த கட்டுரைக்கு நான் அளித்த பின்னுட்டம் என்னவோ அதன் அடிப்படையில் நீங்க பேசினீர்கள் என்றால் நான் உங்களுக்கு பதில் அளிக்க இயலும்? நான் வைக்கும் வாதங்களுக்கு உங்கள் வாதங்கள் பொருத்தமான்வைகளாக இல்லையே குரு? என்னுடைய பின்னுட்ட கருத்தை புரிந்து கொள்ள இயலவில்லை என்றால் இன்னும் கூர்மையாக பதில் சொல்கின்றேன்…

        சமுக பாதுகாப்பு அற்று தினம் கூலி வேலை செய்யும் பெண்கள்…, வீட்டு வேலை செய்யும் தாய்மார்கள்.., அங்கன் வாடிகளில் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் பெண்கள் , மிக குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளி ஆசிரியைகள் என்று உழைக்கும் பெண்களை காணும் தருணத்தில் இந்த போர்னோ பெண்கள் எல்லாம் வசதி வாய்ப்புகளுக்காக தான் பீயை கூட தின்ன முனைகின்றார்கள் என்பது மட்டுமே உண்மை…

        நான் என் பின்னுட்டத்தில் ஆணடிமைத்தனம் மற்றும் முதலளிதுவ்த்தை விட்டு விட்டு பேசியது என்பது பெரிய தவறே அல்ல ராஜா… பெண்களின் பிரச்சனைகளுக்கு இவைகள் இரண்டுமே மூல கரணங்கள் என்பது உலகம் அறிந்த உண்மை… அதனால் அவற்றை பற்றி நான் பேசவில்லை… எனது பின்னுட்டத்தில் பாலியல் தொழிலாளர்களை பற்றிய எந்த விதமான மதிப்பீடுகளையும் நான் வைக்காமல் இருக்கும் நிலையில் என்னை நீங்க விமர்சனம் செய்வதது என்பது கண்மூடிதனமானது..ராஜா..! நான் குறை கூறி பேசியது போர்னோ பெண்களை பற்றி மட்டுமே..

  2. பணம் பேர் புகழ் இவையெல்லாம் ஈசியா கிடைக்கும் என்று இப்படி அழிவு பாதையில் செல்கின்றனர்…

  3. போர்னோ : உங்களுக்காக மலம் சுவைக்கும் நடிகைகள் ! // அவர்களின் பேராசைக்காக மலம் சுவைக்கும் நடிகைகள் ..!!

  4. பிரம்மச்சாியம் பிரதி பன்னம் வீாிய லாப என்பது யோக சுத்திரம்.பிரம்மச்சாியம் தன்னைக் காப்பவனுக்கு உடல் மன ஆன்ம வீாியத்தை அளிக்கும்.நிம்மதியான குடும்ப வாழ்வை அளிக்கும். பண்பாடான சமூகத்தை அளிக்கும்.
    எங்குபெண்கள் கௌரவமாக நடத்தப்படுகின்றாா்களோ அங்கே மங்களம் குடிகொண்டிருக்கும்.
    அம்மணமாக நடத்தால்தான் ஆபாசபடம் அல்ல.இன்றைய திரைப்படங்கள் அனைத்தும் ஆபாசகுப்பைகள் தாம்.அதனால்தான் இந்தியாவிலும்விபச்சாரம் பெருகிக் கொண்டேயிருக்கின்றது.சிறுமிகள் கூட பாலியல் துன்புருத்தலுக்கு ஆளாகின்றாா்கள். திரைப்படங்கள்ஒழுங்குபடுத்துவது அவசியம் ஆகின்றது.பாலியில் முறைகேடுகள் சமூதாயத்தை எப்படி பாழ்படுத்தின என்பதற்கு ஆதாரம் Pitrim A Sorokin என்ற ரஷ்ய மானுடவியல் அறிஞா் எழுதிய Sane sex order என்ற புத்தகம் .பாரதீய பவன் வெளியீடு.படித்துப் பாருங்கள். இன்று கூடதமிழ் நாட்டில் முதுகு அம்மணமாக இருக்கின்றது .ரவிக்கைகள் அப்படி சிறுத்து போய்விட்டனவே.ஒரு பெண் தன்னை எப்படி மதிக்கின்றாள்.திரைப்பட நடிகைதான் ரோல் மாடல்.முன் உதாரணம்.
    விபச்சாரத்திற்கும் ஆபாச படப்பிடிப்புக்கும் தாராளமாக பெண்கள் கிடைப்பா்கள்.

    • இவ்வளவு கேவலத்தையும் ஏன் ஹிந்து மதம் பொறுத்துக்கொண்டு இருக்கிறது? ஒருவேளை ஹிந்து மதம் ஆதரிப்பதாலோ ?

    • பாலியல் தொழிலாளிகளும், இதுபோன்ற ஆபாச பட நடிகைகளும் ஆண் சமூகத்தாலும், நுகர்வுகலாச்சரத்தாலும் உருவாக்கப்படுகின்றனர்.

  5. கட்டுரையை படிப்பவர்கள் பெரும்பாலும் பெண்களை ஆணாதிக்க சிந்தனையோடு பார்ப்பவர்கள் தான். அதனால் தான் பெண்கள் இந்த தொழிலை நோக்கி ஏன் செல்கிறார்கள் என்று அவர்களால் சிந்தித்து பார்க்க முடியவில்லை.

    • புதியவன்…., அப்ப விளக்காம ஒரு சில பெண்கள் மட்டும் இந்த போர்னோ தொழிலை நோக்கி ஏன் செல்கிறார்கள் என்று கூருங்க பார்கலாம்?

  6. குமார் , நீங்கள் கூறும் தினம் கூலி வேலை செய்யும் பெண்கள்…, வீட்டு வேலை செய்யும் தாய்மார்கள்.., அங்கன் வாடிகளில் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் பெண்கள் , மிக குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளி ஆசிரியைகள் என்று உழைக்கும் பெண்கள் என்பன கருவறையான அமெரிக்காவில் எல்லா பெண்களுக்கும் சாத்தியம் இல்லை, காரணம் பெருமளவு ஆட்டோமேசன் மற்றும் திறமை திறமை என வெகுசில ‘திறமை அடிமைகளுக்கே’ வேலை வாய்பை வைத்திருக்கும் முதலாளித்துவம் தான். நீங்கள் கூறுவது போல் வசதி வாய்ப்புக்காக பீ தின்கிறார்கள் என்பது சில மில்லியானர்களாக இருக்கும் போர்னோ நடிகைகளை எண்ணி சொல்கிறீர் போல். அவர்கள் கூட மிக அழகான மற்றும் முகம் சுளிக்காமல் எல்லாவற்றையும் செய்வதால்தான் அது சாத்தியம். ஏன் மேற்கில்க ல்லூரி பெண்கள் கூட கட்டணத்துக்காக சுகர் டாடியுடன் சாதாரணமாக படுக்கிறார்கள்? அவர்களும் வசதிக்காக என்குகிரார்களா? போர்னோ
    ‘திரைக்கதை’ வகைகளில் அதுவும் ஒன்றே? அந்தளவுக்கு அக்கேவலத்தை இயல்பாக்கியது எது?
    மேற்கு பெண்கள் என்ன வானத்திலிருந்து மானம்சொ ரணை ஏதுமில்லாமல் குதித்தவர்களா? அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது எது? நீங்கள் வழக்கம் போல் மக்களை நோகும் பல்லவி படுகிறீர்கள். நாஜி படைகளை நடுங்க வைத்த சோவியத் பெண்களை இன்று விபசாரத்தில் பெயரெடுக்க வைத்த நரிகள் யார்?
    பெண்களுக்கு வேறு வழிஇல்லாமல் செய்கிறது முதலாளித்துவம். இந்தியாவிலும் அப்படி ஒரு நிலையே வரும் இந்த கட்டமைப்பு தொடர்ந்தால்.

    • அமெரிக்காவில் பிளமபர் பிட்டர் டிரைவர் என்று தொழிலாளர் வர்க்கம் இருக்க த்தான் செய்கின்றது… அதில் ஒருத்தரா இருந்த டிரைவர் ஜேம்ஸ் கமருன் தான் உலக இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் முதலாளித்துவத்தை அம்பல படுத்தி அவியேட்டார் Avatar (2009) படம் கூட எடுத்து இருகார்..அப்படியே நம்ம சட்டிஸ்கர் மாநிலத்தில் நடக்கும் இயற்கை வளங்கள் அழிப்பு பிரச்சனை தான் அந்த படத்தில் காட்சி படுத்த பட்டு இருக்கு. அவர் ஒரு தொழிலாளியா தன் வாழ்கையை தொடங்கியதால் தான் இது சாத்தியப்பட்டது என்று நினைகின்றேன்.மேலும் உழைக்கும் பெண்கள் வீட்டில் குழந்தைகளை பராமரிபவ்ர்கள், பள்ளிகளில் ஆசிரியர்/யை களுக்கு உதவ என்று பெண்கள் வேலை செய்து கொண்டு தான் இருக்காங்க… ஆமாம் இன்னும் பல்வேறு துறைகளில் வேலை செய்துகிட்டு தான் இருக்காங்க…

      முதலாளித்துவத்தின் அவலம் தான் அனைத்து சமுக குற்றங்களுக்கும் காரணம் என்பது உண்மை தான்., அதே நேரத்தில் அனைவருமே அத்தகைய குற்றங்களில் ஈடு படவில்லை என்ற நிலையில் இருந்து பிரச்சனையை நோக்குங்க…..

      • ஐயா,

        போர்னோ படங்களை எடுப்பவர்களும், அதைப் பார்ப்பதன் மூலம் எடுக்கத் தூண்டுபவர்களும் குற்றவாளிகளா ?
        அல்லது அதில் நடிப்பவர்கள், குறிப்பாக நடிக்கும் பெண்கள் குற்றவாளிகளா?

        • எது எதுவெல்லாம் இதில் தண்டனைக்கு உரிய குற்றங்கள் என்பது அந்த அந்த நாட்டு சட்டங்களை பொருத்தது….(இப்ப ஒருத்தரு சட்ட படி பேசாதிங்க…இயற்கை நீதி படி பேசுங்க என்று வருவாரு பாருங்க!)நீங்க கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் அளித்து இருக்கேன்…

          • ஐயா,

            //முதலாளித்துவத்தின் அவலம் தான் அனைத்து சமுக குற்றங்களுக்கும் காரணம் என்பது உண்மை தான்., அதே நேரத்தில் அனைவருமே அத்தகைய குற்றங்களில் ஈடு படவில்லை//

            குற்றம் என்று வரையறை செய்தது நீங்கள் தான். அதனால் குற்றத்தை எப்படி வரையறுப்பதென்று கேட்டேன்.. நீங்கள் நாடுகளின் சட்டங்களை எடுத்துக்காட்டுகிறீர்கள்.

            நாட்டு சட்டங்களின் படி முதலாளித்துவமும் அதன் லாபம், சொத்துரிமை மற்றும் இன்ன பிறவும் குற்றமற்றவையே. அதனால் அவற்றை குற்றமற்றவை என்று மதிப்பிட வேண்டுமா? அல்லது அவை குற்றமா.. ?

            படம் எடுப்பது, அதைப் பார்ப்பதன் மூலம் எடுக்கத் தூண்டுவது, நடிப்பது என்ற எவையுமே குற்றமில்லாத நாடுகளும் இருக்கின்றனவே? எனில் எதுவுமே குற்றமில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? கூடாதெனில் ஏன்?

            எனில் குற்றத்தை எப்படி மதிப்பிடுவது?

            குற்றத்தை நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டத்திலிருந்து அல்லது உங்கள் கண்ணோட்டத்திலிருந்து பொதுமைப்படுத்தி மதிப்படலாமா?

            வசதி வாய்ப்புக்களுக்காக போர்னோ படங்களில் நடிக்கிறார்கள் என்று பொதுமைப்படுத்தியுளீர்கள்.

            விபச்சாரத்திற்கும் இதே அளவுகோலைப் பயன்படுத்துவீர்களா? இதில் கூடத்தான் எல்லா பெண்களும் ஈடுபடவில்லை. அதனால், இதே அளவுகோலின் படி வசதி வாய்ப்புக்களுக்காக விபச்சாரத்திற்கு வருகிறார்கள் என்று பொதுமைப்படுத்தலாமா?

            //இயற்கை நீதி படி பேசுங்க என்று வருவாரு பாருங்க!//
            (எனில் விபச்சார தொழிலாளிகளுக்காக அமைப்பு கட்டுவீர்களா என்று நீங்கள் துள்ளி வரமாட்டீர்கள் என்று நம்புகிறேன்)

            போர்னோ நடிகைகளை புனிதப்படுத்துவதற்காகவோ வேறு எந்த நோக்கத்திற்காகவோ இந்தக்கட்டுரை இங்கு வெளிவரவில்லை.
            போர்னோ படங்களைப் பார்ப்பதன் மூலம் அவற்றை எடுக்கத் தூண்டுபவர்கள் தான் இந்தக் கட்டுரைத் தொடரின் இலக்கு எனக் கருதுகிறேன். (வினவும் அந்த நோக்கத்தில் தான் இதை வெளியிடுகிறார்கள்.) உங்களுடைய Grand sweep generalization- யாருக்குப் பயன்படும்? நோக்கம் என்ன?

            உங்கள் அளவுக்கு பாட்டாளி வர்க்க கண்ணோட்டமும், விவாத தர்க்க அறிவும் எனக்கில்லையாதலால், தயை கூர்ந்து பரிசீலிக்குமாறு கோருகிறேன்.

          • மேலும், முதலாளித்துவத்தின், அதன் நுகர்வு வெறியின் கோரமுகத்தை இது மற்றொரு கோணத்திலிருந்து அம்பலப்படுத்தவும் செய்கிறது. இதில் உங்களுக்கென்ன பிரச்சினை என்று குறிப்பாக சொன்னால் நல்லது.

            இந்தக் கட்டுரை போர்னோ நடிகைகளின் மீது கழிவிரக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறீர்களா? அல்லது வேறெதுவுமா? ஐயா, விரிவாக சொல்லவும்.

            • ஆணி , முதலாளிதுவத்தின் கோரமுகத்தின் காரணமாகத்தான் சமுகத்தில் நடைபெறும் கொலை , கொள்ளை, ஊழல் போன்ற பலவேறு சமுக குற்றங்கள் நிக்ழ்கிறன என்ற காரணத்துக்காக அவற்றை நாம் மென்மையாகவோ அல்லது சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளித்து கையாள இயலாது என்பதனை ஏற்பீர்கள் என்றே நினைகின்றேன். ஏற்கின்றீர்களா ? இப்ப போர்னோ என்ற சமுக குற்றத்தை(பார்பவர்கள், தயாரிப்பவர்கள், நடிபவ்ர்கள் ஈடுபடும் குற்றத்தை) அந்த விசயத்தை மேல் உள்ள எனது நிலைபாட்டுடன் ஒப்பிட்டு பதில் அளியுங்கள்…

              பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிகழும் போர்னோவில் ஈடுபடும் வியாபாரிகள் வினோகிச்தர்கள் , நடிகர்கள் ,தயாரிப்பாளர்கள் என்று யார் மீதும் இஇரக்கம் காட்ட தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு…குறிப்பாக அமெரிக்க சமுகத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பேசும் போது நாம் இவர்களுக்காக கழிவிரக்கத்தை காட்ட தேவையில்லை என்பதே எனது நிலைபாடு…

      • அதே கேமரூன் தான் ராம்போ-II படத்தயும் எடுத்துருக்காரு.. டைட்டானிக் படத்தயும் எடுத்தாரு..
        அதனால.. என்னங்குறீங்க? ஒரே குயப்பமா இருக்குதே !

        • அக்காகி ,

          இதே வினவு தங்க மீன்கள் படத்துக்காக ஆகா ஓகோ என்று பாராட்டிய இயக்குனர் ராம் அவர்கள் தான் தரமணி படத்தையும் எடுத்து இருகாரு… அந்த படத்துக்கு அந்த முற்போக்கு வெளியிட்ட முதல் விளம்பரம் எப்படி எல்லாம் பெண்களை இழிவு செய்து இருக்கு என்றும் உங்களுக்கு தெரியும்…! படமும் கூட பெண்களை எப்படி இழிவு செய்து இருக்கும் என்றும் உங்களுக்கு தெரியும் என்று நினைகின்றேன்…உண்மையை கூறுவது என்றால் ரம்போ தொடர் படங்களை நான் பார்க்காததால் என்னால் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலவில்ல்லை… அதே நேரத்தில் Avatar (2009) படத்தை நான் பலமுறை பார்த்ததால் அதன் ஒன்லைன் கதையும், கதையின் விரிந்த திரைகதையும் எனக்கு புரிந்ததால் என்னால் பேசமுடிந்தது..

          அடுத்து டைடானிக் படம் வர்க்கம் கடந்த காதலை அந்த காதலுக்காக ஒரு ஏழை தொழிலாளி தன் உயிரையும் கொடுக்கின்றான் என்ற நிலையில் அவனை தன் முதிர்ந்த வாழ்க்கை காலகட்டத்திலும் அந்த பெண் நினைவில் கொண்டு இருந்தாங்க என்ற சூழலில் பார்க்கும் போது அந்த படம் ஒன்றும் சமுகத்துக்கு பெரிய குற்றம் இழைக்கும் படமாக எனக்கு தெரியவில்லை…

          • ///வினவு தங்க மீன்கள் படத்துக்காக ஆகா ஓகோ என்று பாராட்டிய இயக்குனர் ராம்///

            ராம் என்ன வர்க்கம் என்று ஆய்வு செய்து அவருக்கு வினவு சர்ட்டிபிகேட் ஒன்னியும் குடுக்கலியே..

            அவதார், கேமரூனை நீங்க இங்க சொல்றது எதுக்குன்னு கேட்டேன்?

            உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தைச் சேந்தவரா இருந்தா மட்டும் தான் நல்ல படம் எடுப்பாங்களா?

            • அக்காகி.., நாக்கு மட்டும் நரம்பு இல்லாதது என்று அல்ல கணினி பலகையை தட்டும் உங்க விரல்கள் கூடத்தான் என்று நிருபணம் செய்யறீங்க அக்காகி…ஒங்க குயப்பத்தை நிவர்த்தி செய்யத்தானே முந்தைய பின்னுட்டம்… நிவர்த்தி ஆகலையா இன்னும் ? “””உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தைச் சேந்தவரா இருந்தா மட்டும் தான் நல்ல படம் எடுப்பாங்களா?””” என்ற இந்த கேள்வியை கேட்கும் உங்க சிந்தனை அப்புறம் எதுக்கு அதுக்கு முந்தியே கேமரூன் பற்றிய கேள்வியை எழுப்பியது? சும்மா தெரிந்து கொள்ள தான் கேக்கேன்…! அவர் பலவேறு படங்களை எடுத்து இருக்காரு அதில் அவர் சில குறிபிட்ட தகுந்த நல்ல படங்களையும் எடுத்து இருகாரு என்று புரிந்து கொள்ள இயலாத அளவுக்கா நீங்க ரொம்ப டல்லா சிந்திகிரீங்க?

              சின்னா அவர்கள் பின்னுட்டம் 6-ல் என்ன பேசினார் என்றும் அதுக்கு தான் நான் அந்த பதில் பின்னுட்டம் 6.1 ல் அளித்தேன் என்றும் தெரிந்து தானே இங்க வந்து சந்துல சிந்துபாடிகிட்டு இருக்கீங்க அக்காகி! பட்டைய கிளப்புங்க தோழா..! சும்மா அதிர வைங்க நண்பா! வினவுல யாருமே சிந்திக்காத கோணங்களில்சிந்தித்து பேசுங்க சகோ….!

              • அட கிரகமே!

                ///அமெரிக்காவில் பிளமபர் பிட்டர் டிரைவர் என்று தொழிலாளர் வர்க்கம் இருக்க த்தான் செய்கின்றது… அதில் ஒருத்தரா இருந்த டிரைவர் ஜேம்ஸ் கமருன் தான் உலக இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் முதலாளித்துவத்தை அம்பல படுத்தி அவியேட்டார் Avatar (2009) படம் கூட எடுத்து இருகார்..///

                ///அவர் பலவேறு படங்களை எடுத்து இருக்காரு அதில் அவர் சில குறிபிட்ட தகுந்த நல்ல படங்களையும் எடுத்து இருகாரு///

                யாரு சாரே மாறி மாறி டைப்புறது? நானா நீங்களா?

                ///உங்க சிந்தனை அப்புறம் எதுக்கு அதுக்கு முந்தியே கேமரூன் பற்றிய கேள்வியை எழுப்பியது? ///

                தல.. என்னா தல.. நீங்க தான் வினவு விவாதத்துல கில்லின்னு நினச்சுகிட்டு இருந்தேன் இப்படி மானத்தை வாங்கிட்டீங்களே?

                இந்த – தொழிலாளர் வர்க்கம், அதில் ஒருத்தரா இருந்த, ஜேம்ஸ் கமருன் – ஸ்டேட்மெண்ட் அடிச்சது நீங்க..

                அதுக்கு அவரு மற்ற பல படங்களும் எடுத்திருக்காருன்னு சொன்னது நான். ஜேம்ஸ் கேமரூனை அவதார் மாதிரி நல்ல படங்கள வச்சி மட்டும் பாக்க முடியாதே, அவர் ஸ்கிரிப்ட் எழுதுன ‘ராம்போ-2’ படத்தையும் சேர்த்து தான பாக்கனும்னு கேட்டது தான் அந்த /என்னங்குறீங்க? ஒரே குயப்பமா இருக்குதே/.
                யாரு டல்லு ? யாரு பிரிஸ்குனா இங்க போட்டி நடத்திகினு இருக்கோம்?

                ///நாம் இவர்களுக்காக கழிவிரக்கத்தை காட்ட தேவையில்லை///
                ///சமுக சேவைக்காக தான் நடிகின்றார்கள் என்று நீங்கள் தான் நிருபணம் செய்யவேண்டும்.///

                போர்னோ நடிகைகளின் மீது கழிவிரக்கத்தை தூண்டி அதன் மூலம் போர்னோ படம் பாக்குறவங்களை இன்னும் அதிகமா பார்க்க வினவு தூண்டுது.
                போர்னோ நடிகைகள் சமுக சேவைக்காக தான் நடிகின்றார்கள் என்று சொல்லி போர்னோ படம் பாக்குறவங்களை அந்த சேவையைப் பயன்படுத்தச் சொல்லி வினவு தூண்டுது.

                இதுதானா உங்க பிரிஸ்க்கு?

                இதத்தான் நான் இல்லுமினாட்டி இல்லியூசன் இன்ஸ்டிங்ட்டுங்கறேன்.

                ஆளவிடுங்க.

                • அக்காகி.., என்னத்த புரிந்துகொண்டு பேசுறீங்க…. தெளிவா தானே சொன்னேன்.. எனக்கும் சினனாவுக்கும் இடையே ஆனா விவாதத்தில் வந்த கருத்துகள் அது என்று…சின்னா அமெரிக்காவில் ஆட்டோமேஷன்…, அதனால வேலை கிடைகல என்ற பொருளில் பேசினாரா இல்லையா? அதுக்கு தான் நான் என் பதிலை கூறினேன்… சரி சரி உங்களுக்கு விவாதிக்க ஆசை இருக்கு உங்களுக்கு ஆனால் நேரம் இல்ல போல… உங்க அரை குறை புரிதலால் என்னுடைய நேரம் தான் நட்டம் ஆகிறது…மீண்டும் மீண்டும் விளக்க வேண்டியது ஆகிறது…

              • //சின்னா அவர்கள் பின்னுட்டம் 6-ல் என்ன பேசினார் என்றும் அதுக்கு தான் நான் அந்த பதில் பின்னுட்டம் 6.1 ல் அளித்தேன்///

                புரியாமல் தான் கேட்கிறேன் தலீவரே.. சின்னா சொன்னதுக்கும் ஜேம்ஸ் கேமரூன் -அவதாருக்கும் என்ன சம்பந்தம்?
                நேத்து நைட்டு இல்லீன்னா முந்தா நேத்து நைட்டு அவதார் படத்த நீங்க மறுபடியும் பாத்ததெல்லாம் சம்பந்தமாகாது தல..

                • அக்காக்கி…., உண்மையிலேயே புரியலையா உங்களுக்கு? இல்ல புரியாத மாதிரி ந்டிகிரீங்க்லா? அமெரிக்காவில் எல்லாமே ஆட்டோமேஷன் என்று கூறுபவருக்கு(சின்னாவுக்கு) வெளக்கமா தானே பதில கூறனும்…அப்படி கூறும் போது உங்களுக்கு எங்கே வலிக்குது சகோ… சும்மா லோலாயி பண்ணாம அப்படிக்கா ஒதுங்கிபோங்க சகோ…

                  அமெரிக்காவிலும் தொழிலாளர்கள் இருக்காங்க… அவிங்களுக்கும் கொஞ்சமாவது வர்க்க உணர்வு இருக்கு என்பதனை கூறும் போது உங்களுக்கு எங்கே குடையுது சகோ?

                  ஒன்னு மட்டும் புரியுது தெரியாமல் இந்த விவாதத்தில் குட்டையை நல்லவே குழப்பிகிட்டு இருக்கீங்க நீங்க…

                  உங்களுக்கு என்னுடைய கருத்தில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் என்னுடைய நேரடியான பின்னுட்டம் 1 இருந்து விவாதத்தை ஆரம்பிங்க… அடுத்தங்க கூட நான் பேசும் விசயத்தை முழுசா புரிந்து கொள்ளாமல் உளறிகிட்டு இருக்காதிங்க சகோ…

  7. ஆணி…,

    1.நாட்டு சட்டங்களின் படி முதலாளித்துவமும் அதன் லாபம், சொத்துரிமை மற்றும் இன்ன பிறவும் குற்றமற்றவையே. அதனால் அவற்றை குற்றமற்றவை என்று மதிப்பிட வேண்டுமா? அல்லது அவை குற்றமா.. ?

    முதலாளித்துவ சமுகத்தில் வாழும் நாம் எல்லாம் சொத்துரிமை தொடர்பான அந்த சட்டங்களை பயன்படுத்தி கொண்டு தானே இருக்கோம் என்ற நிலையில் அவைகள் எப்படி நாம் ஒதுக்கிவைத்து விட்டு செல்லமுடியும்? ஒட்டுமொத்த அரசியல் அமைப்பை மாற்றும் தருணத்தில் தானே அவற்றை மாற்றி சொத்துரிமைய்ற சமுகத்தை நாம் கட்டமைக்க இயலும்..கல்ல்லூரி நாட்களில் தோழர்கள் எனக்கு சொல்லிக்கொடுத்த்டு என்ன என்றால் புதிய ஜனாயக புரட்சியை நிகழ்ந்துவது கூட எளிது தான்…அதன் மூலம் பெருமுதலாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வது கூட எளிதுதான். ஆனால் அதன் பின் அமைக்க போகும் சோசியலிச சமுகத்தில் சொத்து உடைமை அற்ற சமுகத்தை நோக்கி பயணித்து தான் மிகவும் கடினமான செயல் என்பார்கள். என்ன காரணம் என்று நான் வினவிய போது ஆட்டோ டிரைவர் முதற்கொண்டு சிறு வியாபாரிகள் வரைக்கும் கம்யுனிச சமுகத்தை நோக்கிய பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றார்கள். எனவே அந்த அந்த சமுக நிலைகளுக்கு ஏற்ப சட்டங்கள் இருக்கத்தான் செய்யும். சமுகங்கள் புரட்சியும் ஊடாக மாறும் போது (transition from one kind of society to another) சட்டங்களும் புதிய சமுகத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்.

    2.படம் எடுப்பது, அதைப் பார்ப்பதன் மூலம் எடுக்கத் தூண்டுவது, நடிப்பது என்ற எவையுமே குற்றமில்லாத நாடுகளும் இருக்கின்றனவே? எனில் எதுவுமே குற்றமில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? கூடாதெனில் ஏன்?

    போர்னோ மற்றும் விபச்சாரம் ஆகியவை இன்றைய முதலாளித்துவ-நிலபிரபுத்துவ சமுகத்தின் இழிநிலைகள் என்பது உண்மை தான் என்ற நிலையில் அவற்றை புதிய சனநாயக புரட்சியின் ஊடாகமட்டுமே நீக்க இயலும் என்ற எதார்த்தத்தில் இருந்து சிந்தியுங்கள். இவற்றை சமுகத்தின் இழிநிலைகள் என்று கூறுவதனை விட பெண்கள் மீதான கொடுமைகள் என்று கூறுவது தான் சரியானதாக இருக்கும் என்று நினைகின்றேன். இந்திய சமுகத்தில் கூட விபச்சாரம் குற்றம் என்றாலும் அவைகள் தொடர்பான சட்டங்கள் மிகவும் கடுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை என்ற நிலையில் இருந்தும் நாம் பார்க்கும் போது முதலாளித்துவ அரசு பெண்களின் மாண்புக்கும் , வாழ்வுரிமைக்கும் எதிராகவே உள்ளது என்ற முடிவுக்கு தான் நாம் வரலாம்.

    தொடரும்….

  8. ஆணி,

    3.எனில் குற்றத்தை எப்படி மதிப்பிடுவது?

    அந்த அந்த சமுக அமைப்பின் அடிபடையில் தான் மதிப்பீடு செய்யவேண்டும்.

    4.குற்றத்தை நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டத்திலிருந்து அல்லது உங்கள் கண்ணோட்டத்திலிருந்து பொதுமைப்படுத்தி மதிப்படலாமா? வசதி வாய்ப்புக்களுக்காக போர்னோ படங்களில் நடிக்கிறார்கள் என்று பொதுமைப்படுத்தியுளீர்கள்.

    நான் கூறுவது போர்னோ படங்களில் நடிக்கும் பெண்களை பற்றி மட்டும் தான். வசதி வாய்புக்ளுக்காக நடிக்காமல் சமுக சேவைக்காக தான் நடிகின்றார்கள் என்று நீங்கள் தான் நிருபணம் செய்யவேண்டும். மேலும் பொதுமை படுத்தியது நான் அல்ல… இங்கே எனக்கு எதிராக வாதாடும் நீங்கள் அனைவரும் தான். முதலாளித்துவத்தின் காரணமாக தான் போர்னோ மற்றும் விபச்சாரம் நிகழ்கின்றது என்று பொதுமை படுத்தியது நீங்க தான்… நான் அல்ல… என் கருத்தை நான் முன்பே நேரடியாக வைத்து உள்ளேன்..இப்படி….”””முதலாளித்துவத்தின் அவலம் தான் அனைத்து சமுக குற்றங்களுக்கும் காரணம் என்பது உண்மை தான்., அதே நேரத்தில் அனைவருமே அத்தகைய குற்றங்களில் ஈடு படவில்லை என்ற நிலையில் இருந்து பிரச்சனையை நோக்குங்க…..””” ஆம் போர்னோவில் நடிபவர்கள் எல்லாம் விதி விலக்குகள் தான். அவர்கள் பணம் ,பொருள் சார்ந்த தேவைகளை (ஏன் தேவைகளுக்கு அதிகமான்வைகளை நோக்கி) பயணிப்பவர்கள் தான்.

    5.விபச்சாரத்திற்கும் இதே அளவுகோலைப் பயன்படுத்துவீர்களா? இதில் கூடத்தான் எல்லா பெண்களும் ஈடுபடவில்லை. அதனால், இதே அளவுகோலின் படி வசதி வாய்ப்புக்களுக்காக விபச்சாரத்திற்கு வருகிறார்கள் என்று பொதுமைப்படுத்தலாமா?

    போர்னோவில் நடிக்கும் பெண்களை நாம் காணும் கண்ணோட்டத்தில் இருந்து விபச்சாரத்தை காண தேவையில்லை என்றே நினைகின்றேன்… அதே நேரத்தில் வெள்ளைகாரனிடம் இருந்து மோட்டார் கம்பெனியை இலவசமாக பெறுவதற்கு தமிழத்தில் குடியேறிய ஆரியர்கள் பயன்படுத்திய விபச்சாரமும் தமிழகத்தில் இன்னும் நடைமுறையில் தான் இருக்கிறது. அதே நேரத்தில் ஏழைமையின் காரணமாகவும் தான் இந்த அவலம் நடை பெற்றுகொண்டு இருக்கிறது.

    தொடரும்

    • ///சமுக சேவைக்காக தான் நடிகின்றார்கள் என்று நீங்கள் தான் நிருபணம் செய்யவேண்டும்.///

      உங்க பிரச்சனை என்னன்னு இப்ப புரியுதுங்க..

      XXX படம் பார்க்குறவங்களுக்கு சமுகசேவை செய்றதுக்கு தான் நடிகிறாங்கன்னு அவங்கள இந்தக் கட்டுரை பிரமோட் பண்ணுதுன்னு உங்க, அது என்னங்க இல்லியூசனா இன்ஸ்டிங்ட்டா? ஆங்.. உங்க இல்லியூசன் இன்ஸ்டிங்குக்கு தெரிஞ்சிருக்கு..

      ஏன் வினவு இப்படில்லாம் பண்றீங்க?

      இல்லியூசன் இன்ஸ்டிங்க ஏன் தூண்டிவிடுறீங்க?

      ///ஆம் போர்னோவில் நடிபவர்கள் எல்லாம் விதி விலக்குகள் தான். அவர்கள் பணம் ,பொருள் சார்ந்த தேவைகளை (ஏன் தேவைகளுக்கு அதிகமான்வைகளை நோக்கி) பயணிப்பவர்கள் தான்.///

      இதத்தான் நுகர்வு வெறின்றாங்க.. அப்புறம் அதெப்படி விதிவிலக்கு? நுகர்வு வெறி முதலாளித்துவ சந்தை கலாச்சாரத்துல சேராதா?

      அய்யய்யோ தெரியாத்தனமா கேட்டுட்டேனே.. என்னைய விட்டுடுங்க.. 🙂
      நாம பழையபடிக்கு சினிமா மேட்டருக்கு வருவோம்..

      • அடுத்தவர்கள் செய்யும் விவாதத்தில் குறுக்கே புகுந்து குட்டையை குழப்பும் வேலையே நன்னாவே செய்றீங்க சகோ….ஆணி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு தான் இது பதிலே தவிர உங்க இல்யுசன் ,இன்டியுசன் ,இமஜீநேசனுக்கு எல்லாம் அது பதில் அல்ல… என் பதில் வினவுக்கான பதிலா அல்லது ஆணிக்கான பதிலா என்று தெரிந்து கொண்டு பேசுங்க சகோ… ஆணி எழுப்பிய கேள்விக்கு தான் என் பதில்..வினவுக்கு அல்ல…ஆணி என்ன கேள்விய எழுப்பினாங்க… அதுக்கு நான் என்ன பதில் அளித்து இருக்கேன் என்று மறுபடியும் படிச்சிட்டு வந்து பேசுங்க சகோ…

        இப்பவும் கேட்கேன்…. அமெரிக்காவில் அவிங்க என்னத்துக்காக போர்னோ படம் தயாரிகிராங்க? போர்நோவில் நடிகிராங்க? சொல்லுங்க பார்கலாம்… வயித்து பிழைப்புக்கு என்று சும்மா உளறகூடாது சகோ…ஆண்டுக்கு பல மில்லியன் டாலர் அமெரிக்க பணம் புழங்கும் தொழில் அது என்றாவது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? அந்த போர்னோ இன்டஸ்ரி பற்றி முழுசா விவரங்களை தெரிந்து கொண்டு வந்து பேசுங்க சகோ…

        //XXX படம் பார்க்குறவங்களுக்கு சமுகசேவை செய்றதுக்கு தான் நடிகிறாங்கன்னு அவங்கள இந்தக் கட்டுரை பிரமோட் பண்ணுதுன்னு//

      • அக்காகி…, புரிந்து தான் பேசுறீங்களா இல்ல… சும்மா அடிச்சி விடுறீங்களா அக்காகி? போர்னோ பெண்கள் விதிவிலகானவ்ர்கள் என்று ஏன் சொல்றேன் என்று முன்பே விளக்கிவிட்டேன். மறுபடியும் சொல்றேன். கேட்டுக்குங்க…. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயல்பான நுகர்வு வெறி என்பது சமுகத்தில் உள்ள எல்லாரையும் தானே பாதிக்கனும்? நிலைமை அப்படி இல்லையே… இதுக்கு தான் என்னுடைய முதல் பின்னுட்டத்தில் மிக தெளிவா ஆணிதரமா என் கருத்தை வைத்தேன்.. என்னுடன் விவாதிக்கும் யாருமே அதுக்கு பதில்சொல்ல! மறுபடியும் கேக்கேன்….சொல்லுங்க…!

        முக பாதுகாப்பு அற்று தினம் கூலி வேலை செய்யும் பெண்கள்…, வீட்டு வேலை செய்யும் தாய்மார்கள்.., அங்கன் வாடிகளில் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் பெண்கள் , மிக குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளி ஆசிரியைகள் என்று உழைக்கும் பெண்களை காணும் தருணத்தில் இந்த போர்னோ பெண்கள் எல்லாம் வசதி வாய்ப்புகளுக்காக தான் பீயை கூட தின்ன முனைகின்றார்கள் என்பது மட்டுமே உண்மை… உழைக்கும் பெண்களை விட எந்த விதத்தில் இவர்கள் சமுகத்துக்கு நலம் பயப்பவ்ர்கள்? என்னதுக்கா இவர்கள் மீது நாம் கருனைகாட்டவேண்டும்?

        மேலும் கூட மற்றும் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தேன்… முதலாளிதுவத்தின் கோரமுகத்தின் காரணமாகத்தான் சமுகத்தில் நடைபெறும் கொலை , கொள்ளை, ஊழல் போன்ற பலவேறு சமுக குற்றங்கள் நிக்ழ்கிறன என்ற காரணத்துக்காக அவற்றை நாம் மென்மையாகவோ அல்லது சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளித்து கையாள இயலாது என்பதனை ஏற்பீர்கள் என்றே நினைகின்றேன். ஏற்கின்றீர்களா ? இப்ப போர்னோ என்ற சமுக குற்றத்தை(பார்பவர்கள், தயாரிப்பவர்கள், நடிபவ்ர்கள் ஈடுபடும் குற்றத்தை) அந்த விசயத்தை மேல் உள்ள எனது நிலைபாட்டுடன் ஒப்பிட்டு பதில் அளியுங்கள்…

        இந்த நுகர்வு கலாச்சார வெறி சமுகத்தில் எல்லா பெண்களையும் பாதிக்கவில்லை அல்லவா? மிக குறைந்த கூலிக்கு பெண்கள் உழைத்துக்கொண்டு தானே இருக்காங்க… அப்ப இந்த பல மில்லியன் பணம் புழங்கும் போர்நோக்களில் நடிக்கும் பெண்கள் எல்லாம் என்ன எல்லாம் என்ன உங்களுக்கு உழைக்கும் பெண்களா? அல்லது முதலாளித்துவத்தால் சுரண்டப்டுபவர்களா? ரெண்டும் கிடையாது…

        இந்த போர்நோகள் (த்யாரிப்வ்ர்கள், விநியோகிதம் செய்பர்கள், ந்டிபவ்ர்கள்) எல்லாம் முதாலைத்துவத்தின் கால்அணிகளை நக்கி பிழைப்பவர்கள் தான்…

        //இதத்தான் நுகர்வு வெறின்றாங்க.. அப்புறம் அதெப்படி விதிவிலக்கு? நுகர்வு வெறி முதலாளித்துவ சந்தை கலாச்சாரத்துல சேராதா?//