Friday, November 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 54

பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் 0.8 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளதை எப்படி பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜூன் மாதத்தில் பொதுவெளிhயில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

000

கேள்வி : இத்தேர்தலில் பா.ஜ.க. 63 இடங்களை இழந்து தனிபெரும்பான்மை பெறமுடியாமல் போனாலும் அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் 0.8 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது. அதிலும், இத்தேர்தலில் 68.97 லட்சம் மக்கள் பா.ஜ.க-விற்கு கூடுதலாக வாக்களித்துள்ளனர் என்ற தரவு அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. இதனை எப்படி பார்ப்பது?

நாடுதழுவிய அளவில் மட்டுமின்றி மாநில வாரியாக பரிசீலித்தாலும், பா.ஜ.க. தனது வாக்குவங்கியை பெரியளவில் இழக்காமல் 36.6 சதவிகித வாக்குகளை தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய உண்மை. சான்றாக, மகாராஷ்டிராவில், 60 சதவிகித இடங்களை பா.ஜ.க. இழந்தபோதிலும் வெறும் 1.62 சதவிகித வாக்குகளே குறைந்துள்ளது.

மேலும், வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க-விற்கு வாக்கு சதவிகிதம் குறைந்து இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக வேலை செய்து வரும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியின மக்கள் பா.ஜ.க-விற்கு வாக்களித்துள்ளனர். தென் மாநிலங்களிலும் பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதமும் வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த வாக்குகளில் கணிசமானவை பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் விழுந்த வாக்குகளே. நாடு முழுக்க மோடி அரசுக்கு எதிராக தீவிரமாக போராட்டம் நடந்திருந்தாலும் பா.ஜ.க. தனது வாக்குவங்கியை தக்கவைத்திருப்பது பாசிஸ்டுகளின் மக்கள் அடித்தளத்தை காட்டுகிறது.

அதேபோல், உத்தரப்பிரதேச மக்கள் பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியலை நிராகரித்திருந்தாலும், மத்தியப்பிரதேசத்தில் இந்துத்துவ அரசியல் வாக்குகளாக அறுவடையாகி மொத்த தொகுதிகளையும் பா.ஜ.க. வசம் சேர்த்துள்ளது. மகாராஷ்டிராவில், காங்கிரஸ், உத்தவ்-சிவசேனா, ஷிண்டே-சிவசேனா, சரத் பவார் என்.சி.பி., அஜித் பவார் என்.சி.பி. என அனைத்து கட்சிகளும் பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியலுக்குள் கரைந்து போய்விட்ட நிலையில், அக்கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளில் கணிசமானவை இந்துத்துவ அரசியலுக்கு விழுந்த வாக்குகள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

மேலும், இம்மாநிலங்களில் பா.ஜ.க-வின் நெடுங்கால மக்கள் அடித்தளமாக இருந்துவந்த ராஜ்புத், மராத்தா உள்ளிட்ட ஆதிக்கச் சாதி மக்கள் இம்முறை பா.ஜ.க-வை புறக்கணித்திருந்தாலும் பெரும்பாலான இடங்களில் அவர்கள் யாரும் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கப்பதாக முடிவெடுக்கவில்லை என்பது அம்மக்கள் மாற்று அரசியல்-சித்தாந்தத்தின்கீழ் அணித்திரட்டப்படவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.  இவர்களை மீண்டும் தங்களது அடித்தளமாக மாற்றிக்கொள்ள பாசிசக் கும்பல் அனைத்து வழிகளிலும் முயற்சிக்கும்.

மேலும், பா.ஜ.க. என்பது பிற ஓட்டுக் கட்சிகளைப் போன்றது அல்ல, ஆர்.எஸ்.எஸ்-எனும் பாசிச சித்தாந்தத்தைக் கொண்ட அமைப்பின் அரசியல் கருவி. எனவே கலவரங்களின் மூலம் மக்களை பிளவுப்படுத்தி தனது அடித்தளத்தைப் பலப்படுத்திகொண்டு இத்தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்துகொள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தீவிரமாக முயற்சிக்கும். இவையெல்லாம், இந்துத்துவ அரசியல்-சித்தாந்தத்திற்குகீழ் அணித்திரட்டப்பட்டுள்ள மக்களை மாற்று அரசியல்-சித்தாந்தத்தை முன்வைத்து அணித்திரட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இந்தியாவை மிரட்டும் வெப்ப அலை! காரணம் என்ன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜூன் மாதத்தில் பொதுவெளிhயில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

000

கேள்வி: இந்தியாவில் வெப்ப அலை காரணமாக, இதுவரை 143 பேர் உயிரிழந்துள்ளனர். 42,000 பேர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் செல்கிறது. பருவநிலை மாற்றத்தினால்தான் வெப்ப அலைகளின் தீவிரம் அதிகரித்து வருகிறதா? அல்லது இதற்கு வேறு காரணங்களும் உள்ளதா?

டந்த 2022-ஆம் ஆண்டு இந்தியா தீவிரமான வெப்ப அலையை எதிர்கொண்டது. அதன்பிறகு 2023-ஆம் ஆண்டும் சுமார் 122 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது; இதனால் மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தாண்டு அதைவிட அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சமீபத்தில் “வேர்ல்டு வெதர் ஆட்ரிபியூஷன்” (World Weather Attribution) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தெற்காசியாவில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதும், காலநிலை மாற்றத்தால் இது மேலும் தீவிரமாகியுள்ளதும் தெரியவந்துள்ளது. அதேசமயம், இவ்வாறு வெப்பநிலை உயர்வதற்கு மனித நடவடிக்கைகளே காரணமென்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.

2021-இல் ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டில் (COP26) பிரதமர் நரேந்திர மோடி 2070-இல் நிகர பூஜ்ஜியத்தை அடைவதாக உறுதியளித்தார். ஆனால் இன்றும், நாட்டின் எரிசக்தித் தேவைகளில் 50 சதவீதத்திற்கும் மேலாக நிலக்கரி பயன்பாட்டில்தான் உள்ளது. வேதாந்தா போன்ற சுற்றுச்சுழலுக்கு பேராபத்தை விளைவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணிக்கில் தேர்தல்நிதிகளை லஞ்சமாக பெற்றுக்கொண்டு, நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதற்கு பாசிச மோடி அரசு அனுமதி வழங்கி வருகிறது.

இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கான திட்டங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டில் மட்டும் சுமார் 675 பெரிய தொழில்துறை திட்டங்களுக்கு பாசிச மோடி அரசு சுற்றுச்சுழல் அனுமதிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, இயற்கையை நாசம் செய்யும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தீவிரப்படுத்துகிறது. சான்றாக, இமாச்சலப் பிரதேசத்தில் வளர்ச்சி என்ற பெயரில் மோடி அரசு அமைத்துவரும் பகாசுரமான சாலைகளும், திட்டமிடப்படாத கட்டுமானங்களும் கனமழையின்போது தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

ஒருபுறம் இயற்கை வளங்களை அழித்து காலநிலை மாற்ற பாதிப்புகளை தீவிரப்படுத்தும் பாசிச மோடி அரசு, இயற்கை பேரிடர்களால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பேரிடர் நிவாரண நிதிகளை மாநிலங்களுக்கு வழங்காமல்  மக்களை படுகொலை செய்கிறது. சான்றாக, கடந்த ஆண்டே நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் பலியாகிய நிலையில் இந்தாண்டு அதனை காட்டிலும் இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கான அபாயம் இருந்தது. ஆனால், இதனையெல்லாம் நன்கு அறிந்தும் மக்கள் வெயிலுக்கு பலியாவதை தடுக்க ஒன்றிய அரசின் சார்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. போர்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது; மருத்துவ கட்டமைப்புகளை தயார்ப்படுத்தி வைப்பது போன்ற உயிராதாரமான விசயங்களை மேற்கொள்ளாமல் மக்களை சாகவிட்டு வேடிக்கை பார்க்கிறது, பாசிச மோடி அரசு.

அதிலும், ஏற்கெனவே உயிரிழப்புகள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 80 நாட்களுக்கு தேர்தலை நடத்தியதெல்லாம் பாசிச பயங்கரவாத நடவடிக்கையின் உச்சம். இந்த தேர்தல் சமயத்தில் இந்தியாவில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். தேர்தலின் இறுதி நாளான ஜூன் 1 அன்று மட்டும் 33 வாக்குச்சாவடி ஊழியர்கள் உயிரிழந்தனர். இவையெல்லாம் இந்தியாவில் காலநிலை மாற்றம் மட்டுமின்றி,பாசிச மோடி அரசின் ஆட்சியும் பேரழிவுகளை ஏற்படுத்துவதற்கான காரணம் என்பதை துலக்கமாகக் காட்டுகிறது.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதுக்கோட்டை போஸ் நகர் குடியிருப்பு | அதிகார வர்க்கம் அதன் கைக்கூலிகளின் அடாவடித்தனம்

புதுக்கோட்டை போஸ் நகர் குடியிருப்பு
அதிகார வர்க்கம் அதன் கைக்கூலிகளின் அடாவடித்தனம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



டெல்லி தண்ணீர் தட்டுப்பாடு யார் காரணம்?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜூன் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

000

கேள்வி: இந்திய நாட்டின் தலைநகரான டெல்லி, கடந்த இரண்டு மாதங்களாக மிகக் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. பா.ஜ.க. ஆளும் ஹாரியானா மாநிலம் தண்ணீர் வழங்காததுதான் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என்று ஆளும் ஆம் ஆத்மி அரசும், ஆம் ஆத்மி அரசின் ஊழல், அலட்சியமே காரணம் என அம்மாநில பா.ஜ.க-வும் காங்கிரசும் மாறி மாறிக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் டெல்லி தண்ணீர் பற்றாக்குறைக்கு என்ன காரணம்?

டெல்லி நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. ஏற்கெனவே காலநிலை மாற்றத்தால் டெல்லி நகரத்தின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ்க்கும் மேலாக அதிகரித்ததால் அச்சூழலை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வந்த மக்களின் வாழ்நிலையை தண்ணீர் தட்டுப்பாடு மேலும் மோசமாக்கியுள்ளது.

அன்றாடம் தங்களின் அத்தியாவசிய தேவைக்குரிய அளவை விட குறைவான அளவு தண்ணீரை பெறுவதற்குக் கூட, பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருப்பது, தண்ணீர் லாரிகளில் முந்தியடித்துக் கொண்டு தண்ணீரை தங்களுடைய குடங்களில் நிரப்ப முயல்வது போன்ற அவலநிலைக்கு டெல்லி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், டெல்லி நகரத்தின் பல பகுதிகளில் அரசாங்கத்தால் ஒரு வேளை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால் இந்நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

டெல்லியை பொறுத்தவரை, தன்னுடைய தண்ணீர் தேவையில் 90 சதவிகிதத்தை பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களான இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தையே சார்ந்துள்ளது. அதில் யமுனா நதியிலிருந்து 40 சதவிகிதமும், கங்கையிலிருந்து 25 சதவிகிதமும், பக்ரா நங்கல் அணையிலிருந்து 22 சதவிகிதமும் 13 சதவிகிதம் ஆழ்துளை கிணறுகள் மூலம் பெறப்படுகிறது. இந்த தண்ணீர் ஒன்பது சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்டு 15,473 கி.மீ நீளமுள்ள பைப்லைன் வலையமைப்புகள் மற்றும் நிலத்தடி நீர் தேக்கங்கள் மூலம் நகரம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.

டெல்லியின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முக்கிய பங்காற்றும் யமுனை நதியிலிருந்து விடுவிக்க வேண்டிய நீரை திட்டமிட்டு ஹரியானா பா.ஜ.க அரசு குறைத்து விடுவிப்பதே தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மர்லேனா குற்றம் சாட்டுகிறார். இதன்மூலம் தண்ணீர் பற்றாக்குறைக்கு பா.ஜ.க.வின் சதி நடவடிக்கையே காரணம் என்று ஆளும் ஆத்மி அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

ஆம் ஆத்மி அரசு கூறுவதைப் போல ஹரியானா மாநில பா.ஜ.க. அரசு டெல்லி நகரத்திற்கு தர வேண்டிய உரிய பங்கீட்டு நீரை திட்டமிட்டு குறைத்தே வழங்கி வருகிறது. ஹரியானா அரசு டெல்லி நகரத்திற்கு உரிய பங்கீட்டு நீரை வழங்க மறுப்பது 30 ஆண்டுகளாக உள்ள பிரச்சினையாகும். இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்த போதிலும், டெல்லிக்கு உரிய நீரை வழங்குவதற்காக யமுனாக் கால்வாய் கட்டப்பட்ட பிறகும் இந்த பிரச்சினை நீடித்தே வருகிறது.


படிக்க: மழைவெள்ளத்திற்குக் காரணம் காலநிலை மாற்றமா? தொழில்நுட்ப பிரச்சினையா?


2014-இல் ஒன்றியத்திலும் ஹரியானாவிலும் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகும், டெல்லியின் தண்ணீர் பிரச்சினை தீவிரமாகியுள்ளது. ஹரியானா அரசு டெல்லிக்கு வழங்க வேண்டிய நீரை திட்டமிட்டு குறைந்து வந்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக ஆம் ஆத்மி அரசு 2018 ஆம் ஆண்டிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் பல முறை மனுதாக்கல் செய்தது. அதில் 2021-ஆம் ஆண்டு டெல்லிக்கு வழங்க வேண்டிய நீரை 120 மில்லியன் கேலன்கள் வரை குறைத்து வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டியது. மேலும் பல பத்திரிகையாளர்களும் ஹரியானா அரசு யமுனை நதியின் நீரை தொழிற்துறை நோக்கங்களுக்காக திறந்துவிடுவதை அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஆனால், டெல்லியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு ஆம் ஆத்மி அரசு கூறுவதைப் போல, ஹரியானா அரசு டெல்லிக்கு உரிய தண்ணீரை விடுவிக்காதது மட்டுமே காரணமல்ல. சட்டவிரோதமாக செயல்படும் டேங்கர் மாஃபியா கும்பல்களின் செயல்பாடுகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல், யமுனை நதியின் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

டெல்லியில் டேங்கர் மாஃபியா கும்பல்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இக்கும்பல்கள் தங்களின் இலாப நோக்கத்திற்காக சட்டத்திற்கு புறம்பாக ஆழ்துளை கிணறுகளை துளையிட்டு வரைமுறையின்றி தண்ணீரை சூறையாடி வருகின்றன. இக்கும்பல்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாகக் கூறினாலும் போலீசு மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு தான் செயல்பட்டு வருகின்றன. இக்கும்பல்களின் கீழ் டெல்லியில் 20,552 சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகள் செயல்பட்டு வருவதாக “டெல்லி ஜல் போர்டு” (Delhi Jal Board) கூறுகிறது. ஆனால், களநிலவரம் அரசு கூறும் எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கும்.

தனியார்-கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உல்லாச விடுதிகள், மால்கள், நட்சத்திர ஹோட்டல்கள், ஆடம்பர பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவைகளின் தண்ணீர் தேவைக்காகத்தான் இக்கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. டெல்லியில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரும் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது வேறுவழியின்றி இக்கும்பல்களை அணுகுகின்றனர். ஆனால் இக்கும்பல்களால் அவர்களுக்கு விற்பனை செய்யப்படும் தண்ணீரின் அளவு, தனியார்-கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் தண்ணீரின் அளவை விட மிகச் சொற்பமே ஆகும்.

மேலும், இக்கும்பல்கள் தங்களின் கீழ் உள்ள ஆழ்துளை கிணறுகள் வற்றிய பிறகு அடுத்தடுத்த ஆழ்துளைக் கிணறுகளை புதியதாக துளையிட்டு வருகின்றன. இதன்விளைவாக, டெல்லியில் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

அடுத்து, டெல்லியின் நீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் யமுனை நதியில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டால் தண்ணீரில் அம்மோனியா அளவானது 0.5 பி.பி.எம். அளவை தாண்டி விடுவதால் வசிராபாத் மற்றும் சந்திரவால் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி சுமார் 50 சதவிகிதம் வரை குறைகிறது. மேலும் அசுத்தமான தண்ணீரும் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு காரணமாகிறது.

யமுனை நதியின் மாசுபாட்டிற்கு அபாயகரமான தொழிற்சாலைக் கழிவுகள் எந்த சுத்திகரிப்பின்றியும் நதியில் திறந்துவிடுப்பதே முக்கிய காரணமாகும். அவற்றில் இருந்து கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்தாலே யமுனை நதியின் மாசுபாட்டை பெருமளவு குறைத்துவிட முடியும்.

ஆனால், டெல்லி மாநில அரசும் ஒன்றிய அரசும் யமுனை நதி மாசுபடுவதைப் பற்றி எந்த கவலையும் கொள்வதில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக யமுனை நதியை தூய்மைப்படுத்துவதற்காக பல திட்டங்களை செயல்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளன. மறுபுறம், யமுனை நதியில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதை தெரிந்தே அனுமதிக்கின்றன.


படிக்க: ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?


அதேபோல், டெல்லி மக்களுக்கு தண்ணீரை உற்பத்தி மற்றும் விநியோகம் செய்துவரும் டெல்லி ஜல் போர்டில் (DJB) மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு, டி.ஜே.பி-இன் பணிகளைப் பல்வேறு வேலைகளாகப் பிரித்து, ஒவ்வொரு வேலையையும் தனித்தனி துறைகளாக்கி, அவற்றை அவுட்சோர்சிங் மூலம் நிறைவேற்றும் வகையில் டி.ஜே.பி-யானது கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுள்ளதே டெல்லியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு பிரதான காரணமாக உள்ளது.

டெல்லி ஜல் போர்டை கார்ப்பரேட்மயமாக்கியதில் ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமல்ல, கடந்த 30 ஆண்டுகளாக டெல்லியை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுக்கும் பங்குண்டு. டெல்லியை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோதே டி.ஜே.பி-யை கார்ப்பரேட்மயப்படுத்தும் வேலைகள் தொடங்கப்பட்டன. 2005-ஆம் ஆண்டில் டெல்லி நகரத்தை 21 மண்டலங்களாகப் பிரித்து கார்ப்பரேட்மயப்படுத்தும் பணிகளைப் பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. அதேபோல, 2020-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி அரசும் டெல்லியை ஏழு முதல் எட்டு மண்டலங்களாகப் பிரித்து கார்ப்பரேட்மயப்படுத்தும் “ஒரு மண்டலம் ஒரு ஆப்பரேட்டர்” கொள்கை பற்றி விவாதித்துள்ளது.

டெல்லி ஜல் போர்டை கார்ப்பரேட்மயப் படுத்துவதற்கான செய்திகள் வெளியான போதெல்லாம், சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் எழுந்த எதிர்ப்பினால் டெல்லி ஆளும் கட்சிகள் டெல்லி நகரத்தின் தண்ணீர் விநியோகத்தை கார்ப்பரேட்மயப்படுத்த மாட்டோம் என்று பல முறை வாக்குறுதியளித்துள்ளன. ஆனால் மறைமுகமாக டெல்லி ஜல் போர்டைதனியார்மயப்படுத்தியே வந்துள்ளன.

டெல்லி ஜல் போர்டில் புரையோடிப் போயுள்ள ஊழல்களும் கார்ப்பரேட்மயக் கொள்கைகளை அமல்படுத்தப்படுவதாலேயே நடக்கின்றன. இதன்விளைவாக டெல்லி மக்களுக்கு தண்ணீரை விநியோகம் செய்யும் கட்டமைப்புகள் பராமரிப்புகளின்றி படிப்படியாக சிதைக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள்தான் ஒன்பது நீர் சுத்திரிப்பு நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் தண்ணீர் மக்களை சென்றடைவதற்குள் பாதிக்கும் குறைவான அளவில் வீணாவதற்கான காரணமாகும்.

எனவே, டேங்கர் மாஃபியா, யமுனை நதியின் மாசுபாடு, ஹரியானா உரிய நீரை வழங்காமல் இருக்கும் அரசின் செயல்பாடுகள் ஆகியவை அனைத்தும் தனியார்மய-தாராளமய-உலகமய என்ற மறுகாலானியாக்க கொள்கைகளை ஏற்றுக்கொண்டதன் விளைவே.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



காஷ்மீரில் மொஹரம் ஊர்வலத்தில் பாலஸ்தீன விடுதலை குறித்த முழக்கங்கள் | புகைப்படங்கள்

ஸ்ரீநகரில் ஜூலை 15 மொஹரம் ஊர்வலத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியவர்கள் மீது ஊபா (UAPA) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 15 மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் ஸ்ரீநகரின் குரு பஜாரில் ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது.
ஆனால் இந்த ஆண்டு, தனித்துவமான ஒன்று நடந்தது. மத வசனங்கள் பொறிக்கப்பட்ட வழக்கமான கொடிகளுடன், ஒரு தனித்துவமான கொடி வெளிப்பட்டது. அதுதான் பாலஸ்தீனக் கொடி.
“தேசிய அரசுகள் செய்யும் அட்டூழியங்கள் பெரும்பான்மையினரால் உற்சாகப்படுத்தப்படும் ஒரு உலகில், பாலஸ்தீனத்தில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுக்கு எங்கள் ஆதரவைக் காட்ட நாங்கள் இங்கு நிற்கிறோம்” என்று ஊர்வலத்தில் துக்கம் அனுசரித்த இம்தியாஸ் ஹுசைன் கூறினார்.
“பல குழந்தைகளின் முகங்களில் பாலஸ்தீன கொடிகள் வரையப்பட்டிருந்தன. எங்கள் குழந்தைகளை அவர்களின் முகங்களில் கொடிகளை வரைவதில் பங்கேற்க நாங்கள் வற்புறுத்த வேண்டியதில்லை; பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அப்படித்தான் நாங்கள் இந்த யோசனையை கொண்டு வந்தோம்” என்று ஊர்வலத்தில் பங்கேற்ற குழந்தை ஒருவரின் தாயான சையத் சகீனா கூறினார்.
இளம் பெண்கள் குழுக்களாக ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் கொடிகளை ஏந்தியிருந்தனர். சிலர் பாலஸ்தீனிய சின்னத்துடன் அலங்கரிக்கப்பட்ட பேட்ஜ்களை அணிந்திருந்தனர். இது பாலஸ்தீனத்திற்கான அவர்களின் இதயப்பூர்வமான ஒற்றுமை மற்றும் ஆதரவின் வெளிப்பாடாகும்.
ஊர்வலத்தில் பங்கேற்ற 14 வயது முஹம்மது ஹாதி “மொஹரம் தொடங்கியதிலிருந்து, நானும் எனது குடும்பத்தினரும் பாலஸ்தீனத்துடனான எங்கள் ஒற்றுமையைக் காட்டும் வகையில் இந்த பேட்ஜ்களை எங்கள் ஆடைகளுடன் அணிந்து வருகிறோம்” என்று கூறினார்.

ஊர்வலத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், போலீசு நிர்வாகம் அதிகாலை நேரங்களில் ஒரு சிறிய ஊர்வலத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே நடத்த அனுமதித்தது. ஷியா தலைவர்களின் வேண்டுகோள் விடுத்திருந்தபோதிலும், ஸ்ரீநகரில் பாரம்பரியமான ஒரு பெரிய மொஹரம் ஊர்வலம் நடத்துவதற்கான தடை தொடர்கிறது.


ராஜேஷ்

நன்றி: தி குயிண்ட்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கான பின்னணி என்ன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜூன் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

000

கேள்வி: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் மாதம் வரை மட்டும் ஏழு சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளது. அதுவும் சென்னையில் மட்டும் இரண்டு சாதி ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளது. தொடர்ச்சியாக அதிகரித்துவரும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கான பின்னணி என்ன?

மிழ்நாட்டில், கடந்த சில ஆண்டுகளாகவே ஆதிக்கச்சாதி வெறியாட்டங்கள் அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், நாங்குநேரியில் சின்னத்துரை ஆதிக்கச்சாதி வெறிப்பிடித்த சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அதைத்தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருவது; குறிப்பாக பள்ளிக்கல்லூரி மாணவர்களிடையே திட்டமிட்டு சாதிவெறி ஊட்டப்படுவது; இவையெல்லாம், சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் ஊடுருவி வேலை செய்துவருவதன் வெளிப்பாடு என்ற அபாயகரமான போக்கை மையப்படுத்தி “தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப்போகிறோம்?” என்ற  சிறுநூலை புதிய ஜனநாயகம் சார்பாக வெளியிட்டிருந்தோம்.

தற்போது, இந்நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. சாதி ஆணவப்படுகொலைகள்; சாதித்தாக்குதல்கள்; தீண்டாமை கொடுமைகள் தீவிரமடைந்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சாதி பெருமிதம் வெகுவாக அதிகரித்திருக்கிறது என்றுக் கூறும் ஆய்வாளரும் பேராசிரியருமான ஸ்டாலின் ராஜாங்கம், சாதிப் பெருமிதத்தின் முக்கியமான அம்சமாக, சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிரான பிரசாரங்கள் அதிகளவு நடைபெறுவதாக சொல்கிறார். “சாதியப் படிநிலையில் தங்களைவிட கீழே உள்ள சாதியினர் தங்கள் சாதியைச் சீரழிக்க தங்கள் சமூக பெண்ணைக் காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லி கோபத்தை மூட்டுகிறார்கள். அதன்மூலம் தங்கள் சாதியினரை உளவியல் ரீதியாகத் திரட்டுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல கலாசார நிகழ்வுகளில் இதுபோல பேசப்படுவது சமீப நாட்களில் அதிகரித்திருக்கிறது” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

சான்றாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரோட்டில், வள்ளிக் கும்மி நிகழ்ச்சியில்  கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு, பெண்களிடம், ”சத்தியம் சத்தியமே சின்னமலை சத்தியமே… கல்யாணம் செய்துக்கிறோம் கவுண்டர் வீட்டுப் பையனையே” எனக் கூறி, அப்பட்டமாக சாதிவெறியை ஊட்டும் வகையில் உறுதி மொழி ஏற்க வைத்த சம்பவம் அரங்கேறியது. கொங்கு மண்டலம் என்று சொல்லப்படுகின்ற கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாகவே பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில் படித்துக்கொண்டிருக்கும் இளம்தலைமுறையினரிடம் சாதிவெறியை ஊட்டும் வகையில் வள்ளிக்கும்மி என்ற நிகழ்ச்சி பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் திட்டமிட்டே ஊக்குவித்து வருகிறது. சமீபத்தில் வள்ளிக்கும்மி பயிற்சியாளார் ஒருவருக்கு பத்மஸ்ரீ பா.ஜ.க வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீப காலமாக, ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த பெண்களை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண்கள் காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துப் படம் எடுப்பதும் அதிகரித்து வருவதை ஸ்டாலின் ராஜாங்கம் சுட்டிக்காட்டுகிறார். சமீபத்தில் கூட  அப்பட்டமாக சாதிவெறி நஞ்சைக் கக்கும் கவுண்டம்பாளையம் என்ற படம் வெளிவரவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ்நாட்டில் சாதிப் பெருமிதம் அதிகரிப்பதற்கும் பா.ஜ.கவின் வாக்கு வங்கி அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பிருக்கிறது என்றும், “பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை மதத்தைப் பற்றியே பேசினாலும் சாதியை மையமாக வைத்துத்தான் அவர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த முறை பா.ஜ.க. கணிசமாக வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்றால், அதில் சாதிரீதியான அணிதிரட்டல்களுக்கும் பங்கு இருக்கிறது” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் சாதிரீதியான அணித்திரட்டல், குறிப்பாக இளைஞர்களை மையப்படுத்தி நடப்பதுதான் இங்கு அபாயகரமான விஷயம். இளம்தலைமுறையைச் சேர்ந்த பலர், இந்தக் கும்பலின் சாதிவெறிக்கு பலியாகி வருகின்றனர் என்பதை சமூக ஊடகங்களில் வைரலாகும் பல வீடியோக்கள் உணர்த்துகின்றன. தமிழ்நாட்டில் தன்னுடைய மத-பிளவுவாத அரசியல் மூலம் கலூன்ற முடியாத ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் சாதி சங்கங்களில் ஊடுருவி தனக்கான அடித்தளத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சதித்திட்டத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது நம் முன்னிருக்கும் உடனடி கடமையாக உள்ளது.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடி vs ஆர்.எஸ்.எஸ் மோதல் உண்மையா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜூன் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

000

கேள்வி: 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க. தலைவர் ஜே.பி நட்டா, “ஆரம்பக்கட்டத்தில் நாங்கள் திறன் குறைவாக சிறியவர்களாக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்-இன் தேவை இருந்தது. ஆனால், தற்போது நாங்கள் வளர்ந்து விட்டோம். எங்களால் சுயமாக இயங்க முடியும்” என்று பேசியிருந்தார். தேர்தல் முடிவுக்குப்பிறகு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “ஒரு உண்மையான சேவகருக்கு அகங்காரம் இருக்காது…தேர்தல் பிரச்சாரத்தில் நல்லொழுக்கம் பேணப்படவில்லை” போன்ற கருத்துகளை தெரிவித்திருந்தார். இவை அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு இடையில் முரண்பாடுகள் முற்றுவதை காட்டுகின்றன. ஆனால், இந்த முரண்பாடு பா.ஜ.க.-விற்கு எந்தளவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும்? ஒருவேளை மோடிக்கு மாற்றாக ஒருவரை தேர்ந்தெடுக்க ஆர்.எஸ்.எஸ். தயாராகிவிட்டதா?

ண்மையில், ஆர்.எஸ்.எஸ்-க்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் முரண்பாடு முற்றுகிறது என்பது ஊதிபெருக்கப்பட்ட விசயம். அதற்காக, ஆர்.எஸ்.எஸ்-பாஜ.க-விற்கு இடையில் முரண்பாடு இல்லையென்றும் அர்த்தமில்லை. சொந்த கட்சிக்குள்ளேயே அடியறுப்பு வேலை செய்துவரும் மோடி-அமித்ஷா கும்பலுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையிலான அதிகார மோதல்கள், மோடி தன்னை ஆர்.எஸ்.எஸ்-க்கு மேலாக முன்னிறுத்திக்கொள்ள முயற்சிப்பது போன்றவை முரண்பாடுகளுக்கான சில கரணங்கள். இம்முறை தேர்தலின்போது பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சார்ந்தவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லாமல் இருந்தது அம்முரண்பாட்டை வெளிக்காட்டியது.

ஆனால், பா.ஜ.க-விற்கும் ஆர்.எஸ்.எஸ்-க்குமான முரண்பாடு, மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்குமான முரண்பாடு ஏதோ திடீரென்று ஏற்பட்டது அல்ல. அத்வானி, வாஜ்பாய் என ஒவ்வொருவர் காலக்கட்டத்திலும் பா.ஜ.க-விற்கும் ஆர்.எஸ்.எஸ்-க்குமான முரண்பாடு வெவ்வேறு அளவுகளில் இருந்ததுபோல், மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்குமான முரண்பாடு குஜராத் முதலமைச்சராக இருந்த போதிலிருந்தே தொடர்ந்து நீடித்துவரும் பிரச்சினை என “ஆர்.எஸ்.எஸ் ஓர் அச்சுறுத்தல்” என்ற புத்தகத்தில் ஏ.ஜி.நூரானி குறிப்பிட்டு காட்டுகிறார்.

அத்தகைய முரண்பாடுகள் இருந்தபோதும், 2014-இல் குஜராத் படுகொலை நாயகனாக இருந்த மோடியை முன்னிறுத்தினால்தான் தன்னுடைய இந்துராஷ்டிர கனவை நோக்கி நகர முடியும் என்று உணர்ந்த ஆர்.எஸ்.எஸ். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. மோடியும் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி இந்துராஷ்டிரத்திற்கான பல்வேறு அடிக்கட்டுமானங்களை இந்த பத்தாண்டுகளில் உருவாக்கியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் கும்பல் இந்த பத்தாண்டுகளில் வெகுவாக வளர்ந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இலக்கான காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, ராமர் கோவில் திறப்பு போன்றவற்றை மோடி அரங்கேற்றியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக நாடுமுழுவதும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது, மோடிக் கும்பல்.

எனவே, ஆர்.எஸ்.எஸ்-க்கும் மோடிக் கும்பலுக்கும் இடையிலான முரண்பாடு என்பது இந்துராஷ்டிரத்தை படைக்கவேண்டும் என்பதிலிருந்து எழுகிறது. இம்முரண்பாடு காரணமாக, “ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-விற்கு நெருக்கடியை உண்டாக்கப்போகிறது, மோடிக்கு ஆப்பு வைக்கப் போகிறது” என்று பேசுவதெல்லாம் அபத்தனமானது.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சிக்கிய அனில் அகர்வால் கும்பல் | மக்களை எச்சில் இலை எடுக்கச் சொல்லும் மோடி | தோழர் மருது

சிக்கிய அனில் அகர்வால் கும்பல்
மக்களை எச்சில் இலை எடுக்கச் சொல்லும் மோடி | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு: சி.பி.ஐ-யின் யோக்கியதையை நாறடித்த உயர்நீதிமன்றம்!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு:
சி.பி.ஐ-யின் யோக்கியதையை நாறடித்த உயர்நீதிமன்றம்!
மக்கள் போராட்டங்களே குற்றவாளிகளை தண்டிக்கும்!

17.07.2024

பத்திரிகை செய்தி

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் சிபிஐ விசாரணை சரியில்லை; இத்தனை ஆண்டுகளாகியும் பலன் இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்து மதிப்பை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை 2 வாரத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றியது என்பதே வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனத்தையும் மோடி, அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட போலீசுத்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக தான் என்று மக்கள் அதிகாரம் தொடக்க காலம் முதல் தெரிவித்து வருவது தற்பொழுது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் “சிபிஐ-யின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிபிஐ துணை போயுள்ளது. பொது மக்களை புழுவை நசுக்குவது போல் நசுக்கியுள்ளனர். இதில் யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூட சிபிஐ விசாரிக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 7 கி.மீ தூரம் உள்ள வீட்டில் எப்படி ஒருவர் பலியாகியிருக்க முடியும்? இதையெல்லாம் சிபிஐ ஏன் விசாரணைக்கு கொண்டு வரவில்லை” என்றும், “இறுதி அறிக்கையில் ஒருவர் பெயர் கூட சேர்க்கப்படவில்லை. ஒருவரும் குற்றவாளியாக சேர்க்கப்படாத நிலையில் யாருக்கு எதிராக வழக்கு நடத்துவீர்கள்?” என்றும் சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்தது.

“இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட போலீசுத்துறை மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் பெயர்களில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சொத்து விவரங்கள், சம்பவத்திற்கு பிறகு 2 ஆண்டுகளுக்கான சொத்து விவரங்களை சேகரித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

ஒரு முதலாளிக்காக மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.


படிக்க: மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஆறாம் ஆண்டு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! | மக்கள் அதிகாரம்


தூய்மையான நீர், காற்று, நிலம் வேண்டும் என்று போராடிய தூத்துக்குடியின் மாவீரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 16 வயதான ஸ்னொலின், மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உள்ளிட்ட 15 பேர் தமிழ்நாடு போலீசால் காக்கை, குருவிகளை போல சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் பல நூறு பேர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதும் ஒருபோதும் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் மறக்கப்போவதில்லை.

ஆண்டுகள் ஆறு ஆன பின்னும் கூட, இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது மிகவும் துயரமானது.

ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டெர்லைட் குற்றவாளிகளை தண்டிப்போம் என்று வாய்கிழிய பேசிய திமுக தற்பொழுது அடக்கி வாசிக்கிறது. கொலைக் குற்றவாளிகள் அத்தனை பேரும் பதவி உயர்வு பெற்று விட்டார்கள்.

இதற்கு எதிரான கோபத்தீ தமிழ்நாட்டு மக்களின் மனதில் பற்றிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவு சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள்.

அடுத்த வாரம் நீதிமன்றம் எவ்வித கருத்தையும் கூறலாம். அதற்காக தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மக்களை சுட்டுக்கொன்ற அன்றைய முதலமைச்சர், டிஜிபி, உள்துறைச் செயலாளர் தலைமைச் செயலாளர் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

அதற்கான பணியை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்காவிடில் கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதற்கான மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாடு மக்களும் தமிழ்நாடும் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு! தன்னுரிமையை கேட்காமல் தண்ணீர் ஒருபோதும் வராது!

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு!
தன்னுரிமையை கேட்காமல் தண்ணீர் ஒருபோதும் வராது!

17.07.2024

மக்கள் அதிகாரம் அறிக்கை

காவிரி நீருக்கான போராட்டம் காலம் முழுவதும் நீண்டு கொண்டே இருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரசு, பாரதிய ஜனதா, ஜனதா தளம் என யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடக்கூடாது என்பதில் மட்டும் ஒற்றுமையுடன் இனவெறியோடு செயல்படுகிறார்கள்.

கர்நாடகாவில் உள்ள எந்த ஒரு தேசிய கட்சியும் சரி, திமுக, அதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கர்நாடக இனவெறி அரசுக்கு ஆதரவாக இருப்பது மிகவும் வெட்கக்கேடானதாகும்.

கர்நாடகத்தில் இனவெறியைத் தூண்டி வரும் பாசிச பாஜகவின் மோடி அரசு ஒருபோதும் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை பெற்று தராது.

ஒரு நீரின் மீதான முற்றுரிமை கடைமடை பகுதிக்கே என்பது உலகம் முழுவதும் உள்ள நியதி. ஆனால் இந்த உரிமையை திட்டமிட்டு கன்னட இனவெறி அரசு மீறும் போதெல்லாம் ஒன்றிய அரசு எப்பொழுதும் நடுநிலையுடன் செயல்பட்டது இல்லை. மாறாக கன்னட இனவெறி அரசுக்கு ஒத்ததூதுகின்ற வேலையை தொடர்ச்சியாக செய்தது, செய்து கொண்டும் வருகிறது.

காவிரி ஒழுங்காற்று ஆணையம், ஒரு டிஎம்சி தண்ணீர் தினமும் திறந்து விட வேண்டும் என்று கூறியபிறகும் கூட அதற்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 2018 இல் தமிழ்நாடு மேற்கொண்ட போராட்டங்கள் நீண்டது, நெடியது.


படிக்க: காவிரி உரிமைக்காக திருவாரூரில் கடை அடைப்பு போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு


ஒவ்வொரு முறையும் கர்நாடகத்திடம் கெஞ்சி நம்முடைய உரிமைகளை பெற வேண்டிய அவசியம் இல்லை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் இனி கர்நாடகத்திலும் பேசுவதில் எவ்வித பயனும் இல்லை.

உலக நியதியையும் மதிக்க மாட்டோம், காவிரி ஒழுங்காற்று ஆணையம், மேலாண்மை வாரியம் எதையும் மதிக்க மாட்டோம் என்று இனவெறியோடு செயல்படும் கன்னட அரசு ஒன்றிய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் காவிரி நதிநீர் உரிமை தமிழ்நாட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அதனை ஊக்குவித்துக் கொண்டிருப்பது ஒன்றிய அரசு தான்.

இது தனிப்பட்ட தமிழ்நாடு, கர்நாடகா பிரச்சனை அல்ல. தேசிய இன பிரச்சனை. தமிழ் தேசிய இனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்.

இதற்கான போராட்டத்தை ஆளுகின்ற திமுக அரசு ஒருபோதும் முன்னெடுக்கப் போவதில்லை.

கன்னட இனவெறிக்கு தூபம் போடும் தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது என்ற சூழலை தமிழ்நாட்டு மக்களாகிய நாம் உருவாக்க வேண்டும். நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட தமிழ்நாட்டுக்கு எதிராக காவிரி நீரைத்தர முடியாது என்ற பரப்புரையை முன்னெடுத்தது பாசிச பாஜக.

ஜல் சக்தி துறை அமைச்சரை சந்திப்பது என்று தமிழ்நாடு அரசு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்திருக்கின்ற முடிவு மிகவும் கோழைத்தனமானது. காவிரி தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்கள் முடக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடகத்தில் செயல்படும் கட்சிகள் இங்கு செயல்பட முடியாத நிலையை உருவாக்க வேண்டும்.

பாசிச பாஜக, திமுகவை குற்றம் சொல்வதும், காங்கிரசை குற்றம் சொல்வதும் என்று மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வது நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. இந்த நாடகங்களை தமிழ்நாடு மக்கள் புறக்கணித்து தமிழ்நாட்டின் தன்னுரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அது தமிழ்நாட்டு மக்களின் கடமை என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மின் கட்டண உயர்வு: உழைக்கும் மக்கள், சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்த தமிழ்நாடு அரசு!

மின் கட்டண உயர்வு: உழைக்கும் மக்கள்,
சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்த தமிழ்நாடு அரசு!

17.07.2024

கண்டன அறிக்கை

மிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் ஏற்கெனவே மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்கள் மற்றும் உழைக்கும் மக்களின் வயிற்றில் அடித்து இருக்கிறது தமிழ்நாடு அரசு.

கடந்த 2022 செப்டம்பர் மாதம் மின் கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2023 ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 4.83 சதவீத அளவில் மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.

வருடம் ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே ஒன்றிய அரசிடமிருந்து நிதியை பெற முடியும் என்றும், ஆறு சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு இருந்த போதும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இக்கட்டண உயர்வை உயர்த்தியுள்ளதாகவும் அரசு தன்னுடைய விளக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தனியார்மயம், தாராளமயம் உலகமயத்தின் விளைவாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு ஆணையங்களின் கீழ் ஒட்டுமொத்த நாடும் சிக்க வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கீழ்படிந்துசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடுவதைக் கைவிட்டு விட்டு மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளது திமுக அரசு. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுவதுடன் உதய் மின் திட்டத்திலிருந்து தமிழ்நாடு வெளியேறுவதற்கான சிறப்பு தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடி 3.0: பாசிச அபாயம் நீங்கிவிட்டதா?

மீண்டும் பாசிச மோடியின் ஆட்சி அமைந்துள்ளது. ஆனால், தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற முடியாமல் போனதால் பாசிச அபாயமே நீங்கிவிட்டது போன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. குறிப்பாக, கூட்டணி கட்சிகளை நம்பி மோடி ஆட்சியமைத்துள்ளார்; பா.ஜ.க-விற்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது; எனவே, மோடியால் கடந்த காலங்களில் இருந்ததைப் போல் சர்வாதிகாரமாக நடந்துக்கொள்ள முடியாது; பா.ஜ.க-வால் முன்பு போல் தடாலடியாக சட்டத் திட்டங்களை நிறைவேற்ற முடியாது; 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சியாக உருவெடுத்தது போல 2029-இல் ஆட்சியை பிடித்துவிடும்; இவ்வாறு படிப்படியாக இந்தியாவில் ‘ஜனநாயகத்தை’ மீட்டுருவாக்கம் செய்துவிடலாம் என்றெல்லாம் கருத்துகளை முன்வைக்கின்றனர். ஆனால், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள மோடிக்கும்பல், இந்துராஷ்டிரத்தை நிறுவும் தன்னுடைய இலக்கில் துளியும் சமரசம் செய்துக்கொள்ளப் போவதில்லை என்பதையே, மோடியின் பதவியேற்பிலிருந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் விவகாரம் வரை தெளிவாக உணர்த்துகிறது.

கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் நெருக்கடி யாருக்கு?

தற்போது அமைந்துள்ளது பா.ஜ.க. அரசாங்கம் இல்லை, என்.டி.ஏ. அரசாங்கம் என்பதை சிலர் அழுத்தமாக குறிப்பிடுகின்றனர். காரணம் இதற்குமுன் இரண்டுமுறை என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைந்திருந்தாலும் பா.ஜ.க-விடம் பெரும்பான்மை இடங்கள் இருந்ததால் அது பா.ஜ.க-வின் சர்வாதிகார ஆட்சியாகவே இருந்தது. அதிலும் மோடிதான் அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என்பதுதான் நிலைமையாக இருந்தது. ஆனால், இம்முறை பா.ஜ.க-விடம் பெரும்பான்மை இல்லை, “ஐக்கிய ஜனதா தளம்” கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் மற்றும் “தெலுங்கு தேசம் கட்சி”யின் தலைவர் சந்திரபாபுநாயுடு இருவரின் ‘தயவில்தான்’ மோடி ஆட்சி அமைத்துள்ளார்; எனவே, பா.ஜ.க-வால் தனித்து இயங்க முடியாது என்ற கருத்தை பலரும் முன்வைக்கின்றனர்.

ஆனால், பா.ஜ.க.-விற்கு பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தாலும், பா.ஜ.க-வின் அதே பாசிச சர்வாதிகார ஆட்சிதான் தொடரப்போகிறது என்பதை மோடியின் அமைச்சரவையே உணர்த்தியது. தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்தே, பா.ஜ.க-வுடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் முக்கியமான அமைச்சரவை துறைகளைக் கோரி பா.ஜ.க-விற்கு நெருக்கடி கொடுப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன.

ஆனால், மொத்தமாக ஒதுக்கப்பட்ட 72 அமைச்சர் பதவிகளில் 60 பதவிகளை பா.ஜ.க-வே வைத்துக்கொண்டதோடு, முக்கியத்துறைகள் எதுவும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படவில்லை. மேலும், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், அஷ்வினி வைஷ்ணவ் என கடந்தமுறை மோடியின் அமைச்சரவையில் பல்வேறு பாசிச சட்டத்திட்டங்களைக் கொண்டுவந்த அதே நபர்களை மீண்டும் நியமித்ததன் மூலம் மோடியின் 3.0 ஆட்சியில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதையே பாசிசக் கும்பல் அறிவி்த்தது.


படிக்க: நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!


அதேப்போல், நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.க-விடமிருந்து தங்கள் கட்சியைக் கபளீகரம் செய்யாமல் காப்பாற்றிக் கொள்வதற்கான காப்பீடாக (Insurance) சபாநாயகர் பதவியை கண்டிப்பாக பெற்றுவிடுவார்கள் என்றுக் கூறப்பட்டு வந்தநிலையில், மீண்டும் ஓம் பிர்லாவையே சபாநாயகராக நியமித்தது பா.ஜ.க. இவையெல்லாம், கூட்டணி கட்சிகளால் பா.ஜ.க-விற்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படப்போவதில்லை என்பதை தெளிவாகக் காட்டியது. மேலும், “அதிகாரத்தில் எல்லாம் பங்கு தர முடியாது, வேண்டுமானால் தங்களுடன் கூட்டணியில் இருப்பதன் மூலம் சில சலுகைகளை அனுபவித்துக் கொள்ளலாம்” என்பதே பா.ஜ.க-வின் கூட்டணிகட்சிகளுக்கான அணுகுமுறை.

மேலும் இக்கட்சிகள் பா.ஜ.க-விற்கு நெருக்கடி கொடுக்கும் என்று கருதுவதற்கு நிகழ்காலத்திலோ கடந்தகாலத்திலோ எந்த  முகாந்திரமும் இல்லை. மோடியின் பதவியேற்பு விழாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார், மோடியின் காலில் விழுகிறார். அக்கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி பொது சிவில் சட்டத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல, பரிசீலித்து ஒத்த முடிவு எடுத்தால் போதும் என்று பா.ஜ.க-விடம் சரணடைகிறார். இதே கருத்தை அக்கட்சி அக்னிபாத் திட்டத்திலும் முன்வைக்கிறது. கடந்தமுறை மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காஷ்மீருக்கான 370-வது சிறப்பு சட்டத்தை ரத்து செய்வது, குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் உள்ளிட்ட பாசிச சட்டங்களையும் இக்கட்சி ஆதரித்தே வந்துள்ளது. அதேபோல், குஜராத் இனப்படுகொலையின் போது ஒன்றியத்தில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு, இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை வேடிக்கைப் பார்த்தவர்தான் சந்திரபாபு நாயுடு.

தெலுங்கானாவில் மேடக் பகுதியில் கலவரத்தில் ஈடுபடும் காவிக் குண்டர்கள்.

எனவே, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளுமே மோடியின் நவதாராளவாத-இந்துத்துவ கொள்கைகளுக்கு கருத்தியல் ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ எதிரானவை அல்ல. தேர்தல் பரப்புரையின்போது மோடி கக்கிய வெறுப்பு-பொய் பிரச்சாரங்களை பெயரளவிற்கு கூட கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தவைதான் இவ்விரண்டு கட்சிகளும். இந்த பிழைப்புவாத-சந்தர்ப்பவாத கட்சிகள்தான் பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடப்போகின்றன என்று எண்ணுவதை காட்டிலும் முட்டாள்தனம் ஏதும் இல்லை.

இன்னொருபுறம் “இந்தியா” கூட்டணியினரோ, பா.ஜ.க-விற்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகள் அமைந்துவிட்டதாவும் இம்முறை நாடாளுமன்றத்தில் ‘சத்தமாக குரலெழுப்ப’ப் போவதாகவும் தெரிவிக்கின்றனர். கடந்த பத்தாண்டுகால மோடி ஆட்சியில், அம்பானி-அதானி குறித்து பேசினால் மைக் ஆஃப் செய்யப்படும்; பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தினால் எதிர்க்கட்சி எம்.பி-க்களின் உரை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்; அதையும் மீறி பேச முற்பட்டால் ஒழுக்கக்கேடு என நூற்றுக்கணக்கான எம்.பி-க்கள் தூக்கி வெளியே வீசப்பட்டு சட்டம் நிறைவேற்றப்படும்; அதற்கும் பணியவில்லையெனில் எம்.பி. பதவி பறிக்கப்படும் என பெயரளவிலான ஜனநாயக முறைகள் கூட ஒழித்துக்கட்டப்பட்டு பாசிச நடைமுறைகளே நாடாளுமன்ற மரபுகளாக மாற்றப்பட்டுள்ளன.

அதேபோல், கடந்த ஆட்சியில் கொலீஜியத்தை ஒழித்துக்கட்டுவதற்கான நிகழ்ச்சிநிரலை கச்சிதமாக தொடங்கிவைத்து பா.ஜ.க-வின் கைத்தேர்ந்த அடியாளாக செயல்பட்ட சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இம்முறை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக மாற்றபட்டுள்ளதே பா.ஜ.க. இம்முறை எதிர்க்கட்சிகளை எவ்வாறு கையாளக் காத்திருக்கிறது என்பதற்கு போதுமான சான்று.

அருந்ததி ராய் மீது ஊபா வழக்கு பாய்ச்சப்பட்டுள்ளது. இச்சம்பவமானது இந்தியாவில் பாசிசக் கும்பலை எதிர்த்து நிற்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்.

மேலும், தேர்தல் முடிவு வெளியான அன்று மோடி ஆற்றிய உரையில், “ஜூன் 4-க்கு பிறகு ஊழல் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தும்” என்று பேசியது, நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகள் இந்த ஆட்சியில் மேலும் மூர்க்கப்படுத்தப்படும் என்பதையே காட்டுகிறது. சமீபத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்த சம்பவம் இதனை உறுதிப்படுத்துகிறது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20 அன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நிலையில், மறுதினமே டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை வாங்கியது, அமலாக்கத்துறை. அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவு இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கு முன்பே இவை அனைத்தும் நடந்து முடிந்தன.

எனவே, தேர்தலில் நினைத்த வெற்றியை அடையாவிட்டாலும், அரசு கட்டமைப்பை பாசிசமயமாக்கியுள்ளதன் மூலம் பா.ஜ.க. தனது ஒற்றை கட்சி சர்வாதிகார கனவை நிறைவேற்றவே துடிக்கும். ஆக, எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சிகளும் பா.ஜ.க-விற்கு நெருக்கடி கொடுத்து பாசிச அரங்கேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிடும் என்று நினைப்பது கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்கும் கதையே.

பாசிச நிகழ்ச்சிநிரலை மூர்க்கமாக்கும் பாசிசக் கும்பல்

மூன்றாவதுமுறை ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பாசிச நிகழ்ச்சிநிரல்களை அமல்படுத்துவதில் பாசிச மோடி அரசின் தீவிரத்தைக் காட்டுகிறது.

புதிதாக சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அர்ஜுன் ராம் மேக்வால், கூடிய விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும், ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்குவரும் என்றும் அறிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் 146 எம்.பி-க்களை நாடாளுமன்றத்தைவிட்டு வெளியே வீசியெறிந்துவிட்டு நிறைவேற்றப்பட்டதுதான் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள். ஒட்டுமொத்த மக்களையும் குற்றவாளிகள் பார்வையிலிருந்து அணுகும் இச்சட்டத்தை எதிர்த்து ஏற்கெனவே லாரி ஓட்டுநர்களும் மருத்துவர்களும் போராடியுள்ளனர். மேலும், நாடுமுழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளும் அறிவுஜீவிகளும் பெரும்பான்மையாக வழக்கறிஞர்களும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்படியிருந்தும் இச்சட்டங்களை துணிச்சலாக அமல்படுத்த முயற்சிக்கிறது, பாசிசக் கும்பல்.

அதேபோல், பா.ஜ.க. ஆட்சியமைத்தவுடனேயே என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்திலிருந்து பாபர் மசூதி இடிப்பு குறித்த குறிப்புகளை நீக்கிவிட்டு, பாபர் மசூதி என்ற வார்த்தையை “மூன்று கோபுர கட்டடம்” என்று மாற்றியுள்ளது. ஏற்கெனவே, ஃபைசாபாத் என்ற பெயரை அயோத்தி என்றும் பாபர் மசூதி நிலம் என்பது ராமன் கோவில் இடம் என்றும் குறிப்பிடுவது பொது வழக்கமாக மாற்றப்பட்டுவிட்டது. தற்போது பாபர் மசூதி என்ற வார்த்தையை வரலாற்றிலேயே இல்லாமல் செய்வதற்கான வேலையில் பாசிசக் கும்பல் இறங்கியுள்ளது.

மேலும், கடந்த 2010-ஆம் ஆண்டு காஷ்மீர் குறித்து பேசியதற்காக ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அருந்ததி ராய் மீது ஊபா வழக்கு பாய்ச்சப்பட்டுள்ளது. இச்சம்பவமானது இந்தியாவில் பாசிசக் கும்பலை எதிர்த்து நிற்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும். பீமா கோரேகான் பொய் வழக்குப்போல் பாசிச எதிர்ப்பாளர்கள் மீதான வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்பதையே பாசிசக் கும்பலின் இச்செயல்பாடு உணர்த்துகிறது.


படிக்க: அபாயகரமான மோடியின் சட்டங்கள்! யாரையும் கைது செய்யலாம் | தோழர் மருது


முக்கியமாக, “பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்திருந்தாலும் புதிய அரசாங்கத்தில் அதன் பொருளாதார நிகழ்ச்சிநிரலில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது” எனவும், 2047-க்குள் விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைவதற்காக உள்கட்டமைப்பு, தொழிலாளர் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அம்பானி-அதானிகளுக்கான மோடியின் சேவை இந்த ஆட்சியில் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு நாட்டில் ஏற்கெனவே நிலவிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, நெருக்கடிகள் உச்சத்தை அடையப்போகிறது.

அரசியல்-பொருளாதார கட்டமைப்பில் மட்டுமின்றி இந்துமுனைவாக்கத்தைக் கூர்மைப்படுத்துவதற்காக அடித்தளத்திலும் ஆர்.எஸ்.எஸ். தீவீரமாக வேலை செய்கிறது. தேர்தலில் வெற்றிபெற்று பா.ஜ.க. ஆட்சியமைத்தவுடனேயே ‘பசுவதை’ என்ற பெயரில் மீண்டும் கும்பல் படுகொலைகளையும் கலவரங்களையும் நடத்த ஆரம்பித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் பக்ரித் பண்டிகையின்போது 48 மணி நேரங்களில் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹிமாச்சலப்பிரதேசம், அசாம், ஒடிசா, தெலுங்கானா என இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்தடுத்து கலவரம் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டது, காவிக் கும்பல். குறிப்பாக, தெலுங்கானாவில் மேடக் பகுதியில் நடத்தப்பட்ட கலவரம் அப்பகுதியில் அரங்கேறிய முதல் கலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல்-பொருளாதார கட்டமைப்பில் மட்டுமின்றி இந்துமுனைவாக்கத்தைக் கூர்மைப்படுத்துவதற்காக அடித்தளத்திலும் ஆர்.எஸ்.எஸ். தீவீரமாக வேலை செய்கிறது.

நிலைமை இவ்வாறிருக்க, பாசிச அபாயம் ஓய்ந்துவிட்டது, பா.ஜ.க-வின் இந்துராஷ்டிர கனவு தகர்ந்துவிட்டது என்று பேசுவதெல்லாம் பா.ஜ.க-வின் அபாயகரத்தை மக்களிடமிருந்து மறைத்து அவர்களை இந்துராஷ்டிரத்தின் நுழைவாயிலுக்கு கூட்டிச் சென்று நிறுத்துவதற்கே வழிவகுக்கும்.

000

இவையனைத்திற்கும் மேலாக ஒரு நாட்டில் பாசிசம் அரங்கேறுவதற்கு பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதே அடிப்படையானது. இந்தியாவிலும் கடந்த பத்தாண்டுகளில் பாசிச மோடி கும்பல் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் பாசிசமயமாக்கியுள்ளது என்றால் அதற்கு பா.ஜ.க. கைப்பற்றிய ஆட்சியதிகாரம் அடிப்படையான காரணம். அந்தவகையில், மூன்றாவது முறையும் பா.ஜ.க. தனது ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துள்ளது என்பது பாசிச அபாயம் தீவிரமடைந்துள்ளது என்பதையேக் காட்டுகிறது. இந்த எதார்த்தத்தை பரிசீலிக்காமல் பா.ஜ.க-விற்கு தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதிலிருந்து இது தோல்வி என்று பேசுவது பாசிச அபாயத்தை மூடிமறைப்பதற்கே வழிவகுக்கும்.

தனக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் எந்தவொரு பாசிசக் கட்சியும் தனது திட்டத்தை கைவிட்டுவிடாது. எனவே, மோடி தனிபெரும்பான்மை பெற்றாலும் பெறாவிட்டாலும் தற்போது இந்தியாவின் ஆட்சியதிகாரம் பாசிஸ்டுகளின் கரங்களிலேயே குவிக்கப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு பாசிச எதிர்ப்பு சக்திகள் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுக்கு எதிரான பாசிச எதிர்ப்பு திட்டத்தை வகுத்துக்கொண்டு செயல்பட வேண்டியுள்ளது.

இந்தியா பாசிச அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது என்பதை பரிசீலிக்கும் அதேவேளையில் அதனை கண்டு அஞ்சுவதற்கு எதுவும் இல்லை என்பதை தற்போது நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் மாணவர்களின் நீட் எதிர்ப்பு போராட்டம் உணர்த்துகிறது. எனவே, பாசிசக் கும்பலுக்கு எதிரான உறுதியான மக்கள் போராட்டங்களை கட்டியமைத்து, பாசிசக் கும்பலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகக் கட்டமைப்பை நிறுவதற்கான திசையில் முன்னேறுவோம்!


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தொடரும் சாதிவெறியாட்டங்கள்: ஆர்.எஸ்.எஸ் ஊடுருவலும்! தி.மு.க. அரசின் பிழைப்புவாதமும்!

தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட அழகேந்திரன்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோவிலாங்குளம் பகுதியில் வசித்துவந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 21 வயதான அழகேந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஜூன்-24 ஆம் தேதி மதுரை கள்ளிக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த அழகேந்திரனை, அவர் காதலிக்கும் பெண்ணின் மாமன் மகனான பிரபாகரன் போனில் தொடர்புகொண்டு, “உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறேன். அதுகுறித்து பேச வேண்டும் வா” என்று நயவஞ்சமாக பேசி அழைத்துச் சென்றுள்ளான்; இதனை நம்பி சென்ற அழகேந்திரனின் தலையை துண்டாக்கி படுகொலை செய்து உடலை கள்ளிக்குடி அருகேயுள்ள வேலாம்பூர் கண்மாயில் வீசி சென்றுள்ளான்.

பிரபாகரன் தன்னுடன் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து இப்படுகொலையை நிகழ்த்தியுள்ளதாகவும், அவர்கள் அழகேந்திரன் உயிருடன் இருக்கும் போதே அவரின் கை கால்களைப் பிடித்துக்கொண்டு, தலையைத் துண்டித்தும் பிறப்புறுப்பைச் சிதைத்தும் மிகக்கொடிய முறையில் இந்த ஆணவப் படுகொலையை நிகழ்த்தியிருப்பதாகவும் கூறுகிறார், “தமிழ் புலிகள் கட்சி”யின் செய்தித் தொடர்பாளரான முத்துக்குமார்.

மகனைக் காணவில்லை என்று புகாரளிக்க சென்ற அழகேந்திரனின் பெற்றோரை, வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழித்து வழக்கம்போல் சாதி ஆணவப்படுகொலை குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான் போலீசும் செயல்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் பிரிவைச் சேர்ந்த சாதிவெறியர்கள் மற்றொரு தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவைச் சார்ந்த அழகேந்திரனை மிகக் கொடூரமான முறையில் சாதி ஆணவப்படுகொலை செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் போன்ற ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகள் தங்களுடைய பிழைப்புக்காக தேவேந்திர குல வேளாளார் சமுதாய மக்கள் மத்தியில் சுயசாதி பெருமையை ஊட்டிவருவதன் தீவிரத்தையும் இந்த பிழைப்புவாதிகளின் சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலின் அபாயத்தையும் இச்சம்பவம் காட்டுகிறது.


படிக்க: சந்துரு அறிக்கைக்கு எதிராக பா.ஜ.க செயற்குழு தீர்மானம்


ஒருபுறம் தேவர், வன்னியர், கவுண்டர் போன்ற ஆதிக்கச்சாதி சங்கங்களில் ஊடுருவிவரும் ஆர்.எஸ்.எஸ் கும்பலானது மற்றொருபுறம் தேவேந்தரகுல வேளாளர் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும் வேலை செய்துவருகிறது. சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் காரணமாக, தமிழ்நாட்டில் குறிப்பாக தென்மாவட்டங்களில் சாதிவெறித் தாக்குதல்களும், சாதி ஆணவப் படுகொலைகளும்  தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட அழகேந்திரன்.

சமீபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக திருநெல்வேலியில் “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி”யின் அலுவலகம் ஆதிக்கச் சாதி வெறியர்களால் சூறையாடப்பட்டது;  அதேப்போல், பள்ளிகள் திறந்து சில நாள்களிலேயே, நெல்லை மாவட்டம் மருதகுளம் கிராமத்தில் உள்ள ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆதிக்கச்சாதி வெறிப்பிடித்த மாணவர்கள் சிலர் தாழ்த்தப்பட்ட மாணவர்களை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் அரங்கேறியது.

மேலும், தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 48 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருப்பதாகவும், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் மாதம் வரை மட்டும் ஏழு சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருப்பதாகவும் “எவிடென்ஸ்” அமைப்பின் கள ஆய்வு கூறுகிறது.

இந்நிலையில், சி.பி.ஐ(எம்), வி.சி.க போன்ற தி.மு.க-வின் கூட்டணி கட்சிகள் உட்பட, பல்வேறு ஜனநாயக சக்திகளும், அமைப்புகளும் தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.


படிக்க: அருப்புக்கோட்டை ஆணவ படுகொலை: சாதி வெறி கட்சிகளை தடைசெய்ய வேண்டும்


ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என்று பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது தனிச்சட்டம் தேவையில்லை. நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். தனிச்சட்டத்தால், ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்தவிட முடியாவிட்டாலும், இச்சட்டத்தின் மூலம் களநிலவரம் குறித்து சரியான புரிதலைப் பெற முடியும் என்கிற அடிப்படையில் எவிடென்ஸ் கதிர் போன்றோர் இச்சட்டத்தை வலியுறுத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த
3 ஆண்டுகளில்
48 சாதி ஆணவப் படுகொலைகளும்.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து
ஜூன் மாதம் வரை 7 சாதி ஆணவப்
படுகொலைகளும் நடந்துள்ளன.

ஆனால், சமூகநீதி குறித்து வாய்ச்சவடால் அடிக்கும் தி.மு.க. அரசு இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு கூட தயாராக இல்லை. இது ஆதிக்கச்சாதி மக்களின் வாக்குவங்கியை இழந்துவிடக்கூடாது என்ற தி.மு.க-வின் அப்பட்டமான பிழைப்புவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் தோலுரித்துக்காட்டுகிறது. இரண்டாண்டுகள் ஆகியும் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த ஆதிக்கச்சாதி வெறியர்களில் ஒருவரைக் கூட கைது செய்யாமல் அவர்களை பாதுகாத்துவருவதற்கும் தி.மு.க-வின் பிழைப்புவாதமே முக்கிய காரணம்.

ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ். சாதி சங்களில் ஊடுருவி திட்டமிட்டே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு தனக்கான அடித்தளத்தை உருவாக்க முயற்சித்துவரும் சூழலில், வாக்குவங்கியை காப்பற்றிக் கொள்வதற்காக ஆதிக்கச்சாதி வெறியர்களை பாதுகாக்கும் தி.மு.க அரசின் பிழைப்புவாதம் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலுக்கு மேலும் துணை செய்துவருகிறது.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து
நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. 2017-ஆம் ஆண்டு நீட் எதிர்ப்பு போராளி அனிதா தியாகியானது முதல் தற்போதுவரை நீட் தேர்வுக்கு எதிரான பல போராட்டங்களை தமிழ்நாடு கண்டுவருகிறது. ஆனால் தற்போது, நாடுதழுவிய அளவில் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தாண்டு நீட் தேர்வில் நடந்த ஊழல்-மோசடிகள் அடுத்தடுத்து அம்பலமாகி, நீட் தேர்விற்கு எதிராக மாணவர்களை வீதிக்கு அழைத்து வந்துள்ளது.

கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நாடு முழுவதும் 4,750 மையங்களில், சுமார் 23 லட்சம் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். (MBBS), பி.டி.எஸ். (BDS), ஆயுஷ் (AYUSH) மற்றும் பிற மருத்துவம் தொடர்புடைய படிப்புகளுக்கான நீட் தேர்வை எழுதினர். இத்தேர்வு முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீட் தேர்வில் நடந்த பல்வேறு மோசடிகளை மூடி மறைப்பதற்காக, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 அன்றே நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட்டது, தேசிய தேர்வு முகமை (National Testing Agency).

ஆனால், தேசிய தேர்வு முகமையின் திட்டம் பலிக்கவில்லை. வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், போலி தேர்வு மையங்கள், ‘கருணை’ மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என நீட் தேர்வில் நடந்த பல்வேறு ஊழல், முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகத் தொடங்கின.

இதுவரை இல்லாத அளவிற்கு இந்தாண்டு நீட் தேர்வில் சுமார் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதுவும், ஒரே பள்ளியில் தேர்வெழுதிய ஆறு பேர் முதலிடம் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. தற்போது, அந்த ஆறு பேரும் பா.ஜ.க. ஆளும் ஹரியானா மாநிலத்தில் நீட் தேர்வு மையமாக செயல்பட்ட ஹர்தயாள் பப்ளிக் பள்ளியில் தேர்வெழுதியவர்கள் என்பதும் அப்பள்ளி பா.ஜ.க-வை சேர்ந்த சேகர் யாதவின் மருமகளான அனுராதா யாதவால் நடத்தப்படும் பள்ளி என்பதும் அம்பலமாகியுள்ளது. மேலும், ஹரியானா மாநிலத்தில் ஜஜ்ஜர் மாவட்டத்தில் நீட் தேர்வு மையங்களாக செயல்பட்ட மூன்று பள்ளிகளில், ஹர்தயாள் பப்ளிக் பள்ளியிலும் விஜயா சீனியர் செகண்டரி பள்ளியிலும் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள், நாடு முழுவதும் பிற மையங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள் இல்லை என்பதும் அம்பலமாகியுள்ளது.

அதேபோல், நீட் தேர்வில் சில மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களே முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்தன. நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு சரியாக விடை எழுதினால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான விடைக்கு 4 மதிப்பெண் மற்றும் அதற்கான நெகட்டிவ் மதிப்பெண் 1 என மொத்தம் 5 மதிப்பெண் குறைக்கப்படும். அதுவே கேள்விக்கு பதிலளிக்காமல் விட்டுவிட்டால் 4 மதிப்பெண்கள் மட்டும் குறைக்கப்படும். அப்படியெனில், இரண்டாம் மற்றும் மூன்றாம் மதிப்பெண்களாக 716, 715 ஆகியவையே இருக்க முடியும். ஆனால், தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் 719, 718 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.


படிக்க: நீட் முறைகேடு: மாணவர்களுக்கு துரோகமிழைக்கும் தேசிய தேர்வு முகமை


இதற்கு பதிலளித்த தேசிய தேர்வு முகமை, சில தேர்வு மையங்களில் காலதாமதமாக வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டதால், சில மாணவர்கள் மனு அளித்ததன் பேரில், ஹர்தயாள் பள்ளியில் முதலிடம் பெற்ற 6 மாணவர்கள் உட்பட நாடுமுழுவதும் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கிறது; இதனால்தான் சில மாணவர்கள் 719, 718 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்று நியாயவாதம் பேசியது. ஆனால், மாணவர்கள் எங்கு முறையிட்டனர்? தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே எவ்வாறு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது? என்பதற்கெல்லாம் தேசிய தேர்வு முகமையிடம் பதிலில்லை. அதேபோல், காலதாமதம் நடந்ததாக சொல்லப்படும் ஆறு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படாமல் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆறு தேர்வு மையங்களில் பெரும்பாலானவை பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேசிய தேர்வு முகமையின் தலைமையில் மிகப்பெரிய ஊழல்-மோசடி அரங்கேறியிருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

இம்மோசடிகளைக் கண்டு ஆத்திரமடைந்த மாணவர்கள், மறுதேர்வு நடத்த வேண்டும்; முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்; தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பெரும்பான்மை மக்களின் எண்ணத்திற்கு மாறாக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பாசிச மோடி கும்பல் ஆட்சி அமைப்பதற்கு முன்னரே மாணவர்களின் போராட்டம் தொடங்கி, பாசிசக் கும்பலின் தலையில் இடியை இறக்கியுள்ளது.

நீட் எதிர்ப்பு போராட்டங்கள் பா.ஜ.க-விற்கு விழுந்த பலத்த அடி!

நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு என்று மோடி அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியபோது தமிழ்நாடுதான் அதனை உறுதியாக எதிர்த்து நின்றது. ஆனால், தற்போது பா.ஜ.க-வின் கோட்டை என்று சொல்லிக்கொள்ளப்படுகிற பசுவளைய மாநிலங்களிலேயே நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்கள் போர்குணத்துடன் நடந்துக்கொண்டிருக்கிறது. இது மூன்றாவது முறை ஆட்சிக்குவந்துள்ள பாசிச மோடி அரசுக்கு விழுந்த பலத்த அடியாகும்.

நீட் தேர்வில் நடந்த மோசடிகளை கண்டித்து பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள் தீவிரமான போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். அதிலும், உத்தரப்பிரதேசத்தில் மோடியின் தொகுதியான வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் மறுதேர்வுக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிராவில் மாணவர்களின் போராட்டம் காரணமாக, பா.ஜ.க. அங்கம் வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே அரசு, நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வு மகாராஷ்டிரா மாநில மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் குற்றஞ்சாட்டியது.

அதேபோல், நீட் உள்ளிட்ட உயர்கல்வி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்கள் அதிகம் இருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரத்தில் மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பதற்காக போலீசு கடுமையான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது. தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மாணவர்கள் ரயிலை மறித்தும் வகுப்புகளைப் புறக்கணித்தும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் பெற்றோர்களும் கைக்கோர்த்து போராட்டத்தில் இறங்கினர். பல மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் பெருந்திரளாக டெல்லிக்கு சென்று இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேற்குவங்கம் மாநிலம் சிலிகுரியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

போராட்டக் கனல் ஒன்றிரண்டு நாட்களில் தணிந்துவிடவில்லை. தேர்வு முடிவு வெளியானதில் இருந்து சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக மாணவர்கள் போராட்டம் போர்குணத்துடன்  நடந்துக்கொண்டிருக்கிறது. அதன் வீரியமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூன் 27-ஆம் தேதி, டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்தை பூட்டுப்போட்டு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்தை பல்வேறு வழிகளில் தடுக்க முயன்ற மோடி அரசின் நயவஞ்சக திட்டங்கள் எதுவும் பலனளிக்காமல் போனது. நீட் தேர்வு மோசடிகளை ஆரம்பத்தில் மறுத்துவந்த தேசிய தேர்வு முகமை, 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும் அவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

நீட் தேர்விற்கு எதிராக நடந்த பிரம்மாண்ட போராட்டம்.

அதேபோல் ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வு மோசடிகளை மறுத்துவந்த மோடி அரசு, தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும்; ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை வலுத்துவருவதை கண்டு அஞ்சி, “நீட் தேர்வில் சில முறைகேடுகள் சில குறிப்பிட்ட இடங்களில் நடந்துள்ளன” என்று ஒப்புக்கொண்டது. மேலும், தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநராக இருந்த சுபோத் குமாரை நீக்கிவிட்டு இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியது. ஆனால், பா.ஜ.க. நடத்தும் இந்த நயவஞ்சக நாடகங்களை நம்ப மாணவர்கள் தயாராக இல்லை என்பதையே தீவிரமடைந்துவரும் போராட்டங்கள் காட்டுகின்றன.

மாணவர்களுக்கு துரோகமிழைக்கும் உச்சநீதிமன்றம்

களத்தில் போராட்டம் நடந்துகொண்டிருந்த அதேவேளையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் அதற்கு துணை நின்றுவரும் உச்சநீதிமன்றம், தற்போதும் தேசிய தேர்வு முகமை மற்றும் பா.ஜ.க. கும்பலுக்கு பக்கபலமாக நின்று போராடும் மாணவர்களுக்கு துரோகமிழைத்துள்ளது.

ஊழலும் மோசடிகளும் மலிந்துள்ள இம்மோசடி தேர்வை ரத்து செய்துவிட்டு அனைவருக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்பதுதான் போராடிவரும் மாணவர்களின் கோரிக்கை. ஆனால், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே மறுதேர்வு நடத்தப்படும் என்ற தேசிய தேர்வு முகமையின் நயவஞ்சக வாதத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் மாணவர்களுக்கு அப்பட்டமான துரோகமிழைத்தது, உச்சநீதிமன்றம். மேலும், நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அம்மாநில உயர்நீதிமன்றங்களில் மறுதேர்வு நடத்தக்கோரி தாக்கல் செய்திருந்த மனுக்களையும் ரத்து செய்தது.

முக்கியமாக, ஜூலை 6 முதல் தொடங்கவிருக்கும் மருத்துவ கலந்தாய்விற்கு எந்த தடையும் வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த உச்சநீதிமன்றம், மருத்துவ கலந்தாய்விற்கு ஒருபோதும் தடைவிதிக்க முடியாது என்று கூறியது. இதற்காக வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்தாண்டு நடந்த நீட் தேர்வை தடை செய்துவிட்டால், மறுதேர்வு நடக்கும் வரை தனியார் மருத்துவ கல்லூரிகளால் கல்லாக் கட்ட முடியாது என்ற வர்க்க பாசத்தினால் மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுத்துள்ளது உச்சநீதிமன்றம். இதன் மூலம் தனது ஆளும் வர்க்க சேவையை மீண்டும் ஒருமுறை செவ்வனே செய்து முடித்துள்ளது.

000

உச்சநீதிமன்றம் போராடும் மாணவர்களுக்கு நேரடியாக துரோகமிழைக்கிறதென்றால், எதிர்க்கட்சிகளோ மறைமுகமாக துரோகமிழைத்துக் கொண்டிருக்கின்றன.

நீட் எதிர்ப்பில் முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில், மூன்றாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள, தமிழ்நாட்டின் நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் தனிதீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சூழலில் நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தை கட்டியமைப்பதற்கு பதிலாக, சட்டப்போராட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களிடையே இருக்கும் நீட் எதிர்ப்புணர்வை மழுங்கடிக்கும் வேலையையே தி.மு.க. தற்போதும் தொடர்கிறது.

காங்கிரசை பொறுத்தவரை, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவிக்கவில்லை. நீட் தேர்வு மோசடிகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதே மல்லிகார்ஜுன கார்கேவின் கோரிக்கை. நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஜூன் 21 அன்று நடத்தப்பட்ட போராட்டத்திலும் சந்தர்ப்பவாதமாக “மாணவர்களுக்கு நீதி வேண்டும்” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டது. விரும்பும் மாநிலங்கள் நீட் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்ற காங்கிரசின் தேர்தல் அறிக்கையின் சந்தர்ப்பவாதம் இந்நடவடிக்கையின் மூலம் செயல்வடிவம் பெற்றுள்ளது.

முக்கியமாக, நீட் தேர்வு குறித்தான தங்களது நிலைப்பாடு என்ன என்பதை தற்போதுவரை இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவிக்கவில்லை. நாடுமுழுவதும் மாணவர்கள் போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, உண்மையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் எதிர்க்கட்சிகளுக்கு இருந்தால் நாடுதழுவிய அளவில் ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்திருப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்யாமல், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக அறிக்கை விடுவது; அடையாள போராட்டங்களை நடத்துவது; நாடாளுமன்றத்தில் மோடியுடன் மல்லுக்கட்டுவதென மாணவர்களுக்கு மறைமுகமாக துரோகமிழைத்துக் கொண்டிருக்கின்றன.

நீட் தேர்வு மோசடிகள்: தேசியமயமாகியுள்ள “வியாபம் ஊழல்”

நீட் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என மோடி அரசு சாதித்துக்கொண்டிருந்த போதே, பீகார், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு-முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படும் செய்திகளும் அவர்களின் பின்னணியும் வெளியாகத் தொடங்கியது.

இம்முறைகேடுகள் குறித்து பூதாகரமாக வெளியாகிக்கொண்டிருக்கும் தகவல்கள் ஒவ்வொன்றும், 2013-ஆம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியின்போது அரங்கேறிய “வியாபம்” ஊழல் தற்போது தேசியமயமாகியுள்ளது என்பதையே உணர்த்துகிறது. வியாபம் என்ற அரசு நிறுவனத்தின் மூலம் ஒரு மாநிலத்தில் அடித்த கொள்ளையை தற்போது தேசிய தேர்வு முகமை என்ற கைப்பாவை மூலம் தேசிய அளவில் விரிவுப்படுத்தியுள்ளது, பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பல். பீகார், ஜார்கண்ட் மற்றும் குஜராத்தில் நடந்த மோசடிகள் இதனை பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறது.

பீகார் போலீசின் பொருளாதார குற்றப்பிரிவின் (EOU – Economic Offences Unit) விசாரணையில், ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ஓயாசிஸ் பள்ளியில் இருந்து வினாத்தாள் கசிவு நடந்துள்ளது அம்பலமாகியது. மேலும், இந்த வினாத்தாள் கசிவில் “முகியா சால்வர்” (Mukhiya Solver Gang) என்ற மாஃபியா கும்பல் ஈடுபட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. தற்போது ஓயாசிஸ் பள்ளியின் முதல்வர் எக்சனூல் ஹக் மற்றும் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எக்சனூல் ஹக் என்பவர்தான் நீட் தேர்விற்கான ஹசாரிபாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து “இந்தியா டுடே” (India Today) ஊடகம் நடத்திய “ஸ்டிங் ஆப்ரேஷனில்” (Sting Operation), வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஏற்கெனவே இரண்டுமுறை கைது செய்யப்பட்ட பிஜேந்தர் குப்தா என்பவனிடமிருந்து அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்தன. இந்த நீட் தேர்வு ஊழலில், சுமார் 700 மாணவர்களை குறிவைத்து 200 முதல் 300 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றும் இது சஞ்சீவ் முகியா என்பவனின் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது என்றும் பிஜேந்தர் குப்தா கூறினான். மேலும், சஞ்சீவ் முகியாவை போலீசால் பிடிக்க முடியாது என்று கூறியதோடு “ஜெயில் ஜாயங்கே, ஃபிர் பெயில், அவுர் ஃபிர் ஷுரு ஹோகா கேல்” (முதலில் சிறை, பின்னர் பினை, மீண்டும் ஆட்டம் தொடரும்) எனவும் கூறியுள்ளான்.

ஏனெனில், சஞ்சீவ் முகியா என்கிற சஞ்சீவ் சிங், சுமார் 20 ஆண்டுகளாக எந்தவித தடையுமின்றி தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறான். அவனது மகன் ஷிவ் என்கிற பிட்டு இந்தாண்டு தொடக்கத்தில் பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளான். ஏற்கெனவே, 2017-இல் நீட் தேர்வு வினாத்தாள் கசிவில் சஞ்சீவ் சிங்கும் அவனது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் மட்டுமின்றி, உத்தராகண்ட், உத்தரப்பிரதேச மாநிலங்களில் நடந்த போலீசு கான்ஸ்டபிள் பதவிக்கான தேர்வு; பீகார், ஹரியானா மாநிலங்களில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு; ஹரியானா கால்நடை மருத்துவருக்கான தகுதி தேர்வு உள்பட பல அரசு நிறுவனங்களுக்கான தேர்வுகளில் சஞ்சீவ் சிங் தலைமையிலான மாஃபியா கும்பல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது.

தேர்வு மோசடிகளில்
ஈடுபடும் நிறுவனங்களுக்கு
பெரும்பாலும்
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுடன்
தொடர்புள்ளது.

இத்துணை முறைகேடுகளில் ஈடுபட்டு பலமுறை கைது செய்யப்பட்ட பிறகும் சஞ்சீவ் சிங்கால் சுதந்திரமாக நடமாடவும் தொடர்ச்சியான முறைகேடுகளில் ஈடுபடவும் முடிகிறதென்றால், அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் துணையின்றி இது சாத்தியமில்லை என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை. சஞ்சீவ் சிங்கின் மனைவி மம்தா தேவி 2020-ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். அதற்குமுன் பீகாரின் பூதாகர் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார். சஞ்சீவ் சிங்கின் மனைவி மம்தா தேவி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, சஞ்சீவ் முகியாவை பாதுகாப்பது யார் என்றும் அவரது மனைவி தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டது குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதேபோல், குஜராத்தின் கோத்ராவில் நீட் தேர்வு மையமாக இருந்த ஜெய் ஜலராம் பள்ளியில், பள்ளி நிர்வாகமும் பயிற்சி மையமும் கூட்டுச்சேர்ந்துகொண்டு, அம்மையத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்களில் (ஓ.எம்.ஆர். ஷீட்டில்) சரியான விடைகளை நிரப்பியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்காக, 30 மாணவர்களிடமிருந்து தலா 10 இலட்சம் ரூபாயை அக்கும்பல் பெற்றிருக்கிறது. பணம் தந்த மாணவர்களிடம் விடை தெரியாத வினாக்களை அப்படியே விட்டுவிடும்படி கூறி, தேர்வு முடிந்த கையோடு சரியான விடைகளை நிரப்பியிருக்கிறது. இதற்கெனவே, விமான நிலையம் கூட இல்லாத கோத்ரா மாவட்டத்தின் இப்பள்ளியை பீகார், மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 30 மாணவர்கள் தங்களது தேர்வு மையமாகத் தேர்ந்தெடுத்து தேர்வெழுதியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தேர்வு முறைகேடுகளில் சிக்கியுள்ள “எடு-டெஸ்ட்” நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ்சந்திர ஆச்சார்யா மோடியுடன் ஒரே மேடையில் இருக்கும் புகைப்படம்.

இம்மோசடியில், நீட் தேர்வு மையமாக செயல்பட்ட ஜெய் ஜலராம் பள்ளியின் முதல்வர் புர்ஷோத்தம் சர்மா, இப்பள்ளியின் ஆசிரியரும் தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளருமான துஷார் பட், வதோதராவில் உள்ள ராய் ஓவர்சீஸ் கோச்சிங் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் பரசுராம் ராய், ராயின் கல்வி நிறுவனத்தில் மாணவர்களைச் சேர்க்கும் ‘கல்வி ஆலோசகர்’ விபோர் ஆனந்த் ஆகியோர் முக்கிய நபர்களாக செயல்பட்டுள்ளனர். அதிலும் தேர்வு மைய கண்காணிப்பாளர் துஷார் பட்டிற்கும் பரசுராம் ராயின் கல்வி நிறுவனத்திற்கும் நேரடி தொடர்பு இருந்துள்ளது. தற்போது இவர்கள் இருவரும் ஆரிஃப் வஹோரா என்பவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்ளூர் போலீசு விசாரணை மேற்கொண்டபோது, விடைத்தாள்களை போலீசிடம் சமர்பிக்காமல் தேசிய தேர்வு முகமை நேரம் தாழ்த்தியிருக்கிறது. இச்சம்வமானது தேசிய தேர்வு முகமையும் இம்மோசடியில் ஓர் கூட்டாளிதான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.


படிக்க: நீட் முறைகேடுகள்: அதிர்ச்சியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி | தோழர் தீரன், தோழர் மதி


இந்நிலையில், இம்மோசடி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய குஜராத் காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சக்திசிங் கோஹில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆரிஃப் வஹோரா பா.ஜ.க-வின் சிறுபான்மை அமைப்பு தலைவன் என்பதையும் ஜெய் ஜலராம் பள்ளி நிர்வாகத்திற்கும் பா.ஜ.க-விற்கும் கள்ளக்கூட்டு உள்ளதையும் அம்பலப்படுத்தியுள்ளார். இதற்கு ஆதாரமாக, ஜெய் ஜலராம் அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளியை முன்னாள் மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் திறந்துவைக்கும் புகைப்படங்களையும் அறக்கட்டளையின் தலைவர் தீட்சித் படேல் ஒரு பொது நிகழ்ச்சியில் நேரடியாக மோடியிடம் காசோலை வழங்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், இப்பள்ளி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக குஜராத் உயர்நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட பள்ளி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இப்பள்ளியிடம் நிதியை பெற்றுக்கொண்டு, இரண்டு நீட் தேர்வு மையங்களை இயக்க பா.ஜ.க. அனுமதி கொடுத்திருக்கிறது. இந்தியா முழுவதும் இதுபோல் எத்தனை நீட் தேர்வு மையங்கள் இயக்கப்பட்டிருக்கும் என்பது குறித்த தரவுகள் வெளியானால் நிச்சயம் அது பூதாகரமானதாக இருக்கும்.

மொத்தத்தில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உயர்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள், கல்வி மாஃபியாக்கள், மிகப்பெரிய கார்ப்பரேட் பயிற்சி மையங்கள் தொடங்கி கல்வி ஆலோசகர் என்ற பெயரில் சுற்றும் புரோக்கர்கள், மோசடியான பள்ளி முதல்வர்கள், மைய கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்கள் என நீட் தேர்வு மோசடியில் மிகப்பெரிய வலைப்பின்னல் சம்மந்தப்பட்டுள்ளது. இந்த வலைப்பின்னலில் உள்ள ஒவ்வொரு அங்கத்திலும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலைச் சார்ந்தவர்கள் உள்ளனர். இந்த மாபெரும் ஊழல்-மோசடி முழுமையாக அம்பலப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சிறு புரோக்கர்களையும் வினாத்தாளை வாங்கிய மாணவர்களையும் பெற்றோர்களையும் கைது செய்வதன் மூலம் பா.ஜ.க. தப்பிக்கப் பார்க்கிறது.

ஆனால், இக்கும்பலின் கூட்டுக்கொள்ளையால், தற்போது லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை கேள்விகுறியாகியுள்ளது. இம்முறை நடந்த முறைகேடுகளால், மருத்துவ “கட் ஆஃப்” (cut-off) மதிப்பெண் கடந்தமுறையை விட 50 சதவிகிதம் வரை அதிகமாகும் அபாயமுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் இம்முறை பல மாணவர்களால் அவர்களின் மருத்துவ கனவை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கொண்டுவருவது தரமான தகுதியான மருத்துவர்களை உருவாக்கும்; அரசியல் தலையீடு முறைகேடுகளில்லாத நேர்மையான மருத்துவ தகுதி தேர்வை நடத்தப்போகிறோம் என்றெல்லாம் பா.ஜ.க. கும்பல் அளந்த கதைகள் தற்போது பொதுவெளியில் அம்பலமாகி சந்தி சிரிக்கிறது. கல்வியை முழுமையான வணிகப்பொருளாக மாற்றத்துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காக கொண்டுவரப்பட்டதே இந்த நீட் தேர்வு என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

சிதைந்துவரும் கல்வி கட்டமைப்பு மாற்று கட்டமைப்பே தீர்வு

நீட் தேர்வு ஊழல்-மோசடிகள், வெளியாகி கொண்டிருந்தபோதே பிற நுழைவுத் தேர்வுகளில் நடத்தப்பட்ட மோசடி-முறைகேடுகள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியது. இது ஒட்டுமொத்த கல்வித்துறையையும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் எவ்வாறு சீரழித்து வருகிறது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியது.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்படும் யு.ஜி.சி-நெட் (UGC-NET) தேர்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 9 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியிருந்த நிலையில், தேர்வின் வினாத்தாள் “டார்க் வெப்” இணையதளம் முதல் டெலிகிராம் குழுக்கள் வரை கசியவிடப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து தேர்வு நடந்த மறுநாளே தேர்வை ரத்து செய்வதாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் அறிவித்தது. இதனால், தற்போது 9 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை மீண்டும் எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், இந்த அறிவிப்பு வெளியான இரண்டு நாட்களில், இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஜூனியர் ஆராய்ச்சி நிதியுதவி (JRF) பெறுவதற்கும் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குமான சி.எஸ்.ஐ.ஆர்-நெட் (CSIR-NET) தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கெனவே, தேசிய தேர்வு முகமையின் இலட்சணம் அம்பலப்பட்டு நாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஜூன் 23-ஆம் தேதி நடக்கவிருந்த முதுகலை நீட் தேர்வு நடத்தப்பட்டால் மேலும் நாறிவிடுமோ அன்று அஞ்சிய ஒன்றிய சுகாதார அமைச்சகம், தேர்வு நடப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னர் அத்தேர்வையும் அதிரடியாக ரத்து செய்வதாக அறிவித்தது. இவை அனைத்தும் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவது இது முதல்முறையல்ல. கடந்த பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. நீட் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளிலும் அரசு நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்விலும் பல்வேறு ஊழல்-மோசடிகள் அரங்கேறியுள்ளன. இந்த மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுடன் தொடர்புள்ளது.

சான்றாக, குஜராத்தைச் சார்ந்த நிறுவனம் ஒன்று தொடர்ச்சியாக தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவது குறித்து “தி வயர்” (The Wire) இணையதளத்தில் சிறப்பு புலனாய்வு கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “எடு-டெஸ்ட் சொலியூஷன் பிரைவேட் லிமிடெட்” (Edutest Solutions Private Limited) எனும் குஜராத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் நாடுமுழுவதும் பல மாநிலங்களில் வினாத்தாள் கசிவு மற்றும் ஆட்சேர்ப்பு மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ்சந்திர ஆர்யா, “சர்வதேசிக் ஆர்ய பிரதிநிதி சபா” என்ற ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருக்கமான இந்துத்துவ அமைப்பின் தலைவர்; இந்த அமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி உட்பட பா.ஜ.க-வின்  முக்கியத் தலைவர்கள் அனைவரும் கலந்துக்கொள்வார்கள்; பீகார், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் இந்நிறுவனம் தவறிழைத்தோர்-பட்டியலில் (Blacklist) சேர்க்கப்பட்டிருந்தாலும், இந்நிறுவனத்திற்கு ராணுவம் உள்பட பல முக்கியமான அரசு நிறுவனங்களின் தேர்வுகளை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளும் பிரதமர் தலைமை தாங்கும் ஒன்றிய அரசின் நிறுவனங்களும் வழங்கிவருகின்றன போன்ற பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அக்கட்டுரையில் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஊழல்-மோசடிகளில் ஈடுபடுவதுடன், ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் திட்டமிட்டு அரசு கட்டமைப்பிற்குள் புகுத்தப்பட்டுள்ளனர் என்பதும் கவனிக்கப்படவேண்டிய விசயம்.

பாசிச மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவரும் மறுகாலனியாக்க கொள்கைகளால் நாட்டின் ஒட்டுமொத்த கல்வித்துறையும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பல்களின் கைகளுக்கு மாற்றப்பட்டுவருகிறது. 1990-களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையின்படி எல்லாவித சேவைகள், உற்பத்தி துறைகள், பிற முக்கிய பிரிவுகள் அனைத்தும் கார்ப்பரேட்மயமாக்கப்பட வேண்டும்; நாடாளுமன்றம் மற்றும் அரசு நிறுவனங்களின் அதிகாரங்களை ஒட்டுமொத்தமாக பறித்து கார்ப்பரேட் கும்பலிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் நாட்டில் பாசிச சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஏற்பாடுகளாகும்.

கார்ப்பரேட் கொள்ளைக்காக
சிதைக்கப்பட்டுள்ள இந்த
கல்வி கட்டமைப்பிற்கு பதிலாக
மாற்று கல்வி கொள்கையையும்
மாற்று கட்டமைப்பின் தேவையையும் வலியுறுத்துகிறது.

அந்தவகையில், பாசிச மோடி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு நாடாளுமன்றம், அரசு நிறுவனங்கள், மாநில அரசாங்கங்கள் அனைத்திற்குமான உரிமைகளை பறித்து கார்ப்பரேட் கும்பல்களிடம் ஒப்படைக்கும் விதமாக பல்வேறு சட்டத்திட்டங்களையும் கேள்விகேட்க முடியாத அதிகாரம் கொண்ட ஆணையங்களையும் உருவாக்கிவருகிறது. கல்வித்துறையில் இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான ஏற்பாடே மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை. நீட் போன்ற நுழைவுத்தேர்வும் அதை நடத்துவதற்கான தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதும்; தன்னாட்சி என்ற பெயரில் உயர்கல்வி நிறுவனங்களை கார்ப்பரேட்டிற்கு தாரைவார்ப்பதற்கான நடவடிக்கைகளும்; யூ.ஜி.சி. (UGC) என்ற பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியும் கல்வித்துறையை கார்ப்பரேட் கும்பலிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளே.

எனவே, தற்போது நடந்துவரும் மாணவர்களின் போராட்டம் வெறுமனே நீட் மறுதேர்வுக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் கொள்ளைக்காக சிதைக்கப்பட்டுள்ள இந்த கல்வி கட்டமைப்பிற்கு பதிலாக மாற்று கல்வி கொள்கையையும் மாற்று கட்டமைப்பின் தேவையையும் வலியுறுத்துகிறது. நீட் தேர்வை ரத்து செய்வது; தேசிய தேர்வு முகமையை கலைப்பது; கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது என்ற கோரிக்கைகளோடு, கடந்த பத்தாண்டுகால பாசிச மோடி ஆட்சியில் கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கானதாக மாற்றப்பட்டுள்ள கல்வி கட்டமைப்புக்கு மாற்றாக மாணவர்கள் நலனை மையப்படுத்திய பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை உருவாக்க வேண்டியத் தேவையையும் சேர்த்து வலியுறுத்த வேண்டியுள்ளது.


கயல்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube