privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்தூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்

தூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்

தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து உலகெங்கும் நடைபெற்ற போராட்டச் செய்திகளின் தொகுப்பு.

-

தூத்துக்குடி அடையாளம் காட்டும் நவீன நீரோக்கள்!

நிர்மலா தேவிக்காக துண்டைக் காணோம் துணியைக் காணோமென ஓடி வந்து ஊடக சந்திப்பு நடத்திய ஆர்.எஸ்.எஸ் புரோக்கர் ஆளுநர் புரோகித், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 14 பேர்கள் கொல்லப்பட்ட போது ஊட்டி மலர்க்கண்காட்சிக்கு சென்றார். ஏரியில் படகுச் சவாரி போனார்.

எடப்பாடி, பன்னீர் செல்வம் முதலான அடிமைகளோ காது குத்து, பிறந்த நாள் விழாக்களில் குஷியுடன் கலந்து கொண்டனர். தூத்துக்குடி ‘கலவரத்தையே’ ஊடகங்கள் மூலம்தான் பார்த்தேன், 144 தடை உத்திரவு இருப்பதால் அங்கு எப்படி போக முடியும் என கைப்பிள்ளை டயலாக் பேசினார்.

பிரதமர் மோடியோ விராட் கோலி விடுத்த செல்லமான தண்டால் சாகசத்தை ஏற்றார். விரைவிலேயே பத்து தண்டால்கள் எடுப்பதற்கான பயிற்சியில் பல மணி நேரங்களை செலவிட்டு வருகிறார்.

ரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான். தூத்துக்குடியில் மரண ஓலம் கேட்ட போது நவீன நீரோக்கள் ஒருக்களித்து படுத்துக் கொண்டனர்.

#வினவு_செய்தியாளர்

ஸ்டெர்லைட் படுகொலைகளைக் கண்டித்தும்…
இணையதளத்தை முடக்கி கருத்துரிமையை
நசுக்கும் அராஜகத்தை கண்டித்தும்….
எழுத்தாளர் கலைஞர்களின் கண்டன முழக்கப் போர்
25.5.2018 மாலை 5 மணி, பெத்தனியாபுரம்,
குரு தியேட்டர் அருகில், மதுரை.

அனைவரையும் அழைக்கிறது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.

#Sterlite, #BanSterlite, #SterliteProtest, #SterliteProtestMay22nd2018, #Thoothukudi, #SaveThoothukkudi, #PoliceAtrocities, #ThoothukudiMassacre, #StateTerrorism,

__

தூத்துக்குடியில் நடைப்பெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு, போலீசால் கொல்லப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்.ஜெயராமன் அவர்களுக்கு வீரவணக்கம்.

கருப்புச்சட்டை அணிந்த இளைஞர்களை சிறை வைக்க உயர்நீதிமன்றம் போன எடப்பாடி அரசுதான் தூத்துக்குடியில் அமைதிக்காக பாடுபடுகிறதாம்!

தூத்துக்குடியில் மே 22-ம் தேதி துப்பாக்கி சூடு நடந்த பிறகு 65 இளைஞர்கள் கருப்புச் சட்டை அணிந்திருந்தார்கள் என்ற ஒரே ’குற்றத்திற்காக’ போலீசால் கைது செய்து அடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். 23-ம் தேதி தூத்துக்குடி வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்து நீதிபதியை அனுப்பி போலீசு நிலையங்களில் சோதனை நடத்தி சட்டவிரோத காவலை கண்டுபிடித்தனர். நேற்று கண்டுபிடித்த உடனே அவர்கள் மீது பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்து கலவரம் செய்வதாக பொய் வழக்கு போட்டு 65 பேரை சிறைக்கு அனுப்பியது போலீசு. ஆனால் அவர்களுக்கு பிணை வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம். உடனே இன்றைக்கு அவர்களுடைய பிணையை ரத்து செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. உயர்நீதிமன்ற நீதிபதி ராம திலகம் அதை நிராகரித்து விட்டார். அமைதி திரும்புவதற்கும் சுமூக நிலையைக் கொண்டு வருவதற்கும் என்கவுண்டர் எடப்பாடி அரசு எடுத்து வரும் முயற்சியின் யோக்கியதை இதுதான்! துப்பாக்கிகள் இன்னும் ஓயவில்லை.

__

இணைய சேவையை கொண்டு வர எடப்பாடி அரசுக்கு நீதிமன்ற அழுத்தம் கொடுத்த வழக்குரைஞர்கள்!

இணைய சேவை முடக்கத்தை எதிர்த்து, பத்திரிகையாளர் கவின்மலரை மனுதாரராக கொண்டு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்திருந்தனர்.

இன்று உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

“இணைய சேவை முடக்கத்துக்கு தமிழக அரசு கூறியிருக்கும் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை. சமூக ஊடகங்களில் போலீசு அராஜகம் குறித்த உண்மை செய்திகள்தான் வருகின்றனவே ஒழிய யாரும் வதந்தி பரப்பவில்லை. பொய்ச் செய்தி பரப்புவதை தடுப்பதற்காகத்தான் இணைய தடை என்று கூறும் இந்த அரசு, பொய்ச் செய்தி பரப்பியதாக யார் மீதும் ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை.”

“தொலைக்காட்சி ஊடகங்கள் போலீசு அராஜகம் குறித்த உண்மையை இருட்டடிப்பு செய்கின்ற நிலையில், அவற்றை வெளிக் கொணர்கின்ற சமூக ஊடகங்களை முடக்குவதே போலீசின் நோக்கம். எனவே இணைய முடக்கம் என்பது ஏற்கனவே போலீசு அராஜகத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை இன்னொரு முறை தண்டிப்பதாகவே அமையும்” என்று நமது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

தமிழக அரசால் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தி ஒரு வாதத்தைக் கூட வைக்க முடியவில்லை. மறு உத்தரவு மாலை 6 மணிக்கு என்று கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். வழக்கு நிற்காது என்று தெரிந்தவுடனே, குறைந்த பட்சம் தூத்துக்குடி மாவட்டத்திலாவது இணைய சேவை தடை தொடர்வதை உத்திரவாதப் படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன், அவசரம் அவசரமாக மற்ற இரு மாவட்டங்களில் இணைய சேவையை வழங்குவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இது நல்லெண்ணம் அல்ல, நீதிமன்றத்தை ஏமாற்றும் சூது நடவடிக்கை.

இணைய முடக்கத்தை மூன்று மாவட்டங்களிலும் ரத்து செய்யவேண்டும் என்பதுதான் ம.உ.பாதுகாப்பு மையத்தின் வாதம். என்ன தீர்ப்பு வருகிறது என்று பார்ப்போம்.

இணைய சேவை முடக்கத்தை பொருத்தவரை 2014 இல் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 11 மாநிலங்களில் 70 முறை இணையம் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அதற்கு முன் 2012 இல் காங் ஆட்சியில் காஷ்மீரில் மட்டும் ஒரு முறை முடக்கப்பட்டிருக்கிறது.

2016 இல் இணைய முடக்கத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் முடக்கத்தை ரத்து செய்ய மறுத்து விட்டது. வேறு மாநிலங்களில் இணைய முடக்கத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து முறியடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இதில் நாம் வெற்றி பெற்றால், மோடி அரசுக்கு எதிராக தமிழகம் நடத்தி வரும் பல முனைப் போராட்டத்தில், இந்தப் போராட்டத்திலும் தமிழகம் ஒரு முன்மாதிரியைப் படைத்ததாக இருக்கும்.

**

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

மிழகம் – தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது “மோடி அரசே தமிழகத்திலா உன் சூட்டுப் பயிற்சி, சுடாதே சுடாதே தமிழர்களைச் சுடாதே, அடிக்காதே அடிக்காதே தமிழர்களை அடிக்காதே, சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா?, இந்திய அரசே ஆலை அவசியமானதோ – தமிழனின் உயிர் அவசியமானதோ?, தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா?” உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

This slideshow requires JavaScript.

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழகப் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தமை தெரிந்ததே. இதனைக் கண்டித்தே யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

நன்றி: arasangam.lk

__

தமிழக கொலைகார போலீசைக் காறித்துப்பும் முன்னாள் இராணுவ அதிகாரி!

__

அடியாளை விட்டு சுடச்சொல்லியிருந்தாலும், அதே அடியாளிடம் ரிப்போர்ட் கேட்பானாம் ஆண்டை! 25.5.2018

தூத்துக்குடி ‘வன்முறைகள்’ குறித்த அறிக்கையை தமிழக அரசு தற்போது மத்திய உள்துறை அமைச்கத்திடம் கொடுத்திருக்கிறதாம்!
– நாயைக் கொல்வதாக இருந்தாலும் ‘விசாரித்து’ விட்டு கொல்வது போல அடியாளை விட்டு சுடச்சொல்லியிருந்தாலும், அதே அடியாளிடம் ரிப்போர்ட் கேட்பானாம் ஆண்டை!
ANI @ANI

***

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மை எரிப்பு! 25.5.2018

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

This slideshow requires JavaScript.

நன்றி : makkal athigaram/fb

**

தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் நக்கலைட்ஸ் குழுவினர்!

https://www.youtube.com/watch?v=5Ey1v8L_pEc&feature=youtu.be

**

புதுச்சேரியில் அலங்கோலமான ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ! 25.5.2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் வேடமணிந்தவர்களை புதுச்சேரி போராட்டக்காரர்கள் அலங்கோலப்படுத்தினர்.

This slideshow requires JavaScript.

நன்றி : செய்தி_விகடன்

**

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு!
சென்னையில் திருநங்கைகள் போராட்டம்!
25.5.2018

தூத்துக்குடிக்கு தோள்கொடுப்போம் ! புதுச்சேரியில் வேலை நிறுத்தம்!  25.5.2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழகம்-புதுச்சேரியில் இன்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. புதுச்சேரியில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் புதுச்சேரி பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

நன்றி : செய்தி_விகடன்

**

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ; வாங்கும் காசுக்கு மேல கூவுறாங்க! டுமிலிசை!
– ஓவியம் முகிலன் 25.5.2018

தூத்துக்குடியில் கலவரத்தை தூண்டுபவர்களை திட்டமிட்டு ஒடுக்க வேண்டும் – டுமிலிசை ஸ்டெர்லைட் முதலாளி போடும் பிச்சைக் காசுக்காக விசத்தை கக்கும் எச்சஇலை!

நன்றி : rsyftn/fb

**

ஸ்டெர்லைட்டை மூடி ! ஆட்சியை விட்டு ஓடு!
– சுவரொட்டி.

எடப்பாடியே!
* நீ ஆண்டது போதாதா?
* தூத்துக்குடியில் 14 உயிர்கள்
மாண்டது போதாதா?
ஸ்டெர்லைட்டை மூடி ! ஆட்சியை விட்டு ஓடு!
25.05.2018 காலை 6.00 முதல் மாலை 6.00 வரை ஆட்டோக்கள் ஓடாது!

ஆட்டோ-டாக்சி ஓட்டுநர் சங்கம், தென்சென்னை.

**

போலீஸ் – கலவரங்களுக்கு எங்களை அனுகவும்! – ஓவியம் முகிலன்

குடிசை கொளுத்துவது, கொலை, விபச்சாரம், லஞ்சம் என அனைத்தும் இங்கு சிறப்பாக செயல்படும்!
அனைத்து விதமான கலவரங்களுக்கு எங்களை அனுகவும்!
420, காவல் நிலையம், தமிழ்நாடு.

நன்றி : rsyftn/fb

**

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; மிக்சர் திண்ணும் மோடி!

*நாட்டின் கால்வாசிக் குழந்தைகள் சத்துக் குறைவால் அவதிப்படும்போது, நமது பிரதமர் #FitnessChallenge குறித்து பேசுவது ஏன்?
*அவர் ஏன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேசுவதில்லை?
*பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்த கேள்விகளை அவர் தவிர்ப்பது ஏன்?
– இப்படி பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பதில் குழப்புவதை அவர் என்றாவது நிறுத்துவாரா?

 

**

ஜெனரல் டயர் இல்லை; ஜாலியன் வாலாபாக் படுகொலை!

மக்கள் அதிகாரம் சுவரொட்டி முழக்கம்!
ஜெனரல் டயர் இல்லை
இராபர்ட் கிளைவ் இல்லை
ஆனால்,
ஜாலியன் வாலாபாக் படுகொலை!

மக்கள் அதிகாரம், புதுச்சேரி

**

கார்ப்பரேட்டுகளுக்காக பாயும் தோட்டாக்கள்!

ஓவியம் முகிலன்

__

அமெரிக்காவில் சுட்டா.. அழுவாராம் மோடி!
தூத்துக்குடியில சுட்டா.. தூங்குவாராம்!

அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிசூடுகளுக்கு வருந்தும் இந்தியாவின் பிரதமர், அதே வாரத்தில் 13 இந்தியர்கள் தமிழகத்தின் தூத்துக்குடியில் கொல்லப்பட்ட போது அமைதியாக இருக்கிறார். பிரபலங்களோ இல்லை கிரிக்கெட் நட்சித்திரங்களோ அழைக்கும் சாகச அழைப்புகளை ஏற்பவர், எளிய மக்களின் குரலை எற்பது இருக்கட்டும், கேட்பது கூட இல்லை!

Prime minister of india feels sorry for Americans when shootout was happened in USA and In this week 13 Indians Killed in police shooting in Toothukudi-TN, but he remain silent.He reacts on celebrity or cricketer’s challenge but he never heard any common man’s voice.
#Thoothukudi
டிவிட்டரில் @AlpeshThakor_ குஜராத் ரத்தன்பூர் காங்கிரசு எம்.எல்.ஏ

__

சென்னை வடபழனியில்அடைக்கப்பட்டிருக்கும் கடைகள்.

This slideshow requires JavaScript.

இன்று 25.5.2018 எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி, சென்னை வடபழனியில்அடைக்கப்பட்டிருக்கும் கடைகள்.
__
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஜார்கண்டில் ஆர்ப்பாட்டம்!

ஜார்கண்டில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம்.
23.5.2018

__

நக்சல்பாரி எழுச்சியும் இப்படித்தான் துவங்கியது

தூத்துக்குடியைப் பற்றி இன்று நீங்கள் நினைக்கும் போது ஒன்றைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது! 51 வருடங்களுக்கு முன்னர் நக்சல்பாரி எழுச்சியும் இப்படித்தான் துவங்கியது. மேற்கு வங்கத்தில் இருக்கும் நக்சல்பாரி கிராமத்தில் அணிதிரண்ட ஆயுதமற்ற பழங்குடி பெண்கள், குழந்தைகள் கூட போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

–   கவிதா கிருஷ்ணன்

__
சென்னை எழும்பூரில் அடைக்கப்பட்டிருக்கும் கடைகள்!

இன்று 25.5.2018 எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி, சென்னை எழும்பூரில் அடைக்கப்பட்டிருக்கும் கடைகள்.

__

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சென்னையில் ஐ.டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
24.5.2018

பதாகை முழக்கங்கள்
“NEED 10 LAKHS PLEASE SHOOT ME!!”
“KILL STERLITE NOT PEOPLE”

___

தூத்துக்குடி : அரசு மருத்துவர்கள் & செவிலியர்களின் மகத்தான சேவை!

நண்பர் ஒருவரிடம் மாலை பேசிக்கொண்டிருந்தேன் . தூத்துக்குடியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் எப்படிப்பட்ட சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது, வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பது போன்ற பல விசயங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

2 நாட்களாக குவிந்துள்ள மக்களை சிகிச்சை அளித்து காப்பாற்றும் அரும்பணியில் இரவு பகலாக மருத்துவர்கள் , பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் , மருத்துவ ஊழியர்கள் என்று எல்லோரும் கடுமையாக நெருக்கடி மிகுந்த சூழலில் பணி செய்து வருகின்றனர். குறிப்பாக பயிற்சி மருத்துவர்கள் பம்பரமாய் சுழன்று வேலை செய்து வருகின்றனர் யாரும் அறைக்கு செல்லாமல் தொடர் பணியில் கடமை உணர்ச்சியோடு மிகப் பெரிய பேரிடர் சூழலில் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்திகொண்டு 48 மணி நேரமாக வேலை செய்து வருகின்றனர்.

கண் முன்னே ரத்தம் தோய்ந்த உடல்கள் தலை சிதைந்து மூளை சிதறிய போராட்டக்காரர்களின் உடல்கள், சிதறிய எலும்புகளோடு சதையோடும் வலியோடு கதறும் மக்கள் எங்கு பார்த்தாலும் கதறல் அலறல் பதட்டம் படபடப்பு மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடு 22ஆம் தேதி முதல் போராடி வரும் பயிற்சி மருத்துவர்களின் மன்நிலையை நினைத்துப்பார்க்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்னால் (2013 ) பயிற்சி மருத்துவர்கள் பகுதி நேர பணி வேண்டி போராட்டம் நடத்தியது நினைவுக்கு வந்தது அதே பயிற்சி மருத்துவர்கள் இன்று மிகப்பெரிய சிக்கல் மிகு சூழலில் தங்களை மறந்து மக்களுக்காக அரும்பணியாற்றி வருவது நெகிழ்ச்சியான ஒரு தருணமாக உள்ளது.

அரசு நெருக்கடி தரும் சூழலில் மக்கள் பக்கம் நிற்கவேண்டும் என்ற நிலைபாடும் அரசு வன்முறையாட்டம் ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடும் சூழலில் எதை பற்றியும் கவலைபடாமல் மக்கள் நலனை முதன்மைப்படுத்தி பணிசெய்து மருத்து அறம் காத்து நிற்கும் பயிற்சி மருத்துவர்கள் நாளை மக்கள் மருத்துவர்களாக வருவார்கள். நிச்சயம் இந்த தூத்துக்குடி போலீஸ் வெறியாட்டம் எல்லோர் வாழ்வையும் மாற்றியுள்ளது. அந்த பயிற்சி மருத்துவர்களின் வாழ்விலும் நிச்சயம் மிகப்பெரிய தாக்கமும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

மேலும் மக்கள் போராட்டம் நடக்கும் பல்வேறு இடங்களில் அவர்களுக்கு ஆதரவாக நின்று இலவச மருத்துவ சிகிச்சை குழு ஒன்று செயல்படுத்தவும் தோழர் இணை பேராசிரியர் தர்மராஜா கூறியது போன்று இலவச சட்ட உதவிக் குழுவோடு இணைந்து மருத்துவக் குழுவும் இணைந்து செயல்பட வாய்ப்பும் சூழலும் உள்ளது.

அந்நியமாகி இருந்த சூழலில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு மாணவர்களையும் பயிற்சி மருத்துவர்களையும் மக்களின் பக்கம் கொண்டு போய் சேர்த்துள்ளது.

– மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார், முகநூலிருந்து…

__

இன்று 25.5.2018 எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒட்டி, சென்னை எழும்பூரில் நிறுத்தப்பட்ட போலீசு வாகனங்கள்!

This slideshow requires JavaScript.

__
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஒட்டிய சுவரொட்டி.
25.5.2018

அரச பயங்கரவாதத்திற்கு அடிபணிய மாட்டோம்!
கார்ப்பரேட் கைக்கூலி எடப்பாடி அரசே!
* சாவுக்கு அஞ்சமாட்டோம் ஸ்டெர்லைட்டுக்கு சவக்குழி தோண்டும் வரை ஓயமாட்டோம்!
* ஒ.என்.ஜி.சி, நியூட்ரினோ, ரசாயன மண்டலம்… என தமிழகத்தை அழிக்கு அனுமதியோம்!
ஓரணியாய் கிளர்ந்தெழுவோம்!

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க