privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மாருதி முதல் ஹூண்டாய் வரை...ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்!

மாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்!

-

“தென்னக டெட்ராய்டில்” உரிமைகள் மீதான தடைக்கற்கள்!

உயரும்-லாபம்-சுருங்கும்-கூலி
உயரும் லாபம் சுருங்கும் கூலி – நன்றி www.thehindu.com

ஹரியானா, மானசரிலுள்ள மாருதி சுசுகி ஆலையில் தொடர்ந்த நிகழ்வுகளால் தொழிலாளர்களின் 13 நாட்கள் வேலை நிறுத்தத்தின் முடிவில் கடந்த ஆண்டு ஆலை மூடல் அறிவிக்கப்பட்டது.

ஒரு வருடம் கடந்து விட்டது என்றாலும் அந்த வேலை நிறுத்தத்தின் முடிவில் தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் பெற்ற வாக்குறுதிகள், குறிப்பாக நிரந்தர தொழிலாளிக்கு ஈடான சம்பள விகிதங்கள் ஒப்பந்த தொழிலாளிக்கும் அமுல் படுத்துவது, தொழிலாளர்களுக்கான குறை தீர்ப்பதற்கான குழு ஒன்றை நிறுவுவது ஆகியவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இதே போன்ற ஒரு பாவப்பட்ட, கொந்தளிப்பான சூழ்நிலையில் மேற்பார்வையாளர் ஒருவர் தொழிலாளி ஒருவரை சாதிப்பெயர் சொல்லி திட்டியது, உடனடியாக தொழிலாளர்கள் ஒன்றுபடவும், அந்த மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தவும் வழிவகுத்தது. அதனால் ஏற்பட்ட வன்முறை மீது நடுநிலை பார்வையாளர்கள் மூலம் விசாரணை துவங்கியுள்ளது.

இந்த நிகழ்வுகள் குறித்து நாங்கள் ஐந்து வெவ்வேறு தரப்பிலிருந்து அறிக்கைகள் பெற்றுள்ளோம்.

நிர்வாகத்தரப்பில் வன்முறை நடந்த சில மணித்துளிகளிலேயே தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்- அதன் காரணமாக ஒரு மேலாளர் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.

தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இந்த கூற்றை மறுத்தனர். குறிப்பாக அவர்கள் தெரிவிப்பது யாதெனில், தொழிலாளர் தரப்பில் வன்முறையின்றி அமைதியாகத்தான் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாகத்தரப்பில் ஆலைக்குள் ஏவிவிடப்பட்ட கூலிப்படையினர்தான் தொழிலாளர்களை தாக்கத் துவங்கினர் என்றனர்.  அதன் காரணமாக நேர்ந்த குழப்பத்தில் ஏற்பட்ட வன்முறை என்பது ஒருவர் மரணத்தில் சென்று முடிந்தது.

தொழிலாளியிடம் கேட்டறிந்ததும், சில ஊடகங்கள் வெளிச்சொன்னதும், தொழிற்சங்கத்தினர் சொல்வதிலிருந்தும், அதாவது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வன்முறை என்ற கருத்துடன் ஏறக்குறைய ஒத்துப் போகிறது.

மூன்றாவது பார்வையாக புலனாய்வு துறை வாயிலாக அரசிற்கு கிடைத்த தகவலின் பேரில் அரசு அதிகாரிகள் தரப்பு யாதெனில் மாவோயிஸ்டுகள் தொழிலாளர்களிடையே ஊடுறுவி தொழிற்சங்கங்களில் கலந்ததால் அமைதியின்மை என்பது உருவானது என்கின்றனர்.

நான்காவது கருத்தாக ‘நடுநிலை பார்வையாளர்கள்’ மாருதியோடு வணிக தொடர்புகள் வைத்திருக்காதவர்கள் தரப்பிலிருந்து இத்தகைய அமைதியின்மை என்பது உற்பத்தியை பாதிக்கும் என கவலை தெரிவிக்கப்பட்டது.  அது குறிப்பிட்டு சொன்னது போல அத்தகைய அமைதியின்மை சூழல் இரக்கமற்ற முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றது.

ஐந்தாவது கருத்து மானேசர் கிராமத்தில் மாருதி உற்பத்திக்கு ஆதரவாகவும், தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் செயல்பட்டுவந்த மகாபஞ்சாயத்து என்ற அமைப்பிலிருந்து வெளிப்பட்டது.அந்த மகா பஞ்சாயத்து என்ற அமைப்பில் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும், அந்த ஆலை அமைவதற்கு நிலங்கள் கொடுத்து அதனால் பயன் பெற்றவர்கள் மற்றும் அந்த தொழிலாளர் களுக்கு தொடர்புடைய விதத்தில் தொழில்கள் செய்து லாபம் பார்ப்பவர்களாக இருந்தனர்.

இந்த வகையான பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் இருந்த நிலையிலும், பெரும்பான்மை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் தொழிற்சங்கங்கள் மீது சினத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த செய்தியை சொல்லின.  ஒரு பிரபல தமிழ் செய்தித்தாள் கூட “மத்தியஸ்தர்கள்” (அரசியல் படுத்தப்பட்ட தொழிற்சங்க தலைவர்கள்) என்ற தலைப்பிலான தனது தலையங்கத்தில் அத்தகைய தொழிற்சங்க தலைவர்கள்தான் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை, கள யதார்த்தத்தை திசை திருப்பும் வண்ணம் செயல்பட்டனர் என விவரித்திருந்தது.  நிர்வாகத் தரப்பு கூற்றை மட்டும் வைத்து வெளியிடப்பட்ட இத்தகைய செய்திகள் தொழிலாளர்கள் கோபத்தை தூண்டவும், வன்முறை ஏற்படவும் காரணமானது.

ஆனால் விஷ‌யங்கள் அவ்வாறாக இல்லை.  தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதாவது அவர்களை தாக்க கூலிக்கு ஆட்கள் வரவழைக்கப்பட்டனர் என்பது ஊடகங்களால் கண்டு கொள்ளப்படவில்லை என்பதுடன், அதன் மீது ஆய்வும் மேற்கொள்ளப்படவுமில்லை. இல்லையென்றாலும், பல அறிக்கைகள் ஆலையில் தொழிலாளர்களின் நிலைகளை படம் பிடித்து காட்டுவதாக அமைந்தது.  கடந்த வருடம் தி இந்து நாளிதழில் வெளிவந்த (மாருதி சுசுகியில் தொழிலாளர்கள் போராட்டம் – 28 செப் 2011) செய்தி தொகுப்பில், எவ்வாறு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உண்மையான ஊதியம் அவர்கள் பணி புரியும் நேரம் மற்றும் வாழ்நிலைக்கு போதுமானதாக உயர்த்தப்படவில்லை என்பதையும் நிர்வாகத்தின் வருவாய் உயர்விற்கேற்ப தொழிலாளர்கள் ஊதிய நிலை மாற்றியமைக்கப்படவில்லை என்பதை தெளிவாக சொல்லியிருந்தது.  எனவேதான் நிர்வாகத்தரப்பில் தொழிலாளர்களையே ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவது என்ற நிலை நிர்வாகத்தால் எடுக்கப்பட்டது.

மிக சாதாரணமாக தொழிற்சங்க தலைவர்களை ‘வில்லன்களாக’ சித்தரித்து அதன் மூலம் அவர்கள் ஆலையின் தளத்தில் தொழிலாளர்களிடையே தோன்றும் பிரச்சனைகளின் மீது தலையிடவிடாமல் பிரித்து வைக்கப்பட்டனர்.  இது மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது.  தொழிலாளர்கள் ஒரு பிரச்சனையின் மீது ஒன்றுபட்டு கருத்து செலுத்தாமலிருக்க தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தினரையும் பிரித்தாளும் நடைமுறை கையாளப்பட்டது.  தொழிற்சங்கங்களின் விஷ‌யங்களை மேலும் நலிவடையச் செய்யும் வண்ணம் அவர்கள் “சுயநலவாதிகள்” மற்றும் “கள்ளத்தனமானவர்கள்” என முத்திரை குத்தப்பட்டனர் (இவற்றை கையாள எளிதாக மாவோயிஸ்ட் என்ற அடையாளமும் குத்தப்பட்டது). பிரபலமான தமிழ் தினசரி ஒன்று இந்த விஷ‌யத்தில் நீண்ட தலையங்கம் ஒன்றை எழுதியது – அதில் போருக்கு தயார் நிலையில் இருப்பதான தொழிலாளி பக்கத்தை எடுத்துக் கொண்டு அவன் தொல்லையளிக்கும் தொழிற்சங்க தரப்பிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியது.

ஹரியானாவோ, தமிழ்நாடோ எதுவாக இருப்பினும் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது ஆதரவாளர்களுக்கு, குறிப்பாக தொழிற்சங்கங்களை பூதாகரமாக காட்டுவதற்கு மிகவும் சிரமப்பட தேவையில்லை.  ஊடகங்களே அந்த பணியை செய்கின்றன.  வடக்கே விந்திய சாரத்தில் மானேசரில் நடந்த நிகழ்வுகள் தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் தொழிலில் கோலோச்சிவரும் முதலாளிகள் கவனத்தை ஈர்த்ததுடன், கவலையுறச் செய்துள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போர்க்குணம் தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு அனுபவம் உண்டு.  தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஒரு மேற்பார்வையாளர் உயிரிழப்பில் முடிந்த கோவை பிரிகால் ஆலையின் நிகழ்வுகள் 2009-ல் பெரிய அளவில் செய்தியானது.  சென்னையில் ஹூண்டாய் தொழிலாளர்கள் ஒன்றிணைந்ததற்காகவும், மே தினம் கொண்டாடியதற்காகவும் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.  தொழிற்சங்கம் துவங்கி இணையவேண்டும் என்கிற அவர்களின் ஆசை கொடுஞ்செயாக பார்க்கப்படுகிறது.  அதை முறியடித்ததற்கு நன்றி கடனாக மாணவர்களை ஈடுபடுத்தி போக்குவரத்து சரிசெய்ய என்ற பெயரில் தமிழக அரசின் காவல்துறைக்கு 100 கார்கள் ஹூண்டாய் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

இதன் நடுவில் உற்பத்தி நிபந்தனைகள் என்பது தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வந்தது.  ஒவ்வொரு 48 வினாடிக்கும் ஒரு கார் வெளியேற்றப்பட வேண்டும்.  அதாவது தொழிலாளர்கள் கழிவறைக்குச் செல்ல, ஒரு கப் தேநீர் அருந்த சில நிமிடங்கள் செலவழிப்பது கூட அரிதாக இருந்தது.  பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்த பின்னர்தான் ஆலையை அடைய முடிவதுடன், அதற்கு பின்னர் 8 மணி நேரம் பணிபுரிய வேண்டியிருந்தது.  சென்னையில் வட-மேற்கில் தொழிற்சாலை பகுதியில் பெரும்பான்மை தொழிற்சாலைகளில் பணி நிலை என்பது இவ்வாறாகத்தான் இருக்கிறது.  பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகளில் பெரும்பாலும் இளைஞர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக ரூ 3500 முதல் 4000 வரையில் ஒரு மாதத்திற்கு என்ற குறைந்த சம்பள விகிதத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.  இங்கே நாம் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து வந்து இதைவிட மோசமான பணிநிலைகளில் ஒரு நாளைக்கு ரூ 140 என்பதை விட குறைவான கூலியில் பணிபுரிவதைப்பற்றி குறிப்பிடவில்லை.  அதுவும் மிகத் திறமையாக லாபம் கொழிக்கும் ஆட்டோமொபைல் தொழிலில் இவை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

நாம் பல வருடங்களுக்கு முன்பாக மாநிலத்தில் தொழில் வளர்ச்சி என்று பேசப்பட்ட 1970களை திருப்பிப்பார்த்தால், அன்றும் இதே போல் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் டிவிஎஸ், எம்ஆா்எப் போன்றவர்கள் செயல்பட்டு வந்ததும், தொழிற்சங்கங்களை பிரித்தாள்வதில் சாதனைகள் புரிந்தனர் என்பதும் அதற்கு அவர்களுக்கு முனைப்பாக திமுக மற்றும் அதிமுக தலைமையிலான அரசாங்கங்கள் உதவிகள் புரிந்துள்ளனர் என்பதும் தெரியவரும். தொழிலாளர்கள் மீது தடியடி தாக்குதல்கள் மேற்கொள்வதற்கும், தொழிற்சங்க தலைவர்கைள தங்கள் விருப்பத்திற்கேற்ப பிடித்து கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கங்கள் சிறிதும் யோசிக்காமல் செயல்பட்டு வந்துள்ளன.  இன்று ஹூண்டாய் மற்றும் கொரியன் நிறுவனங்களின் சங்கிலிதொடரில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பல சிறிய நிறுவனங்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆளும் கட்சி அரசியல் வாதிகளை கைக்குள் வைத்திருப்பதோடு, பல தாராள செய்தி ஊடகங்களையும் தமிழர்களில் பல நடுத்தர வர்க்கத்தினரையும் கையில் வைத்துள்ளன.

இந்த வகையில் பார்க்கப்போனால் மானேசர் நிகழ்வு என்பது விதிவிலக்கான ஒன்றல்ல.  ஆனால் இந்த சூழலில் மூலதனம் இட்டு குறுகிய அளவிலான தளம் கொண்ட அமைப்புசார் பகுதிகளில் கூட வெற்றிக்கான வாய்ப்பிருந்தும், ஆளுமையை நிறுவ முற்படுதலில் தொடர்ந்து முதலாளித்துவம் ஏன் தோல்வியை தழுவுகிறது என்பது வித்தியாசமாய் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. “சிவப்பி”ற்கெதிராக அமைக்கப்பட்ட மகாபஞ்சாயத்து என்ற அமைப்பினரோ, இதற்கெல்லாம் காரணம் “மாவோயிஸ்ட்கள்” என கூறும் அரசாங்கமோ உற்பத்திக்கான நிபந்தனை கடுமைகளும், அது சார்ந்த தொழிலாளர்களின் பணி நிலையும்தான் இத்தகைய வர்க்க மோதலுக்கு காரணம் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றன
_________________________________________________________
.கீதா, மற்றும் மதுமிதா தத்தாநன்றிதி இந்து
தமிழில்சித்ரகுப்தன்
______________________________________________
____________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

  1. // உற்பத்திக்கான நிபந்தனை கடுமைகளும், அது சார்ந்த தொழிலாளர்களின் பணி நிலையும்தான் இத்தகைய வர்க்க மோதலுக்கு காரணம் //

    துரிதமான இயந்திரங்களைப் போல் பணியாற்ற வேண்டியிருந்த சார்ளி சாப்ளின் ஸ்பேனரோடு பார்ப்பதையெல்லாம் திருக ஆரம்பித்ததை 75 வருடங்களுக்கு முன்பே மாடர்ன் டைம்ஸ் திரைப் படத்தில் நகைச்சுவையுடன் கூறியிருந்தாலும், மனித ஆற்றலின் எல்லையை மீற வைக்கும் உற்பத்தி முறைகளின் ஆபத்தை என்றுதான் கார்பரேட் மேதாவிகள் உணரப் போகிறார்களோ..

  2. // உற்பத்திக்கான நிபந்தனை கடுமைகளும், அது சார்ந்த தொழிலாளர்களின் பணி நிலையும்தான் இத்தகைய வர்க்க மோதலுக்கு காரணம் // ஒவ்வொரு துறையிலும் இது இருக்கின்றது. பாருங்கள் பணி முடித்து வந்து (ஐடி) இரண்டு மணிக்கு பதிவிடுகின்றேன் !!!!. முதலாளித்துவம் ஒழிக !

  3. மாருதி: “டைம்ஸ் ஆஃப் இந்தியா” கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் – இன்று (6.8.12) மாலை ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக!

    நாள்: 6.8.12 மாலை 5 மணி இடம்: மெமோரியல் ஹால்

    http://rsyf.wordpress.com/2012/08/06/ndlf-aarpattam-for-maruti-workers/

Leave a Reply to அம்பி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க