Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 442

அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !

குட்கா தனித்ததொரு பொருள் அல்ல. பாக்கு, புகையிலை, காசிக்கட்டி, மெழுகு, நீர்ச் சுண்ணாம்பு ஆகிய பொருட்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் கூட்டுப் பொருள்.

குட்கா தயாரிக்கப் பயன்படும் பொருட்களைத் தனித்தனியாக எடுத்துப் பார்த்தால், அவை குறைவான தீமை கொண்டவை, தவிர்க்க வேண்டியவை, புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை எனப் பல்வேறு விதமாக உள்ளன. ஆனால், அவையெல்லாம் ஒன்று சேர்ந்து குட்காவாக உருவெடுக்கும்போது, அபாயகரமான போதைப் பொருளாக மாறிவிடுகிறது.

தமிழகத்தின் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., போலீசு டி.ஜி.பி. ராஜேந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரைத் தனித்தனியாக மதிப்பிடும்போது, ஒவ்வொருவரும் குட்காவின் மூலப்பொருட்களைப் போன்று தனித்தனியான குணாதிசயங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆளுநர், அ.தி.மு.க., போலீசு, உயர் நீதிமன்றம் என்ற தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் கூட்டாட்சி, தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.

ஆளுநர் புரோகித் பெண் பித்தராக அம்பலப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கிறாரே தவிர, அவர் மீது கைநீட்டிக் காசு வாங்கினார் என்ற ஊழல் குற்றச்சாட்டு இதுவரை வரவில்லை.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கு அப்பால், வேறு அசிங்கமான குற்றச்சாட்டுக்கள் இதுவரை இல்லை.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் இரத்தத்திலேயே ஆதிக்க மனோபாவம் ஊற்றெடுப்பதைக் காண முடிகிறது. நியாயமான ஊதியம் கேட்டுப் போராடிய இரக்கத்துக்குரிய அரசு செவிலியர்களை, ஊதியம் போதவில்லை என்றால், வேறு வேலைக்குச் செல்லுங்கள் என ஏகடியம் செய்த பண்பாளர் அவர்.

இந்தத் தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து தமிழகத்தை ஆளுவது தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.

*****

ன்று தமிழகத்தை ஆண்டுவரும் அ.தி.மு.க. அரசு, ஒட்டுமொத்த தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகி நிற்கிறது. ஊழல், தமிழக மக்களின் நலன்களை கார்ப்பரேட் கும்பலுக்கும் இந்து மதவெறியர்களுக்கும் அடமானம் வைப்பது எனச் செயல்பட்டு, தமிழக மக்களிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்டு நிற்கும் இந்த அரசை இன்று தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிக் கொண்டிருப்பவை இரண்டு சக்திகள்தான்.

ஒன்று பிரதமர் மோடியும் அவரது அரசின் ஏஜெண்டாகத் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும். இரண்டாவது சென்னை உயர் நீதிமன்றமும் அதன் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும்.

அ.தி.மு.க. அரசு ஊழலற்ற அரசு என நற்சான்றிதழ் வழங்குகிறார், ஆளுநர் பன்வாரிலால் புரோகித். மறுபுறம், அ.தி.மு.க. அரசோ நிர்மலா தேவி விவகாரத்தை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளியை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அம்ரேஷ் பூஜாரியை நியமித்து, மோடிக்கும் புரோகித்துக்கும் நன்றிக்கடனைச் செலுத்தியிருக்கிறது.

மேலும், ஆளுநரால் தன்னிச்சையாக நியமிக்கப்பட்டிருக்கும் சந்தானம் கமிசனின் சட்டப்பூர்வத் தகுதி குறித்து வாய்திறக்கவும் மறுக்கிறது.

சிவகாசி ஜெயலெட்சுமி விவகாரம் தமிழக போலீசுத் துறையின் ஆபாசங்களை அம்பலப்படுத்தியதென்றால், நிர்மலா தேவி விவகாரம் உயர்கல்வித் துறையில் காணப்படும் அசிங்கங்களையும் வக்கிரங்களையும் அம்பலப்படுத்துகிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா, மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் கலைச்செல்வன் தொடங்கி கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அவரின் தனிச் செயலர் ராஜகோபால் வரை பல பெரிய மனிதர்களின் பெயர்கள் நிர்மலா தேவி விவகாரத்தில் அடிபடுகின்றன.

ஆனால், இது தொடர்பாக விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி.யும், சந்தானம் விசாரணையும் உண்மைகளை வெளிக்கொண்டு வரப் போவதில்லை. தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூன்று புரோக்கர்களையும் பலிகொடுத்துவிட்டு, வக்கிரம் பிடித்த பெரிய மனிதர்களைத் தப்பவைப்பதே அதன் நோக்கம் எனத் தெரிகிறது.

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் எனச் சொல்வது உண்டு. அ.தி.மு.க. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமோ நீதிமன்றமாக இருக்கிறது.

குட்கா வழக்கு, ஓ.பி.எஸ். உள்ளிட்டு 11 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவியிலிருந்து நீக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரித் தொடரப்பட்ட வழக்கு, தமிழகச் சட்டமன்றத்தில் திறக்கப்பட்ட சொத்துக்குவிப்பு குற்றவாளி ஜெயாவின் படத்தை அகற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஆகிய மூன்றிலும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு வழங்கியிருக்கும் தீர்ப்புகள் ஒரு சட்டவிரோத சிறுபான்மை ஆட்சி தொடருவதை உத்திரவாதப்படுத்தியிருக்கின்றன.

*****

குட்கா வழக்கில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும், குட்கா ஊழலை ஊத்தி மூடிவிட முயன்ற அ.தி.மு.க. அரசு மீதோ, போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் மீதோ எந்தவொரு விமர்சனத்தையும் கண்டனத்தையும் அத்தீர்ப்பு பதிவு செய்யவில்லை. மாறாக, எடப்பாடி அரசிடம் நயந்துபோய் தன்னிலை விளக்கமளித்திருக்கிறது.

‘‘வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருக்கும் எங்கள் தீர்ப்பு, மாநில போலீசு மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் இதுவரை நடத்திவந்த விசாரணையின் மீது எந்தக் கடுமையான குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. அந்த விசாரணையில் மாநில அரசைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தலையீடு செய்தார்கள் என்றும் கூறவில்லை.”

விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருப்பது மாநில அரசின் புலன் விசாரணை அமைப்புகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாகக் கருத இடமேயில்லை என்றவாறெல்லாம் தீர்ப்பில் குறிப்பிட்டு, எடப்பாடி அரசைக் குளிப்பாட்டியிருக்கிறார்கள் நீதிபதிகள்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை

அ.தி.மு.க. அரசு குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை 2013 ஆண்டே தமிழ்நாட்டில் தடை செய்துவிட்ட நிலையில், 2015 ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை செங்குன்றம் பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த எம்.டி.எம். குட்கா ஆலையில் சென்னை போலீசார் ரெய்டு நடத்தி பல கோடி ரூபாய் பெறுமான குட்கா பாக்கெட்டுகளையும், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். எனினும், இவ்விவகாரத்தில் ரெய்டுக்கு அப்பால் எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர் போலீசு அதிகாரிகளின் தலையீட்டால், அந்த ரெய்டு அத்தோடு ஊத்தி மூடப்பட்டது.

இதன் பிறகுதான், 2016 ஆண்டு ஜூலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை அதே ஆலையில் சோதனை நடத்தி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை போலீசு கமிசனர், உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு யார் யாருக்கு எவ்வளவு மாதாந்திர மாமூல் கொடுக்கப்பட்டது எனக் குறித்து வைக்கப்பட்டிருந்த ஆவணத்தைக் கைப்பற்றியது.

மாதிரிப் படம்

இதன் அடிப்படையில் வருமான வரித்துறை சுகாதாரத் துறை அமைச்சர், முன்னாள் சென்னை போலீசு கமிசனர் இருவர் உள்ளிட்டுப் பல்வேறு நிலைகளில் 39.91 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்கப்பட்ட அறிக்கையை ஆதாரங்களுடன் அப்போது தலைமைச் செயலராக இருந்த ராம்மோகன ராவிடமும், போலீசு டி.ஜி.பி. அசோக்குமாரிடமும் அளித்தது.

ராம்மோகன ராவ் இந்த அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமுக்கிவிட, டி.ஜி.பி. அசோக்குமார் குட்கா இலஞ்சம் குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து, அதனை முதலமைச்சர் ஜெயாவிற்கு அனுப்பி வைத்தார்.

இதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு, கிரிமினல் ஜெயா கும்பலால் அவர் மிரட்டப்பட்டுப் பதவி விலக வைக்கப்பட்டார். அசோக்குமாருடன் இணைந்து புலன் விசாரணை நடத்திவந்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் அருணாச்சலம், உப்பு சப்பில்லாத பதவிக்குத் தூக்கியடிக்கப்பட்டார்.

‘‘குட்கா முதலாளிகளிடமிருந்து இலஞ்சம் வாங்கினார்” என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையிலேயே, டி.கே.ராஜேந்திரனுக்கு இரண்டு ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கியதோடு, அவரை போலீசு தலைமை இயக்குநராகவும் அமர்த்தி அழகு பார்த்தது, எடப்பாடி அரசு.

ராம மோகன ராவ் – கிரிஜா வைத்தியநாதன்

இதனிடையே தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வருமான வரித்துறை அளித்த ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாக நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் அளித்தார்.

காணாமல் போனதாகக் கூறப்படும் ஆவணங்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை மாநில இலஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இவ்விசாரணையின் கண்காணிப்பு ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயக்கொடியை நியமித்தது. எனினும், ஜெயக்கொடி பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளே தூக்கியடிக்கப்பட்டார்.

இதேபோல, இவ்வழக்கில் கூடுதலாக அக்கறை செலுத்தி வந்த ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குநர் மஞ்சுநாதாவும் அப்பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர், போலீசு கமிசனர் ஆகியோர் இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டு வருமான வரித்துறை அறிக்கை அளித்திருந்தபோதும், இலஞ்ச ஒழிப்புத் துறை அமைச்சர் பெயரையோ, உயர் போலீசு அதிகாரிகள் பெயரையோ குறிப்பிடாமல் மொன்னையான முதல் தகவல் அறிக்கையைத் தயாரித்து நீதிமன்றத்திடம் அளித்திருக்கிறது. இந்த ஊழல் விவகாரம் அம்பலமாகி இரண்டு வருடங்கள் முடிந்த பிறகும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் ஜெயாவும் கூட குட்கா ஊழல் வழக்கை ஊத்திமூடிவிடவே முயன்றார். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் பத்திரிகைகள் வாயிலாக அம்பலமாகிவிட்ட பிறகும், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அ.தி.மு.க. அரசின் மீதோ, போலீசு துறையின் மீதோ எவ்விதமான கண்டனமும் செய்யாமல் நயந்து தீர்ப்பு அளித்திருப்பது இலஞ்சம் வாங்குவதைவிடக் கேவலமானது.

இத்தீர்ப்பு வந்தவுடனேயே கோவை நகரம் சூலூர் பகுதியில் இயங்கி வந்த குட்கா ஆலைக்குள் புகுந்து 15 மணி நேர சோதனையை நடத்தியது, கோவை போலீசு. குட்கா ஊழல் தொடர்பான ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அழிப்பதற்காகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பத்திரிகைகளும் அம்பலப்படுத்துகின்றன.

இது உண்மையாகவும் இருக்கக்கூடும். அதேசமயம், இந்த ஊழல் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்படாமல் சி.பி.ஐ. கைக்குக் கிடைத்திருந்தால்கூட, ஒன்றும் குடிமுழுகிப் போயிருக்காது. ஏனென்றால், இன்று சி.பி.ஐ., மோடி கும்பலின் கூண்டுக்கிளியாகத்தான் செயல்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு உடனடியாக எந்தவொரு அதிசயத்தையும் நிகழ்த்திவிடப் போவதில்லை. மாறாக, எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.க. அரசையும், அ.தி.மு.க. என்ற கிரிமினல் கூட்டத்தையும் தனது அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்திக் கொண்டுவரும் மோடி கும்பலுக்கு இந்த ஊழல் வழக்கு இன்னுமொரு துருப்புச் சீட்டாகவே பயன்படும்.

*****

தமிழகச் சட்டமன்றத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் ஜெயாவின் படத்தை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை, ‘‘சட்டமன்றத்தினுள் யாருடைய படத்தை வைப்பது எனத் தீர்மானிக்கும் சபாநாயகரின் அதிகார வரம்பிற்குள் தலையிட விரும்பவில்லை என்று மட்டும் கூறி தள்ளுபடி செய்யவில்லை.”

ஊழல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் படத்தை வைப்பதைத் தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லாததால், நாங்கள் சபாநாயகருக்கு எந்தவொரு வழிகாட்டுதலும் தர முடியாது என்றும் கூறி, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது, இந்திரா பானர்ஜி அமர்வு. சட்டம் இல்லை என்பதொரு நொண்டிச்சாக்கு.

குட்கா உழல் விவகாரம் குறித்த பத்திரிக்கை செய்திகளை காண்பித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்யும் திமுக-வினர்.

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் சட்டத்தை மீறி அனைத்துவிதமான சலுகைகளையும் பார்ப்பன ஜெயாவிற்கு வாரி வழங்கியவர்கள்தான் மாண்புமிகு நீதிபதிகள். குறிப்பாக, ஜெயா இறக்கும் வரையிலும் சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்காமல் ஜெயாவைத் தண்டனையிலிருந்து காப்பாற்றி வந்த உச்ச நீதிமன்றம், அவர் இறந்துபோனதையே காரணமாகக் கூறி, சொத்துக்குவிப்பு குற்றத்திலிருந்தே அவரை விடுதலை செய்துவிட்டது.

2017, பிப்ரவரியில் நடந்த எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரது அரசிற்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரும் வழக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறித்த சபாநாயகர் தனபாலின் உத்தரவை ரத்து செய்யக் கோரும் வழக்கு.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்யக் கோரும் வழக்கு, எடப்பாடி பழனிச்சாமி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரும் வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது மட்டுமல்ல, இன்று தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள எடப்பாடி அரசின் தலையெழுத்தையே தீர்மானிக்கக்கூடியவை.

இவற்றுள் ஓ.பி.எஸ். அணி தொடர்பான வழக்கில் மட்டும் அரசிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிட்டு, மற்ற வழக்குகளை ஊறப் போட்டு வைத்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.

இந்த பாரபட்சம் மற்றும் தாமதம் குறித்து விமர்சனங்கள் எழுந்தவுடனேயே, நாங்கள் மனசாட்சிப்படி தீர்ப்பளித்திருப்பதாக சென்டிமென்ட் வசனத்தை எடுத்துவிட்டார், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.

ஊழல் பேர்வழிகளின் சட்டவிரோத ஆட்சி தொடருவதை உத்திரவாதப்படுத்தியிருக்கும் இந்த மனசாட்சி, குட்காவைவிட அபாயகரமானது அல்லவா!

தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை, அவர்கள் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்தவுடனேயே பறித்த சபாநாயகர் தனபால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசிற்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை மன்னித்திருப்பது பாரபட்சமானது, உள்நோக்கம் கொண்டது.

இந்த உண்மையைப் பார்க்க மறுத்திருக்கும் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸின் மனசாட்சி, சபாநாயகர் முடிவெடுக்காத விடயங்களில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட முடியாது என்ற சந்துக்குள் புகுந்துகொண்டு, இந்தச் சட்டவிரோத சிறுபான்மை அரசைக் காப்பாற்றிவிட்டது.

உயர் நீதிமன்றம் எடப்பாடி அரசின் கேடயமாகச் செயல்படுகிறது. எடப்பாடியோ ஊழல் குற்றஞ்சுமத்தப்பட்ட டி.ஜி.பி.யையும் அமைச்சரையும் பதவியிலிருந்து நீக்காமல் காப்பாற்றுகிறார். டி.ஜி.பி. ராஜேந்திரன் தலைமையில் செயல்படும் போலீசு படையோ மக்களின் போராட்டங்களை ஒடுக்கி, அவர்களின் ஆத்திரத்திலிருந்து இந்த அரசைக் காப்பாற்றுகிறது.

எடப்பாடி அரசிற்கு நற்சான்றிதழ் வழங்குகிறார், ஆளுநர். எடப்பாடி அரசோ ஆளுநரின் களிவெறியாட்ட லீலைகள் அம்பலமாகிவிடாமல் காப்பாற்றுகிறது. இந்த பாண்டவர்களைக் காப்பாற்றும் கிருஷ்ணா பரமாத்மா பாத்திரத்தை மோடி அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

சமஸ்கிருதத் திணிப்பு, நீட் தேர்வு திணிப்பு, காவிரி உரிமையை மறுப்பது, டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக மாற்றுவது, தமிழகத்தை இராணுவமயமாக்குவது உள்ளிட்ட இந்து மதவெறி, கார்ப்பரேட் சார்பு திட்டங்களைத் தமிழகத்தின் மீது திணிப்பதற்கு எடப்பாடி அரசைக் காப்பாற்றித் தொடரச் செய்வது மோடி கும்பலுக்கு அவசியமாக இருக்கிறது.

அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் கைத்தடியாகச் செயல்படுகிறது, சென்னை உயர் நீதிமன்றம்.

-திப்பு

-புதிய ஜனநாயகம், மே 2018

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி ! காவிரி கூட்டத்திற்குத் தடை !!

காவிரி உரிமைக்காக 10.05.2018 அன்று திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடைவிதித்துள்ளது மாநகர காவல்துறை.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும், மோடி அரசும் கூட்டு சேர்ந்து அடுத்தடுத்து தமிழகத்துக்கு எதிராக அநீதி இழைத்து வருகிறது. உலகுக்கே உணவளித்த டெல்டா உழவர்களை தண்ணீருக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். இப்பொதுக்கூட்டத்தை எவ்வாறேனும் தடுத்துவிட வேண்டும் என முடிவெடுத்த காவல்துறை, 23 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் தந்து  விளக்கம் கேட்டது. உதாரணத்திற்கு சில:

  1. கலை நிகழ்ச்சியில் பாடப்பட இருக்கும் பாடல்களில் பாடல் வரிகள் விவரம் தெரிவிக்கவும்.
  2. எவ்வளவு நபர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்? ஆண்கள் மற்றும் பெண்களின் தோராய எண்ணிக்கை எவ்வளவு? அவர்களது பெயர்கள் மற்றும் முகவரியினை தெரிவிக்கவும்.
  3. வெளிமாவட்டங்களிலிருந்து எவ்வளவு பேர் (ஆண், பெண்) எத்தனை வாகனங்களில் வந்து கலந்துகொள்வார்கள்? அவ்வாறு வரும் நபர்களில் முக்கிய பிரதிநிதிகளின் பெயர், முகவரி தெரிவிக்கவும் மற்றும் அவ்வாறு வரும் வாகனங்களின் பதிவு எண் என்ன? எந்த மாதிரியான வாகனங்கள் என்கிற விவரம் தெரிவிக்கவும்.

இவை ஜனநாயக விரோதமானது என்றாலும் பதிலளிக்காவிட்டால் அதையே காரணம் காட்டி பொதுகூட்டத்துக்கு அனுமதி மறுப்பார்கள் என்பதால் ஒரு பதிலை தயாரித்து ஒப்படைத்தோம். அதன் பிறகும் பதிலளிக்காமல்  கடைசி நேரத்தில் 08.05.18 இரவு 10 மணியளவில் அனுமதி மறுத்து கடிதம் அளித்தது காவல்துறை.

அதில், “கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான, முழுமையான பதில் அளிக்கப்படவில்லை. தங்கள் அமைப்பால் முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்ட போராட்டங்களின் போது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் அமைப்பின் நடவடிக்கை சட்டத்தை மீறுவதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது. தாங்கள் அனுமதி கோரியுள்ள பொதுக்கூட்டத்தின் கோரிக்கையான ‘காவிரி உரிமைப் பற்றிய விளக்கம்’ சம்மந்தமாக மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. தங்கள் அமைப்பின் மீது பதியப்பட்ட வழக்குகளில் இருந்து தங்கள் அமைப்பின் நடவடிக்கை சட்டத்தை மீறுவதற்கு உரிமை கோருவதாக உள்ளது. எனவே, மேற்கண்ட காரணங்களுக்காக தாங்கள் கோரியுள்ளபடி பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என்று கூறியுள்ளனர்.

குற்றவாளி ஜெயாவுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வந்ததற்காக 3 கல்லூரி மாணவிகளை கொளுத்திய அந்த கட்சியின் ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக சொல்லி எமக்கு பேச்சுரிமை மறுக்கப்படுகிறது.

போலீசு பாதுகாப்போடு சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி.

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையே காரணம் காட்டி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்க முடியுமென்றால் ஓட்டுக்கட்சிகளின் வேட்பாளர்கள், அவர்கள் கிரிமினல் குற்றவழக்கு பின்னணியுடன் இருந்தாலும் மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் நிற்க அனுமதி வழங்குவது எப்படி? சொத்துக் குவிப்பு வழக்கின் A1 குற்றவாளி ஜெயாவை, அவர் குற்றவாளி எனத்தெரிந்த பின்பும் 3 முறை ஆட்சியில் அமர்த்தி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க துணைபோனது எப்படி? தற்போது, அந்த கிரிமினல் குற்றவாளியின் புகைப்படத்தை சட்டசபையில் திறப்பதற்கும், மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கும் அனுமதி வழங்கியது எப்படி? ரத்தம் குடிப்பதற்காகவே ரத யாத்திரை நடத்தும் இந்துத்துவ கும்பலுக்கு அனுமதி வழங்கப்படுவது எப்படி? ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதித்துள்ளனரே எப்படி?

இந்த அடிமைக் கும்பல் ஆட்சியில் நீடிப்பதே சட்டவிரோதம். இந்த சட்டவிரோத கும்பல்தான் போராடுபவர்களினால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுகிறது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது என நமக்கு பாடம் எடுக்கிறார்கள்.

இந்த சட்டவிரோத ஆட்சியை தக்க வைக்கவே தமிழகத்தின் உரிமைகளை காவிகளின் காலடியில் அடகுவைக்கிறது அடிமை எடப்பாடி கும்பல். தான் அடிமையானதோடு மட்டுமல்லாமல் தன்மானத்திலும், சுயமரியாதையிலும், சமூக நீதியிலும் முன்மாதிரியாகத் திகழும்  தமிழகத்தையும் சேர்த்து அடிமையாக்க எத்தனிக்கிறது. மோடி – உச்ச நீதிமன்ற கூட்டுச்சதியின் மூலம் தமிழகத்தின் உரிமைகளை பறித்துவிட்டு, அதை எதிர்த்துப் பேசவும், போராடவும் தடைவிதிப்பது பாசிச ஆட்சியின் வருகையை உணர்த்துகிறது.

ஜல்லிக்கட்டில் டெல்லியை பணிய வைத்தோம். ஆனால், காவிரி, நீட், கெயில், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்… என அனைத்திலும் டெல்லியிடம் தமிழகத்தை மண்டியிடு என நிர்ப்பந்திக்கிறது ஒரு எடுபிடி கும்பல். நாம் என்ன செய்யப் போகிறோம்?

தகவல்:
மக்கள் அதிகாரம் – திருச்சி
9445475157.

சீரழிக்கப்படும் உயர்கல்வியை மீட்டெடுப்போம் – பு.மா.இ.மு. கருத்தரங்கம்

0

ழல் – பாலியல் சீரழிவு  – நிர்மலாதேவி – என சீரழிக்கப்படும் உயர்கல்வியை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், நீட் மற்றும் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் மோடி அரசின் அறிவிப்பு என உயர்கல்வி மீதான மோடி அரசின் தொடர் தாக்குதல்களை கண்டிக்கும் விதமாகவும் கருத்தரங்கம் ஒன்றை சென்னையில் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

வருகிற மே.13 அன்று மாலை.5 மணியளவில் சென்னை சி.ஐ.டி.காலனி, கவிக்கோ மன்றத்தில் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில் ’’கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி’’ என்ற நூலை வெளியிடப்போவதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு தொடர்பாக அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மோடி அரசால் திணிக்கப்பட்ட நீட் தேர்வு, ஏழை மாணவர்களின் மருத்துவக்கல்வி உரிமையை பறித்து மாணவி அனிதாவை கொன்றது. இன்று வெளிமாநில தேர்வு மையம், சோதனை, கட்டுப்பாடு என்ற பெயரில் சி.பி.எஸ்.இ வாரியம் செய்த சித்திரவதையால் மூன்று பெற்றோர்கள் நெஞ்சு வெடித்து செத்திருக்கிறார்கள். “நீட் தேர்வை ரத்து செய்” என்று ஒட்டுமொத்த தமிழக மாணவர்களும் மக்களும் ஓராண்டாக போராடி வருகிறோம். இதையெல்லாம் மயி…க்கு சமமாகக் கூட மதிக்காத மோடி அரசு தமிழக மாணவர்களுக்கு அநீதிக்கு மேல் அநீதி இழைக்கிறது. தகுதி திறமையின் பெயரால் நடக்கும் இந்த நீட் தேர்வு என்பதே ஒரு பயங்கரவாதம்.

இன்னொரு பக்கம், அருப்புக்கேட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி 4 மாணவிகளை உயர் அதிகாரிகளின் காமவெறிக்கு பலியாக்க முயன்ற விவகாரம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் முதல் ஆளுநர் வரை சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வசமாக சிக்கிக்கொண்ட ஆளுநரோ துணைவேந்தர் அமைத்த விசாரணைக் குழுவை ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக தானே ஒரு விசாரணைக்குழு அமைத்திருக்கிறார். பி.ஜே.பி-யின் அடிமையான அ.தி.மு.க. அரசின் முதல்வரும், அமைச்சர்களும் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்கிறார்கள்.

‘இது பத்தாண்டுகள் கதை’ என்று ஆளுநர் மாளிகை, உயரதிகாரிகள் தொடர்பு பற்றி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் நிர்மலா தேவி. சூரப்புலிகள் சந்தானம் குழுவும், சி.பி.சி.ஐ.டி யும் நிர்மலா, முருகன், கருப்பச்சாமி என மூன்று பேரை மட்டும் குற்றவாளியாக்கி வழக்கை ஊத்தி மூடப்பார்க்கிறது. குற்றவாளிகளே விசாரணை கமிசன் அமைத்தால் வேறு என்ன நடக்கும்?

தமிழகத்திலுள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு RSS காரர்களை துணைவேந்தர்களாக நியமித்துள்ளார் ஆளுநர். அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மாநிலக்கல்லூரி, ராணிமேரிக்கல்லூரி ஆகியவைகளை மத்திய அரசே எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு தர அடிப்படையிலான தன்னாட்சி வழங்கியுள்ளது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.

இதன் விளைவு, புதிய பாடதிட்டங்கள், பாடப்பிரிவுகள், துறைகளை ஆரம்பிக்கவும், பேராசிரியர் தேர்வுகள், மாணவர் சேர்க்கைக்கும் UGC ன் அனுமதியைப் பெற வேண்டியதில்லை. இப்பல்கலைக்கழகங்கள் சந்தையின் தேவையையொட்டி புதிய படிப்புகளையும், திறன் படிப்புகளையும் சுயநிதி முறையில் (self financing mode) வழங்கலாம். வெளிநாட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை அனுமதித்துக் கொள்ளலாம்.

பல்கலைக்கழகங்களுக்கு அரசு வழங்கும் நிதி படிப்படியாக குறைக்கப்படும். நிதி சுமையை சமாளிக்க கல்விக் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படும். இடஒதுக்கீட்டின் அளவு குறைக்கப்படும், கல்வி உதவித்தொகைகள் நிறுத்தப்படும். கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் அண்ணா பலகலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்புகள் மறுக்கப்படும். பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை உருவாகும். ஏறத்தாழ அரசு பல்கலைக்கழகங்களை தனியார்மயப்படுத்துவதற்கான நடவடிக்கையே தர அடிப்படையிலான தன்னாட்சியாகும்.

இலஞ்ச-ஊழல் முறைகேடுகள், பாலியல் குற்றச்சாட்டுகள், தனியார்மயம் என ஒட்டுமொத்த உயர்கல்வித்துறையுமே கிரிமினல்மயமாகி மாணவ சமுதாயத்திற்கு எதிரானதாக மாறியுள்ளதையே இதெல்லாம் காட்டுகின்றன. உயர்கல்வி சீரழிக்கபப்டுவதற்கு மூல காரணமான கல்வியில் தனியார்மயத்தை ஒழித்துக்கட்டுவோம். அனைவருக்கும் தரமான – இலவச கல்வி கிடைக்க மாணவர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர்கள் குழு அமைத்து போராட்டத்தை முன்னெடுப்போம்! வாரீர்!” என்று அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.


”கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி”

நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம்

 

நாள்: மே.13  நேரம்: மாலை.5 மணி,
இடம்: கவிக்கோ மன்றம், சி.ஐ.டி காலனி,சென்னை.
( மியூசிக் அகாடமி அருகில் )

 


நிகழ்ச்சி நிரல்:

தலைமை;

தோழர் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு.

கருத்துரை;

திரு.பேரா ப.சிவக்குமார்,
மேனாள் முதல்வர், குடியாத்தம் அரசுக்கல்லூரி.

திரு.பேரா அ.கருணானந்தன்,
மேனாள் வரலாற்றுத்துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி.

திரு.பேரா அ.சீனிவாசன்,
தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு.

திரு.பேரா ஜெ.அமலநாதன்,
பொருளாதாரவியல் துறைத்தலைவர்,
புனித சவேரியர் கல்லூரி,நெல்லை.

திருமதி.பேரா சி.சாந்தி, சென்னை.

நன்றி உரை;

தோழர்.வா.சாரதி,
மாவட்ட செயலாளர், பு.மா.இ.மு. சென்னை.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல்,
சென்னை -95, 94451 12675

ஹாலிவுட் காமெராவும் அமெரிக்க பீரங்கியும் !

1

ஹாலிவுட் பணம் சம்பாதிப்பதற்கு அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன், உதவுகிறது. பதிலுக்கு, அமெரிக்காவின் கொடூரமான இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்கிறது ஹாலிவுட்.

இந்த கூட்டணியின் தயவில் முதல் படம் 1927 -ம் ஆண்டு வெளிவந்த “விங்ஸ்” (Wings). இது ஒரு விருது பெற்ற திரைப்படம். அன்று முதல் அமெரிக்க இராணுவம், ஹாலிவுட்டைப் பயன்படுத்தி தனது இழிபெயரைக் காப்பாற்றும் விதமாக 1800 திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறது. பதிலுக்கு ஹாலிவுட் அமெரிக்க இராணுவத்தின் போர்த் தளவாடங்களை திரைப்படத்தில் பயன்படுத்தி பெரும் பணத்தை ஈட்டியிருக்கிறது.

“லோன் சர்வைவர், கேப்டன் பிலிப்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், மார்வெல் – டிசி – எக்ஸ் மேன் சூப்பர் ஹீரோ வரிசைப் படங்கள் (‘Lone Survivor,’ ‘Captain Philips,’ ‘Transformers’ and Marvel DC and X-Men) அனைத்து படங்களிலும் அமெரிக்க இராணுவத்தின் தளவாடங்களை பயன்படுத்துவதற்கு பென்டகன் சம்மதித்திருக்கிறது. பதிலுக்கு இராணுவத்திற்கு ஒளிவட்டம் போட ஹாலிவுட் சம்மதித்திருக்கின்றது. இவையெல்லாம் சமீபத்திய சான்றுகள்.

ஹாலிவுட் இராணுவ சாகசப்படம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

அமெரிக்க அரசு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு, ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் இராணுவத்துடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். அதன்படி இராணுவம்தான் திரைக்கதையின் இறுதி வடிவத்தை அங்கீகரிக்க வேண்டும். பதிலுக்கு பல கோடி கோடி டாலர் செலவு பிடிக்கும் அமெரிக்க இராணுவத் தளவாடங்களை பயன்படுத்துவதற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் படம் பிடிப்பதற்கும் தயாரிப்பாளர்களுக்கு அமெரிக்க இராணுவம் உதவும்.

“எங்களை சிறுமைப்படுத்தும் எதையும் நாங்கள் ஆதரிக்கமாட்டோம்” என கடற்படையின் தகவல் தொடர்பு இயக்குநர் கேப்டன் ரஸ்ஸல் கூன்ஸ், வெளிப்படையாகவே அல்ஜசீரா தொலைக்காட்சியிடம் தெரிவிக்கிறார்.

“நாங்கள் கூறும் திரைக்கதை திருத்தங்களை தயாரிப்பாளர்கள் ஏற்கும் பட்சத்தில் அவர்களோடு ஒப்பந்தம் போடுவோம். இல்லை என்றால் அவர்கள் தமது சொந்த படத்தை சுதந்திரமாக எடுக்கலாம் – எங்களது இராணுவ தளவாட உதவி இல்லாமல்!” என்கிறார் ஹாலிவுட்டோடு பேச்சுவார்த்தை நடத்தும் இராணுவப்பிரிவின் தலைவர் பில் ஸ்ட்ரப்.

அதாவது நாட்டுமக்களின் பணத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது நலனுக்கு பயன்படுத்துவதாகவும் இதைச் சொல்லலாம். ஒரு படத்தில் ஆபாசம் இருக்கிறதா, உண்மையா – பொய்யா, கலைப்பூர்வமான வெளிப்பாடு… இவையெல்லாம் இராணுவத்தின் அக்கறைக்குரியவை அல்ல. அமெரிக்க மக்கள் தேசவெறி பிடித்து இராணுவத்தை ஆதரிக்க வேண்டும். இது மட்டுமே பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரும்புகிற விசயம்.

ஹாலிவுட் – இராணுவக் கூட்டணியின் அபாயம் என்ன?

பிரம்மாண்டமான பொழுதுபோக்கு ரசனையை திறமையுடன் உருவாக்கும் ஹாலிவுட், அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு போர்களுக்கு ஆதரவான மனநிலையை உருவாக்குகிறது. “அயர்ன் மேன், எக்ஸ்-மென், டிரான்ஸ்பார்மர்ஸ், ஜுராசிக் பார்க்” (Iron Man,’ ‘X-Men,’ ‘Transformers’ or ‘Jurassic Park III’) போன்ற படங்களில் ஏதோ வேடிக்கை காட்டுவதற்காக அமெரிக்க இராணுவம் பங்கேற்பதில்லை. அமெரிக்க மக்களை குறிப்பாக இளைஞர்களிடம் உளவியல் ரீதியாக இராணுவத்தை வழிபடும் மனநிலையை உருவாக்குகிறார்கள். இத்தகைய அப்பட்டமான வெறி யதார்த்த உலகில் பெரும் அழிவுகளையும் ஏற்படுத்துகிறது.

“கட்ஸ் அன்டு குளோரி” நூலின் ஆசிரியர் லாரன்ஸ் சூயிட், அல் – ஜசீராவிடம் கூறுவதைக் கேளுங்கள் (Lawrence Suid, author of “Guts and Glory”): “வியட்நாம் போரின் வரலாற்றை வகுப்பறையில் நான் பாடமாக நடத்தும்போது, நாம் எதற்காக வியட்நாமில் சிக்கிக் கொண்டோம் என்பதை என்னால் விளக்க முடியவில்லை. என்னால் விவரங்களையும், தேதிகளையும் கூற முடிந்தது. ஆனால் ஏன் என்ற கேள்விக்கு விடை கூற இயலவில்லை. திரைத்துறைப் படிப்பை முடித்து பட்டம் வாங்கும்போதுதான் நான் யோசித்துப்பார்த்தேன்.

ஒரு படத்தில் ஆபாசம் இருக்கிறதா, உண்மையா – பொய்யா, கலைப்பூர்வமான வெளிப்பாடு… இவையெல்லாம் இராணுவத்தின் அக்கறைக்குரியவை அல்ல.

தங்கள் நாடு ஒரு போரில் தோற்றிருப்பதாக அமெரிக்க மக்கள் ஒருபோதும் எந்த திரைப்படத்திலும் பார்த்ததே இல்லை என்ற உண்மை திடீரென்று அப்போதுதான் எனக்கு உரைத்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான்சன், “நம்மால் வியட்நாமிற்கு சென்று வெல்ல முடியும்” என்று கூறிய போது, அமெரிக்க மக்கள் அவரை நம்பினார்கள். ஏனெனில் 50 வருடங்களாக அவர்கள் பார்த்த எல்லா சினிமாக்களிலும் அமெரிக்கா ஜெயிப்பதை மட்டுமே அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

அமெரிக்க மூளையில் ஹாலிவுட் தடுப்பூசி

சூயிட் கூறுவது போல, தலைமுறை தலைமுறையாக அமெரிக்க மக்கள், இரண்டாம் உலகப் போரில் போது நார்மண்டி கடற்கரையில் இறங்கும் “தி லாங்கஸ்ட் டே” (‘The Longest Day’) திரைப்படத்தின் நாயகன் ஜான் வெயின் போன்றவர்களின் சாகசத்தை மட்டுமே பார்த்து வருகிறார்கள். அமெரிக்கா என்றாலே இரக்க குணம் கொண்ட நாயகன் என்ற பிம்பம் அவர்கள் மனதில் பதிந்திருக்கிறது. சந்தேகம் என்பதே அவர்கள் சிந்தனைக்குள் நுழைய முடியாத அளவுக்கு அமெரிக்கர்களின் மூளையில் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவர்கள் எவ்வித சந்தேகமும் இல்லாமல் அமெரிக்க இராணுவத்தின் சாகசங்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.

இப்படி இராணுவத்தை விமர்சனமற்று விதந்தோதுவதால்தான் ஹாலிவுட்டின் பெருவெற்றிப் படங்கள் அமெரிக்க மக்களின் மனநிலையை மாற்றி, 2003 இராக் போர் போன்ற ஆக்கிரமிப்புகளை ஆதரிக்க வைக்கின்றன. இராக் ஆக்கிரமிப்பு போரை ஆதரிக்கும் உளவியல் சூழலை உருவாக்கிய படங்கள்தான், ஸ்பில் பெர்க் இயக்கத்தில் வெளியான “சேவிங் பிரைவேட் ரியான்(1998)” (‘Saving Private Ryan’), ஜெர்டி பிரக்ஹெய்மர் தயாரித்த “பிளாக் ஹாவ்க் டவுண் (2001) (‘Black Hawk Down’)” போன்றவை. இத்தகைய படைப்பாளிகளைத்தான் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் தனது பெரும் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளாக கருதுகிறது.

பாதுகாப்பு அமைச்சகம் தனது கொள்கை பிரச்சாரத்திற்காக டாம் கூரூஸின் பெருவெற்றி படமான “டாப் கன் (1986)”-ஐ (Top Gun ) ஆதரித்தது மற்றுமொரு சான்று. ப்ரூக் ஹைமரை தயாரிப்பாளராகக் கொண்ட இப்படம்தான் ஹாலிவுட் – அமெரிக்க இராணுவக் கூட்டணிக்கு ஒரு மைல் கல் எனலாம். அதே நேரம் போர் எதிர்ப்பு படங்களான “அப்போகலிப்ஸ் நவ், பிளாட்டூன், ஃபுல் மெட்டல் ஜாக்கெட்” (‘Apocalypse Now,’ ‘Platoon’ and ‘Full Metal Jacket,’) போன்றவை வியட்நாம் போரில் சிக்கிய அமெரிக்காவின் நெருக்கடியை சித்தரித்ததால் இராணுவம் இப்படங்களை கடுமையாக எதிர்த்தது. வெற்றிப் பெருமிதத்துடன் அமெரிக்க ஆதிக்கத்தை கொடியசைத்து கொண்டாடும் ரீகனுடைய அரசியலின் திரை வடிவம்தான் டாப் கன் திரைப்படம். பனிப்போர் காலகட்டத்தில், வியத்நாம் தோல்வியால் துவண்டிருந்த அமெரிக்க மனத்துக்கு போடப்பட்ட முறிவு மருந்துதான் டாப் கன் திரைப்படம்.

அமெரிக்க இராணுவத்தின் பெரிய அளவிலான உதவி இல்லாமல் “டாப் கன்” திரைப்படத்தை தயாரித்திருக்கவே முடியாது. அதனால்தான் இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய இத்திரைப்படம் இராணுவம் குறித்த மக்களின் ஆதரவை பெருமளவு உயர்த்தியது. அதன் விளைவாகவே 1991 வளைகுடா ஆக்கிரமிப்பு போரின் போது 85 சதவீத மக்கள் இராணுவத்தை ஆதரித்தார்கள்.

“டாப் கன்” காலத்திலிருந்து அமெரிக்க இராணுவத்தின் பிரச்சார எந்திரம், 72 சதவீத மக்களின் ஆதரவைப் பெறுவதை சாத்தியமாக்கியிருக்கிறது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களில் 12%, ஊடகங்களில் 24%, தேவாலயங்கள் 40% மட்டுமே இராணுவத்தை ஆதரிக்கின்றனர் என்ற நிலையில் பொது மக்களின் ஆதரவு இவை அனைத்தையும் விட அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

சித்திரவதைக்கு ஆதரவான சி.ஐ.ஏ. திரைப்படம்

இப்படியான போர் ஆதரவு வேலைகளை ஏதோ பாதுகாப்பு அமைச்சகம்தான் செய்கிறது என்பதல்ல. அமெரிக்காவின் உளவுத் துறையான சி.ஐ.ஏ-வும் தனது இமேஜை உயர்த்திக் கொள்வதற்காகவும் வரலாற்றை திரிப்பதற்காகவும் இதைச் செய்கிறது.

சான்றாக, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது சார்லி வில்சனின் போர் (charlie wilson’s war, 2007) என்ற பொய்களால் நிரம்பிய திரைப்படத்தைப் பயன்படுத்தி, ஆப்கான் முஜாகிதீன்களுடன் தான் கொண்டிருந்த கடந்த கால உறவை மறைத்துக் கொண்டு, மாவீரர்களாகத் அமெரிக்காவை சித்தரித்துக் கொண்டது சிஐஏ.

அதே போல சி.ஐ.ஏ உதவியுடன் 2012-ம் ஆண்டில் வெளிவந்த “சீரோ டார்க் தர்ட்டி” (‘Zero Dark Thirty’) என்ற படம், வரலாற்றை திரித்ததோடு, கைதிகளைச் சித்திரவதை செய்வதுதான் அவர்களிடமிருந்து தகவல்களைக் கறப்பதற்கான வழி என்று அமெரிக்க மக்களை நம்ப வைத்தது.

இந்தப் படத்தின் மூல வடிவம் 2001 முதல் 2010 வரை ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி தொடர். “24” என்று பெயரிடப்பட்ட இந்த தொடருக்கும் சி.ஐ.ஏ-தான் உதவி செய்தது. எம்மி விருது பெற்ற “ஹோம்லாண்ட்” (‘Homeland,’) நிகழ்ச்சியும் சி.ஐ.ஏ புகழ் பாடியதோடு, சித்திரவதைகளையும் ஆதரித்தது. சிறந்த திரைப்படம் என்ற விருதைப் பெற்ற “ஆர்கோ”வின் கதையே (Argo – 2012) சி.ஐ.ஏ – ஹாலிவுட் கூட்டணியை அம்பலமாக்குவதுதான். இருப்பினும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுடனும் கூட்டு வைத்துக்கொண்டு, தங்களைப் பற்றிய வரலாற்று உண்மைகளை திரித்ததன் வாயிலாக சிஐஏ தனது இமேஜை பாதுகாத்துக் கொண்டது.

அமெரிக்காதான் இந்த உலகின் மிக உயர்ந்த ஜனநாயக நாடு என்றால், அதன் இராணுவமும், உளவுத் துறையும் எதன் பொருட்டு தனது குடிமக்களை திசை திருப்ப வேண்டும்? கலையின் பெயரால் உண்மைகளை ஏன் திரிக்க வேண்டும்? இதற்கான விடை தெரிந்ததுதான். அமெரிக்காதான் இந்த உலகின் மிக உயரிய ஜனநாயகம் என்று அமெரிக்க மக்களை நம்ப வைக்க வேண்டுமானால், இந்த பொய் பித்தலாட்டம் கலை கிராபிக்ஸ் எல்லாம் இருந்தால் மட்டும்தான் முடியும்!

வியட்நாம் போரில் அமெரிக்கா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து வெளிவந்த பல படங்கள் சங்கடமான பல உண்மைகளைப் புலனாய்வு செய்து வெளியே கொண்டு வந்தன. “அப்போகலிப்ஸ் நவ், கமிங் ஹோம், தி டீர் ஹன்டர், பிளாட்டூன், ஃபுல் மெட்டல் ஜாக்கெட், மற்றும் பார்ன் ஆன் தி ஃபோர்த் ஜூலை (‘Apocalypse Now,’ ‘Coming Home,’ ‘The Deer Hunter,’ ‘Platoon,’ ‘Full Metal Jacket’ and ‘Born on the Fourth of July,’) போன்ற ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் அனைத்துமே அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உதவியின்றி தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

படைப்பூக்கத்தை அழிக்கும் அமெரிக்க அதிகார வர்க்கமும் ஆதிக்கவெறி பிடித்த இராணுவ எந்திரமும் சேர்ந்து ஹாலிவுட்டின் கலையாக்க முயற்சிகளை தொட்டிலிலேயே மென்னியை நெறித்து விடுகின்றன. திரைப்படத் தயாரிப்பு தொழில் மேலும் மேலும் கார்ப்பரேட் மயமாகி வரும் இன்றைய நிலையில், குறைவான தயாரிப்பு செலவில் தனது படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வது இயக்குநர்களுக்கு மாபெரும் சவாலாக மாறி வருகிறது.

இராக், ஆப்கன் போர் எதிர்ப்பு படங்கள் ஏன் இல்லை?

வியட்நாம் போருக்குப் பின் வெளிவந்த விமரிசன பூர்வமான திரைப்படங்கள் எதுவும் இராக் படையெடுப்பின் தோல்விக்குப் பின்னர் வரவில்லை. ஆப்கான் புதைகுழியில் மீளமுடியாமல் அமெரிக்கா சிக்கியிருப்பது குறித்தும் ஹாலிவுட் படங்கள் எதுவும் வரவில்லை.

பாதுகாப்புத்துறையால் அங்கீகரிக்கப்பட்டவையும், பொய்களின் அடிப்படையிலான தேசபக்தியால் மூளையை நிரப்புபவையும், போர் ஆதரவு குப்பைகளுமான “அமெரிக்கன் ஸ்நைப்பர் மற்றும் லோன் சர்வைவ்வர் (‘American Sniper’ and ‘Lone Survivor’) போன்ற படங்களைத்தான் கண்டோம்.

சிறந்த திரைப்படத்துக்கான விருதினைப் பெற்ற 2008 இல் வெளியான “தி ஹர்ட் லாக்கர் (‘The Hurt Locker’) என்ற திரைப்படம் ஒரு விதிவிலக்கு. மெசபடோமியாவில் (இராக்கில்) அமெரிக்கா நடத்திய தோல்வியுற்ற போர் குறித்த அசிங்கமான உண்மைகளை தைரியமாக சித்தரித்த அந்த திரைப்படம் பாதுகாப்புத் துறையின் உதவி இல்லாமல் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ தொழிற் குழுமத்தின் செல்வாக்கிற்கு தெரிந்தோ தெரியாமலோ ஆட்படுவதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கும்படி அதிபர் ஐசன்ஹோவர் அமெரிக்கர்களை முன்பு ஒரு முறை எச்சரித்திருந்தார்.

ஐசன்ஹோவர் தனது தொலைநோக்கான அந்த எச்சரிக்கையில் இராணுவ தொழிற்குழுமம் என்பதுடன் கேளிக்கை என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும்.

ஏனெனில் பாதுகாப்புத்துறை – சி.ஐ.ஏ – ஹாலிவுட் கூட்டணிதான் அமெரிக்க மக்களை அறிவே இல்லாத இராணுவ வெறி பிடித்த முட்டாள்களாக மாற்றியிருக்கிறது.

முடிவே இல்லாத ஒரு போர் ஆதரவு வெறிப்பிரச்சார சுழலில் அமெரிக்கா சிக்கியிருக்கிறது. பாதுகாப்புத்துறை – சி.ஐ.ஏ – ஹாலிவுட் கூட்டணி அமெரிக்க மக்களை இராணுவ வெறியர்களாக மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய அரசிடமிருந்தும் பொழுதுபோக்கு சாதனங்களிடமிருந்தும் மென்மேலும் இராணுவ சாகசத்தை எதிர்பார்க்கிறார்கள். அலசி துவைத்து காயப்போட்டு மீண்டும் மீண்டும் எத்தனை முறை அதே சரக்கையே கடை விரித்தாலும் பார்த்து மயங்கத் தயாராக இருக்கிறார்கள்.

வருங்காலத்தில் அமெரிக்கா நடத்தவிருக்கும் தோல்வியுறும் போர்களை மென்மேலும் அதிகமாக கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கும், உலகம் முழுவதும் பலகோடி மக்களின் மரணத்திற்கு உடந்தையாக இருப்பதற்கும் அமெரிக்க மக்களைப் பக்குவப்படுதுவதற்கு இராணுவ – சி.ஐ.ஏ. – ஹாலிவுட் பிரச்சாரக் கூட்டணி உத்திரவாதமளிக்கிறது.

மைக்கேல் மெக்காஃப்ரே, ரசியா டுடேயில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

மேலும் :

The Pentagon & Hollywood’s successful and deadly propaganda alliance

பட்டர் பிஸ்கட் பிரிட்டானியாவை விட பெட்டர் பிஸ்கட் !

டசென்னை பழைய வண்ணாரப் பேட்டை, தெருவுக்கு தெரு மக்கள் சிறு தொழிலில் தினக்கூலி வேலையில் மூழ்கி வாழ்கிறார்கள். அவர்களின் பணிச் சூழலும் உழைப்பின் கடுமையும் பார்ப்பவர்களுக்கே மூச்சு முட்டுகிறது.

ஏழைக் குழந்தைகள் முதல் தொழிலாளிகள் வரை விரும்பி சாப்பிடும் பட்டர் பிஸ்கட்டுகள் இங்கு மணக்க மணக்க சுடச்சுட தயாராகிறது. அந்த பிஸ்கட் அடுமனையை நீங்களும் பாருங்கள்…

நெய் பிஸ்கட், கிரீம் பிஸ்கட், சால்ட் பிஸ்கட், ராகி பிஸ்கட், முந்திரி பிஸ்கட், எள்ளு பிஸ்கட் என்று முப்பதுக்கும் மேற்பட்ட வகைவகையான பிஸ்கட்டுகள்.

இங்கு இருக்கும் தொழிலாளிகள் பத்து ஆண்டுகள் முதல் அறுபது ஆண்டுகள் வரை தொழில் அனுபவம் உடையவர்கள். பத்து பதினைந்து வயதில் தொழிலில் நுழையும் உழைப்பாளிகளின் குழந்தைகள். அறுபது வயதான பின்னும் அதே சுறுசுறுப்புடன் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

எடுபிடி வேலை செய்யும் ஹெல்பர்களாக இத்தொழிலுக்கு வருபவர்கள் முதலில் பிஸ்கட் காலி தட்டுகள், டின்களை அடுக்கி வைப்பவர்களாகவும் போகப்போக பிஸ்கட் மாவு மிக்சிங் கலையில் வல்லுநர்களாகிறார்கள். பின்னர் பிஸ்கட் அச்சு வடிப்பதில் கைதேர்ந்தவர்களாகவும் கடைசியில் ஓவன் ஆபரேட்டர்களாகவும் தொழிலில் உச்சத்தை தொடுகிறார்கள்.

இருநூறு டிகிரி உள்வெப்பத்தில் வைக்கப்படும் பதமான மாவு அடுத்த கால் மணிநேரத்தில் மொறு மொறு பிஸ்கட்டுகளாக உருமாறி, மணக்க மணக்க வெளியே வருகிறது.

பிஸ்கட் தயாரிப்பையும் அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் விளக்குகின்றனர் கேளுங்கள்…

பிஸ்கட்டுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் தரமான மைதா மற்றும் கோதுமை மாவு, சர்க்கரை மற்றும் வனஸ்பதி. “குழைந்தைகள் பண்டம் என்பதால் இப்பொருட்களை நாங்கள் மிகவும் கவனமாக தயார் செய்வோம்.

இங்கு தயார் ஆகும் பிஸ்கட்டுகள் மறுநாளே கடைக்கு சென்று விடும். அதிகபட்சமாக ஒரு வாரத்தில் விற்றுத்தீர்ந்து விடும். மீண்டும் புது பிஸ்கட்டுகள் தான் உங்களுக்கு கிடைக்கும். ஓல்டு ஸ்டாக் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இரண்டு நாளைக்கு ஒருமுறை நாங்கள் சில்லைறை கடைகளுக்கு சரக்கு போட்டுக்கொண்டே இருப்போம். அதனால் குழந்தைகளுக்கு இதனை நீங்கள் நம்பிக் கொடுக்கலாம்.

ஆனால் பிராண்டு பெயர்களில் வரும் குட்டே , மில்க் பிக்கி, பிளாக் மேஜிக், மேரி பிஸ்கட் அனைத்தும் குறைந்தது பத்து நாட்களுக்கு பிறகு தான் தயாரிப்பில் இருந்து வெளியே வருகிறது. அந்த பிஸ்கட் விற்று தீருவதற்கு குறைந்தது ஒரு மாதமாகும்.

அதன் பேக்கிங் கண்ணை பறிக்கும் வண்ணம், குழந்தைகளின் மனசை தூண்டுகிறது. அதற்காக டி.வி. விளம்பரம், நடிகைகள் விளம்பரம் என்று பணத்தை கொட்டுகிறார்கள்.
கொடுக்கும் பிஸ்கட்டை எடை குறைத்து கொடுத்து விளம்பர செலவை சாதுர்யமாக எடுத்து விடுகிறார்கள்.

உதாரணத்திற்கு பத்து ரூபாய்க்கு எங்கள் பட்டர் பிஸ்கடின் எடை 120 கிராம் இருக்கும். ஆனால் அதே பத்து ரூபாய்க்கு அவர்கள் எழுபது கிராம் பிஸ்கட் தான் கொடுப்பார்கள்.
அதில் அளவுக்கு அதிகமாக கோக்கோ பவுடரும் மற்றும் சர்க்கரை பாகும் சேர்த்து குழந்தைகளின் நாக்கை தூண்டுகிறார்கள்.

இன்னும் ஒவ்வொரு பிராண்டு பிஸ்கட்டும் அவர்களுடைய தனிப்பட்ட பார்முலா என்று பல ரகசிய கலவைகளை சேர்க்கிறார்கள். அதனுடைய ரகசியம் யாருக்கும் தெரியாது.

குழந்தைகள் இப்பொழுது சோற்றையும், காய்கறியையும் வேப்பங்காயாக ஒதுக்கும் ரகசியம் அந்த தனிப்பட்ட பார்முலா தான்.

நாங்கள் இப்பொழுது பிராண்டு பிஸ்கட்டோடு மார்க்கெட்டில் நிற்க முடியாமல் குறைந்த முதலீட்டைக்கொண்டு தள்ளாடுகிறோம். இருந்தாலும் சோர்ந்து விடாமல் தொழிலை காப்பாற்ற புதுப்புது வியாபார உத்திகளை கையாளுகிறோம்.

இப்பொழுது “ஜார் பிஸ்கட்டுகள்” அறிமுகப்படுத்துகிறோம். தினமும் பழைய கண்ணாடி பாட்டில்களில் அடுக்கி வைத்துவிட்டு வருவதற்கு பதில் இப்பொழுது ஒவ்வொரு முறையும் பிஸ்கட்டுடன் புது ஜார்களில் கொடுக்கிறோம்.

சரக்கு தீரும் வரை பளபளப்பாக இருப்பதால் போட்டியில் நிற்க முடிகிறது. ஆனால், எப்படியும் நாங்கள் பிழைக்கக் கூடாது என்று மோடி புதுபுது உத்திகளை கொண்டு எங்களை போண்டியாக்குகிறார்.

ஜி.எஸ்.டி., ரூபாய் நோட்டு செல்லாது என்று பல ரூபத்தில் எங்களை தாக்குகிறார்கள். அவர் இந்த நாட்டு பிரதமர் என்று சொல்லிக்கிகொண்டு கார்ப்பரேட்டுகளின் சேல்ஸ் ரெப்பாக வேலை செய்கிறார். என்ன செய்வது..” என சொல்லிக்கொண்டே சிரிக்கிறார்.

– வினவு புகைப்பட செய்தியாளர்.

மோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை !

“காவிரி உரிமை : குப்புறத்தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரம் மார்கெட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தன்னாட்சி தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ. பாருங்கள்… பகிருங்கள்…

 

இதயத்தை மீட்பது எப்படி ? புதிய கலாச்சாரம் மின்னூல்

காதல், திருமணம் குறித்த கனவுகள், கற்பனைகள் இல்லாத இளைஞர்கள் இல்லை. இந்த கனவுகள், ஆசைகளைத் தாண்டி இரு பாலரையும் இணைக்கும் இந்த சமூக நிகழ்வு நம் நாட்டில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.

சமீபத்தில் சென்னை வடபழனி அருகே கோவில் பூசாரி ஒருவர், தனது குழந்தைப் பேறின்மைக் குறைபாட்டை மறைக்க மனைவியை கொலை செய்தார். சில மாதங்களுக்கு முன்பு டில்லி ரியான் பள்ளியில், தேர்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை ஒத்தி வைக்க ஒரு 11-ம் வகுப்பு மாணவன், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுவனை குத்திக் கொன்றான். கடன் சுமை காரணமாக ஆசை மகனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்றார் ஒரு வணிகர்.

காதலை எடுத்துக் கொண்டால் சாதி, மத காரணங்களுக்காக நடக்கும் ஆணவக் கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் கணக்கே இல்லை. இளைய பருவத்தை தாண்டினால் வாழ்க்கை நெருக்கடிகள் தோற்றுவிக்கும் மனச்சோர்வில் பதட்டமும் வன்முறையும் கொலைகளும் நமது சமூகத்தை பிடித்து ஆட்டுகின்றன.

உறவுகள், நட்பு, அலுவலகச் சூழல் எதுவும் நமது மக்களை உற்சாகப்படுத்தி அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு ஏதுவாக இல்லை. தனிமைப்படும் மக்களோ ஏதாவது ஒருகணத்தில் தவறிப் போகின்றனர்.

சினிமாவும், தொலைக்காட்சிகளும், விளம்பரங்களும் ஒரு மாய உலகைக் காட்டிக் கொண்டே நம்மை தூண்டில் போட்டு பிடிக்கின்றன. வீடு, பொருட்கள், இன்னும் பிற வசதிகளை நோக்கி ஓடும் நம் மக்களுக்கு அது முடிவே இல்லாத ஒரு மாய ஓட்டம் என்பது புரிவதே இல்லை.

உலகமயமாக்கத்தின் காலத்தில் பிற்போக்கு பண்புகளும், ஜனநாயக மறுப்பும், ஏழ்மையும் கலந்து கட்டி அடிக்கும் காலத்தில் நமது வதைபடும் இதயத்தை மீட்பது எப்படி? முயற்சி செய்கிறது இந்த புதிய கலாச்சார தொகுப்பு!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

இதயத்தை மீட்பது எப்படி ? – புதிய கலாச்சாரம் மே 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

 இதயத்தை மீட்பது எப்படி ?
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இதயத்தை மீட்பது எப்படி ? நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா?
  • சினிமா விமரிசனம்: காதலில் சொதப்புவது எப்படி
  • சீதை
  • பிள்ளை வளர்ப்பு : ஒரு குடும்ப வன்முறை!
  • சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!
  • சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!
  • மற்றுமொரு ஐடி காதல் கதை…
  • ‘ஐயர்’ பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?
  • ஆணி இறங்காத சுவர் – ஒரு அனுபவம்!
  • அழகு – சில குறிப்புக்கள் !
  • உங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா?
  • கெளரவம்

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

காவிரி உரிமை : திருச்சி மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு !

காவிரி உரிமை : திருச்சி மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் ரத்து !

“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!” என்ற தலைப்பின் கீழ் 10.05.2018 அன்று திருச்சி உறையூரில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்திற்கு, கடைசி நேரத்தில் போலீசு அனுமதி மறுப்பு.

இதன் காரணமாக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுகிறது !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

*****

காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!

பொதுக்கூட்டம்

நாள் : மே – 10. மாலை 6:00 மணி
இடம் : பஞ்சவர்ண சுவாமி கோவில் அருகில், உறையூர், திருச்சி.

தலைமை :

தோழர்.செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி.

கண்டன உரை:
  • திரு. மு. அப்பாவு, மாநில தணிக்கைக்குழு உறுப்பினர், தி.மு.க.
  • தோழர். நாகை மாலி, மாவட்டச் செயலாளர். சி.பி.எம். நாகை.
  • தோழர். இந்திரஜித், மாநில குழு உறுப்பினர், சி.பி.ஐ.
  • திரு. புண்ணிய மூர்த்தி, மாநிலத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்.
  • திரு. ம.ப. சின்னத்துரை, மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம். திருச்சி.
  • தோழர். அறிவழகன், தலைவர், சேம்பர் செங்கல் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்.
  • அன்பில் திரு.ரவிக்குமார், மாவட்டச் செயலாளர். சமூக நீதிப்பேரவை, திருச்சி மாவட்டம்.
  • தோழர்.மணியரசன், விவசாயி, மக்கள் அதிகாரம், செம்பரை, லால்குடி.
சிறப்புரை:
  • தோழர். ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு.
  • தோழர். காளியப்பன், மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.

ம.க.இ.க வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி

*****

தகவல் :
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

திருச்சி-94454 75157,
மணப்பாறை-98431 30911,
கரூர்-97913 01097.

காவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை !

“காவிரி உரிமை : குப்புறத்தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரம் மார்கெட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ. பாருங்கள்… பகிருங்கள்…

நிர்மலா தேவி : சந்தானம் விசாரிப்பாரா, சாட்சிகளைக் கலைப்பாரா ?

0

துரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு (SAVE MKU COALITION) சார்பாக ஊழலை ஒழிப்போம்! உயர்கல்வியைக் காப்போம்!
என்ற முழக்கத்தின் கீழ் மதுரை கே.கே.நகர், நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கத்தில் 04.05.2018 அன்று மாலை அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

ம.கா.ப.க.பா கூட்டமைப்பின் துணைத் தலைவர் பேராசிரியர் பெ. விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். “தெ.பொ.மீ.,மு.வ.,வ.சுப. மாணிக்கம் போன்ற அறிஞர்கள் அமர்ந்து கண்ணும் கருத்துமாக வளர்த்த இந்தப் பல்கலைக் கழகம் இன்று கிரிமினல்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அவர்களிடமிருந்து பல்கலையை மீட்கிற பொறுப்பும் கடமையும் நம் எல்லோருக்கும் இருக்கிறது” என்று கூறினார்.

தலைமை ஏற்றுப் பேசிய கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் . சீனிவாசன் பேசும்போது, ”பல்கலைக் கழகத்தின் சிறப்பு விருந்தினர் மாளிகையில் நிர்மலா தேவியை தங்க வைத்ததற்கு யார் பொறுப்பு? பல்கலைக் கழகத்தின் தலைவராக இருக்கும் துணை வேந்தருக்குத் தெரியாமல் இது நடக்குமா? அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

பேராசிரியர் அ. சீனிவாசன்

ஒரு பல்கலைக் கழகம் இப்படி பாலியல் பிரச்சினையில் சிக்கிச் சீரழியும் நிலையில் நாம் யாரை நம்பி நம் பிள்ளைகளை அனுப்புவது? நாங்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பு மக்களும் இணைந்து போராடி பல்கலைக் கழகத்தின் மாண்பைக் காப்பாற்ற வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் ம.கா.பல்கலைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் பேசியதாவது:

சி.பி.சி.ஐ.டி.க்கு சில கேள்விகள்

”நிர்மலா தேவி கூறிய அந்த உயர் அதிகாரிகள் யார்? துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாடு அதிகாரிகள், டீன் மற்றும் இயக்குனர்கள் தானே. அவர்களை எல்லாம் இதுவரை ஏன் விசாரிக்கவில்லை? பல்கலைக் கழக வளாகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன. அவற்றை ஏன் ஆய்வு செய்யவில்லை? சி.பி.சி.ஐ.டி.விசாரணை கண்துடைப்பு நாடகம். நிர்மலா தேவி, முருகன், கருப்பையாவை வைத்து வழக்கை முடித்துவிடலாம் என்று முயற்சி நடக்கிறது.

சாப்பாடு முதல் அனைத்து ஏற்பாடுகளையும் மனித வள மேம்பாட்டு மைய இயக்குனர் கலைச்செல்வன் தான் பார்த்துக்கொள்கிறார், அதற்கு ஆதாரம் இருக்கிறது. அப்படியானால் சி.பி.சி.ஐ.டி.விசாரணை என்ன ஒழுங்கில் நடக்கும்? பேராசிரியர் சீனிவாசனைக் கூலிப் படை வைத்துத் தாக்கிய வழக்கிலிருந்து கல்யாணி மதிவாணன் மற்றும் 4 பேரை காவல்துறை நீக்கியது போல இந்த மூன்று பேரை மட்டும் வைத்து வழக்கை முடிக்க முயற்சி நடந்து வருகிறது.”

கவர்னர் விசாரணை கமிசன் அமைக்க சட்டப்படி அதிகாரம் இல்லை :

”பல்கலைக் கழக விதிமுறைகளிலோ, தனியார் கல்லூரி விதிமுறைகளிலோ இடமில்லை. கவர்னர், மாநில அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்படுகிறவர். வேறு தனிப்பட்ட அதிகாரம் மாநிலத்திற்குள் அவருக்கு இல்லை. விசாரணை ஆணையம் அமைக்க அரசுக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது. சந்தானம் சிறைக்குள் போய் விசாரணை நடத்துகிறார். நீதிமன்ற காவலில் உள்ள ஒருவரை விசாரிக்க வேண்டுமானால் மாவட்ட நீதிபதியிடம் அனுமதிபெற வேண்டும். சந்தானம் எந்த அனுமதியும் பெறாமல் எப்படி விசாரிக்கிறார். அவர் சாட்சிகளைக் கலைக்க மாட்டாரா?

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்

கடந்த 10 ஆண்டுகளாகத் துணைவேந்தர்கள் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். தகுதி இல்லாதவர்களை கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்கின்றனர். குற்ற வழக்கில் சிக்கியவர்கள் துணை வேந்தர்களாக வந்தால் எப்படி இருக்கும்? மதுரை காமராசர் பல்கலை துணை வேந்தர் செல்லதுரை நியமனத்தை எதிர்த்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பெயரால் வழக்குப்போடப்பட்டு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் தீர்ப்பு சொல்லப்படாமல் தலைமை நீதிபதியிடம் உள்ளது.

தேடுதல் குழு உறுப்பினர்கள் அர்சத் மேத்தா, ராமகிருஷ்ணன் ஆகியோர்  கடைசி நேரத்தில் சென்னை கவர்னர் மாளிகை அருகில் உள்ள ‘லெமன் டிரீ’ ஓட்டலில் கன்வீனர் முருகதாஸ் தங்களை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக உயர் நீதிமன்றத்தில் வாக்கு மூலம் தாக்கல் செய்துள்ளனர். முறைகேடாகப் பதவிக்கு வந்தவர்கள் முறைகேடாகப் பணம் சம்பாதிக்கிறார்கள். அதற்கு பேராசிரியர்களையும் மாணவியர்களையும் கிரிமினல்களையும் பயன்படுத்துகின்றனர். இது மதுரையின் பிரச்சினை. எல்லோரும் இணைந்து போராடவேண்டும்.”

ம.கா.பல்கலை பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயலாளரும், மதுரைக் கல்லூரியின் மேனாள் முதல்வருமான பேராசிரியர் இரா.முரளி பேசியது:-

”பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு பயனில்லை. மக்களை முற்றுகையிட வேண்டும். உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்வி நிறுவனத்தில் நடக்கும் சீரழிவுகளைத் தட்டிக் கேட்க முன்வாருங்கள். போராட வாருங்களென்று மக்களைத் திரட்ட வேண்டும். அமெரிக்காவில் பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்குச் சென்ற போது அந்தப் பல்கலையின் வரவேற்பு அறையில் 30-க்கும் மேற்பட்டவர்களின் புகைப்படங்களைப் பார்த்தேன். அவர்கள்  அனைவரும் நோபல் பரிசு பெற்றவர்கள். அந்தப் பல்கலையில் படித்தவர்கள்.

பேராசிரியர் இரா.முரளி

ம.கா. பல்கலையில் யாருடைய படத்தை வைப்பது? அதையும் இதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நமது உயர்கல்வியின் தரம் பாதாளத்தில் இருப்பது தெரிகிறது.

நிர்மலா தேவி விவகாரம் சமூக ஊடகங்களில் வெளிவந்த உடன் பரபரப்பு காணப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் பல்கலை உயர் அதிகாரிகள் என்று நிர்மலா தேவி கூறியுள்ளார். பல்கலை உயர் அதிகாரிகள் துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாடு அதிகாரிகள், டீன் மற்றும் இயக்குனர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாயில் கூட்டம் போட்டு பேசிய சங்க நிர்வாகிகளை இட மாற்றம் செய்துள்ளனர்.

இது அப்பட்டமான பழி வாங்கும் நடவடிக்கை. பல்கலைக் கழகத்தின் மாண்பினைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை மூலம் நிர்வாகம் மிரட்டுகிறது. பல்கலைக் கழகப் பாதுகாப்புக் கூட்டமைப்பில் உள்ள முன்னாள் பேராசிரியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்திவிடுவதாக மிரட்டுகிறார்கள். அடியாள் ரேஞ்சுக்கு அவர்களது நடவடிக்கை போகிறது. நாம் நடத்துகிற இந்தக் கூட்டத்தைக் கண்டித்து நலம் விரும்பிகள் என்ற பெயராலே சுவரொட்டி ஒட்டுகிறார்கள். இதைப் பார்க்கிற மக்கள் அவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.

பல்கலைக் கழகப் பாதுகாப்புக் கூட்டமைப்பைப்பின் அரங்கக் கூட்டத்தைக் கண்டித்து நலம் விரும்பிகள் என்ற பெயராலே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

மதுரை காமராசர் பல்கலையை மட்டும் பாதுகாத்தால் போதாது. தமிழ் நாட்டில் உயர் கல்வியைப் பாதுகாக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைக்கின்றனர் இந்தப் பல்கலைக் கழகம் நமது தாய் வீடு போன்றது. எவ்வளவு பேருடைய உழைப்பின் பலனாய் விளைந்தது. மீனாட்சி கோவிலைப் போன்றது. வைகையை மட்டும் சுத்தப்படுத்தினால் போதாது ம.கா.பல்கலையையும் சுத்தப்படுத்த வேண்டும்”.

சிறப்புரை ஆற்றிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசும்போது,

”மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் பாலியல், ஊழல், முறைகேடு சீரழிவுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த அந்த நான்கு மாணவிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மதுரை பல்கலைக் கழகம் மட்டும் அல்ல. அனைத்துப் பல்கலைக் கழகங்களும் முடை நற்றம் வீசுகின்றன. இவற்றை எதிர்த்துப் போராடினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன் அனுமதி இன்றி தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் அச்சுறுத்துகிறது.

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்

வெளிப்படையாக பேசாத உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் டெல்லியில் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள். பேராசிரியர்கள் ஏன் பேட்டி கொடுக்கக் கூடாது? பல்கலைக் கழகங்களை விட நீதிமன்றங்கள் முக்கியமானது. விசாரணை அமர்வுகளை அமைப்பதில் வெளியாட்களின் தலையீடு உள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்த வெளியாட்கள் யார் ? இங்கே உயர் அதிகாரிகள் யார்?

குஜராத்தில் சோராபுதீன் கொலை வழக்கில் அமித் ஷா குற்றவாளி. அந்த வழக்கை  விசாரித்த நீதிபதி லோயா மிரட்டப்படுகிறார். தலைமை நீதிபதி மொகித் ஷா லோயாவிடம் 100 கோடி பேரம் பேசுகிறார். அதற்கு சம்மதிக்காத லோயா மர்மமான முறையில் இறக்கிறார். அவர் மாரடைப்பு வந்து இறந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தார் சொல்கின்றனர். கேரவன் பத்திரிக்கை இதைப் பற்றி எழுதுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் அது கொலை அல்ல என்று பேட்டி கொடுக்கின்றனர். பேராசிரியர்கள் மட்டும் ஏன் பேட்டி கொடுக்கக் கூடாது? 30/12/2017 -ல் அமித் ஷா விடுதலை செய்யப்படுகிறார். சி.பி.ஐ. மேல் முறையீடு செய்யவில்லை. சிறப்புப் புலனாய்வு கோரி வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர். வழக்கு மும்பையிலிருந்து டெல்லிக்குச் செல்கிறது. அந்த வழக்கை தலைமை நீதிபதி தானே முன்வந்து எடுத்து அதைத் தள்ளுபடி செய்கிறார். தலைமை நீதிபதியே அப்படி இருக்கிறார்.

பல்கலைக் கழகங்கள் இவ்வாறு சீர்கேடு அடைந்து இருப்பதற்கு காரணம் கல்வி தனியார்மயம் ஆக்கப்பட்டதுதான். தெ.பொ.மீ., மு.வ., லட்சுமண சாமி முதலியார்., மால்கம் ஆதிசேசையா., நே.து.சு., போன்றவர்கள் இருந்தபோது ஊழல் இல்லை. தலைமைச் செயலாளர் முதல் கல்வி அமைச்சர்கள் வரை அவர்களைத் தேடிப் போய்ப் பார்ப்பார்கள்.

ஆனால் இன்றைக்கு துணைவேந்தர்களாக இருப்பவர்கள் கீழ் நிலை அதிகாரிகளின் காலடியில் காத்துக் கிடக்கின்றனர். இதைத் தான் மார்க்ஸ் முதலாளித்துவத்தில் புனிதம் கெட்டுவிட்டது என்று சொன்னார்.

ஆளுனர் புரோகித் மீது குற்றத்தின் நிழல் படிந்துள்ளது. அவரே விசாரணைக் கமிசன் அமைக்கக்கூடாது. “No man can be a judge to his own cause” என்று சொல்வார்கள். நான் நீதிபதியாகப் பணியாற்றிய போது என் மனைவி வேலைசெய்த இடத்திலிருந்து வந்த வழக்கை நான் விசாரிக்கவில்லை.

பேராசிரியர் அ. சீனிவாசன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து 17.05.2014 அன்று தி ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியான செய்தி

அது போல் எனது மருத்துவர் தொடர்பான வழக்கு வந்தபோதும் நான் வேறு அமர்வுக்கு அனுப்பி விட்டேன். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இது பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அருணாசலப் பிரதேச முதல்வர் இறப்பு தொடர்பாக அவரது மனைவி தலைமை  நீதிபதி கேஹருக்கு கடிதம் எழுதினார். அவர் மீது குற்றத்தின் நிழல் படிந்திருந்தது. அவர் அந்த வழக்கை விசாரித்திருக்கக் கூடாது என்று ஏ.பி.ஷா குறிப்பிடுகிறார். இது புரோகித்துக்கு முற்றிலும் பொருந்தும்.

தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது ஒரு வழக்கில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில்  நடந்த லஞ்ச ஊழல் தொடர்பாக, ஒரிசா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குத்தூஸிடமிருந்து ரூ.2 கோடி லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தவழக்கில் தீபக் மிஸ்ரா சம்பந்தப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அதை தள்ளுபடி செய்து அவருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தார். தற்போது தீபக் மிஸ்ராவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி பாராளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டுவர காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் தீர்மானம் தாக்கல் செய்தனர். அதனை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தள்ளுபடி செய்தார். ஆனால் ஹாதியா வழக்கில் தேவை இல்லாமல் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடுகிறது.

2009ல் இலங்கையில் இனப் படுகொலை நடந்த போது இலங்கை அரசு உள் நாட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. தமிழக சட்ட மன்றத்தில் பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வினோதமான தீர்ப்பை வழங்கியுது. சசி கலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும்  குன்ஹா தீர்ப்பையும் ஜெயலலிதாவுக்கு மட்டும் குமாரசாமி தீர்ப்பையும் வழங்கியது.

நீதித் துறையே சீரழிந்தும் காவி மயமாகியும் வரும்போது பல்கலைக் கழகங்களும் உயர் கல்வித் துறையும் அவ்வாறு மாறுவதில் வியப்பு என்ன இருக்கிறது? நீதித் துறையின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. அவசர கால நிலைமையை விட தற்போதைய நிலைமை மோசமாக இருக்கிறது. நீதிபதி கிருஷ்ண பட் மீதான பாலியல் குற்றச்சாட்டு, நீதிபதிகளுக்கு விடப்படும் மிரட்டல், நீதிபதிகள் ஜோசப் குரியன், பால் வசந்த குமார் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் போன்றவர்களுக்கு அவர்கள் காவிக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பதாலேயே உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.

அதுபோலத்தான் தமிழ் நாட்டிலும் சட்டப் பல்கலைக்கு ஆந்திராவிலிருந்தும் அண்ணா பல்கலைக்குக் கர்நாடகாவிலிருந்தும், இசைப் பல்கலைக் கழகத்திற்கு கேரளாவிலிருந்தும் காவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். மேகாலயா கவர்னர் சண்முக நாதன் ஆர்.எஸ்.எஸ்.காரர் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில ஆளுநர்களின் அதிகாரம் பற்றி அம்பேத்கரின் கருத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிற குடியரசுத் தலைவருக்கே நம்முடைய அரசமைப்பில் அதிகாரம் இல்லை என்கிறபோது அவரால் நியமிக்கப்படுகிற கவர்னருக்கு ஏது அதிகாரம் என்பதுதான். சி.பி.ஐ.விசாரணை மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. சென்னை உயர்  நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலை வழக்கை சி.பி.ஐ. பல ஆண்டுகளாக விசாரித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. ம.கா.பல்கலைப் பிரச்சினையில் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடைபெற்றால் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

தீர்வு என்ன?

மாணவர்களுக்காகத்தான் ஆசிரியர்கள். கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கு மாணவர்கள்தான் முன் நின்று போராட வேண்டும். அதன் பிறகு தான் ஆசிரியர்கள், பொது மக்கள். மக்களுக்கு பணி செய்யத்தான் நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனரே தவிர நீதிபதிகளுக்காக மக்கள் இல்லை. அதுபோலத்தான் ஆசிரியர்களும். மாணவர்கள் சங்கமாகத் திரள வேண்டும். ஏற்கனவே மாணவர் சங்கம் இருந்தது. இப்போது இல்லை.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 19 (1) சி சங்கம் வைக்கும் உரிமையைத் தருகிறது. இது மாணவர்களுக்கான அடிப்படை உரிமை. அதற்காகப் போராட வேண்டும். வாக்குரிமை வயது வரம்பு 21 ஆக இருந்தது தற்போது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது எதனால்? அவர்களுக்கு அரசியல் சமூக புறச்சூழலைப் புரிந்துகொள்ளும் திறன் 18 வயதில் வந்துவிடுகிறது என்பதனால்தான்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஈழப் படுகொலைக்கு எதிரான போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் மணவர்களால் முன்னெடுக்கப்பட்டதுதானே! ”ஆசிரியர்கள் மாணவர்களைத் தயார்படுத்த தவறிவிட்டனர்.” என்று பேராசிரியர் சிவகுமார் கூறியது சரிதான். மாணவர்களைஅரசியல்படுத்த வேண்டும்.” இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் பேசினார்.

கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் முரளி  நிறைவாக, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை துணை வேந்தர், பதிவாளர் பணி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

கூட்டமைப்பின் பொருளாளர் ஆய்வாளர் .ஜெகன்னாதன், உயர்கல்வித் துறையில் சாதியும் மதமும் புகுந்துள்ளது வெட்கக் கேடானது என்ற தனது கருத்தைப் பதிவு செய்தார்.

கூட்டத்தில் 350 பேர்வரை கலந்துகொண்டனர். முன்னாள், இன்னாள் பேராசிரியர்கள், அலுவலர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், தொழிசங்கங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு இட்துசாரி, புரட்சிகர அமைப்பைச் சேர்ந்தவர்கள், இசுலாமியர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஊடகங்கள் நீதிபதியை பேட்டிகண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.
தொடர்புக்கு : 94434 71003.

தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் !

காவிரி விவகாரத்தில், மைய பா.ஜ.க. அரசு – கர்நாடக காங்கிரசு அரசு – உச்சநீதி மன்றம் ஆகிய மூன்று அதிகார உறுப்புகளின் கூட்டுச் சதிக்கு எதிராகவும், எடப்பாடி கும்பலின் துரோகம்-அடிவருடித்தனத்திற்கு எதிராகவும் தமிழகம் குமுறிக் கொண்டிருக்கும் வேளையில், நம் மீது கொத்துக் குண்டுகளை வீசியெறிவதைப் போல, காவிரிப் படுகையில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கான திட்டங்களைத் தயாரித்து, இக்கிணறுகளுக்கான உரிமங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் வாரிக் கொடுக்கும் முடிவையும் எடுத்திருக்கிறது, இந்திய அரசு.

இக்கிணறுகளைக் குத்தகைக்கு எடுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, அங்கு கச்சா எண்ணெய் முதல் மீத்தேன், ஷேல் கேஸ் வரை எதனையும் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும் அனுமதி வழங்கப்படும்.

இதுவொருபுறமிருக்க, நாகை மாவட்டம் நரிமணத்தில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்யும் நோக்கில், அப்பகுதியில் 600 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி ஒப்படைக்கும்படி எடுபிடி எடப்பாடி அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது, மோடி அரசு. இந்த விரிவாக்கத்திற்கு ஏற்ப புதிய கச்சா எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டும் அபாயமும் எழுந்து நிற்கிறது.

காவிரி டெல்டா பகுதியில் எத்துணை கிணறுகள் உள்ளன, அவற்றுள் எத்துணை கிணறுகளில் உற்பத்தி நடைபெறுகிறது என்பதே மர்மமாக உள்ள நிலையில், இயக்கப்படும் எந்தவொரு கிணற்றுக்கும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறப்படவில்லை என்பதும் அம்பலமாகியிருக்கிறது.

”நாங்கள் அளிக்கும் விண்ணப்பத்திற்கு மூன்று மாதங்களுக்குள் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் பதில் அளிக்கவில்லை என்றால், உரிமம் வழங்கியதாகக் கருதப்படும் என்று எங்களது விதிமுறைகள் தெரிவிக்கின்றன” எனப் பதில் அளித்து, இந்த நாட்டாமைத்தனத்தை நியாயப்படுத்தியிருக்கிறார், ஓ.என்.ஜி.சி.யின் காரைக்கால் யூனிட் நிர்வாக இயக்குநர் குல்பீர் சிங். தமிழகக் காவிரிப் படுகை இனி ஓ.என்.ஜி.சி.யின் காலனி என்பதுதான் இந்த விளக்கத்தின் பொருள்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் கச்சா எண்ணெய்-ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்றப்படும் அபாயகரமான நிலையில், பா.ஜ.க.வின் பினாமி எடப்பாடி அரசு காவிரிப் படுகையில் புதிதாக 9 மணல் குவாரிகளைத் திறக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தமிழகமெங்கும் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூடுமாறு உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றம் சென்று; இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்று, அதனைப் பயன்படுத்தி இந்த 9 மணல்குவாரிகள் உள்ளிட்டுப் புதிதாக 21 மணல் குவாரிகளைத் திறக்கும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இந்தப் புதிய மணல் குவாரிகளோடு, பழைய குவாரிகள் உள்ளிட்டு அனைத்தையும் இயக்கும் பொறுப்பை முழுமையாகத் தனியாரிடம், அதாவது தமது பினாமிகளிடம் ஒப்படைக்கும் முடிவையும் சந்தடி சாக்கில் எடுத்திருக்கிறது, இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். கொள்ளைக்கூட்டம்.

இவையும் போதாதென்பது போல, நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தைத் திறக்கும் அனுமதியையும் அளித்து, தமிழக மக்களின் மீது இன்னொரு இடியை இறக்கியிருக்கிறது, இந்திய அரசு. நியூட்ரினோ திட்டத்திற்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகள் குறித்துப் புதிதாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் மட்டுமே புதிய அனுமதியைத் தமிழக அரசிடமிருந்தும் மைய அரசிடமிருந்தும் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைக் கழிப்பறைக் காகிதம் போலத் துடைத்துப்போட்டுவிட்டு, சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து குறுக்கு வழியில் புதிய அனுமதியை அளித்திருக்கிறது, மோடி அரசு.

மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் சட்ட விதியின் ஒரு பிரிவு, கட்டிடங்கள் கட்டுவதற்குச் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டியதில்லை எனச் சலுகை அளிக்கிறது. இந்தச் சட்டபூர்வ ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் கட்டிடம்தான் கட்டப் போவதாகக் கூறி, அதனால் புதிய ஆய்வு நடத்த வேண்டியதில்லை என மறுத்து நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது, மோடி அரசு.

நியூட்ரினோ திட்டம் அமையவுள்ள தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையை, 1,000 டன் எடையுள்ள ஜெலட்டின் வெடிமருந்தை 800 நாட்கள் வெடிக்க வைத்து, அதன் மூலம் 11 இலட்சத்து 25 ஆயிரம் டன் பாறைகளைத் தகர்த்துதான் இந்த ஆய்வகத்துக்கான குகையை அமைக்கவிருக்கிறார்கள் எனக் கூறப்படும் நிலையில், அங்கே கட்டிடம்தான் கட்டப் போவதாக மோடி அரசு கூறியிருப்பது அயோக்கியத்தனமானது மட்டுமல்ல; தமிழக மக்களைக் கிள்ளுக்கீரைகளைவிடக் கேவலமாக எண்ணும் அதனின் திமிரையும் வெளிப்படுத்துகிறது.

”நியூட்ரினோ ஆய்வு புதிய திட்டமல்ல” எனக் கூறி, மைய அரசின் அனுமதிக்கு ஒத்தூதியிருக்கும் எடப்பாடி அரசு, தன் பங்குக்கு தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை 640 ஏக்கர் பரப்பில் விரிவாக்கும் திட்டத்திற்குப் பகுதி மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய காகிதச் சட்ட நடைமுறையைக்கூடப் புறக்கணித்துவிட்டு ஒப்புதல் அளித்திருக்கிறது.

மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலை, விரிவாக்கத்திற்குப் பிறகு ஊருக்கு மிக அருகாமையில், 150 மீட்டர் தொலைவில் அமையும் எனப் பொதுமக்கள் கூறிவரும்போது, எடப்பாடி அரசோ ஆலையின் விரிவாக்கம் சிப்காட் வளாகத்திற்குள்தான் அமையவுள்ளது எனத் துணிந்து பொய் சொல்லி, அதனால் பொதுமக்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமும் இல்லை எனக் கூறிவிட்டது.

இந்த நாசகார ஆலை சுற்றுப்புறச் சூழல் விதிகளைத் துடைத்துப்போட்டுவிட்டுதான் இயங்கி வருகிறது என்பதைப் புதிதாக நிரூபிக்க வேண்டியதில்லை. விஷவாயுக் கசிவு, ஆலைக்குள் நடந்த விபத்துக்கள், தோல் நோய், புற்று நோயால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் என ஸ்டெர்லைட் உருவாக்கியிருக்கும் நாசத்திற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இந்தக் குற்றங்களுக்காக 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலித்து, ஆலை நிர்வாகத்திற்குப் பொதுமன்னிப்பு அளித்து, ஆலையை இயங்க அனுமதி அளித்த யோக்கிய சிகாமணிகள்தான் உச்சநீதி மன்ற நீதிபதிகள்.

இந்த விரிவாக்கத்திற்கு எதிராக குமரரெட்டியாபுரம், பதியம்புத்தூர், சிறீபெரும்புதூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 40 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்டு எட்டு பேர் மீது பொய்வழக்குப் போட்டு, அடக்குமுறைகளின் மூலம் போராட்டத்தை ஒடுக்குகிறது, தமிழக அரசு.

காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவைத் தனித்தனிப் பிரச்சினைகள் அல்ல. அனைத்திலும் சட்டம், விதிகள், மரபுகள் அனைத்தையும் அலட்சியமாக மீறி, ஆணவமாகத் தூக்கியெறிந்துவிட்டுத் தமிழகத்தின் மீது ஒரு போரைத் தொடுத்திருக்கிறது மோடி அரசு.

இந்தப் போரில் இந்து மதவெறிக் கும்பலின் காலாட்படையாகச் செயல்படுகிறது, எடப்பாடி அரசு. இதுவொரு போர் என்ற உண்மையைத் தமிழக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். போரை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ, அப்படி இதனை எதிர்கொள்ள வேண்டும்.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

வேதாரண்யம் – “வேலை கொடு” மே நாள் போராட்டம் !

மே நாளை வேதாரண்யம் வட்டார விவசாயிகள் போராட்ட தினமாகக் கடைபிடித்தனர். காவிரியில் நீரில்லை என்பது மட்டுமல்ல, நூறு நாள் வேலையும் இல்லை என்ற காரணத்தால் அரைப்பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இப்பகுதி மக்களை போராட்டத்துக்கு ஒன்று திரட்டியது மக்கள் அதிகாரம் அமைப்பு.

ஆதனூர், அண்டர்காடு, கோவில்தாழ்வு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டனர். “விவசாயிகளை சாகடிக்காதே! காவிரி மேலாண்மை வாரியம் அமை! நூறு நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்து! மீத்தேன் திட்டத்தை கைவிடு !” என்ற முழக்கங்களுடன் வேதாரண்யம் கடைவீதியில் திரண்டனர் மக்கள்.

திரண்டு வரும் மக்களை அச்சுறுத்துவதற்கு ஏழு வாகனங்களில் போலீசு தயாராக நின்ற போதிலும் மக்கள் பின்வாங்கவில்லை. பேரணியின் முடிவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டது. ”சாலைமறியல் வேண்டாம். அதிகாரிகள் வந்திருக்கின்றனர் . பேச்சுவார்த்தை நடத்துங்கள்” என்றனர் போலீசு அதிகாரிகள். அதை ஏற்க மறுத்த பெண்கள் சாலையை மறித்து போராடத் தொடங்கினார்கள். ”சாலை மறியல் செய்தால் கைது செய்வோம்” என்றார் ஒரு போலீசு அதிகாரி. ”கைது பண்ணினா என்ன, கழுத்தையா அறுப்பே” என்று பெண்கள் பதிலடி கொடுத்தனர்.

சாலை மறியல் செய்தால் கைது செய்வோம் என்றார் ஒரு போலீசு அதிகாரி. கைது பண்ணினா என்ன, கழுத்தையா அறுப்பே என்று பெண்கள் பதிலடி கொடுத்தனர்.

தலைமை தாங்கிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்களை பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைக்க, ”நீங்கள் மக்களிடம் நேரடியாகப் பேசுங்கள்” என்றார் அமைப்பாளர் தோழர் தனியரசு. “எல்லோருக்கும் நூறு நாள் வேலை கொடுக்க முடியாது நாற்பது பேருக்குத்தான் தர முடியும்” என்றார் அதிகாரி. ”ஒவ்வொரு தேர்தலுக்கும் 40 பேர் மட்டும் ஓட்டு போட்டால் ஒத்துக்கொள்வீர்களா?” என்று கேள்வி எழுப்பினார் ஒரு மூதாட்டி. ”4 நாள் அவகாசம் கொடுங்கள் நாங்கள் வேலைக்கு உத்தரவாதம் தருகிறோம்” என்று அவகாசம் கேட்டனர் அதிகாரிகள். “4 நாட்களுக்குள் வேலை கொடுக்கவில்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறுவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்கள் மக்கள்.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடிப்பது பற்றியும், மீத்தேன் திட்டம் திணிக்கப்படுவதையும் விளக்கிப் பேசினர்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல்:
மக்கள் அதிகாரம்,
வேதாரண்யம்.

இணைய வணிகத்தின் பின்னால் வதைபடும் அடிமைத் தொழிலாளர்கள் !

8

 

ன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணினி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கைத்தொலைபேசியில் சொடுக்கி வாங்கி விடலாம். நாம் வாங்கிய பொருள் அடுத்த நாளே வீடு தேடி வரும்.

முந்திய காலங்களைப் போல வெளியே கடைக்குச் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கும் தொழில்நுட்ப அதிசயத்தை எண்ணி வியக்கிறோம். வருங்காலத்தில் தெருக்களில் கடைகளைக் காண முடியாமல் போகலாம். இணையக் கடைகளின் பெருக்கம் காரணமாக, பல பெரிய நிறுவனங்களின் அங்காடிகள்கூட விற்பனையின்றி மூடப்படுகின்றன.

மறுபக்கத்தில், இணையக் கடைகளுக்கான களஞ்சிய அறைகள், விநியோக மையங்கள் என்பன திறக்கப்படுகின்றன. அவை நகரத்திற்கு வெளியே ஒதுக்குப்புறமான இடங்களில் அமைக்கப்படுகின்றன. இணைய சேவை காரணமாக இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தூங்காமல் இரவிரவாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றியது இந்தக் கட்டுரை.

என்னதான் நவீன தொழில்நுட்பம் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கினாலும், உழைப்புச் சுரண்டல் மட்டும் மாறுவதில்லை. கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தைவிட, அது இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தக் கட்டுரையை எனது சொந்த அனுபவத்தில் இருந்து எழுதுகிறேன். நான் குறைந்தது ஒரு வருடமேனும் தபால் துறையில் வேலை செய்திருக்கிறேன். சில மாதங்கள், விநியோக மையத்தில் பார்சல் தரம் பிரிப்பவராக செய்த வேலைதான் மிகவும் கடினமானது. அடிமை வேலைக்கு ஒப்பானது.

2012-ஆம் ஆண்டளவில், நான் வசிக்கும் நெதர்லாந்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது. எல்லா இடங்களிலும் வேலையில்லாப் பிரச்சினை. வேலை எங்கே தேடியும் கிடைக்காத நிலைமை. நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு எடுப்பதைவிட, இருப்பவர்களின் வேலையை பறிப்பதில் ஆர்வமாக இருந்தன.

அத்தகைய பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலும், பார்சல் தரம் பிரிக்கும் நிலையத்தில் மட்டுமே வேலை வாய்ப்பு இருந்தது. அப்போது அது வளர்ந்து வரும் நவீன தொழிற்துறை என ஊடகங்களால் புகழப்பட்டது. அங்கே சென்ற பிறகுதான், எதற்காக அந்த தொழிற்துறையில் மட்டும் வேலையாள் பற்றாக்குறை நிலவுகின்றது என்பது தெரிய வந்தது.

நெதர்லாந்து நாட்டின் தபால்துறை முழுக்க முழுக்க PostNL என்ற தனியார் நிறுவனத்தினால் நடத்தப்படுகின்றது. இது முன்பிருந்த அரசுத் தபால்துறையின் தொடர்ச்சி ஆகும். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த நூறு சதவீத தனியார்மயமாக்கல் காரணமாக, ஆயிரக்கணக்கான தபால்துறை ஊழியர்கள் வேலையிழந்தனர்.

PostNL நிறுவனத்தின் பார்சல் வகைபிரிக்கும் பகுதி.

முந்திய காலங்களைப் போல தற்போது யாரும் கடிதங்கள் எழுதுவதில்லை. இன்று உலகம் முழுவதும் அப்படித்தான். கடிதப் போக்குவரத்து மின்னஞ்சல் ஆகி, அது பின்னர் வாட்ஸ் – ஆப் வரை வந்து விட்டது. கடிதங்களை மட்டுமல்ல, முத்திரைகளைக்கூட கண்ணால் கண்டிராத தலைமுறை ஒன்று உருவாகி விட்டது.

தனியார்மயப்படுத்தப்பட்ட தபால் நிறுவனம், அதைக் காரணமாகக் காட்டியே தபால்காரர்களின் வேலை நேரத்தைக் குறைத்து விட்டது. நான் சுமார் ஒரு வருடமாவது தபால்காரர் வேலை செய்துள்ளேன். தற்காலத்தில் அது ஒன்றும் பெருமைக்குரிய வேலை அல்ல. நிச்சயமற்ற தன்மை காரணமாக பலர் அந்த வேலையை தெரிவு செய்வதில்லை.

வாரத்திற்கு ஐந்து நாட்கள் வீடுகளுக்கு தபால் போடும் வேலை செய்து, வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடியாது. ஏனெனில், வேலை நேரம் மிகக் குறைவு. மொத்தம் வாரத்திற்கு பன்னிரண்டு மணித்தியாலம் மட்டுமே. எப்போதும் அது ஒரு பகுதிநேர வேலைதான். அதனால் கிடைக்கும் வருமானம் வீட்டு வாடகை கட்டுவதற்குகூடப் போதாது.

சைக்கிள் கேரியரில் இரண்டு பக்கமும் ஐம்பது கிலோ பொதிகளை சுமந்து கொண்டு, உறை பனியில் நடுங்கியபடியும், அடைமழையில் நனைந்தபடியும் செய்யும் வேலையை எண்ணிப் பாருங்கள். நாம் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், சம்பளம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தொகைதான் கிடைக்கும். தபால்கள் அதிகளவில் வரும் சனிக்கிழமைகளில் இரண்டு மணிநேரம், குறைவாக வரும் புதன்கிழமைகளில் அரை மணிநேரம் மட்டுமே சம்பளம் போடுவார்கள். அதுவும் மிகக் குறைந்த அடிப்படைச் சம்பளம்தான்.

சிலநேரம், சாதாரண தபால்களை மட்டுமல்லாது, விளம்பரப் பத்திரிகைகளையும் சேர்த்துப் போடுமாறு கொடுத்து விடுவார்கள். அதைவிட, மாதமொருமுறை நகரசபை வெளியிடும், குடி மக்களுக்கான தகவல் தெரிவிக்கும் பத்திரிகையையும் நாமே விநியோகிக்க வேண்டும். அதற்காக மேலதிக கொடுப்பனவு எதுவும் கிடையாது.

இந்த மேலதிக விளம்பர சேவைக்காக நகர சபையும், விளம்பர நிறுவனங்களும் கொடுக்கும் பணம் முழுவதையும் தபால் நிறுவனமே எடுத்துக் கொள்கிறது. அதில் ஒரு துளிகூட வேலையாட்களுக்கு கொடுப்பதில்லை. அதற்கான காரணம் கேட்ட பொழுது, “தபால் சேவை நட்டத்தில் இயங்குவதாகவும், அதை ஈடுகட்டுவதற்காக கம்பெனி விளம்பரப் பத்திரிகை போடும் சேவையை நடத்துவதாகவும்” தெரிவித்தார்கள்.

தபால்துறையில் ஒரு அரசு நிறுவனம் ஏகபோக ஆதிக்கம் செலுத்திய காலம் எப்போதோ மலையேறிவிட்டது. இன்று கூரியர் நிறுவனங்கள் என்ற பெயரில், ஒரு டஜனுக்கும் குறையாத தனியார் தபால் நிறுவனங்கள் சந்தையில் போட்டி போடுகின்றன. இணைய வணிகம் காரணமாக பார்சல் விநியோகத்தில் கடும் போட்டி நிலவுகின்றது. இதனால் “பாரம்பரிய” தபால் நிறுவனம், முடிந்தளவுக்கு தொழிலாளர்களைச் சுரண்டி இலாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றது.

இணைய வணிகத்தின் வருகை காரணமாக, புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகின்றது. ஆயிரம் பேரின் வேலை காணாமல் போன இடத்தில், சில பத்துப் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதற்குப் பெயர் பொருளாதார வளர்ச்சி அல்ல. பொருளாதார வீழ்ச்சி. இதனால் முதலாளிகளின் இலாபம் மட்டுமே கூடியுள்ளது.

இணையத்தில் இரவு பதினொரு மணிக்கு முன்னர் ஒரு பொருளை வாங்கினால் அடுத்த நாள் வீடு தேடி வரும் என்று விளம்பரம் செய்கிறார்கள். அது மந்திரத்தால் நடக்கும் விடயமா? அதற்காக சில மனிதர்கள் இரவிரவாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் காலையில் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கலாம்.

நானும் பார்சல்கள் தரம் பிரிக்கும் இடத்தில் வேலை செய்துள்ளேன். அது வழமையாக இரவு வேலைதான். இரவு பன்னிரண்டு மணி முதல் அதிகாலை ஆறு மணி வரையில் தூங்காமல் கண் விழித்திருந்து வேலை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இரவு வேலை செய்து வந்தால், நீரிழிவு வருத்தம் வரும். இதய நோய் கூட உண்டாகலாம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தரம் பிரிக்கும் வேலை இரண்டு ஷிப்டுகளாக நடக்கும். மாலை ஆறு மணியில் இருந்து பன்னிரண்டு மணி வரையில் ஒரு ஷிப்ட். அது மாலை நேர வேலை. அதை அங்கு நீண்ட காலம் வேலை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். புதிதாக வேலைக்கு சேருவோரும், தற்காலிகத் தொழிலாளர்களும் இரவு வேலை மட்டுமே செய்யலாம். நடுநிசி பன்னிரண்டு மணியில் இருந்து அதிகாலை ஆறு மணி வரை வேலை செய்ய வேண்டும்.

அதைவிட, தரம் பிரிக்கும் நிலையத்தில் உள்ள இராட்சத இயந்திரங்கள் போடும் இரைச்சலில் காது செவிடாகிவிடும். பக்கத்தில் நிற்பவர் சத்தமாகப் பேசினாலும் கேட்காத அளவிற்கு பேரிரைச்சல். தொழிலகங்களில் சத்தம் 80 டெசிபெல் அளவுக்கு மீறினால், காதுக்கு பாதுகாப்புக் கவசம் போட வேண்டும் என்று தொழிற்துறை பாதுகாப்பு விதி கூறுகின்றது. ஆனால், அதையெல்லாம் யார் பின்பற்றுகிறார்கள்?

அந்தக் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டாலும், வேலை இயந்திரகதியில் இருக்க வேண்டும். அதாவது, ஒரு மெஷின் போல இயங்க வேண்டும். இது ரோபோவுக்கும் மனிதனுக்கும் இடையிலான போட்டி. ஒரு தொழிற்சாலையில் இருப்பதைப் போன்று, ரப்பர் பட்டி ஓடிக் கொண்டிருக்கும். ஒரு ரோபோ இயந்திரம் அதை இயக்கிக் கொண்டிருக்கும்.

இணையக் கடைகளில் வாங்கப்பட்ட பொருட்களின் பார்சல்கள், வண்டி வண்டியாக வந்து குவிந்து கொண்டே இருக்கும். சிறிதும் பெரிதுமான பார்சல்களை (அதிகபட்ச நிறை இருபது கிலோ) ஒவ்வொன்றாக எடுத்து பட்டியில் போட வேண்டும். மறுபக்கத்தில் தானாகவே தரம் பிரித்து வரும் பார்சல்களை எடுத்து, பிரதேச வாரியாக அடுக்க வேண்டும். முகவரிகளை ஸ்கேன் பண்ணி தரம் பிரிப்பதை மட்டுமே ரோபோ இயந்திரம் செய்கிறது. மற்றதை எல்லாம் மனிதர்கள்தான் செய்ய வேண்டும்.

ஒரு நிமிடத்தில் எத்தனை பார்சல்கள் போடுகிறோம் என்பதை நேரக் கணிப்பு மணிக்கூடு வைத்து அளப்பார்கள். நிமிடத்திற்கு சராசரி ஐம்பது பார்சல்கள் தூக்கிப் போட வேண்டும். எமது செயற்படும் வேகம் குறைந்தால் பட்டி ஓடுவது நின்று விடும். அப்படி நின்றால் மேற்பார்வையாளரிடம் திட்டு வாங்க வேண்டும்.

அதனால், நாம் ஒரு நிமிடம் கூட ஓய்வின்றி இயந்திரம் மாதிரி இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். எம்மிடம் இருந்து கூடிய அளவுக்கு உழைப்பை பிழிந்து எடுப்பதற்காக, வேண்டுமென்றே ரப்பர் பட்டி வேகமாக ஓட விடப்படுவதாக பின்னர் அறிந்து கொண்டேன்.

இது எனது அனுபவம். அண்மையில் பத்திரிகையில் ஒரு தகவலைக் கண்டேன். தரம் பிரிக்கும் நிலையத்தில் எட்டு வருடங்களாக மேற்பார்வையாளர் வேலை செய்து வந்த ஒருவர் வேலையை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், தான் அங்கு வேலை செய்யும் பொழுது “அடிமை மேய்ப்பர்” போன்று உணர்ந்திருக்கிறார்.

அமெரிக்காவில் அடிமைகள் வைத்திருந்த காலத்தில், அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க விடாமல் விரட்டி விரட்டி வேலை வாங்க ஒரு மேற்பார்வையாளர் இருந்தார். அவரை “அடிமை மேய்ப்பவர்” என்று சொல்வார்கள். அது நூறாண்டுகளுக்கு முந்திய வரலாறு என்றுதான் பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் நினைக்கிறார்கள்.

இந்தக் காலத்தில் வேலைக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். யாரையும் சவுக்கால் அடிப்பதில்லை. உண்மைதான். ஆனால், எட்டு மணி நேரமென்றாலும், ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் இயந்திரத்தனமாக செய்யும் வேலையை அடிமைத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பதாம்?

ஒரு நிமிடம் கூட இடத்தை விட்டு நகர முடியாது. இடையில் சிறுநீர் வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை கேட்கவே வேண்டாம். எமது இடத்திற்கு இன்னொரு தொழிலாளியை பிடித்து விட்டுத்தான் கழிவறைக்கு செல்ல வேண்டும். அதுவும் எப்போதும் சாத்தியமில்லை.

இதனால் வேலை நேரத்தில் தண்ணீர் அருந்துவதை குறைத்துக் கொள்வோம். ஓய்வில்லாத வேலை காரணமாக வியர்த்துக் களைப்படைந்து, உடலில் நீர்த் தன்மை வற்றி, தாகம் அதிகமாக இருக்கும். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு வேலை செய்ய வேண்டும்.

நிச்சயமாக இப்படியான இடங்களில் பலர் நீண்ட காலம் வேலை செய்வதில்லை. அடிக்கடி சுகயீன விடுப்பில் நிற்கிறார்கள். அதனால்தான் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை நிலவும் காலத்திலும் அங்கே வேலை கிடைக்கிறது. அங்கு வேலை செய்பவர்களில் அரைவாசிப் பேராவது, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த தொழிலாளர்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் என்ற போர்வையின் கீழ், மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காலனிகளாக வைத்திருக்கின்றன. குறைந்த கூலிக்கு அதிக உழைப்பை செலுத்தத் தயாரான மலிவு விலை தொழிலாளர்கள் அங்கிருந்து வருகிறார்கள்.

தபால் தரம் பிரிக்கும் நிலையத்தில் ஆள் பற்றாக்குறையா? போலந்தில் உள்ள முகவருக்கு தொலைபேசி அழைப்பு எடுப்பார்கள். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு வந்து, திங்கட்கிழமை வேலை தொடங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வேலைக்கு வருவோர் மாடு மாதிரி உழைப்பார்கள். ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்தவர்கள், இந்நாட்டு சட்ட விதிகளை அறிந்து கொள்ள சிறிது காலம் எடுக்கும். அதற்குள் வேண்டியளவு சுரண்டி விடலாம். இணைய வணிகம் என்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின்னால், நவீன அடிமைத்தனம் தலைவிரித்தாடுகிறது. அரசாங்கமும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றது.

தற்காலத்தில் தபால் சேவையால் இலாபம் இல்லை என்ற காரணத்தைக் கூறி, முத்திரை விலையை கூட்டி வைத்திருக்கிறார்கள். பார்சல் அனுப்பும் கட்டணமும் மிக அதிகம். இருந்த போதிலும் தபால் நிறுவனம் இலாபம் சம்பாதிப்பது மட்டும் குறையவில்லை. ஒரு பக்கம் தொழிலாளர்களை சுரண்டி, வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். மறுபக்கம் தலைமை நிர்வாகிகளின் ஊதியமும், இலாபத்தில் அவர்களது பங்கும் அதிகரிக்கின்றது.

பொது மக்கள் தபால்கள் அனுப்புவது குறைந்து விட்டதால், “நட்டத்தில்” இயங்குவதாக எதிர்பார்க்கப்படும், தபால் நிறுவனம் சம்பாதிக்கும் நிகர இலாபம் வருடத்திற்கு ஐந்து சதவீதமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அடிமைத் தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டப்படும் உழைப்புதான் இலாபமாக மாறுகின்றது என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல.

  •  கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம்  தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர் . வெகுசன ஊடகப் பிரச்ச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்

சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்

ஃபிரட் எங்ஸ்ட் (Fred Engst) (சீனப்பெயர் யாங் ஹெபிங் Yang Heping) உடனான இந்த நேர்முகத்தை ஒனுர்கன் உல்கர் (Onurcan Ulker) 2017 ஏப்ரல் 7-ம் தேதியன்று பெய்ஜிங்கில் எடுத்துள்ளார். பிரட் எங்ஸ்டின் தாய் ஜோன் ஹின்டன் ஒரு அணு விஞ்ஞானி. அமெரிக்காவின் முதல் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்.

ஃபிரட் எங்ஸ்ட்

அணுகுண்டைக் காட்டி ஜப்பானை அச்சுறுத்துவது மட்டுமே அமெரிக்கா அரசின் நோக்கம் என்ற அவருடைய அப்பாவித்தனமான நம்பிக்கையைத் தகர்த்தது ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு. அந்தக் கணம் முதல் அமெரிக்காவில் அணுஆயுத எதிர்ப்பு – போர் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் 1948-இல் புரட்சியின் தருவாயில் இருந்த சீனத்துக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார். அங்கே பால் பண்ணைத் தொழில் வல்லுநரான எர்வின் எங்ஸ்டை மணந்தார்.

1952-இல் இவர்களுக்குப் பிறந்த மகன் ஃபிரட் எங்ஸ்ட். இவர் பண்பாட்டுப் புரட்சியின்போது செங்காவலராக இருந்தார். பின்னர் ஐந்து ஆண்டுகள் ஆலைத்தொழிலாளியாக சீனத்தில் பணியாற்றி விட்டு, 1974-இல் அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் சுமார் 12 ஆண்டு காலம் பல ஆலைகளில் பணியாற்றிக் கொண்டே படித்துப் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2007-இல் சீனத்துக்குத் திரும்பி, பெய்ஜிங் பல்கலைக்கழகமொன்றில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

ஒனுர்கான் உல்கர் துருக்கியில் பிறந்தவர். அரசியல் விஞ்ஞானத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று, பின்னர் சீனா சென்று அங்கே பீகிங் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆய்வாளராகவும் ஆசிரியராகவும் சீனத்தில் பணிபுரிகிறார்.

எங்ஸ்ட்-ன் இந்த நேர்முகம், நேரடி அனுபவத்தின் அடிப்படையிலும் ஆழமான சிந்தனையின் அடிப்படையிலும் சீனாவில் சோசலிசத்தை கட்டியமைப்பது பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த புரிதல்களை வழங்குகிறது.

*****

ஒனுர்கன் உல்கர்: உங்களின் அறிமுகத்திலிருந்து தொடங்கலாமா?

ஃபிரட் எங்ஸ்ட் : நான் 1952-இல் பெய்ஜிங்கில் பிறந்து, சீனாவின் பழங்கால தலைநகரான ஷி-ஆன்-ல் (Xian) வளர்ந்தேன். 1966-இல் கலாச்சாரப் புரட்சி தொடங்குவதற்கு முன்பு, எங்கள் குடும்பம் இடமாற்றப்பட்ட போது நான் திரும்பவும் பெய்ஜிங்குக்கு வந்தேன். என் வாழ்க்கையின் முதல் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளை சீனாவில் கழித்தேன். பெரும்பகுதி ஷி-ஆன்-ல் கழித்தேன். அந்தக் காலத்தின் கடைசி எட்டு ஆண்டுகள், கலாச்சாரப் புரட்சியின் உச்சகட்ட காலத்தில், பெய்ஜிங்-கில் இருந்தேன்.

அந்தக் காலத்தில் மற்ற இடங்களில் இருந்த அளவிற்கு குழப்பமான நிலையில் பெய்ஜிங் இல்லை. நடுநிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஐந்தாண்டு நான் என்னுடைய சக மாணவர்களோடு தொழிற்சாலையில் வேலை செய்தேன். என்னுடைய மற்ற சில சகாக்கள் கிராமப்புறத்துக்கு வேலை செய்யப் போனார்கள். நானும் அவர்களோடு போக விரும்பினேன். ஆனால், நான் ஒரு வெளிநாட்டுக்காரனாக இருந்ததால் அனுமதிக்கப்படவில்லை. பிறகு, என்னுடைய முயற்சியால், என்னுடைய தம்பி, தங்கை போக முடிந்தது.

சோசலிச சமூகத்தைக் கட்டியமைப்பதில் மக்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்துவிட்ட தோழ்ர் மாவோ சே துங்.

பின்னர் 1974-இல் நான் அமெரிக்காவுக்கு போய் அங்கே முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளைக் கழித்தேன். ஆனால், அடிக்கடி சீனாவுக்குத் திரும்பி வந்தேன். பெய்ஜிங் -ல் நடந்த 1989 நிகழ்வுகளுக்குச் சற்று முன்னர் 1988-ம் ஆண்டில் ஒரு முழு ஆண்டு இங்கேயே கழித்தேன். பின்னர் 2000-ஆம் ஆண்டில் இன்னொரு ஆண்டு இங்கே ஆசிரியராகக் கழித்தேன். இடைப்பட்ட ஆண்டுகளில் என்னுடைய பெற்றோர்களையும் நண்பர்களையும் பார்க்க அடிக்கடித் திரும்பி வந்தேன்.

கடைசியில், 2007-இல் சீனாவுக்கே வந்துவிட முடிவு செய்தேன். அப்போதிருந்து இங்கேயே ஆசிரியராகவும், என்னுடைய ஆராய்ச்சியை நடத்திக் கொண்டும் இருக்கிறேன். மாவோ காலத்திய அரசியலையும் பொருளாதாரத்தையும் புரிந்து கொள்வது எனது வாழ்நாள் இலக்கு. அந்த அடிப்படையில், கடந்த பத்து வருடங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்திருக்கின்றன என்று என்னால் கூற முடியும்.

மையமான கேள்வி – புதிய சோசலிச சமூகத்தைக் கட்டுவது எப்படி?

ஒனுர்கன் உல்கர்: அப்படி என்றால், நீங்கள் மாவோயிச சீனாவில் பல காலம் இருந்திருக்கிறீர்கள். மேற்குலகைச் சேர்ந்த மாவோயிச விமர்சகர்கள், மாவோயிசமானது மக்களை அதிகப்படியாக அரசியல்படுத்திவிட்டது என்றும் தொடர்ந்து உறுதியின்மையைப் பரப்பி, நிறுவனங்கள் எதுவும் நிலைபெற முடியாமல் கெடுத்து விட்டது என்றும் குற்றம் சுமத்துகிறார்கள். மாவோயிச சீனாவில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருந்தது? அதிகப்படி என்று சொல்லப்படும் பொது மக்களுடைய அந்த அரசியல்மயமாக்கம் ஒருவகையான குழப்பத்தை ஏற்படுத்தியிருந்ததா?

ஃபிரட் எங்ஸ்ட் : இந்தக் கேள்வி சிக்கலானதுதான். விசயத்தை இப்படிச் சொல்லலாம். நீங்கள் அடக்குமுறையை நியாயப்படுத்தப் போகிறீர்களா, அல்லது, அடக்குமுறையை ஒழித்துக் கட்ட முயற்சி செய்யப் போகிறீர்களா? வேறு வார்த்தைகளில் சொன்னால், பழைய ஆதிக்க சக்திகளைத் தூக்கியெறிந்துவிட்டு, அந்த இடத்தில் புதிய ஆதிக்க சக்தியாக மாறப் போகிறீர்களா, அல்லது, அடக்குமுறை அமைப்பையே மொத்தமாக அழிக்க விரும்புகிறீர்களா? என்பதுதான் மையமான பிரச்சினையாக இருந்தது.

பிரபுத்துவத்தையும், தரகு முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்தவர்கள் புரட்சிகர அணிகளில் இருந்தார்கள். ஆனால், அடக்குமுறை அமைப்பு என்ற ஒன்றே இருக்கக் கூடாது எனப் புரிந்து கொண்டு அவர்கள் எதிர்க்கவில்லை. ஆகையினால், புரட்சியாளர்கள் ஆட்சியாளர்களாக மாறியதும் புதிய பிரச்சனை முளைத்தது. அவர்கள் மக்களின் பெயரால், மக்களோடு மக்களாக இருந்து கொண்டு ஆளப் போகிறார்களா அல்லது இன்னொரு புதிய ஆதிக்க சக்தியாக மாறப் போகிறார்களா? புரட்சியாளர்கள் புதிய ஆதிக்க சக்திகளாக மாறுவதை எப்படித் தடுப்பது என்பது தான் மையமான பிரச்சனையாக இருந்தது.

நகர்புற படித்த இளைஞர்கள், தங்களைப் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டில் மறுவார்ப்பு செய்துகொள்ள கிராமப்புறங்களுக்குச் செல்லுமாறு அறைகூவல் விடும் சித்திரச் சுவரொட்டி.

1949-லிருந்து 1956 வரையிலான முதல் ஏழு ஆண்டுகளில், விவசாயத்தைக் கூட்டுப் பண்ணைகளாக மாற்றுவதில் மாவோவின் சீனா அருமையான வெற்றியடைந்தது. விவசாயிகளின் தனிநபர் வருமானம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. தனியார் தொழிற்சாலைகளை அரசு நிறுவனங்களாகவும், அரசு – தனியார் கூட்டு நிறுவனங்களாகவும் வெற்றிகரமாக மாற்ற முடிந்தது. அதாவது, அடிப்படையில், அவர்களால் முதலாளித்துவ – அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தை சோசலிச சமூகமாக மாற்றியமைப்பதை நிறைவு செய்ய முடிந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து உடனடியாகவே, தொழிற்சாலையிலும் நகரங்களிலும் பிராந்தியங்களிலும் மக்கள் சில பிரச்சனைகளை எதிர் கொண்டார்கள். அதனையொட்டி வேறு சில கேள்விகள் எழுந்தன.

முரண்பாடுகளைக் கையாள்வதில் அதிகாரவர்க்க அணுகுமுறையைக் கடைப்பிடித்ததன் காரணமாகத் தொழிலாளர்களும் மாணவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஒரு பிரபலமான எடுத்துக்காட்டு உள்ளது. ஹெனான் பிராந்தியத்தில் கிராமத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலையேபடாமல், விமானநிலையம் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று இராணுவம் விரும்பியது. யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை, தடாலடியாக விமானநிலையத்தைக் கட்டி விடலாம் என்று இறங்கினார்கள். விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. எதிர்த்தார்கள், சாலையை மறித்தார்கள். மாவோவின் தொகுப்பு நூல்களில் 5-வது தொகுதியில் இந்த எடுத்துக்காட்டு உள்ளது.

ஒனுர்கன் உல்கர்: மாவோ இந்த விசயத்தில் டெங் சியாவ்பிங் (Deng Xiaoping) மேல் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறார்…

ஃபிரட் எங்ஸ்ட் : ஆம். அதைச் செய்தது, டெங் சியாவ்பிங் தான். இந்த மாதிரி பல உதாரணங்கள் உள்ளன. எனவே, பிரச்சனை இதுதான். நிர்வாகம் செய்பவர்களுக்கும் நிர்வாகம் செய்யப்படுபவர்களுக்கும் இடையே தவிர்க்க முடியாமல் அன்றாடம் தோன்றும் முரண்பாடுகளை எப்படிச் சமாளிப்பது? உற்பத்தியை எப்படிக் கொண்டு செல்வது? என்ன செய்வது என்பதற்குப் பல வேறுபட்ட கருத்துகளும் அபிப்ராயங்களும் இருந்தன.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் என்ன செய்வது? மக்களுடைய கருத்துக்குக் காது கொடுத்து, தீர்வு கண்டுபிடித்து, ஒருமித்த கருத்தை அடைய முயற்சிப்பதா அல்லது முடிவுகளை மக்கள் மீது அடாவடியாக திணிப்பதா? இந்தக் கேள்விகள் உற்பத்தி நிகழ்வுப்போக்கை எப்படி ஜனநாயகப்படுத்துவது என்பது தொடர்பானவை.

சோசலிசக் காலகட்டத்தில் இரண்டு வகையான மிகத் தெளிவான முரண்பாடுகள் இருந்தன என்பது 1956 வாக்கில் தெளிவாகி விட்டது. ஒரு பக்கம், பழைய நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் நிலத்தின் மீதும் தொழில் நிறுவனங்கள் மீதும் தங்களுடைய கட்டுப்பாட்டை இழந்துவிட்ட ஆத்திரத்தில் இருந்தார்கள். சோசலிசத்தை ஓழித்துக்கட்ட விரும்பினார்கள்.

மறுபக்கத்தில், தினசரி உற்பத்தியை எப்படி நடத்துவது தொடர்பான சின்னச் சின்ன விசயங்கள் பற்றிய முரண்பாடுகள். ஒரு பள்ளியையோ பண்ணையையோ நிர்வாகம் செய்வது எப்படி? நிர்வாகிகளுக்கும் நிர்வாகம் செய்யப்படுபவர்களுக்கும் இடையில் வரும் மோதல்களை எப்படிக் கையாள்வது? நிர்வாகிகளுடைய அதிகாரத்துக்கு என்ன வரம்பு?

இவைதான் மக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்று அப்போது அழைக்கப்பட்டன. ஏனெனில், இந்த முரண்பாடுகளில் இரு தரப்பினருக்கும் எதிரெதிரான நோக்கங்கள் இல்லை. அவர்களின் நோக்கம் ஒன்றுதான். அணுகுமுறையில் தான் வேறுபட்டார்கள். ஒரு தொழிற்சாலையை மேலும் சிறப்பாக, மேலும் திறன்கூடியதாக எப்படி நடத்துவது? சீனாவை ஏழ்மையிலிருந்தும் பின்தங்கிய நிலையிலிருந்தும் எப்படி மீட்பது? அதை ஒரு தொழில்மயமான நாடாக எப்படி மாற்றுவது? இவை மக்களுக்கு இடையிலான முரண்பாடுகள். இவற்றை எப்படிக் கையாள்வது?

புதிய அதிகாரிகளும் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களும் மக்களை அடாவடியாக நடத்த முயற்சிக்கிறார்கள் என்பது 1956 வாக்கில் பளிச்சென்று தெரியத் தொடங்கிவிட்டது. அதனால்தான் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களை விமரிசிப்பதற்கும், கட்சியைத் திருத்துவதற்கும் நூறு பூக்கள் மலரட்டும் என்ற இயக்கத்தை மாவோ தொடங்கினார். இப்படித்தான் பிரச்சினை வெளியே வந்து நாறத்தொடங்கியது.

அடக்குமுறை அமைப்பையே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கமில்லாமல், பழைய அடக்குமுறையாளர்களை எதிர்க்கும் நோக்கத்துக்காக மட்டும் புரட்சியில் பங்கேற்றவர்களும் சரி, புதிய ஆட்சியாளர்களாக அதிகாரம் பெற விரும்பியவர்களும் சரி, இந்தச் சீர்திருத்த இயக்கத்தினால் அரண்டு போனார்கள். தங்களை விமர்சிப்பவர்களின் மீது தாக்குதலைத் திருப்பிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

இந்தச் சூழல்தான் சிலருக்குக் ‘குழப்பமான’ நிலையாகத் தெரிகிறது. ஏன் இந்த சீனர்களால் ‘வழக்கமான’ முறையில் வேலைகளை நடத்த முடியவில்லை என்று அவர்கள் கேட்கிறார்கள். ‘வழக்கமான’ வழி என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் மொழி. ஆட்சி செய்பவர்களின் வழி. இத்தகையோர்தான் சீனாவில் எதற்காக இவ்வளவு அரசியல் கொந்தளிப்புகள் நிகழவேண்டும் என்று யோசிக்கிறார்கள்.

சீனா ஏன் பழைய (புரட்சிக்கு முந்தைய- மொர்) வழிமுறைக்கே திரும்பக் கூடாது என்பதுதான் அவர்கள் எழுப்பும் கேள்வியின் உண்மையான பொருள்.

தொழிற்சாலைகளில் இருக்கும் மேலாளர்களை அவர்களுக்குரிய முறையில் நிர்வாகம் செய்வதற்கு ஏன் அனுமதிக்கவில்லை? அந்த நிர்வாகிகளை ஏன் விமர்சிக்க வேண்டும்? அவர்களின் அணுகுமுறையை ஏன் மாற்ற முயற்சிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கேள்வி. உண்மையில் நிர்வாகிகள் தங்கள் மனப்போக்கை மாற்றிக்கொள்ள மிகவும் தயங்கினார்கள். விமர்சனங்கள் அவர்களைப் பயமுறுத்தின. விமர்சனங்கள் அவர்களைச் சங்கடத்திற்கு உள்ளாக்கின. இதன் காரணமாகத்தான் கட்சிக்குள் இருந்த மேல்தட்டுப் பிரிவினர் இந்தச் சீர்திருத்த இயக்கத்தை வலதுசாரி எதிர்ப்பு இயக்கமாக 1957-ல் மாற்றினார்கள். இது ஒரு 180 டிகிரி திருப்பமாகும். இதைப் பற்றியும் நான் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

இதுதான் மாவோவின் கடைசி இருபது ஆண்டுகளைப் புரிந்து கொள்வதற்கான மையப்புள்ளி என்று நினைக்கிறேன். இந்த முரண்பாடுகள் எப்படித் தீர்க்கப்பட்டன?

நோயாளியைக் காப்பாற்றுவதற்கு நோயை குணப்படுத்துவது என்பதுதான் முதல் அணுகுமுறை. 1940-களின் ஆரம்பத்தில் துவக்கப்பட்ட ஏனான் சீர்செய் இயக்கத்தின் போது இந்த முறைதான் பயன்படுத்தப்பட்டது. சீர்செய்யும் நடவடிக்கைகளின் மூலம் முரண்பாடுகளைக் களைவதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இந்த அடிப்படையில், கட்சித் தலைமையை விமர்சிக்க பெரிய எழுத்து சுவரொட்டிகள், மக்கள் திரள் கூட்டங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

கலாச்சாரப் புரட்சியின்போது கட்சித் தலைமையை விமர்சிக்க முன்னெடுக்கப்பட்ட பெரிய எழுத்து சுவரொட்டி இயக்கம். (கோப்புப் படம்)

மற்றொரு முறையானது இடுப்புக்குக் கீழே தாக்குவது. குறிப்பிட்ட சிலரை எதிரி என்று அடையாளப்படுத்தி, கட்சிக்கு வெளியில் உள்ள பொதுமக்களின் மூலம் அவர்களைத் தாக்குவது. இது மக்களைத் தம் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் பயன்படுத்திக் கொள்வதாகும். எதிர்ப்புரட்சிக்காரர்கள் என்று சிலரைக் குற்றம் சாட்டி, அவர்களை எதிரியாக அடையாளப்படுத்தி, அவர்களைத் தாக்குவதற்கு மக்களைத் தூண்டிவிடும் வழிமுறையாகும். இங்கே குறிக்கோள் நோயாளியை காப்பாற்றுவதற்கு நோயை குணப்படுத்துவது அல்ல. மாறாக, எதிர்த்தரப்பை தாக்கி வீழ்த்துவதே நோக்கம். வலதுசாரி எதிர்ப்பு இயக்கம் பின்பற்றிய வழிமுறையும் இதுதான்.

ஆகையினால், ஒரு புதிய சோசலிச சமூகத்தை எப்படிக் கட்டுவது என்ற கேள்வி தோற்றுவிக்கும் இந்த முரண்பாட்டின் வழியாகத்தான் நீங்கள் கேட்ட கேள்வியைப் பார்க்கவேண்டும். அவ்வாறு பார்க்கவில்லையெனில், மாவோ காலத்தில் நடந்த விசயங்களெல்லாம் முட்டாள்தனமாகத்தான் தெரியும். உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஒனுர்கன் உல்கர்: அப்படி என்றால் இது பொதுமக்களுடைய அன்றாட வாழ்க்கையில் எப்படிப் பிரதிபலித்தது ?

ஃபிரட் எங்ஸ்ட் : பொதுமக்களுடைய வாழ்க்கையில் அது நேரடியாகப் பிரதிபலித்தது. உதாரணத்துக்கு ஒரு தொழிற்சாலையை எடுத்துக் கொள்ளுங்களேன். தலைமைப் பொறுப்பில் இருப்பவர், ஒரு பட்டறையின் மேலாளர் உற்பத்தியை எப்படி நடத்துகிறார்? உற்பத்தி குறைந்தால் என்ன செய்கிறார்?

முதலாளித்துவ முறை எளிமையானது. பிரம்பு, இல்லாவிட்டால் கரும்பு. கடுமையாக வேலை செய்யாவிட்டால் துரத்தி விடுவேன்… கஷ்டப்பட்டு வேலை செய்தால் கொஞ்சம் ஊக்கத்தொகை தருவேன். நான்தான் பாஸ், நான் சொல்வதை மாத்திரம் கேள். உனக்குச் சம்பளம் கொடுப்பது உடலுழைப்புக்குத்தான். அறிவைப் பயன்படுத்தி ஆலோசனை சொல்வதற்கல்ல. இதுதான் முதலாளித்துவ அணுகுமுறை.

ஆனால், தொழிலாளி வர்க்கம்தான் சமூகத்தின் தலைவன் என்ற சூழலில், உற்பத்தி செயல்முறையை எப்படி நிர்வகிப்பது? உற்பத்தியில் ஒரு பிரச்சனை ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? தொழிலாளர்களைக் கூட்டி என்ன பிரச்சனை, அதை எப்படித் தீர்ப்பது என்பதைப் பற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். உழைக்கும் வர்க்கம்தான் சமூகத்தின் தலைவன் எனும்போது, உற்பத்தியில் தோன்றும் பிரச்சனையைத் தீர்ப்பது தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே அவசியமானதாக இருக்கிறது.

அவ்வாறு பிரச்சனைகளைச் சமாளித்து அவர்கள் மேலே வந்து விட்டால், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பிரம்மாண்டமான ஆற்றல் தொழிலாளி வர்க்கத்திடம் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். நாம் செய்வதனைத்தும் நம்முடைய சொந்த நன்மைக்காகத்தான் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டால், அது மக்களுடைய படைப்பாற்றலை வரம்பற்ற வகையில் கட்டவிழ்த்து விடும். கொஞ்சம் தானியங்களையும், வெறும் துப்பாக்கிகளையும் மட்டும் வைத்துக் கொண்டு ஜப்பானியர்களையும் தேசியவாதிகளையும் மக்கள் விடுதலைப் படையால் எப்படித் தோற்கடிக்க முடிந்தது? ஏனென்றால், அவர்களுக்கு ஒரு பொது இலட்சியத்தின் மேல், அதாவது அடக்குமுறையைத் தூக்கியெறிய வேண்டும் என்பதில், அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

ஹெய்லாங்லியால் டெய்லி என்ற பத்திரிக்கையின் ஊழியர்கள், பிராந்திய கட்சிக் கமிட்டியால் நியமிக்கப்பட்ட தமது தலைவரை முதலாளித்துவப் பாதையாளராக அம்பலப்படுத்தி நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

அன்றாட தொழிற்சாலை வேலையிலும் இதே விதிதான் வேலை செய்கிறது. தலைமையில் இருப்பவர்கள் உற்பத்தித் திறன் குறைபாட்டிற்கு, அதற்கான மூல காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யாமல், தொழிலாளர்களையே குறை கூறிக் கொண்டு இருந்தால், தொழிலாளர்கள் இயல்பாகவே உரிமையற்றவர்களாக உணர்வார்கள். தொழிலாளர்கள் அவ்வாறு உரிமையற்றவர்களாக, அதிகாரமில்லாதவர்களாக உணர்ந்தால், அவர்களிடம் தளர்வு தோன்றும். முன்முயற்சி எடுக்க மாட்டார்கள்.

உதாரணமாக, அவர்கள் ஏதேனும் பிரச்சனையைக் கண்டால், ஒரு எந்திரம் பழுதடைவதைக் கண்டால், அதைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். அது நம்முடைய பிரச்சனையல்ல என்று நினைப்பார்கள்.

ஆனால், நிறுவனம் நம்முடையது என்ற உணர்வு அவர்களுக்கு இருந்தால், தலைமையை விமர்சிக்க அவர்களுக்கு உரிமை இருந்தால், என்ன செய்ய வேண்டும் என்ற விசயத்தில் அவர்களால் ஆலோசனை கூற முடிந்தால், அந்த ஆலோசனைகள் உன்மையிலேயே பரிசீலிக்கப்பட்டால், தங்கள் விதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் தமக்கு இருப்பதாக அவர்கள் உண்மையிலேயே உணர்ந்தால், அப்போது பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வதில் அவர்களது திறன் பன்மடங்கு அதிகரிக்கும்.

இன்றும் பொலிவுடன் காட்சியளிக்கும் தா-ட்சாய். மாவோ உருவாக்கிய ஒரு மாதிரி கிராமம்.

இந்த அடிப்படையில் நமக்கு நேர் எதிரான உதாரணங்களும் இருக்கின்றன. தா-ட்சாய் (Dazhai) மாவோ உருவாக்கிய ஒரு மாதிரி. தா-ட்சாய் எனக்கு மிகவும் பழக்கமான ஒன்று. தா-ட்சாய்க்கு நான் பல முறை போயிருக்கிறேன். ஆறு மாதங்கள் அங்கே தங்கியிருக்கிறேன். விவசாயிகளுடன் வேலை செய்திருக்கிறேன். அதன் சுற்று வட்டார இடங்களையும் பார்த்திருக்கிறேன். தா-ட்சாயில், ஒரு வலிமையான தலைமை விவசாயிகளைத் திரட்டி, அவர்களைத் தமக்குள் விவாதிக்கச் செய்து, அந்நிய முதலீடோ எந்திரங்களோ இல்லாமல், தமது கடின உழைப்பினால் மட்டுமே, பின்தங்கிய விவசாயத்தை எப்படி மாற்றியமைக்க முடியும் என்பதைச் சாதித்திருக்கிறது. இதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இது தன்னளவிலேயே ஒரு பெரிய காவியமாகும்.

சோசலிசப் பாதையில் சென்று கொண்டிருந்த சீனத்தை முதலாளித்துவ நாடாகச் சீரழித்த டெங் சியாவ்பிங். (கோப்புப் படம்)

இதற்கு மாறாக, சீர்திருத்தத்திற்குப் பிறகு டெங்கினால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட சியாவ்-காங்-சுன் (Xiaogangcun) கிராமத்தின் மாதிரியும் நம்மிடம் இருக்கிறது. தங்களுக்குள் சதாகாலமும் சண்டையிட்டுக் கொண்டிருந்த 18 குடும்பங்கள் அந்தக் கிராமத்தில் இருந்தன. உங்கள் குடும்பத்திற்குக் குழுவின் தலைமைப் பொறுப்பு கிடைக்கும் போது பொதுச்சொத்தைச் சுருட்டுவதில் மும்மரமாக இருப்பீர்கள். நான் உங்கள் அதிகாரத்தை அடியறுக்க முயற்சி செய்து கொண்டிருப்பேன். அடுத்த தேர்தல் வரும்போது, நான் கூட்டுப்பண்ணையின் தலைமைப் பொறுப்புக்கு வருவேன். இம்முறை நான் கையாடல் செய்ய முயற்சிப்பேன்.. நீங்கள் எனது அதிகாரத்திற்கு எதிராகப் போராடுவீர்கள். இப்படி நம் பாத்திரம் மாறிக்கொண்டிருக்கும். ஆனால், ஒரு கூட்டுப் பண்ணை இந்த முறையில் நீண்டநாட்களுக்கு உயிரோடு இருக்க முடியாது. சீர்திருத்தத்திற்குப் பிறகு, டெங் சியாவ்பிங் சியாவ்-காங்-சுன் கிராமத்தை சீனாவுக்கு மாதிரியாக்கினார்.

ஏதோ சிறு உடைமை விவசாயப் பொருளாதாரத்தைப் பல ஆயிரம் ஆண்டுகளாய் சீனர்கள் அனுபவித்ததே இல்லை என்பது போல! அது பற்றி பல ஆயிரம் ஆண்டுகளாக ஏதும் தெரியாததைப் போல! இது மிகவும் கேலிக்குரியது.

எனவே, இது தான் வேறுபாடு… தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தில் இருப்பதற்கும் முதலாளி வர்க்கம் அதிகாரத்தில் இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு இதுதான்.

தொடரும்.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

மண்ணை நினைவூட்டும் மனிதர்கள் ! புகைப்படக் கட்டுரை

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே இருக்கும் பெரியார் பாதை. எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி.  கடப்பவர் எவரையும் ஒருகணம் திரும்பி பார்க்க வைக்கும் கலைநயம்… சென்னையில்கூட இப்படி விதவிதமான மண்பாண்டங்கள் உண்டா? என்று வியக்கவைக்கும் நேர்த்தி, வாருங்கள் அருகில் சென்று பார்ப்போம். மண்பாண்டங்களை மட்டுமல்ல; அதைச் செய்யும் மனிதர்களையும்…

திருமதி. உஷா வடிவேல். மண் பானைகள் மற்றும் கலைபொருட்கள் விற்கும் கடையின் உரிமையாளர்.

ஏறக்குறைய மூணு தலைமுறையா மண்பானை தொழில செஞ்சிக்கிட்டு இருக்கோம். மண்பானை, முகூர்த்த பானை, தீபத்துக்கு அகல், நவராத்திரிக்கு கொலு செய்வோம். சென்னையை பொருத்த வரைக்கும் பானை வாங்கணும்னா எங்களோட நினைவு தான் எல்லோருக்கும் வரும். அந்த அளவுக்கு இந்த இடத்துல மக்களோட நம்பிக்கையை பெற்று இருக்கோம்.

ஏழைகளின் குளிர்சாதனப் பெட்டி. களிமண்ணும் மணலும் கலந்து செய்யப்பட்ட மண்பானை. இந்த பானையை செய்வதற்கான வசதி சென்னையில் இல்லை என்பதால் பாண்டிச்சேரியை சுற்றியுள்ள ஏரிகளில் இருந்து களிமண் எடுக்கிறோம். ஐந்து லோடு ஏற்றி வர எல்லா கிராமங்களுக்கும் கோவில் டொனேசன் கொடுக்கணும். தலையாரி முதல் தாசில்தார் வரை கவனிக்கணும். களிமண்ணை தூளாக உடைத்து காயப்போடுவோம். உலர்ந்த களிமண்ணை தண்ணீரில் ஊற வைத்து அதனோடு மணல் உள்ளிட்ட பொருட்களை கலந்து பானை செய்வோம். பானை மேலே கொஞ்சம் செம்மண் பூசி சூளையில் எரியப்போடுவோம். அதன் பிறகே இந்த அழகிய வடிவமைப்பு பானை கிடைக்கும்.

சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் குவளை, தரமானது. இதன் விலையும் அதிகம். இதன் கூடுதல் சிறப்பு, விரைவாக தண்ணீர் ஜில்லென்று ஆகிவிடும், நீண்ட நேரம் ஜில்லென்று நீடிக்கும், தண்ணீர் கசியாது. வழக்கமான சூளையிலிருந்து வேறுபட்டு நவீன முறையில் முறையில் சுட்டெரிக்கிறோம். இதே தரத்துடன் பானையை செய்யலாம். ஆனால் அதிக விலை கொடுத்து வாங்க மாட்டார்கள்.

சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்ட அழகிய மண் குதிரைகள்.

மோல்டிங் முறையில் செய்யப்பட்ட ஒட்டகம். அதன் மேலுள்ள அலங்கார மணிகள் கைவினைஞர்களின் கைவண்ணம்.

மண்பானை குக்கர். நாங்க 1800 ரூபாய்க்கு விற்கிறோம். ஆன்லைன்ல எங்களை விட அதிகமா விக்கிறாங்க. மண் பாண்டன்களால் ஆன பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு பொறுமை வரும், படபடப்பு குறையும். காரணம் பானை உடைந்து விடும் எச்சரிக்கை. மண்பானையில் சமைப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

சாப்பிடும் தட்டு முதல் அஞ்சரை டப்பா வரை 35 வகையான பாத்திரங்கள் களிமண்ணால் ஆனவை.

எங்க கிட்ட வருபவர்கள் கருப்பு சட்டி அதிகம் கேட்கிறார்கள். அதனால் சூளையில் நன்கு தீய்ந்த பிறகே எடுத்து விற்பனை செய்கிறோம்.

வடநாட்டில் இருந்து அதிகம் பேர் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளதால் அவர்கள் வணங்கும் கடவுள் சிலையை கேட்கிறார்கள். இதற்காகவே கல்கத்தாவில் இருந்து கைவினை பொருட்கள் செய்யும் ஐந்து குடும்பங்களை இங்கேயே அழைத்து வந்துள்ளோம். வடநாட்டவர்களின் சிலைகளை செய்து கொடுக்கிறோம். எங்களிடம் ஒரு ரூபாய் அகல் விளக்கிலிருந்து ஆறாயிரம் ரூபாய் அய்யனார் சிலை வரை உள்ளது.

திரு. ரங்கநாதன், மண்பாண்டங்கள் விற்பவர்.

கிட்டத்தட்ட ஐம்பது வருசமா இதே பிளாட்பாரத்துல தான் வித்திட்டிருக்கேன். சொந்தமா ஒரு வீடு கூட வாங்க முடியல. பானை, பூந்தொட்டி, மாட்டுத்தொட்டி விக்குறேன். விழுப்புரம், கடலூர்,மானாமதுரை போன்ற இடத்துல இருந்து வாங்கறேன். தனியா செய்ய ஆள் பலமோ, பண பலமோ இல்லை. ஏற்கனவே கார்பரேசன் கொடச்சல். அதையே சமாளிக்க முடியாத நிலமையில இருக்கேன்.

வள்ளியம்மாள், மண்பாண்டங்கள் விற்பவர்.

நான் பெரிய வியாபாரி எல்லாம் இல்லை. எங்க மாமனார், மாமியார் காலத்துல இருந்தே இங்க விக்கிறேன். எனக்கு நாலு பசங்க இருந்தும் பிரயோஜனம் இல்ல. கடைசி காலத்துல அதுங்களுக்கு தொல்லையா இருக்கக்கூடாதுன்னு இந்த பானைங்களை வித்துகிட்டு இருக்கேன். கடவுள் விட்ட வழி. அவர் மேல பாரத்த போட்டுட்டேன்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்