“கடல் மணல் கடத்தல்! மக்களைக் கொல்லும் மாஃபியா கும்பல்! துணை போகும் அரசு கட்டமைப்பு!” என்ற தலைப்பின் கீழ் 08.12.2017 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள் சார்பாக சென்னை செங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் தோழர் சதீஷ் தலைமை தாங்கினார். ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் தொழிலாளர்களின் பிரச்சனைகள் மட்டுமல்லாது, சமூகத்தை பாதிக்கின்ற அனைத்து பிரச்சனைகளிலும் ஏன் தலையிடுகின்றது என்பதை விளக்கி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் உரையாற்றினார்.
தமிழகத்தின் பல்வேறு மக்கள் பிரச்சனைகளில், உடனுக்குடன் வினையாற்றிவரும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் அமிர்தா, வெள்ளாற்று மணல் கொள்ளைக்கு எதிரான போராட்ட அனுபவத்தை பதிவு செய்தார்.
இறுதியாக மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார். கண்டன உரை, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்டப் பொருளாளர் தோழர் செல்வகுமார் நன்றி உரையாற்றினார்.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம், திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), வேலூர் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 88075 32859, 94453 89536, 94453 68009, 99943 86941.