Monday, November 10, 2025

தடம் புரளும் ரயில்கள்: இவை வெறும் விபத்துகளா?

மேல்தட்டு மக்கள் மட்டும் பயணிக்கும் வந்தே பாரத், கௌரவ பாரத் போன்ற சொகுசு ரயில்களை உருவாக்குவதற்கும், ரயில்களில் ஏசி பெட்டிகளை அதிகப்படுத்துவதற்குமே ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படுகிறது.

உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது: உயர்நீதிமன்றம் கண்டனம்

"ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செயல்படுவது சமூகத்துக்கு மோசமானது; தூத்துக்குடியில் அனுமதி இன்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரியும், இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

கேரளா கனமழை: வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு

இதுவரை ஒரு வயது குழந்தை உட்பட 36 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பொட்டலூரணி கள ஆய்வு | நெல்லை மக்கள் அதிகாரம்

ஒரு கிராமத்தில் நல்ல காற்றும், நல்ல நீர்நிலையும் இல்லையென்றால் வாழ முடியாது என்பதை உணர்ந்தால், இந்த கிராம மக்கள் மீன் கழிவு ஆலைக்கு எதிராக சுய உணர்வோடு போராடுகிறார்கள்.

🔴LIVE: | டெல்லி | மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர் போராட்டம்

🔴LIVE: | டெல்லி | மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர் போராட்டம் பகுதி 1 https://www.facebook.com/vinavungal/videos/530204009446783 பகுதி 2 https://www.facebook.com/vinavungal/videos/7563171093795294 காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தொடக்கக் கல்வி ஆசிரியர்களை போராடவிடாமல் கைது செய்யும் திமுக அரசு

தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் ஜூலை 29, 30, 31 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் உள்ள டிபிஐ அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் இன்று காலை போராட்டம் தொடங்கியுள்ளது.

சீனா முன்னிலையில் பாலஸ்தீன இயக்கங்களிடையே ஒற்றுமை ஒப்பந்தம்

கடந்த ஆண்டு ஈரான் மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையே சீனா ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தற்போது பாலஸ்தீனப் பிரச்சனையில் சீனா தலையிட்டுள்ளது.

ஒன்றிய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான துறைக்கு 0.025 விழுக்காடு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை புறந்தள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளது.

பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையை ஆதரித்து நிற்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு விதித்த அதே தடையை, இஸ்‌ரேலுக்கு விதிக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மறுப்பதானது, அதன் அமெரிக்கா – இஸ்‌ரேல் சார்புத்தன்மையையும், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்‌ரேலின் இனப்படுகொலையை அது ஆதரித்து நிற்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கன்வார் யாத்திரையில் வன்முறை: முஸ்லிம்களைத் திட்டமிட்டுத் தாக்கும் இந்துத்துவா குண்டர்கள்

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரையில் களமிறங்கியுள்ள இந்துத்துவா குண்டர்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

பஞ்சாபில் நடைபெற்ற புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மாநாடு!

அருந்ததி ராய் மற்றும் பேராசிரியர் ஷங்கத் ஹூசைன் மீதான வழக்கு, அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஆகியன கருத்து மற்றும் போராட்ட உரிமை மீதான பாசிச தாக்குதல்களாகும்.

2024 பட்ஜெட்: ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு!

இந்தியாவில் அதிகப்படியான வரியை ஒன்றிய அரசுக்குச் செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அப்படி இருந்தும் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு சிறப்பு நிதி கிடையாது என்றால், தமிழ்நாட்டின் பெயரே பட்ஜெட்டில் இருக்காது என்றால், அதற்கு பெயர் தான் இந்துராஷ்டிரத்தின் முதல் பட்ஜெட்

சுய உதவிக் குழு கடன் நெருக்கடியால் தொடரும் தற்கொலைகள்!

ஒரு பக்கம் அம்பானி ஊதாரித்தனமாக பல ஆயிரம் கோடிகளில் ஆடம்பரத் திருமணம் நடத்திக் கொண்டிருக்கின்ற நாட்டில், ரூபாய் 5 ஆயிரம் கடனுக்காக எளிய மக்கள் தற்கொலை செய்து கொள்வது எவ்வளவு கொடூரமானது…

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் “அகதிகள் அணி”

கென்ய அகதிகள் முகாமில் வளர்ந்த ஓட்டப்பந்தய வீரர் பெரினா லோகுரே நகாங் "நாங்கள் உலகளவில் 12 கோடிக்கும் அதிகமான அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் எங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காட்ட விரும்புகிறோம்" என்றார்.

மும்பை கனமழை ரெட் அலர்ட்: உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதலுக்கான முன்னறிவிப்பு

0
கார்ப்பரேட் கொள்ளைக்காக மேற்கொள்ளப்படும் நகரமயமாக்கலில் உழைக்கும் மக்கள் தான் பலியிடப்படுகிறார்கள். உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதலுக்கான முன்னறிவிப்பாகவே தற்போது கொடுக்கப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பை (ரெட் அலர்ட்) பார்க்க வேண்டியுள்ளது.

அண்மை பதிவுகள்