புதிய ஜனநாயகம்
‘எப்படியேனும்’ பா.ஜ.க.வை வீழ்த்த, இதோ நிதிஷ் ஃபார்முலா!
என்னதான் நிதிஷூடன் உறவைப் பேண விரும்பினாலும், ஆனந்த் மோகனின் விடுதலையை கண்டிக்காவிட்டால், தலித்துகள் மத்தியில் தனக்குள்ள வாக்கு வங்கியை இழக்க நேரிடுமே என்பது மம்தாவுக்கு உள்ள தர்மசங்கடம். ஆக மொத்தம் கண்டனமும் ஆதரவும் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தில் இருந்தே பிறக்கிறது.
புதிய ஜனநாயகம் – மே 2023 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் மே 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
கால்டுவெல்-ஐ நினைவுகூர்வோம்!
வளர்ந்து வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கெதிராகப் போராட, கால்டுவெல் மீள்கண்டுபிடுப்பு செய்த ”உயர்தனிச் செம்மொழியே நம் மொழி” என்பதும், “பார்ப்பன எதிர்ப்பு மரபே தமிழ் மரபு” என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன. அவற்றை நம் கைகளில் ஏந்துவதே கால்டுவெல்லை நினைவுகூர்வதாகும்.
திரிபுரா, நாகலாந்து, மேகலாயா தேர்தல் முடிவுகள்: எச்சரிக்கை, பரவிவருகிறது பாசிசம்!
அதிகாரத்தைப் பயன்படுத்தி, அராஜகவாதிகள் மட்டுமே வெற்றிபெற வழிவகுக்கும் இந்த போலி ஜனநாயகத் தேர்தல்களில் பா.ஜ.க.வை வீழ்த்திவிட முடியும் எனக் கருதுவதும், அந்த வெற்றிகளைக் கொண்டே பாசிஸ்டுகளை வீழ்த்திவிடலாம் எனக் கருதுவதும் பாசிஸ்டுகளின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதுதான் நடந்து முடிந்த மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.
புதிய ஜனநாயகம் – மே 2023 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - மே 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
கார்ப்பரேட்மயம்: நேற்று பள்ளிக்கல்வித்துறை! இன்று போக்குவரத்துத்துறை! நாளை ?…
போக்குவரத்துத் துறையில் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கான தற்போதைய காரணங்கள் எந்தவகையிலும் குறைந்துவிடப் போவதில்லை. இதில் நடக்கப் போகும் ஊழலின் பரிமாணங்கள் மட்டுமே மாறப்போகின்றன. இத்திட்டம் மூலம் நேரடியாக கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது.
தொடர்ந்து திவாலாகிவரும் அமெரிக்க வங்கிகள்: வெடிக்கக் காத்திருக்கும் உலகப் பொருளாதரம்!
அமெரிக்க வங்கிகள் தொடர்ந்து திவாலாகி வருவதானது, சரிந்துவரும் அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை நமக்கு உணர்த்துகின்றன. இதன்விளைவாக, உலகப் பொருளாதாரம் ஒரு பெருமந்தத்தில் வீழ்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த ஏகாதிபத்திய உலகத்தை உடனடியாக வீழ்த்துமாறு நிலைமைகள் நம்மைக் கோருகின்றன.
“ஈரோடு பட்டி ஃபார்முலா”: புழுத்து நாறிக்கொண்டிருக்கும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ மற்றொரு பரிணாமம்!
புழுத்துப் போன போலி ஜனநாயகத் தேர்தல்களின் நிலை, ஒவ்வொரு முறையும் மிக மோசமாகி, அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. எல்லா ஓட்டுக் கட்சிகளும் மக்களை கவர்ச்சிவாதத்திலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கடித்துதான் ‘அரசியல்’ செய்துவருகின்றன. அந்தவகையில், தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்துள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கவர்ச்சிவாத மற்றும் பிழைப்புவாத தேர்தல் உத்திகளின் மைல்கல்லாக அமைந்துள்ளது.
சர்வதேசச் சட்டங்கள் அனுமதி : பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலுக்கான திறவுகோல்!
நமது நாட்டின் இயற்கை வளங்களையும், நமது தொழிலாளர்களின் உழைப்பையும் எவ்வித நெறிமுறையுமின்றி உறிஞ்ச பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நமது நாட்டை திறந்துவிடுவதுதான் பார் கவுன்சில் கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளின் நோக்கமாகும்.
மீண்டும் மண்டைக்காடு கலவர அபாயம் – தமிழ்நாடே விழித்துக்கொள்!
ஆளுநர் ரவியின் இணையாட்சி, செய்தி- சமூக ஊடகங்களைக் கைப்பற்றுவது, இந்துசமய மாநாடு என பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டைச் சுற்றி வளைத்து, காலூன்ற எத்தனித்து வருகிறது காவி பாசிசக் கும்பல்.
ஐ.எம்.எஃப்-வின் மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இலங்கை!
“கட்டமைப்பு சீர்திருத்தம்” என்ற பெயரில், ஐ.எம்.எஃப் விதித்துள்ள நிபந்தனைகள் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை இலங்கையில் மேலும் தீவிரமாக்கியுள்ளது.
இது பாசிஸ்டுகளுக்கான ‘ஜனநாயகம்’! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!
இனியும் “அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்று முழங்குவது இல்லாத ஜனநாயகத்திற்காக அழுவதாகும். இதை விடுத்து, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசக் கும்பலை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு ஒன்றை அமைப்பதற்காகப் போராடுவதுதான் நாம் முன்னெடுக்க வேண்டிய கடமையாகும்.
“ஸ்டிங் ஆப்பரேஷன்”: ஊடக புரோக்கர்களும் ஊடுருவும் பாசிசமும்!
நாம் என்ன சிந்திக்க வேண்டும், எந்தக் கட்சியைப் பற்றி எப்படி கருத வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும், எந்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஊடக புரோக்கர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.
ராகுல் தகுதி நீக்கம்: நாடாளுமன்றத்தை முடக்கினால், மக்கள் மன்றத்தில் முழங்குவோம்!
எதைப் பேசக்கூடாது என்று பாசிசக் கும்பல் தடை போடுகிறதோ, அதைப் உரக்கப் பேசுவோம். எப்படி பேசக்கூடாது என்று பாசிசக் கும்பல் கருதுகிறதோ, அப்படி பேசுவோம். “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” என்று முங்குவோம்!
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி: தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது!
காவி பாசிசக் கும்பலை நீதிமன்றம் அனுமதித்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிசக் கும்பலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! இது தமிழ்நாடு என்பதை மீண்டும் ஒருமுறை சங்கிக் கும்பலுக்கு உணர்த்துவோம்!