Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 77

அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த போலீசின் அடாவடி! | மக்கள் அதிகாரம்

அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த போலீசின் அடாவடி!
போக்குவரத்து ஊழியர்களை பழிவாங்கும்
போலீசுத் துறையின் அராஜகத்துக்கு முடிவு கட்டுவோம்!

24.05.2024

த்திரிக்கை செய்தி

யுதப்படை போலீசான ஆறுமுகபாண்டியன், நாங்குநேரியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு வந்த போது நாங்குநேரி பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். டிக்கெட் எடுக்க முடியாது என்பதை உரிமையாகப் பேசி அவர் சண்டையிட்ட வீடியோ காட்சிகள் வைரலாக பரவின.

அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தும் போது அவர் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

போலீசு பணியின் போது அரசுப் பேருந்தில் செல்ல நேர்ந்தால் அதற்குரிய அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும் என்பதுதான் விதியாகும்.

அனுமதிச்சீட்டை ஆறுமுக பாண்டியன் கொண்டு வராமல், ஏன் உங்களுக்கெல்லாம் பேருந்து இலவசமாக இல்லையா? என்று குதர்க்கமாக கேள்வி கேட்பது மட்டுமல்லாமல், போலீசு என்றால் எந்த கேள்வியும் கேட்காமல் அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற தொனியில் மிரட்டுகிறார்.

அவர் மீது துறை ரீதியாக உடனே நடவடிக்கை எடுக்காத போலீசு துறையோ, போலீசையா கேள்வி கேட்கிறாய் என்றபடி தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கையாக தொடர்ந்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்து வருகின்றது. போலீஸ் எந்த செயலைச் செய்தாலும் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கும் மிரட்டல் விடுக்கும் செயலாகும் இது.

இது ஏதோ தனிப்பட்ட சிலரின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அரசின் பிற அனைத்து துறைகளும் தனக்கு கீழ்ப்பட்டு நடந்தாக வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது போலீசுத் துறை.

நாங்குநேரியில் ஒரு போலீசு டிக்கட் எடுக்க மறுத்ததால் நடந்த பிரச்சனையை, தமிழ்நாடு முழுவதும் பேருந்து ஊழியர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கையை தொடங்கியது யார்?

ஒரு போலீஸ்காரரின் சட்டவிரோத செயலுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த போலீஸ் துறையே செயல்பட்டுக் கொண்டிருப்பதைத் தடுக்காமல் தமிழ்நாடு அரசு அமைதியாக இருப்பது கண்டனத்துக்குரியதாகும்.

அதுமட்டுமன்றி சட்டவிரோதமாக செயல்பட்ட அந்தப் போலீசுக்கு ஆதரவாக அண்ணாமலை அறிக்கை விட்டிருப்பதும் மிகக் கேவலமானதாகும். ஆகவே தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு எதிரான போலீசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேலும் இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அனைத்து போலீசு உயர் அதிகாரிகள் மீதும் உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



1.07கோடி ஓட்டுகள் மோசடி! பாசிச பாஜகவின் மோசடி தேர்தல் ஆணையம்!

1.07கோடி ஓட்டுகள் மோசடி! பாசிச பாஜகவின் மோசடி தேர்தல் ஆணையம்!

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்

தூத்துக்குடி :
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பிளிங்கன் ஒரு போர்க்குற்றவாளி | படக்கட்டுரை

டந்த செவ்வாய்க்கிழமை (21-05-2024) அன்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் பிளிங்கன் செனட் குழுவின் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தபோது, அங்கு கூடியிருந்தவர்கள் ”பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு நீ தான் பொறுப்பு” என்று கூறி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அதில் இருந்த பெண் ஒருவர், நீ ஒரு ”குற்றவாளி” என்று கூறி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

அந்த பெண்ணை போலீசு அங்கிருந்து வெளியேற்றியபோது, நீங்கள் என்னை கைது செய்யக்கூடாது “போர்க்குற்றவாளியான பிளிங்கனை” தான் கைது செய்ய வேண்டும் என்றார்.

இன்னும் பலர் தங்களுடைய கைகளில் சிவப்பு வண்ணத்தை வரைந்து, கைகளை உயர்த்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தற்போது அமெரிக்கா முழுவதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த போரை நடத்துவதற்கு உற்ற துணையாக இருக்கும் அமெரிக்க அரசுக்கு எதிராக அமெரிக்க மக்களே நடத்தக்கூடிய இத்தகைய போராட்டங்கள் தான் பாலஸ்தீன மக்களின் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளில் ஒன்றாகும்.

போர்க்குற்றவாளியான பிளிங்கனை கைது செய் என்று எழுதப்பட்ட போஸ்டரை கையில் வைத்திருக்கும் அமெரிக்கர்.
போர்க்குற்றவாளியான பிளிங்கனுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பிய பெண்ணை வெளியேற்றும் போலீசு.
தங்களுடைய கைகளில் சிவப்பு வண்ணத்தை வரைந்து, கைகளை உயர்த்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை வெளியேற்றும் போலீசு.
போர்க்குற்றவாளி பிளிங்கன் பங்கேற்ற கூட்டம் காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் நிறைந்திருந்தது.

நன்றி: அல் ஜஸீரா


தன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



How to defeat the fascist BJP in the elections? || Booklet – PDF Free Download!

Dear working people,

The 2024 parliamentary elections have been announced. This election will decide the future of the country.

The fascist Modi – Amit Shah mob, which looted India over the past decade, is looking to secure a third term. It is striving to win 370 seats i.e. crossing the two-thirds majority mark.

To achieve this feat, the fascist mob is indulging in various conspiratorial and fraudulent acts through the RSS mob infiltrated into the State structure.

Suppressing the opposition through the Election Commission and Enforcement Directorate; rigging elections using EVMs; deceived the North with Hindutva and the South by highlighting ‘growth’; Spreading exaggerated fanciful news, fake news and portraying Modi as a national leader; spreading rumours through Sangh Parivar mob, increasing anti-Muslim hate speech campaigns, meticulously planned attacks on the people and the opposition parties; instilling fear and panic; are only a few examples of the fascist activities of the Modi – Amit Shah mob.

The Election Commission of India had devised the dates for the upcoming parliamentary elections based on Modi’s election campaign; State Bank of India tried to save the Modi – Amit Shah mob by going against the Supreme Court’s order in disclosing details pertaining to the electoral bonds; the arrest of Telangana’s Bharat Rashtra Samithi (BRS) leader Kavitha using the Enforcement Directorate; arrest of Aam Aadmi Party (AAP) leader Arvind Kejriwal; freezing of bank accounts of the Indian National Congress by the IT department: these recent activities of the Modi – Amit Shah mob showcases that they would go to any extent to win the elections.

Considering that this booklet should reach many people, we are providing it as an electronic paper in PDF format.

Click below link to download PDF…

Link 1
How to Defeat BJP Ebook (PDF) Link 1

Link 2
How to Defeat BJP Ebook (PDF) Link 2

Follow us on social media:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மே 22: “போராடு” எனும் உரத்தினை ஊட்டிச் சென்ற நாள் | கவிதை

று ஆண்டுகள்
ஆயினும் ஆரா ரணமாய்
ஆர்ப்பரிக்கிறது தூத்துக்குடி துப்பாக்கி சூடு…

நீர் வெப்பத்தில் ஆவியாகி
மேகத்தை முட்டி
மண்ணில் மழையென பொழிந்து
வீரத்தின் விதைகளாய் மண்ணில் புதைந்து
“போராடு” எனும்
உரத்தினை ஊட்டிச்
சென்ற நாள்!!!

30 ஆண்டுகால புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க
மலடாய் மாறிவிட்ட மண்ணினை மீட்டெடுக்க,
தாகம் தணிக்கும் தண்ணீரை விஷமாக்கிய
ஸ்டெர்லைட் எனும்
கொலைகார கார்ப்பரேட் கம்பெனிக்கு
எதிராகப் போராடி
15 உயிர்களின் குருதி கொடுத்து
தங்களின் அடுத்த சந்ததியினரின்
இன்னுயிர் காத்த
தூத்துக்குடி மக்களின்
வீரம் செரிந்த போர்தான்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்!!!

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு
தங்களின் உரிமை மீட்க
போராட்ட களம் வந்த
ஸ்நோலினை
எதிரிகளைச் சுடும்
உயர் ரக துப்பாக்கியினைக் கொண்டு
மறைந்திருந்து வாயிலேயே சுட்டது
கேடுகெட்ட போலீசு!

கொல்லப்பட்ட ஸ்னோலினை காண வந்த
தாயின் கதறலும்,
கம்பெனியை மூடாமல்
தன் மகளின் உடலை வாங்க மாட்டேன்
என உறுதியாக போராடிய
அந்தத் தாயின்
போர்குணமிக்கப் போராட்டமும்
நீங்காமல் நிற்கிறது நினைவுகளாய்!!!

இணையதளத்தை
துண்டித்து விட்டு
வீடு வீடாக புகுந்து
போராடிய மக்களையும், பொதுமக்களையும்
வேட்டையாடி தீர்த்தது,
கொலைவெறி பிடித்த போலீசு!!

உரிமைக்காக போராடிய
தூத்துக்குடி மக்களை
அகர்வாலும் – அரசும் இணைந்து நடத்திய
பச்சைப் படுகொலை தான்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு.

உரிமை மீட்க கூடிய
உழைக்கும் மக்கள் கூட்டம் முன்பு
அதிகார வர்க்கம் தலைத்தெறிக்க ஓடும்
என்பதை நிரூபித்து காட்டியது
இந்த வீரஞ்செறிந்த போராட்டம்!!

போராட்டம் இன்னும் முடியவில்லை!
மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்க
பாசிச மோடி கும்பல் திட்டம் தீட்டிவருகிறது!!!

இப்போராட்டங்களே நமக்கான மாற்று!!!
தமிழக அரசே,
சிறப்பு சட்டம் இயற்று!
ஸ்டெர்லைட் ஆலையை உடனே அகற்று!


செந்தாழன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக போராடி உயிர் நீத்த போராளிகளுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 6 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று (22-05-2024) செலுத்தப்பட்டது.

நெல்லை

விருத்தாச்சலம்
கடலூர் மண்டலம் விருத்தாசலம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தோழர் பாலு தலைமையில் ஸ்டெர்லைட் தியாகிகளுக்கு ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை உடனே அகற்ற வேண்டும். ஜெகதீசன் அறிக்கையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் தோழர்கள் மற்றும் நண்பர்கள் கொண்டனர் கலந்து கொண்டனர்.

 

காஞ்சிபுரம்
தோழர்களுக்கு செவ்வணக்கம்!
இன்று (22.5.2024) புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் சார்பாக, காஞ்சிபுரம் பகுதியில் அய்யங்கார்குளம் மற்றும் நெமிலி-பனப்பாக்கம் ஆகிய இடங்களில், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் தியாகிகளான போராளிகளுக்கு ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

காலை 11 மணி அளவில்  நெமிலி-பனப்பாக்கம் பகுதியிலும், மாலை 5:30 மணி அளவில் அய்யங்கார்குளம் பகுதியிலும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பகுதி மக்கள் பலரும் கலந்து கொண்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்ட பின், முழக்கங்கள் எழுப்பப்பட்டன. “கார்ப்பரேட்டுக்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டத்தில் தியாகிகளான போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்” என்றும், “வேதாந்தாவின் கையாளாக செயல்பட்டு சொந்த நாட்டு மக்களையே காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற போலீசையும், உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளையும் அருணா ஜெகதீசன் ஆணையக் குழு பரிந்துரைத்தபடி உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்றும், “ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டை விட்டு நிரந்தரமாக தூக்கி எறிய சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்” என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாலை அய்யங்கார்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தோழர் திலகவதி மக்கள் அதிகாரம் கண்டன உரையாற்றினார்.

தனது கண்டன உரையில், “ஒன்றியத்தை ஆளும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல் , வேதாந்தா, அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டை தாரைவார்க்கக்கூடிய பல்வேறு திட்டங்களை திணித்து வருகிறது. கார்ப்பரேட் கொள்கைகளில் இதற்கு பாஜக அல்லாத பல்வேறு மாநில அரசுகளும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றன.  இதற்கு சான்றாக, தமிழ்நாட்டில் பரந்தூர்  விமான நிலையம், மேல்மா சிப்காட், எண்ணூர் துறைமுகம் என அடுக்கிக் கொண்டே போகலாம். திராவிட மாடல் என்ற பெயரில் இயங்கும் தமிழ்நாடு அரசும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.

மின்சாரம், துறைமுகங்கள், கல்வி குழுமங்கள் தொலைத் தொடர்புத்துறை என நாட்டின் பல்வேறு துறைகளையும் அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலுக்கு சூறையாடக் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலை வீழ்த்த மக்கள் எழுச்சியை உருவாக்குவதே நமது உடனடிக் கடமையாக உள்ளது. பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்று அரசு கட்டமைப்பு தான் கார்ப்பரேட் சூரையாடல்களில் இருந்து மக்களை விடுவிக்கும் ஒரே மாற்று” – என்பதை வலியுறுத்தினார்.

நன்றி,
இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்பு குழு)
மக்கள் அதிகாரம்
காஞ்சிபுரம் மாவட்டம்.
9786076201

மதுரை
தூத்துக்குடி தியாகிகளின் 6-ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
மதுரையில் நினைவேந்தல் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது…

 

ஆரியப்பட்டி
மே 22 6 ஆம் ஆண்டு நினைவு தினம்.

தோழர் ஜெயராமனுக்கும், ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கும் ஆரியப்பட்டியில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.

ம.க.இ.க-பு.மா.இ.மு-
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டபம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஆறாம் ஆண்டு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! | மக்கள் அதிகாரம்

மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்
ஆறாம் ஆண்டு நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை போராடுவோம்!


21.05.2024

பத்திரிக்கைச் செய்தி,
மா
பெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஆறாம் ஆண்டு இது. லட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் ! என்று முழக்கமிட்டு செய்து காட்டினார்கள்  தூத்துக்குடியின் வீரமிக்க போராளிகள்.

நிலத்தையும் காற்றையும் நீரையும் நாசமாக்கிய ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்கு எதிரான மக்களின் தீரமிக்க போராட்டம் அது .

மே 22, 2018 ஆம் ஆண்டு  நீதி கேட்டு குடும்பம் குடும்பமாக ,குழந்தை, குட்டிகளோடு  மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மக்களை ஸ்டெர்லைட் ஆலையும்  தமிழ்நாடு போலீசும் இணைந்து, மறைந்திருந்தும் வேன்மீது ஏறி இருந்தும் மக்களை சுட்டுக் கொன்றனர்.

15 வயது சிறுமி ஸ்னோலின், எமது மக்கள் அதிகாரம் தோழர் மதுரை ஆரியப்பட்டி ஜெயராமன்  உட்பட  13 பேர்  போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டு தியாகியானார்கள். உடல்கள் மரித்தாலும் உணர்வுகள் மரிப்பதில்லை என்பது போல ஸ்டெர்லைட்டை மூடாமல் தியாகிகளின் உடலை பெற மாட்டோம் என்று உறுதியாய் நின்றார்கள் தூத்துக்குடியின் மக்கள்.

கண்ணில் பட்டவர்களை எல்லாம் கைது செய்வதும் ஊர்களில் சென்று மக்கள் மீது வலுக்கட்டாயமாக தாக்குதல் நடத்தி கைது  – சித்திரவதை  போன்ற போலீசின் அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன.

எமது மக்கள் அதிகாரம் தோழர்களும் தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு பலர் சித்திரவதைக்குள்ளப்பட்டனர்.

அன்று முதல் இன்று வரை அதிமுக அரசு போய் திமுக அரசு வந்த பிறகும் கூட ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு கூட போலீஸ் அனுமதி கொடுப்பதில்லை என்பதே உண்மை.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் சுட்டிக்காட்டிய,  மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். அன்றைய தினம்  தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன்,   டிஜிபி,  முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி ஆகியோர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மக்கள் போராட்டத்தின் விளைவாகவே ஸ்டெர்லைட் மூடப்பட்டது. அதன் காரணமாகவே உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அதனை அங்கீகரித்து இருக்கிறது. உடனடியாக திமுக அரசு, ஸ்டெர்லைட் நிறுவனத்தையே அப்புறப்படுத்த வேண்டும்.

மாபெரும் மக்கள் போராட்டத்தின் நினைவாக தியாகிகளுக்கு மணி மண்டபத்தை தமிழ்நாடு அரசே கட்ட வேண்டும் .

மேற்கண்ட கோரிக்கைகளை மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு முன் வைக்கிறது.

மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஆறாம் ஆண்டு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கவிதை | பாசிசம்!

ஹிட்லரின் நாஜிசம்
வீழ்த்தப்பட்டது..
இரண்டு கோடி மக்களின்
உயிர்த் தியாகத்தால்!

முசோலினி பாசிசம்
முறியடிக்கப்பட்டது..
மக்கள் போராட்டத்தால்!

மீண்டும் முளைக்கிறது
பாசிசம்..

பாசிசப் பாம்புகள்
ஊர்ந்த தடங்கள்
அழிக்கப்படாதவரை..

மூலதனத்தில் முளைத்த
பாசிசத்தின் வேர் தேடி அறுத்தெறியப்படாதவரை..

சனாதனத்தின்
சங்கைப் பிடித்து
அதன் உயிர்மூச்சை நிறுத்தாதவரை.‌.

பாசிசம் வளர
கொடை கொடுத்த
சக்கரவர்த்திகளின் கருவூலங்கள்
கைப்பற்றப்படாதவரை..

காலுடைந்த
ஜனநாயக ஏணியின்
மீதேறி..
மீண்டும் நுழையும்
பாசிசப் பாம்பு!

இதோ!
பாசிசத்தை வீழ்த்தும் ஆயுதம்
கண்டெடுக்கப்படுகிறது..
போராட்டக் களத்தில்!

மக்கள் போராட்டங்களே
பாசிச இருள் கிழிக்கும்
தீப்பந்தங்கள்..!

எரியும் சுடரென
எழுவோம்!
பாசிசத்தை கொளுத்துவோம்!


ஞ்சித்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



எட்டு முறை பாஜகவுக்கு கள்ள ஓட்டு போட்ட இளைஞர்!

பாஜகவுக்கு எட்டு முறை வாக்களித்த இளைஞர்!
தேர்தல் நியாயமாகதான் நடக்கிறதா?

ந்தத் தேர்தலில் சுமார் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதியுள்ள நபர்களாக உள்ளனர். ஆனால், இந்தத் தேர்தலில்தான் தேர்தல் ஆணையத்தின்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் என்பது இந்திய தேர்தல் ஜனநாயகத்தின்மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக பா.ஜ.க-வுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. முஸ்லீம் மக்கள் மீதான மத வெறுப்பு பேச்சுக்கு பிரதமர் மோடி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பா.ஜ.க தலைவர்கள் மீதும், அவர்களுடைய ஆதரவாளர்கள் மீதும் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் மீது மிக வீரியமாக நடவடிக்கை பாய்கிறது.

படிக்க : தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் ! | இணைய போஸ்டர்

வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை வெளியிடாமல் சதவீதத்தின் அடிப்படையில் வெளியிட்டு மக்களையும் எதிர்க்கட்சிகளையும் தேர்தல் ஆணையம் ஏமாற்றுகிறது. இது நேரடியாகவே தேர்தல் ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை கேள்வி எழுப்புகிறது.

ஒரு தொகுதியில் எட்டு முறை பா.ஜ.க-விற்கு வாக்களித்து அதை வீடியோவும் எடுத்து வெளியிட முடிகிறது என்றால் இந்தத் தேர்தல் ஜனநாயகமாகத்தான் நடக்கிறதா ?

ஏற்கனவே, குஜராத்தில் இன்ஸ்ட்டா நேரலையில் ஓட்டு போட்ட பா.ஜ.க தலைவரின் மகன் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் என்பது சடங்குத்தனமாக பி.ஜே.பி-க்கு ஆதரவாகவே நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் பி.ஜே.பி.யின் கைபாவையாகவே உள்ளது என்று நான்கு கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலிலேயே நமக்கு தெளிவாகிறது.

ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தின் மீதும், நடைபெறும் தேர்தலின் மீதும் நம்பிக்கை இல்லை என்றும் தெருவில் இறங்கி போராடுவோம்!

சிந்தனைச் செல்வன்

பு.மா.இ.மு முகநூலிலிருந்து…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் ! | இணைய போஸ்டர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம்!

வேண்டாம் ஸ்டெர்லைட்!
வேண்டும் ஜனநாயகம்!

தமிழக அரசே…
• ஸ்டெர்லைட் ஆலையை உடனே அகற்று!
• தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைத்திடு!
• அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்த, மக்களை சுட்டுக்கொல்ல காரணமான போலீசு மற்றும் அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடு!

நன்றி: மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்… | போர் கவிதை

ப்போது குண்டு விழுமோ என்று அஞ்சியபடியே
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்

கால்கள் களைத்து
இரைந்து கேட்கிறது ஓய்வை..

உழைக்க ஓடிய கால்களும்
ஓடியாடி விளையாடிய கால்களும்
உயிர் பிழைக்க ஓடியபடியே இருக்கின்றன..

அப்பாவின் அப்பா இறந்து போனதை
அவரின் கால்தழும்புகள்தான் அடையாளம் காட்டின..

அப்பா அடிக்கடி சொல்லுவார்
வீடில்லாத வாழ்க்கைகூட வீண் இல்லை
நாடில்லா வாழ்க்கை நரகம் என்று…

எப்போதும் அவர் உடலில்
எதையாவது கிறுக்கியபடி இருப்பார்
ஏனென்று கேட்டால்
குண்டடிப்பட்டு இறந்து போனால்
அடையாளமற்ற பிணமாக மாட்டேன்.
இதுவே எனதுடலின் அடையாளம் என்பார்…
சவக்களை கொண்ட விழிகளோடு…

நானும் தங்கையுமே ஒருநாள் அப்பாவிடம் கேட்டோம்
எப்போது நாங்கள் தெருக்களில் விளையாட முடியுமென்று?..

இந்த போர் விளையாட்டுகள் அனைத்தும் முடியும்
அன்று விளையாட முடியுமென்று அப்பா சொன்னார்..

அம்மாவின் திருமண நாளில்
குண்டுகள்தான் அட்சதையாம்
சொல்லி சிரித்துவிட்டு
எங்களை வெறித்து பார்ப்பாள்..

ஆசைப்பட்ட வாழ்க்கை நீர்க்குமிழி போல்
எப்போது வெடிக்குமென்று யாருக்கு தெரியும்?..

வெடித்துதான் போனது ஒருநாள்…

எத்தனையோ சடலங்களின் இடுக்கில்
அப்பாவின் உடல் சிதறி கிடந்தது
அன்றைய நாளிலும் அப்பா ஏதோவொன்றை
கிறுக்கி கொண்டிருந்தாரோ என்று எண்ணினேன்…

ஆனால்…

துண்டித்துக் கிடந்த கைகளில்
அப்பா இப்படி எழுதியிருந்தார்
என்னவளே இனியவளே
உரிமைகீதம் பாட ஏங்கும் உன்னை நினைத்தபடியே
காதல் கீதம் பாடுவேன் என் இறுதி வரை…

குருதி வெளியேறி குப்புற கிடந்த
அப்பாவின் மார்பில் இப்படி எழுதியிருந்தது
என் மகளே,
இளம் விதவை பட்டம் உனக்கு கிட்டாமல் போகட்டும்..

உள்ளங்கையில் வீட்டின் முகவரியும்
எனக்கான வாழ்த்தையும் இப்படி எழுதியிருந்தார்
மகனே நீயாவது பேரன் பேத்தி பெற்று
பெருவாழ்வு வாழ்ந்து மடி அல்லது வாழ்ந்து முடி என்று
எழுதியிருந்ததா என்ற
விடையற்ற குழப்பத்தில் நின்றபடி
அப்பாவின் கால்களைப் பார்க்க ..

எம் முன்னோர்கள் சுவாசித்த
மூச்சு காற்று உலாவும்
இந்நாடு என்நாடு என்று
கால்களில் எழுதி இருந்தது

இப்போது இதே வரிகளை எனது கால்களில் எழுதி
எப்போது குண்டு விழுமோ என்று அஞ்சியபடியே
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்…!


கலைவன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உயர்கல்வியின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் | பேரா.ப.சிவக்குமார்

உயர்கல்வியின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் | பேரா.ப.சிவக்குமார்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நேரலை: காடுகள், மலைகள், விவசாயத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

நேரலை: காடுகள், மலைகள், விவசாயத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

நேரலையை பாருங்கள்! பகிருங்கள்!!

இது match fixing தேர்தல் | தோழர் மருது

இது match fixing தேர்தல் | தோழர் மருது

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!