கைது அல்ல கடத்தல்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரணக்குழியாகட்டும் வெனிசுலா!
வியட்நாமிலும், ஆப்கானிஸ்தானிலும் வாங்கிய உதையை அமெரிக்கா மீண்டும் வெனிசுலாவிலும் வாங்கும். மதுரோவின் கைது என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் வெற்றியல்ல; அது அதன் வீழ்ச்சியின் தொடர்ச்சி.
ஆறு லட்சம் மக்களின் உயிரைக் குடித்த “யு.எஸ். எய்ட் நிதி முடக்கம்”
மூன்றாம் உலக நாடுகளை அடிமைப்படுத்துவதற்கு இந்த சொற்ப பணத்தை கூட செலவிட வேண்டியதில்லை; மிரட்டல், வரி தாக்குதல், போர் அறிவிப்பு போன்ற உத்திகளை கையாள்வதன் மூலமே அந்நாடுகளை அடிமைப்படுத்தி விடலாம் என்பதே டிரம்ப் தலைமையிலான பாசிச கும்பலின் அணுகுமுறையாக உள்ளது. இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
நியூயார்க் மேயர் தேர்தலில் மம்தானியின் வெற்றி: போலி சோசலிசத்திற்கான ஆதரவல்ல!
மம்தானி தன்னை “ஜனநாயகவாத சோசலிஸ்ட்” என்று அழைத்துக் கொள்வதைக் கொண்டோ, டிரம்ப் அவரை, ‘கம்யூனிஸ்ட்” என்று குற்றஞ்சாட்டி விமர்சிப்பதை வைத்துக் கொண்டோ, மம்தானியின் வெற்றியை மதிப்பிட முடியாது. மாறாக, கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் அரங்கேறியிருக்கும் டிரம்ப்-மஸ்க் கும்பலாட்சியின் பாசிச சர்வாதிகார அடக்குமுறைகள் மற்றும் அதற்கு எதிராக வளர்ந்துவரும் மக்களின் போராட்ட உணர்விலிருந்துதான் இதனை மதிப்பிட வேண்டும்.
“காப் 30” மாநாடு எனும் கேலிக்கூத்தும் உலகம் எதிர்நோக்கியுள்ள அபாயமும்
உலகின் பல்வேறு நாடுகளில் பாசிச சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருவதை நாம் பார்க்கிறோம். இத்தகைய பாசிச கும்பல்கள் பெயரளவிற்கான, போலித்தனமான இயற்கைப் பாதுகாப்பு என்ற முகமூடியைக் கூட அணிந்துகொள்ளத் தயாராக இல்லை. குறிப்பிட்ட நிதிமூலதன கும்பல்களின் இலாபவெறிக்காக, நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு என்ற பெயரில் இயற்கைவளக் கொள்ளையை நியாயப்படுத்தும் முன்னெடுப்புகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
சத்தமின்றி இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் சூடான்!
சூடானின் உள்நாட்டுப் போரை நிறுத்தி அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட எந்த நாடும் முயற்சிப்பதில்லை. மாறாக, இரு தரப்பு இராணுவக் கும்பலில் ஒன்றை ஆதரித்து கொம்பு சீவி விடுவதன் மூலம் சூடானில் ஆதிக்கம் செலுத்தி, கனிம வளங்களைச் சூறையாடுவதிலேயே குறியாக உள்ளன.
பாசிச டிரம்பின் தாக்குதலில் இந்தியப் பொருளாதாரம்!
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசோ, டிரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டிரம்பின் அடிமையைப் போல செயல்பட்டு வருகிறது.
டிரம்பின் பேச்சுவார்த்தை நாடகம் அம்பலம்: காசாவில் இன அழிப்புப் போருக்கு தயாராகும் இஸ்ரேல்!
ஒரு பக்கம் மக்கள் போராட்டத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், மற்றொரு பக்கம் காசாவை முழுமையாக கைப்பற்றும் சதித்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான முனைப்பு என்கிற அடிப்படையில் நடைபெற்றதுதான், பாசிஸ்ட் டிரம்பின் 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையிலான முதற்கட்ட ‘பேச்சுவார்த்தை’.
ஃபிடல் காஸ்ட்ரோ : அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராளி ! | மீள்பதிவு
ஒபாமாவின் கியூபா வருகையையொட்டி அவருக்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதியிருந்தார் காஸ்ட்ரோ. அக்கடிதத்தில் கியூபாவின் 55 ஆண்டுகாலப் போராட்டத்தை பெருமையுடன் நினைவு கூர்ந்திருக்கும் காஸ்ட்ரோ, ‘‘பேரரசு எங்களுக்கு எதையும் வழங்கத் தேவையில்லை’’ என்று அதில் குறிப்பிடுகிறார்.
ஈரான் மீதான போர்: அமெரிக்க வல்லரசின் படுதோல்வி
மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் அதன் பேட்டை ரவுடியான இஸ்ரேலுக்கும் சவாலாக வளர்ந்துவரும் ஈரானின் செல்வாக்கையும் அதன் அணு ஆற்றலையும் முடக்குவதும், ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதும்தான் அமெரிக்காவின் நோக்கம்.
காசா: இனவெறி இஸ்ரேலின் அறிவிக்கப்படாத வதைமுகாம்
காசாவைத் திறந்தவெளி வதை முகாமாக மாற்றும் நோக்கத்தில் காசா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.
காசா: இழுபறியில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை
தங்களுடைய நெருக்கடியைத் தற்காலிகமாக தீர்த்துகொள்வதற்காக இஸ்ரேலும் அமெரிக்காவும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
ருமேனியா தேர்தல்: மாற்றுத் திட்டமில்லாமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது!
பாசிஸ்டுகளை தேர்தலில் போட்டியிடத் தடைவிதிப்பதால் மட்டும் வீழ்த்தி விட முடியாது என்பதை ருமேனியாவின் தேர்தல் சூழல் நிரூபிக்கிறது.
அநுரவின் கவர்ச்சிகர முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குவதற்கு ஊற்றுக்கண்ணாக அமைந்த - முந்தைய ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளையே கவர்ச்சிகரமான முகமூடி அணிந்து அமல்படுத்திக் கொண்டிருக்கிறது அநுர தலைமையிலான இலங்கை அரசு.
அமெரிக்காவில் கும்பலாட்சி துவக்கம்: புதிய வகை மேலாதிக்கத்திற்கான அறிவிப்பு!
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெயரளவிலான ஜனநாயகத்தைக் கூட இல்லாதொழித்து பாசிசத்தை நிலைநாட்ட வேண்டுமென அமெரிக்க தொழில்நுட்ப - தொழிற்துறை கார்ப்பரேட்டுகள் முடிவுக்கு வந்துவிட்டனர்.
காசா மீதான போர் நிறுத்தம்: காசா மீண்டது, பாலஸ்தீனமும் மீளும்!
காசா மீதான போர் என்ற இந்த இடைக்கட்டத்தில், பல இழப்புகளைச் சந்தித்திருந்தாலும் ஹமாஸூம் பாலஸ்தீன மக்களும் வெற்றி பெற்றுள்ளனர்.























