privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்உயர்பதவிகளில் முஸ்லிம்கள் - பார்ப்பனியத்தின் கருணையா?

உயர்பதவிகளில் முஸ்லிம்கள் – பார்ப்பனியத்தின் கருணையா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 19

”இந்தக் காலத்தில் கூட, நம் நாட்டின் மிக உயர்ந்த ஜனாதிபதி பதவியை ஒரு முசுலீம் அலங்கரிக்க முடிந்தது; மத்திய அமைச்சரவைகளிலும், உள்நாட்டு, வெளிநாட்டு இலாகாக்களிலும் முசுலீம்கள் பெரும் பதவிகளை அடைய முடிந்தது. அவையெல்லாம் நமது தேசிய பரம்பரையின்  வலிமையினால்தான் சாத்தியமாயிற்று. பக்கத்தில் உள்ள மதவழி அரசான பாகிஸ்தானுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடுகள் மிகத் தெளிவாகப் புலனாகின்றன. இவற்றை விளக்க வேண்டிய அவசியமே இல்லை.”

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோல்வால்கரின் – ‘ஞானகங்கை‘ 2 –ஆம் பாகம், பக்கம் 135.

பாகிஸ்தான் மட்டுமல்ல ஏதாவது ஒரு முசுலீம் நாட்டில் முசுலீம் அல்லாதோர் இத்தகைய உயர் பதவிகளுக்கு வர முடியுமா? இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் மட்டும்தான் மாற்று மதத்தவர் வர முடியும்; இதுதான் இந்து மதத்தின் மேன்மைக்கும், பிற மதங்களின் கீழ்மைக்கும் சான்று என ஆர்.எஸ்.எஸ். கும்பல் வாதிடுகிறது. ஆயினும் உண்மை என்ன?

அநேக இசுலாமிய நாடுகளில் முசுலீம் மக்கள் தொகை விகிதம் 95 அல்லது 100 சதமாக இருக்கும்போது பிற மதத்தினர் உயர்பதவிகளுக்கு  வருவதற்கான வாய்ப்போர், அடிப்படையோ இல்லை. இருப்பினும் சிரியா, லெபனான், துருக்கி, எகிப்து, முன்னாள் சோசியத் யூனியனின் இசுலாமிய நாடுகளிலும் பிற மதத்தினர் உயர் பதவிகளில் இருக்கின்றனர். இசுலாத்தின் சர்வதேசியம் பேசும் சதாம் உசேனின் ஈராக்கில் கூட தாரிக் அசிஸ் என்ற கிறித்தவர் அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார்.

அதேசமயம் வளைகுடா மற்றும் பிற இசுலாமியக் குடியரசு நாடுகளில் இந்நிலைமை இல்லை. அதனால் என்ன, அந்த நாடுகள் மதச் சார்புடன் இருக்கும்போது, நாம் மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொள்கிறோம். மதச்சார்பை இழிவு என்று கருதுகிறோம். ஆயினும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் மதச்சார்பைத்தான் பெருமையென்றும், மதச்சார்பின்னையை இழிவு எனவும் கருதுகிறது. அதனால்தான் இசுலாமிய நாடுகளின் மதச்சார்பைக் காட்டி இங்கேயும் அப்படியே ஒரு இந்துராட்டிரத்தைக் கொண்டு வர இந்த வாதத்தை வைக்கிறார்கள். இந்து மதவெறியர்கள் எழுவதற்கு முன்பிருந்த இந்நாட்டின் மதச்சார்பின்மை என்பது ஒரு கேலிப் பொருளாகவும், பார்ப்பனியப் பண்பாடே சகல மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் இருந்து வருகிறது.

துருக்கியில் முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், அந்நாடு மதச்சார்பின்மையைக் கறாராகக் கடைபிடித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு துருக்கி பாராளுமன்றத்தில் இசுலாமிய மதவாதம் பேசிய உறுப்பினர் ஒருவரின் பதவி ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. த.மா.காவைச் சேர்ந்த ஜெயந்தி நடராசன் அங்கு சென்றிருந்தபோது இதை அறிந்து அதிர்ச்சியுற்றதாகக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். இங்கே பால்தாக்கரே, தாராசிங் வகையறாக்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பும், சமூக மதிப்பும் தரப்படுகிறது. இந்திய மதச்சார்பின்மையை துருக்கியுடன் ஒப்பிடும் போது படுகேவலமாகத்தான் இருக்கின்றது.

இருந்தபோதும் நம் நாட்டின் உயர் பதவிகளில் முசுலீம்கள் சிலர் இருப்பதற்குக் காரணம் ”இயற்கையாகவே” இந்துக்களிடம் உள்ள பெருந்தன்மை என்கிறார்கள். ஜாகீர் உசேன் குடியரசுத் தலைவராகவும், முகமது கரீம் சாக்ளா நீதிபதியாகவும், பட்டோடி, அசாருதீன் போன்றோர் கிரிக்கெட் அணித் தலைவராகவும் இருந்திருக்கிறார்கள். இதில் பெருந்தன்மை என்ன இருக்கிறது? ஒரு முசுலீமை ஜனாதிபதி ஆக்குவது என்பது ஒரு தாழ்த்தப்பட்டவரை ஜனாதிபதி ஆக்குவதைப்போல ஒரு பித்தலாட்ட வேலைதான். இப்பிரிவு மக்களிடம் ‘நம்மாள் ஜனாதிபதி’ என்ற பெருமிதத்தை உருவாக்கிவிட்டு, வழக்கமான ஒடுக்குமுறையைத் தொடருவார்கள். ரன்பீர்சேனாவின் படுகொலையைக் கண்டித்து அறிக்கை விடும் குடியரசுத் தலைவர் நாராயணன் அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? முன்பு வெங்கட்ராமன் விட்ட அறிக்கையின் இடம், காலம் மாறியதைத் தவிர விளைவுகள் எதுவும் மாறவில்லையே?

மேலும் ஒரு நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்களின் நலனுக்குச்சேவை செய்யவே ‘அரசு’ உள்ளிட்ட ஏனைய சட்ட நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. எனில் இந்நிறுவனங்களின் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ பதவிகளுக்கு ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் வர வேண்டும் என்பதில்லை. அடக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவர்கள் கூட வரலாம். அப்படி வருவதையே ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. எனவே அரசு என்ற நிறுவனம் இந்துத்தரகு முதலாளிகளுக்கும், இந்து அதிகார வர்க்க முதராளிகளுக்கும், இந்து நிலப்பிரபுக்களுக்கும் அடிபணிந்திருக்கும் போது, தலித் நாராயணனோ, முசுலீம் ஜாகீர் உசேனோ கோபுரத்தின் பொம்மையாக இருப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. உண்மையில் இவர்களும் அதை அறிந்தேதான் இருக்கிறார்கள். இருவரது வர்க்க நலனும் இணைந்தே இருக்கின்றன.

இத்தகைய மோடி மஸ்தான் மோசடியை உலகமெங்கும் காணலம். சிட்னி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்கும் பெருமை ‘கதே ப்ரீமென்’ என்ற ஆஸ்திரேலிய பழங்குடி வீராங்கனைக்கு வழங்கப்பட்டது. இவரைவிடப் பிரபலமான வெள்ளையின வீரர்கள் இருந்தும் ஆஸ்திரேலிய அரசு இதைச் செய்யக் காரணம் ‘நிறவெறியை எதிர்க்கிறோம்’ என்று பம்மாத்துக் காட்டத்தான். உண்மையில் வெள்ளையர்களிடம் இழந்த தங்கள் மண்ணை மீட்க இன்று வரை ஆஸ்திரேலியப் பழங்குடியினர் போராடுவதும் அரசு அதை அடக்குவதும்தான் அங்கே நடைமுறையாக இருக்கிறது.

கோஃபி அன்னான் என்ற கருப்பர் செயலாளராக வந்ததினாலேயே, ஐ.நா.சபையின் ஏகாதிபத்திய அடிமைத்தனம் மாறி விட்டதா? முத்தையா முரளீதரனை இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்த்ததினாலேயே, இலங்கையில் தமிழர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் அளிக்கப்படுகிறது என ஏற்க முடியுமா? பங்காரு லட்சுமணன் என்ற தாழ்த்தப்பட்டவர்  தலைவராக வந்தததினால், பாரதீய ஜனதாவின் பார்ப்பனிய ரத்தம் மாறிவிடுமா? கருப்புக் கிழவிகளைக் கண்ட மாத்திரத்தில்  கட்டிப் பிடிக்கும் எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்துக்குக் குறையானவையல்ல மேற்கண்டவை!

நம் நாட்டின் மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர் முசுலீம்களாக இருக்கின்றனர். ஆனால், இந்த தேசிய விகிதம் பாராளுமன்ற – சட்டமன்றங்களில், வேலை வாய்ப்பில், ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் பதவிகளில், கல்வியில், போலீசு – இராணுவத்தில் கிடையாது. நாட்டின் 50 பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் கூட முசுலீமாக இல்லை. மேலும் போலீசு – இராணுவ – உளவுப் பிரிவுகளின் உயர்மட்டப் பதவிகளுக்கு முசுலீம்கள் வர முடியாது என்பது எழுதப்படாத விதியாகவே பின்பற்றப்படுகிறது. இவைதான் யதார்த்தம் தெரிவிக்கும் உண்மை.

எனவே கிரிக்கெட் காப்டன், ஜனாதிபதி, மந்திரி பதவி எல்லாம் உலக நாடுகளிடையே மதச்சார்பின்மை எனும் பொய்யை நிரூபிக்கும் தந்திரமாகும். அதனால்தான் இந்தியாவில் வளைகுடா நாடுகளுக்கு தூதர் அனுப்புவது முதல், பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்துவது வரை எல்லாக் கட்சி அரசாங்கங்களும் சல்மான் குர்ஷித், நஜ்மா ஹெப்துல்லா, சிக்கந்தர் பகத், ஓமர் அப்துல்லா போன்ற முசுலீம்களைப் பயன்படுத்தி வருகின்றன.

இதெல்லாம் போகட்டும். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில், ஒரு தோட்டி – வெட்டியானின் வேலையைச் செய்ய, கேவலம் ஒரே ஒரு ஐயர், முதலியார், செட்டியார், நாயுடு கூடத் தயாராக இல்லையே, என்ன அநீதி? ஏர்க்கலப்பையுடன் வயலில் உழும் ஒரு மார்வாடி, சேட்டு, ஐயங்காரை திரைப்படத்தில் கூடக் காண முடியவில்லையே? எப்பேர்ப்பட்ட வஞ்சனை! இன்னும் புரியும்படி கேட்போம். பார்ப்பன – பனியா, ‘மேல்’ சாதியினர் தவிர சூத்திர – பஞ்சம சாதிகளைச் சேர்ந்த எவரும் தரகு முதலாளிகளாக இல்லையே, ஏன்? நாடெங்கும் பரவிக் கிடக்கும் பார்ப்பன -வேளாள – ‘மேல்’சாதி மடங்களில், ஒரு சூத்திரனுக்கோ, பஞ்சமனுக்கோ கேவலம் ‘சந்நியாசமா’ வது வாங்கித்தர முடியுமா? முசுலீம்களுக்கு சில உயர் பதவி பிச்சையளித்து தமது பெருந்தன்மை பற்றிப் புல்லரிக்கும் இந்து மத வெறியர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும்.

ஆகையால் முசுலீம்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோருக்கும், இவர்கள் அளிக்கும் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ உயர்பதவிகளை அளிக்காமலே இருக்கலாம். அப்போதாவது அந்தச் சமூக மக்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் மாயை சுலபமாகக் கலைந்து போகும்.

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

  1. எழுதிப்ப்பல ஆண்டுகளுக்குப் பின்னரும் ரிலவெண்டான கட்டுரை, இதற்கு நடுவில் அப்துல்கலாம் ஐயர் என்றழைக்கப்படும் கலாம் ஜனாதிபதியாகிவிட்டார். சாதியை வைத்து தாக்குகிறார்கள் என்று புலம்பும் கருணாநிதி குடும்பே பெரும் தொழில் குடும்பமாகிவிட்டது குறிப்பாக பார்ப்பன குடும்பத்தில் பெண்ணெடுத்த தயாநிதியின் சன்டீவி குழுமம் தொழிலில் கோலோச்சுகிறது

  2. தமிழ்நாட்டில் இருந்து இந்திய கிரிகெட் அணியல் சேர்ப்பதற்கு முதுகை தடவிப்பார்த்துதான் சேர்பார்களாம்….

    அதாவது பூணூல் தட்டுபட்டால் மட்டும்தான் சேர்த்துக்கொள்வார்களாம்…

    இவனுங்களை என்ன செய்யலாம்?

  3. how can we allow muslims to have higher positions in policy,military. If they come to police & military , then our country will became pakistan. Everyday we will encounter bomb blasts, then we gone.Not only india ,in most of the world, muslim terrorism is the main problem. Even one of my muslim friend supports dawood ibhrahim , osama bin laden . It is good to keep muslims out of all government sensitive offices..

    • What your iyangar caste people did, your caste guys sold the military secrets to pakistan, if pakistani gives more money iyenger will sell their wifes and sisters, your caste will do any thing for money

        • your iyyar caste people sold indian military secrets to pakistan military, i am talking on behalf of My mother country India, dont think me like your caste guys for money your people can do anything,

            • THE INDIAN EXPRESS
              Rahul Tripathi , Manu Pubby : New Delhi, Sat Jun 02 2012, 03:06 hrs

              Military Intelligence staffer caught trying to sell secrets

              A powerful Military Intelligence (MI) unit of the Army is under the scanner after a soldier working as its head clerk was caught in April allegedly trying to sell top secret operational information to Pakistan’s spy agency ISI.

              Sources said the soldier was trapped by the Directorate of Revenue Intelligence (DRI) in an elaborate operation that involved a “double agent” and a relative of the soldier in Dubai.

              A CD, pen drive and highly classified documents were recovered in the operation, sources have confirmed to The Indian Express.

              There have been cases in which soldiers have been caught trying to sell information but what has rattled the Army is the depth and range of information that the clerk, identified as Shivdasan, was allegedly trying to sell.

              The data is still being examined by the Army but it is believed to contain detailed operational plans, information on troop deployments and even conversations between top officers at Army Headquarters.

              Shivdasan was working for the recently created Technical Support Division (TSD) within MI. This special unit, headed by Colonel Honey Bakshi, is believed to have access to a range of privileged information. The unit had recently come under scrutiny on charges of illegal surveillance, an allegation that was denied by former Army Chief Gen V K Singh who accused retired Lt Gen Tejinder Singh of leaking incorrect information. The TSD unit was created in the last two years and functions from within Army Headquarters.

              Sources said the DRI received information on an individual trying to sell “sensitive information” in April. A preliminary probe, sources said, established that Shivdasan had contacted a relative of his in Dubai with an offer to sell classified information. Shivdasan, who hails from Kerala, found it convenient to receive the money at Kochi. His relative got in touch with an “agent” in Dubai to broker the deal. This agent, sources said, turned out to be a DRI informant who is said to have laid a trap for Shivdasan in Kochi.

              The sleuths in Kochi alerted DRI headquarters in New Delhi which, in turn, informed the Army and asked it to take over the probe. DRI has not registered an FIR in the case as the Army is taking action. An Army spokesperson was unavailable for comment.

                • still ask iyer/ iyengar vadakalai, thenkalai? dont divert, he is from iyer family, the great Tippu Sultan regime was down due to an Iyyengar sold the secrets of Tippu sultan regime to britishers, there are crores of examples are there, that Iyengars will do any thing for money and job

                  • what diversion? you said he was an iyer/iyengar? i am asking how do you know?

                    Obviously,who wants a barbaric king like Tipu sultan to rule.we ll much rather keep our foreskin.

                    • மூத்திரக் குழாயின் முன் தோலில் தான் நாகரீகம் இருக்கிறதென்றால் அந்தத தோல் எங்களுக்கு வேண்டாம்.

                    • கரி, இப்போ எதுக்கு திப்புவை கட்டுமிராண்டினு சொல்லுற.. அவர் நம் தாய்நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரன்..
                      அப்படி உயிர்த்தியாகம் செய்த ஒரு அய்யர் அய்யங்கார காட்டு பார்க்கலாம்? பாரதி ல இருந்து வாஜ்பாயி வரைக்கும் மன்னிப்பு கடிதம் கொடுத்த கோழைகள் தானே.. நீங்களெல்லாம் இப்போது தேச பக்தி பற்றி பேசுறீங்க… அப்போ நீயெல்லாம் வெக்கமே படமாட்டியாப்பா?

  4. //ஒரு முசுலீமை ஜனாதிபதி ஆக்குவது என்பது ஒரு தாழ்த்தப்பட்டவரை ஜனாதிபதி ஆக்குவதைப்போல ஒரு பித்தலாட்ட வேலைதான். இப்பிரிவு மக்களிடம் ‘நம்மாள் ஜனாதிபதி’ என்ற பெருமிதத்தை உருவாக்கிவிட்டு, வழக்கமான ஒடுக்குமுறையைத் தொடருவார்கள். உலக நாடுகளிடையே மதச்சார்பின்மை எனும் பொய்யை நிரூபிக்கும் தந்திரமாகும்.//

  5. உலக மக்கள் தொகையில் 150 பில்லியன் மக்கள் தொகை கொண்ட முஸ்லிம்கள் சிறுபான்மையினரா? அல்லது வெறும் 900 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்துக்கள் சிறுபான்மையினரா?

    • கரிகாலரே,
      அப்போ அப்பேர்பட்ட பெரும்பான்மையாக இருக்கும் முசுலீம் மதமும், அதைவிட பெரும்பான்மையா இருக்கு கிறுத்துவ மதமும், ஆப்டிரால் மைனாரிடியான இந்து மதத்தை சேர்ந்தவங்களை இந்தியாவுல பெரும்பதவியில ஒக்கார வச்சு அழகு பாத்திருக்காங்க, என்னே இசுலாமிய மதத்தின் பெருந்தன்மை, என்ன என்னே கிறுத்துவ மதத்தின் பெருந்தன்மை. இப்பேர் பட்ட பெருந்தன்மையான மதங்களோடு ஒப்பிடும்போது ஈனத்தனமாக இந்து மதம் நடந்து கொள்ளக்கூடாது என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?

    • கரிகாலன், விக்கி பீடியாவில் எண்களை பார்க்கும் போது இந்துத்துவ பதட்டத்தில் இப்படியா தவறாக உளறுவது? ஒரு பில்லியன் என்பது நூறு கோடி. அதன்படி உலகில் முசுலீம் மக்கள் 15,000 கோடி இருப்பதாக உங்கள் கணக்கு சொல்கிறது. ஆனால் உலகில் மொத்த மக்கள்தொகையே 6.8 பில்லியன்தான், அதாவது 680 கோடி மட்டும்தான். உண்மையில் முசுலீம் மக்கள்தொகை ஒண்ணு புள்ளி ஐந்து அதாவது 1.5 பில்லியன்தான். அதன் படி 150 கோடி மக்களை நீங்கள் 15,000 கோடிக்கு ஏற்றி விட்டிருக்கிறீர்கள். மதவெறியோ மதநம்பிக்கையோ இப்படித்தான் முட்டாள்தனத்தை கற்று தருகிறது என்பதை இப்போதாவது ஏற்பீர்களா? இனி புள்ளி விவரங்களை பார்க்கும் போது புள்ளி இருக்கிறதா என்று கவனமாக பாருங்கள்.

      அடுத்து கட்டுரை இந்தியாவில் உள்ள மக்கள் தொகை விகிதத்தையே பேசுகிறது. இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், முசுலீம்கள் சிறுபான்மையாகவும் இருப்பதைக்கூட உங்களுக்கு நிரூபிக்க வேண்டுமா? காவிப்புழுதி கண்ணை மறைக்கும் என்று தோழர்கள் சரியாகத்தான் தலைப்பு வைத்திருக்கிறார்கள். இனியாவது கட்டுரையை கவனமாக படித்து, புள்ளிவிவரங்களை எச்சரிக்கையாக கையாளுங்கள்!

      • //இனி புள்ளி விவரங்களை பார்க்கும் போது புள்ளி இருக்கிறதா என்று கவனமாக பாருங்கள்.

        இந்த நக்கல் நல்ல இருக்கு

  6. மயில்,
    சிறுபான்மை ஹிந்துக்களுக்கு என்று ஒரு நாடு இல்லை. பெரும்பான்மையானவர்களுக்கு நாடு உண்டு.அதே பெருந்தன்மையோட ஹிந்துக்களுக்கு நாட்டை விட்டு கொடுத்து விடுங்கள். நாங்கள் ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடிக்கிற ஜாதி இல்லை.

  7. டைப் செய்யும்போது தவறாக எழுதி விட்டேன். தவறான விவரத்தை கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அதை சுட்டிக்காட்டிய வினவுக்கு எனது நன்றிகள். இனிமேல் இது போன்று தவறுகள் நடக்காது. தவறு செய்வது மனித இயல்பே அன்றி மதவெறியோ மதநம்பிக்கையோ காரணம் இல்லை.

    • பாரத மாதாவை என்னைக்கோ மண்ணுமோகன், வாசுப்பாயி களவாணி கும்பல்கள் விபச்சார விடுதியில் சேர்த்து தொழில் நடத்த விட்டு விட்டார்கள். இன்னும் ஓங்கி சொல்லுங்க பாரத மாதாவுக்கு ஜே.

      • இப்படி ஒரு மகனா என்று பாரத மாதா தற்கொலை செய்து கொள்வாள்..

        • பொதுவுடைமைவாதிக்கு நாடு, மொழி, இனம் ஆகியன கிடையாது. நாடு என்பது ஒரு இடைக்கால சமரசமே. மனித இனம் அனைத்துக்கும் ஒரே சமூகமாக பொதுவுடைமை சமூகம் அமையும். அதுவரை இந்த நாடு போன்ற அமைப்புகள் இருக்கும். நாட்டை தாயாக பாவித்தல் என்பது ஒன்று. ஆனால் அதை இந்து மதக்கடவுளர்களில் ஒன்றாகவே இந்து மதவெறியர்கள் உருவகப்படுத்துகிறார்கள். இந்த நிலப்பரப்பு இந்தியாவாக உருவாகிக்கொண்டிருக்கும் போதே இவர்கள் அதை உருவகப்படுத்துவதற்காக அதற்கு சேலை கட்டி விட்டு பொட்டு வைத்து, கையில் வேல் அருவாள் ஏ கே 47 போன்ற கொலைக்கருவிகளை கொடுத்துதலையில் ஒளிவட்டமும் பின்புறத்தில் “ஒருங்கிணைந்த பாரதத்தையும்” வைத்து மாலை போட்டு படையல் வைத்து சூடம், சாம்பிராணி காட்டி வழிபடுகிறார்கள். வெளிப்புறமாக இப்படிக் கும்பிடும் இவர்களே பின்னால் கூட்டிக் கொடுக்கிறார்கள். அதைத்தான் கூறினேன். பாரத மாதா என்பதெல்லாம் ஒரு மாயை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் அந்த மூடத்தனத்தையும் சதிவேலையும் விழுந்து வணங்குங்கள். எனக்கு ஒன்றும் இல்லை. அது எனது தாய் என்றுமே ஆக முடியாது, அதை நான் விரும்பவும் இல்லை. அது தற்கொலை செய்து கொண்டால் செய்து கொள்ளட்டும், அது எனக்கு மகிழ்ச்சியே.

          • தாய் நாட்டை தாயாக உருவகப்படுத்தி போற்றுவதற்கு உதாரணம் ஸ்டாலினின் ‘அன்னைத் தாய்நாடு’ – கையில் ஓங்கிய கத்தியுடன் நாசிப் படைகளை எதிர் கொள்ள வருமாறு சோவியத் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் திருக்காட்சியைக் காண ‘mother motherland’ என்று கூகிளில் தேடிப் பார்க்கவும்.

            // வெளிப்புறமாக இப்படிக் கும்பிடும் இவர்களே பின்னால் கூட்டிக் கொடுக்கிறார்கள். //

            சொந்த வீட்டில் கொள்ளையடிக்கும் ஒருவன், வெளித் திருடர்களிடம் கூட்டு போட்டுக்கொண்டு தன் வீட்டிலேயெ கொள்ளையடித்தாலும், அவன் தன் தாயைக் கூட்டிக் கொடுக்கிறான் என்று கூறினால், இப்படிச் சொல்பவர்களின் நோக்கம் திருடர்களை திட்டுவது மட்டுமா அல்லது கொள்ளையடிப்பவனின் அப்பாவித் தாயை இழிவு படுத்துவதுதிலும் அற்ப சுகம் காண்கிறார்களா..?

            • \\அன்னைத் தாய்நாடு’ – கையில் ஓங்கிய கத்தியுடன் நாசிப் படைகளை எதிர் கொள்ள வருமாறு சோவியத் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் திருக்காட்சி//
              \\வெளித் திருடர்களிடம் கூட்டு போட்டுக்கொண்டு தன் வீட்டிலேயெ கொள்ளையடித்தாலும்//

              நாசிகளை எதிர்கொள்ள இப்படி மக்களை திரட்டிய தோழர்கள் தங்கள் தாய்நாட்டை காட்டிக்கொடுக்கும் எந்த இழிசெயலையும் செய்யவில்லை.அவர்களுடன் கொள்ளைக்காரகளான ”பாரத மாதா மகன்களை” ஒப்பிடுவது தவறு.நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த அந்த தியாகிகள் எங்கே.கேவலம் காசுக்கு மலம் தின்னும் இந்த கழிசடைகள் எங்கே.

              தமிழகத்தின் சிற்றூர்புறங்களில் சொல்வார்கள். ”காட்டிக் கொடுக்குறவனுக்கும் கூட்டிக் கொடுக்கிறவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை” என்று.அந்த அடிப்படையில்தான் ஒரு பக்கம் ”பாரத் மாதாக்கீ ஜே” என்று ஊளையிடும் கும்பல் மறுபக்கம் நாட்டை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைக்கும் வேலையை செய்வதால் கூட்டிக் கொடுக்கும் இழிபிறவிகள் என விமர்சிக்கப்படுகிறார்கள்.அதில் தவறேதும் இல்லை.இழிபிறவிகள் மீதான இழிசொல்தான் அது. இல்லாத பாரத மாதாவை அது இழிவு படுத்துவதாக கொந்தளிக்க தேவை இல்லை.

              • // நாசிகளை எதிர்கொள்ள இப்படி மக்களை திரட்டிய தோழர்கள் தங்கள் தாய்நாட்டை காட்டிக்கொடுக்கும் எந்த இழிசெயலையும் செய்யவில்லை.அவர்களுடன் கொள்ளைக்காரகளான ”பாரத மாதா மகன்களை” ஒப்பிடுவது தவறு.நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த அந்த தியாகிகள் எங்கே.கேவலம் காசுக்கு மலம் தின்னும் இந்த கழிசடைகள் எங்கே. //

                பாரத மாதாவுக்கு கொள்ளைகாரர்களான மகன்கள் மட்டுமில்லை, அவளுக்காக உயிர்த் தியாகம் செய்த, செய்யத் தயாராயிருக்கும் மகன்களும்/மகள்களும் கோடிக் கணக்கில் உண்டு..

                //தமிழகத்தின் சிற்றூர்புறங்களில் சொல்வார்கள். ”காட்டிக் கொடுக்குறவனுக்கும் கூட்டிக் கொடுக்கிறவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை” என்று.அந்த அடிப்படையில்தான் ஒரு பக்கம் ”பாரத் மாதாக்கீ ஜே” என்று ஊளையிடும் கும்பல் மறுபக்கம் நாட்டை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைக்கும் வேலையை செய்வதால் கூட்டிக் கொடுக்கும் இழிபிறவிகள் என விமர்சிக்கப்படுகிறார்கள்.அதில் தவறேதும் இல்லை.இழிபிறவிகள் மீதான இழிசொல்தான் அது. இல்லாத பாரத மாதாவை அது இழிவு படுத்துவதாக கொந்தளிக்க தேவை இல்லை.//

                காட்டிக் கொடுப்பவனைத் துரோகி என்று திட்டலாம். காட்டிக் கொடுக்கப்பட்ட தேசத்தை, அதன் உருவகமான பாரதமாதாவை, கூட்டிக் கொடுக்கப் பட்டவள், தொழில் நடத்துவதுபவள் என்று இழிவு படுத்துவதை நிறுத்துங்கள்..

                • மீண்டும் மீண்டும் சொல்கிறோம்.பாரத மாதா என்பதே போலியான தேசிய வெறியூட்டி மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி தங்கள் கொள்ளையை தங்கு தடையின்றி தொடர ஆளும்கும்பல் பயன்படுத்தும் தந்திர உத்தி.இந்த நரித்தந்திரம் தொடரும் வரை இப்படியான எதிர்ப்புகளும் தொடரவே செய்யும்.

                  பாரத மாதாவின் அயோக்கிய புதல்வர்கள் அவளது சேலையை போர்வையாக கொண்டு அதன் மறைவில் மைய இந்திய பழங்குடியின பெண்கள் மீதும்,முசுலிம்,கிருத்துவ, காசுமீர்,வட கிழக்கிந்திய பெண்கள் மீது அப்பட்டமான பாலியல் வன்கொடுமைகளை ஏவி வருகின்றனர். குருதியும் சதையுமாக உயிரோடு வாழும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டும் காணாமல் போகும் பாரத மாதாவின் யோக்கிய புதல்வர்கள் இல்லாத மாதாவை இழிவு படுத்துவதாக ”வருந்துவதை” என்னவென்பது.

                  • பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
                    மத்திய பிரதேச மாநிலம் jhabua மாவட்டம் பண்டாரியா என்ற ஊரில் நான்கு கிருத்துவ கன்னித்துறவிகள் மீது கும்பல் வல்லுறவு ஏவியது சங்க பரிவார் கும்பல்.அதனை சங்க பரிவார் கும்பல் எப்படி நியாயப்படுத்தியது தெரியுமா.
                    ”இது சினம் கொண்ட இந்து இளைஞர்களின் தேச பக்த செயல்”

                    பாரத மாதா தற்கொலை செய்து கொள்வாள் என்று இப்போது கவலைப்படும் அம்பியே;
                    இந்த மத்திய பிரதேச கொடுமைக்காக அவள் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்.அப்படியும் சாகாமல் உயிர் ஊசலாடிக் கொண்டு இருந்திருக்குமேயானால் மணிப்பூர் தாய்மார்கள் தங்கள் இன பெண்கள் மீதான ராணுவ வீரர்களின் அத்து மீறல்களை கண்டித்து

                    ”இந்திய இராணுவமே எங்களையும் வல்லுறவு கொள்”

                    என ராணுவ தலைமையகத்தின் முன்பு ஆடையின்றி போராடினார்களே அப்போது போயிருக்கும்.

                    • யாரு கவலைபட்டங்க bossu

                      ஒரு உதாரணத்துக்கு சொல்றது தான்.நீங்களே உங்களுக்கு அளவுக்கு அதிகமா முக்கியத்துவன் குடுதுக்காதீங்க.

                  • // மீண்டும் மீண்டும் சொல்கிறோம்.பாரத மாதா என்பதே போலியான தேசிய வெறியூட்டி மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி தங்கள் கொள்ளையை தங்கு தடையின்றி தொடர ஆளும்கும்பல் பயன்படுத்தும் தந்திர உத்தி.இந்த நரித்தந்திரம் தொடரும் வரை இப்படியான எதிர்ப்புகளும் தொடரவே செய்யும். //

                    வீட்டைக் கொளுத்தினால்தான் பெருச்சாளிகள் ஒழியும் என்கிறீர்கள்..

                    // பாரத மாதாவின் அயோக்கிய புதல்வர்கள் அவளது சேலையை போர்வையாக கொண்டு அதன் மறைவில் மைய இந்திய பழங்குடியின பெண்கள் மீதும்,முசுலிம்,கிருத்துவ, காசுமீர்,வட கிழக்கிந்திய பெண்கள் மீது அப்பட்டமான பாலியல் வன்கொடுமைகளை ஏவி வருகின்றனர். குருதியும் சதையுமாக உயிரோடு வாழும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டும் காணாமல் போகும் பாரத மாதாவின் யோக்கிய புதல்வர்கள் இல்லாத மாதாவை இழிவு படுத்துவதாக ”வருந்துவதை” என்னவென்பது.//

                    மேற்படி அயோக்கியப் புதல்வர்கள் மட்டுமா பாரதமாதாவுக்கு..? பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர்களும், இன்னும், மேற்படி அ.புதல்வர்களை எதிர்ப்பவர்களும் பாரதமாதாவின் புதல்வர்கள் இல்லையா..? உங்கள் கோபம் அ.புதல்வர்கள் மேலா, பாரத மாதா மேலா, அல்லது அவள் சேலை மேலா..? அவள் தன் சேலையைப் போட்டு மூடி மறைத்து அ.புதல்வர்களைக் காப்பாற்றுகிறாள் என்று பழியைப் போட்டால் என்ன செய்வது..?! பிடிக்காத பெரியம்மா பேண்ட், சட்டை போட்டாலும் குத்தம்தான்…!!!

            • அம்பி அவர்களே

              இதற்கான பதில் எனது முந்தய பதிவிலேயே உள்ளது. சற்று கூர்ந்து படிக்கவும்.

              \\
              தாய் நாட்டை தாயாக உருவகப்படுத்தி போற்றுவதற்கு உதாரணம் ஸ்டாலினின் ‘அன்னைத் தாய்நாடு’ – கையில் ஓங்கிய கத்தியுடன் நாசிப் படைகளை எதிர் கொள்ள வருமாறு சோவியத் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் திருக்காட்சியைக் காண ‘மொட்கெர் மொட்கெர்லன்ட்’ என்று கூகிளில் தேடிப் பார்க்கவும்.
              \\

              ..
              பொதுவுடைமைவாதிக்கு நாடு, மொழி, இனம் ஆகியன கிடையாது. நாடு என்பது ஒரு இடைக்கால சமரசமே. மனித இனம் அனைத்துக்கும் ஒரே சமூகமாக பொதுவுடைமை சமூகம் அமையும். அதுவரை இந்த நாடு போன்ற அமைப்புகள் இருக்கும். நாட்டை தாயாக பாவித்தல் என்பது ஒன்று.
              ..
              தோழர் ஸ்டாலினும் இந்த நோக்கத்தில்தான் கொலைகார நாஜி படைகளுக்கு எதிராக சோவியெத் மக்களுக்கு அறைக்கூவல் விடுத்தார்.நாஜில்லளுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இருந்திருக்காது. அவர்கள் இனப்படுகொலைக்காகவும் கம்யூனிசக் கொள்கையை அழிப்பதற்காகவும் வந்திருந்தனர்.

              ஆனால் பாரத மாதாவை உருவாக்கியவர்களின் எண்ணம் வேறு. முசுலிம்களை இந்த நிலப்பரப்பிலிருந்து விரட்டுவதற்காகவும் வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகளை உறுதிப்படுத்தவுமே இந்த பாரதமாதாவை உருவாக்கினர்.

              \\
              சொந்த வீட்டில் கொள்ளையடிக்கும் ஒருவன், வெளித் திருடர்களிடம் கூட்டு போட்டுக்கொண்டு தன் வீட்டிலேயெ கொள்ளையடித்தாலும், அவன் தன் தாயைக் கூட்டிக் கொடுக்கிறான் என்று கூறினால், இப்படிச் சொல்பவர்களின் நோக்கம் திருடர்களை திட்டுவது மட்டுமா அல்லது கொள்ளையடிப்பவனின் அப்பாவித் தாயை இழிவு படுத்துவதுதிலும் அற்ப சுகம் காண்கிறார்களா..?
              \\

              ..
              பாரத மாதா என்பதெல்லாம் ஒரு மாயை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் அந்த மூடத்தனத்தையும் சதிவேலையும் விழுந்து வணங்குங்கள். எனக்கு ஒன்றும் இல்லை. அது எனது தாய் என்றுமே ஆக முடியாது, அதை நான் விரும்பவும் இல்லை. அது தற்கொலை செய்து கொண்டால் செய்து கொள்ளட்டும், அது எனக்கு மகிழ்ச்சியே.
              ..

              பாரத மாதா ஒன்றும் அப்பாவி அல்ல. அது இந்து மதத்தின் ஒரு முக்கியமான சதி வேலை. ஒரு தவளையின் மூளை அளவு அறிவு கொண்டாலும் போதும், இந்த சதியை புரிந்து கொள்ள. பார்ப்பனீயத்தின் மூளைக்கு இது நன்றாகவே தெரியும். அது அப்படி இல்லாதது போல் நடிக்கவும் தெரியும். இது அனைத்து மதத்தவர்களுக்கும் சொந்தமானது அல்ல, இந்துக்களுக்கு மட்டுமே உரியது, அவர்கள் பண்பாடான சமூக ஏற்றத்தாழ்வுகளின் ஒரு முக்கிய குறியீடு அது. அப்பாவி தாய் என்றெல்லாம் கதைக்க வேண்டாம். ஒரு உயிரற்ற செயற்கையானநிலப்பரப்பை இந்துக்களுக்கானதாக்குவதற்காக தாயாக உருவாக்குவதிலும் அதை ஒத்துக்கொள்வதிலும் உங்களுக்கு முடியும் என்றால் இந்த இந்து பிராமண மற்றும் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் களவாணித்தனத்தை கூட்டிக்கொடுப்பதற்கு சமமாக பாவிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

              • // ஆனால் பாரத மாதாவை உருவாக்கியவர்களின் எண்ணம் வேறு. முசுலிம்களை இந்த நிலப்பரப்பிலிருந்து விரட்டுவதற்காகவும் வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகளை உறுதிப்படுத்தவுமே இந்த பாரதமாதாவை உருவாக்கினர். //

                19ம் நூற்றாண்டில், அடிமைப்பட்டு கிடந்த தேசத்தைத் தட்டியெழுப்பவும், விடுதலைப் போராட்டத்தை ஒருமுகப்படுத்தவும் தேசத்தை தாயாக உருவகம் செய்தனர். எல்லா இந்தியர்களுக்கும் ஒரே தாயாக தேசம் உருவகப் படுத்தப்படும்போது இதில் எங்கே சாதி, மத வேறுபாடுகள் உறுதிப்படுகிறது..?!

                முசுலீம்கள் பாரத மாதாவை, தெய்வமாக வணங்க ஓரிறை நம்பிக்கை இடம் கொடுக்காவிட்டாலும், தாயாக நேசிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்களா..?! பாரத மாதாக்கீ ஜே என்று விடுதலைப் போராட்ட காலங்களில் தடியடிம், குண்டடியும் பட்டு, இரத்தம் சிந்தியவர்களில், உயிரிழந்தவர்களில் முசுலீம்கள் இல்லையா..?!

                // இது அனைத்து மதத்தவர்களுக்கும் சொந்தமானது அல்ல, இந்துக்களுக்கு மட்டுமே உரியது, அவர்கள் பண்பாடான சமூக ஏற்றத்தாழ்வுகளின் ஒரு முக்கிய குறியீடு அது. அப்பாவி தாய் என்றெல்லாம் கதைக்க வேண்டாம். //

                பாரதமாதா இந்துக்களுக்கு மட்டுமான ஒரு ‘தெய்வம்’ இல்லை என்று பெரும்பாலான இந்துக்களுக்குத் தெரியும். எந்த இந்துவும் பாரத மாதாவிடம் தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று தனிப்பட்ட விருப்பங்களை மற்ற தெய்வங்களிடம் வேண்டிக் கொள்வது போல் பிரார்த்தனை செய்வதில்லை. பாரத மாதா அப்பாவியோ இல்லை ’பெரும்பாவியோ’, அவளுக்குக்காக உயிர் கொடுக்கும் தேசபக்தி உள்ளவர்கள் கணிசமாக இருக்கும் வரை, ’கூட்டிக் கொடுப்பதையோ’ / காட்டிக் கொடுப்பதையோ தடுத்து எதிர்ப்பதும் நடக்கும்..

                • முதலில் இந்துக்கள் என்றால் யார் என்று பார்த்து விடுவோம். இந்த பார்ப்பனீய மதம் பாப்பாரர்களை உயர்ந்த இடத்திலும் மற்றையோரை தாழ்ந்த இடத்திலும் வைத்து இருக்கிறது. பார்ப்பனர்களையும் மற்றையோரையும் ஒரே மதமாக பார்த்தல் தவறு. பிரம்மனின் தலையில் இருந்து வந்தோராக இந்து மதம் கூறிக்கொள்ளும் பார்ப்பாரர்கள் கடவுளையே தங்கள் ஒடுக்குமுறை கருவியாக முதலில் உருவாக்கி மற்றையோரை அடிமைப்படுத்தினர். ஒரு வருணம் தனக்கு கீழான மற்ற வருணத்தை அடிமைப்படுத்திக்கொண்டு தன்னை திருப்திப்படுத்திக்கொள்ளும். காலம் மாறியது, இசுலாமியர் வந்தனர், ஆங்கிலேயர் வந்தனர், ஆட்சி மாறியது, இந்த கழிசடைகள் கூட்டிக் கொடுத்தும் காட்டிக் கொடுத்தும் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொண்டனர். சுல்தானியரிடம் இந்து சிறு குறு மன்னர்களையும் ஆங்கிலேயரிடம் திப்பு சுல்தான் போன்ற மாமன்னரையும் காட்டிக்கொடுத்தே இந்த கீழானவர்கள் பிழைப்பு ஓடியது. ஆனால் ஆட்சி மாறிய பின் முன் போல் தங்கள் ப்ராக்சி அரசாங்கமாக அது அமைந்திட முடியாது என்று இவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் காந்தி,நேரு போன்ற பனியா கூட்டத்தினரை வைத்து தங்கள் பழைய அரசாங்கத்தை அமைத்திட எண்ணினர். அப்பொழுதுதான் உடல் வருந்தாமல் உழைக்காமல் அடுத்தவரை ஒடுக்கி உயிர் வாழலாம் என்று கணக்கு பண்ணினர். அப்பொழுது ஆங்கிலேயர் மேலான வெறுப்பு மக்களிடையே அதிகரித்திருந்தது. இவர்கள் இலக்கிற்கு முசுலிம்கள் ஒரு பெரிய தடையாவர். அவர்களை எதிரியாக முன்னிறுத்தினால் மற்றையோரை இந்துக்கள் என்று ஒன்றுபடுத்தி விடலாம், அவர்களை ஒடுக்கி விடலாம் என்று கண்டு கொண்டனர். மத வெறியை மக்களுக்கு தூண்டி விட்டு தாங்கள் நினைத்ததை அடைந்து விட்டனர். இந்து என்பது இசுலாமியரும் ஆங்கிலேயரும் சிந்துநதிக்கு இப்புறமாக வாழ்ந்து வந்தவர்களை குறிக்கும் அடையாளச்சொல்லாகவே பயன்படுத்தி உள்ளனர். அதற்கு வேறு அர்த்தம் கிடையாது. உண்மையில் ஒடுக்குபவன், ஒடுக்கப் படுபவர் என்று இரு மதங்கள் இருக்கின்றன.

                  அப்பொழுது உருவான புதிய ஒடுக்குமுறைக்கருவிதான் நாடு. நாட்டுக்கு உருவம் கொடுக்கவேண்டுமல்லவா. அதை இந்து மதக்கடவுள் போலவே உருவாக்கினர். அது தெய்வமாவதற்கு உருவாக்கப்படவில்லை என்றுதான் அனைவருக்கும் தெரியும்.

                  இதற்காக தடியடி பட்டு குண்டடிபட்டு உயிரிழந்த அனைத்து முசுலிம்களும் சிறப்பாக ஏமாற்றப்பட்டு சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

                  இக்குறியீடு அனைத்து மக்களுக்கான ஒன்றல்ல. ஏமாற்றுபவர் ஏமாற்றப்படுபவர்களை ஏமாற்றி வைத்திருக்கவே உருவாக்கியது. அந்த வகையில் பார்த்தால் இது தன் விருப்பப்பட்டே சோரம் போனது. இது அந்த வகையில் அருவருக்கத்தகுந்தது மட்டுமல்ல, காஷ்மீரத்து முசுலிம்கள், வடகிழக்குநிலம்வாழ் மக்கள் ஆகியோரை கொலை செய்யவும் கற்பழிக்கவும் காணாமல் ஆக்குவதற்கும் இது விருப்பத்துடனேயே துணைபோகிறது. அந்த வகையில் இது ஒரு பிம்ப்.

                  • Everything u r saying is propoganda.Except Dalit people,every other caste of India identifies itself with the Brahminical religion and everyone have played their part.Vedas/Worship alone doesn’t make the religion,it has many socio-cultural,economic & martial aspects apart from spiritual ones.

                    Today anyone is free to convert to Islam/Christianity and those who haven’t have chosen hinduism.it is a way of life,it is a culture.

                    I dont think you have been to Kashmir/NE to realise the realities of the areas and you just read some propoganda and vomit here.Nobody takes you seriously or your opinions which are empty anyway.

                    Tipu sultan was also in alliance and conenction with Turkish sultan and similar people and he was no saint.Marxist propoganda wont change anything.

                    He is just another king who lost and even if he survived he would have made no constructive/useful contribution to the betterment of the society,people would have just become morons and lose their foreskin.

                  • // இசுலாமியர் வந்தனர், ஆங்கிலேயர் வந்தனர், ஆட்சி மாறியது, இந்த கழிசடைகள் கூட்டிக் கொடுத்தும் காட்டிக் கொடுத்தும் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொண்டனர். சுல்தானியரிடம் இந்து சிறு குறு மன்னர்களையும் ஆங்கிலேயரிடம் திப்பு சுல்தான் போன்ற மாமன்னரையும் காட்டிக்கொடுத்தே இந்த கீழானவர்கள் பிழைப்பு ஓடியது. //

                    ஆதாரம் என்று ஏதாவது கைவசம் இருக்கிறதா..? லிஸ்ட் கொடுத்து ரெண்டுவரி விளக்குங்கள், பார்க்கலாம்.

                    ஹைதராபாத் நிஜாம், ஆர்காடு நவாப் உதவியோடு கிழக்கிந்திய கம்பேனி படைகள் உங்கள் மாமன்னர் திப்பு சுல்தானை வீழ்த்துமுன் கோட்டைக்கதவுகளைத் திறந்துவிட்டவர் மிர் சாதிக்.

                    இந்த மாமன்னர் திப்புவைப் பற்றி கேரள சகாவுகளிடம் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்..

                    // இதற்காக தடியடி பட்டு குண்டடிபட்டு உயிரிழந்த அனைத்து முசுலிம்களும் சிறப்பாக ஏமாற்றப்பட்டு சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.//

                    ஒரு பொதுவுடமைவாதி இப்படியெல்லாம் உளறப்படாது..

                • அம்பி,

                  //பாரதமாதா இந்துக்களுக்கு மட்டுமான ஒரு ‘தெய்வம்’ இல்லை என்று பெரும்பாலான இந்துக்களுக்குத் தெரியும்///

                  ஒவ்வொன்றையும் கடவுளாக்குற வேலைய விடவே மாட்டீங்களா? இதுனாலதாய்யா குச்ஜ்புவுக்கும் நமீதாவுக்கும் கோயில் கட்டுறாங்க நம்ம பசங்க

                  • Boss

                    Khushboo and Namitha getting temples is a result of dravidian movement which makes fool out of people and uses cinema/media/writing to make idiots out of people and get their votes.

                    Ideally Kamaraj should have got a temple but dravidian movement happens and we now have temples of khushnoo and namitha.

                    • என்ன கீழ்த்தரமான வேல செய்றவன் அல்லாரும் திராவிடனுங்களா. நீ எந்த விடன்

                • ///தேசத்தை தாயாக உருவகம் செய்தனர்///

                  அம்பி, தாயாக உருவகம் செய்து மக்களை எழுச்சி பெறச்ச்ய்வதென்பது தவறில்லை. ஆனால், தாயின்னு சொல்லிகிட்டே புடவைகட்டி, மஞ்சள பூசி, பொட்டுவச்சி கையில ஒரு வேல கொடுத்தீங்க பாரு அதுதான் தப்பு. நம்ம் நாட்டுல கடவுளுக்கா பஞ்சம். ஏய்யா எதையெடுத்தாலும் சாமி சாமின்னு உருவகப்படுத்தி உயிர வாங்குறீங்க.

                  • // ஒவ்வொன்றையும் கடவுளாக்குற வேலைய விடவே மாட்டீங்களா? இதுனாலதாய்யா குச்ஜ்புவுக்கும் நமீதாவுக்கும் கோயில் கட்டுறாங்க நம்ம பசங்க //

                    தேச பக்தி வேறு, தேக பக்தி வேறு….

                    பாரத மாதாவிடம் லட்டு வேண்டும் புட்டு வேண்டும் என்று யாரும் வேண்டுவதில்லை..
                    ஆனால் குச்ஜ்பு, நமீதா பக்த கோடிகள் அந்தந்த ஆடல் தேவதைகளிடம் என்னத்தையெல்லாம் வேண்டி அகமகிழ்கிறார்கள் என்று தெரியவில்லை..

                    // தாயின்னு சொல்லிகிட்டே புடவைகட்டி, மஞ்சள பூசி, பொட்டுவச்சி கையில ஒரு வேல கொடுத்தீங்க பாரு //

                    தாய்க்கு இதெல்லாம் கூடாது என்றால், வேலுக்கு பதில் கரண்டி, விளக்குமாறைக் கொடுத்தால் காமெடியாப் போயிடுமே, சந்தானம்…

                  • whats wrong with that? what do u lose by that?

                    what great constructive useful thing are you doing if you are blaming others for doing motherland worship?

                    There is a whole reason behind calling important things as like ones own mom, because mother’s love is the purest thing in the world and thats why people are asked to see one’s motherland as their mom,one which should be protected.

                    It is because of the lack of this emotion,that river beds across Tamilnadu get dredged like crazy without even thinking about what ll happen to them.

                    You fight against so many things,do you fight against this.

                    You want to talk about Maoists in Jharkhand and tribal welfare,gurgaon and all but right in your backyard dravidian politicians are raping the natural resources of TN like anything,how come this doesn’t in Karnataka/AP/Kerala but only in TamilNadu.

                    • யோவ் ஹரி,

                      தாய் நாட்டை நேசிப்பதென்பது ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் தனது நாட்டை தனது தாய்க்கு நிகராக நேசிக்க வேண்டும் என்பது. அத்த வுட்டுட்டு இந்து சாமிய கொன்னாந்து வேல சொருவி மனையில வுட்டின்னா எப்படியா நேசிப்பான். மாதாக்கோயில் மாதா அதாய்யா நம்ம ஜேசு அம்மா மேரி ஒரு உருவத்த தாய்நாடா உருவகப்படுத்துனா நீ செவனேன்னு இருப்பியாக்கும்?

                  • Do you know how many converted people still keep their caste,today we have OBC reservation for Muslims/Christians also.

                    So they also have the same society as hindus,i know many christian people who call their churches as koil and they wear saree not gown for their weddings and many even keep their caste surnames.

                    If they are okay with all this from the past,are you saying it is a big deal to see,feel and respect Mother India as a motherland.what harm is caused by this? Dont most hindus respect Jesus/Mary/Islamic figures.

                    In North India,Islamic religious Sufi Qawwali music is heavily followed by Hindus and even more so than Pakistan itself.

                    How come Jains/Buddhists/Sikhs etc dont have a problem with it but only Muslims/Christians have an issue with such a harmless thing.

                    I know muslims who win prizes for chanting devaram,divya prabandham.

                    You see people like jesudoss,mano(muslim) and others sing often quasi religious songs.

                    How come you are talking about a bunch of people who cant even respect their fellow religions?

                    How can you live in India when you disrespect the emotions of 80% of the people?

                    And regarding the dravidian theory,

                    there is no aryan dravidian racially,they r just languages.I am a dravidian language speaking person.I have caste/location/religious.cultural identity.

                    And none of them are dravidian,dravidian here refers to people who invented the term and call themselves something which they are not,who caused the biggest harm of overhyping filmstars and talking about them as demi gods,hero worshipping filmstars to levels never seen before.

                    It is because of this abusive culture that we have people like power star looking into the screen and speaking dialogues.

                    Thats why we have filmstars who talk big philosophy,inetllect and all that like kamal hassan,satyaraj,Bharatiraja but they also do all the abusive things in the world like explotiing film workers,hoarding black money,evading income tax and so on.

                    But then they are worshipped like anything.

                    If you are telling me that such cultural decadence is a not a result of the dravidian movement,i am very sorry.

                    You take any of the congress leaders before that and tell me whether they were bad in anyway.

                    Rajaji,Kamaraj,Kakkan,Irudhaya Simon,Bhaktawatsalam(this is a little controversial but still…).

                    Todat TN which should have been the no.1 state in India by miles is amongst no.2,no.3 and so on.

                    Our neighbouring states AP/Karnataka had no such movement/issues,are they any worse than us?

                    • ஹரி,

                      தமிழ்நாட்டுல நெறைய இந்துக்கள் நாகூர் ஹனீபா பாட்ட விரும்பி கேப்பாங்க, அதுக்காக அவர்களை முஸ்லீம் சமூகம்னு சொல்லுவியா. என்னய்யா பேசற

          • தோழர்,

            மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

            \\ஒருங்கிணைந்த பாரதத்தையும்” வைத்து மாலை போட்டு படையல் வைத்து சூடம், சாம்பிராணி காட்டி வழிபடுகிறார்கள். வெளிப்புறமாக இப்படிக் கும்பிடும் இவர்களே பின்னால் கூட்டிக் கொடுக்கிறார்கள். அதைத்தான் கூறினேன். பாரத மாதா என்பதெல்லாம் ஒரு மாயை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் அந்த மூடத்தனத்தையும் சதிவேலையும் விழுந்து வணங்குங்கள். எனக்கு ஒன்றும் இல்லை. அது எனது தாய் என்றுமே ஆக முடியாது, அதை நான் விரும்பவும் இல்லை. அது தற்கொலை செய்து கொண்டால் செய்து கொள்ளட்டும், அது எனக்கு மகிழ்ச்சியே.//

            தமிழினம் உள்ளிட்ட தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி அதன் மீது நிறுவப்பட்டுள்ள மாய பிம்பம்தான் பாரத மாதா.அது ஒடுக்குபவனின்,சுரண்டுபவனின், கொள்ளையனின் கைக்கருவி.இந்திய ஏகாதிபத்தியம் தனது கோர முகத்தை மறைக்க போட்டுக் கொண்டுள்ள முகமூடி.அது உயிர் வாழும் காலம் வரை ஒடுக்கப்படும் தேசிய இன மக்களின் விடுதலை சாத்தியமில்லை.

            • // தமிழினம் உள்ளிட்ட தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி அதன் மீது நிறுவப்பட்டுள்ள மாய பிம்பம்தான் பாரத மாதா. //

              நீங்கள் மார்க்சீயராக இல்லாவிட்டாலும், ஒரு முற்போக்கான முஸ்லீம் என்று எண்ணுகிறேன்.. பாரத மாதா என்ற மாய பிம்பம் தேசிய இனங்களை ஒடுக்குகிறது என்றால், இஸ்லாமிய உம்மா (சமூகம்) தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மதிக்கிறதா..?! பங்களாதேசம் ஏன் கடும் போராட்டத்துக்குப் பின் தேசிய விடுதலையடைந்தது..?

              • பிரச்னையை திசை திருப்பும் அற்ப உத்தி.முசுலிம்கள் என்றாலே பாகிசுத்தானிய ஆளும் வர்க்கங்களின் அத்தனை அயோக்கியத்தனங்களையும் ஆதரிப்பார்கள் என்ற கள்ளப் பரப்புரை இது. இசுலாமிய சமூகம் என்பதை காட்டி தேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதை முசுலிம்கள் ஆதரிப்பார்கள் என்று வரலாற்றில் இருந்து ஒரு ஆதாரம் காட்ட முடியுமா.

                மத உணர்வுகளுக்கு பலியாகாத வங்காள தேசிய இன,மொழி உணர்வு வங்காள தேசத்தை தோற்றுவித்தது.ஒட்டு மொத்த இந்திய மக்கள் மத வேறுபாடின்றி அந்த விடுதலை போராட்டத்தை ஆதரித்தது வரலாறு. இந்திய முசுலிம்கள் வங்க விடுதலையை மனமுவந்து வரவேற்றதை யாரும் மறுக்க முடியுமா.

                சரி விவாத பொருளுக்கு வருவோம்.பாரத மாதா பிம்பம் தேசிய இனங்களை ஒடுக்கும் கயவர்களின் கைக்கருவி என்பதை பற்றி தங்களின் மேலான கருத்தை அறிய ஆவல்.அப்புறம் இந்திய வரைபடத்தை ஒரு பெண்ணுருவில் வரைந்து வைத்துக் கொண்டு பாரத மாதா என ”பஜனை” பாடுகிறீர்களே அந்த பெண்ணுடலில் வலதுபுற தலையாக காட்டப்படும் காசுமீர் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை எனபது உங்களுக்கு தெரியுமா.உங்களிடம் இல்லாத ஒன்றை எப்படி தாய் நாடாக உருவகப் படுத்தி கொள்கிறீர்கள்.

                அம்பி,இந்த பஜனையெல்லாம் நாட்டுப் பற்று ஆகாது.உண்மையில் நாட்டுப் பற்று என்பதை என்னால் முடிந்த அளவுக்கு விளக்கி இருக்கிறேன்.விருப்பம் இருந்தால் படித்து பார்த்து கொள்ளுங்கள்.

                http://thippuindia.blogspot.in/2010/11/blog-post_27.html

                • // பிரச்னையை திசை திருப்பும் அற்ப உத்தி.முசுலிம்கள் என்றாலே பாகிசுத்தானிய ஆளும் வர்க்கங்களின் அத்தனை அயோக்கியத்தனங்களையும் ஆதரிப்பார்கள் என்ற கள்ளப் பரப்புரை இது.//

                  பாரத மாதாவின் புதல்வர்கள் என்றாலே இந்திய ஆளும் வர்க்கங்களின் அத்தனை அயோக்கியத்தனங்களையும் ஆதரிப்பார்கள் என்ற கள்ளப் பரப்புரையை விடவா..?!

                  // இசுலாமிய சமூகம் என்பதை காட்டி தேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதை முசுலிம்கள் ஆதரிப்பார்கள் என்று வரலாற்றில் இருந்து ஒரு ஆதாரம் காட்ட முடியுமா. //

                  பங்களா தேசம்..

                  // மத உணர்வுகளுக்கு பலியாகாத வங்காள தேசிய இன,மொழி உணர்வு வங்காள தேசத்தை தோற்றுவித்தது.ஒட்டு மொத்த இந்திய மக்கள் மத வேறுபாடின்றி அந்த விடுதலை போராட்டத்தை ஆதரித்தது வரலாறு. இந்திய முசுலிம்கள் வங்க விடுதலையை மனமுவந்து வரவேற்றதை யாரும் மறுக்க முடியுமா. //

                  பங்களாதேசம் உருவான வரலாற்றை மீண்டும் படியுங்கள். பங்களாதேசின் மத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எப்படி மதத்தின் பெயரால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தேசியப் போராட்டத்தை ஒடுக்க துணை போனார்கள் என்று தெரியும்..

                • // இந்திய வரைபடத்தை ஒரு பெண்ணுருவில் வரைந்து வைத்துக் கொண்டு பாரத மாதா என ”பஜனை” பாடுகிறீர்களே அந்த பெண்ணுடலில் வலதுபுற தலையாக காட்டப்படும் காசுமீர் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை எனபது உங்களுக்கு தெரியுமா.உங்களிடம் இல்லாத ஒன்றை எப்படி தாய் நாடாக உருவகப் படுத்தி கொள்கிறீர்கள். //

                  சரியான கேள்வி.. அடுத்தமுறை பஜனை பாடும்போது பர்தா போட்ட பாகிஸ்தான், பங்களாதேச மாதாக்களையும் ரெண்டு பக்கமும் நிற்க வைத்து பஜனை பாடுகிறேன்.. ஓ.கே. யா..?!

                  // அம்பி,இந்த பஜனையெல்லாம் நாட்டுப் பற்று ஆகாது.உண்மையில் நாட்டுப் பற்று என்பதை என்னால் முடிந்த அளவுக்கு விளக்கி இருக்கிறேன்.விருப்பம் இருந்தால் படித்து பார்த்து கொள்ளுங்கள்.

                  http://thippuindia.blogspot.in/2010/11/blog-post_27.html
                  //

                  நல்ல விளக்கம்.. ஆனால் பாரத மாதாவை ஒழித்துக் கட்டுவதால் இது சாத்தியமாகிவிடாது..

                  • பாகிஸ்தானியர் வங்காள தேசத்தவர் யாரும் தங்கள் தாய்நாட்டுக்கு சேலை கட்டியோ அல்லது பர்தா அணிவித்தோ உருவகப்படுத்த வில்லை. இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை. இதை இந்து தேசமாக காட்டவேண்டும் என்பதால்தானே. கோடம்பாக்கம் தாய், சென்னை தாய் என்பவர்கள் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையானவர்கள் இந்த தமிழ் தாய், பாரதத் தாய் என்பவர்களும்.

                    • Are you saying that the tamizh thaai vaazhthu is irrelavant?

                      Why should i look to pakistan/bangladesh to do anything?

                      I find them culturally and intellectually extremely inferior and confused compared to us. so,why should i seek approval from these 2 or any country before i do soemthing?

                    • // கோடம்பாக்கம் தாய், சென்னை தாய் என்பவர்கள் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையானவர்கள் இந்த தமிழ் தாய், பாரதத் தாய் என்பவர்களும். //

                      தமிழ்த் தாய் என்னய்யா செய்தாள் உங்களை..?!

                • I agree with your idea of patriotism,but there is nothing wrong in respecting your country as your mom/dad and instilling a similar symbolism.

                  I agree that mere symbolism wont take us anywhere but persay there is nothing heretic about it.

                • மிகவும் சரியான பதில் தோழரே. அம்பி அவர்களே. தோழர் திப்புவின் பதிலையும் எனது பதிலுடன் சேர்த்துப் படியுங்கள், சற்றேனும் இந்த பாரத மாதா சதி வேலைகள் விளங்கும்.

  8. // நம் நாட்டின் மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர் முசுலீம்களாக இருக்கின்றனர். ஆனால், இந்த தேசிய விகிதம் பாராளுமன்ற – சட்டமன்றங்களில், வேலை வாய்ப்பில், ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் பதவிகளில், கல்வியில், போலீசு – இராணுவத்தில் கிடையாது. நாட்டின் 50 பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் கூட முசுலீமாக இல்லை. மேலும் போலீசு – இராணுவ – உளவுப் பிரிவுகளின் உயர்மட்டப் பதவிகளுக்கு முசுலீம்கள் வர முடியாது என்பது எழுதப்படாத விதியாகவே பின்பற்றப்படுகிறது. இவைதான் யதார்த்தம் தெரிவிக்கும் உண்மை. //

    சமீபத்திய கணக்குப்படி இந்தியாவில் முஸ்லீம்களின் சதவிகிதம் 13.4 %.

    பாராளுமன்ற-சட்டமன்றங்களில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் போதிய அளவு இல்லாததற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் மதசார்பற்றவர்கள்/ முஸ்லீம்களின் காவலர்கள் என்று கூறிக் கொள்ளும் அரசியல் கட்சிகள்.

    நாட்டின் 50 பெரிய தொழிலதிபர்களில் அசிம் பிரேம்ஜி போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் இல்லாததற்கு ’இந்துமத வெறி’ காரணமல்ல. நிழுலுலக தாதாக்கள் பாலிவுட்டில் கான்களை உருவாக்கி பணம் பண்ணும் ஆர்வத்தை மற்ற துறைகளில் காட்டுவதில்லையே..

    IAS – IPS பதவிகளில் முசுலீம்களின் பிரதிநிதித்துவம் இல்லாததற்குக் காரணம் ’பார்ப்பன இந்துமதவெறியர்கள்’ காரணம் அல்ல. இஸ்லாமிய அமைப்புகளும், கட்சிகளும் இதன் முக்கிய காரணமாக இஸ்லாமிய சமூகத்தில், பொதுவாக நிலவும், அரசுப் பணிகளில் சேரும் முனைப்பின்மையும், ஆர்வமின்மையும், வசதிகள் இன்மையும் காரணம் என்று கூறி இதை மாற்ற முயல்கிறார்களே அல்லாமல் ‘இந்து பாசிஸத்தைக்’ குற்றம் சாட்டவில்லை.

    ” Muslims have not been able to make their presence quite visible at the level of top administration owing various reasons like preference for medicine and engineering at secondary level, lack of proper coaching and guidance, socio-economic causes, lack of translation of high literacy into employable education and so on.” ….

    ” Thus, it is a call upon educated Muslim youth to avail these opportunities provided by the Government and become a part of the administration at national and state level. Since the recruiting agencies are fare and transparent in selection process, rather there is special encouragement for minorities, the young educated people must come forward with openness to ideas and face the competition without any feeling of prejudice, fear or favour. Only then an INCLUSIVE ADMINISTRATION can become a reality in India. ”

    – Dr Shahid Iqbal Choudhary

    http://shahidforest.blogspot.in/2011/01/muslims-in-indian-administration.html

    காவிப் புழுதியில் உங்கள் கட்டுரையாளருக்கு ’பார்ப்பன இந்துமத பாசிஸ்டுகளைத்’ தவிர வேறு காரணங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா..!!!

  9. இந்து மதம் சகிப்புத்தன்மை உடையது.ஆனால் மற்ற மதங்கள் சகிப்புத்தன்மை இல்லாதவை.சுதந்திரம் அடைந்த போது பாகிஸ்தானில் இந்து மக்கள் தொகை 23%. இப்போது 1%. ஏராளமான கோயில்கள் தகர்க்கப் பட்டு விட்டது.இது தான் இஸ்லாம் மதத்தின் சகிப்புதன்மை.

    • இந்து மதம் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தது. எல்லாம் அப்துல் கலாமின் வார்த்தைகளை கேட்டதால் வந்த வினை, பின்ன கனவுல அப்படிதான் வரும், இது என் கனவுல வந்தது இல்ல, சரவணன் சார் உங்க கனவுலயா அப்புடி வந்துச்சி, நல்ல காமெடி போங்க… போய் முகத்தை கழுவிகிட்டு வாங்க…

  10. தகவலுக்காக…

    பாக்கிஸ்தானின் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர் ஒரு இந்து. பாக்கிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டவர். சமீபத்தில் அதன் தலைமை நீதிபதி செளத்திரி பதவி விலக நேரிட்ட பொழுது அதன் செயல் தலைமை நீதிபதியாக செயல்பட்டவர். ஒரு இந்துவை தலைமை நீதிபதியாக்குவார்களா என்ற கேள்விக்குறி இங்குள்ள ஊடகங்களால் எழுப்பப்பட்டாலும், இந்து தலைமை நீதிபதியாவதற்கு தடையேதுமில்லை என்று அப்பதவியில் நியமிக்கப்பட்டார். அதே போல செளத்ரி வெளிநாடு சென்ற இரு காலகட்டங்களிலும் செயல் தலைமை நீதிபதியாக செயல்பட்டார். ஏற்றுக்கொள்தல் என்பது அனைத்து இன மக்களிடமும் சம அளவில்தான் இருக்கிறது.

    அதே போல நிராகரிப்பும் ஒரே அளவில்தான் இருக்கும் போல. உதாரணமாக, அந்துலே இஸ்லாமியர் என்பதற்காகத்தான் குறி வைத்து தாக்கப்பட்டு மஹாராஷ்டிர முதல்வர் பதவியை இழந்தார் என்றும் கூறுவார்கள். காஷ்மீரத்தை தவிர வேறு எந்த மாநிலத்தில் இஸ்லாமியர் முதல்வராக பதவி வகித்துள்ளார் என்பது தெரியவில்லை. (பாண்டிச்சேரியை ஒரு மாநிலமாக எடுத்துக் கொண்டால், பரூக் மரைக்காயர் பதவி வகித்துள்ளார். அவ்வளவுதான்)

    அந்த வகையில் எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் ஜாதி, மதம், இனம், மொழி ஆகிய அனைத்தையும் நிராகரித்து, அவர்களை பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக முதல்வராக ஏற்றுக் கொண்ட தமிழகத்தை அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் பாராட்டலாம்.

    இஸ்லாமிய நடிகர்களும் இந்துப் பெயர்களுடன் உலா வர வேண்டிய தமிழ்ப்பட சூழலில், இஸ்லாமிய அடையாளத்தோடு ஒருவர் இங்கு முதல்வராகக்கூடிய சாத்தியம் தற்பொழுது இல்லை…

  11. நாட்டின் 50 பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் கூட முசுலீமாக இல்லை.
    – You forgot Azim Premji.

    Other reasons I can think of is:
    1. Muslim companies usually employ only fellow muslims especially relatives. There is no diversity of thought process within the Organization. Such a narrow thinking organization cannot grow beyond some point.
    When Azim Premji’s father was incharge, Western India Product company was small and it was run by small coterie of relatives.
    Azim Premji came in and brought talent from across India and made WIPRO a professional organization.
    2. Muslims do not indulge in interest earning activities. Islamic Sharia banking is not followed in India. In any business, a company has to deal with Banks and have to pay interests on loans. Without bank loan, no company can grow on its own funds beyond some point.
    3. Most of the wealth created by Muslims in the world is due to the Oil wealth in middle east. Rarely, we see any entrepreneurish or new ideas from Muslim world. Reason I believe is a Hindu, a Christian or Sikh or Chinese communist do not carry their faith to their work place but Muslim carry their faith to everywhere and at all times.

  12. அரி,யார் காட்டுமிராண்டி.மாவீரன் தீரன் திப்புவா நம்பூதிரி பார்ப்பன கூட்டமா.

    பார்க்க.http://thathachariyar.blogspot.in/2010/10/blog-post.html

    சுட்டியிலிருந்து,
    \\சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்பு கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார்.

    “மகாராஷ்டிரா போர் வேளையில் அவர்களின் கூடாரத்தில் தாக்குதல் நடத்தியவர்களில் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட அரச குமாரிகளைத் திப்புவின் முன்னிலையில் கொண்டு வந்த வேளையில், அந்த அபூர்வ அழகிகளின் அழகில் மயங்கி விடாமல் அந்த அழகிகளுக்கு ஆபரணங்களும் உயர்ந்த உடைகளும் பரிசுகளாக வழங்கி, போரை நிறுத்துவதற்கு அவர்களின் கணவர்களை வேண்டிக் கொள்ள வேன்டும் என்ற கோரிக்கையுடன் அவர்களைப் பாதுகாப்பாக திரும்ப அனுப்பிய குணம் வியப்பில் ஆழ்த்துகிறது! – திப்பு சுல்தான், பி.கே. பாலகிருஷ்ணன், பக்கம் 120. //

    \\”மூத்த சகோதரன் மட்டும் சொந்தம் ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருப்பர். இதே நேரம் வீட்டில் மூத்த சகோதரன் பல மனைவிமார்களுடனும் இருப்பார்” (19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி – பக்கம் 120).//

  13. He still forcefully converted people to islam,used religion as a tool to reinforce his rule.

    I admire the way he treated the women,it is rare for a muslim king to be like that but politically the disease of islamic rule is too dangerous to allow even though Tipu could have been an exception on some fronts.

    Regarding Matriarchial Kerala upper caste society, that was their system and the women had all the power.Doesn’t it suit your pennadimaithana edirppu views?

    • \\ He still forcefully converted people to islam,used religion as a tool to reinforce his rule.//

      உங்க பார்ப்பன கூட்டத்தின் காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கையை இப்படி உத்தரவு போட்டு சீர்திருத்த முயன்றதால் நம்பூதிரி ”பாடுகள்” கிளப்பிவிட்ட புரளிதான் கட்டாய மதமாற்றம்.

      \\”உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்”//

      \\Regarding Matriarchial Kerala upper caste society, that was their system //

      பார்ப்பன அசிங்கம் புடிச்ச ஆச்சாரங்களை எடுத்து சொன்னால் ”அது அவங்க முறை”ன்னு தப்பிக்கும் முயற்சி.

      \\the women had all the power.Doesn’t it suit your pennadimaithana edirppu views?//

      என்னய்யா பவர் இருந்திருக்கு.அச்சுத மேனன் சொல்றாரு.கேட்டுக்க.

      \\இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்” என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.

      “நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் – எதிர்ப்பவர்கள் – தெய்வக் குற்றத்திற்கு ஆளாவர்”.

      இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தைகளைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப்பூர்வமாக விரும்பியிருந்தனர்.

      “சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்”.

      (சி. அச்சுதமேனோன் – கொச்சின் மாநில கையேடு – 1910. பக்கம் 193. c. achchutha menon – Cochin State Manual – 1910. Page No: 193.) //

      உங்க பாஷையில இப்படி கண்டவனோடும் உறவு வச்சுக்கிறதுக்கு பேரு பவரா. அப்பன் பேர் தெரியாத பிள்ளையை பெத்து போடுறதுதான் பெண்ணடிமைத்தன எதிர்ப்பு என்று எந்த ”நம்பூதிரி நாயர்” உனக்கு சொன்னான்.

      • நம்பூதிரி நாயர்..?! இன்னோரு நாயர் பேரு நினைவுக்கு வருது.. T.M.நாயர்.. திராவிட மாதவ நாயரோ.. தரவாட் மாதவ நாயரோ.. ஏதோ ஒண்ணு..

        இந்த நாயர் கேரளாவில் எப்படியோ.. ஆனால் தமிழ் நாட்டில் ஒரு திராவிட இயக்கத் தூணாக கொண்டாடப்படுபவர்.. இவர் தமிழர்களிடம் “நம்பூதிரிப் பாப்பான் நம்மளை வெப்பாட்டி மோன் என்னு விளிக்குன்னு, கேட்டோ ஈ அக்கிரமத்தே” என்று தன் சொந்தக் கதை, சோகக் கதையைச் சொல்ல, கன்னட ஈ.வே.ராமசாமி நாயக்கர் தமிழ் நாடு பூராவும் இதை பரப்பினார்.. எப்படி..? “பாப்பான் நம்மை எல்லாம் வைப்பாட்டி மகன்கள்” என்கிறான் என்று தமிழன் தலையில் நாயரின் அசிங்கத்தை ஏற்றி வைத்தார்.. (இதைக் கேட்டு இவர் சொந்த சாதிக்காரர்கள் இவரைக் காறித்துப்பியது வேறு கதை). இந்த நாயரையும், நாயக்கரையும் நம்பிய ஒரு தமிழர்க் கூட்டம் திராவிடர்கள் என்று கூறிக் கொண்டு அலைய ஆரம்பித்த கண்றாவியைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்த, சிரிக்கும் மலையாளிகளும், கன்னடர்களும் தமிழன் என்றாலே எளக்காரத்துடன் ஏறி அடிக்கிறார்கள்.. என்ன எழவுய்யா இதெல்லாம்..??

        • அம்பி,
          நேர்மையற்ற முறையில் மட்டுமல்ல இழிவான முறையிலும் வாதம் செய்கிறீங்க.ஒருவரை தனிப்பட்ட முறையில் இழித்தும் பழித்தும் எழுதுவது அருவருப்பூட்டும் இழிசெயல்.டி.எம.நாயர் குறித்து இப்படி எழுதுவது கண்டனத்துக்குரியது.

          \\“நம்பூதிரிப் பாப்பான் நம்மளை வெப்பாட்டி மோன் என்னு விளிக்குன்னு, கேட்டோ ஈ அக்கிரமத்தே” என்று தன் சொந்தக் கதை, சோகக் கதையைச் சொல்ல,//

          நாயரும் பெரியாரும் பார்ப்பனியம் சூத்திர பஞ்சம சாதியினரை வேசிமகன் னு இழிவு படுத்துதுன்னு கற்பனையாக சொல்லவில்லை.இந்து மத நூல்களை ஆதாரம் காட்டித்தான் சொன்னார்கள்.அதை கேட்டு யாரும் பெரியாரை காரித்துப்பவில்லை.பார்ப்பனியத்தின் மூஞ்சியில்தான் காறித்துப்பினார்கள். துப்புகிறார்கள்.அதனால்தான் பார்ப்பனிய எதிர்ப்பு திராவிட இயக்க அரசியல் தமிழகத்தில் இந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.அப்பட்டமான இந்துத்வவாதியான M.G.R.கூட அண்ணா பெரியார் படங்களை போட்டுத்தான் ஓட்டு வாங்க முடிந்தது.இன்று வரை பார்ப்பனிய எதிர்ப்பு பேசாத அரசியல் கட்சி அ.தி.மு.க.தவிர்த்து தமிழகத்தில் உண்டா.

          • // நாயரும் பெரியாரும் பார்ப்பனியம் சூத்திர பஞ்சம சாதியினரை வேசிமகன் னு இழிவு படுத்துதுன்னு கற்பனையாக சொல்லவில்லை.இந்து மத நூல்களை ஆதாரம் காட்டித்தான் சொன்னார்கள். //

            அவர்கள் எந்த இந்து மத ஆதாரங்களையும் காட்டவில்லை.. காட்டிய ’மனுசாத்திர ஆதாரங்கள்’ விசமத்துடன் திரிக்கப் பட்டவை என்று உங்களிடம் முன்பே விவாதித்திருக்கிறேன்..

            நம்பூதிரி-நாயர்களின் ‘சம்பந்தம்’ என்ற உறவு கேரளத்தில் நிலவிய வழக்கம். தழிழ் நாட்டில் தமிழனை ‘வைப்பாட்டி மகன்’ என்று எந்தப் பார்ப்பானும் எப்போதும் எதையும் ஆதாரமாகக் காட்டியும் கூறவில்லை… இத்தகு பிரசாரங்கள் விசமத்தனமானவை, தமிழன் மீது சுற்றி வளைத்து இழிவைத் திணிக்கும் உள் நோக்கம் கொண்டவை..

            // அதனால்தான் பார்ப்பனிய எதிர்ப்பு திராவிட இயக்க அரசியல் தமிழகத்தில் இந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.அப்பட்டமான இந்துத்வவாதியான M.G.R.கூட அண்ணா பெரியார் படங்களை போட்டுத்தான் ஓட்டு வாங்க முடிந்தது.இன்று வரை பார்ப்பனிய எதிர்ப்பு பேசாத அரசியல் கட்சி அ.தி.மு.க.தவிர்த்து தமிழகத்தில் உண்டா. //

            தமிழகத்தில் பார்ப்பனிய எதிர்ப்புக்கு வேறு பொருத்தமான காரணங்களும் நிலவியது.. பார்ப்பனிய எதிர்ப்பு தமிழகத்தில் மட்டும் நிகழ்ந்ததில்லை.. இந்தியா முழுவதும், அறிவுப் பூர்வமான நேர்மையான வாதங்களால், டாக்டர் அம்பேத்கர் மற்றும் சமூக சீர்த்திருத்தவாதிகளால் பார்ப்பனிய எதிர்ப்பு நடந்து கொண்டிருந்தது..

            ஆனால் தமிழகத்தில் பெரியார் & கம்பேனியின் காழ்ப்புணர்ச்சி மண்டிய பார்பனிய எதிர்ப்பு மட்டுமே திராவிட இயக்க அரசியலின் வெற்றிக்குக் காரணமல்ல..

            பெரியார் கூட்டத்திலிருந்து அண்ணா வெளியேறி தி.மு.க. வை உருவாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை, காங்கிரசைத் திட்டுவதை விட கேவலமாகத்தான் ‘கண்ணீர்த் துளிகளை’ – அண்ணாவையும், திமுக வையும் திட்டிக் கொண்டிருந்தார் பெரியார், 20 ஆண்டுகளாக.. ஆனால் அண்ணாவின் பொறுமையும், பண்பும் அவரை மேலும் உயர்த்தியது..

            திமுகவின் அரசியல் அதிகார வெற்றி, முழுக்க முழுக்க அண்ணாவின் தமிழுணர்வு, அறிவாற்றல், பேச்சாற்றல், திமுகவின் இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பால் கிடைத்த வெற்றி.. இது நடைபெறாமல் போயிருந்தால் பெரியார் சிலை, பெரியார் திடலில் மட்டும்தான் இருந்திருக்கும்..

            • Apart from all this,there was MGR.

              He got votes by showing his face,it is not a mystery that most Tamil people even today continue to vote for MGR’s party,even after his death.

              An Individual’s integrity always wins over a party’s inability to keep up with ideology.

            • \\அவர்கள் எந்த இந்து மத ஆதாரங்களையும் காட்டவில்லை.. காட்டிய ’மனுசாத்திர ஆதாரங்கள்’ விசமத்துடன் திரிக்கப் பட்டவை என்று உங்களிடம் முன்பே விவாதித்திருக்கிறேன்..//

              நண்பர் தோழமையுடன் இது பற்றி விவாதித்து அம்பலப்பட்டு போன அம்பிக்கு இந்த சவடால் கொஞ்சம் கூட பொருந்தலையே.

              https://www.vinavu.com/2011/11/18/conversion-10/#comment-51890

              https://www.vinavu.com/2011/11/18/conversion-10/#comment-52013

              • இதுதான் நேர்மையா..?

                உழைக்கும் மக்களை வேசி மக்கள் என்று இந்து மதம் கூறுவதாகக் கூறும் புரட்டுதான் அம்பலப்பட்டுப் போயிருக்கிறது… தெளிவான ஆதாரங்களை கொடுக்காமல் சவடால் விடுவது நீங்கள்தான்…

                • நான் படித்த வரையில் மனுதர்மத்தின் பெரும்பகுதிகள் சாதிகள் தோன்றியவற்றில் உள்ள வேசித்தனத்தையும் அத்தகைய இரண்டாம் நிலை மக்களுக்கான அதீத தண்டனைகளையும் முன்வைத்துள்ளது. மாறுபாடு இருந்தால் நிரூபிக்கவும்

                  • மணி,

                    GATT ஒப்பந்தத்திலிருந்து பக்திப் பாடல்கள் வரை பலவற்றையும், பலரும் வேசித்தனம் என்று கூறி, எது எல்லாம் வேசித்தனம் என்று தெரியாமல் என்னைப் போன்றவர்கள் குழப்பத்திலிருப்பதால், என் சிற்றறிவுக்கு எட்டும் வகையில் மனுவின் நூலிலிருந்து ஓரிரு உதாரணங்களோடு விளக்கவும்..

                    • மணி,

                      நல்லவேளை அண்ணா நினைவு நூலகம், பிரிட்டிஷ் மியூசியம் நூலகம் இவற்றின் சுட்டிகளைக் கொடுக்காமல் இருந்தீர்களே, நன்றி..

                      மனு நூலில் என்னவெல்லாமோ உளறப் பட்டிருக்கிறது.. உழைக்கும் மக்களை வேசிமக்கள் என்று குறிப்பிடும் எதையும் பார்க்க முடியவில்லை..

                      டாக்டர் அம்பேத்கரின் நுட்பமான ஆராய்ச்சிக் கட்டுரை பல விசயங்களை ஆழமாக விவாதிக்கிறது.. ஆனால் மேற்படி ஆதாரத்தை என்னால் காணமுடியவில்லை.. தயவுசெய்து எங்கிருக்கிறது என்று சுட்டிக் காட்டவும்..

                • அம்பலப் பட்டுள்ள பித்தலாட்டமான வாதம் அம்பியோடதா எங்களோடதா பார்க்கலாம். தெளிவான ஆதாரங்கள் கொடுத்தாலும் குழப்பமான ஒரு பதிலை போட்டு அந்த ஆதாரங்களை மறுத்து விட்டதாக பீற்றிக்கொள்ளும் அம்பியின் மோசடியையும் பார்க்கலாம்.

                  \\அவர்கள் எந்த இந்து மத ஆதாரங்களையும் காட்டவில்லை.. காட்டிய ’மனுசாத்திர ஆதாரங்கள்’ விசமத்துடன் திரிக்கப் பட்டவை என்று உங்களிடம் முன்பே விவாதித்திருக்கிறேன்.//

                  இல்லைன்னு வாதம் பண்ணா அந்த ஆதாரம் தப்புன்னு நிரூபிச்சதா ஆயிடுமா.நீங்க ”விவாதித்த” லட்சணம் இதுதான்.

                  https://www.vinavu.com/2012/05/30/kanchi-report/#comment-63207

                  இந்த பின்னூட்டத்தில் நான் கொடுத்த ஆதாரம்.

                  \\சூத்திரன் யார்.மனு தர்மம் சொல்கிறது.
                  யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன், விபசாரி மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (அத் 8. சு. 415)//

                  இதற்கு நீங்கள் கொடுத்த மறுப்பு.இது பத்தி கண்டுக்காத ஒண்ணுமே சொல்லாத கள்ள மவுனம்.

                  அடுத்து
                  ஆதாரம் கொடுன்னு இதே சவடாலை கூசாமல் விட்டபோது இதை எடுத்துக் காட்டிய பின் எடுத்து வைத்த மறுப்பு ”விவாதம்” இது.

                  \\மேற்படி லிஸ்டில், ”விபசாரி மகனும் ஒரு சூத்திரன்” என்பதை, “சூத்திரன் என்றால் விபசாரி மகன்” என்று திரித்து விடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகாதா ..?//

                  பார்க்க இந்த சுட்டியும் அதனை தொடர்ந்த விவாதமும்.https://www.vinavu.com/2012/06/28/conversion-17/#comment-64434

                  இந்த பதிலின் மூலம் மனுதர்மம் சூத்திரனை வேசிமகன் என இழிவு படுத்தவில்லை என நிரூபித்து விட்டதாக நீங்கள் எண்ணினால் உங்கள் மேல் இரக்கப்பட தோன்றுகிறது.

                  தோழமையுடன் நடத்திய வாதத்தில் அவர் புருஷசுத்தம், ரிக், மநு ஆகியன சூத்திரனை வேசிமகன் என இழிவு படுத்துவதாக சொல்கிறார்.இல்லை என்று மறுக்கிறீர்கள்.அப்படியானால் இந்த பொருள் தவறு என்றால் சூத்திரன் என்பதற்கான உண்மையான பொருளை நீங்கள் சொல்லுங்கள் என திரும்ப திரும்ப கேட்கிறார்.

                  போலீஸ் ஸ்டேஷன் சுவத்துல ஒன்னுக்கு அடிச்சதுனாலதான் ஜெயிலுக்கு போனேன்னு நிருபர்கள் கிட்ட சொல்லாமையே தப்பிச்சு போன வடிவேலு மாரி சூத்திரனுக்கு என்ன அர்த்தம்னு சொல்லாம தப்பி ஓடி ஒளிந்த அம்பிதான் அங்கு அம்பலப்பட்டு போய் கிடக்கிறார்.

                  • பதிலை இங்கே கொடுத்தால் வேறு எங்கே போகிறது..??

                    // இந்த பதிலின் மூலம் மனுதர்மம் சூத்திரனை வேசிமகன் என இழிவு படுத்தவில்லை என நிரூபித்து விட்டதாக நீங்கள் எண்ணினால் உங்கள் மேல் இரக்கப்பட தோன்றுகிறது. //

                    இரக்கப் படவேண்டியது உங்கள் புரட்டை நம்பியவர்கள் மீது..

                    // தோழமையுடன் நடத்திய வாதத்தில் அவர் புருஷசுத்தம், ரிக், மநு ஆகியன சூத்திரனை வேசிமகன் என இழிவு படுத்துவதாக சொல்கிறார்.இல்லை என்று மறுக்கிறீர்கள்.அப்படியானால் இந்த பொருள் தவறு என்றால் சூத்திரன் என்பதற்கான உண்மையான பொருளை நீங்கள் சொல்லுங்கள் என திரும்ப திரும்ப கேட்கிறார். //

                    ஆதாரங்களைக் காட்ட முடியவில்லை என்றால், மேற்படி சாத்திரங்களில் என்ன எழவு இருக்கிறதோ அதை மட்டும் சொல்லி விமரிசிக்க வேண்டும்.. திரும்ப திரும்ப நீங்களாக இட்டுக் கட்டியதை அவற்றில் இருப்பதாக கூறி உங்கள் பங்குக்கு மக்களை ஏய்க்கக் கூடாது…

                    // அம்பலப் பட்டுள்ள பித்தலாட்டமான வாதம் அம்பியோடதா எங்களோடதா பார்க்கலாம். தெளிவான ஆதாரங்கள் கொடுத்தாலும் குழப்பமான ஒரு பதிலை போட்டு அந்த ஆதாரங்களை மறுத்து விட்டதாக பீற்றிக்கொள்ளும் அம்பியின் மோசடியையும் பார்க்கலாம். //

                    தெளிவான ஆதாரங்கள்… எது..?! இதுவா :

                    \\சூத்திரன் யார்.மனு தர்மம் சொல்கிறது.
                    யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன், விபசாரி மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (அத் 8. சு. 415)//

                    இதற்கு பதில் ஏற்கனவே அங்கேயே கொடுத்திருக்கிறேன் :

                    // ஆனால் மேற்படி லிஸ்டில், ”விபசாரி மகனும் ஒரு சூத்திரன்” என்பதை, “சூத்திரன் என்றால் விபசாரி மகன்” என்று திரித்து விடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகாதா ..? ஏன் பெரியாரின் இந்த திரிபு வேலை தமிழ் மக்களிடம் பலிக்கவில்லை என்று புரிகிறதா..?

                    விபசாரிகளை பாலியல் சுரண்டலுக்கு உட்படுபவர்கள் என்ற பொருளில் ‘பாலியல் தொழிலாளர்கள்’ என்று அழைப்பதை வைத்து, தொழிலாளர்கள் எல்லாம் விபசாரிகள் என்று யாராவது திரித்துச் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா..?! //

                    https://www.vinavu.com/2012/06/28/conversion-17/#comment-64434

                    இதற்கு அங்கே பதில் சொல்லாமல் இங்கே வந்து என்னுடைய பித்தலாட்டம், மோசடி என்று திருப்பிப் போட்டு, உங்களைப் பாத்தா பாவமா இருக்குன்னு ஒரு காமெடி வேற… வடிவேலு இல்லாத குறையை போக்கிட்டீங்க.. நேர்மை பொங்கி வழியுது…

                    // போலீஸ் ஸ்டேஷன் சுவத்துல ஒன்னுக்கு அடிச்சதுனாலதான் ஜெயிலுக்கு போனேன்னு நிருபர்கள் கிட்ட சொல்லாமையே தப்பிச்சு போன வடிவேலு மாரி சூத்திரனுக்கு என்ன அர்த்தம்னு சொல்லாம தப்பி ஓடி ஒளிந்த அம்பிதான் அங்கு அம்பலப்பட்டு போய் கிடக்கிறார். //

                    சூத்திரர்களை வேசிமக்கள் என்று கூறுவதாக புரட்டிக் கொண்டிருப்பதற்கு ஆதாரம் கேட்டால் இதோ என்று காட்டாமல், நீ சொல், லாக்கப்பைப் பார், வடிவேலு மூத்திரத்தைப் பார், அம்பி ஓடுவதைப் பார் என்று திசை திருப்பி வீராப்பு பேசுவதைத் தான் திராவிடப் பம்மாத்து என்பார்கள்.. நேர்மை பொங்கி வழிஞ்சு போலிஸ் ஸ்டேசன், தெருவிலெல்லாம் ஓட ஆரம்பிச்சுடுச்சு போங்க..

                    • நாங்கள் தெளிவான ஆதாரம் குடுத்துருக்கமா இல்லையா அதை அம்பி வெற்றிகரமாக மறுத்துள்ளாரா இல்லையா என்பதை வாசகர்கள் முடிவுக்கு விட்டு விவாதத்தை முடித்து கொள்கிறேன்.

                    • தெளிவான ஆதாரங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்…

                    • அன்பு,

                      காலத்தால் அழியாதது மதக் கருத்துகளை காலத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொண்டிருப்பதுதான். விடுங்க அன்பு, எனக்கு நன்றாகாவே தெரியும் அம்பி ஒரு நல்ல நடிகர் என்று.

                    • டைரக்டர் சந்தானம், நண்பர் அன்புடன் சேர்ந்து இயங்காததால் என்னை நல்ல நடிகர்ன்னு சொல்றீங்க.. ஸ்கிரிப்ட்ட நல்லாப் படிச்சுப் பாருங்க.. யாரு பொருத்தமா இருப்பாங்கன்னு தெரியும்..

            • \\பார்ப்பனிய எதிர்ப்பு தமிழகத்தில் மட்டும் நிகழ்ந்ததில்லை//

              இன்று வரை தமிழகத்தில் அது கொண்டிருக்கும் வீரியம் இந்தியாவின் பிற பகுதிகளில் இல்லையே.பெரியார் இயக்கங்களின் தொண்டு அன்றி அதற்கு வேறு எது காரணமாக இருக்க முடியும்.

              \\ இது நடைபெறாமல் போயிருந்தால் பெரியார் சிலை, பெரியார் திடலில் மட்டும்தான் இருந்திருக்கும்.//

              இதற்குத்தானே ஆசை படுகிறாய் பாலகுமாரா.பாருங்கள் அம்பி ஏற்கனவே சொன்னதுதான் .நீங்க விரும்பிய திசையில் எல்லாம் வரலாற்றின் சக்கரத்தை சுழன்றோட செய்ய முடியாது.அதை தீர்மானிப்பவர்கள் உழைக்கும் மக்களே.

              • Hahahaha,

                Please Anbu,now dont do comedy here.

                TN people time and again voted MGR into power and now Jayalalitha also againd and again.DK has now split into two and people vote for congress right after the Srilanka war.

                Again and again, the importance given to periyar is nothing. Our rivers are dry,our river beds are dredged,our public service is corrupt to the core and even ours beers are not even cold.

                Thats the result of the dravidian legacy and thats the result of your peiryar’s movement,stupid movement.

                People without integrity,people without fear of god.

                You come here and defend randomly,thats the ultimate result.

              • // இன்று வரை தமிழகத்தில் அது கொண்டிருக்கும் வீரியம் இந்தியாவின் பிற பகுதிகளில் இல்லையே.பெரியார் இயக்கங்களின் தொண்டு அன்றி அதற்கு வேறு எது காரணமாக இருக்க முடியும். //

                இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத எண்ணிக்கையில் சாதிக் கட்சிகள்..

                மலம் கரைத்துக் குடிக்க வைப்பது, இரட்டைக் குவளை, தலித்துகளுக்கு அரசியல் அதிகாரத்தை மறுப்பது, செருப்புக் காலுடன் நடக்க இயலாதது, சாதி மாறித் திருமணம் செய்தால் வெட்டுவது, மற்றும் பல கொடுமைகள்….

                இதெல்லாம் நடப்பது இந்த திராவிட சொர்க்கத்தில்தான்…

                பார்ப்பன எதிர்ப்பை பார்ப்பனிய எதிர்ப்பு என்று இங்கு புரட்டிக் கொண்டிருப்பதுதான் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது..

                • Ambi,

                  These guys will never learn.I showed this website to a dalit friend of mine and he says nee edhukku machi,inga ellam neratha veenadichikittu irukkannu kettan.

                  The division is clear,hard working people and lazy people.Lazy people try to exploit hard working people,thats the only reality of today.

                  Good thing is this movement helped brahmins become very hardworking and not lazy like before.

      • // அப்பன் பேர் தெரியாத பிள்ளையை பெத்து போடுறதுதான் பெண்ணடிமைத்தன எதிர்ப்பு என்று எந்த ”நம்பூதிரி நாயர்” உனக்கு சொன்னான். //

        ’சம்பந்தம்’ என்று அழைக்கப்பட்ட இவ்வழக்கத்தால், பெருமளவு நம்பூதிரிப் பெண்கள் கொடுமைக்குள்ளானார்கள் என்பது மட்டுமல்ல, நம்பூதிரிகளின் இந்த சுயநலமிக்க ஆணாதிக்க மூட வழக்கத்தால் நம்பூதிரிகளின் எண்ணிக்கை நசித்து நாசமாகிப் போனதுதான் உண்மை..

        நாயர்ப் பெண்களின் சுதந்திரத்தை உங்கள் ‘விடுதலை’ எப்படிப் போற்றுகிறது என்று பாருங்கள் :

        “இந்திய தீபகற்பத்திலேயே பெண் கல்வியை ஆதரித்து – ஊக்குவித்த ஒரே பார்ப்பனரல்லாத இனம் நாயர் இனம்தான்.”

        http://www.viduthalai.in/home/dravidar-kazhagam/37-dravidar-kazhagam-news/39136-t-out-of-lenin-m-nair-anniversary-seminar-out-of-historical-research-mayyat-eluccimiku-organized.html

        தாத்தாச்சாரியின் திப்பு புராணத்துக்கு வேறு உரைகளும் உண்டு.. முழுமையான திப்புவின் குணாதிசயங்கள் பற்றிய முழுமையான பிம்பம் அவரை விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மன்னராக்கவில்லை.. குறிப்பாக கேரளாவில் திப்புவின் மதவேறியும், ஆங்கிலேயருக்கு அவர் அனுப்பிய வேண்டுகோளும் :

        ”He then proceeded to North Malabar to suppress the spreading revolt under Kadathanad and Pazhassi Rajas. Prior to this, Tipu had sent a formal request to the English Company at Tellicherry asking them “not to give protection and shelter to Nairs fleeing from South Malabar” (p. 509). A similar letter had been sent to the English Company in Tellicherry by Hyder Ali Khan in 1764 before he launched his Malabar invasion (Kerala History by A.S. Sreedhara Menon, p. 372). These letters clearly show that neither Hyder Ali nor Tipu was at war with the British.”

        http://voiceofdharma.org/books/tipu/ch04.htm

  14. I dont know why you are attributing this to the vedic religion,vedic religion is infact a strictly patriarchial religion with more impetus to guys than women.

    Which state in India has ever followed such a system? Go ask namboothiris what they think of brahmins from all over india including tamil brahmins?

    Their systems are different and who is supporting that.

    By the way this whole system is called sambandam and it was followed by the nairs where the women had the right to be with whoever they want and they had the kids and the wealth.

    The money earned by a man went to his sister’s children and not to his own children.

    I dont know why they have this system,this is their own invention.I do not follow this system and this system has no morals but then if in a patriarchial society muslim kings can have their harems and slaves,whats the deal if the women have a choice to do it themselves.

    But Tipu didn’t convert them for all these reasons,he did it for his own benefit and his own religious chauvinism.

    You are saying a child who doesn’t know his father’s name but thats the whole story here.

    Will you say the samething that a child doesn’t know mother’s name?

    Amma per theriyadha pillainnu solluveengala.

    It is a case of women being empowered bigtime,nairs are a matriarchial society.

    You dont say the same thing when a guy goes and sleeps with many women or has multiple wives.

    Anyway hindu religion/vedas do not ask you to do either of these things.It just asks you to have one wife and kids,thats all.

    I dont know why the hindu religion is at blame for every exception that is around.

    Infact Tipu has fought everyone, The Kodavas from coorg,christians from mangalore and he abused not only temples but churches also.

    What excuse did he have for that?

    • //Anyway hindu religion/vedas do not ask you to do either of these things.It just asks you to have one wife and kids,thats all.//

      Any reference?

      //Infact Tipu has fought everyone, The Kodavas from coorg,christians from mangalore and he abused not only temples but churches also.//

      Agree….

      • I dont know about reference man, but one wife theory is there for good.Rest is all social manipulation.

        If the queen is impotent or kingdom is big,then king wants more sons.

        so,it is all justified.

        Only thing i know is there is a difference between marriage and illicit relationship.

        Marriage can only be one,regarding illicit relationship,i dont know.

  15. தம்பி வினவு ஆர்மேனிய படுகொலைகளை மறந்திட்டீங்களோ?
    துருக்கியில் மதச்சார்பில்லை என்று எழுதியிருக்கிறீர்கள். அவர்கள் யூரோ வலயத்தில் சேர்வதற்கான வேஷம் அது.

  16. ***செய்தி – புதிய தேர்தல் ஆணையராக சையத் நசிம் அகமது ஜாய்தி நியமிக்கப்பட்டுள்ளார்.***
    தேர்தல் ஆணையர் பதவி என்பது ‘ரப்பர் ஸ்டாம்ப்’ உயர்பதவி என்கிறது வினவு.

Leave a Reply to திப்பு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க