Tuesday, July 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 26

அதிகம் நினைவுகூரப்படாத ஆற்றல்மிகு போராளி – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

ரலாற்றில் அளப்பரிய பங்களிப்பு செலுத்திய சில தலைவர்களின் பிறந்த நாளோ நினைவுநாளோ தெரியாமல் போவது, அவர்களை சரியாக நினைவுகூருவதற்கான வாய்ப்புகளைக் குறைத்துவிடுகிறது. அந்தத் தலைவர்கள் அவர்களது உண்மையான மக்கள் தொண்டு, நாட்டுப்பற்றுக்கான அரும் பணிகளால், தியாகங்களால் மட்டுமே நினைவுகூரப்படுகின்றனர். அந்தவகையில், தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு பெண் போராளி என்றால், அவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆவார்.

அவருக்கு முன்பு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த, பெண்களின் உரிமைக்காகப் போராடிய, சாவித்திரிபாய் பூலேயின் பிறந்த நாளை நம்மால் நினைவுகூர முடிகிறது. ஆனால், ஒடுக்கப்பட்டு கீழ் நிலையிலிருந்த ராமாமிர்தம் அம்மையாரின் சமூகப் பின்னணி காரணமாக, அவரது பிறந்த நாளும் இறந்த நாளும் பொதுவெளியில் பெரிதும் அறியப்படாமல் உள்ளது.

தி.மு.க. ஆட்சியின் போது அவரது பெயரை நினைவுகூரும் வகையில் பெண் கல்விக்கான திட்டங்களுக்கு அவரது பெயர் இரண்டு முறை சூட்டப்பட்டுள்ளது. 1989-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு குறைந்தது எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ.5,000 திருமண நிதி உதவித்திட்டத்திற்கு அவரது பெயரைச் சூட்டியது.

தற்போதைய தி.மு.க. அரசு, கருணாநிதி அரசு கொண்டுவந்த, திருமண உதவித் திட்டத்தை உயர்கல்வித் திட்டமாக மாற்றியமைத்து, அதனை, 2022 செப்டம்பரில் தொடங்கி வைத்தது. அதாவது, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை கிடைக்க வழி ஏற்படுத்தித் தந்துள்ள அத்திட்டத்திற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று பெயரிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்கவிழாவிற்கு அன்றைய டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவாலை அழைத்ததும், முக்கியமான அம்சமாகும்.

இவற்றிற்கப்பால், மார்ச் 8 பெண்கள் தினத்தன்று திராவிட இயக்கத்தின் தோழர்கள் யாராவது இராமாமிர்தம் அம்மையாரை நினைவுகூர்ந்தால் உண்டு என்ற அளவிற்குத்தான் இவர் தமிழ்நாட்டில் நினைவுகூரப்படுகிறார். இவரது வரலாற்றுப் பங்களிப்பு குறித்து திராவிடர் கழகம் சார்பாக சில நூல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றைத் தாண்டி தமிழ்நாட்டின் பெண் உரிமைப் போராளிகளில் ஒருவராக இவரது பங்களிப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் நோக்கத்தில், இந்தக் கட்டுரையை வினவு இணைய தளத்தில் பதிவிடுகிறோம்.

“மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் வாழ்க்கையும், தேவதாசி முறை ஒழிப்பும்” என்ற தலைப்பில், முனைவர் தி.பாலசுப்ரமணியன், முனைவர் என்.தனலட்சுமி, முனைவர் ஏ.ஆர்.சரவணகுமார் ஆகிய காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பேராசிரியர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வுக்கட்டுரையைத்தான் இங்கு கொடுத்துள்ளோம்.

***

மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும் வாழ்க்கையும்,
தேவதாசி முறை ஒழிப்பும்

முனைவர் தி. பாலசுப்பிரமணியன் கௌரவ விரிவுரையாளர்,
வரலாற்றுத்துறை,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா

Dr. N. DHANALAKSHMI,
Associate Professor,
School of History and Tourism Studies,
Tamilnadu Open University,
577, Annavalai, Saidapet, Chorusai.

Dr. AR. SARAVANAKUMAR,
Head i/c, Department of History,
Alagappa University, Karaikudi.

முன்னுரை:

1883 ஆம் வருடம் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் என்ற கிராமத்தில் கிருஷ்ணசாமி, சின்னம்மாள் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார், ராமாமிர்தம். பின் நாட்களில் மூவலூர் மூதாட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் என்றும் அன்புடன் அழைக்கப்பட்டவர். இவர்களது குடும்பம் இசைவேளாளர் குடும்பம் ஆகும்.

தேவதாசிமுறை நடைமுறையில் இருந்த காலகட்டம் அது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில், கோயில்களுக்கு நேர்ந்து விட்டுவிடுவார்கள் அவர்களுக்கு சிறு வயதிலேயே நாட்டியம் பாட்டு போன்றவைகள் கற்றுத்தரப்படும். அவர்கள் நாட்டியமும் இசையும் மட்டுமல்லாது இலக்கியம் கவிதை போனறவற்றில் சிறந்தவர்களாகவும் பயிற்றுவிக்கப்படுவர். சகலவிதத்திலும் தேர்ந்து தங்களது அழகாலும் அறிவாலும் மற்றவர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் பயிற்றுவிக்கப்படுவார்கள்.

தேவதாசி என்பவர்கள் பெரும் கோயில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் சிறுவயதில் நேர்த்து விடப்பட்ட பெண்கள் ஆவர். பிற்காலச் சோழர்களின் காலத்தில் தான் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு “பொட்டுக்கட்டி” விட்டு, ஆலயங்களில் சதிராட வைத்தனர். அப்பெண்டிர்க்குத் திருமண வாழ்க்கையை மறுக்கும் வழக்கமும் ரச நியதியாக மாறியது. சோழப்பேரரசின் கோயில்கள் அனைத்துமே சனாதன பிராமணர்களின் வேத ஆகம ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களுக்குத் “தேவதானம்” என்ற பெயரில் வழங்கப்பட்ட ஏராளமான ‘இனாம்’ நிலங்களுக்கு அவர்கள் நில உடைமையாளர்களார்கள் (குட்டி ஜமீன்தார்கள்).

பெயர்க் காரணம்

இச்சொல் தேவன் (இறைவன்) தாசி (அடிமை) இறைவயின் அடிமை என்ற பொருள்படும்.

மூவலூர் ராமாமிர்தம் இளமை காலம்

பின்னாளில், தன்னை மனமார விரும்பியவரும், ஆடல் பாடல்களைக் கற்றுத் தத்தவரும், சங்கீத ஆசிரியருமான சுயம்புப் பிள்ளையைக் கணவராக ஏற்றுக்கொண்டார்.

தன்னை வளர்த்து ஆளாக்கிய வளர்ப்புத் தாய் ஆச்சிக்கண்ணு ஒரு தேவதாசிப் பெண்ணாக இருந்தபோதும் நன்றி மறவாமல் “ஆ” என்னும் தலைப்பெழுத்துடன் தனது பெயரை “ஆ” இராமாமிர்தம் என்றே வைத்துக்கொண்டார்.

பிற்காலச் சோழர்களின் காலத்தில் தான் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு “பொட்டுக்கட்டி” விட்டு ஆயங்களில் சதிராட வைத்தனர். அப்பெண்டிர்க்குத் திருமண வாழ்க்கையை மறுக்கும் வழக்கமும் ரச நியதியாக மாறியது. சோழப்பேரரசின் கோயில்கள் அனைத்துமே சனாதன பிராமணர்களின் வேத ஆகம ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களுக்குத் ”தேவதானம்” என்ற பெயரில் வழங்கப்பட்ட ஏராளமான ‘இனாம்’ நிலங்களுக்கு அவர்கள் நில உடைமையாளர்கணர்கள் (குட்டி ஜமீந்தார்கள்).

தேவதாசி முறை நடைமுறையில் இருந்த காலகட்டம் அது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில் கோயில்களுக்கு நேர்ந்து வீட்டுவிடுவார்கள். அவர்களுக்கு சிறு வயதிலேயே நாட்டியம், பாட்டு போன்றவைகள் கற்றுத் தரப்படும். அவர்கள் நாட்டியமும் இசையும் மட்டுமல்லாது இலக்கியம் போன்றவற்றில் சிறந்தவர்களாகவும் பயிற்றுவிக்கப்படுவர். சகலவிதத்திலும் தேர்ந்து தங்களது அழகாலும் அறிவாலும் மற்றவர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் பயிற்றுவிக்கப்படுவார்கள்.

பருவ வயது வந்ததும் அவர்களை ஊர்ப் பெரிய மனிதர்களின் ஆசை நாயகிகளாகவும், ஊராரை மகிழ்விக்கும் நடனப் பெண்மணிகளாகவும் ஆக்கியிருந்தது சமூகம். அவர்கள் ‘பொட்டு கட்டப்பட்டவர்களாகவும்’ ‘தேவரடியார்களாகவும்’ இழிவாகப் பேசப்படும் பிரிவினராகவும் வைக்கப்பட்டிருந்தார்கள். அச்சமூகத்தில் பிறந்திருந்தாலும் தங்களது மகளை அவ்வாறு சிறுமைப்படுத்த விரும்பவில்லை ராமாமிர்தத்தின் பெற்றோர்கள். அதனால் தன் மகளை நாட்டியம் இசை போன்றவற்றை கற்றுக் கொடுக்காமல் வளர்க்க ஆசைப்பட்டனர். மற்றவர்கள் எவ்வளவோ சொல்லியும் தன் முடிவிலிருந்து மாறாமல் இருந்தனர். அதனால் ஊரின் பகைமையை சம்பாத்தித்துக் கொண்டனர். அவர்களை அவர்கள் சமூகமும் விலக்கி வைத்துவிட்டது.

வருமானத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் மிகுந்த பிரச்சனை ஏற்பட்டது. ஓரளவுக்கு மேல் சமாளிக்க இயலாத கிருஷ்ணசாமி வெறுப்பு மேலிட தன் குடும்பத்தை விட்டு விலகி எங்கோ போய்விட்டார். கணவனும் இன்றி உதவியும் இல்லாமல் தனியொரு பெண்ணாக ஐந்து வயது பெண் குழந்தையையும் வைத்துக் கொண்டு வாழ்க்கையுடன் போராடினார் சின்னம்மாள். ஓரளவுக்கு மேல் அவரால் சமூகத்துடன் போராட முடியவில்லை. வேறு வழியின்றி தன் ஐந்து வயது மகளை ஒரு தேவதாசியிடம் பத்து ரூபாய் பணத்துக்கும் ஒரு பழம் புடவைக்கும் விற்றுவிட்டார்.

அந்த தேவதாசியிடம்தான் வளர்ந்தார் ராமாமிர்தம். அவர்களின் குல வழக்கமாக ஆடல் பாடல் இசை என இளவயது முதல் கற்றுத் தேர்ந்தாலும் அவரின் மனதில் தாய் தந்தைக்கு இருந்த எண்ண ஓட்டமே இருந்தது. என்ன நடந்தாலும் தான் இந்த தேவதாசி முறைக்கு அடிமையாகக் கூடாது என்பதில் மிகுந்த மன உறுதியோடு இருந்தார். குழந்தை குமரி ஆனதும் ஆரம்பித்தது வாழ்க்கையில் போராட்டம். தேவதாசி முறைக்கு ஒத்துழைக்க மாட்டேன் என அடம்பிடித்த ராமாமிர்தத்தை பெரும் பணத்திற்காக 80 வயது முதியவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டாள் அவரை வளர்த்த தாசி.

அங்கே ஆரம்பித்தது ராமாமிர்தத்தின் போராட்டம். உயிரே போனாலும் தாசியாகவும் மாட்டேன் பாட்டன் வயதில் இருக்கும் கிழவனையும் மணக்க மாட்டேன் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறினார். தனக்கு இசையும் நாட்டியமும் சொல்லிக் கொடுத்த இளம் வயதினரான சுயம்பு பிள்ளையுடன் தன் வாழ்வை இணைத்துக் கொண்டார். அப்படியும் சமூகம் அவரை நிம்மதியாக வாழவிடவில்லை. அவரின் மேல் கொலைப்பழி சுமத்தியது. ஒரு இளம் பெண்ணை ராமாமிர்தம் கொலை செய்துவிட்டதாகச் சொல்லி ராமாமிர்தத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. ராமாமிர்தம் எதற்கும் கலங்கலில்லை. கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட அதே பெண்ணை, உயிருடன் அரும்பாடுபட்டுக் கண்டு பிடித்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். யாரெல்லாம் அந்தச் சதிக்கு உடந்தை என்பதை அம்பலப்படுத்தி, அவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.

தேவதாசி முறை ஒழிப்பு

நீதிக்கட்சியின் ஆட்சியில் பெரியாரின் ஆலோசனையின் பேரில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் முத்துலட்சுமி தேவதாசி தடுப்புச் சட்டத்தை முன்மொழிந்தார். அவரது சட்டமன்ற உரையில் தேவதாசி முறை ஒழிப்பு குறித்து பேசிய போது “தேவதாசிகள் புனிதமானவர்கள். அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்யப் பிறந்தவர்கள். அவர்கள் அடுத்த பிறப்பில் சொர்க்கத்தில் பிறப்பார்கள்” என்று சத்தியமூர்த்தி பேசினார். அதற்குப் பதிலளித்த முத்துலட்சுமி, “தேவதாசிகள் சொர்க்கத்திற்குச் செல்வதாக இருந்தால் இனிமேல் சத்தியமூர்த்தி அவர்கள் தங்களது வீட்டுப்பெண்களைத் தேவதாசிகள் ஆக்கி அவர்கள் அடுத்த பிறவியில் சொர்க்கத்தில் பிறக்கலாமே” என்று பதிலுரை கூறியிருந்தார்.

தேவதாசி முறை 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும், பின்னாட்களில் அவர்கள் கோயில்களை நிர்வகித்த அரசர், செல்வந்தர், நிலக்கிழார் உள்ளிட்ட மேல் வர்க்கத்தினர் முன்பு நடனமாட வைக்கப்பட்டதுடன் அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் கடும் எதிர்ப்பு நிலவியது. இதன் காரணமாக 1947 ஆம் ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலை போராட்டமும் தேவதாசி முறையும்

அதன்பின் கணவரின் துணையுடன் தேவதாசி முறையை ஒழிக்க போராட்டங்களில் ஈடுபட்டார். 1917-ல் மயிலாடுதுறையில் தனது முதல் போராட்டத்தைத் துவங்கினார். தேவதாசி குலப்பெண்களை அழைத்து பேசி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் பலரையும் பகைத்துக் கொண்டார். ஊர் பெரிய மனிதர்களில் இருந்து பணக்காரர், ரவுடிகள் அரசியல்வாதிகள் வரை பலரும் அவருக்கு ஏதிரியாகினர். பல இன்னல்களும் துன்பங்களும் அம்மையாருக்கு ஏற்பட்டன. அவர் கூந்தலைப் பிடித்து இழுத்து அறுந்து விட்டனர். ஒரு பெண்ணை எந்த விதத்தில் எல்லாம் அவமானம் செய்ய முடியுமோ அத்தனை விதத்திலும் செய்தனர். இருப்பினும் அவர் கலங்கி நின்று விடவில்லை. எதிர்ப்புகள் வளர வளர அவரது நிடமும் வளர்ந்து மேலும் உத்வேகம் பெற்றது.

காந்தியத்தின் மீது மிகவும் பற்று கொண்டவர் அம்மையார். விடுதலை போராட்டங்களின் போது ஆங்கிலேயர் மேடையில் யாரும் பேசக் கூடாது கூட்டம் நடத்தக் கூடாது என்றெல்லாம் கடும் சட்டம் போட்டிருந்தனர். அப்படியா சரி உன் சட்டத்தை நான் மதிக்கிறேன் என்ற பாவணையில் அம்மையார் மேடையில் பேசாமல் தான் சொல்ல வந்த கருத்துக்களை எல்லாம் கரும்பலகையில் எழுதி மக்களைப் படிக்கச் செய்தார். மகாத்மாவை கைது செய்த போது அதை எதிர்த்து மூவர்ணக் கொடியையே ஆடையாக அணிந்து போராடினார்.

1925-ஆம் ஆண்டு காங்கிரஸ்ஸில் இருந்த பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பெண்களின் மீதான அடக்குமுறைக்கும், கைம்மை நோன்பு, பால்ய விவாகம், தேவதாசி முறை, தீண்டாமை ஆகிய பல கொடுமைகளுக்கு எதிராக ராமாமிர்த அம்மையார் போராடினார். காங்கிரஸில் இருந்த சிலர் தேவதாசி முறைக்கு ஆதரவாக இருந்ததால் அக்கட்சியில் இருந்து பெரியார் வெளியேறிய போது தானும் அவருடன் வெளியேறினார்.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்காக சட்டமன்றத்தில் வாதாடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும் நல்ல நட்பு இருந்தது. தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட தீர்மானத்தை காங்கிரசில் இருந்த மூத்த தலைவர்கள் சிலர் கடுமையாக எதிர்த்தனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அந்த சட்டத்தைக் கொண்டு வரத் தீர்மானம் இயற்றியபோது, ‘தேவதாசி முறை தொடர்ந்து நடக்க வேண்டும். இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாசாரம் சீரழிந்து விடும்’ என்று ஆவேசப்பட்டனர். அப்போது ராமாமிர்த அம்மையார் இவ்வாறு கூறும் படி முத்துலட்சுமியிடம் கூறினார். ‘அவர்கள் தேவதாசி முறை தொடர வேண்டும் என விரும்பினால், இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க, இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்’ என்றார். அதைக் கேட்ட தலைவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர். பல போராட்டங்களுக்குப் பிறகு, 1947-ம் வருடம், உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானமாய் விளங்கிய தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.

கலை உலகில் இராமாமிர்தம்

இவரது போராட்ட காலங்களில் இவர் மீது கொலைக் குற்றங்களும் அபவாதங்களும் சுமத்தப்பட்டன. விஷம் கொடுத்து கொல்லும் வரை கூட எதிரிகள் போயினர். ஆனால் தன் உயிரையும் துச்சமாக நினைத்து தாய் நினைத்ததை சாதிக்க போராடினார் அம்மையார். 1936ல் தன்னுடைய சுயசரிதை நூலான ‘தாசிகளின் மோசவலை (அ) மதிபெற்ற மைனர்” என்ற புதினத்தை எழுதி சிவகிரி ஜமீந்தாரிணி வெள்ளத்துரை நாச்சியார் அவர்களின் உதவியுடன் தாமே வெளியிட்டார். மீண்டும் 65 ஆண்டுகள் கழித்துநான் அந்த நாவல் மறுபதிப்புக் கண்டது. அதில் தாசிகளின் பரிதாபமான வாழ்க்கை முறையும் தன் சொந்த அனுபவங்களையும் முன்னிருத்தி எழுதியிருந்தார். இது பற்றி ‘புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்தது இந்நாவல்”, என்று கூறினார்.

மேலும் ‘தாசிகளுக்குப் பத்திசாலித்தனமாக ஆராய்ந்து அறியும் திறன் கிடையாது. பொருள் தேடும் ஆராய்ச்சியும் தாசிகளுக்குக் கிடையாது. பொருள் தேடும் பேராசையால் யார் எப்படிச் சொன்னாலும், அப்படியே நடப்பார்கள். ஆனால், எவ்வளவு சாமர்த்தியமாக அவர்கள் பொருள் தேடினாலும் கடைசி காலத்தில் இளிச்சவாய்த்தனமாய் யாரிடத்திலாவது கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுவார்கள். எந்தத் தாசியாவது கடைசி காலத்தில் சுகமாயிருக்கிறாளா’ என்று தனது நாவலில் ஓரிடத்தில் வேதனையோடு சொல்கிறார் ராமாமிர்தம் அவர்கள்.

சுயமரியாதை இயக்க முன்னோடிகளில் ஒருவர். தேவதாசி சமூகத்திலே பிறந்து, அதனால் பாதிப்படைந்து, அந்தத் தளைகளை அறுத்து எறிந்து, அந்தக் கேடுகெட்டப் பழக்கத்தையே ஒழித்துக் கட்டும் வரை ஓயாமல் உழைத்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பெண்கள் வீட்டைவிட்டு கூட வெளியே வர முடியாதிருந்த காலத்தில் வாழ்ந்திருந்தாலும் தன் தைரியத்தாலும், சமூகத்துக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தாலும் ஆண்களுக்கு இணையாகப் பிரச்சாரம் போராட்டம் என நிகழ்த்தி வெற்றியடைந்து காட்டியவர் மூவலூர் முதாட்டி.

அம்மையாரைப் பற்றி சுருக்கமாக சில குறிப்புகள்:

  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பிறந்த ஆண்டு 1883.
  • 1925-ம் ஆண்டு பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார்.
  • 1930-ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாக்க டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டியுடன் துணை நின்று போராடினார்.
  • 1936-ல் தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்ற சுயசரிதப் புதினம் வெளிவந்தது.
  • 1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். அதற்காக நவம்பர் 1938 சிறையில் அடைக்கப்பட்டார்.
  • சி.என்.அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளராக இருந்தார்.
  • தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் நினைவாக ஏற்படுத்திய சமூகநலத் திட்டம் – திருமண நிதியுதவித் திட்டம்
  • அறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தின் அன்னிபெசன்ட் எனப் புகழப்பட்டவர் – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.
  • பெண் உரிமைக்காக பாடுபட்ட விடிவெள்ளியாக நிகழ்த்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, ஒரு பெண் சீர்திருத்தவாதியாக இருந்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.
  • அம்மையார் இறந்த ஆண்டு – 1962.

முதல் பெண் விடுதலைப் போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

ஆணாதிக்கத்தின் அடிமைகளாய், பிள்ளை பெறும் இயந்திரங்களாய், அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்ணினத்தைத் தட்டி எழுப்பியவர்! ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்று ஆர்ப்பித்தவர்! ஆணும், பெண்ணும் சமம் என்ற விழிப்புணர்வை ஊட்டியவர்!

“தேவதாசிகள் முறை என்னும் அரிய வழக்கை அடியோடு ஒழித்திட நீதிக்கட்சியின் ஆட்சியில் சட்டம் இயற்றப் போராடியவர். அவரே முதல் பெண் போராளியான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்”

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் “தேவதாசிகள்” என்ற சமூக இழிவு தமிழகத்தில் பரவியிருந்தது. இந்தியப் பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும் விடுத்த ஒரு சவாலாக, பெண்களுக்குப் பொட்டுக்கட்டும் “புன்மை” கொடிகட்டிப் பறந்தது. பாவையாரைத் “தேவரடியார்”களாக்கும் கொடுமை கோலோச்சியது. மாதர் தம்மை இழிவுபடுத்தும் இந்த முறையை ஆழிப்பதற்கான போராட்டம் இங்கு 1920 களில் தீவிரமடைந்தது.

சமுதாயத் தளைகளிலிருந்து விடுவிக்கப்படுவதோடு இணைந்தது பெண் விடுதலை என்பதை உணர்ந்தார் அம்மையார். ஆடம்பரத் திருமணங்களை ஆவேசத்தோடு எதிர்த்தார். வரதட்சணைக் கொடுமைகளை ஒழிக்க மேடைதோறும் முழங்கினார். சுயமரியாதைத் திருமணங்களை, சாதி மறுப்பு திருமணம் மற்றும் விதவை மறுமணங்களை ஆதரித்துச் செயல்பட்டார். மத மூட நம்பிக்கைகளே பெண்களின் இழிநிலைக்கும், அடிமைத்தனத்திற்கும் மூல காரணம் என்பதை பகிரங்கமாக மகளிர் மத்தியில் பிரச்சாரம் செய்தார்! சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்துமத சனாதனத்தை எதிர்த்து எதிர்த்து தெருக்களில் முழங்கிய முதல் பெண் விடுதலைப் பேராளியானார். இதனால், சனாதனக் கும்பல் ஆத்திரமடைந்தது. அவர் பேசிக் கொண்டிருந்த மேடையில் ஏறி அவரது கூந்தலை அறுத்த அவலமும் அரங்கேறியது. ஆத்திரக்காரர்கள் தங்கள் வெறியைத் தீர்த்து கொண்டாலும் அம்மையாரின் சுயமரியாதை இயக்கப் பரப்புரை சூறாவளியாக எழுச்சி கொண்டது! ஆம்.

இந்நிலையில் ‘இசைவேளாளர்’ என்னும் பிரிவைச் சேர்ந்த பெண்கள் ‘பொட்டுக்கட்டி’ விடப்பட்னர். பெண், பருவம் அடையும் முன்பே. தேவதாசியாக்குவதற்குரிய சடங்கு கோயில் பிராமணர்களால் நடத்தி வைக்கப்பட்டது. அப்பொழுது கடவுளின் சார்பாக கோயியில் பூசை செய்யும் பிராமணக்குருக்கள் தேவதாசிப் பெண்ணுக்குத் தாலி கட்டுவார். பெரிய ஜமீன்தார்களுக்கும் இந்த “குட்டி” ஜமீன்தார்களும் பொட்டுக்கட்டியோர்க்கு “புரவலர்கள்” ஆனார்கள்.

தேவதாசிக்கும், அவரது புரவலருக்கும் இடையே இருக்கும் பாலியல் உறவு எந்த வகையிலும் அப்பெண்ணுக்கு மனைவி என்ற உரிமையைத்தராது கோயில் மூலம் வழங்கப்பட்ட பொருளாதாரப் பலன்களைப் பெற வேண்டுமானால், தேவதாசிப் பெண்கள் கோயில் அடிமைகளாக இருந்தால் மட்டும் போதாது நில உடைமையாளர்களின் ஆசை நாயகிகளாகப் பரம்பரை பரம்பரையாக வாழவேண்டும்.

பிறப்பின் அடிப்படையில் தேவதாசிகளாக பெண்களை ஆக்குகிற சாதி இழிவிலிருந்து மீள்வதற்கென, இசை வேளாளரின் முதல் மாநாட்டை 1925 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முன்னின்று நடத்தினார். அம்மாநாட்டில், “நம்மை நாமே இழிவு செய்துகொள்ளும் பொட்டு கட்டும் பழக்கத்திலிருந்து நமது சாதி வெளியே வர வேண்டும்” என்பதை வலியுறுத்தினார். அந்த மாநாட்டில் தமிழ்த் தென்றல் திரு.வி.க, தந்தை பெரியார், எஸ். ராமநாதன் ஆகியோர் உரையாற்றினார்கள். தேவதாசிகளுக்காக ‘யுவதி சரணாலயம்’ என்ற அமைப்பை நடத்தி வந்த யமுனா பூரண திலகம்மா என்ற தெலுங்குப் பெண், மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

இந்த மாநாட்டுக்குப் பின், மூவலூர் ராமாமர்தம் அம்மையார் பல ஊர்களில் பொட்டறுப்பு சங்கங்களைத் தொடங்கினார். மேடையில் தேவதாசிப் பெண்கள் வந்து, தாங்கள் கோயிலுக்குக் கட்டிய பொட்டு எனப்படும் தாலியை அறுத்து எறிந்த நிகழ்ச்சிகளை துணிச்சலுடன் நடத்தினார். கொலை மிரட்டல்கள், கூட்ட மேடை ஏரிப்புகள், கூட்டத்தில் கலவரங்கள் போன்ற எதிர்ப்புகளுக்கெல்லாம் அஞ்சாமல் செயற்பட்டார்.

பெண்களின் விடிவெள்ளி

மூவலூர் இராமாமிர்தம் தேவதாசிப் பெண்களின் அடிமை நிலையை ஒழிக்கப்புறப்பட்ட விடிவெள்ளியாக விளங்கினார்.

ஊர்தோறும், தெருக்கள் தோறும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து பெண்களை விழிப்படையைச் செய்தார்.

இதனால் சமூக ரீதியான ஒதுக்குதல்களையும். அதிகமான மிரட்டல்களையும் எதிர்கொண்டார். இம்முறையை ஒழிப்பதற்குத் தேவதாசி சமூகத்திலிருந்தே கூடப் பலமான எதிர்ப்புக் கிளம்பியது. பெரிய நிலப்பரப்புக்கள், ஜமீன்தார்கள், சாஸ்திரிகள் எனப் பலரும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கொதிப்படைந்தனர். இச்சமூக விரோதிகள் அனைவரையும் எதிர்கொண்டு, தனது போராட்டத்தை மேலும் ஆவேசத்துடன் தொடர்ந்தார் மூவலூர் அம்மையார். அவர் தேவதாசிகள் வீட்டுக்கே சென்றார். அங்கு, பொட்டுக்கட்டி விடப்பட்ட இளம்பெண்களை இரகசியமாகச் சந்தித்தார். இந்தக் கொடிய வழக்கத்திலிருந்து விலகும்படி எடுத்தரைத்தார். அவ்வாறு விலகி வெளியேறிய பல பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். ‘தேவதாசி’ முறையிலிருந்து வெளியேறிய பெண்களைக் கொண்டு, ‘நாகபாசத்தர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினார்.

தேவதாசி முறைக்கு எதிராக பெரியாரின் பிரச்சாரம்

தமிழக காங்கிரஸ் கட்சியில் தந்தை பெரியார், திருவிக போன்ற தலைவர்கள் தேவதாசி முறைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தனர். இதனால் ஈர்க்கப்பட்டு, தமது இலட்சியத்துக்கு ஆதரவு திரட்ட மூவலூர் அம்மையார் காங்கிரஸ் பேரியக்கத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டார். தேவதாசி முறையை ஒழிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பாடுபட்டதை அறிந்து காந்தியடிகள் மூவலூர் அம்மையாருக்கு பாராட்டுக்கடிதம் எழுதினார்.

அந்தக்காலத்தில் பெண் இதுபோன்ற சமூக மறுமலர்ச்சிக்கானப் பிரச்சாரத்தில் நேரடியாக ஈடுபடுவது மிகவும் அபூர்வமாகும். அதிலும், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்ணே தமது சமூகத்தின் இழி நிலையை எதிர்த்துப் போராட முன்வந்தது காந்தியடிகளைக் கவர்ந்தது.

“தேவதாசி”களை மணக்க, ஆடவர்க்கு அஞ்சாநெஞ்சம் வேண்டும். இப்பெண்களை ஏற்று மணப்பது சமூகச் சீர்திருத்தக்காரர்களின் கடமையாகும் என்பதை அம்மையார் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக விளங்கிய பெரியாரின் வேண்டுகோளை ஏற்று, கதராடையைச் சுமந்து தெருத்தெருவாக விற்பனை செய்தார். தேவதாசிப் பெண்களையும் கதராடை அணியச்செய்தார்.

காக்கிநாடாவில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் கொடி பிடித்துச்செல்லக்கூடாது எனத் தடுத்தனர் பிரிட்டிஷார். “கொடி பிடித்தால் தானே தடை செய்வாய், நான் கொடியையே புடவையாக உடுத்திக்கொள்கிறேன் பார்” எனக்கொடியைப் புடவையாக அணிந்து கொண்டார்.

மற்றொரு முறை காங்கிரஸ் மேடையில் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது. அப்போதும், அம்மையார் தன் பாணியில் மேடையில் ஒரு கரும்பலகையை வைத்து, அதில் தான் பேச வேண்டியவைகளை எழுதிக்காட்டியே பிரச்சாரம் செய்து காவல் துறையினருக்குத் தலைவலியை உண்டாக்கினார்.

பண்ணை அடிமை முறை ஒழிப்பு

மூவலூர் அம்மையார் தான் சுயமரியதை இயக்கத்தின் முதல் பெண் பேச்சாளராகத் தமிழகம் முழுவதும் வலம் வந்தார். காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார். அந்தக் காலத்தில் தலித் ஆண்கள் இடுப்பில் வேட்டி கட்ட அனுமதியில்லை. கோவணம் மட்டுமே கட்ட வேண்டும் என்பது நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை. தலித் ஆண்களுக்கு ஆடை கொடுத்து, இடுப்பு வேட்டியோடு நடமாடச் செய்து பண்ணையடிமை முறைக்கு முதல் சாவு மணி அடித்தவர் அம்மையார்.

காங்கிரஸ் கட்சியில் சனாதனவாதிகள் இருந்து கொண்டு உண்மையாகப் போராடியவர்களை இருட்டடிப்புச் செய்தனர்.

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கோரி தந்தை பெரியார் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் முறியடிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து தந்தை பெரியார் வெளியேறினார். அவருடன் சேர்ந்து மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் வெளியேறினார்.

தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை மக்களிடம் பரப்புரை செய்த முதல் பெண் மூவலூர் அம்மையார்தான்.

தமிழகத்தில் சுயமரியதைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற அரும்பாடுபட்டார்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் தேவதாசிமுறை ஒழிப்பு சட்டமும்

தேவதாசிமுறை ஒழிப்புச்சட்டத்தை நிறைவேற்றிட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், காங்கிரஸ் சனாதனவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தீரர் சத்தியமூர்த்தி சட்ட மன்றத்தில் தேவதாசி முறையை ஆதரித்தார். “இந்த முறை தொடர்ந்து நீடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியப் பண்பாடு சீரழிந்துவிடும்” என்று பேசினார். “இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க இனிமேல், உங்கள் வீட்டுப் பெண்களைச் சிறிது காலம் தேவதாசிகளாக இருக்கச் செய்யுங்கள்” என்று அவருக்குப் பதில் சொல்லும்படி டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டிக்கு அம்மையார் ஆலோசனை அளித்தார். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் அவ்வாறு சட்டமன்றத்தில் பேசிய பிறகே காங்கிரஸ் சனாதனவாதிகளின் வாய் அடைக்கப்பட்டது. நீதிக்கட்சியினரும், சுயமரியாதை இயக்கத்தினரும் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் அக்டேபர் 9ல் 1947ம் ஆண்டு நிறைவேற முக்கியய் பங்காற்றினர்.

தேவதாசி முறை குறித்து ‘தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்ற நாவலை 1936 ஆம் ஆண்டும் அம்மையார் எழுதினார். அந்த நாவல் தேவதாசிகள் விழிப்புணர்விற்காக எழுதப்பட்டது. 1938 இல் தமிழகத்தில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார். திருச்சி உறையூர் முதல் சென்னை வரை 42 நாட்கள் நடைபெற்ற பேரணியில் அம்மையார் நடந்தே சென்று பிரச்சாரம் செய்தார். சென்னையில் 13.12.1938 ஆம் நாள் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்பு மறியல் போரில் கலந்துகொண்டு கைதானார். ஆறு மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1949 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. அண்ணாவுடன் தி.க.விலிருந்து வெளியேறித் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக 70 வயதிலும் சுறுசுறுப்பாய் செயல்பட்டார்.

தேவதாசி முறை, தீண்டாமை, குழந்தைத் திருமணம் போன்ற சமூக இழிவுகளை எதிர்த்துப் போராடிய மூவலூர் அம்மையார் 27.06.1962 ல் காலமானார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் 50 ஆண்டு பொதுவாழ்க்கைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் 1956 ஆம் ஆண்டு தி.மு.க சார்பில் அறிஞர் அண்ணாவால் விருது வழங்கப்பட்டது. மூவலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது பெயரில் தமிழக அரசால் ‘ஏழைப்பெண்கள் திருமண உதவித் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.

முதல் பெண் விடுதலைப் போராளியான, ‘சமூகச்சீர்திருத்தச்சுடர்’ ராமாமிர்தம் அம்மையார் மூவலூரில் வாழ்ந்த வீட்டை அரசு ஏற்று, அங்கு அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். இது தமிழக மக்களின் பெருவிருப்பமாகும்!

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறை, தீண்டாமை, குழந்தை திருமணம், போன்ற அடிமைத்தனத்திலிருந்து பெண்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க தன்னை அற்பணித்த முதல் பெண் விடுதலை போராளி ஆவார்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் நினைவுதினத்தை கருதி ஏழை பெண்களுக்கு திருமண உதவி நிதி திட்டம் அரசால் வகுக்கப்பட்டு வருகிறது. தேவதாசி முறையை ஒழித்து காட்டி இன்றைய சமுதாயத்தில் பெண்கள் வாழ வழி செய்தவர் ஆவார்.

முடிவுரை

சுதந்திரப் போராட்டம், பெண்கள் விடுதலைக்காவும் சக விடுதலைக்காகவும் போராடியவர், ராமாமிர்தம் அம்மையார் ஆவார். பெண்களின் நலனுக்காக போராடியவர் ஆவார். இதனால் பல சித்தரவதைக்கும் ஆளானார். ஆனால் உயிரை ஒரு பொருட்டாக கருதாமல் அனைத்து சதிவலைகளையும் முறியடித்தால்தான் இன்றைய சமுகத்தில் அனைத்து பெண்களும் சமமாக வாழ வழி செய்தவர் அம்மையார் ஆவார். இன்றயை காலத்தில் பெண்கள் மதிப்பும் மரியாதையுமாக வாழ வழி செய்தவர் ஆவர். பெண்களை கண்ணியமாக பார்க்க வேண்டும் என்று முன்மொழிந்தவர். இவரது சேவைகளையும், தியாகங்களையும் கவுரவிக்கும் விதமாகதான் தமிழக முதல்வர் கருணாநிதி தான் அறிவித்த ஏழை பெண்கள் திருமண உதவித்திட்டத்துக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டம் என சூட்டியுள்ளார். இத்திட்டம் இன்றைய ஏழை பெண்களுக்கு மிகவும் உதவியாகவும் அவர்கள் வாழ்க்கையின் ஒளி விளக்காக திகழ்கிறது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16 – 31 டிசம்பர், 1985 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 03 | 1985 டிசம்பர் 16 – 31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வீரம் செறிந்த போராட்டம் வெல்லட்டும்!
  • பன்னாட்டு முதலாளிகளின் புதுப் பங்காளிகள்
  • பீடி சுல்தான்களின் கோரப் பிடியில்
  • பூச்சிக் கொல்லிகளா? ஆட்கொல்லிகளா?
  • கடந்தகால வரலாறு அல்ல; நிகழ்கால உண்மை இது
  • கிழக்கு ஐரோப்பா ரஷியாவின் வேட்டைக்காடு
  • விரிந்த பார்வை விடுதலை தரும்
  • ராஜீவ் கும்பலின் பாசிசக் கல்விக்கொள்கை
  • உரிமைப்போரில் மீனவர் சிந்திய ரத்தம்
  • கைபர் கணவாயில் காத்திருக்கும் அபாயம்
  • இதுதான் இன்றைய இந்தியா!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01 – 15 டிசம்பர், 1985 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 02 | 1985 டிசம்பர் 01 – 15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆசிரியர் போராட்டமும் பாசிச எம்.ஜிஆரின் வெறியாட்டமும்
  • பாட்டாளி வர்க்கப் போராட்ட அரசியல் ஆயுதம் பிறந்தது!
  • பீகார்: குமுறும் எரிமலை
  • போலிக் கம்யூனிஸ்ட்களின் ஆட்சியிலே…..
  • இந்திரா: மறைக்கப்படும் கோரமுகம்
  • சமாதானம் பேசும் சாவுவியாபாரிகள்
  • நட்சத்திரப் போர்
  • திடீர் வெள்ளம் அல்ல
  • கூலித்தொழிலாளர்கள் வீதியிலே…

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் ஜனவரி 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



இரண்டாண்டுகளாக நாறிக்கொண்டிருக்கிறது.. தி.மு.க-வின் ‘சமூகநீதி’!

டந்த டிசம்பர் 26, 2025 உடன் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை ஒருவர் கூட போலீசுதுறையால் கைது செய்யப்படவில்லை. விசாரணை அறிக்கை கூடத் தாக்கல் செய்யப்படவில்லை.

ஆனால், போலீசின் கெடுபிடிகளால் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு, விரக்தியின் விளிம்விற்கே சென்றிருக்கிறார்கள் வேங்கைவயல் கிராம மக்கள்.

ஜூனியர் விகடனுக்கு வேங்கைவயல் கிராம மக்கள் அளித்த பேட்டியில், “எங்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை. எங்கள் வாழ்க்கையும் நாசமாகிவிட்டது. எங்கள் ஊரில் பெண் எடுக்கவும் மாப்பிள்ளை பார்க்கவும் கூட யாரும் வருவதில்லை. போலீஸ் கெடுபிடிகளால் உறவினர்கள் கூட எங்கள் வீட்டுப் பக்கம் வருவதில்லை. எங்களுக்கு நீதிகூட வேண்டாம்… பரவாயில்லை போகட்டும். என்றைக்கு எங்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது? இனி எங்களை நிம்மதியாக வாழவிட்டால் போதும். தினமும் அவமானத்தால் கூனிக்குறுகி, குற்றவாளிகள்போல நடத்தப்படும் இந்த நரக வாழ்க்கை இனியும் எங்களுக்கு வேண்டாம்…” என வேதனையைக் கொட்டுகிறார்கள்.

இச்சம்பவம் நடந்தபோதே அரசும் போலீசும் ஆதிக்கச்சாதி வெறியர்களுக்கு ஆதரவாக மெத்தனமாகத்தான் செயல்பட்டன. மக்கள் போராட்டங்கள், இயக்கங்கள், கட்சிகளின் நிர்ப்பந்தங்களில் இருந்துதான் டி.எஸ்.பி. ரமேஷ் கண்ணா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணையும் தொடங்கியது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னையிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போதும் போலீசின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை.

மீண்டும் போலீசின் மெத்தனப்போக்கின் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படவே, ஜனவரி 2023-இல் வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. பால்பாண்டி தலைமையில் 35 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. டி.என்.ஏ. மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் இன்றுவரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லை.

இதனையடுத்து, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன் பேரில் மார்ச் 29, 2023-ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

2023 செப்டம்பரில் வெளியிடப்பட்ட விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையானது போலீசின் மந்தகதியிலான விசாரணையை அம்பலப்படுத்தியது. இதைக் கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜூலை 2024-க்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். ஆயினும், விசாரணை அதிகாரி மாற்றப்பட்டாரே தவிர, விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டும் 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டும் இதுவரை குற்றவாளி கண்டறியப்படவில்லை என்பதுதான் ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து யார்ட்’ என பீற்றிக்கொள்ளப்படும் தமிழ்நாடு போலீசின் யோக்கியதை.


படிக்க: வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்க சதி செய்யும் சாதிய அரசு!


இது ஒருபுறமிருக்க, வேங்கைவயல் மக்களின் நிலைமையோ வேதனைமிக்கதாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்கி, கொடுமைப்படுத்தி, “எங்களுக்கு நீதியே வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சும் அளவிற்கு இந்த அரசு கட்டமைப்பு தனது கோரமுகத்தை அம்மக்களிடம் காட்டியிருக்கிறது.

அப்பகுதியைச் சார்ந்த முருகன் “இந்த வழக்கில் போலீசு குற்றவாளியைக் கண்டுபிடித்தால் பிடிக்கட்டும். இல்லையென்றால் விட்டுவிடட்டும். எங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும். குற்றவாளிகளை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட எங்களையே தொடர்ந்து குற்றவாளிகளாக்கும் முயற்சிகளை செய்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் எங்களையே இம்சிக்கிறார்கள். இது எவ்வளவு கொடுமை… நாங்களே மலம் கழித்து, அதை நாங்களே எங்கள் குடிநீரில் அள்ளிப்போட்டு, அதையே நாங்கள் குடிப்போமா… இதை யோசிக்க மாட்டார்களா?

எங்கள் ஊருக்கு வரும் வெளியூர் மக்களையும் தடுத்து ஊரைத் தனிமைப்படுத்துகிறார்கள். சம்பவம் நடந்து இரண்டு வருடங்களாகியும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யவில்லை. முடிந்தால் நீதி வாங்கிக் கொடுங்கள்.. இல்லையா, எங்களைக் கொஞ்சம் நிம்மதியாக வாழவிடுங்கள்” என்று ஆற்றாமையோடு கூறுகிறார்.

பாதிக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவரும், மணமேல்குடியில் போலீசாக பணியாற்றி வருபவருமான முரளிராஜா என்பவரை ‘வீடு தருகிறோம், பணம் தருகிறோம், குற்றவாளியாக ஒத்துக்கோ’ என்று சி.பி.சி.ஐ.டி. போலீசு மிரட்டியிருக்கிறது. போலீசின் விசாரணைகளால் நிறைய அவமானங்களைச் சந்தித்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட தலித் மக்கள்.

இந்த அரசும் அதிகாரிகளும் எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள்தான், அரசு ஒருபோதும் மக்களுக்கு ஆதரவாக நிற்காது என்பதை வேங்கைவயல் சம்பவம் பொட்டில் அடித்தாற்போல் காட்டுகிறது.

இங்கு பிரச்சினை, இரண்டு ஆண்டுகளாகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல. தி.மு.க. அரசும் போலீசும் குற்றவாளிகளான ஆதிக்கச் சாதிவெறியர்களை காப்பாற்றி பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைக்கின்றன என்பதேயாகும். ஆதிக்கச் சாதிவெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டே சமூகநீதி அரசு, திராவிட மாடல் அரசு என்று தி.மு.க. சவடால் அடிப்பதெல்லாம் எத்தனை போலித்தனமானது என்பதை வேங்கைவயல் சம்பவம் முகத்தில் அறைந்து உணர்த்துகிறது.

ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பே தலித் மக்களுக்கு எதிரானதாகத்தான் உள்ளது, செயல்படுகிறது. போர்க்குணமிக்க போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே தலித் மக்களின் சுயமரியாதையை மீட்டெடுக்க முடியும். அதனூடாக, தலித் மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை அதிகாரத்தையும் வழங்கும் உண்மையான ஜனநாயகக் குடியரசுக்காக போராட வேண்டும். ஜனநாயக உணர்வுள்ள அனைவரும் இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டியுள்ளது.

செய்தி உதவி: ஜூனியர் விகடன்


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விடுதலையின் பாதை சிவப்பு!

டந்த சில நாட்களாக தோழர்கள் சிலர் என்னிடம் “விடுதலை – பாகம் 2 பார்த்துவிட்டீர்களா? படம் நன்றாக உள்ளது. உங்கள் கருத்துகளை எழுதுங்கள்” என்று கூறினார்கள்.

படம் என்றால் தொடர்ந்து மூன்று மணி நேரம் பார்க்க வேண்டும். அதுவும் அரசியல் படம் என்றால் அதன் வசனங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். நிறுத்திவிட்டு மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும். இது ஒரு பெரிய வேலை. மேலும் பல தோழர்கள் இப்படத்தை மிகவும் பாராட்டி எழுதி வருவதால், நாம் இப்படத்தைப் பற்றி விமர்சனம் எழுதி அது என்ன விளைவை உண்டாக்கும், பொறுமையாக பிறகுப் பார்க்கலாம் என்றே நினைத்து வந்தேன்.

ஏற்கெனவே வெற்றிமாறனின் அசுரன் படம் தொடர்பாக நான் எழுதிய விமர்சனம் மிகக் கடுமையாக இருந்ததாக பலரும் கூறினார்கள். அதிலே இப்போதுவரை எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

இதற்கிடையே, இந்துமதவெறிக் கும்பல் இப்படம் குறித்து ஊடக சந்திப்பு நடத்தி இருந்தது. முகநூலிலும் இப்படம் குறித்து பலரும் எழுதி வந்தனர். எப்படியாகினும் நேற்று இரவு விடுதலை பாகம் 2 பார்க்க நேர்ந்தது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள், விவசாயிகள் போராட்டங்கள், அவை அழித்தொழிப்புப் போராட்டங்களுக்கு இட்டுச்சென்றதன் காலம், அழித்தொழிப்புப் போராட்டங்களின் முடிவு, அரசியல் போராட்டங்களும் அமைப்பாக்குவதன் தேவைகளும் முன்வைக்கப்பட்ட அக்காலகட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை மலர்களாக்கி மாலையாகக் கோர்த்து சூட்டியிருக்கும் படம்தான் விடுதலை – பாகம் 2.

இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட குழுவினர் சிறந்த படைப்பையே படைத்திருக்கின்றனர்.

இது ஒரு அரசியல் பிரச்சாரப் படம் என்போருக்கு எனது பதில், ஆம் இது ஒரு அரசியல் பிரச்சாரப் படம்தான். இப்படத்திற்கு இளைஞர்களால் கிடைத்திருக்கும் வரவேற்பு என்பது, சிவப்பு அரசியலின் அவசியத்தையும் தேவையையும் உணர முடிவதற்கான ஒரு வாய்ப்பு. இப்படம் மூலமாக கம்யூனிசம் என்றால் என்ன என்பதை கற்றுக்கொள்ளலாம் என்பதல்ல, கம்யூனிசம் என்றால் இட்லி கதையை சொல்லிக்கொண்டிருக்கும் நபர்களுக்கு மத்தியில் கம்யூனிசத்தின் மீது – சிவப்பின் மீது நம்பிக்கையை ஒரு துளியேனும் இளைஞர்கள் மத்தியில் இப்படம் உருவாக்கும் என்பதால் வரவேற்க வேண்டிய அவசியம் உள்ளது.

1960-களில் தமிழ்நாட்டில் எழுந்த நக்சல்பாரிகளின் எழுச்சி, 1980-களில் மீண்டும் உருவான எழுச்சி, அதற்குப் பிந்தைய தமிழ்த்தேச விடுதலைப் போராட்டங்கள், அதன் தேவைகள் – அவசியங்கள் அப்போது நடைபெற்ற பல உண்மை நிகழ்வுகளை நம் கண்முன்னே கொண்டுவந்து உயிர்ப்புடன் ஒரு திரைப்படத்தினை படைத்து இருக்கிறார்.

“இப்போதைய பாசிசச் சூழலுக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?” என்ற கேள்வியை இப்படத்தைப் பார்த்து இரசித்து வியந்தோதும் இரசிகனிடம் நாம் கண்டிப்பாக கேட்கலாம்.

புலவர் கலிய பெருமாளின் அரசியல் என்ன? இறுதிக்கட்டத்தில் அவரின் செயல்பாடுகள் என்ன? தோழர் தமிழரசனின் வாழ்வு, இறுதிக்கட்டத்தில் அவரின் அரசியலும் வழிமுறையும் தொடர்பான பிரச்சினைகள் குறித்தெல்லாம் இப்படத்தினை ஒட்டிப் பேசத் தேவையில்லை. ஏனென்றால் அது பேசுபொருளும் அல்ல.

மக்களுக்காக வாழ்ந்தவர்களைப் பற்றிய நேர்மறையான அம்சங்களை நாம் கற்றுக்கொள்வதற்கு எப்போதும் முயல வேண்டும். அதே நேரத்தில் தவறுகள் மீதும் நம்முடைய விமர்சனங்கள் கறாராக இருத்தல் வேண்டும்.

இப்படத்தைப் பொறுத்தவரை நாயகத்தனமான அணுகுமுறை இன்றி நிகழ்காலத்தில் உள்ள பிரச்சினைகளையும் குழைத்து ஒவ்வொரு பாத்திரங்களும் அதற்கேற்றபடி செதுக்கப்பட்டிருக்கின்றன. அதில் இயக்குனர் உள்ளிட்ட பலரின் உழைப்பு மின்னுகின்றது.

குமரேசன் என்ற வள்ளலார் பக்தனான போலீசு கான்ஸ்டபிள், தன்னுடைய அம்மாவுக்கு கடிதம் எழுதும்போது தொடங்கும் படம் அக்கடிதம் முடிவடையும் போது முடிவுறுகிறது. புதிய ஜனநாயகம் இதழ் படிக்கும் வரை நான் கூட நக்சல்பாரிகள் என்றாலே பயங்கரவாதிகள் என்று ஆளும் வர்க்கம் உருவாக்கிய கருத்தை ஏற்று, அக்கருத்தை பரப்பிவந்தேன். இந்நிகழ்வுகள் எல்லாம் சூரியின் தடுமாற்றங்களைக் காணும் போது வந்து போயின.

மக்களுக்காகப் போராடுவோரை போலீசு எப்படி நடத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் படம் தொடங்குகிறது. பெருமாள் வாத்தியாரை அடித்து சித்திரவதைச்செய்து அம்மணமாக்கி அதற்குப்பிறகு கேள்விகள் கேட்கும் டி.எஸ்.பி-யிடம் எவ்வித குற்ற உணர்ச்சியும் இருப்பதில்லை. “அய்யோ நம்மை அம்மணமாக்கிவிட்டார்களே” என்று கூனிக்குறுகாமல் எத்தனை அடி வாங்கினாலும் உறுதியாக தன்னுடைய அரசியலை எடுத்தியம்பும் பெருமாள் வாத்தியார். டி.எஸ்.பி-யும் பெருமாள் வாத்தியாரும் அவரவர் வர்க்கத்தின் பிரதிநிதிகள்.

ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவச்சென்ற எங்களை போலீசு பெரும்படையுடன் கைது செய்ததும் தோழர்களையெல்லாம் ஜட்டியுடன் மண்டைக்காடு போலீசு நிலைய லாக்கப்பில் வைத்து அடித்ததும் என்னை நிர்வாணமாக பல மணி நேரம் வைத்திருந்து போலீசு விசாரணை செய்ததும் நினைவிலாடின.

பெருமாள் வாத்தியார் என்ற ஆசிரியர் அனைவருக்கும் கல்வியினால் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று எண்ணும் ஒருவர். அவ்வூரைச் சேர்ந்த கருப்பனிடம் “நீயும் வந்து படி” என்று கூற அவரோ “எல்லோரையும் ஒன்றாக படிக்க வைப்பீர்களா?” என்று சாதித் தீண்டாமையைக் கேள்வி கேட்டு கடந்து செல்கிறார். பண்ணையாரால் பாலியல் வன்கொடுமைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனது மனைவியை மீட்கச் செல்லும் கருப்பன், பண்ணையாரை கொலை செய்ய, கருப்பனை பாதுகாத்து பத்திரமாக போலீசில் சரணடைய வைக்க முயல்கிறார் வாத்தியார். போலீசும் பண்ணையாரும் இணைந்து கருப்பனையும் அவரது மனைவியையும் கொல்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இருந்த வாத்தியாரை குற்றுயிராக விட்டுவிடுகிறார்கள்.

இந்த அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தகர்ந்த பின்னர், ஒருவர் பற்றிச் செல்ல செங்கொடியைத் தவிர வேறேது உண்டு!

வாத்தியாரைக் காப்பாற்றும் கம்யூனிசத் தலைவர் ஒருவர் அவரை அரசியல் படுத்துகிறார், தன் வாழ்வின் அனுபவங்கள் ஊடாக கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகிறார் வாத்தியார். சங்கம் அமைப்பதற்காக சர்க்கரை ஆலைக்கு வேலைக்குச் செல்கிறார், அமைப்பாளராகிறார். அந்த ஆலை முதலாளியின் மகள் மகாலட்சுமியும் கம்யூனிஸ்டு என்பதால் அவர் தன் குடும்பத்திற்கெதிராகவும் உழைக்கும் வர்க்கத்துடனும் நிற்கிறார். உழைக்கும் மக்கள் மீதான தோழமை இருவரையும் இல்லற வாழ்வுக்குள் நுழைக்கிறது. கம்யூனிச இயக்க வரலாற்றில் பெண்களுடைய மகத்தான தியாகத்தின் – உறுதியின் சில துளிகளை மகாலட்சுமியிடம் காணலாம்.

சாரு மஜூம்தாரின் கருத்துகள் வாத்தியாரிடம் ஆதிக்கம் செலுத்தும் வேளையில், அவரின் அரசியல் ஆசான் கே.கே. சர்க்கரை ஆலை முதலாளியால் கொல்லப்பட, அதற்கெதிராக அழித்தொழிப்பை தொடங்குகிறார்கள். தேசிய இன விடுதலையை முன்வைத்து மக்களை அணிதிரட்ட வேண்டும் என்ற கருத்துக்கும் வருகிறார்கள். அழித்தொழிப்புப் பாதையில் உள்ள தவறுகளை, மருதையாற்றுப் பாலம் வெடிகுண்டு விபத்து உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் பெருமாள் வாத்தியாரும் மற்றவர்களும் அனுபவப்பூர்வமாக உணர்கிறார்கள். தனிமனித சாகச செயல்பாடுகள் மக்களை அணிதிரட்டுவதற்கு தடையாக உள்ளதையும் அதை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக்கொள்வதையும் உணர்கிறார்கள். இச்சூழலில்தான் இவரை அழிக்க அரசின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெருமாள் வாத்தியார் உள்ளிட்டோர் கொல்லப்படுகின்றனர்.

அரசு யாருக்காக இருக்கிறது? மக்களால் தெரிவு செய்யப்படும் அமைச்சர்களின் மதிப்பு என்ன? அரசு என்ற உறுப்பில் உள்ள அதிகாரிகள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள் என்பவையெல்லாம் வழிநெடுக தூவப்பட்டிருக்கின்றன, திகட்டாமல்.

“அமைச்சராக வரும் இளவரசு, ஏன்யா குழந்தைய சுட்டீங்க? பொதுமக்கள சித்திரவதை செஞ்சீங்க? நான் தலைவர் கிட்ட போறேன், நாளைக்கு தேர்தல்ன்னா நான்தான் மக்கள்கிட்ட போகணும்” என்று சண்டையிடுவதும் அரசு ஆளும் வர்க்கத்தின் கருவி, அதிகாரிகள்தான் அதன் பொறிகள் என்பதை அறிந்து பொட்டிப்பாம்பாய் அடங்குவதும் சிறப்பு.

பெருமாள் வாத்தியார் கொல்லப்பட்டப் பின்னரும், அவர் காணாமல் போய்விட்டார் என்று அப்பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதும் மக்களை சித்திரவதை செய்த தகவல்களை பத்திரிகையில் வரவிடாமல் தடுப்பது குறித்து ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். அதிகாரிகள் விவாதிப்பதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவிரல் புரட்சி, ”சிங்கம்” பூச்சாண்டிகளுக்கு மத்தியில் தமிழ் சினிமாவில் இப்போதைய காலக்கட்டத்திற்கு மிகவும் தேவையானதாக இத்திரைப்படம் உள்ளது. நான் படித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை; இந்த அரசே மக்களுக்கு எதிரான அமைப்புதான் என்பதை இக்காட்சிகள் மூலம் யாரொருவருக்கும் நாம் எளிதாக புரியவைக்க முடியும்.

பெருமாள் வாத்தியாரைப் பிடிக்கப்போய் தவறுதலாகக் குண்டு கான்ஸ்டபிள் மீது பாய, கான்ஸ்டபிளை கொன்று தன் தவறை மறைக்கும் சேத்தனின் வாயாலேயே பெருமாள் வாத்தியார் இவ்வுண்மையை வெளிக்கொணர்கிறார். இவ்வுண்மை தெரிந்த மேலும் மூவரை சேத்தன் சுட்டுக்கொன்று விடுதலைப்படை கணக்கில் சேர்ப்பதெல்லாம் போலீசும் இராணுவமும் இப்போதுவரை காஷ்மீர் முதல் ஆந்திரா வரை செய்து கொண்டிருப்பவைதான்.

இப்பிரச்சினையை ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரைக் கொண்டு கையாள வேண்டும் என்று ஐ.ஏ.எஸ்–ஐ.பி.எஸ். அதிகாரிகள் நரித்தனமாக யோசித்து அமுதனை தெரிவு செய்கிறார்கள். நிராயுதபாணியான பெருமாள் வாத்தியார் உள்ளிட்டோரைக் கொல்லும் அமுதன், சக போலீசுக்காரர்களைக் கொன்ற இன்ஸ்பெக்டர் சேத்தனை மரியாதையாக அழைத்துச்செல்கிறார். அதுதான் போலீசு. அது ஒரு காலத்திலும் மக்களுக்காக, உண்மைக்காக நின்றதும் இல்லை, இனி நிற்கப்போவதும் இல்லை.

அரசு என்பது பாதிக்கப்பட்ட – சுரண்டப்பட்டோரிடமிருந்து சுரண்டுவோரை காப்பாற்றுவதற்குத்தானே. போலீசு அதிகாரியாகி மக்களுக்கு சேவை செய்வேன் என்பதெல்லாம் சினிமாவுக்கான வீரவசனங்கள்தான். உண்மையில் அப்படிசொன்ன பலரும் அமுதன்களாகவும் சேத்தன்களாகவுமே இருக்கின்றனர்.

அரசின் உறுப்பாக – போலீசாக இருப்பதே இம்மக்களுக்கு எதிரியாக இருப்பதுதான் என்பதை உணரும் கதாப்பாத்திரம்தான், குமரேசனாக வரும் சூரி.

வள்ளலார் பக்தரான குமரேசன் தன் காதலியைக் காப்பாற்ற பெருமாள் வாத்தியாரைக் காட்டிக்கொடுக்கிறார். கைது செய்யப்பட்ட பெருமாள் வாத்தியாரை கொண்டு செல்கையில், அவரின் கொள்கைகளைக் கேட்டுக்கொண்டே அவரை அறிவதன் ஊடாக, பொதுவுடமைக் கொள்கைகளையும் அதன் போராட்டங்களையும் புரிந்துகொள்கிறார். இதுநாள்வரை செய்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு எதிரானவை என்ற குற்ற உணர்ச்சி அவரை பிய்த்துத் தின்கிறது.

போலீசு என்பதே உழைக்கும் மக்களுக்கு எதிரான அமைப்பு என்பதை தனது வாழ்க்கையினூடாக விளக்கும் பெருமாள் வாத்தியாரின் சொற்கள் குமரேசனையும் இன்னும் சில போலீசுக்காரர்களையும் நிலைகுலைய வைக்கின்றன. ஒரு எஸ்.ஐ. பெருமாள் வாத்தியாரை சுட மறுத்து ஒழுங்கு நடவடிக்கைக்கு தயாராகிறார். போலீசு ஜீப் ஓட்டும் குமரேசனோ இனியும் இந்த போலீசு வேலையில் இருக்க முடியாதென, கொலைகாரப் போலீசுகளை ஜீப்புடன் மலை முகட்டில் விட்டுச் செல்கிறார்.

குமரேசனின் கடிதம் இவ்வாறு நிறைவுறுகின்றது, “அம்மா இனிமேல் நான் கடிதம் போடவில்லையென்றால் நான் இறந்துவிட்டேன் என நினைத்துக்கொள்”.

அரசு என்ற,போலீசு என்ற மக்கள் விரோத நிறுவனம் உண்மைக்காக – மக்களுக்காக இருப்போரை எதுவும் செய்யும் என்பது குமரேசன் தன் தாய்க்கு சொல்வது மட்டுமல்ல!

***

படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற வாக்கியம் வரும் இடங்களும் அரிவாள் சுத்தியல் சின்னம் வரும் இடங்களும் தணிக்கைத்துறையால் மறைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் ஃபைல்ஸ், தி காஷ்மீர் ஸ்டோரி போன்ற இந்து மதவெறி பாசிஸ்டுகளின் திரைப்படங்களுக்கு சொர்க்கபுரியான தணிக்கைத்துறை கம்யூனிஸ்ட் அடையாளத்தை அழிக்க முயல்கின்றது. எவ்வளவு மறைத்தாலும் நெருப்பை யாராலும் பொட்டலம் கட்டமுடியாது. யார் நினைத்தாலும் கம்யூனிஸ்டுகளின் தியாகத்தை வரலாற்றை யாராலும் நெருங்கக்கூட முடியாது. “உழுபவனுக்கு நிலம். உழைப்பவனுக்கு அதிகாரம்” என்பதைச் சாதித்தவர்களும் கம்யூனிஸ்டுகள்தான். இன்றைக்கு உலக மக்கள் பெற்ற உரிமைகள் அனைத்தும் கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தின் விளைவால் பெற்றவையே.

இன்று இந்தியாவில் அரங்கேறிவரும் பாசிசம் என்பது ஒரு சித்தாந்தம். அதை வீழ்த்த வேண்டும் என்றால் மாற்று சித்தாந்தம் தேவை. அதற்கு தகுதியான ஒரே சித்தாந்தம் கம்யூனிசம் மட்டுமே.

விடுதலை பாகம் 2-இல் சில குறைபாடுகள் இருந்தாலும் அவை அப்படம் கூற வந்த நேர்மையை – துணிச்சலை எங்கேயும் குறைக்கப் போவதில்லை.

பெருமாள் வாத்தியாரும் குமரேசன்களும் ஏன் அமுதன்களும் கூட நம்மிலிருந்துதான் உருவாகிறார்கள். உண்மையை உணரும்போது தன்னலம் தவிர்ப்பவர்கள் குமரேசனாகவும் பெருமாள் வாத்தியாராகவும் மகாலட்சுமியாகவும் மாறுகின்றனர். தன்னலம் காப்பவர் அமுதன்களாக மாறுகின்றனர்.

நெருக்கடிகளே ஒருவரை உயர்த்தும் அல்லது தாழ்த்தும்.

விடுதலைப்படையின் ஆதரவாளரான போலீசு ஏட்டு ஒருவர், சித்திரவதைக்கு உள்ளாகும்போதும் இரகசியம் காப்பார். துரோகி ஒருவன் காட்டிக்கொடுப்பான். ஏனோ தெரியவில்லை, இக்காட்சிகள் என் மனக்கண்ணில் பல துரோகிகளை கொண்டு வந்து காட்டின.

இறுதிக்கட்ட காட்சியில், வாத்தியார் டி.ஏ-விடம், “மக்களை அமைப்பாக்க வேண்டும். அதுவே முக்கியம்” என்பார். ஆம், மக்களை அமைப்பாக்குவது முன் எப்போதையும் விட இப்போது மிக முக்கியமான பணி. அதைத் தவிர்ப்பதை விட ஆபத்தான பணியும் வேறேதும் இல்லை.

ஆம்,
விடுதலையின் பாதை சிவப்பு!
வேறேதுமில்லை…


தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா. | மீள்பதிவு

(இப்பதிவு முதலில் ஜனவரி 5, 2022 அன்று வினவு தளத்தில் பதிவிடப்பட்டது.)

***

ந்தியாவின் முதல் ஆசிரியையான சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாள் (ஜனவரி 3) இன்று. சமீபகாலங்களில் தான் அவரை நம்மில் பலருக்கும் தெரியவந்திருக்கிறது. மிகச் சமீபகாலங்களில் தான் அவரை பலரும் நினைவுகூருகிறார்கள்.
‘சாதி நல்லது’ என்றும் ‘சாதி அப்படியே தொடரவேண்டும்’ என்றும் சொன்ன இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால் சாவித்ரிபாயை இத்தனை ஆண்டுகளாக நம்மில் பலருக்கும் தெரியாமலேயே நம் முன்னோர்கள் வைத்திருந்திருக்கிறார்களே, ‘அது ஏன்?’ என்று யோசித்துப் பார்த்தால் அவர் மறைக்கப்பட்டதற்கான காரணம் நமக்குப் புலப்படும்.
சாவித்ரிபாய் ஒரு பெண் என்பதால் தான் அவரது வரலாற்றை மறைத்தார்களா? என்று கேட்டால், “ஆம் அதுவும் ஒரு காரணம் தான். ஆனால் அது மட்டுமே ஒரேமுக்கியமான காரணமல்ல”.
பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி கற்கமுடியும் என்கிற பார்ப்பனிய ஒடுக்குமுறையினால், வேறு எந்த சாதியினரும் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பள்ளிகள் உருவாவதற்கு முன்னர் இருந்த குருக்குலங்களிலும் கூட பார்ப்பனர் அல்லாத எவருமே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதிலும், பார்ப்பன ஆண்கள் மட்டுமே கல்வி கற்கிற உரிமையினைப் பெற்றிருந்தார்கள்.

படிக்க: கனிமவளக் கொள்ளைக்காக பழங்குடிகள் அமைப்பைத் தடை செய்த சத்தீஸ்கர் அரசு!


இப்படியான சூழலில் தான் சாவித்ரிபாய் புலேவைத் திருமணம் செய்திருந்த ஜோதிராவ் புலே, தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே கல்வி கற்றுக்கொடுத்தார். அதுகுறித்து கேள்விப்பட்டதும், பார்ப்பனர்கள் தங்களது படைசூழ ஜோதிராவ் புலேவின் வீட்டுவாசலில் வந்து நின்று, ஜோதிராவ் புலேவின் அப்பாவிடம் சண்டையிட்டு, ஜோதிராவ் புலேவையும் அவரது மனைவியான சாவித்ரிபாய் புலேவையும் வீட்டைவிட்டே விரட்டவைத்தனர். அதாவது, சொந்த மகனையும் மருமகளையுமே வீட்டைவிட்டு துரத்தும் அளவிற்கு ஜோதிராவ் புலேவின் அப்பாவிற்கு பார்ப்பனர்கள் நெருக்கடி கொடுத்தனர். எதற்காக? பார்ப்பனர்கள் அல்லாத ஒரு பெண் படிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக.
இந்த ஒரு புள்ளி தான் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கையை மாற்றியது என்று சொல்லலாம். இதுதான் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அது கொடுத்த கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் தான் சாணியைக் கரைத்து ஊற்றியபோதிலும், சேரை வாரி இறைத்தபோதிலும், மேலும் பல கொடூரமான தாக்குகள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.

இந்த உண்மைகள் எவருக்குமே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் சாவித்ரிபாய் புலேவின் வரலாற்றை இத்தனை ஆண்டுகளாக சொல்லிவிடாமல் மறைத்தும், பள்ளிப்பாடத்திட்டத்தில் இடம்பெறாமல் தடுத்தும் வருகிறார்கள் சாதி மேலாதிக்கவாதிகள்…
இன்றைக்கு எல்லா சாதியைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் ஒன்றாக இணைந்து ஒரே பள்ளியில் படிக்கமுடிகிறதென்றால், அது தானாக வந்ததில்லை. பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராக சாவித்ரிபாய் புலே போன்ற எண்ணற்ற மறைக்கப்பட்டவர்களின் சாகசகங்களாலும் கடும் போராட்ட வாழ்க்கையினாலும் தான் சாத்தியமாகி இருக்கிறது.
இதனை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்… சாவித்ரிபாய் புலேவைப் பற்றி எங்கு பேசினாலும், இதையும் இணைத்தே தான் பேசவேண்டும்…
சாவித்ரிபாய் புலே குறித்து பேசுகையில், நான்கு முக்கியமான கோரிக்கைகளை நாம் தொடர்ந்து வைக்க வேண்டும்.
1. சாவித்ரிபாய் புலே குறித்து 107 எப்பிசோடுகளைக் கொண்ட தொடர் நாடகத்தை இந்தியில் தூர்தர்சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதனை அப்படியே யூட்யூபிலும் கூட தூர்தர்சன் முழுவதுமாக வெளியிட்டிருக்கிறது. அந்தத் தொலைக்காட்சித் தொடரை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து, இந்தியாவின் அனைத்து மாநில தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்ப வேண்டும், யூடியூபிலும் பதிவேற்ற வேண்டும்.
2. சாவித்ரிபாய் துவங்கிய பெண்களுக்கான இந்தியாவின் முதல் பள்ளியின் நிலை இன்று படுமோசமாக இருக்கிறது. அதனை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து, முழுவதுமாக சரிசெய்து, சீரமைத்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும்.
3. இந்தியா முழுக்க உள்ள அனைத்து பாடத்திட்டங்களிலும் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும்.
4. சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாளை “சமத்துவ ஆசிரியர் தினம்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆண்டுதோறும் நாடுமுழுவதிலும் கொண்டாடப்பட வேண்டும்.


முகநூலில் : Chinthan E P

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜனவரி 2025 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



வர்க்க ஆயுதம் ஏந்து! | கவிதை

னியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்…
என்று ‘அறம்’ பாடியவருக்கு
துணை பாடியவர்களே..

இதோ…
ஊருக்கே சோறு போடும் விவசாயி பட்டினிப் போராட்டம் நடத்துகிறான்!

என்ன செய்யப் போகிறீர்கள்?

எல்லையில் நிற்கும் இராணுவத்தாரே
உம் எல்லைக்குள் நடக்கிறது
ஓர் வீரம் செறிந்த போராட்டம்
தேசம் காக்க…

இப்போது சொல்லுங்கள்..
எது தேசம் என்று?

தன் பசி
தாய் அறிவாள் என
கண் அயரும் உன் பிள்ளை!
உன் பசியும் சேர்த்துணர்ந்த விவசாயி.. அவர் கண்ணில் இன்று
உறக்கமில்லை தாயே!

நீ என்ன செய்யப் போகிறாய்.‌.

விதவிதமான உணவுகள்
ரகரகமான உணவகங்கள்
ருசியின் பேரிரைச்சலில் அமுங்கிப் போகிறது..
பட்டினியில் ஊண் உருகும் சத்தம்!

படைத்தளித்தவனுக்கு என்ன நீதி தரப்போகிறாய்?

காவிரியைத் தடுத்து..
கங்கையில் சாக்கடை கலந்து ‘புனிதமாக்கி’..
கார்ப்பரேட்டுக்காக கழுத்தறுக்கும்
காவிக் கூட்டம்!
விவசாயிகளின் உயிர்பிரிவது
உன் நிலத்தில்!
அநீதிகள் நடப்பது
உன் கண்ணெதிரில்!

இவற்றில் உனக்கு சம்மதமா ?

எந்த வர்க்கப் பிரச்சனையானாலும்
தன் சொந்த வர்க்கப் பிரச்சனையாய்..
களத்தில் நிற்கும் விவசாய வர்க்கம்!

தானியக்களம் தாண்டி
போர்க்களம் புகுந்திருக்க..
எதிர்க்கட்சிகள் திகைத்திருக்க..

எதிரியில்லையெனக் கொக்கரித்த பாசிசத்தின் முகத்தில்
குத்து விட்டு நிமிர்ந்தெழுந்த
தேசத்தின் முதுகெலும்பு!

தாய்நிலத்தில் படர்ந்திருக்கும்
பாசிசத்தைக் கிழித்தெறியக் கிளம்பிய தேசத்தின் முன்னத்தி ஏர்!

விவசாய வர்க்கத்துடன்
கரம் கோர்த்துக் களமிறங்கு!
பாசிச எதிர்ப்புப் போரில்
ஒரு வர்க்க ஆயுதம் ஏந்து!


செங்குரல்

பதிவு
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மும்பை கப்பற்படை எழுச்சியும் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தொழிலாளர் எழுச்சியும் | தோழர் ஆ.கா. சிவா

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம்
கருத்தரங்கம்

மும்பை கப்பற்படை எழுச்சியும்
கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தொழிலாளர் எழுச்சியும்
தோழர் ஆ.கா. சிவா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தொடங்கியது புத்தகக் கண்காட்சி!! வாருங்கள்!

48ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று (டிசம்பர் 27) நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியுள்ளது. ஜனவரி 12-ம் தேதி வரை இந்தப் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் டிசம்பர் 26, தோழர் மாசேதுங்கின் பிறந்த நாளன்று உதயமான “புதிய ஜனநாயகம் பதிப்பகம்” இடம்பெற்றுள்ளது.

அரங்கு எண் 246; ஏழாவது வரிசையில் முதல் கடை (வ.உ.சி பாதை)…

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்கள் மற்றும் வெளியீடுகள், மார்க்சிய மற்றும் பிற முற்போக்கு நூல்கள் இடம்பெற்றுள்ளன.

புத்தகக் கண்காட்சியில் பங்கேற்குமாறு உலகம் முழுவதும் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம். எமது புதிய ஜனநாயகம் பதிப்பகத்தின் அரங்கிற்கு வருகை தந்து ஆதரவு அளியுங்கள்.

தொடர்புக்கு:

தொடர்பு எண்: 9791559223
மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

சமூக வலைத்தளப் பக்கங்கள்:

முகநூல்: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
எக்ஸ் (டிவிட்டர்): புதிய ஜனநாயகம் பதிப்பகம்
இன்ஸ்டாகிராம்: புதிய ஜனநாயகம் பதிப்பகம்

தோழமையுடன்,
தோழர் ஆகாஷ்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்,
9791559223.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



இந்திய கம்யூனிச இயக்கத்தில் பெண்கள் | தோழர் அமிர்தா | வீடியோ

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம்
கருத்தரங்கம்

இந்திய கம்யூனிச இயக்கத்தில் பெண்கள்
தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்! | மீள்பதிவு

(இக்கட்டுரை ஜூலை 14, 2012 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது)

***

பீரங்கி ராஜீவ்…கேம்ஸ் கல்மாடி…டான்சி ராணி…சுரங்கம் ரெட்டி…

கரி சிங். தி கல்லுளிமங்கன்.

ஸ்பெக்ட்ரம் ஊழல், வரலாறு காணாத ஊழல் என்று சித்தரிக்கப்பட்டது. நிலக்கரி ஊழலின் பரிமாணத்தை சொல்வதற்கோ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை. மன்மோகன் சிங் அரசு ‘கோல் இந்தியா‘ என்ற பொதுத்துறை நிறுவனத்துக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலக்கரி வயல்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொந்தமாக்கியிருக்கிறது. இந்த பகற்கொள்ளையைத்தான் ‘நிலக்கரி ஊழல்‘ என்று ஊடகங்கள் அழைக்கின்றன. மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் இந்த ஊழல் குறித்த செய்தி இடம் பெற்றிருப்பதை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு (மார்ச் 22, 2012) அம்பலப்படுத்தியது.

2004 முதல் 2009 வரையிலான காலத்தில் நடந்திருக்கும் இக்கொள்ளையில் ஜிண்டால், டாடா, அனில் அகர்வால், ஆதித்ய பிர்லா, எஸ்ஸார், அதானி, ஆர்செலார்மிட்டல், ஜெய்ஸ்வால், அபிஜித் குழுமம், எலெக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங் லிமிடெட், பூஷன் பவர் அன்ட் ஸ்டீல் லிமிடெட் போன்ற பன்னாட்டுதரகு முதலாளிகளுக்கு நாட்டின் பொதுச்சொத்தை அறுத்து கறிவிருந்து வைத்திருக்கிறார் மன்மோகன் சிங். இந்த அயோக்கியத்தனத்தை நியாயம் போல் காட்டுவதற்காகவே, பாதி நிலக்கரி வயல்கள் மத்திய  மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு தாரை வார்க்கப்பட்டுள்ள நிலக்கரி வயல்களில் புதைந்திருக்கும் மொத்த நிலக்கரியின் அளவு 3316.9 கோடி டன்கள். இதைக் கொண்டு நாளொன்றுக்கு 1,50,000 மெகாவாட் வீதம் (இதுதான் இந்தியாவின் தற்போதைய மின்சார உற்பத்தி) அடுத்த 50 ஆண்டுகளுக்கு அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவற்றில் 1700 கோடி டன் நிலக்கரி இருப்பு கொண்ட வயல்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், 1616.9 கோடி டன் இருப்பு கொண்ட வயல்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தரப்பட்டிருக்கின்றன.

கரித்திருடன்-மன்மோகன்

உலகச்சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.14,000. பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் மூலம் மானிய விலையில் விற்கப்படுவதால் இந்தியச் சந்தையில் ஒரு டன் நிலக்கரியின் விலை மேற்கூறிய காலகட்டத்தில் ரூ.2000 முதல் ரூ. 2500 வரை இருந்துள்ளது. மன்மோகன் அரசோ கருப்புத் தங்கமான இந்த நிலக்கரி இருப்பை, டன் ஐம்பதுக்கும் நூறுக்கும் தள்ளிவிட்டிருக்கிறது.

மார்ச் 2011 நிலவரப்படி நிலக்கரியின் இந்தியச் சந்தை விலையை வைத்துக் கணக்கிட்டால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 10.67 இலட்சம் கோடி ரூபாய் என்கிறது கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை.

தனியார் முதலாளிகள் பெற்றுள்ள 1700 கோடி டன் நிலக்கரி இருப்பின் மதிப்பு 42 இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் என்று சி.பி.ஐ அதிகாரிகள் மதிப்பிடுவதாக கூறுகிறது இந்தியா டுடே (9.12.2011). இதன் மதிப்பு 51 இலட்சம் கோடி ரூபாய் என்பது பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு.

நிலக்கரி-திருடன்-மன்மோகன்

கொள்ளை போன தொகை எவ்வளவு என்பது குறித்த மதிப்பீட்டில் வேறுபாடு இருந்தாலும், இது அலைக்கற்றை ஊழலைப் போல அனுமானமாகக் கூறப்படும் இழப்பல்ல. நிலக்கரியின் சந்தை விலையில்,  ஒரு டன் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு கோல் இந்தியா நிறுவனம் செய்யும் செலவைக் கழித்து, குறைந்தபட்சமாக கணக்கிட்டுத்தான் இந்தத் தொகையைக் கூறுவதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது. நிலக்கரி வயல்களை ஏலத்திற்கு விட்டிருந்தால் 10.67 இலட்சம் கோடி ரூபாய் இழப்பை அரசு தவிர்த்திருக்க முடியும் என்கிறது அறிக்கை.

இச்செய்தி வெளிவந்தவுடனேயே பிரதமர் அலுவலகம் கீழ்த்தரமான கிரிமினல் வேலையில் இறங்கியது. சி.ஏ.ஜி. பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டு, தனது கருத்தை சி.ஏ.ஜி. மாற்றிக் கொண்டுவிட்டதாகப்  பிரச்சாரம் செய்தது பிரதமர் அலுவலகம்.

அடுத்த நாளே முழுக் கடிதமும் ஊடகங்களில் வெளியானது. ஏல முறை கடைப்பிடிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள 10.67 இலட்சம் கோடி  இழப்பை, அரசுக்கு ஏற்பட்ட ‘நட்டம்’ என்று அழைப்பதா அல்லது, ‘மனமறியாமல் தரப்பட்ட ஆதாயம்’ என்று அழைப்பதா (Loss or Unintended Benefit) என்ற முடிவுக்கு அவர்கள் வரவில்லை என்பதுதான் சி.ஏ.ஜி. யின் கடிதம் தெரிவித்த கருத்து.

கடிதத்தை வெட்டி ஒட்டி இப்படியொரு கீழ்த்தரமான கிரிமினல் வேலையில் ஈடுபட்ட மன்மோகன் அரசு, ஒருபுறம் குற்றத்தை மறுத்துக்கொண்டே இன்னொருபுறம் 2006-2009 ஆண்டில்  நிலக்கரிச் சுரங்க உரிமம் வழங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளினால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை விசாரிக்க மத்திய கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி) மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனத்தைக் (சி.பி.ஐ) கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமார், 2006-இல் நிலக்கரி அமைச்சகத்தின் சிறப்புச் செயலராக இருந்து, 15 நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்தவர். எனவே இவரை சி.பி.ஐ. விசாரிக்குமா, நிலக்கரித் துறை அமைச்சரான பிரதமரை விசாரிக்குமா என்ற விடைதெரியாத கேள்விகள் எழுந்துள்ளன.

சி.பி.ஐஇன் விசாரணை வலையத்தில் நிலக்கரி வயல்கள் நிறைந்த ஜார்கண்ட், சத்தீஸ்கர், ம.பி. ஆகிய மூன்று மாநிலங்களின் பா.ஜ.க. அமைச்சர்கள், நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், மத்திய அமைச்சகங்கள் ஆகியோரும் வருகிறார்கள்.  வலையை முடிந்தவரை அகலமாக விரித்துத் தனது அரசியல் எதிரிகளை அச்சுறுத்துகிறது காங்கிரசு அரசு. இன்னொருபுறம், மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 16 நிலக்கரி வயல்களை ஒதுக்கப் போவதாகக் கூறி, மாநிலக் கட்சிகள், எதிர்க்கட்சிகளுக்கு ஆசையும் காட்டி விலைபேசவும் முயற்சிக்கிறது. இந்தத் தீவட்டிக் கொள்ளையில் முக்கியமான இந்தியத் தரகு முதலாளிகள் அனைவருக்கும் பங்கு இருப்பதால், எல்லோருமே முடிந்தவரை அடக்கி வாசிக்கிறார்கள்.

கணக்குத் தணிக்கையாளர் தனது அறிக்கையை இறுதியாக்கி மே 11ஆம் தேதியன்றே குடியரசுத் தலைவரிடம் தந்துவிட்டார். நிதியமைச்சகம் இவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவேண்டும் என்பது மரபாம். குடியரசுத்தலைவர் இன்னும் ஒப்புதல் தரவில்லை. எனவே, இந்த மெகா ஊழல் அறிக்கை 50 நாட்களாக ராஷ்டிரபதி பவனில் உறங்குகிறது.

நிலக்கரி-திருடன்-மன்மோகன்

சி.ஏ.ஜி. மதிப்பீட்டின்படி அலைக்கற்றை கொள்ளையைப் போல 6 மடங்கு பெரியது இந்த நிலக்கரிக் கொள்ளை. அலைக்கற்றைகளை ஏலம் விட்டு, அதிக விலைக்கு கேட்பவர்களுக்கு அதனை வழங்காமல், பிள்ளையார் கோயில் சுண்டலைப்போல ‘முதலில் வருவோர்க்கு முதலில்‘ என்று வழங்கிவிட்டார் என்பதுதான் ராசா மீதான குற்றச்சாட்டு. அலைக்கற்றை சுண்டலுக்கு கார்ப்பரேட் முதலாளிகள் வரிசையில் நிற்கவாவது வேண்டியிருந்தது. நிலக்கரி வயல்களைப் பெறுவதற்கு அந்த சிரமமும் இல்லை. அமைச்சர்கள்,அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை (Screening committee) நியமித்து, அந்தக் குழுவின் மூலம் டாடா, பிர்லா, மித்தல், ஜின்டால் போன்ற ‘தகுதியான‘ தரகு முதலாளிகளைத் ‘தெரிவு‘ செய்து, அவர்களுக்கெல்லாம் நிலக்கரி வயல்களை விநியோகித்துவிட்டார் மன்மோகன் சிங்.

“மலிவான கட்டணத்தில் கைபேசி சேவையை மக்களுக்குத் தரவேண்டும் என்பதற்காகத்தான் அலைக்கற்றையை ஏலம் விடாமல் குறைந்த விலைக்கு கொடுத்தோம்” என்பது ராசாவின் வாதம். “மின்சாரம், இரும்பு, சிமெண்டு போன்றவற்றை மக்களுக்கு மலிவாக தருவதற்காகத்தான் நிலக்கரி வயல்களை முதலாளிகளுக்கு சலுகை விலையில் கொடுத்தோம்” என்கிறது மன்மோகன் அரசு.

ராசாவின் வாதத்திலாவது சிறிதளவேனும் உண்மை இருக்கிறது. மன்மோகன் சிங்கின் வாதம் கடைந்தெடுத்த பொய். தொலைபேசிக் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கு டிராய் என்ற ஒழுங்குமுறை ஆணையம் பெயரளவிலாவது இருக்கிறது. சிமெண்டுக்கும் இரும்புக்கும் விலை நிர்ணயம் செய்பவர்கள் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும்தான்.

அதேபோல, தனியார் முதலாளிகளின் கொள்ளை இலாபத்தை உத்திரவாதம் செய்யும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்துமாறு, மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்துவதற்குத்தான் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே போகின்றன. ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 18 ரூபாய் வரை விலை வைத்து மாநில மின்வாரியங்களைத் திவாலாக்கும் ‘மெர்ச்சென்ட் பவர் கார்ப்பரேசன்கள்’ எனும் தனியார் முதலாளிகளுக்கும் நிலக்கரி வயல்களை வாரி வழங்கியிருக்கிறார் மன்மோகன்.

பல லெட்டர் பேட் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் தரப்பட்டது என்பதும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் தமது பங்குகளை விற்றே பல்லாயிரம் கோடி இலாபம் பார்த்து விட்டனர் என்பதும் அலைக்கற்றை ஊழலின் குற்றச்சாட்டுகள். நிலக்கரி வயல்களையும் பல லெட்டர் பேட் நிறுவனங்களுக்குப் பட்டா போட்டு கொடுத்திருக்கிறார் மன்மோகன். தமது உற்பத்தி இலக்கை பன்மடங்கு உயர்த்திக் காட்டி, நிலக்கரி வயல்களை வளைத்துப் போட்டிருக்கின்றன பல நிறுவனங்கள்.

நிலக்கரி-திருடன்-மன்மோகன்

ம.பி. மாநிலத்திலுள்ள பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 25 கோடி டன் நிலக்கரியை கள்ளச்சந்தையில் விற்று ரூ.4000 கோடி இலாபமடைந்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தின் நிலக்கரித் தேவை 50 இலட்சம் டன்; ஆனால் இந்நிறுவனத்துக்கு 96.3 கோடி டன் நிலக்கரி இருப்புள்ள சுரங்கங்கள் தரப்பட்டுள்ளன. ஒரிசாவின் நவபாரத் நிறுவனம் 1,050 மெகாவாட் அனல்மின் நிலையத்திற்கென வாங்கிய நிலக்கரிச் சுரங்கத்தை எஸ்ஸார் குழுமத்திற்கு 200 கோடி ரூபாய்க்கு விற்று இலாபம் சம்பாதித்துள்ளது.  இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

வயல்களைப் பெற்ற 90% நிறுவனங்கள் (Coal Block Allottees)  ஒரு கிராம் நிலக்கரியைக் கூட எடுக்கவில்லை. நிலக்கரி விலை உயரும்போது நல்ல விலைக்கு விற்பதற்காக ரியல் எஸ்டேட்டுகளைப் போல போட்டு வைத்திருக்கிறார்கள். வேறு சிலர், சுரங்கம் தோண்டும் நிறுவனங்களுக்கு (Mine Developer cum Operator) வயல்களை ஏலம் விட்டு, ஆயிரக்கணக்கான கோடிகளைச் சுருட்டியிருக்கிறார்கள். இவை அனைத்தும் மன்மோகன் அரசுக்குத் தெரிந்தேதான் நடந்திருக்கின்றன.

அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டு, தன் கையை மீறி நடந்து விட்ட தவறு, கூட்டணி நிர்ப்பந்தம் என்றெல்லாம் சொல்லி ராசாவையும் தி.மு.க.வையும் காவு கொடுத்து விட்டு தந்திரமாகத் தப்பித்துக் கொண்டார் மன்மோகன் சிங். அதற்கு ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் துணை நின்றன. நிலக்கரிக் கொள்ளைக் குற்றத்திலிருந்து மன்மோகன் அப்படி நழுவ முடியாது.

தனியார்மயதாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதும், முன்னாள் நிலக்கரித்துறை செயலரான சாரி என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நிலக்கரி வயல்களைத் தனியாருக்கு விற்பதென்றால், ஒரு சுயேச்சையான குழுவின் கீழ் ஏலத்தின் மூலம்தான் விற்கப்படவேண்டும் என்று மே 1996-இல் கூறியது. அன்றைய மத்திய அமைச்சரவைக் குழு இதனை ஏற்று, சட்டத் திருத்தமாக கொண்டுவர சிபாரிசு செய்தது. ஆனால், அடுத்து வந்த பா.ஜ.க. ஆட்சி சட்டத்தை திருத்தவில்லை.

2004-இல் “அமைச்சர் சிபு சோரனிடம் ஏலமுறைதான் சரியானது என்று கூறினேன். அவர் பொருட்படுத்தவில்லை. பிறகு பிரதமரிடம் சொன்னேன் அவரும் கண்டு கொள்ளவில்லை” என்கிறார் அன்றைய நிலக்கரித்துறை செயலர் பாரிக். (எகனாமிக் டைம்ஸ், ஜூன், 13, 2012)  விண்ணப்பங்கள் குவியத் தொடங்கவே, ‘28 ஜூன் 2004 வரை வந்த விண்ணப்பங்களுக்குத்தான் நிலக்கரி வயல்கள் தரப்படும் என்று திடீரென்று அறிவித்தது மன்மோகன் அரசு. அலைக்கற்றை விவகாரத்தில் ராசா வெளியிட்ட அறிவிப்பைப் போன்றதுதான் இதுவும்.

2005-இல் ‘இனிமேல் ஏலம்தான்’ என்று அறிவித்தது மன்மோகன் கையில் இருந்த நிலக்கரி அமைச்சகம்.  இதற்கேற்ப 1973-இல் இயற்றப்பட்ட சுரங்கங்களைத் தேசியமயமாக்கும் சட்டத்தை விரைவிலேயே திருத்தி விடுவோம் என்றும் கூறியது. ஆனால், சட்டம் திருத்தப்படவில்லை. நிலக்கரி வயல்கள் தனியார்மயமாக்கம் தொடர்ந்தது.

ஏப்ரல் 2005-இல் இரும்பு மற்றும் நிலக்கரிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு (எதிர்க்கட்சியினரும் அடங்கியது) “சுரங்கங்களை ஒதுக்குவதற்கான முறை வகுக்கப்படும் வரை தனியார்மயத்தை நிறுத்த”க் கோரியது. ஜனவரி 2006-இல் முதலீட்டுக் கமிசன்  ‘ஏலமுறையில் மட்டுமே நிலக்கரி வயல்கள் தரப்படவேண்டும்’ என்று வலியுறுத்தியது. 2006-இல் மீண்டும் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் எழுப்பின.

“சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் சட்டம் (1957)  ஐத் திருத்தி, தனியார்மயமாக்கப்படும் நிலக்கரி வயல்களில் பழங்குடி மக்களுக்கும் பங்கு தரப்போகிறோம்.  இச்சட்டத்திருத்தம் நிறைவேறும் வரை தனியாருக்கு நிலக்கரி வயல்களைத் தரமாட்டோம்” என்று 2006-இல் நாடாளுமன்றத்தில் மன்மோகன் அரசு அறிவித்தது. 2010 வரை சட்டத்திருத்தம் நிறைவேறவில்லை.

2006-2009 காலத்தில்தான் அதிகபட்சமான நிலக்கரி வயல்களை முதலாளிகளுக்குத் தாரை வார்த்திருக்கிறார் மன்மோகன் சிங். 2006-09 காலத்தில் நடந்திருக்கும் இந்தக் கொள்ளையின் மதிப்பு 51 இலட்சம் கோடி என்று கூறும் பா.ஜ.க. எம்.பி. ஹன்ஸ்ராஜ் ஆஹிர், இந்தக் கொள்ளையை நிறுத்தக் கோரி 2008 முதல் பிரதமருக்கு பத்து கடிதங்கள் எழுதியதாகவும், ‘வரப்பெற்றோம்‘ என்பது மட்டும்தான் பத்து முறையும் தனக்கு கிடைத்த பதில் என்றும் கூறுகிறார்.

நிலக்கரி-திருடன்-மன்மோகன்

“அலைக்கற்றை உரிமங்களுக்கான விலையைக் குறைத்து நிர்ணயித்தார்” என்பதுதான் ஆ.ராசாவின் மீது கூறப்படும் குற்றச்சாட்டு. கரித் திருடன் மன்மோகன் சிங் கும்பலோ, ‘ஏலத்தின் மூலம்தான் விற்பனை செய்யவேண்டும்’ என்பதைக் கொள்கை அளவில் ஏற்பது போல நயவஞ்சகமாக நடித்துக்கொண்டே, 1700 கோடி டன் கருப்புத் தங்கத்தை ஐம்பதுக்கும் நூறுக்கும் தரகுமுதலாளிகளின் தனிச் சொத்தாக்கியிருக்கிறது.

ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம், எரிவாயு, நிலக்கரி என ஊழல்கள் அளவில் ஒன்றையொன்று விஞ்சிச் செல்கின்றன. கனிம வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட் முதலாளிகளின் தனிச்சொத்தாக மாற்றும் தனியார்மயக் கொள்கைதான் இந்த ஊழல்கள் அனைத்துக்கும் அடிப்படை.

தனியார்மயம்தான் முதற்பெரும் ஊழல். ஊழலற்ற தனியார்மயம் இல்லை. தனியார்மயத்தை அமல்படுத்துபவன் எவனும் உத்தமன் இல்லை. இருக்கவும் முடியாது. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ளும்போதுதான், கரித் திருடன் மன்மோகன் சிங்கைத் தண்டிக்க முடியும். தனியார்மயக் கொள்ளையைத் தடுக்கவும் முடியும்.

(புதிய ஜனநாயகம், ஜூலை – 2012)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்! | மீள்பதிவு

(இக்கட்டுரை செப்டம்பர் 15, 2010 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது)

***

ணு விபத்துக் கடப்பாடு மசோதாவை, பா.ஜ.க.-வின் ஆதரவோடு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியிருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.  அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்தாகி, ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் ஒப்புதலைச் சதித்தனமான முறையில் பெற்றுவிட்ட அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தின் (123 ஒப்பந்தம்) இளைய பங்காளிதான் இந்த அணு விபத்துக் கடப்பாடு சட்டம்.

இச்சட்டத்தை நிறைவேற்றினால்தான், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளை இந்தியா இறக்குமதி செய்ய முடியும்.  ஏனென்றால், அமெரிக்காவோடு கூட்டுச் சேர்ந்து நிறுவப்படும் அணு மின் நிலையங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அவ்விபத்திற்கு அணு உலைகளை/தொழில்நுட்பத்தை விற்ற அமெரிக்க நிறுவனங்கள் மீது நட்ட ஈடு கேட்டோ, கிரிமினல் குற்றம் சுமத்தியோ வழக்குத் தொடரக் கூடாது; அந்த அணு உலைகளை இயக்கும் நிறுவனங்கள்தான் விபத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அமெரிக்கா விதிக்கும் நிபந்தனை.  இச்சட்டம் இப்படிபட்ட பாதுகாப்பை அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அணு உலை இயந்திர பாகங்களை இந்தியாவிற்கு விற்க முன்வரும் பிற நாடுகளின் நிறுவனங்களுக்கும், உள்நாட்டு நிறுவனங்களுக்கும் அளிக்கிறது.

மன் மோகன் சிங்மன்மோகன் சிங் இச்சட்டத்தை நிறைவேற்றிய கையோடு, “அமெரிக்காவின் நலன்களுக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படவில்லை” எனச் சத்தியம் செய்யாத குறையாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.   ஆனால், இப்படிபட்ட சட்டம் எதுவுமில்லாமல் ரசிய உதவியோடு கூடங்குளத்தில் நிறுவப்பட்டு வரும் அணு உலைகள், மன்மோகன் சிங்கின் புளுகுணித்தனத்தையும், இச்சட்டம் அமெரிக்காவின் நிர்பந்தத்தால்தான் கொண்டு வரப்படுகிறது என்பதையும் ஒருசேர நிரூபிக்கின்றன.  இது மட்டுமல்ல, அமெரிக்க முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்ற காங்கிரசு அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தகிடுதத்தங்கள் திருவாளர் மன்மோகன்சிங் கோட்டு சூட்டுப் போட்டு திரியும் ஒரு நாலாந்தர கிரிமினல் போர்ஜரி பேர்வழி என்பதை நிரூபித்துள்ளன.

அணு விபத்துக் கடப்பாடு மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.  பா.ஜ.க. உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இம்மசோதாவை எதிர்த்ததால், அம்மசோதா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

‘‘அணு உலையை விற்ற நிறுவனம் அல்லது அதன் ஊழியர்களின் திட்டமிட்ட கவனக்குறைவின் காரணமாக விபத்து நடந்திருந்தால், அணு உலையை இயக்கும் நிறுவனம் உலையை விற்ற நிறுவனத்திடமிருந்து நட்ட ஈடு கோரலாம்” என்ற விதி (17ஆ) அம்மசோதாவில் சேர்க்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவும் இம்மசோதாவை எதிர்த்தது.  இந்த விதியை நிரூபித்து நட்ட ஈடு பெறுவது கடினம் என்ற போதிலும் அமெரிக்கா இந்த விதி சேர்க்கப்பட்டதை விரும்பவில்லை.

அமெரிக்கா முகஞ்சுளிப்பதை மன்மோகன் சிங்கால் பொறுத்துக் கொள்ள முடியுமா? அதனால் இந்த விதியை நீக்கக் கோரும் அறிக்கையொன்றைத் தயாரித்து, அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்தார்.  உறுப்பினர்கள் இந்த நீக்கத்தை எதிர்த்தது ஒருபுறமிருக்க, மன்மோகன் சிங்கின் அமெரிக்க அடிவருடித்தனமும் அம்பலப்பட்டுப் போனதால், அவரது அரசு, “இது எங்களின் ஆலோசனைதான்” என்று கூறி இந்நீக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

இம்மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழுவில் நடந்த விவாதத்தின் அடிப்படையில் அணு உலை மற்றும் இயந்திர பாகங்களை விற்கும் நிறுவனங்களிடமிருந்து நட்ட ஈடு பெறுவதற்கான விதி 17(ஆ)-வில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன.  இதன்படி, தொழில்நுட்ப ரீதியாகக் குறைபாடுடைய சாதனங்களை, பழுதான சாதனங்களை விற்றதால் விபத்து நேர்ந்ததாக நிரூபிக்கப்பட்டாலும், அணு உலையை இயக்கும் நிறுவனம் இயந்திரங்களை விற்ற நிறுவனங்களிடமிருந்து நட்ட ஈட்டுத் தொகையைப் பெற முடியும் என்பது உள்ளட்ட 18 திருத்தங்களை முன்வைத்தது, நாடாளுமன்ற நிலைக்குழு.  போலி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் தவிர, பா.ஜ.க. உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் திருத்தங்களோடு, மசோதாவைச் சட்டமாக்க ஒப்புக் கொண்டனர்.

இப்படி நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலைப் பெற்று விட்டு, அவ்வாறு ஒப்புதல் பெறப்பட்ட ஆவணத்தில் அந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கே தெரியாமல், ஒரு போர்ஜரி வேலை செய்தார் மன்மோகன் சிங். அம்மசோதாவில் தனித்தனியாக இருந்த 17(அ) என்ற விதிக்கும், 17(ஆ) என்ற விதிக்கும் இடையில் “மற்றும்” (and) என்ற விகுதியைச் சேர்த்து இரண்டையும் இணைத்தார்.  இதன் மூலம், அணு உலை இயந்திர பாகங்களை விற்கும் நிறுவனங்களிடம், அணு உலையை இயக்கும் நிறுவனம் 17(ஆ) பிரிவில் காணப்படும் அம்சங்கள் குறித்துத் தனியாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தால் மட்டுமே, நட்ட ஈடு பெற முடியும் என்ற நிபந்தனை நைச்சியமாக உருவாக்கப்பட்டது.  நாடாளுமன்ற நிலைக்குழு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் “மற்றும்” (and) என்ற வார்த்தை மட்டும் அச்சிடப்பட்ட தாளை யாருக்கும் தெரியாமல் செருகியதன் மூலம் இந்த ஃபோர்ஜரி வேலையை நடத்தி முடித்தது, மன்மோகன் சிங் கும்பல்.

இந்த விசயத்தை இந்து நாளிதழ் அம்பலப்படுத்தியதன் விளைவாக மன்மோகன் சிங் அரசின் போர்ஜரி வேலை சந்தி சிரித்தது. இதனையடுத்து மசோதாவிற்கு ஆதரவளிக்கச் சம்மதித்திருந்த பா.ஜ.க. அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என அறிவித்தது.  ஃபோர்ஜரி அம்பலமாகி மாட்டிக் கொண்ட மன்மோகன் சிங் கும்பலோ, அதற்காக வெட்கப்படாமல், ஏதோ நாணயஸ்தர்கள் போல,”உறுப்பினர்களுக்கு விருப்பமில்லையென்றால், அந்த வார்த்தையை விலக்கிக் கொள்கிறோம்” எனக் கூறி அந்த வார்த்தையை நீக்கியது.

ஆனாலும் அக்கும்பல் அசராமல் அடுத்த சதியில் இறங்கியது.  நாடாளுமன்ற நிலைக்குழு முன்மொழிந்த திருத்தங்களைப் பரிசீலனை செய்வது என்ற பெயரில், “அணு விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அணு உலை உபகரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் அல்லது அதன் ஊழியர்கள் செயல்பட்டுள்ளனர் என அணு உலையை இயக்கும் நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும்” என்ற விதியை 17(ஆ) பிரிவில் சேர்த்தது மைய அமைச்சரவை.  மன்மோகன் சிங் கும்பலால் முன்னர் புகுத்தப்பட்ட இடைச்செருகல்களைவிட அயோக்கியத்தனமானது இது.  ஏனென்றால், ‘விபத்து’ நேரிடும் எனத் தெரிந்திருந்தும், தனது இலாபத்திற்காக பாதுகாப்பு விதிகள் அனைத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனம் திட்டமிட்டே புறக்கணித்தது என்பதை நிரூபிக்க ஏராளமான சாட்சியங்கள் இருந்தபோதும், அதனை வாரன் ஆண்டர்சன் மட்டுமல்ல, இந்திய உச்சநீதி மன்றம்கூட ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது என்பதுதானே துரோக வரலாறு.

மன்மோகன் சிங் கும்பல் புகுத்திய இந்தப் புதிய விதியையும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்ததால், அந்த விதியையும் கைவிட்டு, பின் பா.ஜ.க.-வின் ஆதரவோடு இச்சட்டத்தை நிறைவேற்றிவிட்டது, காங்கிரசு.  இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அடுத்தடுத்துப் பல மோசடிகளையும், சதிகளையும், பொகளையும் அவிழ்த்துவிட்டு அம்பலமாகி நிற்கும் மன்மோகன் சிங், அதற்காக யாரிடமும் மன்னிப்புக் கோரவில்லை.  எதிர்க்கட்சிகளும் அவருடைய நாணயத்தைக் கேள்விக்குள்ளாக்கவில்லை.  ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் இந்த ஒற்றுமைதான், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி அமெரிக்காவிற்காக மாமா வேலை செய்யலாம் என்ற துணிவையும், திமிரையும் மன்மோகனுக்கு வழங்கயிருக்கிறது.

சி.பி.எம். கோரியதைப் போல் நட்ட ஈட்டு வரம்பை 10,000 கோடி ரூபாய்க்கு உயர்த்தியும் விபத்துக்கான முழு பொறுப்பை அணு உலைகளை விற்கும் நிறுவனங்கள் மீது சுமத்தியும் திருத்தங்கள் செய்யப்பட்டு இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் கூட, இச்சட்டத்தை நாட்டு நலனை விரும்புவோர் ஆதரித்துவிட முடியாது.  ஏனென்றால், அமெரிக்க முதலாளிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவது மட்டுமல்ல இச்சட்டத்தின் நோக்கம்.  இந்திய அணுசக்தித் துறையின் சுயசார்பான வளர்ச்சியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் அமெரிக்கா மற்றும் மன்மோகன் சிங் கும்பலின் நோக்கம்.

அணுஉலை விபத்துத் தொடர்பாக அமெரிக்கா உருவாக்கியுள்ள சர்வதேச உடன்படிக்கையொன்றில் கையெத்துப் போட சம்மதம் தெரிவித்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு.  இந்த உடன்படிக்கை அணு விபத்திற்கு அணு உலை உபகரணங்களை விற்கும் நிறுவனங்களைப் பொறுப்பாக்குவதைத் தடை செய்கிறது; 2,100 கோடி ரூபாய்க்கு மேல் நட்ட ஈடு கோருவதைத் தடை செய்கிறது.  அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டால்,  இந்தியச் சட்டம் வழங்கியிருக்கும் அற்ப பாதுகாப்புகளும் கொல்லைப்புற வழியில் ஒழித்துக்கட்டப்படும்.  அமெரிக்கக் கைக்கூலி மன்மோகன் சிங் ஆசையும் பிசகில்லாமல் நிறைவேறிவிடும்.

(புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நூல் அறிமுகம் : தென்னிந்தியாவைக் கண்டேன் | மீள்பதிவு

ன்று தோழர் அமீர் ஐதர் கான் அவர்களின் நினைவு தினம். இந்தியத் துணைக்கண்டத்தின் துவக்க காலப் பொதுவுடைமை இயக்கத்திற்கு அவர் ஆற்றிய போர்க்குணமிக்க பங்கினை நினைவுகூரும் வகையில் புதிய கலாச்சாரம் நவம்பர் 1997 இதழில் வெளிவந்த இக்கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

(இக்கட்டுரை நவம்பர் 25, 2013 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது)

***

னது சொந்த வாழ்க்கையின் சொகுசுகளை ஒரு துளிகூட காய்ந்துவிடாமல் ருசிப்பவர்களும், தனது எதிர் காலத்திற்கும் தனது பெண்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் கான்கிரீட் அடித்தளம் அமைத்து உறுதி செய்து கொண்டவர்களும் “என்ன செய்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்?” என்ற கேள்வியை ரொம்பவும் ஆக்ரோசமாகக் கேட்கிறார்கள்.

தாதா அமீர் ஐதர் கான்
தாதா அமீர் ஐதர் கான்

ஆனால் தாங்கள் கொண்டிருந்த லட்சியத்திற்காக, மக்கள் விடுதலைக்காகத் தனது சொந்த வாழ்வையும், உயிரையும் இழக்கத் தயாராகவிருந்த தொண்டர்கள் எந்த இயக்கத்தில் நிறைந்திருந்தார்கள் என்ற கேள்வியுடன் நவீன கால வரலாற்றைப் புரட்டினால், உலகெங்கும் அது கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாறாக, போராட்ட வரலாறாகவே இருக்கக் காணலாம். இந்தியாவிலும் இது அப்படித்தான்.

ஆரம்பகால இந்தியப் பொதுவுடைமை இயக்கம் பின்னாளில் நாடாளுமன்ற இயக்கமாகச் சீரழிந்து விட்டாலும், துவக்க காலப் பொதுவுடைமை இயக்கப் போராளிகளின் வரலாறு, தியாகத்திற்கும் போர்க்குணத்திற்கும் சான்று பகர்கிறது.

தோழர் அமீர் ஐதர் கானின் ‘’தென்னிந்தியாவைக் கண்டேன்’’ எனும் தன் வரலாற்று நூல் அத்தகையதோர் வரலாற்றுச் சான்று.

தாதா அமீர் ஐதர் கான்
பஞ்சாபில் முஸ்லீம் மதக் குடும்பத்தில் பிறந்து, தென்னிந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் கட்சி கட்டிய தாதா அமீர் ஐதர் கான்.

எளிய பஞ்சாபி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவரான கான், சர்வதேச கம்யூனிஸ்டு அகிலத்தின் பிரதிநிதியாக ரசியாவில் சில காலம் செயல்பட்ட பின் இந்தியா திரும்பினார். தென்னிந்தியாவில் கட்சியை உருவாக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னைக்குக் கிளம்பினார் கான்.

மீரட் சதி வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்ததால் தமிழகத்திலும் தலைமறைவாகத்தான் இவர் வாழ வேண்டியிருந்தது. புனை பெயரோ சங்கர். தமிழோ அறவே தெரியாது.

பஞ்சாபி முஸ்லீமாகப் பிறந்து புனைபெயரை இந்துப் பெயராக வைத்துக் கொண்டு, தமிழகத்தில் இந்து சாதிய சம்பிராதயங்களைப் பற்றி ஏதும் தெரியாமல் மொழியும் தெரியாமல் சென்னையில் வந்து இறங்கினார். அறிமுகத்திற்காக சொல்லப்பட்ட ஒரேயொரு நபரும் எதுவும் செய்ய இயலாதெனக் கைவிரித்து விட்டார். சென்னை இப்படித்தான் அவரை வரவேற்றது.

அறிமுகத்துக்கு நண்பர்கள், கைச்செலவுக்கு போதிய பணம், அவசரத் தொடர்புக்குத் தொலைபேசி வசதி, இன்னும் பல முன்னேற்பாடுகளுடன் வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்களின் கணக்கின்படி அடுத்த நாளே கான் பஞ்சாபிற்கு மீண்டும் ரயிலேறியிருக்க வேண்டும்.

ஆனால் தன்னந் தனியானாய் விடப்பட்ட போதும், இந்த முகம் தெரியாத ஊரில், மாத்யூஸ் என்ற ரயில்வேத் தொழிலாளியிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு தனது பணியைத் தொடங்குகிறார் கான்.

இத்தகையதோர் நிலைமையில், தான் பட்ட துன்பங்கள் சந்தித்த இடர்ப்பாடுகள் ஆகியவை குறித்தும், தான் வாழ நேர்ந்த சூழல் குறித்தும் விலாவாரியாக சுவைபட எழுதுவார் என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாறத்தான் செய்வோம். வாழ்ந்த போது மட்டுமல்ல, பின்னாளில் வரலாறு எழுதும்போதும் தனது சொந்த சூழ்நிலைகளைக் காட்டிலும், அன்று நிலவிய அரசியல் சூழ்நிலைகளே அவருக்கு முக்கியத்துவம் நிறைந்ததாகத் தோன்றுகின்றது. எனவே அதை விவரிக்கிறார்.

‘’காந்தி – இர்வின் ஒப்பந்த காலம் அது. ஒப்பந்தம் என்னுள்ளத்தில் கசப்புணர்ச்சியை ஏற்படுத்திற்று. காந்திஜியை விமரிசிப்பதில் நான் தயவு தாட்சண்யம் காட்டவில்லை. காந்திஜி உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடல் நீரைக் காய்ச்சிய மக்கள் நாளடைவில் சலிப்படைந்தார்கள். சிலர் கள் இறக்கும் பனை, தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்கள். சிலர் சட்டத்தை மீறி நடக்கலானார்கள். பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. ஷோலாப்பூரில் மக்கள் நகரை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். காந்தி – இர்வின் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை மக்கள் இயக்கம் ஏற்படுத்தியது.’’

‘’கல்லூரிகளையும், பள்ளிகளையும் விட்டு வெளியேறிய மாணவ – மாணவியரும் போராட்டக் காலத்தில் கைது செய்யப்பட்டு ஒப்பந்தத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் சிலருக்கு இனி என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வில்லை. இந்த ஒப்பந்தம் தேசீய விடுதலைப் போராட்டத்துக்குத் துரோகம் செய்வதாகும் என்று பேசியவர், எழுதியவர் சிலரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள் நம் தோழர்கள்…

ஒப்பந்தத்தின் சாரத்துக்கு நான் தந்த விளக்கமும், விளக்க முறையும் அரசியல் அறிந்த தென்னிந்தியர் பலருக்குப் புதியவையாகத் தோன்றின. நம் இளம் தோழர்களை ஊக்குவித்தன.

ஆங்கில சுயசரிதை
அமீர் ஐதர் கானின் ஆங்கில சுயசரிதை (செயின்ஸ் டு லூஸ்).

1930-32 மாணவர்களிடம் கம்யூனிச அரசியல் தீப்போல பற்றிக் கொண்டகாலம். கான் இதற்கு முக்கியக் காரணகர்த்தா. அவர்களை நகருக்கு வெளியே இருந்த பி அண்டு சி பஞ்சாலைக்கு அழைத்துப் போனார் கான். தொழிலாளர்களுடன் அவர்கள் மொழியில் அவர்கள் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவது எவ்வாறு என்று சொல்லிக் கொடுத்தேன். இத்தகைய செயல்முறைப் பயிற்சியால் அவர்கள் மார்க்சியக் கொள்கையை அறியலானார்கள்.

மத்திய தர வர்க்கத்துக்குள் கீழ்த்தட்டைச் சார்ந்த மாணவர்களுக்கு அந்த நாள்களில் நாள்தோறும் சிற்றுண்டிக்காக ஆறணா தரப்படுவது வழக்கம். இளம் தோழிலாளர் சங்கத்துக்கு அந்தத் தொகையை வழங்கி விடுவார்கள். இந்த உதவியினால் சிறு வெளியீடுகளையும் பத்திரிக்கையும் கொண்டு வர முடிந்தது…’’

சென்னை தீவுத்திடல் மைதானத்தில் தற்செயலாக ராஜவடிவேலு(முதலியார்)வைச் சந்தித்தார் கான். ‘’அவர் நீதிக்கட்சியின் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர். நீதிக் கட்சி சென்னை மாகாண அமைச்சரவை அமைந்த பிறகு அவர் எதிர் பார்த்தது போல் சாதி அமைப்பு, ஏற்றத் தாழ்வுகள், சமூகத்திமை இழிவுகள் அறவே ஒழிய வில்லை; மாறாக, பிரிட்டிஷாரோடு செர்ந்து கொண்டு அவர்கள் சுரண்டல் வர்க்க நலன்களுக்கு ஆதரவாக மாறி விட்டார்கள்.

இதனால் அவர் நீதிக் கட்சி நபர்களுக்கு எதிராக எழுதத் துவங்கினார்; நீதிக்கட்சி ஆசிரியர் பதவியிலிருந்து அவரை விலக்கியது. அவரும் ‘ஜனமித்திரன்’ என்றொரு ஏடு தொடங்கி தானே அச்சிட்டு பறையர், துப்புரவு செய்வோர் சேரிக்கு எடுத்துச் சென்று விற்றார்.’’

“ராஜ வடிவேலுவை மூன்று நாட்களாகப் பல மணி நேரம் வாழ்க்கை, நாட்டு அரசியல் நிலைமை ஆகியவை பற்றிக் கேள்விகள் கேட்டுக் குடைந்தெடுத்தேன். தென்னிந்தியச் சாதி அமைப்பு, குறிப்பாகப் பார்ப்பன ஆதிக்கம் உள்ளிட்ட எல்லா அநீதிகளையும் எதிர்த்து எழும் அஞ்சாநெஞ்சம் படைத்த போராளி – ஆனால் ஒரு பிரச்சனையைப் பற்றியோ, அல்லது அநீதி என்று அவருக்குத் தோன்றியதை எதிர்த்துப் போராடும் வழிமுறை பற்றியோ காரண காரணிகளைக் கண்டறிந்து செயல்படுவது என்பது அவருடைய இயல்பில்லை என்பதைக் கண்டேன்.

தம் திறமையை பற்றி உணர்வு இல்லாது அமைப்பில் திரளாமல் இருக்கும் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு வாடும் மக்களை அமைப்பு முறையில் திரட்டுவது வர்க்க உணர்வு பெற்றோர் அனைவரது கடமை…’’

ராஜவடிவேலு கானின் தர்க்கத்தை ஒப்புக் கொண்ட கணத்திலேயே ‘ஜனமித்திரன்’ ‘முன்னேற்றம்’ என்ற பெயரோடு இரு வார ஏடாகப் புதிய வடிவெடுத்தது. அவரே ஆசிரியர், அச்சிடுபவர், வெளியீட்டாளர் எல்லாம். கானோடு ராஜவடிவேலு, கம்மம்பாடி சத்திய நாராயணா இருவர் முழுநேர ஊழியர்களாக இருந்து 30 பேர் கொண்ட ‘இளைய தொழிலாளர் சங்கம்’ அமைத்தார்கள். இது கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டதால் செய்து கொள்ளப்பட்ட புது ஏற்பாடு. ‘முன்னேற்றம்’ பத்திரிக்கை கைகளால் 500 படிகள் அச்சிடப்பட்டது. பணவசதி இல்லை; அனைத்துமே தொழிலாளர் – மாணவர் உழைப்பில் தான் நிறைவேறியது.

‘’நரம்புகளைக் கொடுமையான சோதனைக்குள்ளாக்கும் இக்கடும் பணியில் எப்பொழுதாவது நான் தோழர் இராஜவடிவேலுக்கு உதவி செய்வேன்! வேலை முடிந்து இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம். இன்முகத்துடன் அவர் மனைவி உணவு பிரமாறுவார்.

இவ்வாறு கடும் உழைப்பின் பின் வெளிவரும் இதழ்களை விநியோகிக்க ‘இளைய தொழிலாளர் சங்க’ உறுப்பினர் ஒவ்வருவரும் முயன்று உழைக்க வேண்டி இருந்தது. ஒவ்வொருவரும் விற்பனைக்காகப் பங்கு பிரித்துக் கொள்வோம். தொழிலாளர்களை அவரவர் இல்லங்களில் சந்திப்போம்; ஒவ்வொரு கட்டுரையும் சொல்வதென்ன, கொண்ட கருத்தென்ன என்பது பற்றித் தெளிவாக விளக்குவோம். விவாதிப்போம். சுருக்கமாக ’31-32 ஆம் ஆண்டுகளில் போர்க்குணம் மிக்க தொழிலாளி வர்க்கத்துக்குள் பிரச்சார ஏடாக ‘முன்னேற்றம்’ செயல்பட்டது’’என்று கம்மம்பாடி சத்தியநாராயணா கூறும் குறிப்பு அவர்களது கடுமையான உழைப்பை விளக்குகிறது.

அமீர்கான் சென்னை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட சம்பவம் அவரது அளவற்ற துணிச்சலைக் காட்டுகிறது. ‘’சென்னை மாகாண மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்டிரேட்டுக்கு மட்டும் இருபுறமும் மின்விசிறிகள்.. அது கோடை. உள்ளே புழுங்கிற்று. நாங்கள் இருந்த பக்கம் விசிறிகள் ஓடவில்லை. ‘எங்களைத் துன்புறுத்திப் பொருளாதாரச் சிக்கனம் செய்வது தவறு, விசிறி வேண்டும்’ என்று உரக்கக் கத்தினேன்.

அச்சமயத்தில் அரசு தரப்பில் எவரோ ஒருவர் ‘உமது வழக்குரைஞர்தான் உமக்கு விசிறி வைக்க வேண்டும்’ என்றார். உடனே கோபாவேசத்தில் அவர்கள் மேல் எறிய நாற்காலியைத் தூக்கினேன்… அரசுக் குற்றச் சாட்டைக் கண்டு நான் அஞ்சவும் இல்லை, நீதி மன்றத்தின் கண்ணியம் பற்றிக் கவலைப்படவுமில்லை என்று காட்டவே இவ்வாறு செய்தேன்…’’

சிறைவாசம் 2 ஆண்டுகள். சென்னை, சேலம், கோவை, ராஜமகேந்திரபுரம் என்று 4 இடங்களில் மாற்றி மாற்றி அடைக்கப்பட்டார் கான். சிறையிலும் அவரது போராட்டம் நிற்கவில்லை.

இராஜமகேந்திரபுரம் சிறை மேலாளர் இச்சென்(HICHEN)கானைப் பணியவைக்க தந்திரம் ஒன்று தீட்டினார். இயக்கத்துக்குத் தலைமுழுகி விட்டுச் சென்னை மாகாணத்தை விட்டு வெளியேறி விடுவதாக உறுதிமொழி அளித்தால் விடுதலை செய்து விடுவதாக ஆசை காட்டினார்.

‘’வாழ்க்கை வெளியில் வாழ்வதற்காகவே. சிறையிலன்று. சிறைவாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?’’ என்றார். நான் அவரை வெளியே போய்விடச் சொன்னேன். ஒரு நாளில் இவ்வாறு எழுதினேன்: ‘’பல்லாயிரம் மைல்கள் கடந்து இங்கு வந்து ஆளுவதற்குப் பிரிட்டிஷ்காரர்களுக்கு உரிமை உள்ளதென்றால் எனக்கு இந்த நாட்டில் வாழ்வதற்காகவாவது உரிமை உண்டு… ஆகவே, என் உயிருள்ள வரை சிறையில் வைத்திருக்கலாம். எந்த நிபந்தனையையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்…’’

47-க்குப்பின் அவரது சொந்த ஊரான ராவல்பிண்டி (பாகிஸ்தான்) சென்றார் கான்; தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்ட கானுக்கு ‘சுதந்திர’ பாகிஸ்தான் கொடுத்த பரிசு 14 ஆண்டு சிறைவாசம்.

கட்சி கட்டுவதைப் பற்றி கான் சொன்ன வார்த்தைகள். ஆழமான பொருள் உள்ளவை:

‘’இதயங்களைக் கனிவித்தலும் கனிவித்த இதயங்களைக் காத்தலும் மனிதத் திறமையில் பயன் மிகுந்தவை’’.

– புதூர். இராசவேல்
_______________________________________
புதிய கலாச்சாரம் நவம்பர் 1997
_______________________________________

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram