privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைகேள்வி-பதில்ஆத்திகவாதியை ஒரு நாத்திகன் கேள்வி கேட்கலாமா? கேள்வி - பதில்!

ஆத்திகவாதியை ஒரு நாத்திகன் கேள்வி கேட்கலாமா? கேள்வி – பதில்!

-

கடவுள் என்பது என் தனி விருப்பம். அதில் தலையிட உனக்கு உரிமையில்லைஎன்று சொல்வது சரியா, அப்படி சொல்பவர்களை என்ன செய்வது?

– ராஜன்

__________________________________________

அன்புள்ள ராஜன்,

கடவுள் நம்பிக்கை குறித்து பார்க்கும் முன் – இந்த ‘தனி’ விருப்பம், ‘தனிப்பட்ட’ நம்பிக்கை, ‘தனிப்பட்ட’ வாழ்க்கை என்பதைக் குறித்து பார்த்து விடுவோம். கடவுளை விடுங்கள், நாம் நமது வாழ்வில் கற்றுக் கொள்ளும் நல்லது – கெட்டது, புனிதமானது – புனிதமற்றது, சரி – தவறு என்பதை நாம் எங்கேயிருந்து கற்கிறோம்? நமது வாழ்வை வழிநடத்திச் செல்லும் ‘தனிப்பட்ட’ அறம் சார்ந்த விழுமியங்களை எப்படி கட்டமைத்துக் கொள்கிறோம்? இவையனைத்தும் ‘தனிப்பட்ட’ / ‘சொந்த’ முறையில் என்று நம்புகிறீர்களா?

கருத்துக்களும், உணர்ச்சிகளும், நம்பிக்கைகளும் நமது மனதின் அடியாழத்திலிருந்து சுயம்புவாய்த் தோன்றி விடுகிறதா என்ன? ஆப்கானிலும், ஈராக்கிலும், போஸ்னியாவிலும், ஈழத்திலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக வீசப்படும் குண்டுகளால் உடல் கிழிந்து பிய்த்து எரியப்படும் மனித உடல்கள் நமக்கும் ஒரு அமெரிக்கனுக்கும் ஒரே விதமான உணர்ச்சியையா உண்டாக்குகிறது? செங்கொடி தீக்குளித்து இறந்தாள் என்பதைக் கேட்ட மாத்திரத்தில் நமக்குள் கையறு நிலையால் உந்தப்பட்ட ஒரு சோகம் எழவில்லையா? அந்தச் சாவு நம் மனதைப் பிசையவில்லையா? ஆனால், அதே சம்பவத்தை தினமலரால் காதல் தோல்வி என்று கொச்சைப்படுத்த முடிகிறதே?

நமது இந்தக் கருத்தும் தினமலரின் அந்தக் கருத்தும் சொந்த/தனிப்பட்ட முறையில் தான் உண்டானதென்று நம்புகிறீர்களா?  இல்லை.

நாம் வாழும் சூழல், நமது வர்க்கப் பின்புலம் போன்றவற்றின் அடிப்படையிலேயே நமது கருத்துக்களும் பிறக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் நமக்கு இந்த உலகத்தை அறிமுகம் செய்கிறது. நல்லது-கெட்டது, சரி – தவறு என்பதையெல்லாம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. நமது இதயம் சாலையில் அடிபட்டுக் கிடக்கும் தெரு நாயின் சிதறிய ரத்தத் துளிகளைக் கண்டு கூட பதறுகிறது. தினமலரின் இதயமோ ஈழத்தில் ஆயிரக்கணக்கில் செத்துச் சிதறிய அப்பாவி மனித உடல்களைக் கண்டு குதூகலிக்கிறது. சேனல் 4ன் வீடியோவைப் பற்றி ‘இன்ட்ரெஸ்டிங்கா ஏதும் இல்லை’ என்று கொக்கரிக்க வைக்கிறது. ராஜபக்சே கும்பலும் இது பொய் என்று ஊளையிட்டு விட்டு எளிதில் கடந்து செல்கிறது.

ஆக ஒரு விசயத்தை பார்த்து பதறுவதிலும், திமிரடைவதிலும் இரு வேறான போக்குகள் உள்ளிட்டு பல கருத்துக்கள் தோன்றுவதை பார்க்கிறோம். இவை எதுவும் சம்பந்தப்பட்டவர் சுயம்பாய் கண்டடைந்த கருத்து அல்ல. சமூகத்தில் பால் அவர் கொண்டிருக்கும் உறவே அந்தக் கருத்துக்களை கட்டியமைக்கிறது. எனினும் அநேகர் இத்தகைய கருத்துக்களை தானே யோசித்து வந்தடைந்த ஒன்று என்று கருதுகிறார்கள். வர்க்க ரீதியாக மேல் நோக்கி செல்லச் செல்ல இது மேலும் வலுவடையும்.

கடவுள் பற்றிய நமது கருத்துக்களையும் கூட அவ்வாறே நாம் ‘வெளியில்’ இருந்து தான் ‘உள்ளே’ இறக்கிக் கொள்கிறோம். ஒரு குழந்தை பிறக்கும் போதே இந்துவாகவோ,  முசுலீமாகவோ, கிருத்துவனாகவோ பிறப்பதில்லை. அதன் பெற்றோரும், அதனைச் சுற்றியமையும் சமூகமுமே அதற்கு ‘கடவுளை’ அறிமுகம் செய்து வைக்கின்றனர். அச்சமற்ற இயல்பையும், அளவற்ற ஆற்றலையும் கொண்ட குழந்தைகளை அதனைச் சுற்றியிருப்போர் தான் கடவுள் பூச்சாண்டி காட்டி அஞ்சி நடுங்கும் கோழைகளாக்குகின்றனர்.

ஆக, கடவுளை உங்கள் நண்பர் கண்டடைந்ததே  தனிப்பட்ட முறையில் அல்ல எனும் போதே அதில் விருப்பம் மட்டும் ‘தனிப்பட்டு’ இருக்க முடியாது. இருப்பினும் அந்த ‘தனிப்பட்ட’ கடவுள் நம்பிக்கை நான்கு சுவர்களுக்குள் மட்டும் பதுங்கிக் கொள்ளும் வரை, எவரையும் துன்புறுத்தாத வரை யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால், அவ்வாறு பதுங்கிக் கொள்வதில் கடவுள் நம்பிக்கைக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. ஒரு நம்பிக்கை என்பது எதார்த்த அனுபவத்தில் சோதித்தறியப்பட்டு அதன் மூலம் பட்டை தீட்டப்பட்டு நமக்குள் உண்டாகும் பட்சத்தில் அதன் மேலான பற்றுறுதி கேள்விக்கிடமற்று இருக்கும். ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது சோதித்தலுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.

வட / தென் துருவங்களில் கடலில் மிதக்கும் ஐஸ் மலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதன் சிறிய முனை மட்டுமே கடல் மட்டத்துக்கு மேலே கண்ணுக்குத் தெரியும் விதமாய் மிதந்து கொண்டிருக்கும். கடவுள் பற்றிய நம்பிக்கையும் அவ்வாறானதே. அது தனது கால்களின் கீழே ஆழமான அவநம்பிக்கையைக் கொண்டிருக்கிறது – அதன் மேல் தான் நிலை கொண்டுமிருக்கிறது. சுற்றிலும் சமூகத்தில் காணும் ஏற்றத்தாழ்வுகளும், அப்பாவி மக்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களும் கடவுள் நம்பிக்கையின் அஸ்திவாரத்தை நித்தம் நித்தம் அசைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது.

வாழ்க்கை நெடுக தம்மோடு சுக துக்கங்களில் சேர்ந்து பயணிக்கப் போகும் காதலியிடம் கூட ஒரு சில முறைகள் தான் ‘ஐ லவ் யூ’ சொல்லி இருப்பார் – ஆனால், கடவுளைத் துதிக்கும் போது மட்டும் ஒருவர் தினசரி திரும்பத் திரும்ப தனது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கிளிப்பிள்ளையைப் போல் ஓதிக் கொண்டேயிருக்கிறார். அதுவும் போதாமல், தனக்குள்ள கடவுள் சித்திரத்தை ஒத்திராத நம்பிக்கை கொண்டவர்களிடம் முரண்பட்டு உரசிப் பார்த்து தனக்குத்தானே திருப்தி கொள்கிறார்..

‘தனிப்பட்ட’ நம்பிக்கை என்பதே இப்படி வெளியே நடக்கும் உரசிப் பார்த்தல்களின் அறியாமை பலத்தில் தான் உயிர்வாழ்கிறது எனும் போது அதில் ‘தனிப்பட்டு’ மிஞ்சுவது தான் என்ன?  இதைப் பார்க்கும் முன், இதற்கு நேர் எதிரான ‘நம்பிக்கையற்ற’ நிலையைப் பற்றியும் பார்த்து விடலாம். இவையிரண்டும் தம்மளவில் நேரெதிர் துருவங்களாக இருந்தாலும், ஒரு மனிதனின் ஆளுமையையும் அவனது சமூகப் பொறுப்பையும் இவை மட்டுமே தீர்மானிப்பவைகளாக இல்லை.

நாத்திகவாதியாகவோ பகுத்தறிவுவாதியாகவோ இருப்பது மட்டுமே மாபெரும் தகுதி அல்ல. ஒருவர் தான் கொண்டிருக்கும் சமூக உறவில் என்ன வகையான பாத்திரத்தை வகிக்கிறார், மக்கள் நலன் சார்ந்து என்ன பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறார் இவைகளின் அடிப்படையில் சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதும், அவரது சொந்த வாழ்க்கையில் சமூகத்தைப் பற்றிய அவர் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதுவுமே முக்கியமானது.

இந்து பாஸிச பயங்கரவாத அமைப்பான ஆர். எஸ். எஸ் கும்பலுக்கு தத்துவார்த்த அடித்தளத்தை உண்டாக்கிக் கொடுத்தவரும், இந்து மகாசபையின் தலைவரும், காந்தி கொலையைத் திட்டமிட்டுக் கொடுத்தவருமான வி.டி சாவர்க்கரும் அவரது ஞான குருவான இத்தாலி பாசிஸ்ட் கட்சி தலைவர் பெனிட்டோ முசோலினியும் கூட கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதிகள் தான். சாவர்க்கர் கடவுளை நம்பாத அதே நேரம் வேதத்தையும், பார்ப்பனிய வருண தர்மத்தையும் நம்பினார். எனினும் அவர் நாத்திகர்தான். ஆனால் சிதம்பரம் சிவனடியார் ஆறுமுகசாமியோ கடவுளை நம்பும் ஒரு பக்தர். ஆனால் அவரது பக்தி, இந்து மதத்தில் நிலவும் பார்ப்பன மேலாதிக்கம், மொழித் தீண்டாமை போன்ற இழிவுகளை சகித்துக் கொண்டிராமல் எதிர்த்துப் போராடும் நேர்மையான தன்மான உணர்ச்சிக்குத் தடையாய் நிற்கவில்லை. கடவுளை நம்பிய சித்தர்கள் கூட அதன் பெயரில் விளங்கிய ஏற்றத்தாழ்வுகளையும் பார்ப்பனிய இழிவையும் இடித்துரைத்துள்ளனர்.

ஆக, ஒருவர் சமூக அளவில் வகிக்கும் பாத்திரம் என்னவென்பதிலிருந்து தான் அவரை மதிப்பீடு செய்ய முடியுமேயொழிய கடவுளை நம்புகிறாரா இல்லையா என்பதைக் கொண்டல்ல. நாத்திராய் இருப்பது எப்படி மாபெரும் தகுதியாய் இல்லையோ அதே போல் ஆத்திகராய் இருப்பது ஒன்றே இழிவானதும் அல்ல – போற்றத்தக்கதுமல்ல. கடவுள் நம்பிக்கை சமூகத்தில் நிலவுவதற்கு ‘தனிப்பட்ட’ விருப்பங்கள் காரணமல்ல. அதன் காரணம் சமூக இயக்கத்தில் உள்ளது. நிலவும் சமூக அமைப்பில் பொருளாதாய வாழ்கையின் ஒவ்வொரு அழைக்கழிப்பிற்கும் முகங்கொடுத்து நாளும் நாளும் நொறுங்குண்டு போனவர்கள் தற்காலிகத் தேறுதலை இல்லாத ஆண்டவனிடம் தேடி ஓடுகிறார்கள்.  வீட்டினுள் தொலைத்ததை தெருவிலே தேடியலையும் மக்களின் அந்தக் கையறு நிலை ஒரு அவலம். அந்த அவலத்தை நாம் புரிந்து கொள்வது மிக அவசியமானது. அதனால் தான் மார்க்ஸ் மதம் ஒரு அபின் என்று குறிப்பிட்டு விட்டு,  அது “இதயமற்ற உலகின் இதயமாக இருக்கிறது” என்றார்.

வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி,  கல்யாணம் முடிய, குழந்தை பிறக்க, குழந்தையின் பள்ளிக்கூட சீட், படிப்பு, வேலை, அதற்கு ஒரு திருமணம், அதன் வாழ்க்கை…. என்று நீளும் வாழ்க்கைத் தேவைகளும் அது நிறைவேறாமல் போகும் சமூக எதார்த்தமும், உறைந்து போய் நிற்கும் ஏற்றத்தாழ்வுகளும் அப்பாவி மக்களை ‘ஆறுதலுடன்’ அணிதிரட்டி கோவில்களையும், ஆன்மீக நிறுவனங்களையும் நோக்கி விரட்டி விடுகிறது. தீர்வு அங்கேயில்லை என்பதையும் எங்கே உள்ளது என்பதையும் நேர்மறையில் உணர்த்த வேண்டியது நமது கடமை – வறட்டு நாத்திகத்தை மட்டும் பேசிக்கொண்டு மக்களுக்கு மேலாக நம்மைக் கருதிக் கொள்வதல்ல.  அதே நேரம், தீர்வுக்கான பாதையை நந்தி போல் மறைத்துக் கொண்டு கடவுள் நம்பிக்கை வரும் போது இடித்துரைப்பதும் நேர்மறையில் விமர்சிப்பதும் அவசியம்.

நமது விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, இந்த ‘ தனிப்பட்ட நம்பிக்கைகள்’ உதிர்ந்து ஒழிந்து போக வேண்டிய ஒரு சந்தர்பத்தை நேர்மையாக சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பவர்கள் ஒரு கட்டத்தில் எதிர்கொண்டே ஆக வேண்டும். அது எப்போது?

சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோயிலின் கருவறையினுள் பல நூற்றாண்டுகளாக மீளாத் துயிலில் ஆழ்ந்து கிடக்கும் சிற்பங்களிலும், புனித நூல்களிலும், புராணங்களிலும், ஹதீஸ்களிலும், இறைவன் அருளிய வேத்திலும் இல்லையென்பதையும், அந்தப் பிரச்சினைகளின் தோற்றுவாயாக இருக்கும் இந்த வர்க்க சமூகத்தை மாற்றியமைப்பதே தீர்வு என்பதையும் யாரொருவர் தமது சொந்த அனுபவத்தில் நேர்மறையில் உணர்ந்து வினையாற்றத் துவங்குகிறாரோ அப்போது அந்தப் போராட்டத்தின் உப விளைவாக கடவுள் இறந்து போகிறார். அந்த இடத்தில் கடவுள் அமர்ந்திருக்கும் அஸ்திவாரக் கல் ஆட்டம் காண்கிறது. சமூக மாற்றத்திற்கான போராட்டம் வென்று ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட்ட பின் கடவுளுக்கான தேவையே காலாவதியாகி விடுகிறது.  துன்பங்களின் தோற்றுவாய்கள் அடைக்கப்பட்டு விட்ட  தேறுதல் தர யாரும் தேவையில்லை அல்லவா?

இங்கே நாம் கையறு நிலையில் ஏற்பட்ட கடவுள் பக்தியையும் காரியவாதக் கடவுள் பக்தியையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் – இரண்டையும் இருவேறு விதமாய் அணுக வேண்டியுள்ளது.

வாழ்வின் அத்தனை சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு, அதன் சகல இன்பங்களையும் நுகர்ந்து கொண்டு இடையிடையே எப்போதாவது எழும் குற்றவுணர்வைத் தவிர்த்துக் கொள்ள கோயில் உண்டியல்கள் முன்பும் கார்ப்பரேட் குரு பீடங்களின் முன்பும் திரளும் மேட்டுக்குடி கனவான்களின் நம்பிக்கையும் சாதாரண மக்களின் நம்பிக்கையும் ஒன்றல்ல.

வயதான மனைவியின் மருத்துவத்துக்கு சல்லிக்காசு கூட இல்லாமல், தாமதமாகி இழுத்துக் கொண்டேயிருக்கும் ஓய்வூதிய செட்டில்மெண்டு பாஸ் ஆக வேண்டுமே என்கிற பதைப்போடு வந்தவரும் – கறுப்புப் பணக் குவியலில் இருந்து ஒரு சிறிய துணுக்கை கிள்ளி உண்டியலில் போட்டு விட்டால் ரெய்டிலிருந்து தப்பலாமோவென்கிற ‘பதைபதைப்போடும்’  வந்தவரும் ஒன்றாகத் திருப்பதி ஏழுமலையான் முன் வரிசை கட்டி நிற்கிறார்களே, இவர்களின் பக்தி ஒன்றா?

இரண்டும் வேறுவேறானது என்றாலும் நாம் இரண்டிலும் தலையிட்டுத் தான் தீர வேண்டும் – ஆனால், அணுகுமுறையில் பாரிய வேறுபாடு இருக்கும். முந்தையவர் நம்மோடு ஒரே அணியில் நின்று போராட வேண்டியவர்; பிந்தையவரோ நமக்கு நேர் எதிரணியில் நிற்பவர் – எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டியவர்.

ஆக, கடவுள் நம்பிக்கையில் தனிப்பட்டது என்று எதுவுமில்லை. உங்கள் நண்பரால் தனது மூக்கு நுனியைத் தாண்டி எட்டிப்பார்க்காமல் அவரது நம்பிக்கையைக் கட்டி வைத்துக் கொள்ள முடியுமா என்று சோதித்துப் பாருங்கள். கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நடத்தப்படும் அயோக்கியத்தனங்களையும், சமூக விடுதலைக்கு குறுக்கே கடவுள் நிற்பதையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்க முடிகிறதா என்று கவனியுங்கள். முடிகிறது என்றால், கவலையை விடுங்கள் கூடிய சீக்கிரம் கடவுள் பெட்டி சட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்.

_________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

__________________________________________

__________________________________________

__________________________________________

__________________________________________

  1. ஆத்திகவாதி,நாத்திகவாதி, கம்யூனிஸ்ட் என்று கூரிக்கொள்ளும் /நினைத்துக்கொள்ளும் பலரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான்…எந்த ‘வாதமும்’ / ‘இசமும்’ இங்கு பிரச்சினை இல்லை….

    முரன்பாடு தான் பிரச்சினை…

    //ஒரு குழந்தை பிறக்கும் போதே இந்துவாகவோ, முசுலீமாகவோ, கிருத்துவனாகவோ பிறப்பதில்லை. //

    வினவையே எடுத்துக்கொள்ளுங்கள்…
    விஜய் டீ வி விமரிசனம் என்று ஜாதியை இழுப்பார்கள்….
    மதவாதிகள் / ஜாதிவெறியர்கள் மட்டுமல்ல….வினவும் இதைத்தான் செய்கிறது…அப்போ என்ன நாத்திகம், கம்யூனிசம்….ஒரே குட்டை..ஒரே மட்டை…..

  2. ஒருவரின் நம்பிக்கையில் தலையிடுவது தவறு தான் ஆனால் ஒருவரின் மூடநம்பிக்கையை தவறு என்று சொல்லவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு, அவசியமும் கூட தானே?

    வலிப்பு வந்தால் கையில் இரும்பை கொடுத்தால் சரிஆகிவிடும் என்பது அனைவரின் நம்பிக்கை அது தவறு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இருந்தாலும் புரியவைப்பது நம் கடமைதானே?

    ‘கடவுள் நம்பிக்கை’ என்று சொல்வதே தவறு. ‘கடவுள் மூடநம்பிக்கை’ என்று சொல்வதே சரி என்று நினைக்கிறேன்.

    • //வலிப்பு வந்தால் கையில் இரும்பை கொடுத்தால் சரிஆகிவிடும் என்பது அனைவரின் நம்பிக்கை அது தவறு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இருந்தாலும் புரியவைப்பது நம் கடமைதானே?//

      வலிப்பு வந்தால் கையில் இரும்பை கொடுத்தால் வேலைக்கு ஆகாதா? இப்ப தான் எனக்கு தெரியுது. ஒரு முறை சாலையில் மூன்று சக்கர வாகனத்தில் இருந்து ஒரு physically challenged நபர் ஒருவர் மயங்கி கீழே விழுந்து வலிப்பு வந்து கிடந்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை. கையில் இருந்த சாவிக்கொத்தை கொடுத்தேன். பின்னால் வந்தவர் அவர் கையில் இருந்த பெரிய இரும்பு ராடை கொடுத்தார். கொஞ்ச நேரம் கழித்து அவரின் வலிப்பு நின்றது. அது தானாக நின்றிருக்கவேண்டும் என்று இப்போது தெரிகிறது. (அவர் கதை பெரிய சோகக்கதை. யாரோ ஒரு திருடன் அவரின் மூன்று சக்கர ஸ்கூட்டியை திருடிவிட்டான். இப்போது தான் கடனில் வண்டி வாங்கி ட்யூ கட்டிக்கொண்டிருக்கிறார். காவல் நிலையத்துக்கு செல்ல, ரொம்ப நாள் கழித்து, வெறும் வயிற்றில், கீழ் கட்டளையில் இருந்து பல்லாவரம் காவல் நிலையத்திற்கு சைக்கிளை மித்தித்தவாறு சென்றுகொண்டிருந்தார். ஸ்கூட்டி அவருக்கு கிடைத்ததா என்று தெரியவில்லை)

      • //வலிப்பு வந்தால் கையில் இரும்பை கொடுத்தால் வேலைக்கு ஆகாதா? இப்ப தான் எனக்கு தெரியுது.// எப்பேர்பட்ட வலிப்பாக இருந்தாலும் அதிக பட்சம் இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும். கையில் இரும்பை கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி. உண்மையில் வலிப்பு வந்தவர்களுக்கு செய்யும் முதலிவி ‘கையில் இருமபினை கொடுப்பது’ அல்ல. அது வேறு சமாச்சாரம். இதற்கு முறையாக முதலுதவி கல்வி பயின்றிருக்க வேண்டும். எப்போதாவது நேரம் கிடைத்தால் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

        • நான் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும்போது இதேபோல் ஒருவருக்கு வலிப்பு என்று அழைப்பு வந்தது அங்கே சென்று பார்க்கும்போது இருவர் இரும்போ, சாவியோ தேடிக்கொண்டிருந்தனர் பின்பு இருவரும் கிட்டதட்ட 50மீ தொலைவிலுள்ள பூட்டப்பட்டிருந்த ஒரு பைக்கை மல்லுக்கட்டாக தூக்கிகொண்டுவந்து கீழே தள்ளி அவர்கையில் தினித்து அவர்கள் கையையும் சேர்த்து பிடித்தனர். வலிப்போடு இருந்ததை இரத்தகாயம் ஏற்படுத்திவிட்டனர், எவ்வளவு தடுத்தும் எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஒரு சில நிமிடத்தல் வழிப்பு நின்றது, பின் அந்த ‘குடி’மகன்கள் சென்றுவிட்டனர்.

          ஆனால் யாரும் மறந்துக்கூட இரும்பால் ஆன சில்லரைகாசை கொடுப்பதில்லை.

  3. இன்னும் சற்று விளக்கமாக உதாரணத்துடன் கூறுங்கள்.,

    எவ்வாறு கடவுள் இல்லை என்று மக்களை நம்ப வைப்பது. அவ்வாறு அவர்கள் உணர்ந்தால் தான் உண்மையான பிரச்சனைகள் மற்றும் அதன் பின்னணி பற்றி புரிந்து நம்முடன் இணைந்து போராடுவார்க்ள்.

    • கடவுள் இல்லை என்று தனியே வலியுறுத்துவதை விட, வாழ்க்கை பிரச்சினைகளுக்கு யார் காரணம், எது தீர்வு என்று எளிமையாக புரிய வைப்பதன்மூலம் ஒரு ஆத்திகரிடம் கடவுள் குறித்த அலசலை ஏற்படுத்த முடியும். நீங்கள் கூறியிருக்கும் கருத்தை திருப்பி போட்டு பாருங்கள அதுவே சரியாக இருக்கும். கடவுள் இல்லை என்று உணர்த்துவதன் மூலம் ஒருவருக்கு சமூகக் கல்வி அளித்து விட முடியாது. சமூகக் கல்வியை நடைமுறையுடன் கடைபிடிக்க வைப்பதன் மூலமே கடவுள் நம்பிக்கையை அவரது சொந்தட அனுபவத்தில் கேள்வி கேட்க வைக்க முடியும்.

      • வினவு,

        பாட்டாளி வர்க்க புரட்சிக்கு கடவுள் மறுப்பு பிரச்சாரம்தான் பிரதானமானது என்பதாக சில இடதுசாரிகள் கூறுகிறார்கள் இது சரியா?

        • இப்படி எந்த கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது? அப்படி கூறியிருந்தால் தவறு. அதே நேரம் நாத்திகப் பிரச்சாரம் என்பது வர்க்க போராட்டத்தின் நலன்களுக்கு உட்பட்டு செய்யவும் வேண்டும். இந்தியாவில் அதன் தேவை இன்னும் அதிகமாகவே உள்ளது. ஏனெனில் இங்கு பார்ப்பனிய இந்து மதம் என்பது வெறுமனே கடவுள் நம்பிக்கை என்பதைத் தாண்டி சாதி, மொழி, பண்பாட்டு ஆதிக்கமாகவும் உள்ளது. அதனுடைய தொடர் விளைவாக பெரும்பாலான மக்கள் விதிவசம் என்று எண்ணியவாறு தமது வாழ்க்கைப் பிரச்சினைகளை சகித்துக் கொண்டு வாழ்வதும் இருக்கிறது. இத்தகைய பார்வை போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகளிடம் இல்லை என்பதால் அவர்கள் எப்போதும் நாத்திகப் பிரச்சாரமோ, பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டமோ செய்வதில்லை. அதே நேரம் வர்க்க போராட்டத்தின் அடிப்படை இன்றி தி.க பாணியிலானா வறட்டு நாத்திகப் பிரச்சாரமும் பெரும்பான்மை மக்களை கவராமல் தனிமைப்படுவதையும் பார்க்கிறோம். இதுவும் தவறுதான். இவையிரண்டும் தவிர்க்கப்படவேண்டிய இரு துருவங்கள்.

          • அதே நேரம் வர்க்க போராட்டத்தின் அடிப்படை இன்றி தி.க பாணியிலானா வறட்டு நாத்திகப் பிரச்சாரமும் பெரும்பான்மை மக்களை கவராமல் தனிமைப்படுவதையும் பார்க்கிறோம்.

            தி.க வோடு சேர்ந்து அனைத்து முற்போக்கு இயக்கங்களும் அந்த வறட்டு நாத்திகப் பிரசாரம் செய்தால் பெரும்பான்மை மக்களை சென்றடையும் , அதன் மூலம் சாதி ஒழிப்பு வேகபடுத்தபட்டு சமூகத்தில் சமத்துவம் நிலவும். வெறும் வர்க்க போராட்டம் ஏழை தாழ்த்தப்பட்டவனை பணக்கார தாழ்த்தபட்டவன் கூட மதிக்காத நிலை தான் உருவாகும்.இதுதான் நடை முறையில் நாம் காண்பது.

  4. அருமையான விளக்கம். சில நாத்திகவாதிகள் இருக்கிறார்கள், இவர்கள் தாங்கள் நாத்திகம் பேசுவாதலேயே தங்களை மக்களை விட எல்லாம் அறிந்த பகுத்தறிவுவாதிகளாக எண்ணிக்கொள்கின்றனர். இவர்கள் சகட்டுமேனிக்கு கடவுளை நம்பும் மக்களை இழிவுபடுத்த தயங்குவதில்லை. இவர்களைப் போன்றோர் நிச்சயம் படிக்கவேண்டிய பதிவு.

    • அன்புள்ள GV,
      வினவு மின்னஞ்சலுக்கோ அல்லது அலைபேசிக்கோ தொடர்பு கொள்க
      தோழமையுடன்
      வினவு

  5. கடவுள் நம்பிக்கை, மதம் பற்றிய உங்கள் கருத்துகளில் எனக்கு மாறுபாடு இருந்தாலும், தன்னளவில் இந்தக் கட்டுரை கடவுள் நம்பிக்கைக்கு எதிராக சமூக அறிவியல் அடிப்படையிலான கம்யூனிஸ்ட் அறிக்கை போன்று இருக்கிறது.

  6. நான் கடவுளைப் பார்த்தேன். உலகத்திலேயே முதன் முறையாக, அதுவும் நேரடியாக. நேருக்கு நேர் நின்று பேசினேன். நான் மட்டுமல்ல. சாட்சிகளாக என்னுடன் இன்னும் இரண்டுபேர். இது நடந்தது சென்ற வாரம் வியாழக்கிழமை, காலை ஆறு பத்துக்கு. அண்ணாச்சி மளிகைக் கடையில் வைத்து கடவுளை நேருக்கு நேராக நாங்கள் பார்த்தோம்.

    நான் ஏதோ கதை புனைவதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இட்டுக்கட்டி சொல்வதாகவும் கருதவேண்டாம். அல்லது இந்த ஆள் எப்பவும் நாத்திகம் பேசுகிற ஆள்தானே, சும்மா புருடா விட்டு கலாட்டா செய்கிறான் என்றும் நினைக்கவேண்டாம். ஏனெனில் இந்தச் செய்தி உங்களுக்கு அண்டப்புளுகாகத் தெரியலாம். ஆனால் பார்த்ததற்கான சாட்சிகள் இருப்பதால், மற்ற கடவுளைப் பார்த்த ‘கதைகள்’ போல, இதை நீங்கள் ஒரேயொரு சதவிகிதம் கூட மறுக்க முடியாது. நான் கடவுளை நேரில் பார்த்தேன் என்பதனால் சிரிக்கவோ, கோபப்படவோ, அல்லது நிதானம் தவறிவிடவோ வேண்டாம். நம்புங்கள்.
    http://puthiyapaaamaran.blogspot.in/2011/11/blog-post_18.html

  7. கருப்பு, வெள்ளைக்கு நடுவிலும் இரு வண்ணங்களும் இணைந்த வண்ணப்பிரிவுகள் நிறைய உண்டு. கடவுள் உண்டு, இல்லை எனும் இரு விஷயங்களுக்குமிடையில் பல்வேறு தளங்களில் நிற்கும் மக்கள் பலருண்டு.

  8. //நாத்திகவாதியாகவோ பகுத்தறிவுவாதியாகவோ இருப்பது மட்டுமே மாபெரும் தகுதி அல்ல. ஒருவர் தான் கொண்டிருக்கும் சமூக உறவில் என்ன வகையான பாத்திரத்தை வகிக்கிறார், மக்கள் நலன் சார்ந்து என்ன பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறார் இவைகளின் அடிப்படையில் சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதும், அவரது சொந்த வாழ்க்கையில் சமூகத்தைப் பற்றிய அவர் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதுவுமே முக்கியமானது.//

    உண்மையான வரிகள்… மிகவும் அருமை.

  9. கடவுள் நம்பிக்கையின் அடிப்படை பாதுகாப்பின்மையில் தான் தொடங்குகிறது, தன்னை சுற்றீ பல வட்டங்களை போட்டு கொண்டுள்ள மனிதன் அந்த வட்டங்களே தனக்கு பாதுகாப்பு என நினைக்கிறான், எனது குடும்பம், எனது ஊர், எனது சமூகம், எனது நாடு, எனது மதம் என வட்டம் பெரிதாகி கொன்டே போகிறது, ஆனால் உலகமே சிறு கிராமமாக மாறிக்கொன்டிருக்கும் இக்காலத்தில் தனி மனிதன் தானே உலகம் என சுயநலம் கொண்டாடும் போது வட்டங்கள் வலு இழப்பதும் நடக்கும்

  10. விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை… மேலும் ஆத்திகர்கள் சொன்ன நாத்திகர்கள் என்ற வார்த்தையை கடவுள் மறுப்பவர்களும் கூறுவது மறைமுகமாக அவர்களை ஆதரிப்பதாக தான் எனக்கு தோன்றுகின்றது. மேலும் கடவுள் மறுப்பு கொள்கை உடையவன் பகுத்தறிவாளன் என்பதும் வேடிக்கையானது. பகுத்து ஆராய்வதை கடவுள் எனும் கருத்திலும் பயன் படுத்துங்கள் என்பது தான் சரியானதாய் இருக்கும்மென நினைக்கின்றேன்.

  11. கடவுள் நம்பிக்கையில் குழர்ப்பத்துடன், ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுரை.

  12. மிக மிக சிறந்த கட்டுரை
    நான் படித்த வரையில் “கடவுள் நம்பிக்கை” குறித்த மிக தெளிவான பார்வை
    நன்றி வினவு

  13. தனிப்பட்ட விருப்பம்,கடவுள் நம்பிக்கை போன்றவை அனைத்தும் சமூக உறவின் மீது எப்படி கட்டியமைப்படுகிறது என தெளிவாக கட்டுரை விளக்குகிறது.

    மிக சிறந்த கட்டுரை.
    நன்றி வினவு.

  14. இறைவன் இருக்கிறான் என்று சொல்ல ஒரு ஆத்திகனுக்கு உரிமை இருப்பது போல்,இல்லை என மறுக்கும் உரிமை ஒரு நாத்திகனுக்கு உண்டு.

  15. இங்கு கடவுள் இல்லை என்று சொல்லுபவர் பலர் ..நானும் அவ்வாறுதான் சொல்லிகொடு இருதேன் ….ஆனாலும் என்னிடம் ஒரு ஜாதி சான்றுதல் இருத்தது..
    இங்கு பதில் தந்த எல்லோரும் அப்படிதானா!!!!!!….

  16. யாரு சொன்னது நாத்திகவாதி அறிவாளி என்று ? ஒன்றும் இல்லாமல் சூனியத்திலிருந்து தானாகவே இந்த பிரபஞ்ச அதிசியங்கள் தோன்றியது என்று சொல்லிக்கொண்டு திரியும் நாத்திகவாதிகளைவிட இவை எல்லாம் படைக்கப்பட்டவையே இவற்றுக்கெல்லாம் வடிவமைப்பாளர் ஒருவன் இருக்கிறான் என்று நம்பும் ஆத்திகவாதிகள் அறிவாளிகளே… அதாவது… படைப்புகளுக்கும் படைத்தவனுக்கும் வித்தியாசம் தெரிந்த ஆத்திகவாதியே அறிவானவன். இவனால் சமுதாயத்திற்கு எந்த கேடும் விளைவதில்லை.

    • எல்லா தரப்பிலும் அயோக்கியனும் இருக்கிறான், நல்லவனும் இருக்கிறான். தமிழர்கள் என்றால் அனைவரும் யோக்கியர்கள் என்று சொல்பவனும், அயோக்கியன் என்றும் சொல்பவனும் முட்டாள்களே… விடுதலை புலிகள் உயிரின் மதிப்பு தெரியாது அப்பாவிகளை கொன்றால் அது வீரம், தியாகம் என்று போற்றப்படும்.இதை சிங்களன் செய்தால் அது சிங்கள பயங்கரவாதம். இப்படி நீங்கள் (வினவு)கூறுவது கூட உங்களின் சுற்றங்களின் சூழலில் உங்களை வார்த்த முறையை தான் காட்டுகிறது. இதை தான் அமெரிக்கனும் செய்கிறான். அவனுக்கு வேண்டியவர்கள் செய்தால் நியாயம் வேண்டாதவர்கள் செய்தால் அநியாயம்.சிங்கள இன மக்களால் அடக்குமுறைக்கு ஆளான மக்கள், சிங்கள இன மக்களால் கலவர பாதிப்புக்குள்ளான மக்கள் தனி ஈழம் கேட்டு போராடினால் அது நியாயம். இதையே இதே நிலை அடைந்த ஒரு குஜராத் முஸ்லீமோ அல்லது காஷ்மீரியோ இப்படி போராடினால் ஏற்றுகொள்வோமா ?
      ஆக பிரச்சனைகள் என்பது நியாய அநியாயத்தை வைத்தே முடிவெடுக்கணும். நீங்கள் கேட்ட கேள்வி நாத்திகர்களிடமும் பொருந்தும். பிறகு எதற்கு ஆத்திக வாதிகளால் மட்டும் சமுதாய கேடு என்று வினவு தன மேதாவித்தனத்தால் சுற்றி வளைக்கிறீர்கள்? நீங்களும் உங்கள் சுற்றத்தால் வார்க்கப்பட்ட அடுத்தவர்களை நொட்டை சொல்லும் சராசரி மனிதர்களே ..

    • யார் ஆத்திகன்?, யார் நாத்திகன்?

      நுட்பமாக பார்த்தால், இயற்கையின் விதிகளே கடவுள். இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டவன் கடவுளை புரிந்து கொண்டவன் ஆகிறான். இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டு மீறாமல் ஒத்திசைந்து வாழ்பவன் கடவுளை வணங்குபவனாகிரான். இதற்கு எந்த மதமோ,ஆலயமோ தேவை இல்லை.
      அந்த வகையில் (கடவுளை)இயற்கையை , அதன் விதிகளை அல்லது புதிர்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது என்பதே பகுத்தறிவு.

      இயற்கைக்கு எதிராக இயங்குபவர்கள் எல்லோரும் கடவுளை மிதிப்பவர்கள் அல்லது இழிப்பவர்கள் ஆகிறார்கள்.இயற்கைக்கு எதிராக இயங்குவதன் மூலம் (eg, global warming)நாம் அனைவரும் (ஒரு சமுகமாக) கடவுளை வணங்க மறுக்கிறோம் என்பதே உண்மை.

  17. “வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது” என்கிற மேற்கோளையும், “அறியாமையும் இயலாமையும்தான் மூடநம்பிக்கைகளுக்கு அடிப்படை” என்கிற மேற்கோளையும் நாம் இங்கே கணக்கில் எடுத்துக் கோள்ள வேண்டும்.

    தெளிவான மிகச் சிறந்த படைப்பு. இது போன்ற படைப்புகள் அதிகம் வரவேண்டும் என்பதே எனது அவா. வினவுக்கு வாழ்த்துகள்!

  18. மிகவும் அருமையான கேள்வி பதில். ஆத்திகத்தையும், நாத்திகத்தையும் சமூக நடைமுறையில் இருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான சரியான வழிகாட்டல். எனக்கு புரியும் படியும், உதவியாகவும் இருந்தது.

  19. கடவுள் , மதம் குறித்து மேலும் அறிய ” மதம்- ஒரு மார்க்சியப் பார்வை” என்னும் நூலைப் படிக்கலாம். இந்நூல் கீழைக்காற்று வெளியீட்டகத்தில் கிடைக்கும். இந்நூலில் முற்போக்கு, ஜனநாயகவாதிகள் மத்தை எப்படிப் பார்க்க வேண்டும் எனபது குறிததும், மதம் குறித்து ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டுளளது.

  20. ”மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைப் புறவுகைச் சேர்ந்த பல சக்திகள் கட்டப்படுத்துகின்றன. இந்தச் சக்திகள் மனிதனின் மனங்களில் பல கற்பனைகளாக, மாயத் தோற்றங்களாகப் பிரதிபலிக்கின்றன. எல்லாச் சமயங்களும் இந்தப் பிரதிபலிப்பேயன்றி வேறெதுவும் இல்லை. இந்தப்பிரதிபலிப்பில் மண்ணுலகச் சக்திகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளாக வடிவெடுக்கின்றன……….வெறும் அறிவால் மட்டுமே சமுதாயத்தின் கட்டுப்பாட்டிற்குள் சமுதாயச்சக்திகளை கொணர முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக இதற்குத் தேவைப்படுவது ஒரு சமுதாயச் செயலே………..அப்பொழுதுதான் சமயவடிவில் பிரதிபலித்து நிற்கும் கடைசிப் புறம்பான சக்தி மறையும்; பிரதிபலிப்புக்கு எதுவுமே மீந்து இராது என்கிற எளிய காரணத்தால், சமய வடிவப் பிரதிபலிப்பும் அதனுடன் மறையும்.”

    “சமயம் பற்றி” என்கிற நூலில் ஜார்ஜ் தாம்சன் அவர்கள் கையாண்டுள்ள எங்கெல்ஸ் மேற்கோளின் ஒரு பகுதி இது. இந்த நூல் சமயம் பற்றி மேலும் பல விவரங்களைத் தருகிறது.

  21. இலங்கைப் பிரச்சினைக்கும், அமெரிக்காக் காரன் வெவ்வேறு நாடுகளிலும் புகுந்து அட்டகாசம் செய்வதற்கும், இறை நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்……… இடத்தை நிரப்ப வேண்டுமென்பதற்க்காக எதை வேண்டுமானாலும் எழுதுவதா??? என்ன கொடுமை வினவு இது??

    • தாஸ் எப்படி இருக்கீக்கங்க? நீங்கள் மேற்கோளிட்ட கருத்து எந்தக்கருத்தும் தனிப்பட்ட முறையில் சுயம்புவாக ஒரு மனிதனிடம் தோன்றவில்லை என்பதற்க்காக சொல்லப்பட்டது. அதன்படி இறை நம்பிக்கையும் சுயம்புவாக வராது.வெளியிலிருந்தே ஒருவருக்கு வருகிறது – இதில் என்ன பிரச்சினை?

  22. \\ஒரு குழந்தை பிறக்கும் போதே இந்துவாகவோ, முசுலீமாகவோ, கிருத்துவனாகவோ பிறப்பதில்லை. அதன் பெற்றோரும், அதனைச் சுற்றியமையும் சமூகமுமே அதற்கு ‘கடவுளை’ அறிமுகம் செய்து வைக்கின்றனர்.\\ அது சரி, மதங்கள் எல்லாமே தப்புன்னே வச்சுகிடுவோம், நீங்க கண்டு பிடிச்ச நாத்தீகம் மட்டும் என்ன தாயின் கருவறையிலேயே கத்துகிட்டு வெளியில வந்து போதிச்சிட்டு இருக்கீங்களா? மதவாதிகள் கடவுள் இருக்கார்னு நிரூபிக்கவில்லை என்றால், கடவுள் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீரோ? நீரும் ஒரு சாமானிய மனிதர்தானே உமது கொள்கைகள் மட்டும் பிழையே இல்லாமல் இருக்கும் என்று என்ன உத்திரவாதம்?

    • என்ன தாஸ் இவ்வளவு பதட்டமடைகிறீர்கள்? நீங்கள் சொன்னது என்னவெனில் நாங்கள் மட்டும் பிழை செய்யவில்லை, நீங்களும்தான் என்று எழுதுவதன் மூலம் தோல்வியை ஒப்புக் கொண்டது போலல்லவா ஆகிறது. நீங்கள் தோல்வியடையாமல் விவாதிக்கவே விரும்புகிறோம்.

      • \\நாங்கள் மட்டும் பிழை செய்யவில்லை, நீங்களும்தான் என்று எழுதுவதன் மூலம் தோல்வியை ஒப்புக் கொண்டது போலல்லவா ஆகிறது. \\ஆன்மிகம், இறை நம்பிக்கை மனிதன் கண்டுபிடித்தது, அதனால் அது பிழையானது என்றால், நாத்தீகமும் உங்களைப் போல உண்ட உணவு செரிக்க வில்லை என்று எவனோ வேலையற்றவன் கண்டுபிடித்தது தானே, அது பிழையற்றது என்று உங்களால் எப்படிச் சொல்ல முடியும்? [தயவு செய்து தவறான அர்த்தம் கற்ப்பிப்பதை நிறுத்துங்கள் வினவு.]

  23. \\ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது சோதித்தலுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.\\ நாத்தீகத்தின் மூலம் கடவுள் இல்லை என்று டெஸ்டு பண்ணி முடிவு கொடுத்திட்டீங்களா? எல்லா அறிவியலாளர்களும் நாத்தீகர்கள் இல்லை. சொல்லப் போனால் அறிவியல் மூலம் இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதை நிரூபிக்கவே முடியாது. வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர் ஐன்ஸ்டீன், அவரே இறை நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.

    • இது மிகவும் எளிமையான விசயம் தாஸ். கடவுள் மனிதனை படைக்கவில்லை. மனிதன்தான் கடவுளைப் படைத்தான். இதை புரிந்து கொண்டால் அறிவியலை எல்லாம் ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்?

  24. \\ஆனால், கடவுளைத் துதிக்கும் போது மட்டும் ஒருவர் தினசரி திரும்பத் திரும்ப தனது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கிளிப்பிள்ளையைப் போல் ஓதிக் கொண்டேயிருக்கிறார்.\\ அதிலென்ன தப்பு?

    • எனக்கு எப்போதும் சந்தேகமோ, கேள்விகளோ, ஐயமோ வரக்கூடாது என்பதை நிபந்தனையாக வைத்து விட்டு ஓதுவதுதான் பிரச்சினை.

      • \\எனக்கு எப்போதும் சந்தேகமோ, கேள்விகளோ, ஐயமோ வரக்கூடாது என்பதை நிபந்தனையாக வைத்து விட்டு ஓதுவதுதான் பிரச்சினை.\\ அறிவியலில் எல்லாத்தையும் நீங்க விளக்கிட்டீங்கலாக்கும். காமடி பண்ணாதீங்க பாஸ்….. ஆற்றல் அழிவின்மை விதி உண்மை [Energy can neither be destroyed, nor created, one form of energy can be converted into another form] என்றால் பிரபஞ்சத்தின் ஆற்றல் எப்படி வந்தது…??? கேமராவைப் படைக்க டிசைனர் வேண்டுமென்றால் நம் கண்கள் தானாக உருவாகியிருக்குமா? டயாலிசிஸ் செய்ய ஒரு பெரிய அறை சைசுக்கு எந்திரங்களும் அறை டசன் டாக்டர்களும் மூணு டசன் நர்சுகளும் வேண்டுமென்றால் அதே வேலையை கைபிடிக்குள் அடங்கும் கிட்னி செய்கிறதே, அது தானாக உருவாகியிருக்குமா? உங்கள் வீட்டில் தண்ணீரை மொட்டை மாடித் தொட்டிக்கு அனுப்பும் மோட்டாரை உருவாகியது ஒரு தொழிற்ச்சாலை என்றால் இதயம் என்ற நூறு வருஷத்துக்கும் மேலாக பழுதாகாமல் வேலை செய்யும் பம்பு சும்மா உருவாகியிருக்குமா? இந்த மாதிரி கேள்வி கேட்டால் வாயை மூடு என்பதைத் தவிர வேறு எந்த பதிலையும் இந்த ஈர வெங்காய விஞ்ஞானிகள் சொல்வதே இல்லையே அது ஏன்? சங்கதி இப்படி இருக்க, இறை நம்பிக்கையாளனுக்கு ஒண்ணுமே தெரியாது, நாங்க எல்லாத்தையும் வெளக்கோ வெளக்குன்னு வேலகிட்டோம்னு புருடா விடுவது எதற்கு?

        • தாஸ், மீண்டும் பதட்டமடைகிறீர்கள். இன்றைய வாழ்க்கை எல்லாம் உழைக்கும் மக்களும் அறிவியலாளர்களும் உருவாக்கியது. கடவுளை மனிதன் தோற்றுவித்த காலத்தில் பசி,பஞ்சம், பட்டினி, கொள்ளை நோய் என்று அதற்கு தீர்வு காண முடியாமல்தான் கடவுளை தோற்றுவித்தான். இன்றும் இத்தகைய வாழ்க்கை பிரச்சினைகளுக்கு காரணம் அநீதியான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு. நீங்களே ஒத்துக் கொள்ளும் இந்த அநீதியான சமூக அமைப்பை மாற்றுவதற்கு ஒரு பக்தன் முறையில் என்ன செய்ய முடியும்? அநீதிகளை காணாமல், அதை நிறுத்த வழியில்லாமல் கண்மூடி இல்லாத கடவுளை பிராத்திப்பது ஒன்றைத் தவிர வேறு வழி இருக்கிறதா அருமை தாஸ்?

          • \\கடவுளை மனிதன் தோற்றுவித்த காலத்தில் பசி,பஞ்சம், பட்டினி, கொள்ளை நோய் என்று அதற்கு தீர்வு காண முடியாமல்தான் கடவுளை தோற்றுவித்தான்.\\ இயற்கையின் படைப்பில் எந்த ஒரு இனமும் அளவுக்கு அதிகமாகப் பெருகும் போது அதன் எண்ணிக்கையைக் குறைக்க சில கட்டுப்பாட்டு முறைகள் உள்ளன. அவைதான் இவை. அப்படியே கூண்டு கூண்டாகச் செத்தாலும் ஐம்பது வருடத்துக்கு முன்பு வரை கூட எண்ணற்ற உயிரினங்கள் காப்பற்றப் பட்டுத்தான் வந்திருக்கின்றன. ஆனால் உங்கள் விஞ்ஞானம் வளர்ந்து சாதித்தது என்ன? இன்றைக்கு நாட்டில் காங்கேயம் காளைகள் கூட “Endangered Species” -ல் சேர்ந்ததுதான் மிச்சம். வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க சார்.

            • இந்த உலகம் இயற்கையில் படைப்பில் தோன்றியிருக்கிறது என்ற அளவுக்கு புரிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி. நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்றால் இது குறித்து நேரில் சந்தித்து பேசலாமே? எழுதித் தீருகின்ற விசயமா இது?

              • \\இந்த உலகம் இயற்கையில் படைப்பில் தோன்றியிருக்கிறது என்ற அளவுக்கு புரிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி.\\ இயற்க்கை என்றால் யாரோடது? இறைவனால் உருவாக்கப் பட்டது. படைப்பு என்று இருந்தால் படைத்தவன் இருப்பான் என்பது பாமரனுக்கும் புரியும், ஆனால் மெத்தப் படித்த உங்களுக்கு புரியாதது என்? மனசாட்சிக்கு விரோதமாக நீங்களாக உருவாக்கிக் கொண்ட நியாயமற்ற நாத்தீகம். உங்களை நேரில் சந்திப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் நீங்கள் உங்களுக்கென்று ஒரு கற்பனையை உருவாக்கி இல்லாத வழியை உருவாக்கி கொண்டு விட்டீர்கள், யார் சொல்லியும் அதை நீங்கள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. சந்திப்பதால் என்ன பயன் இருக்கப் போகிறது?

                • அப்படி இல்லை, தாஸ். நாம் சந்திப்பதின் மூலம் இந்த விசயத்தை விரிவாக பகிர்ந்து கொள்ளலாம். இந்தக் கட்டுரையில் இறைநம்பிக்கைதான் சமூகப் பிரச்சினையை தோற்றுவித்தது என்று எங்கும் கூறவில்லை. ஒரு நபரிடம் இருக்கும் சமூக உணர்வே பிரதானமன்றி அவரது மத நம்பிக்கை இரண்டாம் பட்சமானதுதான் என்றுதான் கட்டுரை கூறுகிறது. அதே போல சமூகப்பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அந்த நம்பிக்கை இடையூறாக இருக்க கூடாது இருந்தால் அது விமரிசிக்கப்படக்கூடியது என்றுதான் சொல்கிறோம். அதனால் சமூக அக்கறை கொண்ட ஆத்திகரையும், சமூக விரோதமான நாத்திகர்களையும் இந்தக் கட்டுரை சான்றுகளாக கூறுகிறது. அது உங்களுக்கு புரியவில்லையா?

                • “ஆனால் நீங்கள் உங்களுக்கென்று ஒரு கற்பனையை உருவாக்கி இல்லாத வழியை உருவாக்கி கொண்டு விட்டீர்கள், யார் சொல்லியும் அதை நீங்கள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை”…….
                  உங்களுக்கான பதில் உங்களிடத்திலேயே ….தயவு செய்து இதுவும் கடவுள் செயல் என்று சொல்லாதிர்கள்

          • \\ இன்றும் இத்தகைய வாழ்க்கை பிரச்சினைகளுக்கு காரணம் அநீதியான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு. நீங்களே ஒத்துக் கொள்ளும் இந்த அநீà ��ியான சமூக அமைப்பை மாற்றுவதற்கு ஒரு பக்தன் முறையில் என்ன செய்ய முடியும்? அநீதிகளை காணாமல், அதை நிறுத்த வழியில்லாமல் கண்மூடி இல்லாத கடவுளை பிராத்திப்பது ஒன்றைத் தவிர வேறு வழி இருக்கிறதா அருமை தாஸ்?\\ நீங்கள் இரண்டு வெவ்வேறான விஷயங்களை போட்டு படிப்பவர்களைக் குழப்புகிறீர்கள். இறை நம்பிக்கையால்தான் இந்தியாவில் சமூகப் பிரச்சினைகள் நிலவுகின்றன என்பது உங்கள் தியரி என்றால், உலகில் இன்னின்ன நாடுகள் நாத்தீகத்தை கடை பிடித்து சுபிட்சமாக வாழ்கின்றன என்றும், இன்னின்ன நாடுகள் இறை நம்பிக்கையால் நாசமாகிப் போயின என்றும் ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டு. நீங்கள் அவ்வாறு செய்ய வில்லை. வெறுமனே இறை நம்பிக்கை மீது எல்லா பழியையும் போடுவது எவ்விதத்தில் நியாயம் ஐயா? இந்தியாவில் நடப்பது மக்களாட்சி, ஆட்சி செய்பவர்கள் கூடுமான வரை மக்களை முட்டாளாக்கி ஏமாற்றி வருகிறார்கள். கொள்ளையடிக்கப் படுவது நமது பணம் தான் என்று கூட யாருக்கும் தெரியவில்லை. ஒரு வேலை உணவும், கொஞ்சம் காசும் கொடுத்தால் எந்தக் கழுதைக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போட ரெடியாக உள்ளார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு வந்தாலே போதும் எல்லா பிரச்சினைகளும் தீரும், அது நடக்காத மாதிரி பார்த்துக் கொள்வதில்தான் இன்றைய ஊழல் பெருச்சாளிகளின் வெற்றியாக இருக்கிறது. மற்றபடி, இறை நம்பிக்கைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஐன்ஸ்டீன் போன்ற விஞாநிகளிடமே இறை நம்பிக்கை இருந்தது, உலகில் பணக்கார நாடுகளிலும் இறை நம்பிக்கை இருக்கிறது, பிரச்சினைக்கு தீர்வு வேறு எங்கோ இருக்கிறது, வீணாக இறை நம்பிக்கையின் மேல் குற்றம் சட்டி மக்களின் இருக்கும் நிம்மதியையும் கெடுக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.

            • தாஸண்ணா,
              இதெல்லாம் ஏற்கெனவே முன்பொரு கட்டுரையில் நாம் பேசியதுதானே! மறுபடியும் அதையே பேச போரடிக்கலையா? 🙂

              • \\இதெல்லாம் ஏற்கெனவே முன்பொரு கட்டுரையில் நாம் பேசியதுதானே!\\ அப்போது தோற்கடிக்கப் பட்ட அதே கருத்துகளை திரும்பவும் பதிவாக போடும்போது, மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மேலும் நாம் பதிவுகளைப் படித்து அதற்க்கு தகுந்தவாறு பின்னூட்டம் போடுகிறோம், யாருக்கு என்னென்ன எழுதுகிறோம் என்று Track செய்வதில்லை. அதனால் தான்.

                • தோற்கடிக்கப்பட்ட கருத்துகளா!!!! ஹா..ஹா.. நல்ல நகைச்சுவை.
                  நாம் வேறுபடுகிறோம் என்பதை ஒத்துக்கொள்வோம் என்று கூறிவிட்டு நம் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். ஏனெனில் லூப் போன்று சுற்றிக்கொண்டே இருந்த தர்க்கம் அது. இந்தப் பதிவிற்கான உங்களது பதில்களும் அப்படித்தானிருக்கின்றன.

  25. \\ஒருவர் தான் கொண்டிருக்கும் சமூக உறவில் என்ன வகையான பாத்திரத்தை வகிக்கிறார், மக்கள் நலன் சார்ந்து என்ன பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறார் இவைகளின் அடிப்படையில் சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதும், அவரது சொந்த வாழ்க்கையில் சமூகத்தைப் பற்றிய அவர் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதுவுமே முக்கியமானது.\\ இதென்னா கம்யூனிசானந்தாவின் போதனைகளா? இப்படித்தான் சமூகம் இருக்க வேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டுமென்று சொல்ல நீங்க யாரு சார்? தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த நாத்தீகன் மக்களுக்காக என்னத்தை பிடுங்கினான் என்று சொல்ல முடியுமா? மக்கள் பணத்தை கொண்டுபோய் வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைத்துக் கொண்டு, எழி அது இது என்று முதலைக் கண்ணீர் வடித்து என்னத்தற்க்கையா பிரயோஜனம்? [நாத்தீகன் அதை ஏன் செய்தான் என்பது தான் கேள்வி]

    • வினவு பின்வருமாறு பதிலளித்தது தங்களுக்குப் புரியவில்லையா நண்பா?

      //ஒரு நபரிடம் இருக்கும் சமூக உணர்வே பிரதானமன்றி அவரது மத நம்பிக்கை இரண்டாம் பட்சமானதுதான் என்றுதான் கட்டுரை கூறுகிறது. அதே போல சமூகப்பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அந்த நம்பிக்கை இடையூறாக இருக்க கூடாது இருந்தால் அது விமரிசிக்கப்படக்கூடியது என்றுதான் சொல்கிறோம். அதனால் சமூக அக்கறை கொண்ட ஆத்திகரையும், சமூக விரோதமான நாத்திகர்களையும் இந்தக் கட்டுரை சான்றுகளாக கூறுகிறது. அது உங்களுக்கு புரியவில்லையா?//

      • \\அதே போல சமூகப்பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அந்த நம்பிக்கை இடையூறாக இருக்க கூடாது இருந்தால் அது விமரிசிக்கப்படக்கூடியது என்றுதான் சொல்கிறோம்.\\ மத நம்பிக்கைகள் சமூகப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராட எந்த விதத்தில் இடையூறாக இருக்கிறது என்று சொல்ல முடியுமா? அண்ணாதுரை ஆட்சிக்கு வந்த பின்னர் எம்.ஜி.ஆர். கருணாநிதி ஆகியோர் தான் தமிழகத்த ஆட்சி புரிந்து வந்திருக்கிறார்கள். இருவருமே நாத்தீகக் கொள்கைகளைக் கொண்டவர்கள் தான். மத நம்பிக்கையில்லாதவர்கள் தான். [எம்ஜிஆர் கோவில்களுக்குப் போனாலும், தனக்கு கடவுள் நம்பிக்கை என்று சொன்னவர்தான்.] மத நம்பிக்கையால் தான் சமூகம் குட்டிச் சுவரானது என்றால், இந்த நாத்தீகர்களால் ஏன் தமிழகத்தை சுபிட்சமாக ஆக்க முடியவில்லை என்று நீங்கள் கூற வேண்டும்.

        • //மத நம்பிக்கைகள் சமூகப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராட எந்த விதத்தில் இடையூறாக இருக்கிறது என்று சொல்ல முடியுமா?//

          எனது பின்னூட்டம் எண் 33.1 ஐ கவனியுங்கள்.

  26. \\கடவுள் நம்பிக்கை சமூகத்தில் நிலவுவதற்கு ‘தனிப்பட்ட’ விருப்பங்கள் காரணமல்ல. அதன் காரணம் சமூக இயக்கத்தில் உள்ளது. நிலவும் சமூக அமைப்பில் பொருளாதாய வாழ்கையின் ஒவ்வொரு அழைக்கழிப்பிற்கும் முகங்கொடுத்து நாளும் நாளும் நொறுங்குண்டு போனவர்கள் தற்காலிகத் தேறுதலை இல்லாத ஆண்டவனிடம் தேடி ஓடுகிறார்கள். \\ இந்த ஈர வெங்காயக் கதைகள் எல்லாம் எங்களுக்கும் தெரியும். உலகில் வசதி படைத்த எண்ணற்ற நாடுகளில் இறை நம்பிக்கை இருக்கத் தானே செய்கிறது. நீர் சொல்வதுபடிப் பார்த்தால் பணக்கார நாடுகளில் நாத்தீகம் மட்டும்தானே இருக்க வேண்டும்? அரசியவாதியும், அம்பானி மாதிரி மோசடிகளும் மொத்தப் பணத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டால் நாடு மக்கள் எங்கே உருப்படுவது? அங்கே குரல் எழுப்புவதை விட்டு விட்டு எவனோ வழிபாட்டுத் தளங்களுக்கு மன நிம்மதிக்குசென்றால் அங்கே வந்து உமது வீர வசனங்களை அவிழ்த்து விடுகிறீரே, நியாயமா இது??

  27. \\யாரொருவர் தமது சொந்த அனுபவத்தில் நேர்மறையில் உணர்ந்து வினையாற்றத் துவங்குகிறாரோ அப்போது அந்தப் போராட்டத்தின் உப விளைவாக கடவுள் இறந்து போகிறார். அந்த இடத்தில் கடவுள் அமர்ந்திருக்கும் அஸ்திவாரக் கல் ஆட்டம் காண்கிறது.\\ அடப் பாவேயன்களா….கடவுளே இல்லைன்னு சொன்னீங்க… இந்தக் கடவுள் எங்கே இருந்துடா வந்தாரு…..

    • கடவுள் எனும் கற்பனை சித்திரம் மறைந்து போகிறது என்ற பொருளில்தானே இங்கு கூறப்பட்டுள்ளது??

      • கடவுள் கற்பனை என்பதே உங்களுடைய நிரூபிக்கப்படாத வெற்றுக் கற்பனை.

  28. \\துன்பங்களின் தோற்றுவாய்கள் அடைக்கப்பட்டு விட்ட தேறுதல் தர யாரும் தேவையில்லை அல்லவா?\\ சரி மக்கா பணத்தை கொடுத்துட்டே… எல்லாம் சுபிட்சமாயிடுச்சுன்னே வச்சிக்கோ… அதுக்கப்புறம் எந்தப் பிரச்சினையுமே வராதா…??? ஒரு சுனாமி போதும், ஒரு சின்னா பூமி அதிர்ச்சி போதும், புயல் கொஞ்சம் வேகமா அடிச்சா போதும்…. உன்னுடைய மணல் கோட்டை காற்றில் பறந்து விடும்…… பிரச்சனைகளை எந்தக் காலாதிலும் ஒரேயடியாக யாராலும் தீர்த்து விட முடியாது. ஒருத்தனை ஒருத்தன் அடிச்சி சாப்பிடுவதை முதலில் நிறுத்துங்க, எல்லா பிரச்சினையும் தீர்ந்துபோய் விடும்.

    • நீங்கள் சொல்லுகின்ற பிரச்சினைகளெல்லாம் 100 வருடங்களுக்கு முந்தைய நிலை போலவா இருக்கிறது? ஏன் தாஸ் இப்படி டல்லா விவாதிக்கீறீங்க?

    • //சரி மக்கா பணத்தை கொடுத்துட்டே… எல்லாம் சுபிட்சமாயிடுச்சுன்னே வச்சிக்கோ… அதுக்கப்புறம் எந்தப் பிரச்சினையுமே வராதா…??? ஒரு சுனாமி போதும், ஒரு சின்னா பூமி அதிர்ச்சி போதும், புயல் கொஞ்சம் வேகமா அடிச்சா போதும்…. உன்னுடைய மணல் கோட்டை காற்றில் பறந்து விடும்…… பிரச்சனைகளை எந்தக் காலாதிலும் ஒரேயடியாக யாராலும் தீர்த்து விட முடியாது. ஒருத்தனை ஒருத்தன் அடிச்சி சாப்பிடுவதை முதலில் நிறுத்துங்க, எல்லா பிரச்சினையும் தீர்ந்துபோய் விடும்.//

      ஒரு சிறு விளக்கம் தந்து விடுகிறேன்

      எல்லா துன்பங்களும் பணத்தால் விளைவதாக இந்த கட்டுரை கூறவில்லை அப்படி பொருள் கொண்டு மிஸ்டர் தாஸ் கேள்விகள் கேட்கிறார் என நினைக்கிறேன்

      பணம் வந்து விட்டால் கடவுள் தேவை இல்லை என்றோ பணம் இல்லை என்பதால்தான் கடவுள் தேவை படுகிறார் என்றோ குறுக்கி பொருள் புரிந்து கொள்ள கூடாது

      பணம் என்கிற ஒரு பரிமாற்ற பொருள் கண்டுபிடிக்கப்படும் முன்பே மனிதன் கடவுளை கண்டு பிடிச்சிட்டான் ஏன்னா கடவுள் அவனுக்கு தேவை பட்டார் .

      ஆனால் அறிவியல் வளரவளர மனிதனின் சுய சிந்தனை வளரும் சுயசிந்தனையை வைத்து சிந்தித்து மக்களுக்கான பிரச்சனைகளோடு தன்னை இணைத்து கொண்டு போராடும் போது அந்த போராட்டத்தின் உடன் விளைவாக கடவுள் இல்லாமல் போகிறார்
      என்று வினவு அழகாக சொல்லி இருக்கிறதை பாருங்கள் .

      ஆக எது முதல் தேவை கடவுள் இருக்கிறார் இல்லை என்பதல்ல முதல் தேவை சமூக மாற்றத்திற்கான சிந்தனை அதற்கான போராட்டம் இவையே

      • \\கடவுள் நம்பிக்கை சமூகத்தில் நிலவுவதற்கு ‘தனிப்பட்ட’ விருப்பங்கள் காரணமல்ல. அதன் காரணம் சமூக இயக்கத்தில் உள்ளது. நிலவும் சமூக அமைப்பில் பொருளாதாய வாழ்கையின் ஒவ்வொரு அழைக்கழிப்பிற்கும் முகங்கொடுத்து நாளும் நாளும் நொறுங்குண்டு போனவர்கள் தற்காலிகத் தேறுதலை இல்லாத ஆண்டவனிடம் தேடி ஓடுகிறார்கள். \\ இதற்க்கு வேறு என்ன அர்த்தம்னு நீங்கதான் சொல்லணும்.

      • \\ஆனால் அறிவியல் வளரவளர மனிதனின் சுய சிந்தனை வளரும் சுயசிந்தனையை வைத்து சிந்தித்து மக்களுக்கான பிரச்சனைகளோடு தன்னை இணைத்து கொண்டு போராடும் போது அந்த போராட்டத்தின் உடன் விளைவாக கடவுள் இல்லாமல் போகிறார் என்று வினவு அழகாக சொல்லி இருக்கிறதை பாருங்கள் .\\ தொழிலதிபர்கள் என்ற பெயரில் பெரும் கொள்ளைக் காரர்கள் உருவானதும், விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து லட்சக் கணக்கான கோடி ரூபாய்களை வெளிநாட்டில் பதுக்கி வைப்பதும் அறிவியல் விஞ்ஞானம் வளர்ந்த பின்னர் தான் சாத்தியமாயிற்று என்பதை நீங்கள் உணர வேண்டும். அறிவியலால் விளைந்த ஒரே நன்மை, ஆறு கோடி சனத்துக்கு சொந்தமான சொத்தை ஒரு குடும்பமே கொள்ளையடித்து வைத்துக் கொள்ள வழி வகுத்துக் கொடுத்தது மட்டுமே. ஐம்பது வருடத்திற்கு முன்னர் கூட இது சாத்தியமாயிருக்கவில்லை. அறிவியல் தொழிநுட்பம் வளர்ந்து நாட்டில் நடந்த ஒரே சாதனை விவசாயத்திற்கு இருந்த நிலத்தையெல்லாம் சாப்ட்வேர் தொழிலில் பணம் சேர்த்தவனிடம் ரியல் எஸ்டேட் ஆக்கி விற்றதுதான். அறிவியல் கொண்டு வந்த தொலைக் காட்சி இணையம் இவற்றால் மக்கள் உருப்படியானதை விட சீரழிந்ததே அதிகம். காடுகளை அழித்து, வன விலங்குகளை ஒழித்து, வெறும் கொசுக்களும், கரப்பான் பூச்சிகளும், பெருச்சாளிகளும் சூழ கம கம் வென மணக்கும் சாக்கடையின் வாசனையை நுகர்ந்து கொண்டே தூங்குடா என்று மனிதனை சொல்ல வைத்தது இந்த அறிவியல் வளர்ச்சி. இந்த வளர்ச்சியால் மக்கள் சுபிட்சம் அடைந்து விடுவார்கள் என்று நீங்கள் நினைப்பது வெறும் பகல் கனவு.

      • \\ஆக எது முதல் தேவை கடவுள் இருக்கிறார் இல்லை என்பதல்ல முதல் தேவை சமூக மாற்றத்திற்கான சிந்தனை அதற்கான போராட்டம் இவையே.\\ சமூக மாற்றம் தேவை என்பது உங்கள் கருத்து என்றால் நீங்கள் அது குறித்துதான் எழுத வேண்டுமே தவிர, கடவுள் நம்பிக்கை வைத்திருப்பவனால்தான் நாடே குட்டிச் சுவராகிப் போனது, கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் இல்லாவிட்டால் நாட்டில் பாலாரும், தேனாறும் ஓடியிருந்திருக்கும் என்று இல்லாத கப்சா விடக் கூடாது. மேற்க்கத்திய நாடுகள் பலவற்றில் மக்களாட்சி தான் நடக்கிறது, அங்கு கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் போது, இந்தியாவில் தரித்திரம் தாண்டவமாடுவதற்கு, ஓட்டுப் போடுபவர்கள் ஏமாளிகள், என்பதைத் தவிர்த்து வேறு எந்த காரணமும் இருக்க முடியாது. வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கள்ளப் பணத்தை கொண்டு வந்தாலே போதும் நாட்டின் மொத்தக் கடனையும் அடைத்து ஒவ்வொரு குடி மகனுக்கும் மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க முடியும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதையெல்லாம் விட்டு விட்டு, எதோ மன நிம்மதிக்கு கோவிலுக்குச் செல்பவனிடமும், அஞ்சுக்கும் பத்துக்கும் கோவில் பூசாரியாக இருப்பவனிடமும் வந்து உங்கள் வீரத்தை காட்டுவது கால விரயம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

  29. //அது சரி, மதங்கள் எல்லாமே தப்புன்னே வச்சுகிடுவோம், நீங்க கண்டு பிடிச்ச நாத்தீகம் மட்டும் என்ன தாயின் கருவறையிலேயே கத்துகிட்டு வெளியில வந்து போதிச்சிட்டு இருக்கீங்களா? மதவாதிகள் கடவுள் இருக்கார்னு நிரூபிக்கவில்லை என்றால், கடவுள் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீரோ? நீரும் ஒரு சாமானிய மனிதர்தானே உமது கொள்கைகள் மட்டும் பிழையே இல்லாமல் இருக்கும் என்று என்ன உத்திரவாதம்?//

    மன்னிக்கவும் உங்களது விவாதத்தில் இடை புகுந்ததற்கு

    கடவுள் இருக்கிறார் என்பதைத்தான் கண்டு பிடிக்க வேண்டும் இல்லை என்பதை கண்டுபிடிக்க தேவை இல்லை

    மீ எஸ்கேப்பு

    • ஈழப் படுகொலைகளுக்கு பிறகும் கடவுள் இந்த உஅலகை படைத்தார், உலகை வழிநடத்துகிறார் , அவரே உலகின் இயக்கத்துக்கு காரணம் இப்படி எவெனாச்சும் சொன்னா அவன அங்கிட்டே கொன்ன்னு போடுவேன் ! முட்டாப்பசங்களா ! அந்த கடவுள் என் முன்னாடி வந்தான்னாக்க பிஞ்ச செருப்பாலேயே அடிப்பேன் ! ஏன்டா இப்படி பட்ட உலகத்க்ட படச்சன்னு!

      • கரண்டு ஷாக் அடிச்சி நூறு பேரு செத்துட்டங்கன்னு வச்சிகிடுவோம், அதுக்காக கரண்டை எவனுமே கண்டுபிடிக்க வில்லை என்று சொல்வீர்களா?

    • கடவுள் இருக்கிறார் என்று ஒருத்தர் சொன்னால் நீ எப்படி சொன்னாய் என்று அறிவுப் பூர்வமாக நீங்கள் கேள்வி கேட்கும் போது, இல்லை என்று நீங்கள் சொன்னால் மற்றவர்கள் பூம்…பூம்… மாடுகள் மாதிரி தலையாட்ட வேண்டுமென்று சொல்கிறீர்களா?

      • ஒரு கொலை நடந்திருக்கிறது என்று சொன்னால் தான் நாம் அதற்கு ஆதாரமாக உடலை காட்ட முடியும். ஒரு கொலை நடக்கவில்லை என்று சொல்லும் போது அதற்கு ஆதாரம் எதுவும் காட்ட தேவை இல்ல. அது போல் கடவுள் இருக்கிறார் என்று ஒருத்தர் சொன்னால் அதை நிருபிக்க வேண்டும் அல்லவா?

        • \\கேமராவைப் படைக்க டிசைனர் வேண்டுமென்றால் நம் கண்கள் தானாக உருவாகியிருக்குமா? டயாலிசிஸ் செய்ய ஒரு பெரிய அறை சைசுக்கு எந்திரங்களும் அறை டசன் டாக்டர்களும் மூணு டசன் நர்சுகளும் வேண்டுமென்றால் அதே வேலையை கைபிடிக்குள் அடங்கும் கிட்னி செய்கிறதே, அது தானாக உருவாகியிருக்குமா? உங்கள் வீட்டில் தண்ணீரை மொட்டை மாடித் தொட்டிக்கு அனுப்பும் மோட்டாரை உருவாகியது ஒரு தொழிற்ச்சாலை என்றால் இதயம் என்ற நூறு வருஷத்துக்கும் மேலாக பழுதாகாமல் வேலை செய்யும் பம்பு சும்மா உருவாகியிருக்குமா? \\ Repeated from my answer above.

          • ஒரு செல் கொண்ட அமிபாவிலிருந்து பல்லாயிரம் செல் கொண்ட மனிதன் உருவாகும் வரை நிகழ்ந்த மாற்றங்கள் கணக்கற்றவை. கண்கள் கிட்னி அனைத்தும் இயற்கையின் நிலை மாற்றங்களால் உருவானவை. அதை ஏன் கடவுளோடு சேர்த்து குழப்புகிறீகள்.

          • ஒரு செல் கொண்ட அமிபாவிலிருந்து பல்லாயிரம் செல் கொண்ட மனிதன் உருவாகும் வரை நிகழ்ந்த மாற்றங்கள் கணக்கற்றவை. கண்கள் கிட்னி அனைத்தும் இயற்கையின் நிலை மாற்றங்களால் உருவானவை. அதை ஏன் கடவுளோடு சேர்த்து குழப்புகிறீகள்….

  30. //ஒரு நம்பிக்கை என்பது எதார்த்த அனுபவத்தில் சோதித்தறியப்பட்டு அதன் மூலம் பட்டை தீட்டப்பட்டு நமக்குள் உண்டாகும் பட்சத்தில் அதன் மேலான பற்றுறுதி கேள்விக்கிடமற்று இருக்கும். ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது சோதித்தலுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது// கட்டுரை கடவுள் நம்பிக்கை அற்றவர் ஒருவரால் எழுதப்பட்டு இருக்கிறது. எனவே கடவுள் பற்றி அநேகர் கொண்டிருக்கும் நம்பிக்கையை அது ஆராயவில்லை. கடவுளை நம்புகிறவர் ஒவ்வொருவருக்கும் கடவுள் பற்றிய அனுபவம் ஒன்றாவது இருக்கும். ஒருவருக்கு அவரது மகளை பிணியிலிருந்து காப்பாற்றிய மருத்துவர் கடவுளாகத் தெரிகிறார். கடவுள் தான் அந்த மருத்துவரை அனுப்பியதாக நினைக்கிறார். கடவுளை வணங்கி வந்த மாணவன் எதிர்பார்ப்புக்கு அதிகமாய் மதிப்பெண் வந்ததும் கடவுளை நம்புகிறான். நெடுநாள் திருமணம் ஆகாத பெண்ணும் ஆணும் குறிப்பிட்ட கடவுளை வணங்கி அதன் பிறகு திருமணம் ஆனால் கடவுள் இருப்பதை நம்புகிறார்கள். இங்கே சோதித்தல் மட்டுமே உண்டு. கேள்வி கேட்டல் என்பது கிடையாது. அவர்களால் அது முடியாது. அவர்களுக்கு அது தேவையும் கிடையாது. சாமி கும்பிடவில்லை. நல்லது நடக்கவில்லை. சாமி கும்பிட்டோம். பலன் கிடைத்தது. அவ்வளவுதான். இங்கே இன்னும் ஒரு விபரத்தை சொல்லிவிடவேண்டும். கடவுளை மறுக்கும் அதே வேளையில் நீங்களும் சில பரிசோதனைகளை செய்து பார்த்து விடவும். சிலர் “நேத்து தான் உன்னை நினைச்சேன். இன்னைக்கு வந்து நிக்கிறே” என்று ஆச்சரியப்படுவார்கள். சிலருக்கு மனதில் நினைத்தது அப்படியே நேரில் நடக்கும். ஸெல்ப் ஹிப்நோசிஸ், டெலிபதி முதலிய சித்தாந்தங்கள் இந்த சாமி கும்பிடும் பழக்கத்தில் பின்னிப்பிணைந்து இருக்கிறது என்பது உண்மை. கூட்டுப் பிரார்த்தனை பலருக்கு பலன் கொடுத்திருக்கிறது. என்னைப்பொறுத்தவரை கடவுள் வழிபாட்டின் போது கோரிக்கைகள் மற்றும் விண்ணப்பங்களை அவை நிறைவேறிய நிலையில் சிறிது நேரமாவது மனதில் உருப்போடுவது மற்றும் நம்பிக்கை முதலியவை அவை உண்மையில் கடவுளின் உதவி இல்லாமலேயே நிறைவேற உதவுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. எனவே கடவுளை மறுக்கும் முன்பு சற்றே இந்த குழப்பங்களையும் அனுபவித்துவிடவும். மற்றபடி அருமையான கட்டுரை.

    • விஜயகுமார்,
      பின்னூட்டம் எண் 8ல் நான் குறிப்பிட்டபடி கடவுளை ஏற்றல், மறுத்தல் எனும் இரு முனைகளுக்கிடையில் பற்பல புள்ளிகளில் வாழும் மக்களுண்டு. விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. மாரியம்மனை ஆழ்ந்து நேசித்து கும்பிடுபவர்கள் உண்டு; கேட்டது கிடைக்கவேண்டும் என்ற மனு கொடுக்கும் நோக்கில் கும்பிடுபவர்கள் உண்டு; எல்லோரும் போகிறார்கள்.. நாமும் போவோம் என்று கும்பிடுபவர்கள் உண்டு; வருஷம் முழுதும் கஷ்டப்படறோம்.. ஜாலியா பொழுதுபோக்கறதுக்கு திருவிழா வந்துடுச்சு எனும் எண்ணத்தில் கும்பிடுபவர்கள் உண்டு. நான் சொன்னது வெறும் சில புள்ளிகள்தான். இன்னும் நிறைய கோணங்கள் உண்டு.

      நானும் கூட இன்று அக்னிசட்டியெடுத்து வருவதைப் பார்க்க குடும்பத்துடன் செல்கிறேன். சுமார் நாற்பதாயிரம் அக்னி சட்டிகள் செலுத்தப்படக்கூடும் ஒருநாளில். எங்கள் குடும்பத்தாருக்கு கடவுள் உணர்வு இல்லையெனினும் என் மனைவி விரும்புவார். அவருக்கு கடவுள் பக்தி உண்டு. ஆனால் அதனைக் காட்டிலும் நான் அவர் கூடச் சென்று திருவிழாவில் சுற்றுவதை விரும்புவார். அவரது சொந்தக்காரர்கள், தோழிகள் உலா வருவார். நானும் கூடச் சென்றால் அவருக்கு அது ஒரு பெருமை. நாம் ஒன்றும் சொல்ல முடிவதில்லை!!

      ஆனாலும்…. ஒரு திருவிழா என்றவுடன் பல பத்தாயிரக்கணக்கில் ஒன்று திரளும் ஜனங்கள், சில பத்தாயிரக்கணக்கில் அக்னி சட்டி செலுத்தும் ஜனங்கள் – பாதாளச்சாக்கடைத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்து மக்கள் பணம் கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டும், நிர்வாகக் கோளாறுகளினால் விருதுநகரே புழுதி புரளும் கண்றாவி நகராக மாறியும் – இந்தப் பிரச்சினைக்கு நூற்றுக்கணக்கில் கூட ஓரிடத்தில் திரளுவதில்லையே… ஏன்???

      கொண்டாட்ட மனநிலை (Celebration mood) என்பது ஒரு கோயில் திருவிழாவுடன் முடிந்து விடுவது சரியா? சமூக அவலங்களை வென்றெடுத்து அதைக் கொண்டாடுவதன் மூலம் கிடைக்கும் திருப்தியை அடைய யாருக்கும் விருப்பமில்லையா??

      • \\ஆனாலும்…. ஒரு திருவிழா என்றவுடன் பல பத்தாயிரக்கணக்கில் ஒன்று திரளும் ஜனங்கள், சில பத்தாயிரக்கணக்கில் அக்னி சட்டி செலுத்தும் ஜனங்கள் – பாதாளச்சாக்கடைத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்து மக்கள் பணம் கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டும், நிர்வாகக் கோளாறுகளினால் விருதுநகரே புழுதி புரளும் கண்றாவி நகராக மாறியும் – இந்தப் பிரச்சினைக்கு நூற்றுக்கணக்கில் கூட ஓரிடத்தில் திரளுவதில்லையே… ஏன்???\\ கடவுள் இருக்கிறார் என்று நம்புவதற்கும், ஊழலை எதிர்க்க திராணி இல்லாதவர்களாக மக்கள் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் புரியவில்லை. அமெரிக்காவில் ஊழல் குறைவு, மக்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தரப் படுகிறது, சாதாரண கடை நிலை ஊழியர் கூட அந்த நாட்டின் அதிபரையே எதிர்த்து வழக்குத் தொடர முடியும் என்கிற அளவுக்கு தனி மனித உரிமை இருக்கிறது. ஆனாலும், அங்கு மக்களிடம் இறை நம்பிக்கை இருக்கிறதே, அவர்களும் சர்ச்சுகளுக்குச் செல்கிறார்களே? மாறாக கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தின் நாத்திக ஆட்சி நடந்தும், தரித்திரம் தானே தாண்டவமாடுகிறது? ஓட்டுக்குப் பிரியாணி என்ற உடன் முண்டியடித்துக் கொண்டு ஓடிப் போய் வாங்கித் தின்னும் கேவலமான நிலைதானே இங்கு உள்ளது, ஏன்? அப்படியே நாத்தீகர்கள் என்று பார்த்தால், ஆட்சியில் இருப்பவர்களுக்குச் சிங்கி அடிக்கும் ஆளாகவும், தனக்குப் பின்னர் தன்னுடைய மகன் இயக்கத் தலைவராக வேண்டும், இயக்கச் சொத்துகளை மகனே அனுபவிக்க வேண்டி உழைக்கும் ‘தன்னலமற்ற’ தலைவனாக அல்லவா இருக்கிறார்?

  31. கேமரா பழுதானால் அதை சரி செய்ய அந்த கேமராவைப் படைத்தவனால் முடியும்,கண்கள் பழுதடைந்தால் அதை சரி செய்ய அதைப் படைத்தவன் என்று நம்பிக்கொண்டிருக்கும் கடவுள்(?)என்பவனால் முடியுமா?

  32. கண்கள் பழுதடைந்தால் எதற்கு ரிப்பேர் செய்ய வேண்டும்? அதைப் பிடுங்கிப் போட்டுவிட்டு புதிதாக உங்கள் சோதனைச் சாலையில் ஒரு கண்ணை உருவாக்கலாமே? முடியுமா உங்களால்? அப்படியே செய்வதானாலும் அதற்குத் தேவையான கச்சாப் பொருட்களை [Raw materials] உருவாக்கியது நீங்கள் இல்லையே? அறை குறையாக படித்துவிட்டு, மகனை இயக்கத்தின் அடுத்த தலைவனாக [வேறெதற்கு, எல்லாம் சொத்துக்காகத்தான்] கொண்டு வரும் நாத்தீகத் தலைவனின் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு பூம் பூம் மாடு மாதிரி பதில் கேள்வி கேட்கத் தெரியாமல் தலையை ஆட்டிக் கொண்டு இருந்துவிட்டு வந்தால் இந்த மாதிரி தான் யோசிக்கத் தோன்றும்.

    • “மின்கட்டண உயர்வு அதிர்ச்சியூட்டும் உண்மைகள்” எனும் தலைப்பிலான கட்டுரை ஒன்றைப் படித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். இயற்கையன்னை வாரி வழங்கியிருக்கும் கச்சாப் பொருளான நிலக்கரி எப்படி தனியார் முதலாளிகளால் வரைமுறையின்றி கொள்ளையடிக்கப்படுகிறது என்பதைப் படித்திருப்பீர்கள்.

      பல கோடி ஜனங்களை துயரத்திலாழ்த்தும் இதைக் காக்க, முறைப்படுத்த வக்கின்றி இருக்கும் இன்றைய சமுதாய அமைப்பை மாற்றியமைக்க வேண்டியது முதன்மையான பணியா? அல்லது இவை தரும் அழுத்தங்களை விதியென்று நினைத்து ஏற்றுக்கொண்டு மன உளைச்சலைப் போக்க இறைவனை நாடுவது முதன்மையான பணியா?

      • ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமேயில்லை. ஆனால், இறை நம்பிக்கை என்ற ஒரு தனி நபர் சுதந்திரத்தில் தலையிட்டு அதனால் தான் சமூக அவலங்கள் நடக்கின்றன என்பததிதான் ஒப்புக் கொள்வதற்கில்லை. நாத்தீகத்தால் தான் நாட்டில் மழை பெய்வதில்லை என்று ஒரு பூசாரி சொன்னால் நாத்தீகர்கள் சும்மா விடுவார்களா? நீங்கள் மட்டும் இல்லாத பழியை ஆத்தீகன் மேல் போடலாமா? தனியார் முத்தாலி நிலக்கரியை திருடிக்கிட்டு போனால் அதற்க்கு கோவிலுக்குப் போகும் ஒரு ஏழை பட்டவன் மேலா குற்றம் சுமத்துவீர்கள்? என்ன நியாயம் ஐயா உங்களுடையது?

  33. //கேமரா பழுதானால் அதை சரி செய்ய அந்த கேமராவைப் படைத்தவனால் முடியும்,கண்கள் பழுதடைந்தால் அதை சரி செய்ய அதைப் படைத்தவன் என்று நம்பிக்கொண்டிருக்கும் கடவுள்(?)என்பவனால் முடியுமா?//

    நச் கேள்வி

  34. கடவுள் பற்றிய கருத்துக்கு ஒரு இயக்க நடத்தி வரும் தலைவரை வம்புக்கு இழுத்து,அவன் என்ற ஏக வசனத்தை உபயோகிக்கும் உங்கள் பதிவிலிருந்தே,நீங்கள் யாரிடம் படிப்பினை பெற்றீர்கள் என்றும் யார் அறை குறை அறிவு பெற்றார்கள் என்றும் அறிந்து கொண்டோம். ஆன்மீகத் தலைவர் எவரும் கண்பார்னை குன்றினால் அதை ரிப்பேர் செய்யாமல்,கண்ணாடி எதுவும் போடாமல் அவர் கண்களைப் பிடிங்கிவிட்டு கச்சாப் பொருள் எதுவும் கலப்படம் இல்லாத ஒரிஜினல் கண்களைத் தரும்படி,உங்கள் கடவுளிடம் கையேந்தி,பிரார்த்தித்து,யாகம் வளர்த்து,தோப்புக் கரணம்,குட்டிக்கரணம் அடித்து,வேண்டி கடவுளிடம் மணு போடாமல் கண் டாக்டரிடம் ஏன் ஓட வேண்டும்?ரிப்பேர் செய்யக்கூட தகுதியற்ற கடவுளிடம் கண்களைப் பிடிங்கிவிட்டு கண் தானம் கேட்டுப் பாருங்களேன்?அப்பொழுது யார் மாடு என்பது விளங்கும்.

    • ஒவ்வொரு உயிருக்கென்றும் என்ன உணவு என்று இறைவன் வரையறுத்திருக்கிறான். மனிதனைத் தவிர்த்து மற்ற எல்லா ஜீவ ராசிகளும் இந்த நியதியைப் பின்பற்றுகின்றன. வரையறுக்கப் பட்ட உணவை பசி இருந்தால் மட்டுமே உண்கின்றன, அதற்க்கு மேல் அவை எவ்வளவு இருந்தாலும் தீண்டுவதில்லை. புலி புல்லையும், ஆடு மாடு சிக்கனையும் உண்பதில்லை. ஆகையால் அவை யாவையும் சாகும் வரையில் மூக்குக் கண்ணாடி அணிவதில்லை. வருடத்திற்கு அறை டசன் குட்டிகளைப் போடும் நாயும் பூனையும் ஒருபோதும் சிசேரியன் செய்துகொள்வதில்லை. ஆறறிவு இருப்பதாக சொல்லும் மனிதன் மலத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் உண்கிறான், அளவுக்கு மீறி நிறைமாதக் கர்ப்பிணி போல வயிறு ஆகும் வரை உண்கிறான், பிறர் உழைப்பை பிடுங்கி உண்கிறான், நாய்க்கும், நரிக்கும் படைக்கப் பட்டதையும் இவனே பிடுங்கி உண்கிறான். அதனால் இவனுக்கு வைத்தியர் தேவைப் படுகிறார். வைத்தியர் கொடுக்கும் மருந்தால் தான் நோய் குணமாகிறது என்றால் அங்கு செல்லும் எல்லோருக்கும் நோய் சரியாக வேண்டும். ஆனால், எவ்வளவு பணம் கொடுக்கத் தயாராயிருந்தாலும் அம்பானி உயிரைக் காப்பாற்ற முடிந்ததா? மருத்துவமனைக்கு உயிரோடு வந்து பிணமாகச் செல்வோர் எத்தனையோ? எங்களால் காப்பாற்ற முடியாது உறவினர்களுக்குச் சொல்லி விடுங்கள் என்று மருத்துவர்களால் கைவிடப் பட்ட பலர் உயிர் பிழைத்து பல ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்த கதையும் உண்டு. மருத்துவர்கள் நோயைத் தீர்க்கிறார்கள் என்றால் நாளுக்கு நாள் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதேன்? முன்பு இருந்ததை விட நாளுக்கு நாள் மக்களின் ஆரோக்கியம் குறைந்துகொண்டே செல்வதேன்? இன்று எங்கு பார்த்தாலும் கேன்சர், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் என்று முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு இருக்கிறதே ஏன்? பார்மசி வைத்திருப்பவர்களும் ஆங்கில மருத்துவர்களும் கொழுத்த காசு பார்க்கிறார்களே எப்படி?

      • ஒருவர் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். அவருடைய இதயம் 20 சதவீதமே வேலை செய்கிறது ஆகையால், தம்பி உன்னுடைய இதயம் பலகீனமாக இருப்பதால் கடினமான வேலை செய்யாதீர்கள் என மருத்துவர் அறிவுறுத்துகிறார். ஆனால் நமது ஆத்திகரோ என்னுடைய உயிர் வாழ்வதும் இறப்பதும் என் இறைவனின் விருப்பத்தில் உள்ளது அவன் நாடினால் இப்பொழுதுகூட என் உயிர் பிரியலாம் எனக் கூறிவிட்டு கடின பாறை ஒன்றை உருட்டுகிறார் மண்டையையும் போட்டு விடுகிறார். இது கதையல்ல நிஜமாக நடந்த நிகழ்வுதான். இப்பொழுது சொல்லுங்கள், அந்த ஆத்திகர் செய்தது சரியா என்று?

        • முட்டாள்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள், நீங்கள் சொன்ன ஆத்தீகர் அந்த மாதிரி முட்டாளாக இருக்க வேண்டும். புத்தியுள்ள ஆத்தீகன், இறைவன் எனக்கு உடல் நலத்தை இந்த மருத்துவர் மூலம் கொடுக்க நினைக்கிறார் என்று அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வான். மருந்தை மருத்துவர் கொடுக்கிறார், உடல் நலமடைவதை ஆண்டவன் தீர்மானிக்கிறான் என்பதை புத்திசாலி ஆத்தீகன் உணர்ந்திருப்பான்.

            • உலகிலேயே ஒரே புத்திசாலி ஆத்திகர் அன்பர் ஜெயதேவ்தாஸ்தான் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது 🙂

              • இறைவன் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட ஒவ்வொருத்தரும் புத்திசாலிதான் அன்பரே. அவர் சாதாரண பள்ளிக்குக் கூட செல்லாத கிராமத்து வாசியாகக் கூட இருக்கலாம், அல்லது உலக அறிவியலின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும் ஐன்ஸ்டீன் போன்ற மேதையாகக் கூட இருக்கலாம். மாறாக உலகில் இந்த பிரமாண்டமான காலக்ஷிகள் [Galaxies] , சூரிய குடும்பம், பூமி, கடல், நிலம் , வானம் , இதில் உள்ள உயிரினங்கள், அவற்றின் உடல்கள் செயல் படும் விதம், அவை ஒன்றை ஒன்று சார்ந்துள்ள பாங்கு என கண் முன்னே உள்ள அற்ப்புதங்கள் அத்தனையும் பார்த்தும் கூட படைத்தவன் இல்லை என்று சொல்லும் அத்தனை பயல்களும் கூமுட்டைகள் தான்.

                • கடவுளை கூமுட்டையாம் ! கிண்டல் செய்யும் ஒரு பக்தன்!

                  //இந்த பிரமாண்டமான காலக்ஷிகள் [Galaxies] , சூரிய குடும்பம், பூமி, கடல், நிலம் , வானம் , இதில் உள்ள உயிரினங்கள், அவற்றின் உடல்கள் செயல் படும் விதம், அவை ஒன்றை ஒன்று சார்ந்துள்ள பாங்கு என கண் முன்னே உள்ள அற்ப்புதங்கள் அத்தனையும் பார்த்தும் கூட படைத்தவன் இல்லை என்று சொல்லும் அத்தனை பயல்களும் கூமுட்டைகள் தான்.//

                  இந்த உலகில் உள்ள அத்தனை சமாச்சாரங்களையும் படைத்தவன் கடவுளென்றால் கடவுள் இல்லைங்குற நாத்திகனையும் படைத்தவன் கடவுளுன்னா,கடவுள் தன்னைத்தானே கடவுள் இல்லைன்னு சொல்றதா தாசு கருத்துப்படி ஆகிறது.
                  அதுபடி பாத்தா கடவுள் கூமுட்டைன்னு அவரே சொல்லிக்கிறாரு.
                  இதுதான் சொந்த செலவில் சூனியம்கிறது! தாசு இப்புடி பக்தனா இருந்து சேம் சைடு கொல் போடுறிகளே, பாவம் சார் நீங்கள!

                  • \\இந்த உலகில் உள்ள அத்தனை சமாச்சாரங்களையும் படைத்தவன் கடவுளென்றால் கடவுள் இல்லைங்குற நாத்திகனையும் படைத்தவன் கடவுளுன்னா,கடவுள் தன்னைத்தானே கடவுள் இல்லைன்னு சொல்றதா தாசு கருத்துப்படி ஆகிறது.அதுபடி பாத்தா கடவுள் கூமுட்டைன்னு அவரே சொல்லிக்கிறாரு.\\ நாத்தீகன் வாயில இருந்து வருவதெல்லாம் உண்மைன்னு வீரமணி மாதிரி ஆட்கள் பேசுவதைப் பார்த்ததர்க்கப்புரமும் நீங்க நம்புவது வேடிக்கையாக இருக்கிறது. நாத்தீகனையும் கடவுள் தான் படைத்தார், ஆனால் அவனுக்கு கடவுள் இல்லையென்று நினைக்கும் ஆசை இருப்பதை உணர்ந்த அவர் அவனை கூமுட்டையாக்கி அவ்வாறு நினைக்கும் சவுகரியத்தைச் செய்து கொடுத்திருக்கிறார் அவ்வளவே. [இந்த மாதிரி ஏடாகூடமாக சிந்தனை செய்து, ரியல் என்கவுண்டர் டரியல் என்கவுண்டராகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா.]

                    • ///அவனுக்கு கடவுள் இல்லையென்று நினைக்கும் ஆசை இருப்பதை உணர்ந்த அவர் அவனை கூமுட்டையாக்கி அவ்வாறு நினைக்கும் சவுகரியத்தைச் செய்து கொடுத்திருக்கிறார்///

                      கடவுள் இல்லையென்ற ஆசை அவனை கூமுட்டையாக்கியப் பிறகு வந்ததா? அல்லது அதற்கு முன்பே வந்ததா?

                • மிகவும் நன்ரு திரு. ஜெயதேவ்தாஸ்…

                  மனிதன் மூளையை கொன்டே சிந்திக்கிறான். அதெ மூளை இருக்கிற மற்ற எந்த விலங்கும் மனிதனுக்கு போட்டியாக சிந்திப்பதில்லையே.. அது ஏன் என்பதை நாத்திகவாதிகள் விளக்க வேன்டும்…

                  செல் என்பது உயிர்களின் அடிப்படை அலகு. அனு என்பது பொருட்களின் அடிப்படை அலகு. பல லடசம் அனுக்கள் செர்ந்து தான் ஒரு செல்.. இறைவனுடைய அனுமதி இல்லாமல் எப்படி இந்த அனுக்கள் ஒன்று செர்ந்து ஒரு செல்லாக உருவாகி இருக்க முடியும்.. நாத்திகவாதிகள் அனைவரும் ஒன்று செர்ந்து பல அனுக்களை ஒன்று செர்த்து ஒரு செல்லை உருவாக்கி காட்டுங்கள்..

                  கடவுள் நெரில் வந்தால் தான் கடவுள் இருப்பதை நம்புவீர்களா?

                  அவர் கொடுத்த மூளையை கொன்டு சிந்திக்க உணர வேண்டாமா?

                  எந்த ஒரு ஆற்றலும் இல்லாமல் உயிர்கள் எப்படி உறுவாகி இருக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டாமா?

                  • தம்பி,

                    மண்டையில மூளை இருக்குறதாலதான் கடவுள் இல்லைன்னு உணர வேண்டியிருக்கு.

                    அதென்னப்பா எல்லா ஆத்திக புள்ளிங்களுக்கெல்லாம் கண்ணுக்கு தெரியிற உசுர பாத்தா மட்டும் மலப்பா இருக்கு! எப்படி வந்தது? எங்கேருந்து வந்ததுன்னு கேள்விமேல கேள்வியா கேக்குறீங்க. ஆனா பாருங்க கண்ணுக்கு தெரியாததைப் பற்றி மட்டும் கேள்வியே கேக்காம ரீல் மேல ரீலா விடுறீங்க.
                    கண்ணுக்கு தெரியாத பூதத்தின் மீது மட்டும் கேள்வியே எழுப்பாமல் அதை ஏற்றுக்கொள்வதன் அந்த ரகசியம்தான் என்ன?

                    • Mazhai,Vellam,Nilanadukkam,Sooravali,Panjam ellam engirunthu varudhu.

                      Manushan logica vechu enna vena seyyalamna,appuram edha paathu bayapadanum,edhukkume bayam illama vaazha discipline irukka?

                      appadi ellarukkum iruntha, kadavul thevayilla.

                    • ரொம்ப சரி பயம். பயம். பயம்தான் கடவுளை படைத்தது. ஆன்ஆல் இந்த டிசிப்ளின் கடவுளின் மீதாந பயத்தின்ஆல் வருவதல்ல சமூகத்தில் இருந்து பெறப்படுகிறது.

            • ஒரு ஊரில் ஒரு பாதிரியார் இருந்தார். அவர் எப்போதும் “என் தேவைகள் அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொள்வான், நான் ஒன்றும் செய்யத் தேவையில்லை” என்று சொல்லிக் கொண்டிருப்பார். ஒரு நாள் அந்த ஊரில் கனத்த மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரே தண்ணீரில் மூழ்கிவிடும் போல இருந்தது. இதை உணர்ந்த மக்கள் உயரமான பாதுகாப்பான இடத்திற்க்குச் சென்று விடலாம் என்று புறப்பட்டனர், அந்தப் பாதிரியாரையும் அழைத்தனர். அவர் “இறைவன் என்னைக் காப்பான்” என்று வர மறுத்தார். பின்னர் வெள்ளம் அதிகரித்து வீடு கூரை வரை சென்றது. அப்போது படகில் சிலர் வந்து மிச்சம் மீதி இருப்பவர்களை அழைத்துச் செல்ல வந்தனர். அப்போதும் பாதிரியார் வரமாட்டேன், “இறைவன் என்னைக் காப்பான்” என்று மறுத்து விட்டார். அப்புறம், வீட்டின் கூரை வரை வெள்ளம் ஓடியது, அந்தப் பாதிரியார் கூரை மீது உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது ஹெலிகாப்டரில் மீட்புப் பணியினர் தத்தளிப்பவர்களைக் காப்பாற்ற வந்தது. இந்தப் பாதிரியாரைப் பார்த்தது, வாருங்கள் உங்களை பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்றனர். ஆனால் அவரோ, “இறைவன் என்னைக் காப்பான்” உங்கள் உதவி தேவையில்லை என்றார். அப்புறம் மேலும் வெள்ளம் அதிகரிக்க, அவர் தண்ணீரில் மூழ்கிச் செத்தார். பின்னர் சுவர்க்கம் சென்றார், அங்கே கடவுளைச் சந்தித்தார், என்ன கடவுளே, உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை வீணடித்து விட்டீர்களே, கடைசி வரை வரவேயில்லையே என்று வருத்தப் பட்டார். அதற்க்கு கடவுள் சொன்னார், “இல்லையே, நான் பலமுறை unnai meetka vanthen, neethaan yetruk kolla villai”. “You came to save me? when?” God Said, “I advised through the village people, then I sent the boat team and finally the Helicopter team, in these ways I tried to save you, but you never co-operated, what to do?”

      • நண்பரே,
        எதையோ கேட்டால் என்னென்னவோ பதில் சொல்லுகிறீர்கள்!!!

    • \\ஒரு இயக்க நடத்தி வரும் தலைவரை வம்புக்கு இழுத்து,அவன் என்ற ஏக வசனத்தை உபயோகிக்கும் உங்கள் பதிவிலிருந்தே,நீங்கள் யாரிடம் படிப்பினை பெற்றீர்கள் என்றும் யார் அறை குறை அறிவு பெற்றார்கள் என்றும் அறிந்து கொண்டோம்.\\ உங்களுடைய தமிழ் ஞானம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. தலைவன், மகன் என்ற பதங்களை மட்டுமே நான் பயன் படுத்தியிருக்கிறேன், இவற்றில் வரும் ‘ன்’ ஏக வசனமா? ஐயா, வயதில் பெரியவர் பியூனாக இருந்தால் பியூர் என்றும், உங்களுடன் படித்த நண்பர் மேனேஜராக இருந்தால் மேனேஜன் என்றும் அழைப்பீரா? என்ன பேத்தல் ஐயா இது? முதலில், ஏக, வசனம் என்ற இரண்டு வார்த்தைகளுமே தமிழில்லை என்பது உமக்குத் தெரியுமா?

  35. இறைவன் வரையறுக்கும் மனிதர்களுக்கான உணவு என்னவென்று கூறினால் எல்லோருக்கும் உதவியாக இருக்குமல்லவா?அப்படி உண்டவர்களுக்கு இதுவரையில் கண்நோய் வந்ததில்லையா?அல்லது கண்ணாடி தான் போட்டுக்கொண்டதில்லையா?ஆன்மீகவாதியாகட்டும்,நாத்திகவாதியாகட்டும் எல்லோருமே ஆரோக்கியத்தோடும்,குறைபாடோடும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
    மருத்துவமனைக்கு போய்வந்த பின் கடவுளிடத்தில் வேண்டிக் கொண்டவர்களில் உயிர் பிழைத்தவனும் இருக்கிறான் உயிர் நீத்தவனும் இருக்கிறான். தேர்வு எழுதியவர்கள் அனைவ்ரும் கடவுளிடம் தான் வெற்றி பொறவேண்டும் என்றுதான் வேண்டிக் கொள்கிறார்கள் எல்லோரும் வெற்றி பெற்றுவிடுகிறார்களா என்ன? யாரை குறை கூறுவீர்கள்? கால்நடைக்கென்று மருத்துவர்களும் உண்டு மருத்துவமனைகளும் உண்டு.

    • திரு இனியவன் அவர்களே…

      இறைவன் கொடுத்த அறிவை கொண்டும் பூமியில் இறைவன் கொடுத்த போருட்களை கொண்டும் மனிதன் தன்னுடைய தேவைகளை முடிந்த வரையில் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.. மனிதனுக்கு சுயமாக யோசிக்க கூடிய அறிவை கொடுத்ததற்கான நோக்கமே அவன் சுயமாக சிந்தித்து இறைவனை உணர வேண்டும் என்பதற்காக தான்.. ஒவ்வொருவர் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் இறைவன் அதற்கான பலனை கன்டிப்பாக கொடுப்பான்.. உயிருடன் இருக்கும்போதோ அல்லது இறந்த பிறகோ.. உயிர் என்றால் என்ன என்பதை உங்களுக்கு தெரிந்த நாத்திகர்களிடமொ இல்லை அறிவியலாளர்களிடமோ கேளுங்கள்..

      • முகமத் ஜபீர், உங்களிடம் ஒரு சிறிய கேள்வி; மின் கம்பி வழியே செல்லும் மின்சாரத்தை அந்த மின் கம்பியிலிருந்து தனியே பிரிக்க முடியுமா? அல்லது பிரியாணியிலிருந்து வரும் வாசனையை அந்தப் பிரியாணியிலிருந்து தனியே பிரிக்க முடியுமா? மூளை என்ற பொருளிலிருந்து சிந்தனையை மட்டும் தனியே பிரிக்க முடியுமா? முடியாது, முடியாது, முடியாது. ஆக இங்கு மின்சாரம், வாசனை, சிந்தனை… … … இப்படி எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் அவற்றிற்கு ஒரு அடிப்படை இருந்தாக வேண்டும். அந்த அடிப்படை மூலம்தான் பொருள். அந்தப் பொருளை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அதற்கு ஆதியும் இல்லை அந்தமும் இலலை. இந்த அறிவியல் விதியை நீங்கள் ஏறறுக்கொண்டீர்களேயானால் கடவுளுக்கான அடிப்படையை நீங்கள் சொல்லியே ஆக வேண்டும். அப்படி சொல்ல முடியவில்லையென்றால் மேற்சொன்ன அறிவியல் விதியையே மறுக்கிறீர்கள் என்று அர்த்தம். அறிவியல் விதியையே மறுக்கிறீர்கள் என்றால் தங்களுடை தற்போதைய நிலைமை என்னவெனறு நான் சொல்லத் தேவையில்லை.

        • \\மின் கம்பி வழியே செல்லும் மின்சாரத்தை அந்த மின் கம்பியிலிருந்து தனியே பிரிக்க முடியுமா? அல்லது பிரியாணியிலிருந்து வரும் வாசனையை அந்தப் பிரியாணியிலிருந்து தனியே பிரிக்க முடியுமா? மூளை என்ற பொருளிலிருந்து சிந்தனையை மட்டும் தனியே பிரிக்க முடியுமா? முடியாது, முடியாது, முடியாது.\\ சான்சே இல்ல…….நீங்க எங்கேயோ போயிட்டீங்க……………

          • \\இப்படி எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் அவற்றிற்கு ஒரு அடிப்படை இருந்தாக வேண்டும். அந்த அடிப்படை மூலம்தான் பொருள். அந்தப் பொருளை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அதற்கு ஆதியும் இல்லை அந்தமும் இலலை.\\ எதையாவது பேச வேண்டும், பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டு பேச வேண்டும், அதுக்கு அர்த்தம் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை, அதனால் ஒருத்தருக்கும் புரியாமல் போனாலும் பரவாயில்லை, ஆனால் கேட்பவன், அடேங்கப்பா எவ்வளவு பெரிய அறிவாளிடா… இவர் என்று வாயைப் பிளக்க வேண்டும். இந்தக் கொள்கைகளை நன்றாகக் கடை பிடிக்கிறீர்கள் அன்பரே. சரி, அந்த ஆதியும், அந்தமும் இல்லாத, ஆக்கவும் அழிக்கவும் முடியாத அடிப்படை மூலம் என்னன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா? [தெரிஞ்சுக்கலாம்னுதான் கேட்கிறேன்……ஹி..ஹி..ஹி..ஹி..]

        • \\இந்த அறிவியல் விதியை நீங்கள் ஏறறுக்கொண்டீர்களேயானால் கடவுளுக்கான அடிப்படையை நீங்கள் சொல்லியே ஆக வேண்டும். அப்படி சொல்ல முடியவில்லையென்றால் மேற்சொன்ன அறிவியல் விதியையே மறுக்கிறீர்கள் என்று அர்த்தம். அறிவியல் விதியையே மறுக்கிறீர்கள் என்றால் தங்களுடை தற்போதைய நிலைமை என்னவெனறு நான் சொல்லத் தேவையில்லை.\\ “மேற்சொன்ன அறிவியல் விதி”-அது என்ன விதி? நீங்க அறிவியல் விதி எதையும் சொன்ன மாதிரி தெரியலையே…??!!

          ஒருவேளை, \\இப்படி எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் அவற்றிற்கு ஒரு அடிப்படை இருந்தாக வேண்டும். அந்த அடிப்படை மூலம்தான் பொருள். அந்தப் பொருளை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அதற்கு ஆதியும் இல்லை அந்தமும் இலலை.\\- ன்னு சொன்னீங்களே அதுவா? சரிங்க ஐயா, இப்படி ஒரு அறிவியல் விதி இருக்குன்னு நீங்க சொல்லித்தான் தெரியும், இந்த விதிக்கு பெயர் என்னன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா என்னைப் போல தெரியாதவங்க தெரிஞ்சுக்குவாங்க, சொல்ல முடியுமுங்களா?

        • பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட நாத்திகத்தை எளிமையாக, தெளிவாக விளக்கிவிட்டீர்கள்.

          நிறை (mass) உடையவற்றைப் பொருள் என்றும், நிறையில்லாதவற்றை ஆற்றல் (energy), உதாரணமாக ஒளி முதலிய மின்காந்தக் கதிர்கள், என்றும் பிரபஞ்சம் இவற்றின் கூட்டால் உருவானதென்றும் கூறமுடியும். பொருள் எப்படி தன் நிறையைப் பெருகிறது என்ற கேள்விக்கு இன்னும் அறிவியல் தெளிவான விளக்கம் தேடிக்கொண்டிருக்கிறது. பொருளுக்கு நிறை தருவதாக எண்ணப்படும் Higgs field எனப்படும் மண்டலம் இன்னும் தூலமாக நிறுவப்படவில்லை. முன்மொழியப்படும் ஹிக்ஸ் போசானின் கண்டுபிடிப்பு பல அறிவியல் உண்மைகளை வெளிக் கொணரும். அதுவரை பொருள்தான் அடிப்படை என்ற கருத்தை ஏற்பதில் விஞ்ஞானிகளுக்கும் சிக்கல்தான்.

          • \\பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட நாத்திகத்தை எளிமையாக, தெளிவாக விளக்கிவிட்டீர்கள்.\\ அறிவியலில் புதுசா எது வந்தாலும், “ஆஹா பாத்தீங்களா.. நாத்தீகம் ஜெயிச்சிடுச்சு… கடவுள் இல்லை… ” என்று எத்தனை பேருதான்யா கிளம்பியிருக்கீங்க…??? அறிவியலில் எந்தக் கண்டுபிடிப்பு வந்தாலும் அது நாத்தீகத்துக்கு நேர்ந்து விட்டதாகிவிடும்….. அருமையான கொள்கை…. ஐயோ..ஐயோ…

              • \\நாத்திகம் ஜெயிச்சுடுச்சா..?!! சொல்லவேயில்ல..\\ என்ன இப்பத்தான் தூங்கி எழுந்திருச்சியா? கனவுல கூட நாத்திகம் ஜெயிக்காதேய்யா…. நிஜத்துல எங்க ஜெயிக்கும்? நல்லா கண்ணை கழுவிட்டுப் பாரு…. அப்படின்னு நீங்க சொல்லிக்கிட்டு திரியரீங்கன்னு சொல்லியிருக்கேன்………

                • நீர் இன்னும் எழுந்திருக்காம தூக்கத்தில் பினாத்துற மாதிரியே தோணுது..

                  • நாம தூக்கத்திலேயே பினாத்துவதற்க்கே உங்க டவுசர் கிழியுது, நாத்தம் புடிச்ச நாத்தீகர்களிடம் பதில் இல்லைன்னா விழிச்சா என்ன ஆகும்னு பாரு….

                    • அது சரி, தூக்கத்தில உம்ம டவுசரை நீரே அவுத்துப் போட்டு கடிச்சு கிழித்துக் கொண்டிருக்கிறீர்ன்னு சொன்னா புரியவா போகுது..

          • \\நிறை (mass) உடையவற்றைப் பொருள் என்றும், நிறையில்லாதவற்றை ஆற்றல் (energy), உதாரணமாக ஒளி முதலிய மின்காந்தக் கதிர்கள், என்றும் பிரபஞ்சம் இவற்றின் கூட்டால் உருவானதென்றும் கூறமுடியும்.\\ இந்த மாதிரி நீங்க கண்டுபிடிச்சதுக்கு பத்து நோபல் பரிசு குடுத்தாலும் பத்தாதே!! Mass என்பதற்கும் Energy என்பதும் இருவேறு வஸ்துகள் அல்ல, இரண்டும் ஒன்றேதான் என்று ஐன்ஸ்டீன் சொல்லி நூறு வருஷம் ஆகுது, நீர் மொழி படத்தில் வரும் பாஸ்கர் போல “இந்திரா காந்தியை சுட்டுக் கொன்னுட்டங்களா….?” என்று கூட கேட்காமல், “இந்தியாவை வெள்ளைக்காரன் பிடிசுட்டானா…?” என்ற ரேஞ்சில் பேசிகிட்டு இருக்கீரே..!! என்னத்த சொல்ல…..

            • ஐன்ஸ்டீன் நிறைக்கும் ஆற்றலுக்கும் இருக்கும் தொடர்பைத்தான் நிறுவியிருக்கிறார். இரண்டும் செயல்பாடுகளில் ஒன்றேதான் என்றால் பொருள்முதல் வாதம் கூறும் பொருள்தான் கடவுள் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்..?!

              • \\ஐன்ஸ்டீன் நிறைக்கும் ஆற்றலுக்கும் இருக்கும் தொடர்பைத்தான் நிறுவியிருக்கிறார். இரண்டும் செயல்பாடுகளில் ஒன்றேதான் என்றால் பொருள்முதல் வாதம் கூறும் பொருள்தான் கடவுள் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்..?!\\ ஐன்ஸ்டீன் E=mC^2 என்ற சமன்பாட்டை நிருவினார்னு எப்படியோ தெரிஞ்சுகிட்டே, அதுக்கு அர்த்தம் என்னன்னு நல்லா இயற்பியலைப் படிச்சவன் கிட்ட கேட்காம B.A. [Economics, History, Tamil Lit], B.com., என்று படிச்ச நீ உன் குவாலிபிகேஷன் வச்சே பசப்பிடலாம்னு கிளம்பிடியேய்யா 🙁 விளங்குமா இது? இவ்வளவு வியாக்கியானம் குடுக்கிறியே, ஒளித் துகள் Photon நிறையால் ஈர்க்கப் படும்னு நிரூபிக்கப் பட்டதே அதப் படிச்சியா? ஒரு எலக்டிரான் [electron] என்ற துகளும், பாசிட்ரான் [positron] என்ற எதிரித் துகளும் முட்டிக் கொண்டால் அது மின் காந்த அலையாக [Gamma Ray] மாறும் என்பது தெரியுமா ?

                எதையுமே படிக்கிறதில்லை, படிக்கவும் முடியாது, அதற்குத் தகுதியும் இல்லை, புத்தியும் இல்லை, ஆனால் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி இங்க வந்து பிலிம் காமிக்கிரியேய்யா….? தயவு பண்ணி நீ எந்த துறையைச் சார்ந்தவர் என்று சொல்லிடுயா… இயற்பியல் பத்தி பேசணும்னா, உன்னைய மாதிரி வேற சப்ஜெக்ட் படிச்ச பயல்கள் கிட்ட பேச முடியாதுய்யா. நான் பேசினாலும் உனக்கு புரியாது. எதுக்கு விதண்டா வாதம்?

                • // ஐன்ஸ்டீன் E=mC^2 என்ற சமன்பாட்டை நிருவினார்னு எப்படியோ தெரிஞ்சுகிட்டே, அதுக்கு அர்த்தம் என்னன்னு நல்லா இயற்பியலைப் படிச்சவன் கிட்ட கேட்காம B.A. [Economics, History, Tamil Lit], B.com., என்று படிச்ச நீ உன் குவாலிபிகேஷன் வச்சே பசப்பிடலாம்னு கிளம்பிடியேய்யா விளங்குமா இது? இவ்வளவு வியாக்கியானம் குடுக்கிறியே, ஒளித் துகள் Photon நிறையால் ஈர்க்கப் படும்னு நிரூபிக்கப் பட்டதே அதப் படிச்சியா? ஒரு எலக்டிரான் [electron] என்ற துகளும், பாசிட்ரான் [positron] என்ற எதிரித் துகளும் முட்டிக் கொண்டால் அது மின் காந்த அலையாக [Gamma Ray] மாறும் என்பது தெரியுமா ? //

                  ஒளித்துகள் (photon) நிறையால் ஈர்க்கப்படும்ன்னு சொல்லும்போதே நீர் ஒரு இயற்பியல் மேதை என்பது புரிகிறது. நிறையீர்ப்பு விசை (gravity) வெளியிலும்,காலத்திலும் (space time) ஏற்படுத்தும் பாதிப்பே (distortion) ஒளித்துகள் நிறையால் ஈர்க்கப்படுவது போன்று தோன்றக் காரணம். கருந்துளை (Black hole) பற்றி இயற்பியல் படித்த +2 மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அதிகமாகப் படித்தவர்களுக்கு உம்மிடம் பேசி விளக்கும் பொறுமை இருக்குமா என்பது சந்தேகம்தான்.

                  எலக்ட்ரான் – பாசிட்ரான் ஜோடி மட்டுமல்ல எந்த particle – anti-particle ஜோடியும் ஒன்றையொன்று அழித்துக் கொண்டு ஆற்றலாக- கதிர்வீச்சாக மாறும்.. என்ன சொல்லவருகிறீர் ? பொருள் ஆற்றலாக மாறுவதற்கும், இரண்டும் ஒன்று என்று சொல்வதற்கும் வித்தியாசம் தெரிகிறதா??

                  • \\கருந்துளை (Black hole) பற்றி இயற்பியல் படித்த +2 மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\\ ஏன் கருந்துளைகள் மட்டும்தான் Space-Time ஐ distortion பண்ணுமா? நிறையுள்ள எந்த பொருளும் பண்ணும். ஒரு தூசி கூட பண்ணும். பூமியும் பண்ணும், சூரியனும் பண்ணும், கருந்துளைகளும் பண்ணும். சொல்லும் மொழி மட்டும்தான் வேறு வேறு சங்கதி எல்லாம் ஒண்ணுதான். நியூட்டன் காலத்தில் எந்த ஒரு நிறையும் இன்னொரு நிறையை ஈர்க்கும் என்றார், அதை ஐன்ஸ்டீன் நிறையானது அதைச் சுற்றியுள்ள Space-Time ஐ distortion செய்கிறது என்று சொன்னார். இங்கே அதுவல்ல மேட்டர். ஆற்றலும், நிறையும் ஒரே வஸ்துவா என்பது தான் கேள்வி. பதில் ஆம், ஒன்றே தான். நிலையாற்றல், இயக்க ஆற்றல் இரண்டுமே ஆற்றல் தான். நிலையாற்றல் இயக்க ஆற்றலாகவும், and vice versa., ஆகவும் மாற்ற முடியுமா? முடியும். ஏன்? இரண்டுமே ஆற்றல் தான். ஒரே வஸ்துதான். அதே மாதிரி, ஆற்றலை [அது எந்த ஆற்றலாக வேண்டுமானாலும் இருக்கட்டும்] நிறையாகவும், நிறையை ஆற்றலாகவும் கருத முடியுமா? முடியும். Electron-Positron pair production போது, ஆற்றல் நிறையாக மாறுகிறது, Electron-Positron annihilation போது ஆற்றல் நிறையாக மாறுகிறது. எடையை ஆற்றலாகவும், ஆற்றலை எடையாகவும் மாற்ற முடியும் என்றாலே அவை அடிப்படையில் ஒரே வஸ்துவாக இருந்தால் தான் முடியும். சொல்லப் போனால், E அளவு ஆற்றல் இருந்தால், அதை E/C2 அளவு நிறையாகவும், m அளவு நிறை இருந்தால் அதை mC ^2 அளவு ஆற்றலாகவும் கருத முடியும், ஆகையால் இரண்டும் ஒரே வஸ்துதான்.

                    • // Electron-Positron pair production போது, ஆற்றல் நிறையாக மாறுகிறது //

                      திரும்பத் திரும்ப நீர் ஒரு ‘இயற்பியல் மேதைன்னு’ காட்டணுமா?!
                      ஒரு மின் சமநிலை உள்ள அணுத்துகள் சிதைந்துதான் electron-positron pair உருவாகிறது. ஆற்றல் நிறையாக மாறுவதால் அல்ல..

                      // எடையை ஆற்றலாகவும், ஆற்றலை எடையாகவும் மாற்ற முடியும் என்றாலே அவை அடிப்படையில் ஒரே வஸ்துவாக இருந்தால் தான் முடியும். சொல்லப் போனால், E அளவு ஆற்றல் இருந்தால், அதை E/C2 அளவு நிறையாகவும், m அளவு நிறை இருந்தால் அதை mC ^2 அளவு ஆற்றலாகவும் கருத முடியும், ஆகையால் இரண்டும் ஒரே வஸ்துதான்.//

                      கடவுளைப் போல் பேசுகிறீரே..?!! காரீயத்தை தங்கமாக்கலாம். சூரிய ஒளியை பொருளாக்கிக் காட்ட உம்முடைய கொள்ளுப் பேரனாலும் முடியாது. ஒரே வேதியல் குறீயீடு உள்ளவை, ஒரே வஸ்து என்பதற்காக தாகமெடுத்தால் தண்ணீருக்கு பதில் பனிக்கட்டியையா முழுங்குவீர்.?

                    • // ஏன் கருந்துளைகள் மட்டும்தான் Space-Time ஐ distortion பண்ணுமா? நிறையுள்ள எந்த பொருளும் பண்ணும். ஒரு தூசி கூட பண்ணும். பூமியும் பண்ணும், சூரியனும் பண்ணும், கருந்துளைகளும் பண்ணும். சொல்லும் மொழி மட்டும்தான் வேறு வேறு சங்கதி எல்லாம் ஒண்ணுதான். //

                      ஒளித்துகளை நிறை ஈர்க்கும்ன்னு நீர் அடிச்சுவிட்டப்ப இதெல்லாம் தெரியாதா? அதெப்படி தூசி பண்ற space-time distortion -ஐ கண்டுபிடிப்பீர்?! அதனால்தான் கருந்துளையை பற்றி படிக்கச் சொன்னேன்.

                    • \\திரும்பத் திரும்ப நீர் ஒரு ‘இயற்பியல் மேதைன்னு’ காட்டணுமா?!
                      ஒரு மின் சமநிலை உள்ள அணுத்துகள் சிதைந்துதான் electron-positron pair உருவாகிறது. ஆற்றல் நிறையாக மாறுவதால் அல்ல..\\
                      மேற்கண்ட வாக்கியம் அவசரத்தில் தட்டச்சு செய்து, பிழை திருத்தும் போது போன வாக்கியத்தில் வந்த அதே சொற்றொடரே திரும்ப வந்து விட்டது. சரியான வாக்கியம், \\Electron-Positron pair production போது, ஆற்றல் நிறையாக மாறுகிறது, Electron-Positron annihilation போது நிறை ஆற்றலாக மாறுகிறது.\\ [விஷயம் தெரிஞ்சவன் இதைத் தவறு என்று சொல்ல மாட்டான், மாறாக இது என்னவாக இருந்திருக்கும் என்பதை நொடியில் உணர்ந்திருப்பான்.]

                      மிஸ்டர் கொம்பி…. நீங்க இந்த பிளாக்கில் எனக்கு லந்து விட்டவங்க மாதிரியில்லை, கொஞ்சம் விஷயம் தெரிஞ்ச ஆள்னு இப்பத்தான் நினைச்சேன், அதுக்குள்ளே அந்த நினைப்புல மண்ணை அள்ளிப் போட்டுட்டியேய்யா… 🙁 என்னமோ எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பீலா விட்டியே, \\ஒரு மின் சமநிலை உள்ள அணுத்துகள் சிதைந்துதான் electron-positron pair உருவாகிறது.\\ இதை உனக்கு எவன்யா சொல்லிக் கொடுத்தான்? அட சொல்லிக் கொடுத்தவனை விடு, இங்கே கணினியில் கூகுல் தேடியந்திரம் என்று ஒன்று இருக்கே. அதைக் கூடவா உமக்கு உபயோகிக்கத் தெரியாதா? ஏன்யா ஒன்னும் தேயாத மக்கு பிளாஸ்திரிகள் எல்லோருமா மொத்தமா இந்த பிளாக்குல வந்து சேர்ந்திருக்கீங்க? சரி, நீ எப்படியோ போ…. உன்னோட மேட்டரு கீழே உள்ள சுட்டியில் இருக்கு, படிச்சிக்கோ.

                      http://en.wikipedia.org/wiki/Pair_production

                    • \\ஒளித்துகளை நிறை ஈர்க்கும்ன்னு நீர் அடிச்சுவிட்டப்ப இதெல்லாம் தெரியாதா? அதெப்படி தூசி பண்ற space-time distortion -ஐ கண்டுபிடிப்பீர்?! அதனால்தான் கருந்துளையை பற்றி படிக்கச் சொன்னேன்.\\ சரி நான் என்னாத்த அடிச்சி விட்டேன்? என்னை என்ன உன்னைய மாதிரி ரீல் விட்டுக் கொண்டு திரிபவன்னு நினைச்சியா? இன்னமும் பாடப் புத்தகங்களில் பூமி சந்திரனை ஈர்க்கிறது என்ற வார்த்தைகளை ஏன் பயன் படுத்துகிறார்கள்? பேசாமல், பூமி கால-இட சட்டத்தை வலைத்துவிட்டாதால் சந்திரன் சுற்றுகிறது, [சரியாகச் சொன்னால் விழுகிறது என்று தான் வரும்] என்று சொல்லலாமே? நாளைக்கு இன்னொருத்தன் வந்து வின்ச்டீன் சொன்னதே தப்பு எதுவும் வளையவில்லை என்பான். இதெல்லாம் அறிவியல் conventions டைமுக்கு டைம் மாறும். \\ யோவ்… நீ ரொம்ப சாமர்த்திய சாளிதான்யா… நல்லா சமாளிக்கிறே…. பிழைச்சுக்குவே….

                    • \\ஒளித்துகளை நிறை ஈர்க்கும்ன்னு நீர் அடிச்சுவிட்டப்ப இதெல்லாம் தெரியாதா? அதெப்படி தூசி பண்ற space-time distortion -ஐ கண்டுபிடிப்பீர்?! அதனால்தான் கருந்துளையை பற்றி படிக்கச் சொன்னேன்.\\ யோவ்… நீ ரொம்ப சாமர்த்திய சாளிதான்யா… நல்லா சமாளிக்கிறே…. பிழைச்சுக்குவே….

                    • \\கடவுளைப் போல் பேசுகிறீரே..?!! காரீயத்தை தங்கமாக்கலாம். சூரிய ஒளியை பொருளாக்கிக் காட்ட உம்முடைய கொள்ளுப் பேரனாலும் முடியாது. \\

                      Plants utilize light energy in order to grow and proliferate, and by one of the most overly used but underly understood equations in physics E=m(c^2) the energy of incident photons would in tern be taken in by the plant in order to grow thus increasing its mass therefore photosynthesis does directly increase the mass of the earth by the plants photon absorption and growth; however, the most intriguing idea here is the possibility of replicating this feat of nature in other means, or say more directed to energy production by even reversing the process to convert everyday mass into energy with high efficiency after all you can never beat out the 2nd law of thermodynamics.

                      http://lofi.forum.physorg.com/Wouldn%26quot%3Bt-it-be-interesting_14140.html

                    • \\ஒரே வேதியல் குறீயீடு உள்ளவை, ஒரே வஸ்து என்பதற்காக தாகமெடுத்தால் தண்ணீருக்கு பதில் பனிக்கட்டியையா முழுங்குவீர்.?\\ இந்த ஈர வெங்காயக் கதைகள் எல்லாம் எமக்கும் தெரியும். ஒரு கெமிஸ்ட் கிட்ட கொடுத்தா இரண்டும் ஒன்னுன்னுதான் சொல்லுவான். நீர் கடைக்குப் போய், சோடியம் குளோரைடு அறை கிலோ, உப்பு அறை கிலோ கொடு என்றா கேட்பீறு? இங்கே பேசப் படுவது அறிவியல், வீரமணி, பெரியார் புராணமல்ல, இஷ்டத்துக்கும் அள்ளி விடுவதற்கு.

                    • இயற்பியல் விஜ்ஜானி, உம்மோட விக்கிப்பீடியா சுட்டியில் உள்ள இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லும் :

                      // since the momentum of the initial photon must be absorbed by something, pair production by a single photon cannot occur in empty space; the nucleus (or another particle) is needed to conserve both momentum and energy.[1] //

                      —-
                      உமக்கு photosysnthesis -னா என்னன்னும் தெரியல போல் இருக்கு. ஆற்றலை நிறையாக மாற்றுதுன்னு உம்ம போல ஒரு மேதாவி உளறியதை மேற்கோள் காட்டி சுட்டி குடுக்கிறீர். ஹைட்ரஜன் மூலகூறையும், ஆக்ஸிஜனையும் நீர்மூலக்கூறிலிருந்து பிரிக்கமட்டுமே ஒளித்துகள் பயன்படுதுன்னு 8-ம் கிளாஸ் படிக்கும் புள்ளை சொல்லுமேயா.. விக்கிப்பீடியாவில் உமக்கு புரியுறாப்ல இல்லையோ??

                      —-

                      // இன்னமும் பாடப் புத்தகங்களில் பூமி சந்திரனை ஈர்க்கிறது என்ற வார்த்தைகளை ஏன் பயன் படுத்துகிறார்கள்? பேசாமல், பூமி கால-இட சட்டத்தை வலைத்துவிட்டாதால் சந்திரன் சுற்றுகிறது, [சரியாகச் சொன்னால் விழுகிறது என்று தான் வரும்] என்று சொல்லலாமே? //

                      நிறையை நிறை ஈர்க்கும், பூமியின் நிறை பண்ற space-time distortion ஒரு கருந்துளையோடத விட மிக மிகக் குறைவு : இதெல்லாம் கூட உமக்கு புரியாத சமாச்சாரங்களாயிருந்தால் புடுங்கப் போவது நீர் செய்யும் உருப்படியான வேலையா இருக்கும்..

                      —-

                      // ஒரு கெமிஸ்ட் கிட்ட கொடுத்தா இரண்டும் ஒன்னுன்னுதான் சொல்லுவான். நீர் கடைக்குப் போய், சோடியம் குளோரைடு அறை கிலோ, உப்பு அறை கிலோ கொடு என்றா கேட்பீறு? இங்கே பேசப் படுவது அறிவியல், வீரமணி, பெரியார் புராணமல்ல, இஷ்டத்துக்கும் அள்ளி விடுவதற்கு. //

                      நீர் தாகத்துக்கு குடிப்பீரா, முழுங்குவீரான்னு கேட்டா கெமிஸ்ட் என்ன சொல்லார்ன்னு கேக்கப் போறீர்.?! உப்புக்கு பல பேர்கள் இருக்கறதுக்கும், H2O – க்கு பல வடிவங்களும், தன்மைகளும் இருப்பதற்கும் நீர் முடிச்சு போடுவது உமக்கு அடிப்படை அறிவு கூட இல்லன்னு காட்டுது.. புடுங்குறதுக்கு கூட அது தேவையாச்சேய்யா??!!

                    • \\உம்ம பட்லருக்கும் தெரியாதாமா?!\\ உன் மூஞ்சிக்கு நானே ஓவரு, இதுல உனக்கு எதுக்கையா பட்லரும் ஹிட்லரும்?

                    • \\இயற்பியல் விஜ்ஜானி, உம்மோட விக்கிப்பீடியா சுட்டியில் உள்ள இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லும் :

                      // since the momentum of the initial photon must be absorbed by something, pair production by a single photon cannot occur in empty space; the nucleus (or another particle) is needed to conserve both momentum and energy.[1] //\\

                      இதுக்கு அர்த்தம்,

                      \\ஒரு மின் சமநிலை உள்ள அணுத்துகள் சிதைந்துதான் electron-positron pair உருவாகிறது. ஆற்றல் நிறையாக மாறுவதால் அல்ல..\\ ஹா…ஹா…ஹா…
                      உன்னோட பட்லர்கிட்ட கொண்டு போய் உன்னோட வியாகானத்தைக் காமி, துப்புவான்.

                    • \\ஹைட்ரஜன் மூலகூறையும், ஆக்ஸிஜனையும் நீர்மூலக்கூறிலிருந்து பிரிக்கமட்டுமே ஒளித்துகள் பயன்படுதுன்னு 8-ம் கிளாஸ் படிக்கும் புள்ளை சொல்லுமேயா..\\ இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் எடை + ஒரு ஆக்சிஜென் அணுவின் எடை ஒரு நீர் மூலக்கூருவின் எடையை விட அதிகமாக இருக்கும். இந்த வித்தியாசம், ஒரு நீர் மூலக்கூருவை பறிக்கத் தேவையான ஆற்றலை C^2 ஆல் வகுக்கக் கிடைப்பதாகும். இந்த விவரங்கள் எட்டாம் கிளாஸ் வரை மட்டுமே படித்த உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை வெறும் ஐந்தாம் கிளாஸ் மட்டுமே படித்த என்னிடம் தெரிந்து கொள்ளும் இழி நிலையில் உள்ளேயே கொம்பி!!

                    • \\நிறையை நிறை ஈர்க்கும், பூமியின் நிறை பண்ற space-time distortion ஒரு கருந்துளையோடத விட மிக மிகக் குறைவு :\\ ஐயா…. ஒருத்தன் மக்கு பிளாஸ்திரியா இருக்கலாம், அதுல தப்பில்லை, ஆனால் இந்த அளவுக்கா மக்காக இருக்க வேண்டும்? பூமி சந்திரனை மட்டுமல்ல, ஒரு ஆப்பிளை மரத்திலிருந்து கீழே விழச் செய்வதென்றாலும், ஐன்ஸ்டீனின் கணக்குப் படி அது பூமி space-time distortion செய்ததனால் தான். இது சூரியன், கோள்கள், பால்வெளி இந்த பிரமாண்டம் என எல்லாவற்றுக்கும் பொருந்தும், வெறும் கருந்துளைக்கு மட்டுமல்ல. [ஏன்யா பி.காம் படிச்சிட்டு என்னைய மாதிரி அஞ்சாம் கிளாஸ் படிச்சவன்கிட்ட வந்து வீணா மொதுறே? :(]

                    • \\உப்புக்கு பல பேர்கள் இருக்கறதுக்கும், H2O – க்கு பல வடிவங்களும், தன்மைகளும் இருப்பதற்கும் நீர் முடிச்சு போடுவது உமக்கு அடிப்படை அறிவு கூட இல்லன்னு காட்டுது\\ஆற்றல், நிறை இரண்டும் வெவ்வேறு சங்கதிகள் அல்ல, ஒரே சங்கதியின் வெளிப்பாடே என்பதற்கும் தண்ணீரையும், ஐஸையும் குடிப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறிய அடிப்படை அறிவு இருந்ததா?

                    • கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியல்லைன்னா ஹா..ஹ்ஹான்னு பித்துப் பிடிச்சாப்ல சிரிச்சா மட்டும் போதாது.. internal pair creation, particle decay, super heavy nuclear collisions மாதிரி மேட்டரையெல்லாம் உம்ம பட்லருக்குக்காவது தெரியுதான்னு கேட்டுப்பாக்கணும்..

                      ஒளித்துகளை நிறை ஈர்க்கும்ன்னு உளறிக் கொண்டிருந்த நீர் இப்ப ஐன்ஸ்டீனின் General theory of relativity, binding energy வரை வந்துருக்கீர்.. நல்ல முன்னேற்றம்தான்.. இன்னும் கொஞ்சம் முக்குனா ஹிக்ஸ் ஃபீல்டுக்கு வந்துரலாம்.. விடாம முயற்சி பண்ணும்..

                    • \\கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியல்லைன்னா\\ நான்தான் வெறும் அஞ்சாம் கிளாஸ்தான் படிச்சேன்னு ஒத்துகரேனே அப்புறம் என்னைய்யா? எனக்கு ஒண்ணுமே தெரியாதுதான். விட்டுத் தள்ளு ஆனா, \\ஒரு மின் சமநிலை உள்ள அணுத்துகள் சிதைந்துதான் electron-positron pair உருவாகிறது. ஆற்றல் நிறையாக மாறுவதால் அல்ல..\\ என்று எங்க போட்டிருக்குன்னு அந்தச் சுட்டியில் போட்டிருக்குன்னு மட்டும் சொல்லு, அப்புறம் பேசுவோம்.

                      \\ internal pair creation, particle decay, super heavy nuclear collisions மாதிரி மேட்டரையெல்லாம் உம்ம பட்லருக்குக்காவது தெரியுதான்னு கேட்டுப்பாக்கணும்..\\ இதெல்லாம் எனக்குத் தெரியாது, ஒப்புக் கொள்கிறேன்.

                      \\ஒளித்துகளை நிறை ஈர்க்கும்ன்னு உளறிக் கொண்டிருந்த நீர் இப்ப ஐன்ஸ்டீனின் General theory of relativity, binding energy வரை வந்துருக்கீர்.. நல்ல முன்னேற்றம்தான்.. இன்னும் கொஞ்சம் முக்குனா ஹிக்ஸ் ஃபீல்டுக்கு வந்துரலாம்.. விடாம முயற்சி பண்ணும்.\\ உம்மோட நல்ல எண்ணத்துக்கு நன்றி.

                • // எதையுமே படிக்கிறதில்லை, படிக்கவும் முடியாது, அதற்குத் தகுதியும் இல்லை, புத்தியும் இல்லை, ஆனால் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி இங்க வந்து பிலிம் காமிக்கிரியேய்யா….? தயவு பண்ணி நீ எந்த துறையைச் சார்ந்தவர் என்று சொல்லிடுயா… இயற்பியல் பத்தி பேசணும்னா, உன்னைய மாதிரி வேற சப்ஜெக்ட் படிச்ச பயல்கள் கிட்ட பேச முடியாதுய்யா. நான் பேசினாலும் உனக்கு புரியாது. எதுக்கு விதண்டா வாதம்? //

                  உம்முடைய அறிவியல் அறிவுக்கு பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணியிருந்தாலே போதும் விவாதிக்கலாம். என்னுடைய படிப்பைப் பற்றி நீர் ஏனய்யா கவலைப் படுகிறீர் ?! எனக்கு சுயவிளம்பரம் தேவையில்லாத ஒன்று.

                  • \\உம்முடைய அறிவியல் அறிவுக்கு பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணியிருந்தாலே போதும்\\ பரவாயில்லையே, பத்தாம் கிளாஸ் படிச்சே இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கியே!!

                    • அதெல்லாம் பத்தாம் கிளாஸ் படிக்கறப்ப தெரிந்து கொள்ளும் விசயம்.. உமக்குப் பெரிய விசயமாத் தெரியுது.. எப்ப அதையாவது பாஸ் பண்ணித்தொலைக்கப் போறீரோ.??!!!!

                  • \\எனக்கு சுயவிளம்பரம் தேவையில்லாத ஒன்று.\\ நீ புடுங்குற ஆணிக்கு இது வேறயா?

                    • பெரிய இயற்பியல் விஞ்ஞானி மாதிரி நீர் என்னோட படிப்பை கேட்டதுக்கு பதில் சொன்னா என்னையும் புடுங்கக் கூப்டுற…

                    • உனக்கு கோயம்பத்தூர் ஜில்லா கலெக்டர் ஆக்கலாம்னு தான் கேட்டேன், ஆனா நீ அவரோட டவாலியா கூட ஆக லாயக்கில்லாத ஆளா இருக்குறியேய்யா…

          • \\முன்மொழியப்படும் ஹிக்ஸ் போசானின் கண்டுபிடிப்பு பல அறிவியல் உண்மைகளை வெளிக் கொணரும். அதுவரை பொருள்தான் அடிப்படை என்ற கருத்தை ஏற்பதில் விஞ்ஞானிகளுக்கும் சிக்கல்தான்.\\

            What would finding the Higgs boson mean for physics?

            It would vindicate the so-called Standard Model of physics which envisages that the universe is made from 12 basic building blocks called fundamental particles and governed by four fundamental forces. The existence of the Higgs boson is predicted by the Standard Model but it has yet to be found by experiments. Even if the Higgs is discovered, the Standard Model does not explain everything.

            Last but not least, an essential ingredient of the Standard Model, a particle called the Higgs boson, has yet to be found in an experiment. The race is on to hunt for the Higgs – the key to the origin of particle mass. Finding it would be a big step for particle physics, although its discovery would not write the final ending to the story.

            So despite the Standard Model’s effectiveness at describing the phenomena within its domain, it is nevertheless incomplete. Perhaps it is only a part of a bigger picture that includes new physics that has so far been hidden deep in the subatomic world or in the dark recesses of the Universe.

            • வெட்டி ஒட்டும்போது எங்கிருந்து சுட்டீர்கள் என்று சுட்டி கொடுங்கள்.. அதற்கு முன் படித்துப் பார்த்து புரிந்துகொள்ள முயலுங்கள். ஹிக்ஸ் போசானின் கண்டுபிடிப்பு புதிய கதவுகளை அறிவியலுக்குத் திறந்துவிடும் என்பதில் என்ன சந்தேகம்.?!

              • ஏதாவது நாலைஞ்சு வார்த்தைகளை காபி செய்து Google லில் போட்டு தேடினால் நேராக எடுக்கப் பட்ட தளத்திற்கே உங்களை கொண்டு செல்லுமே!! [இதைக் கூடவா இன்னொருத்தர் சொல்லணும்!! வாயில் விரலை வைத்தாலும் கடிக்கத் தெரியாத சின்னக் குழைந்தையா நீர்? ஐயோ… ஐயோ…]. பொதுவாக அடுத்த தளங்களைப் பற்றிய லிங்குகளை சிலர் வெளியிடுவதில்லை, அதனால் கொடுக்க வில்லை. கொடுப்பதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை. இதோ லிங்குகள்:

                What is the Higgs boson?

                http://www.guardian.co.uk/science/2011/dec/13/higgs-boson-lhc-explained

                Standard Model of physics:

                http://user.web.cern.ch/public/en/Science/StandardModel-en.html

                ஹிக்ஸ் போசான் குறித்து சென்னை Mathematical Sciences Institute -ஐச் சேர்ந்த பேராசிரியர் திரு. ஜி.பாஸ்கரன் லண்டன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியைக் கேட்க:

                http://www.bbc.co.uk/tamil/multimedia/2011/12/111213_sciencedec132011.shtml

              • \\ஹிக்ஸ் போசானின் கண்டுபிடிப்பு புதிய கதவுகளை அறிவியலுக்குத் திறந்துவிடும் என்பதில் என்ன சந்தேகம்.?!\\ Standard Model of physics ஐ வைத்து Particle Physics -ல் அடிப்படைத் துகள்கள் [Fundamental Particles] நிறை பெறுவது குறித்து விளக்கப் படுகின்றன. இதில், ஹிக்ஸ் போஸான் என்ற ஒன்று இருப்பதாக அனுமானம் [assume] செய்து கொண்டால் மட்டுமே இந்த தியரி சொல்லும் முடிவுகளும் ஆய்வு முடிவுகளும் ஒத்துப் போகின்றன. ஆனால் இதுவரை இந்த போசானை கையில் பிடிக்க முடியவில்லை. இது இருக்கிறது ஆனால் சோதனைச் சாலை கருவிகளின் கண்ணில் பட மாட்டேன்கிறது. ஒரு வேலை இதைப் பிடித்து விட்டால் என்னவாகும்? ஒன்னும் ஆகாது, இதுவரைக்கும் நாம் ஹிக்ஸ் போஸான் என்ற ஒன்று இருப்பதாக assume செய்ததது சரிதான், என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள். நீங்க நினைப்பது போல இது ஒன்னும் அலிபாபா நாற்பது திருடன் படத்தில் வர மாதிரி எந்தக் கதவையும் திறந்து விடாது.

                • // the key to the origin of particle mass. //

                  // Perhaps it is only a part of a bigger picture that includes new physics that has so far been hidden deep in the subatomic world or in the dark recesses of the Universe. //

                  நீர் கமுக்கமாக உம்முடைய தியரியைப்போல் கொடுத்த பின்னூட்டத்தில் மேலே உள்ள வரிகளுக்கு என்ன பொருள் என்பதையும், Higgs field பற்றியும் உம்முடைய சக விஞ்ஞானிகளிடம் கேட்டுச்சொல்லும்..

                  • \\நீர் கமுக்கமாக உம்முடைய தியரியைப்போல் கொடுத்த பின்னூட்டத்தில் மேலே உள்ள வரிகளுக்கு என்ன பொருள் என்பதையும், Higgs field பற்றியும் உம்முடைய சக விஞ்ஞானிகளிடம் கேட்டுச்சொல்லும்..\\
                    // the key to the origin of particle mass. //- நிறைக்கு காரணம் என்னன்னு [Higgs Boson] சொல்லியாயிற்று, அந்த [Higgs Boson] என்ன காரணம், அது ஏன் அப்படி செயல் படுதுங்கறதுக்கு காரணம் என்னன்னு இன்னொரு கேள்வி வரும் அதுக்கு பதில் வந்தாலும் வரும், திரும்ப இன்னொரு கேள்வி வரும். இது பெரியார் சொன்ன வெங்காயம் மாதிரி, போய்கிட்டேதான் இருக்கும், முடிவு ஒருபோதும் யாராலும் தர முடியாது. நீர் சொல்வது மாதிரி, எல்லாத்தையும் விளக்கிடும், கதவைத் திறந்திடும் என்பதெல்லாம் புருடா….

                    • நியூட்டன் வெங்காயம் உரித்த போது இருந்த அறிவியல் அறிவு ஐன்ஸ்டீன் வெங்காயம் உரித்தபோது கூடியது.. உரிக்க உரிக்க உமக்கு கண்ணீர் வரும், விஞ்ஞானிகளுக்கு கூடுதல் அறிவு வரும்.

                    • \\நியூட்டன் வெங்காயம் உரித்த போது இருந்த அறிவியல் அறிவு ஐன்ஸ்டீன் வெங்காயம் உரித்தபோது கூடியது.. உரிக்க உரிக்க உமக்கு கண்ணீர் வரும், விஞ்ஞானிகளுக்கு கூடுதல் அறிவு வரும்.\\ ஆனால் ஒரு போதும் நிஜ வெங்காயத்தைப் போல இந்த வெங்காயத்தை உரித்து முடிக்க முடியாது, உரிக்க உரிக்க போய்க் கொண்டே தான் இருக்கும், நீ அழுவதை ஒரு போதும் நிறுத்த முடியாது!!

                    • அறிவியல்ன்னா அப்படித்தான் இருக்கும், உமக்கு உம் கவலை…

                  • // Perhaps it is only a part of a bigger picture that includes new physics that has so far been hidden deep in the subatomic world or in the dark recesses of the Universe. // யோவ்….hidden deep, dark recesses இந்த வார்த்தையெல்லாம் படிச்சு குழம்பிக்கதேய்யா… நிஜமா சொல்ல வருவது…..”it is only a part of a bigger picture” அவ்வளவுதான். ஒரு ஆளோட படம் வேணும்னா, அவனோட நெத்தியில் ஒரு மில்லி மீட்டரை மட்டும் காமிச்சு யாருன்னு சொல்லு பார்ப்போம்னா, சொல்லுவியா? இது கொடுக்கப் போற தகவலும் அவ்வளவுதான். [உனக்கு இங்கிலீஸ் வேற சொல்லித் தர வேண்டிஇருக்கேய்யா….!! ரொம்ப கஷ்ட காலமைய்யா…]

                    • ஆளோட படம், இங்கிலீசு பாடம்ன்னு புலம்பாம ஹிக்ஸ் ஃபீல்டுன்னா என்னன்னு கேட்டீரா உம்ம பட்லரிடம்..??

                    • \\ஆளோட படம், இங்கிலீசு பாடம்ன்னு புலம்பாம ஹிக்ஸ் ஃபீல்டுன்னா என்னன்னு கேட்டீரா உம்ம பட்லரிடம்..??\\ யோவ், உன் மூஞ்சிக்கு ஹிக்ஸ் ஃபீல்டு கேக்குதா…. நல்ல வருது வாயில… போய்யா… போய் ஆணி புடுங்கு.

  36. \\இறைவன் வரையறுக்கும் மனிதர்களுக்கான உணவு என்னவென்று கூறினால் எல்லோருக்கும் உதவியாக இருக்குமல்லவா?\\ ஒரு நாயோ, பூனையோ என்னோட உணவு என்னன்னு யாராச்சும் சொல்லுங்கப்பான்னு ஈ-மெயில் அனுப்பி கேட்காது, ஏனெனில் அதற்க்கு ஐந்தறிவு தான். ஆறறிவு +அதற்கும் மேல பகுத்தறிவு [ராமசாமி நாயக்கர் கண்டுபிடிச்சு, வீரமணி கட்டிக்காத்து வருவது] இருப்பதாகச் சொல்லிக் கொள்பவனுக்கு தான் எதைச் சாப்பிடனும் என்பது கூட தெரியவில்லை. சரி கேட்டுத் தொலைச்சிட்டே, என்ன பண்ணி தொலைக்கிறது, பதில் சொல்லிடுவோம். உப்பு சேர்க்காமல் தீயில் இடாமல் எதையெல்லாம் சாப்பிட்டு உன்னால் ஜீரணிக்க முடியுமோ அதெல்லாம் உனக்குப் படைக்கப் பட்டது.

    • அதீத பதற்றம், கோபம், எரிச்சலை இப்பின்னூட்டத்தில் காண்கிறேன். ஒருமையில் பேசும் அளவிற்கு இப்போதைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது 🙁

      • அன்புள்ள நண்பர் ரிஷி,
        எங்களை (வினவு) மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ள இயலுமா.
        தோழமையுடன்
        வினவு

  37. \\ஆன்மீகவாதியாகட்டும்,நாத்திகவாதியாகட்டும் எல்லோருமே ஆரோக்கியத்தோடும்,குறைபாடோடும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.\\ கோவிலுக்குப் போனால் வியாதியே வராதுன்னு எந்த கூமுட்டை சொன்னானோ தெரியவில்லை. பணம் வேண்டும், மகளுக்கு கல்யாணம் ஆகவேண்டும், மகனுக்கு வேலை வேண்டும், வீட்டிலுள்ளவர்களுக்கு ஆரோக்கியம் வேண்டும் என்று கோவிலுக்குப் போனால், அதுவும் பக்திதான், இறைவன் எல்லாம் வல்லவன் என்று நீ உணர்துல்லாய், ஆனாலும் நீ தூய பக்தன் அல்ல, வியாபாரி. இறைவனை நேசிக்க கோவிலுக்குப் போ, அவன் செய்வதெல்லாம் நம்பு, நீ பக்தன், இல்லாவிட்டால் வீரமணி என்ற போலி நாத்தீகனைப் போல நீயும் போலி பக்தன் அவ்வளவே.

    • //கோவிலுக்குப் போனால் வியாதியே வராதுன்னு எந்த கூமுட்டை சொன்னானோ தெரியவில்லை.//

      கடவுளால் ஆகக்கூடியது என எதைத்தான் நீர் சொல்ல வருகிறீர்?

  38. \\கடவுளால் ஆகக்கூடியது என எதைத்தான் நீர் சொல்ல வருகிறீர்?\\ அவரால் ஆகாதது என்ன என்று கேட்டால் அதில் அர்த்தமிருக்கும்!! [ஏன், எதாச்சும் ஆதாயம் இருந்தால் தான் கடவுள் இருக்கிறார் என்று ஒப்புக் கொள்வீரா?] வினவு போடும் பதிவுகளில் இறைவன் என்பவன் இல்லை என்றும், இறை நம்பிக்கையால் தான் இந்தியாவும், குறிப்பாக தமிழகமும் பின் தங்கி இருக்கிறது என்றும் கருத்துக்களை விதைத்து வருகிறார். அதை மறுத்து, இறைவன் இருக்கிறான், சமூக பிரச்சினைகள் வேறு, இறைவன் இருக்கிறானா இல்லையா என்பது வேறு, இதை இரண்டையும் கலக்க வேண்டாம் என்று நாம் எமது கருத்துகளைப் பதிவு செய்கிறோம். அவ்வளவே. கடவுளால் ஆகக் கூடியது என்ன? அவனன்றி ஒரு அணுவும் அசையாது. புவியில் பிறப்பு, வியாதி, மூப்பு [Old age], இறப்பு எல்லாம் இறைவன் உருவாக்கிய நியதி. ஆறறிவு இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் நீரும் வெறுமனே ஆடு மாடுகள் மாதிரிஎதற்காக வாழ்கிறோம், ஏன் சாகிறோம் என்று கூடத் தெறியாமல் சாகலாமா? வாழ்வதற்க்கென்று ஒரு நோக்கம் [purpose] இல்லையா? அந்த நோக்கத்தை கண்டுபிடிப்பது தான் மனிதனாகப் பிறந்ததர்க்கே அர்த்தம். அப்படி இல்லையென்றால் மாட்டுக்கும் உமக்கும் என்ன வித்தியாசம். இதைத்தான் எல்லா மத நூல்களும் சொல்கின்றன. வீட்டில் உமக்கு தாய் தந்தையர் இதைச் சொல்லித் தரவில்லையா, இல்லை அதைக் கேட்காமல் நேராக வீரமணியின் உருப்படாத கட்சியில் கோடி பிடிக்கப் போய் விட்டீரா? வீரமணி இயக்கத்தின் சொத்துகளுக்காக அங்கே இருக்கிறார், அந்தக் கொள்கையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள் உமக்கு என்ன கிடைக்கும்?

    • ஜெயதேவ்,

      கடவுளினால் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதைத்தான் கடவுளை நம்பும் நீங்களும் கடவுளை மறுக்கும் நாங்களும் சொல்கிறோம். கடவுளை மறுக்கும் நாங்கள் அவ்வாறு சொல்வதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால், நீங்கள் சொல்வதில் முரண்பாடல்லவா இருக்கிறது.

      • இந்த பவுதீக உலகம் என்பதே ஒரு தண்டனையை அனுபவிக்கும் இடம், இதிலிருந்து தப்பி வெளியில் வா என்று என்று தான் எல்லா மதங்களுமே போதிக்கின்றன. கருவாடு விருக்கும் இடம் என்றாலே அது நாறத்தான் செய்யும், அங்கே ஜவ்வாது வாசனை அடிக்க வில்லையே என்று புலம்புவதில் அர்த்தமேயில்லை. அது சரி, ஏன் இங்கே ஒவ்வொருவரும் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள்? ஐயோ, போதுமடா சாமி என்று கடவுள் பக்கம் திரும்புவோம் என்பதர்க்காத்தான். எனவே, இங்கே எல்லோரையும் சுபிட்சமாக்குகிறேன், சொர்க்கத்தை உருவாக்கப் போகிறேன் என்றால் அது யாராலும் முடியாது.

        • அது சரி! மனிதன் கூட தவறு செய்ததற்காகத்தான் தண்டனை முறையை வைத்திருக்கிறான். கடவுளுக்கு மனிதம் தெரியாதோ! ஓ அதனால்தான் கையில் கொலைக்கருவிகளோடு இருக்கிறாரோ!

          இந்த உலகமே தண்டனைக்கான இடம், மனிதனை பரீட்சித்துப் பார்க்கும் இடம் என்று ஸ்லோகங்கள் கூறி மனிதனை தனது துன்பங்களுக்கான விடையைத் தேடுவதற்கு முட்டுக்கட்டை போடுவதினால்தான் கடவுளை தூக்கியெறியுங்கள் என்கிறோம்.

          • \\இந்த உலகமே தண்டனைக்கான இடம், மனிதனை பரீட்சித்துப் பார்க்கும் இடம் என்று ஸ்லோகங்கள் கூறி மனிதனை தனது துன்பங்களுக்கான விடையைத் தேடுவதற்கு முட்டுக்கட்டை போடுவதினால்தான் கடவுளை தூக்கியெறியுங்கள் என்கிறோம்.\\ ரொம்ப அடி மட்ட லெவலில் பேசுகிறீர் அன்பரே. கற்ப்பூரம், கரித்துண்டு, வாழை மட்டை என்று புரிந்து கொள்ளும் திறனை மூன்று விதமாகச் சொல்வார்கள். நீர் சுத்த வாழை மட்டை. தேறுவது மிகக் கடினம். இருந்தாலும் உம்முடைய கேள்விக்கு பதில் கூறி விடுகிறேன். பிறந்து விட்டால் துன்பங்கள் பலவிதம். நோய்நொடி, வயோதிகம், இறப்பு மற்றும் இம்மூன்றுக்கும் வித்தாக இருக்கும் பிறப்பு. இந்த நான்கின் மேலும் நமது மனதாலும்[கவலைகள்], உடலாலும் ஏற்ப்படும் துன்பம்[விபத்தல் காயமடைதல், இன்ன பிற உடல் சம்பந்தமான இன்னல்கள்], மற்ற உயிர்களால் ஏற்ப்படும் துன்பம்[கொசு, பாம்பு,பெருச்சாளி, வேரினைக் கடி, பக்கத்து வீட்டுக்காரன் முதலானோர்], இயற்கைச் சீற்றங்களால் நேரும் துன்பம் [நில அதிர்ச்சி, புயல், எரிமலை, இடி மழை முதலான] என்ற மும்மடியான துன்பங்கள் சிம்மாசனம் போட்டு ஏரி உட்கார்ந்திருக்கிறது. இந்த நாத்திக கூமுட்டைகள் எல்லோரும் மற்ற உயிர்களால் ஏற்ப்படும் துன்பம் என்ற பிரிவில் பிற மனிதர்களால் நேரும் துயரை மட்டுமே பேசி வருகிறார்கள். அதே பிரிவில் கொசுக் கடிதல், பெருச்சாளித் தொல்லை, வெறிநாய் கடித்தல் போன்றவற்றை அவர்கள் கண்டு கொள்வதில்லை. பிற துன்பங்களை யாராலும் தீர்க்கவே முடியாது. அதனால் தான் சொல்கிறோம் மனிதனின் துன்பத்தை துடைக்கப் போகிறேன் என்பது டைம் வேஸ்ட்டு, அதை எவனாலும் தீர்க்க முடியாது, ஏனெனில் கருவாடு விற்கும் இடத்தில் ஜவ்வாது வாசம் வீசாது, இந்த பவுதீக உலகில் துன்பத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கவும் முடியாது.

            • //அதை எவனாலும் தீர்க்க முடியாது, ஏனெனில் கருவாடு விற்கும் இடத்தில் ஜவ்வாது வாசம் வீசாது, இந்த பவுதீக உலகில் துன்பத்தைத் தவிர வேறு எதைய
              ும் பார்க்கவும் முடியாது.//

              இதைத்தான் சில Cult-கள் சொல்லி Mass Suicide-க்கு கொண்டு சென்றன.

              http://en.wikipedia.org/wiki/Cult_suicide

              • \\இதைத்தான் சில Cult-கள் சொல்லி Mass Suicide-க்கு கொண்டு சென்றன.\\ஏன்யா, எவன் எதைச் சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக் கிட்டு போயி தற்கொலை பண்ணிக் கொள்வீர்களா? நீங்கள் என்ன சுயமாக சிந்திக்கத் தெரியாத புரோகிராம் செய்யப் பட்ட ரோபோவா? உங்கள் தலைக்குள் இருக்கும் Grey மேட்டரை பயன் படுத்த மாட்டீர்களா? எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு. அடுத்தவன் ஆயிரம் சொல்லட்டும், உமக்கு எங்கே போனது அறிவு? எதிர்த்து கேள்வி கேட்க வேண்டாமென்று உன்னை எது தடுத்தது? இந்த மாதிரி முட்டாள்களை பயன்படுத்தி யார் எதை வேண்டுமானாலும் செய்யலாமே? இங்கு கூட நான் என் மனதுக்குப் பட்டதைச் சொல்லியிருக்கிறேன், சீர் தூக்கிப் பார்த்து சரி என்றால் எடுத்துக் கொள்ளுங்கள், இல்லையென்றால் புறக்கனியுங்களேன்? அது சரி அப்படி நான் என்ன உண்மைக்குப் புறம்பாகச் சொல்லி விட்டேன் என்று கூறுங்களேன் பார்ப்போம்?

        • “இந்த பவுதீக உலகம் என்பதே ஒரு தண்டனையை அனுபவிக்கும் இடம், இதிலிருந்து தப்பி வெளியில் வா என்று என்று தான் எல்லா மதங்களுமே போதிக்கின்றன- k .ஜெயதேவ தாஸ் ”

          பார்த்திங்களா தாஸ் ….பாவம் இந்த அம்பானி பசங்க தண்டனை அனுபவிக்க வந்த இடத்திலேயே கோடிக்கணக்கான பணத்தினால் 27 மாடிக்கு வீடு கட்டி மற்ற பாவிகளை(மக்கள்) காட்டிலும் அதிக தண்டனை அனுபவிக்கிறார்கள் ….ஒரு வேலை மதங்கள் சொல்லுறத கேட்க மாட்டனுன்களோ ?….கடவுள்கிட்ட தண்டனையை இன்னும் நீட்டிக்க சொல்லணும் தாஸ் ….

          • அம்பானியானாலும் சரி அவன் கொம்பானியாயிருந்தாலும் சரி நேரம் வந்து விட்டால் ஒரு நொடி கூட தாமதிக்காமல் காலன் டிக்கெட் போட்டு விடுவான். இந்த கொம்பானிகள் எத்தனையாயிரம் கோடி குறுக்கு வழிகளில் சேர்த்து வைத்திருந்தும், போகவிருந்த அவர்களது அப்பனை அமெரிக்காவரை கூடிச் சென்றும் காக்க முடிந்ததா? இவர்கள் மட்டும் இங்கேயே தங்கி விடுவார்களா? நீ ஆட்டம் போடும் வரை போடு உன்னோட பியூஸை எப்போ பிடுங்கணும் என்று இறைவனுக்குத் தெரியும்.

            • அய்யா தாஸ்,

              //நேரம் வந்து விட்டால் ஒரு நொடி கூட தாமதிக்காமல் காலன் டிக்கெட் போட்டு விடுவான்.//

              பிறகு ஏன் நான் சொன்ன ஆத்திக பெரியவரை முட்டாள் என்று சொன்னாய்?

            • “இந்த பவுதீக உலகம் என்பதே ஒரு தண்டனையை அனுபவிக்கும் இடம், இதிலிருந்து தப்பி வெளியில் வா என்று என்று தான் எல்லா மதங்களுமே போதிக்கின்றன- k .ஜெயதேவ தாஸ் ”
              “போகவிருந்த அவர்களது அப்பனை அமெரிக்காவரை கூடிச் சென்றும் காக்க முடிந்ததா? இவர்கள் மட்டும் இங்கேயே தங்கி விடுவார்களா? நீ ஆட்டம் போடும் வரை போடு உன்னோட பியூஸை எப்போ பிடுங்கணும் என்று இறைவனுக்குத் தெரியும்- k .ஜெயதேவ தாஸ்.”

              திரு தாஸ்,
              -இந்த இரண்டு விளக்கங்களும் முரணாக உள்ளது தாஸ் ….எனது கருத்தாக ,பின்னூட்டம் 46.5 ல் திரு ரிஷி அவர்களுக்கு நீங்கள் சொன்ன பதில் “உமது கற்பனைச் சுதந்திரத்துக்கு வானமே எல்லை. நான் சொல்ல ஒன்றுமில்லை.” என்பதில் நான் என்ற விகுதிக்கு பதிலாக “நாங்கள்” என்பதை சேர்த்து கொள்ளவும்….
              -மேலும் “போகவிருந்த அவர்களது அப்பனை அமெரிக்காவரை கூடிச் சென்றும் காக்க முடிந்ததா?” என்ற உங்களது சொல்லாடல் மூலமாக நீங்கள் சொல்லும் கடவுள் ஒரு வேளை அமெரிக்காவில் நிலை கொண்டுள்ளாரோ என்று எண்ண தோன்றுகிறது…
              -நிறைவாக ,இந்த பதிவில் வினவு குறுப்பிட்ட “ஆக ஒரு விசயத்தை பார்த்து பதறுவதிலும், திமிரடைவதிலும் இரு வேறான போக்குகள் உள்ளிட்டு பல கருத்துக்கள் தோன்றுவதை பார்க்கிறோம். இவை எதுவும் சம்பந்தப்பட்டவர் சுயம்பாய் கண்டடைந்த கருத்து அல்ல. சமூகத்தில் பால் அவர் கொண்டிருக்கும் உறவே அந்தக் கருத்துக்களை கட்டியமைக்கிறது. எனினும் அநேகர் இத்தகைய கருத்துக்களை தானே யோசித்து வந்தடைந்த ஒன்று என்று கருதுகிறார்கள். வர்க்க ரீதியாக மேல் நோக்கி செல்லச் செல்ல இது மேலும் வலுவடையும்.” என்ற விளக்கமே உங்களது அனைத்து பின்னூட்ட விளக்கங்களுக்கு எனது பதிலாகும்…..நன்றி .

              • \\இந்த இரண்டு விளக்கங்களும் முரணாக உள்ளது தாஸ் ….\\ ஒரே பதங்களுக்கு நாத்தீகர்களும், ஆத்தீகர்களும் வெவ்வேறு அர்த்தம் கொள்ள முடியும். ஒரு வேலை அது உங்களுக்கு முரணாகத் தோன்றாலாம். ஒருத்தன் செத்துப் போய்விட்டான் என்றால், அவன் இந்த பிறப்பு இறப்பு என்ற சுழற்ச்சியில் இருந்து விடுபட்டு விட்டான் என்று அர்த்தமல்ல. ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் என்ன நினைவோடு உள்ளானோ அதைப் பொறுத்து அவனது அடுத்த பிறப்பு அமையும். இதற்க்கு புராணங்களில் ஆதாரங்கள் உள்ளன. அதிகம் நீச்சலடிப்பவன் மீனாகப் பிறக்கலாம், எப்போதும் தூங்கி கொண்டே இருப்பவன் பனிக் கரடியாகப் பிறக்கலாம், ஓடிக் கொண்டே இருப்பவன், மானாகவோ, சிறுத்தையாகவோ பிறக்கலாம், கண்டதைத் தின்னுபவன் பன்றியாகப் பிறக்கலாம், அம்மணமாக இருக்க விரும்புபவன் மரமாகப் போகலாம்…. என்று பல உதாரணங்கள் உள்ளன. இந்த குறுக்கு வழி கொம்பாணி சாகும் போது தான் கொள்ளையடித்த பணத்தைப் பற்றியும் தன்னுடைய தொழிற்சாலைகளைப் பற்றியுமே நினைத்துக் கொண்டு செத்திருப்பான், அவன் அடுத்து அந்த பண மூட்டை வைத்துள்ள இடத்தில் ஒரு கரப்பான் பூச்சியாகவோ, இல்லை அவனது தொழிற்ச்சாலையில் ஒரு பெருச்சாளியாகவோ பிறந்திருப்பான். அவன் இந்த பௌதீக உலகை விட்டு தப்பித்து இறைவனிடம் சேர்ந்திருக்க மாட்டான். அவனைக் காக்க முடியவில்லை என்பதன் பொருள், பௌதீகர்களின் மொழியில் அவன் உயிரைக் காக்க முடியவில்லை என்பதாகும். ஒரு ஆன்மீக வாதி இறைவனிடம் செல்லுதலையே காக்கப் பட்டதாகக் கருதுவான், இந்த மாதிரி அடுத்த பிறவியில் நாயாகவும் பூனையாகவும் பிறப்பது ஓர் ஆண்மீகவாதியைப் பொறுத்த வரையில் தோல்வியே.

                • das கட்டுரையிலிருந்து சில வரிகள் ….
                  ஒரு நம்பிக்கை என்பது எதார்த்த அனுபவத்தில் சோதித்தறியப்பட்டு அதன் மூலம் பட்டை தீட்டப்பட்டு நமக்குள் உண்டாகும் பட்சத்தில் அதன் மேலான பற்றுறுதி கேள்விக்கிடமற்று இருக்கும். ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது சோதித்தலுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.

                  • \\ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது சோதித்தலுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.\\ உங்கள் வீட்டிலுள்ள தொலைக் காட்சி, வாகனங்கள், ஃபேன், செல் போன், கணினி இவையெல்லாம் தானாக வந்தது என்று யாரவது சொன்னால் அவன் பைத்தியக்காரன் என்பீர்கள். அதெப்படி தானாக வரும் என்பீர்கள். கச்சாப் பொருட்களை ஒரு சட்டியில் போட்டு குலுக்கினோம் அவை இந்த வடிவத்தில் மாறி விட்டன என்று சொன்னால், “என்னை என்ன கேனை என்று நினைத்தாயா?” என்று கேட்பீர்கள். அவ்வளவு கூட வேண்டாம், ஒரு மண் சட்டி தானாக வந்தது என்றால் கூட நீங்கள் நம்ப மாட்டீர்கள். குயவன் செய்து நெருப்பிலிட்டால் மட்டுமே வரும் என்பீர்கள். அவ்வளவு புத்திசாலிகள் தான் நீங்கள். ஆனால், மனித மூளை, பறக்கும் பறவைகள், நமது கண்கள், இதயம் போன்றவை நான் மேலே சொன்ன இயந்திரங்களை விட வடிவமைப்பில் அற்புதமாக இருக்கின்றன, மனித கண்டுபிடிப்புகளை விட பல்லாயிரம் மடங்கு மேம்பட்டதாக இருக்கின்றன. இவற்றில் பின்னால் ஒரு படைப்பாளி இருக்க வேண்டும் என்று யூகித்தால், அவனை முட்டாள் என்கிறீர்கள். ஏனய்யா இந்த பாகுபாடு? அதாவது எட்டு கிராம் தங்க மோதிரத்தை காற்றில் வரவைத்ததாகச் சொல்பவன் மோசடிப் பேர்வழி என்பீர்கள், இந்தப் பிரபஞ்சம் முழுவதும், அதிலுள்ள உயிரினங்கள் மற்றும் பல அற்ப்புதங்கள் அத்தனையும் ஒன்றுமே இல்லாததில் இருந்து வந்தது, இதற்குப் பின்னால் படைப்பாளி யாரும் இல்லை என்பீர்கள், நாங்கள் அதற்க்கு ஆமாம் சாமி போட வேண்டும்? மக்களை எந்த அளவுக்குத் தான் முட்டாளாக்கலாம் என்று நினைக்கிறீர்கள் நண்பர்களே? ஒரு அடிப்படை அறிவு கிடையாது, சிந்தனைத் திறன் கிடையாது, பேசுவதில் ஒரு லாஜிக் கிடையாது, மேல் மாடி சுத்தமாக காலி, விஞ்ஞானத்தைப் பற்றி கூட எதுவுமே தெரியாது. இத்தனை ஓட்டையையும் வைத்துக் கொண்டு வெட்கம், சூடு சுரணை எதுவுமே இல்லாமல் நாத்தீகம் பேசித் திரிகிறீர்களே, நீங்கள் என்றைக்குத்தான் திருந்தி நிஜமான பகுத்தறிவுள்ள நல்ல மனிதர்களாவீர்கள் அன்பர்களே?

                    • Mr.தாஸ்…பதட்டம் அடைய வேண்டாமே ……நீங்கள் உபயோகிக்கும் சொற்களில் உள்ள பதட்டம் உங்களது கருத்து நிலைப்பாட்டினால் ஏற்படும் ஒன்றே …..நீங்கள் கேட்ட அறிவியல் உபகரணங்கள் உருவானது எவ்வாறு என்ற கேள்விகள் முதல் மண் பாண்டங்கள் மற்றும் மண் உருவாக்கம் வரை அனைத்திற்கும் பதில்கள் அறிவியலில் உண்டு…..ஆனால் பகவத் கீதையில் அதை தேடினால் அது கிடைக்காது ….அறிவியல் மூலமாக முயன்றால் ,நீங்கள் சொன்ன \\ஒரு அடிப்படை அறிவு கிடையாது, சிந்தனைத் திறன் கிடையாது, பேசுவதில் ஒரு லாஜிக் கிடையாது, மேல் மாடி சுத்தமாக காலி, விஞ்ஞானத்தைப் பற்றி கூட எதுவுமே தெரியாது. \\ போன்ற பல கிடையாதுகளை பற்றி நாங்கள் எழுப்பம் கேள்விகளுக்கு பதில் நீங்கள் அறியலாம் ….மற்றும் எட்டு கிராம் தங்க மோதிரத்தை காற்றில் வர வைப்பது ஒரு மேஜிக் வித்தை ….அதனை தாங்கள் முயன்றால் கூட முடியும்…..ஆனால் அதை செய்து விட்டு நீங்கள் உங்கள் நம்பிகையால் உங்களை போன்றோரிடம் நான் கடவுளின் அவதாரம் ,முதல் தாரம்,,மறுதாரம் என்று பஜனை பாடினால் நீங்களும் “மோசடிப் பேர்வழி”தான் …

                      மேலும்….திரு மருதையன் அவர்களின் “கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் !” என்ற கட்டுரை உங்களது கருத்தான “நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் ” என்ற வரியிலிருந்து ஆரம்பித்து நீங்கள் சொல்லும் நாத்திகர்களான எங்களின் விஞ்ஞான தேடலை விரிவாக விளக்குகிறது ……வினாவில் உள்ளது ……..தேடி படித்து காலியாக உள்ள தங்களது மற்றும் தாங்களை போன்ற பல மேல் மாடிகளை (கீதை சொன்ன உங்கள் கிருஷ்ணனின் மேல் மாடியும் சேர்த்து ) நிரப்ப முயலவும் .

                      அந்த கட்டுரையிலிருந்து உங்களின் \\ இவற்றில் பின்னால் ஒரு படைப்பாளி இருக்க வேண்டும் என்று யூகித்தால்\\ என்ற கேள்விக்கு பதிலாக உள்ள வரி
                      “‘ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே’ என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (Collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் ‘கடவுள் துகளை’த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், “இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?” என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது ‘பிரம்ம ரகசியத்தை’க் கண்டறிந்து விட முடியும்.” என்று இவ்வாறு அறிவியல் தனது முடிவுகளை கேள்விகளாக்கி அதற்கும் விடை தேடி போகின்றது ……

                      மேலும் உங்களது அதி தீவிரமான கடவுள் “கூச்சலுக்கு “அறிவியலின் பதில் ” மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று ‘ஆன்மீக மூலக்கூறு’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், ‘இறை நரம்பியல்’ (Neuro Theology) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.”….ஆதலால் தாங்கள் தங்களது கிருஷ்ண கீதா சாரங்களை தவிர்த்து ஒரு நல்ல நரம்பியல் மருத்துவரை பார்க்கவும்.
                      இறுதியாக அறிவியலின் பலம் மற்றும் கடவுள் இருப்பின் பலம் இரண்டையும் நான் பின்வருமாறு விளக்குகிறேன் ..
                      அறிவியல் = நேற்றைய அறிவியலின் முடிவு, இன்றைய அறிவியலின் தொடக்கம்,இன்றைய அறிவியலின் முடிவு,நாளைய அறிவியலின் தொடக்கம்.
                      கடவுள் இருப்பு = நேற்றைய நம்பிக்கை ,இன்றைய தீவிர நம்பிக்கை, நாளைய அதி தீவிர நம்பிக்கை.

                    • \\Mr.தாஸ்…பதட்டம் அடைய வேண்டாமே ……\\ ரோட்டில் போகும் போது பத்து வெறிநாய்கள் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும் போது பதட்டம் அடையாம வேறென்ன செய்வீரு? இங்க பத்து பேரு வளைச்சு என்னை கேள்வி மேல கேள்வியா கேட்டுத் தாக்குறீங்க, அதுலும் சில பேரு முற்றிலும் மறை கழண்டகேசு மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருக்காங்க. நான் அத்தனை லூசுகளுக்கும் பதில் எழுதி உசுரு போகுதையா…உமக்கென்னையா சுளுவா சொல்லிட்டீறு, என்னோட நிலைமையில இருந்து பார்த்தா தெரியும்.

                    • \\நீங்கள் கேட்ட அறிவியல் உபகரணங்கள் உருவானது எவ்வாறு என்ற கேள்விகள் முதல் மண் பாண்டங்கள் மற்றும் மண் உருவாக்கம் வரை அனைத்திற்கும் பதில்கள் அறிவியலில் உண்டு…..\\ தமிழ் நட்டு நாத்தீகனுக்குத் தெரிந்த இந்த விவரம் எல்லாம் இருபதாம் நூற்றாண்டின் அறிவியலையே புரட்டிப் போட்ட தியரிகளை உருவாக்கிய ஐன்ஸ்டீனுக்கு தெரியலை போலிருக்கு. அதுதான் பேக்கு மாதிரி கடவுள் இருக்கார் என்று நம்பிக் கொண்டிருந்திருக்கிறார். அவர் மூளையை சேமித்து வைத்தது போல இந்த நாத்திக கோஷ்டிகளின் மூளையையும் சேமித்து வைத்து ஆராய்ச்சி செய்தால் புரசிகரமான தகவல்கள் கிடைக்கக் கூடும்!!

                    • \\ஆனால் பகவத் கீதையில் அதை தேடினால் அது கிடைக்காது ….\\ இறைவன் இல்லை என்று இது வரை எந்தக் கொம்பனும் நிரூபிக்க வில்லை. அறிவியலால் இறைவன் இல்லை என்றோ இருக்கிறான் என்றோ நிரூபிக்க முடியாது என்பது தான் இன்றைய நிலைப்பாடு. அறிவியலால் உமக்கு மனம் என்ற ஒன்றோ இல்லை புத்தி என்ற ஒன்றோ இருக்கிறது என்று கூட காட்ட முடியாது தான், ஆனால் எல்லோருக்கும் மனமும் புத்தியும் இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளத்தானே செய்கிறோம்? ஆகையால் கண்ணில் காணாதது இருக்கவே முடியாது என்பது கேனத் தனம். ஒப்புக் கொள்ள இயலாது. இறைவன் இருக்கிறானா என்ற கேள்விக்கு, “படைப்பு என்று ஒன்று இருந்தால் படைத்தவன் ஒருவன் இருப்பான்” என்பதே பதிலாகும். முதலில் இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதற்கு ஒரு முடிவுக்கு வருவோம். அதற்க்கப்புறம், அவன் ஸ்ரீ கிருஷ்ணனா, அல்லாவா இல்லை கிறிஸ்துவா என்றும், அவன் சொன்னது கீதையா, குரானா இல்லை பைபிளா என்று ரூம் போட்டு யோசிக்கலாம்.

                    • \\மற்றும் எட்டு கிராம் தங்க மோதிரத்தை காற்றில் வர வைப்பது ஒரு மேஜிக் வித்தை ….அதனை தாங்கள் முயன்றால் கூட முடியும்…..ஆனாà��் அதை செய்து விட்டு நீங்கள் உங்கள் நம்பிகையால் உங்களை போன்றோரிடம் நான் கடவுளின் அவதாரம் ,முதல் தாரம்,,மறுதாரம் என்று பஜனை பாடினால் நீங்களும் “மோசடிப் பேர்வழி”தான் …\\ நான் வீரமணியைப் போல நாத்தீகன் என்று சொல்லிக் கொண்டு ஜெயலலிதா மாதிரி கோவில்களுக்குச் செல்லுதல், நல்ல நேரம் பார்த்தல், நியூமரலாஜி பார்த்தல் என்று என்னென்ன மூட நம்பிக்கைகள் உள்ளனவோ அத்தனையும் கொண்ட ஒரு முதலமைச்சருக்கு பண ஆதாயத்துக்காக சிங்கியடிப்பவன் அல்ல. நான் உண்மையான நாத்தீகன். இறைவன் இருக்கிறான் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை, அதற்காக D O G ஐ G O D என்று ஏற்றுக் கொள்ளும் மடையனும் அல்ல. [கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்களை நம்புங்கள் என்று ஒரு போது சொல்லவில்லை. தயவு செய்து இல்லாத கருத்துக்களை என் மேல் திணிக்காதீர்கள் அன்பர்களே].

                    • \\மற்றும் எட்டு கிராம் தங்க மோதிரத்தை காற்றில் வர வைப்பது ஒரு மேஜிக் வித்தை ….அதனை தாங்கள் முயன்றால் கூட முடியும்…..ஆனாà��் அதை செய்து விட்டு நீங்கள் உங்கள் நம்பிகையால் உங்களை போன்றோரிடம் நான் கடவுளின் அவதாரம் ,முதல் தாரம்,,மறுதாரம் என்று பஜனை பாடினால் நீங்களும் “மோசடிப் பேர்வழி”தான் …\\ நான் வீரமணியைப் போல நாத்தீகன் என்று சொல்லிக் கொண்டு ஜெயலலிதா மாதிரி கோவில்களுக்குச் செல்லுதல், நல்ல நேரம் பார்த்தல், நியூமரலாஜி பார்த்தல் என்று என்னென்ன மூட நம்பிக்கைகள் உள்ளனவோ அத்தனையும் கொண்ட ஒரு முதலமைச்சருக்கு பண ஆதாயத்துக்காக சிங்கியடிப்பவன் அல்ல. நான் உண்மையான ஆத்தீகன். இறைவன் இருக்கிறான் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை, அதற்காக D O G ஐ G O D என்று ஏற்றுக் கொள்ளும் மடையனும் அல்ல. [கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்களை நம்புங்கள் என்று ஒரு போது சொல்லவில்லை. தயவு செய்து இல்லாத கருத்துக்களை என் மேல் திணிக்காதீர்கள் அன்பர்களே].

                    • \\”‘ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே’ என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. \\ அந்த ஐன்ஸ்டீனே இறைவன் இருக்கிறான் என்று சொன்னவராயிற்றே, அவரது கொள்கையை நாத்திக கண்மணிகள் எதற்கையா எடுத்தீர்கள்?

                    • \\புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (Collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் ‘கடவுள் துகளை’த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், “இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?” என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான வ ிடையை, அதாவது ‘பிரம்ம ரகசியத்தை’க் கண்டறிந்து விட முடியும்.” என்று இவ்வாறு அறிவியல் தனது முடிவுகளை கேள்விகளாக்கி அதற்கும் விடை தேடி போகின்றது …..\\ நீங்களெல்லாம் கூமுட்டை ராமசாமிகள் என்பது ஐயமின்றி தெளிவாகிறது!! B.Com, B.A Economics, History, Tamil Literature என்று படித்து விட்டு இயற்பியலைப் பற்றி எல்லாம் தெறிந்த ஏகாம்பரம் மாதிரி எதற்கையா பீலா விட்டுக் கொண்டு திரிகிறீர்கள்? உங்கள் மத்தியில் இயற்பியல் தெரிந்த ஒருத்தர் கூட இல்லையா? இந்த மாதிரி எழுதும் போது உங்களை புத்திசாலி என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று நினைத்து விடாதீர்கள், உங்களுடைய அறியாமையே இதன் மூலம் வெளிப்படுகிறது. குஷ்டமப்பா… சாரி… கஷ்டமப்பா….

                    • \\மேலும் உங்களது அதி தீவிரமான கடவுள் “கூச்சலுக்கு “அறிவியலின் பதில் ” மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று ‘ஆன்மீக மூலக்கூறு’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிட
                      ித்ததுடன், ‘இறை நரம்பியல்’ (Neuro Theology) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.”….ஆதலால் தாங்கள் தங்களது கிருஷ்ண கீதா சாரங்களை தவிர்த்து ஒரு நல்ல நரம்பியல் மருத்துவரை பார்க்கவும்.\\ இயற்பியலில் இருந்து இப்போ ன்றம்பியளுக்கு வந்தீங்களா..!! நீங்க படிக்காதது, உங்களுக்கு தெரியாதது பற்றி மட்டும் தான் விவாதம் பண்ணுவேன்னு கங்கணம் கட்டிக் கொண்டு அலையுறீங்க போல!!

                    • \\இறுதியாக அறிவியலின் பலம் மற்றும் கடவுள் இருப்பின் பலம் இரண்டையும் நான் பின்வருமாறு விளக்குகிறேன் ..
                      அறிவியல் = நேற்றைய அறிவியலின் முடிவு, இன்றைய அறிவியலின் தொடக்கம்,இன்றைய அறிவியலின் முடிவு,நாளைய அறிவியலின் தொடக்கம்.
                      கடவுள் இருப்பு = நேற்றைய நம்பிக்கை ,இன்றைய தீவிர நம்பிக்கை, நாளைய அதி தீவிர நம்பிக்கை.\\ இதைக் கெட்டியா புடிச்சிக்கோ, அடுத்த நோபல் பரிசு உனக்குத்தான்.

                    • ///////அந்த ஐன்ஸ்டீனே இறைவன் இருக்கிறான் என்று சொன்னவராயிற்றே, அவரது கொள்கையை நாத்திக கண்மணிகள் எதற்கையா எடுத்தீர்கள்?///////

                      அந்த ஐன்ஸ்டீனே இந்த உலகை உய்விக்கவல்லது நாத்திக சோசலிசம் என்று சமயபுரம் மாரியாத்தா கோவில்ல சூடம் அடிக்காத கொறையா சொன்னவராயிற்றே அந்த ஐன்ஸ்டீனின் கொள்கையை ஆத்திக சிரோண்மணி இரு லார்ட் ஜெயதேவ் தாஸ் எதற்க்கு எடுத்தீர்கள்

                    • ஆத்திக சிரோண்மணி லார்ட் லபக்குதாஸ் அவர்களே இதென்னது கதவிடுக்கில் சிக்கிய எலியைப்போல கீச் கீச் என கர்ண கொடுரமாக ஒரு புலம்பல். Large Hardon Collider என்றால் என்ன என்று படித்துவிட்டு இயற்பியல் ஐன்ஸ்டீன் பற்றி கதைக்கவும். இல்லையெனில் You’ll never you’ve been the butt of all jokes all along

                    • \\Large Hardon Collider என்றால் என்ன என்று படித்துவிட்டு இயற்பியல் ஐன்ஸ்டீன் பற்றி கதைக்கவும்.\\ கண்ணா, LHC [என்ன புரியலையா?!! Large Hardon Collider என்பதன் சுருக்கம் தான் அது. ஹி..ஹி..ஹி…..]. அதோட சிசு என்னன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா உன்னால? அப்புறம் நீ சொன்னியே புரோட்டன் புண்ணாக்கு மோத விடுவது என்று, அதற்குத் தேவையான ஆற்றல் என்னன்னு தெரியுமா? அப்படியே கொஞ்சம் மேலே போயி, இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல் என்னன்னு உன்னால சொல்ல முடியுமா? சரி இப்போ ஒரு ஹை ஸ்கூல் கணக்கு ஒன்னு போடு. புரோட்டனை மோதவிட்டு இந்த ஆற்றலை உருவாக்க இவ்வளவு பெரிய Large Hardon Collider தேவைப் பட்டால், இந்த பிரபஞ்சத்தின் ஆற்றலை உருவாக்க எவ்வளவு பெரிய Large Hardon Collider [அல்லது ஏதோ ஒரு மண்ணாங் கட்டி] தேவைப்படும்னு ஒரு சின்ன கணக்கு போடு ராசா. பதில் என்னன்னு மறக்காம சொல்லு ராசா… பய புள்ளைக்கு எப்படியெல்லாம் புரிய வைக்க வேண்டியிருக்கு… தலை எழுதுடா சாமி….

                    • \\Large Hardon Collider என்றால் என்ன என்று படித்துவிட்டு இயற்பியல் ஐன்ஸ்டீன் பற்றி கதைக்கவும்.\\ LHC சைசு என்னன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா உன்னால? அப்படின்னா இந்த ஹைஸ்கூல் கணக்கையும் போடு மன்மத ராசா….

                      LHC required to create the Universe=[Size of LHC/Energy released in LHC/] *Energy of the Universe.

                    • லார்ட், நீங்கள் சொல்லவருதன் பொருள் என்னவென்றால், ”எனக்கு அதாவது லார்டுக்கு புரியாத விசயம் இந்த உலகத்தில் எவனுக்கும் புரியாது” என்பதுதான். ஹாட்ரான் கொலைடர் லார்ஜா எக்ஸ்டிரா லார்ஜா அல்லது டபிள் எக்சலா என்பதை ஆராய்வதை விட அதன் அந்த ஆய்வின் உள்ளடக்கத்தை உணர முயற்சிக்கலாமே. இல்லயா திண்ணை பெருசு போல ஏலே நாங்கெல்லாம் அந்த காலத்துல பாக்காததா, உனக்கு ஒண்ணும் தெரியாதுடா சின்னப்பயலேன்னு புலம்பிகிட்டே இருக்க வேண்டீதான்.. என்ன குந்தியிருக்கும் திண்ணை உருவப்படும்போது பொத்துன்னு கீழே விழுவதில் பேக்கு பஞ்சராகிவிடும்

                    • \\என்ன குந்தியிருக்கும் திண்ணை உருவப்படும்போது பொத்துன்னு கீழே விழுவதில் பேக்கு பஞ்சராகிவிடும் \\ என்னோட பேக் என்னாகுதுன்னு அப்புறம் பார்க்கலாம் ராசா.. முதலில் நான் சொன்ன கணக்கைப் போடு, உன்னோட பேக் என்னவுது பார்க்கலாம் திரு. குபுக்கு தாஸ் அவர்களே!!

                    • \\லார்ட், நீங்கள் சொல்லவருதன் பொருள் என்னவென்றால், ”எனக்கு அதாவது லார்டுக்கு புரியாத விசயம் இந்த உலகத்தில் எவனுக்கும் புரியாது” என்பதுதான். \\ கைனாட்டுகளுக்குப் புரியும் விஷயம் கூட இந்த புண்ணாக்கு நாத்தீகர்களுக்குப் புரியாது, அதுதான் நான் சொல்ல வருவது. [எனக்கும் சேர்த்து நீயே எல்லாம் பேசிடாதேய்யா…!!

                      \\ஹாட்ரான் கொலைடர் லார்ஜா எக்ஸ்டிரா லார்ஜா அல்லது டபிள் எக்சலா என்பதை ஆராய்வதை விட அதன் அந்த ஆய்வின் உள்ளடக்கத்தை உணர முயற்சிக்கலாமே. \\ நான் முனாடியே சொன்னேன், உனக்குத் தெரியாத வேலையெல்லாம் தெரிஞ்ச மாதிரி காமிச்சு உன்னோட டவுசரை நீயே கிளிச்சுக்காதே ராசான்னு… கேட்க மாட்டேங்கிரியே ராசா……..

                    • லார்ட் இங்க நீதான்யா புரியாம உளரிக்கிட்டிருக்க, ஸ்கேலு வச்சு அளந்துகிட்டிருக்க. இந்த விசயமே இன்னும் உனக்கு புரியலயே. ரொம்ப பாவம்யா நீ. அது போகட்டும் தற்குறியா இருப்பது உன் உரிமை, அதிலே நான் ஏன் தலையிட்டுகிட்டு… வேறொண்டு கேட்டேனே பதிலே இல்ல..

                      ///////அந்த ஐன்ஸ்டீனே இறைவன் இருக்கிறான் என்று சொன்னவராயிற்றே, அவரது கொள்கையை நாத்திக கண்மணிகள் எதற்கையா எடுத்தீர்கள்?///////

                      அந்த ஐன்ஸ்டீனே இந்த உலகை உய்விக்கவல்லது நாத்திக சோசலிசம் என்று சமயபுரம் மாரியாத்தா கோவில்ல சூடம் அடிக்காத கொறையா சொன்னவராயிற்றே அந்த ஐன்ஸ்டீனின் கொள்கையை ஆத்திக சிரோண்மணி இரு லார்ட் ஜெயதேவ் தாஸ் எதற்க்கு எடுத்தீர்கள்

                    • \\அது போகட்டும் தற்குறியா இருப்பது உன் உரிமை, அதிலே நான் ஏன் தலையிட்டுகிட்டு… \\ தற்குறியா..?? அது யார் தெரியுமா..?? தெரிஞ்சுகனுனா, நேரா போயி உன் வீட்டு கண்ணாடியப் பாரு, அதுல தெரியுரானே அவன்தான் உலக மகா தற்குறி…!!

                      \\அந்த ஐன்ஸ்டீனே இந்த உலகை உய்விக்கவல்லது நாத்திக சோசலிசம் என்று சமயபுரம் மாரியாத்தா கோவில்ல சூடம் அடிக்காத கொறையா சொன்னவராயிற்றே அந்த ஐன்ஸ்டீனின் கொள்கையை ஆத்திக சிரோண்மணி இரு லார்ட் ஜெயதேவ் தாஸ் எதற்க்கு எடுத்தீர்கள்.\\ இவ்வாறு அவர் சொன்னதாக லிங்க் இருந்தால் தரவும். அவர் கடைசி வரை இறை நம்பிக்கையாளராகவே இருந்தார், ஒருபோதும் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தழுவியதாகத் தகவல்கள் இல்லை. “God does not play dice with the Universe” என்பது அவருடைய மிக பிரபலமான Quote.

                    • நெட்டுல தேடினா கிடைக்காதா என்ன…
                      ””I am convinced there is only one way to eliminate (the) grave evils (of capitalism), namely through the establishment of a socialist economy”” இது ஐன்ஸ்டீன் சொன்னதுதான். இப்போ சொல்லுங்க நாத்திக சோசலிசத்தை ஆதரிச்ச ஐன்ஸ்டீனை நீங்க துணைக்கழைப்பது முறையோ (நீங்க கேட்ட கேள்வியைத் திருப்பி போட்டீங்)

                    • socialist economy- என்றால் கடவுள் இல்லைன்னு உங்க ஊர்ல அர்த்தமா?

                    • socialist economy- என்றால் கடவுள் இல்லைன்னு உங்க ஊர்ல அர்த்தமா?///

                      இல்லங்க எல்லா ஊர்லயும் அதுக்கு அர்த்தம் சோசலிச பொருளாதாரம்தான் ;))))
                      ஆனா பாருங்க சோசலிச ஆதரவாளர்கள், அதாவது சோசலிஸ்டுகள் கடவுளை ஒரு சிறிப்பு போலீசாக கூட ஏற்பதில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் இங்கே விவாதப்பொருள் அது இல்லைங்க, ஐன்ஸ்டீன் கடவுள் இருக்காருன்னு சொன்னாருங்கறத்துக்காக ஐன்ஸ்டீனோட அறிவியலை நாத்திகர்கள் எடுத்தாளக்கூடாதுன்னு நீங்க சொன்னீங்க.

                      ஐன்ஸ்டீன் நாத்திக சோசலிசத்தின் ஆதரவாளராக இருக்கும் போது அவர் இறை நம்பிக்கை கருத்தை நீங்க ஏன் எடுத்தாளறீங்கன்னு நான் பதில் கேள்வி கேட்டேன்.

                      இந்த இரண்டு கேள்வியை பரிசீலிச்சீங்கன்னா இந்த கட்டுரை என்ன சொல்லவருதுன்னு புரிய வாய்ப்பிருக்கு.

                    • \\ socialist economy- என்றால் கடவுள் இல்லைன்னு உங்க ஊர்ல அர்த்தமா?///

                      இல்லங்க எல்லா ஊர்லயும் அதுக்கு அர்த்தம் சோசலிச பொருளாதாரம்தான் ;))))\\

                      Dictionary entry overview: What does socialist economy mean?

                      • SOCIALIST ECONOMY (noun)
                      The noun SOCIALIST ECONOMY has 1 sense:

                      1. an economic system based on state ownership of capital

                      Familiarity information: SOCIALIST ECONOMY used as a noun is very rare.

                      Meaning:

                      An economic system based on state ownership of capital

                      Classified under:

                      Nouns denoting groupings of people or objects

                      Synonyms:

                      socialist economy; socialism

                      Hypernyms (“socialist economy” is a kind of…):

                      managed economy (a non-market economy in which government intervention is important in allocating goods and resources and determining prices)

                      Hyponyms (each of the following is a kind of “socialist economy”):

                      communism (a form of socialism that abolishes private ownership)

                      International (any of several international socialist organizations)

                      national socialism; Naziism; Nazism (a form of socialism featuring racism and expansionism and obedience to a strong leader)

                      இங்க கடவுள் இல்லைன்னு எங்கே வருது? எத்தனை பேருய்யா இப்படி கிளம்பியிருக்கீங்க?

                    • \\ஆனா பாருங்க சோசலிச ஆதரவாளர்கள், அதாவது சோசலிஸ்டுகள் கடவுளை ஒரு சிறிப்பு போலீசாக கூட ஏற்பதில்லை என்பதுதான் உண்மை.\\ அவங்க பொருளாதாரக் கொள்கையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொன்னால் அவர்களது கடவுள் கொள்கையையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டுமென்று அர்த்தம் அல்ல.

                      \\ஆனாலும் இங்கே விவாதப்பொருள் அது இல்லைங்க, ஐன்ஸ்டீன் கடவுள் இருக்காருன்னு சொன்னாருங்கறத்துக்காக ஐன்ஸ்டீனோட அறிவியலை நாத்திகர்கள் எடுத்தாளக்கூடாதுன்னு நீங்க சொன்னீங்க.\\ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, என்னமோ அறிவியல் அத்தனையும் நாத்தீகர்களால் டெவலப் செய்யப்பட்டது மாதிரி பில்டப் கொடுக்க வேண்டாமென்று தான் சொன்னேன். ஐன்ஸ்டீன் லெவலில் ஒருத்தர் இறைவன் இருக்கிறார் என்று நம்பியது எப்படி என்று யோசியுங்கள் என்று கோடிட்டு காட்டினேன். அவ்வளவுதான்.

                    • தாஸ்,

                      //வங்க பொருளாதாரக் கொள்கையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொன்னால் அவர்களது கடவுள் கொள்கையையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டுமென்று அர்த்தம் அல்ல.///

                      இதைத்தானே கட்டுரையும் சொல்லுது. அப்பவே சீனு இதை சுட்டிக்காட்டினார். கட்டுரையின் சாரமே நாத்திகனாக இருப்பது பெரிய குவாலிபிகேஷன் கிடையாது. சமூக அக்கறையற்ற நாத்திகனை விட சமூக அக்கறையுள்ள ஆத்திகனே மேலானவன் என்றுதானே கூறுகிறது.

                      மேலும் ஐன்ஸ்டீன் குறிப்பிடும் இந்த சோசலிச பொருளாதாரம் அமலுக்கு வரும்போது அது கடவுளை மட்டுமல்ல, அனைத்து பிற்போக்குத்தனங்களையும் போலித்தனமான பாசாங்குகளையும் மூட்டைகட்டிவிடும்

              • \\கடவுள் ஒரு வேளை அமெரிக்காவில் நிலை கொண்டுள்ளாரோ என்று எண்ண தோன்றுகிறது…\\ கடவுள் நிலைகொள்ளாத இடமே எது அன்பரே? ஒவ்வொரு அணுவிலும் அதற்கும் சிறிய இடத்திலும் அவர் வியாபித்திருக்கிறார். இந்த பௌதீகப் பிரபஞ்சத்துக்கு வெளியில் உள்ள பர லோகத்திலும் அவர் வியாபித்திருக்கிறார்.

              • \\சமூகத்தில் பால் அவர் கொண்டிருக்கும் உறவே அந்தக் கருத்துக்களை கட்டியமைக்கிறது. எனினும் அநேகர் இத்தகைய கருத்துக்களை தானே யோசித்து வந்தடைந்த ஒன்று என்று கருதுகிறார்கள்.\\ நான் யோசித்து தேர்ந்தெடுத்தது பகவத் கீதையை மட்டுமே, அதற்க்கு மேல், கீதை என்ன சொல்கிறதோ அதுவே என் வழி, நானாக யோசிக்க ஒன்றுமில்லை. [எங்களுக்கும் சேர்த்து நீங்களே யோசித்து தீர்ப்பு சொல்லிவிடாதீகர்கள் அன்பர்களே!!]

                • போர்களத்தில் தனது உறவினரை கொல்ல அருவருத்த அர்ச்சுனனை பார்த்து பேசும் கிருஷ்ணனின் பகவத் கீதை , நீ ஆன்மாவை அழிக்கவில்லை உயிரைத்தான் அழிக்கிறாய் அது தவறு அல்ல என்கிறது .

                  அதாவது இல்லாத ஆன்மாவை காட்டி இருகின்ற உயிரை பறிகின்ற உத்திதான் அது

                  வருணாசிரமத்தை காக்கவும் பார்பன அட்டுழியங்களை கோட்பாட்டு ரீதியில் நியாய படுத்தவும் உருவான ஏமாற்று பகுத்தறிவு கோட்பாடுதான் பகவத் கீதை என்னும் மாயாவாதம்

                  • \\போர்களத்தில் தனது உறவினரை கொல்ல அருவருத்த அர்ச்சுனனை பார்த்து பேசும் கிருஷ்ணனின் பகவத் கீதை , நீ ஆன்மாவை அழிக்கவில்லை உயிரைத்தான் அழிக்கிறாய் அது தவறு அல்ல என்கிறது .\\

                    கீழ்கண்ட குற்றம் புரிபவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் கொல்லலாம் என்று வேதங்கள் கூறுகின்றன.
                    உன்னுடைய வீட்டிற்கு தீ வைத்தவன்.
                    நீ உண்ணும் உணவில் விஷம் கலந்தவன்.
                    உன் மனைவியை அபகரிக்க முயன்றவன்.
                    உன் சொத்துக்களை உன்னிடமிருந்து தந்திரமாக பிடுங்கிக் கொண்டவன்.
                    துரியோதனன் இவை அத்தனியையும் பாண்டவர்களுக்குச் செய்தான். மேலும் அவனுடன் கூட்டு சேர்ந்து பாண்டவர்களுக்கு எதிராக போரிட்ட அனைவரும் இந்தக் குற்றங்களுக்கு உடந்தையானவர்கள். இந்தச் சமயத்தில் தர்மத்தை நிலை நாட்டும் பொருட்டு கொல்லத் தக்கவர்களை அவர்கள் உறவினர்களே ஆனாலும் கொல்வதில் தப்பேயில்லை என்று அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். இன்றைக்கும் நம் நாட்டில் சமூக விரோதக் கும்பல்கள் போலீசாரால் கொல்லப் படுகின்றனர். உறவினன் என்றாலும் கூட ஒரு நேர்மையான காவல் அதிகாரி ஒரு குற்றவாளியை சுட வேண்டிய கட்டாயத்தில் சுடத் தயங்க மாட்டார். கீதை சொல்வதும் இதைத்தான்.

                  • \\வருணாசிரமத்தை காக்கவும் பார்பன அட்டுழியங்களை கோட்பாட்டு ரீதியில் நியாய படுத்தவும் உருவான ஏமாற்று பகுத்தறிவு கோட்பாடுதான் பகவத் கீதை என்னும் மாயாவாதம்.\\ வர்ணாஸ்ரமம் என்றால், மனித சமூகத்தை அவரவர் தகுதிகேற்ப்ப பிராமணன், சத்ரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்று நான்கு பிரிவுகளாக பறிப்பதாகும். அது தகுதி அடிப்படையில் நடக்காமல், இன்றைக்கு பிறப்பு அடிப்படையில் நடப்பது துரதிர்ஷ்டம். பிரிவுகளே இல்லாத சமூகத்தை எந்தக் கொம்பனாலும் உருவாக்க முடியாது. ஆறு முறை முதலவரானேன், பெரியாரின் தொண்டன் என்று பீற்றிக் கொள்ளும் கருணாநிதி கூட மலத்தை சுத்தம் செய்யும் கார்பரேஷன் தொழிலாளிகளை விடுவிக்க முயற்சி கூட செய்ய வில்லை. எல்லோர்ரும் சமம் என்று சொன்ன சோவியத் ரஷ்யா இன்றைக்கு எந்த கதியானது என்று உங்களுக்கே தெரியும், மாறாக கொஞ்சம் வளைந்து கொடுத்த சைனா இன்றைக்கு உலகின் முன்னணி நாடு. உழைப்பு திறமைக்கு தகுந்த ஊதியம், முன்னேற்றம் என்பது தான் நிலைத்து நிற்கும். மற்றபடி வர்ணாஸ்ரமத்தில் சொன்ன பிரிவுகள், உடலில் கைகள், கால்கள், தலை என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பணி இருக்கிறது, அது அது அதன் பணியைச் செய்யட்டும், எல்லா உறுப்புகளும் சமமே. உடலில் தலைக்கு நூறு ருப்பை செலவு செய்து வைத்தியம் பார்க்கும் ஒருத்தன் அடுத்து காலுக்கு பத்தாயிரம் செலவு ஆகும் என்றாலும் வைத்தியம் செய்து சரி செய்யத்தான் பார்ப்பான், வெட்டிப் போட்டு விடுங்கள் என்று சொல்ல மாட்டன். அதனால் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை.

                  • மாயா வாதம் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியாமல் பயன்படுத்தி இருக்கிறீர்கள். ஆதி சங்கரர் போதித்த கொள்கைக்குப் பெயர் மாயா வாதம். [But this Mayavada was thoroughly defeated later by Madhva and Ramanuja] அதாவது வீடு பேரு பெற்ற பின்னர் ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே என்பது. நீங்கள் இங்கே குறிப்பிட்டது அல்ல.

                • \\நான் யோசித்து தேர்ந்தெடுத்தது பகவத் கீதையை மட்டுமே\\
                  தாஸ் இந்த கட்டுரையிலிருந்து சில வரிகள் ….
                  “ஆக, கடவுளை நீங்கள் கண்டடைந்ததே தனிப்பட்ட முறையில் அல்ல (பகவத் கீதை மூலமாக )எனும் போதே அதில் விருப்பம் மட்டும் ‘தனிப்பட்டு’ இருக்க முடியாது.”

                  \\அதற்க்கு மேல், கீதை என்ன சொல்கிறதோ அதுவே என் வழி, நானாக யோசிக்க ஒன்றுமில்லை. [எங்களுக்கும் சேர்த்து நீங்களே யோசித்து தீர்ப்பு சொல்லிவிடாதீகர்கள் அன்பர்களே!!]\\
                  -நீங்கள் யோசிக்க ஒன்றும்மில்லை …..அனால் நாங்கள் யோசிக்க நிறைய உள்ளது .
                  -ஆரம்பத்திலிருந்து தாங்கள்தான் அனைவருக்கும் தீர்ப்பு சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் ….அது
                  \\”கண் முன்னே உள்ள அற்ப்புதங்கள் அத்தனையும் பார்த்தும் கூட படைத்தவன் இல்லை என்று சொல்லும் அத்தனை பயல்களும் கூமுட்டைகள் தான்.”\\

    • //அதை மறுத்து, இறைவன் இருக்கிறான், சமூக பிரச்சினைகள் வேறு, இறைவன் இருக்கிறானா இல்லையா என்பது வேறு, இதை இரண்டையும் கலக்க வேண்டாம் என்று நாம் எமது கருத்துகளைப் பதிவு செய்கிறோம். அவ்வளவே. கடவுளால் ஆகக் கூடியது என்ன? அவனன்றி ஒரு அணுவும் அசையாது. புவியில் பிறப்பு, வியாதி, மூப்பு [Old age], இறப்பு எல்லாம் இறைவன் உருவாக்கிய நியதி. //

      முன்னுக்குப் பின் முரணாக அல்லவா இருக்கிறது!! சமூக பிரச்சினை வேறு, இறைவன் வேறு என்கிறீர்கள். ஆனால் பின்னாடியே அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்கிறீர்கள்.

      • கசாப்புக் கடையில் ஆடு, அதை அறுப்பவன். இருவருமே கடவுளுடைய படைப்புதான். அவர் ஏன் அந்த ஆட்டை காக்க வில்லை? வெட்ட அனுமதித்தார்? ஏனெனில் மாமிசம் சாப்பிடும் ஆசை மனிதனுக்கு இருக்கிறது. அது சரி, அந்த ஆடு படும் கஷ்டத்துக்கு கணக்கு? பின்னொரு பிறவியில் அதை வெட்டியவன், விற்றவன், சமைத்தவன், தின்னவன் எல்லோரும் ஆடுகளாக வரும்போதும் அந்த ஆடு கறிக் குழம்பு சாப்பிட்டு கணக்கைத் தீர்க்கும். கஷ்டத்தை இன்றைக்கு கொடுப்பவன் பின்னொரு நாளில் அனுபவிப்பான், இன்றைக்கு கஷ்டப் படுபவன், இதற்க்கு முன்னால் செய்த தவறுக்கு தண்டனை அடைகிறார். அம்புட்டுதேன்…

    • //வாழ்வதற்க்கென்று ஒரு நோக்கம் [purpose] இல்லையா? அந்த நோக்கத்தை கண்டுபிடிப்பது தான் மனிதனாகப் பிறந்ததர்க்கே அர்த்தம்.//

      இதுவரை நீங்கள் சொன்னதிலேயே அருமையான வாசகம். ரசித்தேன். பிடித்திருக்கிறது.
      “மனிதனாகப் படைக்கப்பட்டதற்கே அர்த்தம்” என்று ‘உங்கள் பாணி’யில் சொல்லியிருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரஸியம் கூடியிருக்கும்!!!

  39. கடவுள் என்றால் என்ன? கடவுளை வணங்ககலாமா ? கூடாதா? மதங்களில் சொல்லபடுகின்ற கடவுள் உண்மையா ? எனறு பல கேள்விகள் எல்லோர் மனங்களிலும் இருக்கும் ஒன்று..

    என்னதான் மனிதன் இந்த காலதில், அறிவும் தொளினுட்பவளர்ச்சியும் பரிணாம வளர்ச்சியும் அடைந்து இருந்தாலும். (மதம்.கடவுள்) என்ற ஒரு விடயத்தில் மட்டும்தான் போதிய தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரயது, அறியான்மையாகவே இருக்கிறார்கள் என்பது உண்மை.

    கடவுள்னா என்ன நமக்கு மேலே இருக்க கூடிய
    ஒரு பெரிய சக்தி. அதைதான் கடவுள் என்கிறோம்.
    அதற்கு இன்னொரு பெயர் இருக்கு இயற்கை என்று.
    அந்த கடவுளுக்கு உருவம் இல்லை.
    நான் உயிர்வால முக்கிய காரணம் காற்று, அதனால் அந்த காற்றை நான் உருவம் வைத்து வணங்க முடியுமா ? முடியாது ? காருக்கு உருவம் இல்லை. அதை நாம் உணரத்தான் முடியும். இந்த மாறி பல சக்திகள் சேர்ந்ததான் இயற்கை. இதுதான் கடவுள்,

    அந்த இயற்கையின் பரிநாமட்டில் தான் இந்த உலகம் உயிரினம் தோன்றி இருக்கு. இந்த இயற்கை சக்தியைதான் கடவுள் என்கிறோம். இந்த கடவுளுக்கு உருவம் இல்லை.
    இந்த உருவம் இல்லாத சக்தியை உணர மட்டுமே முடிய
    கூடிய சக்தியை. சில மனிதர்கள் மதங்கள் கடவுள் என்றும். கடவுளைய தூது என்றும். அதற்கென்று சில மதங்களை உருவாக்கி கொண்டு. சில மனிதர்களை கடவுளுடைய தூது என்று சொல்லி கொண்டு இருக்காங்க.

    இதில் அவர்கள் சொல்லும் கடவுளை மதங்களை ஏற்கா விட்டால். சொர்க்கம் நகரம். மறு. பிறப்பு. போன. ஜெஞ்சம். தலை எழுத்து.என்று இவர்காலே உருவாக்கி கொண்டு இவைகளை நம்பி கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அது அவர்களின் அறியான்மை அவர்கள் சொல்லும் கடவுளுக்கும் உண்மையான நான் சொன்ன இந்த கடவுளுக்கும் சம்பந்தம் இல்லவேயில்லை அப்போ கடவுள் இருக்கார். நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது. அதைதான் கடவுள் என்கிறோம். இயற்கை என்கிறோம் அந்த கடவுளை பார்க்க முடியாது உணரத்தான் முடியும் உருவம் இல்லை அந்த கடவுளை வணங்க வேண்டும்.

    அதற்கு ஒரு மதம் சார்ந்து இருக்க வேண்டும். என்று இந்த கடவுள் சொல்லவில்லை இப்படிதான். இருக்க வேண்டும். என்று சில மனிதர்கள் புரட்சியாளர்கள். மாமனிதர்கள். அறிவாளிகள். மக்களுக்கவே வாழ்ந்தவர்கள் வழிநடதியவர்கள். சில உன்னத மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள், அவர்கள் மக்கள் இப்படிதான் வாழ வேண்டும் என்று அவர்கள் சொன்ன போதனையை மனிதர்கள் ஏற்று கொள்கிறார்கள். அவர்களையே கடவுளாகவும். கடவுளின் தூது வாகவும் நம்பி கொண்டு இருக்கிறார்கள். ஏற்றும் கொண்டு இருக்கிறார்கள்.

    உதாரணம் (ஏசு , நபிகல்நாயகம். புத்தர். இன்னும் சில இருக்கிறது இப்படிதான் பல கடவுள்கலும் கடவுளைய தூதர்களும் உருவானார்கள். மனிதர்களால் உருவாக்கி கொள்ள பட்டர்கள். இவர்கள் கடவுளும் அல்ல கடவுளின் தூதர்களும் அல்ல மக்களை நல்வழி படுத்த அவர்களின் உரிமைக்க போரிடிவர்கள். புரட்சியாளர்கலை தான் இவர்கள் இப்படி கடவுள் என்றும் கடவுளின் தூது என்றும் நம்புகிறார்கள் இவர்களை கடவுளாக நம்புவது இவர்களின் அறியான்மை முட்டாள் தனம் சுய புத்தி இல்லாதவர்களாக வே இன்னும் இருக்கிறார்கள். எனவே உண்மையான கடவுளை உணரத்தான் முடியும் அதை வனங்கவோ. தொலவோ .பிராதநை .செய்யவோ கல் உருவ சிலைகளை வணங்க்கவோ, ஒரு மதம் சார்ந்தோ இருக்க வேண்டிய அவசியமோ கட்டாயமும் இல்லை அப்படிதான் இருக்க வேண்டும் என்று சில மூடர்கள்தான் சொல்லி இருக்கிறார்கள்.

    மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே எதை எதை எல்லாம் பார்த்து பயந்தானோ அவற்றை எல்லாம் வணங்கி வந்தான் இந்த வணக்கமுறை பல மாற்றங்களுக்கு பின்பு மதங்கள் என உருவாகியது அன்றில் இருந்து இன்றுவரை கடவுள் இருக்கு என்று சொல்லுபவர்களும் சரி இல்லை என்று சொல்பவர்களும் சரி இத்தனை நூற்றாண்டாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை காரணம் பல அழிவுகளையும், பல பிரச்சனைகளையும் மனிதன் சந்திக்கும் பொது மதங்கள் சொல்வது போல கடவுள் அவதாரம் எடுப்பார் எடுப்பார் என்று சொல்லி சொல்லியே காலம் போனதுதான் கடவுள் அவதாரம் வரவில்லை அவர்கள் பெயரை சொல்லி பிரேமானந்தா, நித்தியானந்தா அதேநேரம் இந்த பிறப்பு ,இறப்பு மனிதனால் தடுக்கவும் முடியவில்லை இப்படியான பல விடயங்களுக்கு இன்னும் அறிவியலால் விளக்கம் சொல்லமுடியாத பட்சத்தில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களும்,இருக்கு என்று சொல்பவர்களும் பலவினமானவர்களாகவே இருக்கிறார்கள் ……நிற்க

    இந்த உலக வாழ்கையில் கடவுளின் ஆதிக்கம் இருக்க இல்லையா என்று கேட்டால் இல்லை(நேரடியாக இத்தனை நூற்றாண்டை எந்த உதவியாவது யாருக்காகவும் கடவுள் செய்தார் என்பதுக்கு எந்த சம்பவமும் இல்லை ) ……… ஆனால் இந்த விதி என்றால் என்ன? மனித வாழ்வில் என்ன என்ன சம்பவங்கள் நடக்கவேண்டும் என்று எல்லா விடயங்களும் ஏற்கனேவே எழுதி வைக்கப்பட்டு விட்டது என்பதா? கண்டிப்பாக இருக்க முடியாது , எல்லாவற்றையும் எங்களை கடவுள் என்ற ஒருவன் செய்ய வேண்டும் என்று விதி வடிவில் எழுதி வைத்துவிட்டு பாவ புண்ணிய கணக்கு எப்படி போடா முடியும்??? இல்லை போனஜென்ம பலனின் படி என்று நீங்கள் விளக்கம் சொல்லலாம் அப்படியானால் முதல் பிறவி என்றால் அவர்களுக்கு விதி என்று ஒன்று இல்லையா? அவர்களுக்கு முதல் ஜென்மம் இல்லையே? அப்படியானால் அவர்களுக்கு விதி எது?

    அப்படியானால் இந்த விதியை மதியால் வெல்வது என்பது என்ன?
    என்னை பொறுத்தவரையில் இந்த விதி என்பது கோட்பாடுகள் அதாவது சூரியனை பூமி சுற்றுகிறது (சூரியனின் ஈர்ப்பு) ,பூமியை சந்திரன் சுற்றுகிறது(புவி ஈர்ப்பு) இவை இயற்கை கோட்பாடுகள் இதில் இந்த புவி ஈர்ப்பு என்பதை எடுத்துகொள்வோம், ஒரு கல்லை மேலே போட்டால் அது கிழே விழும் இது விதி அதாவது அந்த கல்லு விழும் இடத்தில் எங்கள் தலை இருந்தால் அது தலையில்தான் விழும் இந்த விதியை மேலே போன கல்லு கிழேதான் வரும் அதுவும் சரியாக தலைக்கு மேலே போடுவதால் அது தலையில்தான் விழும் என்று மதிகொண்டு(அறிவு) விலகி நின்றாள் அந்த கல்லு தலையில் விழுவதை தவிர்க்கலாம். இப்படி வாழ்வில் எல்லா விடயங்களுக்கும் ஒவொரு உண்மைத்தன்மை உண்டு அதில் சில எங்களுக்கு தெரிந்ததால் விலகி நிக்கிறோம் தெரியாதவற்றை தலையில் வாங்கிக்கொள்கிறோம் அதன் பின் எங்கள் அறியாமையை நேரப்பிழை, காலப்பிழை ,ராசி சரியில்லை அப்படி இப்படி என்று உங்கள் வாழ்கையை கேள்விக்குறி
    ………….தற்போது இங்கு அறிவுதான் கடவுள் அறிவு இருந்தால் உண்மையான கடவுளை உணர முடியும்

  40. நான் மனிதனாக வாழ்ந்து கொண்டிருப்பதற்காக

    சமூகத்தை நேசிக்கின்றேன்.

    சமூகத்தை நேசிப்பதன் மூலம்

    மனிதர்களை நேசிக்கின்றேன்.

    மனிதர்களை நேசிப்பதன் மூலம்

    நானும் மனிதனாக இருப்பதை நேசிக்கின்றேன்.

    நான் மனிதனாக இருப்பதை நேசிப்பதன் மூலம்

    சமூகமும் மனிதனாக இருப்பதை நேசிக்கின்றேன்.

    சமூகமும் மனிதனாக இருப்பதை நேசிப்பதன் மூலம்

    பொதுவுடைமையை நேசிக்கின்றேன்

    பொதுவுடைமையை நேசிப்பதன் மூலம்

    சுரண்டலை வெறுக்கின்றேன்

    சுரண்டலை வெறுப்பதன் மூலம்

    கடவுளை வெறுக்கின்றேன்.

    • கடவுளை ஏன் வெறுக்கவேண்டும்?! ஒவ்வொருவனும் அடுத்தவனை சுரண்டக் கடவது என்று கடவுள் சொன்னாரா?!

      • தனக்குப் போக மீதம் கொடுத்து
        உழைப்பைச் சுரண்டுபவன் ஆண்டை
        தான் நாடியவருக்கு நாடுவதாக
        உணர்வைச் சுரண்டுபவன் கடவுள்

  41. ஜெயதேவ் அவர்கள் கடவுள் இருக்கிறார் என்பதற்கு வைக்கும் வாதம் – படைப்பு என்று ஒன்று இருந்தால் படைத்தவன் என்ற ஒருவன் இருந்தே தீர வேண்டும் என்பது. ஆனால் அந்த ‘படைத்தவன்’ எப்படி உருவானான், அவனைப் படைத்தது யார் என்று கேட்டால் அவர் என்ன சொல்வாரென்று தெரியவில்லை. அவனின்று ஓர் அணுவும் அசையாது.. அவர் ஒரு powerful autocrat என்கிறார். பல லட்சம் கோடி உயிரினங்கள் உருவானதும், கல்லும் மலையும் கடலும் உருவானதும் ஆகிய இப்பிரம்மாண்ட படைப்பினை உருவாக்கியது கடவுள் என்கிறார். ஓரிடத்தில் இயற்கையாய் உருவானது என்று பல்டியடித்தார். அது வேறு விஷயம். அந்த இயற்கையை, இயற்கைக்கான மூலப்பொருட்களையே உருவாக்கியது கடவுள்தான் என்று அந்த பல்டியை சரிசெய்துகொண்டார்.

    கை கால்கள் இயங்குவது, இதயம் ரத்தத்தை பம்ப் செய்வது, நுரையீரல் மூச்சிற்கு காரணமாய் அமைவது, மனிதமூளை செயல்படும் திறன் என எல்லாமே கடவுளின் நியதி என்றும் அவர் உருவாக்கிய படைப்பு என்றும், அவர் எழுதிய புரொகிராம் என்ற பொருளிலும் கூறுகிறார். எல்லாமே அவர் சொற்படி நடப்பினும் இவ்வுலகில் தீமைகள் மட்டும் அவர் செய்வதில்லை.. அவரால் உருவாக்கப்பட்ட மனிதன் தான்தோன்றித்தனமாய் செயல்பட்டு தீமைகளை உருவாக்கிவிட்டான் என்கிறார். அவர் எழுதிய புரொகிராம் தானே செயல்பட்டு மேற்கொண்டு கோடிங்குகளை எழுதித் தள்ளிவிட்டது போல! எந்திரன் ரோபோ தன்னைத்தானே பல்கிப் பெருக்கிக்கொண்டதைப் போல.

    சமூக அவலங்களுக்கு, குடும்ப குழப்பநிலைகளுக்கு, பசி பட்டினிகளுக்கு, ஊழல்களுக்கு, சுரண்டல்களுக்குக் காரணம் கடவுள் இல்லை, அவரால் அதை சரிசெய்ய இயலாது, அதை அவர் சரிசெய்யத் தேவையுமில்லை என்று அவரே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். அந்தத் தேவையில்லாதக் கடவுளை ஓரங்கட்டி வையுங்கள் என்று சொன்னால் மட்டும் மீண்டும் வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார், உலகம் இயங்குவதற்குக் காரணமே கடவுள்தானென்று!! ஸ்..ஸப்பா..!

    • \\ஆனால் அந்த ‘படைத்தவன்’ எப்படி உருவானான், அவனைப் படைத்தது யார் என்று கேட்டால் அவர் என்ன சொல்வாரென்று தெரியவில்லை. \\ தற்போதைய விஞ்ஞானி கருத்துகளின் படியே கூட, [நீங்கள் அதைத்தானே நம்புவீர்கள்!!] இந்த பிரபஞ்சம் எப்போதும் இருக்கவில்லை[Not existing eternally], ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்னால் தோன்றியது. [The Universe has a definite date of beginning]. இந்த பிரபஞ்சமானது குறிப்பிட்ட விதிகளின் படி இயங்குகிறது. அந்த விதிகள் எவ்வாறு உருவாயின? புவி ஈர்ப்பு விசை இவ்வளவுதான் இருக்க வேண்டும், எலக்டிரானின் மின்னூட்டம் [Charge] இவ்வளவுதான் இருக்க வேண்டும், ஒளி இன்ன வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று வரையறுத்தது எது? என்றெல்லாம் கேள்வி கேட்டால், விஞ்ஞானத்தின் பதில், “அது அப்படித்தான்” என்பதேயாகும். ஆனால் இவர்கள் மட்டும், “இறைவனைப் படைத்தது யார்” என்று கேட்பார்களாம், அதற்க்கு “அது அப்படித்தான்”என்று பதில் சொல்லக் கூடாதாம். எனக்கு வந்தால் அது இரத்தம், உனக்கு வந்தால் அது தக்காளி சட்னி… நல்ல நியாயமையா இது. :((

    • \\ ஓரிடத்தில் இயற்கையாய் உருவானது என்று பல்டியடித்தார். அது வேறு விஷயம். அந்த இயற்கையை, இயற்கைக்கான மூலப்பொருட்களையே உருவாக்கியது கடவுள்தான் என்று அந்த பல்டியை சரிசெய்துகொண்டார்.\\ This material nature is working under My direction, O son of Kunti, and it is producing all moving and unmoving beings. By its rule this manifestation is created and annihilated again and again. [BG 9.10]. இதற்க்கெல்லாம் பதில் என்னைக்கோ சொல்லியாச்சு சார், நாம ஒன்னும் புதுசா பல்டி அடிக்க வேண்டியதில்லை!! நாத்தீகனிடம் சில சமயம் நாத்திக மொழியில் பேச வேண்டியுள்ளது என்ன செய்ய?

      • திரேதாயுகத்திலிருந்து இன்னும் மேற்கோள் வரலியேன்னு நினைச்சேன்! வந்துடுச்சே!!! 🙂

        • அதுசரி, நீங்க நேரா போய் பெரியார் சிலைக்கு ஒரு மாலையைப் போட்டுவிட்டு, அண்ணா சமாதியில் படுத்திருக்கும் அண்ணாவின் எழும்புகூட்டுக்கு ஒரு மலர் வளையம் வைத்து மரியாதை செய்துவிட்டு [முடிந்தால் அந்த எழும்புக் கூட்டுடன் பேசிவிட்டு] நேராக சாமி சிலைக்கு மாலை போடுபவன் முட்டாள், காட்டுமிராண்டி என்று பேசும் கூட்டத்துக்கு தலைமை தாங்கப் போகலாம் சார்.

    • \\கை கால்கள் இயங்குவது, இதயம் ரத்தத்தை பம்ப் செய்வது, நுரையீரல் மூச்சிற்கு காரணமாய் அமைவது, மனிதமூளை செயல்படும் திறன் என எல்லாமே கடவுளின் நியதி என்றும் அவர் உருவாக்கிய படைப்பு என்றும், அவர் எழுதிய புரொகிராம் என்ற பொருளிலும் கூறுகிறார். எல்லாமே அவர் சொற்படி நடப்பினும் இவ்வுலகில் தீமைகள் மட்டும் அவர் செய்வதில்லை.. அவரால் உருவாக்கப்பட்ட மனிதன் தான்தோன்றித்தனமாய் செயல்பட்டு தீமைகளை உருவாக்கிவிட்டான் என்கிறார். அவர் எழுதிய புரொகிராம் தானே செயல்பட்டு மேற்கொண்டு கோடிங்குகளை எழுதித் தள்ளிவிட்டது போல! எந்திரன் ரோபோ தன்னைத்தானே பல்கிப் பெருக்கிக்கொண்டதைப் போல.\\ மனிதன் எல்லோருமே ஒரே மாதிரி இயங்கினால், அவன் தான் நிஜமான எந்திரன் ஆகி விடுவான். நிஜ மனிதன் ரோபோ அல்ல. தன்னிச்சையாகச் செயல்படும் சுதந்திரம் அவனுக்கு இறைவன் கொடுத்துள்ளார். அவனை இறைவன் கட்டாயப் படுத்துவதில்லை. இறை வழியில் வேண்டுமானாலும் நடக்கலாம், இல்லை வீரமணி பின்னாலும் போகலாம். வீரமணிக்கு வீட்டில் பூஜை செய்ய அவர் மனைவி இருக்கிறார். கருணாநிதிக்கு அறத்து ஒவ்வொரு மனைவியரும் ஒரு கோவிலுக்குச் செல்கிறார்கள், அவரும் மஞ்சள் துண்டு போட்டு பரிகாரம் செய்கிறார். இவர்கள் பேச்சைக் கேட்டு குட்டிச் சுவரைப் போன உங்களுக்குத் தான் நாதியே இல்லை. 🙁

    • \\சமூக அவலங்களுக்கு, குடும்ப குழப்பநிலைகளுக்கு, பசி பட்டினிகளுக்கு, ஊழல்களுக்கு, சுரண்டல்களுக்குக் காரணம் கடவுள் இல்லை, அவரால் அதை சரிசெய்ய இயலாது, அதை அவர் சரிசெய்யத் தேவையுமில்லை என்று அவரே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். அந்தத் தேவையில்லாதக் கடவுளை ஓரங்கட்டி வையுங்கள் என்று சொன்னால் மட்டும் மீண்டும் வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார், உலகம் இயங்குவதற்குக் காரணமே கடவுள்தானென்று!! ஸ்..ஸப்பா..!\\ உனக்கு ஒளிக்கு சூரியனைப் படைத்து, குடிக்க நீரைப் படைத்து, உண்ண தாவரங்களைப் படைத்து, உனக்கு உதவ விலங்குகளைப் படைத்து இத்தனை சவுகரியமும் கொடுத்தால் நீ என்ன செய்தாய்? ஆற்றில் ரசாயன ஆலையின் விஷக் கழிவுகளைக் கலந்தாய், விவசாய நிலத்தில் பூச்சி மருந்து உரம் போட்டாய், மீதி இருந்த நிலத்தை பிளாட்டு போட்டாய், ஆற்று மணலை கேரளாவுக்குக் கடத்தினாய்… இத்தனையும் செய்து குட்டிச் சுவராக்கி விட்டு கடவுளை ஏனையா குறை சொல்கிறாய்?

  42. வாழ்க்கையைப் பற்றிய புரிதல் வந்துவிட்டாலே, வாழ்க்கை வாழ்வதன் அர்த்தம் தெரிந்து விட்டாலே அங்கு கடவுள் இ‏ருப்பைப் பற்றிய கேள்வியே எழாது எ‎ன்பது என் கருத்து.

    ஓர் இணைய இதழில் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி.. சற்றே சுருக்கிய வடிவில் :-

    //”நமது பிறப்பு எ‎ன்பது நாமே எதிர்பாராதது. இறப்பு எ‎ன்பது எப்போது என்று தெரியாதது. இடைப்பட்ட காலத்தை ‘வாழ்ந்து’ கழிக்க வேண்டும் எ‎ன்கிறார்கள். ‏இதில் கடவுளி‎ன் பங்கு என்ன..? அல்லது அவரது பங்கைப் பற்றிய ஆராய்ச்சியி‎ன் அவசியம்தான் என்ன?”

    அதானே..! கடவுளைப் பற்றி ஏ‎ன் ஆராய வேண்டும்? அந்தக் காலத்தில் கடவுளைப் பற்றி பற்பல செய்திகளைச் சொல்லி வைத்தார்கள் எ‎ன்றால் அதற்கு அர்த்தம் எ‎ன்னவாக இருக்க முடியும்?

    சமூகம் எந்தக் காலத்திலும் த‎ன் கட்டுப்பாடுகளை மீறினால் ஏற்படும் விளைவுகள் அனைவரும் நிம்மதியாக வாழத் தகுந்தவையாக இருக்காது எ‎ன்பதற்காக சொல்லி வைத்தார்கள் எ‎ன்று எடுத்துக் கொள்வோம். அப்படியெ‎ன்றால், எ‎ன்னளவில் நா‎ன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறே‎ன்; யாரையும் வாரி விட்டு முன்னேற வேண்டுமெ‎ன்று நா‎ன் நினைப்பதில்லை; என்னைத் தள்ளிவிட்டு, மிதித்துத் தள்ளி மு‎ன்னேறிச் செ‎ன்றவர்களையும் பு‎ன்சிரிப்போடுதான் காண்கிறே‎ன்; கோப உணர்ச்சி கொள்வதில்லை; எனக்கான வேலை எ‎ன்னவென்பதை நன்கு அறிந்திருக்கிறே‎ன்; அதை சிறப்பாகச் செய்வதற்கான வழிவகைகளைத் தெரிந்திருக்கிறே‎ன்…. அப்புறம் ஏ‎ன் நான் கடவுளி‎ன் இருப்பைப் பற்றி யோசிக்க வேண்டும்?

    எனக்காக கொடுக்கப்பட்ட இந்த ‘இடைப்பட்ட’ காலத்தை நா‎ன் எப்படிக் கழிக்கப் போகிறே‎ன்; எப்படிக் கழிக்க வேண்டும் என்ற ஒரு அழகான சிந்தனை வந்துவிட்டாலே சமுதாயத்தில் ஆத்திகம், நாத்திகம் போ‎ன்ற சொற்களும் அவை சார்ந்த கோட்பாடுகளும் வழக்கொழிந்து விடுமெ‎ன்று நினைக்கிறே‎‎‎ன். சுருக்கமாகச் சொ‎ன்னால் வாழ்க்கையின் அர்த்தத்தை (meaning of life) உணர்ந்து விட்டாலோ அல்லது ( வாழ்க்கையின் நோக்கம் (purpose of life) தெரிந்து விட்டாலோ அழகான, அருமையான, அட்டகாசமான சமுதாயம் அமைந்து விடுமென நினைக்கிறே‎‎‎‎ன். கடவுளைப் பற்றி சிந்திப்பதை விட, ‘கடவுள்த‎ன்மை’ என்றால் எ‎ன்ன என்று நம் மானுட சமுதாயம் பல விஷயங்களை வரையறுத்து வைத்திருக்கிறதே.. அவற்றைப் பி‎ன்பற்றினாலே நாம் கடவுளாகிவிட மாட்டோம்?//

    • \\நமது பிறப்பு எ‎ன்பது நாமே எதிர்பாராதது. இறப்பு எ‎ன்பது எப்போது என்று தெரியாதது.\\ ஏதாவது பிசிக்ஸ், கெமிஸ்டிரி சமன்பாடுகளை வச்சு இதற்க்கெல்லாம் பதில் கண்டுபிடியுங்க சார்!!

      • //ஏதாவது பிசிக்ஸ், கெமிஸ்டிரி சமன்பாடுகளை வச்சு இதற்க்கெல்லாம் பதில் கண்டுபிடியுங்க சார்!!//

        அதைக் கண்டுபிடிக்கத் தேவையேயில்லை என்பதுதான் ஐயா என் நிலைப்பாடு!! அதைத் தெரிஞ்சுக்கிட்டு நாம என்ன செய்யப்போறோம்! இதைக் கண்டுபிடிக்கணும்னு நான் எங்கேயாவது சொன்னேனா? எதுக்கு இப்போ இந்த ஐடியா மணி வேலை?

    • \\சமூகம் எந்தக் காலத்திலும் த‎ன் கட்டுப்பாடுகளை மீறினால் ஏற்படும் விளைவுகள் அனைவரும் நிம்மதியாக வாழத் தகுந்தவையாக இருக்காது எ‎ன்பதற்காக சொல்லி வைத்தார்கள் எ‎ன்று எடுத்துக் கொள்வோம்.\\ இது நீங்கள் கர்ப்பித்துள்ள அர்த்தம். ஒரு வீட்டைக் கட்டிய பின்னர் நெருப்பு வைத்து எரிக்கப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அந்த வீட்டை எப்படி வேண்டுமானாலும் கட்டலாமே, இப்படித்தான் கட்ட வேண்டும் என்று ஒரு நியதியில் அர்த்தமேயில்லையே? இறுதியில் மரணம் என்றால் நீ எப்படி வாழ்ந்து செத்தால் தான் என்ன? ஆக, இறை நம்பிக்கையுடன் வாழ வேண்டுமென்பது வெறும் நிம்மதிக்காக மட்டுமல்ல, அதற்கும் மேலே.

      • //ஒரு வீட்டைக் கட்டிய பின்னர் நெருப்பு வைத்து எரிக்கப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், //

        நான் அப்படியெல்லாம் எரிக்க நினைத்துக் கட்டமாட்டேன். அப்படிக் கட்டினால் நான் மனப்பிறழ்வு அடைந்துள்ளதாகத்தான் பொருள் கொள்ளமுடியும். கடவுள் அப்படி நினைத்துதான் பூமியை உருவாக்கியுள்ளார் எனில் கடவுளும் மனப்பிறழ்வு கொண்டவர்தான்!!

        //இறை நம்பிக்கையுடன் வாழ வேண்டுமென்பது வெறும் நிம்மதிக்காக மட்டுமல்ல, அதற்கும் மேலே.//

        ‘மேலே’ என்று சொல்வது generalised statement. அவற்றைப் பட்டியலிட்டால்தானே முழுமையான பொருள் புரியும்!

        • \\நான் அப்படியெல்லாம் எரிக்க நினைத்துக் கட்டமாட்டேன். அப்படிக் கட்டினால் நான் மனப்பிறழ்வு அடைந்துள்ளதாகத்தான் பொருள் கொள்ளமுடியும். கடவுள் அப்படி நினைத்துதான் பூமியை உருவாக்கியுள்ளார் எனில் கடவுளும் மனப்பிறழ்வு கொண்டவர்தான்!!\\ உமக்கு மறை பொருளா எதையாச்சும் சொன்னால் புரியாது போல. நான் வீடுன்னு சொன்னது நமது உடம்பு. செத்து கண்ணம்மா பெட்டிக்கு போனா என்ன நடக்குது? மின் மயானத்துல எரிஞ்சு சாம்பலா போகுதே அது கூடவா புரியவில்லை? பிணத்தை எரிக்கிரவங்க எல்லாம் மனபிரழ்ச்சி கொண்டவர்களா? ஹா..ஹா..ஹா…

          • மறைபொருளாக சொல்லலாம். But it should be context to the text. வீடும், மனித உடலும் ஒன்றல்ல. சம்பந்தமில்லாம உளறப்படாது. பெரும்பாலான பக்தி நூல்களில் இது போன்ற உளறல்களைக் கண்டிருக்கிறேன்.

            பௌதீக விதிகளுக்குட்பட்டு மனிதனாக சிந்திக்காமல் வேற்று கிரக ஏலியனைப் போல உளறுகிறீர்கள்.

            • \\பௌதீக விதிகளுக்குட்பட்டு மனிதனாக சிந்திக்காமல் வேற்று கிரக ஏலியனைப் போல உளறுகிறீர்கள்.\\ நீங்கள் ஒன்னும் A-Z என்று எல்லாம் தெரிந்தவரும் அல்ல, உமக்குத் தெரியாத ஒரு சங்கதி எதுவுமே இருக்க முடியாது என்று அர்த்தமும் அல்ல. உமக்கு தெரியாது என்பதற்காக ஒரு சங்கதி உளறல் என்றும் அர்த்தமல்ல.

        • \\’மேலே’ என்று சொல்வது generalised statement. அவற்றைப் பட்டியலிட்டால்தானே முழுமையான பொருள் புரியும்!\\ நீங்க இப்போ இருக்கும் நிலையில் உங்களுக்குப் புரிய வைக்கிறது கஷ்டம் சார்……..

          • நீங்கள் இருக்கும் ‘நிலையில்’ நான் இல்லை என்பது எனக்கு அளவிலா மகிழ்ச்சியைத் தருகிறது!!

    • \\அப்படியெ‎ன்றால், எ‎ன்னளவில் நா‎ன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறே‎ன்; யாரையும் வாரி விட்டு முன்னேற வேண்டுமெ‎ன்று நா‎ன் நினைப்பதில்லை; என்னைத் தள்ளிவிட்டு, மிதித்துத் தள்ளி மு‎ன்னேறிச் செ‎ன்றவர்களையும் பு‎ன்சிரிப்போடுதான் காண்கிறே‎ன்; கோப உணர்ச்சி கொள்வதில்லை; எனக்கான வேலை எ‎ன்னவென்பதை நன்கு அறிந்திருக்கிறே‎ன்; அதை சிறப்பாகச் செய்வதற்கான வழிவகைகளைத் தெரிந்திருக்கிறே‎ன்…. அப்புறம் ஏ‎ன் நான் கடவுளி‎ன் இருப்பைப் பற்றி யோசிக்க வேண்டும்?\\ நான் ஒரு நெடுஞ்சாலையில் காரை ஓட்டிச் செல்கிறேன், யாரையும் இடிக்காமல் செல்கிறேன், என்னை இடித்தாலும் நான் கோபப் படமாட்டேன், சாலை விதிகளை மதிப்பெண், நான் ஓட்டும் காரைக் கூட சவீஸ் செய்து நல்ல கண்டிஷனில் வைத்திருப்பேன்….. இது எல்லாமே சரி ஐயா, நீ எங்கே போகிறாய் என்று இலக்கு ஒன்று உள்ளாதா? …ஹி…ஹி..ஹி…. அதுதானே தெரியலை…… அப்புறம் நீர் மேற்ச்சொன்ன அத்தனைக்கும் அர்த்தமே இல்லையே??!!

      • இலக்கு என்ற ஒன்று இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வது உங்கள் கற்பிதம் என்றும் நான் சொல்லலாம் அல்லவா! உங்கள் கற்பிதம் பொய்யென்றால் அத்தனைக்கும் அர்த்தம் இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லையல்லவா! தத்துவ விசாரங்கள் ஒருபக்கம் இருக்கட்டும்.

        கண் திறக்கும்போது காரில் நெடுஞ்சாலைப் பயணம் சென்று கொண்டிருக்கிறோம். அம்மா டிரைவ் செய்து கொண்டிருக்கிறார். சிறிது காலம் கழித்து அம்மா நடுவில் ஒரு ஊரில் இறங்கி விடுகிறார். அதன் பின் நாமே ஓட்டிச் செல்கிறோம். எங்கு செல்கிறோம் என்பது நமக்குத் தெரியாது; எங்கிருந்து வருகிறோம் என்பதும் நமக்குத் தெரியாது – இவையெல்லாம் பௌதீக விதிகளுக்குட்பட்டு. இத்தருணத்தில் இயற்கையை ரசித்தவாறு, சக பயணிகளை கனிவுடன் கவனித்து, ஆங்காங்கே ஓய்வெடுத்து, சாலை விதிகளை மதித்து, சரியாக ஓட்டத் தெரியாத பிறருக்கு ஓட்ட சொல்லிக் கொடுத்து, சுகமுடன் நெடுஞ்சாலைப் பயணத்தை என்ஜாய் செய்வீர்களா? அல்லது போய்ச்சேரவேண்டிய இடம் எது என்ற நினைப்பிலேயே, ஒருவித பயத்துடனேயே, எவனும் மோதிவிடுவானோ.. கடவுள் நம்மை பாவலோகத்துக்கு அனுப்பியிருக்கிறார்.. வதைபட்டுத்தான் சாகவேண்டும்.. இதுதான் விதி.. மறுமையில் நற்கதி அடைய வேண்டும்.. சங்கரா சங்கரா… நமோ நாராயணா… என்று கூறிக்கொண்டே செல்வீர்களா? ஹைய்யோ…ஹையோ…!!!!

        • \\இலக்கு என்ற ஒன்று இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வது உங்கள் கற்பிதம் என்றும் நான் சொல்லலாம் அல்லவா! உங்கள் கற்பிதம் பொய்யென்றால் அத்தனைக்கும் அர்த்தம் இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லையல்லவா!\\ படைப்பு என்று ஒன்று இருந்தால் படைத்தவன் ஒரு வான் இருப்பான். படைத்தவன் என்று ஒன்று இருந்தால், அவனுடைய படைப்புக்கு ஒரு நோக்கம் இருக்கும். இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பக்கா.. பக்கா…. அதனால் படைத்தவன் நோக்கம் என்ன, அதன் படி நான் வாழ்கிறேனா என்ற தேடல் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு படைத்தவன் என்று ஒன்றும் இல்லை என்று நீங்கள் நம்பினால் அதன் படி நீங்கள் போகலாம், ஆனால் உங்களைப் போன்ற மேதாவிகளிடம் எனக்கு ஒரு கேள்வி கேட்கத் தோணும். தங்க மோதிரத்தை கையசைத்து வரவழைக்கும் சாய்பாபாவை மேஜிக் செய்கிறான் என்று சரியாக கண்டுபிடித்து, அவனை நம்பும் அவனுடைய ‘பக்தர்’களிடம் அதெப்படி ஒன்றுமே இல்லாத கையிலிருந்து மோதிரம் வரும் என்றெல்லாம் கேட்டு அவர்களுடைய முட்டாள் தனத்தையும், ஏமாளித் தனத்தையும் வெளிக் கொண்டு வந்த புத்திசாலிகளான நீங்கள், இந்த பிரபஞ்சமே ஒன்றுமில்லாததலிருந்து தான் வந்தது என்று சொல்லும் போது நாங்கள் பூம் பூம் மாடுகள் மாதிரி தலையசைக்க வேண்டுமா? பத்து கிராம் தங்கம் வெற்றிடத்திலிருந்து கொண்டு வருவதாக நம்பச் சொல்பவன் மோசடிப் பேர்வழி என்றால், இந்த பிரபஞ்சமே வெற்றிடத்திலிருந்து வந்தது என்று சொல்லும் நீங்கள் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய மோசடிப் பேர்வழி, உங்களை ஏற்றுக் கொண்டால், அவன் பாபா பக்தர்களை விட அடி முட்டாள்களாகத்தான் இருப்பான்.

          • //பிரபஞ்சமே வெற்றிடத்திலிருந்து வந்தது என்று சொல்லும் நீங்கள் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய மோசடிப் பேர்வழி,//

            பிரபஞ்சம் இருக்கட்டும் பிரபஞ்சத்தையே படைத்த அந்த supreme power எங்கிருந்து வந்தார் என்பதை நீங்களும் மெய்பித்து விட்டீர்களோ!

            கடவுளை அறியமுடியாது என்ற சூன்யமான கருத்தில்தான் கடவுளின் இருப்பு ஊசலாடிக்கொண்டிருக்கிறது. கடவுள் இல்லை என்று ஐம்புலன்களால் உணரும் வன்னம் தெரியப்படுத்த முடியாவிட்டால் என்ன, கடவுள் சொன்னதாக கூறப்படும் கருத்துகளை பகுத்தறிந்து நமது பகுத்தறிவின் மூலம் உணர்ந்து கொள்ள முடியுமே.

        • \\எங்கு செல்கிறோம் என்பது நமக்குத் தெரியாது; எங்கிருந்து வருகிறோம் என்பதும் நமக்குத் தெரியாது – \\ தெரியாது என்ற பதிலைத்தான் கழுதை கூட சொல்லுமே, நீங்கள் மனிதராயிற்றே, நீங்களும் தெரியாது சொன்னால் எப்படி. தெரியாத கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பவன் அல்லது குறைந்த பட்சம் பதில் கண்டுபிடிக்க முயற்சியாவது செய்தாள் தான் மனிதன், இல்லையென்றால் கழுதை தான்.

        • \\இத்தருணத்தில் இயற்கையை ரசித்தவாறு, சக பயணிகளை கனிவுடன் கவனித்து, ஆங்காங்கே ஓய்வெடுத்து, சாலை விதிகளை மதித்து, சரியாக ஓட்டத் தெரியாத பிறருக்கு ஓட்ட சொல்லிக் கொடுத்து, சுகமுடன் நெடுஞ்சாலைப் பயணத்தை என்ஜாய் செய்வீர்களா? அல்லது போய்ச்சேரவேண்டிய இடம் எது என்ற நினைப்பிலேயே, ஒருவித பயத்துடனேயே, எவனும் மோதிவிடுவானோ.. கடவுள் நம்மை பாவலோகத்துக்கு அனுப்பியிருக்கிறார்.. வதைபட்டுத்தான் சாகவேண்டுமà � .. இதுதான் விதி.. மறுமையில் நற்கதி அடைய வேண்டும்.. சங்கரா சங்கரா… நமோ நாராயணா… என்று கூறிக்கொண்டே செல்வீர்களா? ஹைய்யோ…ஹையோ…!!!!\\ அப்பாவும் நீ மேட்டருக்கே வர மாட்டேன்கிராயே ராசா…. நீ எல்லாம் பண்ணிக்கிட்டு போ, ஆனால் யாரவது எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டால், தெரியாது என்று சொன்னால் நீ மறை கலந்து விட்டாய் என்று தானே ராசா சொல்லுவார்கள். இலக்கே தெரியாமல் வெறியும் சுற்றும் முற்றும் பராக்கு பார்த்துகொண்டு வண்டியை ஓட்டிச் செல்ல நீ என்ன லூசா?

    • \\எனக்காக கொடுக்கப்பட்ட இந்த ‘இடைப்பட்ட’ காலத்தை நா‎ன் எப்படிக் கழிக்கப் போகிறே‎ன்; எப்படிக் கழிக்க வேண்டும் என்ற ஒரு அழகான சிந்தனை வந்துவிட்டாலே சமுதாயத்தில் ஆத்திகம், நாத்திகம் போ‎ன்ற சொற்களும் அவை சார்ந்த கோட்பாடுகளும் வழக்கொழிந்து விடுமெ‎ன்று நினைக்கிறே‎‎‎ன்.\\ நாய், பூனை, காக்கா குருவி கூட இதெல்லாம் அழகாச் செய்யும், ஆறறிவு படைத்த நீயும் இதையே சொல்லிக் கொண்டிருந்தாள் உனக்கும் மாட்டுக்கும் என்ன ஐயா வித்தியாசம்?

    • \\சுருக்கமாகச் சொ‎ன்னால் வாழ்க்கையின் அர்த்தத்தை (meaning of life) உணர்ந்து விட்டாலோ அல்லது ( வாழ்க்கையின் நோக்கம் (purpose of life) தெரிந்து விட்டாலோ அழகான, அருமையான, அட்டகாசமான சமுதாயம் அமைந்து விடுமென நினைக்கிறே‎‎‎‎ன். \\ purpose of life தெரிந்து விட்டால் கொஞ்சம் எமக்கும் சொல்லியனுப்பும்.

      \\கடவுளைப் பற்றி சிந்திப்பதை விட, ‘கடவுள்த‎ன்மை’ என்றால் எ‎ன்ன என்று நம் மானுட சமுதாயம் பல விஷயங்களை வரையறுத்து வைத்திருக்கிறதே.. அவற்றைப் பி‎ன்பற்றினாலே நாம் கடவுளாகிவிட மாட்டோம்?\\ உமது கற்பனைச் சுதந்திரத்துக்கு வானமே எல்லை. நான் சொல்ல ஒன்றுமில்லை.

    • உண்மை. கடவுளரின் குணங்கள் அனைத்தும் கொண்டவராக நீங்கள் மாறிவிட்டீர்களானால் கடவுளுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இல்லாமல் போய் விடுகிறது. இப்போது நீங்கள் பயப்படுவதற்கு யாருமே இல்லை. அதனால் உங்களைப்பொருத்தவரை கடவுளே உங்களைக்கண்டு பயந்து போகிறார். இறுதியில் அழிந்தும் போய் விடுகிறார். என்னைப்பொறுத்தவரை கடவுளை யாரோ சொன்னார்கள் என்று கை விடுவதை விட அவரை உணர்ந்து அவரோடு வாழ்ந்து பிறகு கைவிடுவதுதான் நல்லது.

  43. கணித மேதை Kurt Godel – ன் incompleteness theorem சுட்டிக்காட்டுவது பிரபஞ்சத்தின் விதிகளைக் கொண்டு பிரபஞ்சம் தன்னளவில் நிறைவானது என்று ஒரு போதும் நிறுவமுடியாது. அதாவது, கடவுள் இருந்தாலும் கடவுளைப் பிரபஞ்சவிதிகளைக் கொண்டு நிறுவமுடியாது. ஏன், இயற்பியல், கணித விஞ்ஞானிகளில் கணிசமானோர் இறை நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா?!!!.

  44. \\***//நேரம் வந்து விட்டால் ஒரு நொடி கூட தாமதிக்காமல் காலன் டிக்கெட் போட்டு விடுவான்.//***

    பிறகு ஏன் நான் சொன்ன ஆத்திக பெரியவரை முட்டாள் என்று சொன்னாய்?\\

    நேரம் வந்து விட்டது என்று எப்படி நீயாக முடிவு செய்வீர் அன்பரே? நேரம் வராவிட்டால் நான் எது செய்தாலும் சாக மாட்டேன் என்று சொல்லி விஷம் குடிக்கக் கூடாது. விஷம் குடித்தால் உயிர் போகும் என்ற புத்தியை இறைவன் உமக்குக் கொடுத்துள்ளான். அதே போல நோயுற்றிருக்கும் போது கிடைக்கும் மருத்துவ சேவையை நாடுவதில் தப்பேயில்லை. நம் அறிவுக்குப் பட்டவரை வாழவே முயற்சிக்க வேண்டும், அந்த முயற்சிகளில் வெற்றியடைவோமா, இல்லையா என்பது நம் கைகளில் இல்லை. உனக்குக் கொடுத்துள்ள அறிவைப் பயன் படுத்தி நீ முயற்சி செய் அதற்க்கப்புறம் என்ன நடக்க வேண்டுமென்பதை இறைவன் பார்த்துக் கொள்வான். நீதிபதி போஸ்டை நீங்களே எடுத்துக் கொள்ளாமல் இறைவனிடம் விடுங்கள்.

    • அய்யா உமக்கு புரியவில்லை என நினைக்கின்றேன். நேரம் வருவது வராதது என்பது மனிதனுக்கு தெரிவது தெரியாதது அல்ல பிரச்சினை, கடவுள் உயிர் பறிக்கும் நேரம் அந்தவிஷம் அருந்தும் நேரமாகத்தான் இருந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

      //அதே போல நோயுற்றிருக்கும் போது கிடைக்கும் மருத்துவ சேவையை நாடுவதில் தப்பேயில்லை//

      சரி. அதுபோன்றே இவ்வுலகிலே சொர்க்கம் படைக்கமுடியும் என்பதையும் முயற்சித்து பார்ப்பதும் தவறில்லையே

      • \\சரி. அதுபோன்றே இவ்வுலகிலே சொர்க்கம் படைக்கமுடியும் என்பதையும் முயற்சித்து பார்ப்பதும் தவறில்லையே\\ முயற்சி பண்ணுங்க, கிடைக்கிறதை வச்சுக்கோங்க.

  45. \\பிரபஞ்சம் இருக்கட்டும் பிரபஞ்சத்தையே படைத்த அந்த supreme power எங்கிருந்து வந்தார் என்பதை நீங்களும் மெய்பித்து விட்டீர்களோ!\\ இறைவன் என்பதற்கு dictionary meaning கூடத் தெரியாத மக்கு நீ , எதுக்கையா இங்கே வந்து பேக்கு மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருக்கிறாய்? கடவுள் என்றால் the Supreme Controller என்று அர்த்தம். அவனை இன்னொருத்தன் படித்திருந்தால் அவன் கடவுளே அல்ல. எல்லா காரணத்துக்கும் காரணமானவன், அவனுக்கென்று ஒரு காரனமில்லாதவன் தான் கடவுள். அது யாருன்னு கேட்பாய். போய் உட்கார்ந்து ஆராய்ச்சி பண்ணு.

    • //எல்லா காரணத்துக்கும் காரணமானவன், அவனுக்கென்று ஒரு காரனமில்லாதவன் தான் கடவுள். அது யாருன்னு கேட்பாய். போய் உட்கார்ந்து ஆராய்ச்சி பண்ணு.//

      காக்கா மூக்கா என்ரு உளறுபவந்தான் பக்தனோ?. கடவுள் இருக்கிறான் என்பதற்கான ஒரு சின்ன ருசுவைக்கூட கொடுக்கமுடியாத நீயெல்லாம் என்னத்தைய கிழிக்க இங்கு வந்தாய்?

      • யானை போல ருசுவையே [உன் வார்த்தையிலேயே சொல்கிறேன்] காமிச்சாச்சு, எத்தனை ருசுவைக் கொடுத்தாலும் உன் கண்களுக்குப் புலப்படாத கண்ணிருந்தும் குருடன் நீ. கொஞ்சம் அடிப்படை அறிவு இருந்தாலே போதும் இறைவன் இருப்பதை உணர. கடவுள் இருக்கிறனா என்று இன்னொருத்தன்கிட்ட கேட்கிறான் என்றாலே முடிந்தது கதை, அவனது மேல் மாடி டோடலி அவுட். காலி.

  46. \\பிரபஞ்சம் இருக்கட்டும் பிரபஞ்சத்தையே படைத்த அந்த supreme power எங்கிருந்து வந்தார் என்பதை நீங்களும் மெய்பித்து விட்டீர்களோ!\\ இறைவன் என்பதற்கு dictionary meaning கூடத் தெரியாத மக்கு நீ , எதுக்கையா இங்கே வந்து பேக்கு மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருக்கிறாய்? கடவுள் என்றால் the Supreme Controller என்று அர்த்தம். அவனை இன்னொருத்தன் படைத்திருந்தால் அவன் கடவுளே அல்ல. எல்லா காரணத்துக்கும் காரணமானவன், அவனுக்கென்று ஒரு காரனமில்லாதவன் தான் கடவுள். அது யாருன்னு கேட்பாய். போய் உட்கார்ந்து ஆராய்ச்சி பண்ணு.

  47. \\ கடவுள் இல்லை என்று ஐம்புலன்களால் உணரும் வன்னம் தெரியப்படுத்த முடியாவிட்டால் என்ன, கடவுள் சொன்னதாக கூறப்படும் கருத்துகளை பகுத்தறிந்து நமது பகுத்தறிவின் மூலம் உணர்ந்து கொள்ள முடியுமே.\\ வெறும் கண்ணால் பார்த்துதான் அறிய வேண்டுமானால் ஆடு மாடு கூட அறியும். நீ மனுஷன், விளைவை வைத்தது [effect] அதன் காரணத்தை [cause] உணர வேண்டும். உன்னைப் பார்த்தால் உனக்கு அப்பன் இருப்பான் என்று சொல்வதற்கு உன் அப்பனுக்கு நடந்த திருமணதிற்கு நான் வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் தலையில் உள்ள மேட்டரையும் அப்பப்போ யூஸ் பண்ணுங்க நைனா….

    • அதயேதான் யானும் கேக்குறன். ஆடு மாடு மேரி கடவுள் இருக்காருன்னு எவனாவது சொன்னா பூம்பூம் மாடு ம்மேரி தலையாட்டிக்கிட்டு இருக்கியே. கடவுள் இல்லைன்னு நிரூபிக்கிறதுக்கு இந்த உலகில் ஆயிரம் உதாரணங்கள் இருக்கு. அவன் இருக்கான்னு நீ பண்ண ஆராய்ச்சிலந்து ஒன்ன அவுத்து உடேன். என் அப்பனுக்கு திருமண்ம் நடந்ததா இல்லையான்றதா பிரச்சினை நான் ஒரு அப்பனிடமிருந்து வந்தவந்தான்னு புரிஞ்சிக்க முடியுதில்லியா அதுதான் மேட்டரு.

      • \\இந்த உலகில் ஆயிரம் உதாரணங்கள் இருக்கு. \\ உதாரணங்கள் ஆயிரம் இருக்கலாம், ஆனால் அதை எப்படி புரிந்து கொள்கிறாய் என்பதற்கு புத்தி சாலித்தனம் வேண்டும், அது நாத்திக கூமுட்டைகளுக்கு இல்லை.

        \\அவன் இருக்கான்னு நீ பண்ண ஆராய்ச்சிலந்து ஒன்ன அவுத்து உடேன்.\\ நீ இருக்கிறாய் என்றால் உனக்கு ஒரு அப்பன் இருந்தே தீருவான், இது தான் ஆராய்ச்சி, இல்லைன்னு நீ நிரூபி, கடவுள் இல்லைன்னு நான் ஒத்துக்கறேன்.

        \\என் அப்பனுக்கு திருமண்ம் நடந்ததா இல்லையான்றதா பிரச்சினை நான் ஒரு அப்பனிடமிருந்து வந்தவந்தான்னு புரிஞ்சிக்க முடியுதில்லியா அதுதான் மேட்டரு.\\ நீ மட்டுமல்ல யாராயிருந்தாலும் ஒரு அப்பனுக்குத்தான் பிறக்க முடியும்.

  48. //உன் சொத்துக்களை உன்னிடமிருந்து தந்திரமாக பிடுங்கிக் கொண்டவன்.///

    அப்போ உலகில் இருக்கிற பில்கேட்ஸ்களையெல்லாம் என்ன செய்யலாம்?

    • உம்மைப் போல ஒரு மக்கு பிலாச்டிரியை நான் பார்த்ததே இல்லை ஐயா. உலகத்தில இருக்கிறவன் எல்லாம் இந்தியாவில் உள்ள அம்பானிகள் மாதிரி மோசடி பண்ணியும், குறுக்கு வழியிலும் தான் சொத்து சேர்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டீரா? ஒரு பொது அறிவு கூட உமக்குக் கிடையாதா? பில் கேட்ஸ் என்ன ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தானா இல்லை அமைச்சரவையில் தன்னுடைய நிறுவனத்துக்கு பொருந்தும் படி மாத்திரம் சட்டம் இயற்றச் சொன்னானா? அவன் மூளையைப் பயன்படுத்தி, படித்த வல்லுனர்கள் மட்டுமே பயன்படுத்தும் கணினிகளை சாதாரண ஹை ஸ்கூல் படித்தவனும் பயன் படுத்தலாம் என்ற அளவுக்கு கொண்டு வந்தான், அதை காசாக்கினான். தற்போது சம்பாதித்த சொத்துக்களில் பெரும் பகுதியை பொது நலனுக்காக டிரஸ்ட்டுகளாக்கி உள்ளான். நாத்தீகனுக்கு மூளைதான் கம்மி என்றால் பொது அறிவு கூட இருக்காது போல இருக்கே.

      • 1996 ல் மைக்ரோசாப்ட்டின் பல்வேறு தில்லுமுல்லுகள், முறைகேடுகள், மோசடிகள் அமெரிக்க நீதிமன்றங்களிலேயே நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட வரலாறு கூட தெரியாத பொது அறிவு அதிகம் பெற்ற மூளையையுடைய உம்மை எப்படி விளிப்பது!

        • மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இணைத்துக் கொடுத்ததே தவறு என்று ஏதோ சட்டம் சொல்கிறதாம், என்ன கண்றாவியோ யாருக்குத் தெரியும்? பொது மக்களுக்குச் சேர வேண்டியதை பிடுங்கித் தின்றால்தான் தில்லு முல்லு, மற்றபடி சட்டங்களை எப்படி வேண்டுமானாலும் இயற்றலாம். இன்றைக்குத் தமிழ் நாட்டில் முன்னால் இந்நாள் முதலமைச்சர்கள் மீது கூட இதுவரை சட்டப் படி எந்த குற்றமும் ‘ருசு’வாகவில்லை. அதற்காக அவர்கள் ரொம்ப நல்லவர்கள் என்று அர்த்தமல்ல. சட்டத்தின் கண்ணில் சாமர்த்தியமாக மிளகாய்ப் போடி தூவி விட்டுத் திரிகிறார்கள் என்று அர்த்தம். மைக்ரோசாப்ட் காரன் சேர்த்த சொத்துக்களை பொது நலனுக்காக பயன்படும் டிரஸ்டுகளாக மாற்றி பணத்தை தியாகம் செய்திருக்கிறான். எத்தனையாயிரம் கொள்ளையடித்தாலும் இந்த தமிழ் நாட்டு அரசியவாதிக்கு இந்த மனசு வருமா? மேலும் கொள்ளையடிக்கத் தானே பார்க்கிறான், இத்தமாதிரி விடியாத மூஞ்சிகளுக்கு அவன் எவ்வளவோ தேவலை.

  49. திரு .ஜெயதேவ தாஸ்
    அடுத்தவர்களை கேள்வி கேட்க சொல்லி முந்தைய பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லியது
    \\ “அடுத்தவன் ஆயிரம் சொல்லட்டும், உமக்கு எங்கே போனது அறிவு? எதிர்த்து கேள்வி கேட்க வேண்டாமென்று உன்னை எது தடுத்தது? இந்த மாதிரி முட்டாள்களை பயன்படுத்தி யார் எதை வேண்டுமானாலும் செய்யலாமே?”\\

    பின்னூட்டம் 42.1.1.2.1.2.1.1.1.2 -நீங்கள் பதட்டம் அடைவதற்கு அடுத்தவர்களின் கேள்விகளே காரணம் என நீங்கள் சொல்லியது
    \\”ரோட்டில் போகும் போது பத்து வெறிநாய்கள் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும் போது பதட்டம் அடையாம வேறென்ன செய்வீரு? இங்க பத்து பேரு வளைச்சு என்னை கேள்வி மேல கேள்வியா கேட்டுத் தாக்குறீங்க நான் அத்தனை லூசுகளுக்கும் பதில் எழுதி உசுரு போகுதையா…உமக்கென்னையா சுளுவா சொல்லிட்டீறு, என்னோட நிலைமையில இருந்து பார்த்தா தெரியும்.”\\

    இந்த பதில் மூலமாக வின்னர் பட வடிவேலுவின் வசனம் “வேணாம் , வலிக்கிது, அழுதுருவேன் ” நினைவுக்கு வருகிறது ….இனி நாய்கள் உள்ள ரோட்டில் போகும் போது “சாமி பாட்டு பாடாம போங்க” ,… இல்லை “நாய்கள் எல்ல்லாம் சாமி பாட்டுதான் பாடனும்” என்று நீங்கள் குலைக்காதீர்கள்

    • கேள்விகள் கேட்பதில் தப்பில்லை. ஆனால் அவை புத்திசாலித் தனமாக கேட்க வேண்டும். நீ கேள்வி கேட்கும் தலைப்பைப் பற்றி கொஞ்சமாவது அடிப்படை அறிவு இருக்க வேண்டும். கேட்கும் பதிலை விளங்கிக் கொள்ளும் அறிவுக் கூர்மையும் இருக்க வேண்டும். இது எதுவுமே இல்லாமல் வெறும் கேள்விகளை மட்டுமே கேட்டு கடுப்படித்தால் எப்படி?

  50. \\இனி நாய்கள் உள்ள ரோட்டில் போகும் போது “சாமி பாட்டு பாடாம போங்க” ,… இல்லை “நாய்கள் எல்ல்லாம் சாமி பாட்டுதான் பாடனும்” என்று நீங்கள் குலைக்காதீர்கள்.\\ நாய்களுக்கு என்னதான் பயிற்சி கொடுத்தாலும் அதுக்கு பாட்டெல்லாம் பட வராது, ஊளை தான் இடும் என்பதும் நமக்குத் தெரிந்தது தானே.

    • உங்களது அனைத்து பின்னூட்டங்களையும்,உங்களது சொல்லாடல்களையும் வாசிக்கும் போது நாய்கள் அன்றி மனிதர்களில் சிலபேரும் ஊளை இடுவார்கள் என புரிகிறது …..

  51. //ரோட்டில் போகும் போது பத்து வெறிநாய்கள் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும் போது பதட்டம் அடையாம வேறென்ன செய்வீரு? இங்க பத்து பேரு வளைச்சு என்னை கேள்வி மேல கேள்வியா கேட்டுத் தாக்குறீங்க, அதுலும் சில பேரு முற்றிலும் மறை கழண்டகேசு மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருக்காங்க. நான் அத்தனை லூசுகளுக்கும் பதில் எழுதி உசுரு போகுதையா…உமக்கென்னையா சுளுவா சொல்லிட்டீறு, என்னோட நிலைமையில இருந்து பார்த்தா தெரியும்.//

    இங்கு ஒரு கருத்தின் மீதான விவாதம்தான் நடந்துகொண்டிருந்தது. விவாதத்தின் நடுவே திடீரென வெறி பிடித்த நாய் போல குலைக்க ஆரம்பித்தது மகாகனம் பொருந்திய ஶ்ரீமான் ஜெயதேவ் தாஸ் அவர்கள்தான்!! அவர் ஊளையிட ஆரம்பிக்கவும்தான் இங்கு வாதங்கள் விதண்டாவாதமாக மாறின. ஒருமையில் பேச ஆரம்பித்ததும், ஆடு மாடு பன்னி கழுதைன்னு சொல்ல ஆரம்பித்ததும் இந்த மகாகனம் பொருந்திய ஶ்ரீமான் ஜெயதேவ் தாஸ் சுவாமிகள்தான்!! வீரனிடம் மட்டும்தான் மோதமுடியும். வெறிநாயைக் கண்டால் விலகிதான் செல்ல வேண்டும்.

    அவர் சொன்ன பல கருத்துகள் தொடர் விவாதங்களுக்குப் பின்னே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை.. அல்லது விலக்கப்படவேண்டியவை. ஆனால் அதற்குள்ளாகவே லூசு கிறுக்கன் முட்டாப்பய கூமுட்டை மறைகழண்ட கேசு போன்ற வார்த்தைகளைக் கூறி எதிரே பேசுபவரைக் காட்டி தீர்ப்பெழுத ஆரம்பித்துவிட்டார். எனக்குத் தீர்ப்பெழுத நீ யாருய்யான்னு கேட்டுக்கிட்டே மத்தவங்களுக்கு அவர் தீர்ப்பெழுத ஆரம்பிச்சிட்டார்.

    கூட்டத்துல அடிபடாம இருக்கணும்னா வலிப்பு வந்தவன் மாதிரி கை கால்களை உதைக்கணும்னு நெனச்சிப் பண்ணிட்டுருக்கார். பாவம்! விட்டுடலாமா?

    • \\அவர் ஊளையிட ஆரம்பிக்கவும்தான் இங்கு வாதங்கள் விதண்டாவாதமாக மாறின.\\ உன் நெஞ்சு மேல கையை வச்சு மனசுக்கு நேர்மையா சொல்லுய்யா, நீ நிஜமா எங்கே வாதம் செய்தீரு? பண்ணியதே விதண்டா வாதம் மட்டும் தானே? வாதம் எங்கே செய்தீரு?

      \\ ஒருமையில் பேச ஆரம்பித்ததும், ஆடு மாடு பன்னி கழுதைன்னு சொல்ல ஆரம்பித்ததும் இந்த மகாகனம் பொருந்திய ஶ்ரீமான் ஜெயதேவ் தாஸ் சுவாமிகள்தான்!!\\ நான் இந்த மாதிரி உங்கள் நாய், பன்னி போன்றவற்றுடன் ஒப்பிட்டுப் பேசியது தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன், அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன், உங்களிடமல்ல… நாய்களிடமும், பண்ணிகளிடமும். என்னதான் இருந்தாலும் நான் நாய்களையும், பண்ணிகளையும் இவ்வளவு கேவலப் படுத்தி பேசியிருக்கக் கூடாது. தவறு செய்வது மானிட இயல்பு, என்ன செய்ய….

  52. \\அவர் சொன்ன பல கருத்துகள் தொடர் விவாதங்களுக்குப் பின்னே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை.. அல்லது விலக்கப்படவேண்டியவை.\\ பேசும் போது கொஞ்சமாவது நியாயத்தோடு பேச வேண்டும், லாஜிக்காக பேச வேண்டும், அர்த்தத்தோடு பேச வேண்டும். தான் பேசுவது தவறு என்னும் போது அதை ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்ள பெருந்தன்மையோடு முன்வரவேண்டும். இதெல்லாம் எதுவுமே இல்லாமல் வெறும் வறட்டு வாதங்களோடு அலைகிறீர்கள் நண்பர்களே, எதற்கு இந்த வீண் வேலை? கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல பல கருத்துக்களை பொறுமையுடன் சொல்லியிருக்கிறேன், அதை நீங்கள் கருத்திலேயே எடுத்துக் கொள்ள வில்லையே? பதில் தெரியாத கேள்விகளைப் பற்றி பேசுவதே இல்லையே, ஏன்? வீரன் என்பவன் சமமான பலத்துடன் இருப்பவனுடன் மோதுபவன், அந்த விதத்தில் நான் கருத்து மோதலில் ஈடுபட உங்களில் ஒருத்தருக்கும் தகுதியே இல்லை. அடிப்படை விஷயங்களே அறியாமல் இருக்கிறீர்கள். அதைச் சுட்டிக் காட்டும்போது ஏற்றுக் கொள்ள உங்கள் ஈகோ தடுக்கிறது. என்றாவது ஒரு நாள் உங்களுக்கு நல்ல புத்தி வரட்டும், நல் வழியில் நடப்பீர்களாக…………

    • கடவுள் பற்றி மட்டுமில்லை ,தங்களை பற்றியும் அதீத கற்பனையில் உள்ளீர்கள் …….நீங்கள் சொல்லும் வீரம்,தகுதி குறித்த கேள்விகளும் “என்றாவது ஒரு நாள் உங்களுக்கு நல்ல புத்தி வரட்டும், நல் வழியில் நடப்பீர்களாக” போன்ற ஆசிர்வாதங்களும் உங்களின் பாவமான கையறு நிலையை காட்டுகிறது….பல முந்தய கருத்துக்களில் நீங்கள் விவாதிக்க “உங்களுக்கே தகுதி வேண்டும்” என்பதை மிக வசதியாக மறந்துவிடுகிறீர்கள் ……முடிந்தால் தகுதி அடையவும்….

  53. //இந்த குறுக்கு வழி கொம்பாணி சாகும் போது தான் கொள்ளையடித்த பணத்தைப் பற்றியும் தன்னுடைய தொழிற்சாலைகளைப் பற்றியுமே நினைத்துக் கொண்டு செத்திருப்பான், அவன் அடுத்து அந்த பண மூட்டை வைத்துள்ள இடத்தில் ஒரு கரப்பான் பூச்சியாகவோ, இல்லை அவனது தொழிற்ச்சாலையில் ஒரு பெருச்சாளியாகவோ பிறந்திருப்பான்.//

    கொம்பானியாக பிறந்த பிறகு தான் ஏன் கரப்பான் பூச்சியாக பிறந்தோம்னு உணர்ந்து கொள்ள இயலுமா?

    • உன்னையே எடுத்துக்கோ, நீ ஏன் இவ்வளவு கேவலமான கூமுட்டையாக, விளங்காதவனாக, விடியா மூஞ்சியாகப் பிறந்தோம்னு எப்பவாச்சும் உனக்கு உணர முடிந்ததா? இல்லையே!! கடவுள் அதை மறைத்து விடுகிறார், சில சமயம் சிலருக்கு முன் பிறவி ஞாபகங்களையும் கொடுக்கிறார். பகலில் இப்பிறவியும், இரவில் போன பிறவி ஞாபகமும் ஒரு பெண்ணுக்கு வருகிறது, அவள் பகலில் கணவனிடம் அன்பாகவும், இரவில் “கிட்ட வந்தால் தொலைச்சிடுவேன்” என்றும் சொல்கிறாள். உன்னைப் போல மக்கு பிளாஸ்திரிகள் இதைப் பார்த்து விளங்கிக் கொள்ளட்டும்னு அங்கங்கே தப்பித் தவறி சிலருக்கு அந்த நினைவைக் கொடுக்கிறான், but பொதுவாக மறக்கடித்து விடுகிறான்.

      • // “கிட்ட வந்தால் தொலைச்சிடுவேன்”//

        தாசு, அந்தப் பெண்ணுக்கு அந்த மாதிரி இருக்குறதுல ஒரு பயம். அதனாலதான் அந்தப் பொண்ணு டென்சனாவுது. இதுக்கு ஒரு டாக்டர் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்தா சரியாப் போகுது. ஒன்ன மாதிரி சாமியார்கிட்ட போனா இப்படித்தான் கடவுள், முன்பிறவி, பின் பிறவின்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் போட்டு அந்த பொண்ணு வாழ்க்கையையே கெடுத்துருவீங்க. இதுக்குதான் கடவுள நம்பாதீங்கன்னு சொல்றாங்க, புரியுதா!

        • \\இதுக்கு ஒரு டாக்டர் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்தா சரியாப் போகுது.\\ அந்தப் பொண்ணு போன பிறவியில எங்கே பிறந்தேன், யார் யார் உறவினர்கள், வீடு எங்கே என்ற விவரமெல்லாம் சரியாச் சொல்லுதே அது எப்படி? அந்த ஊருக்கு அழைத்துச் சென்று விட்டவுடன், யாரையும் கேட்காமல் நேராகத் தன்னுடைய முன்பிறவியில் இருந்த வீட்டுக்குச் செல்கிறதே அது எப்படி? அந்த வீட்டின் வாசல் தற்போது ஒருபுறம் இருந்தாலும், அந்தப் பெண் வீட்டின் பின்புறம் செல்கிறது, but வீட்டின் வாசல் அங்கே இல்லை, அப்புறம் தான் சொல்கிறார்கள், வாசல் முன்னர் அந்தப் பக்கம் தான் இருந்தது, அதை அடைத்துவிட்டு வேறு புறம் மாற்றியமைத்தோம் என்று. வீட்டு வாசல் முன்பு அங்கு தான் இருந்தது என்று அந்தப் பெண்ணுக்கு எப்படி தெரியும்? இதற்கெல்லாம் உங்க டாக்குடரு என்னாத்த சொல்லுவாரு?

  54. // உமக்கு மனம் என்ற ஒன்றோ இல்லை புத்தி என்ற ஒன்றோ இருக்கிறது என்று கூட காட்ட முடியாது தான், ஆனால் எல்லோருக்கும் மனமும் புத்தியும் இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளத்தானே செய்கிறோம்?//

    ஒரு மனிதன் வெளிப்படுத்தும் உணர்ச்சியிருந்தும், அறிவான செயல்களிலிருந்தும் அவற்றை ஒப்புக்கொள்ள முடியும். கடவுளை எப்படி ஒப்புக்கொள்வது? உறுப்புகளின் வடிவமைப்பை வரிசைப்படுத்தினால் கூட அவைகளிளும் குறைபாடான வடிவில் பிறப்பதும் உண்டு. கடவுளுக்கும் அடி சறுக்குமோ!

  55. \\ஒரு மனிதன் வெளிப்படுத்தும் உணர்ச்சியிருந்தும், அறிவான செயல்களிலிருந்தும் அவற்றை ஒப்புக்கொள்ள முடியும். கடவுளை எப்படி ஒப்புக்கொள்வது? \\ அடக் குருட்டு மண்டூகமே, இவ்வளவு பெரிய பிரபஞ்சமே இருந்தும் இப்படியா கேனத் தனமாய் ஒரு கேள்வியைக் கேட்பாய்?

    \\உறுப்புகளின் வடிவமைப்பை வரிசைப்படுத்தினால் கூட அவைகளிளும் குறைபாடான வடிவில் பிறப்பதும் உண்டு. கடவுளுக்கும் அடி சறுக்குமோ!\\ உன்னை மாதிரி அடுத்தவனைக் கெடுத்து அதில் சுகம் காணும் ஒரு பாவி தான் அடுத்து அந்த மாதிரி குறைபாடான வடிவில் பிறப்பான்.

    • அட மட தாஸே,

      இந்த பிரபஞ்சம் எப்படி, எத்தனை நாளைக்கு, எதுக்காக, படைச்சேன்னு ஒவ்வொரு மதப் புத்தகத்திலேயும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணியிருக்காறே, அதப் படிச்ச பொறவுமா நீ நம்பறே. ஒருத்தன் சூரியன பாம்பு முழுங்குதுங்குறான், ஒருத்தன் சூரியன் கடவுளு பெஞ்ச்க்கு அடியில போகுதுங்குறான் இந்த டுபாகூர் கதையெல்லாம் கேனத்தனமால்ல இருக்கு.

      • \\இந்த பிரபஞ்சம் எப்படி, எத்தனை நாளைக்கு, எதுக்காக, படைச்சேன்னு ஒவ்வொரு மதப் புத்தகத்திலேயும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணியிருக்காறே, அதப் படிச்ச பொறவுமா நீ நம்பறே. ஒருத்தன் சூரியன பாம்பு முழுங்குதுங்குறான், ஒருத்தன் சூரியன் கடவுளு பெஞ்ச்க்கு அடியில போகுதுங்குறான் இந்த டுபாகூர் கதையெல்லாம் கேனத்தனமால்ல இருக்கு.\\ நீ ஏன்டா பரிச்சையில் பெயிலானாய் என்று கேட்டால் அதற்க்கு, பக்கத்து வீட்டுக்காரப் பயனும் பெயிலாயிட்டான் என்பது போல இருக்கிறது உமது வாதம். இந்தப் பிரபஞ்சம் ஒன்றுமில்லாதலிருந்து உருவாகியிருக்க முடியுமா, ஒரு படைப்பாளன் இல்லாமல் படைப்பு இருக்க முடியுமா என்பதே கேள்விகள். நீர் மதங்களில் உள்ள ஓட்டைகளைச் சொல்கிறீர். சரி, மதங்கள் ஓட்டைகள் தான், ஆனாலும் மேற்சொன்ன கேள்விகளுக்கு உமது பதிலைச் சொல்லவில்லையே? நான் பெருமாள் கோவிலுக்கு கோவிந்தா போடுவதாகவே வைத்துக் கொள்வோம், ஒரு வேலை உமது கணக்குப் படி நான் கடவுளை நம்பும் விதமே தவறாகவே இருக்கட்டும், அதற்காக படைப்பாளன் இல்லை என்று ஆகிவிடுமா? எதையோ கேட்டால் எதையோ சொல்லிக் கொழப்புவது என்று கிளம்பியிருப்பாய் போலிருக்கிறது. திருந்துய்யா…….. வெளகெண்ணெய்……….

  56. தாஸ், உங்கள் பின்னூட்டங்களை நான் கவனித்தேன். முதலில் ஆத்திக, நாத்திக விவகாரமெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு விசயம் எப்பொழுது விவாதப்பொருளாக எழுகிறது? மேலே எறிந்த கல் கீழே விழுந்தாக வேண்டும் என்பதிலோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிறம் இரு வேறு நபருக்கு இரண்டு விதமாய் இருக்க முடியாது என்பதிலோ அறிவுசார் யாருக்கும் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. உண்மை அல்லது தெளிவு இவை உலகம் முழுமைக்கும் ஒன்றுதான். இரு வேறு உண்மை அல்லது இரு வேறு தெளிவு என்று இருக்க முடியாது. (அதாவது ஆளுக்கொரு தெளிவு) புவிஈர்ப்பு விசை குறித்து இரு வேறு கருத்துகளுக்கு ஆளாகாத இச்சமூகம் கடவுள், பேய் விவகாரத்தில் மட்டும் ஏன் இரு வேறு கருத்துகளுக்கு ஆளானது? அப்படியென்றால் இவ்விவகாரத்தில் மட்டும் இரு உண்மைகள் (ஆளுக்கொரு உண்மை)இருந்துவிட முடியுமா என்ன? நிச்சயம் இல்லை எனும்போது அந்தத் தெளிவை வந்தடைவதற்கு சமூக நோக்கத்தை உயர்த்திப்பிடிக்கும் ஒரு ஆரோக்கியமான, நேர்மையான விவாதம்தான் பயன்படுமே ஒழிய நீயா, நானா குறுகிய மனப்பான்மை அல்ல.

    • @ இரா.மணிகண்டன்

      முதன் முதலாக ஒரு புத்திசாலி அன்பரை இந்த பின்னூட்டங்களில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது!!

      \\ மேலே எறிந்த கல் கீழே விழுந்தாக வேண்டும் என்பதிலோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிறம் இரு வேறு நபருக்கு இரண்டு விதமாய் இருக்க முடியாது என்பதிலோ அறிவுசார் யாருக்கும் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.\\

      ஒன்றுமில்லாதலிருந்து எதுவும் வராது என்பது ஆற்றல் அழிவின்மை விதி. ஒரு சாமியார் காற்றில் கையசைத்து தங்க மோதிரத்தை வரவழைத்தால் அவன் மேஜிக் செய்கிறான் என்பது உண்மை. இதை நானும் ஒப்புக் கொள்கிறேன். அதே சமயத்தில் இந்த பிரபஞ்சமே ஒன்றுமில்லாதலிருந்து வந்தது என்று தானே இன்றைய அறிவியல் சொல்கிறது. சாமியாருக்கு சொல்லப் படும் நியதி இங்கே பின்பற்றப் பட்டதா? ஏன் இங்கு “ஒரு குறிப்பிட்ட நிறம் இரு வேறு நபருக்கு இரண்டு விதமாய்” இருக்கிறது?

      தொலைக் காட்சி, செல்போன், கேமரா போன்றவை யாராவது தயாரித்திருந்தால் தான் வரும் தானாக வராது. அவ்வளவு கூட வேண்டாம், ஒரு மண் பானை கூட குயவன் கச்சிதமாகச் செய்து நெருப்பிலிட்டால் தான் வரும். இல்லை அவை தானாகத்தான் உருவாயின என்று சொன்னால் அவன் பைத்தியக் காரன் என்பீர்கள். அதே சமயம், ஒரு கம்பியூட்டர், இரண்டு கேமரா, இரண்டு டயாலசிஸ் செய்யும் கிட்னிகள், ஒரு பம்ப் [இருதயம்], என்று இன்னும் எத்தனையோ அதிசயத் தக்க எந்திரங்கள் ஒருங்கிணைந்து இயங்கும் நமது உடல் என்னும் அற்ப்புதம் எப்படி தானாக உருவாகியிருக்க முடியும்? இங்கு மட்டும் “இரு வேறு உண்மை அல்லது இரு வேறு தெளிவு என்று” இருப்பது ஏன்?

      இந்தக் கேள்விகளுக்கு புத்திசாலி நாத்தீகர்கள் என்று தங்களைத் தானே நினைத்துக் கொள்ளும் இந்த கூமுட்டைகள் ஒருத்தரும் வாயையே திறக்க வில்லை. வேறு எது எதையோ பேசி திசை திருப்புகிறார்கள். இவர்களைப் பார்த்தால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. இவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள நினைக்கும் அறிவிலிகள். இவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

      \\அந்தத் தெளிவை வந்தடைவதற்கு சமூக நோக்கத்தை உயர்த்திப்பிடிக்கும் ஒரு ஆரோக்கியமான, நேர்மையான விவாதம்தான் பயன்படுமே ஒழிய நீயா, நானா குறுகிய மனப்பான்மை அல்ல.\\ என்னைப் பொறுத்தவரையில் விதண்டாவாதமாக எந்த விவாதத்தையும் எடுத்துவைக்க வில்லை. அப்படி ஏதாவது இருந்தால் நீங்கள் சுட்டிக் காட்டலாம், என்னை திருத்திக் கொள்கிறேன். ஆரோக்கியக் குறைவான விவாதங்களை வைத்தது உங்கள் நண்பர்கள்தான். அவர்களுக்காக நான் பரிதாபப் படுகிறேன், வீணாய்ப் போகிறார்களே என்று.

      • தாஸ், திரும்பவும் உங்களுக்கு ஒரு விசயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மனிதர்களின் எந்த ஒரு சிந்தனையாகட்டும் அல்லது அதன்பால் நிகழ்த்தும் செயலாக்கமாகட்டும் அவை ஒரு சமூகத் தேவையிலிருநதோ அல்லது அவசியத்திலிருந்தோ நிகழ்த்தும்போது மட்டுமே அவை ஒரு மனிதாபிமானத்தன்மையுடையதாக இருக்க முடியும் என்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது என நம்புகிறேன். அந்த வகையில் சமூகத்தின் இயக்கு சக்தி அல்லது மனிதத் தேவையை (சமூகத் தேவை) ஈடேற்றும் பிரதான சக்தி மனித உழைப்பா? (சமூக உழைப்பு) அல்லது தாங்கள் கூறும் மூளையின் செயல் வெளிப்பாடான கடவுளா? ‘கடவுள்தான்’ என்று தாங்கள் தங்கள் விருப்பத்தை முன்வைக்காமல் முரண்பாடற்ற தர்க்க வாதத்தால் நிரூபித்தீர்களேயானால் நான் உங்கள் பக்கம் வந்துவிடுகிறேன். வாருங்கள் இதன் மூலம் உயிர்துடிப்பான வாழ்க்கையை இழந்து நிற்கும் கோடானு கோடி அப்பாவி உழைக்கும் மக்களின் விடுதலைக்கு வழிகாட்டுவோம். மாறாக மனித உழைப்பு சக்திதான் இங்கு பிரதானமானது; மனம், ஆத்மா, சிந்தனை, கடவுள், உணர்வு என்று பல்வேறு விதமான சொற்களில் அழைக்கப்படுவதெல்லாம் மூளை என்ற உறுப்பின் செயல் வெளிப்பாடு என்று நாங்கள் நிரூபித்துவிட்டால் நீங்கள் எங்கள் வழியில் வந்து மனித குல விடுதலைக்கு போராட வரவேண்டும். இதற்கு சரி என்றால் வாருங்கள் தெளிவை நோக்கி விவாதத்தை தொடங்குவோம்.

        • \\‘கடவுள்தான்’ என்று தாங்கள் தங்கள் விருப்பத்தை முன்வைக்காமல் முரண்பாடற்ற தர்க்க வாதத்தால் நிரூபித்தீர்களேயானால் நான் உங்கள் பக்கம் வந்துவிடுகிறேன்.\\ இறைவன் இருக்கிறான் என்பது, “உங்கள் சாயிஸ்” மாதிரி விரும்பினால் இருக்கிறான், இல்லையென்றால் இல்லை என்றல்ல. நீங்கள் விருபினாலும் விரும்பாவிட்டாலும், தீ சுடும், மிளகாய் காரமாக இருக்கும், சர்க்கரை இனிக்கும். இறைவன் இருக்கிறான் என்பது non-negotiable truth. இல்லை என்று நீங்கள் நிரூபிக்க வேண்டுமானால், எதுவுமே இல்லாமல் ஒரு கிலோ தங்கத்தை வரவழைத்துக் காட்டுங்கள், [குறைந்த பட்சம் ஒரு பூசனிக்காயையாவது வரவழையுங்க!], இரும்பையும், Plastic-க்கையும் ஒரு சட்டியில் போட்டு குலுக்கி ஒரு செல் போனை வரவழையுங்கள், நானும் உங்கள் பக்கம் வந்து விடுகிறேன்.

        • \\வாருங்கள் இதன் மூலம் உயிர்துடிப்பான வாழ்க்கையை இழந்து நிற்கும் கோடானு கோடி அப்பாவி உழைக்கும் மக்களின் விடுதலைக்கு வழிகாட்டுவோம்.\\ கஜினி முஹம்மது, பிரிட்டிஷ் காரன் என்று உலகமே இந்தியாவின் வளங்களையும், செல்வச் செழிப்பையும், கலாசாரத்தையும் பார்த்து கொள்ளையடிக்க இங்கே வந்தார்கள். ஆனால் இன்று வயிற்றில் துண்டை போட்டுகொண்டு கோடிக் கணக்கில் சனம். காரணம், அறைக்கு வெளிநாட்டினர் அடித்த கொள்ளையை விட இந்திய அரசியல் வாதி களே கொள்ளையடித்து பணத்தை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டதுதான். முழுக்க அரசியல் வாதிகளே இந்த இழி நிலைக்குக் காரணம் என்றும் சொல்ல மாட்டேன், அதற்க்கு உடந்தையாகப் போன முட்டாள் மக்களையும் தான் சேர்த்து சொல்ல வேண்டும். வட்டம் மாவட்டம் என்று ஓட்டுப் பொறுக்கிகள், அவர்களின் கைத்தடிகளே இதற்க்குக் காரணம். இயற்க்கை வளங்களை விஷமாக்கி விட்டு விளைநிலங்களை வேற்று நாட்டவனுக்கு விற்று விட்டு, மிச்சமிருப்பதை ரியல் எஸ்டேட் பண்ணும் பைத்தியக் காரர்கள் வாழும் நாடு இது. சுதந்திரப் போராட்டத்தில் ஒன்று பட்டு எதிரிகளை விரட்டியது போல இன்று மக்கள் ஊழலை ஒன்றுபட்டு எதிர்த்தால் ஒழிய உருப்படுவது மிகக் கடினம். அப்படி ஒரு நாள் வந்து கஷ்டம் தீரும் வரை அதை தாங்கிக் கொள்ள ஒரே வழி இறைநம்பிக்கை மட்டுமே, தயவு செய்து இதிலும் மண்ணை வாரிப் போட்டுவிடாதீர்கள்.

  57. \\அந்த வகையில் சமூகத்தின் இயக்கு சக்தி அல்லது மனிதத் தேவையை (சமூகத் தேவை) ஈடேற்றும் பிரதான சக்தி மனித உழைப்பா? (சமூக உழைப்பு) அல்லது தாங்கள் கூறும் மூளையின் செயல் வெளிப்பாடான கடவுளா?\\ இதற்க்கு நான் பல முறை பதில் கூறிவிட்டேன். நான் உழைப்பு தவறு என்று ஒருபோதும் சொல்லவில்லை. அந்த உழைப்போடு இறை நம்பிக்கையும் இருப்பதில் தவறென்ன என்று தான் கேட்கிறேன். அமேரிக்கா, பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகளிலும் சர்சுகள் இருக்கின்றன, இறை நம்பிக்கை இருக்கிறது. அதே சமயம் இறை நம்பிக்கையில்லாத தற்போது சிதறிப் போன சோவியத் ரஷ்யாவில் தரித்திரம் தாண்டவமாடுகிறது. ஆக, கடவுள் நம்பிக்கைக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் இந்தப் பதிவில் இறை நம்பிக்கையினால்தான் நம் நாடு உருப்படவில்லை என்று அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள், அதை நாம் ஏற்பதற்கு இல்லை.

    • //\அந்த வகையில் சமூகத்தின் இயக்கு சக்தி அல்லது மனிதத் தேவையை (சமூகத் தேவை) ஈடேற்றும் பிரதான சக்தி மனித உழைப்பா? (சமூக உழைப்பு) அல்லது தாங்கள் கூறும் மூளையின் செயல் வெளிப்பாடான கடவுளா?\\ இதற்க்கு நான் பல முறை பதில் கூறிவிட்டேன். நான் உழைப்பு தவறு என்று ஒருபோதும் சொல்லவில்லை. அந்த உழைப்போடு இறை நம்பிக்கையும் இருப்பதில் தவறென்ன என்று தான் கேட்கிறேன். அமேரிக்கா, பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகளிலும் சர்சுகள் இருக்கின்றன, இறை நம்பிக்கை இருக்கிறது. அதே சமயம் இறை நம்பிக்கையில்லாத தற்போது சிதறிப் போன சோவியத் ரஷ்யாவில் தரித்திரம் தாண்டவமாடுகிறது. ஆக, கடவுள் நம்பிக்கைக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் இந்தப் பதிவில் இறை நம்பிக்கையினால்தான் நம் நாடு உருப்படவில்லை என்று அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள், அதை நாம் ஏற்பதற்கு இல்லை.//

      முற்றிலும் இறை நம்பிக்கை இருக்கிற நாடு எது
      முற்றிலும் இறை நம்பிக்கை இல்லாத நாடு எது

      அப்படி இல்லை எனில் இறை நம்பிக்கை அல்லது மதங்கள்
      சமூக வாழ்வில் இதுவரை வகித்து வந்த பங்கு என

      மதங்கள் ஏற்படுத்தும் கருத்தியல் தாக்கம் என்ன

      ஏன் அப்படி பட்ட கருத்தை சொல்கின்றன

      மதத்தின் கருத்துக்கள் சமூக உற்பத்தி உறவுகளை
      நிலை நிறுத்தி தீர்மானிப்பதில் என்ன பங்கை வகிக்கின்றன

      என்பன போன்ற பல்வேறு விசயங்களை உள்ளடக்கி பார்த்தால்
      மதம் ஆதிமுதல் இன்றுவரை தனது பிற்போக்கான பாத்திரத்தை
      செய்துவருவதை அறியலாம்

      • என்ன தியாகு, இந்த கேள்வியை ரெடி பண்ண இத்தனை நாட்கள் உங்களுக்குத் தேவைப் பட்டதா? நாத்தீகத்தை கடை பிடித்து சுபிட்சமாக வாழும் நாடு இருந்தால் சொல்லுங்கள் அது போதும்.

        • //நாத்தீகத்தை கடை பிடித்து சுபிட்சமாக வாழும் நாடு இருந்தால் சொல்லுங்கள் அது போதும்.//

          இதுக்குத்தான் இந்த //முற்றிலும் இறை நம்பிக்கை இருக்கிற நாடு எது
          முற்றிலும் இறை நம்பிக்கை இல்லாத நாடு எது //
          கேள்வியை கேட்டேன்

          • ஏழை நாடு என்றால், அந்நாட்டில் எங்கேயோ ஒருத்தன் சாமி கும்பிட்டாலும் அவன் மேல் பழியைப் போட்டு விட்டு அவனால் தான் அந்த நாடு உருப்படவில்லை என்று சொல்லிவிடலாம். ஒரு வேலை முன்னேறிய நாடு என்றால் அங்கே எங்கேயோ ஒரு நாத்தீகன் இருந்தாலும் அவனால்தான் அந்த நாடே முன்னேறியது என்று மார்தட்டிக் கொல்லலாம்……. சூப்பர் ஐடியா!!

            • இறையியல் பணியை தனது அன்றாட வாழ்வின் பணியாக வைத்திருப்பதற்கும் கடவுளை just ஒரு நம்பிக்கையாக வைத்திருப்பதற்கும் அதிக வேறுபாடுகள் இருக்கின்றன.

            • //ஏழை நாடு என்றால், அந்நாட்டில் எங்கேயோ ஒருத்தன் சாமி கும்பிட்டாலும் அவன் மேல் பழியைப் போட்டு விட்டு அவனால் தான் அந்த நாடு உருப்படவில்லை என்று சொல்லிவிடலாம். ஒரு வேலை முன்னேறிய நாடு என்றால் அங்கே எங்கேயோ ஒரு//

              ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டின் கடவுள் நம்பிக்கையை சார்ந்ததல்ல என வாதிட முனைகிறீர்கள் சரிதான் கடவுளை நம்பினாலும் நம்பாட்டாலும் என்ன உற்பத்தி சக்திகள் என்னவிதமான உற்பத்தி முறைகளை கொண்டு இருக்கிறதோ அப்படியே அதன் வளர்ச்சி இருக்கும்

              எங்காவது ஆத்தீக முறை உற்பத்தி முறை நிலவுகிறதா
              மாறாக விஞ்ஞான பூர்வமான உற்பத்தி முறையே உலகின் வளர்ச்சியை
              இன்றுவரை கட்டமைத்துள்ளது

              • \\எங்காவது ஆத்தீக முறை உற்பத்தி முறை நிலவுகிறதா
                மாறாக விஞ்ஞான பூர்வமான உற்பத்தி முறையே உலகின் வளர்ச்சியை
                இன்றுவரை கட்டமைத்துள்ளது\\

                இந்த கம்யூனிச சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தொழிற்சாலைகளும், அங்கே காக்கிச் சட்டை போட்டுக் கொண்டு எந்திரங்களோடு போராடுவதும் மட்டும் தான் போலிருக்கிறது. இது தான் உலகம் என்று நினைப்பீர்கள் போல. உங்கள் அகராதியில் வளர்ச்சி என்றால் தொழிற்சாலைகளை மேலும் மேலும் திறந்து பலருக்கு “வேலை வாய்ப்பு” கிடைக்கச் செய்வது மட்டும் தான். ஏன் உங்கள் சிந்தனை இவ்வளவு குறுகிய தாக இருக்கிறது தியாகு? அதிலிருந்து வெளியே வாங்களேன். விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் வளர்ந்து சாதித்தது என்ன, அதனால் இழந்தது என்ன, சாதக பாதகங்கள் என்ன என்று கூடிக் கழித்துப் பாருங்கள் பலத்த நஷ்டம் என்று வரும். உண்மையான வளர்ச்சி என்றால் நீங்களும் வளரனும், உங்களைச் சார்ந்தவர்களும் வளரும், இன்னொருத்தனை அழித்து நீங்கள் வளரக் கூடாது எல்லாவற்றுக்கும் மேலாக சுற்றுச் சூழலை பாழ் செய்யக் கூடாது. நீங்கள் பெருமிதப் பட்டுக் கொள்ளும் “விஞ்ஞான பூர்வமான உற்பத்தி முறை” என்ன செய்துள்ளது? குதிரையில்லா வாகனம் கொடுத்து உமக்கு சவுகரியத்தைத் தந்தது. அதன் விளைவு காற்றில் எக்கச் சக்கமாய் கார்பன் மோனாக்சைடு கலப்பு. பேசுவதற்கு கை பேசி, ஆனால் வீதி வீதிக்கு மைக்ரோ வேவ் டவர்கள், எத்தனை பேர் லூசாக அலையப் போகிறார்களோ தெரியவில்லை. ஆலைகள் நிறைய வந்தன, ஆறுகள் விஷமாயின, நோயால் நதியைப் போல. உரங்கள் வந்தன, உற்பத்தி அதிகரித்தது. நிலம் தரிசானது, உண்ணும் அரிசி, காய்கறி, கீரைகள் விஷமானது. ஆரோக்கியம் தரும் என நம்பப் பட்ட பழங்கள் அத்தனையும் இன்று கால்சியம் கார்பைடு கற்களைப் பயன்படுத்து பழுக்க வைக்கப் படுவதால் உடல் நலச் சீர்கேடுகள். சமையல் எண்ணெய் சுத்தீகரிப்பில் உபயோகப் படுத்தப் படும் கெமிக்கல்களால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோய்கள் வருகின்றன. ஊர் முழுக்க எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள். எல்லாவற்றுக்கும் மேல் அணுமின் நிலையங்கள், இது ஒரு மனித வெடிகுண்டு போல, நமக்கு நாமே கட்டிக் கொள்வது. இவை யாவுமே, அறிவியல் சாராத உற்பத்தி முறையில் இல்லை. ஒன்றின் அவுட்புட் வேறு ஒன்றின் இன்புட் ஆகி ரீசைகிள் நடந்து புதிக்கப் பட்டுவிடும். ஆனால் உமது அறிவியல் சார்ந்த உற்பத்தி முறையால் வரும் கழிவுகளை வைத்துக் கொண்டு கையைப் பிசைத்து கொண்டிருக்கத்தான் முடியும். ஊரில் இருப்பவன் செல்வத்தையெல்லாம் அடித்து தன உலையில் போட்டுக் கொள்ள சில பணக்கார முதளிகளுக்கு உதவியதைத் தவிர்த்து உமது அறிவியல் உற்பத்தி முறை சாதித்தது ஒன்றுமில்லை.

  58. @Sujith Khan

    Bayam Samoogathula irunthu vanthathunna ellame samoogathula irunthu vandhadhu thaan.Ellarukkum Appa Amma solradha kettu thaan valaruraanga.

    Oru vishayatha vazhipadum pothu,manushan avanudaya palakeenatha unaruraan and athe neram egova viduthu seyal pada koodiya thanmaya adayuraan.

    Ithu thaan kadavulngrathu,vilangukku ellam bayam irukku.Singathukku pasiyoda sethuruvomnnu bayam,maanukku puli namma adichoirumonnu bayam,Vonaykku enga namma sappatta ellam singam,puli saaptrummonnu bayam,aatu matukku ellam thanni vathi kaadu karainchu poiyudumonnu bayam.

    Manushanukku mattum thaan bayam illa,athanaala thaan moolaya pala samayam iyarkaikku maara avan sontha thanmaykku maara velai seyya vekkuraan.

    Idhukku thaan kadavul thevai,ithanaala thaan samoogam kadavula valarthathu.

    Appadi ungalukku ithellam thevai illa,enakku suya moolai irukku,suya kattupaadum irukkuna,neenga atheista irunga,athe neram appadi irukku mudiyumannu santhegam ullavanga saami kumbitu vittu poraanga,avlo thaane.

    • //moolaya pala samayam iyarkaikku maara avan sontha thanmaykku maara velai seyya vekkuraan.//
      நீங்கள் சொல்வது கூட ரொம்ப சரிதான். கடவுள் இல்லை என்பது இயற்கை என்பதினாலேதான் மிருகங்களுக்கு பயம் இருந்தாலும் அவை கடவுளை சிருஷ்டித்துக்கொள்ளவில்லை. உண்மையாக, கடவுள் என்ற ஒன்று ( ஆன்மாவோ அல்லது பொருளோ அது எதுவோ) ஜீவராசிகளைப் படைத்திருந்தால் நிச்சயம் மிருகங்களும் கூட கடவுளை வணங்குவதை நாம் கண்டிருக்க முடியும். ஆனால், அல்லாஹூ அக்பர் என்று அழைப்பொலி கேட்கும்போது கூட ஒரு ஆண் நாய் ஒரு பெட்டை நாயை துரத்திக் கொண்டுதானிருக்கிறது. மிருகங்களிடமிருந்து அறிவில் பரிணாமம் பெற்றுவிட்ட மனிதன் தனது பயத்தின் காரணமாகவும், தங்களின் வாழ்நிலைக்கு உதவும் காரணமாகவும் இயற்கையை வழிபட ஆரம்பித்து கடவுள் என்ற கற்பனை பொருளை இயற்கைக்கு மாறாக உருவாக்கிக் கொண்டான்.

      /// ellame samoogathula irunthu vandhadhu than///
      அதைத்தான் நானும் சொல்கின்றேன். கடவுளின் மீதான பயத்தினால் டிசிப்ளின் வருவதில்லை. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் மனிதர்களிடயே நிலவிய உறவு முறை மற்றொரு சமுதாயத்தில் தவறாகப் பார்க்கப்படுகிறது. உதாரணமாக அடிமை சமுதாயத்தில் ஆண்டைக்கும் அடிமைக்கும் இடையே இருந்த உறவு முறையை இப்போது நாம் நியாயப்படுத்துவதில்லை. ஆனால் மதங்கள் (சிறு சீர்த்திருத்தங்களோடு) அவற்றை சரியென்றன. சமூகமானது தனது இயக்கப் போக்கின் வளர்ச்சியினூடாக நடைமுறையில் சரி தவறை அந்தந்த உற்பத்தி முறைக்கு ஏற்றவாறு பரீசலித்து சரியானதை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது என்பதுதான் உண்மை. இன்று நம்மால் டிசிப்ளினாக பார்க்கப்படுவது நாளை மாறலாம்.

  59. சாதி என்ன என்பதை கூறத் தயங்க வேண்டாம்: கி.வீரமணி -தினமணி

    /ஊர் பொது காரியங்கள்/ பிரச்சினைகள் பற்றி பேசிட மக்கள் அனைவரும் பொதுஇடத்தில் கூடுகின்றனர்.

    அம்பி நீங்களெல்லாம் நாற்காலியில் உட்காரப்படாது.

    ஏன் சாமி? நிறைய பிராமனாள் சாமியெல்லாம் நாற்காலிகளில் உட்கார்ந்து இருக்கிறார்களே? நாங்கள் ஏன் உட்காரக் கூடாது?

    அவாள் எல்லாம் ஆண்டவனை நேரிடையாக தொடர்பு கொள்ளும் வரம் பெற்றவர்கள். அந்தத் தகுதியை இந்து மதம் உங்களுக்கு கொடுக்க வில்லைஎன்று நோக்குதெரியாதோ?

    படவா ராஸ்கல்ஸ் – ஐயர் சாமி கிட்டே வாக்குவாதம் பண்ணிகொண்டா இருக்கிறாய். நாம கீழே தான் இருக்கணும். அல்லது சாமி குத்தம் ஆயிடும்.சின்ன பசங்க பேசறதை எடுத்துக்காதீங் க சாமி.

    நீங்க பஜனையை/பிரசங்கத்தை ஆரம்பிங்க சாமி.//

    “ கோயில்களில் ஆண்டவனை பூஜை செய்வதற்கு பிராமணனுக்கு ஒரு நீதி- மற்றவர்களுக்கு ஒரு நீதியா??? வெட்கப்படவேண்டும் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் இந்நிலை தொடர்வதற்கு.”

    ஹி..ஹி..ஹி.. வேலிக்கு ஓனான் அல்லவா சாட்சியாக உள்ளது.??? கூபு / ஏசுபாபு/ குயிலுக்கு உள்ள உரிமை கடலூர் சித்தனுக்கும் கிடைக்குமா??? வாழ்க பத்திரிகை தர்மம்.

    http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=587353&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%9A%E0%AE%BE%

  60. \\கூபு / ஏசுபாபு/ குயிலுக்கு உள்ள உரிமை கடலூர் சித்தனுக்கும் கிடைக்குமா???\\ கடவுள் இல்லை என்று கற்ப்பிக்கும் நீங்கள், கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று சொல்லும் நீங்கள், கோவிலுக்குச் செல்பவனை பகுத்தறிவு ஊட்டி அவனை அதி மேதாவி நாத்தீகனாக மாற்றுவதை விடுத்து விட்டு அவன் கோவிலுக்குள் செல்லும் உரிமையைப் பற்றி எதற்க்கய்யா பேசுகிறீர்கள்? உங்கள் புண்ணாக்கு கொள்கை என்னாவாயிற்று?

    சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாதுதான், அதற்காக எல்லோரும் பாடுபட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. அதை எங்கேயிருந்து ஆரம்பிக்க வேண்டும்? அதை யார் கையில் எடுத்து போராடுகிறார்களோ அவர்கள் கழகத்திலிருந்தே ஆரம்பிக்கலாமே..!! அது தானே நியாயம்!! இப்போ வீரமணி என்ன சாப்பிடுறாரோ அதே உணவு தி.க. கட்சியின் அடிமட்டத் தொண்டன் வரை எல்லோருக்கும் வழங்க வேண்டும், [அவருக்கு பாசுமதி அரிசி, தொண்டனுக்கு ரேஷன் அரிசி என்பது நீக்கப் பட வேண்டும்], அவரு போகும் காரையே தொண்டர்களுக்கு வழங்க வேண்டும், [அவரு மெர்சிடீஸ் பென்ஸ் கார்ல போவாரு, தொண்டன் சைக்கிளை மிதிக்க வேண்டும் என்ற நிலை இருக்கக் கூடாது], அடுத்து உடல் நலம் கெட்டால் அவர் சிகிச்சை பெரும் மருத்துவ மனையிலேயே எல்லா தொண்டர்களும் சிகிச்சை பெற வேண்டும். [வீரமணி, கருணாநிதிக்கு அப்போலோ மருத்துவமனை, தொண்டனுக்கு டாக்டர், மருந்துகள் இல்லாமல் வெறும் மார்ச்சுவரி மட்டும் பக்காவாக வேலை செய்யும் அரசு பொது மருத்துவமனை என்ற நிலை இருக்கக் கூடாது.] இதையெல்லாம் செய்ய உங்கள் தலைவன் ரெடியா? இதைத் தட்டிக் கேட்க தொண்டர்களாகிய உங்களுக்கு திராணி இருக்கிறதா? முதலில் உங்கள் வீட்டை சுத்தம் செய்யுங்கள் அப்புறம் அடுத்தவன் வீட்டைப் பற்றி பேசுங்கள்.

  61. அன்பர் K. Jayadev தாஸ் கவனத்திற்கு:

    //உணர்ச்சி வசப்பட்டு எதையும் எழுதக்கூடாது.சாதி இல்லையென்றல் இல்லாமல் போகுமா ? ஒரு கண்க்கெடுப்பில் சரியான விவரம் வெளிப்படவேண்டும் என்ற அக்கறையில் வீரமனி அவர்கள் கூறுவது எப்படி தவறாகும்? சாதி இருக்கக்கூடாது என்பது சரி.ஆனால் இன்று இருக்கிறதே . பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு இடஒதுக்கீடு அல்ல .ஆனால் ஒரு தற்காலிக நிவாரணம் என்ற வகையில் அதன் தேவை இருக்கிறது. எனவே வீரமனி கூருவது சரியே .அவரைப்பற்றி அவதூறாக .தின்மணி இப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிடுவது வியப்பாக இருக்கிறது.மிக மிக அனாகரீகமாக எழுதுவதை அப்படியே வெளியிடலாமா? By வாசுதேவன்.மு 4/24/2012 6:43:00 PM //

    நன்றி கலியுக வாசுதேவரே!!!

  62. “தாங்கள் அடிமைகளாக நடத்தப் படுகிறோம் என்பதைக்கூட அறியா வண்ணம்
    மக்களின் மூளை மழுங்கடிக்கப் பட்டுள்ளது.”

    //இரட்டைக் குவளை முறை நீடிப்பது வேதனை அளிக்கிறது: எம்.ஒய். இக்பால்//

    பார்ப்பன சாதியை சேராதவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிற சாதியினரை ஆலயத்தில் பூஜை செய்ய -மதுரையைச் சேர்ந்த பார்ப்பன பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர்.பிரசாத லட்டு கூட பிராமணர்கள் தான் பிடிக்கணும் உயர்நீதிமன்ற தீர்ப்பு !

    தாங்கள் அடிமைகளாக நடத்தப் படுகிறோம் என்பதைக்கூட அறியா வண்ணம் மக்களின்
    மூளை மழுங்கடிக்கப் பட்டுள்ளது.

    பெற்றவளுக்கு பிள்ளை தீட்டா?அல்லது உருவாக்கியவனுக்கு உண்டாக்கியன் தீட்டா???”

    தெய்வத்தொண்டு செய்ய அவன் கட்டிய கோவிலிலே , அவனை அனுமதி மறுக்கும்
    பரமாத்மாக்கள் -வெட்கப்படவேண்டும் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் இந்நிலை தொடர்வதற்கு.

    ஒவ்வொரு இந்து சாதிமக்களும் தனக்கு மேலே எந்த சாதியும் இருக்கக் கூடாது; ஆனால் அதே சமயம் தனக்கு கீழே அடிமைகள்/ சாதிகள் இருக்க வேண்டும் என
    நினைக்கின்றனர். ஏன் நீதியை காக்காதவர்களையும்/மக்களையும் சுனாமி
    கொண்டுபோகக் கூடாது.

  63. “கடவுள் இருக்கிறாரா, இல்லையா?” ஒரு நாத்திகருக்கும், ஆத்திகருக்கும் சிறு விவாதம்; “நீங்கள் உங்களை நம்புகிறீர்களா?”- நாத்திகர் ஆத்திகரைப் பார்த்து கேட்கிறார். ஆத்திகர்: “நிச்சயமாக என்னை நான் நம்புகிறேன்.” நாத்திகர்:”சவால் விடுகிறேன். நீங்கள் உங்களை நம்புவதில்லை.” ஆத்திகர்: “என்னைப் பற்றி எனக்குத்தான் தெரியும். இது குறித்து நீங்கள் எப்படி அறுதியிட்டு முடிவு சொல்ல முடியும்?” நாத்திகர்: “நீங்கள் விவாதத்திற்கு ஒத்துழைத்தீர்கள் என்றால், நான் நிரூபித்துக்காட்டுகிறேன், நீங்கள் உங்களை நம்புவதில்லை என்று.” ஆத்திகர்: “சரி, விவாதத்தை தொடருங்கள்.” நாத்திகர்: ஆளில்லா மைதானத்தை நோக்கி “அதோ பாருங்கள் அந்த மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் நீங்கள் நம்புகிறீர்களா? ஆத்திகர்: நம்பமாட்டேன். நாத்திகர்: ஏன்? ஆத்திகர்: அங்கு யாரும் இல்லை. கண்களுக்கும் புலப்படவில்லை. ஆகையால் நம்ப முடியாது. நாத்திகர்: “அப்படியென்றால் கண்களுக்குப் புலப்படாத கடவுளை மட்டும் ஏன் நம்புகிறீர்கள்?” ஆத்திகர்: “அது வந்து, அது கடவுள். நம்பித்தான் ஆகவேண்டும்.” நாத்திகர்: “பார்த்தீர்களா! ஐம்புலன்களில் ஒன்றான உங்கள் கண்களையே மறுப்பதன் மூலம் நீங்கள் உங்களையே நம்ப மறுக்கிறீர்கள். உங்களையே நம்ப மறுக்கும் நீங்கள், நீங்கள் சொல்லும் கடவுளை மட்டும் நாங்கள் எப்படி நம்புவது? ஆத்திகர்:…..!!! (புலனறிவுக்கு எட்டுகிற பொருட்களுக்கு பொருத்தமில்லாத கருத்துக்களே கடவுள். அதாவது புலன்களால் உணர முடியாத கருத்து. மனோ அடிமைத்தனத்தின் பலமான விலங்கு கடவுள் நினைவு. சுரண்டுபவர்களின் சக்திவாய்ந்த ஆயுதம்.)

    • ore oru reply thaan,

      oru kootahthula,edhavadhu oru thiruvizhannu vechikkalam neenga poirukeenga,anga orutharu ungalaye paathukittu irukkaru,illa keyhole vazhiya romukulla irukkura ungala oruthar paathukittu irukkanga,

      neenga keyhola paakavum illa, aana oru aalu ungala kankaanikaruthu mattum ungalukku feel aagum,adhu eppadi?

      endha 5 sensesaala adhu pulappaduthu?

      • ஐம்புலன்களால் நுகர்ந்து பெறப்படும் புற உண்மைதான் பொருள். அதாவது புலனறிவுக்கு எட்டுகிற பொருட்களுக்கு பொருத்தமில்லாத கருத்துக்களே கடவுள், ஆன்மா, பயம் மற்றும் நீங்கள் சொல்லவரும் ஃபீலிங். இவை அனைத்தும் புலன்களால் உணரமுடியாதவை. அறிவுக்கு புறம்பானவை. உங்களுடை இந்த வயது வரைக்கும் நீங்கள் இது வரை கேட்காத, பார்க்காத, சுவைக்காத, நுகராத (வாசனை) தொட்டறியாத ஏதாவது ஒன்றைப் பற்றி ஒரு நிமிடம் விளக்க முடியுமா?

        • \\உங்களுடை இந்த வயது வரைக்கும் நீங்கள் இது வரை கேட்காத, பார்க்காத, சுவைக்காத, நுகராத (வாசனை) தொட்டறியாத ஏதாவது ஒன்றைப் பற்றி ஒரு நிமிடம் விளக்க முடியுமா? \\

          மணிகண்டனின் மூளை !! அது சத்தம் போட்டு கேட்டதில்லை, கண்ணால் பார்த்ததில்லை, சுவைத்ததில்லை [உவ்வவ்வ்வ்வே…………?!], தொட்டறிந்ததில்லை. ஆனால் நிச்சயம் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

          இதே போல இன்னமும் சில சங்கதிகள்:

          கணித வரையரைப் படி ஒரு புள்ளி [point], கோடு [line], பரப்பு [Surface], i [ Square root of -1] இவற்றையும் ஐம்புலன்களால் கண்டதில்லை.

          Electrons-களை ஐம்புலன்களால் கண்டதில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் 96% பங்கு கொண்டிருப்பதாக நம்பப் படும் Dark Energy, Dark matter ஐம்புலன்களால் கண்டதில்லை. அந்த 4% லும் கருந்துளைகளை [Black Holes] ஐம்புலன்களால் கண்டதில்லை.

          • தாஸ், இவ்வுலகில் இயங்கும் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அறிவியல் விதிக்குட்பட்டுதான் இயங்குகின்றன. உதாரணத்திற்கு மழையை எடுத்துக்கொண்டால் நீர்-நீராவி-மேகம்-மழை. இந்த சுழற்சிக்குட்பட்டுதான் மழை பெய்கிறது. அதே போல்தான் மூளை. இந்த பொருளியல் உலகை பிரதிபலித்து எண்ணங்களாக மாற்றுகிறது. அப்படியிருக்கும்போது பேய், பிசாசு, கடவுள், பயம்… இவையெல்லாம் எதனின் பிரதிபலிப்பு? பொருளியல் உலகிற்கு பொருந்தாத இந்த லிஸ்டை பற்றி உங்களால் விளக்க முடியுமா என்று கேட்டிருந்தேன். அதாவது இந்த லிஸ்டிற்கு ஏதாவது நிறம், வடிவம், குணம் அல்லது காலம் சார்ந்து, இடம் சார்ந்து என்று ஏதாவது ஒரு வகையில் விளக்கத்தான் முடியுமா? ஒருவர் அறியாமைக்கு பலியாவதும், ஆன்மீகத்திற்கு பலியாவதும் வேறு வேறு அல்ல. எனது வாதத்தில் ஏதாவது முரண்பாட்டை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுனீர்கள் என்றாலோ அல்லது பொருத்தமான விமர்சனத்தை வைக்கும்பட்சத்திலோ அதை நான் நேர்மையாக ஏற்க தயார். அதை விடுத்து ஒருமையில் சாடுவது , தனி நபர் தாக்குதல் போன்ற அணுகுமுறை இருந்தால் அதே திட்டம் எனக்கு இல்லை.

            • \\அப்படியிருக்கும்போது பேய், பிசாசு, கடவுள், பயம்… இவையெல்லாம் எதனின் பிரதிபலிப்பு?\\ அது சரி மணிகண்டன், உங்களுக்கு எப்போதாவது, இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தமும் எதனுடைய பிரதிபலிப்பு என்று கேள்வி எழுப்பத் தோன்றியதே இல்லையா? இவ்வளவு விவரமாக கேள்வி கேட்கும் உங்களுக்கு ஏன் இந்த மாதிரி கேள்வி எழவில்லை? சாமியார் கையில் திருநூரு வந்தால் அதை எந்த கெமிகலைக் கலந்து உருண்டையாக்கி காய வைத்து, பக்தர்களிடம் வரும் போது கையில் அந்த சிறு உருண்டைகளை மறைத்து கையசைத்து நசுக்கி மீண்டும் பொடியாக்கி விபூதியாகத் தருகிறார் என்றெல்லாம் விபரமாக பார்க்கும் நீங்கள், இந்த பெரிய பிரபஞ்சம் எங்கேயிருந்துடா வந்தது என்று கேட்கத் தோணவில்லையா? திருநீரு சாமியார் செய்தார் என்று நம்புபவன் முட்டாள் என்றால், இந்த பிரபஞ்சமே ஒன்ருமில்லாதளிருந்து தானாக தோன்றியது என்றும் நீங்கள் யார்? உங்களை நீங்களே முட்டாள்களாக்கிக் கொள்கிறீர்களா? இங்கே வேலை செய்யும் உங்கள் மூளை அங்கே ஏன் வேலை செய்ய மறுக்கிறது?

            • \\ பொருளியல் உலகிற்கு பொருந்தாத இந்த லிஸ்டை பற்றி உங்களால் விளக்க முடியுமா என்று கேட்டிருந்தேன். அதாவது இந்த லிஸ்டிற்கு ஏதாவது நிறம், வடிவம், குணம் அல்லது காலம் சார்ந்து, இடம் சார்ந்து என்று ஏதாவது ஒரு வகையில் விளக்கத்தான் முடியுமா?\\ எந்த லிஸ்டு?

            • \\ ஒருவர் அறியாமைக்கு பலியாவதும், ஆன்மீகத்திற்கு பலியாவதும் வேறு வேறு அல்ல. \\ அதையே, ஒருவர் அறியாமைக்கு பலியாவதும், நாத்திகத்திற்கு பலியாவதும் வேறு வேறு அல்ல என்று போட்டுக் கொள்ளுங்கள். வீரமணி வீட்டில் முக்கால பூஜையும் தடபுடலாக நடக்கும், [அடுத்தவங்க சுதந்திரத்தில் இவரு தலையிடமாட்டாராமாம்], கருணாநிதி மனைவிகள் எல்லா கோவில்களுக்கும் போவார்கள், எல்லா சாமியார் கால்களிலும் விழுவார்கள். தங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வக்கற்ற இவர்கள் பின்னால் போனால் உருப்படாமல் போகப் போவது அவர்கள் அல்ல, நீங்கள்தான்.

              • வீரமணியும் கருணாவும் நாத்தீகவாதிகளாக சொல்லிக்கொள்ளுவதுதான் உங்களுக்கு பிரச்சினையா!

                • இவங்களை நாத்தீகர்கள் என்று நான் நம்பவில்லை. ஏனெனில் அந்தக் கொள்கைகளை இவர்கள் தங்கள் வாழ்வில் கடைபிடிப்பதில்லை. கட்சிக் காரன் கரைவேட்டி துண்டு போட்டு உனக்கு உழைப்பான், நீ ஜோசியக்காரன் சொன்ன மஞ்சள் துண்டு போடுவாய், உன் பெண்டாட்டி பிள்ளைகள் எல்லோரும் கோவிலுக்குச் செல்வார்கள். எந்த ஊரு நியாயமையா இது? அதே மாதிரி இந்த வீரமணி ஜெயலலிதாவை பண ஆதாயத்துக்காக ஆதரித்த சுயமரியாதைக் காரன். அந்தம்மா எல்லா கோவில்களுக்கும் செல்வார், ஜோசியக்காரன் சொன்ன தேதிக்கு எல்லாம் செய்வார், பெயரில் ஒரு a சேர்ப்பார், கண்ணகி சிலையை பிடுங்கி வீசுவார், நினைத்தால் கல்லூரிக்குச் சொந்தமானா இடத்தில் சட்டசபை கட்டி நாறடிப்பேன் என்பார். இந்த துக்ளக் சாம்ராஜ்யம் நடத்தும் மூடநம்பிக்கைகளின் சிகரமான இந்தம்மாவின் செயல்கள் ஏதும் இந்த வெட்கங் கேட்ட வீரமணி கண்ணுக்குத் தெரியாது. தெரிந்ததெல்லாம் சூட்கேசுகளும், அதன் உள்ளே இருக்கும் கத்தை கத்தையான பணம் மட்டும்தான். சாமியார் என்று சொல்லி மாமியார்களுடன் கூத்தடிப்பவர்களுக்கும் இந்த பிராடுகளுக்கும் வேறுபாடு இல்லை. இருவருமே எடுத்துக் கொண்ட கொள்கைகளைப் பின்பற்றுவதில்லை. இருவருக்குமே பணமே குறிக்கோள்.

                  • பிறகு, நாத்தீகம் பேசுவோரையெல்லாம் அவர்களின் தொண்டர்களாக பார்க்கும் மர்மமென்ன?

                    • நாதீகத்தை பின் பற்றினால் சுபிட்சமாகலாம் என்று துர்போதனை செய்கிறார்கள், இந்த நாத்தீகர்களின் யோக்கியதையைப் பாருங்கள், திருந்துங்கள் என்று சொல்லவே அவர்களை இழுக்கிறேன். மேலும் தமிழகத்தில் நாத்தீகர்கள் பெரும்பாலும் வீரமணியின் தொண்டர்கள் தானே!!
                      நீங்க கூட சாய்பாபா, ரஞ்சிதானந்தா, பிரேமானந்தா, காஞ்சிபுரம் பெரியவாள் என்ற அயோக்கியப் பயல்கள் வரும் போது ஆஸ்தீகர்கள் எல்லோரும் அதே ராகம் என்று சொல்லி அவர்களோடு சேர்த்து பார்ப்பது ஏன்?

                    • Jayadev Das

                      நீங்கள் பதிவைப் படிக்காமலே விவாதித்துக் கொண்டிருக்கிறீர்களோ என எண்ணத் தோன்றுகிறது. இந்தப் பதிவிலேயே // நாத்திராய் இருப்பது எப்படி மாபெரும் தகுதியாய் இல்லையோ அதே போல் ஆத்திகராய் இருப்பது ஒன்றே இழிவானதும் அல்ல// என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து ஆத்திகர்களையும் பெரியவாளின் அதே ராகம் என்ற கருத்து எங்கே இருக்கிறது?

                    • \\சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோயிலின் கருவறையினுள் பல நூற்றாண்டுகளாக மீளாத் துயிலில் ஆழ்ந்து கிடக்கும் சிற்பங்களிலும், புனித நூல்களிலும், புராணங்களிலும், ஹதீஸ்களிலும், இறைவன் அருளிய வேத்திலும் இல்லையென்பதையும், அந்தப் பிரச்சினைகளின் தோற்றுவாயாக இருக்கும் இந்த வர்க்க சமூகத்தை மாற்றியமைப்பதே தீர்வு என்பதையும் யாரொருவர் தமது சொந்த அனுபவத்தில் நேர்மறையில் உணர்ந்து வினையாற்றத் துவங்குகிறாரோ அப்போது அந்தப் போராட்டத்தின் உப விளைவாக கடவுள் இறந்து போகிறார். அந்த இடத்தில் கடவுள் அமர்ந்திருக்கும் அஸ்திவாரக் கல் ஆட்டம் காண்கிறது. சமூக மாற்றத்திற்கான போராட்டம் வென்று ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட்ட பின் கடவுளுக்கான தேவையே காலாவதியாகி விடுகிறது. துன்பங்களின் தோற்றுவாய்கள் அடைக்கப்பட்டு விட்ட தேறுதல் தர யாரும் தேவையில்லை அல்லவா?\\ அதுசரி, பதிவை ஒழுங்கா படிச்ச நீங்க இதையெல்லாம் பார்க்கவில்லையோ??!!

            • \\எனது வாதத்தில் ஏதாவது முரண்பாட்டை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுனீர்கள் என்றாலோ அல்லது பொருத்தமான விமர்சனத்தை வைக்கும்பட்சத்திலோ அதை நான் நேர்மையாக ஏற்க தயார். \\ இது விடிய விடிய இராமாயணம் கேட்டுவிட்டு, விடிந்ததும் சீதைக்கு இராமன் சித்தப்பனா என்று கேட்ட கதையாக இருக்கிறது. நீங்கள் விட்டிருப்பது அத்தனையுமே கப்சா தான், வீம்புதான், லாஜிக் இல்லாத வெற்று வாதங்கள்தான். மேலே ஒருத்தன் வார்த்தைக்கு வார்த்தை இயற்பியல் தப்பு தப்பாக எழுதி தான் சொல்வது அத்தனையும் புளுகு என்று தெரிந்தும், அவை சரிதான் என்று வாதம் செய்தான். நீங்கள் அனைவருமே கிட்ட தட்ட இதே ரகம்தான். எத்தனைதான் எடுத்துரைத்தாலும், அது உங்களுக்கே சரி எனப் பட்டாலும், நீங்கள் யாரும் திருந்தப் போவதில்லை. உங்களுக்கு சொல்ல வேண்டிய அத்தனையும் சொல்லிவிட்டேன், இனி புதிதாகச் சொல்லி உங்களுக்கு புரிய வைக்க எதுவும் இல்லை.

              • // மேலே ஒருத்தன் வார்த்தைக்கு வார்த்தை இயற்பியல் தப்பு தப்பாக எழுதி தான் சொல்வது அத்தனையும் புளுகு என்று தெரிந்தும், அவை சரிதான் என்று வாதம் செய்தான்.//

                கீழே மனித அறிவு வகுத்த கணிதமுறை வரையறைகள், குறியீடுகளை தூலமாக கண்ணில் காட்டு என்று தியாகுவிடம் சாமியாடத் துவங்கியிருக்கிறாய்..நீ இயற்பியலில்தான் அரைவேக்காடு என்று நினைத்தேன், இப்போது கணிதம் எதற்கு என்றே உனக்குத் தெரியாது என்பதையும் வெட்கம் இல்லாமல் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறாய்..

            • \\அதை விடுத்து ஒருமையில் சாடுவது , தனி நபர் தாக்குதல் போன்ற அணுகுமுறை இருந்தால் அதே திட்டம் எனக்கு இல்லை.\\ எனக்கும் சினிமாவில் வருவது போல, கன்னத்தில் சின்னதாக கருப்பு புள்ளி வைத்து, பார்த்தா நான் வேற ஆள் என்று சொல்வது போல, இங்கே வேறு வேறு பெயர்களில் ஐ.டி. create பண்ணி கமெண்டு போடும் எண்ணம் இல்லை, தயவு செய்து நீங்களும் அதைச் செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

  64. \\ஆளில்லா மைதானத்தை நோக்கி “அதோ பாருங்கள் அந்த மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் நீங்கள் நம்புகிறீர்களா?\\ ஆளில்லாத மைதானத்துல யாருக்காக இப்படி டீ ஆத்துறீங்க இரா.மணிகண்டன் !! [சும்மா காமடிக்குச் சொன்னேன்!!]. மைதானத்தில் மாணவர்கள் இருப்பதற்கு நீங்கள் எதை ஆதாரமாகக் கொடுக்கிறீர்கள்? எதுவுமே இல்லை!! இல்லாத ஒன்றை இல்லை என்று ஒப்புக் கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இறைவன் இருப்பதாகச் சொல்லும் ஆத்தீகர்கள் இந்த மாதிரி சொல்ல வில்லை. மாறாக, இந்த பிரமாண்டமான படைப்பையே ஆதாரமாகக் காட்டி, இது தானாக எப்படி வந்திருக்க முடியும் என்று கேட்கிறார்கள். நீங்கள் கொடுக்கும் உதாரணம் வேறு, இறைவன் இருப்பதாக நாங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் வேறு.

  65. விவாதத்தில் இடை புகுகிறேன்

    நிறையையும் ஆற்றலையும் சமபடுத்திய பெருமை உடையது ஐன்ஸ்டீனின் கண்டு பிடிப்பு ஆனால் இதை அப்படியே கொச்சையாக நிறையை உலகிற்கும் கடவுளை ஆற்றலுக்கும் சமப்படுத்திடுவாரோன்னு நினைச்சு நிறையும் ஆற்றலும் சமமில்லைன்னு அம்பி அவர்கள் வாதிடுகிறார்னு நினைக்கிறேன் .

    //Until the time of Einstein, mass and energy were two separate things. In the special theory of relativity Einstein demonstrated that neither mass nor energy were conserved seperately, but that they could be traded one for the other and only the total “mass-energy” was conserved. The relationship between the mass and the energy is contained in what is probably the most famous equation in science,

    E = m c 2

    where m is the mass, c is the speed of light, and E is the energy equivalent of the mass.

    Because the speed of light squared is a very large number when expressed in appropriate units, a small amount of mass corresponds to a huge amount of energy. Thus, the conversion of mass to energy could account for the enormous energy output of the stars, but it is necessary to find a physical mechanism by which that can take place.

    Einstein himself originally thought that it might be impossible to find a physical process that could realize the potentiality embedded in his equation and convert mass to energy in usable quantities. In the nuclear age, we now know (both for better and for worse) that he was too pessimistic; there are several physical processes that can accomplish this. //

    • \\நிறையையும் ஆற்றலையும் சமபடுத்திய பெருமை உடையது ஐன்ஸ்டீனின் கண்டு பிடிப்பு ஆனால் இதை அப்படியே கொச்சையாக நிறையை உலகிற்கும் கடவுளை ஆற்றலுக்கும் சமப்படுத்திடுவாரோன்னு நினைச்சு நிறையும் ஆற்றலும் சமமில்லைன்னு அம்பி அவர்கள் வாதிடுகிறார்னு நினைக்கிறேன் .\\

      அன்பின் தியாகு , தங்களது கனிவான பதிலுக்கு மிக்க நன்றி. இவரு,

      \\ஐன்ஸ்டீன் நிறைக்கும் ஆற்றலுக்கும் இருக்கும் தொடர்பைத்தான் நிறுவியிருக்கிறார். இரண்டும் செயல்பாடுகளில் ஒன்றேதான் என்றால் பொருள்முதல் வாதம் கூறும் பொருள்தான் கடவுள் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்..?!\\

      என்று சொன்ன போது நான் கொஞ்சம் தடுமாறிப் போனேன், கடவுளை எதற்கு இங்கே கொண்டு வந்து முடிச்சு போடுகிறார் என்று. தற்போது தங்கள் பதிலில் இருந்து ஏன் என்பது புரிகிறது. Pair production -பற்றி இவரு எழுதி எழுதி என்னுடைய தலையைத் தின்னுகிறார், என்ன சொன்னாலும் இவருக்கு புரிய மாட்டேன்கிறது. Moementum Conservation க்காக மட்டுமே ஒரு அணு தேவைப் படுகிறது, e-, e+ pair களை உருவாக்க அல்ல என்பதையும், இவருக்கு புரியும் படி நீங்கள் எடுத்துச் சொன்னால் மிக்க உதவியாக இருக்கும். நான் இந்த கேசுக்கு இன்னொரு பதில் எழுத விரும்பவில்லை. தங்கள் பதிலுக்கு மீண்டும் ஒரு முறை மிக்க நன்றி!!

      • // நான் இந்த கேசுக்கு இன்னொரு பதில் எழுத விரும்பவில்லை. //

        எனக்கு மட்டும் ஆசையா, குட்டிச்சுவற்றில் முட்டிக்கொள்ள..

        internal pair creation, particle decay, super heavy nuclear collisions பற்றி தெரியாது என்று கூறுபவரிடம் மேற்கொண்டு பேசிப் பயனில்லை என்று நானும் பதிலளிக்கவில்லை.

    • தியாகு,

      நாமறிந்த நிறையுள்ள பருப்பொருள், நிறையற்ற ஆற்றல் இரண்டும் தூலமானவை. இவற்றின் இருப்பையும், தன்மைகளையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிறுவவும், அளவிடவும், ஆய்வு செய்யவும் கருவிகளும், முறைகளும் கண்டுபிடிக்கப் பட்டு மேலும் துல்லியமாக்கப்பட்டு வருகின்றன.

      பருப்பொருட்கள் தங்கள் நிறையை எப்படிப் பெறுகின்றன என்ற ஆய்வுகள் மேலும் நுட்பமான ஒரு பரிமாணத்திற்கோ, அறிவியல் உண்மைக்கோ இட்டுச் செல்லும் வாய்ப்புகள் அதிகம். பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang theory) மறுபரிசீலனைகுள்ளாகலாம். பொருள்முதல்க் கொள்கையே கூட மாறுதலுக்குள்ளாகலாம். இது கடவுளிடம் இட்டுச்செல்லுமா இல்லை ஒரு போதும் கடவுளின் இருப்பையோ, இல்லாமையையோ நிறுவமுடியாது என்றாகுமா எனக் கூறமுடியாது.

      கடவுள் நம்பிக்கையை கண்ணைமூடிக்கொண்டு எதிர்க்கும் சில நாத்திகர்களைவிட கடவுளின் தேவையில்லை எனக் கூறும் மார்க்சீயர்கள் ஒரளவு ’பாதுகாப்பான’ விஞ்ஞான நிலைப்பாட்டிலிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.

      • “பொருள் முதல் கொள்கை மாறுதலுக்குள்ளாகலாம்” அம்பி, நமது (மனிதர்கள்) விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டவை புறநிலை எதார்த்தம். (இந்த அண்ட சராசரம்) இவற்றின் வெளிப்பாடுதான் நாம். ஆனால் இங்கு நம்மை நாமே மறுத்துக்கொண்டு, நமது கருத்தை மட்டும் நியாயபடுத்த முடியுமா? முடியாது. ஆகவே பொருள் முதல்வாதம் மாறுதலுக்குட்பட்டவை அல்ல.

        • //“பொருள் முதல் கொள்கை மாறுதலுக்குள்ளாகலாம்” அம்பி, நமது (மனிதர்கள்) விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டவை புறநிலை எதார்த்தம். (இந்த அண்ட சராசரம்) இவற்றின் வெளிப்பாடுதான் நாம். ஆனால் இங்கு நம்மை நாமே மறுத்துக்கொண்டு, நமது கருத்தை மட்டும் நியாயபடுத்த முடியுமா? முடியாது. ஆகவே பொருள் முதல்வாதம் மாறுதலுக்குட்பட்டவை அல்ல.//

          பொருள்முதல் வாதம் பதினெட்டாம் நூற்றாண்டில் மாறுதலுக்குள்ளானது எப்படி

          பொருள்முதல் வாதம் வரட்டுதனமாக இல்லாமல் இயக்கவியல் பொருள்முதல்வாதமான பின்பே அதை நாம் சமூக மாற்றத்திற்கு பயன்படுத்த முடிந்தது

          இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பதே மாறும் என்பது ஒரு யூகமே

  66. /நாமறிந்த நிறையுள்ள பருப்பொருள், நிறையற்ற ஆற்றல் இரண்டும் தூலமானவை. இவற்றின் இருப்பையும், தன்மைகளையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிறுவவும், அளவிடவும், ஆய்வு செய்யவும் கருவிகளும், முறைகளும் கண்டுபிடிக்கப் பட்டு மேலும் துல்லியமாக்கப்பட்டு வருகின்றன.//

    தோழர் அம்பி

    நாம் ஒரு விசயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் எந்த ஒரு அறிவியல் உண்மையயும் வாதத்துக்காக மறுக்க கூடாது என்பதை குறிப்பிடத்தான் இங்கு வந்தேன் மற்றபடி உங்கள் விவாதமும் ஜெயதாசின் விவாதமும் அருமை தொடருங்கள்

  67. \\“பொருள் முதல் கொள்கை மாறுதலுக்குள்ளாகலாம்” அம்பி, நமது (மனிதர்கள்) விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டவை புறநிலை எதார்த்தம். (இந்த அண்ட சராசரம்) இவற்றின் வெளிப்பாடுதான் நாம். ஆனால் இங்கு நம்மை நாமே மறுத்துக்கொண்டு, நமது கருத்தை மட்டும் நியாயபடுத்த முடியுமா? முடியாது. ஆகவே பொருள் முதல்வாதம் மாறுதலுக்குட்பட்டவை அல்ல.\\

    திருவண்ணாமலை ராஜசேகர் பிரசங்கம் மாதிரியே இருக்கு. [யார் இவருன்னு தெரியலையா…!! அதாங்க ரஞ்சிக் கோட்டை வாலிபன்…!! இன்னும் விளங்கலையா………?? அதாங்க ரஞ்சிதானந்தா…!! ஹா..ஹா..ஹா….]. பெரிய பெரிய வார்த்தையா போட்டு பேசுறீங்க, ரொம்ப ஹை லெவல் டாபிக் மாதிரி தெரியுது, ஆனா ஒரு எழவும் புரியமாட்டேங்குது….. பேஷ்…பேஷ்……..[ ஆனா நீங்க சேர்ந்திருக்குற செட்டு தான் சரியில்ல… 🙁 ] ஒரு வேலை நீங்கதான் அந்த விளங்காதவனா……….. பல பேர்ல வந்து பின்னூட்டம் போடுரீரா……… அட அவனா நீ…….. 🙁

  68. //இரா.மணிகண்டன் //
    விளக்கம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள்…..

  69. //
    கணித வரையரைப் படி ஒரு புள்ளி [point], கோடு [line], பரப்பு [Surface], i [ Square root of -1] இவற்றையும் ஐம்புலன்களால் கண்டதில்லை.//

    மேற்கண்டவை அறிவியல் பூர்வமாக ஆய்வுக்கு உட்படுத்த முடிந்தவை அல்லவா

    ஆனால் கடவுள்(என்ற கருத்தை ) அத்தகைய ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா

    • இவையெல்லாம் Mathematical idealizations நிஜத்தில் realize செய்ய முடியாதவை. Square root of -1 இல்லவே இல்லை.

      • /நிஜத்தில் realize செய்ய முடியாதவை. Square root of -1 இல்லவே இல்லை.//

        நிஜத்தில் ரியலைஸ் என சொல்வதன் மூலம் புலன்களால் உணர்வதை சொல்கிறீர்களா அல்லது அறிவியல் நீருபணத்தை சொல்கிறீர்களா ?

      • என்ன சொல்லவர்றீங்கன்னு பிடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்

        //Mathematical idealizations நிஜத்தில் realize செய்ய முடியாதவை. Square root of -1 //

        கணக்கியல் படி நிரூபணம் செய்பவற்றை ஸ்தூல உலகில் ஐம்புலன்களால் காட்ட முடியாத மாதிரி கடவுளும் ஒரு சூத்திரம் என சொல்ல வருகிறீர்கள்னு நினைக்கிறேன்

        இதை ஏற்கனவே பல சொல்லி இருக்கிறாங்களே

        இந்த விவாதத்தில் ஸ்தூல உலகம் ஐம்புலன்களால் அறிந்து கொள்வது மட்டுமல்ல
        என்பதை

        ஒரு விசயத்தை சூட்சும படுத்திதான் புரிஞ்சிக்கனும் என்றால் அதை விஞ்ஞானம் ஏற்கிறதே

        இப்படி சூட்சுமபடுத்துவது உண்மையில் பல்வேறு சந்தர்பங்களில் அறிவியலும் செய்கிறது மார்க்ஸ் கூட உபரிமதிப்பு எனும் தத்துவத்தை படைத்ததே சூட்சுமபடுத்திதான்

  70. \\நிஜத்தில் ரியலைஸ் என சொல்வதன் மூலம் புலன்களால் உணர்வதை சொல்கிறீர்களா அல்லது அறிவியல் நீருபணத்தை சொல்கிறீர்களா ?\\ வெறும் வார்த்தை ஜாலங்கள் தேவையில்லை தியாகு. இதெல்லாம் என்ன, எந்த சோதனையில் இவை சிக்கின என்று என்று மட்டும் சொல்லுங்கள்.

    • சார் நான் மிக எளிமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறேன்

      //நிஜத்தில் realize செய்ய முடியாதவை. Square root of -1 இல்லவே இல்லை//

      என்பதை விளக்குங்கள் என்பதுதான் எனது கேள்வி

      நிஜம் = ரியலைஸ் என்கிற இருவார்த்தைகளும்

      எதை குறிக்கின்றன புலன் உணர்வுகளையா? இல்லையா என்பதே

      எனது மிக எளிமையான கேள்வி

      • எனக்கு தெரிந்த வகையில்

        +1 square root = 1
        -1 square = 1 (how -1 x-1 =1)
        – 1 square root = nothing (-1 x +1 = no value)

        ஏன்னா -1 x 1 = nothing

        எனக்கிருக்கும் கொஞ்சூண்டு மூளையில் போட்ட கணக்கு

        இதில் ஏதேனும் தப்பிருந்தால் பொறுத்து கொள்ளவும் மேலும்
        என்ன தப்புன்னு விளக்கவும்

  71. \\இதில் ஏதேனும் தப்பிருந்தால் பொறுத்து கொள்ளவும் மேலும்
    என்ன தப்புன்னு விளக்கவும்.\\
    ஐயையோ தியாகு, விட்டா அந்த ம்பியையே தூக்கி சாப்பிடுவீங்க போலிருக்கே!! உங்களுக்கு தெரிஞ்சவங்க கணக்கு படிச்சிருதா விளக்கச் சொல்லி கேட்டுக்கோங்க.

    • தியாகு கணக்கில் வீக்கு என்று தெரிந்தே எதையெல்லாமோ சம்பந்தமில்லாமல் இழுத்துக் கொண்டு வந்து போடுகிறீரே.. Square root of -1 இல்லவே இல்லை என்று புதிதாகக் கண்டுபிடித்தீரா.. ஏற்கனவே அதற்கு ’கற்பனை எண்’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள், இதெல்லாம் வசதியான கணித முறைக்காக. அதற்கும் உமக்கும் என்ன பிரச்சினை.?!!

      • \\நீ இயற்பியலில்தான் அரைவேக்காடு என்று நினைத்தேன்.\\ ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.

        \\இப்போது கணிதம் எதற்கு என்றே உனக்குத் தெரியாது என்பதையும் வெட்கம் இல்லாமல் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறாய்.\\ மூணாம் கிளாஸ் படிச்ச எனக்கு அவ்வளவுதான்ய தெரியும், நீ B.Com படிச்சிட்டு உனக்கு வராததெல்லாம் எதுக்குய்யா பேசிகிட்டு திரியறே?

        • \\இப்போது கணிதம் எதற்கு என்றே உனக்குத் தெரியாது என்பதையும் வெட்கம் இல்லாமல் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறாய்.\\ ஸ்ரீனிவாச இராமானுஜம் இவரு வீட்டில வாடைக்கு இருந்தாரமாம். ஐயோ…ஐயோ….

      • \\தியாகு கணக்கில் வீக்கு என்று தெரிந்தே எதையெல்லாமோ சம்பந்தமில்லாமல் இழுத்துக் கொண்டு வந்து போடுகிறீரே.. Square root of -1 இல்லவே இல்லை என்று புதிதாகக் கண்டுபிடித்தீரா.. ஏற்கனவே அதற்கு ’கற்பனை எண்’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள், இதெல்லாம் வசதியான கணித முறைக்காக. அதற்கும் உமக்கும் என்ன பிரச்சினை.?!!\\ முட்டாள் வாயைத் திறக்காத வரை நலம், once வாயைத் திறந்துட்டா………. முடிஞ்சது.

            • // அதெப்படி கம்பியூட்டர்ல மூஞ்சியா தெரியும் //

              // ஆனா வாயை திறந்துட்டியே……… ///

              சுவாமிகளுக்கு ஞானதிருஷ்டி அபாரமாத்தான் இருக்கு…

              • \\சுவாமிகளுக்கு ஞானதிருஷ்டி அபாரமாத்தான் இருக்கு…\\ அப்படி இருந்ததாலே தானே உன்னோட மேல்மாடி டோட்டலி காலின்னு பார்க்காமலேயே கண்டுபிடிச்சேன்.

      • \\தியாகு கணக்கில் வீக்கு என்று தெரிந்தே எதையெல்லாமோ சம்பந்தமில்லாமல் இழுத்துக் கொண்டு வந்து போடுகிறீரே.. \\ நீர் எழுதும் மூஞ்சியை வைத்து நீர் ஒன்னாம் நம்பர் கொமுட்டைன்னு மிகைச் சரியா கண்டுபுடிச்சேன், ஆனா அதையே வச்சு அவரு கணக்கில் வீக்குன்னு நான் வீக்குன்னு கண்டுபிடிச்சதா நீர் நினைச்சது, நீர் கூமுட்டைதான்னு உறுதி செய்யுது. அதெப்படி கம்பியூட்டர்ல மூஞ்சியா தெரியும், வீக்கு, ஸ்ட்ராங்ன்னு கண்டுபுடிக்க, இல்ல நான் என்ன அவர் பையோ டேட்டாவை பாத்தேனா? நான் இன்னும் எதைஎதோ கூடத்தான் சொன்னேன் அதெல்லாம் அவருக்குத் தெரிந்ததுன்னு நான் சொன்னேனா? கேட்டதுக்கு பதில் சொன்னேன். அதுக்கு மேல அவரு கேள்வி கேட்டாரு. இதுல நடுவுல சம்பந்தமே இல்லாம எதற்கையா எதையோ உளறு றீரு?

      • //கற்பனை எண்’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள், இதெல்லாம் வசதியான கணித முறைக்காக. அதற்கும் உமக்கும் என்ன பிரச்சினை.?!!//

        கற்பனை எண் என்றால் என்ன ?

        தெரிஞ்சுக்க கேட்கிறேன் தப்பா எடுத்துக்காதீங்க பாஸ்

        • imaginary numbers – என்று கூகிளில் தேடினால் ஏராளமான தகவல்கள் கிட்டும், தியாகு.

          • \\imaginary numbers – என்று கூகிளில் தேடினால் ஏராளமான தகவல்கள் கிட்டும், தியாகு.\\இதைவிட better விளக்கத்தை எந்த கொம்பியாலும்……. சாரி கொம்பனாலும் கொடுக்க முடியாது…….

  72. // திருநீரு சாமியார் செய்தார் என்று நம்புபவன் முட்டாள் என்றால், இந்த பிரபஞ்சமே ஒன்ருமில்லாதளிருந்து தானாக தோன்றிய
    து என்றும் நீங்கள் யார்? உங்களை நீங்களே முட்டாள்களாக்கிக் கொள்கிறீர்களா? இங்கே வேலை செய்யும் உங்கள் மூளை அங்கே ஏன் வேலை செய்ய மறுக்கிறது//

    அதானே உலகம் எங்கிருந்துங்க வந்தது

    நாங்கதான் முட்டாள் இந்த கேள்வியை கேட்கலை நீங்க அறிவாளிதானே

    டாண் டாண்னு விடை சொல்லுங்க பார்ப்போம்

    • \\அதானே உலகம் எங்கிருந்துங்க வந்தது \\ஏன் இந்தக் கேள்விகள் உங்கள் புத்திசாலி மூளையில் முன்னரே உதிக்க வில்லை, நான் கேட்டதற்க்கப்புறம் பூமராங் மாதிரி எனக்கே திருப்பி அனுப்புகிறீர்கள்? நீங்கள் கெட்டியாகப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் நாத்தீகக் கொள்கைகளில் இருந்து இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்ததா? அது உங்களுக்கு திருப்திகரமாக இருந்ததா? இல்லை கேள்வியே கேட்காமல் செம்மறி ஆட்டு மந்தை மாதிரி நாத்திக பிராடுகள் பின்னால் போய்க் கொண்டிருக்கிறீர்களா?

      ஒரு சின்ன உதாரணம்: நீங்கள் தீபாவளிக்கு வான வெடிகள் வாங்கியிருப்பீர்கள். அதில் சில மேலே சென்று வெடிக்கும், சில வெடித்த பின்னர் பல வண்ணங்கள் வெளிப்படும், சில சமயம் வெடித்த பின்னர் பாராசூட் மாதிரி அதிலிருந்து கீழே பறந்து வந்திறங்கும். இவை எல்லாம் நிகழ வேண்டுமானால் ஒவ்வொன்றுக்கும் அந்த பட்டாசு தயாரிக்கும் போதே அதைச் செய்பவன் என்ன வகையான result வேண்டும் என்பதைப் பொறுத்து என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும், அது எப்போது வெடிக்க வேண்டும், படிப்படியாக என்னென்ன நிகழ வேண்டும் என்று திட்டமிட்டுவைத்தால் தான் அந்த குறிப்பிட்ட வகை வான வெடி கிடைக்கும். தானாக எதுவும் வராது. சாதாரண வான வெடிக்கே பிளான் பண்ற ஒருத்தன் தேவைப் பட்டால் இவ்வளவு பெரிய பிரமாண்டம் பிளான் பண்ணாமலேயே வந்திருக்குமா? அப்போ யாரு பிளான் செய்தது? ஏன் எதற்கு எப்படின்னு கேள்வியே கேட்கத் தெரியாதா உங்களுக்கு? உங்களில் புத்திசாலி ஒருத்தன் கூட இல்லையா? அப்படி ஒருத்தன் இருந்தா உங்க தலைவனுங்க கிட்ட போய் நான் இங்கே கேட்டிருக்கும் கேள்விகளைக் கேட்டு பதில் கிடைக்குதான்னு பாருங்களேன். அவன் பதில் சொல்லவில்லை என்றால், அந்த பன்னாடையை பின்பற்றுவதை விட்டு விட்டு பதில் கிடைக்கும் இடத்தை தேடுங்க.

      • // சாதாரண வான வெடிக்கே பிளான் பண்ற ஒருத்தன் தேவைப் பட்டால் இவ்வளவு பெரிய பிரமாண்டம் பிளான் பண்ணாமலேயே வந்திருக்குமா? அப்போ யாரு பிளான் செய்தது? ஏன் எதற்கு எப்படின்னு கேள்வியே கேட்கத் தெரியாதா உங்களுக்கு? //

        ஜெதேதா சுவாமிகளே,

        நீர் சொல்றதப் பாத்தா கடவுளுக்கே நீர்தான் பிளான் போட்டுக் குடுத்த மாதிரி தோணுது.. உம்ம டவுசரைப் போலவே பிரபஞ்சப் படைப்பிலும் கிழிசல்கள் இருக்கு.. அதயெல்லாம் கடவுள் தான் விளக்கணும்.. நீர் இப்டி கடவுளை உணர்ந்த ஞானியைப் போல பேசிக்கிட்டு ஆதீனமாகப் பார்க்கவேண்டாம் என்று விண்ணப்பம் செஞ்சுக்கிறேன் சுவாமி..

        • \\நீர் இப்டி கடவுளை உணர்ந்த ஞானியைப் போல பேசிக்கிட்டு ஆதீனமாகப் பார்க்கவேண்டாம் என்று விண்ணப்பம் செஞ்சுக்கிறேன் சுவாமி.\\ என்னை சுவாமின்னு சொல்லிட்டே, கவலையே படாதே, நான் 194 வது அதீனமானா, உன்னை 195 வது அதீனமா பட்டம் சூட்டிவிடறேன்.

  73. //\\அதானே உலகம் எங்கிருந்துங்க வந்தது \\ஏன் இந்தக் கேள்விகள் உங்கள் புத்திசாலி மூளையில் முன்னரே உதிக்க வில்லை, நான் கேட்டதற்க்கப்புறம் பூமராங் மாதிரி எனக்கே திருப்பி அனுப்புகிறீர்கள்? நீங்கள் கெட்டியாகப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் நாத்தீகக் கொள்கைகளில் இருந்து இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்ததா? அது உங்களுக்கு திருப்திகரமாக இருந்ததா? இல்லை கேள்வியே கேட்கà
    ��மல் செம்மறி ஆட்டு மந்தை மாதிரி நாத்திக பிராடுகள் பின்னால் போய்க் கொண்டிருக்கிறீர்களா?//

    ஒரு எளிய வினா அதுவும் நீங்கள் கேட்க சொல்லி நான்
    கேட்ட வினா அதற்கு பதிலளிக்காமல் மேற்கொண்டும்
    வேறு திசையில் பயணிக்கிறீர்கள் அய்யா

    • \\ஒரு எளிய வினா அதுவும் நீங்கள் கேட்க சொல்லி நான்
      கேட்ட வினா அதற்கு பதிலளிக்காமல் மேற்கொண்டும்
      வேறு திசையில் பயணிக்கிறீர்கள் அய்யா\\ அதென்னது நான் கேட்டதற்க்கப்புரம் என்னிடமே திருப்பிக் கேட்பது பெரிய சாமர்த்தியமா? இத்தனை நாட்கள் நாத்தீகத்தைப் பிடித்து தொங்கி கொண்டிருந்தீர்களே, எந்த அடிப்படையில்? அவர்களின் பதில் என்ன? பதில் சொல்லவில்லை என்றால் அந்த வெத்து வேட்டுகளுடன் எதற்காக இத்தனைக் காலம் இருந்தீர்கள்?

  74. //தானாக எதுவும் வராது. சாதாரண வான வெடிக்கே பிளான் பண்ற ஒருத்தன் தேவைப் பட்டால் இவ்வளவு பெரிய பிரமாண்டம் பிளான் பண்ணாமலேயே வந்திருக்குமா? அப்போ யாரு பிளான் செய்தது? ஏன் எதற்கு எப்படின்னு கேள்
    வியே கேட்கத் தெரியாதா உங்களுக்கு? உங்களில் புத்திசாலி ஒருத்தன் கூட இல்லையா? அப்படி ஒருத்தன் இருந்தா உங்க தலைவனுங்க கிட்ட போய் நான் இங்கே கேட்டிருக்கும் கேள்விகளைக் கேட்டு பதில் கிடைக்குதான்னு பாருங்களேன். அவன் பதில் சொல்லவில்லை என்றால், அந்த பன்னாடையை பின்பற்றுவதை விட்டு விட்டு பதில் கிடைக்கும் இடத்தை தேடுங்க.//

    என்ன சார் நீங்க உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லனும் அதை விட்டு விட்டு நீ ஏன்
    அவனை பாலோ பண்ற இவனை பாலோ பன்றன்னு சொல்லி திட்டீங்களே நியயமா

    இந்த பிரமாண்டத்தை பிளான் செய்தது யார்

    அவரை உருவாக்கியது யார்

  75. \\என்ன சார் நீங்க உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லனும் அதை விட்டு விட்டு நீ ஏன் அவனை பாலோ பண்ற இவனை பாலோ பன்றன்னு சொல்லி திட்டீங்களே நியயமா\\ பதில் தெரிந்துகொள்ளும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை தியாகு. என்னை எதிலாவது சிக்க வைக்க முடியுமா என்ற குள்ளநரித் தனம்தான் உங்கள் பதில்களில் தெரிகிறது.

    \\இந்த பிரமாண்டத்தை பிளான் செய்தது யார்\\ மண்பாண்டம் போல ஒரு சாதாரண பொருளே தானாக வரத்து, குயவன் செய்தால் தான் வரும். ஏனெனில் அதைச் செய்ய Intelligence வேண்டும். ஆனால் வாழும் உயிர்களைத் தவிர மற்ற எந்த ஜடத்துக்கும் Intelligence இல்லை. அதனால் ஒரு Intelligence -ன் கூட்டு இல்லாமல் ஜடமே தனித்துதன்னைத் தானே உருமாற்றி ஒரு அற்புதமான வடிவமைப்பை உருவாக்குதல் நடவாத காரியம். அப்படியானால் அந்த Intelligence -ன் உரிமையாளர் யார்? இது தான் லாஜிக். இதை நீங்கள் உடைக்க வேண்டுமானால் ஏதாவது ஒரு அற்ப்புதமான வடிவமைப்பு தானாகவே உருவானது என்று நீங்கள் பார்த்திருப்பதாக சான்று தர வேண்டும். முடியுமா?

    \\அவரை உருவாக்கியது யார்.\\ இதைத்தான் குள்ளநரித் தனம் என்றேன்!! கடவுள் இருக்கிறார் என்ற லாஜிக்கை ஒப்புக் கொள்ளாத நீங்கள் இந்தக் கேள்விக்கு எதற்கு நேரிடையாக குதிக்கிறீர்கள்? அவர் இருந்திருக்க முடியாது என்று நிரூபியுங்கள், இந்த கேள்வியே வராதே!! எனக்கு இந்த பிரபஞ்சத்தில் உள்ளதை வைத்துப் பார்க்கும் போது, மேற்ச்சொன்ன மாதிரி ஒரு Intelligence being-ன் மேற்ப்பார்வை இல்லாமல் இந்த ஜட உலகம் இயங்காது என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும். Intelligence being ஐ நான் நேரிடையாகப் பார்க்க, நுகர், உணர, தொட்டுப் பார்க்க வில்லை என்றாலும் அந்த Intelligence being இருந்தேயாக வேண்டும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

    • //இதைத்தான் குள்ளநரித் தனம் என்றேன்!! கடவுள் இருக்கிறார் என்ற லாஜிக்கை ஒப்புக் கொள்ளாத நீங்கள் இந்தக் கேள்விக்கு எதற்கு நேரிடையாக குதிக்கிறீர்கள்? அவர் இருந்திருக்க முடியாது என்று நிரூபியுங்கள்//

      ஆரம்பிச்ச இடத்துக்கு வந்துட்டோம் கடவுள் இருக்கிறார் என்று வைத்து கொண்டாலும் உங்கள் லாஜிக் படி அவரை யாராவது உருவாக்கித்தானே இருக்கனும் என்பதே எனது கேள்வி (அதுக்காக கடவுள்தான் இந்த உலகை உருவாக்கினார் என நான் ஏத்துகிட்டதா அர்த்தமில்லை ஸ்ஸ் யப்பா )

      1.கடவுள் தான் உலகை படைத்தார் என நீங்கள் நிரூபிக்க மறுக்கிறீர்கள்

      2.கடவுள் படைக்கவில்லை என்றால் அதை நிரூபிக்க சொல்கிறீர்கள்

      நான் நினைக்கிறேன் நீங்கதான் லாஜிக் படி பேசவில்லைன்னு

      • \\1.கடவுள் தான் உலகை படைத்தார் என நீங்கள் நிரூபிக்க மறுக்கிறீர்கள் \\ ஒன்றிலிருந்துதான் இன்னொரு வரும், தானாக எதுவும் வராது. அப்படியானால் இந்த பிரமாண்டமும் வெற்றிடத்திலிருந்து வராது, அதற்க்கு ஒரு மூலம் இருக்க வேண்டும். உருவான இந்த ஜடத்தில் அற்புதமான உயிர்களின் உடலமைப்புகள் உள்ளன. அருமையான பல எந்திரங்கள் ஒருகே செயல்படும் வகையில் அவை உள்ளன. அவை தானாக உருவாகி இருக்க முடியாது. அப்படி உருவாகி நான் பார்த்ததில்லை. பிரபஞ்சத்தின் பொருகளின் பண்புகளை அத்துபடியாக தெரிந்த ஒரு மூலத்தால் தான் இதை உருவாக்கியிருக்கவும் முடியும். அப்படியானால் இந்த பிரபஞ்சம் உருவாக்கவும், இந்த உயிரங்கள் தோன்றவும் மூல காரணங்கள் வேறு வேறாக இருக்க முடியாது. இரண்டும் ஒன்றுதான். அடுத்து, அந்த மூல காரணம் ஜடமாக இருக்குமா, இல்லை சிந்திக்கும் திறன் கொண்டதாக இருக்குமா? ஜடமாக இருக்க முடியவே முடியாது, ஜடப் பொருளால் இன்னொரு ஜடத்தை அற்புதமாக இயங்கும் எந்திரமாக மாற்ற முடியாது, ஆகவே அந்த மூலம் சிந்திக்கும் திறன் கொண்டதாகத்தான் இருக்க முடியும். இது வரைக்கும் நான் கியாரண்டீ தருகிறேன், இதை இல்லைஎன்று முடிந்தால் நிரூபிக்கவும்.

      • \\நான் நினைக்கிறேன் நீங்கதான் லாஜிக் படி பேசவில்லைன்னு\\ உங்களுக்கு லாஜிக்னா என்னன்னு அர்த்தம் தெரியவில்லை என்று நினைக்கிறேன், நல்ல ஆங்கில அகராதியைப் பார்க்கவும்.

      • \\நான் நினைக்கிறேன் நீங்கதான் லாஜிக் படி பேசவில்லைன்னு\\ உங்களுக்கு லாஜிக்னா என்னன்னு அர்த்தம் தெரியவில்லை என்று நினைக்கிறேன், Please refer to a good English Dictionary.

        • // நல்ல ஆங்கில அகராதியைப் பார்க்கவும். //

          // Please refer to a good English Dictionary. //

          பட்லர் : அப்டியில்ல தாசு பாசு, இப்டி – “நல்ல ஆங்கில அகராதியில் பார்க்கவும்”. சும்மா அகராதியைப் பாத்துட்டே இருந்து என் உசுர ஏன் எடுக்கீரு…

    • // என்னை எதிலாவது சிக்க வைக்க முடியுமா என்ற குள்ளநரித் தனம்தான் உங்கள் பதில்களில் தெரிகிறது.//

      வாலும், பாலும் எங்கேயிருக்குன்னு கூடப் பாக்காம ஆப்பை பிடுங்கிக் கொண்டிருக்கும் குரங்குக்கு, சிக்க வைக்க குள்ளநரி தேவையா, சுவாமிகளே…

      • நாம் ஆப்பை ஒருபோதும் பிடுங்குவதில்லை, நாத்தீகம் என்ற பெயரில் முட்டாள் தனத்தை விதைக்கும் உமக்கு ஆப்பை வைப்பவன் நாம்.

        • நாம் என்றால் யாரோ ??

          நீர் மட்டுமா ? நீரும், கடவுளுமா ? நீரும், குரங்குமா ?

          விளக்கியருள வேண்டும், சுவாமி…

          • \\நாம் என்றால் யாரோ ?? \\ நம்மைப் போன்ற பெரியாட்களின் மொழி அது பக்தா…….. நீ இப்போதுதானே மடத்துக்கு வந்திருக்கிறாய், \\ நீரும், குரங்குமா ?\\ சந்தடி சாக்கில் உன் பெயரையும் இணைத்துவிட்டாயே பக்தா…….

            • அடடடா.. உங்க குருநாதரின் பெயரை எனக்கு சூட்டி புல்லரிக்க வெச்சுட்டீங்களே, சுவாமி..

              • ஹனுமான் என் குருநாதர் என்பது உனக்கெப்படி தெரியும் சிஷ்யா…….?

                • உம்ம குருவை குரங்காகவே பார்க்கும் நீர் கடவுளை எப்படிப் பார்ப்பீர் என்று நினைத்தால் இன்னோரு தடவை புல்லரிக்குது சுவாமீ..

                  என்னை சிஷ்யன் என்று கூறிக்கொள்வது போல் ஹனுமானையும் உம்முடைய குரு என்று கூறிக் கொள்கிறீர் போலும்.. இந்த மோசடி அனுமாருக்குத் தெரியுமா சுவாமீ..?

                  • \\இன்னோரு தடவை புல்லரிக்குது சுவாமீ\\ பார்த்து சிஷ்யா, பத்திரமாக மூடிவை, மாடு வந்து மேயக் கூடும். [எத்தனை தடவை புள்ளரிக்குத் என்றெல்லாம் கணக்கு வைத்து எண்ணிக் கொண்டிருக்கும் வேலையில்லா வெட்டி ஆபிசர் கேட்ட எல்லாம் டீல் பண்ண வேண்டியிருக்கே…..

                    \\இந்த மோசடி அனுமாருக்குத் தெரியுமா சுவாமீ..?\\ உன்னை மாதிரி “ரொம்ப நல்லவன்”ங்களுக்கெல்லாம் குரு தேவையில்லாமல் இருக்கலாம் அப்பனே, என்னை மாதிரி மோசடிப் பேர்வழிகளுக்குத்தான் அவர் மிகவும் தேவை. அதனால் கண்டிப்பாக அவர் அப்ஜெக்ட் பண்ணமாட்டார்.

  76. /மண்பாண்டம் போல ஒரு சாதாரண பொருளே தானாக வரத்து, குயவன் செய்தால் தான் வரும். ஏனெனில் அதைச் செய்ய Intelligence வேண்டும். ஆனால் வாழும் உயிர்களைத் தவிர மற்ற எந்த ஜடத்துக்கும் Intelligence இல்லை. அதனால் ஒரு Intelligence -ன் கூட்டு இல்லாமல் ஜடமே தனித்துதன்னைத் தானே உருமாற்றி ஒரு அற்புதமான வடிவமைப்பை உருவாக்குதல் நடவாத காரியம். அப்படியானால் அந்த Intelligence -ன் உரà
    ��மையாளர் யார்? இது தான் லாஜிக். இதை நீங்கள் உடைக்க வேண்டுமானால் ஏதாவது ஒரு அற்ப்புதமான வடிவமைப்பு தானாகவே உருவானது என்று நீங்கள் பார்த்திருப்பதாக சான்று தர வேண்டும். முடியுமா?//

    வேணும்னே இன்னொரு இண்டலிஜென்சியை ஏன் புகுத்தனும்னு கேட்கிறேன்
    இந்த உலகமே தனது சொந்த இண்டலிஜென்சியில இயங்குது எப்படின்னு கேட்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்

    1.கோள்கள் சுற்றி வருதலில் இருந்து அனுவில் எலக்ட்ரான்கள் சுற்றி வருவது
    வரை
    2.தேங்காய்க்கு பாதுகாப்பாக அதன் மட்டை இருப்பது முதல் பனி பிரதேச
    கரடிகளின் அடர்ந்த முடி வரை
    இயற்க்கை தனது சொந்த அறிவு திறத்தால் இயங்குகிறது

    இயக்குவிப்பவன் தேவை இல்லை

    • \\வேணும்னே இன்னொரு இண்டலிஜென்சியை ஏன் புகுத்தனும்னு கேட்கிறேன்
      இந்த உலகமே தனது சொந்த இண்டலிஜென்சியில இயங்குது எப்படின்னு கேட்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன் \\ நீங்கள் அறியாமையில்தான் பேசுகிறீர்களா, இல்லை எனக்கு தொல்லை கொடுத்தால் போதும் என்பதற்காகவே பேசுகிறீர்களா என்று தெரியவில்லை. சுயமாக சிந்திக்கும் திறன் நாத்தீகக் கண்மணிகளுக்கு கொஞ்சம் கூட இருக்காதா? ஒருத்தன் புத்தி மழுங்கலாக இருக்கலாம், ஆனால் இந்த அளவுக்கா………. குஷ்டமப்பா…சீ..கஷ்டமப்பா……. சரி, தியாகு, புத்திசாலித் தனமா இயங்கிய களிமண்ணைப் பத்தி சேதி இருந்தா சொல்லுங்க. கல்லும் மண்ணும் சிந்திச்சு செயல்பட்டு நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. நீங்க பார்த்திருந்தா சொல்லுங்க.

      • // புத்திசாலித் தனமா இயங்கிய களிமண்ணைப் பத்தி சேதி இருந்தா சொல்லுங்க. கல்லும் மண்ணும் சிந்திச்சு செயல்பட்டு நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. நீங்க பார்த்திருந்தா சொல்லுங்க.//

        பார்த்திருப்பாரான்னு தெரியல்ல, ஆனா அது கூடதான் விவாதம் பண்ணிட்டு இருக்காரு…

        • \\பார்த்திருப்பாரான்னு தெரியல்ல, ஆனா அது கூடதான் விவாதம் பண்ணிட்டு இருக்காரு\\ உன்னுடன் விவாதம் செய்வதை இப்படிச் சொல்கிறாயா ஆணி பிடுங்கி!! ஆனாலும் உன்னை நான் களிமண் என்று சொல்ல மாட்டேன், ஏனெனில் மண்ணானாலும் அது மண்பாண்டம் செய்ய உதவும், நீ எதற்காவது பிரயோஜனப் படுவாயா? உன்னை களிமண் என்று சொன்னால் அது களிமண்ணுக்கே கேவலம்.

          • // உன்னுடன் விவாதம் செய்வதை இப்படிச் சொல்கிறாயா ஆணி பிடுங்கி!! //

            நீ எப்ப விவாதம் செஞ்ச.. ஆப்பையில்ல புடுங்கிட்டுருக்க.. உன் கதி உன் கையிலதான் இருக்கு..

            // ஏனெனில் மண்ணானாலும் அது மண்பாண்டம் செய்ய உதவும் //

            அதுமட்டுமா.. நீ நிசமாவே பெரிய அறிவாளி தாசு..

      • //இயங்கிய களிமண்ணைப் பத்தி சேதி இருந்தா சொல்லுங்க//

        களிமண்ணுக்குள் இயங்குகின்ற எலக்டான்கள் இல்லையா அது எப்படி புத்திசாலித்தனமா இயங்குது

        • \\களிமண்ணுக்குள் இயங்குகின்ற எலக்டான்கள் இல்லையா அது எப்படி புத்திசாலித்தனமா இயங்குது.\\ ஒரு கல்லை மேட்டில் இருந்து உருட்டி விட்டால் அது பள்ளத்துக் ஓடும், இது புத்திசாலித் தனம் என்றால் நாட்டில் [அம்பி உட்பட] எல்லோருமே புத்திசாலிகளாகி விடுவார்களே? இதற்குப் பெயரா புத்திசாலித் தனம்? அதுவே ஒரு மனிதனாக இருந்தால், மேடான இடத்துக்கு விரும்பினால் நடந்து செல்வான், பள்ளமான இடத்துக்கும் நடந்து செல்வான், ஒரு கல் மேடான இடத்தில் இருந்து பள்ளமான இடத்துக்கு மட்டும் தான் அதுவாக போகும், இது புத்திசாலித் தனம் அல்ல அதன் மேல் திணிக்கப் பட்ட விதி. Electron-னும் அதேபோல ஒரு திணிக்கப் பட்ட விதிப் படி இயங்குகிறது, அது புத்திசாலித் தனம் அல்ல.

          • // ஒரு கல்லை மேட்டில் இருந்து உருட்டி விட்டால் அது பள்ளத்துக் ஓடும், இது புத்திசாலித் தனம் என்றால் நாட்டில் [அம்பி உட்பட] எல்லோருமே புத்திசாலிகளாகி விடுவார்களே? இதற்குப் பெயரா புத்திசாலித் தனம்? //

            மேட்டிலிருந்து உம்மை உருட்டினாலும், கல் எங்கே போகுதோ அங்கேதான் போவீர்..

          • களிமண்ணுக்குள் இருக்குன் அனுக்களில் இருக்கும்
            எலக்டார்கள் புத்திசாலித்தனத்தோடு இயங்க முடியாது
            என்றால் புத்திசாலித்தனம் மனித மூளை தோன்றுவதற்கு
            முன்பு தோற்றி இருக்கு என்று சொல்கிறீர்கள் என வச்சிக்கிருவோம்

            அப்படி நிகழ வாய்ப்பில்லை

            • \\புத்திசாலித்தனம் மனித மூளை தோன்றுவதற்கு
              முன்பு தோற்றி இருக்கு என்று சொல்கிறீர்கள் என வச்சிக்கிருவோம்

              அப்படி நிகழ வாய்ப்பில்லை.\\

              ஒரு பொம்மலாட்டம் நடக்கும் இடத்துக்குச் சென்றால், அந்தப் பொம்மைகள் தானாக இயங்குகிறன, பேசுகின்றன என்று ஒரு குழந்தை நினைக்கும், ஆனால் உண்மையில் அவை தானாக இயங்க வில்லை யாரோ ஒரு மனிதர் அவற்றை நூலைக் கட்டி இயக்குகிறார் என்ற உண்மை mature ஆனவர்களுக்குத் தெரியும். இந்த நாத்தீகர்கள் மாத்திரம் சாகும் வரையில் இந்த குழந்தையைப் போலவே அறியாமையிலேயே இருந்து எல்லாம் தெரிந்தவர்கள் போலவே ஷோ பண்ணிவிட்டுப் போகிறீர்கள், என்றைக்கு உங்கள் சிந்தனைத் திறம் mature ஆகுமோ தெரியவில்லை.

            • இன்றைய தேதிக்கு இந்த பேரண்டம் எவ்வாறு உருவானது என்பதற்கு அறிவியலாளர்கள் கொடுக்கும் விளக்கம் என்ன? சில பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒரு புள்ளி [புள்ளி என்றால் வட்டம் with[ஆரம்] Radius=௦, அது எப்படி இருக்குமோ எனக்குத் தெரியாது] இருந்ததாகவும் [அது மட்டுமே இருந்தது, அது எங்கே இருந்தது, அதைச் சுத்தி என்ன இருந்தது, எவ்வளவு நாள் அது அப்படி இருந்தது அப்படின்னெல்லாம் கேட்கப் படாது.] அது Big Bang என்று சொல்லப்படும் பெருவெடிப்புக்கு உட்பட்டதாகவும், இந்த பேரண்டமே அந்த வெடிப்பிலிருந்து தோன்றியதாகவும் சொல்கிறார்கள். ஒன்றுமில்லாததலிருந்து ஒரு தூசியைக் கூட உருவாக்க முடியாது என்று சொல்லும் இவர்கள் இதையும் சொல்கிறார்கள்.

              நீங்கள் தீபாவளிக்கு வாங்கும் புஸ் வானம் கதையை ஏற்கனவே சொன்னேன். \\அதில் சில மேலே சென்று வெடிக்கும், சில வெடித்த பின்னர் பல வண்ணங்கள் வெளிப்படும், சில சமயம் வெடித்த பின்னர் பாராசூட் மாதிரி அதிலிருந்து கீழே பறந்து வந்திறங்கும். இவை எல்லாம் நிகழ வேண்டுமானால் ஒவ்வொன்றுக்கும் அந்த பட்டாசு தயாரிக்கும் போதே அதைச் செய்பவன் என்ன வகையான result வேண்டும் என்பதைப் பொறுத்து என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும், அது எப்போது வெடிக்க வேண்டும், படிப்படியாக என்னென்ன நிகழ வேண்டும் என்று திட்டமிட்டுவைத்தால் தான் அந்த குறிப்பிட்ட வகை வான வெடி கிடைக்கும். தானாக எதுவும் வராது. சாதாரண வான வெடிக்கே பிளான் பண்ற ஒருத்தன் தேவைப் பட்டால் இவ்வளவு பெரிய பிரமாண்டம்\\ பெருவெடிப்பில் உருவாக வேண்டுமென்றால் அதை ஒரு பிளான் செய்பவர் இல்லாமலேயே வந்திருக்குமா?

              இவர்கள் உலகம் உருவானதற்கு இப்படி ஒரு கதையை விட்டாலும், இங்கே நாம் காணும் Phenomena எதற்கும் இவர்களிடத்தில் இருந்து எந்த விளக்கமும் இல்லை. ஏன் பொருளீர்ப்பு விசை [Gravitational Force], மின்னீர்ப்பு [Electrical Force] போன்றவை எப்படி இந்த வகையில் உள்ளன, Fundamental Particle அடிப்படைத் துகள்கள் அவற்றின் பண்புகளை எப்படி பெற்றன போன்ற எந்தக் கேள்விக்கும் விஞ்ஞானம் பதிலளிக்க வில்லை. அது அப்படித்தான் என்பது மட்டுமே பதில். இந்த பொருகள் பண்புகள் ஒரு புறம் இருந்தாலும், இதிலிருந்து உயிர்கள் தோன்றியது என்பதற்கு நீங்கள் இங்கே சொல்வது போல தானாகவே உருவானது என்று மட்டுமே சொல்கிறார்கள். இதிலும் பல ஓட்டைகள் உள்ளன, அதை அந்தத் துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே விளங்கும். ஒரு நூறு கிலோ மீட்டர் வேகத்தை பத்தே செகண்டுகளில் அடையும் ஒரு பைக்கை உருவாக்குவது பற்றிய வரலாற்றை எடுத்துப் பார்த்தால், வருடக் கணக்கில் R&D செய்து, பலமுறை தவறாகச் செய்து, திருத்தி, மாற்றங்களை உருவாக்கி பின்னர்தான் இன்றைய வடிவத்துக்கு கொண்டு வந்திருப்பார்கள். அதே ஒரு சிறுத்தையை எடுத்துக் கொண்டால் பதினைத்தே வினாடிகளில் 120 km/hour வேகத்தை அடையும் வண்ணம் அதன் உடலும், முதுகெழும்பும் வடிவமைக்கப் பட்டுள்ளதாம். அதை வடிவமைத்த மூளை யாருடையது? இந்தக் கேள்வியை நீங்கள் நமது மூளை, கண்கள், இதயம், மூட்டுகள், ஜீரண மண்டலம், பிற உயிர்கள், தாவரங்கள், பூமி இயங்கும் விதம், சூரியன் அள்ளி வீசும் ஆற்றல், இந்த பிரமாண்டம் என்று எல்லாவற்றுக்குமே கேட்டுக் கொண்டே போகலாம். இது எல்லாவற்றுக்கும் மேலாக, உயிர் அப்படின்னா என்ன என்று கேட்டால் அதற்க்கு விஞ்ஞானத்தில் சுத்தமாக பதில் எதுவும் இல்லை.

              இறை நம்பிக்கையாளர்கள் கொண்டிருக்கும் சில மூட நம்பிக்கைகளும், போலி மதவாதிகளும், சாதியைப் பயன்படுத்தி சமூகத்தை ஏய்த்தவர்களும் , இத்தோடு கடவுள் இல்லை, இல்லை, இல்லை என்ற கோஷம் மட்டுமே. நீங்கள் என்னதான் இறைனம்பிக்கையாலர்களை கேலி செய்தாலும், போலிச் சாமியார்களைப் பற்றி பேசினாலும், அவர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் அதிகமாக இல்லை. அவர்கள் சாமி சிலைக்கு மாலை போட்டால் நீங்கள் பெரியார் சிலைக்குப் போடுவீர்கள், அவர்கள் சாமியார் சொல்வதற்கு பூம்..பூம்… மாடுகள் மாதிரி தைலையை ஆட்டினால், நீங்கள் வீரமணி சொல்வதற்கு எதிர்க் கேள்வியே கேட்காமல் தலையாட்டிக் கொண்டிருபீர்கள், அங்கே சாமியார் சொத்து சேர்த்தால், இங்கே வீரமணி தி.க. சொத்துகளை ஆட்டயப் போட்டுக் கொண்டிருப்பார். அடிப்படையில் நீங்கள் விரட்ட நினைக்கும் மூட நம்பிக்கைகளுக்கும், நீங்கள் எடுத்துக் கொண்ட கொள்கைகளுக்கும் வேறுபாடு இல்லவே இல்லை.

              • காடும் காடு சார்ந்த இடங்களிலும், வயலும் வயல் சார்ந்த இடங்களிலும், பனியும் பனி சார்ந்த இடங்களிலும் வாழ்கின்ற உயிர்கள், தான் உயிர் வாழும் சூழ்நிலைக்கேற்ப தன்னையும் தனது இயக்கத்தையும் தகவமைத்துக் கொள்ளும் என்பது அறிவியல். இன்றும், காடும் காடு சார்ந்த இடத்தில் வாழும் மனிதனின் ஓட்டத்திற்கு கணிணியும் கணிணி சார்ந்த இடத்தில் வாழும் நம்மால் ஈடு கொடுக்கமுடியாது. வேண்டுமானால் உங்களை வைத்து பரீட்சித்து பார்த்துவிடுவோம். பல தலைமுறையாக சர்க்கஸ் கூடாரத்தில் இருக்கும் அதே சிறுத்தை இனத்தால் 120km/h வேகத்தில் ஓடமுடியாது. இதுதான் இயற்கை. 120km/h வேகத்தில் ஓடுவதற்குத் தகுந்தவாறு அது படைக்கப்படவில்லை, அதி தன்னை தகவமைத்துக்கொள்கின்றது.

                • \\காடும் காடு சார்ந்த இடங்களிலும், வயலும் வயல் சார்ந்த இடங்களிலும், பனியும் பனி சார்ந்த இடங்களிலும் வாழ்கின்ற உயிர்கள், தான் உயிர் வாழும் சூழ்நிலைக்கேற்ப தன்னையும் தனது இயக்கத்தையும் தகவமைத்துக் கொள்ளும் என்பது அறிவியல்.\\ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால், எல்லா குரங்குகளும் மனிதனாகிப் போயிருக்க வேண்டும்

                  \\இன்றும், காடும் காடு சார்ந்த இடத்தில் வாழும் மனிதனின் ஓட்டத்திற்கு கணிணியும் கணிணி சார்ந்த இடத்தில் வாழும் நம்மால் ஈடு கொடுக்கமுடியாது.\\ இந்த கண்டுபிடிப்புக்கு இப்போதைக்கு நோபல் பரிசுதான் கொடுக்க முடியும், ஆனாலும் அது பத்தாது, அதுக்கு மேல எதாச்சும் இருக்குதான்னு பாருங்கைய்யா…….

                • \\ பல தலைமுறையாக சர்க்கஸ் கூடாரத்தில் இருக்கும் அதே சிறுத்தை இனத்தால் 120km/h வேகத்தில் ஓடமுடியாது. இதுதான் இயற்கை. 120km/h வேகத்தில் ஓடுவதற்குத் தகுந்தவாறு அது படைக்கப்படவில்லை, அதி தன்னை தகவமைத்துக்கொள்கின்றது.\\ சர்க்கஸ் கூடாரத்துக்கு வருவதற்கு முன்னரே அது எதைச் செய்து அவ்வளவு வேகத்தில் போகும் சக்தியை பெற்றது? அதையே நீர் ஏன் பின்பற்றக் கூடாது? வானத்தில் பறந்து செல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும்தானே இருக்கிறது, அதனால்தானே காக்கா பறப்பதைப் பார்த்து விமானத்தைக் கண்டுபிடித்தார்கள். ஏன் மனிதன் ஒருத்தனுக்குக் கூட இறக்கை முளைக்கவில்லை? அதுமட்டுமா, இப்போ sujith khan -னுக்கு திடீர்னு காற்றில் மறைந்து போனால் பரவாயில்லை என்ற ஆசை கூட இருக்கக் கூடும். அப்படி முடிந்தால், அவரு யார் யாரையெல்லாம் பக்கத்தில இருந்து பார்க்கனும்னு ஆசைப் படுராரோ அவங்க வீட்டுக்கெல்லாம் போய் ஆசை தீர பார்த்துவிட்டு அடையாளம் தெரியாமல் வந்து விடலாம், ஆனாலும் கருமாந்திரம் புடிச்ச ஒடம்பு மறையவே மாட்டேங்குதே, ஏன்? அந்த முறையை ஏன் அவரால் தகவமைத்துக் கொள்ள முடியவில்லை? கேக்கிறவன் கேனையனா இருந்தா கேரம் போர்டை கண்டுபுடிச்சதே கே.எஸ்.ரவிகுமார்தான்னு சொல்வீங்க போலிருக்கே???

                  • ஆசைகள் எல்லாம் தேவையானதாகிவிடாது. உயிர் வாழ முடியும் என்ற சூழ்நிலைத் தேவை வேண்டும்.

                    // கூடாரத்துக்கு வருவதற்கு முன்னரே அது எதைச் செய்து அவ்வளவு வேகத்தில் போகும் சக்தியை பெற்றது?//

                    இதைத் தான் முன்னமே கூறினேன், உயிர் வாழத் தேவையான சூழ்நிலைதான் அதை இயக்குகிறது. கூண்டுக்குள்ளே இரை கிடைத்துவிடுவதினால் அதன் ஓட்டம் குறைந்துவிடுகிறது. ஆனால் இரையை துரத்தவும் தப்பிப் பிழைக்கவும் வேண்டிய தேவை காட்டில் நிலவுகிறது.

                    • \\இதைத் தான் முன்னமே கூறினேன், உயிர் வாழத் தேவையான சூழ்நிலைதான் அதை இயக்குகிறது. கூண்டுக்குள்ளே இரை கிடைத்துவிடுவதினால் அதன் ஓட்டம் குறைந்துவிடுகிறது. ஆனால் இரையை துரத்தவும் தப்பிப் பிழைக்கவும் வேண்டிய தேவை காட்டில் நிலவுகிறது.\\ அதே காடுகளில் சிங்கம், புலி, நரி போன்றவையும் இருக்கின்றன. சிறுத்தைக்கு அவ்வளவு வேகம் ஓடவேண்டிய தேவை ஏற்ப்பட்டால் இந்த மிருகங்களுக்கும் ஏற்ப்பட்டிருக்க வேண்டும். அவ்வளவு ஏன் யைஈனாவுக்கு ஜாஸ்தி ஓடவே முடியாது, அது எப்படி வாழ்கிறது? அட, இந்த எளவு எடுத்த சிறுத்தை எதற்காக மாமிசத்துக்க்காக ஓட வேண்டும், எளிதாகக் கிடக்கும் இலைகளையும் புல்லையும் தின்று வாழும்படி தகவமைத்துக் கொண்டிருக்கலாமே?

                    • //எளிதாகக் கிடக்கும் இலைகளையும் புல்லையும் தின்று வாழும்படி தகவமைத்துக் கொண்டிருக்கலாமே?///

                      அது மாமிச உண்ணியாக பழக்கப்பட்டிருப்பதினால்.

                      மாமிசமே கிடைக்காத பட்சத்தில் மற்ற வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

                    • \\அது மாமிச உண்ணியாக பழக்கப்பட்டிருப்பதினால். மாமிசமே கிடைக்காத பட்சத்தில் மற்ற வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.\\ ஓஹோ….அப்படின்னா முதலில் வெறும் புல்லைத் தின்னும் ஆடுகள் மட்டும் தான் இருந்தன, அப்புறம் அதோட எண்ணிக்கை ஜாஸ்தியாகி புள் பற்றாக்குறை வந்துச்சு. அப்புறம் ஒரு ஆடு இன்னொரு ஆட்டைக் கடிச்சுத் திண்ணலாம்னு யோசிச்சுக் கிட்டே தூங்குச்சு, விடிஞ்சு பார்த்தா அதோட பல்லு கூர் கூராயிடிச்சு, கலீல் குளம்புகளுக்குப் பதிலாக நகங்கள் வந்துடிச்சு அதைத்தான் இன்னைக்கு நாம சிறுத்தைன்னு சொல்றோமாக்கும்………… யோவ், உனக்கே இது பிக்காலித் தனமா தெரியலையா. அடுத்தமுறை தமிழ் டிக்ஸ்னரி தயார் பண்ணும் போது கூமுட்டைத் தனம் என்ற வார்த்தைக்கு எதிரா உன்னோட பெரியே போட்டுட்ட அதோட அர்த்தம் அருமையா படிக்கிறவனுக்கு விளங்கும்யா………

                    • \\ஆனால் இரையை துரத்தவும் தப்பிப் பிழைக்கவும் வேண்டிய தேவை காட்டில் நிலவுகிறது.\\ தேவை இருந்தால் எந்த உறுப்பு வேண்டுமானாலும் வந்து விடுமா? அப்போ நமது தலைக்குப் பின்னால் கண்கள் இருந்தால் ஒரே சமயத்தில் முன்னால் பார்த்துக் கொண்டு பின்னால் வண்டி வருகிறதா என்று திரும்பிப் பார்க்காமலேயே தெரிந்து கொள்ளலாமே, ஏன் ரியர் வியூ கண்ணாடியை வைத்துக் கொண்டு மாரடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? டிரைவிங் லைசன்ஸ் வைத்துள்ள ஒரு கோடி பேரோட முதுகைச் செக் பன்னுங்கையா, கண்ணு வருவதற்க்கான அறிகுறியாக ஏதாவது பள்ளம் உள்ளதா என்று பார்ப்போம்……….!!

                    • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை ஆத்திகனுக்கு புத்தி மட்டு என்றுதான் இனி மாற்றனும்.

                      காட்டில் வாழும் சிறுத்தையை போல சர்க்கஸ் சிறுத்தை ஏன் வேகமாக ஓடுவதில்லை என்பதற்கு பதில் சொல்லப்பா. இவ்வுலகில் எண்ணற்ற உயிரினங்கள் இருப்பதற்கும் என்ன காரணங்கள்?

                    • \\ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை ஆத்திகனுக்கு புத்தி மட்டு என்றுதான் இனி மாற்றனும்.\\ புத்தி என்ற ஒன்று ஆத்தீகனுக்கு இருக்கிறதே, அதுவே போதும். ஆனால், நாத்தீகனின் நிலை என்ன? உங்கள் தலையை ஒரு எக்ஸ்-ரே எடுத்தால், அதை எடுப்பவன் தலை சுற்றி கீழே விழுந்துவிடுவான், ஏன்னா உள்ளே வெறும் Empty space!!

                      \\காட்டில் வாழும் சிறுத்தையை போல சர்க்கஸ் சிறுத்தை ஏன் வேகமாக ஓடுவதில்லை என்பதற்கு பதில் சொல்லப்பா.\\ நான் என்ன சர்க்கஸ் கம்பனியா வச்சு நடத்திகிட்டு இருக்கேன், என்கிட்டே வந்து லூசு மாதிரி தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு இருக்கீரு? அந்த சிறுத்தையை கொஞ்சம் கொஞ்சமா மாத்தி புல்லு தின்ன வைய்யா பார்ப்போம்.

                      \\இவ்வுலகில் எண்ணற்ற உயிரினங்கள் இருப்பதற்கும் என்ன காரணங்கள்?\\ நேரா கூவம் ஆத்துல போயி குதி, அங்கேயிருந்து நீச்சலடிச்சுகிட்டே மேரினாவுக்குப் போ, அங்கே உங்கப்பா நாடு வறுத்து தின்னுகிட்டு இருக்காராம், ரெண்டு பெரும் சாப்பிட்டுகிட்டே யோசிங்க, பதில் வருதான்னு பார்ப்போம்.

            • நாத்தீகர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இறை நம்பிக்கையாளர்கள் கொண்டிருக்கும் சில மூட நம்பிக்கைகளும், போலி மதவாதிகளும், சாதியைப் பயன்படுத்தி சமூகத்தை ஏய்த்தவர்களும் , இத்தோடு கடவுள் இல்லை, இல்லை, இல்லை என்ற கோஷமும் மட்டுமே. நீங்கள் உங்களுடைய மூளையின் Logical portion -ஐ சுத்தமாக ஆப் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். சாலையை மட்டுமே பார்ப்பதற்காக குதிரையின் கண்களுக்கு மேலே போடப் பட்டுள்ள ஒரு தகரத்தைப் போல, குறுகலாகப் பார்க்கும் வண்ணம் உங்கள் சிந்தனையை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒருத்தன் ஒரு கொள்கையை உங்கள் மேல் திணிக்க வருகிறான், என்றால் அப்படியே பூம்..பூம்… மாடுகள் மாதிரி தலையாட்டாமல் ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகள் கேட்டு அந்தப் பதில்கள் திருப்திகரமான பின்னர் ஏற்றுக் கொள்ளவேண்டும், அதை நாத்தீகக் கண்மணிகள் யாரும் செய்வதில்லை என்பது துரதிர்ஷ்டம், உங்களை இப்படியே தலையாட்டி பொம்மைகளாக, முட்டாள்களாக மூடர்களாக வைத்திருந்தால் மட்டுமே உங்களுடைய தலைவன் சொத்து சேர்க்க முடியும், நீங்களே முயன்றாலும் உங்களை சிந்திக்க, புத்திசாலிகளாக மாற உங்கள் தலைவன் விடமாட்டான். அதிலிருந்து வெளியே வாருங்களேன், சுதந்திரமாக சிந்தியுங்களேன்???

    • \\கோள்கள் சுற்றி வருதலில் இருந்து அனுவில் எலக்ட்ரான்கள் சுற்றி வருவது வரை\\ அதுசரி, இந்த இஸ்ரோன்னு வேலையத்த பயலுங்க, செயற்கை கோள்களை கஷ்டப்பட்டு ராக்கெட்டில் அனுப்பிட்டு ஊர் ஊருக்கு நூத்துக்கணக்கான பேரு உட்கார்ந்துகிட்டு அவற்றை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க. அப்பவும் அதுல நாலு கடலில் போய் விழுது, இன்னமும் நாலு மேலே போயிட்டு பெப்பே…ங்குது. ஏன் நீங்க சொல்ற மாதிரி தானாவே அதுவாவே போய் ஒழுங்கா சுத்தி வரமாட்டேங்குது?

    • \\அனுவில் எலக்ட்ரான்கள் சுற்றி வருவது வரை\\ அதெப்படி எல்லா எலக்டிரான்களும் வித்தியாசம் கண்டே புடிக்காத மாதிரி அத்தனையும் ஒரே மாதிரியே இருக்குது? அதோட எடை, மின்னூட்டம் [electric charge], இன்னும் பிற பண்புகளை அவை எப்படி பெற்றன?

    • \\கரடிகளின் அடர்ந்த முடி வரை இயற்க்கை தனது சொந்த அறிவு திறத்தால் இயங்குகிறது \\ உங்க முடியை ஒரு பத்து நாளைக்கு வளர வேண்டாம்னு சொல்லி நிறுத்திட்டு, அப்புறம் பத்து நாளைக்கப்புறம் வளரச் சொல்லுங்க பார்ப்போம். அப்புறம் உங்க வழுக்கைத் தலையில் முடி வளரச் சொல்லுங்கள் பார்ப்போம். வெள்ளையான முடியைக் கருப்பாக்கச் செய்யுங்கள் பார்ப்போம்.

      • //அப்புறம் பத்து நாளைக்கப்புறம் வளரச் சொல்லுங்க பார்ப்போம். அப்புறம் உங்க வழுக்கைத் தலையில் முடி வளரச் சொல்லுங்கள் பார்ப்போம். வெள்ளையான முடியைக் கருப்பாக்கச் செய்யுங்கள் பார்ப்போம்.///

        இதையெல்லாம் அந்த தண்டக் கடவுளையும் செய்யச் சொல்லேன் பார்ப்போம்!

        • \\இதையெல்லாம் அந்த தண்டக் கடவுளையும் செய்யச் சொல்லேன் பார்ப்போம்! \\ உன் கட்டுப் பாட்டில் இருக்கிறதென்று சொன்னாயல்லாவா, அது உண்மை என்றால் இதைச் செய்து காண்பி. மற்றபடி படைத்தவன் போட்ட பிளான் நீ சொல்வதற்காகவெல்லாம் மாற்றிக் கொண்டிருக்க மாட்டான்.

    • \\இயக்குவிப்பவன் தேவை இல்லை\\ அது உன்னோட சாய்ஸ் இல்ல ராசா.

  77. //தொங்கி கொண்டிருந்தீர்களே, எந்த அடிப்படையில்? அவர்களின் பதில் என்ன? பதில் சொல்லவில்லை என்றால் அந்த வெத்து வேட்டுகளுடன் எதற்காக இத்தனைக் காலம் இருந்தீர்கள்//

    என்ன இப்படி சொல்லிட்டீங்க மனிதனின் துன்பத்துக்கும் துயரத்துக்கும் காரணம்
    சமூக ஏற்றத்தாழ்வே தவிர அவது கர்மா இல்லை என்றது மார்க்சியம்

    அது நிதர்சணத்தில் தெரியும் உண்மை

    எனவே அதை பின்பற்றுகிறேன்

    உங்களை போன்ற ஆத்தீகவாதிகள்தான் சமூகத்தில் காணப்படும் துன்ப துயரங்கள் அவலங்களுக்கு காரணம் கர்மான்னு சொல்லிட்டு எப்படின்னும் விளக்காம தப்பிச்சுட்டே இருக்கீங்க

    இப்ப சொல்லுங்கள் யார் தவறான பாதையில் போகிறார்கள்

    • \\என்ன இப்படி சொல்லிட்டீங்க மனிதனின் துன்பத்துக்கும் துயரத்துக்கும் காரணம்
      சமூக ஏற்றத்தாழ்வே தவிர அவது கர்மா இல்லை என்றது மார்க்சியம்

      அது நிதர்சணத்தில் தெரியும் உண்மை

      எனவே அதை பின்பற்றுகிறேன் \\ அது உங்க விருப்பம், நான் சொல்வதற்கு எதுவும் இல்லை.

    • \\உங்களை போன்ற ஆத்தீகவாதிகள்தான் சமூகத்தில் காணப்படும் துன்ப துயரங்கள் அவலங்களுக்கு காரணம் கர்மான்னு சொல்லிட்டு எப்படின்னும் விளக்காம தப்பிச்சுட்டே இருக்கீங்க. இப்ப சொல்லுங்கள் யார் தவறான பாதையில் போகிறார்கள்.\\ சமூகத்தில் பிற அங்கத்தினரால் வரும் துன்பங்கள் மட்டுமே துன்பங்களின் மூலம் அல்ல. துன்பங்கள் நோய்நொடி, மனக்கஷ்டம்,வெறிநாய்க்கடி, கொசுக்கடி, பூகம்பம், புயல்……..என்று எண்ணிலடங்கா வழிகளில் வரும். அதையெல்லாம் எந்த இஸத்தாலும் தவிர்க்க முடியாது.

      • //துன்பங்கள் நோய்நொடி, மனக்கஷ்டம்,வெறிநாய்க்கடி, கொசுக்கடி, பூகம்பம், புயல்……..என்று எண்ணிலடங்கா வழிகளில் வரும். அதையெல்லாம் எந்த இஸத்தாலும் தவிர்க்க முடியாது.///

        குயாதி சொன்ன மாதிரி நீ டையோனசர் காலத்துல பொறந்துருக்க வேண்டிய ஆளுதாய்யா. வெறிநாய்க்கடி, கொசுக்கடியெல்லாம் இந்தக் காலத்துல ஒரு மேட்டரா. இந்த துன்பத்தையெல்லாம் விரல் சொடுக்குற செகண்டுல போக வச்சிரலாம். ஆனா அந்தத் துன்பத்தையெல்லாம் போக விடாம பண்ற உன்ன மாதிரி மனுசங்களோட தொல்லைதான் இருக்குறதுலேயே பெரிய துன்பம்.

        • \\குயாதி சொன்ன மாதிரி நீ டையோனசர் காலத்துல பொறந்துருக்க வேண்டிய ஆளுதாய்யா.\\ யாரையா அவன் கூ…… ஐயையோ……..என்ன கருமாந்திரம்டா இது….

            • ஐயையோ ஏன் கூகுல் அக்கவுன்டையும் ஹேக் பண்ணிட்டீங்களாடா?

              • தாசு, நீர் தன்னங்காரமா பிதற்றுவதே படு ஆபாசாகத்தான் இருக்கிறது, கூ… ன்னு திட்ட்டுவதற்காக போயி போலி பேருல வந்து திட்டனுமா?

                சரி போகட்டும் இமேஜ் பில்டப்புன்னு வச்சுக்கலாம்,

                ஆனா செய்யுற பிராடுதனத்தை ஒழுங்கா செய்யனும், உணர்ச்சிவசப்பட்டு மாட்டிகிட்டிங்க, சரி அதைக்கூட மன்னிச்சு விட்டுடலாம்,

                ஆனா மாட்டிகிட்ட விசயம் தெரிஞ்சதும் நித்யாநந்தா கணக்கா கூகுள் அகவுண்டு ஹேக் பண்ணிட்டோம்னு சொன்னீங்க பத்திங்களா, அங்கதான்யா உம்ம பர்சனாலிடியே கிழிஞ்ச கோவணமா தொங்குது.

                செஞ்ச ஒரு சின்ன தப்பைக் கூட ஒப்புக்க நேர்மையில்லாத, நீங்க செஞ்ச பிராடுதனத்தை அடுத்தவர் மீது சுமத்த நினைக்கும் கிரிமினலான உமக்கு இங்க ஆன்மீக பஜனை பாட என்ன தகுதியிருக்கு?

                உங்களை மாதிரி ஒரு ஹிபோகிரைட்டுகிட்ட போதனை பெறும் அளவுல இங்க யாரும் இல்லை,
                கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்

              • \\தாசு, நீர் தன்னங்காரமா பிதற்றுவதே படு ஆபாசாகத்தான் இருக்கிறது, கூ… ன்னு திட்ட்டுவதற்காக போயி போலி பேருல வந்து திட்டனுமா?\\ உங்களில் ஒவ்வொருத்தனையும் பேசும் பிக்காலித் தனத்துக்கு இப்போதுள்ள கெட்ட வார்த்தைகள் போதாது, புதுசா கண்டு புடிக்கனும்.

                \\செஞ்ச ஒரு சின்ன தப்பைக் கூட ஒப்புக்க நேர்மையில்லாத, நீங்க செஞ்ச பிராடுதனத்தை அடுத்தவர் மீது சுமத்த நினைக்கும் கிரிமினலான உமக்கு இங்க ஆன்மீக பஜனை பாட என்ன தகுதியிருக்கு?\\ பிராடு தனத்தோட மொத்த உருவமே நீங்க தான்யா….அது சரி, இவ்வளவு நாளா இல்லாம நீர் எங்கேயிருந்து வந்தீரு? மேலே பதில் போட்ட ஏதோ ஒரு கழுதைதானே நீரு? அதனால்தானே அதே புத்தி வருகிறது.

                \\உங்களை மாதிரி ஒரு ஹிபோகிரைட்டுகிட்ட போதனை பெறும் அளவுல இங்க யாரும் இல்லை,
                கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்.\\ உங்களில் எவனுக்கும் போதிக்கிறேன் என்று இங்கு நான் வரவில்லை, இங்கே பதிவுக்கு பின்னூட்டம் மட்டுமே போட்டேன், வேண்டுமென்றே என்னிடம் வெவ்வேறு ஐ டி களில் வந்து லந்து செய்தது நீரும் உனது நண்பர்களும்தான். நீர் இங்கே என் மீது சுமத்தியிருக்கும் அத்தனை கிரிமினல் வேலைகளையும் கடந்த இரண்டு மாதமாக இவர்கள் எனக்குச் செய்து வந்தார்கள், அப்போதெல்லாம் உமது வாயில் கொளுக்கட்டையையா வைத்திருதீர், இப்போது வந்து ஓலமிட?

                \\ஆனா மாட்டிகிட்ட விசயம் தெரிஞ்சதும் நித்யாநந்தா கணக்கா கூகுள் அகவுண்டு ஹேக் பண்ணிட்டோம்னு சொன்னீங்க பத்திங்களா, அங்கதான்யா உம்ம பர்சனாலிடியே கிழிஞ்ச கோவணமா தொங்குது. \\அவனுக்கு எவனோ கேமரா வச்சான், உம்ம யோக்யதைக்கு வைக்க யாரும் இல்லை. ஒரு வேலை வச்சா, நீ செய்யும் வேலைகளை கொஞ்சம் கண்மூடி யோசித்துப் பார், ஆயிரம் சி.டிக்கள் வரும்.

                • // உங்களில் ஒவ்வொருத்தனையும் பேசும் பிக்காலித் தனத்துக்கு இப்போதுள்ள கெட்ட வார்த்தைகள் போதாது, புதுசா கண்டு புடிக்கனும். //

                  கெட்ட வார்த்தைகளை கண்டு புடிக்குற புத்தியால நீர் கண்டு புடிச்ச ’உம்ம கடவுளும்’ உம்ம மாதிரிதான் இருப்பாரு.. ஏன்யா கடவுளையும் கேவலப்படுத்துறீர்..

                  • ஏன் நல்ல வார்த்தை கண்டுபிடிச்சவன் கடவுளை ஏற்றுக் கொள்ளேன்? இந்த திருவண்ணாமலை ரஞ்சிக் கோட்டை வாலிபன் ராஜசேகரன் சீடர்களை உண்டு பண்ணியிருக்கான், அவன் லீலைகள் எல்லாம் படமாவே பாத்ததுக்கப்புரமும், அவன் சீடர்கள் இன்னமும் நிறைய பேர் அவனிடம் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை என்ன எடுத்துச் சொல்லியும் திருத்த முடியாது, அவர்கள் அவனிடம் போவதை தடுக்க முடியாது. இந்த நாத்தீகக் கூட்டமும் அந்த செமாரி ஆட்டு மனதை கூட்டத்திலிருந்து சற்றும் மாறுபட்டதல்ல. நீங்கள் எவ்வளவுதான் லாஜிக்கலாக உண்மையை எடுத்துச் சொன்னாலும் நீங்களும் திருந்தப் போவதில்லை. நீங்கள் எடுத்துக் கொண்ட இத்துப் போன கொள்கைகளை ஒரு போதும் விடப் போவதில்லை. இத்தனை நாளாக முட்டாள் ஆக இருந்தோம் என்பதை ஒரு போதும் உங்கள் மனம் ஜீரணித்துக் கொள்ளப் போவதில்லை. அப்படி இருக்கையில் இந்த டயலாக் எல்லாம் எதற்கு சீடா?

      • //சமூகத்தில் பிற அங்கத்தினரால் வரும் துன்பங்கள் மட்டுமே துன்பங்களின் மூலம் அல்ல//

        உதாரணமா கொசுக்கடிக்கு கொசுவத்தி வாங்கமுடியாமல் சாக்கடைக்கு அருகே படுத்திருக்கும் எண்ணற்றவர்களின் துன்பத்துக்கு தீர்வும் மற்றும் வடிகால் கடவுளா

        • \\உதாரணமா கொசுக்கடிக்கு கொசுவத்தி வாங்கமுடியாமல் சாக்கடைக்கு அருகே படுத்திருக்கும் எண்ணற்றவர்களின் துன்பத்துக்கு தீர்வும் மற்றும் வடிகால் கடவுளா\\ கூவம் ஆறு என்றால் நாறத்தான் செய்யும், ஜவ்வாது போல மணக்காது. இந்த நியதியை மாற்ற முடியாது. அதை விடுத்து கூவம் ஆற்றை மணக்க வைக்கப் போகிறேன் என்று ஒரு சென்ட் பாட்டிலை எடுத்துக் கொடு அதன் மீது ஸ்பிரே செய்து கொண்டு போகிறேன் என்கிறீர்கள். கண்ணா பின்னவென்று கண்ணிவெடிகள் புதைக்கப் பட்டுள்ள இடத்தில் உங்களை நடக்கச் சொல்வதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் அதற்க்குக் கீழே வெடி இருந்தால் உடனே வெடித்து நீங்கள் சிதறிப் போவீர்கள் என்றால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்? இந்த உலகமும் அப்படித்தான். சுனாமி தாக்கியபோது கடற்கரையில் வாழ்ந்த எண்ணற்றோர் தங்களது சொந்த பந்த்களை இழந்த போது அவர்கள் அதற்க்கு முதல் நாள் கூட நினைத்துப் பார்த்திருப்பார்களா, இப்படி ஒரு சோகம் நிகழும் என்று? இது போன்ற ஆபத்துகள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், உம்மை துரத்தில் மூழ்கடிக்கலாம், துயரங்கள், நமது மனதாலும், உடலாலும் ஏற்ப்படலாம், உடன் வாழ்ந்துகொடிருக்கும் சக உயிர்களாலும் வரலாம், இயற்கைச் சீற்றங்கலும் வரலாம். இதை எந்த அறிவியலாலும் தவிர்க்க முடியாது.

  78. இப்பொழுது உள்ள அனைத்து மதங்களுமே கடவுள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள்.

    • \\இப்பொழுது உள்ள அனைத்து மதங்களுமே கடவுள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள்.\\ நாராயணா…. இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைடா……..

  79. நாராயணா இந்த தாசு தொல்ல தாங்கலடா.. ரெண்டு மாசமா பதிவை படிச்சு புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு மூர்கனாக இருக்கிறாரே..

    இங்கே தாஸின் ‘விவாத’ முறை ஒன்றே ஒன்றுதான் அதாவது தன்னுடன் விவாதிப்பவரை விட தான் மேல், எதிராளிக்கு ஒன்றும் தெரியாது, எல்லாரும் மூடர்கள், தான் மட்டுமே ஆகச்சிறந்த அறிவாளி.., தனக்குத்தான் அவர்களை விட எல்லாம் தெரியும்… இத்யாதி இத்யாதி..

    சரி பேஷா இருக்கட்டும்,

    ஆனா ஒரு சிக்கல்,

    அப்படி இந்த அறிவாளிக்கு என்னதான் தெரியும் என்று பார்த்தால்..

    தெரியாது என்பதுதான் தெரியுமாம்

    புரியலயா?

    அதாவது கடவுள் இல்லாமல் இப்படி ஒரு பிரபஞ்ச பேரண்டம் ஒன்று எப்படி வந்திருக்கமுடியும் அதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது, தெரிந்து கொள்ள முடியாது, அறிந்து கொள்ள முடியாது, விளிங்கிக் கொள்ள முடியாது……

    என்கிற தெரியாதுகளைத்தான் தெரிந்து வைத்திருப்பாக கருதி இங்கே விவாதித்து ‘கொல்’கிறார்.

    டயனோசர் வாழ்ந்த காலத்தில் வாழ வேண்டிய இம்மனிதன் இப்போ வாழ்வதினால் நம்மை விட அவருக்குத்தான் சிக்கல் அதிகம், எனவே அவர் மீது பரிதாபப்பட்டாவது தயவு செய்து விட்டுவிடுங்கள் அவருடன் விவாதிக்கும் நண்பர்களே…

  80. \\ரெண்டு மாசமா பதிவை படிச்சு புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு மூர்கனாக இருக்கிறாரே..\\ பிறந்து ஏழு கழுதை [ஒரு கழுதை = ஏழு வருடங்கள்] ஆகியும் நீர் ஏனைய்யா இன்னமும் விளங்காத நாத்தீகனாக உள்ளீர்?

    \\இங்கே தாஸின் ‘விவாத’ முறை ஒன்றே ஒன்றுதான் அதாவது தன்னுடன் விவாதிப்பவரை விட தான் மேல், எதிராளிக்கு ஒன்றும் தெரியாது, எல்லாரும் மூடர்கள், தான் மட்டுமே ஆகச்சிறந்த அறிவாளி.., தனக்குத்தான் அவர்களை விட எல்லாம் தெரியும்… இத்யாதி இத்யாதி..\\ நான் அறிவாளி என்பதை தவிர்த்து மற்றவை மிகச் சரி.

    \\அதாவது கடவுள் இல்லாமல் இப்படி ஒரு பிரபஞ்ச பேரண்டம் ஒன்று எப்படி வந்திருக்கமுடியும் அதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது, தெரிந்து கொள்ள முடியாது, அறிந்து கொள்ள முடியாது, விளிங்கிக் கொள்ள முடியாது……\\ உமது இத்துப் போன புலன்களால் உணர முடியாது, அவ்வளவுதான்.

    \\டயனோசர் வாழ்ந்த காலத்தில் வாழ வேண்டிய இம்மனிதன் \\ உங்களைப் போன்ற மனிதனை அடித்துத் தின்னும் நாத்தீகர்கள் வாழும் கொடுமையான காலத்தை விட அந்தக் காலம் எவ்வளவோ மேம்பட்டதாக இருந்திருக்கும்.

    • So according to ur above comments complex structure like Cheetah running at 120 mph and humans having limbs cannot EVOLVE on its own so a creator shud exist.. Now a basic question will come(only who have rational thinking).. If Complex beings needs a creator the creator shud be more com plex than the created beings .. so WHO CREATED THAT CREATOR ??

      • Welcome Peter, please don’t jump, take one issue at a time and find the solutions. The question who created the Creator will come only when you accept that there is a Creator. Now if you have not accepted that there is a Creator then according to you, there is no creator and why are worried about somebody who does not exist at all? This is point number one.

        Next, if you say that there is no creator, then you should prove that the inert matter has intelligence on its own to create complex things with live examples, can you do it?

        • படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்று ஒத்துக்கொண்டால்தான் படைப்பாளன் எப்படி வந்தான் என்ற கேள்வி எழ வேண்டும் என்பதில்லை, இந்த பிரபஞ்சம் தானாக உருவாகாது எனும்போதே கடவுள் மட்டும் எப்படி தானாக உருவாகியிருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். இந்த பிரபஞ்சமே வியக்கவைக்கும் அதிசயங்கள் நிறைந்தது எனும்போது இதை படைத்தவன் இதைவிடவும் அற்புதமானவனாகத்தான் இருக்க வேண்டும். பிரபஞ்சத்தை ஒப்பு நோக்கின் கடவுள் மிகைத்துவிடுகிறார். எனில், எல்லாவற்றையும் விட அற்புதமான கடவுள் எப்படி வந்தார்?

          • கடவுள் என்ற கான்செப்டுக்கு எதற்காக முந்திரிக் கொட்டை போல ஓடுகிறீர்கள் என்பது தான் எனக்கு விளங்கவில்லை. இங்கே கண் முன்னே எனக்கு ஜடம் தான் இருக்கிறது. உயிருள்ள ஜீவன்களும் இருக்கிறார்கள். ஜடத்துக்கு தன்னிச்சியாக செய்யப்பட முடியாது, அற்புதமான டிசைனை உருவாக்கத் தெரியாது, எத்தனை வருடமானாலும் அது அப்படியேதான் இருக்கும். ஆனால் உயிருள்ள ஜீவன்களால் ஜடத்தை உபயோகித்து அர்ப்புதத்தை உருவாக்க முடியும். அது ஒரு செடியில் பூக்கும் மலராக இருக்கலாம், குருவிக்கூடாக இருக்கலாம், அல்லது நியூயார்க் நகரமாகக் கூட இருக்கலாம். ஜடம் அற்ப்புதமாக வடிவமைக்கப் பட்டு இயங்க வேண்டுமானால் அதன் பின்னால் ஒரு conscious being இருந்தால் மட்டுமே முடியும். தானாக ஜடம் இயங்காது. வானத்தில் செயற்கைக் கோள் இயங்க வேண்டுமானால் நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகள் திட்டமிட்டு அனுப்பி அதை கட்டுப் படுத்தினால் மட்டுமே முடியும். அப்படியென்றால், சந்திரன் பூமியையும், பூமி சூரியனையும், சூரியன் இந்த பால்வெளி மண்டலத்தையும் மில்லியன் கணக்கான வருடங்களாக சுற்றி வருகின்றனவே இதை யார் திட்டமிட்டு செலுத்தி கட்டுப் படுத்துவது? எந்த ஒரு எந்திரமும் யாராவது செய்து வைத்தால் மட்டுமே வரும், தானாக அதுவே உருவாகிக் கொள்ளாது என்றால், நமது உடல் என்னும் அற்புதமான இயந்திரத்தை வடிவமைத்தது யார்? antha காரணகர்த்தா இந்த லாஜிக் படி பார்த்தால் நிச்சயம் ஒரு conscious being காகத்தான் இருக்க முடியும். ஜடமாக இருக்க முடியாது. இதை நீங்கள் மறுக்க முடியுமா? ஆம் என்றால் எதை வைத்து?

            • jeyadev

              கவனியுங்கள் ஒரு நாற்காலி கூட செய்பவன் இன்றி செய்யமுடியாது
              என சொல்லும் நீங்கள் அந்த நாற்காலியை படைத்த மனிதன்
              அவன் அதை படைத்த நேரம் இடம் ஆகியவற்றை நம்மால் சொல்ல முடியும்

              உலகம் ஒரு தனிநபர் அல்லது கடவுளின் படைப்பு என்றால்
              அதை படைத்த நேரம் இடம் ஆகியவை குறித்த உங்களது பதில் என்ன

              • \\கவனியுங்கள் ஒரு நாற்காலி கூட செய்பவன் இன்றி செய்யமுடியாது
                என சொல்லும் நீங்கள் அந்த நாற்காலியை படைத்த மனிதன்
                அவன் அதை படைத்த நேரம் இடம் ஆகியவற்றை நம்மால் சொல்ல முடியும்\\ ஒரு நாற்காலியைப் பார்க்கிறீர்கள், அது தானாக உருவாகியிருக்க முடியாது, அதைச் செய்த ஒரு Conscious being நிச்சயம் இருந்தேயாக வேண்டும். இதை யாராலும் மறுக்க முடியாது. அதற்க்கு மேல், அவர் யார், எந்த ஊர், கருப்பா, சிவப்பா, எத்தனை பெண்ட்டாட்டி பிள்ளை குட்டிகள், அவருக்கு இன்னும் என்னென்ன தெரியும் என்பது போன்ற கேள்விகள் வரும் அதற்க்கு பதில் தேடலாம். ஒரு வேலை என்னால் அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றே வைத்துக் கொள்வோம், அது என்னுடைய இயலாமை. அதைச் செய்தவர் நிச்சயம் இருப்பார் என்ற உண்மை இப்பவும் பொருந்தும், அதை விடுத்து, என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, அதனால் அதைச் செய்தவர் இருக்க முடியாது என்று தீர்மானம் செய்வது ஏற்கத் தக்கது அல்ல.

              • \\உலகம் ஒரு தனிநபர் அல்லது கடவுளின் படைப்பு என்றால்
                அதை படைத்த நேரம் இடம் ஆகியவை குறித்த உங்களது பதில் என்ன\\ உங்கள் தலயில் உள்ள கிட்னி ஒரு ஆத்தீகனைப் பார்த்தால் மட்டுமே வேலை செய்கிறது போலும்! ஏன் இந்தக் கேள்விகளை நீங்கள் மெச்சிக் கொள்ளும் விஞ்ஞானத்தைப் பார்த்து கேட்கவில்லை? என்னமோ இதை அவர்கள் தெளிவாக விளக்கிவிட்டது போலவும், ஆத்தீகன் இதற்க்கு விடை தெரியாமல் இருப்பது போலவும் சொல்கிறீர்களே? உங்கள் விஞ்ஞானம் என்ன சொல்கிறது எனபதையும் பார்த்து விடுவோமா?

                Before the Big Bang?

                What happened before the big bang? It’s impossible to say. Scientists theorize that once you compress the matter of the universe into a singularity (a point with zero volume but infinite density), scientific laws can no longer apply. Since the laws of physics are moot, there is no way to know what, if anything, came before the big bang. Science can’t answer the question.

                But what about the big picture? What do we know about the universe as a whole? Is it expanding? Is it infinite? If it isn’t infinite, what lies beyond the boundary of space? And what exactly does space look like?

                These questions fall under the category of cosmology, the study of the universe. People have tried many different approaches to study the universe. Some concentrated on mathematics. Others preferred using physics. And quite a few took a philosophical approach.

                There’s no consensus among cosmologists about what space looks like, but there are plenty of theories. Part of the challenge of describing space is that it’s very difficult to visualize. We’re used to thinking about locations in two dimensions. For example, you can determine your location on a map using longitude and latitude. But space has four dimensions. Not only do you have to add depth to the dimensions of length and width, you also must add time. In fact, many cosmologists refer to this collection of dimensions as space-time.

                http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/space-shape.htm

              • There are also some very big questions the big bang theory doesn’t address:

                What happened before the big bang? According to our understanding of science, we can’t know. The very laws of science break down as we approach t = 0 seconds. In fact, since the general theory of relativity tells us that space and time are coupled, time itself ceases to exist. Since the answer to this question lies outside the parameters of what science can address, we can’t really hypothesize about it.

                What lies beyond the universe? Again, this is a question science can’t address. That’s because we can’t observe or measure anything that lies outside the boundaries of the universe. The universe may or may not be expanding within some other structure, but it’s impossible for us to know either way.

                What is the shape of the universe? There are many theories about what shape the universe might have. Some believe that the universe is unbounded and shapeless. Others think the universe is bounded. The big bang theory doesn’t specifically address the issue.

                Not everyone subscribes to the big bang theory. Why do they disagree with the theory, and what are some of the alternate models for our universe? Read on to see what the skeptics say.

                http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-bang-theory6.htm

          • \\எனில், எல்லாவற்றையும் விட அற்புதமான கடவுள் எப்படி வந்தார்?\\ கடவுள்னு ஒருத்தர் இருக்கறா என்பதை முதலில் முடிவு செய்யும், அதற்க்கப்புறம் இந்தக் கேள்வியைக் கேளும். ஒன்று கடவுள் இல்லை என்று நிரூபியும், இல்லையென்றால் ஆம் இருக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளும், அதை விடுத்து இருக்க முடியாது என்று நீர் நினைக்கும் விஷயங்களை எதற்காகப் பேச வேண்டும்?

  81. \\இந்த பிரபஞ்சமே வியக்கவைக்கும் அதிசயங்கள் நிறைந்தது எனும்போது இதை படைத்தவன் இதைவிடவும் அற்புதமானவனாகத்தான் இருக்க வேண்டும். பிரப
    ஞ்சத்தை ஒப்பு நோக்கின் கடவுள் மிகைத்துவிடுகிறார்.\\ தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு உண்மையை இன்னைக்கு பேசிட்டேய்யா…..

  82. \\படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்று ஒத்துக்கொண்டால்தான் படைப்பாளன் எப்படி வந்தான் என்ற கேள்வி எழ வேண்டும் என்பதில்லை, இந்த பிரபஞ்சம் தானாக உருவாகாது எனும்போதே கடவுள் மட்டும் எப்படி தானாக உருவாகியிருக்க முடியும் என்ற கேள்வி எழலாம்.\\ஒரு பானையைப் பார்க்கும் போதே, ஒரு குயவன் நிச்சயம் இருப்பான் என்பது உறுதி. களிமண் தனக்குத் தானே நெருப்பு வைத்துக் கொண்டு சட்டியாகாது. ஒரு நாற்காலியைப் பார்க்கும் போதே ஒரு தட்சன் இதைச் செய்திருக்க வேண்டுமென்பது உறுதி. இரண்டு கட்டைகள் சும்மா ஆணியுடன் இடித்துக் கொண்டு நாற்கலியாகிவிடாது. ஒரு ஓவியத்தைப் பார்க்கும் போது நிச்சயம் ஒரு ஓவியன் இதைத் தீட்டியிருக்க வேண்டும் என்பது உறுதி. இல்லை பெயின்ட் டப்பா பேப்பரின் மேல் விழுந்து அதில் நாயகரா வீழ்ச்சி தானாக வந்து விட்டது என்று சொன்னால் அவனை முட்டாள் என்பீர்கள். இந்த பிரபஞ்சம் இயங்குவதற்குப் பின்னாலும் நிச்சயம் ஒரு கண்ட்ரோலர் இருக்க வேண்டும் என்பது தான் லாஜிக். இதை நீங்கள் இல்லை என்று நிரூபியுங்கள், அல்லது சரிதான் என்று ஒப்புக் கொள்ளுங்கள், அதற்க்கப்புறம் கடவுள் எப்படி உருவானார், அவர் கருப்பா சிவப்பா என்பது பற்றியெல்லாம் பேசலாம்.

    • சாமி சத்தியமா நான் சாமியை நம்புறேன். வாரத்திற்கு ஒருமுறை கோயிலுக்கு போறேன். வருடத்திற்கு ஒருமுறை திருப்பதி போறேன். எனக்கு சொல்லுங்கள் கடவுள் கருப்பா?சிவப்பா?

      • \\சாமி சத்தியமா நான் சாமியை நம்புறேன். வாரத்திற்கு ஒருமுறை கோயிலுக்கு போறேன். வருடத்திற்கு ஒருமுறை திருப்பதி போறேன். எனக்கு சொல்லுங்கள் கடவுள் கருப்பா?சிவப்பா?\\ நீங்கள் வேறு வேறு பெயரில் வந்து கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல நான் ஒன்றும் Answering Machine அல்ல. உங்களுக்கு பதில் வேண்டுமானால் நீங்கள் எனக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டும், அதைப் பார்த்து நான் திருப்தியடைய வேண்டும், அதற்க்கப்புறம் நான் பதில் சொல்லலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வேன். [இது என்னோட பாலிசி, எண்ணு நீங்க கேள்வி கேட்க முடியாது].

        நான் உங்களிடம் கேட்பது:
        நீங்கள் இறைவன் இருப்பதாக நம்புவது நிஜம் என்றால், இங்கே என்னுடன் வாதம் செய்து கொண்டிருக்கும் நான்கைந்து நண்பர்களுக்கு இறைவன் இருக்கிறான் என்று நீங்கள் எப்படி நம்புகிறீர்கள் என்பதை அவர்கள் நம்புமாறு விளக்கம் கொடுங்கள், நீங்கள் இந்தப் பணியை எவ்வளவு சிறப்பாகச் செய்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்கள் கேள்விக்கு பதிலும் கிடைக்கும்.

        • கிழிஞ்சிது போங்க. இருந்தாலும் முயற்சி செய்யறேன்

      • \\வாரத்திற்கு ஒருமுறை கோயிலுக்கு போறேன். வருடத்திற்கு ஒருமுறை திருப்பதி போறேன்.\\ அது சரி, அங்கெல்லாம் எதற்குப் போறீரு? எத்தனயோ கற்கள் இருக்கின்றன, அந்த கோவிலுக்குள் வைக்கப் பட்ட கல்லுக்கு மட்டும் அப்படியென்ன விசேஷம், அங்கே போனதற்கான காரணம் என்ன? எத்தனையோ மலைகள் இருக்கும் போது திருப்பதி ஏழுமலைக்குப் போன காரணம் என்ன?

        • என்ன அப்படி கேட்டுட்டீங்க. பரம்பொருளாகிய கடவுள் தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். இவைகளை வணங்குவதே அவரை அடைய எளிதான வழி. எனவேதான் எனது விருப்பக்கடவுள் பாலாஜியை தரிசிக்க திருப்பதிக்கு செல்கிறேன்.

          திருப்பதி பாலாஜியைப் பற்றி அறிந்துகொள்ள
          http://vidhai2virutcham.wordpress.com/2011/11/18/திருப்பதி-பிரம்மிக்க-வை/

          • அப்புறம் என்ன வாங்க, ரெண்டு பேருமா சேர்ந்து இந்த நாத்தீகர்களின் முட்டாள்தனத்தை அகற்றும் பணியைச் செவ்வனே செய்வோம்!!

  83. இயற்கைக்கு அப்பாற்பட்ட ‘சக்தி’யைக்கொண்டு வாழ்நிலையை விளக்குவதற்கும், இயற்கைகு அப்பாற்பட்ட ‘சக்தியை’ அறிவைக்கொண்டு விளக்குவதற்கும் என்ன வேறுபாடு என்பதையும் கொஞ்சம் விளக்கிடுங்களேன்?

    • \\இயற்கைக்கு அப்பாற்பட்ட ‘சக்தி’யைக்கொண்டு வாழ்நிலையை விளக்குவதற்கும், இயற்கைகு அப்பாற்பட்ட ‘சக்தியை’ அறிவைக்கொண்டு விளக்குவதற்கும் என்ன வேறுபாடு என்பதையும் கொஞ்சம் விளக்கிடுங்களேன்?\\ \இயற்க்கைக்கு அப்பாற்பட்ட ‘சக்தி’யைக்கொண்டு வாழ்நிலையை நாம் விளக்கவில்லை. அது உண்மை. பொம்மலாட்டம் நடக்கிறது. அந்த பொம்மைகள் வெளிச்சத்தில் ஆடுகின்றன. அவை தானாகவே ஆடுகின்றன என்று சின்னக் குழந்தைகள் நினைக்கும். பெரியவர்களுக்குத் தெரியும், அந்தப் பொம்மைகள் கயிறால் கட்டப் பட்டு இயக்குவிக்கப் படுகின்றன என்று. இது உண்மை, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது மாறப் போவதில்லை. இந்தப் பிரபஞ்சம் படைக்கப் பட்டிருக்கிறது, படைத்தவன் நிச்சயம் இருப்பான், அப்படியானால் அவன் படைத்ததற்கு ஒரு நோக்கமும் இருக்கும், அது என்ன, என்னிடமிருந்து அவன் எதிர்பார்ப்பது என்ன, அதை பூர்த்தி செய்யும் வண்ணம் நான் வாழ வேண்டும். இது என் வழி, இது தனி வழி என்று சொல்ல மாட்டேன், என்னுடைய முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய வழி, அதன் படி நடக்க முனைகிறேன்.

  84. ஹி..ஹி..ஹி .. “பெறுவது எம் பிறப்புரிமை; தருவதல்ல”

    //”அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு மீண்டும் முயற் சிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.தங்கவேல் கேட்டுக்கொண்டார்.”//

    ////அப்பா…!’’ என்றான்;அவர் மெள்ள கண் விழித்தார்;‘‘அப்பா! இவருக்கு நீங்க பத்தாயிரம் ரூபாய்பணம்கொடுக்கவேண்டியிருக்காமே… சரிதானா?’’;அப்பா மிகவும் சிரமப்பட்டு வாயைத் திறந்து, ‘‘ப்பே… ப்பே… பா… பா…’’ என்றார். பேச்சு வரவில்லை. வந்தவர் பார்த்தார்;‘‘தம்பி… பரவாயில்லை. பாவம்… அவரால் பேசக்கூட முடியவில்லை. நான் வருகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்;கொஞ்ச நேரத்தில் இன்னொருவர் வந்தார்;‘‘தம்பி… அப்பாவுக்கு நான் ஐயாயிரம் ரூபாய் தர வேண்டி இருக்கிறது…’’ என்று ஆரம்பித்தார்;
    அப்போது படுக்கையில் இருந்தவர் பட்டென்று எழுந்து உட்கார்ந்தார். தெளிவாகப் பேசத் தொடங்கினார்;‘‘ஆமாம்… ஆறு மாசத்துக்கு முன்னாடி அவசரத் தேவைனு வாங்கிக்கிட்டுப் போனீங்களே!’’ என்றார்;கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பேச முடியாத அந்த மனிதரால், இப்போது எப்படி இவ்வளவு நன்றாக பேச முடிந்தது?// ;

    ஹி..ஹி..ஹி ..”பெறுவது எம் பிறப்புரிமை; தருவதல்ல – அனைத்திந்திய
    இரத்தத்தின் இரத்தமே!!!”எல்லாம்அவன் செயல்.யாமொன்றும் அறியோம் பராபரமே!!!”

  85. நண்பருக்கு

    மிக எளிய லாஜிக்தான் இது அதுவும் நீங்கள் கேட்டதுதான்
    ஒரு நாற்காலி செய்ய கூட பிளான் தேவைப்படுகிறது
    செய்பவன் தேவைபடுகிறான் அப்படி இருக்கையில் இந்த
    உலகத்தை படைப்பு என ஏற்று கொண்டால் படைபவன்
    எங்கிருந்து செய்தான் என்ற கேள்வியை கேட்டால் மழுப்புகிறீர்கள்

    1.கடவுள் மறுப்பாளர்கள் இதற்கான விடையை தேடுகிறார்கள் இன்னும் கிடைக்கவில்லை
    2.கடவுள் நம்பிக்கையாளர்கள் விடை தெரிந்து கொண்டுள்ளார்கள் ஆனால் நிரூபிக்க இயலவில்லை

    எது சரி
    முன்னையதுதான் சரி

    • \\இந்த
      உலகத்தை படைப்பு என ஏற்று கொண்டால் படைபவன்
      எங்கிருந்து செய்தான் என்ற கேள்வியை கேட்டால் மழுப்புகிறீர்கள்.\\ படைப்பவன் இருக்கிறான் என்பதுதான் முதல் படி, ஒன்று படைப்பவன் இருப்பான் என்று சொல்லுங்கள், அல்லது இருக்க முடியாது என்று நிரூபியுங்கள். இதுவும் இல்லை, அதுவும் இல்லை என்றால் எப்படி?

    • தேடினாலும் காணமுடியாது. இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றை எப்படி இயற்கை விதிகளைப் பயன்படுத்தி காணமுடியும். இயற்கையிலிருந்து நாம் விடுபடும்போதுதான் அதாவது நாம் மரணித்த பிறகே நமது ஆன்மா மேலெழும்பி சென்று கடவுளை காணும்.

  86. \\1.கடவுள் மறுப்பாளர்கள் இதற்கான விடையை தேடுகிறார்கள் இன்னும் கிடைக்கவில்லை\\ குருடன் சூரியனை தேடிகிட்டேன் தான் இருப்பான், ஒரு நாளும் “பார்த்தேன்னு” சொல்லவே மாட்டான், காரணம் அவனுக்குத்தான் கண்ணே இல்லையே, அவன் ஏங்க போயி பார்பான்? [சூரியனின் சூடு இருக்குமே, வெயிலில் நின்னா தெரியுமேன்னு சொல்லாதீங்க, அங்கே நெருப்பை மூடிவிட்டு அவனைக் கொண்டுபோய் நிறுத்தினாலும் அவன் அதே மாதிரிதான் சுடுதுன்னு சொல்லுவான், அவனால் அதற்கும் சூரியனுக்கும் வேறுபாடு சொல்லத் தெரியாது!!]

  87. \\2.கடவுள் நம்பிக்கையாளர்கள் விடை தெரிந்து கொண்டுள்ளார்கள் ஆனால் நிரூபிக்க இயலவில்லை.\\ படிப்புக்குப் பின்னால் படைப்பாளன் இருந்தே தீருவான், இதை நீங்கள் தவறு என்று நிரூபித்தால் தான் நீங்கள் சொல்வது பொருந்தும், ஆனால் நீங்கள் இன்னமும் நிரூபிக்க வில்லை. அதற்குள் நீங்கள் இதை எப்படிச் சொல்லலாம்?

    \\எது சரி
    முன்னையதுதான் சரி\\ நீதிபதி போஸ்டை நீங்களே எடுத்துகிட்ட எபாடி?

  88. ———————————————-
    கே:திட்டமிடாமல் உலகை படைக்க இயலுமா

    பதில்:முடியாது

    கே:யார் திட்டமிட்டது

    பதில்தெரியாது (அல்லது கடவுள்)

    கே:எப்போது படைத்தார்

    பதில்தெரியாது

    கே:எங்கிருந்து படைக்கப்பட்டது

    பதில்:தெரியாது

    மேற்கண்ட கேள்வி பதிலில் நீங்கள் சொல்வது முதலாம்
    கேள்வியை மட்டும் வைத்து கொண்டு பேசும் லாஜிக்
    ——————————————————————-
    அதை பின்வருமாறு கேட்கலாம்

    கே:திட்டமிடாமல் உலகை படைக்க இயலுமா

    பதில்: உலகம் படைப்பாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை

    கே:யார் திட்டமிட்டது

    பதில்: இந்த கேள்வி பொருந்தாது

    கே:எப்போது படைக்கப்பட்டது

    பதில்:விடை பெறும் முயற்சியில் இருக்கிறோம்

    கே:எங்கிருந்து படைக்கப்பட்டது

    பதில்:கேள்வி பொருந்தாது

    • \\கே:திட்டமிடாமல் உலகை படைக்க இயலுமா

      பதில்:முடியாது\\ படைக்க முடியும் என்று என்று நிரூபிக்காமல், எதற்காக இந்த Beating around the bush?

      \\கே:யார் திட்டமிட்டது

      பதில்தெரியாது (அல்லது கடவுள்)\\ முதல் கேள்வியை முடிங்க சார், தவ்வாதீங்க…!!

      \\கே:எப்போது படைத்தார்

      பதில்தெரியாது.\\ தெரியாது என்றாலும், முதல் கேள்விக்கான விடையை இது எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை.

      \\கே:எங்கிருந்து படைக்கப்பட்டது

      பதில்:தெரியாது.\\ படைக்கப் பட்டதா இல்லையா என்பது தான் எனக்கு முக்கியம், அதை அவன் எங்கேயிருந்து படித்தால் எனக்கென்ன?

      \\மேற்கண்ட கேள்வி பதிலில் நீங்கள் சொல்வது முதலாம்
      கேள்வியை மட்டும் வைத்து கொண்டு பேசும் லாஜிக்\\ நீங்க கார் ஓட்டக் கற்றுக் கோலும் போது முதல் மூன்று மாதம் சிரமமாக இருக்கும், நான்காவது மாதத்திலிருந்து சுலபமாக இருக்கும் என்றாராம் கற்றுக் கொடுப்பவர், அதற்க்கு sujith khan சொன்னாராம், “அப்போ நான் முதல் மூணு மாசம் விட்டுட்டு நான்காவது மாதமே நேரா வந்து ஓட்டுகிறேனே, கஷ்டமே இல்லாம இருக்கும்” என்று. அப்படி இருக்குதுய்யா உங்க கதை!!

    • \\கே:திட்டமிடாமல் உலகை படைக்க இயலுமா
      பதில்: உலகம் படைப்பாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\\ என்ன தியாகு, இஷ்டத்துக்கும் அள்ளி விடுறீங்க…!! என்ன இது, நீங்களும் நானும் முடிவு செய்யும் விஷயமா இது? உங்கப்பா யாருடன்னு கேட்டா, எனக்கு அப்பா இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை, ஒருநாள் எங்கம்மா பலாப்பழம் வாங்கிவந்தார்கலாம், அதை கட் செய்து உள்ளே பார்த்த போது நான் இருந்தேனாம்- இப்படியெல்லாம் கூட புருடா விடலாம், ஆனா நம்புவது யாரு? அது சரி, எதைப் பார்த்து இந்த முடிவுக்கு வந்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க.

    • \\கே:யார் திட்டமிட்டது

      பதில்: இந்த கேள்வி பொருந்தாது

      கே:எங்கிருந்து படைக்கப்பட்டது

      பதில்:கேள்வி பொருந்தாது\\ அது சரி, படைத்தவன் என்று ஒருத்தன் இருப்பானேயானால் அவனைப் படைத்தது யார் என்று கேட்கிறீர்களே, அந்தக் கேள்விக்கும் இதே பதிலைப் போட்டுக் கொண்டால் சவுகரியமாக இருக்குமே, அங்கு மட்டும் ஏன், எதற்கு, எப்படி என்று உங்கள் மூளை சுருசுர்ப்பாக வேலை செய்கிறது. இங்கே தூங்கி வழிகிறேதே? இடத்துக்கு தகுந்த நியாயமா?

    • \\கே:எப்போது படைக்கப்பட்டது

      பதில்:விடை பெறும் முயற்சியில் இருக்கிறோம்\\

      ஒரு வயசுப் பொண்ணு இருக்கிறாள், அவளுக்கு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும், மாப்பிள்ளை தேடுகிறீர்கள், நீங்கள் தேடிக் கொண்டேயிருக்கிறீர்கள். அதற்கும் ஒரு கால வரம்பு இருக்கிறது. அவள் என்பது வயது கிழவியான பின்பு மாப்பிள்ளையைக் கொண்டு வந்து எதற்குப் பிரயோஜனம்? அது கூட பரவாயில்லை, ஏதோ வயதான காலத்தில் குடித்தனம் நடத்தாவிட்டாலும், ஒரு ஒத்தாசையாகவாவது இருப்பான். ஆனால் நீங்கள் தேடும் மாப்பிள்ளை அவள் செத்து அவளைப் புதைத்த இடத்தில் முன்னூறு வயது ஆலமரம் நெடு நெடுவென வளர்ந்து நிற்கும் நேரத்தில் கூட கிடைக்கவே மாட்டன் போலிருக்கிறதே….!!

  89. சரி

    இந்த உலகம் படைப்புதான் என்கிறீர்கள் நீங்கள்

    அதற்கான பின்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க
    தெரியவில்லை

    1.படைத்தவர் 2இடம் 3.காலம்

    இந்த உலகம் படைப்பில்லை என்கிறேன் நான்

    1.படைத்தவன் இல்லை 2.இடம் (நாம் இருக்கும் இடம்தான் 3.காலம் (இன்னும் நிரூபிக்கப்படவில்லை )

    எது சரின்னு நீங்களே முடிவு பண்ணுங்க

    • \\ இந்த உலகம் படைப்புதான் என்கிறீர்கள் நீங்கள்

      அதற்கான பின்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க
      தெரியவில்லை

      1.படைத்தவர் 2இடம் 3.காலம் \\ எனக்குன்னு உள்ள அறிவைக் கொண்டு தான் நான் சிந்திக்க முடியும், அந்த அறிவைக் கொண்டு தேடும் விடையை மட்டுமே நான் கொடுக்க முடியும், அதற்க்கு அப்பால் உள்ளதைப் பற்றி நான் கப்சா விட விரும்பவில்லை. படைத்தவன் இருந்தேயாக வேண்டும் என்று நான் சொல்கிறேன். எதை வைத்து? என்னுடைய அனுபவத்தில் ஜடப் பொருள் எந்த ஒரு complexity நிறைய உள்ள ஒரு சிஸ்டத்தையும் அதுவாக உருவாக்கிக் கொண்டதில்லை. ஒரு சப்பாத்தி கூட தானாக உருவாகி நான் பார்த்ததில்லை. இந்த பிரபஞ்சத்தில் இருந்து, நமது உடல் வரை ஜடப் பொருட்கள் மிக மிக complex ஆனா வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன, இவற்றை ஆயிரக் கணக்கான விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் போராடியும் வடிவமைக்க முடியுமா என்று வியக்கும் வகையில் உள்ளன. புத்திசாலித் தனத்தை நான் ஜடத்தில் பார்த்ததில்லை. அதனால், இந்த அற்ப்புதமான அரேஞ்ச்மென்ட் க்குப் பின்னால் நிச்சயம் ஒரு காரணி இருக்கும் என நம்புகிறேன். அந்தக் காரணி ஜடமாக இருக்குமா, இல்லை உயிராக இருக்குமா என்றால், நிச்சயம் உயிராகத்தான் இருக்க முடியும், என்னெனில் ஜடத்துக்கு புத்தி கிடையாது. உயிருக்கு புத்தி இருக்கிறது.

      நீங்கள் எதை வைத்து படைப்புக்குப் பின்னால் எந்த காரணியும் இல்லை என்று ஆயிரத்தெட்டாவது முறையாக கேட்கிறேன், ஊமைக் கோட்டானாகவே இருக்கிறீர்களே, எவ்வளவு காலம்தான் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள் நண்பர்களே?

    • \\அதற்கான பின்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க

      தெரியவில்லை
      1.படைத்தவர் 2இடம் 3.காலம் \\ ஒரு செல் போனைப் பார்த்தவுடன் நான் சொல்லுவேன், அது தானாக வந்திருக்காது நிச்சயம் ஒரு நிறுவனம் அதைச் செய்திருக்கும் என்று. அந்த நிறுவனத்தில் அந்த போனை செய்தவர் யார், அவர் பெயர் என்ன, எந்த இடத்தில் அந்த கைபேசி நிறுவனம் அமைக்கப் பட்டுள்ளது [தைவானா இல்லை சைனாவா?], எந்த மாதம் அது தயாரிக்கப் பட்டது இத்யாதி…….இத்யாதி……. கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாமல் இருக்கலாம், அந்த விவரங்களைப் பெறக் கூடிய சாமர்த்தியம் எனக்கில்லை, ஆனால் அதை வைத்து அந்த கைபேசி தானாகவே வந்தது, தயாரித்தவர் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தீர்மானிக்க முடியுமா?

    • \\இந்த உலகம் படைப்பில்லை என்கிறேன் நான்

      1.படைத்தவன் இல்லை\\ வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததைப் பேசலாமா? எதை வைத்து இதைச் சொல்கிறீர்கள்?

    • \\2.இடம் (நாம் இருக்கும் இடம்தான்\\

      டிரிங்.. டிரிங்..
      ஹெலோ யாருங்க பேசுறது?…
      நான்தான்……..

      நாந்தான்னா…..?
      நான்தான்………

      எங்கேயிருந்துங்க பேசுறீங்க..?
      இங்கே இருந்துதான்?

      எந்த ஊர்லன்னு கேட்டேங்க?
      இதே ஊர்ல இருந்து தான்.

      அட உங்க அப்பா பெரையாச்சும் சொல்லுங்க?
      அப்பாதான்..

      [இந்த மாதிரி பதில் பேசுபவரை என்ன செய்வது தியாகு?!! நீரும் அதே மாதிரி இருக்கலாமா?!!

    • \\3.காலம் (இன்னும் நிரூபிக்கப்படவில்லை )\\ பொண்ணு கிழவியாவதற்க்குள் கல்யாணத்தை பண்ணிடுங்க.

    • கடவுளை காண்பியுங்கள் என அடம்பிடிப்பது எப்படி சுத்த முட்டாள்தனமோ கடவுளை காட்டுகிறேன் என்பதும் முட்டாள்தனமானது. இப்பிரபஞ்சமும் அதில் உள்ள உயிர்களும் இப்பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டு இயங்குபவைகள். கடவுளோ இப்பிரபஞ்ச விதிக்கு அப்பாற்பட்டவர். நமது ஐம்புலன்களால் இப்பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் பொருள்களைத்தான் உணரமுடியும். இவ்விதிக்குள் அடங்காத கடவுளை காணமுடியாது. கடவுளைக் காட்டுகிறேன் வா என்று அழைப்பவனும் அவன் பின்னே செல்பவனும் கூமுட்டைகள். கடவுள் 40 நாட்கள் மோசசுடன் பேசினார் என்பதெல்லாம் பித்தலாட்டம்.

      இன்று ஒரு பானையைப் பார்த்த மாத்திரத்தில் அது ஒரு குயவனால் செய்யப்பட்டது என்பதை சொல்லிவிடமுடியும். அதை மனிதன் தனது அனுபவ அறிவின் ஊடாக உணர்ந்துகொண்டதினால் அப்படிச் சொல்லுகிறான். எப்பொருளுமே மனிதனால் உருவாக்கப்படாத காலம் ஒன்று இருந்திருக்கும். அப்பொழுதைய மனிதனிடம் ஒரு குகையை இன்னார் கட்டினான் என்று கூறினால் அவன் நகைப்பான். ஏனென்றால் இயற்கையாக இருந்த அக்குகைகள் அப்படிஅப்படியே இருந்ததைப் பார்த்த அறிவு அவனை அப்படிச் சொல்ல வைக்கின்றது. காலங்கள் செல்ல இயற்கையில் அமைந்த ஒரு பொருளை மாதிரியாகக் கொண்டு தான் உபயோகப்பதற்கு ஏற்றவாறு பொருட்களை வடிவமைக்க அதாவது இயற்கையின் மீது தனது உழைப்பைச் செலுத்த கற்றுக்கொள்கிறான். அதன் பிறகே, தான் உருவாக்கியதனால் உருவான ஒரு பொருளை வைத்து இப்பிரபஞ்சமும் யாரேனும் ஒருவரால்தான் உருவாகியிருக்க முடியும் என்ற நம்பிக்கைக்கு வந்து சேருகிறான். அதற்கு கடவுள் என்ற பெயரைப் பொருத்தியிருக்கிறான். மனிதனைப் பொறுத்த வரையினில் இந்த நம்பிக்கை அதாவது கடவுள் என்பது ஒரு கருத்துதான். கடவுளை, அவன் ஒரு பொருளாகக் கண்டதில்லை. ஒரு பொருளை உருவாக்கும் பொருளாகிய தன்னை ஒப்பிட்டதனாலேயே தன்னால் அனுமானிக்கப்பட்ட கருத்தாகிய கடவுளும் ஒரு பொருளாகத்தான் இருக்கும் என்பதினாலேயே கடவுளுக்கு மனிதப் பண்புகளை ஏற்றி வைத்தான். இதன் பிறகுதன் கடவுள் என்ற கருத்தை கைக்கொண்டு பல மதங்கள் கிளம்பின. தங்களது மனோ இச்சைக்கு தகுந்தவாறு கடவுளையும், அவரின் பண்புகளையும் சிருஷ்டித்துக்கொண்டன. ஆனால் காலத்திற்குத் தகுந்தார் போல் கொள்கைகளையோ பண்புகளையோ மாற்றிக்கொள்பவர் கடவுளாக இருக்க முடியாது. கடவுளிடம் இருப்பதெல்லாம் ஒரே கொள்கையாகத்தான் இருக்கும். அது எந்த வகையினாலும் சரி நேர்மை எதிலும் நேர்மை என்பதாகத்தான் இருக்கும். எனவேதான், இந்து, கிறித்துவம், இஸ்லாம் ஆகிய அனைத்து மதங்களும் சொல்வது பொய். இந்தந்த மதங்களை உருவாக்கியவர்கள் தற்காலத்திய போலிச் சாமியார்களை ஒத்தவர்கள். கடவுள் மனிதனுக்கு பொருளாகிய மூளையைக் கொடுத்து இருக்கிறார். அதை வைத்து அவன் தனது அனுபவ அறிவினூடாக எல்லா மனிதர்களுக்கும் துன்பம் தராத நேர்மையானவழியைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்பதே மனிதனைப் படைத்த கடவுளின் குறிக்கோள்.

      • \\கடவுளோ இப்பிரபஞ்ச விதிக்கு அப்பாற்பட்டவர். நமது ஐம்புலன்களால் இப்பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் பொருள்களைத்தான் உணரமுடியும். இவ்விதிக்குள் அடங்காத கடவுளை காணமுடியாது. \\ இப்படி சொன்ன உமக்கு……….

        \\கடவுளிடம் இருப்பதெல்லாம் ஒரே கொள்கையாகத்தான் இருக்கும். அது எந்த வகையினாலும் சரி நேர்மை எதிலும் நேர்மை என்பதாகத்தான் இருக்கும். \\ என்ற தகவல் எப்படி கிடைத்தது. கடவுள் SMS, E-mail or phone பண்ணிச் சொன்னாரா?

        \\எனவேதான், இந்து, கிறித்துவம், இஸ்லாம் ஆகிய அனைத்து மதங்களும் சொல்வது பொய்.\\ அப்புறம் எதுக்கய்யா திருப்பதிக்குப் போறீரு?

        \\இந்தந்த மதங்களை உருவாக்கியவர்கள் தற்காலத்திய போலிச் சாமியார்களை ஒத்தவர்கள். \\ அண்ணனோட அறிய கண்டுபிடிப்புக்கு எல்லோரும் ஒரு ஓ………. போடுங்கப்பா…!!!

        \\கடவுள் மனிதனுக்கு பொருளாகிய மூளையைக் கொடுத்து இருக்கிறார். அதை வைத்து அவன் தனது அனுபவ அறிவினூடாக எல்லா மனிதர்களுக்கும் துன்பம் தராத நேர்மையானவழியைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்பதே மனிதனைப் படைத்த கடவுளின் குறிக்கோள்.\\ அண்ணனுக்கு கடவுள் அனுப்பிய இரகசியத் தகவல் இது, அடுத்து இவர் எதாச்சும் மடம் திறக்கவும் வாய்ப்புகள் உள்ளது. மடம் என்றதும், அங்கே சினிமா நடிகைகள் வருவாங்க,அவங்ககிட்ட ஆன்மீக ஆராய்ச்சி செய்யணும் அவங்களுக்கு “ஆன்மீக ஒளி” ஊட்டலாம், அவங்க அறிவுக் கண்ணை திறக்கலாம்[அவங்களும் மனுஷிங்க தானே, அவங்களுக்கு கருணை காட்ட வேண்டாமா!!] , மக்களுக்கு சேவை செய்ய மட்டும் ஒரு ஆயிரக் கணக்கான கோடி சொத்து சேர்க்கலாம் [இனிமே இவரை சுவாமிஜி ன்னுதான் சொல்லணும்… 🙁 ] இது தவிர தனக்குன்னு இது வேண்டும் அது வேண்டும் என்ற எண்ணம் அண்ணனுக்கு அறவே கிடையாது. ஆண்டவன் இவருக்கு இரகசியமா கொடுத்த செய்தியை எல்லோருக்கும் போய்ச் சேர்ந்து அவங்க குட்டிச் சுவத்துல போயி முட்டிக்கணும் என்பது மட்டுமே இந்த ———ஆனந்தாவின் கொள்கை!! [இன்னும் என்ன ஆனந்தான்னு முடிவு செய்யவில்லை, விரைவில் அறிவிப்பார், ஹி….ஹி…ஹி…].

        • //என்ற தகவல் எப்படி கிடைத்தது. கடவுள் SMS, E-mail or phone பண்ணிச் சொன்னாரா?//

          என்ன பாஸ் என்னையே கால வாற்ரீங்க. சரி உங்களுக்கும் சேர்த்து முயற்சி செய்கின்றேன்.

          நான் எழுதியிருப்பதை மீண்டும் படித்துப் பாருங்கள். மனிதனைப் பொறுத்த வரையினில் கடவுள் ஒரு கருத்துதான். தன்னை ஒப்பிட்டுப் பார்த்துதான் தன்னுடைய கருத்தாகிய கடவுளுக்கு தன்னைப்போன்ற பண்புகளும் இருக்கும் என்ற முடிவுக்கு வருகிறானே தவிர மனிதன் கடவுளைக் கண்டதில்லை. கடவுளும் மனிதனுக்கு ஓலைகளும் அனுப்பவில்லை. கடவுள் உயிர்களை படைக்கும்போதே பருப்பொருளாகிய மூளையையும் கொடுத்து அதற்கு சிந்தனை செய்யும் திறனையும் கொடுத்து இருக்கிறார் அவ்வளவே. மற்றபடி, அதை வைத்து மனிதன் தனது அனுபவ அறிவின் ஊடாகத்தான் பலவற்றைக் கற்றுக்கொள்கிறான். இந்த அனுபவ அறிவும் அவன் சமூகமாக இயங்கும்போதுதான் கிடைக்கிறது. (பிறந்த குழந்தையை காட்டில் விட்டு வளர்த்தீர்களேயானால் அதற்கு இப்போதிருக்கும் மனிதப் பண்புகள் வராது.) நேர்மையாக வாழ்வதைப் பற்றியும் சமூகம்தான் மனிதனுக்கு கற்றுக்கொடுக்கிறது. மனிதன் தனது அனுபவ அறிவால் கற்றுக்கொண்ட நேர்மையாக வாழ்வது என்ற பண்புதான் ஆகச் சிறந்தது. மனிதனால் உணரப்பட்ட இத்தகையப் பண்பைத்தான் கடவுளும் விரும்புவார். இந்த விரும்புவார் என்பதும் கருத்துதான். மனிதன் தன்னை ஒப்பிட்டுத்தான் கடவுளுக்கு வடிவம் கொடுக்கிறான். ஆக தன்னுடைய ஆகச் சிறந்த பண்பிற்கு மாறான, எதிர்நிலையான பண்பை கடவுள் கொண்டிருந்தால் எப்படி அவரை வணங்கமுடியும்? கடவுளைப் பற்றிய மனிதனின் அத்துனை கற்பிதங்களும் கருத்துதான். கடவுள் இருக்கிறார் என்பஹற்கு ஒரே ஒரு லாஜிக் தான் ஒரு பானை ஒரு குயவன். மற்றபடி நீங்கள் மதங்களினுள் புகுந்தீர்களேயானால் கடவுளையே மறுக்க வேண்டிய சூழ்நிலைதான் உருவாகும்.

          ஒரு பானையையும் குயவனையும் வைத்து நீங்கள் எப்படி கடவுள் இருக்கமுடியும் என்ற கொள்கைக்கு வருகிறீர்களோ அதே வழியில்தான் நானும் கடவுள் பற்றிய கருத்திற்கு வந்தடைகின்றேன். போதுமா இன்னும் விளக்கனுமா?

          • நீங்க இங்க சொல்வதைப் போலத்தான் சாமியார்களும் சொல்கிறார்கள், அவர்களைப் பலிப்பது ஏனோ?

            • சாமியார் அதை மட்டுமா சொல்கிறான். இந்து மதத்தையும் சேர்த்தல்லவா சொல்லுகிறான். அதனால் தானே பல காமலீலைகளுக்கும் ஆட்படுகின்றான்.

        • //\\எனவேதான், இந்து, கிறித்துவம், இஸ்லாம் ஆகிய அனைத்து மதங்களும் சொல்வது பொய்.\\ அப்புறம் எதுக்கய்யா திருப்பதிக்குப் போறீரு?//

          நான் இந்து மதத்தில் பிறந்துவிட்ட காரணத்தினால்தான் ஒரு திருப்திக்கு திருப்பதி செல்கிறேன். ஆனால் நான் அங்கு ஏழுமலையானைக் கும்பிடுவதில்லை. இப்பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளைத்தான் வணங்குகிறேன். அவனுக்கு பெயர் கிடையாது. கடவுளுக்கு ஏழுமலையான் சிவன் என்பதெல்லாம் மனிதனின் கருத்துதான்.

          • அத எழுமலைக்குப் போய்தான் செய்யணுமா, ஏன் வீட்டிலேயே செய்யக் கூடாதா? இந்து மதத்தில் பிறந்ததனால் கோவிலுக்குச் செல்கிறீர்கள் என்றால் நீங்கள் வசிக்கும் இடத்திலேயே கோவில்கள் இருக்குமே, அங்கேயே பிரார்த்தனை செய்யலாமே, உங்கள் இறைவன் வேண்டாமென்று சொல்லிவிடுவானா? ஏழுமலைக்கு செலவு செய்து கொண்டு அங்கே மணிகணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமென்ன? அப்படியே பெருமாள் கோவில்களுக்குச் செல்வது விருப்பம் என்றால் பெருமாளுக்கு இருக்கும் 108 திவ்ய ஸ்தலங்களில் ஏழுமலையை மட்டும் கஜினி முகமது மாதிரி அட்டாக் செய்வது ஏன்? ஆக, திருப்பதிக்குப் போனால் பணம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள், நீரும் விடாமல் செல்கிறீர், வேறு காரணம் ஒன்றுமில்லை. இதற்க்கு ஏன் நைனா இத்தனை பில்டப்பு?

            • திருப்பதிக்கு திருப்திக்காக போவதாக நான் சொன்னது ஒரு விபத்தினால். விபத்து என்று நான் சொல்வது எனது திருமணத்தை.

            • //ஆக, திருப்பதிக்குப் போனால் பணம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள்,//

              திருப்பதிக்கு போனால் பணம் கிடைக்கும் என்பது மனிதனின் கருத்துதான். ஆனால் அதன் அனுபவம் நமது பணம் நம்மை விட்டு போய்விடும் என்பதுதான்.

        • \\இந்தந்த மதங்களை உருவாக்கியவர்கள் தற்காலத்திய போலிச் சாமியார்களை ஒத்தவர்கள். \\ அண்ணனோட அறிய கண்டுபிடிப்புக்கு எல்லோரும் ஒரு ஓ………. போடுங்கப்பா…!!!///

          அந்தந்த மதங்களில் உள்ள லீலைகளை எடுத்துவிட்டால் புரியும் ஓ போடுவதா அல்லது முக்காடு போடுவதா என்று.

        • //அண்ணனுக்கு கடவுள் அனுப்பிய இரகசியத் தகவல் இது,///

          என்னய்யா சரியான வெளங்கா மட்டையா இருக்கீரு. நான் என்ன சொல்லியிருக்கிறேன். கடவுள் என்ற ஒன்றும் அவனுக்கு இருப்பதாக கூறும் பண்பு எல்லாம் கருத்துதான். தன்னை ஒப்பிட்டுத்தான் கடவுளைப் பற்றிய அனைத்தையும் மனிதன் வடிவமைத்துக் கொள்கிறான்.

          //அங்கே சினிமா நடிகைகள் வருவாங்க,அவங்ககிட்ட ஆன்மீக ஆராய்ச்சி செய்யணும்//

          பாத்தீங்களா உங்க லீலைகளை ஆரம்பிச்சுட்டீங்க. இதுக்குத்தான் மதங்கள் என்பவைகள் எல்லாம் காஞ்சி சங்கராச்சாரியார்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது என்று. அவர்கள் பின்னே போய் குட்டிச் சுவராகிப் போகாதீர்கள். உங்களைப் போன்றோரை வைத்துத்தான் அவர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள்.

          • வைத்தியம் எல்லோரும் பார்த்து விட முடியாது, கட்டிடம் கட்ட எல்லோரும் பிளந போட்டு விட முடியாது, சட்டம் எல்லோருக்கும் அத்துபடியாகத் தெரிந்திருக்காது…… அது அதற்கும் உள்ள வல்லுனர்களால் மட்டுமே முடியும். ஆனால் ஆன்மிகம் என்று வந்து விட்டால் எல்லாமே எனக்குத் தெரியும், எல்லோரும் என்கிட்ட வந்து கத்துகிட்டு போங்க என்று ஒவ்வொருத்தனும் நினைக்கிறான். என்ன கொடுமை சரவணன் இது…………?

            • தாஸ் பாஸ்,

              ஆனாலும் எல்லோரும் கடவுளை வணங்கித்தானே ஆகிறோம். கடவுளை அறிய ஒரு சின்ன லாஜிக்தான் பாஸ். அது ஒரு பானை ஒரு குயவன் அவ்வளவுதான், கடவுள் இருக்கிறார் என்றாகிவிடுகிறது அல்லவா. இந்த ஈர வெங்காய லாஜிக்கை எத்தனை முறை உரித்தாலும் இதில் எந்த சூட்சுமமும் இல்லை. கடவுளை சூட்சுமமாகக் கூறி வித்தைக் காட்டித்தான் ப்லர் மனிதர்களை ஏமாற்றிப் பிழைக்கின்றனர். வேண்டாம் மக்களை வாழ விடுங்கள்

              • இவ்வளவு எளிய விஷயத்தை இங்கே இருக்கும் நாத்தீகக் கண்மணிகளுக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஒன்னு கூட திருந்தவில்லையே, நானும் பறையில தலையை இடிப்பது போல இடிச்சுகிட்டே இருக்கேன், நீங்களாவது கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க பாஸ்.

                • அவர்கள் அப்படிப் பேசுவதும் நன்மைக்கே. ஆத்தீகம் தன்னை மறுசீரமைத்துக் கொள்வது நாத்திகம் மூலம்தான்.

        • //இது தவிர தனக்குன்னு இது வேண்டும் அது வேண்டும் என்ற எண்ணம் அண்ணனுக்கு அறவே கிடையாது.///

          நேர்மையற்ற முறையில் வாழ்ந்தாதான் எல்லாம் கிடைக்கும் எனச் சொல்ல வருகிறீர்களா?

  90. //எனக்குன்னு உள்ள அறிவைக் கொண்டு தான் நான் சிந்திக்க முடியும், அந்த அறிவைக் கொண்டு தேடும் விடையை மட்டுமே நான் கொடுக்க முடியும், அதற்க்கு அப்பால் உள்ளதைப் பற்றி நான் கப்சா விட விரும்பவில்லை.//

    அறிவு என்பது என்ன உங்களுக்குள்ள அறிவு என்பது நீங்கள் கொண்டு வந்ததா அல்லது இந்த
    சமூகம் பன்னெட்ங்காலமாக சேர்த்து வைத்ததா

    நான் இந்த கணினியை உபயோகிக்கிறேன் ஆனால் அதன் க்ஹார்ட் டிஸ்க் எப்படி செய்கிறார்கள்
    என்கிற அறிவு எனக்கில்லை அது சமூகத்தின் அறிவு
    ஆகவே அறிவு என்பது தனிபட்ட மனிதனுடையது அல்ல

    / படைத்தவன் இருந்தேயாக வேண்டும் என்று நான் சொல்கிறேன். எதை வைத்து? என்னுடைய அனுபவத்தில் ஜடப் பொருள் எந்த ஒரு complexity நிறைய உள்ள ஒரு சிஸ்டத்தையும் அதுவாக உர�¯
    �வாக்கிக் கொண்டதில்லை. //

    ஒவ்வொரு ஜடப்பொருளுக்குள்ளும் ஒரு காம்பிளக்சிட்டியான சிஸ்டம் இருக்குது
    (அனுக்களின் இயக்கம் )
    அந்த அனுவை பிளந்து பயனடையும் வழிமுறையை கண்டுபிடித்தவன் மனிதன்
    உங்க கடவுள் இல்லை பாஸ்

    //ஒரு சப்பாத்தி கூட தானாக உருவாகி நான் பார்த்ததில்லை. இந்த பிரபஞ்சத்தில் இருந்து, நமது உடல் வரை ஜடப் பொருட்கள் மிக மிக complex ஆனா வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன, இவற்றை ஆயிரக் கணக்கான விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் போராடியும் வடிவமைக்க முடியுமா என்று வியக்கும் வகையில் உள்ளன. புத்திசாலித் தனத்தை நான் ஜடத்தில் பார்த்ததில்லை. அதனால், இந்த அற்ப
    ்புதமான அரேஞ்ச்மென்ட் க்குப் பின்னால் நிச்சயம் ஒரு காரணி இருக்கும் என நம்புகிறேன். அந்தக் காரணி ஜடமாக இருக்குமா, இல்லை உயிராக இருக்குமா என்றால், நிச்சயம் உயிராகத்தான் இருக்க முடியும், என்னெனில் ஜடத்துக்கு புத்தி கிடையாது. உயிருக்கு புத்தி இருக்கிறது.//

    உயிர் என்றாலே ஒரு தோற்றமும் முடியும் கொண்டதாக இருப்பதை நாம் உலகெங்கும்
    காண்கிறோமே அப்படி இல்லாத ஒரு உயிரும் ஒரு புத்திசாலித்தனமும் இல்லை
    அப்படி இருந்தால் நிருவுங்கள்

    //நீங்கள் எதை வைத்து படைப்புக்குப் பின்னால் எந்த காரணியும் இல்லை என்று ஆயிரத்தெட்டாவது முறையாக கேட்கிறேன், ஊமைக் கோட்டானாகவே இருக்கிறீர்களே, எவ்வளவு காலம்தான் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள் நண்பர்களே?//

    இதை படைப்பு என்றே நான் ஏற்று கொள்ளவில்லை சார்

    ஏனெனில் ஒரு படைப்பில் பிழைவந்தால் படைப்பாளன் அதை சரி செய்ய வேண்டும்
    இங்கே அப்படி நடப்பதில்லையே சுனாமி வந்து மனித உயிர்களை அழிக்கும் போது
    எங்கே போனான் படைப்பாளன் சோ அவனில்லை வரமாட்டான் நம்பாதே

  91. \\ஆகவே அறிவு என்பது தனிபட்ட மனிதனுடையது அல்ல\\ படைத்தவன் இருக்க வேண்டும் என்று நான் நம்புவது ஏன் என்று நான் கொடுத்த காரணங்களில் தங்களுக்கு ஆட்சேபமாக ஏதாவது இருந்தால் சொல்லலாம்.

    \\ஒவ்வொரு ஜடப்பொருளுக்குள்ளும் ஒரு காம்பிளக்சிட்டியான சிஸ்டம் இருக்குது (அனுக்களின் இயக்கம் ) \\ இருந்தாலும் அது தானாகவே ஒரு கம்பியூட்டராகவோ, செல்பேசியாகவோ, ஏன் ஒரு மட்பாண்டமாகவோ கூட மாறாது.

    \\அந்த அனுவை பிளந்து பயனடையும் வழிமுறையை கண்டுபிடித்தவன் மனிதன் உங்க கடவுள் இல்லை பாஸ்.\\ என்ன பாஸ், கூமுட்டைத் தனத்தில் அம்பியையே தூக்கி சப்பிட்டுடுவீங்க போலிருக்கே!! சூரியனிலும், மற்ற நட்சத்திரங்களிலும் வெளிச்சமும், வெப்பமும் எப்படி வருது பாஸ்?

    \\உயிர் என்றாலே ஒரு தோற்றமும் முடியும் கொண்டதாக இருப்பதை நாம் உலகெங்கும்
    காண்கிறோமே அப்படி இல்லாத ஒரு உயிரும் ஒரு புத்திசாலித்தனமும் இல்லை
    அப்படி இருந்தால் நிருவுங்கள் \\ ஏன் கண்ணு முன்னாடி இன்றைக்கு நான் பார்க்கும் ஜடத்துக்கு புத்தி கிடையாது, ஆனால் அது அற்புதமான வடிவமைப்போடு இருக்கிறது, அந்த வேலையைச் செய்தது இன்னொரு Intelligent, conscious being. முடிந்தால் இதை இல்லை என்று நீங்கள் நிறுவுங்கள்.

    \\இதை படைப்பு என்றே நான் ஏற்று கொள்ளவில்லை சார் \\ அதனால இழப்பு ஒண்ணுமில்லை சார்.

  92. [One more info: சூரியனில் நடப்பது Nuclear Fusion, அணு உலைகளில் நடப்பது நுச்லியர் Fission.]

    \\ஏனெனில் ஒரு படைப்பில் பிழைவந்தால் படைப்பாளன் அதை சரி செய்ய வேண்டும்
    இங்கே அப்படி நடப்பதில்லையே சுனாமி வந்து மனித உயிர்களை அழிக்கும் போது
    எங்கே போனான் படைப்பாளன் சோ அவனில்லை வரமாட்டான் நம்பாதே\\ நீ இதைத்தான் செய்ய வேண்டும் என்று உங்க லோகல் போலீஸ் ஸ் டே ஷனில் உள்ள கான்ஸ்டபிளைக் கூட நீங்க கட்டளையிட முடியாது. ஆனா, இந்த பிரமாண்டத்தையே படைத்து, கட்டிக் காத்து வரும் ஒருத்தருக்கு ஏதோ உங்க சர்வர் மாதிரி கட்டளை போடுறீங்க. இது உமக்கே ஓவராகத் தெரியவில்லையா?

    அதுசரி, சுனாமி ஒண்ணுல தான் சாவு வந்ததா? சாலை விபத்துகள், உடல்நலக் குறைவு, புகைப் பிடித்தல் இதிலெல்லாம் சாவு வருவதே இல்லையா? வெறும் கிலோ முப்பது ரூபாய் அரிசி சாப்பிட்டால் உணவுப் பஞ்சம் வரும் என்று கிலோ 300 ரூபாய் ஆடுகளை போட்டுத் தள்ளுகிறீர்களே, அதெல்லாம் உயிர் இழப்புகள் இல்லையா? நீங்கள் ஒவ்வொரு முறை அடுப்பு பற்றவைக்கும் போது, வெந்நீர் போடும்போது, அம்மியில் அரைக்கும் போது, முகத்தைச் சொரியும் போது எத்தனை மில்லியன் நுண்ணுயிர்கள் சாகின்றன தெரியுமா உங்களுக்கு? அவ்வளவு ஏன், உடம்பு சரியில்லை என்று ஆன்டி பயாட்டிக் மருந்துகள் உண்ணும்போது எத்தனையோ மில்லியன் நுண்ணுயிர்கள் சாகின்றனவே? இதெல்லாம் எந்தக் கணக்கில் சேர்த்துவீர்கள்? ஒவ்வொருத்தரும் கோடிக் கணக்கான உயிகளை தினமும் கொன்று விட்டு, சுனாமியில செத்தவங்களை மட்டுமே பேசுரீங்கலேப்பா………?

  93. ஜெயதேவ் தாசு,

    ஏன் எல்லாக் குரங்குகளும் மனிதனாகவில்லை என்று நீர் வாலைக் கடித்துக் கொண்டு விம்மியபோது உம் மீது பரிதாபப்படுவதா இல்லை பரிணாம வளர்ச்சி, இயற்கைத் தேர்வைப் பற்றி புரிந்துகொள்ளும் அளவுக்கு உமக்கு அறிவு இல்லாதைப் பற்றி வருந்துவதா என்று குழம்பியிருந்தேன். நீர் முதலில் மரத்தை விட்டு இறங்கி தரையில் கிழங்கை நோண்டித் தின்று பழகவும். உம்முடைய சந்ததிகளுக்காவது பல நூறு தலைமுறைகளுக்குப் பின் வால் போய் வாலில்லாக் குரங்காகி, கடவுள் கருணையாலோ இயற்கை நிர்பந்தங்களினாலோ மனிதர்களாகவும் வாய்ப்பு இருக்கும் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.

    • \\உமக்கு அறிவு இல்லாதைப் பற்றி வருந்துவதா என்று குழம்பியிருந்தேன்.\\ வந்துட்டாருய்யா………….வந்துட்டாரு……. வாடிய பயிரைக் கண்டு வாடி வருந்திய வள்ளலாரு வந்துட்டாரு!! அதுசரி, நீரு எதில தெளிவா இருந்தீரு இதில மட்டும் தெளிவா இருக்கிறது? உள்ளே போடுவதை வெளியிலும், வெளியில் போடுவதை உள்ளீயும் போட்டுக் கொண்டு சூப்பர் மென் மாதிரி போயி ஆபிஸ்ல உட்கார்ந்துகிட்டு மேனேஜர் புடுங்கச் சொன்ன ஆணியை விட்டுவிட்டு பக்கத்தில் இருக்கிற ஆணியையைப் புடுங்கறேதேதான் உம்மோட வேலைன்னு எல்லோரும் பேசிக்கிறாங்க, நெசமா?

      \\நீர் முதலில் மரத்தை விட்டு இறங்கி தரையில் கிழங்கை நோண்டித் தின்று பழகவும்.\\ வேண்டவே வேண்டாம், மரத்து மேலே நான் நிம்மதியா இருக்கேன், உன்னை மாதிரி ஜென்மங்க நிறைய உளத்திகிட்டு இருக்கும் சமூகத்தை விட நான் இப்ப இருக்கும் இடம் எவ்வளவு பெட்டர். இன்னொரு தகவல், பண்ணிங்கதான் நோண்டித் தின்னும், நீர் அறிவாளியானது அப்படித்தானா?

      \\உம்முடைய சந்ததிகளுக்காவது பல நூறு தலைமுறைகளுக்குப் பின் வால் போய் வாலில்லாக் குரங்காகி\\ நீரும், உமது டார்வினோட மூதாதையர்கள் வேண்டுமானால் குரங்குகளாக இருக்கலாம், எம்முடைய மூதாதையர்கள் என்றைக்கும் மனிதர்கள் மட்டுமே!!

      • // வந்துட்டாருய்யா………….வந்துட்டாரு……. வாடிய பயிரைக் கண்டு வாடி வருந்திய வள்ளலாரு வந்துட்டாரு!! அதுசரி, நீரு எதில தெளிவா இருந்தீரு இதில மட்டும் தெளிவா இருக்கிறது? உள்ளே போடுவதை வெளியிலும், வெளியில் போடுவதை உள்ளீயும் போட்டுக் கொண்டு சூப்பர் மென் மாதிரி போயி ஆபிஸ்ல உட்கார்ந்துகிட்டு மேனேஜர் புடுங்கச் சொன்ன ஆணியை விட்டுவிட்டு பக்கத்தில் இருக்கிற ஆணியையைப் புடுங்கறேதேதான் உம்மோட வேலைன்னு எல்லோரும் பேசிக்கிறாங்க, நெசமா? //

        ஏன், ஞானதிருஷ்டி போயிடுச்சா..?

        // பண்ணிங்கதான் நோண்டித் தின்னும், நீர் அறிவாளியானது அப்படித்தானா? //

        முடியல்லைன்னா, வேரோட பிடுங்கி தின்னுங்க தாசு..இதையுமா சொல்லணும்..

        // நீரும், உமது டார்வினோட மூதாதையர்கள் வேண்டுமானால் குரங்குகளாக இருக்கலாம், எம்முடைய மூதாதையர்கள் என்றைக்கும் மனிதர்கள் மட்டுமே!! //

        அப்போ எப்படி அந்த வாலு..?!

        • \\முடியல்லைன்னா, வேரோட பிடுங்கி தின்னுங்க தாசு..இதையுமா சொல்லணும்.\\ வேர், கிழங்கு இது இரண்டும் வேறு வேறு என்று கண்டுபிடித்த அண்ணன், ஞானக் கண்ணன் அம்பி அவர்களுக்கு இந்த ஆண்டின் தாவரவியளுக்கான நோபல் பரிசு onnu பார்சல்………… [என்னது அதுக்கெல்லாம் குடுக்க மாட்டாங்களா…. அப்ப ஆஸ்காரு? அது நடிக்கிறவங்களுக்கு மட்டும்தானா? அப்ப அதையாச்சும் குடுங்க, ஏன்னா அண்ணன் மாதிரி மக்கு யாரும் இல்லைன்னாலும் எல்லாமே தெரிஞ்ச ஏகாம்பரமா என்னமா ஆக்ட் குடுக்குறார், அதுக்காச்சும் குடுங்க.]

          • // அப்ப ஆஸ்காரு? அது நடிக்கிறவங்களுக்கு மட்டும்தானா? //

            பக்கத்து மரத்துக் குரங்குகிட்ட பேசுனா இப்படித்தான் தப்பு தப்பா சொல்லிக் கொடுக்கும்..

            • \\பக்கத்து மரத்துக் குரங்குகிட்ட பேசுனா இப்படித்தான் தப்பு தப்பா சொல்லிக் கொடுக்கும்.\\ அது சரி, எத்தனயோ ஜீவராசிகள் இருக்கும் போது இதுங்கள மட்டும் எப்பவுமே எதுக்கு அண்ணன் நினைச்சுகிட்டே இருக்காரு? அதுங்க என்ன பேசும்னு எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்காரு….? ஒரு வேலை குரங்காட்டி வேலை பண்றாரே என்னமோ யாருக்குத் தெரியும்…..

        • அம்பி,

          மனிதன் தனி படைப்பாக படைக்கப்பட்டான் என மதங்கள் சொல்லுவதெல்லாம் உதார்கள். மனிதன் தான் கண்டுணர்ந்த அறிவுப்படி, படிப்படியாக பரிணாமம் மூலம் மனிதன் உருவாகவேண்டும் என்றுதான் கடவுள் விதித்திருக்கிறார் என்பதுதான் சரி. இல்லையென்றால் ஏராளமான உயிர்கள் உருவாகியிருக்க வேண்டிய அவசியமே இல்லை.

          • சந்தானம்,

            கடவுள் நம்பிக்கை மூடத்தனமானது என்று நான் சொல்லவில்லை.

            கடவுளின் குணாதிசயங்கள் மனிதனால் உலகமுழுவதும் ‘மனிதப் பார்வை’ (anthropic) கொண்டே புரிந்துகொள்ளப் படுகிறது.

            யூத, கிறித்தவ மதங்கள் கடவுள் மனிதனை தன் உருவில் படைத்தான் என்கின்றன;

            இஸ்லாம் கடவுளுக்கு குறிப்பிட்ட உருவம் இருக்கிறதா என்பதற்கு குரானில் ஆதாரம் தேடி விவாதித்துக் கொண்டிருக்கிறது;

            இந்து மதத்திலோ அதன் ஆதாரமான பரம்பொருள் தத்துவத்தை நோக்கி மேலும் முன்னேற சிலர் முயன்றாலும், பெரும்பாலோர் சடங்குகளிலும், வெவ்வேறு கடவுளின் படிமங்களிலும் settle ஆகிவிட்டார்கள். படிமங்கள் (தெய்வங்கள், கடவுளின் அவதாரங்கள், etc) இறைதேடலை பக்தி மூலம் எளிதாக்கும் என்பது இந்துமத மரபு. அது நடக்கிறதா என்ற கேள்வி நியாயமானது.

            பொதுவாக – தேவைகளை நிறைவேற்றும் / இம்மை, மறுமை கஷ்டங்களிலிருந்து விடுவிக்கும் / பாதுகாக்கும் சக்தியாகவே கடவுள் குறைக்கப்பட்டு அவரை ’குஷிப் படுத்த / திருப்திபடுத்த’ சடங்குகள், பிரார்த்தனைகள் , வழிபாடுகள் என்றாகிப் போனதால் தனி மனித, சமூக முயற்சிகளின் அவசியத்தை பெரும்பாலோனோர் உணரமுடிவதில்லை.

            மனிதனுக்காக, எண்ணற்ற உயிரினங்களைப் படைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வது கூட மனிதன் தன்னை கடவுளின் சிறந்த படைப்பாக எண்ணிக் கொள்ளும் anthropic பார்வையால்தான்.. எல்லையற்ற பேராற்றலும், பேரரறிவும் கொண்ட சர்வ வியாபியான கடவுளுக்கு ‘அற்பமான’ மனிதனை தனியாகப் படைக்கவோ, மற்ற உயிர்களை விட முதன்மைப் படுத்தவேண்டிய அவசியமோ இருக்க வேண்டுமா..??!!

          • சந்தானம் மாப்பு, நீதான் இப்ப பதில் சொல்லணும்………..ஏங்க பேச்சையே காணும்? மாப்பு……?? மாப்பு……?? வச்சிட்டான்யா ……….ஆப்பு………??

            • // இறைதேடலை பக்தி மூலம் எளிதாக்கும் என்பது இந்துமத மரபு. அது நடக்கிறதா என்ற கேள்வி நியாயமானது.//

              கடவுளை வணங்குதல் என்பது கூட, ஓர் மனிதன் தன்னைவிட வயது மூத்தவருக்கோ அல்லது தகுதியில் உயர்ந்தவருக்கோ மரியாதை செலுத்தும் நிமித்தம் பெறப்பட்ட அறிவுதான்.

              கடவுள் சம்பந்தமாக ஒரு முஸ்லீம் நண்பரிடம் அளவளாவிக் கொண்டிருந்தபோது அவர் கூறினார், ‘ஒரு காலம் வரும் கடவுள் இருக்கிறார் என்று மனிதர்கள் கூறுவார்கள் ஆனால் மதங்களை பின்பற்றமாட்டார்கள் அதாவது இறைவன் சொன்னதான குரானைப் பின்பற்ற மாட்டார்கள் என்பதாக அவர்கள் வேதப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறினார்’. அவர்களுடைய நபிக்கு தெரிந்திருக்கிறது கடவுள் என்று நாம் கூறிக்கொண்டிருப்பது வெற்று கப்ஸாக்களைத்தான் என்று. இதுதான் உண்மை. மதங்கள் என்பவையெல்லாம் அந்தந்த சமூக கட்டங்களில் இரு வர்க்கங்களுக்கு இடையே இருந்த முரண்பாட்டில் சில சில்லரை சீர்த்திருத்தங்களை கடவுளின் பெயர் கொண்டு செய்தன. அவ்வளவுதான். ஒவ்வொரு மதமும் கூறுவதற்கேற்ப அந்தந்த கடவுளை ஏற்றுக்கொண்டால் மாறாநிலைத் தத்துவத்தில்தான் மூழ்க வேண்டியிருக்கும். மேலும் ஒரு சமூகக் கட்டம் மற்றொரு சமூகக் கட்டத்தின் நீதி, நியாயத்தை மறுத்துவிடுகிறது. இன்றைய முதலாளித்துவ நியாயம் நாளை மாறலாம். எனும்போது மதங்கள் சொல்லும் கடவுளுக்கும் தன்னுடைய கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டியத் தேவை ஏற்படுகிறது. எனவேதான் அந்தந்த மதங்களும் தங்களுடைய வேதங்களை மெய்பிக்க தில்லாலங்கடி வேலைகள் செய்து கொண்டிருக்கின்றன. எனவே, கடவுளை பக்தி கொண்டு தேடுவது, உருவகங்கள் கொடுக்க முயற்சிப்பது அனைத்துமே தன்னை ஒப்பிட்டு, தனது நடத்தையை ஒப்பிட்டு செய்யப்படும் பாவனைகள்தான். அம்பி இறுதியாக ஒரு கேள்வி கேட்டிருக்கிறார் அதற்கென்ன சொல்வது, கடவுள் இருப்பைப் பற்றிய முரணிலிருந்தே நாம் இன்னும் தெளிவடையாதபோது கடவுளின் நோக்கத்தைப் பற்றி அறிந்துவிட முடியுமோ!

              ஆத்திகத்திற்கும், நாத்திகத்திற்கும் பொதுவானது, தேவையாயிருப்பது, விஞ்ஞான அறிவுதான். ஒருவேளை நாளைய விஞ்ஞானம் கடவுளை மெய்பித்தால் ஆத்திகம் வெற்றியடையும். அன்றி அதுவரையிலும் நம்பிக்கை ஒன்றுதான் இருவருக்கும் பொதுவானது.

              • \\ஒருவேளை நாளைய விஞ்ஞானம் கடவுளை மெய்பித்தால் ஆத்திகம் வெற்றியடையும். \\ மாப்பு…………..\\கடவுளை அறிய ஒரு சின்ன லாஜிக்தான் பாஸ். அது ஒரு பானை ஒரு குயவன் அவ்வளவுதான், கடவுள் இருக்கிறார் என்றாகிவிடுகிறது அல்லவா.\\ அப்படின்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட நல்லாத்தேனே பேசிகிட்டு இருந்தே……. இப்போ விஞ்ஞானம் வந்து மெய்ப்பிச்சாத்தான் உண்டுன்னு சொல்லி அந்த லஜிக்குகே ஆப்பு வச்சிட்டியே மாப்பு…….

                • பாஸ்,

                  May 15, 2012 at 10:07 pm பின்னூட்ட எண் 98.1.1.2.2, May 16, 2012 at 3:55 pm பின்னூட்ட எண் 98.1.1.2.2.1.2 ஆகிய இரண்டு பின்னூட்டத்திலும் உள்ள பொம்மைகள் மாறினாலும் நீங்கள் என் பாஸ்தான் என்ற புரிதலுக்கும், நம்பிக்கைக்கும் நான் வருகிறேன் அல்லவா அதுதான் பாஸ் பானை, குயவன் தத்துவம். ஆனால் இதனை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் என்ன செய்வது? வினவிடம் வினவினால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூறிவிடுவார் அல்லவா அதுதான் பாஸ் விஞ்ஞானத்தைப் பயன்படுத்திக் கொள்வது.

  94. \\வினவிடம் வினவினால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூறிவிடுவார் அல்லவா அதுதான் பாஸ் விஞ்ஞானத்தைப் பயன்படுத்திக் கொள்வது.\\

    நீயா பேசியது………… என் அன்பே நீயா பேசியது………..

    \\இப்பிரபஞ்சமும் அதில் உள்ள உயிர்களும் இப்பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டு இயங்குபவைகள். கடவுளோ இப்பிரபஞ்ச விதிக்கு அப்பாற்பட்டவர். நமது ஐம்புலன்களால் இப்பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் பொருள்களைத்தான் உணரமுடியும். இவ்விதிக்குள் அடங்காத கடவுளை காணமுடியாது. \\

  95. \\ஒருவேளை நாளைய விஞ்ஞானம் கடவுளை மெய்பித்தால் ஆத்திகம் வெற்றியடையும். \\

    Finally, science can’t help us with questions about the supernatural. The prefix “super” means “above.” So supernatural means “above (or beyond) the natural.” The toolbox of a scientist contains only the natural laws of the universe; supernatural questions are outside their reach.

    In view of this final point, it’s interesting how many scientists have forgotten their own limitations. Every few years, some scientist will publish a book claiming that he or she has either proven the existence of a god, or proven that no god exists. Of course, even if science could prove anything (which it can’t), it certainly can’t prove this, since by definition a god is a supernatural phenomenon.

    http://www.cod.edu/people/faculty/fancher/limits.htm

    • இந்த உழைப்பாளிங்க தொல்லை தாங்க முடியலைடா சாமி………………

        • சொந்தப் பேருலேயே வரலாமே கொமாரு…………. அது சரி, அப்படி என்ன பெருச்சாளித் தொல்லை உங்களுக்கு?

          • அதுக்கில்ல டோமரு…… கல்லும் மண்ணுமாக் கிடந்த இந்த உலகத்த செதுக்கி உருவாக்கின கோடானுகோடி உழைப்பாளிங்களோட உழைப்பு ஒங்களுக்கு தொல்லையா தெரியும்போது எங்களுக்க்கு பக்திபெருச்சாளிங்க செய்றது தொல்லையா தெரியாதா.

  96. உழைப்பது தவறில்லை. அதில் புத்திசாலித் தனமும் விவேகமும் இருக்க வேண்டும். கழுதை பொதி சுமப்பது போல இருக்கக் கூடாது. கழுதை மூட்டை மூட்டையாக துணிகளைச் சுமக்கும், நாள் பூராவும் உழைக்கும், அந்தத் துணிகளில் ஒன்று கூட தனக்குச் சொந்தமில்லை என்று அதற்க்கு ஒரு போதும் புரியாது. உண்ணுவதர்க்குப் புல் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும், ஆனால் தன்னை பொதி சுமக்க வைப்பவன் புல் கொடுக்காவிட்டால் நான் உணவில்லாமல் செத்து விடுவேன் என்று அந்த கழுதை நினைக்கும். நீங்கள் சொல்லும் உழைப்பாளிகள் கிட்டத் தட்ட எல்லோருமே இந்த ராகம் தான்.

    இயற்கையில் எண்பத்துநான்கு லட்சம் உயிரினங்கள் இருக்கின்றன, அவை யாவும் மென்பொருள் துறையில் பணியாற்றித்தான் உணவு உண்ண வேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லை. ஃ பேக்டரிகளுக்குச் சென்றுதான் பெண்ட்டாடி பிள்ளை குட்டிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவற்றுக்குத் தேவையான உணவு இயற்கையிலேயே படைக்கப் பட்டுள்ளது. அவற்றை உண்டு வாழ்கின்றன. [இதில் சந்தேகம் இருந்தால் ஒரு நாலு நாளைக்கு விடாமல் தொடர்ந்து Animal Planet, NGC தொலைகாட்சி சேனல்களைப் பார்க்கவும்]. இந்த மனிதனுக்கு மட்டும் மென்பொருள் வேலையும், ஃ பேக்டரிகளும் தேவைப் படுகிறது. அதன் விளைவு என்ன? விவசாய நிலங்களை அழித்தீர்கள், ஆறுகளில் விஷத்தைக் கலந்தீர்கள், காற்றை மாசு படுத்தினீர்கள், உண்ணும் உணவையும் விஷமாக்கினீர்கள். காணும் இடமெல்லாம் பிளாஸ்டிக் குப்பைகள். நீங்கள் பண்ணுவது உழைப்பு அல்ல, மனிதனின் ஜீவாதாரத்திற்கு வைக்கும் ஆப்பு. இப்படிப்பட்ட கழுதை உழைப்பு தேவையா?

    அது சரி, கொமாருன்னு பேரு நல்லாத்தானே இருக்கு அப்புறம் எதுக்கு இந்த வடிவேலு? தவளையும் தன் வாயால் கெடும்கிறதுக்கு இப்ப அவன்தான் உதாரணம், அந்த பேரு உமக்கு எதுக்கு?

    • எண்பத்து நாலு லட்சத்துல மனுசனுக்குத்தான்யா ஆறாவது அறிவு உண்டு. அவன் சிந்திக்கறதுனாலதான் இத்தனை விளைவுகளும். நல்லவிளைவும் கெட்ட விளைவும் எல்லாமே அவன் சிந்திக்கறதுனால்த்தான். அதுலயும் நல்லது எது கெட்டது எதுங்கிறது சமூகத்துக்கும் இயற்கைக்கும் ஒத்திசைந்து போற அறிவை அடிப்படையா வச்சுத்தான். சமூக அறிவு என்பது உமக்கு ஒரு பர்சண்ட் கூட இல்லைங்கறது நல்லாத்தெரியுது. இஸ்கூலுக்குப் போயி சூழ்நிலையியல் சமூகவியல் படிச்சிட்டு வாங்க சார்.

      //விவசாய நிலங்களை அழித்தீர்கள், ஆறுகளில் விஷத்தைக் கலந்தீர்கள், காற்றை மாசு படுத்தினீர்கள், உண்ணும் உணவையும் விஷமாக்கினீர்கள். காணும் இடமெல்லாம் பிளாஸ்டிக் குப்பைகள்.//

      இது எல்லாமே பேராசையோட விளைவுகள் அப்பனே… பேராசைகளுக்குத் தூண்டுகோலா இருக்கற இந்த சமூக அமைப்பை மாத்தனுங்கறதுதான் அய்யா எங்க போராட்டமெல்லாம். இங்க இருக்கற எல்லாருக்குமே இயற்கையில எடம் இருக்குதான். எல்லாருக்கும் சாப்பாடு கிடைக்கும்தான். பேராசையில்லாம இந்த இயற்கை வளங்களை எல்லா மனிதர்களும் சமமா பங்கிட்டு வாழறதுதான்யா பொதுவுடமை. நீங்க நெறய புக்ஸ் படிக்கணும் கண்ணு. படிச்சிட்டு வாங்க பேசுவோம்.

      கொமாரும் நல்லாத்தேன் இருக்கு.. டோமரும் நல்லாத்தேன் இருக்கு. எப்படி வேனாலும் வச்சுக்கலாம். அடுத்த வாட்டி சிங்கமுத்துன்னு வரட்டுமா கஞ்சா கருப்பா வரட்டுமா.. பேரில என்ன இருக்கு தங்கம்? சொல்ற வார்த்தைகள் தங்கமா பித்தளையான்னு பாருன்க! வரட்டுமா கொஞ்சம் வழிவிடுங்க வூட்டப் பார்த்துப் போறேன். நீங்களும் வூட்டுலதானே வசிக்கிறீங்க..? அதுசரி!

    • அண்ணன் இப்போதுதான் பறக்கும் தட்டிலிருந்து பூமியில் குதித்திருக்கிறார்.

  97. \\எண்பத்து நாலு லட்சத்துல மனுசனுக்குத்தான்யா ஆறாவது அறிவு உண்டு. \\ ஆறறிவு இருக்கு, அதை வச்சு ஐந்தறிவு உள்ளதை விட நல்லா வாழ்ந்தா பரவாயில்லை, ஆனா உன்னோட கோண புத்தியால் ஐந்தறிவு உள்ளதை விட அதிகம் கஷ்டபடுகிராயே மகனே, அது மட்டுமில்லாம உன்னோட சேர்ந்து சமூகத்தில இருக்கும் மற்றவங்க பொழப்பிலேயும் மண்ணை வாரி போடுறியே மகனே, இது நியாயமா? உங்க கமியூநிஸ்டுங்க கொண்டாந்த தொழிற்சாலையால வந்த வினை.
    \\அவன் சிந்திக்கறதுனாலதான் இத்தனை விளைவுகளும். நல்லவிளைவும் கெட்ட விளைவும் எல்லாமே அவன் சிந்திக்கறதுனால்த்தான்.\\ சிந்திக்காம இருந்த வரைக்கும் எல்லாமே நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு. சிந்திச்சான், தொழிற்ச்சாலையை உருவாக்கினான், கம்யூனிச்டுக வந்தானுங்க, இப்போ பூமியில உயிர்கள் வாழ முடியுமாங்கிற அளவுக்கு கொண்டு போய் விட்டுட்டீங்க. இதுதான் நீங்க சிந்திச்சு கொண்டாந்தது. இது பெருமைப் படத் தக்க விஷயம் அல்ல.

    \\சமூக அறிவு என்பது உமக்கு ஒரு பர்சண்ட் கூட இல்லைங்கறது நல்லாத்தெரியுது. \\ தனி மனிதத் தாக்குதல் தேவையில்லை அன்பரே. இதை விட நல்லா எழுத எனக்கும் தெரியும்.

    \\பேராசையில்லாம இந்த இயற்கை வளங்களை எல்லா மனிதர்களும் சமமா பங்கிட்டு வாழறதுதான்யா பொதுவுடமை. நீங்க நெறய புக்ஸ் படிக்கணும் கண்ணு . படிச்சிட்டு வாங்க பேசுவோம்.\\ நன்றாக பணிபுரிபவன் சோம்பேறி ரெண்டு போரையும் சமமாக நடத்தனும் என்கிற தத்துவம் ஒரு காலாத்துக்கும் உருப்படாது. உழைத்து நான் கண்டது என்ன என்று எல்லா பயலும் போட்டு விட்டு உட்கார்ந்தான், அப்புறம் ரஷ்யா எந்த கதியாச்சுன்னு உனக்கே தெரியும் மகனே.

    \\கொமாரும் நல்லாத்தேன் இருக்கு.. டோமரும் நல்லாத்தேன் இருக்கு. எப்படி வேனாலும் வச்சுக்கலாம்.\\ எல்லாமே நல்லாத்தான் இருக்கும், கமெண்டு ஏதாவது ஒரு பேர்ல போடு, ஒவ்வொரு கமெண்டுக்கும் ஒரு பேர்ல போட்டு ஏன் உன்னையும் மத்தவங்களையும் குழப்ப வேண்டும்?

    \\ சொல்ற வார்த்தைகள் தங்கமா பித்தளையான்னு பாருன்க! \\ தைரியமா ஒரே பேர்ல வா தகரம், மத்தத அப்புறமா பேசுவோம்.

    \\வரட்டுமா கொஞ்சம் வழிவிடுங்க வூட்டப் பார்த்துப் போறேன். \\ உம்மை நான் வழி மரிக்க வில்லை அன்பரே, யாருக்கு நான் பதில் போட அதில் வந்து மூக்கை நுழைத்தது நீர். நீர் உம் வழியில் போகலாம், உம்மிடம் பேச வேண்டும் என்று எங்கும் அளவுக்கு நீர் பெரிய ஈர வெங்காயம் இல்லை.

    • //உங்க கமியூநிஸ்டுங்க கொண்டாந்த தொழிற்சாலையால வந்த வினை.//

      சந்தேகமே இல்லை அண்ணன் மெய்யாலுமே இப்பத்தான் பூலோகத்துக்குள்ள இறங்கியிருக்காரு. அண்ணே நீங்க எந்த கிரகத்துல இருந்து வந்திருக்கீங்க? தெரிஞ்சிக்கலாம்னுதான் கேக்குறேன்.

      • \\அண்ணன் இப்போதுதான் பறக்கும் தட்டிலிருந்து பூமியில் குதித்திருக்கிறார்.\\ நீங்க நிறைய காமிக்ஸ் புத்தகங்களைப் படிபீங்கன்னு நினைக்கிறேன். அது சரி, அதுல போட்டிருப்பதெல்லாம் நிஜம்தான்னு நினைக்கலாமா அன்பரே? அதென்னது பறக்கும் தட்டு, அது இருந்தா எங்கே வேண்டுமானாலும் பறந்து விட முடியுமா? இதுவரைக்கும் வேற்றுகிரக வாசிகள் இருப்பதாக எந்த அறிவியல் பூர்வமான நிரூபணம் இல்லை என்றாலும், என்னமோ நேரில் பார்த்த மாதிரி ஒருத்தன் விடாமா எல்லா பயல்களும் தட்டு மேல எரித்தான் வேற்றுகிரக வாசி வரமுடியும்னு எதை வச்சி ஐயா கண்டுபுடிக்கிறீங்க? ஏன் ஒரு ராக்கெட்டுல வரக்கூடாதா?

        \\அண்ணே நீங்க எந்த கிரகத்துல இருந்து வந்திருக்கீங்க? தெரிஞ்சிக்கலாம்னுதான் கேக்குறேன்.\\ தம்பி என்னை கலாய்ச்சிட்டாராமாம்…….. அப்படின்னு அவரே அவரு முதுகில தட்டிக்கிராறு……… யோவ்……….. போய்யா போயி எதாச்சும் பஸ் ஸ்டாப்புல மொக்கை பிகர் இருந்தா கடலை போட்டு தேத்து……….. நீ இங்க விவாதம் பண்ணவெல்லாம் லாயக்கான ஆளு கிடையாது……..

        • அண்ணன் தக்காளி போல, சட்டுனு பிதுங்கிர்றாரு. ஏண்ணே இந்த கம்மூனிஸ்டுங்கதான் தொழிற்சாலைகளை கொண்டுவந்தாங்கன்னு உங்க ஆறறிவ யூஸ் பண்ணி ஒரு போடு போட்டீங்க பாருங்க அதுக்கு அவார்டுதான் கொடுக்கனும். ஆயிரம்தான் சொல்லுங்க உங்கள மாதிரி அவார்டு வாங்குர ரேஞ்சுக்கெல்லாம் என்னால இங்க வீவாதம் பண்ணமுடியாதுதான்.

          அது என்னண்ணே மொக்கை பிகரு. கடவுள்,வுல்,வுல்னு ஆயிரம் தடவை கூவுற அந்த கடவுள் படைச்ச படைப்ப கேவலப்படுத்துறியே.

    • // சிந்திக்காம இருந்த வரைக்கும் எல்லாமே நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு.///

      கனவான்களே, எல்லோரும் எல்லாத்தையும் அவிழ்த்து போடுங்கப்பா. அப்புறம் பிச்சாவரம், முதுமலைன்னு இடத்தை மாத்திக்குங்க அண்ணன் சொல்றபடி இனிமேல் எல்லோரும் கேர் ஆப் ஃபாரஸ்ட்தன். அண்ணனோட 6 அறிவு ரொம்ப நல்லாவே வேலை செய்து.

    • //சிந்திச்சான், தொழிற்ச்சாலையை உருவாக்கினான், கம்யூனிச்டுக வந்தானுங்க, இப்போ பூமியில உயிர்கள் வாழ முடியுமாங்கிற அளவுக்கு கொண்டு போய் விட்டுட்டீங்க.//

      பூமியில உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு கொண்டுபோய்விட்டது கம்யூனிஸ்டுகள்னு சொல்லி அடிச்சீங்க பாருன்க ஒரு சிக்சர்.. அங்க நிக்கிறீங்கண்ணே நீங்க..!

      //தனி மனிதத் தாக்குதல் தேவையில்லை அன்பரே. இதை விட நல்லா எழுத எனக்கும் தெரியும்.//

      அண்ணே நீங்க திருந்திட்டீங்கன்னு ஒரு வார்த்த கூடச் சொல்லலியேண்ணே!! ஸாரிண்ணே.. உங்க பாணியிலேயே எழுத ட்ரை பண்ணேனா.. அதனால அப்படி ஆயிடுச்சி!

      //நன்றாக பணிபுரிபவன் சோம்பேறி ரெண்டு போரையும் சமமாக நடத்தனும் என்கிற தத்துவம் ஒரு காலாத்துக்கும் உருப்படாது.///

      உழைக்கிறவன் எல்லாவனுக்கும் அவனுக்கான உரிமைகள் சரியாப் போய்ச் சேரணும்ங்கிறதுதாண்ணே நம்ம கொள்கை. பொதுவுடமை வந்தா சோம்பேறியே இருக்க மாட்டானுவ. சோம்பி இருக்கறவன்லான் உழைச்சாகணும். அதான் உண்மை.

      • \\அண்ணே நீங்க திருந்திட்டீங்கன்னு ஒரு வார்த்த கூடச் சொல்லலியேண்ணே!! ஸாரிண்ணே.. உங்க பாணியிலேயே எழுத ட்ரை பண்ணேனா.. அதனால அப்படி ஆயிடுச்சி!\\ சில சமயம் உம்மை போன்ற சில பயல்களை சமாளிக்க வேண்டியிருக்கும் போது, கொஞ்சம் உண்மையையும் சேர்த்து எழுதுவதுண்டு. அது உமக்கு கசக்கும் என்ன செய்ய?

        • அப்போ மிச்சமெல்லாம் பொய்யா..! அல்லாம் டுபாக்கூரா..! போச்சா…

          • உண்மையை மறைப்பதுண்டு, [உங்க மனம் நோகக் கூடாதுன்னு] நிலைமை மீறிப் போனா போட்டு உடைத்து விடுவேன்!!

      • \\பூமியில உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு கொண்டுபோய்விட்டது கம்யூனிஸ்டுகள்னு சொல்லி அடிச்சீங்க பாருன்க ஒரு சிக்சர்.. அங்க நிக்கிறீங்கண்ணே நீங்க..!
        \\ ஆமா, நான் நிர்க்கறேன் இவரு விழுந்துட்டாரு……..

  98. @Jayadeva Das

    Only one thing to say. Communists didn’t bring industrial revolution, the communists just originated 100 years after the industrial revolution and before that peasant revolution against land lords happened but not under the name of communists.

    But neither the land lords or the communists explicitly made a choice to do pollution or not.The workers anyway had no choice but nor did they protest.

  99. @ harikumar

    I agree with you, no arguments. But, on what basis the communists took to Atheism? What is the logic behind this? Everyone should get their basic necessities, that is well taken, to achieve this why should they deny the existence of God?

    • Thats because after a certain point religions became political.Especially In Europe & Arabia and slowly in India also. The religious elite,culture elite,business elite were all together in power and often intermixed and as a result the poor workers whose lives were miserable started rejecting everything that the elite represented,god became a negative entity of the elite and not the workers.

      Moreover religion brought along a set of ill logical beliefs & explanations and Science nullified them.Logic became of extreme importance and anything, Science could not explain became impossible and Science became their god.

      Thats it,what more.

      Obviously they couldn’t reject the negatives of Science,like pollution,hazardous substances and the biggest thing is,their survival and support depends upon worker’s rights in cities as in villages,lifestyle is pretty much the same.

      In essence,they fought everything that the elite connected to,regardless of whether it is right or wrong.

      • தலைவா………..
        வாழ்த்துக்கள். ஐநூறாவது பின்னூட்டம் நீங்கதான்.

        பை தி வே, முன்னூறை நெருக்கி பின்னூட்டம் அடிச்சிக்கிட்டிருக்கும் ஜெயதேவ் அண்ணன் விரைவில் தனித்தே ஐநூறைத் தொட்டுவிடுவார் என்பதை சர்வநிச்சயமாய் நம்பலாம்!!!!!!

      • @ harikumar

        Exploitation in the name of religion is definitely not acceptable. But denying religion totally is also equally not good, just like burning a house is not a solution to moottai poochchi’s living in our beds.

        You say religion is illogical, but science is also not logical in all respects. For Eg., Science says energy can neither be created, nor destroyed, it never explained the origin of energy that exists in this Universe. In addition 96% of the energy that exists is totally unknown to the modern science as to what it is. Moreover modern science never explains what is the origin of natural laws. Whatever laws they make also not totally explained, they start from some point which they call as hypothesis which needs no proof. In what sense do they claim, “it is Scientific” and “Scientifically proven”, etc.,? I would say all these are nothing more than a misnomer.

        As a human being, we search for the answers to all these questions. We look for a cause and purpose behind this creation. What is wrong with it?

        • I am a theist and a firm believer of god.I am not saying religion is illogical,it doesn’t explain properly why certain rituals happen and even if the meanings existed,people have long forgotten it or those seem to be deemed as useless.

          I personally feel religions are very important for humans as every man gets many moments in life where he feels like dying and it is religion that keeps him sane.

  100. \\பிச்சாவரம், முதுமலைன்னு இடத்தை மாத்திக்குங்க அண்ணன் சொல்றபடி இனிமேல் எல்லோரும் கேர் ஆப் ஃபாரஸ்ட்\\ C/o Forest -ல் அம்மணமாகத் திரியும் ஜந்து உன்னை விட நாகரீகமாக வாழ்கிறது. உன்னை விட சவுகரியமாக வாழ்கிறது. ஆறறிவு படைத்து, பள்ளிக்குச் சென்று படித்த உனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு மீதத்தை விட்டு விடாமல் உன் மகன், பேரன், கொள்ளு எள்ளு பேரன் என்று கொள்ளையடித்தாயே அதன் விளைவாக நீ வாழும் நாட்டில் பஞ்சமும் பட்டினியும் தாண்டவமாடியது தான் மிச்சம். மிருகங்களை விட நீ எந்த விதத்தில் உயர்ந்துவிடாய்? அதை விட கேவலமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறாய்.

    • வாங்க ராசா. அதைத்தான் ராசா நானுஞ் சொல்றேன். அவனவன் உழைச்சு தேவையானத எடுத்துக்கிட்டா போதும். கொள்ளையடிக்கிறவன் சங்கறுக்கணும். ஒண்ணு சேர வர்றீகளா??

      • அண்ணன் ரொம்ப குழம்பி போயிருக்காரு. கேப்பிடலிஸ்டுங்கள நோக்கி கேக்க வேண்டியதையெல்லாம் கம்மூனிஸ்டுங்கள பாத்து கேக்குறாரே?

        //ஒண்ணு சேர வர்றீகளா??//

        அண்ணன் சரண்டர் ஆயிருவாருன்னா நினைக்கிறீங்க?

      • அதுக்கு நீங்க காக்கி சட்டை டவுசருதான் போடுவேன், நட்டு போல்டுதான் டைட் பண்ணுவேன் என்பதை விட்டு விட்டு விவசாயம் போல மற்ற தொழிலுக்கு மாற வேண்டும், முடியுமா?

        • போ அண்ணே போய் சமூக வளர்ச்சியைப் பற்றிய பாடத்த படிச்சிட்டு வா அண்ணே, பொறவு விவாதிக்கலாம்.

          • அதுசரி, இந்த தம்பி எதுக்கு இப்படி அவஸ்தை படுதுன்னே தெரியலையே??!! தம்பி நீ எத்தனை முறை பெயரை மாற்றினாலும் உன்னுடைய கூமுட்டைத் தனம் அப்பட்டமாகத் தெரிகிறது. லூசு மாதிரி உளறுவதை எப்போது நிறுத்தப் போகிறாய்?

              • நீர் சொல்வது எப்படி இருக்குன்னா, தினமும் நாலு லிட்டர் டாஸ்மாக் சரக்கை உள்ளே தள்ளி இரைப்பை கெட்டு சீக்காளியான ஒருத்தன் பள்ளிக் கூடத்துக்கு படிக்கப் போகாதே என்று இன்னொருத்தனுக்கு அட்வைஸ் செய்து விட்டு, அதை உன் நல்லதுக்குத்தான் சொன்னேன் என்பது போல இருக்கு.

        • நான் கலப்பையத் தூக்கப் போறேன் தாஸு. எந்தம்பியை தெலா எறைக்கச் சொல்லப் போறேன். ஊர் மக்கள ஒன்னு திரட்டி கையாலயே கிணறு வெட்டப் போறேன். உங்க சொல்படியே மாறிடறேன். (ஆமா.. நான் இருக்கறது 21ம் நூற்றாண்டா… 18ஆ!!!

          • \\நான் கலப்பையத் தூக்கப் போறேன் தாஸு. எந்தம்பியை தெலா எறைக்கச் சொல்லப் போறேன். ஊர் மக்கள ஒன்னு திரட்டி கையாலயே கிணறு வெட்டப் போறேன். உங்க சொல்படியே மாறிடறேன்.\\ ஏன் விவசாயம் பண்றவங்க இப்படித்தான் செய்யுறாங்களா? சரி அப்படி செய்தாதான் என்ன தப்பு? உங்கள் பெட்ரோலும் நிலக்கரியும் இன்னும் ஆயிரம் வருஷத்துக்கா வரும்? இன்னும் இருபது வருடத்தில் தீர்ந்து போகும்? அப்போ என்ன பண்ணுவீங்க? ஃ பேக்டரி, நட்டு போல்டு, காக்கி சட்டை- டவுசர், சிவப்புக் கொடி, கோஷம் போராட்டம் இதைத் தவிர வேறே எதுவுமு உங்களுக்கு சிந்திக்க தெரியாதா?

  101. As a matter of fact, God is man power…you can see that in all the hindu stories, no girl was born to Gods…only male children..for example Ganesha, Murugan etc. Ayyappa was born as a combination of Siva and Vishnu…in male combination also no female child was born…that is why I told that workship and truth is God..
    I am working in USA…it is 19.15 Hrs 11th June, here when in Inida it is 5am 12th June..India is forward in all respects..
    Indians are very hard workers..so we are getting good opportunity here…here americans are going to church every sunday..they are celebrating only Christmas and New Year…whereas in India we are celbrating more festivals..i Tamilnadu
    especially in Madurai every month a festival…we are spending more on festivals…
    Whether we blieve in God or not we should be away from Sanyasis who are telling that thy are Godmen…
    Jayendra Saraswathi and his deputy went to Prison on charge of murder of temple worker…
    Nithyananda went to Jail for molesting an actress and other women…
    Believing is different than blindly believing…

    • \\As a matter of fact, God is man power…\\ அதென்னது man power மட்டும், அப்போ யானை பவர், திமிங்கலம் பவர் எல்லாம் கணக்கிலேயே இல்லியா?
      \\you can see that in all the hindu stories, no girl was born to Gods…\\ பிரம்மாவோட மகள் சரஸ்வதின்னு சொல்றாங்களே?

      \\Ayyappa was born as a combination of Siva and Vishnu…in male combination also no female child was born…\\ இப்படி ஒரு கதை எந்த புராணத்திலும் சொல்லப் படவில்லை. இது கேரளாக்காரன் தமிழனையும் மற்ற இந்தியர்களையும் ஏமாற்ற திரித்த கதை. பித்தலாட்டம் செய்வதில் இவனுங்களும் ரஞ்சிதானதாவும் ஒரே ரகம்தான். இதை நீரும் நம்பிவிட்டீர். இப்படி ஏமாளியாக இருந்தால் போலிச்சாமியார்கள் தான் உங்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள். ஏமாந்து விட்டு அவர்களை ஏமாற்றினார்கள் என்று குற்றம் சுமத்துவது ஏன்?

      \\that is why I told that workship and truth is God..\\ கடவுளுக்கு பொம்பிளை பிள்ளை பொறக்க வில்லையாம், அதனால workship -ம் truth ம் கடவுளாம். இது என்ன லஜிக்குன்னே புரியலை.

      \\I am working in USA…it is 19.15 Hrs 11th June, here when in Inida it is 5am 12th June..India is forward in all respects..\\ ஐயா ஜப்பன்லதான் முதலில் சூரியன் உதிக்குதுன்னு மனுஷனா பாத்து வச்சிகிட்டது தான். காஸ்மிக் டாஸ்டுல இருந்து பருப்பொருள் சேர்ந்து பூமியாகி சுத்த ஆரம்பிச்ச பின்னாடி முதலில் எங்கே உதிச்சதுன்னு யாருக்கு தெரியும் ?

      \\Indians are very hard workers..so we are getting good opportunity here…\\ நீங்க அங்க போய் நல்லா கழுதை போல உழைக்கிரீன்கலாம், ஆனாலும் ஒரு சராசரி அமெரிக்கனுக்கு கொடுப்பதை விட 8 -ல் ஒரு பங்கு சம்பளமே உங்களுக்கு கொடுக்கப் படுகிறதாம் ஆனாலும் இந்தியாவின் தரித்திரத்துக்கு இது எவ்வளவோ மேல் என்று இன்னும் பொதியை ஏற்றுங்கள் என்று கழுதை போல சுமக்கிறீர்களாம் அப்படின்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி ஏதோ ஒரு பிளக்குல படிச்சேன், நெசம்தானுங்களா?

  102. \\Whether we blieve in God or not we should be away from Sanyasis who are telling that thy are Godmen…
    Jayendra Saraswathi and his deputy went to Prison on charge of murder of temple worker…
    Nithyananda went to Jail for molesting an actress and other women…
    Believing is different than blindly believing…\\ போலிகள் எல்லா இடத்திலும் இருக்காங்க. நாட்டில் மக்களைக் காக்க மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் நம்பர் ஒன் திருடர்களாகி விட்டார்கள். சட்டத்தை பாதுகாக்க வேண்டிய போலிஸ் காரன் தான் மனித உரிமை மீறுவதில் முதலிடத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கில் எல்லாவற்றிலும் தள்ள வேண்டியதை தள்ளா விட்டால் வேலை நடக்காது என்ற நிலை. பொது மக்களாகிய நாமும் இவை எல்லாவற்றையும் பார்த்துவிட்டு எருமை மாட்டு மேல் மழை பேஞ்சா மாதிரி இருந்து விட்டு ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு பிரியாணி பொட்டலமும் கொடுத்தால் போதும் கழுதைக்கும் ஓட்டு போடுகிறோம் என்ற நிலையில் இருக்கிறோம். ஆக மொத்தத்தில் எல்லோரும் அயோக்கியர்களே. இப்படிப் பட்ட நாட்டில் சாமியார்களை மட்டும் Ideal ஆக எல்லா விதி முறைகளையும் பின்பற்றுபவர்கலாக இருக்கவேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். சொல்லப் போனால், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் [காவல் துறையினர் உட்பட] சட்டப் படி சத்திய பிரமாணம் எடுத்து கொண்டு பதவி ஏற்று எல்லா அயோக்கியத் தனமும் செய்கிறார்கள். இதை நார்மல் என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டு விட்டோம். ஆனால் இந்தமாதிரி எந்த விதமான சத்திய பிரமாணமும் சட்டப் படி எடுத்து கொள்ளாத சாமியார்களிடம் அத்தனை நேர்மையையும் எதிர் பார்க்கிறோம். இது வேடிக்கையிலும் வேடிக்கை. இந்த மாதிரி நெறி தவறியவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வதை விடுத்து நேர் வழியில் வழி நடத்தும் ஆன்மீக அன்பர்கள் நிச்சயம் இருப்பார்கள், அவர்கள் வழிகாட்டுதலின் படி நடந்தால் நிச்சயம் வாழ்வு வெற்றி பெரும்.

    • சாமியார்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. நேர்வழியில் வழி நடத்தும் ஆன்மீக அன்பர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று ஊகமாகத்தான் உங்களால் சொல்ல முடிகிறது. அவர்கள் யாரென்று அடையாளம் காட்ட முடியாத அவலத்தை புரிந்து கொள்ள முடிகிறது. நேர்மை ஆன்மீகவாதிகள் இல்லாத யதார்த்தத்தில் அவர்களின் வழிகாட்டுதல் படி நடந்தால் நிச்சயம் என்று போகாத ஊருக்கு வழி காட்டும் துன்பத்தையும் புரிந்து கொள்ளமுடிகிறது. இத்தகை துன்பத்தில் தொடர்ந்து தாங்கள் சஞ்சரிக்கும் மர்மம் என்ன? மீண்டும் அழைக்கிறோம். நேரில் வாருங்கள், விடுதலைக்கான வழியை அறியுங்கள், வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளுங்கள்.

    • பாஸ்,
      உங்களிடம் ஒரு சின்ன விண்ணப்பம். திககாரனிடம் விவாதிக்கும் முறை கம்யூனிஸ்டுகளிடம் எடுபடாது. இருவரும் நாத்திகர்களேயானாலும் இருவருக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. திகவினரிடம் தனிப்பட்ட பொருளாதாரத் திட்டம் எதுவுமில்லை நிலவும் அமைப்பு முறையை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளிடம் மாற்றூ பொருளாதாரத் திட்டம் உள்ளது. இவர்கள் நிலவும் அமைப்பு முறையை விமர்சிப்பது மட்டுமல்லாமல் சமூக மாற்றத்தைக் கோரி இயங்குபவர்கள். இவர்களிடம் இவர்களுக்குத் தகுந்தார் போல்தான் விவாதிக்க வேண்டும்.

      • எங்களைப் பொறுத்தவரை இறைவன் இல்லை என்று சொல்பவர்கள் அத்தனை பேருமே ஆன்மாவைக் கொலை செய்பவர்களே. ஒரு லிட்டர் தண்ணீரிலேயே உலகின் மக்கள் தொகை அளவுக்கு நுண்ணுயிர்கள் இருக்கிறது என்று அறிவியல் சொல்கிறது. அப்படியானால் எத்தனையோ கோடான கோடி…..கோடி…..கோடி….. உயிர்களில் ஒரு வாய்ப்புதான் மனிதனாகப் பிறப்பது. இறைவன் என்பவன் உள்ளானா, இருந்தான் அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு, படைப்பின் நோக்கமென்ன இதையெல்லாம் அறிந்து நடப்பதற்கு மனிதனால் மட்டுமே முடியும். இப்படி பட்ட அறிய வாய்ப்பைத் தவற விடுவது மாதிரி துரதிர்ஷ்டம் வேறெதுவுமே இல்லை. உங்களுக்கு புரியும் படி சொன்னால் தொலைக்காட்சியில் ஒரு கோடி ரூபாய் நிகழ்ச்சிக்கு ஆறு கோடி பேரில் ஒருத்தரா தேர்ந்தெடுக்கப் பட்டு, அங்கே போயி அந்த கேள்விக்கு பதில் சொல்லி ஹாட் சீட்டைப் புடிச்சு, வெளையாட உட்கார்ந்து பரிசுப் பணம் எதுவுமே இல்லாமல் வெறும் ௦ வோடு திரும்ப வருவதர்க்குச் சமம். இது வெறும் பணம், ஆனால் மனிதனின் இந்த வாய்ப்பை இழந்தால் அடுத்து இந்த வாய்ப்பு எப்போது கிடைக்குமோ யாருக்குத் தெரியும்? அந்த மாதிரி இழப்பை எற்ப்படுத்து நாத்தீகார்கள் எல்லோருமே எண்கள் கணக்கில் ஒன்றே தான். உங்கள் ஓட்டை கொள்கைகள் ரஷ்யாவில் எடுபடவில்லை, அவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் சரிந்தது, இன்றைக்கு சீனாவிலும், கம்யூனிசக் கொள்கைகள் கடை பிடிக்கப் படுவதில்லை, முதலாளித் துவம் பக்கம் சாய்ந்து விட்டனர், மேலும் அங்கே தொழிலாளர்களுக்கு நடக்கும் கொடுமைகள் உங்களுக்கே தெரியும். இந்தியாவிலும் உங்களால் உருப்படியாக எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை. உங்கள் ஓட்டைக் கொள்கைகளைப் பரப்புங்கள், அதற்க்கு ஏன் இறை நம்பிக்கை மேல் மண்ணை வாரிப் போடுகிறீர்கள் என்பது தான் ஏன் கேள்வி?

        • //படைப்பின் நோக்கமென்ன இதையெல்லாம் அறிந்து நடப்பதற்கு மனிதனால் மட்டுமே முடியும்.//

          சீனு இதெ பதிவுல ஒரு பின்னூட்டத்துல சொல்லிருக்காரு. சில கல்ட்டுகள் இப்படிச்சொல்லித்தான் நிறைய பேரை கூட்டங்கூட்டமா தற்கொலை பண்ணிக்க வச்சானுகன்னு. முதல்ல கடவுள் பேர்ல இருக்கற அத்தனை மூடநம்பிக்கை மடத்தனங்களை வேரறுப்போம். அப்ப தூய கடவுள் மட்டுமே மிச்சமிருந்தார்னா பார்ப்போம் ஏத்துக்கறதப் பத்தி.

          • பத்தாம் கிளாஸ் பெயில் ஆகிப் போனதுக்கெல்லாம் கூட தற்கொலை செய்து கொள்ளும் சில மாணவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். இவர்கள் மெண்டலி வீக் ஆகா உள்ளவர்கள். இந்த மாதிரி இருப்பவர்களை மற்றவர்கள் தங்களது தவறான போதனைகள் மூலம் தங்கள் இஷ்டப் படி நடக்கச் செய்துவிட முடியும். உடல் பலமில்லாதவனை எப்படி பலசாலியான ஒருத்தன் வீழ்த்தி விடுகிறானோ அதே போல மனோ பலம் இல்லாதவனும் மற்றவர்களால் ஏமாற்றப் படுவான். “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு” என்ற வள்ளுவன் வாக்குப் படி இருப்பவர்களுக்கு இந்த மாதிரி நடக்காது, மனதிலும் உறுதியோட இருக்க வேண்டும்.

  103. \\சாமியார்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி.\\ தயவு செய்து நான் சொல்வதை திரித்து உங்கள் எண்ணங்களைத் திணித்து அதை நான் சொன்னதாகச் சொல்ல வேண்டாம். திருடன் என்பவனுக்கு நியாயம் தர்மம் என்று எதுவும் கிடையாது, அவன் பணம் சம்பாதிக்க எந்த வேஷத்தையும் கையிலேடுப்பான், அது அரசியலாகவும் இருக்கலாம் அல்லது பஸ் பயணிகளிடம் பிளேடு போடுவதாகவும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் காசு சேர்க்கலாம் என்று திரியும் வர்க்கம் சாமியார் தொழிலை மட்டும் விட்டு வைக்குமா என்ன? நீங்கள் அந்த மாதிரி போலிகளிடம் போய் ஏமாறாதீர்கள் என்று தான் சொன்னேன், ஆன்மீக வாதிகளில் நல்ல வழியில் நடந்து மற்றவர்களையும் வழி நடத்துபவர்கள் இருப்பார்கள் அவர்களை கண்டுபிடித்து பின் பற்றுங்கள் என்று தான் சொல்கிறேன்.

  104. \\நேர்வழியில் வழி நடத்தும் ஆன்மீக அன்பர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று ஊகமாகத்தான் உங்களால் சொல்ல முடிகிறது. அவர்கள் யாரென்று அடையாளம் காட்ட முடியாத அவலத்தை புரிந்து கொள்ள முடிகிறது. நேர்மை ஆன்மீகவாதிகள் இல்லாத யதார்த்தத்தில் அவர்களின் வழிகாட்டுதல் படி நடந்தால் நிச்சயம் என்று போகாத ஊருக்கு வழி காட்டும் துன்பத்தையும் புரிந்து கொள்ளமுடிகிறது.\\ கடவுள் என்று ஒருத்தன் இருக்கவே மாட்டான். உண்மையான ஆன்மீக வாதி யாருமே இல்லை என்பதெல்லாம் இப்படித்தான் உங்கள் மனது எப்போதுமே செயல் படுகிறது, இது உங்களது நப்பாசை, அந்த மாதிரி எப்போ கடல் வைத்தும் கருவாடு தின்னலாம் என்ற ஒரு வேண்டாத எண்ணம் உங்களது வர்க்கத்தினர் எல்லோர் மனதிலும் எதனால் வேர் பிடித்து வளர்ந்து ஆலமரமாக நிற்கிறது என்பது ஒரு புரியாத புதிர். என்னால் யார் உண்மையான ஆன்மீக வாதி என்று காட்ட முடியும். ஆனால், இறைவன் என்று ஒருத்தன் இருக்க முடியாது என்று கூறும் உங்களையும் வேறு வேறு பெயர்களில் Comment-களைப் போடும் உங்கள் அடியாட்களிடம் அதை நிரூபியுங்கள் என்று பல விதங்களில் கெட்டுப் பார்த்து விட்டேன், ஒருத்தரும் அதற்க்கு பதிலே தரவில்லை. இறைவன் இருக்கிறான் என்பதை எத்தனையோ லாஜிக்கலாக விளக்கி கூறியும் அதையும் உங்களால் ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. இப்படி அடிப்படையையே இதுவரையிலும் ஏற்க மனமில்லாத உங்களிடம் அதற்க்கு அடுத்த படிக்குச் செல்ல எனக்கு விருப்பமில்லை. மேலும், அவ்வாறு நான் ஆன்மீக வாதிகளைப் பற்றி கூறினால் நான் மதப் பிரச்சாரம் செய்வதைக் குற்றம் சுமத்துவீர்கள், அது மட்டுமல்ல என்னையே இந்த பாடு படுத்தி எப்போது இறை கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கபோட்டுக் கொண்டு அலையும் உமது ஓநாய்கள் அவர்களை சும்மாவா விடுவார்கள், பெயரைச் சொன்ன அடுத்த கணமே குதறித் தள்ளி விட மாட்டார்களா? நல்லவர்களை தூற்றுவது பெரும் பாவம், அதில் உங்களில் யாரையும் தள்ளிவிட எனக்கு விருப்பமில்லை.

  105. \\ இத்தகை துன்பத்தில் தொடர்ந்து தாங்கள் சஞ்சரிக்கும் மர்மம் என்ன? மீண்டும் அழைக்கிறோம். நேரில் வாருங்கள், விடுதலைக்கான வழியை அறியுங்கள், வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளுங்கள்.\\ நான் இறை நம்பிக்கையாளன், வாழ்வில் அர்த்தம் உள்ளது, நோக்கம் உள்ளது என்று நம்புபவன். செத்த பின் எதுவுமே இல்லாத சூன்யம் என்று கூறிக் கொண்டு அரிதிலும் அரிய வாய்ப்பான இந்த மனிதப் பிறப்பை ஒன்றுமே இல்லாமல் வீணடிப்பது நீங்கள்தான். உங்களுக்கு நல்லா சிந்தனையைத் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

    • My dear Das Anna,
      I am really happy to note that you believe in God and want to live on the present.Great…but what is the solution you r going to give the present autrocities done by bogus Godmen…are u not aginst them…
      I am actively participating in all he religeous function held in USA …we have Andhra Samaj here and we respect the belief of others who build temples here and worship..that is not our concern…the question is whether God is there or not ?
      It is a belief…You can see the Rose but you cannot see the rose smell…you can see the Agrbathi but you cannot see the fragrance..Like that God is also not visible…But the question what is the solution for eradicating Bogus Godmen…?

      • \\but what is the solution you r going to give the present autrocities done by bogus Godmen…are u not aginst them…\\ ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவனும் இருந்து கொண்டுதான் இருப்பான். பத்தாயிரம் பணம் கட்டினால் ஒரே மாதத்தில் மூன்றரை லட்சம் விலையுள்ள காரைத் தருவோம் என்று சொன்னால் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் கூட்டம் இங்கு உள்ளது. இதில் நீதிபதிகள், காவல் துறையினரும் கூட அடக்கம். இவர்கள் அறியாமையிலா இருக்கிறார்கள்? இல்லை பேராசையில் உள்ளனர் அது அவர்கள் கண்களை மறைக்கிறது. சாமியார்களிடம் போகும் கூட்டமும் இதே வகையினரே. எனக்கு நாத்தீகர்களை விட, இந்தப் போலிகள் மீதுதான் அதிக துவே ஷம் /கோபம் எல்லாமும்.

        • \\the question is whether God is there or not ?\\இந்தப் பதவில் ஏன் பின்னூட்டங்கள் அனைத்தும் படிக்கவும். அதற்க்கப்புறம் கடவுள் இல்லை என்று நீங்கள் நினைத்தால் எதை வைத்து என்று தெரிவிக்கவும்.

        • //சாமியார்களிடம் போகும் கூட்டமும் இதே வகையினரே. எனக்கு நாத்தீகர்களை விட, இந்தப் போலிகள் மீதுதான் அதிக துவே ஷம் /கோபம் எல்லாமும்.
          //

          அப்பாடி! ரொம்ப சந்தோஷம் தாஸு. அந்த துவேசத்தையும் கோபத்தையும் பெருக்கி போலிகளை ஒழித்துக் கட்டுவோம் வாங்க. ‘உண்மையான’ ஆத்திகனுக்குக் கூட கம்யூனிச நாத்திகனாலதான் உதவி செய்ய முடியும். நாத்திகன் இப்படிப் பேசினாத்தான் ‘நல்ல’ ஆத்திகன் தன்னை மேலும் மெருகேத்திக்க முடியும்.

          உடனே கருணாநிதியவும் வீரமணியவும் காமிப்பீங்க. அங்க சரிபண்ணிட்டு வான்னு. நோ ப்ராப்ளம் தாஸு. அவனுகள்ளாம் மக்கள்ட்ட அம்பலப்பட்டு பல வருஷமாச்சு. அவனுகளுக்கு மாற்று கொண்டுவரணும். அந்தப் பீ தின்னிப் பயலுகளையெல்லாம் விரட்டியடிக்க விளக்கமாறு கொண்டு வரணும். ‘நல்ல’ ஆத்திகனும் நாத்திகனும் சேருரதுல தப்பொன்னும் இல்லியே…!!

          • \\உடனே கருணாநிதியவும் வீரமணியவும் காமிப்பீங்க. அங்க சரிபண்ணிட்டு வான்னு.\\ நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆத்தீகர்களுக்கு எதிரிகள் என்ற ஒரே காரணத்துக்காக இவர்களை நான் எதிர்க்க வில்லை. இவர்கள் அப்பாவிப் பொது மக்களுக்கே எதிரிகள், அதிலும் மஞ்சள் துண்டு மாதிரி விஷம் வேறெவரும் தமிழக அரசியலிலேயே இல்லை. இருந்தும், முட்டாள் தமிழர்கள் இவரை ஆதரித்து தங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டுள்ளார்கள். 1.76 லட்சம் கோடி, அவ்வளவு எளிய பணம் இல்லை. மேலும் மஞ்சள் துண்டின் கறுப்புப் பணம் குறைந்த பட்சம் 30,000 கோடி என்கிறார்கள். இதை சம்பாரிக்க நம் மாநிலத்தை எந்தெந்த வழிகளில் இவர் காட்டிக் கொடுத்திருப்பார்? அதன் விளைவால் மக்களுக்கு இன்னும் என்னென்ன இன்னல்கள் வரும்? மற்ற மூன்று தென் மாநிலங்களும் பள்ளியிலேயே ஹிந்தி பாடங்களை வைத்திருக்கும் பொது இவனுங்க மட்டும் ஹிந்தி எதிர்ப்பு என்று நம் மக்கள் பிழைப்பில் மண்ணை வாரிப் போட்டது, தன்னை வழக்குகளில் இருந்து காத்துக் கொள்ள கர்நாடகத்தை இரண்டு அணைகளை சட்ட விரோதமாக கட்ட வைத்து நம் விவசாயிகள் அடி வயிற்றில் அடித்தது, நில அபகரிப்புகள், மணல் கொள்ளை, சாராய வியாபாரம் என்று அத்தனையும் தன்னுடைய ஒரு குடும்பம் பிழைக்கச் செய்த சீமான் இவர். சாராயத்தை குடிக்கும் இன்றைய இலக்னான் நாளை எந்த கதியில் இருப்பான், அவன் கையில் தானே வருங்காலம் இருக்கும், அப்போ நம் மாநிலத்தின் கதி? வயதுக்கேற்ற புத்தி இல்லாத அல்பம். இது போகும் பொது கொள்ளையடித்த பணத்தை எடுத்துக் கொண்டா போகப் போகிறது? அனாலும் இது செய்த தில்லாலங்கடி வேலைகளால் காலா காலத்துக்கும் ஏன் துன்பத்தில் உழல்கிறோம் என்று காரணம் தெரியாமலேயே வாடப் போவது நம் மக்கள் தானே? இதை எல்லாம் எண்ணும் பொது மனம் வெந்து சாகிறது. முட்டாள்களாக இருக்கலாம், ஆனால் தமிழனைப் போல முட்டாள்கள் வேறெங்கும் இல்லை. இதே கருணாநிதி ஒரு நல்ல ஆட்சியைக் கொடுத்திருந்தால், அவரது நாத்தீகம் ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. நீத்தீகன், பெரியார் தொண்டன் என்று சொல்லி விட்டு சாராயத்தை வித்த கொள்கைப் பிடிப்பாலன், வாயைத் திறந்தால் பொய், பித்தலாட்டம், செய்வது அத்தனையும் அயோக்கியத் தனம், தெரிந்ததெல்லாம் பணம் பணம் பணம் பணம் அப்போ மக்கள்? பொணம்..பொணம்….பொணம்…….

      • \\It is a belief…You can see the Rose but you cannot see the rose smell…you can see the Agrbathi but you cannot see the fragrance..Like that God is also not visible .\\ ஒரு கார் ரிபேர் ஆயிடுச்சுன்னு வச்சுக்குவோம், நாமும் பானட் ஐத் திறந்து பார்ப்போம் ஒன்னும் விளங்காது, அதே சமயம் ஒரு கார் மெக்கானிக்கும் பார்ப்பான். டக்குனு புரிச்சுக்குவான், எதையோ செய்வான் கார் ஓடும்!! ஆனாலும் கண்ணு ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி தானே இருக்கு!! வேறென்ன வித்தியாசம்? அவனுக்கு பார்க்கத் தெரியுது, நமக்கு பார்க்கத் தெரியவில்லை. இறைவனையும் பார்ப்பதற்கு இதே மாதிரி டிரெயினிங் எடுத்தவனால் நிச்சயம் பார்க்க முடியும்.

    • செத்த பிறகு எதுவுமே இல்லைன்னு சொல்ல முடியாதுதான். எனக்கும் அதில உடன்பாடு உண்டு. ஜீன் டிஎன்ஏ வழியே தகவல்கள் தலைமுறை தலைமுறையா கடத்தப்படுறதுங்கிறது அறிவியல். பிரபஞ்சவாழ் மனிதர்களோட அறிவு என்பது பல தலைமுறைக்கு கடத்தப்பட்டு கிடைச்சிக்கிட்டிருகிற Collective knowledge தான். முறையான சமூக பொருளியல் அமைப்பை ஃபார்ம் பண்ணி அதோட சேர்த்து இந்த ஆராய்ச்சிகளையும் தொடரலாம். தடையொன்னுமில்லை.

      • \\செத்த பிறகு எதுவுமே இல்லைன்னு சொல்ல முடியாதுதான். எனக்கும் அதில உடன்பாடு உண்டு. ஜீன் டிஎன்ஏ வழியே தகவல்கள் தலைமுறை தலைமுறையா கடத்தப்படுறதுங்கிறது அறிவியல். பிரபஞ்சவாழ் மனிதர்களோட அறிவு என்பது பல தலைமுறைக்கு கடத்தப்பட்டு கிடைச்சிக்கிட்டிருகிற Collective knowledge தான்.\\ அய்யய்யோ இது ஒரு பெரிய Subject ஆச்சே…..!! இத உங்களுக்கு புரிய வைக்கிறது…….. இப்பவே கண்ணை கட்டுதே.

        உயிர் என்பது வெறும் கெமிக்கல்கள் மட்டுமல்ல ஐயா……… ஒவ்வொரு கணமும் நம் உடலில் உள்ள கெமிக்கல்கள் வெளியிருவதும், புதிக்கப் படுவதாகவும் மாறிக் கொண்டே இருக்கிறது . ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கும் நம் உடலில் உள்ள பொருட்கள் நூறு சதவிகிதம் மாறிப் போயிருக்கும். அப்படியானால் நாமும் வாழ்வில் பதினைந்து முறை வேறு வேறு ஆளாக ஆயிருக்க வேண்டுமே. ஆனாலும் சாகும் வரை அதே ஆளாகத்தானே இருக்கிறோம்? இத்தனை மாற்றங்களிலும் மாறாமல் நம்மில் ஏதோ ஒன்று இருக்கிறதே, அது நாம் செத்த பின்னரும் மாறாது என்று ஆன்மீக வாதிகள் சொல்கிறோம். நீங்கள் சொல்லும் ABCDNA இல்லை.

  106. Das Anna,
    When you say that Goddess Saraswathi is daughter of Brahma..you have no knowledge of Hindu Puranas…Just as Lakshmi is the wife o Lord Vishnu, so also Goddess Saraswati is wife of Brama…
    What is the proof you are having to say that Lord Ayyappa’s story is a fictious one, when u believe in God why cannot you believe in Ayyappa…why u r taking double stand…Why canno visit Vinavu office and hear their story ?
    Active partiipation is required to chang the presen trend of life of our countrymen, especially the current Political Systme must be changed, as you rightly said that the people of India are donkey and simply voting every 5 years by taking money and biiyani…What is your plan?

    • பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவியர்கள் மொத்தம் 16,108 பேர், ஒவ்வொருவருக்கும் பத்து மகன்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். ஆக மகள்களின் எண்ணிக்கை 16,108 . [Source: Srimad Bhagavatam] பிரம்மாவின் மகள்தான் சரஸ்வதி என்றும் சில ஆதாரங்கள் உள்ளன.

    • \\What is the proof you are having to say that Lord Ayyappa’s story is a fictious one, when u believe in God why cannot you believe in Ayyappa…why u r taking double stand…\\

      சனாதன தர்மம் என்ற வாழும் கலையில் [இந்து மதம் என தவறாக அழைக்கப் படுவது] முக்கிய அடிப்படை நூல்கள் வியாசரின் நான்கு வேதங்கள், 18 புராணங்கள், 108உபநிஷத்துக்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம். சரி, தவறு, அங்கீகரிக்கப் பட்டது, அங்கீகரிக்கப் படாதது எல்லாமும் இவற்றின் அடிப்படையிலே சொல்ல வேண்டும். எப்படி ஒரு நாட்டுக்கு சட்டம் உள்ளதோ அது போல இவை சனாதன தர்மத்தின் அதிகாரப் பூர்வமான நூல்கள். வணகும் தெய்வம், அவதாரம், ஆன்மீக குரு எல்லாம் இவற்றின் அடிப்படையிலே இருக்க வேண்டும். அதன் படிப் பார்த்தால் ஐயப்பன் கதை மேற்சொன்ன நாள்கள் எதிலும் சொல்லப் படவில்லை. ஐயப்பன் என்ற பெயரே எந்த வேத நூல்களிலும் குறிப்பிடப் பட வில்லை. ஐயப்பன்என்பவர் ஏன் கடவுளாக இருக்கக் கூடாதா, பாபாக்கள் ஆனந்தாக்கள் எல்லோரும் ஏன் கடவுளின் அவதாரங்களாக இருக்கக் கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் எதை அடிப்படையாக நம்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து இது அமையும். இவர்களை கடவுளாக நீங்கள் நம்பலாம், ஆனால் சனாதன தர்மத்தின் அங்கீகரிக்கப் பட்ட நூல்களின் படி அது உண்மை இல்லை.

    • \\Why canno visit Vinavu office and hear their story ?\\ஊருக்கு நோபல் பரிசு வாங்கிய புத்திசாலியா கூட இருக்கலாம், ஆனாலும் அவனை எடை போட எங்களுக்குன்னு ஒரு ஸ்கேல் இருக்கு, அந்த அளவுகோலின் படி இவர்கள் அப்படியொன்றும் அஹா… ஓஹோ… என்று போற்றத் தக்கவர்கள் அல்ல. இவர்களைச் சந்திப்பதிலும் ஒரு பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை.

      • நீங்கன்னு இல்ல.. இதுமாதிரி ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தரப் பத்தி, ஒவ்வொரு சமூக அமைப்புகளைப் பத்தி, ஒவ்வொரு கலாச்சாரத்தை பத்தி, ஆளாளுக்கு ஒவ்வொரு ஸ்கேல் வச்சிருக்காங்க தாஸு. தப்பொன்னுமில்ல. பலதரப்பட்ட மாறுபட்ட விமர்சனங்கள் இருக்கலாம். Collective effortனு வரும்போது ஒரு பொதுக்கருத்தை உருவாக்க்க வேண்டியிருக்கு. சமூகக் கண்ணோட்டத்தோட. நடைமுறை இயங்கியல்படி யார் சொல்றது சரியான பார்வைன்னு, பலதர கண்ணோட்டத்தோட ஒரு எஸென்ஸை உருவாக்கறது தப்பில்லையே.. வினவு அதை சரியாவும் சில நேரங்ககள்ள குழப்படியாவும் செய்யுதுன்னு நினைக்கிறேன்.

    • \\Active partiipation is required to chang the presen trend of life of our countrymen, especially the current Political Systme must be changed, as you rightly said that the people of India are donkey and simply voting every 5 years by taking money and biiyani…What is your plan?\\இப்போதைக்கு நம்ம நாட்டை காப்பாற்ற ஹிட்லர் மாதிரி ஒரு சர்வாதிகாரி [ஆனால் அவன் நல்லவனாகவும் இருக்கணும்] வரணும் அல்லது காந்தி மாதிரி இன்னொருத்தர் வரணும். வினவு கோஷ்டியினர் செய்வது கடலில் பெருங்காயம் கரைக்கும் வேலை, ஆனாலும் அது நல்ல மாற்றம் கொண்டு வரும் எனும்போது நிச்சயம் நானும் ஆதரிப்பேன்.

      • Our Independence struggle 1857 Sepoy mutiny and after wards it took 90 years to get Independence…
        Our Vinavu is doing its best but you do not wnat to listen or to visit the office….
        It will appear as ” Kadalil Pengayam” but in due course you will understand the significance of Vinavu and its work..
        Wait and see…
        Bye, Das Anna…

      • //இப்போதைக்கு நம்ம நாட்டை காப்பாற்ற ஹிட்லர் மாதிரி ஒரு சர்வாதிகாரி [ஆனால் அவன் நல்லவனாகவும் இருக்கணும்] வரணும் அல்லது காந்தி மாதிரி இன்னொருத்தர் வரணும்.//

        விசியகாந்த் கணக்கால்லாம் இனிமே யாரும் தனியா வந்து நம்மளக் காப்பாத்த மாட்டாங்க தாஸு. எல்லாமே கலெக்ட்டிவ் எஃப்போர்ட் தான்.

  107. Srimad Bhagavatam 10.61.24:

    “rukminyas tanayam rajan
    kritavarma-suto bali
    upayeme visalakshim
    kanyam carumatim kila”

    O King, Bali, the son of Kritavarma, married Rukmini’s young daughter, large-eyed Carumati (Charumathi).

  108. So change is expected anytime…you should remember that Sepoy Mutiny was held in 1857, but we got Independence after 90 years…like that only we in Vinavu are trying to protect our Nation from the most corrupted Politicians, Businss People..
    As you rightly said it will appear as ” Kadalil Perungayam…” but one we will definitly change the present Political systm…
    Patience is required….More Baghat Singhs/ Thiruppur Kumarans are required…
    without going to the Vinavu office you simply cannot criticise them….There is something which is not visible to you now,
    as you rightly said a car mechnic’s vision is different from ordinary person, so also when u r biased your mind will not accept the achievement of Vinavu…
    Wait and see…

  109. \\without going to the Vinavu office you simply cannot criticise them….\\ வினவு & கோ -வினர் ஊழல் இல்லா அரசியல் , போலிச் சாமியார்கள் ஒழிப்பு, இது குறித்து மக்கள் விழிப்புணர்ச்சி போன்ற விஷயங்களில் ஈடுபடக் கூடாது என்றோ, அப்படி ஈடுபட்டால் வெற்றியடைய மாட்டார்கள் என்றோ நான் ஒரு போதும் சொன்னதில்லை. சம்பந்தமே இல்லாமல் படைத்தவன் என்பவன் இல்லை, அப்படி நம்புவதால் தான் நாம் உருப்படாமல் போய் விட்டோம், இல்லாவிட்டால் இந்நேரம் தேனாறும் பாலாரும் ஓடிக் கொண்டிருந்திருக்கும் என்ற பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். கடவுள் என்ற ஒருத்தன் இல்லாமல் போக மாட்டானா என்ற ஏக்கம், நப்பாசை இவர்கள் உள்மனதில் புரையோடிப் போயிருக்கிறது. அப்படி கடவுள் இல்லை என்றாகி விட்டால் இவர்களுக்கு என்ன லாபம் வரும், அவர் இருப்பதால் இவர்கள் அடையும் நஷ்டம் என்ன என்றும் எனக்குப் புரியவில்லை. இறைவன் இருக்கிறான் என்று எவ்வளவோ வழிகளில் எடுத்துச் சொல்லியும் இவர்களோ இங்கே வெவ்வேறு பெயர்களில் பின்னூட்டமிட்ட இவர்களது தொண்டர் படைகளோ ஒருவரும் ஒப்புக் கொள்ளவில்லை, இல்லை என்றும் நிரூபிக்க வில்லை. இந்த மாதிரி ஒரு அடிப்படை நேர்மை கூட இல்லாதவர்களைச் சந்திக்க எனக்கு விருப்ப மில்லை. சமுதாய மாற்றத்துக்காக எவ்வளவோ பேர் பாடுபட்டிருக்கிறார்கள், சிலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் பலர் தோல்வி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் முயற்சி வெற்றியடைந்தால் நமக்கும் சந்தோசம், நாமும் ஆதரிப்போம், ஆனால், இவர்களது கடவுள் மறுப்புக் கொள்கையை ஒருபோதும் எற்ப்பதர்க்கில்லை. தங்களுடன் கருத்து பரிமாற்றம் செய்ய கிடைத்த வாய்ப்புக்கு நன்றி, Best of Luck, May God bless you.

    • ” tarko pratisthah srutyo vibhinna, nasar rsir yasya matam na bhinnam !
      dharmasya tattvam nihitam guhayam, mahajanano yena gatah sa panthah..!! ”

      ( In any debate the skilled orator will win and the tuth will be lost…Similarly attempt to inyerpret our scriptures are futile, instead follow the path laid by our elders..)

      No one is questioning your belief in God, bu we are writing again and again the blind belief in God…
      In our Vinavu members are of different types…members from Ayyappa Bhaktas, those who visited Ayyapa abarimalai for more than 12 -18 times, those who went to Palani on Padayatra on every new year day.. those who are giving Milk to Shiva Tmple every Mondy….
      Anyhow, one day you will definitely realise what is true worship..
      Bye for the time being…
      Regards,

      Krishna Kumar,
      S/0 Late Krishna Reddy,Ananhapur AP
      kumarmarch1981@gmail.com

      • \\

        ” tarko pratisthah srutyo vibhinna, nasar rsir yasya matam na bhinnam !
        dharmasya tattvam nihitam guhayam, mahajanano yena gatah sa panthah..!! ”

        ( In any debate the skilled orator will win and the tuth will be lost…Similarly attempt to inyerpret our scriptures are futile, instead follow the path laid by our elders..)\\

        இந்த வரிகளை வினவின் வலைப்பூவில் பார்ப்பது வனத்தில் பாலைவனச் சோலையைப் பார்ப்பது போல உள்ளது. மிக்க மகிழ்ச்சி. இந்த வரிகளில் mahajanano என்ற வார்த்தையை வயதானவர்கள் என்று அர்த்தம் செய்துள்ளீர்கள், இது சரியான பொருள் இல்லை. வயதாவதால் மட்டுமே ஒருத்தர் மகாஜன் ஆகிவிட முடியாது. இறைவனை அறிவதில் முழுமையடைந்த ஒருத்தரே இங்கே சொல்லப் பட்டுள்ள மகாஜன் ஆவார், அவர்களே பின்பற்றத் தக்கவர்களும் ஆவார்கள்.

        \\one day you will definitely realise what is true worship.\\ எனக்கு உண்மையான வழிபாடு தெரியாது என நீங்கள் நினைத்தால் அது என் தவறல்ல. என்னைப் பொறுத்தவரையில் நான் எடுத்துக் கொண்ட வழி நல்ல வழி தான், என்ன நிறைய sincerity தேவைப் படுகிறது, வினவுக்கு பின்னூட்டம் போட்டு என் நேரத்தை வீணடிப்பதை நிறுத்த வேண்டும் அந்த நேரத்தில் இறை வழியில் செலவிட வேண்டும் அவ்வளவுதான்.

    • ‘ tarko pratisthah srutayo vibhinna, nasar rsir yasya matam na bhinnam !
      dharmasya tattvam nihitam guhayam, mahajano yena gatah sa panthah !! ”

      ( In any debate the skilled orator will win and the truth will be lost…Similarly attempt to interpret our scriptures are futile, instead follow the path laid by our elder..)

  110. Those who are worshipping Sri Rama of Ramayana as incarnation of Lord Vishnu, I like to ask them the following doubts/questions…

    Q.1: How Sri Rama is justified in his action of sending away his wife Sitha without her knowledge to forest through his brother Laxman ( knowing very well that she is in the family way) ?
    Q.2: How Sri Rama is justified in his action of killing Vali by hiding behind a tree.when Vali was engaged in fight with his brother Sugriva ?

    • ராம ராமா…!!!

      // Q.1: How Sri Rama is justified in his action of sending away his wife Sitha without her knowledge to forest through his brother Laxman ( knowing very well that she is in the family way) ? //

      ராமன் செய்தது சரியல்ல..

      அவதாரமான ராமன் ஏன் இப்படிச் செய்தான் என்று விளக்கங்களும் கொடுக்கப் படுவதுண்டு..

      ராவண வதத்துடன் ராமனின் அவதார அம்சம் (விஷ்ணு) முடிவடைகிறது என்றும், பின்னர் எழுதப்பட்ட உத்தர ராமாயணத்தில் வருபவையெல்லாம் விஷ்ணு அம்சம் நீங்கிய சாதாரண மனிதனான ராமனின் செயல்கள் என்றும் கோவில்களில் வழிபடும் ராமர் விக்கிரகங்கள் சீதையுடன், அவதாரமாக இருந்த ராமனாகவே, கட்டாயம் இருக்கவேண்டும் என்ற நியதியையும் காட்டுவார்கள்.

      // Q.2: How Sri Rama is justified in his action of killing Vali by hiding behind a tree.when Vali was engaged in fight with his brother Sugriva ? //

      வாலி பெற்ற வரம் அப்படி.. தன்னை எதிர்ப்பவர்கள் தன் முன்னால் வரும்போது அவர்களின் ஆற்றலில் பாதி தன்னுடைய ஆற்றலில் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் அது. வரம் கொடுத்தவனே முன்னால் வந்தால்கூட வாலியின் ஆற்றல்தான் அதிகமாயிருக்கும்.. வாலி தன்னுடன் வம்புக்கு வந்த ராவணனையே தன் வாலில் கட்டி விளையாடியவன் என்று ராமாயணத்தில் வருகிறது.. ஏன் ஒரு குரங்குக்கு இப்படி ஒரு வரத்தைக் கொடுத்து விளையாட்டு காட்டி ராமனால் வேட்டையாடப்பட வைத்தாய்? என்று இப்படி ஒரு மோசடி வரத்தைக் கொடுத்தவனைத்தான் கேட்க வேண்டும்..!!!

      • வேறெந்த மதத்திலும் இல்லாத அளவுக்கு இந்து மதத்தில் போலிச் சாமியார்கள் இருப்பதற்கு இப்போது காரணம் புரிந்திருக்கும். மருத்துவம், சட்டம், என்ஜினீயரிங் என்று எந்த ஒரு துறையாய் இருந்தாலும் அதில் தேர்ச்சி பெற்று அங்கீகரிக்கப் பட்ட வல்லுனர்கள் இருப்பார்கள். அவர்கள் சொல்படி மற்றவர்கள் நடப்பார்கள். ஒருத்தனுக்கு மாரடைப்பு என்றால் கைதேர்ந்த இதய மருத்துவரிடம் தான் போவான். பக்கத்து வீட்டுக் கசாப்பு கடைக்காரனிடம் ஆலோசை செய்ய மாட்டான். இந்த நடைமுறை ஏனோ ஆன்மீகத்தில் எங்கும் காணப் படுவதில்லை. அவனவனும் ஞானி போல பேச ஆரம்பித்து விடுகிறான். இவனுங்க விடும் பீலாவுக்கு ஆதாரம் என்ன என்று யாருக்கும் தெரியாது. இவனுங்க சொல்வதற்கு நேர் எதிராக சொன்னாலும் இவனுங்களால் மறுக்கவும் முடியாது. அப்புறம் சாமியார் கோஷ்டிங்க, ஊர் ஊருக்கு நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள் மாதிரி போலிகள் கொழுக்காம வேறென்ன நடக்கும்?

        • // மருத்துவம், சட்டம், என்ஜினீயரிங் என்று எந்த ஒரு துறையாய் இருந்தாலும் அதில் தேர்ச்சி பெற்று அங்கீகரிக்கப் பட்ட வல்லுனர்கள் இருப்பார்கள். அவர்கள் சொல்படி மற்றவர்கள் நடப்பார்கள். ஒருத்தனுக்கு மாரடைப்பு என்றால் கைதேர்ந்த இதய மருத்துவரிடம் தான் போவான். பக்கத்து வீட்டுக் கசாப்பு கடைக்காரனிடம் ஆலோசை செய்ய மாட்டான். இந்த நடைமுறை ஏனோ ஆன்மீகத்தில் எங்கும் காணப் படுவதில்லை. //

          எப்படி சுவாமிகளே காணப்படும்..?! மத்ததெல்லாம் அறிவியலாச்சே.. ஆன்மீகம் மட்டும் கடவுளை நேரில் கண்ட உங்களைப் போன்ற ஞானிகள் சொல்வதுதான். நீங்கள் மட்டும் மனம் வைத்திருந்தால், குமாருக்கு வந்துவிட்ட சந்தேகம்/கேள்விக்கான பதிலைச் சொல்லி ஞானமருளிவிட்டு, நான் போலி சாமியார்/ஞானி ஆவதையும் தடுத்து அருளியிருக்கலாமல்லவோ…

          • சிஷ்யா, நான் உன்னையே காட்டிக் கொடுப்பேனா? ஊருக்கு நாலு வைத்திருக்கும் அருணகிரி, ரஞ்சிதானந்தாவின் வீடியோவைப் பார்த்துவிட்டுத்தான், ஆஹா என்னமாய் ஜமாய்க்கிறான்யா, இவன்தான் என் வாரிசு என்று மெச்சி தேர்ந்தெடுத்த மாதிரி நான் உன்னை சிஷ்யனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஆகையால், உன்னை நான் ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நீ எத்தனை ரீல், புருடா, கப்சா எல்லாம் விடலாம். நான் பார்த்து அகமகிழ்ந்து போவேன், நம் அடுத்த வாரிசு என்னமாய் வெளுத்துக் கட்டுகிறது என்று!!

            • மடத்தை விட்டு ஓடிப் போன சந்தானம் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையை இழந்து விரக்தியோட சுவாமிகள் பேசுற மாதிரி இருக்கு.. லட்டோட திரும்பி வந்துடுவார் பாருங்க, சுவாமிகளே. அதுவரைக்கும் கவலையைத் துறந்து உங்கள் ஆன்மீக ஜோலிகளை தொடர்ந்து செஞ்சுட்டு வாங்க..

              • என் பெயரைக் காப்பாற்ற நீ ஒருத்தனே போதும் சிஷ்யா…….. நான் வேறு யாரையும் ‘நம்பி’ இருக்க வில்லை. உனக்கு மிஞ்சிய பிராடு வேறு எங்கு இருப்பான்…….

                • அப சகுனம் பிடிச்ச மாதிரி வாக்குமூலம் குடுக்குறீங்களே சுவாமிகளே, நீங்க இன்னும் 100 வருசம் வாழ்ந்து எல்லாரையும் நல்வழிப் படுத்தி எடுத்துட்டுதான் போவணும்..

                  • அதனாலென்ன, 292 அருணகிரி இருக்கும்போதே ரஞ்சிக் கோட்டை வாலிபனை 293 -ஆக ரெடி பண்ணவில்லையா? ஜெயேந்திரன் இருக்கும்போதே விஜயேந்திரனை தயார் பண்ணி ஸ்வர்ணமால்யம் பார்க்க விடவில்லையா? நீயும் டிரெயினிங் எடுத்துகிட்டு நான் போனதுக்கப்புறம் நூறு வருஷம் அடாவடி, அட்டூழியம், அராஜகம் எல்லாம் பண்ணு சிஷ்யா….

  111. பில்டிங் ஸ்ட்ராங்கு……….. பேஸ்மெண்டு வீக்கு…………… கேள்வியெல்லாம் நல்லாத்தான் இருக்கு……… யாரோட அறிவையோ சோதிச்சுப் பார்க்கலாம்னு எழுப்புன கேள்விகள் மாதிரி இருக்கு…….. அந்த புண்ணியவான் பதில் சொன்னா நல்லாயிருக்கும்………. அப்படியில்லைன்னா நீயே பதிலையும் சொல்லிடு தம்பி…….

  112. The discussion between Ambi and Dass Anna is quite interesting…Dass is vey strong about the belief of God…
    thanks…GOD IS THERE THAT IS WHY WE ARE HERE TO DISCUSS ABOUT HIM….

      • யாரைக் கேக்குறீங்க குமாரு? இனிமே அதையும் தெளிவா சொல்லுங்க. உங்க கேள்விக்குத்தான் ஏன் சிஷ்ய கோடி 295 வது மகா சந்நிதானம் [293 நித்தி, 294 நாந்தான். ஹி…..ஹி…..ஹி…..] பதில் பொளந்து கட்டிட்டாரே, அப்புறமென்ன?

  113. Dass Anna,

    Mahabharathathil I have a doubt :

    How the Pancha Padavas can marry one lady Draupadi ?
    Whether there was a shortage of ladies at that time ?

    Can you give reasosn to this ?

      • சுவாமிகளுக்கு, சொந்தமாக பீலா விடும் விருப்பம் குறைஞ்சுட்டே வருதே… நல்ல அறிகுறியா, இல்ல ஞாபக மறதியா, இல்ல நிறைய ஆன்மீக ஜோலிங்க இருக்கா.. இப்படியே போனா மடம் காலியாயிடாதா… சந்தானம் எங்கிருந்தாலும் அவசரமாக மடத்துக்கு வரவும்…

        • நான் உன்னை அடுத்த மடாதிபதியாக்கி, ரஞ்சிதம், ஸ்வர்ணமால்யம் எல்லாம் வருங்காலத்தில் பார்த்து மஜா செய்ய வேண்டுமென்று உனக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன், நீ இந்த மாதிரி என்னோட அறையிலேயே கேமரா வைக்கும் வேலையை நீ செய்யலாமா சிஷ்யா?

        • தெரிந்ததை சொல்ல வேண்டும், தெரியாததை தெரியாது என்று சொல்ல வேண்டும். படிக்கிறது இராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவில் என்பது போன்ற வேளைகளில் ஈடுபடக் கூடாது. நீ மேலே இராமாயணத்துக்கு குடுத்திருக்கியே ஒரு விளக்கம் அதை மட்டும் வால்மீகி பார்த்தா அவர் கண்ணில இரத்தம் தான் வரும், கம்பர் தூக்கு போட்டுகிட்டே செத்துடுவார். இராமனை தொடர்ந்து தாக்கி இழிவு படுத்துவதில் நீ கருணாநிதியையே தூக்கி சாப்பிட்டுவிட்டாய். அப்படி என்ன சிஷ்யா உனக்கு இராமன் கெடுதல் செய்தார்?

          • ராமனை இழிவு படுத்தியிருக்கிறேனா.?! அபசாரம், சுவாமிகளே, அபசாரம்…

            சீதையை காட்டுக்கு அனுப்பும் உத்தர காண்டம் வால்மீகியால் எழுதப்பட்டதுதானா என்ற சந்தேகம் பல வைணவப் பெரியார்களுக்கு இருக்கிறதென்பது சுவாமிகள் அறியாததா.. மேலும் ராமனின் அவதார நோக்கம் முடிந்ததும் விஷ்ணு பை,பை சொல்லிவிட்டு ராமனிடம் இருந்து தனது அம்சத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு போய்விட்டார் என்றும், கிஷ்கிந்தா காண்டத்தில், வாலியை ஒரு எதிரியாக எண்ணாமல் துஷ்டக் குரங்காகவே ராமன் வேட்டையாடினான் என்றும் வைணவப் பெரியார்கள் பலரும் விளக்கங்கள் கூறுவது சுவாமிகள் அறியாததா.. தங்களது லீலைகளைக் குறைத்துக் கொண்டு பகவானின் லீலைகளை மீண்டும் ஒருக்கா படிக்க சுவாமிகளிடம் வேண்டிக் கொள்கிறேன்…

            • அனானி பேர்ல பின்னூட்டங்களைப் போடலாம், நீ இராமாயணத்தை கற்றுக் கொண்ட வைணவப் பெரியார்கள் பெயரைக் கூட சொல்லாமல் அனானியாக வைத்திருப்பது நியாயமா சிஷ்யா? அந்த பெரியார்கள் யார், எங்கே நீ சொன்ன மாதிரி சொன்னார்கள் என்று சொல்லேன், நானும் தெரிந்து கொள்கிறேன். எவனோ ஒரு புண்ணியவான் [இப்போ அது ஒரு பெண் என்று தெரிகிறது] படுக்கையறையில் கேமரா வைக்காமல் போயிருந்தால் ரஞ்சிக் கோட்டை வாலிபனும் மண்டையைப் போட்ட பின்னர் நீ போற்றி வணங்கும் பெரியார் ஆகியிருப்பான். மக்கள் நல்ல நேரம் அவன் மாட்டினான். இதே மாதிரி, நீ படித்த இராமாயணத்தை எவன் எழுதினானோ யாருக்குத் தெரியும்?

        • \\சந்தானம் எங்கிருந்தாலும் அவசரமாக மடத்துக்கு வரவும்.\\ எங்கேயிருந்து இந்தாள் திடீர்னு வந்து போட்டு வாங்குறா மாதிரி கேள்வி எழுப்புறானே என்று அப்பவே நான் சந்தேகப் பட்டேன். இப்போ சரியாப் போச்சு, இந்தாளும் உன்னோட கைக்கூலிதானா? அப்போ எனக்குன்னு யாருமே இந்த பிளாக்குல இல்லியாடா…….. அட எழுகொண்டல வாடா என்னை காப்பாத்துடா……..

          • ஏகாந்தமே இனிது, சுவாமிகளே.. எல்லாம் ஏழுமலையானின் திருவிளையாடல்…

          • ஜெயதேவ் பாஸ்,

            குயவன் பானைவரைக்கும் எல்லாம் சரியாத்தானே போய்க்கொண்டு இருந்தது. எல்லாம் நீங்கள் வாலியை தூக்கியதால் வந்த வினை. நான் அப்பவே சொன்னேன் மதங்களில் நுழைந்தால் எல்லாம் பஞ்சராகிவிடும் என்று.

            • நான் எங்கே வாலியைத் தூக்கினேன்? அந்த கொமாரு கேள்வியைத் தூக்கிப் போட்டாரு, அது அம்பி அடிகள் நம்பர் 295 [பேசாம இந்தாளுக்கு நம்பர் 420 போட்டுடலாமான்னு இருக்கேன்], யாரோ பெரியார்கள் பதில் சொன்னாங்கன்னு அண்டப் புழுகு, ஆகாச புளுகு எல்லாம் அவிழ்த்து விட்டிருக்காரு. இந்த மாதிரி ஆளுதான் தான் என்னோட மடத்துக்கு வேணும்னு எதிர் பார்த்துகிட்டு இருந்தேன், அடுத்த மடாதிபதி இவர்தான் கன்பர்ம்.

              • சுவாமிகளே, சந்தானம் ‘வாலை’ என்பதற்கு பதில் ‘வாலியை’ என்று டைப்படிச்சுட்டார்னு தோணுது.. அதையும் கன்பர்ம் பண்ணிக்கோங்க..

                • சந்தானம் ‘வாலை’ என்பதற்கு பதில் ‘வாலியை’ என்று டைப்படிச்சுட்டார்னு உனக்குத் எப்படி தெரிந்தது சிஷ்யா? ரெண்டு களவானிகளும் ஒண்ணா சேர்ந்துகிட்டு வேலை பண்றீங்க என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும் சீடா? எனக்கு எதிரா பெரிய சதியே நடக்குது, அப்போ எனக்குன்னு யாருமே இல்லியாடா………..

        • குமார்,

          294 வது மகா சந்நிதானத்தின் ஆசிகளுடனும், அங்கீகாரத்துடனும் மேலே கொடுக்கப்பட்ட சுட்டிகள் எல்லாம் உங்கள் கேள்விக்கான பதிலைக் கொடுக்கவில்லையா..?! ஏன் என் வாயைக் கிளறுகிறீர்கள்..?!! வேணாம், நான் சொல்லும் பதிலை உங்களால் ஜீரணிக்க முடியாது.. சொல்லிப்புட்டேன்..

          • அம்பியுள்ள … சாரி….. அன்புள்ள 295 , என் வாயைக் கிளறுவதற்கு நீ எந்தெந்த களவாணிப் பயல்களையோ செட் பண்ணி வேலை செய்கிறாய். என் நுனி கிளையில் உட்கார்ந்து அடிக் கிளையை வெட்டும் வேலை? எனக்குப் பின் நீதான் மொள்ளமாரி மடத்தின் மடாதிபதியாகப் போகிறாய், கொஞ்சம் பொறுத்துக் கொள். இப்போதே என்னைக் கவிழ்த்தால் அது உனக்கும் பாதகமாகத்தான் போகும். புரிந்துகொள்.

            • களவாணிப் பயல்களா..?! அரண்டவன் கண்ணுக்கு எதைப் பார்த்தாலும் கேமராவாகத்தான் தெரியும், சுவாமிகளே.. நான் ஏற்கனவே சொல்லிட்டேன், இன்னும் 100 வருசம் 294 தான்..

              • அதை விட்டுத் தள்ளு, உனக்கு எல்லா சவுகரியங்களும் செய்து தரப்படும், கால் அமுக்கி விட எண்ணெய் மசாஜ் செய்துவிட ரஞ்சிதம், ஸ்வர்ணமால்யம் என ஸ்பெஷலிஸ்டுகள் அரேன்ஜ் செய்யப்படும், நீ ராஜா மாதிரி இருக்கலாம். கவலையே படாதே 295.

            • //எனக்குப் பின் நீதான் மொள்ளமாரி மடத்தின் மடாதிபதியாகப் போகிறாய்,//

              என்ன பாஸ், நீங்க சொல்லியிருக்குற பார்த்தா நீங்க இருக்குறதே மொள்ளமாரி மடம்னு ஒத்துக்கொள்கிற மாதிரில இருக்குது.

  114. Ambi Sir,

    I think that you will be watching tamil serial ” RUDRAM” in Jaya TV…
    It reiterates the Existence of GOD…whther the people who do not believe in GOD will agree that there is a super power, which we call GOD ..
    What you say, Sir ?

    • நம் T.V. சீரியல் கதாபாத்திரங்களாக வரும் தெய்வங்கள் மக்களை நேரடியாக நித்தியானந்தாக்களிடம்தான் கொண்டு போய் சேர்க்கும்.. மேலதிக விவரங்களுக்கு, please contact 294..

      • அம்பி, சந்தானம் ரெண்டு கூட்டு களவாணிப் பயல்களும் ஒன்னு சேர்ந்துடீங்களா …….. நான் அப்பவே சந்தேகப் பட்டேன், இப்போ சரியாப் போச்சு. அம்பியோட அடியாள் தானா நீ……………. என் பக்கம் யாருமே சேர மாட்டீங்களாடா……. அடப் பாவீங்களா நான் அப்போ அம்போ தனாடா……

        • என்ன பாஸ் நீங்க எப்ப பார்த்தாலும் என்னைய சந்தேகப்பட்டுக்கிட்டே இருக்கீங்களே? ஒரு கடவுள் நம்பிக்கையாளருக்கு நம்பிக்கைதான் ப்ஆஸ் முக்கியம்.

  115. கடவுள் இருக்கிறாரா என்பதை எவரும் நிருபிக்க முடியாது என்று தாஸ் அவர்களே நீங்கள் வாதிடலாம். ஆனால் உங்களுடைய நம்பிக்கை உங்களின் வேதங்களான குர்ஆன், பைபிள் உபநிடதங்களின் மீதே கட்டியமைக்கப்படுகிறது. அதன் வண்டவாளங்கள் அவைக்ளை பொய் என்று நிருபிக்கும் போது கடவுள் என்ற கட்டுமானம் காலவாதியாகிவிடுகிறது. அதன்பிறகு கடவுள் என்ற ஒன்றிற்கு எப்பொழுதமே வேலையில்லை என்றாகிறது. வேதங்களின் புளுகு மூட்டைகளை http://iraiyillaislam.blogspot.in/ இங்கு வந்து அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள.

    • யாருப்பா நீ. புதுசா? போய் ஒன்னாவது பின்னுட்டத்திலிருந்து எல்லாத்தையும் படிச்சிட்டு வாப்பா. முக்கியமா எங்க பாஸோட குயவன் பானை தத்துவத்தை படிச்சிட்டு வாப்பா அப்புறமா உங்க புளுகு மூட்டைய பத்தி பேசுவோம். ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா வகுப்பு எடுக்க முடியாது.

      • தம்பி சந்தானம்,
        நான் இல்லாத நேரமாப் பாத்து ஃபீல்டுல வெளுத்துக் கட்டிக்கிட்டுருக்க.. ஹும் என்ஜாய்.
        குயவன் பானை தத்துவத்தைப் படித்து பெரிதும் அகமகிழ்ந்தேன். இறைவன் குயவனாய் இருந்தவரைக்கு எல்லாமே நல்லாத்தான் போயிட்டிருந்தது. மதப்பேய்கள் என்னிக்கு உள்ள நுழைஞ்சதோ அதோட குயவனோட சீன் முடிஞ்சது. தாஸு பாஸோட தியரிகளை பாக்கும்போது அறிவுத் தெளிவு ஏற்படுது, குயவனோட டரியல் இனிதான் ஆரம்பம்னு. அதான் நேத்துப் போய் ஒரு மண்பானை வாங்கிட்டு வந்தேன். ஃபிரிட்ஜு தண்ணீ குடிச்சா உடம்பு கெட்டுப் போயிடுமாம். அக்காஃபீனா குடிச்சா வினவுக்காரவுக திட்டுவாக. அதனால மண்பானைத் தண்ணியே குடிக்கலாம்னு ஐடியா. குருவி வந்து தங்கறதுக்கும் ஒரு சின்ன மண்குவளை வாங்கிவச்சிருக்கேன்.

        • // அதான் நேத்துப் போய் ஒரு மண்பானை வாங்கிட்டு வந்தேன். ஃபிரிட்ஜு தண்ணீ குடிச்சா உடம்பு கெட்டுப் போயிடுமாம். //

          செம லாஜிக் அண்ணாத்தே. ஃபிரிட்ஜ் கீழ போட்டா உடையாது. ஃபிரிஜ் தண்ணிய குடிச்சா உடம்பு உடைந்துவிடும், மண்பானைய கீழே போட்டா உடைந்துவிடும் மண்பானைத் தண்ணிய குடிச்சா உடம்பு உடையாது. எப்படி. அதுசரி குருவிப் பிரியரா நீங்கள்?

          • என்னோட தியரிக்கு தத்துவார்த்த விளக்கம் கொடுத்த தம்பிக்கு ஒரு ஷொட்டு!
            நம்ம வீட்டு மொட்டை மாடிக்கு எத்தனை ஜீவராசிகள் வந்துட்டுப் போகும்னு தெரியுமா. காகம், மைனா, புறா, அணில், குருவி இத்தனையும் வந்துட்டுப் போகும். தானியங்கள் போடுவோம். சின்ன மண்தொட்டியில தண்ணீ ஊத்திவச்சிருப்போம். அதுங்க சாப்பிடறதையும் குடிக்கறதையும் பார்த்துக்கிடே இருக்கலாம். குயவன் படைப்புதான் எத்துனை வியப்புக்குரியது. குருவிக்குனு இப்பொதான் குவளை வாங்கி வச்சிருக்கு. கடல்நுரை வாங்கி உடைச்சு உள்ள போட்டாச்சு. வீட்டுக்கு வெளிய ஜன்னலோரம் கட்டிவிட்டாச்சுன்னா தங்கிட்டுப் போகும்ல. இயற்கையோட படைப்புக்கு முன்னாடி.. ஆங்க..சாரி. குயவனோட படைபுக்கு முன்னாடி வேற எதுவும் சிறந்ததில்ல.

            • //குருவிக்குனு இப்பொதான் குவளை வாங்கி வச்சிருக்கு. கடல்நுரை வாங்கி உடைச்சு உள்ள போட்டாச்சு.வீட்டுக்கு வெளிய ஜன்னலோரம் கட்டிவிட்டாச்சுன்னா தங்கிட்டுப் போகும்ல. //

              உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.. குருவிக் குவளையை பூனைகள் நெருங்கமுடியாத வாக்குல கட்டிவிடுங்க.. இல்லாங்காட்டி குருவி குடும்பத்தோட காணாமப்போயிரும்..

                • ஜீவராசிகளுக்கு கருணை காட்டியதால் வடிவேலு ரிஷியாயிட்டீங்க பாருங்க.. வால்மீகி கதையை நம்ப முடியாதுன்னு இனிமேலும் யாராவது சொல்லமுடியுமாண்ணேன்…

  116. \\குயவனோட டரியல் இனிதான் ஆரம்பம்னு.\\ ஒரு பாக்டீரியா அல்லது வைரஸ் உடம்புக்குள்ள நுழைஞ்சாலே போதும் உனக்கு சங்குதான். இந்த நிலமையில நீ இருந்து கிட்டு டரியல் பத்தி பேசிக்கிட்டு இருக்கே!! ஏழுகொண்டல வாடா ……என்ன சோதனை இது!!

    • அது உண்மைதான் பாஸு. புதுசா புதுசா நெறய வைரஸு பரவி மக்கள காலி பண்ணிக்கிட்டு இருக்கும்போதே இது ஏதோ முதலாளித்துவ சதின்னு நெனச்சிட்டேன். உள்ளொளியத் தட்டி எழுப்பிபாக்கும்போதுதான் தெரியுது ஏழுகொண்டலவாடனின் திருவிளையாடால்னு. ஐயாம்…டோட்டல் சரண்டர்! இருந்தாலும் இடைவேளைக்கப்புறம் டரியல் பண்ணது எந்தம்பிதான்னு சொல்லக்கடமப்பட்டிருக்கேன்.

  117. ” AKASATH PRATHITHAM THOYAM, YADHA GACHATHI SAGARAM, SARVA DEVA NAMASKARAM SRI KESAVAM PARATHIGACHATHI..” ( just as the rain water flows from the sky goes and joins to the sea, so also the namaskarmas done to all Gods goes to Sri Kesava..)
    So we can say that there is only one God…but why people are worshipping in different Gods..?

    • குமார் தம்பி
      குயவன் ஒருவன்தானய்யா. ஆனா அந்தக் குயவன் செஞ்சு வச்சுப் பானைகள விக்க வந்தவனுகளையே கடவுளாக்கிட்டானுங்க நம்ம மக்கா. ஒரு உதாரணஞ்சொல்ரேன். ஶ்ரீகேசவன்தான் ஒரே கடவுள். ஆனால் பகவானுக்கு நாம கீர்த்தனம் பண்ணுங்கோ பண்ணுங்கோன்னு சொல்லிண்டு ஊர் ஊரா சுத்தி வர்ராரு நம்ம ஶ்ரீ ஶ்ரீ முரளிதர சுவாமிஜிகள். ஆயிரம்முறை சொன்னா ஒரு பலனும் லட்சம் முறைசொன்னா ஒரு பலனும் கிடைக்குமாம். மேட்டரு என்னான்னா அவரு நல்லாத்தான் ஏர்கூலர் பக்கத்துல குஷன் சோப்பால ஒய்யாரம உக்கார்ந்துக்கிட்டு லோக்கல் லயன்ஸ் கிலப்புல துட்ட வாங்கிக்கிட்டு பிரசங்கம் பண்ராரு. ஆனா நம்ம மக்காள் இருக்காங்களே.. சரியான மக்கூஸ். அவரு கால்ல விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு அருளாசி வாங்கிட்டுப் போறா. குழந்தையிலேர்ந்து குடுகுடு பாட்டி வரைக்கும் கால்ல விழறா. அத அந்த ஶ்ரீஶ்ரீயும் ஒன்னுஞ்சொல்றதில்லை. குயவனுக்கு முன்னடிதான் பணிவு இருக்கணும் நான் அற்ப மனுசந்தானே எனக்கு எதுக்கு இதெல்லாம்னு சொல்லணும். அத விட்டுப்புட்டு சுவாமிகள்ஜி அத அனுமதிக்கறது எதைக் காட்டுது. இன்னும் முன்னூறு வருசம் கழிச்சு பகவான் கிருஷ்ணரே முரளிதர சுவாமிகளா அவதரிச்சார்னு பாடப்பொஸ்தகத்துல இருக்கும். இப்படித்தான் எல்லாக் கடவுளரும் வந்தாங்க. ஆனாக்காட்டி ஒன்னுமட்டும் நல்லாப் புரிஞ்சிக்கிடுங்க. குயவன் ஒருத்தந்தான். அவனோட மேற்பார்வையில மட்டும்தான் எல்லாமே நடக்குது. இத நீங்க ஒத்துகாட்டி தாஸு பாஸு என்னை டரியலாக்கிருவாரு.

      • யப்பா! நம்ம பாஸோட தத்துவம் என்னமா வேலை செய்யுது. வடிவேலு! கரெக்டா கேட்ச் பண்ணிட்டீங்க

        • ஏய் சந்தானம், நீயும் என்னோட எதிரி கேம்புல இருக்குரவனுன்களோட சேர்ந்து கும்மியடிக்கிரியா? என்னைக் கவிழ்த்து அடுத்த மடாதிபதியாகனும்னு 295 அண்டர் கிரவுண்டு வேலை பண்ணிக்கிட்டு இருக்கான். நீயும் அவனுங்க கூட சேர்ந்துகிட்டே. தேவுடா………தேவுடா……… ஏழுமலை தேவுடா……… சூடுடா……..சூடுடா…….. இந்த அநியாயத்தைச் சூடுடா……..

          • அபச்சாரம் அபச்சாரம் அசிங்கமா பேசாதீங்க பாஸ். எப்பவுமே என்ன்னுடைய கொள்கை ஒன்னுதான் அதிலிருந்து நான் விலகியது இல்லை. என்னை விலக வைக்க முயற்சிக்கும் எந்த கொள்கையிலும் நான் வழுக்கியது இல்லை. நீங்கதான் அடிக்கடி வழுக்கி விழுந்து விடுகிறீர்கள்.

            • சந்தானம் புளுகுறாரு, சுவாமிகளே..

              நித்தியை ’ஆதரிச்சு’ வினவு போட்ட பொதுக்கூட்டத்துல இவரு மட்டும் கடவுள்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிட்ருந்தார்.. உங்களப் பாக்காம சுவாமிகள் சோறு தண்ணிய மறந்துகிடக்காரு வாங்க மடத்துக்குப் போலாம்னு கூப்ட்டேன், போங்கடா ரவுசு பிடிச்ச ஆத்திகவாதிகளான்னு என்னையே அடிக்கவந்த்துட்டார்னா பாருங்க..

              என்னமோ நல்ல புத்தி வந்து மடத்துக்கு திரும்பி வந்துட்டார்.. அவர சமாதானப்படுத்தி, உங்க ஆன்மீக ஞானத்த அவருக்கு ரீசார்ஜ் பண்றத விட்டுட்டு, சதிகாரா, மோசக்காரான்னு திட்டி காரியத்தை கெடுக்காதீங்க.. சொல்லவேண்டிய கடமை.. சொல்லிட்டேன்..

          • 1 மாசத்துக்கப்பறம் சந்தானம் மடத்துக்கு திரும்பி வந்திருக்கார்.. அவரை சமாதானப்படுத்தி, உங்க ஆன்மீக ஞானத்தை அவருக்கு ரீசார்ஜ் பண்ணுறதவிட்டுட்டு, சதிகாரா.. மோசக்காரான்னு பழிபோட்டுப் படுத்துறீங்களே, சுவாமிகளே.. அவரு திரும்ப ஓடிறப் போறாரு.. சொல்லிட்டேன்..

            • அம்பி நாரதா! வந்த வேலை முடிந்ததா? இல்லை இன்னும் சொச்சம் மீதி பாக்கி ஏதேனும் இருக்கிறதா? நல்லாவே செய்யிறப்பா நாரதர் வேலையை.

              • சந்தானம், நீங்க பிரசாத லட்டு கொடுத்திருந்தா இப்படி போட்டுக் கொடுத்திருப்பேனா..?! நீங்களாச்சு, சுவாமிகளாச்சு, மடமாச்சு எனெக்கென்ன.. நான் கெளம்புறேன்.. ரிஷி, குருவியை பத்திரமாப் பாத்துக்கோங்க..

          • நான் எங்க மாத்தினேன். ஈமெய்ல் ஐடில ஒரு எழுத்து தவறானாலும் பொம்மை மாறிடுது. எல்லாம் இந்த நாத்திக வினவோட வேலை. என்ன இருந்தாலும் பேரு கரெக்டா இருக்கு பாருங்க. அங்கதான் நிக்கிறோம் ஆத்திக சிகாமணிகள்.

      • ஒரு குயவன் 10 முறை சக்கரம் சுற்றினால் கலி மண்ணுகூட அழகான பானை ஆகுது. இந்த பூமி பல்லாயிரகணக்கான வருஷம் சுத்துது. இன்னும் சில மனுசங்க கலி மண்ணாகத்தான் இருகாங்க .

        • சலாம் அலேக்கும் பாஸ்,

          என்ன பாஸ் துபாய்க்கு போறதா சொல்லவே இல்ல. போன கையோட பெரியார்தாசன் மேரி மதம் மாறிட்டீங்க போல. ஏன் பாஸ் அம்பியோட தொல்லை தாங்க முடியலியா? அடுத்து மடத்துக்கு அம்பிதான் குருவா? அவரு ரெண்டுகட்டானால்ல பேசுவாரு.

          • சந்தானம்,
            அம்பிதான் மடத்தை விட்டேப் போயிட்டாருல்ல. குயவன் தத்துவம் சிறப்பா வேலை செய்யுறதால இந்தப் பதிவுக்கு இனி வேலையில்ல. டாட். ஆல் பினிஷ்.

              • மடத்துக்குள்ள கோப்பையா.. சரி வச்சுக்குங்க.. எதுதான் சரியா இருக்கு..

    • எப்படிச் சொல்லணும்ன்னுதான் விதிமுறையிருக்கே தவிர இன்னார் தான் சொல்லணும்ன்னு ஒண்ணும் இல்லை.. முஸ்லீம்கள் கூட சொல்லலாம்.. இப்ப கூட துபாயில சையதுன்னு ஒரு புது பாய் இதைத்தான் பாலைவனத்துக்கு நடுவால உக்காந்துகிட்டு சொல்லிட்டுருக்காராம்.. இன்னும் ஒரு மாசத்துல அரேபியப் பாலைவனம் பூரா சோலைவனமாகப் போகுதுன்னு துபாய் ஷேக்குங்க குஷியாயிருக்காங்களாம், குமாரு..

      சரி சரி கிளம்புங்க.. மடம் முன்ன மாதிரியில்ல.. சுவாமிகள் வேற இல்ல.. சந்தானம்ன்னு ஒரு மர்மச்சாமியார் 1000 ஆத்திகவாதிங்கள பிடிச்சு காளிக்கு பலி கொடுக்குறதுக்காக கோப்பையும் கையுமா உலாத்திக்கிட்டுருக்கார்.. 999 பேரைப் பிடிச்சு உள்ள பூட்டி வச்சுருக்கறதாப் பேசிக்குறாங்க.. சுவாமிகள் வந்தா அவரையும் சேத்து 1000 ஆயிருமாம்.. தேவையில்லாம நீங்க 1000 ஆயிறாதீங்க.. சாக்ரதையா வெளிய ஓடிப் போயிருங்க.. பக்கத்து கோயில் மண்டபத்துல அம்பின்னு ஒருத்தர் கூரையப் பாத்துக்கிட்டு உக்காந்துருப்பார்.. மீதிய அவர்ட்ட கேட்டுக்கோங்க..

      • \\இப்ப கூட துபாயில சையதுன்னு ஒரு புது பாய் இதைத்தான் பாலைவனத்துக்கு நடுவால உக்காந்துகிட்டு சொல்லிட்டுருக்காராம்.. இன்னும் ஒரு மாசத்துல அரேபியப் பாலைவனம் பூரா சோலைவனமாகப் போகுதுன்னு துபாய் ஷேக்குங்க குஷியாயிருக்காங்களாம்.\\ அந்த கமென்ட் தினமலரில் வேறு எதற்கோ யாரோ போட்டது, நம்ம context -க்கு பொருத்தமா இருக்கேன்னு போட்டேன், போட்டவர் பெயரையும் போட்டேன்.

        • அப்ப நீங்க சையது சுவாமிகளாகல்லையா.. பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்துட்டீங்க சுவாமிகளே..

          • நீதான் அடுத்த மடாதிபதி என்பது உறுதின்னு சொல்லிட்டேன், அப்புறம் உன்னை ஏமாற்ற என்ன இருக்குது சிஷ்யா? அது போகமட்டும் இந்த கொமாரு பாரு ஏதோ கேள்வியோட வந்திருக்காரு, அவரோட அறிவுக் கண்களை உன் கையில் இருக்கும் டார்ச்சால வெளிச்ச்சத்தை காட்டி திறந்து விடு, ஆனந்தம் பெருகட்டும்.

            • இந்த இருட்டு மூலையிலா இவ்வளவு நாள் பதுங்கியிருந்தீங்க.. புதுப் பேரோட துபாயிலும் மடத்துக் கிளையை திறந்துட்டாரே நம்ம பலே சுவாமிகள்னு பூரிச்சுப் போயிருந்தோமே, சுவாமிகளே.. இது ஏமாத்தமில்லையா.. நீங்களே இங்க இருக்கிறப்போ, குமாருக்கு அறிவுக் கண்ணை நான் திறக்கறதா.. அது மரியாதையில்ல.. அது மரியாதையில்ல.. குமாரு கோவில் மண்டபத்துலதான் இருப்பார்… குமாரு.. குமாரு.. ஓடியாங்க.. ஓடியாங்க..

              • \\அது மரியாதையில்ல.. அது மரியாதையில்ல.\\ குருவோட வார்த்தையை மதிக்கணும், அதுதான் முதல் மரியாதை. [யோவ், பாராதிராஜா படமில்லையா அது…….இது வேற]. மொள்ளமாரி மடத்தின் அடுத்த வாரிசாக ஒரு கைதேர்ந்த முடிச்சவிக்கியைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்பதை உன்னோட இராமாயண வியாக்கியானத்தில் நிரூபித்திருக்கிறாய். தொடர்ந்து உன்னோட கேப்மாரி, முடிச்சவிக்கி தந்திரங்களை எடுத்துபோட்டு, என்னுடைய தேர்வு தோற்காது என்று ஊர் அறியச் செய்து என் பெயரைக் காப்பாற்று சிஷ்யா. உன்னை மாதிரி ஆள்தான் என் மடத்திற்கு மிகத் தோதானவன், உனக்கு ரஞ்சிதம், ச்வர்ணமால்யம்….இன்னும் என்னன்னா வேண்டுமோ அத்தனையும் உனக்கு இப்போதே கிடைக்கும், எனக்கு அப்புறம் நீ முழு ராஜா தான். முதலில் குமாரின் அறிவுக் கண்களைத் திறந்து விடு, அப்புறம் ஜன்னலைத் திறந்து விடு……… காத்து வருதோ ரஞ்சிதம் வருதோ யாருக்குத் தெரியும்.

                • அடப் பாவமே, சுவாமிகளே, ஒரு வாரம் காஞ்சு போய் கிடந்து முடிச்சவிக்கி, ரஞ்சிதம், சொர்ணமால்யம்ன்னு மந்திரம் சொல்றாப்லயே சொல்லிட்ருக்கீங்களே… ப்யூசைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்க போலருக்கு.. முதல்ல அதைப் போடுங்க.. எங்கயிருக்குன்னு உங்களுக்குத்தானே தெரியும்.. முதல்ல வெளிச்சம் வரட்டும், சுவாமிகளே… ரஞ்சிதம் உள்ளயிருக்கா, வெளிய இருக்கான்னு அப்பதான் தெரியும்…

                  • உனக்கு இருட்டுதானே சவுகரியம் சிஷ்யா………….. அப்புறம் என்ன. யார் உள்ளே இருந்தா என்ன, நீ என்ஜாய் பண்ணு. மடமே உனக்குத்தான், அதன் சொத்துக்களும் உனக்குத்தான், முக்கியமா கில்மாக்கள். ஹி…….ஹி…….ஹி…….

                    • நோ..தாங்க்ஸ், சுவாமிகளே.. கடந்த ஒரு வார காலமா இன்ஃஃபிரா ரெட் காமெராக்களை செட் பண்ணி வச்சுருக்கீங்கன்னு இன்னோரு வௌவ்வால் சொல்லுது.. ஆயிரங்கால் மண்டபமே எனக்குப் போதும்.. என்னிக்காவது சிவபெருமானை தரிசிக்கும் பேறாவது கிட்டும்…

                    • யாருப்பா அது, இப்படி ஏன் பிழைப்புல மண்ணை வாரிப் போடுவது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு மொள்ளமாரி, முடிச்சவிக்கி, கேப்மாரி இப்படி எல்லா தகுதியும் மேக்சிமம் அளவுக்கு இருக்கும் ஒரு ஆளை கண்டுபுடிச்சு மடத்துக்கு புடிச்சுகிட்டு வந்தா, இப்படியா டைவர்ட் பண்ணி உடுறது? இந்த மாதிரி இன்னொரு ஆளுக்கு நான் எங்கே போவேன். அட அப்படியே கேமரா வச்சிருந்தா, அது நானே இல்லை, மார்பிங் பண்ணியதுன்னு சொல்லு சிஷ்யா. இப்படியெல்லாம் பயந்தா நீ ஒரு சுகத்தையும் வாழ்க்கையில பார்க்க முடியாது. அப்படிப் போகும் உன் கட்டை வேகாது.

                    • // நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு மொள்ளமாரி, முடிச்சவிக்கி, கேப்மாரி இப்படி எல்லா தகுதியும் மேக்சிமம் அளவுக்கு இருக்கும் ஒரு ஆளை கண்டுபுடிச்சு மடத்துக்கு புடிச்சுகிட்டு வந்தா, இப்படியா டைவர்ட் பண்ணி உடுறது? இந்த மாதிரி இன்னொரு ஆளுக்கு நான் எங்கே போவேன். //

                      எங்கயும் போகவேணாம், உங்க செல்லை குளோனிங் பண்ணி, புது சின்னச் சுவாமிகளை உருவாக்கி, உங்கள மாதிரியே ட்ரெய்ன் பண்ணிட்டு அவுத்து விட்டுருங்க, சுவாமிகளே..

  118. \\சந்தானம்ன்னு ஒரு மர்மச்சாமியார்\\
    \\பக்கத்து கோயில் மண்டபத்துல அம்பின்னு\\

    இந்த ரெண்டு பேத்துல நீர் யாரு அப்பனே?

    • சந்தானத்தை சந்தேகிப்பதை இன்னும் சுவாமிகள் விடல்லையே.. ரொம்ப சந்தேகம்.. இல்ல சந்தானம்.. இல்ல இல்ல சந்தோசம்…

  119. //எங்கயும் போகவேணாம், உங்க செல்லை குளோனிங் பண்ணி, புது சின்னச் சுவாமிகளை உருவாக்கி, உங்கள மாதிரியே ட்ரெய்ன் பண்ணிட்டு அவுத்து விட்டுருங்க, சுவாமிகளே..//

    அம்பீஈஈஈ!! வொய் திஸ் கொலவெறி! அந்தக் குளோனிங் 2 power 294ஆ பெருகிடுச்சின்னா என்ன பண்றது!!!

    • அய்யய்யோ.. தப்பு பண்ணிட்டேனே.. இருங்க.. இருங்க.. அப்படி நடக்க வாய்ப்பில்லை.. சுவாமிகளின் பூர்வாசிரம இயல்பான ’குறுக்கால வந்ததையெல்லாம் கடித்துக் குதறும் உந்துதல்’ குளோனுங்களுக்கும் இருக்கும்ல.. 2^234 ல் ஒண்ணுதான் கடைசியில் மிஞ்சி சின்னச் சுவாமிகளாகும்.. கவலையை விடுங்க..

      • \\ 2^234 ல் ஒண்ணுதான் கடைசியில் மிஞ்சி சின்னச் சுவாமிகளாகும்.. கவலையை விடுங்க.\\ உனக்கு ஞாபக மறதியை கொடுத்த யாம் இன்று அதை விலக்குகிறோம். அப்படி கடைசியா மிஞ்சிய ஒன்னே நீதான் அருள்மிகு கில்மானந்தா சுவாமிகள் அவர்களே. ஸ்ரீ ஸ்ரீ கில்மானந்தா சுவாமிக்கு ஜே………….

        • இந்தப் புரூடாவெல்லாம் இனிமேல் நடக்காது.. இங்கதான் சுவாமிகளே அறிவியல் நிக்குது..

  120. மைசூருக்கு ஒரு கில்மாவைத் தள்ளிக் கொண்டு போனான் ஜெயேந்திரன். அவனது குரு திரும்பவும் அழைத்துவந்து மடத்தை கொடுத்தான். இப்போ என்னோட நிலைமையும் அது போல ஆயிடுச்சே. என்னோட சிஷ்யன் எந்த கில்மாவை தள்ளிக் கொண்டு எங்கே போகப் போகிறான் என்று தெரியவில்லையே, என்னோட மடத்துக்கு இந்த மாதிரி கடைந்தெடுத்த கேப்மாரி இன்னொருத்தன் கிடைப்பானா? சிஷ்யா, மனதை மாற்றிக் கோள், இன்றைக்கு ஒரு கில்மாதான் மடத்துக்கு வந்தால் தினமும் ஒரு கில்மா? யோசித்து நல்ல முடிவை எடு.

    இந்த ஒருத்தனை சமாளிக்க 294 பேர் கொண்ட நாத்திக கமிட்டிகளால் முடியவில்லை, உங்கள் டவுசர் ஈரமாகியது, அப்படியிருக்க 2 ^294 என்பது போன்ற ஆசையெல்லாம் உங்களுக்கு எதற்கு அப்பனே? அப்படி ஒன்று நடந்தால் மக்கள் எல்லோரும் இறை நம்பிக்கையடைவார்கள், நாடு நலம் பெரும்.

    • கில்மாக்களையும் குளோன் பண்ணி சின்னச் சாமிக்கு கொடுத்துக்குங்க, சுவாமிகளே..

      • \\கில்மாக்களையும் குளோன் பண்ணி சின்னச் சாமிக்கு கொடுத்துக்குங்க, சுவாமிகளே.\\ நான் எட்டு அடி என்றால் நீ பதினாறு அடி பாய்கிறாய் சிஷ்யா. மொள்ளமாரி மடத்தை நீதான் சரியாக வழி நடத்திச் செல்வாய். ஒரிஜினல் கில்மாக்கள் தினம் ஒன்று கிடைக்கும் பொது நீ எதற்காக குளோனிங் செய்ய வேண்டும்? தினம் ஒன்றை மஜா பண்ணு. உனக்கு அருள்மிகு கில்மானந்தா சுவாமிகள் என்ற பட்டத்தையும் மக்கள் வழங்குவார்கள்.

      • இருவரும் சேர்ந்து மடத்தை நாறடித்துவிடுவீர்கள் போலிருக்கிருதே! கிளம்புங்கள் கிளம்புங்கள் ரஞ்சிதா வரட்டும் சீ காத்து வரட்டும். உங்களோடு சேர்ந்து நானும் கெட்டுடுவேன் போலிருக்கிறது.

        • மடத்தோட ஒரிஜினல் 295 வந்துட்டாரு.. நான் எங்கே சந்தானம் புதுசா நாறடிச்சேன்… உங்க மேல இருக்குற கோவத்துல என்ன கில்மானந்தாவாக்கப் பாக்குறாரு நம்ம சுவாமிகள்.. மடத்தோட வாரிசு உரிமையை விட்டுக் கொடுத்துறாதீங்க..

  121. மதப்பித்து பிடித்த மானுடர்கள் மண்ணோடு போகவேண்டும்;
    மக்கள் மனங்கள் எல்லாம் தூய எண்ணங்களோடு மலர வேண்டும்;
    உன்னதமான மேன்மை நிலை கொண்ட ஆத்திகமே நாத்திகம் எனப் புரியும் உணர்வு வேண்டும்;
    இதற்கு எல்லாம் வல்ல குயவனே துணை புரியவேண்டும்; அருள் புரியவேண்டும்!!

  122. மனிதன் வாழ்வில் இருக்க வேண்டுவன : நேர்மை, நாணயம், மனத்தூய்மை, மாசிலா அன்பு, நற்பண்பு, நல்லுழைப்பு, ஈகை, சமுதாய அக்கறை, சமூக ஒற்றுமை, இயற்கையுடன் இயைந்த வாழ்வு முதலியன.

    மனிதர்தம் வாழ்வு சிறக்க மனிதனால் கண்டுணரப்பட்ட இத்தகைய சிறந்த விஷயங்களை அனைத்து மனிதரிடையேயும் கொண்டு செலுத்தத்தக்க வகையிலான சமூக அமைப்பினை ஏற்படுத்தலே மனிதனின் முழுமுதற்கடமையாக இருக்கவேண்டும். இதுவே நாம் ‘படைக்கப்பெற்றதற்கு’ நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்; அதுவே ‘படைத்தவனின்’ விருப்பமும் ஆகும்.

    ஆத்திகன் நாத்திகன் இருவரும் ஒன்றிணையும் புள்ளியாகவும் இதுவே இருக்க முடியும். இந்தப் புள்ளியில் சங்கமித்தலே மனித குலத்திற்கு மேன்மை சேர்ப்பதாக அமையும்.

  123. \\மதப்பித்து பிடித்த மானுடர்கள் மண்ணோடு போகவேண்டும்;\\ நீர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கடைசியா எல்லோருக்கும் நடக்கப் போவது இது தான், ரிஷின்னு பேர் வச்சிருக்கிறதால சாபம் விட்டாத்தான் பெயருக்கே அர்த்தம் இருக்கும்னு நினைப்பீரு போல!!

    \\மக்கள் மனங்கள் எல்லாம் தூய எண்ணங்களோடு மலர வேண்டும்;\\ முதலில் உமது மனது தூய்மை ஆயிடுச்சா? ஒரு லோடு அழுக்கை வச்சுகிட்டு ஊருக்கு உபதேசமா?

    \\உன்னதமான மேன்மை நிலை கொண்ட ஆத்திகமே நாத்திகம் எனப் புரியும் உணர்வு வேண்டும்;\\ இப்படி ஒரு விளக்கத்தை வீரமணி கூட குடுத்திருப்பாரானு தெரியலையே?

    \\இதற்கு எல்லாம் வல்ல குயவனே துணை புரியவேண்டும்; அருள் புரியவேண்டும்!!\\ அருள் என்ற வார்த்தை நாத்தீகன் வாயில் இருந்து வருவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஒரு வேலை பெரியார் சிலை, அதற்க்கு மாலை எல்லாம் போடுவது போல இதுவும் ஒன்றோ!!

    • // \\மக்கள் மனங்கள் எல்லாம் தூய எண்ணங்களோடு மலர வேண்டும்;\\ முதலில் உமது மனது தூய்மை ஆயிடுச்சா? ஒரு லோடு அழுக்கை வச்சுகிட்டு ஊருக்கு உபதேசமா? //

      அதானே, சுவாமிகளாலேயே மனச தூய்மையாய் வச்சுக்க முடியல்ல.. வேற யாருக்காச்சும் மனச தூய்மையா வச்சுக்க முடியுமா.. நம்பச் சொல்றீங்களா…

      • \\மனச தூய்மையாய் வச்சுக்க முடியல்ல.. வேற யாருக்காச்சும் மனச தூய்மையா வச்சுக்க முடியுமா.. நம்பச் சொல்றீங்களா.\\

        அப்புறம் எதுக்கு சிஷ்யா \\மக்கள் மனங்கள் எல்லாம் தூய எண்ணங்களோடு மலர வேண்டும்;\\ என்று பஜனை பாடிக்கொண்டு இருக்கிறீர்கள்? ஒரு வேலை, வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை, வானவில்லை உடுத்திக் கொள்ள ஆசை அப்படின்னு வைரமுத்து எழுதினா மாதிரி கவிதை எழுதுறீங்களா?

        • //அப்புறம் எதுக்கு சிஷ்யா \\மக்கள் மனங்கள் எல்லாம் தூய எண்ணங்களோடு மலர வேண்டும்;\\ என்று பஜனை பாடிக்கொண்டு இருக்கிறீர்கள்?//

          அதானே…!!! நாம கீர்த்தனை சொல்லிண்டு வந்தேள்னா அது அருமையான பஜனை. மக்கள் மனசு தூய்மையடைஞ்சு ஜீவன் முக்தியாகி உய்யறதுக்கான ஒரே வழி நாம கீர்த்தனைதான். இந்த பேசிக் டெக்னாலஜி கூடத் தெரியாம அம்பி இப்படிக் கொழந்தாயாவே இருக்கலாமா!!

          • \\நாம கீர்த்தனை சொல்லிண்டு வந்தேள்னா அது அருமையான பஜனை. மக்கள் மனசு தூய்மையடைஞ்சு ஜீவன் முக்தியாகி உய்யறதுக்கான ஒரே வழி நாம கீர்த்தனைதான்.\\ எந்த நாமம்னு சொல்லவில்லையே. சொல்லாம விட்டா கில்மா நாமம் கூட நாமம்தனேன்னு அவரு பஜனையை ஆரம்பிச்சிடுவாரு.

            • ஒரு பக்கம் கில்மாக்களைக் காட்டி சொர்க்கம் இதுதான்னு சொல்றது, இந்தப் பக்கம் கில்மா பஜனை பண்றதா அவதூறுகளை பரப்புறது.. சுவாமிகளே, குயவன்னு ஒருத்தன் இருக்கான்.. மறந்துறாதீங்க..

              • ஆமாயா, இருக்கான், இப்போ அவன் தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருக்கானாம், நீ இராமாயணத்துக்கு குடுத்த பொழிப்புரையை படிச்சிட்டு!!

                • நீங்க ஒரு பொழிப்புரையைக் குடுத்து விழுந்து விழுந்து சிரிக்க வெச்சுருங்க..

                  • இதென்னது கணக்குப் பாடமா? -1 கூட +1 போட்டா பேலன்ஸ் ஆவுறதுக்கு? நீ பண்ணியிருக்கும் டேமேஜ் ரிபேர் ஆவுறா மாதிரியா பண்ணியிருக்கே? இந்த மாதிரி ஆளாளுக்கு அவனவன் நினைச்சதப் பேசித் தானேய்யா இந்து மதத்தை நாசம் பண்ணி வச்சிருக்கீங்க? ஊர் ஊருக்கு சாமியார்களும், கடவுளின் அவதாரங்களும் இந்தியாவில் மட்டும் தானே நடக்குது? அது எப்படி ஆரம்பிக்குது? உன்னை மாதிரி அடிப்படையே இல்லாம அள்ளி விடும் பயல்களால் தானே? உங்களை ஒழுங்கு செய்தாலே போதும், எல்லாம் ஒழுங்காயிடும்.

                    • அடுக்கடுக்கா குத்தம் சுமத்துறீங்களே.. சுவாமிகள் மேல ராமனோ, குயவனோ எறங்கிப் பேசுற மாதிரியே இருக்கே.. அய்யய்யோ.. பயமாருக்கே.. அப்பறம் வரேன் சுவாமிகளே..

            • மஹாரண்யம் டிரிபுள் ஶ்ரீ (மொதல்ல டபுள் ஶ்ரீன்னு சொல்லிட்டேன் மன்னிச்சுக்கங்க) முரளீதரஜி என்ன சொல்றாருன்னா.. குடும்பத்துல சகல சௌகர்யங்களும் பெருக, ஜீவன் முக்தி பெற, பூலோகம் ஸ்வர்க்கம் பாதாளலோகம் இம்மூன்றையும் கடந்து அந்தர்லோகம் போக ஹரே கிருஷ்ணா ஹரே ராமா சொல்லச் சொல்றாரு. அம்பி! கரெக்ட்டா பாயிண்டைப் புடிச்சுங்க. கில்மா பஜனைக்குப் போயிடாதீங்க. எங்களுக்கு பரிசுத்தமான 295 வேணும்.

              • \\டிரிபுள் ஶ்ரீ (மொதல்ல டபுள் ஶ்ரீன்னு சொல்லிட்டேன் மன்னிச்சுக்கங்க) முரளீதரஜி \\ உங்க கண்ணுக்கு நல்லவன் எவனுமே தென்படமாட்டானா? எங்க போனாலும் முடிச்சவிக்கி, மொள்ளமாரி, கேப்மாரியாவே புடிக்கிரீங்கலேப்பா………?

                • அவரும் மொள்ளமாரிதானா!!! விஜய் டிவில டெய்லி கார்த்தால ஏழு மணிக்கு ஆஜராயிடறாரே! இதனால எத்தனை லட்சம் ஜனங்க பார்த்து வாழ்க்கைல டைவர்ட் ஆயி கஷ்டப்படறாங்க!! எவன்தாண்டா இங்க நல்ல ஆன்மிகவாதி??? தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.. அப்பப்பா!!

                  • எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் நல்ல ஆன்மீகவாதியோ, இல்லையோ, ஆனால் ஆன்மீகப் போராளின்னு ஒருத்தர் இருக்காருன்னா அவர் வேறு யாருமில்ல, நமது சுவாமிகள் தான்..

              • பரிசுத்தமான 295 வேணும்னா, திருப்பதி லட்டைத் தவிர வேறு லட்டுகளை ஏறிட்டும் பாக்காத நம்ம சின்ன பாஸு சந்தானம் தான்..

    • // நீர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கடைசியா எல்லோருக்கும் நடக்கப் போவது இது தான்//
      அப்பூடியா…!!! சொல்லவேயில்ல..!!

      //ரிஷின்னு பேர் வச்சிருக்கிறதால சாபம் விட்டாத்தான் பெயருக்கே அர்த்தம் இருக்கும்னு நினைப்பீரு போல!!//
      சாபமா..? சரி. வச்சிக்குங்க..

      //முதலில் உமது மனது தூய்மை ஆயிடுச்சா? ஒரு லோடு அழுக்கை வச்சுகிட்டு ஊருக்கு உபதேசமா?//
      எம்மனசுல ஒரு லோடு அழுக்கு இருந்துச்சா? எந்த எடை மெஷின்ல செக் பண்ணுன தங்கம்?

      //இப்படி ஒரு விளக்கத்தை வீரமணி கூட குடுத்திருப்பாரானு தெரியலையே?//
      ரஞ்சிக்கோட்டை வாலிபனுக்கு அடுத்த இளவலா நீரு இருக்கும்போது நான் வீரமணிய தூக்கி சாப்புட்டுட்டுப் போறேன்… அவ்ளோதானே! 🙂

      • \\எந்த எடை மெஷின்ல செக் பண்ணுன தங்கம்?\\நான் Gold-ன்னு கண்டு புடிச்சியே, உன்னை எப்படி பாராட்டினாலும் தகும்யா!!

        \\ரஞ்சிக்கோட்டை வாலிபனுக்கு அடுத்த இளவலா நீரு இருக்கும்போது நான் வீரமணிய தூக்கி சாப்புட்டுட்டுப் போறேன்.\\ ஒருத்தன் ஆன்மீகத்தின் பேர்ல ஊரை ஏமாத்துறான், இன்னொருத்தன் அதையே நாத்தீகத்தின் பேர்ல செய்யுறான். வித்தியாசம் இல்லை, ரெண்டுமே பக்கா 420.

      • \\சாபமா..? சரி. வச்சிக்குங்க.\\ யோவ்…….. மண்ணோட போகட்டும்ன்னு சொல்லிட்டு, அது என்ன சாபமான்னு என்னையே திரும்ப கேட்டா எனக்கென்ன தெரியும்? ஒரு வேளை உங்க நண்பர்கள் கல்யாணத்துக்குப் போயி “மண்ணோட போகட்டும்” சொல்லி வாழ்த்திட்டு வருவீரோ? வைகாசி பொறந்தாச்சு ஜனகராஜ் சொல்ற மாதிரி உங்க ஊர்ல இதைத்தான் வாழ்த்துன்னு சொல்லுவாங்களோ!!

          • \\ஹைய்யோ…ஹைய்யோ கலாய்ச்ச்சிட்டாராம்மா! 🙂 )))))))\\ உம்மகிட்ட பதில் இல்ல……….. அதுக்கு ஏன்யா இப்படி குய்யோ……. முறையோன்னு ஒலமிடுரீரு?

            • //உம்மகிட்ட பதில் இல்ல……….. அதுக்கு ஏன்யா இப்படி குய்யோ……. முறையோன்னு ஒலமிடுரீரு?///

              மறுபடியும் கலாய்ச்சிட்டாராம்மா!! ஹி..ஹி.. முடியல :-))))

              மத அபிமானம் கல்யாணம் காட்சியோட முடிஞ்சுட்டாக் கூடப் பரவால்லியே..! அடுத்தவனை வெட்டி சாய்க்கற அளவுக்குப் போறதத்தான் மதப்பித்து பிடிச்சவன்னு சொல்லுவாங்க. இந்த ஃபண்டமண்டல் ஸ்டேட்மென்ட் கூடப் புரியலேன்னா என்ன பண்றது!! குயவனே வந்து காப்பத்தப்பா!!

              • \\மறுபடியும் கலாய்ச்சிட்டாராம்மா!! ஹி..ஹி.. முடியல 🙂 )))\\ மறுபடியும் பதில் தெரியல……….இப்படி நீயும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம்தான் ஆக்ட் குடுப்பியோ தெரியலியேய்யா …!!

                \\அடுத்தவனை வெட்டி சாய்க்கற அளவுக்குப் போறதத்தான் மதப்பித்து பிடிச்சவன்னு சொல்லுவாங்க. \\

                நீ இந்த மாதிரி எந்த statistics -ம் இல்லாமா கதையளக்கக் கூடாது. மனுஷன் வரலாறு எழுத ஆரம்பிச்ச நாளில் இருந்து இதுவரை எத்தனை பேர் வேட்டி சாய்க்கப் பட்டுள்ளார்கள், அதில் இறை நம்பிக்கை காரணமாக எத்தனை பேர் கொள்ளப் பட்டார்கள் என்று கணக்கு இருந்தால் ஆதாரத்தோடு காண்பிக்கவும், அதுக்கு அப்புறமா மனுஷன் சாவறதுக்கு இறை நம்பிக்கை தான் காரணமான்னு உட்கார்ந்து யோசிப்போம். சும்மா வாய் இருக்குத்துன்னு எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது.

                • “மதப்பித்து, மதவெறிக்கும் இறை நம்பிக்கைக்கும் சம்பந்தமேயில்ல! ரெண்டையும் முடிச்சுப் போடக்கூடாது” இதை எத்தனை பேரு எத்தனை தடவை ராசா உன்கிட்ட சொல்லணும். சந்தானமும் பாவம்.. சொல்லிச் சொல்லி ஓய்ஞ்சு போயிட்டாரு. உனக்காக நான் உட்கார்ந்து தீஸீஸா எழுத முடியும். போய் வரலாறை நல்லாப் படிச்சுப் பாருய்யா. உலகத்துல இருக்கற அத்தனைப் பிரச்சனைக்கும் மதவெறிதான்யா காரணம். டைனொசர் காலத்துல இருந்து தொபுக்கடீர்னு குதிச்சு கலிகாலம் 2012க்கு வந்து சேருப்பா. ஆவ்வ்வ்வ்..!!!

                  • \\“மதப்பித்து, மதவெறிக்கும் இறை நம்பிக்கைக்கும் சம்பந்தமேயில்ல! ரெண்டையும் முடிச்சுப் போடக்கூடாது” இதை எத்தனை பேரு எத்தனை தடவை ராசா உன்கிட்ட சொல்லணும்.\\ அப்படி நான் முடிச்சு போட்டதாக நீர் காண்பிக்க முடியுமா? மதப்பித்து, மதவெறி என்று நீராக ஒரு அர்த்தத்தைக் கர்ப்பித்துக் கொண்டால் அதற்க்கு ஆன்மீகவாதிகள் பொறுப்பல்ல. அவரவர்க்கு இறைவனால் கொடுக்கப் பட்ட சட்ட திட்டங்களை பின்பற்ற நினைக்கிறார்கள், அதிலிருந்து பாதை தவறக் கூடாது என்று நினைக்கிறார்கள். இதை பித்து, வெறி என்று நீர் நினைப்பது உமது அறியாமை. சில சமயம் மத நூல்களில் சொல்லப் பட்டதை தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு சிலர் வழி தவறிப் போகலாம். அதற்காக இறை நம்பிக்கையே தவறு என்றாகி விடாது.

                  • \\சந்தானமும் பாவம்.. சொல்லிச் சொல்லி ஓய்ஞ்சு போயிட்டாரு.\\ ஆனால் நீர் இன்னும் ஓயாமல் லந்து செய்து கொண்டிருக்கிறீரே??!!
                    \\உனக்காக நான் உட்கார்ந்து தீஸீஸா எழுத முடியும். போய் வரலாறை நல்லாப் படிச்சுப் பாருய்யா. உலகத்துல இருக்கற அத்தனைப் பிரச்சனைக்கும் மதவெறிதான்யா காரணம்.\\ நீர் தீசிஸ் எழுதப் போகிறீரா? எழுதும்போது உமக்கே வாந்தி வருமேயா? வரலாறு, கணக்கு, அறிவியல்ன்னு எங்களுக்கும் தெரியும், வெட்டியா இவ்வளவு எழுதும் உமக்கு, நீர் சொல்வதற்கான ஆதாரமாக இரண்டு வரிகள் எழுத வக்கில்ல, எதற்கையா உமது நேரத்தையும், எனது நேரத்தையும் வீணாக்க வேண்டும்?

                    • லந்து செய்வது நீரா இல்லை நானான்னு படிக்கிற புள்ளைக தீர்மானிச்சுக்கட்டும். உமக்குத் தெரிஞ்ச வரலாறுதான் சந்தி சிரிக்கிதே! உமக்கு யாம் செய்வது வீண்வேலையென்றால் உன் ‘சின்சியர்’ சிகாமணி வேலையைப் பார்த்துக்கொண்டு போகலாமே. வழிப்பிள்ளையாருக்கு எதுக்கு தேங்காய் உடைச்சிக்கிட்டு இருக்கே!!

                    • \\எவன்தாண்டா இங்க நல்ல ஆன்மிகவாதி??? தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.. \\ ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று மூட்டை முடிச்சுகளோடு கோயம்பேடு போய் அங்கே போறவன் வர்றவன் கிட்ட நான் எந்த ஊருக்குப் போகணும்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.. என்று கேட்கும் கோயான் நீர். உமக்கு எதற்கு வீராப்பு?

                      \\உமக்கு யாம் செய்வது வீண்வேலையென்றால் உன் ‘சின்சியர்’ சிகாமணி வேலையைப் பார்த்துக்கொண்டு போகலாமே. \\ நீர் ஒரு பாயிண்டைச் சொல்ல விரும்பினால் ஆதாரத்தோடு முன்வைக்க வேண்டும், உமது கற்பனை, அல்லது மனதில் தோன்றியது எல்லாம் வாந்தியெடுத்து வைத்து ஆஹா என்ன நறுமணமாக உள்ளது என்று நீரே பீற்றிக் கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்வது என்னுடைய பார்வையில் வீண் வேலைதான். மேலும், நான் ஒருபோதும் உம்மிடம் வந்து நான் சொல்வதை நம்பு என்றோ, உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்றோ சொன்னதில்லை, நீர் கேட்கும் கேள்விக்குப் பதில் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் நிறுத்த வேண்டுமென்றால் நீர் சீண்டுவதை நிறுத்த வேண்டும், முதலில் அதைச் செய்யும்.

      • \\அப்பூடியா…!!! சொல்லவேயில்ல..!!\\ சொல்லிட்டு வரதுக்கு இது என்ன கவுர்மெண்டு ஆர்டரா? சொல்லாம வந்து தூக்குறது தான் கண்ணா எமனோட ஸ்பெ ஷாலிடியே!!

        • நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது
          ஆன வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்!!

          – இது ரஜினியா இல்லை எமனா?? ஒரே கன்ஃஃப்ப்யூஸ்ஸன்!!

          • \\நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது
            ஆன வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்!!

            – இது ரஜினியா இல்லை எமனா?? ஒரே கன்ஃஃப்ப்யூஸ்ஸன்!!
            \\

            நான் எப்போ வேணுமின்னாலும் வருவேன், எப்படி வேண்டுமானாலும் வருவேன்- அப்படின்னு மாத்திக்கோ அன்பரே.

            • தாஸு பாஸு
              நேத்தே வந்துட்டாருயா…வந்துட்ட்டாரு..!! நேத்து மோசமான கனவு. கனவுல நான் மர் கயா ஆயிட்டேன். ஆவியா சுத்தற மாதிரி கனவு. ஆனா அந்த ஆவி லைப் என்ஜாய்புல்லா இருந்தது. மை ஹெட் பிராமிஸா சொல்றேன். இது நடந்தது.

              • ஆவின்னா இட்லி சுடும்போது மேலே வருமே அதுவா? இல்லை குக்கரில் விசில் வரும்போது வருமே அதுவா? எதுவா இருந்தாலும், ஒரு மனுஷன் அந்த மாதிரி ஆவுறது நல்லா இல்லியே……….

                \\என்ஜாய்புல்\\ இந்த வார்த்தையை ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரிக்கு எழுதி போடுய்யா, நம்ம பாஷைக்கு புதுசா ஒரு வார்த்தை கிடைச்சிருக்குன்னு வெள்ளைக் காரன் ரொம்ப சந்தோஷப் படுவான், உனக்கு அவார்டு கிடைக்கிறதுக்கும் சான்ஸ் இருக்கு.

                • பரிசுத்த ஆவில இட்லி வேகுமானு தி.க காரன் கேட்கிற மாதிரியே கேட்குறீங்களே!! கிறித்தவர்கள் கோச்சுக்கப் போறாங்க.

                  பூவை புஷ்பம்னும் சொல்லலாம்; புய்ப்பம்னும் சொல்லலாம். இதுல என்ன இருக்கு ராசா! எலக்கண, எலக்கியச் சுத்தமா நாமெல்லாம் தமிழ்ல எழுதிக் கிழிச்சிட்டாலும்!! எடுக்கறதெல்லாம் வாந்தி! இதுல நல்ல வாந்தி எது கெட்ட வாந்தி எது!!!

                  • \\பூவை புஷ்பம்னும் சொல்லலாம்; புய்ப்பம்னும் சொல்லலாம். இதுல என்ன இருக்கு ராசா!\\ எப்படி வேணுமின்னாலும் எழுது ராசாவின் ராசா………. ஆனா இருக்கிற வார்த்தையா எழுது, இப்படி இன்னொருத்தன் மொழியை கேவலப் படுத்தலாமா? ஏதோ 1947 -க்கு முன்னாடி நீ கிடைச்சிருந்தா இதை வச்சே வெள்ளைக் காரனை இந்தியாவை விட்டே விரட்டி இருக்கலாம், இப்ப எதுக்கு?

                    \\எடுக்கறதெல்லாம் வாந்தி! இதுல நல்ல வாந்தி எது கெட்ட வாந்தி எது!!!\\ நீ வாந்தி நல்லா எடுப்பேன்னு இந்த பக்கம் பூராவும் நிரூபிச்சிருக்கிறியே ராசாவின் ராசா……. அதை வார்த்தையால சொல்லி இன்னமும் இடத்தை நாரடிக்கனுமா?

                    • இங்கிலிபிச்சுல பாதி வார்த்தை அயல்மொழிகள்ள இருந்து வந்ததுதாங்கிறதாவது உனக்குத் தெரியுமா? கடைசில உமக்கு மொழியறிவும் இல்லங்கறது தெரிஞ்சு போச்சா! நீ எடுத்த கில்மா கலீஜ்களால இந்தப் பின்னூட்ட டேட்டாபேசே டான்ஸு ஆடுது. இதுல இன்னும் வேறயா.. எடு எடு. அள்ளுறதுக்கு வினவோட பின்னூட்டப் பெட்டி தயாராதான் இருக்கு. மக்கள்தான் மூக்கைப் பிடிச்சிக்கிட்டுப் போறாங்க.

                    • \\இங்கிலிபிச்சுல பாதி வார்த்தை அயல்மொழிகள்ள இருந்து வந்ததுதாங்கிறதாவது உனக்குத் தெரியுமா? கடைசில உமக்கு மொழியறிவும் இல்லங்கறது தெரிஞ்சு போச்சா!\\ அதைத்தான் எழுதிப் போடு உனக்கு அவார்டு வரும் என்றேன். எல்லாம் தெரிந்த நீர் எதற்காக ஒன்றும் தெரியாத என்னிடம் நூறு கமெண்டு போட்டு பதில் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்?

                  • \\பரிசுத்த ஆவில இட்லி வேகுமானு தி.க காரன் கேட்கிற மாதிரியே கேட்குறீங்களே!! \\ அப்படி அவன் மட்டும்தான் கேட்கனும்னு ஏதாவது காபிரைட்ஸ் செய்து வைத்துள்ளார்களா?

                    • நீ கேட்கக்கூடாதுன்னு யாரும் கூவல தாஸு. அதுமாதிரியே கேக்கிறீயளேன்னு சொன்னேன். கேளு..கேளூ நல்லாவே கேளு.

                    • \\நீ கேட்கக்கூடாதுன்னு யாரும் கூவல தாஸு. \\ கூவமட்டேன்னு எதுக்குய்யா ஊளையிடுரே?

  124. \\மனிதன் வாழ்வில் இருக்க வேண்டுவன : நேர்மை, நாணயம், மனத்தூய்மை, மாசிலா அன்பு, நற்பண்பு, நல்லுழைப்பு, ஈகை, சமுதாய அக்கறை, சமூக ஒற்றுமை, இயற்கையுடன் இயைந்த வாழ்வு முதலியன.

    இதென்னது தமிழ் சினிமாவுல கடைசியில அறிவுரை சொல்ற மாதிரி வசனம் வருமே அது போல இருக்கே!!

    \\மனிதர்தம் வாழ்வு சிறக்க மனிதனால் கண்டுணரப்பட்ட இத்தகைய சிறந்த விஷயங்களை அனைத்து மனிதரிடையேயும் கொண்டு செலுத்தத்தக்க வகையிலான சமூக அமைப்பினை ஏற்படுத்தலே மனிதனின் முழுமுதற்கடமையாக இருக்கவேண்டும்.\\
    மனிதர் வாழ்வு சிறக்க இதுதான் வேணும்னு கண்டுணர்ந்தவங்க யாருன்னு கொஞ்சம் பேரை குடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.

    \\இதுவே நாம் ‘படைக்கப்பெற்றதற்கு’ நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்; அதுவே ‘படைத்தவனின்’ விருப்பமும் ஆகும்.\\

    படைத்தவன் விருப்பம் என்னன்னு உங்களுக்கு இ-மெயிலில் அனுப்பியிருப்பார் போல இருக்கே!!

    \\ஆத்திகன் நாத்திகன் இருவரும் ஒன்றிணையும் புள்ளியாகவும் இதுவே இருக்க முடியும். இந்தப் புள்ளியில் சங்கமித்தலே மனித குலத்திற்கு மேன்மை சேர்ப்பதாக அமையும்.\\ இது ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒன்னு சேர்ந்து ஆட்சியமைக்கணும் என்பது மாதிரி இருக்கு. அதெப்படி ஐயா நடக்கும்? ஆத்தீகன் கடவுள் இருக்காரு, அவரை வணங்கனும்பான், நீங்க அதெல்லாம் ஒன்னும் இல்ல எல்லாம் சூன்யம் அப்படீம்பீங்க, இது ரெண்டும் எங்க போயி ஒண்ணா சேரும்?

  125. கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டு ஒரு புதிய மதத்தை உருவாக்கிக்கொள்ளும் மதவாதிகள் இறுதியில் இஸ்திரிலோலாயிசத்தில் சரணடைந்து விடுவது போல துவக்கத்தில் அறிவியல் பூர்வமாக சென்று கொண்டிருந்த இந்த விவாதம் இறுதியில் கில்மாயிசத்தில் உழன்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் ஆத்திகனா? அல்லது நாத்திகனா?

    • இஸ்திரியா? அது என்ன துணிக்கு போடுவாங்களே அதுவா? அது சரி உனக்குத்தான் கொமாரு ஏதோ கேட்டுகிட்டு இருக்காரு, நீ அதுக்கு பதில் சொல்லி பரிசுத்தமா சீக்கிரம் சொர்க்கத்துக்கு போக வேண்டியது தானே, மத்தவன் சரியில்லைன்னா அதுக்கு நீ ஏன்யா புலம்புறே?

      • ஆங்ங்… கில்மா கில்மா.. கில்மாலே…..
        ஒரே ஜில்பாஞ்ச்சியா இருக்குபா.. படா பேஷா கண்டினியு பண்ணுபா

    • ஆரம்பம் ஆன்மிகமா இருந்தாலும் முடிவு ஆலிங்கனம்தான்!!! ஒரே கில்மாதான்!!
      ஸ்பிரிட்சுவல் யூனியன்னா என்னன்னு தெரிஞ்சிக்குங்க சந்தானம்.

  126. //இதென்னது தமிழ் சினிமாவுல கடைசியில அறிவுரை சொல்ற மாதிரி வசனம் வருமே அது போல இருக்கே!! //

    அறிவுரையெல்லாம் இந்தக் காலத்துல யாரு கேட்கறா. ரெண்டு டப்பாங்குத்து நாலு கும்மாங்குத்து இதைத்தேன் அத்தன பயபுள்ளைகளும் ரசிக்குதுக… உங்க ஆட்டம் மாதிரி :-)))))

    //மனிதர் வாழ்வு சிறக்க இதுதான் வேணும்னு கண்டுணர்ந்தவங்க யாருன்னு கொஞ்சம் பேரை குடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.//

    நானுன்னு சொன்னா நம்பவா போறீங்க… 🙂

    //படைத்தவன் விருப்பம் என்னன்னு உங்களுக்கு இ-மெயிலில் அனுப்பியிருப்பார் போல இருக்கே!! //

    அனுப்பிட்டான்யா…. அனுப்ப்பிட்ட்டான்…. என்ன செய்வேன்.. என்ன செய்வேன்..!!!

    • \\நானுன்னு சொன்னா நம்பவா போறீங்க.\\ But உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!

  127. //\\எவன்தாண்டா இங்க நல்ல ஆன்மிகவாதி??? தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.. \\ ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று மூட்டை முடிச்சுகளோடு கோயம்பேடு போய் அங்கே போறவன் வர்றவன் கிட்ட நான் எந்த ஊருக்குப் போகணும்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.. என்று கேட்கும் கோயான் நீர். உமக்கு எதற்கு வீராப்பு?//

    அண்டார்ட்டிக்காவுக்கு பஸ்ஸு போகாதுன்னு எங்களூக்கு நல்லாத் தெரியும். அங்கு பஸ்ஸு போகுதுன்னு சொல்ற அரை டவுசர் நீரு! எந்தப் பஸ்ஸு போகுதுன்னு கேட்டா அதுக்கு பதில் இல்ல. உமக்கு எதுக்குய்யா வெறப்பு?

    • \\அண்டார்ட்டிக்காவுக்கு பஸ்ஸு போகாதுன்னு எங்களூக்கு நல்லாத் தெரியும்.\\ மொசப் புடிக்கிற நாயை மூஞ்சியப் பாத்தாலே தெரியாதா? உள்ளூர்ல ஓணான் புடிக்கத் தெரியாத ——– அண்டார்டிகாவுல போயி புலியவா புடிக்கப் போவுது?

    • நீ ஒரு வேலை பண்ணு, இணையத்துல பாக்கியராஜ் படம் ஒன்னு இருக்கு, அதுல துபாய்க்கு எப்படி போறதுன்னு வழி கண்டுபுடிச்சு போவாங்க. அதே மாதிரி நீ அன்டார்டிகாவுக்கும் வழி கண்டுபிடிச்சு போயிடலாம். நீ விஜய் டி.வி. யில் வழி காட்டியாய் பார்த்தவனுக்கும் இவனுங்க துபாய்க்கு வழி கேட்ட ஆளுக்கும் வித்தியாசமே இல்ல ரெண்டும் ஒண்ணுதான். ஆங்………. படம் இன்று போய்… நாளை வா………..

  128. ஆண்டவராகிய ஆண்டவரே! குயவனும் தெரிகிறான், பானையும் தெரிகிறது. இந்த பிரபஞ்சமும் கூட தெரிகிறது நீர் எங்கப்பா இருக்கிறய்! போதும் உன் திருவிளையாடல், சீக்கிரம் வாரும். இல்லையென்றால் இங்கு ஒரு கொலை விழுந்துவிடும் போலிருக்கிறது. வந்து இரு உயிரையும் காத்தருள்வாயாக!

  129. ஆண்டவராகிய குயவரே, 295ன் வேண்டுகோளை ஏற்று, மடத்தில் ஏற்பட்டிருக்கும் வாந்தி, பேதியை நிறுத்தி சாந்தி, நீதியை நிலை நாட்ட வேண்டுமாய் மன்றாடி கேட்டுக் கொள்கிறோம்..!

  130. உடம்புக்கு ஒவ்வததைத் ஓவராத் தின்னா என்னவாகும்? ஒன்னு வாந்தியாகும், இல்லைனா பேதியாகும். ஓவரா நாத்தீகத்தை தின்னுட்டு இங்க வந்து ஒருத்தன் வாந்தி எடுக்கறான், இன்னொருத்தன் பேதியா போறான். உள்ள இருக்கும் கழிவுகள் வெளியே வர வரைக்கும் இது நிற்காது. நீங்கள் அதோட நிற்ப்பதில்லை, மீண்டும் மீண்டும் அதையே துன்றீங்க. உங்க பேதியும் வாந்தியும் எப்படி நிற்கும்? நீங்க துன்னக் கூடாததை துன்னுட்டு குயவனையும், கோயானையும் நினைத்து புலம்புவது ஏன் சிஷ்யா?

    • சுவாமிகளே,

      பரிசுத்த 295 ம், பாவியான அடியேனும் செய்த கூட்டுப்பிரார்த்தனைக்கு குயவனார் செவிசாய்த்து மடத்துக்கு சாந்தியை தந்தருளிவிட்டார்.. சாந்தி என்பது ஒரு கில்மா அல்ல.. எல்லா கில்மாக்களுக்கும் விடுதலை அளித்து வீட்டுக்கு அனுப்புவதே அறிவுடமை.. ஆத்திகமும், நாத்திகமும் சந்திக்கும் புள்ளியைத் தேடி ஆராய்ச்சி செய்ய சுவாமிகள்,சின்னச் சுவாமிகள் மற்றும் ரிஷிகள் எல்லாம் முயன்றால் சமாதானம் பரவி ஆனந்தம் பெருகும்..

      • ஆத்திகமும், நாத்திகமும் சந்திக்கும் புள்ளியைத் தேடி ஆராய்ச்சி ……!! அதைச் செய்யப் போவது ரெண்டு புள்ளி ராஜாக்கள்…….. ஆஹா, ஓஹோ…….. பேஷ்……..பேஷ்……. ரொம்ப நன்னாயிருக்கு. உங்களை சாந்தி தழுவிக் கொள்ளட்டும். [பிளந்த வாயை மூடுங்க ராஜாக்களே, இது கில்மா சாந்தி இல்லை, நானும் நீ குறிப்பிட்ட அதே சாந்தியைத்தான் சொல்றேன்].

        • வாழ்த்துக்கள் சந்தானம், நீயும் கில்மானந்தாவும் சேர்ந்து புள்ளியைக் கண்டுபிடிக்கப் போறீங்கன்னு கில்மானந்தா வாயிலிருந்தே கேள்விப் படுகிறேன், இதில வெற்றியடைஞ்சு புள்ளியை கண்டுபுடிச்ச புள்ளிராஜாக்கள் என்ற பட்டம் வாங்கி நம்ம மொள்ளமாரி மடத்தின் பேரைக் காப்பாத்திடுங்க என் ராசாக்களே…………….

          • // சந்தானம், நீயும் கில்மானந்தாவும் சேர்ந்து புள்ளியைக் கண்டுபிடிக்கப் போறீங்கன்னு கில்மானந்தா வாயிலிருந்தே கேள்விப் படுகிறேன் //

            சுவாமிகளே,

            //ஆத்திகமும், நாத்திகமும் சந்திக்கும் புள்ளியைத் தேடி ஆராய்ச்சி செய்ய சுவாமிகள்,சின்னச் சுவாமிகள் மற்றும் ரிஷிகள் எல்லாம் முயன்றால் //

            3 பேரில் கடைசி 2 பேரும் கில்மானந்தாக்கள் இல்லை.. தவிர, கில்மானந்தா பட்டம் யாரும் ஏற்றுக் கொள்ளாமல் உங்கள் திருக்கரங்களில் தான் இன்னும் இருக்கு..

            சுவாமிகளுக்கு மச்சம் தேடி ஆராய்ச்சி செய்வதில் உள்ள ஆர்வம், மேற்படி புள்ளியை தேடுவதில் இல்லாமல் போனது ஏனோ.. ஆன்மீகத்துக்கு இப்படி ஒரு சோதனைக் காலமா.. ஐயகோ..

            • \\ கில்மானந்தா பட்டம் யாரும் ஏற்றுக் கொள்ளாமல் உங்கள் திருக்கரங்களில் தான் இன்னும் இருக்கு.\\ பட்டமெல்லாம் யாரும் தேடித் போய் வாங்குவதில்லை அப்பனே, தானா வருவது. உன்னுடைய வீர தீர பராக்கிரமங்களைப் பார்த்து பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து யாம் உமக்கு பட்டம் வழங்கியுள்ளோம். எதிர்காலத்தில் நீர் சச்திக்கப் போவது என்ன என்ற சூட்சுமம் இந்த பெயரின் உள்ளே ஒளிந்துள்ளது. மக்கள் மனதில் இந்தப் பெயர் ஆழமாகப் பதிந்துவிடும். அவ்வாறு அழைத்தே உன்னை அகிலமும் போற்றும்.

              \\சுவாமிகளுக்கு மச்சம் தேடி ஆராய்ச்சி செய்வதில் உள்ள ஆர்வம், மேற்படி புள்ளியை தேடுவதில் இல்லாமல் போனது ஏனோ.\\ இல்லாத புள்ளியை இருப்பதாகக் கனாகாணும் புள்ளிராஜா, எங்கேயாவது ரயில் போகும் ரெண்டு தண்டவாளம் ஒண்ணா இணையுமா? கொசு மூத்திரம் அறை லிட்டர் கிடைக்குமா? கடல் நுரை ஒரு கிலோ பார்சல் பண்ண முடியுமா? இப்படி இல்லாததெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கியே சுவாமி கில்மானந்தா………….the great 295 Pontiff of மொள்ளமாரி மடம் !!

              • சுவாமிகளே, பட்டத்தையும், கில்மாக்களையும் நீங்களே வைத்துக் கொண்டு பேரின்பவழியில் பயணியுங்கள்..

                உதாரணமெல்லாம் உருப்படியாயில்லியே, சுவாமிகளே.. தண்டவாளம் ஒண்ணு சேந்தாலோ விலகினாலோ ரயில் மடத்துக்குள் வந்திடாதா.. கொசுக்கள் கூட்டமைப்புக்கு உங்கள் விருப்பத்தை நீங்களே ஒரு வார்த்தை சொன்னால் போதுமே, கூட்டமா வந்து சப்ளை செய்துவிட்டுப் போகாதுங்களா.. 294 of மொ.மா.மடம்னா சும்மாவா..

                • \\சுவாமிகளே, பட்டத்தையும், கில்மாக்களையும் நீங்களே வைத்துக் கொண்டு பேரின்பவழியில் பயணியுங்கள்.. \\
                  நீ எத்தனை நாளைக்குத்தான் பஸ் ஸ்டேன்ட் பஸ் ஸ்டெண்டா நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டா மாதிரி சுத்தி சுத்தி வரப் போறே கில்மானந்தா? மனசில ஆசை இருக்கு, நிறைவேத்த வழி உனக்குத் தெரியல, மடத்துக்கு வந்திடு, உனது சேவை மொள்ளமாரி மடத்துக்குத் தேவை.

                  \\தண்டவாளம் ஒண்ணு சேந்தாலோ விலகினாலோ ரயில் மடத்துக்குள் வந்திடாதா.\\அது ஒன்னு சேரத்துங்கறதுக்குத்தானே தண்டவாளம் மாதிரின்னு சொன்னேன், விளங்கலையா கில்மானந்தா? கில்மாவைத் தவிர உனக்கு வேறு எதுவுமே சட்டென ஏறாது போலிருக்கே.

                  • // நீ எத்தனை நாளைக்குத்தான் பஸ் ஸ்டேன்ட் பஸ் ஸ்டெண்டா நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டா மாதிரி சுத்தி சுத்தி வரப் போறே கில்மானந்தா? மனசில ஆசை இருக்கு, நிறைவேத்த வழி உனக்குத் தெரியல, மடத்துக்கு வந்திடு, உனது சேவை மொள்ளமாரி மடத்துக்குத் தேவை. //

                    மார்கெட்டிங் மடாதிபதி 294 !

                    // அது ஒன்னு சேரத்துங்கறதுக்குத்தானே தண்டவாளம் மாதிரின்னு சொன்னேன், விளங்கலையா கில்மானந்தா? கில்மாவைத் தவிர உனக்கு வேறு எதுவுமே சட்டென ஏறாது போலிருக்கே. //

                    புரிஞ்சு போச்சு, ரயில் ஓடணும்னா தண்டவாளம் சேரக்கூடாது.. கில்மா மடம் ஓடணும்னா ஆத்திகம்-நாத்திகம் ஒண்ணு சேரக் கூடாது.. சரியா

                    • \\கில்மா மடம் ஓடணும்னா ஆத்திகம்-நாத்திகம் ஒண்ணு சேரக் கூடாது.. \\ எனக்கு ஒன்னும் புரியலே? Yes, No ரெண்டும் எப்படி ஒண்ணாகும்?

                • அம்பி,

                  நானும் கவனிச்சிகிட்டுதான் வறேன், நீங்களும் ரிஷியும் ஒருநாள் விட்டு ஒருநாள் முறைவச்சி பாஸ டெரர் ஆக்குறீங்களே! என்ன விசயம்? பாசு களத்துல எறங்குனா நீங்கலாம் காணாம பூடுவீங்க.

                  முதல்ல பாஸோட குயவன் பானை தத்துவத்துக்கு விடை சொல்ற வழியப் பாருங்க. அப்புறமா கில்மாவா கலாய்க்கலாம்.

                  • ஏய் சந்தானம், நீ எந்தப் பக்கம் கோல் போடுறேன்னே தெரியமாட்டேங்குது. நீ என்னோட வைரிங்க கேம்ப்ல இருந்து என் பக்கம் வந்து சேம் சைடு கோல் போடுறேன்னு நான் சொன்னா, ஆ……ஊ……ன்னு பில்டப் குடுக்குறே. அப்படி நான் நினைக்கக் கூடாதுன்னா, இந்த நாத்தீகப் பயல்கள் எடுத்துப் போடும் பிக்காலித் தானமான வாதங்களுக்கு சரியான பதில் கொடுத்து என்னை கொஞ்சமாவது சப்போர்ட் பண்ணு. எப்ப பார்த்தாலும் அந்த பயலுங்க கூடவே கும்மியடிக்கிறத முதலில் நிறுத்து. எனக்குன்னு இங்க யாருமே இல்லியா………. தேவுடா…….தேவுடா……. ஏழுமலை தேவுடா……. ன்னு என்னை திரும்பவும் பாட்டு பாட வைக்காதே.

  131. அய்யா வினவு இந்த பதிவுக்கு உண்டன மறுமொழி டப்பவா முடிவிடுஙக.

  132. ஒருத்தனே அஞ்சாறு பேருல ரிப்ளை போடுறான்ங்கிறது மட்டும் தெளிவா தெரியுது…… ம்ம்……….. குஷ்டமப்பா………… சீ……….கஷ்டமப்பா………..

  133. ஒருவழியா காலைல இருந்து சுமாரா 4 மணிநேரம் முழுசாப் படிச்சு முடிச்சாச்சு.,
    ஜெயதேவ் தாஸ் ஒற்றையாளா நின்னு சளைக்காம பதில் சொன்னதுக்கு பாராட்டுகள்.

    மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுகள். 🙂

  134. In Vishnu Sahasranama Eswar tells his wife that if you chant Sri Rama, that is equal to chanting of Vishnu Sahasranama…..in that case can any one tell me that whether we can follow these type of short cuts ?
    What ou honourable Dass has to say ? And also about Ambi Mama ?

  135. இத்தனை நாட்கள் கழித்து இன்றைக்குத்தான் இதனைப் படித்தேன். ஒரு பதிவுக்கு இத்தனைப் பின்னூட்டங்களா? எழுநூற்றுச் சொச்சம் பின்னூட்டங்கள் பெற்ற பதிவு தமிழில் இது ஒன்றாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். மூன்று நாட்கள் இடைவெளியில் விட்டு,விட்டு அனைத்தையும் படித்து முடித்தேன். ஆரம்பத்தில் மிக சீரியஸாகச் சென்ற பின்னூட்டங்கள் கடைசியில் ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வதாகவும் சபித்துக்கொள்வதாகவும் மாறியது கொஞ்சம் இடறல்தான்.

    ஆனால் ஒன்று, எம்மாதிரியான அஸ்திரங்கள் தம்மை நோக்கி வீசப்பட்டபோதும், எத்தனைப் பேர் நேரடியாகவும் மறைந்திருந்தும் தாக்கியபோதும் தனியொரு ஆளாக நின்று அத்தனையையும் சமாளித்து அவ்வளவுபேருக்கும் உரிய முறையில் பதிலடிகள் தந்து கடைசிவரை வீரியம் குறையாமல் விவாதித்த ஜெயதேவ் தாஸின் திறமை வியக்கவைக்கிறது. அவருக்கு ஆதரவு தெரிவிக்க ஆன்மிக அன்பர்கள் யாருமே இல்லையா அல்லது ஆன்மிக அன்பர்கள் யாரும் வினவு படிப்பதில்லையா என்ற சந்தேகம்தான் வந்திருக்கிறது.
    ஜெயதேவ் தாஸின் வாதங்களுடன் ஒத்துப்போகிறேனோ இல்லையோ அது வேறு விஷயம். ஆனால் இத்தகு விவாதிக்கும் திறன் சாதாரணமானது அல்ல என்பதை மட்டும் சந்தோஷத்துடன் பதிவு செய்கிறேன்.

Leave a Reply to K. Jayadev Das பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க