privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்புத்தகக் கண்காட்சியில் டி.அருள் எழிலனின் கச்சத்தீவு நூல் வெளியீடு!

புத்தகக் கண்காட்சியில் டி.அருள் எழிலனின் கச்சத்தீவு நூல் வெளியீடு!

-

நூல்: கச்சத்தீவு: மறைக்கப்படும் வரலாறு – பறிக்கப்படும் மீனவர் உரிமைகள்

–          டி. அருள் எழிலன், விலை: ரூ.10.00

வினவில் வெளிவந்த இந்த சிறப்புக்கட்டுரை இப்போது கீழைக்காற்று பதிப்பகத்தின் நூலாக வெளிவந்துள்ளது.

நூலிலிருந்து:

” ஒவ்வொரு முறையும் மீனவர்கள் தாக்கப்படும் போது, மத்திய அரசு தமிழக மீனவர்களை மிக மோசமான எல்லை தாண்டிய கள்ளத் தொழிலாளர்களாகவே சித்தரித்து வந்திருக்கின்றது. ஒரு முறை கடற்படை அதிகாரி ஒருவர் எச்சரிக்கின்ற தொனியில் இப்படிச் சொன்னார்: “எல்லை தாண்டும் மீனவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’. தமிழகத் தலைவர் ஒருவர் கூட “அதிகப் பொருளுக்கு ஆசைப்படுகின்ற மீனவர்கள் இப்படி எல்லை தாண்டிச் சென்று விடுகிறார்கள்’ என்ற தொனியில் சொன்னார். இப்போது நடந்திருக்கும் நிகழ்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் கேட்ட போது, “மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்’ என்றார். மேலே சுட்டிக்காட்டியுள்ள இந்திய ஆளும் வர்க்க அதிகார பீடங்களின் குரல்களில் எங்காவது இலங்கை அரசை இது தொடர்பாகக் கண்டித்திருக்கின்றார்களா? பாதிக்கப்படுகின்ற மீனவர்களை அதிக ஆசை கொண்டவர்களாகவும், எல்லை தாண்டும் கள்ளக் குடியேறிகளாகவும், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கும் இவர்கள், இந்த உயிராதாரப் பிரச்சினையை ஒரு அடையாள அட்டைப் பிரச்சினையாகவோ, எல்லைப் பிரச்சினையாகவோதான் அணுகி வருகின்றார்கள். ஆனால் இலங்கை மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் உயிர் வாழ்தலின் பொருளாதார நலனைத் தரித்திருக்கும் கச்சத்தீவை அண்டிய பகுதியே இவ்விதமான பதட்டத்தைத் தாங்கியிருப்பதன் மூலம் கச்சத்தீவு பற்றிய விவாதத்தை முன் வைப்பதும், இந்திய சாதிய சமூகங்களின் அரசியல் பிரதிநித்துவமும், திராவிட இயக்க அரசியலில் கோலோச்சும் சாதி ஆதிக்க அரசியல் சூழலில் அரசியல் அநாதைகளாக விடப்பட்டுள்ள இம்மக்களின் அரசியல் விடுதலை குறித்துப் பேசுவதுமே பொருத்தமான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.”

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

மனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு
மார்க்சிய-லெனினியமே ஒரே மாற்று
மக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று

சென்னை புத்தகக் கண்காட்சி
(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

  • உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.
  • வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்!

vote-012

தொடர்புடைய பதிவுகள்